விமலா மருதராஜ்
Moderator
பகுதி - 1
“மாங்கல்யம் தந்துனானேன
மமஜீவன ஹேதுநா
கண்டே பத்நாமி ஸுபகே
த்வம ஜீவ சரதஸ் சதம்”
என்னும் இந்த மந்திரத்தை ஐயர் சொல்ல ...
“மங்களம் நிறைந்தவளே! உன்னோடு அமைந்த இந்த இல்லற வாழ்வை நல்ல முறையில் நடத்த வேண்டும்!! என்று இந்த புனித திருமாங்கல்யத்தை உன்னுடைய கழுத்தில் அணிவிக்கிறேன்.
என் வாழ்வில் ஏற்படும் சுக, துக்கங்களில் பங்கேற்கும் நீ, சுபபோகங்களுடன் நூறாண்டு வாழ்வாயாக!”
என்ற பொருளை உணர்ந்து நாதன் …. அம்முவின் கழுத்தில் அந்த பொன் தாலியை பூட்டினான்…
நாதனனோ!! இனி வரும் காலங்கள் எல்லாம் இவளோட தான்…. ஆனா இவ என்னை புரிஞ்சிக்கனுமே!!என்ற பரிதவிப்பில் ஊர்ல இருக்க எல்லா சாமிக்கிட்டையும்!! என்னை காப்பாற்றும்… இல்லை இல்லை எங்களை காப்பற்றும் என வேண்டிக்கொண்டான்….
அவள் கழுத்தில் தான் கட்டியிருந்த அந்த புது தாலிக்கும்!! அவள் நெற்றி வகிட்டிலும்!! இவள் என்னுடையவள் என்ற உரிமையில் அவன் குங்குமத்தை சூட்ட… அவளோ அவனை ஆழமாக பார்த்தாள்…
அவளின் பார்வையில் ஆயிரம் கேள்விகள் இருப்பது புரிந்தும் புரியாத மாதிரியே நடந்துக்கொள்பவனை அவளும் அறிந்தே இருந்தாள்….
இருவரின் மௌன மொழிகளுக்கு இடையில் வாழ்த்து சொல்ல வந்தவர்கள் வரிசையாக வர !! அவர்களை அழைத்து வந்த கார்முகில் நாதனின் கை பிடித்து வாழ்த்துக்கள் மாப்பிள்ளை.. என அவனை வாழ்த்தினான்..
அம்முமா!! நீ எவ்வுளோ அடி அடிச்சாலும் தாங்கிக்குற ஒருத்தனை உனக்கு கட்டிவச்சிட்டோம்… இனி நான் எக்ஸ்கேப்!!!என அவளை எப்போதும் போல வம்புப்பண்ண அவளோ ரொம்ப மரியாதையாக அண்ணா!!! இங்க ஒரு நிமிஷம் வாயேன்….
என்னையா மாமா கூப்பிட்டிங்க!! இதோ வரேன் … என கூப்பிடாத மாமாவை நோக்கி ஓடியவனை கண்டு சிரித்தாலும்…. அண்ணனுக்கே இந்த நிலை எனக்கு என்னலா காத்து இருக்கோ என வந்த பயத்தை வெளிக்காட்டாமல் வந்தவர்களை எல்லாம் அறிமுகம் படுத்தினான்...அவளும் அவளுக்கு தெரிந்தவர்களை எல்லாம் இவனுக்கு அறிமுகம் படுத்தினாள்…
பிறகு சில நொடிகளில் அவளை அவளுக்கே தெரியாமல் ரசித்து கொண்டே!!வந்தவர்களை கவனித்து கொண்டு இருந்தான்…
மச்சான் மோதிரம் போட வாங்க!! என ஐயர் கூப்பிட… மேடை ஏறிய கார்முகிலோ மோதிரத்தை போட்டு விட்டு அவனின் காதுக்கு மட்டுமே கேட்குமாறு மாப்பிள்ளை!! நீ அவளை ரொமாண்டிக் பார்வைனு நம்பி ஒரு பார்வை பார்க்க்குறியே… அதை என்னாலையே பார்க்க முடியல...நல்லவேளை இன்னும் அவ உன்னை பார்க்கல ….என சிரித்தவனை ஏன் மச்சி உன் கல்யாணத்துல நீ தர்ஷினியை பார்த்தியே ஒரு பார்வை!! அதே மாதிரி டிரை பண்ணேன்.. நீ என்னடான இப்படி சொல்லிட்டியே என அவனை டேமேஜ் பண்ணினான்…
இவர்களை கண்ட உற்றாரும் உறவினரும் நல்ல “மாப்பிள்ளை மச்சான்” என செல்லம் கொஞ்சி போக...அட கண்றாவியே!!...இவனுங்க அலைப்பறை தாங்கல என மனதிற்குள் நக்கலடித்தாலும் அம்முவும் அவர்களை ரசித்து கொண்டாள்…
காலையில் இருந்து அம்முவின் கடைகண் பார்வைக்காக ஏங்கிக்கொண்டு இருந்த நாதனை… கண்டுக்கொள்ளாத அம்முவின் கண்களில் தெரிந்த ரசிப்பையும் இதழ்களில் தெரிந்த முறுவலையும் கண்ட நாதனுக்கு கடுப்பாக இருந்தாலும்….இப்பவாச்சு இவ என்னை பார்த்தாலே என்ற எண்ணமே மனதை மகிழ்ச்சி கொள்ள செய்தது…
டேய் கார்.. அவுங்களை சாப்பிட கூட்டிட்டு வாடானு அனுப்புனா நீ என்ன மொக்கப்போட்டுட்டு இருக்க?? என திட்டிக்கொண்டே வந்த அந்த வீட்டின் மூத்த மாப்பிள்ளை குகன் .... எவ்வளவோ சொன்னேன்!!… இப்படி என் பேச்சை கேட்காம பாழும் கிணத்துல விழுந்துட்டியே சகலை என அவர் பங்குக்கு அம்முவை ஏற்றி விட… மாமா!! அக்கா வரா பாருங்க என அம்மு பூச்சாண்டி காட்டினாள்… அவரோ போடி உங்க அக்கா என்ன பெரிய ஆளா?? என அவரின் மனக்குமுறலை எல்லாம் அள்ளி விட்டுக்கொண்டு இருக்கும் போதே வாசுகியே மேடைக்கு வந்துக்கொண்டிருந்தாள்..
கார்முகிலின் கடைக்கண் பார்வையில் வாசுகி பட… மாமா இனியும் நீங்க வாய் பேசுனீங்கன அப்புறம் எல்லாம் உங்க விதி என்றவனின் உள்குத்து புரிய!! அந்தர்பல்டியாய் பேச்சை மாற்றி வாசுகியிடம் மாட்டக்கொள்ளாமல் தப்பித்தவரை கண்டு அங்கே ஒரு சிரிப்பலை….
சகலை நீங்க பெரிய ஆள் தான் போங்க!! என பாரட்டிய நாதனிடம் எல்லாத்துக்கும் இந்த நல்ல ஆத்மா தான் காரணம்…என கார்முகிலை காட்டினார்..
என்ன பண்றது??? எல்லாம் என் விதி!! என்னடா விதி?? என கேள்வி கேட்டுக்கொண்டே நெருங்கி வந்த வாசுகியிடம் அது ஒன்னும் இல்ல டி!! உங்களுக்குலா அண்ணனா இருக்கேன்ல அதை தான் டி சொன்னேன்….
நாங்க எல்லாம் உன் தங்கச்சியா பிறக்க நீ எல்லாம் கொடுத்து வச்சுயிருக்கனும் பக்கி என அவனை அடக்கிவிட்டு … அம்மு பசி தாங்க மாட்டானு உங்களை எல்லாம் அனுப்பி வச்சா எல்லாம் கதை பேசிக்கிட்டே இருக்கிங்க என அவர்களுக்கு ஒரு குட்டு வைத்து அனைவரையும் சாப்பிட அழைத்து சென்றாள்…
விருந்து முடிந்து மணப்பெண்ணையும் மணமகனையும் போட்டோ எடுக்க போட்டோகிராபர் கூட்டி வர சொல்ல…. நாதனோ இதோ வந்துட்டேன்!! என கத்தாத குறையாக மேடை ஏறினான் இவனுக்கு மாறாக அம்மு கடுப்பாக ஏறினாள்…
நாதனின் மனக்குறையை அறிந்த மாதிரியே…அந்த போட்டோகிராபர் அவனுக்கு அவரை அறியாமலே பல உதவிகளை செய்யலானர்..
கரும்பு திண்ண கூலி வேண்டுமா என்ன?? போட்டோகிராபர் எள் என நிக்க சொன்னால்!! நாதன் எண்ணெய் ஆக நின்றான்… இவர்களின் அலப்பறையில் அம்மு தான் திண்டாடிப்போனாள்…
இது எல்லாம் பத்தாது என அவனுடைய நண்பர்களும் அம்முவுடைய நண்பர்களும் அவர்களை வம்பு செய்ய அங்கே அம்மு மட்டுமே தவித்துப்போனாள்…
இதை எல்லாம் புரிந்து இருந்தாலும்!! இந்த நொடிகளை வீணாக்க நாதனுக்கு மனம் இல்லை…போட்டோகிராபர் எந்த போஸ் கொடுக்க சொன்னாலும் உள்ளார்ந்த அன்புடனும் காதலுடனும் செய்ய ஆரம்பித்தான்… அவள் கை பிடித்த போது அவள் கை நடுங்கினாலும் அவனின் பிடியில் அது மெல்ல மெல்ல மறைந்தப்போது அவனுடைய மனம் இன்னும் இன்னும் காதல் கொண்டது…
அவளுக்கு பிடிக்காதோ என்ற எண்ணிய ஒரு மனதை!! அவளின் ஒரு தொடுதல் தட்டி எறிந்தது… பிறகு அவன் அவளை அணைத்த போது!! வாகாய் அவள் கைக்குள் அடங்கிப்போனாள்… உலகமே அவன் கைக்குள் அடங்கிய உணர்வு…. அவன் கண்ணை பார்க்காமல் இவ்வுளவு நேரம் கடத்தியவளை வம்படியாக அவன் கண்ணோடு கண் பார்க்க வைத்தார்..அந்த போட்டோகிராபர்!! வாய் பேச்சு எதுவுமே இல்லாமல் அவனுடைய மொத்த காதலையும் அவன் கண்களின் வழியே அவன் கடத்த !! சில நொடிகளுக்கு மேல் அவளுக்கு அந்த கண்களின் காதலை ஏற்க முடியாமல்!! தலை குனிந்துக்கொண்டாள்…கூடியிருந்த அனைவரும் வெட்கமாம் மக்களே!! என அவர்களை கலாய்க்க…உண்மை தெரிந்த இருவரும் சிரித்தே மழுப்பினர்…
எல்லாம் முடிஞ்சிச்சு பா!! நீங்க கிளம்பலாம் என்று கிளம்பிய போட்டோகிராபரை ராஜ மரியாதையுடன் அனுப்பி வைத்தான் நாதன்…
திருமணம் விழாவும்..விருந்தும்.. இனிதே நிறைவு பெற மணமக்களை புகுந்த வீட்டுக்கு அழைத்து சென்றனர்…
அம்முவிற்கு என்னவோ தெரிந்த வீடு தான் ...இருந்தும் தன் குடும்பத்தை விட்டு செல்வது கஷ்டமாக இருந்தது.. அதை புரிந்து கொண்ட நாதனும் அவளின் போக்கிலே அவளை இருக்க விட்டான்... வீட்டுக்கு வந்தவுடன் அவளிடம் சொல்லிவிட்டு குடும்பம் விடை பெற!! கண்கலங்கியவளை அவளுடைய தாயும் தகப்பனும் அணைத்து ஆறுதல் படுத்தி கிளம்ப… அண்ணன் கார்முகிலும் அக்கா வாசுகியுமே கண்ணீர் மல்க நிற்க தர்ஷினியும்… குகனும் தான் அவர்களை நிதர்சனத்துக்கு கொண்டு வந்து கலகலப்புடனே அவளிடம் விடைப்பெற்றனர்..
கார்முகிலோ!! ஒரு அண்ணனாகவும் நாதனின் தோழனாகும் அறிவுரை என்ற பெயரில் சில மிரட்டல்களையும் விட்டு சென்றான்…
அடப்பாவி!! இவன் தங்கச்சி சிரிச்சி சந்தோஷமா இல்லனா எனக்கு பால்டாய்ல் கொடுத்துடுவேனு சொல்லறானே !!! பாவிப்பய… இவ மேல ஆசைப்பட்டு கட்டுன பாவத்துக்கு உயிர் பயத்தைலா அனுபவிக்கனும் போலையே தனக்கு தானே பேசிக்கொண்டே ரூமிற்குள் சென்றான்…
அடேய் நாதா!! அதுக்குல்ல லூசா மாறிட்டியா??? என அவன் தங்கை கண்மணி நக்கலடித்த பின்னரே அவன் மைட் வாய்ஸ் என நினைத்து சவுண்டாக பேசியது தெரிந்தது…
“கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என சொல்லும் ஆண் பரம்பரையில் பிறந்தவன்” ஆயிற்றே… ஏய் யாரு லூசு…போடி எருமை…. போயி அண்ணனுக்கு ஒரு காபி எடுத்துட்டு வா என அவளை அனுப்பி விட்டு உட்கார்ந்தவனை அவனுக்கு வந்த போன் கால் எழுப்பியது… பேசிக்கொண்டே அந்த ரூமிற்கு ஓரத்திற்கே சென்று விட்டான்..
அம்மு இந்த ரூம்ல நீ கொஞ்சம் ரெஸ்ட் எடு !! நான் கொஞ்ச நேரம் கழிச்சு வந்து எழுப்புறேன் என அவளை ரூமிற்குள் விட்டு சென்ற அத்தை போனதும் அவளும் அசதியில் படுத்துவிட்டாள்… அங்கே ஏற்கனவே இருந்ந நாதனை அம்மு கவனிக்கவேயில்லை… அவனும் கொஞ்சம் நேரம் கழித்தே அவளை அங்கே கவனித்தான்…
ரோசக்காரி!! ஒரு வார்த்தை பேசுறாளா பாரேன்...கல்யாணம் பண்ணிட்டு இவளை எப்படி எல்லாம் பார்த்துக்கலானு கனவு கண்டா...இவ கோவத்தை தீர்க்கவே பல மாசம் ஆகும் போலையே ஆண்டவா.. என அவளை ரசித்து கொண்டே இருந்தவனை அவனின் தாயாரின் குரல் நினைவுக்கு திருப்ப...
என்ன மா ?? என்னை கூப்பிட்டியா??? டேய் ரொம்ப நேரமா கூப்பிடுரேன்….அவ ரெஸ்ட் எடுக்கட்டும் நீயும் கொஞ்சம் படுப்பா என மகனின் தலை கோதி சென்றார்..
“மாங்கல்யம் தந்துனானேன
மமஜீவன ஹேதுநா
கண்டே பத்நாமி ஸுபகே
த்வம ஜீவ சரதஸ் சதம்”
என்னும் இந்த மந்திரத்தை ஐயர் சொல்ல ...
“மங்களம் நிறைந்தவளே! உன்னோடு அமைந்த இந்த இல்லற வாழ்வை நல்ல முறையில் நடத்த வேண்டும்!! என்று இந்த புனித திருமாங்கல்யத்தை உன்னுடைய கழுத்தில் அணிவிக்கிறேன்.
என் வாழ்வில் ஏற்படும் சுக, துக்கங்களில் பங்கேற்கும் நீ, சுபபோகங்களுடன் நூறாண்டு வாழ்வாயாக!”
என்ற பொருளை உணர்ந்து நாதன் …. அம்முவின் கழுத்தில் அந்த பொன் தாலியை பூட்டினான்…
நாதனனோ!! இனி வரும் காலங்கள் எல்லாம் இவளோட தான்…. ஆனா இவ என்னை புரிஞ்சிக்கனுமே!!என்ற பரிதவிப்பில் ஊர்ல இருக்க எல்லா சாமிக்கிட்டையும்!! என்னை காப்பாற்றும்… இல்லை இல்லை எங்களை காப்பற்றும் என வேண்டிக்கொண்டான்….
அவள் கழுத்தில் தான் கட்டியிருந்த அந்த புது தாலிக்கும்!! அவள் நெற்றி வகிட்டிலும்!! இவள் என்னுடையவள் என்ற உரிமையில் அவன் குங்குமத்தை சூட்ட… அவளோ அவனை ஆழமாக பார்த்தாள்…
அவளின் பார்வையில் ஆயிரம் கேள்விகள் இருப்பது புரிந்தும் புரியாத மாதிரியே நடந்துக்கொள்பவனை அவளும் அறிந்தே இருந்தாள்….
இருவரின் மௌன மொழிகளுக்கு இடையில் வாழ்த்து சொல்ல வந்தவர்கள் வரிசையாக வர !! அவர்களை அழைத்து வந்த கார்முகில் நாதனின் கை பிடித்து வாழ்த்துக்கள் மாப்பிள்ளை.. என அவனை வாழ்த்தினான்..
அம்முமா!! நீ எவ்வுளோ அடி அடிச்சாலும் தாங்கிக்குற ஒருத்தனை உனக்கு கட்டிவச்சிட்டோம்… இனி நான் எக்ஸ்கேப்!!!என அவளை எப்போதும் போல வம்புப்பண்ண அவளோ ரொம்ப மரியாதையாக அண்ணா!!! இங்க ஒரு நிமிஷம் வாயேன்….
என்னையா மாமா கூப்பிட்டிங்க!! இதோ வரேன் … என கூப்பிடாத மாமாவை நோக்கி ஓடியவனை கண்டு சிரித்தாலும்…. அண்ணனுக்கே இந்த நிலை எனக்கு என்னலா காத்து இருக்கோ என வந்த பயத்தை வெளிக்காட்டாமல் வந்தவர்களை எல்லாம் அறிமுகம் படுத்தினான்...அவளும் அவளுக்கு தெரிந்தவர்களை எல்லாம் இவனுக்கு அறிமுகம் படுத்தினாள்…
பிறகு சில நொடிகளில் அவளை அவளுக்கே தெரியாமல் ரசித்து கொண்டே!!வந்தவர்களை கவனித்து கொண்டு இருந்தான்…
மச்சான் மோதிரம் போட வாங்க!! என ஐயர் கூப்பிட… மேடை ஏறிய கார்முகிலோ மோதிரத்தை போட்டு விட்டு அவனின் காதுக்கு மட்டுமே கேட்குமாறு மாப்பிள்ளை!! நீ அவளை ரொமாண்டிக் பார்வைனு நம்பி ஒரு பார்வை பார்க்க்குறியே… அதை என்னாலையே பார்க்க முடியல...நல்லவேளை இன்னும் அவ உன்னை பார்க்கல ….என சிரித்தவனை ஏன் மச்சி உன் கல்யாணத்துல நீ தர்ஷினியை பார்த்தியே ஒரு பார்வை!! அதே மாதிரி டிரை பண்ணேன்.. நீ என்னடான இப்படி சொல்லிட்டியே என அவனை டேமேஜ் பண்ணினான்…
இவர்களை கண்ட உற்றாரும் உறவினரும் நல்ல “மாப்பிள்ளை மச்சான்” என செல்லம் கொஞ்சி போக...அட கண்றாவியே!!...இவனுங்க அலைப்பறை தாங்கல என மனதிற்குள் நக்கலடித்தாலும் அம்முவும் அவர்களை ரசித்து கொண்டாள்…
காலையில் இருந்து அம்முவின் கடைகண் பார்வைக்காக ஏங்கிக்கொண்டு இருந்த நாதனை… கண்டுக்கொள்ளாத அம்முவின் கண்களில் தெரிந்த ரசிப்பையும் இதழ்களில் தெரிந்த முறுவலையும் கண்ட நாதனுக்கு கடுப்பாக இருந்தாலும்….இப்பவாச்சு இவ என்னை பார்த்தாலே என்ற எண்ணமே மனதை மகிழ்ச்சி கொள்ள செய்தது…
டேய் கார்.. அவுங்களை சாப்பிட கூட்டிட்டு வாடானு அனுப்புனா நீ என்ன மொக்கப்போட்டுட்டு இருக்க?? என திட்டிக்கொண்டே வந்த அந்த வீட்டின் மூத்த மாப்பிள்ளை குகன் .... எவ்வளவோ சொன்னேன்!!… இப்படி என் பேச்சை கேட்காம பாழும் கிணத்துல விழுந்துட்டியே சகலை என அவர் பங்குக்கு அம்முவை ஏற்றி விட… மாமா!! அக்கா வரா பாருங்க என அம்மு பூச்சாண்டி காட்டினாள்… அவரோ போடி உங்க அக்கா என்ன பெரிய ஆளா?? என அவரின் மனக்குமுறலை எல்லாம் அள்ளி விட்டுக்கொண்டு இருக்கும் போதே வாசுகியே மேடைக்கு வந்துக்கொண்டிருந்தாள்..
கார்முகிலின் கடைக்கண் பார்வையில் வாசுகி பட… மாமா இனியும் நீங்க வாய் பேசுனீங்கன அப்புறம் எல்லாம் உங்க விதி என்றவனின் உள்குத்து புரிய!! அந்தர்பல்டியாய் பேச்சை மாற்றி வாசுகியிடம் மாட்டக்கொள்ளாமல் தப்பித்தவரை கண்டு அங்கே ஒரு சிரிப்பலை….
சகலை நீங்க பெரிய ஆள் தான் போங்க!! என பாரட்டிய நாதனிடம் எல்லாத்துக்கும் இந்த நல்ல ஆத்மா தான் காரணம்…என கார்முகிலை காட்டினார்..
என்ன பண்றது??? எல்லாம் என் விதி!! என்னடா விதி?? என கேள்வி கேட்டுக்கொண்டே நெருங்கி வந்த வாசுகியிடம் அது ஒன்னும் இல்ல டி!! உங்களுக்குலா அண்ணனா இருக்கேன்ல அதை தான் டி சொன்னேன்….
நாங்க எல்லாம் உன் தங்கச்சியா பிறக்க நீ எல்லாம் கொடுத்து வச்சுயிருக்கனும் பக்கி என அவனை அடக்கிவிட்டு … அம்மு பசி தாங்க மாட்டானு உங்களை எல்லாம் அனுப்பி வச்சா எல்லாம் கதை பேசிக்கிட்டே இருக்கிங்க என அவர்களுக்கு ஒரு குட்டு வைத்து அனைவரையும் சாப்பிட அழைத்து சென்றாள்…
விருந்து முடிந்து மணப்பெண்ணையும் மணமகனையும் போட்டோ எடுக்க போட்டோகிராபர் கூட்டி வர சொல்ல…. நாதனோ இதோ வந்துட்டேன்!! என கத்தாத குறையாக மேடை ஏறினான் இவனுக்கு மாறாக அம்மு கடுப்பாக ஏறினாள்…
நாதனின் மனக்குறையை அறிந்த மாதிரியே…அந்த போட்டோகிராபர் அவனுக்கு அவரை அறியாமலே பல உதவிகளை செய்யலானர்..
கரும்பு திண்ண கூலி வேண்டுமா என்ன?? போட்டோகிராபர் எள் என நிக்க சொன்னால்!! நாதன் எண்ணெய் ஆக நின்றான்… இவர்களின் அலப்பறையில் அம்மு தான் திண்டாடிப்போனாள்…
இது எல்லாம் பத்தாது என அவனுடைய நண்பர்களும் அம்முவுடைய நண்பர்களும் அவர்களை வம்பு செய்ய அங்கே அம்மு மட்டுமே தவித்துப்போனாள்…
இதை எல்லாம் புரிந்து இருந்தாலும்!! இந்த நொடிகளை வீணாக்க நாதனுக்கு மனம் இல்லை…போட்டோகிராபர் எந்த போஸ் கொடுக்க சொன்னாலும் உள்ளார்ந்த அன்புடனும் காதலுடனும் செய்ய ஆரம்பித்தான்… அவள் கை பிடித்த போது அவள் கை நடுங்கினாலும் அவனின் பிடியில் அது மெல்ல மெல்ல மறைந்தப்போது அவனுடைய மனம் இன்னும் இன்னும் காதல் கொண்டது…
அவளுக்கு பிடிக்காதோ என்ற எண்ணிய ஒரு மனதை!! அவளின் ஒரு தொடுதல் தட்டி எறிந்தது… பிறகு அவன் அவளை அணைத்த போது!! வாகாய் அவள் கைக்குள் அடங்கிப்போனாள்… உலகமே அவன் கைக்குள் அடங்கிய உணர்வு…. அவன் கண்ணை பார்க்காமல் இவ்வுளவு நேரம் கடத்தியவளை வம்படியாக அவன் கண்ணோடு கண் பார்க்க வைத்தார்..அந்த போட்டோகிராபர்!! வாய் பேச்சு எதுவுமே இல்லாமல் அவனுடைய மொத்த காதலையும் அவன் கண்களின் வழியே அவன் கடத்த !! சில நொடிகளுக்கு மேல் அவளுக்கு அந்த கண்களின் காதலை ஏற்க முடியாமல்!! தலை குனிந்துக்கொண்டாள்…கூடியிருந்த அனைவரும் வெட்கமாம் மக்களே!! என அவர்களை கலாய்க்க…உண்மை தெரிந்த இருவரும் சிரித்தே மழுப்பினர்…
எல்லாம் முடிஞ்சிச்சு பா!! நீங்க கிளம்பலாம் என்று கிளம்பிய போட்டோகிராபரை ராஜ மரியாதையுடன் அனுப்பி வைத்தான் நாதன்…
திருமணம் விழாவும்..விருந்தும்.. இனிதே நிறைவு பெற மணமக்களை புகுந்த வீட்டுக்கு அழைத்து சென்றனர்…
அம்முவிற்கு என்னவோ தெரிந்த வீடு தான் ...இருந்தும் தன் குடும்பத்தை விட்டு செல்வது கஷ்டமாக இருந்தது.. அதை புரிந்து கொண்ட நாதனும் அவளின் போக்கிலே அவளை இருக்க விட்டான்... வீட்டுக்கு வந்தவுடன் அவளிடம் சொல்லிவிட்டு குடும்பம் விடை பெற!! கண்கலங்கியவளை அவளுடைய தாயும் தகப்பனும் அணைத்து ஆறுதல் படுத்தி கிளம்ப… அண்ணன் கார்முகிலும் அக்கா வாசுகியுமே கண்ணீர் மல்க நிற்க தர்ஷினியும்… குகனும் தான் அவர்களை நிதர்சனத்துக்கு கொண்டு வந்து கலகலப்புடனே அவளிடம் விடைப்பெற்றனர்..
கார்முகிலோ!! ஒரு அண்ணனாகவும் நாதனின் தோழனாகும் அறிவுரை என்ற பெயரில் சில மிரட்டல்களையும் விட்டு சென்றான்…
அடப்பாவி!! இவன் தங்கச்சி சிரிச்சி சந்தோஷமா இல்லனா எனக்கு பால்டாய்ல் கொடுத்துடுவேனு சொல்லறானே !!! பாவிப்பய… இவ மேல ஆசைப்பட்டு கட்டுன பாவத்துக்கு உயிர் பயத்தைலா அனுபவிக்கனும் போலையே தனக்கு தானே பேசிக்கொண்டே ரூமிற்குள் சென்றான்…
அடேய் நாதா!! அதுக்குல்ல லூசா மாறிட்டியா??? என அவன் தங்கை கண்மணி நக்கலடித்த பின்னரே அவன் மைட் வாய்ஸ் என நினைத்து சவுண்டாக பேசியது தெரிந்தது…
“கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என சொல்லும் ஆண் பரம்பரையில் பிறந்தவன்” ஆயிற்றே… ஏய் யாரு லூசு…போடி எருமை…. போயி அண்ணனுக்கு ஒரு காபி எடுத்துட்டு வா என அவளை அனுப்பி விட்டு உட்கார்ந்தவனை அவனுக்கு வந்த போன் கால் எழுப்பியது… பேசிக்கொண்டே அந்த ரூமிற்கு ஓரத்திற்கே சென்று விட்டான்..
அம்மு இந்த ரூம்ல நீ கொஞ்சம் ரெஸ்ட் எடு !! நான் கொஞ்ச நேரம் கழிச்சு வந்து எழுப்புறேன் என அவளை ரூமிற்குள் விட்டு சென்ற அத்தை போனதும் அவளும் அசதியில் படுத்துவிட்டாள்… அங்கே ஏற்கனவே இருந்ந நாதனை அம்மு கவனிக்கவேயில்லை… அவனும் கொஞ்சம் நேரம் கழித்தே அவளை அங்கே கவனித்தான்…
ரோசக்காரி!! ஒரு வார்த்தை பேசுறாளா பாரேன்...கல்யாணம் பண்ணிட்டு இவளை எப்படி எல்லாம் பார்த்துக்கலானு கனவு கண்டா...இவ கோவத்தை தீர்க்கவே பல மாசம் ஆகும் போலையே ஆண்டவா.. என அவளை ரசித்து கொண்டே இருந்தவனை அவனின் தாயாரின் குரல் நினைவுக்கு திருப்ப...
என்ன மா ?? என்னை கூப்பிட்டியா??? டேய் ரொம்ப நேரமா கூப்பிடுரேன்….அவ ரெஸ்ட் எடுக்கட்டும் நீயும் கொஞ்சம் படுப்பா என மகனின் தலை கோதி சென்றார்..