துடைத்தெடுத்த வானம்,
வெளுத்தெடுத்த
சிறுமேகம்,
இறையனை ஒத்த
வளியும்,
இவளுடல் நனைக்கும்
துளியும்,
சிறகுலர்த்தும் பட்சியும்,
சோம்பல் முறிக்கும்
மீட்சியும்,
பசுஞ்சாயம் போர்த்திப்
புற்களும்,
மேல் படுத்த றங்கும்
பனிகளும்,
நிசப்த மேறிய
இப்புவியும்,
அதில் நின்றாடு
மென்கவியும்,
ஒலியற்று புலரும்
யானும்,
மௌனப்
பெருவெளியாய்
ஞாலும்...!!
வெளுத்தெடுத்த
சிறுமேகம்,
இறையனை ஒத்த
வளியும்,
இவளுடல் நனைக்கும்
துளியும்,
சிறகுலர்த்தும் பட்சியும்,
சோம்பல் முறிக்கும்
மீட்சியும்,
பசுஞ்சாயம் போர்த்திப்
புற்களும்,
மேல் படுத்த றங்கும்
பனிகளும்,
நிசப்த மேறிய
இப்புவியும்,
அதில் நின்றாடு
மென்கவியும்,
ஒலியற்று புலரும்
யானும்,
மௌனப்
பெருவெளியாய்
ஞாலும்...!!
-மகிமகள்