மனதை வருடும்
இசையின் மடியில்,
மழலையாய் என்றும்
தவழக் காதல்.
அன்பின் மகிழ்வில்
நெகிழ்ந்து போக,
அன்பைப் பகிர்ந்து
கரைந்து போக,
அளவிளாக் காதல்.
பரந்த வானை
பௌர்ணமி நிலவில்
அன்னாந்து பார்த்து,
உள்ளதே ரசிக்க
கொள்ளைக் காதல்.
தமிழைச் சுவைத்து
தமிழ்ப்பால் பருக,
என்றுமே எனக்கு
எல்லையிலாக் காதல்.
மனதை மயக்கும்,
அழகின் பிடியில்
எப்பொழுதும் எனக்கு
அலாதிக் காதல்.
ருசிக்கும் உணவை
ரசித்து மகிழ,
எப்பொழுதும் அதன் மேல்
தப்பாத காதல்.
எல்லையே இல்லாது,
எங்கும் நிறைந்துள்ள
இறைவன் மீதெனக்கு
ஈடில்லாக் காதல்.
காதல்,காதல்,
எல்லையில்லாக் காதல்
எத்தனையோ காதல்
எழுத முடியா காதல்.
இசையின் மடியில்,
மழலையாய் என்றும்
தவழக் காதல்.
அன்பின் மகிழ்வில்
நெகிழ்ந்து போக,
அன்பைப் பகிர்ந்து
கரைந்து போக,
அளவிளாக் காதல்.
பரந்த வானை
பௌர்ணமி நிலவில்
அன்னாந்து பார்த்து,
உள்ளதே ரசிக்க
கொள்ளைக் காதல்.
தமிழைச் சுவைத்து
தமிழ்ப்பால் பருக,
என்றுமே எனக்கு
எல்லையிலாக் காதல்.
மனதை மயக்கும்,
அழகின் பிடியில்
எப்பொழுதும் எனக்கு
அலாதிக் காதல்.
ருசிக்கும் உணவை
ரசித்து மகிழ,
எப்பொழுதும் அதன் மேல்
தப்பாத காதல்.
எல்லையே இல்லாது,
எங்கும் நிறைந்துள்ள
இறைவன் மீதெனக்கு
ஈடில்லாக் காதல்.
காதல்,காதல்,
எல்லையில்லாக் காதல்
எத்தனையோ காதல்
எழுத முடியா காதல்.