உன் நினைவிலே கரைகிறேன்! - 1
“எனக்கு ஏற்கனவே இன்னைக்குக் கோல்ட். இதில், அந்த தலைக்கனம் பிடிச்ச, ஹீரோவை வேற, நான் இன்டர்வியூ செய்யனுமா?” என்று முணுமுணுத்தவாறே, தன் உதட்டுச் சாயத்தைச் சரிபார்த்துக் கொண்டாள் ஹாரண்யா.
“ஹேய்! என்னோட ஃபேவரைட் ஹீரோவை அப்படி சொல்லாதே!” என அவளைக் கண்டித்தாள் தாமினி.
“க்கும்! ரொம்ப முக்கியம், போ!” என்று கூறியவளை, அந்த நிறுவனத்தின், உரிமையாளர் அழைத்ததாகத், தகவல் வரவும்,”நான் போய், என்னன்னுக் கேட்டுட்டு வரேன்” என்று தோழியிடம் கூறி விட்டு, அவரிடம் சென்றாள்.
“மிஸ் ஹாரண்யா! நம்மளோட சீஃப் கெஸ்ட் வந்தாச்சு. அவரை நீங்க இன்டர்வியூ பண்ண ரெடியாக இருக்கீங்களா?” என்றார் சுதன்.
“எஸ் சார். ஐ யம் ரெடி!” என்று உறுதியாக கூறியவளிடம்,
“அப்போ அவருக்குக், கால் செய்து, நம்ம ஸ்டூடியோவுக்கு, வர சொல்லிடவா?” என்று அவளிடம் கேட்டார்.
“ஷூயர் சார்” என்று தெரிவித்து விட்டு, தன்னைப் போலவே, அங்கே, வேலை பார்க்கும், பெண்கள் இருக்கும், அறைக்குச் சென்றாள் ஹாரண்யா.
“ஹாய்! நீ தான், மோஹித் சாரை, இன்டர்வியூ செய்யப் போறியா?” என்று சக தோழி ஒருத்தி அவளிடம் வினவினாள்.
“ம்ம்”
“ஓஹோ! நல்ல ஃபேமஸான, ஆக்ட்டர்ஸை எல்லாம், இவ தான், இன்டர்வியூ பண்ற சான்ஸ், கிடைக்குது பாரேன்!” என்று அவளை நக்கலடித்தாள் மற்றொருத்தி.
“கல்யாணத்துக்கு முன்னாடி, அவ ஹஸ்பெண்ட்டை, பேட்டி எடுத்தது தான், அவளோட எக்ஸ்க்ளூசிவ் இன்டர்வியூ!” என்று கூறி, அங்கிருந்தவர்களோ நமுட்டுச், சிரிப்பை உதிர்த்தார்கள்.
“ஷட் அப்!” என்று கத்தியவளோ, கண்களில் கனலுடன்,“என்னோட பர்சனல் லைஃப், உங்களுக்குத் தேவை இல்லாதது! அதைக் கிண்டிக், கிளறிப் பார்க்கவும், இங்கே யாருக்கும், உரிமை இல்லை” என்று அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்தாள் ஹாரண்யா.
உடனே, அந்த அறையிலிருந்த அனைவரும் அமைதியாகி விட்டனர்.
அவளது பிரியமான, தோழி தாமினியோ,”நிதானம் ஆக இரு ஹாரா. இவங்க எல்லாம், உன்னை ட்ரிக்கர் பண்ணிட்டே தான் இருப்பாங்க. அதுக்கெல்லாம் எகிறிக்கிட்டு, இருக்கக் கூடாது!” என்று அவளைத் தணிய, வைக்க முயன்றாள்.
ஆனாலும், தனது விழிகள், கலங்குவதை உணர்ந்த, ஹாரண்யாவோ,”நான் போய் டிரெஸ்ஸிங் ரூமில் இருக்கேன்” என்று அவளிடம், சொல்லிக் கொண்டு, அங்கே போய் விட்டாள்.
“ஷேம் ஆன் யூ கைஸ்!” என்று அவளைக் கிண்டல் செய்து சிரித்தவர்களைத், திட்டி விட்டுத், தோழியிடம் விரைந்தாள் தாமினி.
அங்கே, அலங்காரம் செய்து கொள்ளும், கண்ணாடியின் முன் அமர்ந்திருந்தவளோ, தன் முகத்தையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த ஹாரண்யா,
அவள் அருகில், சத்தம் எழுப்பாமல், உட்கார்ந்தவளிடம்,”மினி! நான் இங்கேயிருந்து, ரிலீவ் ஆகப் போறேன்!” என்றாள்.
தாமினி,“வாட்! அவங்கப் பேசுறதை எல்லாம் மண்டையில் ஏத்திக்கிட்டே இருந்தால் கண்டிப்பாக ஒருநாள் இந்த முடிவுக்கு வருவன்னு நினைச்சேன். கரெக்டா இன்னைக்குச் சொல்லிட்ட!” என்று பொருமினாள்.
“ம்ஹூம்! இதுதான் என்னோட முடிவு!” என்றவளுக்கு, அந்த நேரத்தில், தான் நேர்காணல், செய்யப் போகும், திரைத்துறையில் இரண்டாவது பிரபலமாக, வலம் வந்து கொண்டிருக்கும், மோஹித் என்ற நடிகன், அங்கே வந்து விட்டதாக, அவளுக்குத் தகவல் கொடுக்கவும், தன்னுடைய கன்னத்தில் இருந்த, கண்ணீர்க் கறைகளைத், துடைத்துக் கொண்டு, கொஞ்சம் ‘டச் அப்’ செய்து விட்டு, அவனிடம் போனவளை, ஏளனமாக நோக்கினான் அந்த மோஹித்.
அவனுக்கு அவளை நன்றாகத் தெரியும்! பார் எங்கும், புகழ் பெற்றிருக்கும், தொலைக்காட்சி நிறுவனத்தில், சில வருடங்களாக, நடிகர், நடிகைகளை, நேர்காணல் செய்யும், வேலையைத் தான், பார்த்துக் கொண்டிருந்தாள் ஹாரண்யா.
அப்படியிருக்க, இவளை மோஹித்திற்குத் தெரியாமல் போகுமா? என்ற கேள்வி எழும்பலாம்! ஆனால், அதை விட, மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், திரையுலகில் தனது முதலிடத்தை யாருக்கும் விட்டுக் கொடுக்காமல், தக்க வைத்துக் கொண்டிருக்கும், “பகீரதன்” என்பவனுடைய முன்னாள் மனைவி, தான் இவள்!
அதன் காரணமாகத் தான், அவளை இழிவுபடுத்தும் வகையில், அப்படிச் சிரித்தான் மோஹித்.
சிறிது நேரத்திற்கு, முன்பாகத் தான், தன்னுடன் பணிபுரியும், சகப் பெண்கள், தன்னை இழிவுபடுத்திய போது அழுதவளோ, இப்போது, இவனுடைய ஏளனப் பார்வையையும், சிரிப்பையும், கருத்தில் கொள்ளாமல், அங்கேயிருந்த, அந்த நிகழ்ச்சியை நடத்துபவரிடம்,”சார்! இன்டர்வியூவை எப்போ ஸ்டார்ட் பண்ணலாம்?” என்று வினவினாள் ஹாரண்யா.
தன்னை அவமானப்படுத்தி விட்டு, அருகிலிருந்த நபரிடம், அவள் பேசியதைக் கண்டு, மோஹித்தின் முகமோ கருத்துச் சிறுத்துப் போனது.
அதைக் கவனிக்காத, அவளது முதலாளியோ,”ஹீரோ சார், ரெடியாக இருந்தால், உடனே ஆரம்பிச்சிடலாம்” என்றுரைத்து விட்டு அவனைப் பார்த்தார்.
“ஐ யம் ரெடி சார்” என்று அவரிடம் கூறி விட்டு, ஹாரண்யாவை முறைத்துப் பார்த்தான் மோஹித்.
அவளோ,‘நீ எப்படி வேண்டுமானாலும் பார்த்துக் கொள். அதை நான் கருத்தில் எடுத்துக் கொள்ளப் போவதில்லை!!’ என்று தோள் குலுக்கலுடன், தான் அவனை, நேர்காணல் செய்யப் போகும் இடத்தையும், அங்கேயிருக்கும் பொருட்களையும், ஒரு தடவை ஆராய்ந்து பார்த்துக் கொண்டாள் ஹாரண்யா.
“சார்! நீங்க ரூமில் வெயிட் பண்ணுங்க. நாங்க ஷோவை ஸ்டார்ட் பண்ணிட்டு, உங்களோட என்ட்ரி அப்போ, இன்ஃபார்ம் செய்றோம்” என்று அவனிடம் தெரிவித்து, அனுப்பி வைத்தார் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்.
“நீங்க சோஃபாவில் உட்கார்ந்து ஷோவை ஆரம்பிங்க” என்று அவளுக்கு அறிவுறுத்தினார் சுதன்.
உடனே, தன் முகத்தில் வரவழைத்துக் கொண்டு, சில தேன் தடவிய வார்த்தைகளைச் சொல்லி, நிகழ்ச்சியை ஆரம்பித்து, சிறிது நேரத்திற்கு முன், தன்னை இழிவுபடுத்தியவனைப் பற்றிய, வாழ்த்துரையைக் கூறி முடித்து,”இப்போ அந்த ஃபேமஸ் ஆக்ட்டர் மிஸ்டர். மோஹித், இப்போ அவரைக் கூப்பிடச் போறேன்” என்றவள்,
“வெல்கம் மிஸ்டர். மோஹித் சார்!” என்று உள்ளே நுழைந்தவனை வரவேற்று, அவனுக்கு மரியாதைக்காக ஒரு பூங்கொத்தையும் கொடுத்தாள் ஹாரண்யா.
செயற்கையானப், புன்னகையுடன் அதைப் பெற்றுக் கொண்டு,”ஹாய்!” என்று அவளுக்கு வணக்கம் வைத்தான் மோஹித்.
அந்த நேர்காணலில், அவனுடைய சில அபிமானிகளும் வந்திருந்தனர்.
அவர்களது கூச்சலைக் கேட்டதும்,”ஹலோ மை டியர் ஃபேன்ஸ்!” என்று அவர்களுக்கு ஒரு பறக்கும் முத்தத்தை அனுப்பினான்.
அதில், மேலும் கத்தி விட்டு அடங்கினர்.
“சார். நீங்க முதல்ல ஃபிலிம் இண்டஸ்ட்ரீயில், கத்துக்கிட்ட விஷயங்களை எங்களுக்கு ஷேர் பண்ணுங்க” என்றாள் ஹாரண்யா.
“ஷூயர்” என்றவனோ, சினிமாத்துறையில், தான் கடந்து வந்தப் பாதையில், கிடைத்த அனுபவங்களை எல்லாம் பகிர்ந்து கொண்டான் மோஹித்.
“வாவ்! சூப்பர் சார்!” என்று அவனைப் பாராட்டி, அடுத்தடுத்து கேள்விகளைக் கேட்டாள்.
அதற்குரிய பதில்களைக் கொடுத்தவன், அந்த நிகழ்ச்சி, முடியும் தருவாயில் இருக்கவும், "உங்களுக்கும் என்னோட வாழ்த்துகள்! இந்த ஷோவை, சூப்பராக ஹோஸ்ட் செய்தீங்க!” என்று அவளுக்குப் பொய்யாக வாழ்த்துக் கூறினான் மோஹித்.
“தாங்க்யூ சோ மச் சார்” என்றவள், நேர்காணல் முடிந்து விட்டதை அனைவருக்கும் அறிவித்தாள் ஹாரண்யா.
“இந்த ஷோ, நல்லபடியாக முடிஞ்சுது” என்று நிம்மதியடைந்த ஒருங்கிணைப்பாளர் சுதனோ,
முதலில் மோஹித்திடம் சென்று,”உங்கப் பிஸி ஷெட்யூலிலும், எங்களுக்காக வந்து இன்டர்வியூ கொடுத்ததுக்கு ரொம்ப தாங்க்ஸ் சார்!” என அவனிடம் நன்றி தெரிவித்தார்.
“ம்ம்…என்னோட பேமெண்ட்டை, டிரான்ஸ்ஃபர் பண்ணிடுங்க” என்று கூறி விட்டு, அந்த தொலைக்காட்சி நிறுவனத்தில் இருந்து, தன் காரில் ஏறிப் பயணம், செய்து கொண்டிருந்தவனுக்கோ, தன்னை ஹாரண்யா, ஒரு பொருட்டாகவே, மதியாமல் இருந்ததை எண்ணி,’டேய் பகீரதன்! நீ என்னடான்னா, சினி ஃபீல்டில், முதல் இடத்தில் இருந்துட்டு, என்னை டென்ஷன் பண்ற! உன்னோட பொண்டாட்டி என்னடான்னா, என்னை இன்னைக்கு, இன்சல்ட் செஞ்சிட்டா! உங்க ரெண்டு பேருக்கும் இருக்குடா!’ என்று உள்ளுக்குள் கருவிக் கொண்டே, தனது வீட்டை அடைந்தான் மோஹித்.
“எந்த ஸ்ட்ரெஸ்ஸூம் இல்லாமல், நீ இந்த ஷோவை சூப்பராக நடத்தி, முடிச்சிட்ட ஹாரா! கங்கிராட்ஸ்!” என்று உடை மாற்றும் அறைக்குள் வந்தவளை, அணைத்து ஆறுதல் கூறிய தோழியிடம்,”யெஸ் மினி” எனக் குழந்தையாக மாறி, அவளிடம் தஞ்சம் புகுந்தவள், தன்னைச் சமன்படுத்திக் கொண்டு, அன்றைய நேர்காணலை, வெற்றிகரமாக நடத்திக் கொடுத்ததற்காகத், தனது சம்பளத்தைப் பெற்றுக் கொண்டு, தாமினியை அனுப்பி விட்டுத், தனது வீட்டிற்குச் சென்றாள் ஹாரண்யா.
இன்று அவள் எடுத்த நேர்காணலைத், தொலைக்காட்சியில் ஒளிபரப்புவதற்கு, இரண்டு நாட்கள் ஆகலாம். எனவே, அதுவரை வேறெதாவது சினிமா பிரபலத்தை, அவர்கள் நேர்காணல் செய்ய அழைக்க வேண்டும். எனவே, அதற்குரிய வேலைகளை ஆரம்பித்தார்கள் அந்த தொலைக்காட்சி நிறுவனம்.
சோர்வடைந்து போய் வந்திருந்த மகளைப் பார்த்து,”இப்படி வந்து உட்காரு ஹாரா” என்று மகளை அமர வைத்தவர், குளிரலமாரியில் இருந்து, தண்ணீர் பாட்டிலை எடுத்து வந்து அவளுக்குப் பருகத் தந்தார் அவளது தாய்.
அதை வாங்கிப் பருகியவரது மகளோ,”அந்த மோஹித், என்னை ரொம்பவே, ஹர்ட் பண்ணிட்டான் மா!” என்று அவரிடம் பலவீனமான குரலில் மொழிந்தாள் ஹாரண்யா.
மதுராஹினி,“ப்ச்! அவன் நம்ம மாப்பிள்ளை மேலே, இருக்கிற கோபத்தை உன்கிட்ட காமிச்சிட்டு இருக்கான்டி!” என்றார்.
“மாப்பிள்ளையா?” என்று வெறுப்புடன் கேட்டாள் மகள்.
“ஆமாம். உன்னோட புருஷன், எங்களுக்கு மாப்பிள்ளை, தானே ம்மா?” என்று கூறிக் கொண்டே, அங்கு வந்தார் அவளது தந்தை இயமானன்.
“இப்போ அவரை, நான் என் புருஷனாகவே, நினைக்கலை ப்பா!” என அவரிடம் அழுத்திச் சொன்னாள் ஹாரண்யா.
“நீ இப்போ, தானே நினைக்கலை! அதுக்கு முன்னாடி இருந்தே, அவர் எங்களோட மாப்பிள்ளை தான்டி! அதுவுமில்லாமல், உங்களோட ஈகோவால் தான், நீங்கப் பிரிஞ்சு இருக்கீங்க” என்று மகளுக்கு நினைவுபடுத்தினார் மதுராஹினி.
“ஓகேமா. எனக்குக் கோல்ட் இருக்கு அண்ட் ஃபீவர் வரப் போகுதுன்னு நினைக்கிறேன். கொஞ்ச நேரம் கழிச்சு வந்து சாப்பிட்டுட்டு, டேப்லெட் போட்டுக்கிறேன்” என்றவாறு, தன் அறைக்குள் அடைந்து கொண்டாள் மகள்.
அவளை நினைத்து கவலைப்பட்ட மனைவியிடம், “எல்லாம் சரி ஆகிடும் மது” என்று கூறி, அவரை அமைதிப்படுத்தினார் இயமானன்.
ஆம்! ஹாரண்யாவிற்கும், சினிமா உலகத்தில், முதல் நட்சத்திர நடிகனாக, ஜொலித்துக் கொண்டிருக்கும், பகீரதன் என்பவனுக்கும், எப்போதோ, காதல் திருமணம் நடந்திருந்தது.
ஆனால், அவர்களிருவருக்கும் இடையே இருந்தக், குறைவானப் புரிதல் காரணமாக, இப்போது தனித்தனியாக, வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
அவர்களது பிரிவின் காரணத்தைப், போகப் போகத், தெரிந்து கொள்வோம்.
- தொடரும்