எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

கண்ணகியின் கோவலன் - டீஸர்

NNK-92

Moderator
கண்ணகியின் கோவலன்…


“எவ்வளோ பெரிய ஆளு இப்படி சாதாரணமா நம்ம கூட பஸ்ல வராரு”


“யாருங்க இவரு?”

“இவரை தெரியாதா இவரு தான் வில்லியம் குரூப்ஸ் ஆஃப் கம்பெனியோட ஒரே வாரிசு ஆரோன் வில்லியம் தமிழ்நாட்டிலேயே டாப் 10 பணக்காரர்களில் ஒருத்தர்” என அங்கிருந்தவர்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டு இருக்க மொத்த மீடியாவும் அந்த பேருந்தை பின் தொடர்ந்து ஆரோன் வில்லியம் படம் பிடித்துக் கொண்டு இருந்தனர்.


ஆரோன் பேருந்தை விட்டு அவன் கம்பெனி வாசலில் இறங்கியவுடன் மொத்த மீடியாவும் அவனை சூழ்ந்து கொண்டனர்.


அவன் முன் மைக்கை நீட்டிய பெண் ஒருத்தி “எப்படி சார் இவ்வளவு சாதரணமாக இருக்கிங்க” என்றாள்.


“எனக்கு எப்பவும் இப்படி இருக்கத்தான் பிடிக்கும்” என்றான் மெலிதாக புன்னகைத்து கொண்டே.


இன்னொரு நிரூபர் “எப்போ சார் மேரேஜ் பண்ண போறிங்க உங்களுக்கு கல்யாணம்ன்னு சொல்லிட்டு இருக்காங்களே” என்றான்.


அதை கேட்டவுடன் எதுவும் கூறாமல் விறு விறுவென உள்ளே சென்றுவிட்டான்.


“என்னடா கல்யாணம்ன்னு சொன்ன உடனே இந்த ஓட்டம் ஓடுறாரு” என்றான் அந்த நிருபருடன் இருந்தவன்.


“அவரு பக்கா ஜென்டில்மேன் பொண்ணுங்கனாளே பிடிக்காது 28 வயசுலயே எல்லா பிரஷரையும் ஹேன்டில் பண்றாரு சோ இப்படி தான் இருப்பாரு”


“இந்த காலத்துல இப்படி ஒரு மனுஷனா பணக்கார வீட்டு பசங்கன்னா பொண்ணுங்க சரக்குன்னு சுத்துவாங்க இந்த வயசுல இவ்வளோ பொறுப்பா இருக்காரு”


“நான் தான் சொன்னனே ஹி இஸ் ஜென்டில்மேன்” என்றான்.


மாலை ஆறு மணி…


தனது லேப்டாப்பில் வேலை பார்த்துக்கொண்டு இருந்த ஆரோன் தனது ஐபோனில் மணியை பார்த்தவன் “ஷிட்” என பதறி அடித்துக் கொண்டு தனது காரில் வெளியே கிளம்பினான்.


நேரே தனது பிச் ஹவுஸிற்க்கு சென்றவன் தனது கோட் ஷீ என அனைத்தையும் தூக்கி எறிந்தவன் தனது அறைக்கு சென்று பெட்டில் விழுந்தவன் தனது பெட்டுக்கு அருகில் இருந்த டின் பீரை எடுத்து குடிக்க ஆரம்பித்தான் தனது ஐபோனை எடுத்து பி.ஏவிற்க்கு அழைத்தவன் “ரெடியா” என்றான்

பதிலுக்கு “இதோ இப்போ வருவாங்க பாஸ்” என்றான்.


அதே நேரம் அவன் அறையின் கதவை தட்டும் சத்தம் கேட்டு “கம் இன்” என்றான்.


கதவை திறந்து கொண்டு வெள்ளை நிற அழகி ஒருத்தி அரைகுறை ஆடையுடன் அவன் மேலே வந்து விழுந்தாள்.

அவனும் சிரித்து கொண்டே அவளை அணைத்து கொண்டான்.


ஆரோனால் மது,மாது இல்லாமல் ஆறு மணிக்கு மேல் இருக்க முடியாது.


தன்னை வெளியே நல்லவன் என காட்டிக் கொண்டாலும் அவன் கோவலனே.


இந்த கோவலனின் கண்ணகி யாரோ?.....










 
Top