மகா சமுத்ரா
Moderator
முன்னோட்டம்:
வணக்கம்,
பிம்பப்பிழை கதையை ஆரம்பிப்பதற்கு முன்பு நான் படித்து தெரிந்துகொண்ட ஒரு சுவாரசியமான கதையை இங்கு பகிர விரும்பிகிறேன்.
ஏனென்றால் அக்கதைதான் பிம்பப்பிழை எனும் கதையின் தொடக்கப்பபுள்ளி.
ஜென்னட்டி - இது 1911, இத்தாலியை சேர்ந்த ஒரு தொடர்வண்டியின் பெயர்.
1911-ல் நூற்றியாறு பயணிகளை ஏற்றிக்கொண்டு ரோமிலிருந்து புறப்பட்ட ஒரு புகைவண்டி ஒரு சுரங்கப்பாதையினுள் நுழைந்தது. ஆனால் அவ்வண்டி அச்சுரங்கப்பாதையின் மறுமுனையில்
வெளிவரவில்லையாம்.
அதாவது புகைவண்டியோடு சேர்த்து அதனுள் பயணித்த நூற்றியாறு பேரையும் கூட காணவில்லை.
காவலர்கள் அங்கு சென்று பார்த்தபொழுது 106 பயணிகளில் இருவர் மட்டும் தண்டவாளத்தின் அருகே மயங்கிக் கிடப்பது தெரிய, அவர்களிடம் விசாரணை நடந்ததாம்.
ஆனால் அவர்கள் மிகவும் அதிர்ச்சி நிலைக்கு உள்ளாகியிருந்ததால் சொன்னதையே மீண்டும் மீண்டும் சொல்லிப் பிதற்றிக் கொண்டிருந்தார்கள் என்று நான் படித்ததில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அவர்கள் பிதற்றிய விஷயம் என்னவென்றால், புகைவண்டி அச்சுரங்கப்பாதையினுள் நுழைய ஆரம்பித்ததும் வெள்ளை நிற புகை அப்புகைவண்டி முழுவதும் பரவ ஆரம்பித்ததாம். அதைக் கண்டு என்னவோ
ஏதோ.. புகைவண்டியில் ஏதோ கோளாறோ என்று நினைத்த இருவரும் வண்டியிலிருந்து வெளியே குதித்துவிட்டார்களாம்.
வெள்ளைப் புகை மூட்டத்தினுள் நுழைந்த புகைவண்டி சுரங்கப்பாதையின் மறுமுனை வழி வெளிவரவே இல்லையாம்.
காவலர்கள் பலர் வந்துத் தேடியும் எந்தத் துப்பும் கிடைக்கவில்லையாம்.
இச்செய்தியைப் படித்தபொழுது எனது புருவங்கள் ஆச்சரியத்தின் பொருட்டு வேகமாக உயர்ந்தன.
அந்த ஆச்சரியத்துக்கே ஆச்சரியம் கொடுக்கும் வகையில் இருந்தது நான் அடித்துப் படித்த செய்தி.
என்னவென்றால் 1840-ல்... அதவாது மேற்கண்ட சம்பவங்கள் நடந்து சுமார் 71 வருடங்களுக்கு முன்பு! காலத்தை பின்னோக்கிப் பயணித்துப் பார்த்தால் மெக்சிகோவின் ஊடகங்களில் வெளிவந்த செய்தி
ஒன்றில் அங்கு அவ்வாண்டில் 104 பயணிகளோடு ஒரு புகைவண்டி வலம் வந்ததாகவும், அதில் உள்ளவர்கள் தாங்கள் ரோமிலிருந்து வந்திருப்பதாகவும் கூறினார்களாம்.
இதில் முக்கியமாக உற்று நோக்க வேண்டிய விசயம் என்னவெனில் 1840-ல் ரோமிற்கும் மெக்சிகோவிற்கும் எவ்வித ரயில் தொடர்பும் இல்லையாம்.
அதனால் மக்கள் பலர் அதை "Ghost train" என்றும் குறிப்பிடுவதாக நான் படித்தேன்... மேலும் சிலர் அச்சுரங்கப்பாதை தான் நம் இணை உலகத்தின் அல்லது நம் இணை பிரபஞ்சத்திற்கு
செல்லும் பாதையாக அமைந்திருக்ககூடும் என்று தங்கள் யூகத்தைப் பகிர்ந்துள்ளார்கள்.
இந்த யூகமே நம் கதையின் அடிப்படையாக அமையப்போகிறது.
இரண்டு உலகங்களை இணைக்கும் வழி ஒரு சுரங்கப்பாதையாக அன்றி ஒரு அருவியாக இருந்தால் ? என்ற கற்பனையின் குழந்தை தான் இந்த பிம்பப்பிழை கதை.
முக்கியக்குறிப்பு(பொறுப்பு துறப்பு) : இதில் இணை உலகம் எனும் ஆராய்ச்சி முடிவுகள் முழுதாக வெளிவராத ஒரு தலைப்பை உள் நுழைப்பதால் இதை ஒரு அறிவியல் புனைவாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.
இது முழுக்க முழுக்க ஒரு கற்பனை கதை மட்டும் தான்.
இக்கதையில் வரப்போகும் சம்பவங்கள், கதாப்பாத்திரங்கள், கதையமைப்பு ஆகிய அனைத்தும் கற்பனை மட்டும் தானே தவிர, எந்த ஒரு அறிவியல் ஆதாரங்களையும் கொண்டு இதை வடிக்கவில்லை.
வணக்கம்,
பிம்பப்பிழை கதையை ஆரம்பிப்பதற்கு முன்பு நான் படித்து தெரிந்துகொண்ட ஒரு சுவாரசியமான கதையை இங்கு பகிர விரும்பிகிறேன்.
ஏனென்றால் அக்கதைதான் பிம்பப்பிழை எனும் கதையின் தொடக்கப்பபுள்ளி.
ஜென்னட்டி - இது 1911, இத்தாலியை சேர்ந்த ஒரு தொடர்வண்டியின் பெயர்.
1911-ல் நூற்றியாறு பயணிகளை ஏற்றிக்கொண்டு ரோமிலிருந்து புறப்பட்ட ஒரு புகைவண்டி ஒரு சுரங்கப்பாதையினுள் நுழைந்தது. ஆனால் அவ்வண்டி அச்சுரங்கப்பாதையின் மறுமுனையில்
வெளிவரவில்லையாம்.
அதாவது புகைவண்டியோடு சேர்த்து அதனுள் பயணித்த நூற்றியாறு பேரையும் கூட காணவில்லை.
காவலர்கள் அங்கு சென்று பார்த்தபொழுது 106 பயணிகளில் இருவர் மட்டும் தண்டவாளத்தின் அருகே மயங்கிக் கிடப்பது தெரிய, அவர்களிடம் விசாரணை நடந்ததாம்.
ஆனால் அவர்கள் மிகவும் அதிர்ச்சி நிலைக்கு உள்ளாகியிருந்ததால் சொன்னதையே மீண்டும் மீண்டும் சொல்லிப் பிதற்றிக் கொண்டிருந்தார்கள் என்று நான் படித்ததில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அவர்கள் பிதற்றிய விஷயம் என்னவென்றால், புகைவண்டி அச்சுரங்கப்பாதையினுள் நுழைய ஆரம்பித்ததும் வெள்ளை நிற புகை அப்புகைவண்டி முழுவதும் பரவ ஆரம்பித்ததாம். அதைக் கண்டு என்னவோ
ஏதோ.. புகைவண்டியில் ஏதோ கோளாறோ என்று நினைத்த இருவரும் வண்டியிலிருந்து வெளியே குதித்துவிட்டார்களாம்.
வெள்ளைப் புகை மூட்டத்தினுள் நுழைந்த புகைவண்டி சுரங்கப்பாதையின் மறுமுனை வழி வெளிவரவே இல்லையாம்.
காவலர்கள் பலர் வந்துத் தேடியும் எந்தத் துப்பும் கிடைக்கவில்லையாம்.
இச்செய்தியைப் படித்தபொழுது எனது புருவங்கள் ஆச்சரியத்தின் பொருட்டு வேகமாக உயர்ந்தன.
அந்த ஆச்சரியத்துக்கே ஆச்சரியம் கொடுக்கும் வகையில் இருந்தது நான் அடித்துப் படித்த செய்தி.
என்னவென்றால் 1840-ல்... அதவாது மேற்கண்ட சம்பவங்கள் நடந்து சுமார் 71 வருடங்களுக்கு முன்பு! காலத்தை பின்னோக்கிப் பயணித்துப் பார்த்தால் மெக்சிகோவின் ஊடகங்களில் வெளிவந்த செய்தி
ஒன்றில் அங்கு அவ்வாண்டில் 104 பயணிகளோடு ஒரு புகைவண்டி வலம் வந்ததாகவும், அதில் உள்ளவர்கள் தாங்கள் ரோமிலிருந்து வந்திருப்பதாகவும் கூறினார்களாம்.
இதில் முக்கியமாக உற்று நோக்க வேண்டிய விசயம் என்னவெனில் 1840-ல் ரோமிற்கும் மெக்சிகோவிற்கும் எவ்வித ரயில் தொடர்பும் இல்லையாம்.
அதனால் மக்கள் பலர் அதை "Ghost train" என்றும் குறிப்பிடுவதாக நான் படித்தேன்... மேலும் சிலர் அச்சுரங்கப்பாதை தான் நம் இணை உலகத்தின் அல்லது நம் இணை பிரபஞ்சத்திற்கு
செல்லும் பாதையாக அமைந்திருக்ககூடும் என்று தங்கள் யூகத்தைப் பகிர்ந்துள்ளார்கள்.
இந்த யூகமே நம் கதையின் அடிப்படையாக அமையப்போகிறது.
இரண்டு உலகங்களை இணைக்கும் வழி ஒரு சுரங்கப்பாதையாக அன்றி ஒரு அருவியாக இருந்தால் ? என்ற கற்பனையின் குழந்தை தான் இந்த பிம்பப்பிழை கதை.
முக்கியக்குறிப்பு(பொறுப்பு துறப்பு) : இதில் இணை உலகம் எனும் ஆராய்ச்சி முடிவுகள் முழுதாக வெளிவராத ஒரு தலைப்பை உள் நுழைப்பதால் இதை ஒரு அறிவியல் புனைவாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.
இது முழுக்க முழுக்க ஒரு கற்பனை கதை மட்டும் தான்.
இக்கதையில் வரப்போகும் சம்பவங்கள், கதாப்பாத்திரங்கள், கதையமைப்பு ஆகிய அனைத்தும் கற்பனை மட்டும் தானே தவிர, எந்த ஒரு அறிவியல் ஆதாரங்களையும் கொண்டு இதை வடிக்கவில்லை.