மகாசமுத்ரா
Moderator
இலக்கணப்போலி
“இலக்கணம் உடையது போல் சான்றோரால் தொன்று தொட்டு வழங்கப்படும் சொல்”
அத்தியாயம் – 1 (பாட்டாளி)
“பச்சரிசி மாவெடுத்து மாவெடுத்து”
என்ற பாடல் ஆரம்பித்து
“மதுர மரிக்கொழுந்து வாசம்
என் ராசாத்தி உன்னுடைய நேசம்”
என்பதில் வந்து நிற்க, கேட்டுக் கொண்டிருந்த மீனாட்சியின் உதட்டின் ஓரங்கள், இத்தனை நேரமிருந்த இறுக்கத்தைத் தொலைத்து பூத்து விரிய ஆரம்பித்திருந்தன.
மதுரை மாநகரில் அதிகமாக ஒலிக்கப்பட்டப் பாடல்கள் என்று ஒரு கருத்தாய்வு செய்தால் முதல் ஐந்து பாடல்களில் ஒன்றாக இப்பாடல் வந்துவிடும் என்று அடித்துச் சொல்லும் அளவிற்கு இந்தப் பாடலைப் போட்டுப் போட்டுப் தேய்த்து எடுத்திருந்தனர் மதுரையின் பேருந்து ஓட்டுனர்கள்.
காரணம்? அதில் வரும் ‘மதுர’ என்கிற ஒற்றை வார்த்தை.
மதுரையினுள் நுழைந்தவுடன் அவ்வூரின் சிறப்பை எடுத்துச்சொல்லும் ஆயிரம் விஷயங்கள் நம் கண்களில் பட்டாலும்,
‘அவையெல்லாம் போதாது, மேலும் தெரிந்துக்கொள்ளுங்கள்’ என்பது போல் மதுரை என்ற சொல் இடம் பெறுகிற அனைத்து பாடல்களையும் உங்கள் காதுகளில் பாய்க்கக்காத்திருப்பர் நம் மதுரை வாசிகள்.
‘இந்த மதுரக்காரைங்க இருக்காய்ங்களே...’ என்று தலையை இருபுறமும் ஆட்டியபடியே நினைத்தவளின் இதழ்கள் சிரிப்பில் மேலும் அகன்றுவிரிய, பேருந்துக்குள் பயணச்சீட்டைக் கூட வாங்காமல் ஜன்னலின் வழித் திருட்டுத் தனமாக அத்துமீறி நுழைந்துக்கொண்டிருக்கும் ஆதவனின்கீற்றை ஏந்தித் தாங்களும் ஒளிவீசத் தொடங்கின அவளது இதழினுள் இளைப்பாறி கிடந்த ‘மல்லிகைப் பூ’ பற்கள்,
அடுத்த வினாடியே ‘இருக்க பெருமையத் தானப் பீத்துறோம், இல்லாததையாப் பீத்துறோம், ஹூம்’ என்று சிலுப்பிக் கொண்டவளின் கண்களில் சிரிப்போடுச் சேர்த்து மிதப்பும் குடிகொண்டது.
“தெப்பக்கொளோ வாங்குனவிங்க எல்லாம் வெளியவந்துரேய்ய்ய்...” என்று நடத்துனர் கூவ, மடியிலிருந்த கைப்பையை எடுத்துத் தோளில் மாட்டியபடி எழுந்தவள், எக்கித் தலைக்கு மேலிருக்கும் கம்பியை பிடித்தபடி பேருந்தின் கதவை நோக்கி ஜனங்களின் இடிகளை வாங்கிக் கொண்டும், சில இடிகளைத் தானும் பிறருக்கு பலமாகக் கொடுத்தபடியும் நகர ஆரம்பித்தவள் ஒருவழியாகக் கீழேயிறங்கியபோது ஒருபெரும் போரை முடித்ததுப் போன்ற பெருமூச்சு ஒன்று எழுந்தது.
ஏற்கனவே பழக்கப்பட்டிருந்தக் கால்கள் தானாக தான் போக வேண்டியயிடம் நோக்கி நடக்க ஆரம்பிக்க, அவளது கண்கள் வழக்கம் போல சாலையில் வரும் வண்டிகளின் மீது கவனம் செழுத்த ஆரம்பித்தன.
காலையிலேயே சுள்ளென அடித்த வெயிலுக்குப் பிறந்த பிள்ளைகளான வியர்வைத் துளிகளைப் புறங்கையால் துடைத்தவள் “வாழ்த்துகள்”என்று பலகை வைக்கப்பட்டிருந்த கட்டிடத்தினுள் நுழைந்தாள்.
உள்ளேயிருந்த அறையின் தரையில் தவழ்ந்து கொண்டிருக்கும் அழுக்குகளை ஒரிருப் பெண்கள் துடைப்பம் கொண்டு அகற்றிக் கொண்டிருக்க, எட்டி அங்கு மூலையிலிருந்த ஒரே ஒரு தனி அறையைப் பார்த்தாள்.
“ஹ்ம்ம் தீயா வேலப் பாக்குறாப்புல” என்று நினைத்தபடி தலையை அசைத்து உதட்டைப் பிதுக்கியவள் மேசையில் கைப்பையை வைத்துவிட்டு அதனுள்ளிருந்த அலைபேசியை வெளியே எடுத்தபடி பக்கத்திலிருந்த சுழல் நாற்காலியில் கால் மேல் கால் போட்டு அமர்ந்தபடி மணியைப் பார்த்தாள்.
8.45!
வேலை நேரம் ஆரம்பிக்க இன்னும் பதினைந்து நிமிடங்கள் இருக்கின்றன என்ற எண்ணத்தோடு அவள் ஏதோ யோசனையில் சுழல் நாற்காலியில் சுழன்று கொண்டிருக்க,
அப்பொழுது “ங்ருக்கும்” என்று கேட்ட கனைப்பின் ஓசையில் திரும்பியவளோ பட்டென எழுந்து நின்று “எ..எஸ் சார்” என்றாள்.
அவளது எலிக்கீச்சுக் குரல் சிறிது படபடப்போடு வெளிவந்தது.
படபடக்கும் அவளது விழிகளையும் இதழ்களையும் ஆழமாக கவனித்தவன் அவளிடம் ஒரு கோப்பை* நீட்டி “இந்த ப்ராஜக்ட் புதுசு... புரட்டிப் பாரு... நாளைக்கு இந்தக் கிளையண்ட்ஸ் இங்க வருவாங்க... அப்போ நடக்குற டிஸ்கசன்ல பைனல் அவ்ட்லைன் கிடைச்சுடும்” என்று அடுத்தடுத்து அடுக்கிக் கொண்டிருந்தவனின் கண்கள் சிவந்து காணப்பட, மீனாட்சியின் பார்வை படபடப்பு நீங்கி அராய்தலோடு அவன் மீது படிந்தது.
கேசமெல்லாம் கலைந்து கசங்கிக் கிடக்க, சோர்வெனும் கடலில் குளித்து எழுந்தவன் போலிருந்தான் அவளின் முதலாளி.
உடையும் கூட நேற்றுப் பார்த்த அதே உடை தானென்று உள் மூளை சொல்ல, அவன் இரவு முழுக்க அலுவலகத்திலேயே இருந்து வேலை செய்திருக்கிறான் என்பது கருத்தில் பதிந்தாலும் அவன் கொடுத்த வேலைக்கு மட்டும் “எஸ் சார்” என்று பதில் கூறியபடி வாங்கிக் கொண்டாள்.
முதலில் அவள் தன்னை ஆராய்ந்ததையும் அதன் பின் வேலையின் பொருட்டு மட்டும் வந்த பதிலையும் குறித்துக் கொண்டவன் அவளை அரை நொடி கண்களைச் சுருக்கி கூர்ந்து நோக்கிவிட்டு அவ்விடம் விட்டு அகன்றுவிட்டான்.
அதுவரையில் பார்வையை கோப்பின் மீதே வைத்திருந்தவள், அவன் அகன்றவுடன் தொப்பென அமர்ந்து அவன் கொடுத்த கோப்பைப் புரட்ட ஆரம்பித்தாள்.
ஏனோ அவன் தன்னை கூர்ந்து பார்த்ததாய் எண்ணம் தோன்ற, ‘அவனது பார்வையே அப்படித்தான்’ என்று நினைத்து ஏதேதோ திரித்து சொல்ல வந்த மனதை அடக்கியபடி வேலையில் கவனம் செழுத்த ஆரம்பித்தாள்.
தனது அறைக்கு சென்று அமர்ந்து கண்ணாடி தடுப்பு வழி அவளைப் பார்த்தவனின் கண்கள் அவள் மீதே சில வினாடிகள் உறைந்து போயின.
பின்னர் தனது இருக்கையில் பின்னந்தலையை சாய்த்து உறங்க முயன்றான்.
இரவு முழுக்க உறக்கமில்லாமல் தலையெல்லாம் ஆங்காங்கே முள்ளால் குத்தப்படுவது போலிருந்தது.
உடல் முழுவதும் சிறிது ஓய்விற்காக அவனுக்கு மனு அனுப்ப, பட்டென எழுந்து வெளியே சென்றவன் தெரிந்த கடையில் ஒரு டீயை வாங்கிக் குடித்துவிட்டு திரும்பி வந்த பொழுது அவனிடம் வேலை செய்யும் மற்ற ஏழு பேரும் வந்திருந்தனர்.
எல்லோரும் இவனைப் பார்த்தவுடன் அதுவரையிலிருந்த கலகலப்பை நிறுத்திவிட்டு தலையை தொங்கப் போட்டுக் கொண்டு வேலையில் மும்முரமாய் இருப்பது போல் பாவனை செய்ய, யாரையும் கருத்தில் கொள்ளாமல் கடகடவென நடந்து சென்றவன் தனது மேசையின் அடியில் வைத்திருந்த போர்வையை எடுத்து கீழே விரித்து படுத்து உறங்க ஆரம்பித்துவிட்டான்.
அவன் சிவா வைத்தியநாதன்!
அடுத்த மாதத்தின் முடிவில் அவன் வயது இருபத்தி ஆறு.
தோராயமாக ஐந்து அடி பத்து இன்ச் உயரமும், பளீச்சுக்கும் கருப்பிற்கும் இடைப்பட்ட உடல் நிறமும் நாள்தோறும் நாம் பார்க்கும் சாதாரண ஆட்களுள் ஒருவனாய் அவனைக் காட்டினாலும், அவனது அடர்த்தி நிறைந்த புருவங்கள் பார்ப்பவரின் கண்களை தன் மீதே படிய வைக்கும் சக்தி பெற்றிருந்தது.
சிகரெட் பிடித்து கருக்கக் காத்திருக்கும் உதடுகள் தங்களது எதிர்காலத்தின் சாயலை இப்பொழுதே மிதமாக வெளிக்காட்ட ஆரம்பித்திருந்தது.
அதை கூர்ந்து கவனிக்கவிடாமல் மறைத்திருந்தது அவனது பல மாதங்களாக வழிக்கப்படமால் இருந்த தாடி.
ஒரு காதில் இருந்த கருப்பு நிற கடுக்கனும், அதே அளவில் சிறிதாக அவனது மூக்கின் வலது மேட்டிலிருந்து வளைந்திருக்கும் இடத்திலிருந்த சிறிய அடர் மச்சமும் ஒன்று போல் காட்சியளித்தன.
அடர்ந்து கிடந்த கேசத்தை சூரியன் ஊடுருவ முடியா கானகம் போல் தான் வளர்த்து வைத்திருந்தான்.
பொதுவான குணநலன்களைப் பற்றி சொல்ல வேண்டுமென்றால் காணும் அழகை எல்லாம் ரசிப்பவன், மற்றவர்கள் விமர்சிப்பார்கள் என்று தெரிந்தாலும் மனதில் தோன்றுவதை எதுவானாலும் அதை அப்படியே வெளிப்படுத்தும் விசித்திரன்.
அவனது வெளிப்படையான குணமே அவனது பலமும், பலவீனமும் ஆகும்.
நம் எல்லோரையும் போல் அவனுக்கென கனவுகள் உண்டு.
அவனுக்கென விருப்பங்கள் உண்டு.
இப்பொழுதைய அவனது நகர்வெல்லாம் அவனது இலக்குகளை நோக்கியே பயணப்பட்டுக் கொண்டிருந்தன.
நடுத்தர குடும்பமொன்றில் பிறந்து வளர்ந்தவனுக்கு பெரிதாக சாதிக்க வேண்டுமென்ற ஆசை அதிகமாக இருந்தது.
ஆனால் அதற்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.
படிப்பு அதிகம் மண்டையில் ஏறவில்லை என்றாலும் பகுத்தறிவில் சிறந்தவன்.
சொந்தமாக தொழில் தொடங்கி கோலோச்ச வேண்டும் என்ற அவனது அவாவை அணுகுண்டு போட்டு தடுத்தது குடும்பத்தின் பணச்சூழ்நிலை.
இருபது வயதில் அப்பனிடம் தன் ஆசையை சொல்லி நின்றபொழுது “நம்ம தரத்துக்கு வேலைக்கு போய் சம்பாதிடா... சொந்தத் தொழில்னு எல்லாம் கைவச்சா ஆரம்பிச்சா கெடைக்குற ரெண்டு வாய் சோறும் இல்லாம போயிடும்” என்று அடித்துத் துரத்தாத குறையாகக் கூறிவிட்டார்.
மகனின் ஆசையில் விழும் முட்டுக்கட்டைகளை கையைப் பிசைந்தபடி பார்த்து வருத்தம் கொள்வதைத் தவிர அவனின் தாய்க்கு வேறு வழி தெரியவில்லை.
கணவனின் பேச்சை மீறமாட்டார் கண்ணம்மா.
ஏன் கடன் வாங்கிக் கூட கோட்டை கட்டலாம் தான். ஆனால் அது அந்தக் கடனென்னும் கடலிலேயே அடித்துக் கொண்டு போய்விட்டால்? என்ற பயம் வேறு அகலக்கால் வைக்க சிவாவை யோசிக்க வைத்தது.
அதனால் முதலில் வேலைப் பார்த்து பணத்தோடு சேர்த்து அனுபவத்தையும் சம்பாதித்துவிட்டு முதலீடு செய்யலாம் என்று முடிவெடுத்தான்.
அதன் முதல் அடியாக மதுரையை சேர்ந்த ஒரு நிகழ்ச்சி மேலாண்மை கம்பனியில் வேலைக்குச் சேர்ந்தான்.
நிகழ்ச்சி மேலாண்மை கம்பனிகள் முளைத்து துளிர்விட ஆரம்பித்திருந்த காலகட்டம் அது.
பேரின் பின்னால் போட்டுக்கொள்ளவென பட்டப் படிப்பு படித்தவன் என்பதால் எடுத்தவுடன் உயர் பதவியெல்லாம் அங்கே கிடைக்கவில்லை.
கீழ் நிலையிலிருந்து தான் ஆரம்பித்தான்.
கீழே வேலை செய்பவன் என்கிற ஒற்றைக் காரணத்திற்காகவே அளவுக்கு அதிகமான அவமானங்கள் அவனுக்கு பரிசாக கிடைத்தது.
ஆரம்பித்தில் மூக்கு விடைத்து , கை முஷ்டி இறுகி பல அடிதடி சம்பவங்கள் அவனது பெயரின் இறுதியில் பட்டத்திற்கு அடுத்ததாக சேர்க்கப்பட்டன.
அவனது முன்கோவம் அவனை ஓர் இடத்தில் வேலைப்பார்க்க விடவில்லை.
ஒரு கட்டத்திற்கு மேல் நிதானித்தவன், தன்னை சுற்றியுள்ள இயக்கங்களின் கோட்பாட்டை கிரகிக்க ஆரம்பித்தான்.
ஆட்களின் மீது கவனம் செழுத்துவதை விட்டுவிட்டு தனது உழைப்பின் மீது மட்டும் கவனம் செழுத்த ஆரம்பித்தான்.
சில மாதங்களிலேயே அவனது உழைப்பின் அளவைப் பார்த்து அவனுக்கு நிறைய பொறுப்புகளை தர ஆரம்பித்தனர் அவனது மேலாளர்கள்.
சிறிது சிறிதாக அத்தொழிலின் நுணுக்கங்களை அவனது மூளை கிரகித்துக்கொள்ள ஆரம்பித்தது.
உடலும் மூளையும் சேர்ந்து அயராது வேலை செய்த அந்த நான்கு ஆண்டுகள் அவனுக்கு சொல்லிக் கொடுத்த பாடம் அளப்பரியது.
கடந்த ஆறு ஆண்டுகள் அவனுக்குக் கிடைத்த அனுபவங்கள் ஒவ்வொன்றும் அவனது அதற்கு முன்னான இருபது ஆண்டு கால அனுபவங்களை விட அதிகமானது என்று சொன்னால் மிகை ஆகா!
மேலதிகாரியின் கட்டளையோ துணையோ இல்லாமல் ஒரு நிகழ்ச்சி முழுவதையும் மேலாண்மை செய்யும் அளவிற்கு அவன் தேறியிருந்த சமயம் வேலையை விட்டுவிட்டு வெளியே வந்து தனது கைப்பணத்தோடு சேர்த்து லோன் வாங்கி அவன் தொடங்கியது தான் இந்த “வாழ்த்துகள் ஈவென்ட் மேனேஜ்மண்ட்ஸ்” .
ஆரம்பித்த நாளிலிருந்து காற்று வாங்கிக் கொண்டிருந்த கம்பனி,
ஒன்னு மண்ணாக இவனோடு சுற்றி திரிந்த நண்பன் தனது தங்கையின் பூப்பு புனித நீராட்டு விழாவை சிவாவிடம் ஒப்படைக்க, இவனது கம்பனி பெயர் நண்பனின் விழாவிற்கு வந்திருந்த சொந்த பந்தங்களிடம் பரவ ஆரம்பித்தது.
நிகழ்வுகளை பொறுப்போடு எடுத்து செய்து திருப்திகரமாக முடித்து தரும் சிவாவை நம்பி சொந்தங்கள் எல்லோரும் தங்களது வீட்டு விசேஷங்களை ஒப்படைக்க ஆரம்பித்திருந்தனர்.
அதனால் இப்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக கல்லாகட்ட ஆரம்பித்திருக்கிறது.
தொழிலை மேலும் நல்வழியில் எடுத்து செல்ல வேண்டும் என்று இராப்பகலாக உழைக்க ஆரம்பித்திருக்கிறான் சிவா.
-தொடரும்-
“இலக்கணம் உடையது போல் சான்றோரால் தொன்று தொட்டு வழங்கப்படும் சொல்”
அத்தியாயம் – 1 (பாட்டாளி)
“பச்சரிசி மாவெடுத்து மாவெடுத்து”
என்ற பாடல் ஆரம்பித்து
“மதுர மரிக்கொழுந்து வாசம்
என் ராசாத்தி உன்னுடைய நேசம்”
என்பதில் வந்து நிற்க, கேட்டுக் கொண்டிருந்த மீனாட்சியின் உதட்டின் ஓரங்கள், இத்தனை நேரமிருந்த இறுக்கத்தைத் தொலைத்து பூத்து விரிய ஆரம்பித்திருந்தன.
மதுரை மாநகரில் அதிகமாக ஒலிக்கப்பட்டப் பாடல்கள் என்று ஒரு கருத்தாய்வு செய்தால் முதல் ஐந்து பாடல்களில் ஒன்றாக இப்பாடல் வந்துவிடும் என்று அடித்துச் சொல்லும் அளவிற்கு இந்தப் பாடலைப் போட்டுப் போட்டுப் தேய்த்து எடுத்திருந்தனர் மதுரையின் பேருந்து ஓட்டுனர்கள்.
காரணம்? அதில் வரும் ‘மதுர’ என்கிற ஒற்றை வார்த்தை.
மதுரையினுள் நுழைந்தவுடன் அவ்வூரின் சிறப்பை எடுத்துச்சொல்லும் ஆயிரம் விஷயங்கள் நம் கண்களில் பட்டாலும்,
‘அவையெல்லாம் போதாது, மேலும் தெரிந்துக்கொள்ளுங்கள்’ என்பது போல் மதுரை என்ற சொல் இடம் பெறுகிற அனைத்து பாடல்களையும் உங்கள் காதுகளில் பாய்க்கக்காத்திருப்பர் நம் மதுரை வாசிகள்.
‘இந்த மதுரக்காரைங்க இருக்காய்ங்களே...’ என்று தலையை இருபுறமும் ஆட்டியபடியே நினைத்தவளின் இதழ்கள் சிரிப்பில் மேலும் அகன்றுவிரிய, பேருந்துக்குள் பயணச்சீட்டைக் கூட வாங்காமல் ஜன்னலின் வழித் திருட்டுத் தனமாக அத்துமீறி நுழைந்துக்கொண்டிருக்கும் ஆதவனின்கீற்றை ஏந்தித் தாங்களும் ஒளிவீசத் தொடங்கின அவளது இதழினுள் இளைப்பாறி கிடந்த ‘மல்லிகைப் பூ’ பற்கள்,
அடுத்த வினாடியே ‘இருக்க பெருமையத் தானப் பீத்துறோம், இல்லாததையாப் பீத்துறோம், ஹூம்’ என்று சிலுப்பிக் கொண்டவளின் கண்களில் சிரிப்போடுச் சேர்த்து மிதப்பும் குடிகொண்டது.
“தெப்பக்கொளோ வாங்குனவிங்க எல்லாம் வெளியவந்துரேய்ய்ய்...” என்று நடத்துனர் கூவ, மடியிலிருந்த கைப்பையை எடுத்துத் தோளில் மாட்டியபடி எழுந்தவள், எக்கித் தலைக்கு மேலிருக்கும் கம்பியை பிடித்தபடி பேருந்தின் கதவை நோக்கி ஜனங்களின் இடிகளை வாங்கிக் கொண்டும், சில இடிகளைத் தானும் பிறருக்கு பலமாகக் கொடுத்தபடியும் நகர ஆரம்பித்தவள் ஒருவழியாகக் கீழேயிறங்கியபோது ஒருபெரும் போரை முடித்ததுப் போன்ற பெருமூச்சு ஒன்று எழுந்தது.
ஏற்கனவே பழக்கப்பட்டிருந்தக் கால்கள் தானாக தான் போக வேண்டியயிடம் நோக்கி நடக்க ஆரம்பிக்க, அவளது கண்கள் வழக்கம் போல சாலையில் வரும் வண்டிகளின் மீது கவனம் செழுத்த ஆரம்பித்தன.
காலையிலேயே சுள்ளென அடித்த வெயிலுக்குப் பிறந்த பிள்ளைகளான வியர்வைத் துளிகளைப் புறங்கையால் துடைத்தவள் “வாழ்த்துகள்”என்று பலகை வைக்கப்பட்டிருந்த கட்டிடத்தினுள் நுழைந்தாள்.
உள்ளேயிருந்த அறையின் தரையில் தவழ்ந்து கொண்டிருக்கும் அழுக்குகளை ஒரிருப் பெண்கள் துடைப்பம் கொண்டு அகற்றிக் கொண்டிருக்க, எட்டி அங்கு மூலையிலிருந்த ஒரே ஒரு தனி அறையைப் பார்த்தாள்.
“ஹ்ம்ம் தீயா வேலப் பாக்குறாப்புல” என்று நினைத்தபடி தலையை அசைத்து உதட்டைப் பிதுக்கியவள் மேசையில் கைப்பையை வைத்துவிட்டு அதனுள்ளிருந்த அலைபேசியை வெளியே எடுத்தபடி பக்கத்திலிருந்த சுழல் நாற்காலியில் கால் மேல் கால் போட்டு அமர்ந்தபடி மணியைப் பார்த்தாள்.
8.45!
வேலை நேரம் ஆரம்பிக்க இன்னும் பதினைந்து நிமிடங்கள் இருக்கின்றன என்ற எண்ணத்தோடு அவள் ஏதோ யோசனையில் சுழல் நாற்காலியில் சுழன்று கொண்டிருக்க,
அப்பொழுது “ங்ருக்கும்” என்று கேட்ட கனைப்பின் ஓசையில் திரும்பியவளோ பட்டென எழுந்து நின்று “எ..எஸ் சார்” என்றாள்.
அவளது எலிக்கீச்சுக் குரல் சிறிது படபடப்போடு வெளிவந்தது.
படபடக்கும் அவளது விழிகளையும் இதழ்களையும் ஆழமாக கவனித்தவன் அவளிடம் ஒரு கோப்பை* நீட்டி “இந்த ப்ராஜக்ட் புதுசு... புரட்டிப் பாரு... நாளைக்கு இந்தக் கிளையண்ட்ஸ் இங்க வருவாங்க... அப்போ நடக்குற டிஸ்கசன்ல பைனல் அவ்ட்லைன் கிடைச்சுடும்” என்று அடுத்தடுத்து அடுக்கிக் கொண்டிருந்தவனின் கண்கள் சிவந்து காணப்பட, மீனாட்சியின் பார்வை படபடப்பு நீங்கி அராய்தலோடு அவன் மீது படிந்தது.
கேசமெல்லாம் கலைந்து கசங்கிக் கிடக்க, சோர்வெனும் கடலில் குளித்து எழுந்தவன் போலிருந்தான் அவளின் முதலாளி.
உடையும் கூட நேற்றுப் பார்த்த அதே உடை தானென்று உள் மூளை சொல்ல, அவன் இரவு முழுக்க அலுவலகத்திலேயே இருந்து வேலை செய்திருக்கிறான் என்பது கருத்தில் பதிந்தாலும் அவன் கொடுத்த வேலைக்கு மட்டும் “எஸ் சார்” என்று பதில் கூறியபடி வாங்கிக் கொண்டாள்.
முதலில் அவள் தன்னை ஆராய்ந்ததையும் அதன் பின் வேலையின் பொருட்டு மட்டும் வந்த பதிலையும் குறித்துக் கொண்டவன் அவளை அரை நொடி கண்களைச் சுருக்கி கூர்ந்து நோக்கிவிட்டு அவ்விடம் விட்டு அகன்றுவிட்டான்.
அதுவரையில் பார்வையை கோப்பின் மீதே வைத்திருந்தவள், அவன் அகன்றவுடன் தொப்பென அமர்ந்து அவன் கொடுத்த கோப்பைப் புரட்ட ஆரம்பித்தாள்.
ஏனோ அவன் தன்னை கூர்ந்து பார்த்ததாய் எண்ணம் தோன்ற, ‘அவனது பார்வையே அப்படித்தான்’ என்று நினைத்து ஏதேதோ திரித்து சொல்ல வந்த மனதை அடக்கியபடி வேலையில் கவனம் செழுத்த ஆரம்பித்தாள்.
தனது அறைக்கு சென்று அமர்ந்து கண்ணாடி தடுப்பு வழி அவளைப் பார்த்தவனின் கண்கள் அவள் மீதே சில வினாடிகள் உறைந்து போயின.
பின்னர் தனது இருக்கையில் பின்னந்தலையை சாய்த்து உறங்க முயன்றான்.
இரவு முழுக்க உறக்கமில்லாமல் தலையெல்லாம் ஆங்காங்கே முள்ளால் குத்தப்படுவது போலிருந்தது.
உடல் முழுவதும் சிறிது ஓய்விற்காக அவனுக்கு மனு அனுப்ப, பட்டென எழுந்து வெளியே சென்றவன் தெரிந்த கடையில் ஒரு டீயை வாங்கிக் குடித்துவிட்டு திரும்பி வந்த பொழுது அவனிடம் வேலை செய்யும் மற்ற ஏழு பேரும் வந்திருந்தனர்.
எல்லோரும் இவனைப் பார்த்தவுடன் அதுவரையிலிருந்த கலகலப்பை நிறுத்திவிட்டு தலையை தொங்கப் போட்டுக் கொண்டு வேலையில் மும்முரமாய் இருப்பது போல் பாவனை செய்ய, யாரையும் கருத்தில் கொள்ளாமல் கடகடவென நடந்து சென்றவன் தனது மேசையின் அடியில் வைத்திருந்த போர்வையை எடுத்து கீழே விரித்து படுத்து உறங்க ஆரம்பித்துவிட்டான்.
அவன் சிவா வைத்தியநாதன்!
அடுத்த மாதத்தின் முடிவில் அவன் வயது இருபத்தி ஆறு.
தோராயமாக ஐந்து அடி பத்து இன்ச் உயரமும், பளீச்சுக்கும் கருப்பிற்கும் இடைப்பட்ட உடல் நிறமும் நாள்தோறும் நாம் பார்க்கும் சாதாரண ஆட்களுள் ஒருவனாய் அவனைக் காட்டினாலும், அவனது அடர்த்தி நிறைந்த புருவங்கள் பார்ப்பவரின் கண்களை தன் மீதே படிய வைக்கும் சக்தி பெற்றிருந்தது.
சிகரெட் பிடித்து கருக்கக் காத்திருக்கும் உதடுகள் தங்களது எதிர்காலத்தின் சாயலை இப்பொழுதே மிதமாக வெளிக்காட்ட ஆரம்பித்திருந்தது.
அதை கூர்ந்து கவனிக்கவிடாமல் மறைத்திருந்தது அவனது பல மாதங்களாக வழிக்கப்படமால் இருந்த தாடி.
ஒரு காதில் இருந்த கருப்பு நிற கடுக்கனும், அதே அளவில் சிறிதாக அவனது மூக்கின் வலது மேட்டிலிருந்து வளைந்திருக்கும் இடத்திலிருந்த சிறிய அடர் மச்சமும் ஒன்று போல் காட்சியளித்தன.
அடர்ந்து கிடந்த கேசத்தை சூரியன் ஊடுருவ முடியா கானகம் போல் தான் வளர்த்து வைத்திருந்தான்.
பொதுவான குணநலன்களைப் பற்றி சொல்ல வேண்டுமென்றால் காணும் அழகை எல்லாம் ரசிப்பவன், மற்றவர்கள் விமர்சிப்பார்கள் என்று தெரிந்தாலும் மனதில் தோன்றுவதை எதுவானாலும் அதை அப்படியே வெளிப்படுத்தும் விசித்திரன்.
அவனது வெளிப்படையான குணமே அவனது பலமும், பலவீனமும் ஆகும்.
நம் எல்லோரையும் போல் அவனுக்கென கனவுகள் உண்டு.
அவனுக்கென விருப்பங்கள் உண்டு.
இப்பொழுதைய அவனது நகர்வெல்லாம் அவனது இலக்குகளை நோக்கியே பயணப்பட்டுக் கொண்டிருந்தன.
நடுத்தர குடும்பமொன்றில் பிறந்து வளர்ந்தவனுக்கு பெரிதாக சாதிக்க வேண்டுமென்ற ஆசை அதிகமாக இருந்தது.
ஆனால் அதற்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.
படிப்பு அதிகம் மண்டையில் ஏறவில்லை என்றாலும் பகுத்தறிவில் சிறந்தவன்.
சொந்தமாக தொழில் தொடங்கி கோலோச்ச வேண்டும் என்ற அவனது அவாவை அணுகுண்டு போட்டு தடுத்தது குடும்பத்தின் பணச்சூழ்நிலை.
இருபது வயதில் அப்பனிடம் தன் ஆசையை சொல்லி நின்றபொழுது “நம்ம தரத்துக்கு வேலைக்கு போய் சம்பாதிடா... சொந்தத் தொழில்னு எல்லாம் கைவச்சா ஆரம்பிச்சா கெடைக்குற ரெண்டு வாய் சோறும் இல்லாம போயிடும்” என்று அடித்துத் துரத்தாத குறையாகக் கூறிவிட்டார்.
மகனின் ஆசையில் விழும் முட்டுக்கட்டைகளை கையைப் பிசைந்தபடி பார்த்து வருத்தம் கொள்வதைத் தவிர அவனின் தாய்க்கு வேறு வழி தெரியவில்லை.
கணவனின் பேச்சை மீறமாட்டார் கண்ணம்மா.
ஏன் கடன் வாங்கிக் கூட கோட்டை கட்டலாம் தான். ஆனால் அது அந்தக் கடனென்னும் கடலிலேயே அடித்துக் கொண்டு போய்விட்டால்? என்ற பயம் வேறு அகலக்கால் வைக்க சிவாவை யோசிக்க வைத்தது.
அதனால் முதலில் வேலைப் பார்த்து பணத்தோடு சேர்த்து அனுபவத்தையும் சம்பாதித்துவிட்டு முதலீடு செய்யலாம் என்று முடிவெடுத்தான்.
அதன் முதல் அடியாக மதுரையை சேர்ந்த ஒரு நிகழ்ச்சி மேலாண்மை கம்பனியில் வேலைக்குச் சேர்ந்தான்.
நிகழ்ச்சி மேலாண்மை கம்பனிகள் முளைத்து துளிர்விட ஆரம்பித்திருந்த காலகட்டம் அது.
பேரின் பின்னால் போட்டுக்கொள்ளவென பட்டப் படிப்பு படித்தவன் என்பதால் எடுத்தவுடன் உயர் பதவியெல்லாம் அங்கே கிடைக்கவில்லை.
கீழ் நிலையிலிருந்து தான் ஆரம்பித்தான்.
கீழே வேலை செய்பவன் என்கிற ஒற்றைக் காரணத்திற்காகவே அளவுக்கு அதிகமான அவமானங்கள் அவனுக்கு பரிசாக கிடைத்தது.
ஆரம்பித்தில் மூக்கு விடைத்து , கை முஷ்டி இறுகி பல அடிதடி சம்பவங்கள் அவனது பெயரின் இறுதியில் பட்டத்திற்கு அடுத்ததாக சேர்க்கப்பட்டன.
அவனது முன்கோவம் அவனை ஓர் இடத்தில் வேலைப்பார்க்க விடவில்லை.
ஒரு கட்டத்திற்கு மேல் நிதானித்தவன், தன்னை சுற்றியுள்ள இயக்கங்களின் கோட்பாட்டை கிரகிக்க ஆரம்பித்தான்.
ஆட்களின் மீது கவனம் செழுத்துவதை விட்டுவிட்டு தனது உழைப்பின் மீது மட்டும் கவனம் செழுத்த ஆரம்பித்தான்.
சில மாதங்களிலேயே அவனது உழைப்பின் அளவைப் பார்த்து அவனுக்கு நிறைய பொறுப்புகளை தர ஆரம்பித்தனர் அவனது மேலாளர்கள்.
சிறிது சிறிதாக அத்தொழிலின் நுணுக்கங்களை அவனது மூளை கிரகித்துக்கொள்ள ஆரம்பித்தது.
உடலும் மூளையும் சேர்ந்து அயராது வேலை செய்த அந்த நான்கு ஆண்டுகள் அவனுக்கு சொல்லிக் கொடுத்த பாடம் அளப்பரியது.
கடந்த ஆறு ஆண்டுகள் அவனுக்குக் கிடைத்த அனுபவங்கள் ஒவ்வொன்றும் அவனது அதற்கு முன்னான இருபது ஆண்டு கால அனுபவங்களை விட அதிகமானது என்று சொன்னால் மிகை ஆகா!
மேலதிகாரியின் கட்டளையோ துணையோ இல்லாமல் ஒரு நிகழ்ச்சி முழுவதையும் மேலாண்மை செய்யும் அளவிற்கு அவன் தேறியிருந்த சமயம் வேலையை விட்டுவிட்டு வெளியே வந்து தனது கைப்பணத்தோடு சேர்த்து லோன் வாங்கி அவன் தொடங்கியது தான் இந்த “வாழ்த்துகள் ஈவென்ட் மேனேஜ்மண்ட்ஸ்” .
ஆரம்பித்த நாளிலிருந்து காற்று வாங்கிக் கொண்டிருந்த கம்பனி,
ஒன்னு மண்ணாக இவனோடு சுற்றி திரிந்த நண்பன் தனது தங்கையின் பூப்பு புனித நீராட்டு விழாவை சிவாவிடம் ஒப்படைக்க, இவனது கம்பனி பெயர் நண்பனின் விழாவிற்கு வந்திருந்த சொந்த பந்தங்களிடம் பரவ ஆரம்பித்தது.
நிகழ்வுகளை பொறுப்போடு எடுத்து செய்து திருப்திகரமாக முடித்து தரும் சிவாவை நம்பி சொந்தங்கள் எல்லோரும் தங்களது வீட்டு விசேஷங்களை ஒப்படைக்க ஆரம்பித்திருந்தனர்.
அதனால் இப்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக கல்லாகட்ட ஆரம்பித்திருக்கிறது.
தொழிலை மேலும் நல்வழியில் எடுத்து செல்ல வேண்டும் என்று இராப்பகலாக உழைக்க ஆரம்பித்திருக்கிறான் சிவா.
-தொடரும்-