எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

பிரியாதிருக்க பிறிதொரு நாள் சந்திப்போம் - கதை திரி

Status
Not open for further replies.

Nila 45

Moderator
நாயகன் - கதிரோன்
நாயகி - முகிலினி

காதல் எப்பொழுதும் அழகான தருணங்களால் பின்னப்பட்ட நினைவுகளின் நூலாடை. தலைவனும் தலைவியும் இரு உயிர் ஓர் உயிராக ஒர் உயிரோவியம் உருவாக ஊடல் காதல் வீம்பு கோபம் கூடல் என எத்தனை எத்தனை வண்ணங்கள் அதில் !! அத்தனையும் நிரப்பி நிற்கும் கலை காதல்!! கதிரரோன் முகிலினி வாழ்வில் அந்த தூரிகை வரையும் காதல் கதையாக என் எழுதுகோலில்.

இது எனது முதல் முயற்சி. உங்கள் விருப்பம் தேடி..
 

Nila 45

Moderator
அத்தியாயம் 4

முகிலினியின் கேள்வியில் ஒரு நிமிடம் திடுக்கிட்ட நிலவன் அவளை வெறுப்புடன் பார்த்தான் ஆனால் அவனது பார்வையை அப்படியே பிரதிபலிக்காது தனக்கே உரிய புன்னகையோடு அவனுக்கு கொடுக்கும் உணவை அவனது முகத்திற்கு நேராக நீட்டினாள்.
நிலவன் ஒன்றும் பேசாது உதடுகளைத் திறந்தான். அதன் பின் இரு நாட்கள் அவன் அவளிடம் எதுவும் பேசவில்லை. சான்ட்ரா மேலும் ஒரு வாரம் விடுமுறை எடுத்திருந்ததால் நிலவனிடம் அதிக நேரம் செலவிடும் நபராக முகிலினி இருந்தாள். முகிலினி அன்று வழக்கம் போல் நிலவனை அழைத்துக் கொண்டு வெளியே செல்ல இதமான காலநிலை இருவரிடமும் இயற்கையின் அழகை ரசிக்க வைத்திருந்தது. நிலவன் இம்முறை வேறு ஒரு இடத்திற்கு அழைத்துச் செல்ல சொல்லியிருந்தான். அது ட்ரீ ஹவுஸ் தாண்டி சிறிது உள்ளே மரங்களுக்கு இடையில் நடைபாதையாக இருந்தது.

நிலவன் அவளிடம் பேசக் கூடாதென முடிவெடுத்திருந்தவன் கடந்த ஒரு வாரமாக அவளிடம் எதுவுமே பேசவில்லை. ஆனால் முகிலினியோ அவனைப் பார்த்துக் கொள்வது, அவனை கவனித்துக் கொள்கையில் அவனது சௌகரியத்தை அதிகம் விசாரிப்பது, முக்கியமாக எப்போதும் புன்னகையுடனே இருப்பதுமாக இருந்தாள். இன்று நிலவனுக்கு அவளிடம் பேச்சுத் தொடங்குவதைத் தவிர்க்க முடியாது தனது உள்ளத்தில் தோன்றிய கேள்வியை சட்டென்று கேட்டான்.

“நீ நர்ஸ் தானே, ஹாஸ்பிடல் ல வொர்க் பண்ணிருக்கியா?”

முகிலினி மெல்லத் தகிக்கும் சூரியனை ரசித்துக் கொண்டே அவனது கேள்விக்கு பதிலளித்தாள்.

“அப்ப நிறைய சாவைப் பார்த்திருக்கல, சாவு உண்மையில அர்த்தமுள்ளதா?”

இந்த கேள்வியைக் கேட்டதும் முகிலினி அவனிடம் திரும்பினாள். நிலவனிடம் அவன் இறந்து விடுவான் என்ற செய்தி சென்றடைந்திருக்க வேண்டும் எனத் தோன்றியது. தன்னை நோக்கி அவனது பரிதாப பார்வையை எதிர்நோக்கியிருந்த நிலவனுக்கு வழமைப் போலவே வேறொரு பதிலை வைத்திருந்தாள் முகிலினி.

“நிலவன் உன் கேள்விக்கு பதில் சொல்ல முடியுமானு தெரியலை ஆனா நான் படிச்சதுல வேறொரு பதிலிருக்கு சொல்லவா ‘ரிலேடபிள் ஆன்ஸர்’ மாதிரி?”

அவள் சிறிது இடைவெளி விட நிலவன் மௌனமாக அவளது கேள்வியை எதிர்க்கொண்டான்.

“இந்த உலகத்தில் இது வரை எத்தனை பேர் வாழ்ந்திருப்பாங்கனு நினைக்கிற?”

முகிலினி கேட்க நிலவன் அவளது கேள்விக்கு அவளே பதிலளிக்க காத்திருந்தான்.

“பத்தாயிரம் கோடி, ஆனா ஒரு உயிர் உருவாகறதுக்கான டிஎன்ஐ ஜீன்ஸ்ன் பிராபளிட்டி( டிஎன்ஏ மூலக்கூறு இணைவதற்கான சாத்தியக்கூறு) எவ்வளவு தெரியுமா? பத்தாயிரம் கோடிக்கு மிக மிக அதிகம்? அப்ப இத்தனை பேர் முயற்சித்தும் பெற முடியாத இந்த உயிரை உடலைப் பெற்று இதோ இப்ப இந்த சூரியனை ரசிச்சு இந்த காற்றை சுவாசிச்சு வாழ்றோம்! இது பத்தாயிரம் கோடி பேருக்கு கிடைக்காத நிஜம் இதை, இந்த வாழ்க்கையை எப்போ வரும் னு தெரியாத சாவை வைச்சு எடைப் போடறது சரினு நினைக்கிறீயா?”

நிலவன் அந்த பதில் கேள்வியில் அமைதியாக இருந்தான். பின் மெதுவாக முணுமுணுத்தான்.

“இதை வேற யாராவது சொல்லியிருந்தா நான் பாசிடிவ் ஆ எடுத்திருப்பேனானு தெரியலை, நீ சொன்னா பொய்யும் நம்பிக்கைக்குரியதா மாறுது! ஏன் னு தெரியலை?”

நிலவன் பேசிய குரல் தெளளிவாக கேட்கவில்லை முகிலினிக்கு. நிலவன் முகிலினியிடம் அந்த சில்வர் ட்ரீ மரத்தின் மேலிருந்த பட்டையை சிறிது எடுத்து வரச் சொன்னான். அது அவனது சிறுவயது நினைவுகள், தான் மகிழ்ச்சியாக தனது அண்ணணுடன் செலவிட்ட நினைவுகளின் உருவம் தாங்கிகள் அவை. அந்த பட்டைகளில் எத்தனை வகையில் உருவங்கள் சொல்ல முடியும் என்பதே போட்டி. சில சமயங்களில் தோர், சூப்பர் மேன் கார். அந்த பட்டையை அவன் வெறித்திருக்க அவனுடைய தமையனின் புன்னகை முகம் வந்துப் போனது.

‘ஆனால் அவனும்!’

நிலவன் நினைவுகளில் காயம் கொள்ள அவன் அங்கிருக்கும் மரநிழலில் சற்று நேரம் இயற்கையை ரசிக்கிறான் எனத் தானும் அந்த இயற்கை அழகை ரசித்திருந்தாள் முகிலினி.

அன்றிரவு நிலவனுக்கு காய்ச்சல் அதீதமாக அதற்கான மருந்துகள் கொடுக்கப்பட அவனது உடல் அதை ஏற்றுக்கொள்ள மறுத்தது. மருத்துவர் வரவழைக்கப்பட்டார். மூச்சு விட அதிக சிரமப்பட்ட நிலவன் கண்களில் நீர்வழிய வலிகளைப் பொறுக்க அவனது கண்களில் அப்போதும் பதட்டமில்லாது அவனுக்கு உதவிகளைச் செய்த முகிலினி தெரிந்தாள். நிலவனின் மனநிலையில் பரவிய நம்பிக்கை அவனது உடலிலும் பரவ அவன் உடல் மெல்ல அந்த மருந்துகளை ஏற்றுக்கொள்ளத் தொடங்கியது. முகிலினி மருந்துகளின் வீரியத்தில் அவன் கண்மூடி உறங்கத் தொடங்கியதும் பெருமூச்சு விட்டு அமர்ந்தாள். எதையும் இதயத்திற்குள் எடுத்துச் செல்லாத அவளது இயல்பு இந்த சிறுவனிடம் சற்று தடுமாறவே செய்தது. இவன் தன்னை நிச்சயம் காயப்படுத்துவான் என அவள் மனது ஆருடம் சொல்ல அதை ஆமாம் என்று ஆமோதிக்க மறுநாள் வந்தது.

மறுநாள் காலை சான்ட்ரா வந்ததும் முகிலினி நிலவனின் அறையில் இருந்து வெளிவர ரஞ்சனி வந்திருந்தார். அவரது முகத்தில் கோபம் கொப்பளித்தது.

“நீ நல்ல ஹோஸ்பைஸ் நர்ஸ் னு சொன்னாங்க, யூ நோ ஹௌ மச் ஐ பே யூ? இப்படி பொறுப்பில்லாம நடந்திருக்க!”

ரஞ்சனியின் சத்தத்தில் விழித்திருந்தான் நிலவன். அவன் அருகில் சான்ட்ரா நின்றிருக்க தன்னை சக்கர நாற்காலியில் அமர வைக்கப் பணித்தான்.

“இல்லை மேடம் புரியலை, எதுக்காக கோபப்படறீங்க?”

முகிலினியின் கேள்வியில் ரஞ்சனிக்கு மேலும் கோபம் வந்தது.

“நீ நிலவனை இந்த ஒரு வாரத்தில பத்து தடவை வெளியே கூட்டிட்டு போயிருக்க அதுவும் இந்த கோல்ட் ஏர்ல. இப்ப நிமோனியா அட்டாக் னு டாக்டர் ரிப்போர்ட் அனுப்பியிருக்கார். என்ன படிச்ச நீ? இல்லை சாகறவங்கள சீக்கிரம் சாகற வைக்க படிப்புத் தான் படிச்சீயா?”

ரஞ்சனியின் வார்த்தைகள் தீப்பிழம்பாக வெளியேற முகிலினி அவர் பேசி முடிக்கும் வரை அமைதியாக இருந்து பின் பேசினாள்.

“இப்ப வெளியே கூட்டிட்டு போனதால த் நிமோனியா அட்டாக் னு டாக்டர் சொன்னாரா?”

முகிலினி கேட்க ரஞ்சனி அவளைப் பார்த்தார். அவர் ஒன்றும் பேசாது இருக்க முகிலினி பேசினாள்.

“நீங்க நினைக்கிற மாதிரி வெளியே குளிர் காற்றினால நிமோனியா முக்கியமா அட்டாக் ஆகாது. நான் நிலவனை மதிய நேரம் மட்டும் தான் அழைச்சுட்டுப் போவேன். நிமோனியா அட்டாக் கு முக்கியக் காரணம் ஒரே அறையில அடைஞ்சுக் கிடக்கறதால வர்ற பேக்டீரியா ஃபங்கை பரவல் தான்”

முகிலினி சொல்ல ரஞ்சனி கோபமுற்று பேசத் தொடங்கினார். அவருக்கு பதில் பேசும் வேலையாட்கள் நிச்சயம் வெளியேறி ஆக வேண்டும். இவள் திறமைசாலியுமில்லை இவளைத் துரத்துவதில் என்ன பிரச்சினை என்று நினைத்தவராக மேலும் பேசினார்.

“நேத்து சாயங்காலம் நீ நிலவனைக் கூட்டிட்டு போன வெளியே இல்லையா. அதுவும் அவன் கேட்டதும் ஏதோ மரத்துகளை எடுத்துட்டு வந்து அவன் கையில ?”
அவர் கேட்க முகிலினி ஆமாம் என்று பதில் சொல்வதற்கு முன் நிலவனிடமிருந்து வேறோரு கேள்வி அவனது தாய்க்கு வந்தடைந்தது.

“நான் மரத்துகளை கையில வாங்கினது உங்களுக்கு எப்படி தெரியும்?”

அந்த கேள்வியில் ரஞ்சனி ஒரே ஒரு நொடி முகம் மாறியவர் பின் குரலில் கோபம் கலைந்துப் பேசினார்.

“அது. சான்ட்ரா சொன்னாங்க”

நிலவன் தனது தாயின் பொய்யில் அருவெறுப்பு முகம் காட்டிப் பேசினான்.

“சான்ட்ரா இன்னைக்கு காலையில தான் வந்தாங்க”

ரஞ்சனி மீண்டும் சமாளித்தார்.

“அவங்க இல்லை பட்டூ, வேற சர்வன்டீஸ் சொன்னாங்க”

நிலவன் கண்களில் கோபம் கொப்பளிக்க மீண்டும் கத்தினான்.

“நான் போனது நானும் அண்ணணும் மட்டும் போற வுட்ஸ் ஸ்பாட். அங்கே முகில் நான் தவிர யாரும் இருக்க வாய்பில்லை"

சொன்னவன் சான்ட்ரா என கர்ஜிக்க சான்ட்ரா வெளிவந்தாள்.

“ஃபார் காட்ஸ்சேக் ரிமூவ் த கேமரா அவுட் ஆஃப் திஸ் **ட் ( இந்த நாற்காலியில் இருந்து கேமராவை எடுத்து விடு)”

சான்ட்ரா ரஞ்சனியை நோக்கி விட்டு அவர் கண்களில் இருந்து இசைவைப் பெற்றவராக அந்த சக்கர நாற்காலியில் இருந்து ஒரு நவீன கேமராவும் ஃபக் எனப்படும் கருவியும் அவர் எடுத்திருக்க நிலவன் கடுமையான குரலில் கத்தினான்.

“நீங்க திருந்தவே மாட்டீங்களா? நான் எந்திரிச்சு நடமாடக் கூட முடியாது இப்பவும் உங்க உளவு வேலை நிற்காது இல்லை. சாகும் போது கூட நிம்மதியா சாக விட மாட்டீங்க இல்லை?”

ரஞ்சனி முகத்தில் வலிப் பரவ தனது மகனை நோக்கினாள்.

“சான்ட்ரா, ஐ ப்ளீவ்ட் யூ. பட்”

அவனது முகத்தில் தெரிந்த வலி சான்ட்ரா கண்களிலும் பரவியது. இட்ட வேலையை செய்தே ஆக வேண்டும் என வாழ்வின் தேவைகள் விதி எழுதியிருப்பது தானே பல மனிதர்களின் கனவுஙளும் நியாயங்களும் சுயமும் எரிக்கப்படும் கொட்டகை. வேகமாக பேசியதில் மூச்சு வாங்க முகிலினி அவனுக்கு கொடுக்கும் மருந்தை எடுக்க நிலவன் அதை சுவாசித்து விட்டுப் பேசினான்.

“இனி என்னை பத்தி உங்களுக்கு தெரியற விஷயம் என் சாவா மட்டும் இருக்கட்டும். முகிலினி ப்ளீஸ் என்னை உள்ளே கூட்டிட்டு போ”

முகிலினி அமைதியாக நிற்க நிலவன் உறுமினான்.

“இப்ப கூட்டிட்டு போறீயா இல்லையா? இப்படி உங்க தயவை எதிர்பார்த்து சாகறதுக்கு, யூ ***ங் காட் யூ மேட் மீ”

நிலவன் மேலும் பேசுவதற்கு முன் முகிலினி அவனை நெருங்கி சக்கர நாற்காலியைத் திருப்ப ரஞ்சனி பேசினார்.

“நான் அண்ணன் வரும் போது அண்ணன் கூடவாவது வரேனே நிலா”

தாய்மை பலம் பலவீனம் இரண்டின் உச்சம் என்பதை ரஞ்சனியின் அழுகைக் குரலில் உணர்ந்தாள் முகிலினி.

“அண்ணன் என்ன நீ, அப்பா அண்ணா யாரையும் நான் பார்க்க விரும்பலை. என்னை நிம்மதியா சாகவாது விடுங்க. யாரும் வர்றாதீங்க.”

நிலவன் சொல்ல முகிலினி அவனை உள்ளே அழைத்துச் சென்றாள். அவனுக்கு உணவு மருந்து கொடுக்கப்பட அவன் உறக்கத்திற்கு சென்றதும் முகிலினி வெளிவர ரஞ்சனி அறையின் வாயிலில் தனது மகனின் முகத்தை முடிந்த அளவு தனது நினைவுகளில் நிரப்பிக் கொண்டு நின்றிருந்தார். முகிலினிக்கு அவரைப் பார்க்க பரிதாபமாக இருந்தது‌ ஆனால் தனது உள்ளார்ந்த அன்பு கூட அவரின் ஆணவப் பார்வையில் வேறு மாதிரியாக அர்த்தம் கொள்ளப்படும் என்பதால் தனது பார்வையைத் தவிர்த்து வெளிவந்தாள்.

சான்ட்ரா இம்முறை ரஞ்சனியிடம் ஏதோ பேசிக் கொண்டு இருந்தார். ரஞ்சனி வீட்டை விட்டு வெளியேறுகையில் முகிலினியிடம் பெயரளவுக்கு வருத்தம் தெரிவித்து நிலவனை நன்றாக பார்த்துக் கொள்ளுமாறு பணித்து விட்டுச் சென்றார்.

அன்றிரவு சான்ட்ராவிடம் நிலவனின் சகோதரன் பேசியிருந்தான் தொடர்ந்து வேலையில் இருக்குமாறு சான்ட்ராவையும் முகிலினியையும் கேட்டுக் கொண்டு இருந்தான். சான்ட்ரா ரஞ்சனியின் தலையீட்டில் காரணமாக நிலவனின் வருத்தத்தைச் சம்பாதித்து இருந்ததால் வேலையைத் துறக்க முடிவு செய்திருந்தாள். ஆனால் நிலவனின் அண்ணன் கொஞ்சம் கூட கௌரவம் பாராது தனிப்பட்ட முறையில் அவருக்கு விடுத்திருந்த அலைப்பேசி அழைப்பு நிலவனின் மீது அவன் வைத்திருந்த அன்பை வெளிப்படுத்தியிருந்தது. அவன் நிலவனின் கோபம் தீர்ந்ததும் நேரில் வருவதாகச் சொல்லியிருந்தான்.

முகிலினி சான்ட்ரா இருவரும் நிலவனை மகிழ்ச்சியாக இருக்க வைக்க முயற்சித்தனர். அடுத்து வந்த நாட்கள் நிலவன் நிமோனியா சிகிச்சை பெற்று குணமாக அதன் பின்னும் இறுக்கத்துடனே இருக்க முகிலினி அன்று அவன் முன் வந்து இரு ஜீன்ஸ் பேண்ட்களை காட்டி நின்றாள்.

“இந்த ஜீன்ஸ் ல எது நல்லாருக்கு?”

நிலவன் அவளைப் பார்த்து விட்டு பின் பேசினான்.

“ஏன் எங்கேவாவது வெளியே போறீயா?”

*ஆமாம் எப்ப பார்த்தாலும் சிரிக்காமலே இருக்கீங்க எல்லாரும் அதான் வெளியே போய் சிரிச்ச முகமா நாலு பேரைப் பார்த்துட்டு வரலாம் னு இருக்கேன்”

நிலவன் அவளது முகப்பாவத்தில் சிரித்தவன் பின் பேசினான்.

“பொய் சொல்லாதே. நீ ஒண்ணும் ஜீன்ஸ் போட்டு போகப் போறதில்ல கல்யாணத்துக்கு கவுன் செலக்ட் பண்ணுன தானே. நீ சான்ட்ரா கிட்ட பாரீஸ் போறேன் னு சொன்னேல. அங்கே ஒரு ஃபிரண்ட் மேரேஜ் இன்வைட்”

முகிலினி சிரித்தாள் எல்லாமே கேட்டு விட்டு தான் இன்னும் சிடுசிடுப்பில் இருக்கிறான். அவளுடன் பணியில் அறிமுகமான ஜூலியா என்ற ஆப்பிரிக்கா நாட்டு பெண்ணின் திருமணம் பாரிஸில் நடக்கிறது. அருகில் இருப்பதால் சென்று வர வேண்டும் என முடிவு செய்திருந்தாள். சான்ட்ராவும் நிலவனைப் பார்த்துக் கொள்வதால் ஒரு நாள் பொழுது மட்டும் தானே என நினைத்திருந்தாள்.

“சரி நான் போறதில?”

அவள் கேள்வியை பாதியோடு நிறுத்த நிலவன் புன்னகைத்தான்.

“போயிட்டு வா முகில். அங்கே எட்வர்ட் சாக்லட்டியர் ல எனக்கு லிட்டில் பிரிக் ராக் வாங்கிட்டு வா”

அவன் சொல்ல முகிலினி புன்னகையுடன் தலையசைத்தாள். மறுநாள் காலை பாரீஸ் நகர் சென்றவள் நாட்ர டார்மே கதீட்ரல் சர்ச் ல் ஜூலியா திருமணத்தைக் கண்டு விட்டு எட்வர்ட் சாக்லெட் எனும் அந்த கடையின் முன் வந்து நின்றாள். நெருக்கமான கட்டிடங்களுக்கு இடையே சிறிய கடையாக எட்வர்ட் சாக்லேட் இருந்தது.

தங்க நிற சான்டின் கவுனில் காரில் இருந்து கீழிறங்கியவள் ஆர்ச் போலிருந்த சிறிய கதவின் நுழைவாயிலில் அவள் நுழைய மெல்லிய மணியோசை சத்தமிட்டது. அவள் மெல்ல ஒவ்வொரு சாக்லெட்களாக கண்ணாடி திரை வழியாகப் பார்வையிட்டுக் கொண்டே வந்தவள்

“எ லிட்டில் பிரிக் ராக் ப்ளீஸ்”

அவள் சொல்ல அதே வார்த்தைகளைச் சொல்லி அருகிலிருந்தவன் அவளை நோக்கி திரும்பினான். அவன் அன்று வயநாடில் கண்ணாடி திரையில் அவளை ரசிக்க நிறுத்தி திரும்பியவன் மீண்டும் பார்வைகளில் காணவே முடியாது என நினைத்திருந்தவன் அவன் கதிரோன்.
 
Last edited:
Status
Not open for further replies.
Top