Mr D devil
Moderator
அவளின் மருண்ட மான் விழிகளை பார்த்துக் கொண்டே நெருங்கியவன் "வெறும் ஹக் வீடியோல என்ன பேபி கிக் இருக்கு...நம்ம ஃபுல் வீடியோ போடுவோம் கம்..."எனக் கூறினான்.
உள்ளூர பயம் ஆட்கொண்டாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் நின்றவள் "இதுக்கெல்லாம் பயபடற ஆள் நான் இல்லை... ஒழுங்கா வழியை விடுங்க இல்லைன்னா நடக்கறதே வேற..." எச்சரிக்கும் குரலில் கூறினாள்.
இருவருக்கும் இடைேயான இடைவெளியே நன்றாகவே குறைத்தப்படி "என்ன நடக்கும்..." ஒற்றை புருவத்தை உயர்த்திக் கேட்டான்.
"எட்டி உதைப்பேன்..கால் எங்க வேணாலும் படும்..." எனக் கூறி முடிக்கும் முன் அவளை நன்றாகவே நெருங்கி நின்றான்.
அவனின் செய்கையில் பல மடங்கு கோபம் வர சட்டென அவனை எட்டி உதைக்கும் எண்ணம் தலைதூக்க அதை செயல்படுத்தப் போகும் வேளையில் அவளை முழுவதுமாக தன்னை நோக்கி இழுத்திருந்தான் அவன். பெண்ணவளின் தேகம் மொத்தமும் அவனின் மேல் மோதி நிற்க அவளின் கோபமும் எல்லையைக் கடந்திருந்தது.
அவனை சீற்றம் பொங்கும் விழிகளுடன் பார்த்தவள் "தி இஸ் அ லிமிட். நீ நினைக்கறத பண்ணவெல்லாம் வேற ஆளை பாரு..." என எரிச்சல் குரலில் கூறியவாறு அவனது டீ சார்டின் தோள் பகுதியைப் பிடித்து அவனைத் தன்னிலிருந்து விலக்கி விட முயன்றாள்.
அவனோ அவளின் பின்னந்தலைக்குள் கையிட்டு அவளது தலையை ஆணித்தரமாக பிடித்துக் கொண்டப்படி "ஆம்பளை எனக்கே கூச்சம் வர மாதிரி எங்க பார்த்தாலும் வா வான்னு கூப்பிடுவ. இப்ப நானா கூப்படவும் நல்லவ மாதிரி நடிக்கிறயா..." எனக் கூறியவனின் குரலில் இருந்தும் சீற்றம் வெளிப்பட்டது.
அவனின் சீற்றத்தை துளியும் கண்டுகொள்ளாமல் "விடுஉஉ..." எனத் திமிறினாள் அவனின் மேகப் பெண்.
அவளின் திமிறல் அவனுக்குள் மென்மையை கொண்டு வந்ததோ என்னவோ "ஸ்ஸ், டோண்ட் மூவ் பேபி..." என அவளின் சேவியோரம் மென்மையிலும் மென்மையாக கூறினான். அவனின் மூச்சுக் காற்று முகிலின் செவியை தீண்ட அவளின் மேனி சிலிர்த்து அடங்கியது..
"என்கூட இருக்கறதுக்கான அமௌண்ட்டை என் பி. ஏ. கிட்ட சொல்றேன் வாங்கிக்க..." எனக் கூறியது மட்டுமல்லாமல் அவளின் செவி நுனியை கடிக்கவும் செய்தான். அவனின் பேச்சிற்கு சிறிதும் சம்பந்தம் இல்லாமல் இருந்தது அவனின் செய்கை...
"ஸ்... நீயே ஒட்டுண்ணி வாழ்க்கை வாழ்ந்துட்டு இருக்க... இதுல எனக்கு வேற அமௌண்ட் தருவியா..." அத்தனை எள்ளலாக கேட்டாள்.
முகில் அப்படிக் கூறியது அவனின் முகம் கோபத்தில் இறுகியது. அந்த கோபத்தை அவளின் இடையில் காட்டிட நினைத்தானோ என்னவோ அவளின் இடையின் சதையை நன்றாக இறுக்கிப் பிடித்தான். அவன் கை கொடுக்கும் அழுத்தம் இவளுக்கு அதீத வலியை உண்டாக்க அது அவளின் முகத்திலும் பிரதிபலித்தது...
அவளின் சுருங்கிய முகத்தை பார்த்தபடி "டோண்ட் வொர்ரி பேபி... உனக்கு வலிக்காத போலவே சாரி இது உனக்கு ஃபர்ஸ்ட் டைமா இல்லை லிஸ்ட் இருக்கா..." அவளைக் காயப்படுத்தவே இப்படி கேட்டான். அதற்கு அவளிடம் வெறும் பார்வை மட்டுமே பதிலாக வந்தது..
அவளின் பதிலுக்கு காத்திருக்காமல் மேலும் முன்னேறினான்.. அவனின் மூச்சுக் காற்று அவள் கன்னத்தில் மோத அவனின் அதரங்களோ அவளின் அதரங்களுக்கு மிக அருகில் இருக்க மெல்லிய குரலில்
"பகலா இருந்தாலும் சரி, நைட்டா இருந்தாலும் சரி என் பெர்போமன்ஸ் நல்லாவே இருக்கும் பேபி.. அது நேத்து கிஸ் பண்ணும் போதே தெரிஞ்சிருக்குன்னு நினைக்கிறேன்..." என்றான்.
அவனின் இறுகிய பிடியால் எழுந்த வலியோ இல்லை அவனின் பேச்சால் மனதில் தோன்றிய வலியோ எதுவோ ஒன்று அவளின் நயனங்களை இறுக மூடிக் கொள்ள செய்தது. அவளின் மூடிய விழிகளைப் பார்த்தவனின் இறுகிய பிடி மெல்ல தளர அவன் இதழ்களோ அவளின் வெண்சங்கு கழுத்தை நோக்கி பயணித்தது.
தன் அதரங்களில் அவனின் இதழ் முத்தத்தைப் பதிப்பான் என நினைத்திருக்க அவளின் கன்னத்தில் பட்டு தெறித்த மூச்சுக் காற்று தற்போது அவளின் வெண் சங்கு கழுத்தில் மோதியது அப்போது அவனின் அதரங்கள் இருப்பது? சட்டென கண்களை திறந்தவள் அவனை பலம் கொண்டு தள்ளிவிட்டு நிமிடம் அங்கு நில்லாது கதவைத் திறந்து ஓடிட... இவனின் இதழ்களில் புன்னகை அரும்பியது.. செந்நிறமாக சிவந்திருந்த அவனின் வதனம் பழைய நிலைக்கு மாற சில நொடிகள் தேவைப் பட, அவள் சென்று பத்து,பதினைந்து நிமிடங்கள் கழித்து தான் அந்த அறையிலிருந்து வெளியில் வந்தான்...
***
ஸ்டோர் ரூமிலிருந்து வெளியே வந்தவள் நேராக தன் அறைக்கு தான் சென்றாள். மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க படுக்கையில் அமர்ந்தவளின் எண்ணங்கள் முழுவதும் அவனின் மூடிய விழிகளும் அழுத்தமான சிவந்த இதழ்களும் மட்டுமே வளம் வர தலையை உலுக்கி முகத்தை அழுந்த துடைத்த நேரம் அவளின் தோழனிடமிருந்து அழைப்பு வந்தது...
அழைப்பை ஏற்று காதில் வைத்தவள் "சொல்லு டா, போலீஸ்ல சரண்டரான ஆளை பெய்யில்ல எடுக்க ஏற்பாடு பண்ணிட்டியா..." அந்த தகவலை கூற தான் தன் நண்பன் அழைத்து இருப்பான் என்பது அப்போதைய இவளின் யூகமாக இருந்தது.
"ம்ம் பண்ணிட்டேன். நம்ம பிளேன் சக்சஸ் ஆனதுக்கு ட்ரீட் தரேன்னு சொன்ன எப்ப தர..." என தான் பேச நினைத்ததை(?) மட்டுமேக் கேட்டான்.
"ட்ரீட் தானே கொடுத்துட்டா போச்சு... ஆமா ஏன் வாய்ஸ் ஒரு மாதிரி இருக்கு..."எனக் கேட்டதும் எதிர்ப்புறம் பதில் கூறவில்லை
"ஹலோ கெளரி,என்னடா ஆச்சு..." என மீண்டும் கேட்க "அது நேத்து குடிச்ச கோக் ஒத்துக்கலப் போல..." என்றான் அவளின் தோழன்(?) கெளரி ஷங்கர்.
"ஹான் சரி இன்னைக்கு..." என இவள் ஏதோ கூறும் முன்பே
"முடிவா சொல்லு ட்ரீட் தருவீயா மாட்டியா..." என அதிலேயே நின்றான் எதிர்ப்புறம் இருந்தவன்.
"டே, அதுதான் தரேன்னு சொன்னனே அப்பறம் என்ன டா சும்மா சும்மா ட்ரீட் தருவீயா மாட்டியான்னு கேட்டுட்டே இருக்க.." எனக் கடுப்பாக கேட்டாள்
"சரி, *** இங்க வந்துடு நான் வெயிட் பண்ணுவேன்..." சென்னை ஈசியார் ரோட்டில் உள்ள பிரபலமான கிளப் பெயரைக் கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்தான் முகிலின் தோழன்.
"இவனை..." என பல்லைக் கடித்தவள் எதை பற்றியும் யோசிக்காமல் கெளரி கூறிய இடத்திற்கு புறப்பட்டாள். அவனின் குரலில் இருந்த மாற்றத்தை என்னவென்று யோசித்து இருக்கலாமோ?
***
இங்கு அதே சமயம்
அறையினுள் நுழைந்த பிறையின் முகம் கோபத்தில் இறுகி இருந்தது... கணவனின் முகத்தைப் பார்த்தே கோபமாக இருக்கிறார் என உணர்ந்த தேவியோ தன் கணவனையேப் பார்த்தார்... பிறையோ தேவியின் பார்வையை துளியும் கண்டுகொள்ளாமல் படுக்கையில் அமர்ந்தார்... அவரின் அருகில் சென்று அமர்ந்தவர் "நான் பேசனதுல ஏதாவது கோபமாங்க..." எனக் கேட்டார்.
அவரின் கேள்விக்கு நிசப்த பார்வையை பதிலாக கொடுத்தார் பிறை... அவர் பதில் பேசவில்லை என்றாலும்
"இதுக்கு மேல கண்டிக்காம விட்டா அவ இன்னும் இன்னும் தப்பு பண்ணுவா மாமா. நீங்க சொன்னீங்கன்னு தான் இத்தனை நாள் அவ பேசன எல்லாத்துக்கும் அமைதியா போனேன். ஆனா இன்னைக்கு அது எல்லையை தாண்டிப் போயிடுச்சு. இனியும் அவளை இப்படியே விட்டா நல்லா இருக்காதுங்க..." என விளக்கியவர் மீண்டும்
"இண்டஸ்ட்ரில ஆகாஷூக்கு இருந்த நல்ல பேர் இந்த வீடியோனால ஸ்ப்பாயில் ஆயிடுச்சு. அந்த அதுகூட நாள் போக போக மறந்துடும் மாறிடும். இப்ப அவனுக்கு முப்பதாகுது அவன் கல்யாணத்தை பத்தி யோசிக்கணுல. இப்படி ஒரு கெட்டப் பேர் வந்தா நல்லா இருக்குமா சொல்லுங்க..." எனக் கேட்டார் தேவி.
பக்கவாட்டாக திரும்பி தன் மனைவியை பார்த்தவர் "யாராவது ஒருத்தர் கண்டிப்போட இருக்கறதுல தப்பில்லை. நீ முகில கண்டிச்சதுல எனக்கு ஒரு பிராப்ளமும் இல்ல மா, சின்ன வருத்தம் தான் அதுவும் சரியாகிடும்..." உண்மையை மறையாது கூறினார்..
முகிலின் செயலில் வருத்தமாக உள்ளது என கூறுகிறார் போல என நினைத்தவர் தன்னவரின் கன்னத்தைப் பிடித்து தன்னை பார்க்க செய்தவர்
"அவ இப்படி பண்ணதில உங்களுக்கு வருத்தம் இருக்குன்னு தெரியும். இருந்தாலும் அவ வளர்ந்த முறையும் சூழ்நிலையும் வேற தானே..." என தேவி சொல்ல
கசப்பாக சிரித்தவர் "எஸ் தேவி...அவ இப்படி இருக்கறதுக்கு ஒரு வகையில நாமும் காரணம்..." என்றதும் தேவியின் முகம் பழைய நினைவுகளில் இறுகியது.
தன்னவளின் முக இறுக்கத்தை பார்த்தவர் "உனக்கு நடந்தது சாதாரண விஷயம் இல்லைன்னு எனக்கு தெரியும். இப்ப வரைக்கும் அந்த நாளோட இழப்பு, வலி, வேதனை எதுவும் உன்னை விட்டு போகலன்னு புரிது மா. சொல்லப்போனா அது மறையவே மறையாது... மனசுலயே வடுவா இருக்கற ஒன்ன தினமும் ஞாபகம் பண்ற மாதிரி முகில் வந்து நிக்கவும் உன்னால அவளை துளியும் ஏத்துக்க முடியலன்னு தெரியுது..." என்றவர் பெருமூச்சுடன்
"அதே சமயம் என் பொண்ணோட பக்கத்துல இருந்தும் யோசிக்கறது த்தப்பில்லையே... அவளோட பாயிண்ட் ஆப் வியூல இருந்து பார்த்தா அவ நடந்துக்கறது சரி தானே... சின்ன வயசில இருந்தே தனியா வளர்ந்து இருக்கா. அண்ட் அங்க என்ன சொன்னாங்களோ அதை அப்படியே இங்க ரிஃப்லக்ட் பண்றா அவ்வளவு தான்..." என தன் மகளின் பக்கமிருந்தும் பிறை யோசித்தார்.
அவரின் பேச்சில் முகம் சுருங்க
"யார் என்ன சொல்லிக் கொடுத்தா என்னங்க? இவளுக்கு அறிவு வேண்டாம். எதையும் யோசிக்கவே மாட்டாளா? இன்னைக்கு இவ யோசிக்காம செஞ்ச காரியத்துல ஆகாஷ் ஃப்யூசரோட சேர்த்து இவளோட ஃப்யூசரும் தானே கேள்விக் குறியாகி நிக்குது..." என்றார். அதற்கு பிறையிடம் பதிலில்லை வெற்று பார்வை மட்டுமே..
'அனைத்தும் அறிந்த இவரே அவளுக்காக தன்னிடம் இப்படி நடந்து கொள்கிறாரே...' என்ற கோபம் சட்டென முளைக்க படுக்கையை விட்டு எழுந்து "அப்ப அவ சின்ன பொண்ணு தெரியாம பண்ணிட்டான்னு சொல்லாம சொல்றீங்க அப்படி தானே... ஒகே ஃபயின்..." எனக் கூறி அவ்விடத்தை விட்டு நகர...
எக்கி தேவியின் கையை பிடித்து
"உட்காரு நாச்சி,.." என்றவர் "பாப்பா செஞ்சது சரின்னு நான் எப்ப சொன்னேன்..." எனக் கேட்டார்.
"அப்பறம் இப்படி இருந்தா என்ன அர்த்தம்... என்கிட்ட அவளுக்காக சப்போர்ட் பண்றது போல தானே இருக்கு உங்களோட சைலண்ட்..." சீற்றம் குறையாது கேட்டார் தேவி.
அதில் மெல்ல சிரித்தவர் "உனக்குள்ளே இவ்வளவு பொஸ்ஸசிவ் எப்ப இருந்து வந்துச்சு நாச்சி...அவ நம்ம பொண்ணு டா..." என்றதும் உதட்டை சுளித்து அழகு காட்டினார் பிறையின் மனையாள்..
தன் மனைவியின் பாவனையில் சிரித்தவர் "நான் யோசிக்கிறது இன்னைக்கு நடந்ததை பத்தி தான். ஆனா முகிலோட செயலை பத்தியோ இல்லை நீ அவளை கண்டிச்சதை பத்தியோ இல்லை..." என்றதும் தேவியின் புருவங்கள் இரண்டும் சுருங்கி விரிந்தது...
"ஆகாஷ் இதுக்கு எந்த ஒரு ரியாக்ட்டும் பண்ணாம இருந்தது தான் யோசனையா இருக்கு..." என்றார் நெற்றியை பெருவிரலால் வருடிக் கொண்டே..
"ம்ப்ச்.. இதுல யோசிக்கிறதுல என்ன இருக்கு அவளை கிளப்ல இருந்து கூட்டிட்டு வந்தது இவன். சோ நம்ம மேல தப்புன்னு நினைச்சு அமைதியா இருந்து இருப்பான்..." என்றார் தேவி
"இல்லை தேவி... எந்தளவுக்கு ஆகாஷ் பொறுமையானவனோ அந்தளவுக்கு கோபக்காரன் கூட... இந்தளவுக்கு முகில் செஞ்சிருக்கும் போது அவ மேல கோபப்படவும் இல்லை என்ன ஏதுன்னு கேட்கவும் இல்லை..."என்றார் மீண்டும்
"இல்லைங்க நீங்க நினைக்கிற போல இல்லை..."அதை மறுத்து தேவி ஏதோ சொல்ல வரவும் கதவு தட்டும் ஓசை வரவும் சரியாக இருந்தது...
"டோர் ஓபன் பண்ணு நம்ம அகி குட்டியா இருப்பான்..." என இதழில் புன்னகையுடன் பிறை கூற தேவியோ
"இல்லை ஆகாஷா இருப்பான்..." என கூறியப்படி அறை கதவைத் திறக்க... இருவருக்கும் பொதுவாக மின்விளக்கை பரிசளித்தப்படி நின்றிருந்தார் தேவம்மாள்.
**
அவள் ஏன் இப்படி நடந்துக்கறா... அவளோட டிவின் எங்க அது யாரு.. அண்ட் இவங்க ஏன் அவளை வெளிய சொல்லாம வைச்சு இருக்காங்க... செல்வம், தேவிக்கும் என்ன தொடர்பு.. தேவராஜ் குடும்பத்துல ஆகாஷ், அகி இருக்காங்க மத்தவங்க எங்க...
இப்படியான கேள்விகள் நிறையா வரும்.. கண்டிப்பா கதையின் போக்கில இதெல்லாம் சொல்லிடுவேன்.
தென் சனிக் கிழமை அத்தியாயம் வேண்டும் என்றால் டீல் பேசுவோமா..
வழக்கம் போல பத்து லைக் அண்ட் பத்து கமெண்ட் அது போக ஒரு கேள்வி இருக்கு
*முகிலின் டுவின் (twin) யாரா இருக்கும்...* இதுக்கு ஆன்சர் சரியா சொன்னா சர்ப்ரைஸ் கிப்ட் ஒன்னு தருவேன்
உள்ளூர பயம் ஆட்கொண்டாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் நின்றவள் "இதுக்கெல்லாம் பயபடற ஆள் நான் இல்லை... ஒழுங்கா வழியை விடுங்க இல்லைன்னா நடக்கறதே வேற..." எச்சரிக்கும் குரலில் கூறினாள்.
இருவருக்கும் இடைேயான இடைவெளியே நன்றாகவே குறைத்தப்படி "என்ன நடக்கும்..." ஒற்றை புருவத்தை உயர்த்திக் கேட்டான்.
"எட்டி உதைப்பேன்..கால் எங்க வேணாலும் படும்..." எனக் கூறி முடிக்கும் முன் அவளை நன்றாகவே நெருங்கி நின்றான்.
அவனின் செய்கையில் பல மடங்கு கோபம் வர சட்டென அவனை எட்டி உதைக்கும் எண்ணம் தலைதூக்க அதை செயல்படுத்தப் போகும் வேளையில் அவளை முழுவதுமாக தன்னை நோக்கி இழுத்திருந்தான் அவன். பெண்ணவளின் தேகம் மொத்தமும் அவனின் மேல் மோதி நிற்க அவளின் கோபமும் எல்லையைக் கடந்திருந்தது.
அவனை சீற்றம் பொங்கும் விழிகளுடன் பார்த்தவள் "தி இஸ் அ லிமிட். நீ நினைக்கறத பண்ணவெல்லாம் வேற ஆளை பாரு..." என எரிச்சல் குரலில் கூறியவாறு அவனது டீ சார்டின் தோள் பகுதியைப் பிடித்து அவனைத் தன்னிலிருந்து விலக்கி விட முயன்றாள்.
அவனோ அவளின் பின்னந்தலைக்குள் கையிட்டு அவளது தலையை ஆணித்தரமாக பிடித்துக் கொண்டப்படி "ஆம்பளை எனக்கே கூச்சம் வர மாதிரி எங்க பார்த்தாலும் வா வான்னு கூப்பிடுவ. இப்ப நானா கூப்படவும் நல்லவ மாதிரி நடிக்கிறயா..." எனக் கூறியவனின் குரலில் இருந்தும் சீற்றம் வெளிப்பட்டது.
அவனின் சீற்றத்தை துளியும் கண்டுகொள்ளாமல் "விடுஉஉ..." எனத் திமிறினாள் அவனின் மேகப் பெண்.
அவளின் திமிறல் அவனுக்குள் மென்மையை கொண்டு வந்ததோ என்னவோ "ஸ்ஸ், டோண்ட் மூவ் பேபி..." என அவளின் சேவியோரம் மென்மையிலும் மென்மையாக கூறினான். அவனின் மூச்சுக் காற்று முகிலின் செவியை தீண்ட அவளின் மேனி சிலிர்த்து அடங்கியது..
"என்கூட இருக்கறதுக்கான அமௌண்ட்டை என் பி. ஏ. கிட்ட சொல்றேன் வாங்கிக்க..." எனக் கூறியது மட்டுமல்லாமல் அவளின் செவி நுனியை கடிக்கவும் செய்தான். அவனின் பேச்சிற்கு சிறிதும் சம்பந்தம் இல்லாமல் இருந்தது அவனின் செய்கை...
"ஸ்... நீயே ஒட்டுண்ணி வாழ்க்கை வாழ்ந்துட்டு இருக்க... இதுல எனக்கு வேற அமௌண்ட் தருவியா..." அத்தனை எள்ளலாக கேட்டாள்.
முகில் அப்படிக் கூறியது அவனின் முகம் கோபத்தில் இறுகியது. அந்த கோபத்தை அவளின் இடையில் காட்டிட நினைத்தானோ என்னவோ அவளின் இடையின் சதையை நன்றாக இறுக்கிப் பிடித்தான். அவன் கை கொடுக்கும் அழுத்தம் இவளுக்கு அதீத வலியை உண்டாக்க அது அவளின் முகத்திலும் பிரதிபலித்தது...
அவளின் சுருங்கிய முகத்தை பார்த்தபடி "டோண்ட் வொர்ரி பேபி... உனக்கு வலிக்காத போலவே சாரி இது உனக்கு ஃபர்ஸ்ட் டைமா இல்லை லிஸ்ட் இருக்கா..." அவளைக் காயப்படுத்தவே இப்படி கேட்டான். அதற்கு அவளிடம் வெறும் பார்வை மட்டுமே பதிலாக வந்தது..
அவளின் பதிலுக்கு காத்திருக்காமல் மேலும் முன்னேறினான்.. அவனின் மூச்சுக் காற்று அவள் கன்னத்தில் மோத அவனின் அதரங்களோ அவளின் அதரங்களுக்கு மிக அருகில் இருக்க மெல்லிய குரலில்
"பகலா இருந்தாலும் சரி, நைட்டா இருந்தாலும் சரி என் பெர்போமன்ஸ் நல்லாவே இருக்கும் பேபி.. அது நேத்து கிஸ் பண்ணும் போதே தெரிஞ்சிருக்குன்னு நினைக்கிறேன்..." என்றான்.
அவனின் இறுகிய பிடியால் எழுந்த வலியோ இல்லை அவனின் பேச்சால் மனதில் தோன்றிய வலியோ எதுவோ ஒன்று அவளின் நயனங்களை இறுக மூடிக் கொள்ள செய்தது. அவளின் மூடிய விழிகளைப் பார்த்தவனின் இறுகிய பிடி மெல்ல தளர அவன் இதழ்களோ அவளின் வெண்சங்கு கழுத்தை நோக்கி பயணித்தது.
தன் அதரங்களில் அவனின் இதழ் முத்தத்தைப் பதிப்பான் என நினைத்திருக்க அவளின் கன்னத்தில் பட்டு தெறித்த மூச்சுக் காற்று தற்போது அவளின் வெண் சங்கு கழுத்தில் மோதியது அப்போது அவனின் அதரங்கள் இருப்பது? சட்டென கண்களை திறந்தவள் அவனை பலம் கொண்டு தள்ளிவிட்டு நிமிடம் அங்கு நில்லாது கதவைத் திறந்து ஓடிட... இவனின் இதழ்களில் புன்னகை அரும்பியது.. செந்நிறமாக சிவந்திருந்த அவனின் வதனம் பழைய நிலைக்கு மாற சில நொடிகள் தேவைப் பட, அவள் சென்று பத்து,பதினைந்து நிமிடங்கள் கழித்து தான் அந்த அறையிலிருந்து வெளியில் வந்தான்...
***
ஸ்டோர் ரூமிலிருந்து வெளியே வந்தவள் நேராக தன் அறைக்கு தான் சென்றாள். மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க படுக்கையில் அமர்ந்தவளின் எண்ணங்கள் முழுவதும் அவனின் மூடிய விழிகளும் அழுத்தமான சிவந்த இதழ்களும் மட்டுமே வளம் வர தலையை உலுக்கி முகத்தை அழுந்த துடைத்த நேரம் அவளின் தோழனிடமிருந்து அழைப்பு வந்தது...
அழைப்பை ஏற்று காதில் வைத்தவள் "சொல்லு டா, போலீஸ்ல சரண்டரான ஆளை பெய்யில்ல எடுக்க ஏற்பாடு பண்ணிட்டியா..." அந்த தகவலை கூற தான் தன் நண்பன் அழைத்து இருப்பான் என்பது அப்போதைய இவளின் யூகமாக இருந்தது.
"ம்ம் பண்ணிட்டேன். நம்ம பிளேன் சக்சஸ் ஆனதுக்கு ட்ரீட் தரேன்னு சொன்ன எப்ப தர..." என தான் பேச நினைத்ததை(?) மட்டுமேக் கேட்டான்.
"ட்ரீட் தானே கொடுத்துட்டா போச்சு... ஆமா ஏன் வாய்ஸ் ஒரு மாதிரி இருக்கு..."எனக் கேட்டதும் எதிர்ப்புறம் பதில் கூறவில்லை
"ஹலோ கெளரி,என்னடா ஆச்சு..." என மீண்டும் கேட்க "அது நேத்து குடிச்ச கோக் ஒத்துக்கலப் போல..." என்றான் அவளின் தோழன்(?) கெளரி ஷங்கர்.
"ஹான் சரி இன்னைக்கு..." என இவள் ஏதோ கூறும் முன்பே
"முடிவா சொல்லு ட்ரீட் தருவீயா மாட்டியா..." என அதிலேயே நின்றான் எதிர்ப்புறம் இருந்தவன்.
"டே, அதுதான் தரேன்னு சொன்னனே அப்பறம் என்ன டா சும்மா சும்மா ட்ரீட் தருவீயா மாட்டியான்னு கேட்டுட்டே இருக்க.." எனக் கடுப்பாக கேட்டாள்
"சரி, *** இங்க வந்துடு நான் வெயிட் பண்ணுவேன்..." சென்னை ஈசியார் ரோட்டில் உள்ள பிரபலமான கிளப் பெயரைக் கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்தான் முகிலின் தோழன்.
"இவனை..." என பல்லைக் கடித்தவள் எதை பற்றியும் யோசிக்காமல் கெளரி கூறிய இடத்திற்கு புறப்பட்டாள். அவனின் குரலில் இருந்த மாற்றத்தை என்னவென்று யோசித்து இருக்கலாமோ?
***
இங்கு அதே சமயம்
அறையினுள் நுழைந்த பிறையின் முகம் கோபத்தில் இறுகி இருந்தது... கணவனின் முகத்தைப் பார்த்தே கோபமாக இருக்கிறார் என உணர்ந்த தேவியோ தன் கணவனையேப் பார்த்தார்... பிறையோ தேவியின் பார்வையை துளியும் கண்டுகொள்ளாமல் படுக்கையில் அமர்ந்தார்... அவரின் அருகில் சென்று அமர்ந்தவர் "நான் பேசனதுல ஏதாவது கோபமாங்க..." எனக் கேட்டார்.
அவரின் கேள்விக்கு நிசப்த பார்வையை பதிலாக கொடுத்தார் பிறை... அவர் பதில் பேசவில்லை என்றாலும்
"இதுக்கு மேல கண்டிக்காம விட்டா அவ இன்னும் இன்னும் தப்பு பண்ணுவா மாமா. நீங்க சொன்னீங்கன்னு தான் இத்தனை நாள் அவ பேசன எல்லாத்துக்கும் அமைதியா போனேன். ஆனா இன்னைக்கு அது எல்லையை தாண்டிப் போயிடுச்சு. இனியும் அவளை இப்படியே விட்டா நல்லா இருக்காதுங்க..." என விளக்கியவர் மீண்டும்
"இண்டஸ்ட்ரில ஆகாஷூக்கு இருந்த நல்ல பேர் இந்த வீடியோனால ஸ்ப்பாயில் ஆயிடுச்சு. அந்த அதுகூட நாள் போக போக மறந்துடும் மாறிடும். இப்ப அவனுக்கு முப்பதாகுது அவன் கல்யாணத்தை பத்தி யோசிக்கணுல. இப்படி ஒரு கெட்டப் பேர் வந்தா நல்லா இருக்குமா சொல்லுங்க..." எனக் கேட்டார் தேவி.
பக்கவாட்டாக திரும்பி தன் மனைவியை பார்த்தவர் "யாராவது ஒருத்தர் கண்டிப்போட இருக்கறதுல தப்பில்லை. நீ முகில கண்டிச்சதுல எனக்கு ஒரு பிராப்ளமும் இல்ல மா, சின்ன வருத்தம் தான் அதுவும் சரியாகிடும்..." உண்மையை மறையாது கூறினார்..
முகிலின் செயலில் வருத்தமாக உள்ளது என கூறுகிறார் போல என நினைத்தவர் தன்னவரின் கன்னத்தைப் பிடித்து தன்னை பார்க்க செய்தவர்
"அவ இப்படி பண்ணதில உங்களுக்கு வருத்தம் இருக்குன்னு தெரியும். இருந்தாலும் அவ வளர்ந்த முறையும் சூழ்நிலையும் வேற தானே..." என தேவி சொல்ல
கசப்பாக சிரித்தவர் "எஸ் தேவி...அவ இப்படி இருக்கறதுக்கு ஒரு வகையில நாமும் காரணம்..." என்றதும் தேவியின் முகம் பழைய நினைவுகளில் இறுகியது.
தன்னவளின் முக இறுக்கத்தை பார்த்தவர் "உனக்கு நடந்தது சாதாரண விஷயம் இல்லைன்னு எனக்கு தெரியும். இப்ப வரைக்கும் அந்த நாளோட இழப்பு, வலி, வேதனை எதுவும் உன்னை விட்டு போகலன்னு புரிது மா. சொல்லப்போனா அது மறையவே மறையாது... மனசுலயே வடுவா இருக்கற ஒன்ன தினமும் ஞாபகம் பண்ற மாதிரி முகில் வந்து நிக்கவும் உன்னால அவளை துளியும் ஏத்துக்க முடியலன்னு தெரியுது..." என்றவர் பெருமூச்சுடன்
"அதே சமயம் என் பொண்ணோட பக்கத்துல இருந்தும் யோசிக்கறது த்தப்பில்லையே... அவளோட பாயிண்ட் ஆப் வியூல இருந்து பார்த்தா அவ நடந்துக்கறது சரி தானே... சின்ன வயசில இருந்தே தனியா வளர்ந்து இருக்கா. அண்ட் அங்க என்ன சொன்னாங்களோ அதை அப்படியே இங்க ரிஃப்லக்ட் பண்றா அவ்வளவு தான்..." என தன் மகளின் பக்கமிருந்தும் பிறை யோசித்தார்.
அவரின் பேச்சில் முகம் சுருங்க
"யார் என்ன சொல்லிக் கொடுத்தா என்னங்க? இவளுக்கு அறிவு வேண்டாம். எதையும் யோசிக்கவே மாட்டாளா? இன்னைக்கு இவ யோசிக்காம செஞ்ச காரியத்துல ஆகாஷ் ஃப்யூசரோட சேர்த்து இவளோட ஃப்யூசரும் தானே கேள்விக் குறியாகி நிக்குது..." என்றார். அதற்கு பிறையிடம் பதிலில்லை வெற்று பார்வை மட்டுமே..
'அனைத்தும் அறிந்த இவரே அவளுக்காக தன்னிடம் இப்படி நடந்து கொள்கிறாரே...' என்ற கோபம் சட்டென முளைக்க படுக்கையை விட்டு எழுந்து "அப்ப அவ சின்ன பொண்ணு தெரியாம பண்ணிட்டான்னு சொல்லாம சொல்றீங்க அப்படி தானே... ஒகே ஃபயின்..." எனக் கூறி அவ்விடத்தை விட்டு நகர...
எக்கி தேவியின் கையை பிடித்து
"உட்காரு நாச்சி,.." என்றவர் "பாப்பா செஞ்சது சரின்னு நான் எப்ப சொன்னேன்..." எனக் கேட்டார்.
"அப்பறம் இப்படி இருந்தா என்ன அர்த்தம்... என்கிட்ட அவளுக்காக சப்போர்ட் பண்றது போல தானே இருக்கு உங்களோட சைலண்ட்..." சீற்றம் குறையாது கேட்டார் தேவி.
அதில் மெல்ல சிரித்தவர் "உனக்குள்ளே இவ்வளவு பொஸ்ஸசிவ் எப்ப இருந்து வந்துச்சு நாச்சி...அவ நம்ம பொண்ணு டா..." என்றதும் உதட்டை சுளித்து அழகு காட்டினார் பிறையின் மனையாள்..
தன் மனைவியின் பாவனையில் சிரித்தவர் "நான் யோசிக்கிறது இன்னைக்கு நடந்ததை பத்தி தான். ஆனா முகிலோட செயலை பத்தியோ இல்லை நீ அவளை கண்டிச்சதை பத்தியோ இல்லை..." என்றதும் தேவியின் புருவங்கள் இரண்டும் சுருங்கி விரிந்தது...
"ஆகாஷ் இதுக்கு எந்த ஒரு ரியாக்ட்டும் பண்ணாம இருந்தது தான் யோசனையா இருக்கு..." என்றார் நெற்றியை பெருவிரலால் வருடிக் கொண்டே..
"ம்ப்ச்.. இதுல யோசிக்கிறதுல என்ன இருக்கு அவளை கிளப்ல இருந்து கூட்டிட்டு வந்தது இவன். சோ நம்ம மேல தப்புன்னு நினைச்சு அமைதியா இருந்து இருப்பான்..." என்றார் தேவி
"இல்லை தேவி... எந்தளவுக்கு ஆகாஷ் பொறுமையானவனோ அந்தளவுக்கு கோபக்காரன் கூட... இந்தளவுக்கு முகில் செஞ்சிருக்கும் போது அவ மேல கோபப்படவும் இல்லை என்ன ஏதுன்னு கேட்கவும் இல்லை..."என்றார் மீண்டும்
"இல்லைங்க நீங்க நினைக்கிற போல இல்லை..."அதை மறுத்து தேவி ஏதோ சொல்ல வரவும் கதவு தட்டும் ஓசை வரவும் சரியாக இருந்தது...
"டோர் ஓபன் பண்ணு நம்ம அகி குட்டியா இருப்பான்..." என இதழில் புன்னகையுடன் பிறை கூற தேவியோ
"இல்லை ஆகாஷா இருப்பான்..." என கூறியப்படி அறை கதவைத் திறக்க... இருவருக்கும் பொதுவாக மின்விளக்கை பரிசளித்தப்படி நின்றிருந்தார் தேவம்மாள்.
**
அவள் ஏன் இப்படி நடந்துக்கறா... அவளோட டிவின் எங்க அது யாரு.. அண்ட் இவங்க ஏன் அவளை வெளிய சொல்லாம வைச்சு இருக்காங்க... செல்வம், தேவிக்கும் என்ன தொடர்பு.. தேவராஜ் குடும்பத்துல ஆகாஷ், அகி இருக்காங்க மத்தவங்க எங்க...
இப்படியான கேள்விகள் நிறையா வரும்.. கண்டிப்பா கதையின் போக்கில இதெல்லாம் சொல்லிடுவேன்.
தென் சனிக் கிழமை அத்தியாயம் வேண்டும் என்றால் டீல் பேசுவோமா..
வழக்கம் போல பத்து லைக் அண்ட் பத்து கமெண்ட் அது போக ஒரு கேள்வி இருக்கு
*முகிலின் டுவின் (twin) யாரா இருக்கும்...* இதுக்கு ஆன்சர் சரியா சொன்னா சர்ப்ரைஸ் கிப்ட் ஒன்னு தருவேன்
Last edited: