எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

எனக்குள் வந்து வீழ்ந்தவளே (NM PART 2 VERSION) - கதை திரி

Status
Not open for further replies.

Shalini shalu

Moderator
அறிவிப்பு :

ஹாய் ஃப்ரண்ட்ஸ்!

"எனக்குள் வந்து வீழ்ந்தவளே!" - நங்கையின் மறவோன் பாகம் 2 எழுதப் போகிறேன்.

இது குறுநாவல் தான். ஏனெனில் , கிஷான் மற்றும் முக்தாவைப் பற்றி பாகம் 1 - லேயே வாசித்து விட்டோம். மே - ஆம் தேதியன்று முதல் அத்தியாயம் பதிவிடப்படும்.

அதனால் அவர்களுக்கிடையேயான நட்பு , மோதல் இவற்றையெல்லாம் இந்தப் பாகத்தில் பார்ப்போம்.

இறுதியில் , இவர்கள் மற்றும் மஹதன் , மௌனா ஜோடியின் திருமண வைபவத்தைப் பற்றிக் காண்போம். மே - 8 ஆம் தேதியன்று முதல் அத்தியாயம் பதிவிடப்படும்.

கதையில் எதுவும் விட்டுப் போகாமல் முழுமையாக முடித்து வைத்து "சுபம்" போட்டு விடுவேன். அதனால் நம்பி வாசியுங்கள்! கருத்து தெரிவியுங்கள்!

நன்றி 🙏🙏🙏🙏


IMG_20230421_130048.jpg
 
Last edited:

Shalini shalu

Moderator
நங்கையின் மறவோன் கதையின் முதல் பாகம் 👇

முழுக் கதை திரி :


 
Last edited:

Shalini shalu

Moderator
வணக்கம் நண்பர்களே! இந்தக் கதையை வாசிக்க விருப்பமுள்ளவர்கள், இதன் முதல் பாகமான,"நங்கையின் மறவோன்" கதையை வாசித்து விட்டு இதை தொடருங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன். நன்றி 💞

💞💞💞💞

அத்தியாயம் 1

மாடியில் நின்று கொண்டு, பால்கனி வழியாகப் , பகலவனைக் கண்களால் பருகி கண் கொண்டு , காஃபியை வயிற்றுக்குக் கொடுத்துக் கொண்டிருந்தாள் முக்தா.

விரைவாகவே துயில் கலைந்து எழுந்து விடுபவள் தான்.

இரவு உடையை மாற்றும் நினைவு இன்றி , காஃபியின் மணமும், சுவையும் அவளைப் பிடித்து வைத்துக் கொண்டது.

"முகி!" என்ற தந்தையின் அழைப்பில், தலையைத் திரும்பினாள் அவர்புறம்.

"குட்மார்னிங்! இன்னைக்கு சீக்கிரம் போகனும் டா" என்று கனிவுடன் மகளிடம் கூறினார் நீலகண்டன்.

"ஏன் அப்பா?" என்றாள் அவரது செல்ல மகள்.

"மூர்த்தி தான் வர சொல்லி இருக்கான். போனா தான் தெரியும். நீ ஃப்ரெஷ் ஆகிடு" என்று கூறினார் தந்தை.

"ம்ம்! சரிங்க ப்பா"

"மறக்காமல் லன்ச் சாப்பிட்ருங்க! நான் கொடுத்து விட சொல்றேன்" என்கவும்,

"இல்லைடா. ஹோட்டலில் அரேன்ட்ஜ் செய்து இருக்கிறதா மூர்த்தி சொல்லி இருக்கான். நான் அவன் கூட தான் மதியம் சாப்பிடப் போறேன்" எனக் கூற,

"சாப்பிட்டுட்டு மெசேஜ் செய்திடுங்க அப்பா" என்று மட்டும் கூறி தந்தையை வழி அனுப்பினாள் முக்தா.

காலியானக் கோப்பையைக் கழுவப் போட்டவள், துவாலையை எடுத்துக் கொண்டு, குளித்து விட்டு வந்தாள்.

வேலையாட்களிடம் அதிகம் பேச மாட்டாள், அவர்கள் தங்களது வேலையைச் சரியாகச் செய்தாலே போதும் என்று உத்தரவிட்டு இருந்தாள் முக்தா.

காலையுணவு மேஜையில் தயாராகி இருக்க , நாளிதழைப் புரட்டிக் கொண்டு அதைக் கொறித்து முடித்தாள்.

மஸ்காராவைக் கொண்டு கண்களின் இமைகளை அழகாக தீட்டி முடித்தவள், அணிந்திருக்கும் உடையை ஆராய்ந்தாள்.

ஜீன்ஸூம் , டீ ஷர்ட்டும் அவளது உடலை மறைத்திருக்க, அதற்கேற்றாற் போல், அணிகலன்கள் அலங்கரித்திருந்தது அவளை.

பிங்க் வர்ண உதட்டுச் சாயத்தின் அளவைக் கொஞ்சம் தூக்கலாக்கிக் கொண்டு, வீட்டிலிருந்து காரில் கிளம்பினாள் முக்தா.

தோழிமார்களுடன் நேரத்தைச் செலவழிக்கத் தான் பயணித்துக் கொண்டிருந்தாள்.

உணவகம் ஒன்றில் குழுமியிருந்த நான்கு பெண்களும், ஐந்தாமவளுக்காகக் காத்திருந்தார்கள்.

"ஹேய்! முகியோட அப்பா நீலகண்டன் இருக்காருல்ல? அவரோட ஃப்ரண்ட் பையன் மஹதனைத் தான் அவ லவ் பண்ணிட்டு இருக்கிறா!" என்று லிஷா என்பவள் கூறிக் கொண்டு இருந்தாள்.

"மஹதனா? நானும் அவனைப் பத்திக் கேள்விப்பட்டிருக்கேன்" என்றாள் ஜியா.

"ஆனால், அவன் இவளைக் கண்டுக்கிறா மாதிரியே தெரியலை" என்று கூறினாள் ஹீமா.

"அதையும் சொல்லியாச்சு. அவ கேட்கிறாகவே இல்லை. கேட்டால், லவ்!" என்று சலித்துக் கொண்டாள் ஷீலா.

இப்படியாக, நான்கு பேரும் பிரித்து மேய்ந்து கொண்டிருந்த தோழியும் அங்கு வந்து சேர்ந்தாள்.

"என் கதை தான ஓடுது?" என்றபடி தன்னுடைய குளிர் கண்ணாடியைக் கழட்டி விட்டு, நாற்காலியில் அமர்ந்தாள் முக்தா.

"ஆமாம். எங்களுக்குப் பொய் சொல்ல அவசியமில்லை முகி!" என்று துடுக்காக கூறினாள் ஹீமா.

"அப்படியா? எனக்கும் உங்களோட அட்வைஸைக் கேட்கனும்னு எந்த கட்டாயமும் இல்லையே!" என்று அவள் பாணியிலேயே திருப்பிக் கொடுத்தாள்.

"இது ஒன்னும் பெருமை கிடையாது முகி!" என்று அவளைக் கடிந்து பேசினாள் லிஷா.

"உஃப்! ப்ளீஸ்! நான் ஹேப்பியா இருக்கலாம்னு வந்தால், வரிசையாக அட்வைஸைத் திணிக்கிறீங்களே!" என்று ஆற்றாமையுடன் கூறினாள் முக்தா.

"நாங்க சொல்றதை சொல்லிட்டோம் முகி! இதுக்கும் மேல் நீ ட்ரை பண்றது வேஸ்ட்!" என்று அடித்துச் சொன்னாள் ஜியா.

"அப்படியே இருந்துட்டுப் போகட்டும். இன்னொரு தடவை அசிங்கப்படுத்துற மாதிரி பேசினால், நம்ம ஃப்ரண்ட்ஷிப் கட் ஆயிடும். பாத்துக்கோங்க!" என்ற முடிவுடன் அவள் கூறி விடவும்,

"என்னமோ போ முகி. நாங்க சொல்றது இப்போ புரியாது. பட்டுத் தெரிஞ்சுக்கோ!" என்றவாறே பேச்சை மாற்றி விட்டனர் மற்ற நால்வரும்.

அதற்குப் பிறகு, தங்களுக்கான உணவுகளை வரவழைத்து உண்டனர்.

"அப்படி மஹதன் உன்னை ஹர்ட் பண்ணினால், தயங்காமல் எங்ககிட்ட வந்து பேசு முகி! ஈகோ பார்த்துட்டு வராமல் இருந்துடாத!" என்று அறிவுரை வழங்கினர் அவளது தோழிகள்.

"அப்படி சொன்னால் மட்டும், மனசுக் கஷ்டப்படுறா மாதிரி தான பேசுவீங்க!" என்று ஏளனமாக கேட்டாள் முக்தா.

"நாங்க அந்த அளவுக்குக் கேவலமானவங்க இல்லை. இப்போ நீ தான் எங்களைக் கஷ்டப்படுத்திட்டே. இனிமேல் நாம் மீட் பண்ண வேண்டாம்" என்று காயம்பட்டவர்கள் அங்கிருக்கவும், அவளிடம் நின்று பேசவும் பிடிக்காமல் வெளியேறினர்.

தன்னுடைய நான்கு தோழிகளும் பாதியிலேயே கிளம்பி விட்டதைக் கண்டு, தொய்ந்து போனாள் முக்தா.

அவளுக்குள் இருந்த இறுமாப்பு நால்வரையும் தடுத்து நிறுத்த விடவில்லை.

அமைதியாக வீட்டிற்குச் சென்று, தந்தைக்குத் தான் செல்பேசியில் அழைப்பு விடுத்தாள்.

"முகி" என்ற தந்தையின் விளிப்பைக் கேட்டதும், எங்கிருந்து தான் புத்துணர்வு வந்ததோ!

"அப்பா! ஆஃபீஸில் இருக்கீங்களா?" என்று வினவினாள் முக்தா.

"ஆமா டா. என்ன விஷயம்?"

"வொர்க் முடிஞ்சு எப்போ வீட்டுக்கு வருவீங்கப்பா?" என்றாள் மகள்.

"வர நைட் ஆகுமே. ஈவ்னிங் மூர்த்தியைப் பார்த்துப் பேசனும்" என்று கூறினார் நீலகண்டன்.

"ஓகே ப்பா" என்றவள், தந்தையிடம் எதுவும் சொல்லாமல், சாதாரணமாகப் பேசி விட்டு வைத்தாள் முக்தா.

தன்னைச் சுத்தப்படுத்திக் கொண்டு, சமையலறைக்குள் போய், அங்கிருந்த வேலையாட்களிடம்,

"எல்லாரும் வெளியே போங்க. நான் காஃபி போடனும்" என்று உத்தரவிட்டாள்.

இந்த வீட்டில் இதெல்லாம் பழக்கம் தான். முக்தா தன் மனதை நிலைப்படுத்திக் கொள்ளச் செய்யும் ஒரு சில வேலைகளில் இதுவும் ஒன்று.

அவளுக்குச் சமையல் நன்றாகவே வரும். மேற்கத்திய உணவுகள் மட்டுமில்லாமல், இந்திய உணவுகளும் அத்துப்படி.

காபியைப் பருகிக் கொண்டவள், மஹதனுக்குச் செல்பேசியில் அழைத்தாள்.ஆனால், வழக்கம் போல, அவன் அதை ஏற்றுப் பேசவில்லை.

முக்தாவின் தோழிகள் சரியான சமயத்தில் தான் அவளுக்கு அறிவுரை கூறியுள்ளனர். ஆனால் அதைப் பின்பற்றுவது அவளுடைய தனிப்பட்ட விருப்பம் அல்லவா! இப்போதே அவர்கள் கூறியதைச் செவிமடுத்து இருந்தால், எதிர்காலத்தில் படப் போகும் அவமானங்களில் இருந்து , முக்தா தன்னைக் காப்பாற்றிக் கொண்டிருக்கலாம்.

தாயின் வளர்ப்பு இல்லை தான்! தந்தையும் சுதந்திரத்தை அளவுக்கதிகமாக கொடுத்திருக்கிறார் தான். ஆனாலும், தனக்குரிய கட்டுப்பாடுகள் என சிலதை வகுத்துக் கொண்டுள்ளாள்.

'ஸ்டேட்டஸ்' - பணம் பிரதானமாக இருக்கும் பட்சத்தில், நமக்குத் தான் மற்றவர்கள் வளைந்து கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் அவளுக்குள் வேரூன்றி இருந்தது.

அதனால், மற்றவரிடம் பேசக் கூடாத ஒரு சிலவற்றைப் பேசிக் காயப்படுத்தி விடுவாள் முக்தா.

இந்தக் குணங்கள் நல்லது என ஒருநாளும் சொல்லவில்லை.
மாற்றிக் கொள்ளும் தருணம் கட்டாயம் வர வேண்டும். அப்படி வரும் போது, என்று சில ஞானோதயங்களும் முக்தாவிற்கு அவள் கேட்காமலேயே கிடைக்கப்படும்.

அன்றைய சமூக வலைதளங்களை ஆராய்ந்தவாறே பொழுதைக் கழித்தாள் முக்தா.

இந்தக் கதையின் நாயகன் கிஷான் அல்லவா! அவனுடைய அறிமுகத்தைப் பற்றிப் பார்ப்போம்.

கிஷானுடைய தந்தை காஞ்சியப்பன் மஹதனின் அப்பா திருமூர்த்தியைப் போல வசதி படைத்தவர் தான்.
ஆனாலும் , தொழிலில் அபார வளர்ச்சி அடைந்த போதும் , அதற்கேற்ப குணத்தை மாற்றிக் கொள்ளாமல் , முன்னர் இருந்த அதே நிலையிலேயே இன்றும் அவரது துறையில் வெற்றிகரமாக கோலோச்சிக் கொண்டிருக்கிறார்.

அவரது துணைவி சித்ரலேகாவும் கணவனின் தொழிலிலும் , மகனின் தொழிலிலும் பங்குதாரராக இருக்கிறார்.

"நீயும், நானும் பார்ட்னர்ஸ்ன்னு தான் பேரு. ஆனா, நான் மட்டும் தான், ரெகுலராக இந்த ஹோட்டலுக்கு வந்துட்டு இருக்கேன்!" என்று குறைபாட்டான் கிஷான்.

"அதனால் என்னடா? நானும் வரனும்னா சொல்லு! தினமும் வந்துடறேன்" என்று நண்பனிடம் கூறினான் மஹதன்.

"தினமும் வர வேண்டாம். எப்போதாவது வரலாமே டா? அப்படியே என்கூட பேசிட்டுப் போன மாதிரியும் இருக்குமே!"

"ம்ம். இது ஓகே. வாரத்துக்கு ஒரு தடவை வர்றேன் கிஷான். அதுக்கு மேல வர சொல்லாத. புரிஞ்சுக்கோ" என்க,

"சரி மஹத்! நீ வந்து ஹோட்டலைச் சரி பார்த்துட்டுத் போயிடு. எனக்கும் திருப்தியாக இருக்கும்"

தங்கும் விடுதி ஒன்றில் இருவரும் பங்குதாரர்கள் தான்.

அதில், கிஷான் மட்டும் நாள் தவறாமல், விடுதிக்கு வந்து, தனது முதலாளித்துவத்தைக் காட்டிக் கொள்வான். நேர்மையாகத் தான் ஒவ்வொன்றையும் அவன் நடத்துவதால், இன்னொரு உரிமையாளனான மஹதனுக்கு அதிக வேலையே இருக்காது. அதனால், விடுதியை எட்டிக் கூடப் பார்க்காமல் இருக்கிறான்.

அவன் அப்படியே இருந்து விடுவது முறையன்று, என அடிக்கடி வந்து மேற்பார்வையிட்டுச் செல்லுமாறு வலியுறுத்திக் கொண்டிருக்கிறான் கிஷான்.

"உங்கிட்ட இன்னொரு விஷயமும் பேசனும்டா!" எனவும்,

"சொல்லு மஹத்?" என்று அதைக் கேட்கத் தயாரானான் தோழன்.

"நீலகண்டன் சாரோட பொண்ணு முக்தாவை உனக்குத் தெரியும் தான?" என்று கேட்டான்.

"ம்ஹ்ம்! தெரியுமே! அவங்களைப் பத்தி நீயே சொல்லி இருக்கியே! அவரே எனக்கு இன்ட்ரோ பண்ணிருக்காரே!" என்றான் கிஷான்.

"அந்தப் பொண்ணுக்கு என் மேல் லவ் இன்ட்ரெஸ்ட்!" எனக் கூறவும்,

"உனக்கு ஓகேன்னா அக்சப்ட் பண்ணு" என்று இயல்பாக கூறினான்.

"இல்லையே டா. அங்கிளோட பொண்ணு, ஃப்ரண்ட்ஷிப் மெயின்டெய்ன் பண்றதுக்கு எனக்கு இஷ்டம் தான். காதல்ன்னு யோசிக்கலையே" என்று தன் எண்ணத்தைக் கூறி விட்டான் மஹதன்.

"அதை அவங்ககிட்ட சொல்லிட்டியா?"

"எப்பவோ சொல்லிட்டேன். மாறுவ, என் மேல் லவ் வரும்னு வெயிட் பண்றாங்க"

"ஓஹ்! நீயும் மாறிடும் போலவே?" எனக் கேட்கவும் மறக்கவில்லை கிஷான்.

"என்ன மாறனும்? அவங்க புரபோஸ் செய்ததை, நான் குறை சொல்லலை. எனக்கும் இஷ்டம் இல்லை. அப்பறமும் காத்திருக்கிற அளவுக்கு நான் அவ்ளோ பெரிய அழகன் கிடையாதே!"

"நீ அழகன்னுப் பார்த்து தான் அவங்க லவ் பண்ணாங்கன்னு உன்கிட்ட சொன்னாங்களா? சம்திங் உன்னோட கேரக்டர் பிடிச்சு இருக்கலாம். அதனால் லவ் வந்திருக்கலாம்!" என்று புரிய வைத்தான் கிஷான்.

"கண்டிப்பாக இருக்கும். நான் அதை மறுக்கலைடா. இப்போ டைரக்ட் ஆக சொன்ன பிறகும், எதிர்காலத்தில் நடக்கும்னு, காத்திருக்கிறது முட்டாள்தனம் தான?" என்று வினவினான் மஹதன்.

"ஆமாம். நீ நம்பிக்கை கொடுக்காமல், இப்படி வெளிப்படையாகச் சொன்னதே போதும். நீ அவங்களை ஏமாத்தலை. முக்தாவும் புரிஞ்சு, தன்னை மாத்திக்கட்டும்"

தங்கும் விடுதியில் செய்ய வேண்டிய எதிர்காலத் திட்டங்களைப் பற்றி விரிவாகப் பேசி விட்டுக் கிளம்பினர் இருவரும்.

- தொடரும்
 
Last edited:

Shalini shalu

Moderator
ஃப்ரண்ட்ஸ்! முக்தாவோட கேரக்டர் பாகம் 1 இல் இருக்கிற மௌனா மாதிரியான ஹீரோயின் கிடையாது. இந்தக் கதையில் வர்றது முக்தாவோட கடந்தகால குணாதிசயங்கள் தான்!

நன்றி 💞

🌸🌸🌸

சுற்றியிருந்த மற்றவர்களும் திருமூர்த்தியின் மேலிருந்த விசுவாசத்தில் அவர் கூறியதை நம்பி விட்டனர்.

அவரும் தன் கம்பெனியில் முக்கியப் பதவிகளில் வகிப்பவர்களை ஏமாற்றும் நோக்கத்தில் செயல்படவில்லை.

தரம் நன்றாக இருக்கும் பொருளைத் தான், தயாரிக்கும் யோசனையை முன் வைத்திருந்தார் திருமூர்த்தி.

அந்த மீட்டிங்கின் முதன்மைப் பேச்சே அதைப் பற்றியது தான்!

"எங்களுக்கும் சம்மதம் சார்!" என்று நீலகண்டனைச் சேர்த்து, அங்கிருந்த மற்ற உயர் பணியில் இருப்பவர்களும் ஒப்புக் கொண்டனர்.

மதிய உணவுக்கான வேளை வந்ததும், சாப்பாடு தன் இருப்பிடத்திற்கு வருவதற்கு முன்னாலேயே, தான் உணவுண்ணப் போவதைக் குறுஞ்செய்தியாக மகளுக்கு அனுப்பி வைத்து விட்டார் நீலகண்டன்.

"மூர்த்தி அங்கிள் கூட தான லன்ச்ன்னு சொன்னாரு" என்றபடி, யோசனையில் இருந்தவளுடைய செல்பேசியில் குறுஞ்செய்தி வந்தது.

மதிய உணவை எடுத்துக் கொண்டதாக தந்தை தான், அதை அனுப்பியிருந்தார். அந்த குறுஞ்செய்திக்குப் பதில் அனுப்பியவளுக்கு , வேறு என்னப் பொழுதுபோக்கு இருக்கிறது செய்வதற்கு? உறக்கத்தில் ஆழ்ந்து விட்டாள் முக்தா.

அதற்குப் பின்னர் தான், வெளி வேலைகள் முடிந்து, வீட்டிற்கு வந்து, மகளின் உறக்கத்தை உறுதி செய்து கொண்டு, தன்னறைக்குள் நுழைந்து கொண்டார் நீலகண்டன்.

தெளிவாகப் பேசியப் பிறகு ஏன் அலைப்புறுகிறாய்? முக்தா புரிந்து கொள்வாள் என்றெல்லாம் கூறிய இன்னும் கொஞ்ச நாளில் முக்தாவின் நிலைக்குத், தான் மாறப் போகிறோம் என்பது கிஷானுக்குத் தெரியவில்லை.

அவளது புறம் அல்லது அக அழகு அவனை ஈர்க்கப் போகிறது, அதற்காக, தான் வருடக்கணக்கில் காத்திருக்கப் போகிறோம் என்பதும் அவன் யோசித்துப் பார்க்காத ஒன்று.

இயல்பிலேயே கலகலப்பும், பொறுமை குணமும் பெற்றதால் தான் , இன்று வரை மஹதனுக்கு உற்றத் தோழனாக நிலைத்து இருக்கிறான் கிஷான்.

மடிக்கணினியின் விசையைத் தட்டிக் கொண்டவனுக்குள் திடீரென்று ஒரு நினைவு. அவன் வெகு விரைவில் முக்தாவை நேரில் சந்திப்பதாக இருந்தது அதன் சாராம்சம்.

"இப்படியெல்லாம் தோன்ற அளவுக்கு ரொம்ப அடிக்ட் ஆன மாதிரி இருக்கே!" என்று பெண்ணவளைப் பற்றிய‌ யோசனையைத் தள்ளி வைத்து விட்டான் கிஷான்.

அடுத்த வந்த நாட்களில், கிஷானுக்கும், மஹதனுக்கும் தங்கும் விடுதியில் செய்த மாற்றங்களைச் சரி பார்க்கவே நேரம் போதாமல் இருந்தது.

அனைத்தையும் முடித்துப் பெருமூச்சு விட்டுக் கொண்டார்கள் நண்பர்கள்.

அலுவலகத்தில் மஹதனின் அறையில் பேசிக் கொண்டிருந்த கிஷான்,

"இங்கேயும் சேஞ்சஸ் பண்ணனும் போலயே?" என்று நண்பனின் தங்கும் விடுதியையும் மாற்றி அமைக்க வேண்டும் என வலியுறுத்திக் கொண்டிருந்தான்.

"யெஸ் கிஷான்! அதுக்கு முன்னாடி இங்கிருக்கிற ஃப்ரண்ட் ஆஃபீஸ் ரிசப்ஷனிஸ்ட் வேலைக்குப் பொறுப்பாக ஒரு ஆளைத் தேர்ந்தெடுக்கனும்" என்றான் மஹதன்.

"இதுக்கு முன்னாடி வேலை பார்த்தவங்க?"

"அந்தப் பொண்ணு சரியாக வேலைப் பார்க்கிறது இல்லைன்னுக் கம்ப்ளைன்ட்ஸ். ஃப்ரஷரைத் தான் வேலைக்கு எடுக்கனும்" என்று பதிலளித்தான்.

"ஏன் அப்படி?"

"ஆமாம். இப்போ இருக்கிறவங்க அனுபவசாலி தான். ஆனால் வேலையில் கவனம் இல்ல. விருந்தாளிகள் கிட்ட இருந்து நிறைய புகார்கள் வருதுடா"

"சரி. நியூஸ் பேப்பரில் விளம்பரம் கொடுத்துடு. இல்லைன்னா எங்கிட்ட சொல்லு, நான் பாத்துக்கிறேன்" என்று கூறினான் கிஷான்.

"விளம்பரம் கொடுத்துப் பார்ப்போம்" என்று கூறிக் கொண்டிருக்கும் போது, அங்கிருந்த லேண்ட்லைன் ஒலித்தது.

"சார் ! உங்களைப் பார்க்க முக்தா மேடம் வந்திருக்காங்க" என்று அறிவித்தாள் முன் அலுவலக வரவேற்பு வேலையில் இருக்கும் பெண்.

"என்ன விஷயம்னு கேளுங்க?" என்றதும்,

அங்கே, அவன் சொன்னது போல முக்தாவிடம் கேள்வியைக் கேட்டாள் அப்பெண்.

"நான் அவரோட க்ளோஸ் ஃப்ரண்ட். பர்சனல் ஆகத் தான் பேசனும். உங்கிட்ட சொல்ல முடியாத விஷயம்னு சொல்லு" என்று கட்டளையைப் பிறப்பித்து விடவும்,

அதை அப்படியே அவனுக்குக் கடத்தினாள் வரவேற்பில் இருந்தப் பெண்.

"ஓகே. வர சொல்லு" என்று அழைப்பை வைத்து விட்டான்.

அவனுடைய முகத்தில் சலிப்புத் தெரியவும்,"யார் வர்றா மஹத்?" என்று கேட்டான் கிஷான்.

"முகி தான்" என்றான்.

"அவங்களா?" என இவனுடைய ஆச்சரியத்தைக் கண்டு, குழப்பத்துடன்,

"ஆமாம். அதில், உனக்கு ஏன் இவ்ளோ ஆச்சரியம்?" என்று கேட்டான்.

"இல்லையில்லை. சும்மா தான். நானும் அவங்களைப் பார்த்து ரொம்ப நாளாச்சே! அதான்" என்று வாய்க்கு வந்ததை உளறி விட்டு அவளின் வரவிற்காக வாயிலைப் பார்த்துக் கொண்டு இருந்தான் கிஷான்.

எதையும் நொடியில் கண்டுபிடித்து விடும் மஹதனுக்கு, தோழனின் இந்த மாற்றம் மட்டும் தெரியாமல் போகுமோ? அவனே வாய் திறக்கட்டும் என்று விட்டு விட்டான்.

அதற்குள், அலுவலக அறைக் கதவைத் தட்டி விட்டு, மெத்தனமாக வந்து நின்றவளை மேலிருந்து , கீழாக ஆராய்ந்தான் கிஷான்.

"ஹாய் மஹத்!" என்ற அவளது மிகுந்த மகிழ்ச்சி இவனுக்குள் நிறைவைக் கொடுத்தது.

இந்தக் காரணத்தினால் தான், முக்தா தன்னை ஈர்க்கிறாளோ? என்று தோன்றியது கிஷானுக்கு.

ஆனால், உணர்ச்சியற்ற முகத்துடன் அவளை வரவேற்றான் மஹதன்.

"என்ன முக்தா?"

அவன் கேட்டதும், கிஷான் அங்கு இருப்பதைப் பார்த்தவள்,

"உன்கிட்டப் பேசனும்" என்று தயக்கத்துடன் கூறினாள்.

"நான் வெளியே‌ இருக்கேன்" என்று நாகரீகமாக ஒதுங்கிச் சென்று விட்டான்.

அவன் வெளியேறியதும்,

"நானும் நீ மாறுவன்னு நினைச்சுட்டு இருக்கேன் மஹத்!"

"இதோ பாரு முகி. அதெல்லாம் நடக்காத காரியம்! நீ தான் மாறனும்" என்று திட்டவட்டமாக கூறினான்.

வெளியே காத்திருந்தவனின் மனநிலை தான் என்னவென்றே புரியாத ஒன்றாகிப் போனது.

அவளுடைய கெஞ்சலைப் பார்க்கத் தேவையிராது என்று தான் வந்து விட்டான் கிஷான்.

அந்த அளவிற்குத் தனக்கு முக்தாவின் மேல் காதலா? அவனது மூளையை யோசனைகள் சூழ்ந்து விட்டது.

"யோசிச்சு முடிவு பண்ணு மஹத்! உன் ஃப்ரண்ட் வேற வெளியே காத்திருப்பாரே.நானும் கிளம்பறேன்"

அவள் சென்றதே போதும் என நாற்காலியில் அமர்ந்து விட்டான் மஹதன்.

கதவைத் திறந்து கொண்டு வந்தவளை விழிகளை உருட்டிப் பார்த்து,

"ஹாய் முக்தா!" என்றான்.

அவனை ஏறிட்டுப் பார்த்தவளோ,"கிஷான் தான?" எனப் பேச்சுக் கொடுத்தாள்.

"யெஸ்!"

தன்னை ஞாபகம் வைத்திருக்கிறாள் என்ற நிறைவு அவனுக்கு.

"என்ன?"

வேண்டாவெறுப்பு மிகுந்த கேள்வி தான் வெளி வந்தது அவளிடமிருந்து.

"ஒரு விஷயமும் இல்லை. சும்மா ஹாய் சொன்னேன்" என்று குறும்புடன் கூறியவனிடம்,

"அப்படியா? பை!" என்று பதில் கூறி விட்டுப் புறப்பட்டாள் முக்தா.

குறுஞ்சிரிப்புடன் அறைக்குள் புகுந்தான் கிஷான்.

கடுகடுத்த முகத்துடன் அவனிடம்,
"அப்பப்போ இங்கேயும் வந்துடறா?" என்று குறைபாட்டான் மஹதன்.

அதைப் புன்னகையுடன் கேட்டுக் கொண்ட கிஷானுக்கு வேறு ஒன்றும் சொல்லத் தோன்றவில்லை. ஆனால், அவனது மனமோ முக்தாவை நினைத்து, நொடித்துப் போயிருந்தது.

தந்தைக்கு முன்னர் வீட்டிலிருக்கும் முக்தாவை, இன்றோ நீலகண்டன் தான் வரவேற்றார்.

"இவ்ளோ சீக்கிரம் வந்துட்டீங்களே அப்பா?" என்று ஆச்சரியமாக கேட்டாள் மகள்.

"ஆமாம் முகி.மஹதனைப் பார்த்துட்டு வந்துட்டியா?" என்று தான் ஆரம்பமானது அவர்களது பேச்சு வார்த்தை.

அதில், காயப்பட்ட மனதுடன்,"ம்ஹ்ம்… பார்த்துப் பேசிட்டு வந்துட்டேன் ப்பா" என்றாள் முக்தா.

"எப்பவும் போல தான?" எனக் கேட்டார் தந்தை.

"ஆமாம் ப்பா. அதுனால என்ன இப்போ? நீங்களும் மூர்த்தி அங்கிள் கிட்ட எனக்காகப் பேசுங்க"

"நான் உனக்காகப் பேசத் தயார் முகி. ஆனால் மஹதனும், அவனோட ஃபேமிலியும் சம்மதிக்கிற வரைக்கும் நீ ஒன்னுப் பண்ணனும்" என்று கூறினார் நீலகண்டன்.

"என்னப் பண்ணனும் ப்பா?" என வேகமாக கேட்டாள்.

" கொஞ்ச நாளைக்கு ஃப்ரண்ட்ஸோட ஜாலியாக டூர் போயிட்டு வா. அதுக்குள்ளே பேசிடறேன்" என்று உறுதியாக கூறினார் அவளுடைய தந்தை.

"டூரா? நீங்க தனியாக இருப்பீங்களே ப்பா?" என்று பதறினாள் முக்தா.

"உன்னை விட்டு எப்படி பிரிஞ்சி இருப்பேன்? அது தான் கஷ்டம். மத்தபடி, புதுப்புது ஐடியாஸ் கொட்டிக் கிடக்கிறதால், வேலையில் மூழ்கிட்டாப் போச்சு" என்று பரிவாகப் பேசினார் நீலகண்டன்.

"எனக்கும் அதே ஃபீல் இருக்குமே ப்பா! அப்பறம், என் ஃப்ரண்ட்ஸ் இப்போ என் மேல் கோபமாக இருக்காங்க!" என்று சோகமாக கூறிய மகளிடம்,

"அவங்க இல்லைன்னா வேற ஃப்ரண்ட்ஸ் இல்லையா? நம்பிக்கையாக இருக்கிற ஃப்ரண்ட்ஸோட போயிட்டு வா முகி" என ஆறுதல் கூறினார்.

"சரி அப்பா"

தோழிகளும் தன்னுடன் பேசுவதைக் குறைத்துக் கொண்டனர் என்பது முக்தாவின் மனதை வெகுவாக உலுக்கியது. இன்று மஹதனும் தன்னைச் சிறப்பாக கவனித்து விட்டான். இவ்விரண்டையும் தாங்கிக் கொண்டு, மறக்க பிரயத்தனங்கள் செய்ய வேண்டும் என்பதால், அது வெளிநாட்டுக்குச் சென்றால் தான் முடியும் என்று! தந்தை சொன்னதை ஒப்புக் கொண்டாள் முக்தா.

அதற்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது, அவ்விடயம் மஹதன் காதுக்குப் போக, யதேச்சையாகப் பேசியதில் கிஷானுக்கும் தெரிந்து விட்டது.

- தொடரும்
 
Last edited:

Shalini shalu

Moderator
அத்தியாயம் 3

முக்தாவின் வெளிநாட்டுப் பயணத்தைப் பற்றி அறிந்து கொண்ட கிஷானுக்கு மனம் வலிமையை இழந்தது.

அப்போது தான், அவள் மேல், அவன் கொண்ட காதல் தெரிந்தது.

"டேய்! மஹத்" என நண்பனை அழைத்தான் கிஷான்.

"என்னடா?" என்று சாதாரணமாகப் பேசிய மஹதனிடம்,

கிஷான்,"முக்தா!" என்கவும்,

"அவளுக்கு என்ன?"

"ஃபாரீனுக்குப் போயிட்டாங்கன்னு உனக்குத் தெரியும் தானடா?" என்று விரக்தியுடன் கேட்டான் தோழன்.

"தெரியும். அப்பா சொன்னார். நீ ஃபீல் பண்ணுவன்னும் தெரியும்" என்று சேர்த்துச் சொன்னான்.

"மஹத்" குரலை உயர்த்தவும்,

"என்னை வேற என்ன சொல்ல சொல்ற கிஷான்?" என்று அவன் கோபத்திற்குக் கண்டனம் தெரிவித்தான்.

சினம் கொண்டு என்ன சாதிக்க முடியும் என்று அமைதியாகி விட்டான் கிஷான்.

ஆனால் , இதற்கு மாறாக ,
வெளிநாட்டில் ஆனந்தமாக தோழிகளுடன் சேர்ந்து பொழுதைப் போக்கிக் கொண்டிருந்தாள் முக்தா.

அவளுடைய பிரியமான தோழிகள் எல்லாரும், முக்தா அழைத்தும் வர முடியாது என்று சொல்லி விட்டனர்.

அதனால், தன்னுடன் பயின்ற ஒரு சில கல்லூரிக் கால சிநேகிதிகளுடன் கிளம்பி விட்டாள்.

செல்லும் இடமெல்லாம் எதாவது பொருளை வாங்கி அவர்களுக்குப் பரிசளித்து விடுவாள் முக்தா.

அதனாலேயே, எதிர்காலத்தில் இன்னுமின்னும் அவளுடன் வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ளத் திட்டமிட்டு உள்ளனர் அந்த சிநேகிதிகள்.

"நாம தான் இன்ஸ்டாகிராமை அலற வச்சிட்டு இருக்கோம்!" என்று தொழிகளில் ஒருத்தி ஆர்ப்பரித்தாள்.

"அத்தனை ஃபோட்டோஸையும் அப்லோட் பண்ணிட்டியா ஸ்ருதி?" என்று கேட்டாள் முக்தா.

"யெஸ்! எடுக்க எடுக்க அப்லோடிங் தான்!"

அவர்களது மனநிலை எல்லாம், மற்றவர்கள் தங்களைப் பார்த்துப் பொறாமைக் கொள்ள வேண்டும் என்பது மட்டுமே!

அதையெல்லாம் தெரிந்து கொள்ளும் நிலையில் முக்தா இல்லை.

"ஃபரண்ட் ஆஃபீஸ் ரிசப்ஷனிஸ்ட் வேலைக்கு நான் சொல்ற, பிரபலமான நியூஸ் பேப்பர்களில் பேசி விளம்பரம் கொடுங்க. நம்மளோட ஆஃபிஷியல் (அதிகாரம் சார்ந்த) மெயிலை (மின்னஞ்சல்) சரியாக அனுப்புங்க. இன்டர்வியூவுக்கு (நேர்காணல்) வர்றவங்களை கரெக்டா வழி காட்டுங்க!" என்று தன்னுடைய விடுதியில் நடத்தப்படும் நேர்காணல்களை மேற்பார்வையிடும் குழுவிற்கு அறிவுறுத்தினான் மஹதன்.

அவன் தன் மகளைப் பற்றிய எந்த கவலையும் இல்லாமல் அலுவலகப் பணிகளைச் செவ்வனே நடத்திக் கொண்டார்கள் என்பது கண்டு நீலகண்டனுக்கு குறுகுறுப்பு உண்டாயிற்று.

மகள் அவனை விட்டு தூரம் சென்றும் கூட, கேட்டுத் தெரிந்து கொள்ளும் ஆர்வம் இல்லை அவனுக்கு, எனும் நிதர்சனம் நீலகண்டனைத் தாக்கியது.

உடனே அவளை இங்கு வரவழைக்க முடிவு செய்தார்.

அதற்குள் முக்தாவே தந்தைக்குக் கால் செய்து நிலவரத்தைக் கேட்டாள்.

"அப்பா! மஹதனுக்கு என்னோட நினைப்பு இருக்கா? உங்ககிட்ட ஏதாவது விசாரிக்குறாரா?"

மகளிடம் பொய் சொல்லத் துணியவில்லை நீலகண்டன்.

"இல்லை முகி. அவனோட ஹோட்டலை டெவலப் பண்ணிட்டுத் தான் இருக்கானே தவிர, உன்னோட நினைப்புக் கொஞ்சமும் இல்லை!" என்று குறைபட்டார் தந்தை.

"என்னப்பா சொல்றீங்க?" என்று வருத்தத்துடன் கேட்டாள் மகள்.

அப்படியென்றால், அவன் தன்னை மதிக்கவே இல்லை என்பதை இன்னும் ஆழமாக உணர்ந்து கொண்டாள் முக்தா.

இன்னுமே விட்டு விட முடியாமல், முரண்டியதால், "நான் அங்கே கிளம்பி வர்றேன் அப்பா!" என்று கூறினாள்.

"வேணாம் டா. நீ என்ஜாய் பண்ணு" என்க,

"இங்கே நான் ஜாலியாக இருந்தால் அங்கே என் வாழ்க்கைப் போயிடும் அப்பா. நான் வர்றேன்" என்று உறுதியாக கூறிய மகளை வரவேற்கத் தயாராகி விட்டார் நீலகண்டன்.

முன் அலுவலக வரவேற்பாளர் பணிக்கான நேர்காணலுக்கு என்று விண்ணப்பங்கள் குவிந்த வண்ணம் இருந்தது.

அவற்றைப் பொறுப்பாகப் பார்த்து, தகுதியான ஒரு சிலருடைய விண்ணப்பங்களைத் தனியாக எடுத்து வைத்தார் மேனேஜர்.

அதில் , ஒரு பெண்ணுடைய விண்ணப்பப் படிவம் இவர்களது கவனத்தைக் கவர்ந்தது.அதை தனியாக எடுத்து வைத்தனர்.

"மகனே! இங்கே வாங்க" என்று கிஷானை அழைத்தார் அவனது தந்தை காஞ்சியப்பன்.

அவனுடைய கவலை படிந்த முகத்தைக் கண்டு வெகு நாட்கள் ஆயிற்று. இப்போது என்னப் பிரச்சினை என்று கேட்டு சரி செய்வதற்காக அழைத்தார் தந்தை.

"என்னப்பா?" என்று அருகே போனான் கிஷான்.

"லேகா!" என்று உள்ளே மேற்பார்வை செய்து கொண்டிருந்த மனைவியையும் கூப்பிட்டு விட்டு, மகனுடைய தோளில் கையைப் போட்டுக் கொண்டார் காஞ்சியப்பன்.

தந்தையின் செயலைப் பார்த்து புன்னகைத்தான் கிஷான்.

சித்ரலேகா அங்கே பிரவேசித்தவுடன்,
கணவன் மற்றும் புத்திரனை ஆராய்ந்து விட்டு அமர்ந்தார்.

"உன் மகனுக்கு ஏதோ மனக்கஷ்டம் இருக்கு போல?" என்றார் காஞ்சியப்பன்.

அவரது மனைவியுமே,"இருக்கு போலத் தான்ங்க! எதையும் நம்மகிட்ட மறைக்க மாட்டாரே?" என்று பிகு செய்தார்.

தாய் மற்றும் தந்தையின் உரையாடல்களைக் கேட்டவனோ,
"நேரடியாகவே என்ன விஷயம்னு கேட்டு இருக்கலாம் நீங்க?" என்றான் குறுஞ்சிரிப்புடன்.

"சரி. என்ன விஷயம் கிஷான்? ஏன் இப்படி இருக்கிற?" என்று கேட்டார் சித்ரலேகா.

"இப்படி ஃப்ரண்ட்லியா இருக்கீங்க, அதனால் உங்ககிட்ட நான் விஷயத்தைச் சொல்லத் தயங்கலை. சொன்னால் என்ன ரியாக்ட் பண்ணுவீங்கன்னு யோசிச்சா தயக்கமாக இருக்கே!"

"எங்ககிட்ட சொல்றதுக்கு நீ தயக்கம் காட்றியா?" என்று வியந்தார்கள் இருவரும்.

"விஷயம் அப்படி அப்பா!" என்றான் மகன்.

"அப்படி என்ன தான்னு சொல்லு கிஷான்!" அவசரப்படுத்தினார் காஞ்சியப்பன்.

"நீலகண்டன் சாரோட பொண்ணு முக்தாவை நான் லவ் பண்றேன்!" என்று இருவரையும் பார்த்துக் கூறியே விட்டான் அவர்களது புத்திரன்.

கேட்டதும் திகைப்பு ஏற,
"அவரோட பொண்ணையா?" என்று அதிர்ந்து போய்க் கேட்டார் சித்ரலேகா.

அவரது அதிர்ச்சிக்குக் காரணம், முக்தா திருமூர்த்தியின் மகனை விரும்புவது தான்!

"தெரிஞ்சு தான் லவ் பண்றியா?" என்று மகனிடம் கேட்கவும் மறக்கவில்லை காஞ்சியப்பன்.

"ஆமாம் ப்பா! மஹதனுக்கும் நான் முக்தாவை லவ் பண்ற விஷயம் தெரியும்" என்று விளக்கினான் கிஷான்.

"நீலகண்டன் சாருக்குத் தெரியுமா?"

"தெரியாது அம்மா" என்றான்.

"முக்தாகிட்ட சொல்லிட்டியா?"

"சொல்லிட்டேன் ப்பா. அவங்களுக்கு விருப்பமில்லை" என்று பொய்யுரைக்காமல் பேசினான் கிஷான்.

"எல்லாத்தையும் தெளிவாகச் சொல்றியே! அப்பறமும் ஏன்?" என்று கேட்டார் சித்ரலேகா.

ஒருவேளை அவள் மஹதனை மணந்து கொண்டால், தன் மகன் மனமுடைந்து போய் விடுவான் என்ன பயம் இருக்கும் அல்லவா அவருக்கு.

"தெரியலை அம்மா! எப்போதாவது அவங்களைப் பார்த்துப் பேசி இருக்கேன்.ஒரு வருஷமாச்சு.ஆனால், லவ் வந்தது இப்போ தான். மனசுக்குள்ள இருந்திருக்காங்க, அதை தெரிஞ்சுக்க நாளாகிடுச்சு" என்று கூறினான் கிஷான்.

"என்னென்னமோ சொல்றடா! முக்தாவுக்கே பிடிக்கலையே…" என்று தயங்கினார் காஞ்சியப்பன்.

"அவங்களுக்குப் பிடிக்கும் அப்பா!" என்று உறுதியாக கூறியவனிடம்,

"ஃபோர்ஸ் பண்ணப் போறியா?" என்று கேட்டார் சித்ரலேகா.

அதில் புன்னகைத்தவன்,"யாரு நானா ஃபோர்ஸ் பண்ணிக் காரியம் சாதிக்கப் போறேன்! நீங்க வேற ம்மா! வெயிட் பண்ணுவேன். அவ்ளோ தான்! ஃபோர்ஸ் பண்றதை விட காத்திருக்கிறது வேற லெவல் ஆக இருக்கும்!" என்று தத்துவம் பேசினான் கிஷான்.

"நாங்க என்ன பொல்லுவோம்னு எதிர்பார்க்கிற?" என்றார் காஞ்சியப்பன்.

"விட்டுடுன்னு சொல்லப் போறீங்களா?"

அதைக் கேட்டு ஹாஸ்யமாக சிரித்தவர்,"இல்லை. யாரையும் கஷ்டப்படுத்தாமல், உன்னோட லவ் சக்ஸஸ் ஆகட்டும்னு விஷ் பண்ணப் போறோம்!" என மனைவியைப் பார்த்தார்.

அவருக்கும் சஞ்சலம் இல்லாத சம்மதம் தான் என்பது முகத்தில் தெரியவும்,

"ஆல் தி பெஸ்ட்!" என்று மகனுக்கு வாழ்த்தும் தெரிவித்தனர் பெற்றோர்.

அவர்கள் இருவரையும் கட்டிக் கொண்டான் கிஷான்.

"ஆனால் முக்தா கடைசி வரைக்கும் மாறலை, மஹதனைக் கல்யாணம் பண்ணிக்கப் போறான்னுத் தெரிஞ்சா, நீ என்னப் பண்ணனும்னு உனக்குத் தெரியும் தான?" என்றார் சித்ரலேகா.

"விலகிடுவேன்! மறந்துடுவேன் அம்மா" என்று அவருக்கு உறுதி அளித்தான்.

"நாங்களா நீலகண்டன் சார் கிட்ட எதுவும் கலந்து பேச மாட்டோம் கிஷான். இது முழுக்க முழுக்க உன்னால் முடியனும். முக்தாவோட முழு விருப்பம் ரொம்ப அவசியம்!" என்று தெளிவாக அறிவுரை கூறினார் காஞ்சியப்பன்.

அதையும் ஒப்புக் கொண்டான் கிஷான்.

இந்த நிலையில், வெளிநாட்டில் இருந்து, தாயகம் திரும்பி விட்டாள் முக்தா.

- தொடரும்

இதில் வர்ற அந்த ஃப்ரண்ட் ஆஃபீஸ் ரிசப்ஷனிஸ்ட் யாராக இருக்கும் ஃப்ரண்ட்ஸ்? 😜
 

Shalini shalu

Moderator
அத்தியாயம் 4

விமான நிலையத்திலிருந்து தந்தைக்கு அழைத்து,

"அப்பா! நான் ஏர்போர்ட்டுக்கு வந்துட்டேன். என்னைப் பிக்கப் பண்ண வாங்க" என்று அவரை வரச் சொன்னாள் முக்தா.

"என்னம்மா முன்னாடியே சொல்லக் கூடாதா?" என்று மகளின் வரவை நினைத்து மகிழ்ந்து கொண்டே, அவளை அழைத்து வருவதற்காக விமான நிலையம் சென்றார் நீலகண்டன்.

தோழிகளும் உடனிருந்ததால் ,"எங்க அப்பா வர்றார்? உங்களைக் கூப்பிட யார் வர்றாங்க?" என்று அவர்களிடம் கேட்டாள் முக்தா.

"நீ தான் எங்களை வீட்டில் கொண்டு போய் விட ஏற்பாடு பண்ணனும்! உங்க அப்பா வர்றாருன்னு நைஸாக நழுவப் பாக்குற!" என்று சீறினர் அவளுடைய சிநேகிதிகள்.

அவர்களது சுயரூபத்தைப் பார்த்தவளுக்கு மனம் வதங்கிப் போய் விட்டது.

முந்தைய நாட்கள் வரை ஒன்றாக சேர்ந்து, சிரித்துப் பேசி, சுற்றிக் கொண்டு இருந்தவர்கள் இப்போது கறாராகப் பேசுவதைக் கேட்டு, திகைத்து,

"இவ்ளோ நாள் என்‌ கூட நல்லா தான பேசினீங்க? இப்போ பேச்சு அப்படியே மாறுது!" என்று எரிச்சல்பட்டாள் முக்தா.

"ஆங்! நீ தானே எங்களைக் கூட கூப்பிட்டுப் போன, எங்களைப் பத்திரமாக வீட்டில் விட்றதும் உன் பொறுப்பு தான?" என்று அவளை மடக்கினர்.

முக்தாவோ இவர்களை அழைத்துச் சென்றதே தவறு என்று தலையில் அடித்துக் கொண்டு,

"இருங்க!" எனத் தன் தந்தைக்கு மீண்டும் அழைத்து இன்னொரு மகிழுந்தை எடுத்து வருமாறு கூறினாள் முக்தா.

அவள் அப்படி சொன்னதும், உடனே முகத்தையும், பேச்சையும் சாமர்த்தியமாக மாற்றிக் கொண்டவர்கள்,

"அப்பறம் முகி, கார் வர்ற வரைக்கும் ஏதாவது பேசுவோம்" என்றனர்.

"உங்ககிட்ட வாயைக் கொடுக்கவே கூடாதுன்னு முடிவு பண்ணிட்டேன்!" என்று முணுமுணுத்தாள்.

"அச்சோ! காமெடி பண்ணாத முகி.நாம அடுத்த தடவையும் இந்த மாதிரி மாசத்துக்கு ஒரு‌ தடவை ட்ரிப் போகலாம்!" என அவளிடம் குழைந்துப் பேசினர்.

ஒரு தடவைக்கே நாக்குத் தள்ளி விட்டது. இவர்களை இனி தன்னுடன் வைத்துக் கொள்வது நல்லதல்ல என்று முடிவெடுத்து இருந்தாள் முக்தா.

அதற்குள் அங்கே வந்து சேர்ந்தார் நீலகண்டன்.

தந்தையைப் பார்த்ததும் அவரிடம் சென்று,"அப்பா!" என அவரது தோள்களைப் பற்றிக் கொண்டாள்.

"முகி ம்மா!" என்று தன் ஒரே மகளைப் பிரிந்திருந்த துயரைக் குறைக்க முயன்றார் நீலகண்டன்.

இவர்களுக்கு அருகிலிருந்த முக்தாவின் தோழிகள், அசிரத்தையாகத் தங்களது காதைக் குடைந்து கொண்டிருந்தனர்.

"ட்ரிப் எப்படி போச்சு ம்மா?" எனப் பொதுவாக அனைவரையும் பார்த்துக் கேட்டார்.

"செம்மையாகப் போச்சு சார்" எனப் பவ்யமாகப் பதில் கூறினர்.

"ஓகே ம்மா. உங்களுக்காக கார் வெளியே நிக்குது. வீட்டுக்குப் போங்க" என்று அந்தப் பெண்களை அனுப்பி வைத்தவர்,

அவர்களை வெறுப்பாகப் பார்த்துக் கொண்டிருந்த மகளிடம்,"ஏன் ம்மா இப்படி ஒரு வெறுப்பு அவங்க மேல? நல்லா தான ஃபோட்டோஸ் எல்லாம் எடுத்துப் போட்டு இருந்தீங்க?" என்று கேட்டார் நீலகண்டன்.

"ஆமாம் ப்பா. ஆனா அவங்களோட ரியல் ஃபேஸை இப்போ தான் பார்த்தேன்" என்று வாடிப் போனவள், சுற்றுலா சென்ற நாட்களைப் பற்றி தந்தையிடம் சொல்லி முடித்தாள் முக்தா.

"உன்னை ரொம்ப தொந்தரவு பண்ணிட்டாங்களா?" என்று ஆதூரமாக கேட்டார் நீலகண்டன்.

அவளது கரத்தைப் பிடித்து, விமான நிலையத்தின் வாயிற்புறம் நடத்திக் கூட்டி வந்தார்.

"பணத்துக்காக, அதை வச்சு செலவு செய்றதுக்காக, என் கூட வந்தவங்க தான அப்பா? அப்படித்தான் நடந்துக்கிட்டாங்க" என்று வருத்தப்பட்டாள் மகள்.

"எல்லாத்தையும் பார்த்துக்கலாம் முகி ம்மா" எனக் காரில் வீட்டை அடைந்தனர் தந்தையும், மகளும்.

"சார்! நம்ம ஃப்ரண்ட் ஆஃபீஸ் ரிசப்ஷனிஸ்ட் போஸ்ட்டுக்கு ஒரு பொண்ணோட ரெஸியூம் மேட்ச் ஆகுது" என்று கூறினார் விடுதியின் மேனேஜர்.

"அவங்க டீடெயில்ஸ்ஸைக் கொண்டு வாங்க" என்றான் மஹதன்.

சிறிது நேரம் கழித்து, கையில் ஒரு கோப்பை எடுத்து வந்து கொடுத்தான் மேனேஜர்.

அதிலிருந்த குறிப்புகளை வாசித்துப் பார்த்து விட்டு,"இவங்க ஓகே! இருந்தாலும் இன்டர்வியூ வச்சு செலக்ட் பண்ணுங்க. அதுக்கப்புறம், நான் இங்கே வரும் போது பேசிக்கிறேன்" என உத்தரவு அளித்தான்.

🌸🌸🌸

"மஹதனைப் பார்க்கனும் அப்பா!" என்று தான் வந்ததிலிருந்து தந்தையிடம் கூறிக் கொண்டிருந்தாள் முக்தா.

அவளிடம் எதுவும் சொல்லாமல் வெளியேறி விட்டார் நீலகண்டன்.

தாயகத்திற்குத் திரும்பி விட்டதை, புலனத்தில் ஸ்டேட்டஸ் ஆக வைத்திருந்தாள் முக்தா.

அதைப் பார்த்த மஹதனோ நண்பனுக்கு அழைப்பு விடுத்தான்.

"நண்பா! முக்தா இங்கே வந்தாச்சு!" என்று அறிவித்தான்.

"ஹூர்ரே! தாங்க்ஸ் டா மஹத்" என்று பேரானந்தம் கொண்டான் கிஷான்.

"பெஸ்ட் ஆஃப் லக்!" என்று வாழ்த்தி விட்டு, விடுதிக்குப் புதிதாக வேலைக்குச் சேர்க்கும் பெண்ணைப் பற்றிப் பேசி விட்டு வைத்தான்.

இங்கு கிஷானோ சந்தோஷ வானில் பறந்து கொண்டிருந்தான்.

ஆனால், முக்தாவோ இரண்டு நாட்களுக்குப் பிறகு, மஹதனைச் சந்திப்பதற்காக காத்துக் கொண்டிருந்தாள்.

முன் அலுவலக வரவேற்பாளர் பணிக்கு வந்திருந்த பெண்ணோ, நேர்முகத் தேர்வு நடைபெறும் அறைக்குள் நுழைந்தாள்.

"உங்கப் பேர்?" என்று கேட்டுக் கொண்டே அவளது கோப்பை வாங்கிக் கொண்டார் மேனேஜர்.

"மிஸ்.மௌனா! சார்" என்று நிதானமாக விடையளித்தாள்.

அதற்குப் பிறகான நேரங்களில் அவளிடம் பல கேள்விகளைக் கேட்டு, நன்முறையில் நேர்முகத்தேர்வை நடத்தி முடித்தவர்,

"உங்களை இந்த வேலைக்குச் செலக்ட் பண்றோம். ஆல் தி பெஸ்ட். மிஸ். மௌனா" என்று வாழ்த்தி,

அவளை மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்தியும் வைத்தார் மேனேஜர்.

அடுத்த நாளே வேலையில் சேர்ந்து விடுவதாக உறுதி அளிந்திருந்தாள் மௌனா.

ஆனால், அவளது முதல் நாளைய அனுபவம் மறக்கவே முடியாததாக இருக்கப் போகிறது முக்தாவின் வருகையால்.

நீலகண்டனுக்கு மகள் மஹதனைப் பார்க்கச் செல்வது உறுத்தியது தான்!

அவளுடைய ஆசையில் தலையிட வேண்டாம் என்றும் அதற்கான உதவியைச் செய்ய நினைத்து, ம‌ஹதன் மறுத்து விட்டாலும், திருமூர்த்தியின் மூலமாக விஷயத்தைச் சாதித்துக் கொள்ள நினைத்தார் நீலகண்டன்.

"மஹத்! நீ என்னைக் கண்டுக்கலைன்னா என்ன? நான் உன்னைப் பார்க்க வந்துட்டே இருப்பேன். இன்னைக்கும், இப்பவும் வரப் போறேன்!" என்று தனக்கு மிக மிகப் பொருத்தமான உடை ஒன்றை ஆசையாகத் தேர்வு செய்து அணிந்து கொண்டாள் முக்தா.

"இந்த தடவை நீ என்கிட்ட காரணம் சொல்லி ஒதுக்கவே முடியாது!" என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு தயாராகினாள் பெண்ணவள்.

- தொடரும்

வணக்கம் நண்பர்களே! இந்தப் பதிவுக்குப் பின்னர், நங்கையின் மறவோன் பாகம் 1 ஐ வாசித்து விட்டு, அடுத்த அத்தியாயத்தில் இருந்து கதையைத் தொடர்ந்து வாசியுங்கள்.


நன்றி 💞

நங்கையின் மறவோன் பாகம் 1 கதை திரி 👇

 

Shalini shalu

Moderator
லேட் அப்டேட்டுக்கு மன்னிச்சிருங்க ஃப்ரண்ட்ஸ். நான் காலேஜ் சேரப் போறேன். ஏற்கனவே, வருஷக்கணக்கில் லேட் ஆகிடுச்சு. அதனால் இப்போ முன்னாடியே அட்மிஷன் போடனும்னு அதுக்கு ரெடி பண்ணிட்டு இருந்தேன். ஆகஸ்ட்டில் தான் காலேஜ். அதுக்குள்ளே இரண்டு கதையும் முடிஞ்சிடும் 🙏

🌸🌸🌸

போர்வையை முகத்திற்கு ஏற்றி, வசதியாகப் படுத்துக் கொண்டாள் முக்தா.



தன் தாயகத்தை விட்டு விட்டு, தூர தேசத்திற்கு வந்த போதும், எதையும் மறந்து விடவில்லை அவள்.



தந்தைக்கு அடிக்கடி செல்பேசியில் அழைத்துப் பேசிக் கொள்வாள் முக்தா.



தன்னுடைய நடை , உடை பாவனைகள் எவற்றையும் மாற்றிக் கொள்ளவில்லை, ஆனால், மாற்றப்பட வேண்டியவை எல்லாம் தானாகவே சரியாகி விட்டது அவளிடம்.



காலை நேரத்து காபியை மட்டும் தனக்காகத் தயாரித்துக் கொண்டிருந்தவளோ, சமையலையும் தானே செய்து கொண்டாள் முக்தா.



இந்தியாவில் இருக்கும் போது, எப்போதாவது சமைப்பவள், இங்கோ, தினமும் தன் கை வண்ணத்திலேயே உணவருந்த ஆரம்பித்து இருந்தாள்.



"ஹலோ ப்பா! குட்மார்னிங்" என்று உற்சாகம் பொங்கப் பேசினாள் மகள்.



"முகி! வேலையா இருக்கியாடா?" என்று வினவினார் நீலகண்டன்.



அதிகாலையிலேயே அழைத்து விட்ட தந்தையிடம், உணவு சமைத்தபடியே அளவளாவிக் கொண்டிருந்தவள்,



"குக்கிங் தான் நடக்குது அப்பா! ஒன்னும் இல்லை நீங்கப் பேசுங்க" என்று காய்களை நறுக்கியவாறு கூறினாள் முக்தா.



"என்னம்மா சமைக்கிற?" என்றதும்,



"ஃப்ரைட் ரைஸ் ப்பா‌. நீங்க சாப்பிட்டீங்களா?" என்று கேட்டாள்.



"நான் சாப்பிட்டேன் ம்மா. இந்த வருஷம் ஊருக்கு வர்ற தான?"



முன்பெல்லாம் தந்தை இப்படி கேட்டால், தயக்கம் கொள்வாள். ஆனால் இப்போதோ, அதையெல்லாம் துறந்து,



"நான் டிக்கெட் புக் பண்ணிட்டு சொல்றேன் அப்பா. டேட் முன்னப் பின்னே ஆகும்ல? கம்பெனியிலும் லீவ் சொல்லனும்" என்றாள் முக்தா.



"சரி ம்மா. உடம்பை பாத்துக்கோ‌"



இப்போதும் தன் தோழிகள் மற்றும் மஹதனிடம் கூட இயல்பாகப் பேசிக் கொண்டு இருக்கிறாள் முக்தா.



இவனைப் போல ஒருவனைத் தனக்கானவனாகத் தேர்ந்தெடுத்ததில், தவறே இல்லை என்று எண்ணும் அளவிற்கு அவளது எண்ணங்களில் நிறைந்திருந்தான் கிஷான்.



புலனத்தில் குறுஞ்செய்திகள் வரும் தான். ஆனால், எப்போதும் போல கண்ணியமானப் பேச்சுக்களுடன் முடித்துக் கொள்வான்.



முகப்புப் படங்களை‌ மாற்றிக் கொண்டே இருப்பான். ஸ்டேட்டஸ் வைக்கும் பழக்கம் அவ்வளவாக இல்லை போலும். அரிதாக ஏதாவது பதிவு செய்வான் கிஷான்.



இவள் தான் வெளிநாட்டில் எடுத்தப் புகைப்படங்களை வைத்திருந்தால், அவை தன்னை ஈர்க்கப்பட்டால் மட்டுமே அது சம்பந்தமாக கேட்பான்.



பேச்சுக்கள் நீளாமல் இருந்தாலும், உணர்வுகள் பரிமாறிக் கொள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்றன அவர்களுக்குள்.



அலுவலகத்தில் தனக்கான விடுப்பை எடுத்துக் கொண்டவள், ஊருக்குச் செல்வதற்கு முன்னர், தனக்காகவும், தன்னைச் சேர்ந்தவர்களுக்காகவும் பரிசுப் பொதிகளை வாங்கிக் குவித்தாள்.



விமான நிலையத்திற்குச் சென்று, தந்தையையும், மற்றவர்களையும் பார்க்கும் ஆவலில், தனக்கான விமானத்திற்காக காத்திருந்தாள் முக்தா.



"நானும் ஏர்போர்ட்டுக்குப் போகலாம்னு இருக்கேன் மஹத்" என்றான் கிஷான்.



"ம்ம். போயேன் டா"



விமான நிலையத்திற்கு வருவதாக அடுத்த கணமே, தன்னவளுக்குச் செய்தி அனுப்பி விட்டான்.



"வேண்டாம் கிஷான். அப்பாவும் வருவார்" என்று மெசேஜ் செய்திருந்தாள் முக்தா.



"அதனால் என்ன? அங்கேயே அவர்கிட்ட பேசிடறேன்" என்று கூறவும்,



"வேற வினையே வேணாம். நான் அவர் கூட வீட்டுக்குப் போயிட்டு, அடுத்த நாள் உங்களைப் பார்க்க வர்றேன்" என்றிருந்தாள்.



"ஓகே" என்று பதில் அனுப்பினான் கிஷான்.



அவளுக்கான விமானத்தைப் பற்றிய அறிவிப்பு வரவும், உடமைகளை எடுத்துக் கொண்டு, செக்கிங் செய்து விட்டு, அதில் ஏறினாள் முக்தா.



இன்னும் சில மணி நேரங்களில் சொந்த மண்ணில் காலடி பதிக்கப் போகிறாள், காலம் மற்றும் மாற்றம் இவையெல்லாம் கொடுக்கப் போவதை ஆழ்ந்து அனுபவிக்க வேண்டிய கால கட்டத்தில் இருக்கிறாள்.



நீலகண்டன் தன் மகளின் வரவை அனைவரிடமும் கூறியிருந்ததால், திருமூர்த்தியின் மூலமாக கௌசல்யாவிற்கும் செய்தி அறிவிக்கப்பட்டது.



"கடைசியாக வீட்டுக்குக் கூப்பிட்டு, சாப்பிட வச்சு அனுப்பினேன். பெண் குழந்தை இல்லாத குறையை நிவர்த்தி பண்ண வந்தவ முக்தா" என்றார் கௌசல்யா.



அதற்காக மஹதனுக்கு உடன்பிறவாத தங்கை முறை என்றெல்லாம் அவர் நினைக்கவில்லை. அவனுக்குத் தோழியாகவே அவள் இருக்கட்டும் என்று எண்ணினார்.



"ராத்திரியில் தூக்கம் கூட வராதுடா" எனக் குதூகலித்தவரைப் புன்னகையுடன் ஏறிட்டு,



"உன் பொண்ணு வர்றதால், ஆஃபீஸில் இருக்கிற ஸ்டாஃப்ஸூக்குக் கிஃப்ட்ஸ், சேலரின்னு ஜமாய்ச்சுட்ட போல!" என்று கூறினார் திருமூர்த்தி.



"ஆமாம் டா"‌ என்று உற்சாகமாக இருந்தவரைப் பார்த்து,



"முக்தா வந்ததும், கிஷான் வீட்டுக்குப் போய் பேசிட்டு வந்துடு?" என்று வினவினார்.



"நான் மட்டும் போனால் நல்லா இருக்காதுடா.என் மனைவி தான் இல்லை. எனக்காகவும், பொண்ணுக்காகவும் நீயும், தங்கச்சியும் கூட வர்றீங்களா?" என்று தயங்கியவாறே கேட்டார் நீலகண்டன்.



"கௌசி கிட்டயும் கேட்டுட்டு சொல்றேன்"



🌸🌸🌸



"கல்யாணம் முடிஞ்சதும் வந்து வேலை பாருன்னு சொல்றதில் என்னத் தப்பிருக்கு மௌனா?" என்று காட்டமாக கேட்டான் மஹதன்.



அவர்களிருவருக்கும் திருமணப் பேச்சு முடிந்த தருவாயில் இருந்தே, தொடர்ந்து அந்த தங்கும் விடுதியில் வேலை செய்து கொண்டிருந்தாள் அல்லவா? ஆனால் இப்போதும் வேலையைத் தொடர்வதை மஹதன் விரும்பவில்லை.



"நீங்களே நியாயத்தைச் சொல்லுங்க கிஷான்! நான் என்னோட சம்பளத்தை வீட்டுக்குக் குடுக்கனும்ல? அப்படின்னா, வேலையில் இருந்து தானே ஆகனும்?" என்று அவனைத் தனக்காகப் பேச அழைத்தாள் மௌனா.



"ப்ச்!" என்று சலித்துக் கொண்ட மஹதனிடம்,



"நீங்க என்னை டீமோடிவேட் பண்றீங்க!" என வருத்தமாக கூறினாள்.



"சத்தியமா இல்லை ம்மா‌! நீ இந்த ஜாப்ல இருந்தாலும், வேற கம்பெனியில் வேலைக்கு அப்ளை பண்ணாலும், எனக்குப் பிராப்ளமே இல்லை. உன்னோட சுதந்திரத்தில் நான் தலையிடலை. கொஞ்ச நாளைக்கு இதெல்லாம் ஹோல்ட் பண்ணி வைக்கலாமேன்னு தான் கேட்டேன்" என்று புரிய வைக்க முயற்சி செய்தான்.



"அடேய்! என்னை உட்கார வச்சிட்டு நீங்க ஆர்கியூ பண்ணிட்டு இருக்கீங்க? என்னோட முகி டார்லிங் வேற வரப் போறா! அதுக்கு ஏதாவது முக்கியத்துவம் கொடுத்துப் பேசறீங்களா?" என்று நொடித்துக் கொண்டான் கிஷான்.



"ஆமால்ல! அண்ணா! முக்தா வந்ததும் என் கூட வர சொல்றீங்களா?"



"என் கூட வருவாளான்னே டவுட் தான் ம்மா!" என்றான்.



"ஓகே அண்ணா. நான் அவங்களை தாஜா பண்ணிக்கிறேன்" என்று குறும்புடன் கூறினாள் மௌனா.



"நீ டாபிக்கை மாத்தாதே! நான் சொன்னதைக் கேட்கிறியா?" என்று அதே விஷயத்திற்கு வந்து நின்றான் மஹதன்.



"யோசிக்கிறேன் மஹி" என்று பதிலளித்தாள்.



"என்னமோ போ!" என்று அவளது விருப்பத்திற்கே விட்டு விட்டான்.



"உங்க டாபிக் முடிஞ்சிதா? என் விஷயத்துக்கு வருவோமா?" என்று பரிதாபமாக கேட்டான் கிஷான்.



"சாரி டா. சொல்லு" என்றான் மஹதன்.



"முக்தா இன்னைக்கு நைட் வந்துடுவா. எப்படியும் ஜெட் லாக் சரி ஆகி, வர்றதுக்கு டைம் எடுத்துப்பா. நான் எப்படி அப்ரோச் பண்றதுன்னு தெரியல" என்று கேட்டான்.



"இப்போ வரப் போற முக்தா, உனக்குச் சொந்தமான ஒருத்தி, உன்னோட மனைவியாகப் போகிறவள் தான்! அப்படியிருக்க, நீ அவளை எந்தக் காரணம் கொண்டும் கடந்த காலத்தைப் பத்திப் பேசாமல் இருந்தாலே போதும்!" என அறிவுறுத்தினான் நண்பன்.



"ஆமாம் அண்ணா. அவங்க அதை தான் எதிர்பார்ப்பாங்க. என் கூட சகஜமாகப் பேசுறாங்க. இருந்தாலும் ஒரு ஒதுக்கம் இருக்கத் தானே செய்யும்" என்று முக்தாவின் பக்கம் இருந்து யோசித்துப் பேசினாள் மௌனா.



"நான் எதுக்கு அதைப் பண்ணப் போறேன்டா ம்மா! அவ எனக்கு ஓகே சொன்னதே போதும். என்னோட காதலி அப்பறம் மனைவி ஆகப் போறா. அது மட்டும் தான் எனக்கு நினைவில் இருக்கு" என்று உறுதியாக கூறினான் கிஷான்.



"அப்பறம் என்ன? ஏதாவது கிஃப்ட் வாங்கி வச்சுட்டீங்களா?" என்றாள் மௌனா.



"இல்லை ம்மா"



"ஏன் அண்ணா?"



"நாங்க முதல் டேட்டிங் போகிறப்போ வாங்கிக் கொடுத்துக்கலாம்னு தான்" என்று வெட்கத்துடன் கூறினான்.



"ஹூம்" என அருகில் இருப்பவளைப் பார்த்தான் மஹதன்.



"உங்களுக்கு என்னாச்சு?" என்று முறைப்புடன் கேட்டாள்.



"டேட்டிங்!" என்று பாவமாக முகத்தை வைத்துக் கொண்டான்.



"கொஞ்சம் கருணை காட்டு ம்மா" என்று நண்பனுக்கு ஏற்றுப் பேசினான்.



"கருணை தானே அண்ணா! காட்டிடலாம்!" என்று மஹதனுடன் வெளியேறினாள் மௌனா.



அவர்களைச் சிரிப்புடன் அனுப்பி வைத்து விட்டு, முக்தாவின் வருகையினால் குதூகலம் அடைந்தான் கிஷான்.


- தொடரும்
 
Status
Not open for further replies.
Top