எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

உன் காதலில் கசிந்துருகி நான்- கதை திரி

Status
Not open for further replies.
இது ஒரு குறுநாவல் தான்.. திருமணம் முடிந்த பின்னான வாழ்க்கையின் சுவாரசியங்கள் மற்றும் வலிகள்..
சீக்கிரம் அத்தியாயத்தோடு வரேன்..

குட்டி டீஸர்

உன் காதலில் கசிந்துருகி நான் ❣️

"நான் உன்னை ரொம்ப ரொம்ப லவ் பன்றேன்" அவன் கண்களை பார்த்து சொன்னாள் அவள்..

"பார்றா இது எப்போதுல இருந்து? நாம பார்த்து ஒரு மூணு மாசம் இருக்குமா? இன்னைக்கு தான் நமக்கு கல்யாணம் முடிஞ்சிருக்கு.. இதுல என்ன புதுசா ரொம்ப ரொம்ப லவ்" அவனுக்கு ஆர்வம் கொஞ்சம் அதிகம் போல..

"இது புதுசு இல்ல.. கிட்டத்தட்ட ஆறு வருசமா என் மனசுகுள்ளேயே புதைச்சு வச்சிருந்த என் கணவனுக்கு மட்டுமேயான லவ்.. இது இனிமேல் உனக்கு மட்டும் தான்.. நான் உன்னோடவள் மட்டும் தான்.."

அவள் காதலில் அவன் சிலிர்த்து நின்றான்.. எந்த புருஷனும் தன்னவளை தன் உடமை என்று தான் நினைப்பான்.. அதுவும் அவள் அவனுக்காக மட்டுமே அந்த காதலை சேர்த்து கொட்ட போவதாக சொன்னதும் அவனையும் அறியாமல் அவன் கைகள் அவளை தன்னோடு அணைத்து கொண்டது.. அவனுள் புதைந்து கொண்டாள் அவள்..

அவளை தன்னுள் அடக்கி கொண்டே கேட்டான் "அது என்ன ஆறு வருஷ காதல்?"

அவனை நிமிர்ந்து பார்த்தவள் சொன்னாள்.. "அப்போ வரைக்கும் எனக்கு வர போற கணவனை பத்தி எந்த ஒரு எதிர்பார்ப்பும் இருந்தது இல்லை.. அதுக்கு அப்புறம் நிறைய காதலர்களை பார்க்கும் போது சில சமயம் தோணும்.. ஆனா அது சட்டுனு வந்துட்டு அப்புறம் வீட்ல சம்மதிக்கலனா விட்டுட்டு போற காதலாகவும் இருக்க கூடாது.. என் வீட்டு சம்மதத்தோட ரெண்டு பேரும் மனசு நிறைஞ்சு வாழ்த்தி என்னை என் புகுந்த வீட்டுக்கு அனுப்பி வைக்கணும்.. அப்போ தோணுச்சு ஏன் அந்த காதலை சேர்த்து வச்சு என் புருஷனுக்கு குடுக்க கூடாதுன்னு.. அதே தான்.. அப்போ தோணுன நிமிஷத்துல இருந்து ஒவொரு நொடியும் என் வருங்காலத்தை காதலித்தேன்.. இப்போ மொத்தமா உங்ககிட்ட என்னை குடுத்துட்டேன்.. அதுக்காக என் காதல் இனி குறைஞ்சு போகாது.. இன்னும் இன்னும் என் எல்லா ஆசைகளையும் உங்களை என் பக்கத்துல வச்சு நிறைவேத்திப்பேன்.. லவ் யூ சோ மச்"

அவளை இறுக அணைத்து அவள் கன்னத்தில் முத்தமிட்டு சொன்னான் அவன்..


"இது வரைக்கும் மனைவினா எனக்கு அவ பொறுப்புன்னு நினச்சிட்டு இருந்தேன்.. ஆனா நீ உன் பேச்சுலயே என்னை உன்கிட்ட பறிகொடுக்க வச்சிட்டா.. உன் ஆறு வருஷ காதலை அனுபவிக்க நான் ரெடி.. ஐ லவ் யூ டூ மை பொண்டாட்டி.. இப்பவே ஸ்டார்ட் பண்ணலாமா?" என்றவன் அடுத்து பண்ணிய எதையும் நான் பார்க்கல.. 🙈🙈🙈images (86).jpeg
 
Last edited:

உன் காதலில் கசிந்துருகி நான்

அத்தியாயம் 1

கர்நாடக மாநிலத்தின் தலைநகரம் பெங்களூரில் அந்த ஏழு மாடி குடியிருப்பில் ஐந்தாம் மாடி 12பி வீட்டில் அதற்களமாய் இருந்தது. அந்த வீட்டை வெறும் வீடு என்று சொன்னால் பார்ப்பவர்கள் கண்டிப்பாய் நகைப்பார்கள். அந்த அளவிற்கு பொருட்கள் அங்குமிங்கும் பரந்து குப்பை மேடு போல காட்சியளித்தது.

தன் அறையில் இருந்து வெளியில் வந்த ஆரோன் வீட்டின் நிலையை பார்த்து விழி பிதுங்கி நின்றான். இப்போது தான் காலையில் வேலை முடித்து விட்டு வீட்டிற்க்கு வந்து சேர்ந்திருந்தான். சிறிது நேரம் ஓய்வு எடுத்து விட்டு காலை உணர்விற்கான வேலையை தொடங்கலாம் என்று எண்ணியிருந்தால் அவனின் கணக்கில் இன்று கடவுள் ஓய்விற்க்கும் விடுப்பு கொடுத்திருந்தார் போலும். அயர்ந்து போய் நின்றான். ஆனாலும் அவன் முகத்தில் சிறிதும் கோபம் இல்லை. வரவும் வராது. இந்த வீட்டை அலங்கோல படுத்திய நபர் அப்படி.

"ஏஞ்சலின் நிது" அவனின் உலகமே அவள் தான். இரண்டரை வயது குட்டி வாண்டு. அவனின் செல்ல மகள். அவனின் வாழ்க்கைக்கு அர்த்தத்தை தந்த தேவதையின் அச்சு.

"ப்பா... ஏஞ்சல் ரெதி..." என்று சொல்லி கொண்டு பெயருக்கேற்ற படி தேவதைகளின் உடை அணிந்து அவனின் காலை சுரண்டிய பூஞ்சிட்டை கையில் ஏந்தியவன் "பப்பா ஆல்சோ ரெடி" என்று கூறி அவள் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டான்.. பதிலுக்கு அவளும் முத்தமிட அதை தந்தையாய் ரசித்தவன் கண்கள் அங்கு சுவற்றில் மாட்ட பட்டிருந்த படத்தை பார்த்து கண்கள் கலங்கியது..

அவனின் கண்கள் கலங்குவதை பார்த்த நிது "ப்பா அழாத" என்று துடைத்து விட ஒருநொடி அதை ரசித்தவன் அடுத்து பொய்யாய் அவளை முறைத்தான்.

"நிது இது எல்லாம் என்ன?" கைகளை வீட்டின் நிலையை காட்டி கேட்க அவளோ கூச்சமாய் நெளிந்து "ப்பா நானும் மாலினி ஆன்தியும் விளாதினோம்ல அப்போ அவங்களுக்கு விளாத தெரியாம எல்லாத்தையும் தூக்கி போத்துதாங்க" என்று சொல்லவும் நிஜமாக முறைத்தான் ஆரோன்.

"யாரு? இதெல்லாம் மாலினி ஆன்டி தூக்கி போட்டாங்களா?"

"எஸ் ப்பா.."

அவளின் விழியே கள்ளத்தனத்தை காட்டி கொடுக்க "சரி மாலினி ஆன்டி உன் கூட தானே விளையாடினாங்க.. அப்போ நீயும் அவங்களுக்கு ஹெல்ப் பண்ணி இதை க்ளீன் பண்ணிடுங்க.. பாப்பா பண்ணிருந்தா நான் ஹெல்ப் பண்ணிருப்பேன்.. சீக்கிரம் பார்க் போயிருக்கலாம்.. இனி இன்னைக்கு போக வேண்டாம்" என்று சலித்தவன் தன் அறைக்குள் நுழையும் முன் "ப்பா.. நான் தான் தூக்கி வீசினேன்.." என்று அவனை தடுத்தாள் நிது.

"சோ நீ பொய் சொல்லிருக்க?" இடுப்பில் கை வைத்து முறைத்த படி கேட்டவனை பார்க்காமல் தலை குனிந்தாள் நிது.

"சாரி ப்பா.."

"............." அவனிடம் மௌனம்.

"ஏஞ்சல் இனி இப்பதி பண்ண மாத்தா.."

"......"

"ப்பா பார்க் போலாம்.."

"........"

"ப்பா சாரி நானும் மாலினி ஆண்டியும்"

சாரி கேட்க கூட ஆள் சேர்த்தவளை பார்த்து அவனுக்கு சிரிப்பு தான் வந்தது.

ஆனாலும் அடக்கி கொண்டவன் கோபமாக முகத்தை வைத்து கொண்டு "பொய் சொல்ல கூடாதுன்னு அப்பா சொல்லிருக்கேன்ல" என்று கேட்கவும் அவளும் ஆமா என தலை அசைத்தாள்.

"அப்புறம் எதுக்கு பொய்?"

"பார்க் போக மாட்ட ல"

அவளின் பதிலில் முறைத்தவன் "இப்போ அப்பா கூட இதை க்ளீன் பண்ண ஹெல்ப் பண்ணலைன்னா இனி நோ பார்க்" என்று கூறவும் சட்டென ஓடி கீழே கிடந்த விளையாட்டு பொருட்களை ஒதுக்க தொடங்கினாள்.

அவளின் செயலில் முறுவலித்தவன் அவனும் கூடவே அனைத்தையும் அதற்கான இடத்தில் எடுத்து வைத்தான். அவனை பொறுத்தவரை யாராக இருந்தாலும் பொய் சொல்ல கூடாது. அது சின்ன விஷயமோ பெரிய விஷயமோ பொய் சொல்லவே கூடாது. அதை தான் அவன் மகளுக்கும் சொல்லி வளர்க்கிறான்.

இரண்டு பேரும் எல்லாப் பொருட்களையும் ஒதுக்கி முடிக்கவும் ஆரோன் வீட்டை பெருக்கி மாப் போட்டு முடித்தான். பெரும் வேலை அவனுக்கு. இரவு முழுவதும் அலுவலக வேலை பார்த்து விட்டு காலையில் வீட்டிலும் வேலை பார்த்தது அசதியாய் இருக்க கண்கள் உறக்கத்திற்கு கெஞ்சியது. ஆனாலும் தன் முன் நின்ற மகளை பார்த்தான்.

'அப்பா தன்னை இப்போ பார்க் கூட்டிட்டு போவார்' என்ற நம்பிக்கை அந்த கண்களில் தெரிய அவனின் அலுப்பை தூக்கி எறிந்தான்.

"டிபன் பண்ணி சாப்பிட்டுட்டு பார்க் போகலாம் நிதுமா" என்றவனை கட்டி கொண்டு சந்தோசமாக தலை அசைத்தாள் மகள்.

அவளையும் தூக்கி கொண்டு அடுப்பு பக்கத்து மேடையில் அமர்த்தியவன் தோசை மாவை அவனுக்கு வார்த்து அவளுக்கும் குட்டி குட்டி தோசைகளை வார்த்தான்.

"ப்பா.. குட்டி தோச.. குட்டி தோச.." மகளின் ஆர்பரிப்பில் அவனின் உள்ளம் குளிர்ந்து தான் போயிற்று.

ஆரோன்- ஆராத்யா தம்பதியரின் ஒற்றை மகள் ஏஞ்சலின் நிது. பிரசவ நேரத்திலேயே ஆராத்யா தவறி விட அவனும் மகளும் ஒற்றை ஆகி போனார்கள். கடந்த இரண்டரை வருடங்களாக அவனின் வாசம் பெங்களூரில் தான். மாலினி எனும் நடுத்தர வயது பெண் ஒருவர் முதலில் குழந்தையை முழு நேரமும் கவனிக்க வந்து கொண்டிருந்தார். பின் நிதுவுக்கு இரண்டு வயது நிரம்பியதும் அவன் வேலை போகும் நேரத்திற்கு மட்டும் வருவார். மற்றபடி அவளின் மொத்த கவனிப்பும் ஆரோன் தான். அவளின் தாய், தந்தை இரண்டும் ஆரோன் தான். அதே நேரம் கண்கள் தன் மனைவியின் புகைப்படத்தை பார்த்தது. தாய் இல்லாத குறையை எப்போதும் அவள் நினைக்க கூடாது என்று அவனே அவளுக்கு தாயாகி போனான்..

தனக்கு சட்னி அரைத்து கொண்டவன் நிதுவுக்கு நாட்டு சர்க்கரை வைத்து தோசையை கொடுத்தான். அவனை போலவே தோசையை பிய்த்து சாப்பிட்டவள் தந்தையுடன் சேர்ந்து கை கழுவி விட்டு பார்க் போக கிளம்பி நின்றாள்.

அவளின் அவசரம் பார்த்து சிரித்தவன் அவளையும் தூக்கி கொண்டு கீழே வந்தான். அவர்கள் தங்கி இருந்த இடத்தில் இருந்து இரண்டு நிமிட நடை தூரத்தில் தான் பார்க் இருந்தது. தினமும் வேலை இருக்கும் நேரத்தை பொறுத்து ஆரோன் மகளை கூட்டி கொண்டு வருவான்.

பார்க் வந்ததும் மகளை கையில் இருந்து இறக்கி விட்டவன் கண்பார்வை படும் தூரத்தில் அவளை விட்டு இருக்கையில் அமர்ந்தான்.

அவள் அங்கிருக்கும் ஊஞ்சலில் ஏறி அமர்ந்து கொண்டாள். அதை ஆட்டி விடும் படி யாரையும் கேட்க மாட்டாள். ஆரோன் ஆட்டினாலும் விட மாட்டாள். அது சாதரணமாக ஆடும் அசைவுக்கு ஆடி சுற்றி வேடிக்கை பார்த்தாள்.

அதை பார்த்ததும் ஆரோன் நினைவுகள் அவன் மனைவியிடம் சென்று விட்டது. அவளும் அப்படி தான். ஊஞ்சலில் ஆட மாட்டாள். போய் அமர்ந்து கொண்டு சுற்று புறத்தை ரசிப்பாள்.

மனைவியின் அச்சு அசலாக இருக்கும் மகளை ரசித்து கொண்டிருந்தவன் ஊஞ்சலில் நிது இல்லாமல் போக பதறி எழுந்தான். வெளியில் எங்கும் போக மாட்டாள் தான்.

சுற்றிலும் தேட அவள் ஏதோ ஒரு பெண்ணிடம் பேசி கொண்டிருப்பது தெரிந்து "நிது பேபி" என அவள் அருகில் சென்றான்.

அவன் குரலில் அதிர்ந்து திரும்பிய அந்த பெண்ணை பார்த்ததும் அதிர்ந்து ரெண்டடி பின் சென்ற ஆரோனின் உதடுகள் "ஆரு" என உதிர்த்தது..

அவனால் நம்ப முடியவில்லை. அவனின் ஆராத்யா உருவில் ஒரு பெண். அச்சு அசல் அவனின் மனைவியை போலவே இருந்தவள் முடியை மட்டும் சற்று குட்டையாக வெட்டியிருந்தாள். ஆரோனின் மனைவிக்கு நல்ல நீளமான முடி.

அந்த பெண்ணும் அவனை தான் பார்த்து கொண்டிருந்தாள். அவளுக்கு அதிர்ச்சி எதுவும் இல்லை போலும்.

"பாப்பா பேர் என்ன?" என்று கேட்டாள்.

"ஏஞ்சலின் நிது" என நிது தான் பதில் அளித்தாள்.

"ப்பா.. அம்மா.." என்று தந்தையிடம் அந்த பெண்ணை காட்டியவளை அதிர்ந்து பார்த்தான் ஆரோன்.

அவனுக்கு தெரியும் மகள் இப்படி தான் சொல்வாள் என்று. ஆனாலும் இன்னும் தன் மனைவி தானா என்று உறுதியாக தெரியாத பட்சத்தில் சின்ன குருந்தின் மனதில் ஆசையை வளர்ப்பது தவறு.

"ப்பா தூக்கு.." என்று தன்னை நோக்கி வந்தவளை தூக்கியவன் தன் குழந்தையை தூக்கி கொண்டு விடு விடுவென சென்றான்.. அந்த பெண்ணின் கண்கள் கலங்கி அவள் வாய் "ஆரோன்" என்று சொல்லி பின் "ஏஞ்சலின் நிது.. நைஸ் நேம்.. யூ டிட் நாட் பர்கேட் எனிதிங்" என்று முணுமுணுத்தது..

அவள் திருமதி. ஆராத்யா ஆரோன்.

வீட்டிற்க்கு வந்த ஆரோனுக்கு இன்னும் படபடப்பு தீரவில்லை. இரண்டரை வருடங்களுக்கு முன்பு தன் கையில் நிதுவை பரிசாக கொடுத்து விட்டு உலகை விட்டு சென்ற அவனின் மனைவி இப்போது உருவமாக நேரில் இருக்கிறாள். எப்படி சாத்தியம் இது?

அவன் மனைவி இறந்து விட்டதாக உறுதி செய்ததே அவளின் தாய் தந்தை தானே. அன்று மருத்துவமனையில் கடைசி வரை அவன் இருந்திருக்க வேண்டுமோ? மனைவி இறந்த செய்தி கேட்டதும் குழந்தையை வாங்கி கொண்டு வந்தது தவறோ? ஒருவேளை இவன் வந்த பிறகு எதுவும் அதிசயம் நடந்து விட்டதோ? ஆனாலும் அவள் இறந்து போய் விட்டதாக தானே அவளின் பெற்றோர் கூறினார்கள்.

மனைவியின் இழப்பிற்கு பிறகு அவன் சொந்த ஊருக்கு போகவே இல்லையே. அய்யோ என்ன காரியம் செய்து விட்டேன். இப்போதும் அவளை பார்த்ததும் வந்து விட்டேனே. இனி அவளை எங்கு போய் தேடுவேன்? மனம் பதறியது. அவனின் கண்களில் கண்ணீர் வழிந்தது. மகளை இறுக பற்றி கொண்டான்.

"ப்பா வலிக்குது" மகளின் முனகலில் தான் இத்தனை நேரம் நிதுவை கையில் வைத்து இறுக்கியது நினைவுக்கு வந்தது.

"சாரி நிதுமா.." என்றவன் மகளை கீழே இறக்கி விட்டவன் அவளுக்கு விளையாட பொருட்களை கொடுத்து விட்டு தன் அறைக்குள் சென்றான்.

தன் அலமாரியில் வைத்திருந்த ஆல்பத்தை எடுத்தவன் கைகள் நடுங்கியது. முதல் பக்கத்தை திறந்தவன் கண்கள் அவனுடன் கழுத்தில் பூமாலை உடன் அவனின் கைகோர்த்து புன்னகையுடன் நின்ற ஆராத்யாவின் படத்தை ஆசையுடன் வருடியது. அவளின் புன்னகை மீது அவனுக்கு அப்படி ஒரு மோகம்.

செல்வி. ஆராத்யா ஜோசப் அன்று தான் திருமதி. ஆராத்யா ஆரோன் ஆக மாறியிருந்தாள்.

 
Last edited:

அத்தியாயம் 2

எட்டு வருடங்களுக்கு முன்பு

கார்மேல் மேல்நிலைப்பள்ளி:

பனிரெண்டாம் வகுப்பு கணித பிரிவை ஆராத்யா பரபரப்பாக கையடக்க திருக்குறள் புத்தகத்தை புரட்டி கொண்டிருந்தாள். ஆனால் அவளுக்கு எந்த குறளை சொல்லுவது என இன்னும் பிடி படவில்லை. அன்று காலை தேசிய கொடி ஏற்றும் போது அவள் தான் திருக்குறள் விளக்கத்தோடு சொல்ல வேண்டும்.

"என்ன ஆரா இன்னுமா செலக்ட் பண்ணி முடியல.. இன்னும் அஞ்சு நிமிஷத்துல நாம கிரவுண்ட் ல நிக்கணும்" என்று வந்தாள் ஆராத்யாவின் நெருங்கிய தோழி ஜெனிஷா.

"ஒரே நிமிஷம் ஜெனி.. எடுத்துட்டேன்" என்றவள் குறளை படித்து பார்த்தாள்.

"இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு

இடும்பை படாஅ தவர்."

குறள் விளக்கம்:-

துன்பம் வந்த போது அதற்க்காக வருந்திக் கலங்காதவர் அந்தத் துன்பத்திற்கே துன்பம் உண்டாக்கி அதை வென்று, துன்பத்திற்கே துன்பம் தருவர் என்பதாகும்.

"வா கிளம்பலாம்.." என்ற ஆராத்யா ஜெனியுடன் வகுப்பை விட்டு வெளியே வரும் போது அவர்கள் முன்னால் வந்து நின்றான் அறிவியல் பிரிவு மாணவன் ஆரோன்.

"என்னாச்சு ஆரோன் வழியில் இருந்து தள்ளி நில்லு" என்ற ஜெனி கிளம்ப எத்தனிக்கவும் "ஒருநிமிடம்" என்று அவர்களை தடுத்தான் ஆரோன்.

"எனக்கு என்ன பதில் சொல்ல போற ஆரா?"

"பதில் ஏற்கனவே சொல்லிட்டேன் ஆரோன்.. இன்னும் நாம பள்ளிப்படிப்பை கூட முடிக்கல.. அதுக்குள்ள என்ன காதல்? இது காதலிக்கும் வயசும் இல்ல.. எனக்கு காதலும் பிடிக்காது.. உன் படிப்பு கெட்டு போக கூடாதுன்னு ஒரே காரணத்துக்காக இன்னும் இதை பெரிதாக்காம இருக்கேன்.. இப்படியே பேசிட்டு இருந்தா பிரச்சனை ஆகி நீ டி. சி வாங்கிட்டு போக வேண்டி இருக்கும்" என்ற ஆராத்யா அவனை தாண்டி வெளியே சென்றாள்.

"இப்போ தானே காதல் பண்ண கூடாது.. உன் கல்லூரி படிப்பு எல்லாம் முடிந்த பிறகு உன்னை தேடி வருவேன் நான்" மனதிற்குள் அவளை தவிர வேறு யாரையும் அனுமதிக்கும் எண்ணம் அவனுக்கு இல்லை போலும்.

"நீ எதுக்காக அவனை அவாய்ட் பண்ணுற ஆரா? நமக்கு இப்போ காதலிக்கிற வயசு இல்ல தான்.. ஆனால் அவன்கிட்ட சொல்லியிருந்தா நீ படிப்பு எல்லாம் முடிக்குற வரை வெயிட் பண்ணிருப்பான்ல.."

"எதுக்கு வெயிட் பண்ணனும்? இது காதல் பண்ணுற வயசும் இல்ல.. காதலும் இல்ல.. ஜஸ்ட் இன்பாக்சியேஷன்.. சிலரை பார்த்தால் சைட் அடிக்க தோணும்.. அதுவே காதல் அப்படின்னு சொல்லிட்டு திரிஞ்சா காதல் ஆகிடாது.. நமக்கு அதுக்கு இன்னும் எவ்வளவோ வயசு இருக்கு.. சில வருஷங்களுக்கு பிறகு அவனுக்கு வேற யாரையாவது பிடிக்கலாம்.. இல்லன்னா எனக்கு யாரையாவது பிடிக்கலாம்.. அப்போ காத்திருக்க சொல்லிட்டு ரெண்டு பேருக்கும் கஷ்டம் வேண்டாம்" என்றவள் ஜெனியை இழுத்து கொண்டு கிரவுண்ட் ஓடினாள்.

அன்றைய இரண்டு வகுப்புகள் முடியவும் அடுத்த வகுப்பிற்கு ஆசிரியர் வரவில்லை. எனவே மாணவர்கள் அனைவரும் அந்த ஆண்டின் இறுதி தேர்விற்காக குழுக்களாக பிரிந்து படித்து கொண்டிருந்தனர். படித்த பாடம் இயற்பியல் என்பதால் ஆரோனும் அதே வகுப்பில் இருந்து தான் படித்து கொண்டிருந்தான்.

ஆரோன் இயற்பியல் நன்றாக படிப்பவன் என்பதால் அவனை சுற்றியும் சில மாணவர்கள் சந்தேகங்களை கேட்டு தெளிவு படுத்தி கொண்டிருந்தனர். அவனும் அன்று மின்காந்த அலைகள் பற்றி சொல்லி கொடுத்து கொண்டிருந்தான். அவன் சொல்லி கொடுக்கும் போது கை அசைப்பதும் முன் நெற்றியில் விழுந்த சில முடிகளை கோதி விடுவதும் பார்க்கவே அழகாக இருந்தது.

அதை ரசிக்காத ஒரே பெண் ஆராத்யா மட்டும் தான். தீவிரமாக அணு மற்றும் அணு இயற்பியல் பாடத்தில் கவனத்தை வைத்திருந்தாள். அதை ஆரோனும் கவனித்தான்.

அடுத்த இரு வாரங்கள் ஆரோன் அவளை எந்த தொந்தரவும் செய்யவில்லை. இன்னும் ஒரு மாதத்தில் வரும் பொது தேர்விற்காக தீவிரமாக படித்து கொண்டிருந்தனர். அன்று மாலை வாலிபால் விளையாடும் போது தவறி விழுந்து காலில் அடிபட வலியுடன் விந்தி விந்தி நடந்து கொண்டிருந்தான் ஆரோன்.

"ஹே ஆரோன்.." குரல் கேட்டு திரும்பி பார்த்தான்.

ஆராத்யாவுடன் ஜெனி வந்து கொண்டிருந்தாள். ஜெனி தான் அவனை கூப்பிட்டிருந்தாள்.

"என்னாச்சு டா?"

"வாலி பால் பிளே பண்ணும் போது கிரவுண்ட் ல விழுந்துட்டேன் ஜெனி"

"ஹே என்னடா சொல்லுற? ரொம்ப வலிக்குதுதா? மருந்து போட்டியா? வீட்ல இருந்து யாரயாச்சும் வர சொல்லி கூட்டிட்டு போக சொல்லலாம்ல"

"வீட்ல யாரும் இருக்க மாட்டாங்க ஜெனி.. அப்பா, அம்மா ரெண்டு பேரும் வேலைக்கு போயிருக்காங்க.. வர நைட் ஆகிடும்" என்றவன் ஆராத்யாவை பார்க்காமல் மெதுவாக நடந்தான்.

"பாவம்ல ஆரா.. நடக்க முடியாமல் கஷ்டபடுறான்.."

"அதுக்காக இடுப்புல தூக்கி வச்சிட்டா நடக்க முடியும்? எனக்கு டியூஷன் இருக்கு.. நான் கிளம்புறேன்" என்றவள் அவனை தாண்டி நடந்தாள்.

அவள் பேசியது அவனுக்கும் கேட்டது தான். புன்னகையுடன் நடந்தான். அவனுக்கு புரிந்தது ஒன்றே ஒன்று தான். ஒரு காலத்திலும் அவள் காதலிப்பாள் என்று நம்ப முடியாது. அவனாக தான் பெரியவர்களை கொண்டு பேச வேண்டும். அதற்கு இன்னும் பல வருடங்கள் இருக்கிறது. அதுவரை கண்ணியம் காக்கும் காதலாக அவனுடைய பார்வை இருக்க வேண்டும் என்று நினைத்து கொண்டவன் அடுத்து அவளை திரும்பியும் பார்க்கவில்லை.

இதோ வருடங்கள் மூன்று முடிந்து விட்டது. அவர்கள் பள்ளி படிப்பை முடித்து கல்லூரி படிப்பையும் முடிக்க போகின்றனர்.

பள்ளியில் ஆரோன் முதல் மதிப்பெண்ணை பெற்றிருந்தான். அவனை பொறியியல் படிக்க சொல்லி அவன் தந்தை வற்புறுத்திய போதும் ஆராத்யாவுக்காக அவள் சேர்ந்த இளங்கலை ஆங்கிலம் சேர்ந்தான். அவளை பார்ப்பதே அவனுக்கு போதும் என்றாகியது.

ஆராத்யா, ஜெனிஷா, ஆரோன் மூவரும் ஒரே வகுப்பில் தான் பயின்றனர். பள்ளியில் இறுதியாண்டு கடைசி மாதம் தான் ஆராத்யா மேல் இருந்த தன் விருப்பத்தை தெரிவித்தான் ஆரோன். அவனுக்கு அவளை பிடித்து இருந்தாலும் ஒருபோதும் வெளிப்படுத்தியது இல்லை. கடைசியில் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் தான் சொன்னான். அவளும் மறுப்பு தெரிவித்த பிறகு எந்த விதத்திலும் அவன் அவளை தொந்தரவு செய்தது இல்லை இப்போது வரை.

முதலாம் ஆண்டு நாவல் பிரிவில் "Ancient Promises" நாவல் பற்றி படித்த நேரம் வகுப்பில் அவளை பார்த்து ஒரு புன்னகை செலுத்தியதோடு சரி. அதன் பின் ஜெனியிடம் மட்டும் பேசி கொள்வான்.

மூன்றாம் வருட இறுதி செமஸ்டர் இது. வேலை வாய்ப்புக்காக பல கம்பெனியில் இருந்து நேர்முக தேர்வு வைத்து கொண்டிருந்தனர். சில கம்பெனியில் பயிற்சி அளித்து அதன் பின்னே தேர்வு செய்வார்கள். எனவே அதற்கான பயிற்சியில் மூன்று பேரும் மும்முரமாக தகவல்களை சேகரித்து கொண்டிருந்தனர்.

"ஆரோன்.. இந்த இன்டர்வியூ எத்தனை ரவுண்ட்?" ஜெனி தான் கேட்டாள்.

"நான்கு ரவுண்ட் ஜெனி.. ஆப்டிடுட் (தகுதி தேர்வு), குரூப் டிஸ்கஸ்ஸன் (குழு முறையில் கலந்துரையாடல்), டெக்னிகல் ரவுண்ட் (தொழில்நுட்ப சுற்று) அண்ட் ஹெச். ஆர் ரவுண்ட்"

"இது நாலுமே செலெக்ட் ஆகணுமா?"

"ஆமா ஜெனி, ஆப்டிடுட் செலெக்ட் ஆகிட்டா அடுத்து டெக்னிகல் கொஞ்சம் எஃபோர்ட் போட்டா போதும்.. மீதி எல்லாம் ஈஸி தான்"

"கேட்க கஷ்டமா இருக்கே.." என்று புலம்பியவள் ஆராத்யாவை பார்க்க அவளோ ஆரோன் சொன்னதை சட்டை செய்யாமல் எதுவோ புத்தகத்தில் தேடி கொண்டிருந்தாள்.

"மனசு தான் கல்லுன்னு நினைச்சா காதும் கேட்காது போல" மனதிற்குள் நினைத்து கொண்ட ஜெனி ஆரோனை பார்க்க அவனும் புத்தகத்தில் மூழ்கியிருந்தான்.

"ஆரோனே.. பேசாம நீ என்னைய லவ் பண்ணிடேன்.." ஜெனி சொல்ல சட்டென நிமிர்ந்து பார்த்தான் ஆரோன்.

"வாட்? கம் அகைன்"

"இவன் ஒருத்தன் வாத்து கோழின்னு சொல்லிட்டு.." என்று புலம்பியவள் "காது கேட்காத இந்த கல் மனசு பொண்ணை லவ் பண்ணுறதுக்கு பதில் என்னை லவ் பண்ணேன்.. நான் நல்லா லவ் பண்ணுவேன்" என்றாள்.

"ஹே லூசு.. லூசு மாதிரி பேசாம ஓடி போயிடு" என்ற ஆரோன் எழும்பி வகுப்பிற்கு ஓடினான்.

"என்னை ஓட சொல்லிட்டு அவன் ஓடுறான்" என்று ஜெனி திரும்பி பார்க்க ஆரா அப்படியே தான் இருந்தாள்.

"சிட்டி ரோபோக்கு இன்னும் சார்ஜ் ஒழுங்கா போடல போல"

"சார்ஜ்லாம் ஃபுல் ஆக தான் இருக்கு.. ஓவர் ஃப்ளோ ஆகி உனக்கு ஷாக் அடிச்சிடாம.. வாய குறை.." என்று முறைத்தாள் ஆராத்யா.

"உனக்கு தான் அவனை பிடிக்கலயே"

"யார் சொன்னா எனக்கு அவனை பிடிக்காதுன்னு.."

"அப்போ லவ் பண்ண முடியாதுன்னு சொன்னியே ஆரா" ஜெனிக்கு தலையை பிய்த்து கொள்ளலாம் போல இருந்தது.

"பிடித்தம் லவ்ல முழுசா சேராது ஜெனி.. காதல் ஒருத்தரை ஒருத்தர் விட்டு கொடுக்காம கடைசி வரை அதே காதலோடு வாழனும்.. பிடித்தம் ஜஸ்ட் லைக் பண்ணுறது.. நான் அவனை வேண்டாம் சொல்லிருக்கேன்.. ஆனா அவன் என்னை ஃபோர்ஸ் பண்ணல.. அவன் எடுத்த மார்க்குக்கு வேற நல்ல படிப்பு படிச்சிருக்கலாம்.. ஆனா எனக்காக இங்க வந்து படிக்கிறான்.. இதுவரை தப்பா ஒரு பார்வை இல்ல.. இதெல்லாம் எனக்கு அவன் மேல பிடித்தத்தை கொண்டு வந்திருக்கு.. ஹி இம்ப்ரெஸ்ட் மீ"

"அடிப்பாவி.. இதை அவன் கேட்டா ரொம்ப சந்தோஷ படுவான்ல"

"எதுக்கு சொல்லணும்? இங்க பாரு ஜெனி.. இது ஜஸ்ட் பிடித்தம்.. இது காதலா மாறுவதும் மாறாமல் வேற வேற திசையில் ரெண்டு பேர் போறதும் காலத்தின் கையில் தான் இருக்கு.. அவனுக்கு வெறும் நம்பிக்கை கொடுக்க எனக்கு விருப்பம் இல்ல.. நாங்க சேரணும்னு விதி இருந்தால் இன்னும் வருடங்கள் இருக்கு.. சேர்த்து வைக்கும்.. அவன்கிட்ட இதெல்லாம் போய் சொல்லிட்டு இருக்காத.. அவனோட கேரியர் முக்கியம்"

"எனக்கு வேற வேலை இல்ல பாரு.. பிடிக்குமாம்.. லவ் பண்ண மாட்டாளாம்.. அவனுக்கு வேற யாரும் லவ் புரோபோஸ் பண்ணினா ஷாக் வைப்பாளாம்.. கேட்டா லவ் இல்லையாம்.. ஆரோன் பாவம்" என்று புலம்பிய ஜெனி எழும்பி சென்றாள்.

"எஸ்.. எனக்கு அவன் மேல லவ் இல்ல.. ஆனா கல்யாணம் பண்ணினா நல்லா தான் இருக்கும்" மெதுவாக முணுமுணுத்தாள் ஆராத்யா.

அவளின் ஆசை நிறைவேறும் நாளும் வந்தது.

 
Last edited:

அத்தியாயம் 3

ஆரோன், ஆராத்யா, ஜெனிஷா மூவரும் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை எழுதி முடித்திருந்தனர். அவர்களுக்கான நேர்முக தேர்வு முடிந்து மூவருக்கும் ஒரே கம்பெனியில் வேலையும் கிடைத்திருந்தது. ஆனால் அதில் சேர இன்னும் ஐந்து, ஆறு மாதங்கள் காத்திருக்க வேண்டும்.

அன்று மூவரும் வெளியே சென்று விட்டு அதன் பிறகு வேலை செய்யும் கம்பெனியில் பார்க்கலாம் என்று முடிவெடுத்து பக்கத்தில் இருந்த மாலுக்கு சென்றனர். ஆரோன் தன் வீட்டில் உள்ளவர்களுக்கு ஆடைகள் பார்த்து கொண்டிருக்க, ஜெனி தன் தாய்க்கு புடவை பார்த்து கொண்டிருந்தாள். ஆராத்யா மட்டும் அங்கிருந்த கடைகளை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தாள்.

அவள் அருகில் வந்த ஜெனி ஏதேனும் வாங்க சொல்ல வேண்டாம் என்று மறுத்தவள் அங்கிருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டாள்.

"என்னாச்சு ஜெனி? எதுவும் வாங்கலையா அவ?" ஆரோன் தான் கேட்டான்.

"கையில் காசு இருந்திருக்காது ஆரோன்.. நாம குடுத்தாலும் வாங்க மாட்டா.."

"அவ வீட்டில் செலவுக்கு காசு குடுக்க மாட்டாங்களா?"

"அவ குடும்பம் நடுத்தரத்திற்கும் கீழான குடும்பம் ஆரோன்.. அவள லவ் பண்ணுற இது கூட தெரிஞ்சு வைக்கலயா? அவ அப்பா ஒரு கடையில் வாட்ச்மென் வேலை தான் பாக்குறாங்க.. அம்மா வீட்டில் தான் இருக்காங்க.. கை வேலைகள் செய்வாங்க போல.. அதில் கொஞ்சம் வருமானம் வரும்.. இரண்டையும் வச்சு சமாளிச்சு தான் படிக்க வரா.. அதனால் தான் இந்த காதல், கல்யாணம் எல்லாம் இப்போ வேண்டாம் சொல்லிட்டு இருக்கா"

"ஓ.. அப்போ எப்படியும் இன்னும் ரெண்டு மூணு வருஷத்துக்கு கல்யாணம் பார்க்க மாட்டாங்கல"

"ஹம்.. உனக்கு உன் பிரச்சனை.." என்று சிரித்த ஜெனி தான் வாங்கிய பொருட்களுடன் ஆராத்யா பக்கத்தில் வந்தாள். ஆரோனும் தன் வீட்டிற்கு ஆடைகளும் ஆராத்யாவுக்கும் ஒரு அனார்கலி சுடிதார் எடுத்து பில் போட்டு வந்தான்.

"கிளம்பலாமா ஜெனி?" ஆரோன் பார்வை ஆராத்யாவை தீண்டவில்லை.

அதை கவனித்தாலும் ஒன்றும் பேசாமல் அவர்களுடன் நடந்தாள் ஆராத்யா.

அடுத்த மூன்று மாதங்கள் எப்படி சென்றதென்றே தெரியவில்லை. ஆரோன் தன் நண்பனுடன் சேர்ந்து மாம்பழம் ஏற்றுமதி இறக்குமதி தொழில் ஒன்றை தொடங்கியிருந்தான். கல்லூரி படிக்கும் போதே பகுதி நேர வேலை செய்ய பழகியிருந்ததால் அதில் வந்த வருமானத்தில் அவனும் அவன் நண்பனும் பங்கு போட்டு தொழிலை தொடங்கினர். ஆராத்யா அவள் தாயுடன் கைத்தொழில் செய்ய பழகியிருந்தாள். அதில் அவளுக்கும் சிறிது வருமானம் வர தேவைகள் பூர்த்தியாயின.

மூன்றாம் மாத இறுதியில் அவர்களின் சான்றிதழ்கள் பரிசோதிக்க பட்டு வேலைக்கு வரும் நாளையும் சொல்லி விட்டிருந்தனர். அன்றும் ஆரோன், ஆராத்யா இருவரும் கண்டு கொண்டதாகவே இல்லை. ஜெனிக்கு தான் தலையை பிய்த்து கொள்ளலாம் போல இருந்தது.

இதோ அவர்கள் வேலைக்கு சேர்ந்து ஆறு மாதங்கள் ஓடி விட்டன. பெங்களூரில் ஒரு பெரிய கம்பெனியில் வேலை. மூவரும் தொலை தூர கல்வி மூலம் முதுகலை ஆங்கிலம் பயின்று வந்தனர்.

அன்று அலுவலகத்தில் ஒரு மீட்டிங் இருந்ததால் மூவரும் கிளம்பும் போதே இரவாகி விட்டது. ஆரோன் வழக்கம் போல் ஆரா மற்றும் ஜெனியின் ஹாஸ்டல் கொண்டு போய் விட ஆராத்யாவின் அலைபேசி ஒலித்தது.

எடுத்தவள் "ஹலோ சொல்லுங்கம்மா.." எனவும் அந்த பக்கம் என்ன கூற பட்டதோ இவளின் கரங்கள் நடுங்கியது.

"ம்மா.. இப்போ அப்பா எப்படி இருக்காங்க? பயப்பட ஒன்னும் இல்லையே"

"……"

"ம்மா.. நான் உடனே கிளம்பி வரேன்" என்றவள் ஜெனியை பார்த்து "அப்பாக்கு நெஞ்சு வலின்னு ஹாஸ்பிட்டல்ல சேர்த்திருக்காங்களாம் ஜெனி.. அம்மா ரொம்ப பயந்துட்டாங்க.. நான் உடனே கிளம்புறேன்.. ஆபீஸ் ஹெட்க்கு லீவ் கேட்டு மெயில் பண்ணிடுறேன்" என கிளம்பினாள்.

ஆரோன் அப்போதும் அசையாமல் நிற்பதை பார்த்த ஜெனி "அவ தனியா கிளம்புறாடா.. கூட போய் பஸ் ஏத்தி விட்டுட்டு வா" என தோளில் தட்ட சரியென அவனும் கிளம்பினான். ஆனால் எதுவோ தவறாக நடக்க போவதை போல் மனம் வலித்தது.

ஆராத்யா அவள் பெற்றோர் ஜோஸப், மேரிக்கு ஒரே பெண் குழந்தை. கஷ்டம் இருந்தாலும் நல்ல படியாகவே வளர்த்தனர். இனி அவளின் திருமணம் மட்டுமே அவர்களின் கனவு. ஆனால் இன்று ஜோஸப் நெஞ்சு வலி வந்ததும் தன் மகளின் திருமணத்தை பார்க்க முடியாதோ எனும் பயத்தில் அவசரமாக ஒரு வரனை பார்க்க சொன்னார்.

ஆராத்யா உடன் ஆரோன் கிளம்பும் போது அவள் எதுவும் தடுக்கவில்லை. அவன் வருவது அவளுக்கு பெரும் பலமாக இருந்தது. ஆனாலும் எதையும் வெளிக்காட்டாமல் வந்தாள். பேருந்து ஏற்றி விட்டு சென்று விடுவான் என நினைத்தால் அவனும் அவளோடு பயணித்தான்.

இரவு கிளம்பியவர்கள் விடியற்காலையில் சென்னை வந்து சேர்ந்தனர். வீட்டிற்கு செல்லாமல் நேரடியாக மருத்துவமனை சென்று தந்தையை விசாரித்தாள்.

"அம்மா அப்பாக்கு எப்படி இருக்கு? டாக்டர் என்ன சொன்னாங்க?"

"இதயத்தில் ஏதோ அடைப்பாம்.. ஆஞ்சியோ பண்ணனுமாம்.. ரெண்டு லட்சம் கிட்ட ஆகுமாம் ஆரா" என்றவருக்கு கண்கள் கலங்கியது.

மகளின் திருமணத்திற்கு கூட ஒன்றும் இன்னும் சேமிக்காத நிலையில் இரண்டு லட்சத்திற்கு எங்கே போவார்? ஆராவும் எதுவும் புரியாமல் மலைத்து நின்றாள்.

ஆரோன் தான் நிலமையை கையில் எடுத்து கொண்டான்.

"ஆன்டி இப்போதைக்கு நகை எதுவும் இருக்கா பாருங்க.. ஆபரேஷன் முடிச்சிட்டு யோசிக்கலாம்.. இல்லன்னா யார்கிட்டயாவது கடன் கிடைக்குமா?"

அப்போது தான் மேரி ஆரோனை கவனித்தார். "தம்பி நீங்க?"

"என் கூட வேலை பாக்குறவர் அம்மா.. எனக்கு துணையா இங்க வந்தார்" என்றவன் அவன் சொன்னதை யோசித்தாள்.

நகை என்று பெரிதாக எதுவும் அவளிடம் இல்லை. இருக்கும் நகைகளை விற்றால் கூட ஒரு லட்சம் தாண்டாது. கண்கள் கலங்கி விட்டது அவளுக்கு.

அவளையே பார்த்து கொண்டிருந்தவனுக்கு புரியாதா? தன் நண்பனுக்கு அழைத்தவன் ஏதேனும் வட்டி கடன் மூலம் இரண்டு லட்சம் கிடைக்குமா என்று பார்த்து அதற்கான ஏற்பாடுகளை செய்தான்.

பணம் வந்ததும் அதை ஆராவின் தாயிடம் கொடுத்தவன் ஆபரேஷனுக்கு பணத்தை கட்டி வர சொல்லி விட்டு அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தான். சிறிது நேரத்தில் ஜோஸப் ஆரா மற்றும் மேரியை அழைக்க உள்ளே சென்றவர்கள் வெளியே வரும் போது ஆராவின் கண்கள் கலங்கி இருந்தது.

"என்னாச்சு ஆன்டி?"

அவனையே வேதனையுடன் பார்த்தாள் ஆராத்யா.

"ஆராக்கு இப்போவே கல்யாணம் பண்ணி பார்க்க அவருக்கு ஆசை தம்பி.. ஏதோ தெரிஞ்சவங்க மூலமா ஒரு பையனை விசாரிச்சு வர சொல்லி இருந்தாராம்.. அவங்க வர வரைக்கும் ஆபரேஷன் வேண்டாம் சொல்லுறார்" என்று மேரி கூட ஆரோனின் கண்கள் அதிர்ச்சியில் விரிந்தது.

அவனின் மனம் பட்ட வேதனைக்கு காரணம் இது தானோ என கலங்கியது.

"ஆன்டி நான் ஆரா அப்பாவை பார்த்திட்டு வரவா?"

யோசனையுடன் சரி என்றார் மேரி.

ஆனால் உள்ளே சென்றவன் முகமெங்கும் பூரிப்புடன் வெளியே வர அடுத்து உள்ளே சென்ற ஆரா மற்றும் மேரி குழப்பத்துடன் வந்தனர்.

"உங்க பெற்றோருக்கு தெரியாம இப்போ இந்த கல்யாணம் தேவையா தம்பி? உங்களுக்கும் இருபத்தொரு வயது தானே ஆகுது.. இது உங்க ரெண்டு பேரோட வாழ்க்கை.."

"ஆன்டி, ஆரா அப்பா உங்ககிட்ட என்ன சொன்னாங்க தெரியல.. ஆரான்னா எனக்கு உயிர்.. அவ இல்லாத ஒரு வாழ்க்கையை என்னால நினைச்சு கூட பார்க்க முடியாது.. கடவுளோட சித்தமே இது தான் போல.. அதான் ஆரா கூடவே இங்க என்னை வர வச்சிருக்காரு.. என் வீட்டில் நான் பேசி சம்மதம் வாங்க நாட்கள் ஆகும்.. அதுவரை ஆராக்கு கல்யாணம் பண்ணி வைக்க மாட்டீங்கன்னா சொல்லுங்க நான் தாராளமா வெயிட் பண்ணுறேன்.. சம்பாதிக்கலன்னு ஒரு பேச்சு வர கூடாதுன்னு தான் நானும் இப்போவே சம்பாதிக்க ஆரம்பிச்சேன்.. தொலை தூர கல்வியில் மேல் படிப்பு பண்ணிட்டு தான் இருக்கேன்.. படிப்பு முடிந்து இதை விட நல்ல வேலை கிடைத்தால் கண்டிப்பா ஆராவை ராணி மாதிரி காப்பாற்ற முடியும்.. வயது தான் பிரச்சனை அப்படின்னா கல்யாணம் முடிஞ்சு நீங்க சொல்ற வரை பிரிஞ்சி கூட இருக்கிறேன்.. ஆனால் ஆராவை யாருக்கும் விட்டு கொடுக்க முடியாது ஆன்டி பிளீஸ்"

அவனின் வார்த்தைகளை கேட்ட ஆராத்யா மலைத்து போய் நின்றாள். இத்தனை காதலா அவள் மீது..!

மேரி ஆராவை பார்த்தார். அவளின் பார்வை ஆரோன் மீது ஆச்சரியமாக இருப்பதை உணர்ந்தவருக்கு அவனின் பெற்றோர் மட்டும் தான் உறுத்தினர்.

'நாளை என் பையனை எப்படி உன் பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி வைத்தாய்?' என்று கேட்டால் என்ன பதில் சொல்லுவது?

"தம்பி நீங்க சொல்லுறது எல்லாம் சரி தான்.. ஆனா உங்க பெற்றோர் இல்லாத திருமணம் வேண்டாமே… எல்லார் ஆசீர்வாதத்தோட உங்க கல்யாணம் நடக்கணும்"

அவனுக்கும் அவர்கள் நிலை புரிந்தது. "ஆன்டி எனக்காக ஒன்னு பண்ண முடியுமா?"

"சொல்லுங்க தம்பி.."

"மாமாவை இந்த ஆபரேஷன் இப்போ பண்ண சொல்லுங்க.. என் மேல நம்பிக்கை வைங்க.. இன்னும் இரண்டு நாளில் நான் என் பெற்றோருடன் வந்து பெண் கேட்கிறேன்" என்றவனுக்கு அவனுடைய வீட்டை சமாளிப்பது மலையை புரட்டி போடும் விஷயம் என புரிந்தது. ஆனாலும் ஆராவை விட மனதில்லை. அவள் அவனின் உயிரோடு கலந்தவள்.

ஜோஸப் அதற்கு சம்மதிக்கவும் அவருக்கான சிகிச்சை நடந்தது.

ஆராத்யாவிடம் பல வருடங்களுக்கு பிறகு பேசினான்.

"ஆரா என்னை பற்றி உன் மனசுல என்ன இருக்குன்னு இதுவரைக்கும் எனக்கு தெரியல.. உனக்கு என்னை பிடிக்கலன்னா கூட பரவாயில்லை வீட்டில் பார்க்கிற பையனை கல்யாணம் பண்ணிக்குறதா நினச்சிக்கோ.. எங்க வீட்ல கன்வின்ஸ் பண்ண பார்க்கிறேன்.. கண்டிப்பா அவர்களை மீறி நம்ம கல்யாணம் நடக்காது.. ஆனா என் மேல நம்பிக்கை வச்சு எனக்காக நீ காத்திருப்பியா? ஒருவேளை இரண்டு நாளில் இங்கே வர முடியாத சூழ்நிலைன்னா நான் வர வரைக்கும் வெயிட் பண்ணுவியா?"

கண்களில் காதலுடன் கெஞ்சி கேட்பவனை மறுக்க தோன்றவில்லை அவளுக்கு. அவனை இந்த நொடி அவளுக்கு பிடித்தது. அது பிடித்தத்தை மீறிய காதலா என்பது அவளுக்கு மட்டுமே தெரியும்.

அவனை நேருக்கு நேர் பார்த்தவள் "என் அம்மா அப்பா உங்களை நம்புறாங்க.. அதே நம்பிக்கை எனக்கும் இருக்கு.. கண்டிப்பா வெயிட் பண்ணுவேன்.. உனக்காக.. உன் காதலுக்காக மட்டும்.." என கூற ஆரோன் என்ன மாதிரி உணர்ந்தான் என்றே தெரியவில்லை.

பல வருட காதல் ஒரே நொடியில் அவனை பொதிந்து கொண்டது போன்ற உணர்வு. அவளை கட்டி அணைத்து நன்றி சொல்ல தூண்டியது. ஆனாலும் அவளுக்காக அவளின் அன்பிற்காக அமைதி காத்தான்.

பின் அவளின் பெற்றோரிடமும் விடைபெற்று வீட்டிற்கு வந்தவனுக்கு சோதனைகள் வரிசை கட்டி நின்றது.

 
Last edited:

அத்தியாயம் 4

ஆரோனின் வீடு அன்று மிகவும் அமைதியாக இருந்தது. ஆரோனின் தாய் ரோஸி மற்றும் தந்தை சகாயம் ஒரு இடத்தில் நின்று அவனை முறைத்து கொண்டிருக்க அவனின் அண்ணன் ஆலன் தம்பியை சுவாரசியமாக பார்த்தான்.

"இப்போ கடைசியாக என்ன தான் சொல்ல வரீங்க ப்பா?" ஆரோன் அடக்கப்பட்ட கோபத்துடன் நின்றான்.

அவனை சட்டை செய்யாத சகாயம் "உனக்கு இந்த வயசுல அண்ணன் இருக்கும் போது அதுக்கு முன்னாடி கல்யாணம் பண்ணுறதே தப்பு.. அதுவும் ஒன்னும் இல்லாத வீட்ல இருந்து கண்டிப்பா பொண்ணு இந்த வீட்டுக்கு மருமகளா வர விட மாட்டேன்.. உனக்கு இப்போ கல்யாணம் தான் முக்கியம்னா சொல்லு.. என் பிரென்ட் பொண்ணு ஷாலினி இருக்கா" என்று கூற ஆரோன் அவரை முறைத்தான்.

"எனக்கு இப்போ கல்யாணம் பண்ணனும்னு ஆசை இல்லை.. ஆனா அந்த பொண்ணோட வீட்டு சூழ்நிலை அப்படி இருக்கு.."

"அப்போ அவ வேற யாரையாவது கல்யாணம் பண்ணிட்டு போகட்டும்.. நீ ஒழுங்கா படிச்சு வேலை மட்டும் பாரு.." இப்போது எதிர்த்தது அவனின் தாய்.

"ம்ம்மா.. நான் அவளை லவ் பண்ணுறேன்.. இன்னொருத்தனுக்கு எப்படி விட்டு கொடுப்பேன்?"

"அப்படின்னா அவ இந்த வீட்டுக்கு மருமகளா வர முடியாது.. வேணும்னா நீ வீட்டை விட்டு கிளம்பு"

"ப்பா என்ன பேசுறீங்க?" இப்போது எதிர்த்தது ஆலன்.

"நீ சும்மா இரு ஆலன்.. உனக்கே இன்னும் கல்யாண வயசு வரல.. இவனுக்கு இருபத்தொரு வயசுல கல்யாணம் கேட்குது.. வெட்கமா இல்லையா?" என்று சீற ஆரோன் எதுவும் பேசவில்லை.

சில நிமிடங்கள் யோசித்தான். "இப்போ முடிவா என்ன சொல்லுறீங்க?"

"அந்த பொண்ணை என்னால ஏத்துக்க முடியாது.."

"அவ வரதட்சணை கொண்டு வரலங்குறது தான் உங்க பிரச்சனை ரைட்?"

"ஆமா.."

"தென் ஓகே.. உங்களுக்கு ரெண்டு நாள் டைம்.. நீங்க அவங்க வீட்ல போய் பேசணும்.. இல்லனா பொண்ணு வீட்ல வரதட்சணை கேக்குறாங்கன்னு போலீஸ் கம்ப்ளைன்ட் குடுத்துடுவேன்.. நீங்க மானம், மரியாதை எல்லாம் நிறைய பாக்குற ஆளுன்னு எனக்கு தெரியும்.. அவ கொண்டு வந்து தான் இங்க நான் வாழனும்னு இல்ல.. என்னால எனக்கு பொண்டாட்டியா வர போறவள காப்பாத்துற தகுதி இருக்கு"

"டேய் என்னடா பேச்சு பேசுற" ஆலன் திட்ட அவனை முறைத்தான்.

"நீ இப்போ அவங்களுக்கு சப்போர்ட் பண்ணி பேசுனா நாளைக்கு உனக்கும் ஒரு பொண்ணோட கல்யாணம் நடக்கும்.. அவ வீட்லயும் இவங்க லட்ச கணக்குல வாங்குவாங்க.. ஆனா அவ உன்னை ஒரு ஆளா கூட மதிக்க மாட்டா.. அவ வெளியில் உன்னை மதிக்கிற போல காட்டிகிட்டாலும் மனசுக்குள்ள அவளோட பெற்றோர் அதுக்காக பட்ட கஷ்டம் உறுத்திட்டே இருக்கும்.. உனக்கான மரியாதை குறைவா தான் இருக்கும்.. நல்ல புருசன் தன் பொண்டாட்டி சம்பாதிக்கிறது கூட வாங்கலாம்.. ஆனா பொண்டாட்டி வீட்ல இருந்து எதிர்பார்க்க கூடாது.. எனக்கு என் ஆராத்யா வீட்ல இருந்து எதுவும் வேண்டாம்.. மீறி இவங்க கேட்டா நானே புகார் குடுப்பேன்.. போய் ஜெயில் கம்பி எண்ணிட்டு வரட்டும்" என்றான் ஆரோன்.

அதை கேட்டதும் சகாயம் அதிர்ந்து போனார். இவன் எதுவும் போலீஸ் புகார் கொடுத்து விட்டால் யாரும் அவரை மதிக்க கூட மாட்டார்கள்.

"என்னைக்கு போகணும்?" அமைதியாக கேட்டார்.

"நெக்ஸ்ட் வீக் கூட போகலாம்.. ஆனால் நீங்க வரது அவங்களுக்கு சொல்லணும்.. அப்புறம் இந்த கல்யாணத்தை எல்லார் போலவும் சிறப்பா நடத்தி தரணும்"

"என்னடா இப்படி மிரட்டுற?" ரோஸி தான் தாங்க மாட்டாமல் கேட்டார்.

"என்ன மிரட்டுறாங்க? ஒழுங்கா தானே கல்யாணம் பண்ணி வைக்க கேட்டேன்.. சம்மதம் சொல்லிருந்தா கூட நாங்க வெயிட் பண்ணி இருப்போம்.. ஆனா இப்போ அப்பா பேசினதை பார்த்த அப்புறம் வெயிட் பண்ணினா கூட எதுவும் வேண்டாத வேலை பண்ணி அவங்களை கஷ்ட படுத்துவாங்க.. சோ இப்போவே கல்யாணம் முடியட்டும்.. அடுத்து எங்க வாழ்க்கையை நாங்க தனியா பார்த்துக்குறோம்"

"இப்போ மட்டும் எதுக்குடா நான்?"

"நானும் வேண்டாம் தான் சொன்னேன்.. ஆராவோட அம்மா, அப்பா தான் உங்களையும் வச்சு கல்யாணம் பண்ண ஆசை பட்டாங்க.. அதுக்காக தான் நீங்க கூடவே இருந்து நடத்தனும்"

ஆலன் தான் அவனின் பேச்சில் கடுப்பானான். "என்ன பேச்சுடா இது?"

"அவங்க வேற ஏதாவது காரணம் சொல்லிருந்தா கூட வெயிட் பண்ணிருப்பேன்.. வரதட்சணை காரணம் காட்டின அப்புறம் உங்க மேல இருந்த மரியாதையே போச்சு.. நான் அவங்ககிட்ட நல்ல நாள் பார்த்து சொல்ல சொல்லுறேன்.. மத்த விசயங்கள் எல்லாம் நீங்களே பேசி முடிவுக்கு வாங்க" என்றவன் வெளியே கிளம்பி விட்டான்.

அவன் வெளியேறியதும் அந்த வீடே அலை அடித்து ஓய்ந்தது போல இருந்தது.

"இப்போ என்னங்க பண்ணுறது?"

"அவன் நம்பர் தருவான்.. சீக்கிரமே கல்யாணத்தை முடிச்சு அனுப்பி விடு.. இனி அவனுக்கும் நமக்கும் எந்த சம்மந்தமும் இல்லை" என்றவர் அடக்கப்பட்ட கோபத்துடன் வெளியேறினார்.

"இவர் என்னடா இப்படி பேசிட்டு போறார்?"

"சரியா தான் சொல்லிட்டு போறார்.. ஆனா உங்க மேல எனக்கு இருந்த மரியாதையும் போச்சு" என்ற ஆலன் தன் அறைக்கு சென்று விட்டான். ரோஸி தான் ஒன்றும் புரியாமல் நின்றார்.

அடுத்து மளமளவென வேலைகள் நடந்தன. நிச்சயம் எதுவும் செய்யாமல் நேரடியாக திருமணம் தான். ஆராத்யா இரண்டு மாதம் மெடிக்கல் லீவ் எடுத்திருந்தாள். ஜெனி மிகவும் சந்தோஷப்பட்டாள். ஜோஸப் கொஞ்சம் உடல்நிலை தேறி வரவே அவரும் உற்சாகமாக திருமண வேலைகளில் ஈடுபட்டார்.

சகாயம் யாரிடமும் எதுவும் கோபப்படவில்லை. இயல்பாக இருப்பது போல காட்டி கொண்டார். ஆனால் சொந்தங்கள் 'வரதட்சணை இல்லாமல் கல்யாணமா? பையனுக்கு செயின் கூட போடலயா? இந்த சின்ன வயசுலேயே கல்யாணத்துக்கு என்ன அவசரம்? எதுவும் எசகு பிசகாகி அதை மறைக்க திடீர் கல்யாணமா?' என அவரின் குடும்ப மானத்தை ஏலம் போட்டு கொண்டிருந்தனர்.

அதை காதில் வாங்கி கொண்டாலும் எதுவும் பேசாமல் இருந்து விட்டார் சகாயம். கண்டிப்பாக அண்ணனுக்கு முன்னர் தம்பிக்கு திருமணம் நடந்து விடுவதால் ஆலன் வாழ்க்கை மற்றவர் வாயில் அரைபட போவது உறுதி. ஆனால் கொஞ்சம் முன்னர் அவரின் நண்பன் தன் மகள் ஷாலினியை ஆலனுக்கு தர சம்மதம் சொன்னதால் சின்ன நம்பிக்கை.

நாளை காலையில் திருமணம். அலுவலகத்தில் யாரிடமும் எதுவும் சொல்லியிருக்கவில்லை. இருவருக்கும் வேறு வேறு மேனேஜர் என்பதால் வேலையில் எந்த பிரச்சனையும் இல்லை. ஒரே மேனேஜர் கீழ் வேலை பார்த்தால் தான் வேறு பிராசஸ் மாற்றி விடுவார்கள். ஜெனிஷா இரண்டு நாள் விடுமுறை எடுத்து வந்திருந்தாள். ஆரோன் ஒரு வாரம் மட்டுமே பெர்சனல் லீவ் எடுத்திருந்தான். திருமணம் முடிந்ததும் அவன் போய் வேலையை தொடர வேண்டும்.

மறுநாள் திருமணத்திற்கான ஆடைகளை முந்தின நாள் இரவு தான் மணமகன் வீட்டில் இருந்து கொண்டு வந்து கொடுப்பார்கள். எனவே அதற்காக தயாராகி கொண்டிருந்தாள் ஆராத்யா. அவள் முகத்தில் அதீத சந்தோசமும் இல்லை சோகமும் இல்லை. அமைதியான முகபாவனையில் இருந்தாள். ஆனால் மனம் மகிழ்ந்து இருந்தது.

கடந்த இரண்டு மாதங்களாக தான் அவள் அவனிடம் பேசி கொண்டிருக்கிறாள். அதுவும் தேவைக்கு மட்டுமே. இதுவரை அவள் காதல் என்று அவனுக்கு உணர்த்தியதே இல்லை. ஆனால் ஆரோன் அவளின் காதலுக்காக காத்திருந்தான்.

ஆராத்யா ரெடி ஆகி வந்ததும் போட்டோ ஷூட் முடிந்து பின் ஆரோனின் வீட்டிலிருந்து நாளைக்கான பொருட்களை கொடுத்து விட்டு சென்றனர். அவர்களுக்கும் உணவு ஏற்பாடு செய்திருந்ததால் அனைவரும் உண்டு கிளம்பி போகும் போது நடு இரவாகி விட்டது. இன்னும் நான்கு மணி நேர தூக்கம் மட்டுமே. அடுத்து குளித்து கிளம்பினால் தலையலங்காரம் செய்ய ஆள் வந்து விட்டார்கள்.

ஆரோன் வீட்டில் எடுத்து கொடுத்த தங்க நிற புடவையில் அதற்கான அணிகலன்களுடன் பின்னால் தங்க நிற நீள நெட் போட்டு தலையில் சின்ன கிரீடம் வைத்து பார்க்க ஒரு அரசியின் தோற்றத்தில் தான் இருந்தாள்.

பெண் வீட்டார் பக்கம் ஆலயத்தில் தான் திருமணம் என்பதால் ஆரோன் வீட்டு மனிதர்களும் ஆராத்யா வீட்டிற்கு வந்தனர். மாலை மாற்றி இருவரும் ஆலயத்திற்கு மிகவும் சந்தோசமாக கிளம்பினர்.

சகாயம் அனைத்தையும் அமைதியாக பார்த்து கொண்டிருந்தார். என்ன தான் ஜோஸப் மற்றும் மேரி அவரையும் அவர் மனைவியையும் கவனித்தாலும் சகாயம் மனம் ஏற்க மறுத்தது.

அதிலும் மகன் வரதட்சணை கேட்டதாக புகார் கொடுப்பேன் என்று மிரட்டியது அவருடைய மரியாதையை அவமானபடுத்தியதாக தோன்றியது. அவரை பொறுத்தவரையில் காலம் காலமாக வாங்கும் வரதட்சணை தானே என்ற எண்ணம். ஆனால் அதற்கு சட்டங்கள் எதிராக இருப்பதை மகன் சொல்லி காட்டி எதிர்த்து விட அவருடைய தன்மானம் பெரிதும் அடிபட்டது. அவனால் அல்லவா இப்போது குடும்பத்தில் உள்ளவர்களின் கீழான கேள்விகளுக்கு எல்லாம் பதில் சொல்லி கொண்டிருக்கிறார்.

"என்னங்க சீக்கிரம் வாங்க.. எல்லாரும் கிளம்ப போறாங்க.." என்ற ரோஸியின் அழைப்பில் அவரையே பார்த்து கொண்டிருந்த மகனை முறைத்தபடி கிளம்பினார்.

ஆலன் ஆரோனின் அருகில் நின்று கொண்டு "என்னடா இந்த பார்வை பாக்குற?" என்று கிசுகிசுக்க "உன் ரூட்ட நான் க்ளியர் பண்ணி விட்டுருக்கேன்" என்று அங்கிருந்த ஷாலினியை பார்த்த படி ஆரோன் சொல்ல,

"டேய் இதெல்லாம் எப்போடா நோட் பண்ணுற?" என்று ஆச்சர்யப்பட்டான் ஆலன்.

"நம்ம தந்தை குலம் ஷாலினியை எனக்கு கல்யாணம் பண்ணி வைக்க பேசினப்போ உன் கண்ணில் கண்ணீர் ஆறாய் ஓடினதை நான் நோட் பண்ணிட்டேன் பிரதர்"

"அவ இன்னும் ஓகே சொல்லல டா" ஆலன் சோகமாய் சொல்ல,

"இனி அந்த கவலை உனக்கு வேண்டாம்.. என் கல்யாணத்தில் உன்னோட கல்யாணம் ஃபிக்ஸ் ஆகிடுச்சு.. இனி ஷாலினி உனக்கு தான்" என்ற ஆரோன் அப்போது தான் அங்கு வந்த ஆராத்யாவை கண் இமைக்காமல் பார்த்தான்.

"தொடங்கிட்டியா உன் வாட்டர் ஃபால்ச"

"தொடங்கி அஞ்சு வருஷம் ஆச்சு.. அதை அவகிட்ட சொல்லி நாலு வருஷம் ஆச்சு.. இன்னும் பதிலை காணோம்"

"அப்போ இது லவ் மேரேஜ் இல்லையா?" ஆலன் பதற,

"எனக்கு லவ் மேரேஜ்.. அவளுக்கு அரேஞ்ச் மேரேஜ்.. நீ கிளம்பு.. நான் சைட் அடிக்கட்டும்" என்றவன் திரும்பி ஆராவை பார்க்க அவனின் பார்வையில் கவர்ந்திழுக்க பட்டவளோ வெட்கத்தில் தலை குனிந்தாள்.

 
Last edited:

அத்தியாயம் 5

அந்த தேவாலயம் முழுவதும் வண்ண ஒளி அலங்காரங்களை கொண்டு மின்னியது. மத போதகர் முன்னே செல்ல மணமகனும் மணப்பெண்ணும் அவரை உறவுகள் சூழ பின் தொடர்ந்தனர். ஆரோன் சொல்ல முடியாத அளவு மகிழ்ச்சியில் இருந்தான். ஆராத்யா அவனின் முகமலர்ச்சியை சிறு புன்னகையுடன் பார்த்தாள். அவள் மனதிலும் இப்போது சிறு காதல் உணர்வு முளைத்தெழும்ப தொடங்கியிருந்தது. அவனின் கண்ணியம், அவனின் பொறுப்பு இவளை கொஞ்சம் அசைத்து பார்த்தது.

போதகர் இருவரையும் முன்னிறுத்தி திருமண சடங்குகளை ஆரம்பிக்க, ஆராத்யா மற்றும் ஆரோன் இருவரும் அதை மகிழ்ச்சியுடன் அனுபவித்தனர்.

"திரு. எஸ். ஆரோன் எனும் நீர் செல்வி. ஜே. ஆராத்யா எனும் இவரை உம் வாழ்க்கை துணையாக ஏற்று கொண்டு இன்பத்திலும் துன்பத்திலும் வாழ்விலும் தாழ்விலும் சுக துக்கத்திலும் உறுதுணையாக இருந்து மனைவியாக ஏற்று கொள்ள சம்மதிக்கிறீர்களா?"

போதகர் கேட்க ஆராத்யாவை காதலுடன் பார்த்தவன் "ஆம் சம்மதிக்கிறேன்" என்று வாக்கு கொடுக்க அவர் ஆராத்யா பக்கம் திரும்பினார்.

"செல்வி. ஜே. ஆராத்யா எனும் நீர் திரு. எஸ். ஆரோன் எனும் இவரை உம் வாழ்க்கை துணையாக ஏற்று கொண்டு இன்பத்திலும் துன்பத்திலும் வாழ்விலும் தாழ்விலும் சுக துக்கத்திலும் உறுதுணையாக இருந்து கணவனாக ஏற்று கொள்ள சம்மதிக்கிறீர்களா?"

ஆரோனை ஒரு நொடி பார்த்தவள் "ஆம் சம்மதிக்கிறேன்" என்ற நேரம் ஆரோன் என்ன மாதிரி உணர்ந்தான் என தெரியவில்லை.

இருவரின் சம்மதத்தையும் கேட்டவர் தாலி செயினை எடுத்து ஆசீர்வதித்து அவன் கையில் கொடுக்க தலை குனிந்து அதை ஏற்று கொள்ள தயாரானாள் ஆராத்யா.

இருவரின் மனமும் நிறைந்திருந்தது. அவன் தாலியை அணிவித்த நொடி அவன் முகத்தை பார்த்து புன்னகைத்தாள் பெண்.

மற்ற சடங்குகள் முடியவும் இருவரும் வீட்டிற்கு வர, ஜெனிஷா ஆராத்யாவை அணைத்து கொண்டாள்.

"வாழ்த்துகள்.. ஐ ஆம் சோ ஹேப்பி ஆரா.."

"தேங்க்ஸ் ஜெனி.." என்றவள் ஆரோனின் கை கோர்த்து கொண்டாள்.

அடுத்து பாலும் பழமும் கொடுக்கும் சடங்கில் எந்த உறுத்தலும் இல்லாமல் அவன் குடித்து விட்டு கொடுத்ததை வாங்கி கொண்டாள்.

அனைத்தும் முடிய ஆரோன் வீட்டிற்கு கிளம்பும் நேரம் சகாயம் வந்தார்.

"என்னப்பா? கிளம்பலாமா?" ஆலன் கேட்க அவர் ஆரோனை முறைத்து கொண்டே "எந்த வீட்டுக்கு வர சொல்லுற? அவங்க எங்க வேணாலும் போகட்டும்.. ஈவினிங் வரவேற்பில் மட்டும் ரெண்டு மணி நேரம் வந்து நிற்க சொல்லு.. அடுத்து அந்த வீட்டு பக்கம் வர கூடாது" என்று கூற ஆராத்யா ஆரோனின் கைகளை இறுக பற்றி கொண்டாள்.

அவளின் கைகளை அழுத்தி நிமிர்ந்தவன் "நான் அங்க வரேன்னு சொல்லவே இல்லையேப்பா.. நானும் நீங்க சொன்ன ஐடியால தான் இருக்கேன்" என்று கூறி அவரின் மூக்கை உடைத்து விட்டான்.

"இவங்க சண்டை எப்போ முடியுமோ?" என்று புலம்பினான் ஆலன்.

அதற்கு மேல் சகாயம் அங்கு நிற்கவில்லை. பதறி நின்ற ஜோஸப், மேரியை பார்த்தவன் "இதுல பதற்றப்பட ஒண்ணுமே இல்ல மாமா.. உங்க வீட்ல ஒரு வாரம் எனக்கு இடம் தர மாட்டீங்களா?" என்று கேட்கவும் அவர்களுக்கு என்ன சொல்லவென்றே தெரியவில்லை.

ஆராத்யா தான் அவனை அதிசயமாய் பார்த்தாள். அவளின் பார்வையை உணர்ந்தவன் கண் சிமிட்ட மற்றவர்களை கண் காட்டினாள்.

ஜோஸப் தன் அதிர்வில் இருந்து அப்போது தான் வெளியே வந்தார். "நீங்க தாராளமா இங்க தங்கலாம் மாப்பிள்ளை.. நீங்களும் இனி எனக்கு பையன் மாதிரி தான்" என்று சொல்ல அவன் மேரியை பார்த்தான்.

"உங்க அம்மா அப்பாகிட்ட என்ன சொல்லி இந்த கல்யாணத்துக்கு சம்மதம் வாங்கினீங்க தம்பி?"

அவன் உண்மையை சொன்னான். "என்னால ஆராத்யா இல்லாத ஒரு வாழ்க்கையை நினைச்சு கூட பார்க்க முடியாது அத்தை.. அதனால் வேற வழியும் தெரியல.. சோ பிளாக் மெயில் பண்ணி தான் கல்யாணத்தை முடிச்சுகிட்டேன்"

அவர்களுக்கு அவனின் காதல் புரிந்தது.

"எங்க பொண்ணுக்கு இப்போ வரை பெருசா எதுவும் சேர்க்கல மாப்பிள்ளை.. இந்த வீடு சொந்தமானது தான்.. அது என் பொண்ணுக்கு தான்.. மற்ற நகைகள் எல்லாம் நான் கண்டிப்பா என் பொண்ணுக்கு கொடுப்பேன்" என்ற ஜோஸப்பை அமைதியாக பார்த்தவன் "என்னால உங்க பொண்ணை ரொம்ப நல்லா வாழ வைக்க முடியும் மாமா.. நான் இப்போ நீங்க சொன்னதுக்கு ஓகே சொல்லுறது உங்க மன திருப்திக்காக" என்றவன் அவர்கள் வீட்டிற்குள் சென்றான்.

அடுத்து இரவு வரவேற்பை ஆராத்யாவுடன் முடித்து கொடுத்தவன் ஏதோ ஒப்பந்தம் முடிந்த மாதிரி தன் மனைவியுடன் பெற்றோரை விட்டு பிரிந்தான். அவர்களுக்காக அவனால் ஆராத்யாவை விட்டு கொடுக்கும் எண்ணம் இல்லை. வீம்பிற்காக அவர்கள் ஆராவை மறுத்தால் ஆரோனும் அவர்களை வேண்டாம் என உதறி தள்ளினான்.

அன்று இரவு அவர்களுக்கு முதலிரவு. பெரிதாக அலங்காரம் இல்லாத அறை தான். ஆரோன் அறைக்குள் சிறிது நேரம் இருந்தவன் பின் தனக்குள் ஏதோ முடிவெடுத்தவனாய் ஜோஸப்பை தேடி சென்றான்.

ஆராத்யா அவர்கள் அறைக்குள் செல்லவும் "நீ நம்ம ரூமுக்குள்ள போ ஆரா.. ஒரு சின்ன வேலை முடிச்சிட்டு வரேன்" என்றவன் ஜோஸப் இருந்த அறைக்கு வெளியே நின்று கதவை தட்டினான்.

அதுவரை மகளின் நகைக்கு என்ன செய்ய போகிறோம் என்று தவித்து கொண்டிருந்தவர்கள் அவனின் குரலில் பதறி வெளியே வந்தனர்.

"என்னாச்சு மாப்பிள்ளை?"

"மாமா இந்த பார்மாலிட்டீஸ் எல்லாம் வேண்டாமே.. பெயர் சொல்லியே கூப்பிடுங்க" என்றவன் பின் தன் கையில் இருந்த ஒரு பத்திரத்தை எடுத்து அவரின் கையில் வைத்தான்.

"என்னாச்சு தம்பி? என்ன இது?"

"நானும் என் நண்பனும் சேர்ந்து ஒரு பிசினஸ் பண்ணிட்டு இருக்கோம் மாமா.. மாம்பழம் ஏற்றுமதி இறக்குமதி செய்யுறது.. பாதி பணம் நான் போட்டிருக்கேன் அதனால் நானும் பார்ட்னர்.. இனி என் சார்பா நீங்க அதை பார்த்துக்கணும்" என்று கூற ஜோஸப் பதறினார்.

"என்ன தம்பி இது? எனக்கு வேண்டாம்.."

"இன்னைக்கு தான் சொன்னீங்க நான் உங்க பையன் மாதிரின்னு.. என்னால ரெண்டு வேலையில் இருக்க முடியாது மாமா.. எங்க கம்பெனி ரூல் படி அங்க வேலை பார்த்துட்டே இன்னொரு பிசினஸ் என் பெயரில் இருக்க கூடாது.. லீகல் ஆக்ஷன் எடுக்க அவங்களுக்கு எல்லா உரிமையும் இருக்கு.. இது நான் எந்த பரிதாபத்தில் தரல.. எனக்கு தன்னம்பிக்கையை குடுத்த பிசினஸ் இது.. இதை விட எனக்கு மனசு இல்ல.. என் அப்பாவால் இதை புரிஞ்சிக்க முடியாது.. அதனால் தான் உங்க கிட்ட கொடுக்கிறேன்.. உங்களுக்கு மொத்தமா பண்ண தயக்கமா இருந்தா என்னோடத பார்த்துக்குற மாதிரி நினைச்சு எனக்கு அப்டேட் குடுங்க.. என் பங்கு லாபத்தில் வர வருமானத்தை நாம ரெண்டு பேரும் பிரிச்சிக்கலாம்.."

அவரை மறுக்க முடியாத நிலையில் நிறுத்தியவன் அவரின் சம்மதத்தை பெற்று பத்திரத்தை கொடுத்த பின்பே தங்கள் அறைக்கு வந்தான்.

அவன் வந்ததும் அவனை அணைத்து அவன் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டாள் ஆராத்யா.

"என் ஆருக்கு என்ன ஆச்சு? தானா ஸ்வீட் கிடைக்குது?" என்றவனின் கழுத்தை இரு கைகளால் சுற்றி வளைத்தவள் "தேங்க் யூ சோ மச் ஆரோன்" என்று மீண்டும் முத்தமிட்டாள்.

இப்போது ஆரோன் தான் கள்ளுண்ட வண்டு போலானான்.

"நான் உன்னை ரொம்ப ரொம்ப லவ் பன்றேன்" அவன் கண்களை பார்த்து சொன்னாள் அவள்..

"பார்றா இது எப்போதுல இருந்து? நீயும் நானும் ஒழுங்கா பேசி ஒரு மூணு மாசம் இருக்குமா? இன்னைக்கு தான் நமக்கு கல்யாணம் முடிஞ்சிருக்கு.. உனக்கு தான் என் மேல முன்னாடி காதலே இல்லையே.. இதுல என்ன புதுசா ரொம்ப ரொம்ப லவ்" அவனுக்கு ஆர்வம் கொஞ்சம் அதிகம் போல..

"இது புதுசு இல்ல.. கிட்டத்தட்ட ஆறு வருசமா என் மனசுகுள்ளேயே புதைச்சு வச்சிருந்த என் கணவனுக்கு மட்டுமேயான லவ்.. எனக்கு பத்தாவது படிக்கும் போதில் இருந்தே நிறைய பேர் கணவன்னா இப்படி இருக்கணும்.. காதல்னா இப்படி இருக்கணும் சொல்லி கேட்டு ஒரு எதிர்பார்ப்பு உண்டு.. ஆனா காதல் மேல அவ்வளவு ஈர்ப்பு இல்ல.. இது இனிமேல் உனக்கு மட்டும் தான்.. நான் உன்னோடவள் மட்டும் தான்.."

அவள் காதலில் அவன் சிலிர்த்து நின்றான்.. எந்த புருஷனும் தன்னவளை தன் உடமை என்று தான் நினைப்பான்.. அதுவும் அவள் அவனுக்காக மட்டுமே அந்த காதலை சேர்த்து கொட்ட போவதாக சொன்னதும் அவனையும் அறியாமல் அவன் கைகள் அவளை தன்னோடு அணைத்து கொண்டது.. அவனுள் புதைந்து கொண்டாள் அவள்..

அவளை தன்னுள் அடக்கி கொண்டே கேட்டான் "அது என்ன ஆறு வருஷ காதல்? காதலில் ஈர்ப்பு இல்லன்னும் சொல்லுற?"

அவனை நிமிர்ந்து பார்த்தவள் சொன்னாள்.

"அப்போ வரைக்கும் எனக்கு வர போற கணவனை பத்தி எந்த ஒரு எதிர்பார்ப்பும் இருந்தது இல்லை.. அதுக்கு அப்புறம் நிறைய காதலர்களை பார்க்கும் போது சில சமயம் தோணும்.. ஆனா அது சட்டுனு வந்துட்டு அப்புறம் வீட்ல சம்மதிக்கலனா விட்டுட்டு போற காதலாகவும் இருக்க கூடாது.. என் வீட்டு சம்மதத்தோட ரெண்டு பேரும் மனசு நிறைஞ்சு வாழ்த்தி என்னை என் புகுந்த வீட்டுக்கு அனுப்பி வைக்கணும்.. அப்போ தோணுச்சு ஏன் அந்த காதலை சேர்த்து வச்சு என் புருஷனுக்கு குடுக்க கூடாதுன்னு.. அதே தான்.. அப்போ தோணுன நிமிஷத்துல இருந்து ஒவொரு நொடியும் என் வருங்காலத்தை காதலித்தேன்.. நீ காதலை சொல்லும் போது கூட ஒரு வேளை நாம சேரலன்னா கஷ்டமாகிடும்னு தான் காலேஜ் படிக்கும் போது உன்னை பிடிச்சு இருந்தாலும் வெளி காட்டினது இல்ல.. இப்போ மொத்தமா உங்ககிட்ட என்னை குடுத்துட்டேன்.. அதுக்காக என் காதல் இனி குறைஞ்சு போகாது.. இன்னும் இன்னும் என் எல்லா ஆசைகளையும் உங்களை என் பக்கத்துல வச்சு நிறைவேத்திப்பேன்.. லவ் யூ சோ மச்"

அவளை இறுக அணைத்து அவள் கன்னத்தில் முத்தமிட்டு சொன்னான் அவன்.

"இது வரைக்கும் என் காதல் தான் பெருசு.. என் மனைவினா எனக்கு அவ பொறுப்புன்னு நினச்சிட்டு இருந்தேன்.. ஆனா நீ உன் பேச்சுலயே என்னை உன்கிட்ட பறிகொடுக்க வச்சிட்டா.. உன் ஆறு வருஷ காதலை அனுபவிக்க நான் ரெடி.. ஐ லவ் யூ டூ மை பொண்டாட்டி.. இப்பவே ஸ்டார்ட் பண்ணலாமா?" என்று கேட்க அவளோ தயங்கினாள்.

"என்ன ஆரு?"

"நமக்கு இன்னும் குழந்தை வளர்க்கிற அளவுக்கு பக்குவமான வயசு வரல ஆரோன்.. இப்போ இதெல்லாம் நடந்தா குழந்தை?" என்று தயங்கியவளை தன்னோடு அணைத்து கொண்டவன்,

"குழந்தை வரம் கடவுளா தரது ஆரு.. அதை நாம வேண்டாம்னு சொல்ல கூடாது.. அதே மாதிரி எனக்கும் சில ஆசைகள் இருக்குமா.. உன்னை எந்த விதத்திலும் கஷ்டபடுத்தவோ தலை குனிய வைக்கவோ மாட்டேன்.. இன்னைக்கு நமக்கான ஸ்பெஷல் டே.. இது இனி ஒரு நாள் கிடைக்காது" என்றவன் அவளின் சம்மதத்தை எதிர்பார்த்து நின்றான்.

அவளுக்கும் வயது மட்டுமே தடையாக இருக்க இனி எப்போதெனினும் அவன் கூட வாழ்ந்து தானே ஆக வேண்டும் என்று தன் சம்மதத்தை தெரிவித்தாள்.

அவளும் அவனை ஆராதித்தான். நிறைவான கூடல். அவனுக்கும் அவனின் பொறுப்புகள் தெரிந்தமையால் அவளை ஒருநாளும் கஷ்டபடுத்த கூடாது என உறுதியே எடுத்து கொண்டான்.

ஆராத்யா அவனின் மார்பில் ஒட்டி கொள்ள ஆரோன் வலதுகையை போட்டு அவளை வளைத்து கொண்டான்.

"கஷ்ட படுத்தினேனா ஆரு?"

"உன்னால என்னை வலிக்க வைக்கவே முடியாது ஆரோன்.. இது சுகமான வலி.." என்றவள் அவனை அணைத்து கொண்டே உறங்கி போனாள்.

 
Last edited:

அத்தியாயம் 6

அடுத்த நாள் காலையில் ஆரோன் எழும் போது பக்கத்தில் ஆராத்யா இல்லை. அவள் அம்மாவிடம் சென்றிருப்பாள் என்று நினைத்து கொண்டு பல் துலக்க பிரஷ் தேடியவன் முன் அழகிய தேவதையின் தரிசனம்.

"குளிக்க பாத்ரூம் பின்னாடி இருக்கு.. அதான் சீக்கிரம் உங்களுக்கு முன்னே போய்ட்டு வந்துட்டேன்…நீங்க பிரஷ் பண்ணிட்டா அங்கேயே ட்ரெஸ் எல்லாம் எடுத்து வச்சிட்டேன்.. குளிச்சிட்டு வாங்க" என்று வெளியேற போக அவளை இழுத்து தன் அணைப்புக்குள் கொண்டு வந்தான்.

"சொல்ல வந்ததை எல்லாம் என் கண்ணை பார்த்து சொல்லு ஆரு.. எங்கேயோ பார்த்து சொல்லுற"

"அது… விடுங்க அம்மாக்கு ஏதாவது ஹெல்ப் பண்ணுறேன்.." அவனை பார்த்து பேசவே அவளுக்கு வெட்கமாக வந்தது.

"நான்கு வருசத்துக்கு முன்னாடி நான் லவ் ப்ரபோஸ் பண்ணினப்போ தைரியமா முடியாதுன்னு சொன்ன ஆராத்யா எங்க போயிட்டா?"

"நேத்தோட அவ காணாம போயிட்டா.. விடுங்க" அவளுக்கு நாணத்தில் முகம் சிவந்தது.

"அந்த ஆராத்யாவை குடுத்துட்டு போ.." என்றவனுக்கும் அவளை அப்படி பார்க்க ரசனையாக இருந்ததோ என்னவோ..

"பிளீஸ் ஆரோன்.." கெஞ்சியவளும் அவன் அணைப்பில் இருந்து விடுபடவில்லை.

நேற்று அவர்களின் கூடலுக்கான சான்று அவள் உதட்டிலும் கழுத்திலும் இருக்க அதை வருடியவன் "மறக்கவே முடியாத நாள்" என்று கரகரப்புடன் கூறினான்.

அதில் கூசியவள் "இன்னும் நிறைய நாளும் வருடங்களும் நமக்கு இருக்கு.. இப்போ போய் குளிச்சிட்டு வாங்க" என்று அவனை பின்கட்டிற்கு தள்ளி விட்டு சமையலறை சென்றாள்.

அவள் தாய் காலை உணவு சமைத்து கொண்டிருக்க அவருக்கு உதவி செய்து கொண்டிருந்தாள்.

அவரின் மனமும் நிம்மதியாக இருந்தது. பழகிய நாட்கள் குறைவென்றாலும் அவர்கள் ஆரோனின் மீது அளவுகடந்த நம்பிக்கை வைத்திருந்தனர்.

"தம்பி குளிச்சிட்டா சாப்பிட கூட்டிட்டு வா ஆரா.." என்றவர் உணவுகளை சாப்பாடு அறைக்கு மாற்றி கொண்டிருந்தார்.

ஆராத்யா அறைக்குள் செல்லும் போது ஆரோன் குளித்து விட்டிருந்தான். கைப்பேசியில் எதையோ யோசனையுடன் பார்த்து கொண்டிருந்தான்.

"என்ன ஆரோன்.. தீவிரமா ஃபோன் கூட குடும்பம் நடத்திட்டு இருக்கீங்க.."

அவளின் கிண்டலில் நிமிர்ந்தவன் "நீ இல்லாம அது கூட குடும்பம் நடத்துறேன்.. அதான் நீ வந்துட்டியே.. இனி உன் கூட தான்" என்றவன் அவளோடு கட்டிலில் சரிய,

"ஹே நான் உங்களை சாப்பிட கூப்பிட வந்தேன்" என்று விடுபட முயன்றாள்.

"நான் கூட சாப்பிட்டுட்டு தான் இருக்கேன்.." என்றவன் அடுத்த இரண்டு மணி நேரம் அவளை வெளியே விடவில்லை.

மறுபடியும் குளித்து கிளம்பி வந்த நேரம் மதியமே ஆகி விட்டிருந்தது. யாரும் அவர்களை கண்டுகொள்ளவில்லை.

"ஆரா மதியம் சாப்பாடு ரெடி ஆகிடுச்சுமா.. சாப்பிட்டு கொஞ்ச நேரம் தூங்குங்க.." என்ற மேரியின் பேச்சில் ஆராவை பார்த்து கண்ணடித்தவன் சாப்பிட அமர்ந்தான்.

"மாமா எனக்கு இன்னும் நான்கு நாள் தான் லீவ்.. அங்க நான் தங்கிட்டு இருந்த வீட்டுக்கே ரெண்டு பேரும் போகலாம்னு இருக்கோம்.. வாடகையும் குறைவு தான்.. நான் போய் செட் பண்ணிட்டு வரும் போது ஆராக்கு நீட்டித்த லீவ் முடிஞ்சிடும்.. அப்புறம் கூட்டிட்டு போறேன்"

அவனின் கூற்றும் சரியாக இருந்ததால் ஜோஸப் எதுவும் சொல்லாமல் ஏற்று கொண்டார்.

அடுத்த நான்கு நாட்கள் புது தம்பதியருக்கு சொர்க்கமாக தான் இருந்தது. இருவருக்குமான புரிதல், நெருக்கம் எதிலும் குறைவில்லாமல் சென்றது. ஆரோன் விடுப்பு முடியவும் அலுவலகம் சென்று வேலையை தொடர்ந்தான். அவனது திருமணம் அங்கு ஒரு பேச்சாகவே எழவில்லை. ஏனென்றால் அவனுக்கு திருமணம் முடிந்ததை அவன் சொல்லவும் இல்லை. ஜெனி கேட்டதற்கும் இப்போது சொன்னால் வயதை வைத்து கிண்டல் பண்ணி ஆராத்யாவின் மனதை நோகடிப்பார்கள் என்று சொல்ல விடவில்லை.

ஆராத்யா மீண்டும் அலுவலகம் வந்து ஐந்து நாட்கள் ஆகின்றது. அவளுக்கு திருமணம் என்று அறிந்தவர்கள் கணவன் யார் என்று கேட்கவும் இல்லை. அவளும் அந்த அளவிற்கு யாரிடமும் நட்பு பாராட்ட மாட்டாள். இதுவரை அவளுடைய தோழி ஜெனிஷா மட்டுமே. இப்போது கணவனாக ஆரோன். வேறு எந்த வித்தியாசமும் இல்லாமல் அவர்கள் காதல் திருமணம் தொடர்ந்தது.

தினமும் காலையில் இருவரும் எழுந்து காலை, மதிய உணவை தயார் செய்து அலுவலகம் கொண்டு செல்வார்கள். அந்த உணவை வாங்கும் பணம் மாதாமாதம் சேமிப்பில் செல்கிறது. சாயங்காலம் வேலை முடித்து வீட்டிற்கு வருபவர்கள் இரவு உணவை தயார் செய்து வைத்து விட்டு சில மணி நேரம் படிப்பில் செலவிடுவர். பின் இரவு உணவை முடித்தால் விடியும் வரை அவர்களுக்கான தனிப்பட்ட நேரம்.

எந்த விதத்திலும் குறைவில்லாமல் அவர்களின் நாட்கள் நகர்ந்தது. காதலிக்கவே மாட்டேன் என்று அடம் பிடித்த ஆராத்யா இப்போது ஆரோனை தினம் காதலில் குளிப்பாட்டி கொண்டிருக்கிறாள். ஆரோன் அதில் சுகமாய் நனைந்து கொண்டிருந்தான்.

அவர்கள் வேலைக்கு சேர்ந்து ஒன்றரை வருடங்கள் ஓடி விட்டன. ஜெனி இன்னமும் ஹாஸ்டல் வாசம் தான். மூவரும் முதுகலை ஆங்கிலம் கடைசி செமஸ்டரில் இருந்தனர். எல்லாமே நன்றாக போய் கொண்டிருந்தால் வாழ்க்கையின் சுவாரஸ்யம் என்னாவது? இந்த மூவரின் வாழ்க்கையை மாற்றவே இருவர் வந்திருந்தனர்.

அன்று அவர்களின் பிராஜெக்ட் முடித்து சப்மிட் பண்ண வேண்டிய நாள். பொதுவாக அவர்களின் டீம் லீடரிடம் கொடுத்து விட்டால் அவர் கிளையண்ட்க்கு அனுப்பி விடுவார். இன்று அனைவரையும் மீட்டிங் வர சொல்லியிருந்தார்கள்.

ஆரோன் மற்றும் ஜெனி ஒரே டீம் என்பதால் அவர்களின் மேனேஜர் கீழ் தான் மீட்டிங். அனைவரும் மீட்டிங் அறையில் பிராஜெக்ட் டென்ஷனில் இருக்க ஒருத்தி மட்டும் அங்கிருந்த ஆரோனை வைத்த கண் எடுக்காமல் பார்த்து கொண்டிருந்தாள். அவள் பார்ப்பதை அவனும் அறிவான். ஆனால் கண்டு கொள்வதில்லை.

"என்ன ஹரிணி நீ தான் அவரை அப்படி சைட் அடிக்கிற.. மனுசன் திரும்பி கூட பார்க்க மாட்டேங்குறாரு.." ஹரிணியின் தோழி சிந்து சொல்ல அதையெல்லாம் அவள் எங்கு கவனித்தாள். அவளின் கவனம் முழுவதும் அவன் ஒருவனே.

"ஹரிணி…" சிந்து அதட்ட,

"நான் என் லவ் சொல்லி பத்து மாசம் ஆச்சு.. இன்னும் பதில் வரல" அசால்ட்டாக சொன்னாள்.

"ஏதே.. பத்து மாசமா? இது எப்போ நடந்துச்சு?"

"ஒரு டைம் ஆரோன் ஒன் வீக் லீவ் எடுத்தார்ல அப்போ அவரை பார்க்காம மனசு பயங்கர கஷ்டமா போச்சு.. அதான் இனியும் பொறுக்க முடியாதுனு கால் பண்ணி லவ் சொல்லிட்டேன்.."

சிந்து அதிர்ச்சியாக பார்த்தாள். "அவர் உனக்கு இன்னும் பதில் சொல்லலைன்னா அவர் மனசுல வேற யாராச்சும் இருக்கலாம்ல"

"கொன்னுடுவேன்.. அவர் காதலிக்கிற பொண்ணு யாரா இருந்தாலும் என் கையால் கொல்லுவேன்.. ஆரோன் எனக்கு மட்டும் தான் சொந்தம்" என்று வெறி பிடித்தவள் மாதிரி பேசுபவளை என்ன பண்ண முடியும்? சிந்து அமைதியாக இருந்து விட்டாள்.

ஹரிணி அந்த கம்பெனியில் அக்கவுண்ட் மெயின்டெனன்ஸ் பிரிவில் வேலை செய்பவள். இருபத்தொரு வயது யுவதி. தந்தை அந்த தொகுதி எம்.எல்.ஏ. தாய் லேடீஸ் கிளப் செக்கரடரி. ஆசை பட்ட எதையும் அடைந்தே தீரும் குணம் கொண்டவள். முதன் முதலில் இந்த அலுவலகம் வந்த பொழுதில் இருந்து ஆரோன் மீது காதல் வெறி. அதை அவன் அறிந்தும் கண்டு கொள்ளாததால் இன்னும் கோபம்.

ஆரோனும் அவள் பார்வையை கவனித்தது போல ஜெனியும் கவனித்தாள்.

"டேய் ஆரோன்.. அந்த பொண்ணு உன்னை சைட் அடிக்குது டா.. "

"சைட் எல்லாம் அடிக்கல.. லவ் பண்ணுது" ஆரோன் அசால்ட்டாக சொல்ல,

"ஏதே.. லவ்வா? அப்போ என் பிரென்ட் நிலமை" அலறினாள் ஜெனி.

"என் உயிரே போனாலும் உன் பிரென்ட் தான் என் பொண்டாட்டி.. இந்த பொண்ணு எல்லாம் ஒரு ஆளே இல்ல.. நீ மீட்டிங் கவனி.." என்றவன் வர தாமதமாகும் என ஆராத்யாக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பி விட்டான்.

"ஹரிணி அவர் பக்கத்தில இருக்க பொண்ணு யாரு? ஒரு வேளை லவ்வரா இருக்குமோ?" சிந்துக்கு வாய் மூடி இருக்க முடியவில்லை.

"ரெண்டு பேரும் ஃப்ரெண்ட்ஸ்.. விசாரிச்சிட்டேன்.. இன்னொரு பொண்ணு கூட உண்டு.. வேற டீம்"

"அப்போ உன் ரூட் கிளீயர் ஆகிடும்" என்று மீட்டிங்கை கவனித்தனர்.

இரண்டு மணிநேரம் அவர்களின் பிராஜெக்ட் தொடர்பான விளக்கங்கள், சந்தேகங்கள் என கேட்டு முடித்து வெளியே வரும் போது ஆராத்யா அவர்களுக்காக காத்திருந்தாள்.

"ரொம்ப நேரமா வெயிட் பண்ணுறியா ஆரு?"

"இப்போ தான் ஆரோன் வந்தேன்.. நீங்க வர லேட் ஆகும்னு கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு தான் வரேன்" என்றவள் மீட்டிங் பற்றி கேட்டு அவர்களோடு நடந்தாள்.

அவர்களை பார்க்கும் போது எதுவும் வித்தியாசம் தெரிவதில்லை. ஆனால் இருவரும் கண்ணால் பேசி கொள்வர். அலுவலகத்தில் சிறியதாக அணைத்து கூட பேச மாட்டான் ஆரோன்.

"அவங்க ரெண்டு பேரும் ரொம்ப குளோஸ் போல.."

"வாய மூடு சிந்து.." என்று திட்டின ஹரிணி போகும் அவர்களையே பார்த்து கொண்டிருந்தாள்.

அதே போல் இன்னொரு ஜீவனும் போகும் மூவரில் ஒருத்தரை தான் காதலுடன் பார்த்து கொண்டிருந்தது.

வழக்கம் போல ஜெனி அவளின் ஹாஸ்டல் போய் விட மற்ற இருவரும் தங்கள் வீட்டிற்கு வந்தனர். இந்த மாதத்தில் அவர்களின் வாழ்க்கையில் மூன்று முக்கிய தினங்கள்.

ஆரோன் பிறந்த நாள், ஆராத்யா பிறந்த நாள், அவர்களின் திருமண நாள் மூன்றும் ஒரே மாதத்தில் தான்.

எனவே ஆராத்யாவின் பெற்றோர் அவர்களின் திருமண நாளுக்கு பெங்களூர் வருவதாக இருக்கிறது. இப்போது ஆராவின் தந்தை வாட்ச்மென் வேலைக்கு போவதில்லை. ஆரோன் கொடுத்த பிஸினஸில் கணிசமான வருமானம் வருவதால் அவருக்கு அது போதுமானதாகவே இருக்கிறது. ஆரோனுக்கு வரும் லாப பங்கை அவன் ஆராத்யாவின் பெயரில் சேமித்து வருகிறான்.

இன்று வரை சகாயம் மற்றும் ரோஸி அவர்களை ஏற்கவில்லை. ஆலன் இரண்டு முறை பெங்களூர் வந்து இவர்களை பார்த்து விட்டு சென்றிருந்தான். அவனுக்கும் ஷாலினிக்கும் நிச்சயதார்த்தம் முடித்திருந்தார்கள். அதற்கும் ஆரோனை சகாயம் அழைக்கவில்லை. மனதின் ஓர் ஓரத்தில் வலி இருந்தாலும் ஆரோன் அதை வெளி காட்டியதில்லை. அவனை அத்தனை காதலில் முத்து குளிக்க வைத்திருந்தாள் அவனின் ஆராத்யா.

நாளை ஆரோனின் பிறந்த நாள். அதற்காக கேக் செய்து கொண்டிருந்தாள் ஆராத்யா. சர்ப்ரைஸ் பண்ணுவதெல்லாம் அவர்களுக்கு இடையில் கிடையாது.

"என்ன கேக் பண்ணுற ஆரு?" என்றபடியே அவளை பின்புறத்தில் இருந்து அணைத்த படியே கேட்டான்.

"உங்களுக்கு பிடிச்ச சாக்லேட் கேக் தான் பண்ணுறேன்.."

"உனக்கு பிடிக்குற ரெட் வெல்வெட் கேக் பண்ணலாம்ல"

"நாளைக்கு உங்களுக்கு பிடிச்ச மாதிரி தான் எல்லாமே.. உங்களுக்கு மட்டுமான நாள்" என்றவள் கேக்கை ஃப்ரிட்ஜ்யில் வைத்தாள்.

"லக்கி டூ ஹேவ் யூ ஆரு.." அவள் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டான்.

"நாம ரெண்டு பேரும் அப்போ லக்கி தான்.. உங்களை மாதிரி ஒரு ஹஸ்பன்ட் எனக்கு இந்த ஜென்மத்தில் கிடச்சதே நான் செஞ்ச பாக்கியம்" என்றவள் அடுத்த வாரம் வரும் அவர்களின் திருமண நாளுக்கு வேண்டியவற்றை திட்டமிட தொடங்கினர்.

 
Last edited:

அத்தியாயம் 7

நள்ளிரவு 12 மணி. ஆரோன், ஆராத்யாவின் வீட்டு கதவு தட்டப்பட, அப்போது தான் ஃப்ரிட்ஜ்யில் இருந்து கேக்கை வெளியே எடுத்து வைத்த ஆராத்யா புருவம் சுருக்கினாள்.

"இந்நேரத்தில் யாரு வந்திருக்கா?" என்று கதவை திறக்க செல்ல அவளை பின்புறத்தில் இருந்து இழுத்தான் ஆரோன்.

"விடுங்க.. யாரோ கதவை தட்டுறாங்க.."

"டைம் பார்த்தியா நீ? நடு ராத்திரியில் யாரோ கதவை தட்டினா உடனே திறக்க போயிடுறதா? இரு நான் பார்க்கிறேன்" என்று கதவை திறக்க வெளியில் ஒரு டெலிவரி பாய் நின்று கொண்டிருந்தான்.

"நான் எதுவும் ஆர்டர் பண்ணலயே சார்.. அதுவும் இந்நேரத்துக்கு யார் அனுப்பினா?"

"ஹரிணின்னு ஒரு பொண்ணு தான் சார் ஆர்டர் போட்டிருக்காங்க.. ஸ்பெஷல் பெர்த்டே கேக் வித் மட்டன் பிரியாணி"

ஆரோனுக்கு எரிச்சலாக இருந்தது.

"இதை நீங்க ரிட்டர்ன் பண்ணுவீங்களோ.. இல்ல நீங்களே சாப்பிடுவீங்களோ.. ரெண்டு நிமிஷத்தில் இடத்தை காலி பண்ணுங்க.. எனக்கு அப்படி யாரையும் தெரியாது" என்றவன் கதவை அடைத்து விட்டு உள்ளே சென்றான்.

ஆராத்யா அவனை முறைத்து கொண்டு நின்றாள்.

"யார் ஹரிணி?"

"அக்கவுண்ட் மெயின்டெனன்ஸ் டிபார்ட்மண்ட்ல ஒரு லூசு"

"அவ எதுக்கு உங்களுக்கு கேக் அனுப்புறா?"

"ஹான்… என்னை லவ் பண்ணுறாளாம்.. நம்ம கல்யாணம் முடிந்த அன்னைக்கு நைட் புரோபோஸ் பண்ணினா.. இன்னும் நான் திரும்ப ரிப்ளே பண்ண கூட இல்ல.. இப்படி சில டைம் டார்ச்சர்" அவனின் குரலில் அதீத சலிப்பு தெரிந்தது.

"உங்களுக்கு கல்யாணமாகி ஒரு வருஷம் ஆகுதுன்னு சொல்ல வேண்டியது தானே"

"எனக்கு கல்யாணம் ஆகிடுச்சுன்னு சொன்னால் என் மனைவி யாருன்னு சொல்ல வேண்டி இருக்கும்.. உன் பேரை சொன்னால் இவ்ளோ சின்ன வயசுல நான் ஏன் உன்னை கல்யாணம் பண்ணி்கிட்டேன்னு ஒரு சர்ச்சை வரும்.. இங்க பெண் சின்ன வயசுல கல்யாணம் பண்ணினா கூட பேச்சு இல்ல.. ஆனா ஆண் சின்ன வயசுல கல்யாணம் பண்ணுனா அந்த பொண்ணு தான் பதில் சொல்ல வேண்டி இருக்கு.. உன் பேரை அப்படி யாரும் கேள்வி கேக்குற மாதிரி இருக்கிறது எனக்கு பிடிக்கல.. இந்த ஹரிணி நேர்ல வந்தா அப்போ பார்த்துக்கலாம்.." என்றவன் அவளை தள்ளி கொண்டு கேக் முன்னாடி நின்றான்.

இன்னும் ஆராத்யா சமாதானம் ஆகாததை கண்டு "ஆரு இன்னைக்கு நமக்கான நாள்.. என் பிறந்தநாளை உன்கூட சந்தோசமாக கொண்டாட நினைக்குறேன்.. அதை சோகமாக்கிடாத" என்று கெஞ்சினான்.

அவனின் கெஞ்சலில் மலை இறங்கியவள் "சரி சரி பிறந்தநாள்னு சும்மா விடுறேன்.. இனி அவ என்ன பண்ணினாலும் என்கிட்ட மறைக்காம சொல்லணும்" என்ற எச்சரிக்கையுடன் விட்டாள்.

அவளின் கைக்கோர்த்து அவனின் பிறந்தநாள் கேக்கை வெட்டினான்.

"என் கிஃப்ட் எங்க?"

அவள் ஒரு பார்சலை கொடுக்கவும் "இது என்ன இவளோ சின்னதா இருக்கு?" என்று பிரித்து பார்த்தான். அவன் கண்கள் ஆச்சர்யத்தில் விரிந்தது.

"உனக்கு உலகத்தையேவா பத்திரம் போட்டு தர முடியும்? என் கிஃப்ட் எப்படி?" என்று கண் சிமிட்ட அவளை இறுக அணைத்து கொண்டான்.

"தேங்க்ஸ் ஆரு.. பெஸ்ட் கிஃப்ட் குடுத்திருக்க.. எத்தனை நாள் ஆச்சு?"

"நாற்பத்தைந்து நாள் ஆச்சு.. நேத்து மார்னிங் தான் செக் பண்ணினேன்.. கன்பார்ம் ஆனதும் இதையே உங்களுக்கு கிஃப்ட் ஆக குடுக்கணும் தோனிடுச்சு.." அவள் குரலில் சிறிது வெட்கம் கலந்திருந்ததோ..!

"இத முதல்ல அம்மா, அப்பாட்ட சொல்லணும்" என்று அவன் கைபேசியை எடுக்கவும் "அப்போ என் அம்மா அப்பா?" இவள் மனம் சுணங்கியது.

"மாமா.. நீங்க தாத்தா ஆகிட்டீங்க" அவனின் உற்சாக குரலில் அவளுக்கு அவனை நம்பாமல் விட்டேனே என குற்ற உணர்ச்சியாய் இருந்தது.

இதுவரை அவன் அப்படி தான் எதை செய்தாலும் மாமா, அத்தை என்று ஜோஸப், மேரியிடம் ஒப்புவித்து விடுவான். அவர்களுக்கு அவன் மருமகன் என்பதை தாண்டி மகன் எனும் பதவியை என்றோ வாங்கியிருந்தான். இப்போதும் அதே சந்தோஷ தகவல் பரவல்.

"ரொம்ப சந்தோசம் தம்பி.. நாங்க அடுத்த வாரம் வந்திடுவோம்.. நாளைக்கு ஹாஸ்பிட்டல் போய் மருந்து எல்லாம் வாங்கிட்டு வந்துடுங்க" என்று மேரி சொல்ல அதை கவனமாக கேட்டுக் கொண்டான். பல மாதங்களுக்கு பிறகு மகள் நல்ல செய்தி சொன்னது அவர்களுக்கும் ஏக சந்தோசம்.

"ஹே ஆரு.. நாளைக்கு ஹாஸ்பிட்டல் போயிட்டு வந்திடலாம்.. நான் லீவ் சொல்லிடுறேன்.. நீயும் இன்பார்ம் பண்ணிடு"

"சரி ஆரோன்.."

"என்னம்மா ஸ்ருதி குறையுது?"

"சாரி நான் உன்னை தப்பா நினைச்சிட்டேன்.. அம்மா, அப்பான்னு சொன்னதும் அத்தை, மாமாக்கு தான் போன் பண்ணுறன்னு.. என் அம்மா, அப்பாவை கண்டுக்கலன்னு" அவளுக்கு நிஜமாக கஷ்டமாய் இருந்தது.

"இதில் என்ன இருக்கு ஆரு.. என்னை என்னோட பேரன்ட்ஸ் பார்த்தே ஒரு வருசம் ஆக போகுது.. நம்ம நல்லா இருக்கோமான்னு கூட தேடாத அவங்களை நான் முதலில் தேட மாட்டேன்.. பட் கண்டிப்பா இந்த நல்ல விசயத்தை சொல்லணும்" என்றவன் அடுத்து அவனின் பெற்றோருக்கு தான் அழைத்தான்.

நடு இரவில் தொந்தரவு பண்ணி கொண்டிருக்கிறோம் என்ற நினைப்பே இல்லாமல் அனைவரையும் எழுப்பி விட்டான்.

சகாயம் தான் அழைப்பை எடுத்தார். "ப்பா.." ஆரோனின் குரலில் நெகிழ்ந்தாலும் "என்ன இந்நேரத்துக்கு போன் பண்ணிருக்க?" என்று அதிகாரமாய் தான் கேட்டார்.

"அப்பா நீங்க தாத்தா ஆகிட்டிங்க" அவன் குரல் நெகிழ்ந்தது.

சகாயம் ஒரு நொடி சந்தோஷப்பட்டார். அடுத்த நொடியே "அந்த பொண்ணை விட்டுட்டு என் பையனா வரதா இருந்தா என்கிட்ட பேசு.. வேணும்னா உன் ஆசைக்காக உன் குழந்தையை நான் ஏத்துக்கறேன்" என்று சொல்ல ஆரோன் உடைந்து விட்டான்.

"ப்பா இன்னுமா கோபம் போகல? நான் காதலிச்சு ஒழுங்கா தானே கல்யாணம் பண்ணேன்.. ஒரு வருஷம் ஆக போகுது.. ஆரு வீட்ல எவ்ளோ சந்தோசப்பட்டாங்க தெரியுமா? ஆனா நீங்க சந்தோசத்தை காட்டிக்கலன்னாலும் பரவாயில்ல.. இன்னைக்கு என் பிறந்தநாள் அதுவுமா என்னை காயப்படுத்தி இருக்க வேண்டாம்" என்றவன் அலைபேசியை அணைத்து விட்டான்.

அவனின் முகத்தை பார்க்க வேதனையாக இருந்தது அவளுக்கு.

"என்ன சொன்னாங்க ஆரோன்?"

"உன்னை விட்டுட்டு போகனுமாம்.. அப்படி போனா என் உயிரே போயிடும்னு இவங்களுக்கு இன்னுமா புரியல" என்றவன் அவளின் அதிர்ந்த பார்வையை கண்டு தன் தலையில் அடித்து கொண்டான்.

"ஏதோ வாய் தவறி சொல்லிட்டேன் ஆரு.. நீ டென்ஷன் ஆகாத"

"இது உனக்கு வாய் தவறி சொல்லுறதா? இப்படியே பேசிட்டு இரு.. உனக்கு முன்னாடி நான் போயிடுவேன்.." என்றவள் அவன் "ஆரு…" என்று கதறியதையும் பொருட்படுத்தாமல் தங்கள் அறைக்குள் சென்று விட்டாள்.

ஆரோன் தான் இந்த நேரம் தன் பெற்றவர்களுக்கு அழைத்திருக்க வேண்டாமோ என்று வருந்தினான்.

அடுத்த நாள் காலை இருவரும் மருத்துவமனை சென்று பரிசோதித்து கர்ப்பத்தை உறுதி படுத்தி கொண்டனர்.

ஆரோன் மகிழ்ச்சியில் அவளை தன்னோடு இறுக அணைத்துக் கொண்டான்.

"வி ஆர் பிரக்னன்ட் ஆரு.."

"ஆமா ஆரோன்.." அவளுக்கும் மகிழ்ச்சிக்கு குறைவு இல்லை.

"இனி தான் நீ ரொம்ப கவனமா இருக்கணும் ஆரு.. முதல் மூணு மாசம் ரொம்ப ரொம்ப கவனமா இருக்கணும்.. டாக்டர் கொடுத்த மாத்திரை மருந்து எல்லாம் ஒழுங்கா எடுக்கணும்.. போகும் போது பழங்கள் வாங்கிட்டு போயிடலாம்.. இனி டெய்லி பழங்கள் நிறைய சாப்பிடணும்.. அப்போ தான் பாப்பா ஹெல்தியா இருக்கும்.."

"சரி பெரிய மனுஷா.. நீ என் கூடவே தானே இருக்க போற.. கண்ணுக்குள்ள வச்சு பார்த்துக்கோ.."

அவளின் பேச்சில் ஆரோனுக்கு வெட்கம் வந்து விட்டது.

"ரொம்ப பேசுறேனோ?"

"நீங்க இப்படி தான் பேசணும்.. இது உங்க உரிமை, கடமை, லவ் எல்லாமே.."

இருவரும் வீட்டுக்கு கிளம்பி வரும் வழியில் தேவையான அனைத்தையும் வாங்கி விட்டு அவளின் பெற்றோருக்கும் சொல்லி அவர்களின் அறிவுரைகளையும் பெற்று கொண்டனர்.

அடுத்த நாள் அலுவலகத்தில் ஜெனியிடம் தான் கர்ப்பமாக இருப்பதை பகிர்ந்து கொள்ளவும் அவள் வானத்திற்கும் பூமிக்கும் குதிக்காத குறை தான்.

"ஹே ஆரோன் ட்ரீட் வச்சிடு.." சத்தமாக சொல்ல "என்ன ட்ரீட்?" என்று அவர்கள் டீமில் உள்ளவர்கள் கூடி விட்டனர்.

ஜெனியை முறைத்த ஆரோன் "நேத்து எனக்கு பிறந்தநாள்.. அது தான் ட்ரீட் கேக்குறாங்க" என்றவன் அவர்களின் வாழ்த்துகளை பெற்று கொண்டு மதிய உணவு அவன் செலவு என்று கூறி விட்டான். இது அக்கவுண்ட் மெயின்டெனன்ஸ் வரை சென்று விட ஹரிணி நேரில் வந்தாள்.

முதல் முறை ஆரோனிடம் நேரடியாக பேச செல்கிறாள். முகத்தை கண்ணாடியில் பார்த்து ஒப்பனை செய்து கொண்டவள் சிந்துவை அழைத்து கொண்டு அவனிடம் சென்றாள்.

"ஹாய் ஆரோன்.. ஹேப்பி பர்த்டே" அவனின் முகம் பார்த்து சொல்ல அவனோ அவளை கண்டு கொள்ளாமல் "தேங்க்ஸ்" என்றான்.

"நான் நேத்து அனுப்பின பர்த்டே கேக் அண்ட் பிரியாணி எதனால் திருப்பி அனுப்பிட்டீங்க?"

"பீ இன் யூர் லிமிட் மிஸ். ஹரிணி.. நீங்க யாரு எனக்கு இதெல்லாம் அனுப்ப? என் வைஃப் கூட கொண்டாட வேண்டிய பிறந்தநாள் ரொம்ப மோசமா அமைய வச்சிட்டீங்க.. நல்லா கேட்டுகோங்க.. நான் கல்யாணம் ஆனவன்.. ஸ்டே அவே ஃப்ரம் மீ" என்றவன் ஜெனியை அழைத்து கொண்டு ஆராத்யா கேபின் வந்தான்.

"ஆரு டீம் மேட்ஸ் ட்ரீட் கேட்டாங்க.. வெளில போகலாம்.. பெர்மிஷன் வாங்கிக்கோ" என்றான்.

"சரி ஆரோன்.." ஆராத்யா டீம் லீடரை பார்க்க போகவும் ஜெனி அவனிடம் வந்தாள்.

"நீ என்னடா பொசுக்குன்னு கல்யாணம் ஆகிடுச்சுன்னு சொல்லிட்ட.. அத வச்சு ஒரு மீட்டிங்கே போடுவாங்க.."

"வேற வழி இல்ல ஜெனி.. அவளை அவாய்ட் பண்ணி தான் ஆகனும்.. இல்லன்னா ஆருக்கு டென்ஷன்.. இந்த மாதிரி நேரத்தில் அது அவளோட ஹெல்த்க்கு நல்லது இல்ல.. பேசினா பேசிட்டு போகட்டும்" என்றவன் அறியவில்லை ஹரிணி அவனின் கூற்றை நம்பாமல் எடுக்க போகும் அவதாரத்தை.

ஹரிணி தன் கேபினில் உச்சக்கட்ட கோபத்தில் இருந்தாள். சிந்து அவளை நெருங்கவே பயப்பட்டு கேண்டீன் சென்று விட்டாள்.

"அவன் எப்படி மனைவி இருக்குறான்னு சொல்லலாம்? என்னை அவாய்ட் பண்ண அவனுக்கு வேற பொய்யே கிடைக்கலையா? அவன் எனக்கு தான்.. எனக்கு மட்டும் தான்.." என்று சீறியவள் அடுத்து கொடுத்தது ஆரோனின் உயிர் வரை வலித்தது.

 
Last edited:

அத்தியாயம் 8

அடுத்த இரண்டு நாள் எதுவும் பிரச்சனை இல்லாமல் சென்றது. இன்னும் மூன்று நாட்களில் ஆரோன் - ஆராத்யா முதலாம் திருமணநாள் வருவதால் ஆராவின் பெற்றோர் பெங்களூர் வருவதாக இருந்தனர். எனவே கொண்டாடுவதற்கு தேவையான பொருட்களை வாங்கி கொண்டு வந்தனர்.

ஜெனியும் அவர்களுடன் தான் சுற்றி கொண்டிருந்தாள். அவர்களுக்கு தெரியாமலேயே ஆரோனின் டீமை சேர்ந்த சத்யாவும் அவர்களை பின் தொடர்ந்து கொண்டிருந்தான்.

"ஜெனி நம்ம டீம் சத்யா உன்னையே பாக்குற மாதிரி எனக்கு தோணுதே.. நிஜமாவா?" ஆரோன் கேட்க ஜெனி அதை அசட்டை செய்து அவனை முறைத்தாள்.

"உனக்கு இப்போ என்ன கொலைவெறிடா? அவன் லவ் பண்ணுறான் போல.. நீ முன்னாடி ஆராவை சைட் அடிப்பியே அப்படி தான்"

"நேரா லவ் சொன்னா என்ன பண்ணுவ ஜெனி?"

இதையெல்லாம் பின்னாடி ஒரு இருக்கையில் இருந்து கேட்டு கொண்டிருந்தான் சத்யா.

"லவ்வா? அதெல்லாம் எனக்கு அலர்ஜின்னு ஓட விட்டுடுவேன்… நீ லவ் பண்ணது உன் தனிப்பட்ட விசயம்.. ஆனா உன் கல்யாணம் உன் பெற்றோர் சம்மதம் இல்லாம நடந்தது எனக்கு செம கோபம்.. ஆனாலும் உன் அப்பா பண்ணினது தப்பு என்கிறதால மட்டும் தான் உன்கிட்ட பேசிட்டு இருக்கேன்.. நான் என் அம்மா அப்பா பாக்குற பையனை தான் கல்யாணம் பண்ணி லவ் பண்ணுவேன்.. உன்கிட்ட சும்மா லவ் பண்ணுன்னு சொன்னத இன்னும் நியாபகம் வச்சிருக்கியா நீ? பிச்சு பிச்சு.." என்று ஆள்காட்டி விரலை நீட்டி மிரட்ட ஆராத்யா அவளின் விரலை பிடித்து முறுக்கினாள்.

"என் முன்னாடி என் புருஷனை மிரட்டுறியா நீ?"

"ஆமா பொல்லாத புருசன்.. போடி.." என்றவள் ஐஸ்கிரீம் வாங்க ஆராவின் பர்ஸை தூக்கி செல்ல ஆரோன் சத்யாவின் முன் வந்து அமர்ந்தான்.

"ஹாய் சத்யா.."

அவனை சத்யா எதிர்பார்க்கவில்லை. "ஹா… ஹாய் ஆரோன்.."

"எதுக்கு இவ்ளோ டென்ஷன்.. அவ சொன்னத கேட்டீங்க தானே.. டைரக்டா அவ வீட்ல பேச சொல்லுங்க.. மதத்தை காரணம் காட்டி வேண்டாம் சொல்லுவாங்க.. அத நீங்க தான் ஹேண்டில் பண்ணனும்"

சத்யா இன்னும் முழுதாக வெளிவரவில்லை. "நான் இங்க இருக்கிறது எப்படி தெரியும்?"

"கூட இருக்குற பொண்ணுங்களை பாதுகாக்க எப்போவும் சுத்தியும் பார்வை இருந்துட்டு தான் இருக்கும்.. நீங்க முன்னாடியே ஃபாலோ பண்ணுறதை பார்த்தேன்.. அதான் அவ முன்னாடி பேசினேன்.. அண்ட் எங்க பிரண்ட்ஷிப் எப்போவும் பிரியாது.. நாங்க ஸ்கூல்ல இருந்தே ஃப்ரெண்ட்ஸ்.. பிரிக்க நினைக்காதீங்க"

"கண்டிப்பா உங்க கூட்டுக்குள் வர தான் எனக்கும் ஆசை.. நான் ஒரு விசயம் கேட்கவா?" தயங்கி தான் கேட்டான்.

"நீங்க என்ன கேட்க போறீங்கன்னு தெரியும்.. ஆராத்யா என் வைப்.. கல்யாணம் ஆகி ஒரு வருஷம் ஆகுது.. சூழ்நிலை காரணமாக கல்யாணம் பண்ணிட்டோம்.. வயசு வச்சு கிண்டல் பண்ணுவாங்கன்னு தான் யார்கிட்டேயும் சொல்லல.."

"ஓஹ்.. ஜெனி வீட்ல நான் என் அம்மா அப்பாவை பேச சொல்லுறேன்.. தேங்க்ஸ்.." என்றவன் ஜெனி வரும் முன் இடத்தை காலி பண்ணினான்.

ஜெனி வரவும் ஐஸ்கிரீம் சாப்பிட்டு அவளை ஹாஸ்டலில் விட்டு விட்டு வீட்டிற்கு வந்தனர்.

"ஆரோன் ஐ லவ் யூ டா.." திடீரென ஆரா சொல்லவும் அவளை விசித்திரமாக பார்த்தான் ஆரோன்.

அந்த வார்த்தை எல்லாம் அவ்வளவு சீக்கிரம் அவள் சொல்லி விட மாட்டாள்.

கட்டிலில் அமர்ந்தவன் அவளை அருகில் அமர்த்தி தோள் சாய்த்தவன் "என்ன திடீர்னு?" என கேட்க,

"சொல்லணும் தோணுச்சு.."

"புதுசா இருக்கே.. ஜெனி மேட்டர் ஆ?"

"ஹ்ம்ம்.. எனக்கு ஸ்கூல்ல இருந்தே ஒரே ஒரு பிரெண்ட் அவ தான்.. அவளும் சத்யாவை ரொம்ப நாளாக கவனிக்குறா.. அவரை பிடிக்கவும் செய்யுது.. ஆனா வீட்ல மதத்தை வச்சு பிராப்ளம் பண்ணுவாங்கன்னு ஆசையை மறைச்சிகிட்டா.. இன்னைக்கு நீங்க அவளோட ஆசைக்கு உயிர் கொடுத்து இருக்கீங்க.. இனி சத்யா அவ வீட்ல பேசுறது பத்தி பார்த்துக்குவார்"

"அவளுக்கு பிடிக்கும்ங்குறத நானும் நோட் பண்ணிருக்கேன்.. இனி அவங்க பாடு.. நீ என்னை கவனி" என்றவன் அவளோடு கட்டிலில் சரிய,

"பாப்பா.." என்று முனங்கினாள்.

"உன்னை யாரும் இங்க அதுக்கு கூப்பிடல.. என் பக்கத்துல தூங்கு" என்று தட்டி கொடுக்க, இன்றைக்கு வெளியில் அலைந்ததால் சோர்வில் தூங்கினாள்.

ஹரிணி வீட்டில் தூக்கம் வராமல் தவித்து கொண்டிருந்தாள். அவளின் தவிப்பை பார்த்த ஷீபா (ஹரிணியின் தாய்) "ஹரிமா என்ன ஆச்சு உனக்கு? இவ்ளோ டிஸ்டர்ப் ஆக நீ இருந்து நான் பார்த்தது இல்லையே" என்று கேட்டார்.

"மாம் ஐ லவ் ஆரோன்.. கம்பெனியில் கூட வேலை பார்க்கிற ஒரு பையன்.. அவன் மேல நான் பைத்தியமா இருக்கேன்.. ஆனா அவன் என்னை கண்டுக்கவே மாட்டான்.. இப்போ புதுசா கல்யாணம் ஆகிடுச்சுன்னு சொல்றான்.. எனக்கு அவன் வேணும்.. அவனுக்கு கல்யாணம் ஆகிருந்தா கூட எனக்கு அவன் வேணும்.." கிட்டத்தட்ட வெறி பிடித்தவள் போல் கத்தினாள்.

ஷீபா ஒரு நொடி அதிர்ந்து விட்டாள்.

"உண்மையாகவே அவனுக்கு கல்யாணம் ஆகிருந்தா செகண்ட் மேரேஜ் பண்ணி வைக்க முடியாது.. நீ மனசை மாத்திக்கோ ஹரி.."

"ம்ம்மா.." பெருங்குரலெடுத்து கத்தினாள்.

"எப்போவும் நிதர்சனத்தை புரிஞ்சிக்க முயற்சி பண்ணு ஹரிமா.. உனக்காக நான் அந்த பையன் கிட்ட ஒருமுறை பேசி பார்க்கிறேன்.. ஆனால் நிஜமாகவே அவனுக்கு கல்யாணம் ஆகியிருந்தா நீ அவனை மறந்துடணும்" அவர் கண்டிப்பாக சொல்ல எல்லாப் பக்கமும் தலையை அசைத்து வைத்தாள்.

அவள் மனதில் ஒரு திட்டம் வைத்திருந்தாள். அதை அடுத்தநாள் செயல்படுத்தவும் செய்தாள்.

அன்று ஆரோன், ஆராத்யா, ஜெனி மற்றும் சத்யா கேண்டீனில் மதிய உணவிற்கு அமர்ந்திருந்தனர். சத்யா அவர்களில் நண்பர் குழுவில் சேர்ந்ததை ஜெனி எதிர்த்து ஆரோனை முறைத்தாலும் அவன் கண்டுக் கொள்ளவில்லை. 'என் நண்பன் சத்யா' என முடித்து விட்டான்.

நால்வரும் சாப்பிட்டு கொண்டிருக்கும் போது அக்கவுண்ட் மெயின்டெனன்ஸ் டிபார்ட்மெண்டில் இருந்து சிந்துவுடன் தீபா என்ற பெண் அவர்களுக்கு எதிர் இருக்கையில் அமர்ந்தாள். ஹரிணி முக்கியமான வேலை ஒன்றை முடிக்க வேண்டி தன் கேபினில் இருந்ததால் இவர்கள் பேசி கொண்டே சாப்பிட்டனர்.

பொதுவான பேச்சுக்களுக்கு இடையில் "ஹேய் ஆரோனுக்கும் ஹரிணிக்கும் இடையில் லவ்வாம்.." என்று தீபா சொல்ல கேண்டீனில் சாப்பிட்டு கொண்டிருந்த ஆராத்யா இதை கேட்டு புரையேற இருமினாள்.

ஆரோன் அவர்களின் வார்த்தையை தாங்க முடியாமல் எழுந்து விட்டான்.

ஜெனி தான் "ஹே உக்காரு ஆரோன்.. ரொம்ப இன்டர்ஸ்டிங்கா போகுது.. என்ன தான் சொல்லுறாங்கன்னு பார்ப்போம்.." என்று அவனை அமர வைத்தாள்.

"ஜெனி அவ தேவை இல்லாம பேசிட்டு இருக்கா.." ஆரோன் சகிக்க முடியாமல் சீறினான்.

"ஆரோன் காம் டவுன்.. அவ எதை வச்சு நீங்க ரெண்டு பேரும் லவ் பண்றீங்கன்னு புரளியை கிளப்புறான்னு உனக்கு தெரிய வேண்டாமா? அமைதியாக கேளு"

சிந்து தீபாவின் பேச்சில் அதிர்ந்து இருக்கையை விட்டு எழும்பினாள்.

"என்னாச்சு சிந்து?"

"நீ எத வச்சு ஆரோன் ஹரிணியை லவ் பண்றாருன்னு சொல்ற?"

"ஹரிணி போன் வால்பேப்பர் ஆரோன் போட்டோ தான் இருந்துச்சு.. கேட்டதுக்கு அவங்க ரெண்டு பேரும் லவ் பண்ணுறாங்கன்னு சொன்னா" தீபா சொல்லி முடிக்கவும்,

"வாட் நான்சென்ஸ்?" என்று ருத்ரமூர்த்தியாய் அவர்கள் முன் வந்து நின்றான் ஆரோன்.

"ஆரோன்…" சிந்து திணற தீபா புருவம் உயர்த்தினாள்.

"நீங்க ரெண்டு பேரும் லவ் பண்ணுறீங்கன்னு ஹரிணி சொன்னதை தான் பேசிக்கிட்டோம்.. எங்க மேல கோபப்பட என்ன இருக்கு?"

"இப்போ ஹரிணி எங்கே?" என்று அவன் குரல் உயர்த்தவும் ஹரிணி பசிக்குது என சாப்பிட வந்தாள்.

"ஹரிணி.." தீபா அவளை நோக்கி செல்ல ஆராத்யா ஆரோனின் அருகில் வந்து அவனின் தோளைத் தொட்டாள்.

"இங்க பிரச்சனை வேண்டாம் ஆரோன்.."

அவளை மெதுவாக அணைத்தவன் "இல்லமா.. பிரச்சனை எதுவும் பண்ணல.. அவங்களுக்கு புரிய வைக்கணும்" என்று தன் இடத்திற்கு சென்றான். தீபா அவர்களின் பின்னே செல்ல ஹரிணியும் போனாள்.

அவளுக்கு தான் பற்ற வைத்த செடி பற்றி எரிவதை பார்க்க ஆசை. ஆனால் அது தன்னையே எரித்து விடும் என்று அவளுக்கு தெரியவில்லை. அவள் ஆராத்யா அவன் மனைவியாக இருப்பாள் எனும் கோணத்தில் சிறிதும் சிந்திக்கவில்லை. ஒருவேளை முன்பே தெரிந்திருந்தால் இந்நேரம் ஆராத்யா உயிரோடு இருப்பாளா என்பதே சந்தேகம் தான். அதை ஆரோனும் அறிந்து தான் இதுவரை தங்களின் பந்தத்தை யாருக்கும் சொல்லவில்லை. அதற்காக இன்னொருவள் கூட அவன் பெயர் இணைத்து பேசப்படுவதை அவனும் விரும்பவில்லை.

தன் குழுவினரை அழைத்தவன் "காய்ஸ் நாளைக்கு எங்க வீட்ல ஒரு செலிபரேஷன்.. அதனால் நாளை மறுநாள் மதியம் என்னோட ட்ரீட்.. பிளேஸ் முடிவு பண்ணிட்டு சொல்லுங்க போகலாம்" என்றான்.

"வாவ் என்ன செலிபரேஷன் ஆரோன்?" குழுவில் ஒருத்தன் கேட்க,

"என்னோட முதலாம் திருமண நாள் செலிபரேஷன்" என சிறு புன்னகையுடன் கூற அனைவருக்கும் அதிர்ச்சி கலந்த சந்தோசம்.

"ஹே கங்கிராட்ஸ் ஆரோன்.. இவ்ளோ நாள் சொல்லாம இருந்துட்டீங்களே.." என வாழ்த்துடன் குறைபட்டு கொண்டனர்.

அவர்களின் வாழ்த்துக்கு நன்றி தெரிவித்தவன் ஆராத்யா பக்கம் திரும்பி அவளை அழைத்தான். அவனின் கண்பாஷையை பார்த்த ஹரிணி அவனின் மனைவி யார் என்பதை புரிந்து கொலைவெறியில் நின்றாள். அவன் சொன்னது அவளுக்கு ஒருநொடி அதிர்ச்சியே. அதை தாண்டி அவளின் கண்களில் அவனை அடையும் வெறி தெரிந்தது.

ஆரோன் மற்றும் அவனின் நண்பர்கள் இதை கவனித்தாலும் அசட்டை செய்து நின்றனர். ஆரோனின் அருகில் வந்த ஆராத்யாவை மெதுவாக அணைத்தவன் "மீட் மை வைப் ஆராத்யா.. லவ் பண்ணினோம்.. சூழ்நிலை காரணமாக சீக்கிரம் மேரேஜ் பண்ணிகிட்டோம்" என்று அறிமுகம் செய்தான்.

அனைவரின் வாழ்த்துக்களை பெற்றவன் தீபாவின் பக்கம் வந்து "அவசியம் இல்லாம ஒருத்தி பெயரை என் பெயர் கூட சேர்த்து சொன்னால் பார்த்துட்டு சும்மா இருக்க மாட்டேன்.. நீங்க இனியும் இதை மொத்தமா பரப்பி விட கூடாதுன்னு தான் இப்போ எங்க மேரேஜ் பத்தி சொன்னோம்.. பேச முன்னாடி எல்லாம் தெரிஞ்சு பேசுங்க" என்றவன் ஆராத்யாவை அழைத்து கொண்டு சென்று விட்டான்.

அன்று ஹரிணியின் மனதில் இருந்து தன்னை தூக்கி எறிந்திருப்பாள் என்று எண்ணி அசட்டையாக விட்டது எத்தனை பேரும் வேதனையை அவன் வாழ்வில் தரும் என்பதை நினைக்க மறந்து விட்டான் ஆரோன்.

ஆராத்யாவின் பழைய நினைவுகளில் மூழ்கி இருந்தவனை அவனின் மகளின் அழைப்பு தடுத்தது.

"ப்பா.. அம்மா.." அவனின் கையில் இருந்த ஆல்பத்தை காட்டி நிது கேட்கவும் அவளை தூக்கி கொண்டவன் ஆல்பத்தை மூடி வைத்தான்.

"அம்மா தான் வர மாட்டாங்க சொல்லிருக்கேன்ல நிதும்மா.. அதை பத்தி கேட்க கூடாது"

அவனின் கண்டிப்பில் உதட்டை பிதுக்கியவள் "ம்மா.. பார்க்ல இதுந்தாங்க.. நீங்க வித்துத்து வந்துத்தீங்க" என கூற அவனுக்கு வலித்தது.

அவனின் ஆருவாக இருந்தால் இந்நேரம் அவனை தேடி வந்திருக்க மாட்டாளா? அவன் என்ன தவறு செய்து விட்டான் என்று இத்தனை பெரிய தண்டனை? மனம் வலிக்க மகளை பார்த்தான். அவளோ அவனை குற்றம் சாட்டியபடி நின்றாள்.

"மாலினி ஆன்டி வரலயா இன்னும்? போய் பாரு.."

"ஆன்தி வந்தா கூப்பிதுவாங்க.. எனக்கு அம்மா வேணும்.. பார்க் போய் கூப்பித்து (கூப்பிட்டு) வரலாம்"

"நிதுமா சொன்னா கேளு.. அம்மா வர தோணினா வருவாங்க.. இப்போ அமைதியாக இருடா.. அப்பா கொஞ்சம் தூங்கி எழும்பினா தான் நைட் வேலைக்கு போக முடியும்"

"மாத்தேன்.." கோபமாக கூறியவள் அவனின் கட்டிலின் மேல் ஏறி அமர்ந்து கொண்டாள். தூங்க இடம் கொடுக்க மாட்டாளாம்.

புன்னகையை அடக்கியவன் "சரி அப்பா தூங்கல.. ஆபீஸ் போயிட்டு அப்பாக்கு வேலை செய்ய முடியாமல் சார் அடிக்கட்டும்.. எனக்கு காய்ச்சல் வந்து ஊசி போடட்டும்.. அப்பா உன்னை எங்கேயும் விளையாட கூட்டிட்டு போக மாட்டேன்" அவன் சொல்ல உடனே எழும்பி விட்டாள்.

"ப்பா தூங்கு.." தலையணையை காட்ட அவளை தூக்கியவன் படுத்து அவளையும் அருகில் கிடத்தினான். ஆனால் மனம் முழுவதும் அவனவளை நினைத்து வலித்தது. ஆனால் அவனின் மனைவி தெரிந்தே அவனை ஏமாற்றினாள் என அறியும் போது அவளின் பொய்யை இவனின் மனம் ஏற்குமா?

 
Last edited:

அத்தியாயம் 9

பெங்களூரின் நடுத்தர மக்கள் குடியிருக்கும் பகுதியில் ஒரு சிறு வீட்டை நோக்கி சென்று கொண்டிருந்தாள் ஆராத்யா. ஆரோனின் மனைவி ஆராத்யா. அவளின் மனம் முழுவதும் வலியால் துடித்தது. கண்முன்னே கணவனும் மகளும் இருந்தும் அவர்களை உரிமை கொண்டாட முடியாத வலி. இதுவரை அவர்களை மறைந்து இருந்து பார்த்து கொண்டிருந்தவளுக்கு இன்று நேராக பார்த்தப்பின் அவர்களோடு வாழும் அவா கூடியது. வலியோடு வீட்டுக்கு வந்தவளை எதிர்கொண்டார் ஜோஸப்.

"ஆரா.." மகளின் முகத்தில் தினமும் காணும் வேதனையை பார்த்தவருக்கு மனதும் வலித்தது.

"ப்பா.." அவளை கட்டிக்கொண்டு கதறினாள் ஆராத்யா.

"ப்பா.. இன்னைக்கு நான் நிதுவை தொட்டு தூக்கினேன்ப்பா.. ஆரோன் என்னை பார்த்தார்.." என்றவளுக்கு சந்தோசத்தை கூட அனுபவிக்க கொடுத்து வைக்கவில்லை.

"அழாதடா.. அவர்கிட்ட உண்மையை சொல்லி இந்த கஷ்டம் இல்லாம வாழலாமே ஆரா.." தினமும் அவர் சொல்லும் வார்த்தை தான். ஆனால் அவளுக்கு ஆரோனை போய் சேரும் வாய்ப்பு இல்லை. அதை அவள் செய்தாலே விபரீதம் ஆகி விடுமே. பாவமாக தந்தையை பார்த்தாள்.

"ப்பா.. முடியாதே.. இன்னமும் அவர்களோட கண்காணிப்பில் தானே நாம இருக்கோம்.. இப்போ நான் நிதுகிட்ட பேசினதுக்கு கூட என்ன பண்ணுவாங்களோ" என்று அவள் சொல்லி முடிக்கும் முன் அவளின் அலைபேசி அலறியது.

"அப்பா.." அவள் கண்களில் அப்பட்டமான மரண பீதி.

ஒருமுறை அலைபேசி அடித்து ஓயவும் தந்தையை பார்க்க மீண்டும் ஒலித்தது. பயத்துடன் அழைப்பை இணைத்து காதில் வைத்தாள்.

அந்த பக்கம் பேரமைதி..

"ஹலோ…" ஆரா குரல் கொடுக்க,

"இடியட்.. உன்ன என்ன பண்ண சொல்லிருக்கேன்?" என்று கர்ஜனையாக வந்தது ஒரு குரல்.

"சார் நான் எதுவும் பண்ணல.. பிளீஸ் இந்த தடவை மட்டும் விட்டுடுங்க.. என் பொண்ணை பார்த்த சந்தோசத்தை அனுபவிச்சிக்குறேன்" அவளின் கண்ணீர் குரல் அந்த பக்கம் இருந்த நபரை சிறிதும் அசைக்கவில்லை.

"ஓ.. நீ அவன் கூட போய் வாழு.. நான் அவனை சொர்க்கத்துக்கு அனுப்புறேன்.." என்று அழைப்பை துண்டித்து விட ஆராத்யா பதறி போனாள்.

"ப்பா…" அவளால் தன் உணர்வுகளை வெளிப்படுத்த கூட முடியவில்லை.

அவளை தன்னோடு அணைத்த ஜோஸப் மகளோடு தானும் கலங்கி நின்றார்.

இந்த இரண்டரை வருடத்தில் எத்தனை பாடுகள் அவர்களுக்கு வந்து விட்டது..!

இதுவரை ஆரோன் கொடுத்த தொழிலை திரும்ப பெறவில்லை. அதிலேயே அவருக்கு கணிசமான வருமானம் வரவே அவரும் ஆராத்யாவும் தங்கள் ஜீவனத்தை ஒரு வருடம் ஓட்டினர். அடுத்த வருடத்தில் ஆராத்யா வேலைக்கு போக ஆரம்பிக்கவும் இரண்டு பேருக்கும் போதுமான வருமானம் தான்.

ஆனால் இருவருக்கும் தங்கள் துணையின் கூட வாழும் பாக்கியம் பாதியிலேயே அறுந்து போயிற்று. மேரி இரண்டரை வருடங்களுக்கு முன்பே மரித்து விட்டார்.

ஆராத்யாவுக்கு இப்போதைய நிலையில் என்ன செய்வதென்றே புரியவில்லை. அவளின் மனம் மூன்று வருடங்களுக்கு முன் சென்றது.

ஆரோன் - ஆராத்யா முதலாம் திருமண நாள். முந்தின தினமே ஜோசப் - மேரி சென்னையில் இருந்து பெங்களூர் வந்து விட்டிருந்தனர். பெரிதாக கொண்டாட்டத்தில் நாட்டமில்லாத இருவரும் தங்கள் வீட்டிலேயே எளிமையாக அலங்கரித்து இருந்தனர். ஆராத்யாவின் பெற்றோர், ஜெனி, சத்யா என சிறு குடும்பத்தோடு கேக் வெட்டி மதிய சாப்பாட்டுக்கு வெளியே சென்றனர். ஆனால் அன்று ஹரிணி செய்ய போகும் விபரீதத்தை எவரும் அறியவில்லை.

இவர்கள் கொண்டாடி கொண்டிருந்த அதே நேரத்தில் ஹரிணி அவளின் வீட்டை ரெண்டாக்கி கொண்டிருந்தாள்.

"நோ…. அவன் எனக்கு தான் வேணும்.. என்னை தான் கல்யாணம் பண்ணனும்.. டேடி நீங்க அவன் வீட்டில் பேசி கல்யாணத்துக்கு ரெடி பண்ணுங்க.. அவ செத்தா அவன் என்னை கல்யாணம் பண்ணிப்பான்ல" கிட்டத்தட்ட மனநிலை பாதிக்க பட்டவள் போல அனைத்து பொருட்களையும் உடைத்து ரகளை பண்ணினாள்.

ஷீபா எதையும் தடுக்க முடியாமல் நின்றார். அவருக்கும் அது ஆரோன் சம்மந்தப்பட்ட விசயம் என புரிந்தது. அவர் இனி அவனிடம் பேச வேண்டிய அவசியமே இல்லை என்பது போல் அவனின் திருமண விசயம் ஹரிணியால் உறுதியானது. ஆனால் அவளின் தந்தை சேகர் மகள் வெள்ளை காகம் பறக்கிறது என்றாலும் ஆம் என்பார். அத்தகைய கண்மூடி தனமான அன்பு. இப்போதும் ஆரோன் வாழ்க்கை என்ன ஆகுமோ என்று பயந்தார். அவர் விசாரித்தவரை அவன் ஓர் அமைதியான, அன்பான கணவன் மற்றும் காதலன். இவர்களால் அவனின் வாழ்க்கை சீரழியும் என்பது ஷீபா உறுதியாக நினைத்தார்.

"ஹரிமா.. உனக்கு அவன் தான் வேணும்னா நான் அவனையே கல்யாணம் பண்ணி வைக்கிறேன்.. என்ன.. இது ரெண்டாம் கல்யாணம் ஆகிடும்" என்று தயங்கினார்.

"ப்பா ஐ வான்ட் ஆரோன்.." காதல் ஒன்றும் ஆர்டர் போட்டு வாங்கும் பொருள் அல்ல என்பதை உணராமல் கத்தினாள்.

"ஓகே.. ஓகேடா நான் பேசி பார்க்கிறேன்" என்றவர் அன்றே அவனை சந்திக்க சென்றார்.

இருவரின் சந்திப்பும் ஆராத்யாவின் வாழ்க்கையில் என்ன திருப்பத்தை கொண்டு வரும் என்பதை அவர்கள் முன்பே அறிந்திருந்தால் ஆரோன் கொஞ்சம் பொறுமையாக பேசி அனுப்பியிருப்பான்.

ஜி ஆர் டி நகைக்கடையில் ஜெனி அண்ட் ஆரோன் அமர்க்களம் பண்ணி கொண்டிருந்தனர். ஆராவும் சத்யாவும் பெற்றோர்களோடு தனியாக அமர்ந்து விட்டனர்.

"டேய் ஆரோன்.. அந்த சின்ன செயினை பார்த்திட்டு இருக்க.. இந்த நெக்லஸ் செட் எடுடா.." ஜெனி சொல்ல ஆரோன் முறைத்தான்.

"அதை உன் லவ்வர்கிட்ட எடுத்து கேளு.. என்கிட்ட இது எடுக்குற அளவுக்கு தான் பணம் இருக்கு"

"நான் எதுக்கு அவர்கிட்ட கேக்கணும்?"

"அவரு… ஹ்ம்.. மரியாதை எல்லாம் வருதே" ஆரோன் சிரித்தான்.

"வயசுல நம்மள விட பெரியவங்கன்னு ஒரு மரியாதை.. நீ ஓவரா கற்பனை பண்ணாத" ஜெனி சத்யாவை பார்த்து முறைத்தாள்.

அவர்களையே பார்த்து கொண்டிருந்த சத்யாவுக்கு கொஞ்சம் பொறாமை எட்டி பார்த்தது என்னவோ உண்மை.

"என்ன சத்யா அவங்களை பார்த்து பொறாமையா இருக்கா?" ஆராத்யா மெதுவாக கேட்டாள்.

"ஹ்ம்ம்.. ரொம்ப திக் ஃப்ரெண்ட்ஸ் போல"

"எஸ்.. அவங்க ரெண்டு பேரும் ரொம்ப நல்ல நண்பர்கள்.. ஆரோன் வெளில கொஞ்சம் டஃப்பா தெரிந்தாலும் உள்ளுக்குள் ரொம்ப கேரிங் அண்ட் எமோஷனலி அட்டேச் பெர்சன்.. ரெண்டு பேருக்கும் மனசுக்குள் ஒன்னு வச்சு வெளில ஒன்னு பேச தெரியாது.. நானே அவங்களுக்கு இடையில் போக மாட்டேன்.. ஆரோன் லவ் பண்ணுறது என்னை தான் ஆனா ஜெனியை போல நான் அவனை புரிஞ்சிக்க முடியுமா தெரியல.. உங்களுக்கு ஜெனி வேணும்னா அவங்க நட்பை எப்போவும் மதிங்க" என்றாள்.

சத்யா இன்னும் அவனின் பெற்றோரிடம் அவனின் காதலை பற்றி பேசியிருக்கவில்லை. தன்னை காதலிக்காத ஜெனி ஆரோனிடம் மட்டும் சிரித்து பேசுவதை பார்த்து சின்ன பொறாமை அவ்வளவே. ஆராத்யாவை பார்த்து புன்னகைத்தவன் மீண்டும் நண்பர்களிடம் கவனத்தை செலுத்தினான்.

ஆரோன் மற்றும் ஜெனி இருவரும் சேர்ந்து ஆராத்யாவுக்கு ஒரு செயினை செலெக்ட் செய்து பின் ஜெனி அவர்களுக்காக ஒரு கப்பிள் ரிங்க் எடுத்தாள்.

"இதெல்லாம் எதுக்கு ஜெனி?"

"ஹலோ என் பிரென்ட்க்கு நான் குடுக்குறேன்.. நீ இடையில் வராத" என்று ஆரோனை தள்ளி விட்டவள் அனைத்திற்கும் பில் போட்டு வர சென்றாள்.

அனைத்தையும் வாங்கி முடித்து உணவகம் சென்று சாப்பிட்டு முடிக்கும் நேரத்தில் ஆரோன் அருகில் ஒருவன் வந்தான்.

"ஹலோ மிஸ்டர். ஆரோன்?"

"எஸ்.. நீங்க?"

"என்னை உங்களுக்கு தெரியல… நான் இந்த தொகுதி எம்.எல். ஏ சேகரோட பி. ஏ தருண். உங்களை சார் மீட் பண்ணனும்னு சொன்னார்.. போகலாமா?"

"மிஸ்டர் நீங்க யாருன்னு கூட தெரியாது.. எதை நம்பி உங்க கூட வரது? சாரி.." என்ற ஆரோன் முன்னோக்கி செல்ல அவனை தடுத்தான் தருண்.

"ஹே.. யூ.." ஆரோன் சீற,

"கூல் மிஸ்டர் ஆரோன்.. உங்களுக்கு ஹரிணி மேடம் தெரியும்ல.. அவங்க அப்பா தான் சேகர் சார்.. உங்களை தனியா பார்க்கணும் சொன்னார்.. ஓகே நீங்க வரலன்னா அவர் உங்க வீட்டுக்கு வருவார்" என்றான் தருண்.

"லெட் ஹிம் டூ கம் டூ மை ஹோம்" என்றவன் தன் குடும்பத்தை அழைத்து கொண்டு வீட்டிற்கு சென்றான். ஓரளவிற்கு எதற்கு பேச வருகிறார் என்பதை புரிந்து தான் வைத்திருந்தான். ஆனால் அதை நினைக்கவே அருவருப்பாக இருந்தது.

ஆராத்யா அவனின் தோள் தொட "ஒன்னும் இல்ல ஆரு.. இவங்களுக்கு வந்து அவமானப்பட ஆசை அவ்ளோ தான்.. நீ டென்ஷன் ஆகாத.. நம்ம பாப்பாக்கு அது நல்லது இல்ல" என்றவன் வீட்டிற்கு சென்று ஆராவின் பெற்றோருக்கும் நிலமையை புரிய வைத்தான்.

அவர்களுக்கு கொஞ்சம் பயமாகவும் இருந்தது. "பிரச்சனை வேண்டாமே தம்பி" மேரி கூற,

"அப்போ அவர் பொண்ணை கல்யாணம் பண்ண சொல்லுறீங்களா?" அவனின் முகத்தில் அத்தனை வெறுப்பு.

"ஹே ஆரோன்.. நீ இவளோ டென்ஷன் ஆக வேண்டிய அவசியம் இல்லை.. அவரால் எதுவும் பண்ண முடியாது" என்ற சத்யா கூட அங்கே தான் இருந்தான்.

அடுத்த அரைமணி நேரத்தில் தன் தனி வாகனத்தில் ஆரோனின் வீட்டிற்கு வந்திறங்கினார் சேகர்.

அவரை வாவென வரவேற்கவும் யாருக்கும் மனதில்லை. அதை அவர் எதிர்ப்பார்க்கவும் இல்லை.

அனைவரையும் ஒரு முறை பார்த்தவர் "தம்பி நான் சுத்தி வளச்சு பேச விரும்பல.. என் பொண்ணு ஹரிணி உன்னை உயிரா காதலிக்கிறா.. உனக்கு கல்யாணம் ஆயிடுச்சுன்னு சொன்னாலும் அவளுக்கு உன்னை தான் கல்யாணம் பண்ணனும் சொல்லுறா.. உன் பொண்டாட்டிக்கு ஏதாச்சும் ஜீவனாம்சம் கூட கொடுத்துக்கலாம்.. அவளை விவாகரத்து…." என முடிக்கவில்லை "போதும்…." என கத்தினான் ஆரோன்.

சேகரும் அவனின் எதிர்ப்புகளை எதிர்பார்த்தே வந்திருந்ததால் பெரிதும் அதிரவில்லை.

ஆரோன் அவரை நேராக பார்த்து "சொல்லுறேன்னு தப்பா எடுக்காதீங்க சார்.. உங்க மனைவிக்கு விவாகரத்து கொடுத்துட்டு அவங்களுக்கு வேற கல்யாணம் பண்ணி வைக்க நீங்க ஒத்துப்பீங்களா? அப்படின்னா சொல்லுங்க.. அடுத்து என்ன பண்ணுறதுன்னு நான் சொல்லுறேன்" என்று கூற,

"ஏய்…." என எழுந்து விட்டார் சேகர்.

"ஓ.. உங்க மனைவின்னா இரத்தம் கொதிக்குதோ? நீங்க உங்க மனைவியை எவ்ளோ காதலிக்கிறீங்கன்னு எனக்கு தெரியல.. ஆனா என் உலகமே இப்போ ஆராத்யா தான்.. அவளை எப்படி விட்டு கொடுப்பேன்னு எதிர்பார்த்தீங்க? உங்க பொண்ணுக்கு வேற கல்யாணம் ஆகாத மாப்பிள்ளையை பார்த்து கல்யாணம் பண்ணி வைங்க.. இதுக்கு மேல என்னை டிஸ்டர்ப் பண்ணினா போலீஸ் ஸ்டேஷனில் புகார் குடுத்துடுவேன்.. அதை அவங்க கண்டுக்கலன்னா கூட ஒரு எம்.எல். ஏ வாக உங்களுக்கு அது அவமானம்.. புரிஞ்சிருக்கும்னு நினைக்குறேன்.. இப்போ வெளில போங்க"

அவன் வாசலை நோக்கி கை காட்ட ஆத்திரத்துடன் வெளியே சென்றார்.

அவர் சென்றதும் வீட்டினுள் இருந்தவர்களை முறைத்தான் ஆரோன்.

"நாங்க என்ன பண்ணினோம்னு இந்த பார்வை இப்போ?" ஆராத்யா முணுமுணுக்க,

"ஒன்னும் பண்ணலைன்னு தான் எனக்கு கோவம்.. ஒருத்தன் உன் புருஷனை ஏலம் போட்டுட்டு இருக்கான்.. நாலு கேள்வி நாக்கை புடுங்குற மாதிரி கேட்காம பயந்து உன் அப்பா பின்னாடி போய் நிக்குற" ஆரோனின் கேள்வியில்,

"அதான் நீயே பேசி அனுப்பியாச்சே.. நான் என்ன பண்ண இனி? அவ மறுபடியும் உனக்கு முன்னாடி வந்தா கண்ணை நோண்டி போட்டுடுறேன் ஓகே.. கூல் டா புருசா" என்று கண்ணடித்தாள்.

உண்மையில் யாரும் அவரின் வருகையை சீரியசாக எடுக்கவில்லை. ஆனால் அதுவே இவர்களின் பிரிவுக்கு மிகப்பெரிய காரணமாகியது.

 

அத்தியாயம் 10

ஹரிணியின் தந்தை சேகர் ஆரோனின் வீட்டிற்கு வந்து பேசி விட்டு சென்று மூன்று மாதங்கள் ஆகியிருந்தது. அதன்பிறகு ஹரிணியின் காதல் பார்வையை தவிர்த்து எந்த தொல்லையும் வரவில்லை. பொதுவாக ஆரோன் அவளை கண்டு கொள்பவன் இல்லாததால் அந்த பார்வையும் அவனை அசைக்கவில்லை. ஆராத்யாவிற்கு இது ஐந்தாவது மாதம். அவளின் பெற்றோர் அவர்களுடன் தான் தங்கியிருந்தனர்.

அன்று காலையில் ஆரோன் எழும்பும் போதே ஆராத்யாவை பார்க்க முடியவில்லை. "எங்க போனா இவ?" என்ற யோசனையுடன் வெளியே வர மேரி மட்டும் சமைத்து கொண்டிருந்தார்.

"அத்தை ஆரு எங்க?"

அவனை திரும்பி பார்த்தவர் "பக்கத்துல இருக்கிற சர்ச்கு போயிருக்கா.. அவளோட அவ அப்பாவும் போயிருக்காங்க" என்று கூறி விட்டு சாம்பாரை தாளிக்க கருவேப்பிலை எடுக்க சென்று விட்டார்.

"இவ என்னை கூப்பிடவே இல்ல" என்று சிறு கோபத்துடன் அவர்களுக்காக காத்திருந்தான்.

ஒருமணிநேரம் அவனின் பொறுமையை சோதித்து விட்டே ஆராத்யா அவளின் தந்தையுடன் வீட்டிற்கு வந்தாள். அவளின் முகம் தாய்மையின் பூரிப்பில் இருந்தாலும் ஏதோவொரு கலக்கம்.

அவன் அறியும்முன் அதை மாற்றியவள் "ரொம்ப நேரமா வெயிட் பண்ணுறீங்களா?" என்று அவன் அருகில் வந்தாள்.

அவளை தன் அருகில் இருத்தியவன் மாமனாரை முறைத்து கொண்டே "என்னை கூப்பிட்டிருக்கலாம்ல.. எதுக்கு மாமாவை டிஸ்டர்ப் பண்ணுற?" என்று கேட்டான்.

"என் பொண்ணு எனக்கு டிஸ்டபர்ன்ஸ் இல்ல" என்று அவனை பதிலுக்கு முறைத்தவர் அவன் அருகில் அமர்ந்து "நீங்களே நைட் வொர்க் முடிச்சிட்டு வர லேட் ஆச்சுல.. அதுதான் நானே நீங்க ரெஸ்ட் எடுக்கட்டும்னு கூட்டிட்டு போனேன்.. நேத்து வயிறு பிரச்சனை இருந்துச்சுல.. சரி ஆகிடுச்சா?" என்று அக்கறையாக கேட்டார்.

"அது ஏதோ புட் பாய்சன் ஆகிடுச்சு போல.. அதுக்காக இப்போ பிரேயரா?" சிரித்தவன் "அவ்ளோ சீக்கிரம் உன்னை விட்டு பிரிய மாட்டேன் என் செல்ல ஆரு.." என அவளின் வயிற்றை தடவினான்.

"நானும் இங்க தான் இருக்கேன்.." ஜோசப் குரல் கொடுக்க,

"உங்களுக்கு அத்தை மாதிரி மேனர்ஸ் தெரியல.." என்று அவரை வாரினான்.

சிரித்து கொண்டே தனது அறைக்கு சென்றார் அவர். ஆனால் மனம் முழுவதும் வலி. அதுவும் நேற்று ஆரோனின் வயிற்று பிரச்சனைக்கு காரணமே அந்த சேகர் எனும் போது தன் மகளின் வாழ்வை நினைத்து கலக்கமாக இருந்தது.

கடந்த மூன்று மாதங்களாக சேகர் எதுவும் பிரச்சனை பண்ணவில்லை எனும் நிம்மதியில் இருக்கும் போதே நேற்று வந்த அலைபேசி அழைப்பு அதை குலைத்தது. அழைப்பு வந்தது ஆராத்யாவுக்கு தான்.

அழைப்பை எடுத்து 'ஹலோ' என்று சொல்லும் முன் "என்னமா உன் புருசன் முழுசா வீட்டுக்கு வந்துட்டானா?" என்ற குரல் சிரிப்புடன் ஒலித்தது.

"ஹலோ யார் நீங்க? ஆரோன்க்கு மட்டும் ஏதாவது ஆச்சு…" என்று அவள் சீற,

"அட ரொம்ப குதிக்காதம்மா.. வயித்துக்குள்ள இருக்குற பிள்ளை இப்போவே வெளில வந்துட போகுது.. உனக்கு நான் ஒரு ஆப்ஷன் தரேன்.. உன் புருஷனை விவாகரத்து பண்ணிட்டு போயிடு.. இல்லன்னா உன் புருசன் உயிரை எடுக்கவும் தயங்க மாட்டேன்.. இப்போ ஒரு சின்ன சாம்பிள்.. அவன் சாப்பிட்ட சாப்பாட்டில் கொஞ்சமா கெட்டு போனதை சேர்த்து வச்சிருக்கேன்.. சாப்பிட்டு அவன் புட் பாய்சன் ஆகி ஹாஸ்பிட்டல் போயிருக்கான்.. ஆனா நீ இன்னமும் அவன் கூட இருந்தா சாப்பாட்டில் விஷம் தான் வைப்பேன்.. என் பொண்ணுக்கு கிடைக்காத அவன் உனக்கும் வேண்டாம்" என்று அழைப்பை துண்டித்து விட்டார் சேகர்.

ஆராத்யாவுக்கு உயிர் போய் உயிர் வந்தது. அவளின் கணவன் என தெரிந்தும் இன்னொருத்திக்கு தாரை வார்க்க அவளால் முடியுமா? இல்லை அவனை ஏற்று கொள்ள அந்த ஹரினிக்கு தான் கூச்சம் இல்லையா?"

அவளின் பதட்டத்தில் பக்கத்தில் இருந்த ஜோஸப் என்னவென்று கேட்க விவரத்தை சொன்னவளுக்கு படபடவென வந்தது. ஆரோன் வீட்டிற்கு வரும் வரை அவளால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. அதிகாலையில் அவன் வீட்டிற்கு வந்ததும் தான் அவனின் உடல்நிலை தெரிந்தது. அவனை ஓய்வு எடுக்க சொன்னவள் எப்போதும் போகும் ஆலயத்திற்கு தந்தையுடன் சென்று விட்டாள்.

நேற்றைய நிகழ்வை ஆராத்யாவும் நினைத்து கொண்டே தன் அறைக்கு செல்ல ஆரோன் அவள் பின்னே சென்றான்.

"என்னாச்சு ஆரு? எதுக்கு இவ்ளோ டென்ஷன்?"

"ஒன்னும் இல்ல ஆரோன்.. டெலிவரி நினைச்சு ஒரு பயம்.. அது தான் அப்பாவை கூட்டிட்டு சர்ச் போயிட்டு வந்தேன்.. உனக்கு இப்போ ஹெல்த் ஓகே வா?" அவள் கண்களில் கலக்கம் தெரிந்தது.

"எனக்கு ஒன்னும் இல்ல ஆரு.. நேத்து ஆலன் என்னை பார்க்க ஆபீஸ் வந்திருந்தான்.. அவன் கொண்டு வந்த புலாவ் சாப்பிட்டேன்.. ஒத்துக்கல போல" எனவும் ஆராத்யா அதிர்ந்தாள்.

"அவங்களா? அவங்க… அவங்க எதுக்கு வந்தாங்க?"

"ஹே.. கூல் ஆரு.. அவனுக்கும் ஷாலினிக்கும் கல்யாண தேதி குறிக்க போறாங்களாம்.. அப்பாகிட்ட நம்மள பத்தி சொல்லும் போது அவனை வந்து சொல்ல சொல்லிருக்காங்க.. அது தான் பார்க்க வந்தான்.."

"வேற ஒன்னும் இல்லல.."

"உன்னையும் என்னையும் யாராலும் பிரிக்க முடியாது.. நீ எதயும் நினைச்சு டென்ஷன் ஆகி அது பாப்பாவை பாதிக்க கூடாது.. நாளைக்கு உனக்கும் ஷிஃப்ட் இருக்குல்ல.. சோ இன்னைக்கு முழுசா ரெஸ்ட் எடு.. நான் நாளைக்கும் சேர்த்து டபிள் ஷிஃப்ட் பாக்குறேன்" என்றவன் அவளை அணைத்து படுத்து விட்டான்.

ஆனால் ஆராத்யாவின் மனது ஹரிணி மற்றும் அவளின் தந்தையை நினைத்து பதறியது.

அடுத்த நாள் அலுவலகத்தில் ஆரோன் தன் இரவு பணியை முடித்து விட்டு ஆராத்யாவுக்காக பகல் பணியையும் தொடர, ஹரிணி அப்போது தான் லாகின் பண்ணியிருந்தாள். அவளும் சிந்துவும் டீ குடிக்கலாம் என கேண்டீன் வரும் போது ஆரோன் ஆராத்யாவுடன் சாப்பிட்டு கொண்டிருந்தான். அதை பார்த்ததும் ஹரிணிக்கு கோபம் தலைக்கேறியது. சிந்து தான் பயந்து விட்டாள்.

"ஹரிணி வா நாம அப்புறம் வரலாம்"

"நாம எதுக்கு சிந்து உள்ளே போகனும்?" என்று ஒரு மாதிரியாக சிரித்தவள் ஆரோன் இருந்த இருக்கையின் முன் பக்க இருக்கையில் அவனை பார்த்த படி அமர்ந்து கொண்டாள்.

அவர்கள் இருவரும் சாப்பிட்டு முடித்து விட்டு எழவும் கொஞ்சம் தள்ளி அமர்ந்தவள் தன் காலை நீட்டி வைத்திருந்தாள். ஆராத்யா ஆரோனின் கைப்பிடித்து வந்து கொண்டிருந்தவள் திடீரென ஹரிணியின் கால் பட்டு தடுமாறினாள். ஆனால் நேராக நின்று விடவும் ஹரிணி நக்கலாக சிரித்தாள்.

ஆரோன் அதைக்கண்டு திட்ட போக "ஒன்னும் ஆகலைல ஆரோன்… நாம போகலாம்" என்று அவனை அழைத்து சென்று விட்டாள். ஆரோன் அவளையும் சேர்த்து முறைத்து விட்டே கூட சென்றான்.

"ஆரு அவ வேணும்னு தான் காலை நீட்டி வச்சிருந்தா.."

"தெரியும்.. இப்போ நீங்க அவகிட்ட கோபப்பட்டு கை நீட்டிட்டா உங்களுக்கு தான் பிரச்சனை.. இனி இப்படி நடக்காது" என்றவள் அதன்பிறகு வந்த நாட்களில் சத்யாவும் ஜெனியும் வரும் நேரம் அவர்களுடன் இணைந்து கொண்டாள். இது ஆரோனுக்கு கோபம் வரவழைத்தாலும் அவனுக்கும் இரவு பணி என்பதால் விட்டு விட்டான்.

ஆனால் ஹரிணி அவன் கோபப்படாததை தனக்கு சாதகமாக எடுத்து கொண்டாள்.

இது ஆரத்யாவுக்கு ஏழாம் மாதம். வளைகாப்பு எதுவும் வைக்கும் சம்பிரதாயம் அவர்களுக்கு இல்லாததால் வழக்கம் போல் அவர்கள் நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தது. ஜோஸப், மேரி இருவரும் ஒரு அவசர வேலை விசயமாக சென்னை வந்திருக்க, ஆரோன் ஆராத்யாவை கண்ணுக்குள் வைத்து தாக்கினான் என்று தான் சொல்ல வேண்டும்.

அன்று ஒருவாரம் துவைக்காமல் இருந்த துணிகளை எடுத்து அவனிடம் கொடுத்து துவைக்க சொல்லிக் கொண்டிருந்தாள் ஆராத்யா.

"ஹே என்னடி இப்படி பண்ற? நான் உன் புருஷன்டி.. என்னை பார்த்தா உனக்கு பாவமா இல்லயா?" துணி துவைக்க சொன்னவளை பாவமாக பார்த்தான் ஆரோன்.

ஆராத்யாவோ "நீ எல்லாம் என்ன புருஷன்? அவன் அவன் பொண்டாட்டி கேட்டா என்னென்னவோ பண்றான்.. மாசமா இருக்குற பொண்டாட்டி ஆசை பட்டு கேக்குற ஒரு வேலையாச்சும் பண்றியா நீ.. யூ டூ பேட் புருஷா.." என்று முகத்தை திருப்பி கொள்ள அவளின் சிணுங்கலை ரசித்தவன் அவள் அருகில் வந்து மண்டியிட்டான். இந்த ஆராத்யா அவனுக்கு புதிதாக இருந்தாள்.

"பேபி உன் அம்மாவுக்கு இவ்ளோ கோபம் ஆகாதுடா.. கல்யாணம் ஆன புதுசுல 'வாங்க போங்க' ன்னு மரியாதையா பேசிட்டு இருந்தா.. அப்புறம் அது போய் 'வா போ' வந்துச்சு.. இப்போ புருஷனை துணி துவைக்கலைனா டிவோர்ஸ் பண்ணிடுவா போல.. நீயும் கேட்டுட்டு இருக்கியே.. அப்பாவ கொடுமை படுத்துற இந்த பேட் மம்மிய அடி கொடுக்கணும் பேபி" என்று கூறவும் தந்தையின் புலம்பலை காண சகிக்காத அந்த சின்ன சிசுவும் தாயின் வயிற்றில் உதை விட "அடி பாவி" என்று செல்ல கோபத்தில் அவனின் தலையில் குட்டினாள் ஆராத்யா.

"ஒரு வேலை சொன்னது கஷ்டமா? என் புருசனுக்கு வர வர சோம்பேறி தனம் அதிகமா போயிடுச்சு" என்று புலம்பியவள் குனிந்து துணிகளை எடுக்க முயற்சிக்க அதை தடுத்த அவள் கணவன் தன் கைகளில் அள்ளி கொண்டான்.

"எனக்காகவே பல வருசமா காதலை மனசுக்குள்ள புதைச்சு வச்சு எனக்கு மட்டுமே கொடுத்த என் செல்ல மனைவிக்காக இந்த வேலையை கூட பண்ண மாட்டேனா? நீ போய் உக்காரு செல்லம்.. இன்னும் அரைமணி நேரத்தில் இந்த வேலை முடிஞ்சிடும்" எனவும் அவன் நெற்றியில் அழுத்தமாக முத்தமிட்டவள் தன் ஏழுமாத மேடிட்ட வயிற்றை பிடித்து கொண்டு பக்கத்தில் இருந்த இருக்கையில் அமர்ந்தாள்.

அவளின் மனதில் இப்போது ஹரிணி எல்லாம் இல்லை. அவளை பார்த்தாலும் கண்டு கொள்ள மாட்டாள். ஆனால் அவளின் விஷம் இவர்களை கொல்ல காத்துக் கொண்டிருந்தது.

துணிகளை துவைத்து முடித்தவன் தன்னையே ரசித்து கொண்டிருந்த மனைவியின் அருகில் வந்தான்.

"நான் வேலையை முடிக்கவே ஒருமணி நேரம் ஆச்சு.. நீ இன்னும் வச்ச கண்ணு எடுக்காம பார்த்திட்டு இருக்க?"

"என் புருசன்.. என் கண்ணு.. நான் பாக்குறேன்"

"அது சரி.. எம்.பில் போடுற ஐடியா இருக்கா?"

"போடணும் ஆரோன்.. டெலிவரி ஆகட்டும்னு வெயிட் பண்ணுறேன்.."

"இப்போவே ஜூன் ஆயாச்சு.. இந்த டைம் போட்டு விடு.. பேபி வந்த அப்புறம் படிக்க சரியா இருக்கும்.. ஒரே செட்ல முடிச்சா தான் உனக்கும் போர் அடிக்காது" என்றவன் அவளின் தோள் மேல் கைப்போட்டு தன் பக்கம் சரித்தான்.

"என்ன புருஷா?"

"நீ ஏதாச்சும் என் கிட்ட மறைக்குறியா ஆரு?"

அவனின் அந்த கேள்வியில் தானாக வியர்த்தது. அதை அவனும் கவனித்தான்.

"அது… அது வந்து.." அவள் திணற,

"ஹே.. கூல்.. கூல்.. உனக்கா சொல்ல தோணும் போது சொல்லு போதும்.. இப்போ டென்ஷன் ஆகாத.. அடுத்து என்ன பாத்ரூம் கிளீனா?" அவளை சகஜமாக்க கேட்டான்.

"ஹம்.. கழுவி விட்டுறு.. எனக்கு வேலை மிச்சம்"

"ஹம்.. புருஷன்னு நான் அடிமை இருக்கேனே.." என்று சிரித்தவன் முகமும் யோசனையாக தான் இருந்தது.

அந்த நேரம் அவனுக்கு ஆலன் அழைப்பு விடுத்தான்.

அழைப்பை எடுத்தவன் "சொல்லு ஆலன்.." என்று சொல்லவும் ஆராத்யா பதறினாள்.

"........"

"ஹே கங்கிராட்ஸ் பிரதர்.. எப்போ கல்யாண தேதி?"

"........"

"வாவ்.. அப்போ கிறிஸ்துமஸ் உனக்கு தலை கிறிஸ்துமஸ்ன்னு சொல்லு" என்றவன் குரலில் மிகவும் சந்தோசம்.

"....."

"நான் வீட்ல தான் இருக்கேன்.. நீ வா…" என்றவன் முகம் கொள்ளாப் புன்னகையுடன் அழைப்பை துண்டித்தான்.

"என்ன விசயம் ஆரோன்.. முகமே டாலடிக்குது?"

"ஆலனுக்கு கல்யாண தேதி குறிச்சிட்டாங்களாம் ஆரு.. அடுத்த மாசம் இருபதாம் தேதி முகூர்த்தம்.."

"வாவ் ரொம்ப சந்தோசம்.. எப்போ வராங்களாம்?"

"இன்னும் ரெண்டு மணி நேரத்தில் இங்க இருப்பான்.. இங்க ஒரு கிளையண்ட் விசயமா வந்திருக்கானாம்.. சாப்பிட ஏதாவது பண்ணனும்" என்றவன் அவசரமாக உணவு தயாரித்தான்.

ஆனால் ஆராவின் மனதில் எதோ உறுத்தியது. ஆரோனின் பெற்றவர்கள் அவர்களை ஏற்று கொள்ளவே மாட்டார்களா என்று மனம் ஏங்கியது. எனினும் ஆரோனின் சந்தோஷத்திற்காக ஆலனை எதிர்பார்த்து அமர்ந்திருந்தாள்.

 
Last edited:
Status
Not open for further replies.
Top