அழகாய் பூக்குதே.
1
சில மாதங்களுக்கு முன்பு..
மதுரையில் மத்திய பகுதி நேரம் வேகமாக நகர்ந்து கொண்டிருந்தது. பேங்கில் வழக்கத்திற்கு மாறாக அன்று கூட்டம் அலைமோதியது.
ஒவ்வொருவரிடமும் கேட்டு அவர்களுக்கான உதவிகளை வேகமாக செய்து கொண்டிருந்தால் ஷர்மிளா.
"மேடம் உங்களை பார்க்க ஒருத்தர் வந்து இருக்காங்க "என்று கூற நிமிர்ந்து பார்த்தால்.. இங்கே இவளுக்கு பெரியதாக உறவினர் என்று யாரும் கிடையாது.
*என்னன்னு சொன்னாங்க" என்று கேட்டபடியே எழுந்தால் ஷர்மிளா..
"உங்களுக்கு ரொம்ப வேண்டியவங்கன்னு சொன்னாங்க பத்து நிமிஷம் பேசணும்னு சார் கிட்ட பர்மிஷன் வாங்கி இருக்கிறாங்க.
சார் தான் பேச சொல்லுங்கன்னு அனுப்பி வச்சாங்க."
" எங்க வெயிட் பண்றாங்க" "கேட்டவள் பேங்கை சுற்றி நோட்டமிட "இங்கே இல்லை மேம்..முன்னாடி இருக்கிற அந்த கோயில்ல வெயிட் பண்றதா சொல்லி இருக்காங்க".
"ஓகே ஓகே இதோ வந்துட என்னறேன்" என்றவள் அருகில் இருந்தவரிடம் தான் செய்த வேலையை கொடுத்துவிட்டு நகர்ந்தாள். யோசனை முழுக்க யாராய் இருக்கும் என்ற மனநிலையில் புறப்பட்டாள்.
வேலை கிடைத்து வந்து இங்கே 5 வருடம் முடியப்போகிறது. இதுவரையிலும் யாரும் இவளை தேடி வந்தது இல்லை..
குழப்பத்தோடு எதிரில் இருந்து கோயிலை நோக்கி சென்றாள் ஷர்மிளா.
வயதான தம்பதி ஒருவர் அமர்ந்திருந்தனர். இவளை பார்க்கவும் அறிமுகப் புன்னகையோடு நெருங்கி வர இவளுக்குள் ஆயிரம் குழப்பம்..
" யார் நீங்க ? நீங்க தான் என்கிட்ட பேசணும்னு சொன்னீங்களா?"
" ஆமாம் மா நான் தான் உன்கிட்ட பேசணும்னு சொன்னேன். உன்னை ரொம்ப நாளா தேடிக்கிட்டு இருக்கிறேன் .
இப்பதான் என்னால நீ இருக்கிற இடத்தை தெரிஞ்சுக்க முடிஞ்சது தெரிஞ்ச உடனேயே காத்திருக்காமல் நேரா இங்க வந்துட்டேன் ".
"சரி ஆனா நீங்க யாருன்னு எனக்கு தெரியலையே.. என்ன விஷயம் நேரடியா சொல்லுங்க .சுத்தி வளைச்சு பேச வேண்டாம்".
" என்னம்மா இப்படி சொல்லிட்ட நான் பரணியோட அம்மா ..இவர் என்னோட கணவர் ".பெயரை கேட்கவும் முகம் மெல்ல மாற ஆரம்பித்தது ஷர்மிளாவிற்கு..
" எதுக்காக என்ன தேடி வந்திருக்கிறீர்கள் என்று தெரிந்து கொள்ளலாமா ".
"ஷர்மிளா உனக்கு தெரியாதது எதுவும் இல்லை .உனக்கு எப்படி சொல்லி புரிய வைக்கிறதுன்னு தெரியல .இன்றைக்கு பரணி உயிரோட இல்ல .பரணியோட ஞாபகமா எதுவுமே எங்க கிட்ட இல்ல ஒன்னே ஒன்னு தவிர.."
" நீங்க சொல்ற எதுவுமே எனக்கு புரியல .நீங்க கிளம்புறீங்களா எனக்கு ஆபீஸ்ல நிறைய வேலை இருக்குது".
" தெரியும் நீ இப்படித்தான் சொல்லுவேன்னு.. உனக்கும் பரணிக்கும் நடுவுல இருந்த உறவு எப்படிப்பட்டது என்று எனக்கும் இவருக்கும் நல்லாவே தெரியும்.
அவன் கடைசி நிமிஷம் எல்லாத்தையும் சொல்லிட்டு தான் போனான். பரணியோட பேரை சொல்ற மாதிரி அவனுக்கு ஒரு குழந்தை இருக்குது அப்படிங்கிறது இப்பதான் கொஞ்ச நாளைக்கு முன்னாடி தெரிஞ்சது .
முதல்ல சாதாரணமா விட்டுட்டோம் இப்ப தெரிஞ்சதுக்கு பிறகு தனியா விட எங்களுக்கு மனசு இல்ல .என்ன இருந்தாலும் அந்த குழந்தை எங்களோட ரத்தம் இல்லையா..
பரணியோட ரத்தம் இல்லையா எங்களோட வாரிசு தானே அந்த குழந்தை .."
"அதனால நீங்க என்ன சொல்ல வரீங்க . நேரடியா விஷயத்தை சொல்லுங்க.. நானும் ரெண்டு ஒரு வார்த்தையில் பதில் சொல்லிட்டு இப்போ கிளம்பனும் "என்று திரும்பி நகர போனாள்.
" நில்லுமா அவசரப்படாத நான் என்ன சொல்ல வர்றேன்னு முதல்ல பொறுமையா கேளு .".
"நான் பொறுமையா கேட்க எதுவுமே இல்லை பரணி என்கிற ஒரு கேரக்டரை எனக்கு ஞாபகம் கூட இல்லை .
எதுக்காக இதையெல்லாம் என்கிட்ட வந்து சொல்றீங்கன்னு எனக்கு சுத்தமா புரியலை. ".
"போதும் ஷர்மிளா ஒன்னும் தெரியாத மாதிரி பேச வேண்டாம் நாங்க எல்லாத்தையும் விசாரிச்சிட்டு தான் இங்க வந்திருக்கிறோம்.
குழந்தை கவி யாருடையது ஞாபகம் இருக்குதா ..அது என் பையனோடது" இப்போது பரணியின் தந்தை குரல் கொடுக்க,
"ஐயோ என்னங்க நீங்க கொஞ்சம் கோபத்தை காட்டாமல் பொறுமையா இருங்க .நான் தான் உங்ககிட்ட சொன்னேன்ல.. நான் பொறுமையா பேசி புரிய வைக்கிறேன் அப்படின்னு தானே உங்களை அழைச்சிட்டு வந்தேன் .
நீங்க என்ன சட்டுனு கோவப்பட்டா என்ன அர்த்தம் ."
"இதோ பாருமா ஷர்மிளா எங்களுக்கு குழந்தை வேணும் கூடவே .."
"போதும் நிறுத்துறீங்களா இதுக்கு மேல ஒரு வார்த்தை கூட பேச வேண்டாம் .
இங்கே எனக்கு எந்த பரணியையும் தெரியாது. அப்புறமா என்கிட்ட இருக்கிற குழந்தை என்னோடது தான் .
அதை யார்கிட்டயும் கொடுக்க தயாராக இல்லை நீங்க தப்பான ஒரு இடத்துக்கு வந்து விசாரிச்சுக்கிட்டு இருக்கீங்க .அத முதல்ல புரிந்துகொள்ளுங்கள் .
எனக்கு உறவு என்று சொல்லிக்க யாரும் இல்ல புதுசா எந்த உறவையும் ஏத்துக்கவும் நான் தயாரில்லை .
நானும் என் குழந்தையும் மட்டும் தான் .இப்படி தான் கடைசி வரைக்கும் இருப்போம் .
இன்னொரு முறை எந்த பேரையும் சொல்லிட்டு என்னை பார்க்க வராதீங்க "சொல்லியவள் சற்று கோபத்தோடு நகர்ந்தாள்.
பிரச்சனை அத்தோடு முடிந்திருக்கவில்லை .அடுத்த நாளே ஷர்மிளா தன்னுடைய குழந்தை கவியை எந்த பிளே ஸ்கூலில் விடுவாலோ அங்கே இவர்கள் இருவரையும் பார்க்க நேரிட்டது .
குழந்தையை வேகமாக அழைத்துக் கொண்டு வந்தவள் அதற்கு மேல் தாமதிக்கவே இல்லை .
அடுத்த ஒரு மாத காலத்திற்கு விடுமுறை எடுத்தவள் வேகமாக அந்த ஊரிலிருந்து புறப்பட தயாரானாள்.
இன்று..
"ஏற்கனவே பேசிட்ட தானே.. கட்டாயமாக ஸ்கூல்ல இடம் கிடைக்கும் தானே.. எல்கேஜி, யுகேஜினா தெரியாது .நாம ரெண்டாங்கிளாஸ்க்கு கொண்டு வந்து சேர்க்கிறோம்.."
"அதெல்லாம் பேசியாச்சு ஷர்மி கட்டாயமாக சீட் தருவாங்க.. இல்லாட்டி கூட பிரச்சனை இல்ல கட்டாயமா சீட் வாங்கிடலாம் .
யாரை பிடிச்சா வேலை நடக்குமோ அவங்களை பிடிச்சு வாங்கிடலாம்".
" என்னவோ தைரியமாக நீ சொல்ற.. உன்னை நம்பி தான் இங்கே அழைச்சிட்டு வந்துட்டேன் .
இதுக்கு மேல ஊர் ஊரா என்னால சுத்த முடியாது.. இனி இங்கதான் தங்கறதா இருக்கிறேன்". சொன்ன ஷர்மிளாவிற்கு தற்போது 28 வயது துவங்கி இருந்தது.
ஐந்தரை அடி உயரத்தில் அழகாக இருந்தால். அவளுக்கு, தவறு என்று தோன்றினால் உடனே தட்டிக் கேட்கும் பாங்கு ..பார்ப்பவர்களை இவளிடத்தில் மரியாதையை தானாகவே கொண்டு சேர்க்கும் .
பாரதி கண்ட புதுமைப்பெண் நான் என்பது போன்ற தோற்றம் ..
எப்போதுமே நிமிர்ந்த நடை ,நேர் கொண்ட பார்வை ,மனதில் என்ன தோன்றுகிறதோ.. நேருக்கு நேராக பேசக்கூடியவள்..
ஒரே பெண் குழந்தை…இவளுடைய உயிர்..கவி.. ஏழு வயது சிறுமி.. அழகான இரண்டு குதிரைவால் போட்டு இவளை உரித்து வைத்தாற்போல் தோற்றம்.. தற்போது இவளுக்கு அருகே அமர்ந்து இருந்தாள்.
"ஷர்மி பொள்ளாச்சியில் இதைவிட பெஸ்டான ஸ்கூல் தேடவே முடியாது உன்னோட பொண்ணுக்கு இதை விட பெஸ்ட்டா ஒரு ஸ்கூல் கிடைக்கவே கிடைக்காது .
இன்டர்நேஷனல் ஸ்கூல்.. இங்க கோச்சிங் சூப்பரா இருக்கும். என்னோட ரிலேஷன்ல நிறைய குழந்தைங்க இங்கு தான் படிக்கிறாங்க.."
"தேங்க்ஸ் ஆனந்தி நீ மட்டும் இல்லன்னா நான் ரொம்ப சிரமப்பட்டு போய் இருப்பேன்".
" ஏன் அப்படி சொல்ற அதெல்லாம் கிடையாது .நீ வேலை செய்யறது பேங்க்ல அசிஸ்டன்ட் மேனேஜரா..
நான் உனக்கு ஹெல்ப் பண்ணாட்டி கூட ஆட்டோமேட்டிக்கா பேங்க்ல இருந்து உனக்காக தங்க இடம் ரெடி பண்ணி கொடுத்து இருப்பாங்க.
எப்படியும் ரெண்டோரு நாள்ல நீயே இந்த வேலையெல்லாம் செஞ்சு முடிச்சு இருப்ப.."
"அப்படி சொல்லக்கூடாது ஆனந்தி இவ்வளவு தூரம் வர முக்கிய காரணமே நீதான் .
நீ இங்க இருக்கிற தைரியத்துல தான் என்னால் அவ்வளவு தூரத்தில் இருந்து கிளம்பி வர முடிஞ்சது.
இனி எங்கேயும் போகற ஐடியா இல்ல இனி இங்கேதான் தொடர்ந்து வேலை செய்யணும்."
ம்..
"உண்மைய சொல்லனும்னா நான் இதை எதிர்பார்க்கல ஷர்மி. ஐ ஆம் சாரி ஒரு வகையில் இன்றைக்கு உன்னோட இந்த நிலைமைக்கு காரணம் நான் தானே.."
" பைத்தியம் மாதிரி பேசக்கூடாது தப்பு எல்லாம் என்னோட பேர்ல தான்.
உன் பேர்ல எதுவும் இல்ல.. யார் என்ன சொன்னா என்ன? எப்படி பேசினா என்ன ?எனக்கு எங்க அறிவு போச்சு!!
பைத்தியக்காரி மாதிரி சொல்றது எல்லாத்தையும் நம்பினதற்கான பனிஷ்மென்ட் தான் இதெல்லாம்.."
" நீயேன் ஷர்மி உன்னோட அப்பா கிட்ட போகலை .."
"எப்படி போக சொல்ற ..இந்த மாதிரி கோவில்ல கல்யாணம் பண்ணிக்கிட்டோம்..வாழ்ந்த வாழ்க்கைக்கு அடையாளமா ஒரு குழந்தையை பெற்றெடுத்து வெச்சி இருக்குறேன்..
என்னை பாருங்கன்னு போய் நிற்க சொல்றியா ..அவங்க என் மேல் எவ்வளவு நம்பிக்கை வச்சு அனுப்பி வச்சாங்க..
உனக்கு தான் தெரியுமே அந்த நம்பிக்கை எல்லாத்தையும் நான் கெடுத்துட்டேன் .
டெல்லியில் இல்லாத யுனிவர்சிட்டியா.. இல்ல காலேஜா.. அதையெல்லாம் விட்டுட்டு நான் எதுக்காக இந்த சென்னைக்கு படிக்க வரணும் .
நாலு தடவை ஒருத்தன் திரும்பத் திரும்ப தொடர்ந்து வந்து பேசினா நான் எதுக்காக பேச்சு கொடுக்கணும் .
பேசின ஒவ்வொன்றையும் நம்பி என்னவோ புனிதமான காதல்னு நினைத்து என்னை நானே இழக்கனும் .
அதற்கான தண்டனை தான் இதெல்லாம்.. என்னோட தண்டனையை நான் மட்டும் தான் அனுபவிக்கணும் ஆனந்தி . மத்தவங்க யாரையும் கஷ்டப்பட வைக்க கூடாது ."
"இல்ல ..நான் வந்து.."
" போதும் ஆனந்தி.. இப்போதைக்கு வேறு எதையும் பேசாத.. இங்க யாரை பாக்கணும்.."
"ஸ்கூலோட தலைமை பொறுப்பில் இருக்கிறவர் எனக்கு வேண்டியவங்க ஷர்மிளா .அதனால பெருசா எந்த ஃபார்மாலிட்டியும் இருக்காது.
உன்னோட பொண்ணு அப்படியே உன்னோட ஜாடை ஷர்மி.. கண்ணு , வாய் எல்லாமே உன்னோட ஜெராக்ஸ் மாதிரி இருக்கிறா. அவ்வளவு அழகு.."
" அப்படித்தான் சொல்லுவாங்க ஆனந்தி. இப்போதைக்கு நான் வாழ்வதற்கான அர்த்தம் கூட அவ தான் ".
"ஏன் இப்படி பேசுற.. நீ இப்படி பேசறது எனக்கு துளி கூட பிடிக்கல ஷர்மி .உனக்கு என்ன குறைச்சல் நல்ல வேலை இருக்குது.
கண்ணுக்கு நிறைவா ஒரு குழந்தை இருக்கு.. இதுக்குமேல என்ன வேணுமாம் .
என்னை எல்லாம் எடுத்துக்கோ எனக்குன்னு யார் இருக்காங்க.. பொறுப்பில்லாத அப்பா நான் ஏன் இருக்கேன்னு கூட எனக்கு புரியறது இல்லை.*
"உன்னோட ஒர்க் எப்படி போய்கிட்டு இருக்கு ஆனந்தி ".
"எப்படி போகுது நல்லா தான் போய்கிட்டு இருக்குது .உனக்கு தான் தெரியுமே ..
சென்னையில் டிகிரி முடிச்சு வந்த பிறகு என்ன செய்வது என்று தெரியாமல் இங்கே லா காலேஜ்ல சேர்ந்தேன். இன்றைக்கு நானும் ஒரு வக்கீல்னு பெருமையா சொல்லிக்கலாம் .
சின்ன சின்னதா வேலை வருது. செஞ்சிகிட்டு இருக்குறேன். அப்புறமா ஒரு பெரிய வக்கில்கிட்ட ஜூனியரா இருக்கிறேன்.
நம்ம கொஞ்சம் சீக்கிரம் வந்துட்டோம் பத்து மணிக்கு தான் ஆபீஸ் குள்ள விடுவாங்க .கொஞ்ச நேரம் இங்க தான் வெயிட் பண்ணனும்." அமைதியாக விளையாடிக் கொண்டிருந்த கவியை பார்த்தவள்..
"பொண்ணு ரொம்ப க்யூட்ல.. ரொம்ப அழகா இருக்கறா..*
"ரொம்ப புத்திசாலியும் கூட ஆனந்தி ..ஒரு நாள் கூட அவளால எனக்கு சிரமம் இருந்தது இல்லை."
"இன்னும் நேரம் ஆகும் போல இருக்கு நான் இவள வெளியே அழைச்சிட்டு போயிட்டு வரட்டுமா.. இவளுக்கு சாப்பிட பிஸ்கட் மாதிரி ஏதாவது வாங்கி தரணும்னு ஆசைப்படறேன் ஷர்மி".
" காலையில் ஆல்ரெடி சாப்பிட்டா.."
" நீ இப்ப என்ன சொல்ல வர்ற.. அவளுக்கு நான் எதுவும் வாங்கி கொடுக்க கூடாதுன்னா .."
"நான் அப்படியெல்லாம் சொல்வேனா தாராளமா நீ அவளை அழைச்சிட்டு போ..
நான் அப்படியே இந்த ஸ்கூல சின்னதா ஒரு ரவுண்டு சுத்தி பார்த்துட்டு வரட்டுமா.."
" இதென்ன கேள்வி நீ தாராளமா போய் சுத்தி பாரு ..உன் பொண்ண இங்க சேர்க்க போற.. இதெல்லாம் பார்த்து வைக்கிறது நல்லது தானே.."
" சரி கவி குட்டி ஆன்ட்டி கூட கடைக்கு போயிட்டு வாங்க.. அம்மா இப்ப வந்துடறேன் சரியா *என்றபடி நகர்ந்தால் ஷர்மிளா .
இப்போது தான் காலை 9 மணியை தொட்டுக் கொண்டிருந்தது .நிறைய மாணவர்கள் பள்ளிக்கு உள்ளே வந்து கொண்டிருந்தனர்.
பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை கையில் பிடித்தபடி ஸ்கூல் காம்பவுண்டுக்குள் விட்டுவிட்டு நகர ,எல்லாவற்றையுமே ஒரு பார்வையாக பார்த்தபடி நகர்ந்தால் ஷர்மிளா.
ஸ்கூல் பார்க்கிங் அத்தனை நீளத்திற்கு பறந்து விரிந்து கிடந்தது வேடிக்கை பார்த்தபடியே நகர.. அப்போதுதான் அந்த பார்க்கிங்கை நோக்கி அந்த கார் வேகமாக வந்து கீரீச்சிட்டு நின்றது .
காரின் கதவை திறந்து கொண்டு இறங்கி நின்றான் அவன். நெடுநெடு உயரம் ஆறடி இருப்பானோ.. கண்ணை மறைத்திருந்த கூலிங் கிளாஸ் கண்ணாடி..
ஜீன்ஸ் பேண்ட் ,சட்டை சகிதமாக இறங்க, முன்னிருக்கையில் இருந்து அந்த சிறுவன் குதித்து இறங்கினான்.கூடவே இன்னொரு வயதானவர் பின் கதவை திறந்து கொண்டு கீழே இறங்கினார்.
" ராமண்ணா கொண்டு போய் இவனை இவனோட கிளாஸ்ல விட்டுட்டு வாங்க."என்று சொல்ல, இறங்கிய சிறுவன் வேகமாக அவனின் கன்னத்தில் முத்தமிட்டான்.
" பை டாடி போயிட்டு வரேன்.. தாத்தா போகலாம் "என மழலை குரலில் சொன்னபடி நடக்க இவளையும் அறியாமல் ஒரு புன்னகை உதட்டில் ஒட்டிக்கொண்டது.
இருந்தால் இவளுடைய பெண்ணின் வயது தான் இருக்கும்..அந்த சிறுவனுக்கு.. நடப்பதில் அத்தனை பெரிய மனித தோரணை.. இவளையும் அறியாமல் அந்த குழந்தையின் பின்னால் கண்கள் சென்றது.
"ராம் அண்ணா..அப்படியே அந்த வாட்ச்மேன் இன்னைக்கு வந்திருக்கிறானாண்ணு பார்த்து சொல்லுங்க ".
"அதெல்லாம் வந்து இருக்கறான் தம்பி .காலையிலேயே தகவல் வந்துடுச்சு ."
"அப்புறம் என்ன? நீங்க போங்க நான் பார்த்துக்கிறேன்* என்று சொல்லிவிட்டு இறங்கி வலப்புறமாக நகர ,சுற்றிலும் வேடிக்கை பார்த்தவள் பார்வை அவளையும் அறியாமல் அவனின் பின்னால் சென்றது .
சற்று தூரத்தில் நிற்கின்ற ஒருவனை கைகாட்டி அழைப்பது தெரிந்தது .
பெரிய ராஜான்னு நினைப்பு..பெரிய தோறணை தான்.. அந்தப் பையனின் நடவடிக்கை யாரிடம் இருந்து வந்திருக்கும் என்பது பார்க்கவும் புரிந்தது..
பார்த்துக் கொண்டிருந்த போதே அருகே வந்திருந்தவனை பளார் என கன்னத்தில் அடித்திருந்தான்.
அடி வாங்கியவன் ஏதோ சொல்வது புரிந்தது ஆனால் இவன் நிறுத்துவதாக இல்லை அடி ஒவ்வொன்றும் இடி என விழுவது போல அடுத்தடுத்து விழுந்துக் கொண்டிருக்க சற்றே அதிர்ச்சியோடு கவனிக்க ஆரம்பித்தாள்.
விட்டால் அடித்தே கொன்று விடுவான் போல இருந்தது அவனுடைய நடவடிக்கை ஒவ்வொன்றுமே..
ஓரளவுக்கு மேல் இவளால் பார்த்து சகிக்க முடியாமல் வேகமாக அவர்கள் நின்றிருந்த பகுதிக்கு சென்றாள் .
அவர்கள் நின்றிருந்தது சற்றே ஒதுக்குப்புறமான பகுதி.. நிச்சயமாக மற்றவர்களுக்கு தெரிய வாய்ப்பு கிடையாது.
இப்போதும் அடி வாங்கிக் கொண்டிருந்தவன் கெஞ்சிக் கொண்டிருந்தானே தவிர திரும்ப தடுப்பது போல் எல்லாம் இல்லை.
என்னவோ அடி வாங்குவதற்காகவே பிறந்தவன் போல கெஞ்சிக் கொண்டிருந்தான் ."அடிக்காதீங்க சார் வலிக்குது.. இனி இப்படி செய்ய மாட்டேன்"என்று கெஞ்சிக் கொண்டிருக்க..
"ஏன்டா எத்தனை தைரியம் இருந்தா இது மாதிரி காரியம் செய்வ…கேக்குறதுக்கு ஆள் இல்லை என்று நினைச்சியா..
ஏற்கனவே ஆபீஸ்ல பேசியாச்சு கொடுக்கிற சம்பளத்தை வாங்கிட்டு இருக்கிற இடம் தெரியாம ஓடி போயிடணும் .
அப்புறம் எதுக்காக அடிக்கறான்னு பாக்கறியா.. இன்னொரு பக்கம் வேலைக்கு போனா இது மாதிரி கை நீட்டாம இருக்கணும் அதுக்காக தான் இந்த அடி புரிஞ்சுதா.."சொன்னவன் இப்போதும் நிறுத்தவில்லை மறுபடியும் அடித்துக் கொண்டுதான் இருந்தான்.
வேகமாக அவர்களுக்கு அருகில் சென்று நின்றாள் ஷர்மிளா.
" நிருந்துங்கள்..என்ன சார் நடக்குது இங்க ..என்ன செஞ்சுகிட்டு இருக்கீங்க யார் நீங்க எதுக்காக இவரை பிடித்து அடிக்கிறீங்க .
இவரை பார்த்தால் இங்கே இருக்கிற வாட்ச்மேன் போல இருக்குது. இவரை எதுக்காக நீங்க அடிக்கறீங்க". என்று வரிசையாக கேள்வியை கேட்டிருந்தாள்.
எதற்குமே அவனிடத்தில் இருந்து பதில் இல்லை .இப்போதுமே அவனைத்தான் அடித்துக் கொண்டிருந்தான்.
"எவ்வளவு தைரியம் இருந்தால் இதுபோல ஒரு காரியத்தை செய்வீங்க.
கேக்குறதுக்கு ஆள் இல்லன்னு நினைக்கறீங்களா.. மிஸ்டர் உங்களை தான் கேட்டுகிட்டு இருக்கிறேன்."
இவள் கேட்டது எதுவுமே அவனது காதுக்கு சுத்தமாகவே விழவில்லை என்பது போல இருந்தது அவனுடைய நடவடிக்கை ஒவ்வொன்றுமே.. இப்போதும் கோபமாக அவனை அடித்தபடி தான் பேசிக் கொண்டிருந்தான்.
"இங்கே என்ன தப்பு நடந்தாலுமே என்னோட காதுக்கு வந்துடும்" என்ற படியே மறுபடியும் அடிக்க.. ஒரு கட்டத்திற்கு மேல் சகிக்க முடியாமல் வேகமாக அவனுடைய கையை பிடித்து தடுத்து நிறுத்தி இருந்தால்.
"நீ என்ன பெரிய ரவுடியா.. அவர் தப்பு பண்ணி இருந்தாருன்னா சட்டப்படி போலீஸ்ல கம்ப்ளைன்ட் பண்ணுங்க .
அதை விட்டுட்டு தண்டிக்கிற உரிமை யாரு உங்களுக்கு கொடுத்தது.. இதுக்கு மேல இன்னொரு அடி அவர் மேல விழுந்ததுன்னா என்ன செய்வேன்னு தெரியாது "கோபமாக இவள் சத்தமிட அடிப்பதை நிறுத்திவிட்டு முதல் முறையாக திரும்பி இவளை பார்த்தான்.
சற்றே கண்களில் ஆச்சரியம் தோன்ற.. வேகமாக கண்ணில் இருந்த கண்ணாடியை கழட்டி விட்டு இவளை இன்னமும் ஆர்வமாக கவனிக்க ,
கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி இருந்தவன் தப்பித்தால் போதும் என்கின்ற நோக்கத்தோடு இவளையும் சேர்த்து தள்ளி விட்டுவிட்டு ஓடி இருந்தான்.
அதே நேரத்தில் இவளை தேடியபடி இவளுடைய தோழியும் அங்கே வந்திருந்தாள்.
" ஷர்மி என்ன செஞ்சுகிட்டு இருக்கிற "என கேட்டுப்படியே வந்தவள் வேகமாக நின்றிருந்தவனை பார்த்து.." மதி சார்.. வணக்கம் நல்லா இருக்கீங்களா "என்று இவனிடம் பேசியவள்.. வேகமாக ஷர்மியை இழுத்துக் கொண்டு நகர்ந்தாள்.
"எதற்காக மரியாதை கொடுக்கிற.. ரவுடி மாதிரி இருக்கிறான். கொஞ்சம் கூட மரியாதை இல்லாம ஒருத்தனை போட்டு அடிச்சுக்கிட்டு இருக்கிறான் .
அவனுக்கு நீ மரியாதை கொடுத்துக்கிட்டு இருக்குற.."
" இது மாதிரி எல்லாம் பேசாத ஷர்மிளா.. உனக்கு புரியாது சார் இங்கே ரொம்ப பிரபலமானவரு..
நிறைய பேருக்கு தெரிஞ்சவங்க கூட . அவர் ஏதாவது செஞ்சா காரணம் இல்லாம இருக்காது.. நீ எதுக்காக அவர் கிட்ட பேசிகிட்டு இருக்கற".
"என்ன பெரிய மண்ணாங்கட்டி நியாயவாதி.. எனக்கு புரியல ஆனந்தி .ஒருத்தனை பிடித்து வைத்து அவ்வளவு அடி அடித்துக்கிட்டு இருக்கிறான்.
அவனுக்கு நீ மரியாதை கொடுத்து பேசிக்கிட்டு இருக்கிற .."
"இத பாரு.. இது மாதிரி எல்லாம் யார்கிட்டயும் உளறிட்டு இருக்காத புரிஞ்சுதா.. இந்த ஏரியாவில் அவர் ரொம்ப பெரியவரு..
அவர் வைச்சது தான் சட்டம் இதுவரைக்கும் அவர் மேல எந்த குற்றச்சாட்டும் வந்தது இல்லை. முதல் முதலில் நீ தான் அவரை தப்பா சொல்லிக்கிட்டு இருக்குற.."
"இப்ப நீதான் உளர்ற ஆனந்தி.. ரவுடி மாதிரி ஒருத்தன பிடிச்சு அடிச்சுகிட்டு இருக்கிறான். அவனுக்கு சப்போர்ட் பண்ற மாதிரி இருக்குது நீ பேசுறது.
முகத்தைப் பார்த்தால் தெரியலையா அவனோட முகத்தை பார்த்தா நல்ல விதமாவா யோசிக்க முடியுது உண்மையிலேயே ரவுடிதான்*.
" இப்ப யார் இல்லைன்னு சொன்னாங்க .மதி சார் பத்தி இங்க எல்லாருக்கும் தெரியும் .அவர் நல்லவனுக்கு நல்லவன் கெட்டவருக்கு கெட்டவன் .
ஏதாவது பிரச்சனைன்னு யாராவது சொல்லி இருப்பாங்க அதனால இன்னைக்கு இங்கே வந்திருக்கிறார் மத்தபடி ஸ்கூல் கிட்ட வர்ற பழக்கம் எல்லாம் அவருக்கு கிடையவே கிடையாது .
கொஞ்ச நேரம் பொறுமையா இரு என்னன்னு விசாரிச்சு சொல்றேன். மதி சார் காரணமில்லாமல் யாரையும் கை நீட்ட மாட்டாரு."
"அதெல்லாம் வேண்டாம். இவளை ஸ்கூல்ல சேர்த்து விட்டுட்டு கிளம்பிடலாம்".
"நீ தப்பா புரிஞ்சு இருக்கிற.. ஷர்மி.. அவர் கிரேட் தெரியுமா .அவரை யாருமே கைநீட்டி குறை சொல்லிட முடியாது.."
"ஆனந்தி..எனக்கு அது தேவையில்லாத விஷயம்".
"நீ கோவமா இருக்கறேன்னு தெரியுது .நான் எதுவும் பேசல.. இப்பதானே இங்க வந்திருக்கிற…போக போக புரிஞ்சுக்குவ.. நீயே உன்னோட வாயால கிரேட் அப்படின்னு சொல்ற நாள் ரொம்ப தூரத்துல இல்லை.."
"ப்ளீஸ் நீ எந்த சமாதானமும் சொல்ல வேண்டாம் ஆனந்தி.. தடுக்க போய் ஒருத்தி நிக்கறேன். முகத்தை கூட பார்க்கலை.. அந்த அடி அடிக்கறான்."
"ஷர்மி நீயும் நானும் பேசுறத பார்த்து குழந்தை பயந்துட போறா.. நம்ம நேரா ஆஃபீஸ் ரூமுக்கு போகலாம். குழந்தையை சேர்த்து விட்ட பிறகு இத பத்தி பொறுமையா இன்னொரு நாள் பேசிக்கலாம்."
அடுத்த அரை மணி நேரத்தில் பேசி பள்ளியில் சேர்த்து விட்டு வீட்டிற்கு புறப்பட்டனர்.
"உன்னோட திங்ஸ் எல்லாம் எப்ப இங்க வர போகுது ஷர்மி".
"ஆல்ரெடி பேக் பண்ணியாச்சு இன்னைக்கு வந்திடும்னு சொல்லி இருக்காங்க ..நீ எங்க வீடு பார்த்து இருக்கிற.. வீடு எப்படி இருக்குது வசதியா இருக்குமா ..எந்த பிரச்சனையும் இருக்காது தானே ".
"நீ என்கிட்ட எப்ப பொறுப்ப கொடுத்தையோ அப்பவே தெளிவா பண்ணிட்டேன். உனக்கு பாதுகாப்பா இருக்கக்கூடிய ஒரு இடத்துல தான் வீடு பார்த்து வைத்திருக்கிறேன்.
எப்பவும் உனக்கு எந்த பிரச்சனையும் வராது. நீ நிம்மதியா குழந்தையோட என்ஜாய் பண்ணலாம்.
அங்க.. அந்த ஏரியாவுல வாட்ச்மேன் கூட இருக்கிறாங்க ரொம்ப ஷேப்பான இடம்.."இவளிடம் பேசியபடியே ஆட்டோக்காரரிடம் அட்ரஸ் சொன்னவள் அப்போதுதான் ஞாபகம் வர, வேகமாக தன்னுடைய பேக்கை எடுத்து தேடினாள்.
" என்ன ஆச்சு? என்ன தேடுற.."
"ஓ மை காட் முக்கியமான விஷயத்தை மறந்துட்டேன். வீட்டோட சாவி இன்னும் என் கைக்கு வரல இரு ஒரு நிமிஷம்" என்றவள் வேகமாக போனில் அழைத்து பேசினாள்.
"அங்கிள் நான் ஏற்கனவே உங்க கிட்ட சொன்னேன் இல்லையா ..என்னோட பிரண்டு ஊர்ல இருந்து வந்திருக்கிறான்னு..
அவளுக்கு தங்குவதற்கு இடம் கொடுக்கணும்னு கேட்டேன்.. நீங்க கூட தரேன்னு சொல்லி இருந்தீங்க.. உங்க கிட்ட வீட்டு சாவியை நான் இன்னும் வாங்கலை.. நான் இப்ப அங்க வந்து வாங்கிக்கவா.."
"ஆனந்தி பொண்ணு தானே நீ.. இப்ப நான் அந்த ஏரியாவுக்கு தான் வந்திருக்கிறேன்.. வீட்டு சாவி கைல தான் இருக்குது. நேரா வீட்டுக்கு வந்துடு.அங்க வச்சு தந்துடறேன் நீ அலைய வேண்டாம் ".
"சரி அங்கிள் ரொம்ப தேங்க்ஸ்.."
"ஆனந்தி வாடகை பேசிட்டதானே அட்வான்ஸ் கொடுக்கணுமா .."
"அதெல்லாம் நிதானமா பேசிக்கலாம் ஒன்னும் அவசரம் இல்ல.."
"என்ன நீ கொஞ்சம் கூட பொறுப்பில்லாம இப்படி பேசுற.. இத்தனை நாள் நான் இருந்த பக்கம் எல்லாம் முதல்ல அட்வான்ஸ் கொடுத்துட்டு வாடகை பேசிட்டு தான் வீட்டுக்கு வருவோம். இங்க எல்லாமே அப்படியே தலைகீழா இருக்குது.."
"ஏன்னா இது என்னோட ஊரு.. என்னோட கிராமம் இங்கே இப்படித்தான்.."
"இதோ இந்த பக்கமாக உள்ள போகணும் ".
"ஏய் என்ன ஆனந்தி இது ஏதோ குவாட்டர்ஸ் மாதிரி இருக்குது..".
"உண்மையிலேயே இது குவாட்டர்ஸ் தான் .வேலை செய்றவங்களுக்காக கட்டி கொடுத்தது. இங்க தான் உனக்கு வீடு பார்த்திருக்கிறேன் பயப்படாத... நீ இங்க நிம்மதியா இருக்கலாம்".
ம்..
"அதோ அங்கிள் கூட வாசல்ல தான் நிக்கிறாங்க வா" என்றபடி வேகமாக இவளை அழைத்து சென்றவள் காலை தொட்டு வணங்கினாள்..
" நல்லாயிருமா.. நல்லா இரு இதுதான் உன்னுடைய பிரண்டா ..நீ பேசும்போதே உன்கிட்ட வீட்டு சாவியை கொடுத்து இருக்கணும்.
வயசாகுதில்லையா மறந்துட்டேன். இந்தா மா இந்த வீட்டோட சாவி.. வீட்ல ஏற்கனவே தேவையான எல்லா பொருட்களுமே இருக்குது அதை எல்லாமே அப்படியே யூஸ் பண்ணிக்கலாம் .நான் எதுவும் சொல்ல மாட்டேன் ".
"தேங்க்யூ அங்கிள்.. தேங்க்யூ வெரி மச்.."
"இவங்க ரெண்டு பேரும் தான் தங்க போறாங்களா .."
"ஆமாம் அங்கிள்.. இவங்க ரெண்டு பேரும் மட்டும் தான் இங்க தங்க போறாங்க.. இவங்களுக்கு பாதுகாப்பான ஒரு இடம் தேவை இருந்தது அதனாலதான் இங்க கூப்பிட்டுட்டு வந்தேன்."
"ஏன் அப்படி சொல்ற.. இந்த பொண்ணோட ஹஸ்பண்ட் எப்போ வருவாங்க.."
" அங்கிள் வந்து.."
"எனக்கு கணவர் இல்ல.. நானும் குழந்தையும் மட்டும்தான்.. இன்னும் சொல்ல போனா எனக்கு யாரும் இல்லை.இப்போதைக்கு.."
"அப்படி எல்லாம் சொல்லக்கூடாது மா இனிமே இந்த அங்கிளும் உங்களுக்கு துணையாய் இருப்பேன் கவலைப்படாத.. தனியா இருக்கிறதா என்னைக்கும் நீ யோசிக்க வேண்டாம்..
உனக்கு என்ன உதவி வேணும்னாலும் அந்த நிமிஷம் நான் உனக்கு வந்து செஞ்சு தருவேன் என்ன நம்பலாம்".
" இதை நீங்க சொல்லவே தேவையில்லை . இன்னமும் கொஞ்ச நாள்ல ஷரிமியே புரிஞ்சுக்குவா..
ஒருத்தரை ஒருத்தர் அறிமுகப்படுத்தி வைக்கிறதுக்கு முன்னாடியே பேச ஆரம்பிச்சிட்டீங்க..
இவதான் என்னோட பிரண்டு ஷர்மிளா.. இவ அவளோட குழந்தை கவி.
இவங்க ரெண்டு பேருக்கு தான் உங்ககிட்ட வீடு வேணும்னு கேட்டேன் இங்கனா அவளுக்கு பாதுகாப்பா இருக்கும்னு தோணுச்சு அதனாலதான் உங்ககிட்ட இந்த உதவியை கேட்டேன்".
"இனி உன்னோட பிரண்டை பத்தி கவலைப்பட வேண்டாம் ஆனந்தி.. "
"நன்றி அங்கிள் "சாவியை கொடுத்தவர் புறப்பட்டு இருந்தார்.
அதன் பிறகு இவர்களுடைய நேரம் சுவாரசியமாகவே கழிந்தது .மாலை வரையிலுமே ஷர்மிளாவோடு கூடவே இருந்த பிறகு தான் புறப்பட்டு போனாள் ஆனந்தி.
காலை முதலே நடந்தது ஒவ்வொன்றையும் யோசிக்க ஆரம்பித்திருந்தால் ஷர்மிளா.
அன்றைய நாள் காலையில் நடந்த சண்டையை தவிர்த்து பார்த்தால் மிகவும் இனிமையாகவே கழிந்ததாக தோன்றியது ஷர்மிளாவிற்கு.. கூடவே இவளிடம் அன்பாக பேசிவிட்டு சென்ற அங்கிளை பார்க்கையில் எங்கோ பார்த்தது போல தோற்றமும் இவளுக்குள் வந்து சென்றது.
இனி என்றுமே பார்க்கக் கூடாது என நினைத்தது காலையில் சண்டையிட்டவனை தான். ஆனால் இனிமேல் அவனை அடிக்கடி சந்திக்க போவது அப்போது அவளுக்கு தெரியவில்லை.
1
சில மாதங்களுக்கு முன்பு..
மதுரையில் மத்திய பகுதி நேரம் வேகமாக நகர்ந்து கொண்டிருந்தது. பேங்கில் வழக்கத்திற்கு மாறாக அன்று கூட்டம் அலைமோதியது.
ஒவ்வொருவரிடமும் கேட்டு அவர்களுக்கான உதவிகளை வேகமாக செய்து கொண்டிருந்தால் ஷர்மிளா.
"மேடம் உங்களை பார்க்க ஒருத்தர் வந்து இருக்காங்க "என்று கூற நிமிர்ந்து பார்த்தால்.. இங்கே இவளுக்கு பெரியதாக உறவினர் என்று யாரும் கிடையாது.
*என்னன்னு சொன்னாங்க" என்று கேட்டபடியே எழுந்தால் ஷர்மிளா..
"உங்களுக்கு ரொம்ப வேண்டியவங்கன்னு சொன்னாங்க பத்து நிமிஷம் பேசணும்னு சார் கிட்ட பர்மிஷன் வாங்கி இருக்கிறாங்க.
சார் தான் பேச சொல்லுங்கன்னு அனுப்பி வச்சாங்க."
" எங்க வெயிட் பண்றாங்க" "கேட்டவள் பேங்கை சுற்றி நோட்டமிட "இங்கே இல்லை மேம்..முன்னாடி இருக்கிற அந்த கோயில்ல வெயிட் பண்றதா சொல்லி இருக்காங்க".
"ஓகே ஓகே இதோ வந்துட என்னறேன்" என்றவள் அருகில் இருந்தவரிடம் தான் செய்த வேலையை கொடுத்துவிட்டு நகர்ந்தாள். யோசனை முழுக்க யாராய் இருக்கும் என்ற மனநிலையில் புறப்பட்டாள்.
வேலை கிடைத்து வந்து இங்கே 5 வருடம் முடியப்போகிறது. இதுவரையிலும் யாரும் இவளை தேடி வந்தது இல்லை..
குழப்பத்தோடு எதிரில் இருந்து கோயிலை நோக்கி சென்றாள் ஷர்மிளா.
வயதான தம்பதி ஒருவர் அமர்ந்திருந்தனர். இவளை பார்க்கவும் அறிமுகப் புன்னகையோடு நெருங்கி வர இவளுக்குள் ஆயிரம் குழப்பம்..
" யார் நீங்க ? நீங்க தான் என்கிட்ட பேசணும்னு சொன்னீங்களா?"
" ஆமாம் மா நான் தான் உன்கிட்ட பேசணும்னு சொன்னேன். உன்னை ரொம்ப நாளா தேடிக்கிட்டு இருக்கிறேன் .
இப்பதான் என்னால நீ இருக்கிற இடத்தை தெரிஞ்சுக்க முடிஞ்சது தெரிஞ்ச உடனேயே காத்திருக்காமல் நேரா இங்க வந்துட்டேன் ".
"சரி ஆனா நீங்க யாருன்னு எனக்கு தெரியலையே.. என்ன விஷயம் நேரடியா சொல்லுங்க .சுத்தி வளைச்சு பேச வேண்டாம்".
" என்னம்மா இப்படி சொல்லிட்ட நான் பரணியோட அம்மா ..இவர் என்னோட கணவர் ".பெயரை கேட்கவும் முகம் மெல்ல மாற ஆரம்பித்தது ஷர்மிளாவிற்கு..
" எதுக்காக என்ன தேடி வந்திருக்கிறீர்கள் என்று தெரிந்து கொள்ளலாமா ".
"ஷர்மிளா உனக்கு தெரியாதது எதுவும் இல்லை .உனக்கு எப்படி சொல்லி புரிய வைக்கிறதுன்னு தெரியல .இன்றைக்கு பரணி உயிரோட இல்ல .பரணியோட ஞாபகமா எதுவுமே எங்க கிட்ட இல்ல ஒன்னே ஒன்னு தவிர.."
" நீங்க சொல்ற எதுவுமே எனக்கு புரியல .நீங்க கிளம்புறீங்களா எனக்கு ஆபீஸ்ல நிறைய வேலை இருக்குது".
" தெரியும் நீ இப்படித்தான் சொல்லுவேன்னு.. உனக்கும் பரணிக்கும் நடுவுல இருந்த உறவு எப்படிப்பட்டது என்று எனக்கும் இவருக்கும் நல்லாவே தெரியும்.
அவன் கடைசி நிமிஷம் எல்லாத்தையும் சொல்லிட்டு தான் போனான். பரணியோட பேரை சொல்ற மாதிரி அவனுக்கு ஒரு குழந்தை இருக்குது அப்படிங்கிறது இப்பதான் கொஞ்ச நாளைக்கு முன்னாடி தெரிஞ்சது .
முதல்ல சாதாரணமா விட்டுட்டோம் இப்ப தெரிஞ்சதுக்கு பிறகு தனியா விட எங்களுக்கு மனசு இல்ல .என்ன இருந்தாலும் அந்த குழந்தை எங்களோட ரத்தம் இல்லையா..
பரணியோட ரத்தம் இல்லையா எங்களோட வாரிசு தானே அந்த குழந்தை .."
"அதனால நீங்க என்ன சொல்ல வரீங்க . நேரடியா விஷயத்தை சொல்லுங்க.. நானும் ரெண்டு ஒரு வார்த்தையில் பதில் சொல்லிட்டு இப்போ கிளம்பனும் "என்று திரும்பி நகர போனாள்.
" நில்லுமா அவசரப்படாத நான் என்ன சொல்ல வர்றேன்னு முதல்ல பொறுமையா கேளு .".
"நான் பொறுமையா கேட்க எதுவுமே இல்லை பரணி என்கிற ஒரு கேரக்டரை எனக்கு ஞாபகம் கூட இல்லை .
எதுக்காக இதையெல்லாம் என்கிட்ட வந்து சொல்றீங்கன்னு எனக்கு சுத்தமா புரியலை. ".
"போதும் ஷர்மிளா ஒன்னும் தெரியாத மாதிரி பேச வேண்டாம் நாங்க எல்லாத்தையும் விசாரிச்சிட்டு தான் இங்க வந்திருக்கிறோம்.
குழந்தை கவி யாருடையது ஞாபகம் இருக்குதா ..அது என் பையனோடது" இப்போது பரணியின் தந்தை குரல் கொடுக்க,
"ஐயோ என்னங்க நீங்க கொஞ்சம் கோபத்தை காட்டாமல் பொறுமையா இருங்க .நான் தான் உங்ககிட்ட சொன்னேன்ல.. நான் பொறுமையா பேசி புரிய வைக்கிறேன் அப்படின்னு தானே உங்களை அழைச்சிட்டு வந்தேன் .
நீங்க என்ன சட்டுனு கோவப்பட்டா என்ன அர்த்தம் ."
"இதோ பாருமா ஷர்மிளா எங்களுக்கு குழந்தை வேணும் கூடவே .."
"போதும் நிறுத்துறீங்களா இதுக்கு மேல ஒரு வார்த்தை கூட பேச வேண்டாம் .
இங்கே எனக்கு எந்த பரணியையும் தெரியாது. அப்புறமா என்கிட்ட இருக்கிற குழந்தை என்னோடது தான் .
அதை யார்கிட்டயும் கொடுக்க தயாராக இல்லை நீங்க தப்பான ஒரு இடத்துக்கு வந்து விசாரிச்சுக்கிட்டு இருக்கீங்க .அத முதல்ல புரிந்துகொள்ளுங்கள் .
எனக்கு உறவு என்று சொல்லிக்க யாரும் இல்ல புதுசா எந்த உறவையும் ஏத்துக்கவும் நான் தயாரில்லை .
நானும் என் குழந்தையும் மட்டும் தான் .இப்படி தான் கடைசி வரைக்கும் இருப்போம் .
இன்னொரு முறை எந்த பேரையும் சொல்லிட்டு என்னை பார்க்க வராதீங்க "சொல்லியவள் சற்று கோபத்தோடு நகர்ந்தாள்.
பிரச்சனை அத்தோடு முடிந்திருக்கவில்லை .அடுத்த நாளே ஷர்மிளா தன்னுடைய குழந்தை கவியை எந்த பிளே ஸ்கூலில் விடுவாலோ அங்கே இவர்கள் இருவரையும் பார்க்க நேரிட்டது .
குழந்தையை வேகமாக அழைத்துக் கொண்டு வந்தவள் அதற்கு மேல் தாமதிக்கவே இல்லை .
அடுத்த ஒரு மாத காலத்திற்கு விடுமுறை எடுத்தவள் வேகமாக அந்த ஊரிலிருந்து புறப்பட தயாரானாள்.
இன்று..
"ஏற்கனவே பேசிட்ட தானே.. கட்டாயமாக ஸ்கூல்ல இடம் கிடைக்கும் தானே.. எல்கேஜி, யுகேஜினா தெரியாது .நாம ரெண்டாங்கிளாஸ்க்கு கொண்டு வந்து சேர்க்கிறோம்.."
"அதெல்லாம் பேசியாச்சு ஷர்மி கட்டாயமாக சீட் தருவாங்க.. இல்லாட்டி கூட பிரச்சனை இல்ல கட்டாயமா சீட் வாங்கிடலாம் .
யாரை பிடிச்சா வேலை நடக்குமோ அவங்களை பிடிச்சு வாங்கிடலாம்".
" என்னவோ தைரியமாக நீ சொல்ற.. உன்னை நம்பி தான் இங்கே அழைச்சிட்டு வந்துட்டேன் .
இதுக்கு மேல ஊர் ஊரா என்னால சுத்த முடியாது.. இனி இங்கதான் தங்கறதா இருக்கிறேன்". சொன்ன ஷர்மிளாவிற்கு தற்போது 28 வயது துவங்கி இருந்தது.
ஐந்தரை அடி உயரத்தில் அழகாக இருந்தால். அவளுக்கு, தவறு என்று தோன்றினால் உடனே தட்டிக் கேட்கும் பாங்கு ..பார்ப்பவர்களை இவளிடத்தில் மரியாதையை தானாகவே கொண்டு சேர்க்கும் .
பாரதி கண்ட புதுமைப்பெண் நான் என்பது போன்ற தோற்றம் ..
எப்போதுமே நிமிர்ந்த நடை ,நேர் கொண்ட பார்வை ,மனதில் என்ன தோன்றுகிறதோ.. நேருக்கு நேராக பேசக்கூடியவள்..
ஒரே பெண் குழந்தை…இவளுடைய உயிர்..கவி.. ஏழு வயது சிறுமி.. அழகான இரண்டு குதிரைவால் போட்டு இவளை உரித்து வைத்தாற்போல் தோற்றம்.. தற்போது இவளுக்கு அருகே அமர்ந்து இருந்தாள்.
"ஷர்மி பொள்ளாச்சியில் இதைவிட பெஸ்டான ஸ்கூல் தேடவே முடியாது உன்னோட பொண்ணுக்கு இதை விட பெஸ்ட்டா ஒரு ஸ்கூல் கிடைக்கவே கிடைக்காது .
இன்டர்நேஷனல் ஸ்கூல்.. இங்க கோச்சிங் சூப்பரா இருக்கும். என்னோட ரிலேஷன்ல நிறைய குழந்தைங்க இங்கு தான் படிக்கிறாங்க.."
"தேங்க்ஸ் ஆனந்தி நீ மட்டும் இல்லன்னா நான் ரொம்ப சிரமப்பட்டு போய் இருப்பேன்".
" ஏன் அப்படி சொல்ற அதெல்லாம் கிடையாது .நீ வேலை செய்யறது பேங்க்ல அசிஸ்டன்ட் மேனேஜரா..
நான் உனக்கு ஹெல்ப் பண்ணாட்டி கூட ஆட்டோமேட்டிக்கா பேங்க்ல இருந்து உனக்காக தங்க இடம் ரெடி பண்ணி கொடுத்து இருப்பாங்க.
எப்படியும் ரெண்டோரு நாள்ல நீயே இந்த வேலையெல்லாம் செஞ்சு முடிச்சு இருப்ப.."
"அப்படி சொல்லக்கூடாது ஆனந்தி இவ்வளவு தூரம் வர முக்கிய காரணமே நீதான் .
நீ இங்க இருக்கிற தைரியத்துல தான் என்னால் அவ்வளவு தூரத்தில் இருந்து கிளம்பி வர முடிஞ்சது.
இனி எங்கேயும் போகற ஐடியா இல்ல இனி இங்கேதான் தொடர்ந்து வேலை செய்யணும்."
ம்..
"உண்மைய சொல்லனும்னா நான் இதை எதிர்பார்க்கல ஷர்மி. ஐ ஆம் சாரி ஒரு வகையில் இன்றைக்கு உன்னோட இந்த நிலைமைக்கு காரணம் நான் தானே.."
" பைத்தியம் மாதிரி பேசக்கூடாது தப்பு எல்லாம் என்னோட பேர்ல தான்.
உன் பேர்ல எதுவும் இல்ல.. யார் என்ன சொன்னா என்ன? எப்படி பேசினா என்ன ?எனக்கு எங்க அறிவு போச்சு!!
பைத்தியக்காரி மாதிரி சொல்றது எல்லாத்தையும் நம்பினதற்கான பனிஷ்மென்ட் தான் இதெல்லாம்.."
" நீயேன் ஷர்மி உன்னோட அப்பா கிட்ட போகலை .."
"எப்படி போக சொல்ற ..இந்த மாதிரி கோவில்ல கல்யாணம் பண்ணிக்கிட்டோம்..வாழ்ந்த வாழ்க்கைக்கு அடையாளமா ஒரு குழந்தையை பெற்றெடுத்து வெச்சி இருக்குறேன்..
என்னை பாருங்கன்னு போய் நிற்க சொல்றியா ..அவங்க என் மேல் எவ்வளவு நம்பிக்கை வச்சு அனுப்பி வச்சாங்க..
உனக்கு தான் தெரியுமே அந்த நம்பிக்கை எல்லாத்தையும் நான் கெடுத்துட்டேன் .
டெல்லியில் இல்லாத யுனிவர்சிட்டியா.. இல்ல காலேஜா.. அதையெல்லாம் விட்டுட்டு நான் எதுக்காக இந்த சென்னைக்கு படிக்க வரணும் .
நாலு தடவை ஒருத்தன் திரும்பத் திரும்ப தொடர்ந்து வந்து பேசினா நான் எதுக்காக பேச்சு கொடுக்கணும் .
பேசின ஒவ்வொன்றையும் நம்பி என்னவோ புனிதமான காதல்னு நினைத்து என்னை நானே இழக்கனும் .
அதற்கான தண்டனை தான் இதெல்லாம்.. என்னோட தண்டனையை நான் மட்டும் தான் அனுபவிக்கணும் ஆனந்தி . மத்தவங்க யாரையும் கஷ்டப்பட வைக்க கூடாது ."
"இல்ல ..நான் வந்து.."
" போதும் ஆனந்தி.. இப்போதைக்கு வேறு எதையும் பேசாத.. இங்க யாரை பாக்கணும்.."
"ஸ்கூலோட தலைமை பொறுப்பில் இருக்கிறவர் எனக்கு வேண்டியவங்க ஷர்மிளா .அதனால பெருசா எந்த ஃபார்மாலிட்டியும் இருக்காது.
உன்னோட பொண்ணு அப்படியே உன்னோட ஜாடை ஷர்மி.. கண்ணு , வாய் எல்லாமே உன்னோட ஜெராக்ஸ் மாதிரி இருக்கிறா. அவ்வளவு அழகு.."
" அப்படித்தான் சொல்லுவாங்க ஆனந்தி. இப்போதைக்கு நான் வாழ்வதற்கான அர்த்தம் கூட அவ தான் ".
"ஏன் இப்படி பேசுற.. நீ இப்படி பேசறது எனக்கு துளி கூட பிடிக்கல ஷர்மி .உனக்கு என்ன குறைச்சல் நல்ல வேலை இருக்குது.
கண்ணுக்கு நிறைவா ஒரு குழந்தை இருக்கு.. இதுக்குமேல என்ன வேணுமாம் .
என்னை எல்லாம் எடுத்துக்கோ எனக்குன்னு யார் இருக்காங்க.. பொறுப்பில்லாத அப்பா நான் ஏன் இருக்கேன்னு கூட எனக்கு புரியறது இல்லை.*
"உன்னோட ஒர்க் எப்படி போய்கிட்டு இருக்கு ஆனந்தி ".
"எப்படி போகுது நல்லா தான் போய்கிட்டு இருக்குது .உனக்கு தான் தெரியுமே ..
சென்னையில் டிகிரி முடிச்சு வந்த பிறகு என்ன செய்வது என்று தெரியாமல் இங்கே லா காலேஜ்ல சேர்ந்தேன். இன்றைக்கு நானும் ஒரு வக்கீல்னு பெருமையா சொல்லிக்கலாம் .
சின்ன சின்னதா வேலை வருது. செஞ்சிகிட்டு இருக்குறேன். அப்புறமா ஒரு பெரிய வக்கில்கிட்ட ஜூனியரா இருக்கிறேன்.
நம்ம கொஞ்சம் சீக்கிரம் வந்துட்டோம் பத்து மணிக்கு தான் ஆபீஸ் குள்ள விடுவாங்க .கொஞ்ச நேரம் இங்க தான் வெயிட் பண்ணனும்." அமைதியாக விளையாடிக் கொண்டிருந்த கவியை பார்த்தவள்..
"பொண்ணு ரொம்ப க்யூட்ல.. ரொம்ப அழகா இருக்கறா..*
"ரொம்ப புத்திசாலியும் கூட ஆனந்தி ..ஒரு நாள் கூட அவளால எனக்கு சிரமம் இருந்தது இல்லை."
"இன்னும் நேரம் ஆகும் போல இருக்கு நான் இவள வெளியே அழைச்சிட்டு போயிட்டு வரட்டுமா.. இவளுக்கு சாப்பிட பிஸ்கட் மாதிரி ஏதாவது வாங்கி தரணும்னு ஆசைப்படறேன் ஷர்மி".
" காலையில் ஆல்ரெடி சாப்பிட்டா.."
" நீ இப்ப என்ன சொல்ல வர்ற.. அவளுக்கு நான் எதுவும் வாங்கி கொடுக்க கூடாதுன்னா .."
"நான் அப்படியெல்லாம் சொல்வேனா தாராளமா நீ அவளை அழைச்சிட்டு போ..
நான் அப்படியே இந்த ஸ்கூல சின்னதா ஒரு ரவுண்டு சுத்தி பார்த்துட்டு வரட்டுமா.."
" இதென்ன கேள்வி நீ தாராளமா போய் சுத்தி பாரு ..உன் பொண்ண இங்க சேர்க்க போற.. இதெல்லாம் பார்த்து வைக்கிறது நல்லது தானே.."
" சரி கவி குட்டி ஆன்ட்டி கூட கடைக்கு போயிட்டு வாங்க.. அம்மா இப்ப வந்துடறேன் சரியா *என்றபடி நகர்ந்தால் ஷர்மிளா .
இப்போது தான் காலை 9 மணியை தொட்டுக் கொண்டிருந்தது .நிறைய மாணவர்கள் பள்ளிக்கு உள்ளே வந்து கொண்டிருந்தனர்.
பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை கையில் பிடித்தபடி ஸ்கூல் காம்பவுண்டுக்குள் விட்டுவிட்டு நகர ,எல்லாவற்றையுமே ஒரு பார்வையாக பார்த்தபடி நகர்ந்தால் ஷர்மிளா.
ஸ்கூல் பார்க்கிங் அத்தனை நீளத்திற்கு பறந்து விரிந்து கிடந்தது வேடிக்கை பார்த்தபடியே நகர.. அப்போதுதான் அந்த பார்க்கிங்கை நோக்கி அந்த கார் வேகமாக வந்து கீரீச்சிட்டு நின்றது .
காரின் கதவை திறந்து கொண்டு இறங்கி நின்றான் அவன். நெடுநெடு உயரம் ஆறடி இருப்பானோ.. கண்ணை மறைத்திருந்த கூலிங் கிளாஸ் கண்ணாடி..
ஜீன்ஸ் பேண்ட் ,சட்டை சகிதமாக இறங்க, முன்னிருக்கையில் இருந்து அந்த சிறுவன் குதித்து இறங்கினான்.கூடவே இன்னொரு வயதானவர் பின் கதவை திறந்து கொண்டு கீழே இறங்கினார்.
" ராமண்ணா கொண்டு போய் இவனை இவனோட கிளாஸ்ல விட்டுட்டு வாங்க."என்று சொல்ல, இறங்கிய சிறுவன் வேகமாக அவனின் கன்னத்தில் முத்தமிட்டான்.
" பை டாடி போயிட்டு வரேன்.. தாத்தா போகலாம் "என மழலை குரலில் சொன்னபடி நடக்க இவளையும் அறியாமல் ஒரு புன்னகை உதட்டில் ஒட்டிக்கொண்டது.
இருந்தால் இவளுடைய பெண்ணின் வயது தான் இருக்கும்..அந்த சிறுவனுக்கு.. நடப்பதில் அத்தனை பெரிய மனித தோரணை.. இவளையும் அறியாமல் அந்த குழந்தையின் பின்னால் கண்கள் சென்றது.
"ராம் அண்ணா..அப்படியே அந்த வாட்ச்மேன் இன்னைக்கு வந்திருக்கிறானாண்ணு பார்த்து சொல்லுங்க ".
"அதெல்லாம் வந்து இருக்கறான் தம்பி .காலையிலேயே தகவல் வந்துடுச்சு ."
"அப்புறம் என்ன? நீங்க போங்க நான் பார்த்துக்கிறேன்* என்று சொல்லிவிட்டு இறங்கி வலப்புறமாக நகர ,சுற்றிலும் வேடிக்கை பார்த்தவள் பார்வை அவளையும் அறியாமல் அவனின் பின்னால் சென்றது .
சற்று தூரத்தில் நிற்கின்ற ஒருவனை கைகாட்டி அழைப்பது தெரிந்தது .
பெரிய ராஜான்னு நினைப்பு..பெரிய தோறணை தான்.. அந்தப் பையனின் நடவடிக்கை யாரிடம் இருந்து வந்திருக்கும் என்பது பார்க்கவும் புரிந்தது..
பார்த்துக் கொண்டிருந்த போதே அருகே வந்திருந்தவனை பளார் என கன்னத்தில் அடித்திருந்தான்.
அடி வாங்கியவன் ஏதோ சொல்வது புரிந்தது ஆனால் இவன் நிறுத்துவதாக இல்லை அடி ஒவ்வொன்றும் இடி என விழுவது போல அடுத்தடுத்து விழுந்துக் கொண்டிருக்க சற்றே அதிர்ச்சியோடு கவனிக்க ஆரம்பித்தாள்.
விட்டால் அடித்தே கொன்று விடுவான் போல இருந்தது அவனுடைய நடவடிக்கை ஒவ்வொன்றுமே..
ஓரளவுக்கு மேல் இவளால் பார்த்து சகிக்க முடியாமல் வேகமாக அவர்கள் நின்றிருந்த பகுதிக்கு சென்றாள் .
அவர்கள் நின்றிருந்தது சற்றே ஒதுக்குப்புறமான பகுதி.. நிச்சயமாக மற்றவர்களுக்கு தெரிய வாய்ப்பு கிடையாது.
இப்போதும் அடி வாங்கிக் கொண்டிருந்தவன் கெஞ்சிக் கொண்டிருந்தானே தவிர திரும்ப தடுப்பது போல் எல்லாம் இல்லை.
என்னவோ அடி வாங்குவதற்காகவே பிறந்தவன் போல கெஞ்சிக் கொண்டிருந்தான் ."அடிக்காதீங்க சார் வலிக்குது.. இனி இப்படி செய்ய மாட்டேன்"என்று கெஞ்சிக் கொண்டிருக்க..
"ஏன்டா எத்தனை தைரியம் இருந்தா இது மாதிரி காரியம் செய்வ…கேக்குறதுக்கு ஆள் இல்லை என்று நினைச்சியா..
ஏற்கனவே ஆபீஸ்ல பேசியாச்சு கொடுக்கிற சம்பளத்தை வாங்கிட்டு இருக்கிற இடம் தெரியாம ஓடி போயிடணும் .
அப்புறம் எதுக்காக அடிக்கறான்னு பாக்கறியா.. இன்னொரு பக்கம் வேலைக்கு போனா இது மாதிரி கை நீட்டாம இருக்கணும் அதுக்காக தான் இந்த அடி புரிஞ்சுதா.."சொன்னவன் இப்போதும் நிறுத்தவில்லை மறுபடியும் அடித்துக் கொண்டுதான் இருந்தான்.
வேகமாக அவர்களுக்கு அருகில் சென்று நின்றாள் ஷர்மிளா.
" நிருந்துங்கள்..என்ன சார் நடக்குது இங்க ..என்ன செஞ்சுகிட்டு இருக்கீங்க யார் நீங்க எதுக்காக இவரை பிடித்து அடிக்கிறீங்க .
இவரை பார்த்தால் இங்கே இருக்கிற வாட்ச்மேன் போல இருக்குது. இவரை எதுக்காக நீங்க அடிக்கறீங்க". என்று வரிசையாக கேள்வியை கேட்டிருந்தாள்.
எதற்குமே அவனிடத்தில் இருந்து பதில் இல்லை .இப்போதுமே அவனைத்தான் அடித்துக் கொண்டிருந்தான்.
"எவ்வளவு தைரியம் இருந்தால் இதுபோல ஒரு காரியத்தை செய்வீங்க.
கேக்குறதுக்கு ஆள் இல்லன்னு நினைக்கறீங்களா.. மிஸ்டர் உங்களை தான் கேட்டுகிட்டு இருக்கிறேன்."
இவள் கேட்டது எதுவுமே அவனது காதுக்கு சுத்தமாகவே விழவில்லை என்பது போல இருந்தது அவனுடைய நடவடிக்கை ஒவ்வொன்றுமே.. இப்போதும் கோபமாக அவனை அடித்தபடி தான் பேசிக் கொண்டிருந்தான்.
"இங்கே என்ன தப்பு நடந்தாலுமே என்னோட காதுக்கு வந்துடும்" என்ற படியே மறுபடியும் அடிக்க.. ஒரு கட்டத்திற்கு மேல் சகிக்க முடியாமல் வேகமாக அவனுடைய கையை பிடித்து தடுத்து நிறுத்தி இருந்தால்.
"நீ என்ன பெரிய ரவுடியா.. அவர் தப்பு பண்ணி இருந்தாருன்னா சட்டப்படி போலீஸ்ல கம்ப்ளைன்ட் பண்ணுங்க .
அதை விட்டுட்டு தண்டிக்கிற உரிமை யாரு உங்களுக்கு கொடுத்தது.. இதுக்கு மேல இன்னொரு அடி அவர் மேல விழுந்ததுன்னா என்ன செய்வேன்னு தெரியாது "கோபமாக இவள் சத்தமிட அடிப்பதை நிறுத்திவிட்டு முதல் முறையாக திரும்பி இவளை பார்த்தான்.
சற்றே கண்களில் ஆச்சரியம் தோன்ற.. வேகமாக கண்ணில் இருந்த கண்ணாடியை கழட்டி விட்டு இவளை இன்னமும் ஆர்வமாக கவனிக்க ,
கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி இருந்தவன் தப்பித்தால் போதும் என்கின்ற நோக்கத்தோடு இவளையும் சேர்த்து தள்ளி விட்டுவிட்டு ஓடி இருந்தான்.
அதே நேரத்தில் இவளை தேடியபடி இவளுடைய தோழியும் அங்கே வந்திருந்தாள்.
" ஷர்மி என்ன செஞ்சுகிட்டு இருக்கிற "என கேட்டுப்படியே வந்தவள் வேகமாக நின்றிருந்தவனை பார்த்து.." மதி சார்.. வணக்கம் நல்லா இருக்கீங்களா "என்று இவனிடம் பேசியவள்.. வேகமாக ஷர்மியை இழுத்துக் கொண்டு நகர்ந்தாள்.
"எதற்காக மரியாதை கொடுக்கிற.. ரவுடி மாதிரி இருக்கிறான். கொஞ்சம் கூட மரியாதை இல்லாம ஒருத்தனை போட்டு அடிச்சுக்கிட்டு இருக்கிறான் .
அவனுக்கு நீ மரியாதை கொடுத்துக்கிட்டு இருக்குற.."
" இது மாதிரி எல்லாம் பேசாத ஷர்மிளா.. உனக்கு புரியாது சார் இங்கே ரொம்ப பிரபலமானவரு..
நிறைய பேருக்கு தெரிஞ்சவங்க கூட . அவர் ஏதாவது செஞ்சா காரணம் இல்லாம இருக்காது.. நீ எதுக்காக அவர் கிட்ட பேசிகிட்டு இருக்கற".
"என்ன பெரிய மண்ணாங்கட்டி நியாயவாதி.. எனக்கு புரியல ஆனந்தி .ஒருத்தனை பிடித்து வைத்து அவ்வளவு அடி அடித்துக்கிட்டு இருக்கிறான்.
அவனுக்கு நீ மரியாதை கொடுத்து பேசிக்கிட்டு இருக்கிற .."
"இத பாரு.. இது மாதிரி எல்லாம் யார்கிட்டயும் உளறிட்டு இருக்காத புரிஞ்சுதா.. இந்த ஏரியாவில் அவர் ரொம்ப பெரியவரு..
அவர் வைச்சது தான் சட்டம் இதுவரைக்கும் அவர் மேல எந்த குற்றச்சாட்டும் வந்தது இல்லை. முதல் முதலில் நீ தான் அவரை தப்பா சொல்லிக்கிட்டு இருக்குற.."
"இப்ப நீதான் உளர்ற ஆனந்தி.. ரவுடி மாதிரி ஒருத்தன பிடிச்சு அடிச்சுகிட்டு இருக்கிறான். அவனுக்கு சப்போர்ட் பண்ற மாதிரி இருக்குது நீ பேசுறது.
முகத்தைப் பார்த்தால் தெரியலையா அவனோட முகத்தை பார்த்தா நல்ல விதமாவா யோசிக்க முடியுது உண்மையிலேயே ரவுடிதான்*.
" இப்ப யார் இல்லைன்னு சொன்னாங்க .மதி சார் பத்தி இங்க எல்லாருக்கும் தெரியும் .அவர் நல்லவனுக்கு நல்லவன் கெட்டவருக்கு கெட்டவன் .
ஏதாவது பிரச்சனைன்னு யாராவது சொல்லி இருப்பாங்க அதனால இன்னைக்கு இங்கே வந்திருக்கிறார் மத்தபடி ஸ்கூல் கிட்ட வர்ற பழக்கம் எல்லாம் அவருக்கு கிடையவே கிடையாது .
கொஞ்ச நேரம் பொறுமையா இரு என்னன்னு விசாரிச்சு சொல்றேன். மதி சார் காரணமில்லாமல் யாரையும் கை நீட்ட மாட்டாரு."
"அதெல்லாம் வேண்டாம். இவளை ஸ்கூல்ல சேர்த்து விட்டுட்டு கிளம்பிடலாம்".
"நீ தப்பா புரிஞ்சு இருக்கிற.. ஷர்மி.. அவர் கிரேட் தெரியுமா .அவரை யாருமே கைநீட்டி குறை சொல்லிட முடியாது.."
"ஆனந்தி..எனக்கு அது தேவையில்லாத விஷயம்".
"நீ கோவமா இருக்கறேன்னு தெரியுது .நான் எதுவும் பேசல.. இப்பதானே இங்க வந்திருக்கிற…போக போக புரிஞ்சுக்குவ.. நீயே உன்னோட வாயால கிரேட் அப்படின்னு சொல்ற நாள் ரொம்ப தூரத்துல இல்லை.."
"ப்ளீஸ் நீ எந்த சமாதானமும் சொல்ல வேண்டாம் ஆனந்தி.. தடுக்க போய் ஒருத்தி நிக்கறேன். முகத்தை கூட பார்க்கலை.. அந்த அடி அடிக்கறான்."
"ஷர்மி நீயும் நானும் பேசுறத பார்த்து குழந்தை பயந்துட போறா.. நம்ம நேரா ஆஃபீஸ் ரூமுக்கு போகலாம். குழந்தையை சேர்த்து விட்ட பிறகு இத பத்தி பொறுமையா இன்னொரு நாள் பேசிக்கலாம்."
அடுத்த அரை மணி நேரத்தில் பேசி பள்ளியில் சேர்த்து விட்டு வீட்டிற்கு புறப்பட்டனர்.
"உன்னோட திங்ஸ் எல்லாம் எப்ப இங்க வர போகுது ஷர்மி".
"ஆல்ரெடி பேக் பண்ணியாச்சு இன்னைக்கு வந்திடும்னு சொல்லி இருக்காங்க ..நீ எங்க வீடு பார்த்து இருக்கிற.. வீடு எப்படி இருக்குது வசதியா இருக்குமா ..எந்த பிரச்சனையும் இருக்காது தானே ".
"நீ என்கிட்ட எப்ப பொறுப்ப கொடுத்தையோ அப்பவே தெளிவா பண்ணிட்டேன். உனக்கு பாதுகாப்பா இருக்கக்கூடிய ஒரு இடத்துல தான் வீடு பார்த்து வைத்திருக்கிறேன்.
எப்பவும் உனக்கு எந்த பிரச்சனையும் வராது. நீ நிம்மதியா குழந்தையோட என்ஜாய் பண்ணலாம்.
அங்க.. அந்த ஏரியாவுல வாட்ச்மேன் கூட இருக்கிறாங்க ரொம்ப ஷேப்பான இடம்.."இவளிடம் பேசியபடியே ஆட்டோக்காரரிடம் அட்ரஸ் சொன்னவள் அப்போதுதான் ஞாபகம் வர, வேகமாக தன்னுடைய பேக்கை எடுத்து தேடினாள்.
" என்ன ஆச்சு? என்ன தேடுற.."
"ஓ மை காட் முக்கியமான விஷயத்தை மறந்துட்டேன். வீட்டோட சாவி இன்னும் என் கைக்கு வரல இரு ஒரு நிமிஷம்" என்றவள் வேகமாக போனில் அழைத்து பேசினாள்.
"அங்கிள் நான் ஏற்கனவே உங்க கிட்ட சொன்னேன் இல்லையா ..என்னோட பிரண்டு ஊர்ல இருந்து வந்திருக்கிறான்னு..
அவளுக்கு தங்குவதற்கு இடம் கொடுக்கணும்னு கேட்டேன்.. நீங்க கூட தரேன்னு சொல்லி இருந்தீங்க.. உங்க கிட்ட வீட்டு சாவியை நான் இன்னும் வாங்கலை.. நான் இப்ப அங்க வந்து வாங்கிக்கவா.."
"ஆனந்தி பொண்ணு தானே நீ.. இப்ப நான் அந்த ஏரியாவுக்கு தான் வந்திருக்கிறேன்.. வீட்டு சாவி கைல தான் இருக்குது. நேரா வீட்டுக்கு வந்துடு.அங்க வச்சு தந்துடறேன் நீ அலைய வேண்டாம் ".
"சரி அங்கிள் ரொம்ப தேங்க்ஸ்.."
"ஆனந்தி வாடகை பேசிட்டதானே அட்வான்ஸ் கொடுக்கணுமா .."
"அதெல்லாம் நிதானமா பேசிக்கலாம் ஒன்னும் அவசரம் இல்ல.."
"என்ன நீ கொஞ்சம் கூட பொறுப்பில்லாம இப்படி பேசுற.. இத்தனை நாள் நான் இருந்த பக்கம் எல்லாம் முதல்ல அட்வான்ஸ் கொடுத்துட்டு வாடகை பேசிட்டு தான் வீட்டுக்கு வருவோம். இங்க எல்லாமே அப்படியே தலைகீழா இருக்குது.."
"ஏன்னா இது என்னோட ஊரு.. என்னோட கிராமம் இங்கே இப்படித்தான்.."
"இதோ இந்த பக்கமாக உள்ள போகணும் ".
"ஏய் என்ன ஆனந்தி இது ஏதோ குவாட்டர்ஸ் மாதிரி இருக்குது..".
"உண்மையிலேயே இது குவாட்டர்ஸ் தான் .வேலை செய்றவங்களுக்காக கட்டி கொடுத்தது. இங்க தான் உனக்கு வீடு பார்த்திருக்கிறேன் பயப்படாத... நீ இங்க நிம்மதியா இருக்கலாம்".
ம்..
"அதோ அங்கிள் கூட வாசல்ல தான் நிக்கிறாங்க வா" என்றபடி வேகமாக இவளை அழைத்து சென்றவள் காலை தொட்டு வணங்கினாள்..
" நல்லாயிருமா.. நல்லா இரு இதுதான் உன்னுடைய பிரண்டா ..நீ பேசும்போதே உன்கிட்ட வீட்டு சாவியை கொடுத்து இருக்கணும்.
வயசாகுதில்லையா மறந்துட்டேன். இந்தா மா இந்த வீட்டோட சாவி.. வீட்ல ஏற்கனவே தேவையான எல்லா பொருட்களுமே இருக்குது அதை எல்லாமே அப்படியே யூஸ் பண்ணிக்கலாம் .நான் எதுவும் சொல்ல மாட்டேன் ".
"தேங்க்யூ அங்கிள்.. தேங்க்யூ வெரி மச்.."
"இவங்க ரெண்டு பேரும் தான் தங்க போறாங்களா .."
"ஆமாம் அங்கிள்.. இவங்க ரெண்டு பேரும் மட்டும் தான் இங்க தங்க போறாங்க.. இவங்களுக்கு பாதுகாப்பான ஒரு இடம் தேவை இருந்தது அதனாலதான் இங்க கூப்பிட்டுட்டு வந்தேன்."
"ஏன் அப்படி சொல்ற.. இந்த பொண்ணோட ஹஸ்பண்ட் எப்போ வருவாங்க.."
" அங்கிள் வந்து.."
"எனக்கு கணவர் இல்ல.. நானும் குழந்தையும் மட்டும்தான்.. இன்னும் சொல்ல போனா எனக்கு யாரும் இல்லை.இப்போதைக்கு.."
"அப்படி எல்லாம் சொல்லக்கூடாது மா இனிமே இந்த அங்கிளும் உங்களுக்கு துணையாய் இருப்பேன் கவலைப்படாத.. தனியா இருக்கிறதா என்னைக்கும் நீ யோசிக்க வேண்டாம்..
உனக்கு என்ன உதவி வேணும்னாலும் அந்த நிமிஷம் நான் உனக்கு வந்து செஞ்சு தருவேன் என்ன நம்பலாம்".
" இதை நீங்க சொல்லவே தேவையில்லை . இன்னமும் கொஞ்ச நாள்ல ஷரிமியே புரிஞ்சுக்குவா..
ஒருத்தரை ஒருத்தர் அறிமுகப்படுத்தி வைக்கிறதுக்கு முன்னாடியே பேச ஆரம்பிச்சிட்டீங்க..
இவதான் என்னோட பிரண்டு ஷர்மிளா.. இவ அவளோட குழந்தை கவி.
இவங்க ரெண்டு பேருக்கு தான் உங்ககிட்ட வீடு வேணும்னு கேட்டேன் இங்கனா அவளுக்கு பாதுகாப்பா இருக்கும்னு தோணுச்சு அதனாலதான் உங்ககிட்ட இந்த உதவியை கேட்டேன்".
"இனி உன்னோட பிரண்டை பத்தி கவலைப்பட வேண்டாம் ஆனந்தி.. "
"நன்றி அங்கிள் "சாவியை கொடுத்தவர் புறப்பட்டு இருந்தார்.
அதன் பிறகு இவர்களுடைய நேரம் சுவாரசியமாகவே கழிந்தது .மாலை வரையிலுமே ஷர்மிளாவோடு கூடவே இருந்த பிறகு தான் புறப்பட்டு போனாள் ஆனந்தி.
காலை முதலே நடந்தது ஒவ்வொன்றையும் யோசிக்க ஆரம்பித்திருந்தால் ஷர்மிளா.
அன்றைய நாள் காலையில் நடந்த சண்டையை தவிர்த்து பார்த்தால் மிகவும் இனிமையாகவே கழிந்ததாக தோன்றியது ஷர்மிளாவிற்கு.. கூடவே இவளிடம் அன்பாக பேசிவிட்டு சென்ற அங்கிளை பார்க்கையில் எங்கோ பார்த்தது போல தோற்றமும் இவளுக்குள் வந்து சென்றது.
இனி என்றுமே பார்க்கக் கூடாது என நினைத்தது காலையில் சண்டையிட்டவனை தான். ஆனால் இனிமேல் அவனை அடிக்கடி சந்திக்க போவது அப்போது அவளுக்கு தெரியவில்லை.