எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

உன் இதயச்சிறையில் ஆயுள் கைதியாய் மாறிடவே... - கதைத் திரி

Status
Not open for further replies.

Nuha Maryam

Moderator
அத்தியாயம் - 1

New York City - North America

விடிந்தும் விடியாததுமாய் இருந்த அந்த அதிகாலைப்பொழுதில் குளிர் காற்று முகத்தை இதமாக வருட கையில் ஆவி பறக்கும் காபி கோப்பையுடன் பால்கனியில் வந்து நின்றாள் அவள்.

அந்த பரந்து விரிந்த வானில் வெய்யோனின் உதயத்தை ரசிப்பதில் அவளுக்கு ஒரு அலாதிப் பிரியம். மேற்படிப்புக்காக வேண்டி நியுயார்க் வந்து இரண்டு வருடங்கள் ஆகின்றன. வந்த முதல் நாளிலே ஆரம்பித்த பழக்கம் இது. எழுந்ததும் சூரிய உதயத்தை ரசிக்கும் போது ஏனோ அந்த நாளே நன்றாக மகிழ்ச்சியாக இருக்கும் என ஒரு எண்ணம்.

இன்றும் அதற்காகவே பால்கனியில் வந்து காத்துக்கொண்டு இருக்கிறாள் அவள். சிதாரா...

பேரழகு என்று வர்ணிப்பதற்கு இல்லாவிட்டாலும் பார்ப்போரை மீண்டும் ஒரு முறை திரும்பிப் பார்க்க வைக்கும் அழகு. அந்த இதமான காலை வேளையின் எழிலை ரசித்துக் கொண்டு இருந்தவளின் கவனத்தை கலைத்தது அவளின் கைப்பேசி ஓசை.

"இந்த நேரத்துல யாரு கால் பண்றது.." என நினைத்தபடி மொபைலை எடுத்தவளுக்கு ஆனந்த அதிர்ச்சி.
ஏனென்றால் அழைத்திருந்தது அவளுடைய ஆருயிர் தோழிகளல்லவா.

"ஹேய்.. வாட் அ சப்ரைஸ்டி.. ரொம்ப நாள் கழிச்சி ரெண்டு பேரும் சேர்ந்து வீடியோ கால் பண்ணி இருக்கீங்க.. ஆமா ரொம்ப அதிசயமா இருக்கு.. ரெண்டு கும்பகர்ணிகளும் முழிச்சிட்டு இருக்கீங்க.. இந்தியால இப்போ டைம் ஆஃப்டர்நூன் 3.30 ஆ இருக்குமே.. இது ரெண்டு பேரும் வயிறு முட்ட சாப்ட்டு தூங்குர டைம் ஆச்சே..." என விடாமல் பேசிக்கொண்டு இருந்தவளை தடுத்தாள் அக்ஷரா.

"அம்மா தாயே.. தயவு செஞ்சி அந்த வாய மூடுறியா.. எங்களையும் கொஞ்சம் பேச விடும்மா.. உன் கிட்ட ஒரு முக்கியமான விஷயத்த சொல்லத்தான் கால் பண்ணோம்.. முதல்ல நீ எப்போ இந்தியா வர போறாய் அத சொல்லு.." என்றவளின் கேள்விக்கு பதிலில்லை.

"என்னடி பதில காணோம்.. ஏதாச்சும் சொல்லு.." "நீ தானே வாய மூடிக்கிட்டு இருக்க சொன்னாய் அச்சு.." என அப்பாவி போல் பதிலளித்தவளை வெட்டவா குத்தவா என பார்த்தாள் அக்ஷரா. அதற்கு ஒரு படி மேலே சென்று தலையிலே அடித்துக் கொண்டாள் லாவண்யா.

"நீ இன்னுமே இந்த மொக்க ஜோக் அடிக்கிற பழக்கத்த விடலயா சித்து" என‌ கடுப்பாக கேட்டவளிடம், "ஈஈஈ...‌அதெல்லாம் ஜீன்லயே‌ இருக்கிறது வனி... மாத்திக்க எல்லாம் முடியாது..சரி‌ நேரா விஷயத்துக்கு வாங்க...ஆமா எதுக்காக எப்போ இந்தியா வரேன்னு கேட்டீங்க.. இப்போ செமஸ்டர் லீவ்.. நான் கூட வந்து கொஞ்சம் நாள் ஸ்டே பண்ணிட்டு போலாம்னு தான்‌ யோசிச்சிட்டு இருக்கேன்..‌ இன்னும் டேட் ஃபிக்ஸ் இல்ல" என்றதும் தான்‌ அவர்களுக்கு எதற்காக அழைத்தோம் என்பதே ஞாபகம் வந்தது.

"ஆஹ்.. நல்லதா போச்சி அப்போ.. நம்ம ஃப்ரென்ஸ் எல்லாம் சேர்ந்து ஊட்டிக்கு டூர் போலாம்னு ப்ளேன்‌ ‍பண்ணி இருக்கோம்.. எல்லாரும் சந்திச்சி ரொம்ப நாள் ஆகுது.. அதனால் எல்லாருக்குமே ஓக்கே தான்.. நீ மட்டும் தான் மிஸ்ஸிங்.." என லாவண்யா‌ அழைத்ததற்கான விளக்கம் அளிக்க சிதாரா யோசிப்பதைக் கண்டதும் அக்ஷரா அவசரமாக, "இதுல யோசிக்க எதுவுமே இல்ல சித்து.. நீ ஆல்ரெடி இந்தியா வர தானே ஐடியா பண்ணாய்.. சோ நெக்ஸ்ட் ஃப்ரைடே இங்க இருக்கிற மாதிரி கிளம்பி வா.. ஓக்கே தானே உனக்கு" என்க, "வர‌ முடியாதுன்னு சொன்னா மட்டும் விடவா போறீங்க.. நான்‌ இன்னைக்கே டிக்கட் புக் பண்ணுறேன்.. ரொம்ப எக்ஸைட்டிங்கா இருக்கு எல்லோரையும் பார்க்க.." என கேலியில் ஆரம்பித்து பின் சந்தோஷமாக பேசி மூவரும் பொழுதைக் கழித்தனர்.

அரட்டை அடித்து முடித்து காலை கட் பண்ணும் போது நன்றாகவே விடிந்து இருந்தது. பின் ஏனைய வேலைகளை முடித்துவிட்டு ஆன்லைனில் இந்தியா செல்வதற்கான டிக்கட்டை புக் செய்தவள் வீட்டாருக்கு அழைத்து வரும் தகவலை தெரிவித்தாள்.

பின் "2 யேர்ஸ் கழிச்சி இந்தியா போறோம். முதல்ல ஷாப்பிங் போய் எல்லாருக்கும் கொண்டு போக ஏதாச்சும் பர்ச்சேஸ் பண்ணலாம்" என நினைத்தவள் தயாராகி கிளம்பினாள்.

Chennai - India

பூஞ்சோலை கிராமம்

காலையிலிருந்தே அந்த வீடு மிகவும் பரபரப்பாக காணப்பட்டது. பெண்கள் அனைவரும் ஓடியோடி வேலை செய்து கொண்டிருந்தனர். முற்றத்தில் நின்று மொபைலில் யாருடனோ தீவிரமாக பேசிக்கொண்டு இருந்தவனை நோக்கி வந்தாள் லாவண்யா. அவள் வந்தது அறிந்ததும் "நான் அப்புறம் பேசுறேன்.. நீங்க எல்லாத்தையும் ரெடி பண்ணி வெச்சிருங்க..." என்று விட்டு மொபைலை பாக்கட்டில் வைத்தவாறு திரும்பினான் ஆதர்ஷ்.


"நீ இன்னும் கிளம்பலயா ஆது" எனக் கேட்டவளிடம், "எங்க கிளம்பலயான்னு கேக்குற நியா" என வினவினான் ஆதர்ஷ்.


தன்னால் இயன்ற மட்டும் அவனை முறைத்த லாவண்யா, "உனக்கு கொஞ்சம் கூட பொறுப்பே இல்லயா ஆது.. நைட் அவ்வளவு படிச்சி படிச்சி சொன்னேன் தானே.. சித்து யூ.எஸ்ல இருந்து த்ரூவா இங்க தான் வரா.. சோ அவள பிக்கப் பண்ணிக்க போன்னு..." என்க தலையில் கை வைத்தவன், "ஓஹ்.... சோரி‌ நியா முக்கியமான வேலையொன்னு வந்திடுச்சி..‌அதான் மறந்துட்டேன்.. இரு‌ நான் இப்பதே யாரு கிட்டயாச்சும் சொல்றேன்" என அவசரமாக மொபைலை கையில் எடுத்தான்.


" நீ இப்ப சொல்லி என்ன ஆக போகுது..‌ அவள் ஆல்ரெடி ரீச் ஆகிட்டாள்.. ஏர்போட்ல இருந்து வெளிய வந்து கால் பண்றதா சொன்னாள்.." என கோவமாக பேசினாள் லாவண்யா.


ஆதர்ஷ், "சரி சரி நீ கோவபடாதே நான்‌ ஏதாச்சும் பண்ணுறேன்.." எனக் கூறியும் லாவண்யா சமாதானம் ஆகவில்லை. அந்நேரம் "என்ன மச்சான் ப்ராப்ளம்" எனக் கேட்டவாறு வந்தான் அபினவ்.

அவனிடம் விஷயத்தை விளக்க தான் பார்த்துக் கொள்வதாக கூறிச் சென்றான். பின் யாரையோ மொபைலில் அழைத்த அபினவ், "மச்சான் நீ மீனம்பாக்கத்துக்கு தானே ஏதோ வேலையா போனாய்.. ஏர்போட்ல ஒருத்தங்க வெய்ட் பண்ணிட்டு இருப்பாங்க.. நீ அவங்கள பிக்கப் பண்ணி இங்க கூட்டிட்டு வரியா" என்க "சரி நீ நேம் என்ட் எப்படி இருப்பாங்கன்னு சொல்லு" எனக்‌ கேட்டவனுக்கு அபினவ் பதில் சொல்லப்போக அதற்குள் அவனை யாரோ அழைக்கவும், "மச்சான் நீ போய் கால் ஒன்னு தா.. அவங்களே வருவாங்க.. சரிடா இங்க சின்ன வேலையொன்னு.. பாய்..." என அழைப்பைத் துண்டித்து விட்டான்.


அந்தப்பக்கம் இருந்தவனின் கத்தல் எதுவும் அபினவ்வின்‌ செவியை அடையவில்லை. "ப்ச்.. இவன் வேற யாருன்னு டீட்டைல்ஸ் சொல்லாம கட் பண்ணிட்டான்.. எல்லாம் முடிஞ்சி கடைசில என்ன ட்ரைவர் வேலையையும் பார்க்க வெச்சிட்டான்.. எல்லாம் என்‌ தலையெழுத்து.." எனக் கூறிவிட்டு காரை‌ உயிர்ப்பித்தான்‌ பிரணவ்.


Chennai International Airport

இரண்டு வருடங்களுக்கு பின் தாய் மண்ணை மிதித்த சிதாரா மிகவும் உற்சாகமாக காணப்பட்டாள்.
இந்த காலத்து பெண் என்பதை நிரூபிக்கும் விதமாகவே உடனே செல்ஃபி எடுத்து Back to India என்ற மெசேஜ்ஜுடன் யாருக்கோ அனுப்பியவள் கையோடு வாட்சப்பில் ஸ்டேட்டஸும் வைத்து விட்டாள்.

பின் லாவண்யாவுக்கு அழைத்தவள் அழைப்பு ஏற்கப்பட்டதும் "நான் ஏர்போட்டுக்கு வெளிய வந்துட்டேன் வனி.. தர்ஷ் அண்ணா எங்க இருக்காரு" என்க "சித்து சோரிடி.. ஆதுக்கு அவசரமா வேலையொன்னு வந்திடுச்சி.. சோ ஆதுவோட ஃப்ரென்ட் யாரோ தான் உன்ன பிக்கப் பண்ணிக்க வந்திருக்காரு... XXXXX இதான் கார் நம்பர்.. ப்ளீஸ்மா கோச்சிக்காதே..." என லாவண்யா கெஞ்ச, "உன்ன வந்து கவனிச்சிக்குறேன்.." எனக் கடுப்புடன் கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்தாள் சிதாரா. பின் கார் எண்ணைக் கண்டுபிடித்து அதனை நோக்கி சென்றவளின் நடை அங்கிருந்தவனைக் கண்டதும் தடைப்பட்டது.

ஏர்போட்டை அடைந்தவன் அபினவ்வுக்கு அழைத்து, "நான் வந்துட்டேன்..எங்க இருக்காங்கடா" என்க "உன்னோட கார் நம்பர் குடுத்து இருக்கேன்டா.. வெய்ட் பண்ணு வருவாங்க.." என்றான் அபினவ்.
பின் காரிலிருந்து இறங்கி மொபைலை நோண்டிக் கொண்டிருந்தான்.

சிறிது நேரத்தில் தன் முன் நிழலாட மொபைலிலிருந்து பார்வையை அகற்றியவன் தன் முன்னே யாரென்றே அடையாளம் தெரியாதவாறு லக்கேஜ்ஜுடன் விரித்து விட்ட கூந்தல், கண்ணில் சன் கிளாஸ் அணிந்து மாஸ்க் போட்டு கறுப்பு ஷேர்ட், ஜீன்ஸ் அணிந்து கையில் ஓவர்கோட், ஹேன்ட்பேக் சகிதம் நின்றிருந்தவளை கேள்வியாய் நோக்கினான்.

 

Nuha Maryam

Moderator
அத்தியாயம் - 2

தன் முன்னே நின்று கொண்டிருந்தவளை கேள்வியாய் நோக்கியவன்‌ பின் நினைவு வந்தவனாக "நீங்க தான் அபினவ் சொன்னவங்களா... வாங்க கிளம்பலாம்.. உங்க லக்கேஜ குடுங்க.. நான் எடுத்து வெக்கிறேன்.." என்றதும் தான்‌ தன்னிலையை அடைந்தாள் சிதாரா.

"மாஸ்க் போட்டு இருக்கிறதனால அவனுக்கு நம்மள அடையாளம் தெரியல போல... அதுவும் நல்லதா போச்சி... வனி.... இன்னெக்கி உனக்கு இருக்கு..." என நினைத்துக்கொண்டு காரில் ஏறினாள்.

காரில் ஏறியதுமே செய்த முதல் காரியம் லாவண்யாவுக்கு மெசேஜ் அனுப்பியது தான்.

"யாரடி பிக்கப் பண்ண அனுப்பி வெச்சி இருக்காய்... கொஞ்சம் கூட அறிவே இல்லயா... யார என்னோட வாழ்க்கைல திரும்ப சந்திக்க கூடாதுன்னு நெனச்சேனோ அவனயே அனுப்பி வெச்சி இருக்காய்.." என அனுப்பினாள்.

அங்கு வீட்டில் அக்ஷராவுடன் சேர்ந்து அடுத்த நாள் டூர் செல்ல தேவையானவற்றை எடுத்து வைத்துக் கொண்டிருந்த லாவண்யா சிதாராவின் மெசேஜ்ஜைப் பார்த்ததும் எதுவும் புரியாமல் விழித்தாள்.

அக்ஷரா, "என்னாச்சு வனி.. என்ன யோசிக்கிறாய்.." என்க அவளிடம் மெசேஜை காட்டினாள் லாவண்யா.

சில நொடிகளில் இருவரும் ஒரே சமயத்தில் "பிரணவ் அண்ணா" என்றனர்.

உடனே இருவரும் ஆதர்ஷையும் அபினவ்வையும் தேடிச்சென்று விசாரித்ததில் அபிணவ் சொன்ன தகவலைக் கேட்டு தலையில் அடித்துக் கொண்டனர்.

ஆதர்ஷ் அவசரமாக, "சத்தியமா எனக்கு தெரியல நியாமா.. இவன் நான் பார்த்துக்குறேன்னு சொன்னதும் நானும் பிசியாகி பேசாம விட்டுட்டேன்.. இவன் இப்படி செய்வான்னு நெனக்கல.." என்றதும் தோழிகளின் பார்வை அபினவ்வை நோக்கியது.

மூவரையும் பார்த்து இளித்து வைத்தவன், "நான் அத பத்தி யோசிக்கவே இல்ல மச்சான்.. அவசரம்னு நீங்க சொன்னதும் அவன தான் எனக்கு ஞாபகம் வந்துச்சி.. ஏதும் ப்ராப்ளம் இல்லன்னு நெனக்கிறேன்.. நான் பிரணவ்வுக்கு கால் பண்ணி பார்க்குறேன்.." என அங்கிருந்து நழுவினான். இல்லாவிட்டால் யார் மூவரிடமும் அடி வாங்குவது...

இங்கு காரில் ஏறி சிறிது நேரத்திலே சிதாராவின் மொபைல் ஓசை எழுப்பியது.

திரையில் தெரிந்த பெயரை பார்த்ததும் இவ்வளவு நேரம் காணாமல் போன உற்சாகம் மீண்டும் அவளைத் தொற்றிக் கொண்டது.

இவள் அழைப்பை ஏற்றதும் அந்தப் பக்கம், "ஹேய் மினியன்... உனக்கு எவ்ளோ தைரியம் இருந்தா என் கிட்ட ஒரு வார்த்த கூட சொல்லாம நீ பாட்டுக்கு கிளம்பி இந்தியா வந்திருக்காய்... நான் வரும் போது கூட நீ சொல்லவே இல்ல.." என்க, "உனக்கு சர்ப்ரைஸா இருக்கட்டும்னு தான் வளர்ந்து கெட்டவனே.. சரி நீ என்ன பண்ணுறாய்.. நா இல்லாம ரொம்ப ஹேப்பியா இருக்காய் போல.." என சிதாரா பேச ட்ரைவர் சீட்டில் அமர்ந்து காரை ஓட்டிக்கொண்டிருந்தவனின் நெற்றியில் யோசனை முடிச்சுகள்.

பிரணவ் மனதில், "இந்த வாய்ஸ் நம்ம ரொம்ப கேட்டு பழக்கப்பட்ட வாய்ஸா இருக்கே...யாரா‌ இருக்கும் என யோசித்த வண்ணம் ஃப்ரொன்ட் மிரர் வழியாக சிதாராவை பார்த்தான். மாஸ்க் போட்டு இருந்ததால் அவனால் அடையாளம் காண இயலவில்லை.

"ப்ச், யாரா இருந்தா நமக்கென்ன" என மீண்டும் பாதையில் கவனம் செலுத்தினான். சிதாராவோ அழைப்பில் மூழ்கி இருந்தாள்.

அந் நேரம் தான் அபினவ் பிரணவ்வை தொடர்பு கொண்டான். எடுத்ததும், "மச்சான் ஆல் ஓக்கே தானே.. எதுவும் பிரச்சினை இல்லல்ல... எங்க இருக்கீங்க.." என அபினவ் பதற்றமாக கேக்க, பிரணவ் "எதுக்கு மச்சான் இவ்ளோ டென்ஷனா இருக்காய்.. பக்கத்துல வந்துட்டோம்... ஆல் ஓக்கே.. என்ன பிரச்சினை வர போகுது... நீ கூட்டிட்டு வர சொன்னவங்கட முகத்த கூட நான் பாக்கல இன்னும்.." என்க அந்தப்பக்கம் அபிணவ் பெருமூச்சு விடுவது நன்றாகவே கேட்டது.

பின் அபினவ், "சரி மச்சான். நீ சீக்கிரமா வந்து சேரு.. நாம அப்புறமா பேசலாம்.." என பிரணவ் மேலும் கேள்விகளை அடுக்கு முன் அவசரமாக அழைப்பை துண்டித்தான்.

பிரணவோ, "என்னாச்சு இவனுக்கு..‌எதயுமே முழுசா சொல்லுறான்‌ இல்ல.." என சலிப்பாக கூறிக் கொண்டான்.

சிறிது நேரத்தில் கார் கிராமத்தை‌ அடைந்தது. கார் நிறுத்தப்பட்டதும் யன்னல் வழியாக வீட்டைக் கண்டவள் மிகவும் சந்தோஷம் அடைந்தாள்.

பயணம் முழுவதும் அவளுடன் பேசிக்கொண்டு இருந்தவனைக் கூட மறந்து விட்டாள்.

மறுமுனையில் மினி.. மினி.. எனக் கத்தவும் "பாய்டா.. நான் உன் கூட அப்புறம் பேசுறேன்.." என்று விட்டு அழைப்பை துண்டித்து விட்டாள் சிதாரா.

வண்டியிலிருந்து இறங்கியவள் லக்கேஜ்ஜை கூட எடுக்காமல் அவனிடம் எதுவும் சொல்லாமல் நேராக வீட்டை நோக்கி நடந்தாள்.

அவள் செல்வதைக் கண்ட‌ பிரணவ், "அவ்வளவு தூரம் ஓசில இந்தப் பொண்ணுக்கு ட்ரைவர் வேலை பாத்திருக்கேன்.. ஒரு தேங்ஸ் கூட சொல்லாம போறத்த பாரு.. இதுக்கெல்லாம் அந்த அபினவ்வ சொல்லனும்..." என எப்போதும் போல் தனக்குள்ளே சொல்லிக் கொண்டான்.


பூஞ்சோலை கிராமம்

லாவண்யா பிறந்து வளர்ந்த இடமே பூஞ்சோலை கிராமம். சென்னையிலிருந்து சற்று தொலைவிலே இவ்வூர் அமைந்துள்ளது (கற்பனை). இயற்கை வளங்களுக்கு குறைவில்லாத கிராமம். லாவண்யாவின் குடும்பம் உயர் நடுத்தர வர்க்கமாகும். அவர்களின் வீடு தான் அவ்வூரிலே ஓரளவு பெரியது. பழைமை மாறாது கட்டப்பட்ட அவ் வீட்டை பிடிக்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்.

அங்கு தான் இன்று நண்பர்கள்‌ அனைவரும் கூடி உள்ளனர். அனைவரும் வீட்டினுள் அமர்ந்து வெகு நாட்களுக்கு பின் சந்தித்ததால் இடைப்பட்ட காலத்தில் நடந்த சம்பவங்கள் பற்றி‌ பேசிக்கொண்டு இருந்தனர். எனவே யாரும் சிதாரா வந்து இறங்கியதை அறியவில்லை.

வீட்டு வாசற்படியில் அமர்ந்து வெற்றிலை மென்று‌ கொண்டிருந்த லாவண்யாவின் பாட்டி தன்னை நோக்கி வந்த பெண்ணை கண்ணாடியை அணிந்து யாரென பார்த்தார்.

பின், "யாரும்மா நீ.. ஏதாச்சும் உதவி கேட்டு வந்திருக்கியா.. " எனக் கேட்டு விட்டு வீட்டினுள் எட்டிப் பார்த்து "எலேய் முத்து... உங்க ஐயாவ கூப்புடுல... " எனக் குரல் கொடுத்தார்.

சிதாரா முகத்திலிருந்த மாஸ்க் மற்றும் சன்கிளாஸை கழற்றியவள் அவரை பார்த்து "நல்லா பாரு லட்சுமி..‌என்ன தெரியலயா" என்க தன்னையே பெயர் சொல்லி அழைத்ததும் "யாரும்மா நீ.. உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா என்னயே‌ பேரச் சொல்லி பேசுவாய்.." என வயதானவர்களுக்கே உரித்தான கோவத்தில் கேட்க சிதாரா சிரிக்கவும் இன்னும் கடுப்பானார்.

வாசலில் தன் பாட்டி கோவமாக யாருடனோ பேசுவதைக் கேட்டதும் அக்ஷராவுடன் வெளியே வந்து பார்த்த லாவண்யா சிதாராவைக் கண்டதும் மகிழ்ச்சியில் அவளை அணைத்துக் கொள்ள அக்ஷராவும் அவர்களுடன்‌ இணைந்தாள்.

அக்ஷரா, "எப்போ வந்தாய் சித்து " என்கவும் "இப்போ‌ தான்டி" என்றவள் இன்னும் சிரிப்பதை நிறுத்தவில்லை. தன்னை பெயர் சொல்லி அழைத்த பெண்ணை தன் பேத்தி அணைத்திருப்பதைக் கண்டவர் லாவண்யாவிடம், "யாரு கண்ணு இது என்னயே பேரச் சொல்லி கூப்பிட்றா.. உன்னோட சினேகிதியா " எனக் கேட்க அவருக்கு பதில் கூறச் சென்றவளை தடுத்த சிதாரா தோழிகளை விடுத்து பாட்டியின் தோளில் கை போட்டவள் "இந்த வீட்டு மகாலட்சுமிய பேர சொல்லி கூப்பிட்ற தைரியம் என்ன தவிர யாருக்கு இருக்கும் லட்சு" என்க சிதாராவை அடையாளம் கண்டு கொண்டவர் "சீதா கண்ணு.. எப்படிடா இருக்காய்.. உனக்கு இப்ப தான் இந்த பாட்டிய பாக்கனும்னு தோணுச்சா.." எனக் கவலையாக கேட்க, அதற்குள் லாவண்யா "அச்சோ பாட்டி.. அவ பேரு சிதாரா.. சீதா இல்ல.." என்கவும் சிதாரா "நீங்க ரெண்டு பேரும் எதுவும் சொல்ல வேணாம்.. என்னோட லட்சுக்கு மட்டும் நான் எப்பவும் சீதா தான்.." என அவர் கன்னத்தில் முத்தமிட்டாள்.

பாட்டி, "சீதா தான் அழகா இருக்கு.. அந்த பேரு என்னமோ என் வாய்லயே வரமாட்டேங்குது...அவ கெடக்குறா... நீ சொல்லு கண்ணு.. என்ன இவ்ளோ எலச்சி போயிருக்காய்.. அந்த வெளிநாட்டுல நல்ல சாப்பாடு கெடயாதா.. கண்டதயும் திண்ணுட்டு எப்படி இருக்காய் பாரு.. போதாக்கொறெக்கி என்ன ட்ரெஸ் இது.. பையனாட்டம் பேண்ட்டு சட்டன்னு.. கூந்தல வேற விரிச்சு விட்டுட்டு வந்திருக்காய்..." என அவளை மேலிருந்து கீழ் வரை அளவிட்டபடி கூறியவரைக் கண்டு தலையில் அடித்துக் கொண்ட அக்ஷரா, "அது தான்‌ ஃபேஷன் பாட்டி.. அதுவுமில்லாம யூ.எஸ்ல இங்க போல ட்ரெஸ் பண்ணினா சுத்தி இருக்கிறவங்க சிரிப்பாங்க.." என்கவும் "என்ன கன்றாவி பேஷனோ.. நான் ஒருத்தி கூறு கெட்டவ.. தங்கத்த வாசல்லயே வெச்சி பேசிட்டு இருக்கேன்.. நீ வா கண்ணு உள்ள.. இன்னிக்கு உனக்கு என் கையாலயே சமச்சி பரிமாறுறேன்.." என பாட்டி அவளை உள்ளே அழைக்க, "வனி.. அச்சு.. என்னோட லக்கேஜ்ஜ கார்லயே விட்டுட்டு வந்துட்டேன்.. அத கொஞ்சம் உள்ள எடுத்துட்டு வாங்க" என்று விட்டு பாட்டியுடன் உள்ளே சென்றாள் சிதாரா.

போகும் வழியில் பாட்டி "எலேய் முத்து.. நம்ம தோட்டத்துல இருந்து நல்ல இளனிய வெட்டி எடுத்துட்டு வா" என வேலைக்காரரிடம் கட்டளையிட்டு விட்டே சென்றார்
.

அவர்கள் செல்லும் வரை பார்த்துக் கொண்டிருந்தவர்கள் ஒருவரையொருவர் பார்க்க பின் அக்ஷரா, "ஏன் வனி.. எனக்கு ஒரு டவுட்டு.. இவ நம்ம ஃப்ரென்டா இல்ல அவங்க ஃப்ரென்டா.. நம்மள கொஞ்சம் கூட மதிக்கவே இல்ல " என்க "எனக்கும் அதான் டவுட்டு அச்சு.. சரி வா அவ லக்கேஜ்ஜ எடுத்துட்டு வருவோம்.." என்று விட்டு இருவரும் காரை நோக்கி சென்றனர்.
 

Nuha Maryam

Moderator
அத்தியாயம் - 3

அக்ஷராவும் லாவண்யாவும் வண்டியிலிருந்த சிதாராவின் லக்கேஜ்ஜை எடுத்துக் கொண்டிருக்க மொபைலில் அழைப்பொன்றில் இருந்த பிரணவ் பேசி முடித்து விட்டு அவர்களிடம் வந்தான்.

பிரணவ், "யாரு வனிம்மா அந்த பொண்ணு.. உங்க ப்ரென்டா.. சரியான திமிரு பிடிச்சவலா இருப்பா போல..‌ ஒரு தேங்க்ஸ் கூட சொல்லாம அவ பாட்டுக்கு போறா..." என்க அக்ஷராவும் லாவண்யாவும் அதிர்ச்சியில் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.

எங்கே அவனுக்கு அடையாளம் தெரிய. அவள் தான் முழுவதுமாக தன்னை மறைத்துக் கொண்டு இருந்தாளே.

"என்னண்ணா இப்படி‌ கேக்குறீங்க... நெஜமாலுமே அவள உங்களுக்கு அடையாளம் தெரியலயா..." என‌ அக்ஷரா கேட்க அவளுக்கு இல்லை என்பதாய் இட வலமாக தலையசைத்தான்.

லாவண்யா, "என்ன எங்க கூட விளையாடுரீங்களாண்ணா.. உங்களுக்கு அவள பிடிக்காதுன்றத்துக்காக நீங்க சித்துவ பத்தி இப்படியெல்லாம் பேச‌ வேணாம் அண்ணா.." என்று‌ விட்டு வேகமாக அங்கிருந்து அகன்றனர்.

அவர்கள்‌ கோவமாக சென்றது எதுவும் பிரணவ்வின்‌ கருத்தில் பதியவில்லை.

அவன் தான் 'சித்து' என்ற பெயரிலே விழி விரித்து சிலையாகி நின்றானே.

இங்கு வீட்டினுள்‌ நுழைந்த சிதாராவுக்கோ பலத்த வரவேற்பு.

லாவண்யாவின் குடும்பத்தினர் எப்போதும் சிதாராவை தங்கள் வீட்டில் ஒருவராகவே எண்ணுவர்.

சிறு வயதிலிருந்தே இருவரும் தோழிகள். அக்ஷராவுடனான பழக்கம் பள்ளிப்பருவத்தில் ஆரம்பமானது.

அன்றிலிருந்தே மூவரும் நல்ல நண்பர்கள். அவர்களுக்குள் எந்த ரகசியமும் இருக்காது.

ஏனைய நண்பர்களுடன் அரட்டையில் ஈடுபட்டிருந்த சிதாராவிடம் வந்த லாவண்யாவும் அக்ஷராவும் தொண்டையை செறுமி தங்கள் வரவை வெளிப்படுத்தினர்.

அவர்கள் பக்கம் திரும்பி‌ ஒற்றை புருவம் உயர்த்தி என்ன என வினவ அவளைப் பார்த்து இருவரும் இளித்து வைத்தனர்.

பின் சிதாரா எதுவும் சொல்லாமல் அங்கிருந்த அறையொன்றினுள் நுழைந்து கொள்ள இங்கோ இருவரின் மைன்ட் வாய்ஸுமே ஒன்றாக இருந்தது.

"ஆத்தி... இவ பார்வையே சரியில்லயே... உள்ள போனா நம்மள கும்மு கும்முன்னு கும்மி எடுத்துருவாளோ... சரி.. எதுன்னாலும் தாங்கிப்போம்.." என இருவரும் அவளை பின் தொடர்ந்தனர்.

அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்த சிதாரா தோழிகள் நுழைந்ததும் அவர்களை கேள்வியாய் ஏறிட்டாள்.

ஆனால் அவர்கள் எதிர்ப்பார்த்தது இல்லாமல் சிதாராவோ அமைதியான குரலில், "ஏன்டி இப்படி பேய பாக்குறது போல பயந்து பாத்துட்டு இருக்கீங்க..." என வினவ, அக்ஷரா, "உனக்கு நெஜமாலுமே எங்க மேல கோவம் இல்லயா சித்து" என்க "நான் எதுக்குடி உங்க மேல கோவபடனும்.. ஓஹ்... அந்த மெஸேஜ்ஜ சொல்றீங்களா.. அது உங்க எல்லாரையும் பாக்க ரொம்ப சந்தோஷமா வந்தேனா, யார என் லைஃப்ல பாக்கவே கூடாதுன்னு நெனச்சிட்டு இருந்தவன பாத்ததும் என்னோட மூடே ஸ்பொய்ல் ஆகிடுச்சி.. அந்த கோவத்துல தான்‌ மெஸேஜ் போட்டேன்... அப்புறம் யோசிச்சு பாத்ததும் தான் புரிஞ்சுச்சி.. நான் எதுக்கு யாரோ ஒருத்தனுக்காக எல்லாம் என்னோட ஃப்ரென்ட்ஸ் கூட கோவிச்சிட்டு இருக்கனும்.. அதுவுமில்லாம நீங்க ரெண்டு பேருமே எப்போதுமே எனக்கு பிடிக்காத விஷயத்த செய்ய மாட்டீங்கன்னு ஒரு நம்பிக்கை.. சோ ஐம் ஓக்கே நவ்... இப்பவாச்சும் கொஞ்சம் சிரிங்கடி.." என சிரித்தபடி கூறினாள் சிதாரா.

அதைக் கேட்ட தோழிகள் இருவருமே அவளை கட்டியணைத்து இரு கன்னத்திலும் முத்தமிட, "ச்சீச்சீ.. இதெல்லாம் உங்க ஆளுங்களுக்கு குடுங்க.." என கன்னத்தைத் துடைத்தபடி சிதாரா சொல்ல மூவரும் சிரித்தனர்.

அந்த சமயம் அங்கு வந்த லாவண்யாவின் தாய் காயத்ரி, "உங்க பாச மழை எல்லாம் முடிஞ்சிச்சினா சாப்பிட வரீங்களா மூனு பேரும்.. அத்த ரொம்ப நேரமா சித்துவ தேடுறாங்க.." என்று‌ விட்டு செல்ல மூவரும் அவரைப் பின் தொடர்ந்தனர்.

இங்கோ அதிர்ச்சியில் விழி விரித்து நின்றவனை கலைத்தது ஆதர்ஷின் அழைப்பு.

"இங்க என்னடா பண்ற தனியா.. வா உள்ள போலாம்.."

"மச்சான்.. நான் தாரா கூட பேசனும்டா.. ப்ளீஸ்டா.." என்ற பிரணவ்வின் பதிலில் அவனை ஆழ நோக்கினான் ஆதர்ஷ்.

அதற்குள் அபினவ்வும் அங்கு வந்து சேர்ந்தான்.

பின் நிதானமாக குரலில் கடுமையை தேக்கி வைத்து, "இங்க பாரு பிரணவ்.. நான் உனக்கு இது முதலும் கடைசியுமா சொல்றேன்.. உனக்கும் சித்துவுக்குமான உறவு எப்பயோ முடிஞ்சி போச்சி.. இல்ல இல்ல.. நீ தான் முடிச்சி வெச்சாய்... உன்னால அவ ரொம்ப கஷ்டப்பட்டுடா.. அகைன் உன்னால அவ கஷ்டப்படுறத நான் பாத்துட்டு சும்மா இருக்க மாட்டேன்... நீ எனக்கு ஃப்ரென்டா இருக்கலாம்.. இதுக்கு முன்னாடி நீ பண்ண தப்புக்கு எதுவும் சொல்லலன்னு நீ பண்ற எல்லா விஷயத்துக்கும் நான் உனக்கு சப்போர்ட்டா இருப்பேன்னு எதிர்ப்பாக்காதே... இப்ப இருக்கிறது உன்னோட தாரா இல்ல.. ஜஸ்ட் சிதாரா.. எங்க எல்லாருக்கும் சித்து.. அவ்ளோ தான்... உன்னால அவளுக்கு மட்டும் ஏதாச்சும் பிரச்சினை வந்தால் நீ இந்த ஆதர்ஷ ஃப்ரெண்டா மட்டும் தானே பாத்திருக்காய்.. அதுக்கப்புறம் சித்துக்கு அண்ணனா பார்ப்பாய்.." என்று விட்டு உள்ளே சென்று விட்டான் ஆதர்ஷ்.

அபினவ்வோ, "ஆதர்ஷ் சொல்லிட்டு போறதெல்லாம் நீ மைன்ட் பண்ணிக்காத மச்சான்.. அவன் சித்து மேல உள்ள பாசத்துல பேசிட்டு போறான்.. கோவம் கொறஞ்சதும் அவனாவே வந்து பேசுவான்.. வா நாம உள்ள போலாம்.." என பிரணவ்வை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றான்.

வீட்டினுள் பாட்டியின் சமையலை அனைவரும் வெளுத்து வாங்கிக்கொண்டு இருந்தனர்.

சிதாரா, "ஆமா.. கேக்கனும்னே இருந்தேன்.. ரெண்டு பேரும் கால் பண்ணப்போ நம்ம ஃப்ரென்ட்ஸ் கூட தானே டூர் அரேன்ஞ் பண்ணி இருக்குன்னு சொன்னீங்க.. இங்க வந்து பாத்தா பாதி பேரே கப்பிள்ஸா வந்து இருக்காங்க.."

"ஃப்ரென்ட்ஸ் டூர் தான் சித்து.. பட் நம்ம எல்லோருமே பொண்ணுங்க.. நாம மட்டும் தனியா போறோம்னு சொன்னா வீட்டுல இருக்கிறவங்க பாதுகாப்பு அது இதுன்னு சொல்லி வேணாம்னு சொல்லிருவாங்க... அதான் நம்ம சீனியர்ஸ்னு சொல்லி ஆது, அபி அண்ணா அவங்க ஃப்ரெண்ட்ஸ்னு கொஞ்சம் பேர வர வெச்சோம்.. நமக்கும் நம்ம ஆளுங்க கூட சுத்தினது போலவும் இருக்கும்.." என கண்ணடித்து கூறினாள் லாவண்யா.

"அது சரி.. நீங்க எல்லாரும் கப்பிளா சுத்துங்க.. நடுவுல எதுக்கு எங்கள மாதிரி சிங்கிள்ஸ்.." என சிதாரா சலிப்பாக சொல்ல, "அப்படி எதுவுமில்ல சித்து.. அவ சும்மா உன்ன கலாய்க்கிறா.. நெஜமாலுமே நம்ம பாதுகாப்புக்கு தான் பசங்க வந்திருக்காங்க.. அதுவுமில்லாம நமக்கு எப்பவும் ஃப்ரென்ட்ஸ் தான் முக்கியம்.." என்றாள் அக்ஷரா.

சிதாரா, "ஓஹ்... அதயும் பாக்கலாம் உங்க பேச்சு எவ்வளவு தூரத்துக்கு உண்மையா இருக்குன்னு.. அதெல்லாம் சரி.. நம்மளோட சீனியர் பசங்க வரது ஓக்கே.. மத்தவங்களுக்கு இங்க என்ன வேலை..." என்க இருவருக்குமே அவள் யாரைக் குறிப்பிடுகிறாள் எனப் புரிந்தது.

"அபி, தர்ஷ் அண்ணா ரெண்டு பேருமே நம்ம கூட வராங்க.. பிரணவ் அண்ணாவும் அவங்க கூட தான் இருக்காங்க.. சோ அவரயும் கூட்டிட்டு வரோம்னு சொன்னாங்க.. எங்களுக்கும் வேணாம்னு சொல்ல முடியல.." என அக்ஷரா பதிலலிக்க ம்ம்ம் என்றதோடு முடித்துக் கொண்டாள்.

மறுநாள் அதிகாலையிலே செல்ல இருப்பதால் அன்று இரவு யாருமே உறங்கவில்லை.

எனவே அனைவரும் வெளியே தோட்டத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.

ஒரு பக்கம் பெண்களும் மறுபக்கம் ஆண்களும் என இருக்க பிரணவ்வின் பார்வை முழுவதும் சிதாராவிடமே இருந்தது.

இதனைக் கவனித்த அபினவ் பிரணவ்வை நெருங்கி அவன் காதில் மெதுவாக, "டேய்.. எனக்கென்னவோ நீ இன்னிக்கி ஆதர்ஷ் கிட்ட அடி வாங்காம இருக்க மாட்டாய் போல.." என்றான்.

அவன் கூறியது பிரணவ்வின் செவிகளை எட்டினால் தானே. அபினவ்வால் தலையில் அடித்துக்கொள்ள மட்டும் தான் முடிந்தது.

பிரணவ்வின் பார்வை தன் மீதே இருப்பதை சிதாராவாலும் உணர முடிந்தது.

அவளுக்கு ஏதோ நெருப்பின் மேல் அமர்ந்து இருப்பது போல் இருந்தது.

ஓரளவுக்கு மேல் முடியாமல் அங்கிருந்து எழுந்தவள் அனைவரிடமும் பொதுவாக, "எனக்கு கொஞ்சம் டையர்டா இருக்கு.. நான் உள்ள போறேன்.." என்று விட்டு யாருடைய பதிலையும் எதிர்ப்பாராமல் வீட்டை நோக்கி நடந்தாள்.

வீட்டினுள் நுழையச் செல்லும் நேரம் சரியாக அவளை மோதுவது போல் வீட்டு வாசலில் வந்து நின்றது ஒரு கார்.

கார் அவளை நோக்கி மோதுவது போல் வரவும் தோட்டத்திலிருந்த அனைவரும் பயந்து அவளின் திசை பார்க்க பிரணவ்வோ, "தாரா.. கார்..." எனக் கத்தினான்.

கார் தன்னை நோக்கி வந்ததும் சிதாராவின் இதயமே ஒரு நிமிடம் நின்றது. அதனால் பிரணவ் அவளை அழைத்ததை அவள் கவனிக்கவில்லை. அது நிறுத்தப்பட்டதும் தான் போன உயிர் திரும்ப வந்தது.

அவ்வளவு நேரம் இருந்த பதட்டம் அகன்று கோவம் அவ்விடத்தை நிரப்பியது.

அதே வேகத்தில் காரிடம் சென்றவள் அதன் ஜன்னலைத் தட்டி கோவமாக, "ஹேய்.. யூ இடியட்... ஓபன் தி டோர்.." என்க கார் ஜன்னலை மெதுவாக கீழிறக்கி அவளைப் பார்த்து சிரித்தான் ஆர்யான்.

அவனை அவ்விடத்தில் கண்டதும் அதிர்ச்சியில் உறைந்து விட்டாள் சிதாரா.

காரிலிருந்து இறங்கிய ஆர்யான் சிதாராவின் முன் வந்து நின்று அவள் முகத்தின் முன் கை ஆட்ட தன்னிலை மீண்ட சிதாரா ஜிராஃபி என அவனை அணைத்துக் கொண்டாள்.


லாவண்யாவும் அக்ஷராவும் அவர்களை நோக்கி வர தோட்டத்தில் இருந்த ஏனையோர் இருவரையும் வேடிக்கை பார்த்தனர்.

பிரணவ்வோ சிதாரா யாரோ ஒரு ஆடவனைக் கட்டியணைத்ததும் சொல்லொனா மனநிலையில் இருந்தான்.

ஆர்யானை விட்டு விலகிய சிதாரா, "நீ இந்த நேரத்துல இங்க என்ன பண்ணுறாய் ஜிராஃபி.." எனக் கேட்கும் போதே அக்ஷராவும் லாவண்யாவும் அவ்விடத்தை அடைந்தனர்.

ஆர்யானோ லாவண்யாவைப் பார்த்து, "என்ன சிஸ்டர் நீங்க மினி கிட்ட எதுவும் சொல்லலயா.." என்க சிதாரா லாவண்யாவை கேள்வியாய் நோக்கினாள்.

"நீ ஈவ்னிங் குளிச்சிட்டு இருக்கும் போது இவரு கிட்ட இருந்து கால் வந்துச்சி.. நீ ஆல்ரெடி யூ.எஸ் ல இருக்க கிட்ட இவர பத்தி சொல்லி இருந்ததால நான் தான் பேசினேன். அப்போ தான் இவரையும் டூர் வர சொன்னா நல்லா இருக்கும்னு தோணுச்சி.. உனக்கும் ஹேப்பியா இருக்கும்.. நம்ம கூட தான் பசங்களும் வராங்களே.. சோ இவர் வரதுல யாருக்கும் பிரச்சினை இருக்காது. அதான் இவர் கிட்ட கேட்டேன்.. இவருக்கும் ஓக்கே உன் கிட்ட சொல்ல வேணாம் சர்ப்ரைஸா இருக்கட்டும்னு சொன்னாரு.. அதான்டி.." என விளக்கம் அளித்தாள் லாவண்யா.

அதைக் கேட்ட சிதாரா ஆர்யானிடம், "நல்ல நேரம் ஜிராஃபி நீ வந்தது. நான் கூட யோசிச்சிட்டே இருந்தேன் இந்த பக்கிங்க டூர் போய்ட்டு நம்மள கழட்டி விட்டுட்டு அவங்க ஆளுங்க கூட சுத்தினா நமக்கு யாரு கம்பனி குடுப்பான்னு.. சரியா நீ வந்துட்டாய்.." என்க, "நான் இருக்கும் போது என்னோட மினியனுக்கு என்ன தனிமை.. உனக்கு ஆல் டைம் கம்பனி குடுக்கத்தான் நான் இருக்கேனே.." என பெருந்தன்மையாக ஆர்யான் சொல்ல, "அதுவும் சரி தான்.." என சிரித்தபடி கூறினாள் சிதாரா.

அக்ஷரா, "சரி சித்து நம்ம ஃப்ரெண்ட்ஸ் என்ட் சீனியர்ஸ்க்கு இவர இன்ட்ரூ பண்ணி வை.. இப்போதே எல்லோரும் பழகிக்கட்டும்.. அப்போ தான் நாளெக்கி டூர் போனா இவருக்கும் கம்ஃபர்டபிளா இருக்கும்" என்றாள்.

"இன்னும் என்ன சிஸ்டர் அவரு இவருன்னுட்டு இருக்கீங்க.. மை நேம் இஸ் ஆர்யான்.. கால் மீ ஆர்யன் ஆர் அண்ணா. ஆர் சம்திங் எல்ஸ் ஏஸ் யுவர் விஷ்.." என அவர்கள் இருவருக்கும் கட்டளை இட்டான் ஆர்யான்.

இருவருமே ஒரே சமயத்தில், "ஓக்கே அண்ணா.. இப்போ அங்க போலாமா.." என அழைக்க சந்தோஷமாக அவர்களைப் பின் தொடர்ந்தனர் சிதாரா மற்றும் ஆர்யான்.
 

Nuha Maryam

Moderator
அத்தியாயம் - 4

அனைவரும் தோட்டத்தில் ஒன்று‌ கூடியிருக்க சிதாராவுடன் அவ்விடத்தை அடைந்தான் ஆர்யான்.

சிதாரா முதலில் ஏனைய நண்பர்கள் மற்றும் அவர்களது சினியர்ஸ்ஸை அறிமுகப்படுத்தினாள்.

அனைவருடனும் ஆர்யான் இன்முகத்துடனும் ஜாலியாகவும் பேச அனைவருக்கும் அவனைப் பிடித்தது.

பின் அபினவ் மற்றும் ஆதர்ஷை அறிமுகப்படுத்தச் செல்ல அவளைத் தடுத்தவன், "வெய்ட் வெய்ட் மினி.. நானே சொல்றேன்.." என்க அவனுக்கு சம்மதமாய் தலையாட்டினாள்.

ஆர்யான் ஆதர்ஷ் மற்றும் அபினவ்வை நோக்கி, "இவங்க ஆதர்ஷ் அப்புறம் அபினவ்.. மினியோட சீனியர்ஸ்.. எல்லாத்துக்கும் மேல அவளோட ஸ்வீட் ப்ரதர்ஸ்.. மினிக்கு என்ன பிரச்சினைனாலும் முன்னாடி வந்து சப்போர்ட் பண்ணுவாங்க.." என்க இருவருக்கும் மகிழ்ச்சியாக இருந்தது.

"ஐம் ஆர்யான்.. நைஸ் டு மீட் யூ காய்ஸ்.." என அவர்களை அணைத்து விடுவித்தான்.

பின்‌ பிரணவ்விடம் திரும்பியவன், "இவரு...." என‌ சற்று நேரம் யோசிக்க, "இது பிரணவ் அண்ணா.. அபி என்ட் தர்ஷ் அண்ணாவோட ஃப்ரெண்ட்.." என அக்ஷரா அவசரமாக பதிலளித்தாள்.

"ஓஹ்.. சாரி டியுட்... மினி இவங்கள பத்தி தன்னோட லைஃப்ல ரொம்ப முக்கியமான பர்சன்ஸ்னு சொல்லிருக்கா.. அதனால தான் அவங்கள முன்னாடியே தெரியும்.." என ஆர்யான் பிரணவ்விடம் மன்னிப்பு வேண்டும் விதமாக கூற, சிதாராவின் உதடுகள் தானாகவே "அடப்பாவி... என்னமா நடிக்கிறான்.." என முனுமுனுத்தன.

ஆதர்ஷ் மற்றும் அபினவ் இருவருக்குமே தர்மசங்கடமான ஒரு நிலை உருவாகியது.

பிரணவ்வுக்கோ உள்ளே புகைந்தது. மனதிற்குள்ளேயே, "நான்‌ அவளுக்கு வேண்டாதவனா... என்ன பத்தி எதுவுமே இவன் கிட்ட சொல்லலயா இவ..." என அவர்களை வறுத்தெடுத்தான்.

லாவண்யா மெதுவாக அக்ஷராவின் காதில், "ஏன்டி அச்சு.. நிஜமாலுமே சித்து பிரணவ் அண்ணா பத்தி ஆர்யான் அண்ணா கிட்ட எதுவுமே சொல்லாம இருந்து இருப்பாளா.." என்க "எனக்கென்னவோ இவரு வேணும்னே செய்றாரு போல இருக்கு வனி.. " என அவளுக்கு பதில் அளித்தாள் அக்ஷரா.

பின் அச் சூழ்நிலையை இலகுவாக்கும் விதமாக அபினவ், "சித்து.. நீ ஆர்யான உள்ள கூட்டிட்டுப்போ.. ரொம்ப தூரத்திலிருந்து டிராவல் பண்ணி வந்ததுல டையர்டா இருப்பாரு.. அவர் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கட்டும்.. அக்ஷு வனி நீங்களும் அவ கூட போங்க.. ஆர்யானுக்கு ரூம் அரேன்ஜ் பண்ணி குடுங்க.." என்றான்.

சிறிது நேரத்தில் ஆதர்ஷ் அபினவ் உட்பட அனைவருமே தத்தம் வேலையை கவனிக்க உள்ளே சென்று விட பிரணவ் மட்டும் அங்கு தனித்து விடப்பட்டான்.

அவனோ, "யாரிந்த புதுசா வந்து சேர்ந்து இருக்கிறவன்.. வார்த்தைக்கு வார்த்தை என்னோட மினி என்னோட‌ மினினு வேற சொல்றான்.. இத இப்படியே விடக்கூடாது.. ஏதாச்சும் பண்ணனும்.." என யோசனையிலிருந்தான்.

ஆர்யானுக்கென வழங்கப்பட்ட அறையில் சிதாராவும் ஆர்யானும் பேசிக்கொண்டிருந்தனர்.

சிதாரா, "டேய்.. உண்மைய சொல்லு.. உனக்கு அவன தெரியாது? " எனக் கேட்க கள்ளச் சிரிபொன்றை உதிர்த்தான் ஆர்யான்.

பின் ஆர்யான், "சரி மினி அதெல்லாம் விடு.. உன்ன அம்மா பாக்கனும்னு சொல்லிட்டு இருந்தாங்க.. டூர் முடிஞ்சி நேரா எங்க வீட்டுக்கு வரனும் ஓக்கேயா.." என்க "ஆன்ட்டி எதுக்கு சடன்னா என்ன பாக்கனும்னு சொன்னாங்க... நீ அவங்க கிட்ட ஏதாச்சும் ஏடாகூடமா சொல்லி வெச்சியா ஜிராஃபி" என பதில் கேள்வி கேட்டாள் சிதாரா.

மீண்டும் ஆர்யானிடம் அதே கள்ளப்புன்னகை வெளிப்படவும் சிதாராவுக்கு அனைத்தும் புரிந்து விட்டது.

"உனக்கு கெட்ட நேரம் ஆரம்பிச்சாச்சிடா... உன்ன இன்னிக்கு சும்மா விட மாட்டேன்.." என கட்டிலிலிருந்த தலையணையை எடுத்து அவனை அடிக்க அவளிடமிருந்து விடுபட்ட ஆர்யான், "ஏய் மினி.. வாழ வேண்டிய பையன்டி.. இன்னும் எதுவுமே பாக்கல நான்.. அதுக்குள்ள போட்டு தள்ளிராதமா.." என பயந்தது போல் நடித்தபடி அறையைச் சுற்றி ஓடினான்.

சிதாராவும் முடிந்தளவு அவனை விரட்டிக்கொண்டு ஓட ஒரு கட்டத்தில் இருவருமே களைப்புற்று கட்டிலில் வந்து அமர்ந்து பெருமூச்சு வாங்கினர்.

ஆர்யானும் சிதாராவும் ஒருவரை ஒருவர் பொய்யாக முறைத்தவாறு பார்க்க இருவருக்குமே சிரிப்பு வந்தது.

இருவரின் சிரிப்பு சத்தமும் அறையைத் தாண்டி வெளியே கேட்க சரியாக அந்நேரம் தோட்டத்திலிருந்து வீட்டிற்குள் நுழைந்த பிரணவ்வின் செவியையும் அடைந்தது.

ஒரு நிமிடம் அறை வாசலில் நின்று அறைக் கதவை வெறித்தவன் பின் வேகமாக அங்கிருந்து சென்றான்.

சிதாரா, "சரி ஜிராஃபி நான் போய் தூங்குறேன்.. ஆல்ரெடி ரொம்ப லேட் ஆகிடுச்சி.. இதுக்கு மேலயும் தூங்காம இருந்தா டூர் ஃபுல்லா தூங்கிட்டு தான் இருக்கனும்.. ஒரு என்ஜாய்மன்ட்டும் பண்ண முடியாது.." என்றாள்.

"ஓக்கே மினி..‌நீ போய் தூங்கு.. காலைல மீட் பண்ணலாம்.. குட் நைட்.." என் ஆர்யானுக்கு புன்னகையொன்றை வழங்கிவிட்டு சென்றாள் சிதாரா.

நேராக லாவண்யா மற்றும் அக்ஷரா உறங்கிக் கொண்டிருந்த அறைக்குச் சென்றவள் அவர்கள் இருவரும் ஒரே கட்டிலில் ஒரு ஓரமாய் சிதாராவுக்கு இடம் விட்டு உறங்கிக் கொண்டிருக்க அவளோ இருவருக்கும் நடுவில் போய் விழுந்து இருவர் மீதும் கை போட்டுக் கொண்டாள்.

அவர்களும் அவளுக்கு இடம் விட்டு தள்ளிப் படுக்க மூவரும் ஒருவரையொருவர் விட்டுக் கொடுக்காதவாறு அணைத்துக் கொண்டு உறங்கினர்.

மறுநாள் அதிகாலையிலேயே அனைவரும் தயாராகி பஸ்ஸில் ஏறினர்.

சிதாரா, அக்ஷரா மற்றும் லாவண்யா மூவருமே முதலிலே சென்று கடைசி சீட்டைப் பிடித்துக் கொண்டனர்.

டூர் செல்லும் போது கடைசி சீட்டில் இருக்கும் சுகமே தனி அல்லவா.

பஸ்ஸில் ஏறியதுமே மூவருக்குள்ளும் ஜன்னல் சீட்டிற்கு சண்டை ஏற்பட்டது.

ஒரு ஜன்னல் சீட்டு தான் இருந்தது.

மற்றையதில் ஏற்கனவே அவர்களின் தோழிகளில் ஒருத்தி அமர்ந்து இருந்தாள்.

ஒருவர் மாறி ஒருவர் நான் நான் என சண்டையிட கடைசியாக பஸ்ஸில் ஏறிய ஆர்யான் நேராக அவர்களிடம் வந்தான்.

ஏற்கனவே கடைசிக்கு முந்திய சீட்டில் ஆதர்ஷ், அபினவ் மற்றும் பிரணவ் அமர்ந்திருந்தனர்.

ஆர்யான் தோழிகள் மூவரையும் நோக்கி, "ச்சீச்சீ.. என்ன இது சின்ன பசங்க மாறி வின்டோ சீட்டுக்கு சண்ட போடுறீங்க.. இருங்க என் கிட்ட ஒரு ஐடியா இருக்கு.. முதல்ல மூணு பேரும் ஒரே இடத்துல இப்படி நெருங்கிட்டு இருக்காம இந்தப் பக்கம் வாங்க.." என்க மூவருமே அவனை நம்பி அங்கிருந்து அவனது ஐடியாவைக் கேட்க வந்தனர்.

உடனே ஆர்யான் வேகமாக ஜன்னல் சீட்டில் தனது பையுடன் நன்றாக காலை நீட்டி உட்கார்ந்து கொண்டான்.

மூவருமே இதை எதிர்ப்பார்க்கவில்லை. தம்மால் இயன்ற மட்டும் அவனை முறைத்தனர்.

அவனோ அவை எதையும் கணக்கெடுக்காமல் மேலே பார்த்து உச்சுக் கொட்டியபடி, "அடடா... இந்த விண்டோ சீட்டுல உக்காந்துட்டு போற சுகமே தனி தான்..." என்றவன் மூவரையும் பார்த்து, "அட.. இன்னுமா நீங்க மூணு பேரும் நின்னுட்டு இருக்கீங்க.. வாங்க சீக்கிரமா வந்து உக்காருங்க.. பஸ் ஸ்டார்ட் பண்ண போறாங்க..." என்கவும் மூவரும் தரையில் காலை உதைத்தவர்கள் வந்து உட்கார்ந்தனர்.

ஆர்யானின் பக்கத்தில் சிதாராவும் அவளைத் தொடர்ந்து அக்ஷரா, லாவண்யா என அமர்ந்தனர்.

சிதாராவின் முகத்தைக் கண்ட ஆர்யானிற்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.

தன் முனங்கையால் அவன் இடுப்பில் சிதாரா இடிக்கவும் தான் அவன் அமைதியானான்.

கடைசி சீட்டில் இடது பக்கமாகவே இவர்கள் அமர்ந்து இருந்தனர். வலது பக்கமாக கடைசிக்கு முந்தைய சீட்டில் ஓரத்தில் அமர்ந்திருந்த பிரணவ்வும் இவர்களின் கூத்தைப் பார்த்துக்கொண்டு..இல்லை இல்லை முறைத்துக்கொண்டு இருந்தான்.

ஆனால் அவன் தான் எதுவும் செய்ய இயலாத நிலையில் இருந்தானே.

ஆடல் பாடலுடன் அவர்களின் ஊட்டியை நோக்கிய பயணம் அதிகாலை 4 மணியளவில் ஆரம்பமானது.

சில மணி நேரம் கழித்து அபினவ், "ஓக்கே காய்ஸ்.. கொஞ்சம் எல்லாரும் அமைதியாகி நான் சொல்றத்த கேட்டுக்கோங்க... நாம ஊட்டி போய் சேர எப்டியும் டென் டு டுவல்வ் ஹவர்ஸ் எடுக்கும்... சோ ஃபர்ஸ்ட் நம்ம போக போற இடம்...." என இழுத்து அனைவரையும் பார்த்துக் கூற அனைவருமே அவன் கூறும் பதிலுக்கு ஆர்வமாக காத்திருந்தனர்.

"வேற என்னங்க.. நமக்கு சோறு தானே முக்கியம்.. சோ ஃபர்ஸ்ட் போற வழில இருக்குற ஒரு ஹோட்டல்ல நிறுத்தி ப்ரெக்ஃபாஸ்ட்ட எடுத்துட்டு அங்க இருந்து நம்ம ஃப்ரெஷ்ஷா ஸ்டார்ட் பண்ணலாம்.. ஓக்கே காய்ஸ் யூ கன்ட்னியு.." என்றதும் அனைவரும் மீண்டும் உற்சாகமாக இருந்தனர்.

அபினவ் அமர்ந்ததும் அவனைப் பார்த்து பிரணவ்வும் ஆதர்ஷும் கேவலமாக ஒரு லுக்கு விட்டனர்.

அப் பார்வை சொல்லாமலே சொல்லியது, " இத சொல்லத்தான் நீ இவ்ளோ பில்டப் குடுத்தியா..." .

"அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா.." என கூறிவிட்டு திரும்பிக் கொண்டான்‌.

லாவண்யா மற்றும் அக்ஷராவுடன் ஆட்டம் போட்டுக் கொண்டிருந்த சிதாரா சிறிது நேரம் கழித்து தன்னிடத்தில் வந்தமர்ந்தாள்.

"என்னாச்சி மினி..‌ வந்து உக்காந்துட்டாய்... அவங்க கூட சேர்ந்து என்ஜாய் பண்ணலயா.." என ஆர்யான் கேட்க, "இல்லடா கொஞ்சம் டையர்டா இருக்கு அதான்.." என்று விட்டு சீட்டில் சாய்ந்து கண் மூடிக் கொண்டாள்.

அதன் பின் ஆர்யானும் அவளை எதுவும் கேட்கவில்லை. அவனுக்கு தெரியும் அவளாகவே எதுவாக இருந்தாலும் அவனிடம் சொல்வாள் என்று.

ஆனால் அவள் அங்கிருந்து வந்த காரணமே வேறு.

பயணம் ஆரம்பித்ததிலிருந்து பிரணவ்வின் பார்வை அவளிடமே இருந்தது.

முதலில் சிதாரா அதைக் கவனிக்கவில்லை. பின் ஏதோ தோன்ற திரும்பிப் பார்த்தவள் பிரணவ்வைக் கண்டு கொண்டாள்.

அங்கிருக்க விருப்பமில்லாமல் உடனே அவள் வந்து அமரவும் பிரணவ்விற்கு முகத்தில் அடித்தது போல் இருந்தது. அவனும் கோவமாக திரும்பிக் கொண்டான்.

சற்று நேரம் கழித்து சிதாரா ஆர்யானின் கையிலே தூங்கி விழவும் அவன் சிதாராவுக்கு வசதியாக சீட்டில் சற்று சாய்ந்து அமர்ந்து அவளை தன்‌ தோளில் தாங்கிக் கொண்டான்.

அவளையே சற்று நேரம் புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தவன் மனதில் ஆயிரம் கேள்விகள்.

பின் எல்லாம் தூர எறிந்து விட்டு சிதாராவின் தோளில் தலை சாய்த்து அவனும் கண் மூடினான்.

பிரணவ் கோவமாக திரும்பிக் கொண்டவன் அதன் பின் அவர்கள் பக்கம் திரும்பவில்லை.

மணி காலை எட்டை நெருங்க பஸ் ஒரு ஹோட்டலின் முன் நின்றது. அனைவருமே இறங்கி சென்றனர்.

பஸ் நிறுத்தப்பட்டதும் விழிப்புத் தட்டிய சிதாரா அதன் பின்னே தான் இவ்வளவு நேரம் எங்கு தூங்கிக் கொண்டிருந்தோம் என்றே விளங்கியது.

ஆர்யான் இன்னும் தூங்கிக் கொண்டிருக்க அவனைக் கண்டு புன்னகைத்தவள் பின் முகத்தில் பொய்க் கோபத்தை பூசிக்கொண்டு அவனை உலுக்கியவள், "டேய்‌ வளர்ந்து கெட்டவனே.. எந்திரிடா... கொஞ்சம் இடம் கொடுத்தா போதுமே.. உடனே நல்லா சொகுசா படுத்துக்குவாய்.." என்றாள்.

அவள் உலுக்கியதும் உறக்கம் களைந்தவன் அவள் பேச்சில், "யாரு.. நான் நல்லா சொகுசா தூங்கினேன்... மேடம் என்ன பண்ணீங்க.." என்ற ஆர்யானின் கேள்வியில் சிதாரா ஒரு நொடி அமைதியாகி விட்டு பின் சமாளிப்பாக, "அது... நான் ஏதோ கொஞ்சம் தூக்கத்துல தெரியாம உன் கைல சாஞ்சிட்டேன்.. அதுக்காக நீயும் அதே பண்ணுவியா.. நான் ஒன்னும் வேணும்னு பண்ண இல்லயே..." என்ற சிதாராவின் பதிலில் அவளின் மனசாட்சியே அவளை காரித் துப்பியது.

ஆர்யான் எதுவும் கூறாமல் ஒற்றைப் புருவம் உயர்த்தி அவளை ஒரு பார்வை பார்த்தான்.

அத்துடன் வாயை மூடிக் கொண்டவள் மனதில், "இதுக்கு மேல ஏதாச்சும் சொன்னா நாமளே தான் அசிங்கப்படனும்.. பேசாம இருந்துருவோம்.." என்றவள் அவனை நோக்கி, "சரி சரி வா போலாம்.. அதுங்க ரெண்டும் இந் நேரம் என் பங்கையும் சேர்த்து சாப்பிட ஆரம்பிச்சி இருப்பாங்க.." என்றாள்.

பின் இருவருமே இறங்கி ஹோட்டலுக்குள் செல்ல சிதாரா தன் தோழிகளுடன் இணைய ஆர்யான் ஆண்களுடன் இணைந்து கொண்டான்.
 

Nuha Maryam

Moderator
அத்தியாயம் - 5

ஹோட்டலில் இருந்து கிளம்பியவர்கள் ஊட்டியை சென்றடையவே மதியமானது.

அவர்கள் முதலில் சென்ற இடம் ஊட்டி வெக்ஸ் வேர்ல்ட் (Wax World).

மகாத்மா காந்தி, பால கங்காதர திலகர், அன்னை தெரேசா, டாக்டர்.அப்துல் கலாம் மற்றும் பல சிறந்த ஆளுமைகளின் மெழுகுச் சிலைகள் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

அதே சமயம் உள்ளூர் மக்களின் வாழ்க்கை முறையை பிரதிபலிக்கும் மெழுகுச் சிலைகளும் இங்கு காணலாம்.

அனைத்தையும் பார்த்து முடித்து வெளிவரவே நேரம் சென்றது.

அன்றைய பாதி நாளே பயணத்தில் கழிந்ததால் அடுத்து காமராஜ் சாகர் அணை சென்று பார்வையிட்டு பின் இரவு அனைவருக்கும் தங்க ஏற்பாடு செய்திருந்த இடத்திற்கு செல்ல முடிவெடுத்தனர்.

சுற்றுலா மற்றும் திரைப்பட படப்பிடிப்புக்கு பிரபலமான இடம் காமராஜ் சாகர் அணை.

ஊட்டி பேருந்து நிலையத்திலிருந்து பத்து கி.மீ தொலைவில் அமைந்துள்ள இந்த அணை சாண்டிநல்லா நீர்த்தேக்கம் என்ற பெயரிலும் அழைக்கப்படும்.

மிகவும் அமைதியான சூழல் மட்டுமன்றி பல்வேறுபட்ட பறவைகளையும் இங்கு காணலாம்.

மாலையை நெருங்க அங்கிருந்து கிளம்பி ஊட்டி ரெட் ஹவுஸ் சென்றனர்.

இங்கு தான் அவர்கள் டூர் முடியும் வரை தங்க ஏற்பாடு செய்திருந்தனர்.

அத்தியாவசியமான அனைத்து வசதிகளும் அங்கு செய்து தரப்படும்.

சுற்றி கண்ணைக் கவரும் வண்ணப் பூக்களுடன் கூடிய தோட்டம் என அழகான இடம்.

அன்றைய களைப்பு தீர குளித்தவர்கள் தோட்டத்தில் நடுவில் நெருப்பு மூட்டி சுற்றி வட்ட வடிவமாக அமர்ந்து கதையளந்தனர்.

லாவண்யா, அக்ஷராவுடன் பேசிக் கொண்டிருந்த சிதாரா தமக்கு சரி நேராக அமர்ந்திருந்த அவளின் மற்ற தோழிகள் சிலரின் பார்வை அவர்கள் பக்கமிருக்க கேள்வியுடன் அவர்கள் பார்வை இருந்த திக்கைப் பார்த்தவள் அதிர்ந்தாள்.

அவளுக்கு பக்கத்தில் ஆண்களுடன் அமர்ந்திருந்த ஆர்யான் ஆதர்ஷ், அபினவ்வுடன் பேசி பேசி அடிக்கடி அவர்களைப் பார்த்து இளித்துக் கொண்டிருந்தான்.

இதனைக் கண்டவளின் மனதில் ஒரு திட்டம் உதயமாகியது.

மெதுவாக ஆர்யானின் பக்கம் நெருங்கி அமர்ந்தவள் அவனின் வலது புஜத்தைக் கட்டிக் கொண்டு மெதுவாக அவன் காதில், "சேர் என்ன பண்றீங்க.." என்றாள்.

அவள் செயலால் அங்கு ஒருவனின் பீபி ஏறிக்கொண்டு இருந்ததை சிதாரா அறியவில்லை.

அதுவரை அப் பெண்களைப் பார்த்து இளித்துக் கொண்டிருந்தவன் திடீரென அவர்கள் அவனை ஒரு மாதிரி பார்த்து விட்டு மறுபக்கம் திரும்பிக் கொள்ள எதுவும் புரியாமல் விளித்தவன் அப்போது தான் சிதாராவின் கேள்வியில்,

"அடப் பாதகத்தி... உன் வேலையா இது... நான் கூட என்னடா இதுங்க நம்மள இப்படி கேவலமா லுக்கு விடுதுங்களேன்னு பாத்தா நீ இப்படி இருந்தா அதுங்க வேற என்ன பண்ணும்..." என்க சிதாரா வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரித்தாள்.

அதில் கடுப்பான ஆர்யான் அவள் கையை உதறி விட்டு, "உனக்கு கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லையா மினியன்.. நான் சொன்ன விஷயத்த பத்தி நீ எதுவுமே சொல்லல... அங்க உன்னோட மூஞ்சயே பாத்து பாத்து சலிச்சிட்டேன்.. சரி இங்க இருக்கும் வர இந்த பொண்ணுங்கள சைட் அடிக்கலாம்னு பாத்தா அதுக்கும் நல்ல வேட்டா வெச்சிட்டாய்..." என்க,

அதைக் காதிலே போட்டுக் கொள்ளாத சிதாரா தன் பாட்டில் லாவண்யாவுடன் பேச ஆரம்பித்தாள்.

தன்னால் இயன்ற மட்டும் அவளை முறைத்தவன் பின் மொபைலை எடுத்து நோண்ட ஆரம்பித்தான்.

சிறிது நேரம் கழித்து தன்னிடத்தில் இருந்து எழுந்த சிதாரா, "இப்படி ஆளாளுக்கு தனியா பேசிட்டு இருக்கவா நம்ம டூர் வந்தோம்... ஏதாச்சும் கேம் ப்ளே பண்ணலாமா ஃப்ரென்ட்ஸ்.. " என்க,

நண்பர் பட்டாளத்தில் சாரு, "என் கிட்ட ஒரு நல்ல ஐடியா இருக்கு.." என்க அனைவரும் அவள் சொல்வதைக் கேட்க தயாராகினர்.

எழுந்து நின்றவள், " இது ட்ரூத் ஆர் டேர் கேம் தான்.. பட் கொஞ்சம் டிஃபரன்ட்டா இருக்கும்.. பாட்டில் சுத்தாம ரெண்டு பாக்ஸ் வெச்சி இருப்போம்.. ஒரு பாக்ஸ்ல எல்லாரோட நேமும் எழுதி போட்டு இருக்கும்.. என்ட் மத்த பாக்ஸ்ல கொஞ்சம் டேர்ஸ் எழுதி போட்டு இருக்கும்.. ஒவ்வொருத்தர் கிட்டயும் நாம நேம் பாக்ஸ தருவோம்.. அதுல ஏதாச்சும் ஒரு சீட்டு எடுத்து அந்த சீட்டுல இருக்குறவங்க கிட்ட ட்ரூத் ஆர் டேர்னு கேப்போம்.. ட்ரூத்னா நேம் செலக்ட் பண்ணவரு மத்தவர் கிட்ட அவங்களுக்கு பிடிச்ச என்ன கேள்வின்னாலும் கேக்கலாம்.. டேர்னு சொன்னா மத்த பாக்ஸ்ல இருக்குற சீட்டுல ஒன்ன எடுத்து அதுல இருக்குற டேர செய்யனும்.. ரெண்டயுமே செய்யாதவங்களுக்கு நாம பனிஷ்மன்ட் குடுக்கலாம் பட் ஃபனியா..." என்க அனைவரும் சம்மதித்தனர்.

முதலில் சாருவிடமிருந்தே ஆரம்பித்தனர்.

அவளிடம் நேம் பாக்ஸ் நீட்டப்பட அதிலிருந்து ஒரு துண்டை எடுத்தாள்.

அனைவரும் யாரு.. யாரு எனக் கத்த சீட்டைப் பிரித்துக் காட்டினாள்.

மதன் என்ற பெயர் வந்திருக்க மதன் டேர் செலக்ட் பண்ணினான். 'மனதிலுள்ள காதலை உரியவரிடம் வெளிப்படுத்த வேண்டும்' என வந்திருந்தது.

அவனோ அங்கிருந்தவர்களில் தன் மனதிற்குரியவளைத் தேடி அவளைக் கைப்பிடித்து அழைத்து வந்தான்.

அனைவருமே யாழு... யாழு.. எனக் கத்த யாழினி என்றவளை வெட்கம் பிடுங்கித் தின்றது.‌

அனைவரும் ஆவலோடு அவர்களை பார்த்துக் கொண்டிருக்க மதனோ யாரும் எதிர்ப்பாரா வண்ணம் பட்டென ஒற்றைக் கால் நிலத்தில் ஊன்றி மண்டியிட்டவன், "எனக்கு ப்ரபோஸ் எல்லாம் பண்ண தெரியல யாழ்.. பட் ஒன்னு மட்டும் நல்லா தெரியும் நான் உன்ன ரொம்ப நல்லா பாத்துப்பேன்.. ஐ லவ் யூ.. " என்க அவன் சாதாரணமாக சொன்னதும் யாழினிக்கு புஸ் என்றானது.

பெண்களின் பக்கமிருந்து, "யாழு நோ..‌ யாழு நோ.." எனக் குரல் வர அதிர்ச்சியில் எழுந்த மதன் அவர்களைப் பார்த்து, "என்னம்மா நீங்க... இப்படி பண்றீங்களேம்மா..." என்க,

அக்ஷரா, "பின்ன என்ன சீனியர் நீங்க... எவ்ளோ ரொமான்ட்டிக்கா சொல்லுவீங்கன்னு பாத்தா இப்படி பட்டுன்னு சொல்லிட்டீங்க.." என்றாள்.

"ஆமா.. அக்ஷரா சொல்றது கரெக்ட்.. இதுக்காகவே உங்க ப்ரபோசல நான் ரிஜக்ட் பண்றேன்.. ஏதாச்சும் புதுசா ட்ரை பண்ணுங்க.. அப்ப யோசிக்கலாம்.." என்று விட்டு செல்ல மதனும் அவள் பின்னே கெஞ்சிக் கொண்டு அவளைத் தொடர்ந்து சென்றான்.

பின் ஒவ்வொருவராக மாற்றி மாற்றி தம்மிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலையும் வழங்கப்பட்ட டேரையும் சிலர் பனிஷ்மன்ட் பெற்றும் விளையாடினர்.

லாவண்யாவுக்கு ஆதர்ஷுடன் கப்பிள் டான்ஸ் ஆட வர இருவருமே தமக்குள் மெய் மறந்து ஆடினர்.

அக்ஷரா ட்ரூத் செலக்ட் பண்ண பாடசாலையில் இருக்கும் போது இருந்த சீக்ரட் க்ரஷ் பற்றி கேட்க அவளும் அந்த நாட்களைப் பற்றி ரசனையுடன் ஏற்ற இறக்கத்தோடு கூற அபினவ்வுக்கோ காதில் புகை வராத குறை.

மீண்டும் அவள் தன்னிடத்துக்கு செல்லும் போது அபினவ் அவளைப் பார்த்து முறைக்க, அக்ஷராவோ அவனுக்கு கண்ணடித்து விட்டுச் சென்றாள்.

அக்ஷரா க்ரஷ் பற்றிக் கூறினாலே தவிர பெயர் கூறவில்லை.

அதனால் அபினவ் அறியாத ஒன்று அக்ஷராவின் சீக்ரட் க்ரஷ்ஷே தான் தான் என்று.

அவள் இடத்துக்கு வந்ததும் அவளைப் பிடித்துக் கொண்ட லாவண்யா சிதாராவிடம், "பாருடி இவள.. அவ்ளோ இருந்தும் நம்ம கிட்ட கூட சொல்லல.. நம்ம தான் சொல்லிட்டு திரியுரோம் நம்ம மூணு பேருக்கும் இடைல எந்த சீக்ரட்டும் இல்லன்னு.." என்க அக்ஷரா அவர்களைப் பார்த்து சமாளிப்பாக இளித்து வைத்தாள்.

மீண்டும் கேம் ஆரம்பமாக அனைவரும் அதில் கவனம் பதித்தனர்.

தொடர்ந்து பிரணவ்விடம் வர அவன் தேர்ந்தெடுத்த பெயரை அவனே எதிர்ப்பார்க்கவில்லை.

அவன் யாரென்று பெயரைக் கூறாமல் அமைதியாக இருக்க, அபினவ் கையிலிருந்த சீட்டை வாங்கிப் படித்தவன் சிதாராவை நோக்கி, "சித்து.. நீ தான்.. வா.." என்று விட்டு தன்னிடம் சென்றமர்ந்தான்.

ஆர்யான் அதிர்ச்சியில் சிதாராவின் முகம் பார்க்க அவளோ புன்னகையுடன் பிரணவ்விடம் சென்று நிற்கவும், பிரணவ் அவள் கண்களைப் பார்த்து "ட்ரூத் ஆர் டேர்" என்றான்.

சிதாரா பதிலுக்கு அவன் கண்களை நேராகப் பார்த்து, "அஃப்கோர்ஸ்.. ட்ரூத்..." என்றாள்.

பிரணவ் மனதில்,"நல்ல வாய்ப்பு கெடச்சி இருக்குடா... கேக்க வேண்டியத்த கேட்டுரு.." என நினைத்தவன்,

"யாருக்காக இந்த மாற்றம்.. ஐ மீன் எல்லா விஷயத்துலயும்.." என மனதில் சிரித்த வண்ணம் அவளிடம் கேட்டான்.

அவன் என்னவோ எதிர்ப்பார்த்தபடி கேட்டான்.

ஆனால் சிதாரா யோசிக்காமல் உடனே பதிலளித்தாள்.

"யாருக்காகன்னா.... ஓஹ் யாரையாச்சும் இம்ப்ரஸ் பண்ணுறத்துக்காக என்னோட ட்ரஸிங் ஸ்டைல் எல்லாம் சேன்ஜ் பண்ணி இருக்கேனான்னா.. ஐம் ரியலி சாரி... அப்படி எந்த விதமான நோக்கமும் எனக்கில்ல... ஃபர்ஸ்ட் அப்ரோட் போய் படிக்க கிட்ட நான் மட்டும் தனியா எங்க ஊரு பொண்ணுங்க போல இருந்தா எல்லாரும் என்னமோ ஏலியன பார்க்குற மாதிரி பார்ப்பாங்க.. என்ட் எனக்கு அங்க இருக்குற மத்த பசங்க கூட ஒரு ஒட்டாத தன்மை ஏற்படலாம்... அதனால தான் அந்த இடத்துக்கு ஏத்தது போல என்ன மாத்திக்கிட்டேன்.. அதுக்காக நான் ஒன்னும் நம்மோட கல்ச்சர விட்டு குடுக்கலயே.. ஒரு பொண்ணு ட்ரெஸ்ஸிங் ஸ்டைல மாத்தினா கல்ச்சரயே மாத்திட்டதா எண்ணினா அது சுத்த முட்டாள்த்தனம்..‌ என்ட் ஃபைனலி நான் யாருக்காகவும் என்ன மாத்திக்கனும்னு அவசியமில்ல... எனக்கு எப்படி இருக்க தோணுதோ அப்படி தான் நான் எப்போதும் இருப்பேன்.." எனக் கூறி பிரணவ்வின் எதிர்ப்பார்ப்பில் மண்ணள்ளிப் போட்டாள்.

அங்கிருந்த அனைவருக்கும் பாதி புரிந்தும் புரியாத நிலை.

ஆனால் புரிய வேண்டியவனுக்கோ நன்றாக புரிந்தது.

அவன் அவசரமாக, "அப்போ எதுக்காக..." என ஏதோ கேட்க ஆரம்பிக்கும் போதே "ஒரு கேள்வி தான் கேக்க முடியும்னு நெனக்கிறேன்.." என கூறி விட்டு தன்னிடத்தில் சென்று அமர்ந்தாள்.

அவள் அமர்ந்ததும் ஆர்யான் அவள் கையை அழுத்தி அவளைப் பார்த்து கண்களை மூடித் திறந்தான்.

அவனுக்கு புன்னகையைப் பதிலாக அளித்தாள் சிதாரா.

தொடர்ந்து அனைவரும் தமக்கு வந்ததை செய்ய கேம் முடிந்தது.

மணி நள்ளிரவை எட்ட தமக்கு கொடுக்கப்பட்ட அறைக்கு ஓய்வெடுக்கச் சென்றனர்.

சிதாரா, லாவண்யா, அக்ஷரா மாத்திரம் தோட்டத்தில் இருந்தனர்.

புல்வெளியில் மூவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க சற்று நேரத்திலெல்லாம் அக்ஷரா சிதாராவின் மடியில் தலை வைத்து லாவண்யாவின் மடியில் கால் நீட்டி உறங்கி இருந்தாள்.

இருவரும் வெகுநேரம் வெண்மதியின் எழிலைக் கண்களால் பருகிக் கொண்டிருக்க, லாவண்யாவே அவ் அமைதியைக் களைத்தாள்.

"சித்து.. நான் ஒன்னு கேட்டா உண்மைய மட்டும் சொல்லுவியா.." என்ற லாவண்யாவின் கேள்விக்கு நிலவை வெறித்த வண்ணமே ஹ்ம்ம் என சம்மதித்தாள்.

"ஒன்ன வேணாம்னு தூக்கி போட்டுட்டு போனவங்க திரும்ப உன் லைஃப்ல வந்த நீ என்ன பண்ணுவாய்.. அவங்கள ஏத்துக்குவியா.." என்க,

சிதாரா, "அது ஒவ்வொருத்தரையும் பொறுத்தது வனி.. ஏதோ ஒரு இக்கட்டான சிச்சுவேஷன்ல நமக்கு ரொம்ப வேண்டப்பட்டவங்க வேற வழியே இல்லாம நம்ம லைஃப விட்டு போய்ட்டு அப்புறம் அந்த சிச்சுவேஷன் ஒழுங்கானத்துக்கு அப்புறம் திரும்ப நம்மல தேடி வந்தா நாம அவங்கள நம்ம லைஃப் உள்ள அனுமதிக்காம பிடிவாதம் பிடிச்சா அது அவங்களையும் கஷ்டப்படுத்தும்.. நம்மளையும் கஷ்டப்படுத்தும்.. நம்மளால ரொம்ப நாளெக்கி நாம பாசம் வெச்சவங்கள வெறுத்து ஒதுக்கவும் முடியாது... ரெண்டு பக்கமுமே அன்பும் பாசமும் நம்பிக்கையும் ஒருத்தொருக்கொருத்தர் உண்மையாவும் இருக்குறவங்களுக்கு இது பொருந்தும்...

இதே நாம எவ்வளவு தான் உண்மையாவும் அன்பு, பாசம், நம்பிக்கை எல்லாத்தையும் அவங்க மேல கொட்டி வெச்சி இருந்தாலும் நம்ம கூட தேவைக்கு மட்டும் பழகி பாசமா இருக்குற மாதிரி நடிச்சி எங்கடா வாய்ப்பு கெடக்கும் நம்மள தூக்கி போட்டுட்டு போறத்துக்குன்னு இருக்குறவங்க நம்மள விட்டு போனா அவங்கள அப்படியே விடுறது தான் நமக்கு நல்லது... நாம உண்மையான அன்போட தான் இருந்திருப்போம்.. அதனால நிச்சயமா அவங்களோட பிரிவு கஷ்டத்த கொடுக்கும்... திரும்ப அவங்க நம்ம லைஃப்ல வர ட்ரை பண்றது கூட ஏதோ நம்ம கிட்ட அவங்களுக்கு வேண்டியது இருக்குறதால மட்டும் தான்...

அதனால அப்படிப்பட்ட மனுஷங்களுக்கு நிச்சயமா என் லைஃப்ல திரும்ப இடம் கொடுக்க மாட்டேன்.."

இதை சொல்லி முடிக்கும் போதே அவள் கன்னங்கள் கண்ணீரால் நனைந்திருந்தன.

அவளை பக்கவாட்டில் அணைத்த லாவண்யா, "எதுக்காக இந்த பொய்யான வேஷம் சித்து... நீ முன்ன இருந்து மாதிரி இப்ப இல்ல.. ரொம்ப மாறிட்ட.." என்க,

அவளைப் புரியாமல் நோக்கிய சிதாரா, "இது பொய்யான வேஷம் இல்ல வனி.. நான் மாறிடேங்குறது உண்மை தான்.. இல்லன்னு சொல்லல... பட் அதுக்கு காரணம் என்னோட கஷ்டத்தையோ கவலையையோ மறைக்கனும்னு இல்ல... திரும்பவும் ஒருத்தர் என்ன கஷ்டப்படுத்த கூடாதுன்னு தான்.. அதுக்காக என்ன நானே மாத்திக்கிட்டேன்... யாருக்கிட்டயும் எந்த எதிர்ப்பார்ப்பும் வெச்சிடக்கூடாதுன்னு எனக்கு நானே சொல்லி சொல்லி மாத்திக்கிட்டேன்... இப்போ யாருக்கா இருந்தாலும் அவ்வளவு ஈஸியா என்ன ஹர்ட் பண்ண முடியாது... ஏன்னா என்னோட இதயத்த இரும்பா மாத்தி இருக்கேன் நான்..." என முகத்தில் ஒரு வித தெளிவுடன் கூறியவளை அணைத்துக் கொண்டாள் லாவண்யா.

இங்கு தனது அறை ஜன்னல் வழியாக சிதாராவையே பார்த்துக் கொண்டிருந்த பிரணவ் மனதில், "நாளைக்கு நிச்சயமா இதெல்லாத்துக்கும் ஒரு முடிவ கொண்டு வந்தே தீருவேன் தாரா... யாராலையும் உன்ன என்ன விட்டு பிரிக்க முடியாது.." என தனக்குத் தானே சபதம் எடுத்துக் கொண்டான்.

இவை எது பற்றியுமே அறியாது ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான் ஆர்யான்.

ஒவ்வொருவரும் ஒவ்வொரு மனநிலையில் இருக்க பார்க்கலாம் விதி நாளை இவர்களுக்கு என்ன கொடுக்க காத்திருக்கிறது என்று.
 

Nuha Maryam

Moderator
அத்தியாயம் - 6

அன்றைய காலை பல்வேறு திருப்பங்களைத் தர விடிந்தது.

ஆண்கள் அனைவரும் ஹாலில் கூடியிருக்க அங்கு வந்த அக்ஷரா,

"சீனியர்ஸ்... இன்னிக்கி என்ன ப்ளேன்.." எனக் கேட்டாள்.

ஆதர்ஷ், "முதல்ல பைகாரா வாட்டர்ஃபால் போலாம்னு இருக்கோம் அக்ஷு... அதுக்கப்புறம் மத்த ப்ளேஸஸ் விசிட் பண்ணிட்டு நைட் ஒன்பது பத்து மணிக்கெல்லாம் இங்க வந்துருவோம்.. நீ போய் கர்ள்ஸ் எல்லாரையும் சீக்கிரம் ரெடி ஆகி கீழ வர சொல்லு.." என்க அக்ஷரா சரி என்று விட்டு சென்றாள்.

அனைவரும் தயாராகி கீழே வர சிதாரா, லாவண்யா, அக்ஷரா மட்டும் இன்னும் வராமல் இருந்தனர்.

அபினவ் ஆதர்ஷிடம், "இதுங்க இன்னும் வராம என்ன பண்ணுதுங்க.. ஆல்ரெடி ரொம்ப லேட் ஆகிடுச்சி.. இப்பவே போனா தான் கரக்ட் டைம்ல எல்லாம் பாத்துட்டு வந்துர முடியும்.." என்க ஆர்யான் தான் பார்த்து விட்டு வருவதாக கூறி மேலே சென்றான்.

பிரணவ் மனதில், "ஆமா இவரு போலன்னா அவங்க கீழ வர மாட்டாங்க.. ரொம்பத்தான் பண்றான்.. எப்ப பாரு தாரா கூடவே சுத்திட்டு இருக்கான்.." என ஆர்யானை வருத்தெடுத்துக் கொண்டிருந்தான்.

மேலே அறையில், "ப்ளீஸ் சித்து.. இதுக்காக தான் வந்தியா.. ஓக்கேனு சொல்லேன்.." என அக்ஷரா சிதாராவிடம் கெஞ்சிக் கொண்டிருக்க அங்கு வந்த ஆர்யான்,

"என்னாச்சி கர்ள்ஸ்.. ஏன் இன்னும் கீழ வரல மூணு பேரும்.." எனக் கேட்டான்.

"நீங்களே கேளுங்கண்ணா.. இவ்வளோ கஷ்டப்பட்டு பேரன்ட்ஸ சம்மதிக்க வெச்சி டூர் வந்தா இவ என்னன்னா வர மாட்டாளாம்.. எங்கள மட்டும் போக சொல்றா.." என லாவண்யா கூற சிதாராவை கேள்வியாய் ஏறிட்டான் ஆர்யான்.

சிதாரா, "இல்லடா காலைல எந்திரிச்சத்துல இருந்து மனசுக்கு ஒரு மாதிரி இருக்கு... அந்த ஃபீல எப்படி சொல்லன்னு தெரியல... அதான் நான் இன்னெக்கி இங்கயே இருக்கேன்னு இவங்க ரெண்டு பேரையுப் போய்ட்டு வர சொல்லிட்டு இருந்தேன்.." என்க,

"நீ சும்மா எதையாச்சும் போட்டு மனச கொழப்பிக்காதே மினி.. எதுவும் ஆக போறதில்ல.. ஏதாச்சும்னா உனக்கு துணையா நாங்க மூணு பேரும் இருக்கோம்.. உன்னோட அண்ணனுங்க இருக்காங்க.." என ஆர்யான் அவளை சமாதானப்படுத்த,

"அதில்லடா நான்..." என சிதாரா ஏதோ கூற வர அவளைத் தடுத்தவன், "நீ எதுவும் சொல்ல வேணாம்.. ஒரு பேச்சும் இல்ல.. நீ எங்க கூட வர.." என்றதும் சிதாரா அவர்களுக்காக சம்மதித்தாள்.

சற்று நேரத்திலே அனைவரும் கிளம்பி பைகாரா நீர்வீழ்ச்சி சென்றனர்.

நீர்வீழ்ச்சியுடன் சேர்த்து சுற்றியுள்ள பசுமையான இயற்கை அழகை ரசித்தபடி ஓய்வெடுக்க சிறந்த இடம்‌.

அருகிலே போட் ஹவுஸும் ரெஸ்டூரன்ட் ஒன்றும் காணப்படும்‌.

அனைவரும் நீர்வீழ்ச்சியை சுற்றிப் பார்க்க முன்னே செல்ல கடைசியாக லாவண்யா, அக்ஷரா செல்ல அவர்களுக்குப் பின்னே சிதாராவும் ஆர்யானும் வந்தனர்.

ஆர்யான் ஏதோ கூற அதற்கு சிதாரா சிரிக்க சரியாக அவ்விடம் வந்தாள் அவர்களின் தோழிகளில் ஒருவரான மயூரி.

சிதாரா அவளை நோக்கி, "என்னாச்சு மயூ.." என்க அவள் ஏதோ கூற வருவதும் தயங்குவதுமாக இருக்க ஆர்யானும் சிதாராவும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.

ஆர்யான் சிதாராவைப் பார்த்து இரு புருவங்களையும் உயர்த்தி என்ன என கேட்க அவளும் தோளைக் குலுக்கி சைகையாலே தெரியல என்றாள்.

பின் மயூரி தைரியம் வரப் பெற்றவளாக சிதாராவிடம், "சித்து நான் உன் ஃப்ரன்ட் கூட கொஞ்சம் தனியா பேசனும்.." என்க ஆர்யான் அதிர்ந்தான்.

சித்து ஆர்யானைப் பார்த்து வாயை மூடி சிரிக்க, ஆர்யான் கண்களாலே அவளிடம் வேண்டாம் எனக் கூறினான்.

சிதாராவோ மயூரியிடம், "அதுக்கென்ன மயூ.. நீ தாராளமா அவன் கூட பேசலாம்... நான் முன்னாடி போறேன்.." என்றவள் பின் ஆர்யானிடம் திரும்பி, "நீ பேசிட்டு வா ஜிராஃபி.. நல்லா டைம் எடுத்து பேசு.." என நக்கலாக கூறி விட்டு அங்கிருந்து சென்றாள்.

அவள் சென்றதும் ஆர்யான் எதுவும் செய்ய முடியாமல் மயூரியைப் பார்த்து இளித்து வைத்தான்.

மயூரி, "அது வந்துங்க... நான்.. அது... நீங்க..." என சொல்லாமல் இழுக்க,

ஆர்யான் அவசரமாக, "ஒன்னும் பிரச்சினை இல்லங்க.. நீங்க நிதானமா அப்புறம் சொல்லுங்க.." என அங்கிருந்து செல்லப் பார்க்க,

"இல்ல இல்ல.. நான் சொல்ல வந்த விஷயத்த இப்பதே சொல்லிட்றேன்..." என அவனை நிறுத்தினான் மயூரி‌.

மயூரி, "ஆர்யான்.. அது வந்து.. உங்கள பாத்ததுமே எனக்கு ரொம்ப பிடிச்சு போச்சி.. உங்க ஹியுமர்சென்ஸ் என்ட் நீங்க சித்துவுக்காக கேர் பண்ற விதம் எல்லாமே என்ன ரொம்ப இம்ப்ரஸ் பண்ணிடுச்சி.. ஐ திங்க் ஐம் இன் லவ் வித் யூ.." என ஆர்யானுக்கு மினி ஹார்ட் அட்டேக் ஒன்றையே ஏற்படுத்தினாள்.

அதிர்ச்சியில் வாயடைத்து நின்ற ஆர்யான் பின் மயூரியிடம்,

"மயூரி.. எனக்கு உங்க கிட்ட என்ன சொல்லன்னே புரியல... உண்மைய சொன்னா நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க... நேத்து நைட் கூட நீங்க என்னயே பாத்துட்டு இருந்தத்த நான் பாத்தேன்... உங்கள கல்யாணம் பண்ணிக்க குடுத்து வெச்சிருக்கனும்... எனக்கும் உங்கள பிடிச்சிருக்கு..." என்றான்.

ஆர்யானிடம் பேசக் கூறி விட்டு சற்று முன்னால் வந்த சிதாரா நீர்வீழ்ச்சியின் அழகை ரசித்துக் கொண்டு இருந்தாள். பின் சிறிது நேரத்தில் ஆர்யான் மற்றும் மயூரி இருந்த பக்கம் திரும்பிப் பார்க்க, மயூரி ஏதோ கூற ஆர்யான் வெட்கப்படுவதைக் கண்டவள் புன்னகைத்தாள்.

திடீரென யாரோ அவள் கரம் பற்றி இழுக்க திரும்பிப் பார்த்தவள் பிரணவ்வைக் கண்டதும் அவசரமாக கையை இழுக்க முயற்சித்தாள்.

ஆனால் பிரணவ் அவளின் கையை அழுத்திப் பிடித்து இழுத்துக் கொண்டு சென்று யாருமற்ற மறைவான இடமொன்றில் அவளை நிறுத்தினான்.

அவன் விட்டதும் அவன் அழுத்திப் பிடித்த இடம் சிவந்திருக்க வலியில் கையைப் பிடித்துக் கொண்டு சிதாரா, "ஹவ் டேர் யூ... யாரு உங்களுக்கு என் கைய பிடிச்சு இழுத்துட்டு வர இவ்வளோ ரைட்ஸ குடுத்தது..." என ஆவேசமாகக் கேட்டு விட்டு அங்கிருந்து செல்லப் பார்க்க,

மீண்டும் அவள் கையைப் பிடித்து நிறுத்தியவன் விடாமலே, "ஏன் நான் பிடிச்சா மட்டும் உனக்கு வெறுப்பா இருக்கா தாரா... நான் பிடிக்காம உன் கூட வந்தானே ஒருத்தன் எப்பப்பாரு உன்னையே ஒட்டிக்கிட்டு... அவன் பிடிச்சா மட்டும் சுகமா இருக்...." என அவன் முடிக்கும் முன்னே அவன் கன்னத்தைப் பதம் பார்த்திருந்தது சிதாராவின் கைகள்.

சிதாரா, "அவன பத்தி என்ன தெரியும்னு இவ்வளோ அசிங்கமா பேசுறாய்... அது சரி.. உன் புத்தியே இதானே.. அது எப்படி மாறும்.." என்க,

"ச...சாரி தாரா... அது உன் மேல உள்ள லவ்வுல பேசிட்டேன்... அவன் யாரு என் தாராவ தொட்டு பேசன்னு ஒரு பொசசிவ்னஸ்ல பேசிட்டேன்.. ஐம் சாரி தாரா..." என பிரணவ் அவளிடம் கெஞ்ச,

அவன் கூறியதைக் கேட்டு கத்தி சிரித்தாள் சிதாரா.

பின், "உனக்கு என் மேல லவ்வு... இதுல பொசசிவ்னஸ் வேறயாம்.. ச்சீ.. இப்படி சொல்லவே உனக்கு அசிங்கமா இல்ல... உன்ன பாத்தாவே வெறுப்பா இருக்கு.." என்றாள்.

அவள் தோள்களைப் பற்றிக் கொண்ட பிரணவ், "நீ பொய் சொல்லுற தாரா... எனக்கு தெரியும் நீ எனக்காக தான் இவ்வளவு மாறி‌ இருக்கன்னு... உனக்கு என் மேல இன்னும் லவ் இருக்கு.." என்க,

அவன் கரங்களைத் தட்டி விட்டவள் ஆவேசமாக, "இல்ல.. இல்ல... இல்ல... நான் உன்ன வெறுக்குறேன்... அடியோட வெறுக்குறேன்... உன்ன எந்தளவு காதலிச்சேனோ அத விட பல மடங்கு உன்ன நான் வெறுக்குறேன்... உன் பார்வை என் மேல படுறதயே நான் அசிங்கமா நெனக்கிறேன்..." என கத்தினாள்.

அவ்வளவு நாளும் கட்டுப்படுத்தி வைத்த கண்ணீர் அவளையும் மீறி வெளிப்பட்டது.

அவள் சத்தம் கேட்டு அனைவரும் அவ்விடம் வரப்பார்க்க அவர்களை தாம் பார்த்துக் கொள்வதாகக் கூறி அனுப்பிய அபினவ்வும் ஆதர்ஷும் அங்கு வந்தனர்.

அவர்களைத் தொடர்ந்து லாவண்யா, அக்ஷரா மற்றும் ஆர்யான் வந்தனர்.

ஆர்யான் அங்கு வந்ததுமே அவசரமாக சிதாராவிடம் சென்று, "மினி கூல்.. அமைதியா இரு.. எதா இருந்தாலும் அப்புறமா பேசிக்கலாம்.." என அவளை சமாதானப்படுத்தப் பார்க்க அவன் நெஞ்சில் கை வைத்து தள்ளிய பிரணவ்,

"நீ யார்ரா எங்களுக்குள்ள வர... அவ என் தாரா.. அவ என்ன பத்தி என்ன வேணாலும் பேசுவா.. உனக்கென்னடா வந்தது.." என்றான்.

அக்ஷராவும் லாவண்யாவும் சிதாராவின் அழுகையை நிறுத்தப் போராட மேலும் மேலும் அவள் அழுகை அதிகமானது.

அவன் தன்னை தள்ளி விட்டதைக் கூட பொருட்படுத்தாத ஆர்யான், "ப்ளீஸ் பிரணவ்.. நீங்க என் கூட எப்ப வேணாலும் சண்ட போடுங்க... ப்ளீஸ்... இப்ப மினிய எதுவும் கேக்க வேணாம்.." எனக் கெஞ்ச,

"இவ்வளவு சொல்றேன் திரும்ப திரும்ப மினி மினின்னுட்டு வராய்... அவ என் தாரா.. எனக்கும் அவளுக்கும் இடைல ஆயிரம் இருக்கும்.. நீ யார்ரா அத பத்தி பேச.." என பிரணவ் மீண்டும் ஆர்யானை அடிக்கப் பாய,

ஆதர்ஷும் அபினவ்வும் அவனைத் தடுக்க முன் வர அதற்குள் சிதாரா, "நிறுத்துங்க..." எனக் கத்தியதும் பிரணவ் அப்படியே நின்றான்.

பின் பிரணவ்வை நோக்கி சிதாரா வர, ஆர்யான், "மினி.. வேணாம் ப்ளீஸ்டா..." என்க அவன் முன் கை நீட்டி தடுத்தவள் தன் கண்களைத் துடைத்து கொண்டு பிரணவ்விடம் திரும்பி,

"சொல்லு.. நீ யாரு எனக்கு.. வார்த்தைக்கு வார்த்தை என் தாரா என் தாரானு சொல்லுறாய்... எனக்கும் உனக்கும் என்ன சம்பந்தம்.." என்க,

பிரணவ், "தாரா நீ ஏன் இப்படி எல்லாம் பேசுறாய்.. நான் உன்னோட பிரணவ்.. நானும் நீயும் ரெண்டு வருஷமா காதலிச்சோம்... " என்றான்.

அவன் சொன்னதைக் கேட்டு கை தட்டி சிரித்த சிதாரா, "ஓஹ்... காதலிச்சது உண்மை தான்.. பட் நான் மட்டும் தான் காதலிச்சேன்... நீ..... ச்சீ.. சொல்லவே அசிங்கமா இருக்கு.." என்க,

"ஓக்கே தாரா... எல்லாம் விடு... இந்த நிமிஷம் நான் உன்ன லவ் பண்றேன்... எனக்கு தெரியும் நீயும் என்ன இன்னும் லவ் பண்ணிட்டு தான் இருக்காய்..." என பிரணவ் கூற,

சிதாரா, "நான் எப்படி பிரணவ் நீ சொல்றத்த நம்புவேன்.. எவ்வளவு சீப்பான ரீசன் சொல்லிட்டு விட்டுப் போனாய்..." என அவள் சொல்லி முடிக்கும் முன்னே கண்ணீர் அவள் கன்னத்தைத் தாண்டி ஓடியது.

ஆர்யான், "போதும் மினி.. இதுக்கு மேல எதுவும் சொல்லாதே.. ப்ளீஸ்..." என்றவனைத் தடுத்தவள்,

"இல்லடா.. நான் இன்னெக்கி பேசியே ஆகனும்.. எவ்வளவு நாளெக்கி தான் என் மனசுலயே எல்லாம் வெச்சிட்டு இருப்பேன்... இதுக்கு ஒரு முடிவு வேணாம்.." என்ற சிதாரா அழுதவாறே பேசினாள்.

"உன் கிட்ட அன்னெக்கி எவ்வளவு கெஞ்சினேன்... என்ன விட்டுப் போகாதேன்னு... உன் கால்ல கூட விழுந்தேன்..." என உடைந்த குரலில் கூறியவள் திடீரென பிரணவ்வின் சட்டையைப் பிடித்து,

"ஆனா நீ... என்ன வார்த்தையெல்லாம் சொன்னாய்.. இப்ப கூட அதப் பத்தி நெனச்சா..." என சொல்லும் போதே அவளுக்கு மூச்சு வாங்க அனைவரும் அவர்களின் பின்னே நின்றதால் அவர்களுக்கு அவள் முகம் தெரியவில்லை.

பிரணவ் மாத்திரம் அவள் வேகமாக மூச்சு வாங்குவதைக் கண்டவன், தாரா என ஏதோ சொல்ல வர அவன் சட்டையிலிருந்து கையை எடுத்தவள், "ச்சீ... இனி என்ன அப்படி கூப்பிடாதே... உனக்கு அந்த தகுதி கூட இல்ல... உன் வாய்ல இருந்து என் பேரு வரதே அசிங்கமா நெனக்கிறேன்.. " என்றவள்,

பின் அவன் முன் விரல் நீட்டி, "திரும்ப என் லைஃப்ல என்டர் ஆகனும்னு நெனச்ச... அசிங்கமாகிரும்... திஸ் இஸ் மை லாஸ்ட் வார்னிங்..." என்றாள்.

சிதாராவின் பேச்சிலே பிரணவ் தன் தவறு உணர்ந்திருந்தான்.

எதுவுமே கூறாது அவளைத் தடுக்க வழியற்று கண்களில் சோகத்தைத் தேக்கி கல்லாக சமைந்திருந்தான்.

சிதாரா நேராக ஆர்யானிடம் சென்றவள் அவனை அணைத்துக் கொண்டாள்.

அங்கிருந்த யாரும் எதுவுமே பேசவில்லை.

ஒவ்வொருவரும் ஒவ்வொரு மனநிலையில் இருந்தனர்.

தன் நெஞ்சு சூடாவதையும், அணிந்திருந்த டீ ஷர்ட் ஈரமாவதையும் வைத்து‌ சிதாரா அழுகிறாள் என உணர்ந்த ஆர்யான் அவனும் அவளை ஆறுதலாக அணைக்க, "இங்கிருந்து போய்றலாம் ரயன்.. என்னால முடியல..." என்க, சிதாராவின் பேச்சே அவள் எவ்வளவு மன உளைச்சலில் உள்ளாள் எனக் கூறியது.

ஏனென்றால் அவள் அதிக கவலையில் உள்ள போதோ அல்லது மன உளைச்சலில் உள்ள போதோ அல்லது அதிகம் உணர்ச்சி வசப்படும் போதோ மட்டும் தான் அவனை ரயன் என அழைப்பாள்.

மற்ற நேரமெல்லாம் ஜிராஃபி தான். இல்லாவிட்டால் பெயர் சொல்லி அழைப்பாள்.

திடீரென தன் கை பாரமாக குனிந்து சிதாராவைப் பார்த்தவன் அதிர்ந்தான்.

வேகமாக மூச்சு வாங்க ஆரம்பித்தவள் கொஞ்சம் கொஞ்சமாக தலையும் கையும் ஒரு பக்கம் உதர வாயில் நுரை தள்ள அவன் கைகளில் சரிந்து கொண்டிருந்தாள்.

 
Last edited:

Nuha Maryam

Moderator
அத்தியாயம் - 7

S M Hospital - Ooty


ஆதர்ஷ், அபினவ், பிரணவ், ஆர்யான், லாவண்யா, அக்ஷரா என அனைவரும் அங்கு கூடி இருந்தனர்.


தன்னை அணைத்தபடி இருந்தவள் திடீரென வலிப்பு வந்து தன் கரங்களிலே சரிய அதிர்ந்த ஆர்யான் "மினி...." எனக் கத்த,


அவன் கத்தலில் திரும்பியவர்கள் சிதாராவின் நிலையைக் கண்டு அதிர்ந்து அவசரமாக அவளிடம் ஓடினர்.


பிரணவ், "தாரா.." என அவளிடம் செல்லப் பார்க்க அவன் கையை யாரோ பிடித்து வைத்திருப்பதை உணர்ந்தவன் யாரெனப் பார்க்க, ஆதர்ஷ் தான் அவனை செல்ல விடாமல் பிடித்திருந்தான்.


ஆதர்ஷ், "நீ பண்ணது எல்லாம் போதும்... தயவு செஞ்சி இங்கயே இரு.." என கோவமாகக் கூறியவன் சிதாராவிடம் விரைந்தான்.


பிரணவ் எதுவும் செய்ய முடியாமல் அங்கு நின்றே கவலையில் பார்த்துக் கொண்டிருந்தான்.


சிதாரா வலிப்பு வந்து துடிக்க ஆர்யான் அவசரமாக அருகிலிருந்த இரும்புக் கம்பியொன்றை எடுத்து அவள் உள்ளங்கையில் வைத்து மடித்து அழுத்தினான்.


மெதுவாக அவளது வலிப்பு நிற்க சிதாராவை கரங்களில் ஏந்திய ஆர்யான் யாரிடம் எதுவும் கூறாது ஓடிச் சென்று டாக்சி பிடிக்க அக்ஷராவும் லாவண்யாவும் அவனுடன் சென்றனர்.


ஏனையோரிடம் தகவலைக் கூறி அவர்களை ரெட் ஹவுஸ் செல்லக் கூறிய அபினவ் இன்னொரு டாக்சி பிடித்து ஆதர்ஷ், பிரணவ்வுடன் அவர்களைப் பின் தொடர்ந்தனர்.


ஹாஸ்பிடலில் அனைவரும் டாக்டர் சிதாராவைப் பரிசோதித்து விட்டு வரும் வரை தவிப்புடன் இருக்க,


பிரணவ் அங்கு ஒரு ஓரமாக கை கட்டி நிற்பதைப் பார்த்த ஆர்யான் பிரணவ்விடம் சென்று அவன் சட்டையைப் பிடித்து,


"எதுக்குடா இன்னும் இங்க நின்னுட்டு இருக்காய்... இன்னும் என்ன வேணும் உனக்கு... அவ்வளவு படிச்சி படிச்சி சொன்னேன் தானே இப்ப எதையும் பேச வேணாம் நிறுத்து நிறுத்துன்னு... கேட்டியாடா... இப்ப பாரு மினி எந்த நிலைல இருக்கான்னு... இதுக்கெல்லாம் நீ மட்டும் தான்டா காரணம்... உன்ன...." என கோபத்தில் கத்தி விட்டு பிரணவ்வை அடிக்கக் கை ஓங்க,


அபினவ் அவனைத் தடுக்க முயற்சிக்க, சிதாராவைப் பரிசோதித்து விட்டு வெளியே வந்த டாக்டர் அவர்களைக் கண்டு,


"நிறுத்துங்க... இங்க என்ன நடக்குது... இது என்ன ரௌடிசம் பண்ணுற இடம்னு நெனச்சீங்களா... பேஷன்ட்ஸ் இருக்குற இடம்... திரும்ப இப்படி எல்லாம் பண்ணிட்டு இருந்திங்கனா நான் போலிஸ கூப்பிட்டுருவேன்... மைன்ட் இட்..." என அவர்களைத் திட்ட,


பிரணவ்வை விட்டு டாக்டரிடம் ஓடி வந்த ஆர்யான், "சாரி.. சாரி டாக்டர்... மினி இப்போ எப்படி இருக்கா... நல்லா இருக்கால்ல... " என பதட்டமாய்க் கேட்டான்.


டாக்டர், "ப்ளீஸ் பீ காம் சார்... அவங்க இப்போ நல்லா தான் இருக்காங்க... டோன்ட் வொரி... அவங்களுக்கு இதுக்கு முன்னாடி ஃபிட்ஸ் வந்து இருக்கா..." என்க,


லாவண்யா இல்லை என சொல்ல வர,


"ஆமா டாக்டர்... இது தேர்ட் டைம்..." என ஆர்யானிடமிருந்து பதில் வர அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர்.


டாக்டர், "ஆஹ் ஓக்கே... ஏதோ ஒரு விஷயம் அவங்க மனச ரொம்ப பாதிச்சிருக்கு... அத ஞாபகப்படுத்துற விதமா ஏதாச்சும் நடந்தா தான் இப்படி ஃபிட்ஸ் வருது இவங்களுக்கு... ஐ திங்க் இன்னெக்கி ரொம்ப ஸ்ட்ரெஸ்ல இருந்து இருக்காங்க... அதனால தான் இன்னும் கான்ஷியஸ் வரல... நாங்க ட்ரீட்மன்ட் பண்ணி இருக்கோம்... சோ ஒரு டூ த்ரீ ஹவர்ஸ்ல கண்ணு முழிச்சிருவாங்க... அவங்கள வார்டுக்கு சேன்ஜ் பண்ணுறோம்... அதுக்கப்புறம் நீங்க போய் பார்க்கலாம்.." என்க,


ஆர்யான், "தேங்க் யூ டாக்டர்.." என்றதும் அவர் சென்றார்.


சிதாராவை வார்டுக்கு மாற்ற ஆர்யான் முதலிலே உள்ளே சென்று அவள் அருகில் அமர்ந்து அவள் கையை தன் கைக்குள் வைத்து பிடித்துக் கொண்டவன் கண்கள் அவனையும் அளியாமல் கண்ணீர் சிந்த யாரும் காணாதிருக்க அவசரமாக துடைத்துக் கொண்டான்.

ஆனால் சிதாராவைக் காண உள்ளே வந்த லாவண்யா அதனைக் கண்டு கொண்டாள்.


பின் அனைவரும் உள்ளே வர லாவண்யா ஆர்யானிடம் சென்று,


"அண்ணா ப்ளீஸ்... உண்மைய சொல்லுங்க.. சித்துக்கு இதுக்கு முன்னால ஃபிட்ஸ் வந்திருக்கா... எப்படி வந்தது... இது வரைக்கும் அவ என் கிட்டயும் அச்சு கிட்டயும் இத பத்தி எதுவுமே சொல்லி இல்லயே... அவளுக்கு என்னாச்சி.. ஏன் இப்படி மாறி இருக்கா.." என்க,


"ஆமாண்ணா.. ப்ளீஸ் எதையும் மறைக்காம சொல்லுங்க... எங்க ஃப்ரெண்டுக்கு இப்படி ஒரு பிரச்சினை இருந்திருக்கு... ஆனா இது வரைக்கும் நாம யாரும் அத பத்தி தெரிஞ்சிக்காம இருந்திருக்கோம்..." என கவலையாக கூறினாள் அக்ஷரா.


ஆர்யான், "சொல்றேன்மா... இதுக்கு மேல மறைச்சி என்ன பிரயோஜனம்..." என்றவன் சிறிது நேரம் அமைதியாக இருந்து விட்டு,


"மினிக்கு ஃபர்ஸ்ட் டைம் ஃபிட்ஸ் வந்தப்போ தான் எனக்கும் மினிக்கும் இடைல ஃப்ரென்ட்ஷிப் உருவானது..." என்க, அனைவரும் அவன் கூறுவதைக் கேட்க தயாரானார்கள்.


2 வருடங்களுக்கு முன்...


Fordham University - New York


யுனிவர்சிட்டி ஆடிட்டோரியமே அன்று பரபரப்பாக காணப்பட்டது.

ஏனென்றால் அன்று முதலாம் வருடத்திற்கான புதிய மாணவர்களை அனுமதிக்கும் தினமாகும்.

மூன்றாம் நான்காம் ஆண்டு மாணவர்கள் புதிய மாணவர்களை வரவேற்றுக் கொண்டிருக்க நான்காம் ஆண்டு பயிலும் ஆர்யான் அங்கிருந்த பெஞ்ச்சில் தன் நண்பர்களுடன் அமர்ந்து வந்து செல்லும் மாணவர்களை கலாய்த்துக் கொண்டிருந்தான்.

அந்த நேரம் சரியாக யுனிவர்சிட்டியினுள் நுழைந்தாள் சிதாரா.

நீல நிற குர்த்தி அணிந்து கழுத்தை சுற்றி ஷால் போட்டு கண்களில் பெரிய கண்ணாடி, நெற்றியில் சிறிய பொட்டு, தோளில் பையுடன் ஒரு வித படபடப்புடன் நுழைந்தாள்.

சுற்றி எப்போதுமே மார்டன் ட்ரஸ் அணிந்த நவ நாகரீக பெண்களையே பார்த்து இருந்தவனின் கண்களில் முழங்காலையும் தாண்டிய குர்த்தி அணிந்து ஷால் போட்டு பதட்டத்துடன் சுற்றி முற்றி பார்த்துக் கொண்டு வந்த சிதாராவைக் கண்டதும் விழிகளில் ரசனையுடன் அவளை ஏறிட்டான்.

இந்தியாவிலே பிறந்து வளர்ந்து படிப்பிற்காக வேண்டி நியுயார்க் வந்த ஆர்யானுக்கு இந்த ஐந்து வருடங்களாக மாடர்ன் ஆடை அணிந்த அல்லது முழங்காலுக்கு மேலேறிய ஆடை அணிந்த பெண்களே கண்ணுக்கு தென்பட இருப்பதால் அவர்களைக் கண்டாலே எரிச்சல் வரும்.

ஆனால் அது அந் நாட்டு பழக்க வழக்கம் என்பதால் உடன் பயிலும் பெண்களுடன் பழகினாலும் ஒரு இடைவெழியைக் கடைபிடிப்பான்.

அப்படிப்பட்டவனுக்கு சிதாராவைக் கண்டதும் ரசனை ஏற்பட்டது ஆச்சர்யம் இல்லை.

அவள் கண்களில் தெரிந்த பதட்டத்தைக் கண்டதும் இவனின் வழக்கமான குறும்புக் குணம் வெளிப்பட்டு விட்டது.

சிதாரா அவர்கள் இருந்த இடத்தை கடந்து செல்லப் பார்க்க ஆர்யான்,

"ஓய் சோடா புட்டி..." என அவளை அழைக்க,

அதே இடத்தில் நின்றவள் அவர்களைப் பார்த்து விட்டு தன்னையா அழைத்தான் என சுற்றிப் பார்க்க,

"உன்ன தான்மா... இங்க வா..." என மீண்டும் அழைத்தான் ஆர்யான்.

சிதாரா பயந்து பயந்து அவர்களை நோக்கி மெதுவாக அடியெடுத்து வர, ஆர்யான் அவள் வரும் வரை ரசனையுடன் பார்த்துக் கொண்டிருந்தவன், அவள் அவர்களை நெருங்கியதும் பொய்க் கோபத்துடன்,

"கூப்டதும் வர மாட்டியா... என்ன புகுந்த வீட்டுக்கா போற.. இவ்வளோ மெதுவா வர... சீனியர்ஸ்க்கு ஒரு மரியாதை இல்ல..." என்றதும் அவள் பயந்து தலை குனிந்த படியே இட வலமாக தலையசைத்தாள்.

ஆர்யானின் நண்பர்களுக்கு தமிழ் தெரியாததால் அவர்கள் இருவரையும் வேடிக்கை பார்த்தனர்.

சிதாரா பயந்து நடுங்க ஆர்யானுக்கு வந்த சிரிப்பை அடக்க முடியவில்லை.

மெதுவாக வாயை மூடிய படி சிரித்தவன்,

"காசு ஏதாச்சும் விழுந்துடிச்சா சோடா புட்டி.." என்க தலையைத் தூக்கி அவனைப் புரியாமல் நோக்கினாள் சிதாரா.

ஆர்யான், "இல்ல ரொம்ப நேரமா கீழ பார்த்து ஏதோ தேடிட்டு இருந்தியே.. அதான் கேட்டேன்..." என்க அவசரமாக இல்லை என தலை அசைத்தாள் சிதாரா.

"ஆமா என்ன இது ட்ரஸ்... இவ்வளவு நீளமா போட்டு கழுத்துல ஷால்... இதுல ஆள விடப் பெரிய கண்ணாடி வேற... இன்னுமே அந்தக் காலத்துல இருக்க... இங்க வர கிட்ட எப்படி ட்ரஸ் பண்ணிட்டு வரனும்னு யாரும் சொல்லி தரலயா..." என ஆர்யான் விளையாட்டாக கலாய்த்திட,

இதை அறியாத சிதாராவோ அவனின் வார்த்தைகளைக் கேட்டதும் திடீரென தலை பாரமாக தன் சமநிலையை இழப்பது போல் இருக்க அப்படியே வலிப்பு வந்து அவன் காலின் அருகே விழுந்தாள்.

ஆர்யான் அதிர்ச்சியில் இருக்க அவன் நண்பர்கள் அனைவரும் பதட்டமாகி ஒருவன், "ஹேய் வட் ஹெப்பன்ட் மேன்.." என்க,

தன்னிலை பெற்ற ஆர்யான், "டோன்ட் நோ.. ப்ளீஸ் ஹெல்ப் மீ டு டேக் ஹர் டு த மெடிக்கல் ரூம்..." என்றவன் நண்பர்களின் உதவியுடன் அவசரமாக சிதாராவை முதலுதவி அளிக்க எடுத்துச் சென்றான்.

சற்று நேரத்தில் கண் விழித்த சிதாரா தான் எங்கிருக்கிறோம் என கண்களால் அலச,

அவள் கண் விழிக்கும் வரை தனியாக அங்கே காத்திருந்த ஆர்யான் பதட்டமாக, "ஏங்க நீங்க நல்லா இருக்கீங்கல்ல... " என்க ஆம் என தலையசைத்தாள் சிதாரா.

ஆர்யான், "சாரிங்க.. சீரியஸ்லி உங்கள ஹர்ட் பண்ணனும்னு எதுவும் சொல்லல... ஜஸ்ட் ரேக்கிங் பண்ண தான் பாத்தோம்..." என்க,

"இட்ஸ் ஓக்கே.." என்றாள் சிதாரா.

"இதுக்கு முன்னாடி உங்களுக்கு இப்படி ஃபிட்ஸ் வந்திருக்கா.." என்க இல்லை என தலையசைத்தாள்.

ஆர்யான், "என்னங்க நீங்க... நானும் ரொம்ப நேரமா பேசிட்டு இருக்கேன்... நீங்க தலையை மட்டும் ஆட்டுரீங்க... ஒரு வேளை நீங்க இன்னும் என்ன மன்னிக்கலயா... அகைன் சாரிங்க..." என்றான்.

சிதாரா அவசரமாக, "இல்ல.. இல்லங்க... நீங்க எதுவும் தப்பு பண்ணலயே... ஜஸ்ட் விளையாட்டுக்கு தானே பண்ணீங்க... அதனால சாரி கேக்காதீங்க..." என்க,

மகிழ்ந்த ஆர்யான், "ஹப்பாடா.. ஒரு வழியா பேசிட்டீங்க... நான் கூட உங்களுக்கு பேச வராதோன்னு சந்தேகப்பட்டேன்.." என்க அவனைப் பொய்யாக முறைத்தாள் சிதாரா.

பின், "அப்படியே உங்க பேரையும் சொன்னா நல்லா இருக்கும்... ரொம்ப நேரமா நானும் வாங்க போங்கன்னு பேசி எனக்கே என்னவோ போல இருக்கு.." என்க புன்னகைத்தவள் சிதாரா என்றாள்.

ஆர்யான், "ஓக்கே தாரா.. ஐம் ஆர்யான்... உனக்கு எப்படி வேணாலும் கூப்பிடலாம்... நான் ஃபைனல் யேர் படிக்கிறேன்... உனக்கு சீனியர்... என்ன ஹெல்ப் வேணாலும் என் கிட்ட கேளு..." என்க சிதாராவிடமிருந்து பதில் வராமல் போக அவளைக் கேள்வியாய் நோக்கினான்.

ஆனால் சிதாராவோ அவ்வளவு நேரம் இருந்த புன்னகை மறைந்து கை இரண்டையும் அழுத்த மூடி ஒரு வித பதட்டத்தில் இருந்தாள்.

ஆர்யான் மீண்டும் 'தாரா' என அவளை அழைக்க,

"வேணாம்.. அப்படி கூப்டாதீங்க... வேணாம்.. எனக்கு பிடிக்கல..." என கண்களில் இருந்து கண்ணீர் சிந்த கூறினாள்.

"ஓக்கே ஓக்கே... கூல்... நான் இனி அப்படி கூப்பிடல..." என்கவும் அமைதியாகினாள் சிதாரா.

ஆர்யான், "சரி நான் இனி உன்ன அப்படி கூப்பிடல... பட் வன் கன்டிஷன்..." என்க அவனை என்ன என்பது போல் பார்த்தாள்.

ஆர்யான் புன்னகையுடன் அவள் முன் ஒரு கரம் நீட்டி, "ஃப்ரென்ட்ஸ்..." என்கவும் சிதாரா சிறிது தயங்க ஆர்யான் முகம் வாடினான்.

பின் சட்டென அவன் கரத்துடன் தன் கரம் சேர்த்தவள் புன்னகையுடன் பதிலுக்கு, "ஃப்ரென்ட்ஸ்..." என்றாள்.

ஆர்யானுக்கு வந்த சந்தோஷத்தில், "தேங்க்ஸ் மினி... தேங்க்ஸ் அ லாட்... நான் கூட நீ என்ன தப்பா நெனச்சி என் ஃப்ரென்ட்ஷிப்ப எக்சப்ட் பண்ணிக்க மாட்டியோன்னு நெனச்சேன்..." என்க,

அவன் மினி என அழைத்ததும் அவள் அவனைப் புரியாமல் பார்க்க அப்போது தான் அவன் மினி என அழைத்தது நினைவில் வந்தது.

"அது ஒன்னுமில்ல... நீ என்ன விட ரொம்ப குட்டையா இருக்கல்ல.. அதான் செல்லமா மினியன்.. அத கொஞ்சம் ஷார்ட் பண்ணி மினி... " என ஆர்யான் விளக்கம் அளிக்க,

சிதாரா பட்டென, "ஓக்கே ஜிராஃபி.." என்க ஆர்யான் சிரிக்க அவனுடன் அவளும் இணைந்தாள்.
 

Nuha Maryam

Moderator
அத்தியாயம் - 8
மருத்துவ அறையிலிருந்து சிதாராவை தன் நண்பர்கள் இருந்த இடத்திற்கு அழைத்துச் சென்ற ஆர்யான் அனைவருக்கும் அவளை அறிமுகம் செய்து வைத்தான்.

அனைவருடனும் கை குலுக்கி இன்முகத்துடன் பேச அவர்களுக்கும் அவளைப் பிடித்து விட்டது.

சிதாராவை ஆடிட்டோரியத்துக்கு அழைத்துச் சென்று வகுப்பில் சேர தேவையான அனைத்தையும் விளக்கினான்.

அதன் பின் வந்த நாட்களில் நீ.. வா... போ.. என கூறும் அளவுக்கு இருவரும் நல்ல நண்பர்கள் ஆகினர்.

வகுப்பிலுள்ள சக மாணவர்களுடனும் நட்பு பாராட்டிய சிதாராவுக்கு யுனிவர்சிட்டி வாழ்க்கை புது பிறவி எடுத்து வந்தது போல் இருந்தது.

நாட்கள் இவ்வாறு செல்ல ஒரு நாள் யுனிவர்சிட்டிக்கு அருகிலுள்ள பார்க்கில் அமர்ந்து இருவரும் பேசிக்கொண்டு இருந்தனர்.

அப்போது சிதாரா, "ஜிராஃபி எனக்கொரு ஹெல்ப் பண்றியா..." என்க,

"சொல்லு மினி... பணம் ஏதாவது தேவையா..." என ஆர்யான் கேட்க,

"இல்ல... அதெல்லாம் அப்பா தாராளமாவே அக்கவுன்ட்ல போட்டு வெச்சி இருக்காரு... ஈவ்னிங் என் கூட கொஞ்சம் ஷாப்பிங் வரியா..." எனக் கேட்டாள்.

ஆர்யான், "புக்ஸ் ஏதாவது வாங்கனுமா மினி... சொல்லு நான் வாங்கிட்டு வரேன்... நீ அலைய வேணாம்..." என்கவும்,

"இல்ல ஜிராஃபி... எனக்கு கொஞ்சம் ட்ரஸ் பர்ச்சேஸ் பண்ணனும்... அப்படியே பார்லருக்கு போய்ட்டு வரணும்... தனியா போக எனக்கு இன்னும் இங்க அவ்வளவா பழகல... அதான் உன்ன கூப்ட்டேன்..." என்றாள் சிதாரா.

ஆர்யான், "ட்ரஸ் வாங்கனும் ஓக்கே... நீ எதுக்கு பார்லர்க்கு போகனும்னு சொல்ற... நீ அங்கெல்லாம் போக மாட்டியே..." என்க அவனை முறைத்த சிதாரா,

"எதுக்கு இவ்வளவு கேள்வி கேக்குற... உனக்கு என் கூட வர முடியுமா முடியாதா... முடியாதுன்னா சொல்லு நான் அந்த ஜோன் கூட போறேன்..." என்க,

"இல்ல இல்ல நானே வரேன்... நீ எங்க போனும்னு சொன்னாலும் ஓக்கே‌... அந்த ஜோனோட மூஞ்சியும் முகரகட்டையும்... என்னமோ இதுக்கு முன்னாடி பொண்ணுங்களயே பார்க்காதது போல உன்ன பாக்குறான் ஒரு பார்வை..." என தன் பாட்டிற்கு ஜோன் என்பவனை வசைபாட சிரித்த சிதாரா அவனை அங்கிருந்து அழைத்துச் சென்றாள்.

மாலை ஆனதும் எப்போதும் போல நீண்ட குர்த்தி, கழுத்தை சுற்றி ஷால், கண்ணில் கண்ணாடி, நெற்றியில் சின்னதாய் ஒரு பொட்டு என தயாரானவள் ஆர்யான் வந்து ஹார்ன் அடிக்கவும் அவனுடன் பைக்கில் ஏறி கிளம்பினாள்.

ATM சென்று பணம் எடுத்துக் கொண்டவள் ஆர்யானுடன் அங்கிருந்த காம்ப்ளக்ஸிற்கு சென்றாள்.

பல்வேறுபட்ட கடைகளை ஒரே இடத்தில் கொண்டதே காம்ளக்ஸ் ஆகும்‌.

முதலில் ட்ரஸ் செக்ஷனிற்கு இருவரும் சென்றனர்.

ஆர்யான் அங்கு வேலைக்கிருந்த பெண்ணிடம்,

"லைட் கலர் சிம்பள் குர்த்தி டிசைன்ஸ் காட்டுங்க..." என்கவும் சிதாரா,

"இல்ல இல்ல லாங் ஸ்கர்ட் பிளவுஸ் என்ட் டீ ஷர்ட் ஜீன்ஸ் டிசைன் காட்டுங்க.." எனக் கூற அவளை கேள்வியாய் நோக்கினான் ஆர்யான்.

சிதாரா எப்போதும் அதிக வேலைப்பாடற்ற கண்ணுக்கு கூசாத நிறங்களில் குர்த்தி மட்டுமே அணிந்து கண்டுள்ளதால் தான் அவனே அவற்றை எடுத்துக் காட்ட சொன்னான்.

பணிப்பெண் காட்டியவற்றில் தனக்குப் பிடித்தவற்றை வாங்கியவள் அடுத்து பார்லருக்கு சென்றாள்.

ஆர்யான் எதுவும் கூறாமல் அவள் செய்பவற்றை அமைதியாக பார்வையிட்டான்.

பார்லரினுள் நுழைந்தவள் பார்லர் பெண்ணிடம், "ஹேர் ஷார்ட் பண்ணனும்... அப்படியே கொஞ்சமா கேர்ள் பண்ணிடுங்க.." என்கவும் ஆர்யான் அதிர்ந்தான்.

"என்னாச்சி மினி... எதுக்காக இதெல்லாம் பண்ணிட்டு இருக்க... இவ்வளவு நல்ல முடிய யாராச்சும் கட் பண்ணுவாங்களா..." என கோவமாக ஆர்யான் வினவ,

சிதாரா, "ப்ளீஸ்டா... நான் உன் கிட்ட அப்புறமா சொல்றேன்... இப்போ என்ன தடுக்காதே..." என்க கோவமாக வெளியே சென்று அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தான் ஆர்யான்.

சில மணி நேரம் கழித்து சிதாரா வெளியே வர ஆர்யான் விழி விரித்து நின்றான்.

சற்று முன் வாங்கிய லாங் ஸ்கர்ட் பிளவுஸ் அணிந்து முடியை கேர்ள் செய்து எப்போதும் அணிந்திருக்கும் கண்ணாடி இல்லாமல் வந்தாள் சிதாரா.

ஒரு நிமிடம் தான் விழி விரித்து நின்றான் ஆர்யான்.

பின் ஏற்கனவே இருந்த கோபத்துடன்,

"இன்னும் எங்கயாச்சும் போகனுமா மேடம்..." என்க,

"ஐ கேர் சென்டர் போகனும்.." என்றாள் சிதாரா.

அவளை கோவமாக ஒரு பார்வை பார்த்தவன் எதுவும் சொல்லாது முன்னே நடக்க அவனைப் பின் தொடர்ந்தாள் சிதாரா.

அங்கிருந்து ஐ கேர் சென்டர் சென்றவள் தன் கண்களுக்கு பொருத்தமான கான்டேக்ட் லென்சை ஆர்டர் செய்து விட்டு நேராக சிதாரா தங்கியிருந்த ப்ளாட்டை அடைந்தனர்.

சிதாராவைத் தாண்டிக் கொண்டு உள்ளே நுழைந்தவன் அவள் வாங்கியவற்றை வைத்து விட்டு கோவமாக அமர்ந்தான்.

சிதாரா உள் நுழைந்தவள் மனதில், "ஆத்தீ... ஜிராஃபி ரொம்ப கோவமா இருக்கான் போல... நாமளே முதல்ல ஆரம்பிச்சிரலாம்.." என நினைத்தவள் ஆர்யானைப் பார்த்து,

"நான் எப்படி இருக்கேன் ஜிராஃபி... அழகா இருக்கேனா..." என தன்னை சுற்றிக் காட்ட,

"ஏன் ஏதாச்சும் எக்சிபிஷன்க்கு ஷோ கேஸ் பொம்மையா வரேன்னு சைன் பண்ணி குடுத்திருக்கியா.." என கோவமாக ஆர்யான் வினவ தலை குனிந்தாள் சிதாரா.

ஆர்யான் எழுந்து அவளை நோக்கி வந்தவன்,

"மினி.. நீ எதுக்காக இதெல்லாம் பண்ணிட்டு இருக்கன்னு நிஜமாலுமே எனக்கு புரியல... நீ ஃபர்ஸ்ட் டே இங்க வந்தப்போ நான் உன்னோட ட்ரஸிங் ஸ்டைல வெச்சி உன்ன கலாய்ச்சேன்... அது ஜஸ்ட் ரேக்கிங் பண்ண தான்... பட் நீ உள்ள வரும் போதே நான் உன்ன ரசிச்சி பாத்துட்டு இருந்தேன் தெரியுமா... ஏன்னா நீ அழகா இருக்கன்னு இல்ல... சுத்தி எப்பவுமே மாடர்ன் ட்ரஸ் உடுத்த பொண்ணுங்களையே பாத்து பாத்து பழகின எனக்கு ஃபர்ஸ்ட் டைம் ட்ரெடிஷனல் ட்ரஸ்ல உன்ன பாத்ததும் ஒரு டிஃபரன்ட் ஆன ஃபீல்... அப்புறம் ரேக்கிங் பண்ணலாம்னு தான் அப்படி எல்லாம் பொய் சொன்னேன்... உண்மைய சொன்னா நீ ட்ரெடிஷனல் ட்ரஸ்ல தேவதை மாறி இருப்ப... ஒரு வேளை அதுக்காக தான் நீ இப்படி எல்லாம் பண்றியா..." என்றான்.

அது வரை அவன் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தவள் விழிகளில் அவளையும் அறியாது கண்ணீர்.

ஆர்யானைப் பார்த்து புன்னகைத்தவள், "ஃபர்ஸ்ட் டைம் ஒருத்தங்க இப்படி சொல்லி கேக்குறேன்..." என்கவும்,

அவள் கண்ணீரைப் பார்த்து பதறிய ஆர்யான் அவசரமாக அவள் கண்ணீரைத் துடைத்து விட்டவன்,

"ஹேய் மினி... நீ எப்படி இருந்தாலும் அழகா தான் இருப்ப... அழாதே... சாரி... நீ எதுவும் சொல்ல வேணா... நான் இனிமே உன் மேல கோவப்பட மாட்டேன்..." என்றான்.

சிதாரா, "ஜிராஃபி...நான் உன் கிட்ட என்ன பத்தி சில விஷயம் சொல்லனும்... " என்க,

"நீ உன்ன பத்தி சொல்லி தான் நான் தெரிஞ்சிக்கனும்னு இல்ல மினி... உன்னோட பாஸ்ட் என்னவா இருந்தாலும் நான் உன் கூட இருப்பேன் எப்பவுமே..." எனக் கூறி புன்னகைத்தான் ஆர்யான்.

"இல்ல ஜிராஃபி... ரொம்ப நாளா இதெல்லாம் என் மனச போட்டு அறுக்குது... இத யாருக்கிட்டயாச்சும் சொல்லனும்னு தோணுது..." என்றவள் அவனிடம் தன் கடந்த காலத்தை கூற ஆரம்பித்தாள்.

ஆர்யான் பால்கனியில் சென்று நின்றவன் அவள் கூறுவதைக் கேட்க கேட்க பால்கனி கம்பி மீதிருந்த அவன் கையின் பிடி இறுகிக்கொண்டே சென்றது.

சிதாரா பிரணவ்வுடனான தன் கடந்த காலத்தை ஆர்யானிடம் கூறி முடிக்க அவன் சில நொடிகள் அமைதியாக இருந்தான்.

சட்டென ஏதோ விழுந்து உடையும் சத்தம் கேட்கவும் திரும்பிப் பார்த்தவன் அதிர்ந்தான்.

வாயில் நுரை தள்ள கை கால்கள் வெட்ட கீழே விழுந்து கிடந்தாள் சிதாரா.

அவள் பக்கத்தில் அங்கு மேசையில் அழகுக்கு வைத்திருந்த பூச்சாடி உடைந்து கிடைந்தது.

அவளிடம் ஓடியவன் தன்னிடமிருந்த பைக் சாவியை அவள் கைகளில் வைத்து அழுத்த அவள் அமைதியாகினாள்.

அவசரமாக டாக்டருக்கு அழைத்து வர சொன்னவன் அவளை அறைக்குள் தூக்கிச் சென்று கட்டிலில் கிடத்தி அவள் முகத்தில் தண்ணீர் தெளிக்கவும் மெதுவாகக் கண் விழித்தாள் சிதாரா.

"ஆர் யூ ஓக்கே மினி... இந்த தண்ணிய குடி..." என்க ஆம் எனத் தலையசைத்தவள் நீரை வாங்கிப் பருகினாள்.

சரியாக அந் நேரம் டாக்டர் வர அவளைப் பரிசோதித்து விட்டு, "இப்போதக்கி இந்த டேப்லட்ட போட்டுட்டு நீ கொஞ்சம் ரெஸ்ட் எடும்மா.." என்று விட்டு அறையிலிருந்து வெளியேறினார்.

சிதாராவுக்கு மருந்தையும் நீரையும் கொடுத்து குடிக்க வைத்த ஆர்யான் டாக்டரைப் பின் தொடர்ந்தான்.

ஆர்யான் வந்ததும் டாக்டர், "என்னாச்சி சடன்னா.. இதுக்கு முன்னாடி இப்படி நடந்திருக்கா.." என்க,

ஆர்யான் அன்று யுனிவர்சிட்டியில் நடந்ததையும் இப்போது நடந்தவற்றையும் கூறினான்.

"அப்டின்னா அந்த விஷயம் அவங்கள மனசளவுல ரொம்ப பாதிச்சிருக்கு... அதை பத்தி அவங்க நிறைய நேரம் திங்க் பண்ணி இருக்காங்க... அதனால தான் அவங்க ரொம்ப எமோஷனல் ஆகுறப்போ எல்லாம் அவங்களுக்கு ஃபிட்ஸ் வருது.." என டாக்டர் கூற,

ஆர்யான், "இதை கியுர் பண்ண முடியாதா டாக்டர்.." எனக் கேட்க,

"கியுர் பண்ணலாம்.. ஃபிட்ஸ் வர நிறைய ரீசன்ஸ் இருக்கு.. இது அவங்க மனசு சம்பந்தப்பட்டது...மருந்தினால அவங்கள கியுர் பண்ண முடியாது... அதனால அவங்க மனச பாதிக்கிற அந்த விஷயத்த அவங்க தலைல இருந்து எடுக்கனும்... அத பத்தியே அவங்க மறக்கனும்...இல்லன்னா அது சாதாரண விஷயம்னு அவங்க அத கடந்து போற மனநிலைக்கு வரனும்... இத விட்டா வேற வழி இல்ல.." என்க, நன்றி கூறி அவரை அனுப்பி வைத்தான்.

அறைக்குள் நுழைந்த ஆர்யான் சிதாரா எடுத்த ஆடைகளை கட்டிலில் விரித்து பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டவன் அவளைப் பார்த்து முறைக்க, அவளோ புரியாது விளித்தாள்‌.

ஆர்யான், "எவனோ ஒருத்தன் உன்ன பத்தி புரிஞ்சிக்காம உன்ன தப்பா பேசினான்னு நீ எதுக்கு உன்ன மாத்திக்கனும்..." என்க,

இப்போது முறைப்பது அவளானது.

"டேய் வளந்து கெட்டவனே.. எவனோ சொன்னங்குறதுக்காக நான் மாறனும்னா அப்போவே மாறி இருப்பேனே... க்ளாஸ்ல நான் மட்டும் தனியா தெரியக் கிட்ட எல்லாரும் என்னையே பாக்குற போல ஒரு‌ ஃபீல்... என்ட் நான் ஒன்னும் அரை குறையா ட்ரஸ் போடல்லயே... இப்போ க்ளாஸ்ல மத்த பசங்க கூட பழகும் போது எனக்கு அன்கம்ஃபிடபிளா இருக்காது... ஏன்னா நானும் இப்போ அவங்கள போல தானே இருக்கேன்... போதாத்துக்கு அந்த ஜோன் வேற ஒரு மார்க்கமா பாக்குறான்னு சொன்னியே.. இனி அவனும் அப்படி பாக்க மாட்டான்..." என்க,

"ஏதோ நீ சொல்ற... நானும் நம்புறேன்..." என்றவன் அதன் பின் இருவரும் வேறு கதைகள் பேசினர்.
 

Nuha Maryam

Moderator
அத்தியாயம்- 9

ஆர்யான் கூறி முடிக்க அனைவரின் கண்களும் கலங்கி இருந்தன.

அந் நேரம் அங்கு வந்த நர்ஸ் ஆர்யானிடம், "டாக்டர் உங்கள வர சொன்னாங்க.." என்று விட்டு செல்ல ஆர்யான் அவருடன் செல்ல ஆதர்ஷும் அவர்களைப் பின் தொடர்ந்தான்.

டாக்டரிடம் சென்றவர்கள், "டாக்டர் வர சொல்லி இருந்தீங்க..." என்க,

டாக்டர், "யா.. ப்ளீஸ் டேக் யுவர் சீட்..." என்க,

ஆர்யான், "டாக்டர்.. மினிக்கு ஒரு பிரச்சினையும் இல்லல்ல.." என பதட்டமாக கேட்க,

ஆதர்ஷ் அவன் கையைப் பிடித்து அமைதியாக்கினான்.

டாக்டர், "அதை பத்தி பேச தான் வர சொன்னேன் சார்..." என்றவர் சற்று இடைவெளி விட்டு,

"இது அவங்களுக்கு தேர்ட் டைம்னு சொன்னீங்க இல்லயா... நானும் அவங்கள டெஸ்ட் பண்ணேன்... அவங்க சாதாரணமா இருக்குற போல வெளிய உங்களுக்கு தெரியலாம்... பட் அது உண்மை இல்ல அவங்க எதை பத்தியோ ரொம்ப டீப்பா திங்க் பண்ணிட்டு இருப்பாங்க... இது தான் மிஸ்.சிதாராவுக்கு ஃபிட்ஸ் வர ஸ்டார்ட் ஆக காரணமா இருந்திருக்கு...

பொதுவா ஃபிட்ஸ் வர பல ரீசன்ஸ் இருந்தாலும் அது நேரடியா அவங்களோட ப்ரைன தான் தாக்கும்... இது மிஸ்.சிதாராவுக்கு தேர்ட் டைம் வேற... இது தொடர்ந்தா அவங்க ப்ரைன் டேமேஜ் ஆகி உயிருக்கு ஆபத்தாகலாம்... கோமா ஸ்டேஜ்க்கு போக கூட வாய்ப்பு இருக்கு..." என்று நிறுத்த ஆர்யான், ஆதர்ஷ் இருவரும் அதிர்ந்தனர்.

ஆர்யான் பதறி, "என்ன சொல்றீங்க டாக்டர்... ப்ளீஸ் ஏதாவது பண்ணுங்க டாக்டர்..‌. என்னோட மினிய எப்படியாச்சும் கியூர் பண்ணி குடுங்க..." என அழ ஆதர்ஷுக்கு என்ன சொல்ல என்றே தெரியவில்லை.

உடன் பிறக்காவிட்டாலும் அவனின் செல்லத் தங்கை அவள்.

சொல்லப் போனால் லாவண்யா, சிதாரா இருவரில் யார் முக்கியம் என்று கேட்டால் ஒரு நொடி கூட யோசிக்காமல் சிதாரா என்று கூறுவான்.

அவ்வாறிருக்க டாக்டர் கூறியதைக் கேட்டவனால் தாங்க முடியவில்லை.

ஆதர்ஷ், "இதை கியுர் பண்ண ஏதாவது வழி இருக்கும் தானே டாக்டர்.." என்க,

டாக்டர், "மெடிசின்ஸால இதை பர்மனன்ட்டா கியூர் பண்ண முடியாது சார்... மெடிசின்ஸால ஃபிட்ஸ் வராம ஸ்டாப் பண்ணி வைக்க முடியும்... மெடிசின்ஸ் ஸ்டாப் பண்ணா அகைன் ஃபிட்ஸ் வரும்... என்ட் கன்ட்னியுஸா மெடிசின் எடுத்துக்குறது அவங்களோட கிட்னிய டேமேஜ் பண்ணும்... அதனால ஏதாவது பண்ணி அவங்க மனசுல இருந்து அவங்கள ரொம்ப பாதிச்ச அந்த விஷயத்த எடுத்துப் போட ட்ரை பண்ணுங்க... நான் இப்போதெக்கி அவங்களுக்கு ஃபிட்ஸ் வராம இருக்க மெடிசின்ஸ் எழுதி தரேன்... பட் இது நிரந்தர தீர்வு இல்ல..." என்றார்.

அவரிடம் நன்றி கூறி விட்டு இருவரும் சிதாரா இருந்த வார்டுக்கு வந்தனர்.

அக்ஷரா, "டாக்டர் என்ன சொன்னாங்க அண்ணா..." என ஆர்யானிடம் கேட்க அவன் ஏதோ யோசனையில் இருக்க,

ஆதர்ஷ் டாக்டர் கூறிய அனைத்தையும் அவர்களிடம் கூறியவன் வந்த ஆத்திரத்தில் பிரணவ்விடம் சென்று அவன் கன்னங்களில் மாறி மாறி அடித்தான்.

பிரணவ்வோ குற்றவுணர்ச்சியில் இருந்ததால் ஆதர்ஷ் அடித்தது எதுவும் உறைக்கவில்லை.

ஆதர்ஷ், "மனுஷனாடா நீ... ச்சீ... உன்ன எல்லாம் ஃப்ரன்ட்டுன்னு சொல்லவே அசிங்கமா இருக்குடா..." என்றவன் மீண்டும் அவனை அடிக்க லாவண்யா வந்து தடுத்தாள்.

பின் பிரணவ்வை பார்த்து லாவண்யா, "உங்களுக்கும் சித்துக்கும் இடைல ஏதோ மிஸ் அன்டர்ஸ்டேன்டிங்... அதனால தான் பிரிஞ்சிட்டீங்கன்னு நெனச்சேன் அண்ணா... பட் எங்க சித்துவ நீங்க இப்படியெல்லாம் பேசி இருப்பீங்கன்னு சத்தியமா எதிர்ப்பார்க்கல அண்ணா... அந்த பைத்தியக்காரி உங்கள எவ்வளவு காதலிச்சிருக்கான்னா எங்க கிட்ட ஒரு வார்த்தை உங்கள பத்தி தப்பா சொல்லல அவ... " என்கவும் பிரணவ்விற்கு செருப்பால் அடித்தது போல் இருந்தது.

நர்ஸ் வந்து, "இவ்வளவு பேர் இருந்தா பேஷன்ட்டுக்கு டிஸ்டர்ப்பா இருக்கும்... யாராவது ஒருத்தர் மட்டும் கூட இருங்க..." என்க,

ஆர்யான் சிதாராவுடன் இருக்க மற்ற அனைவரும் வெளியேறினர்.

சிதாரா கண் விழிக்கும் வரை அவளை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் ஆர்யான்.

சற்று நேரத்தில் அவள் மெதுவாக கண்விழித்தவள் எழுந்து அமர முயற்சிக்க அவளுக்கு உதவி செய்த ஆர்யான் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தான்.

சிதாரா அவனைப் பார்த்து புன்னகைக்க அவனோ அமைதியே உருவமாக இருந்தான்.

சிதாரா, "சாரி ஜிராஃபி... உன்ன நான் ரொம்ப டென்ஷன் படுத்துறேன்ல... " என்க,

"ஃபிட்ஸ் வந்த பொண்ணு... உடம்புல தெம்பு இருக்காதுன்னு பாக்குறேன்... இல்ல நீ இப்படி சொல்றத கேட்டு கன்னத்துல போட்டிருப்பேன்..." என ஆர்யான் கூற, சிதாரா கப் சிப்பென வாயை மூடிக் கொண்டாள்.

அவள் கையை எடுத்து தன் கைக்குள் வைத்துக் கொண்டவன்,

"நான் அவ்வளவு சொல்லியும் நீ புரிஞ்சிக்க மாட்டேங்குறல்ல மினி... போதும்... உன்ன ரொம்ப நாள் விட்டு வெச்சாச்சி... இன்னெக்கே எனக்கொரு பதில் வேணும்..." என்றான்.

சிதாரா, "ஹஹா... நீ என்ன லூசா ஜிராஃபி... எப்போ ஜோக் பண்ணனும்னு கூட ஒரு விவஸ்தை இல்லையா..." என்க,

அவளை முறைத்த ஆர்யான், "போதும் சமாளிச்சது... நீ இந்த தடவ எப்படி தப்பிக்கிறன்னு நானும் பாக்குறேன்.." என்க,

அவனை எதிர்த்து சிதாரா ஏதோ கூற வர, அதற்குள் பிரணவ்வையும் அபினவ்வையும் தவிர மற்றவர்கள் அறைக்குள் நுழைந்தனர்.

ஆதர்ஷ் தான் அவனை உள்ளே வர வேண்டாம் எனக் கூறியிருந்தான்.

பிரணவ் ஏற்கனவே குற்றவுணர்வில் தவித்துக் கொண்டிருப்பதால் அவனுடன் அபினவ்வும் நின்றான்.

லாவண்யாவும் அக்ஷராவும் சிதாராவை இரு பக்கமும் இருந்து அணைத்துக் கொள்ள புன்னகைத்த சிதாரா,

"ஏன்டி... நான் செத்துடுவேன்னு பயந்துடீங்களா.." என்க அக்ஷரா பட்டென அவள் கன்னத்தில் ஒன்று போட்டாள்.

ஆர்யான், "இன்னும் ரெண்டு சேத்து போடும்மா... அப்ப தான் புத்தி வரும்..." என்க,

சிதாரா அவசரமாக இரு கன்னத்தையும் கைகளால் மறைத்துக்கொண்டு பாவமாக உதட்டைப் பிதுக்கினாள்.

அவள் முகம் சுருங்குவதைத் தாங்காத ஆதர்ஷ்,

"எல்லாரும் சும்மா இருங்க என் தங்கச்ச எதுவும் பண்ணாம.." என்றவன் சிதாராவிடம் சென்று அவள் தலையை வருடினான்.

லாவண்யா, "பாசமலரே... அப்படியே உங்க தொங்கச்சிக்கு ஒழுங்கா பேசவும் சொல்லி கொடுங்க.." என கேலியாக கூற ஆதர்ஷ் அவளை முறைத்தான்.

லாவண்யாவோ உதட்டை வளைத்துக் காட்டியவள் வேறு பக்கம் திரும்பிக் கொண்டாள்.

வெளியே அபினவ் பிரணவ்விடம், "நீ பண்ணது தப்பு தான் மச்சான்... இல்லன்னு சொல்லல... அதுக்காக நான் இங்க நின்னுட்டு இருக்குறதுக்கு அர்த்தம் நீ பண்ண தப்புக்கு சப்போர்ட்டா இருக்குறேன்னு இல்ல... என்னோட ஃப்ரென்ட் தான் பண்ண தப்ப உணர்ந்திருப்பான்னு ஒரு நம்பிக்கை... இந்த நேரத்துல உன்ன தனியா விட எனக்கு மனசு வரலடா..." என்க,

"தேங்க்ஸ் டா.." என அவனை அணைத்துக் கொண்ட பிரணவ்,

"நீயும் உள்ள போடா... உனக்கும் அவ மேல நிறைய அக்கறை இருக்குன்னு எனக்கு தெரியும்... எப்படியும் உள்ள இருக்குற யாரும் தாராவ பத்தி என் கிட்ட சொல்ல மாட்டாங்க... நீ போய் பாத்துட்டு வந்து அவள் எப்படி இருக்கான்னு சொல்லு..." என்றான்.

அபினவ், "நீயும் உள்ள வா மச்சான்... " என்க,

"வேணாம்டா... தாரா என்ன பாத்தா இப்ப ரொம்ப டென்ஷன் ஆகுவா... என்னாலயும் அவ முகத்த நேரா பாக்க சக்தி இல்ல..." என பிரணவ் கூற,

வேறு எதுவும் கூறாமல் சிதாரா இருந்த அறைக்குள் நுழைந்தான் அபினவ்.

பின் சிதாராவை டிஸ்சார்ஜ் செய்து அவர்கள் தங்கியிருந்த ரெட் ஹவுஸ் அழைத்துச் சென்றனர்.

அடுத்த இரண்டு நாளில் டூர் முடிய அனைவரும் ஊருக்கு கிளம்பினர்.

அந்த இரண்டு நாளுமே ஆர்யான், லாவண்யா, அக்ஷரா மூவரும் சிதாராவை விட்டு எங்கும் அசையவில்லை.

எப்போதும் அவளுடன் ஏதாவது பேசிக்கொண்டு அவள் யோசனை வேறு எங்கும் செல்லாமல் பார்த்துக் கொண்டனர்.

பூஞ்சோலை கிராமத்தை அடையும் போது இரவாகி இருந்தது.

எனவே அனைவரும் அன்று அங்கே தங்கி விட்டு அடுத்த நாள் வீடுகளுக்கு செல்ல முடிவெடுத்தனர்.

மறுநாள் காலையில் அனைவரும் கிளம்பிய பின் ஆதர்ஷ், பிரணவ், அபினவ் மூவரும் கிளம்பத் தயாராகினர்.

( பூஞ்சோலைக் கிராமத்திற்கு பக்கத்து ஊரான வேந்தன்யபுறம் தான் ஆதர்ஷ் மற்றும் அபினவ்வின் ஊராகும்.

ஆனால் இருவருமே வேலைக்காக சென்னையில் இருக்கின்றனர்.

பிரணவ் மற்றும் ஆர்யானின் வசிப்பிடம் சென்னை.

சிதாரா, லாவண்யா இருவரும் ஆரம்பத்திலிருந்தே பூஞ்சோலைக் கிராமத்தைச் சேர்ந்தவர்கள்.

அக்ஷராவின் பள்ளிப் பருவத்தில் அவள் குடும்பத்தோடு பூஞ்சோலைக் கிராமத்திற்கு குடிபெயர்ந்தனர்.

சிதாராவின் பெற்றோர் தற்போது கோயம்புத்தூரில் இருக்கின்றனர்.

சிதாராவின் தந்தை சங்கர் ஒரு பேங்க் மேனேஜர் என்பதால் அவருக்கு ட்ரான்சர் கிடைத்து இப்போது அங்குள்ளனர்.

லாவண்யாவின் குடும்பம் பரம்பரை பணக்காரர் என்பதால் அவள் தந்தை ராஜேந்திரனே அங்கிருந்த நாட்டாமை.

அக்ஷராவின் தந்தை கருணாகரன் ஒரு ஆசிரியர்.

மூவரின் தாய்மாருமே இல்லத்தரசிகள். )

ஆர்யான் தோழிகள் மூவருடன் ஹாலில் இருக்க மற்ற மூன்று‌ ஆண்களும் மேலே அறையில் கிளம்பத் தயாராகிக் கொண்டிருந்தனர்.

பிரணவ், "டேய் ஆதர்ஷ்... ப்ளீஸ்டா... ஒரே ஒரு தடவ நான் தாரா கூட பேசனும்டா... திரும்ப அவள ஹர்ட் பண்ற மாதிரி எதுவும் பேச மாட்டேன்... ப்ராமிஸ்டா... " என்க,

ஆதர்ஷோ அபினவ்வைப் பார்த்து, "இவனுக்கு பேசாம இருக்க சொல்லு அபிணவ்... இது வரைக்கும் இவன் செஞ்சி வெச்சிருக்குறதையே சரி பண்ண முடியாம இருக்கோம்... ஒழுங்கா ஊருக்கு கிளம்புற வேலைய பார்க்க சொல்லு.." என்க,

பிரணவ், "மச்சான் ப்ளீஸ்டா... ஊருக்கு போக முன்னாடி கடைசியா ஒரே ஒரு தடவ தாரா கூட பேசிட்டு வரேன்டா.." என்றான்.

அதற்கும் ஆதர்ஷ் அபினவ்வைப் பார்த்து ஏதோ சொல்ல வர,

இருவருக்கும் நடுவில் மாட்டிக்கொண்டு முழித்த அபினவ்,

"அடச்சீ நிறுத்துங்க... ஆதர்ஷ்... உனக்கு தான் அவன் மேல இருந்த கோவம் கொறஞ்சிடுச்சுல்ல.. பின்ன நேரா பார்த்து பேசிக்கிட்டா என்னவாம்... நடுவுல என்ன வெச்சி காமெடி பண்றீங்களா... டேய்.. அதான் பிரணவ் அவன் பண்ண தப்ப உணர்ந்துட்டானே... கடைசியா ஒரு தடவ சித்து கூட பேசுறேன்னு சொல்றான்.. சரின்னு சொல்லேன்டா..." என ஆதர்ஷைப் பார்த்து கூறியவன்,

பின் பிரணவ்விடம், "இங்க பாருடா... திரும்ப ஏதாவது ஏடாகூடமா பேசினன்னு வையேன்... அப்புறம் நானே உன்ன சும்மா விட மாட்டேன்..." என்றான்.

சற்று சமாதானமான ஆதர்ஷ், "சரி... பட் அவன் எங்க எல்லாரு முன்னாடியும் தான் சித்து கூட பேசனும்.." என்கவும் பிரணவ் சற்று யோசித்து விட்டு சரி என்றான்.

தமது பையுடன் மூவரும் கிளம்பி ஹாலுக்கு வர ஆர்யான் ஏதோ சீரியசாக கூறிக் கொண்டிருக்க மூவரும் அவன் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தனர்.

பிரணவ் மெதுவாக அவர்களிடம் சென்று தொண்டையை செறும நால்வரும் அவனை ஏறிட்டனர்.

பிரணவ் தயங்கியபடி சிதாராவைப் பார்த்து தாரா எனக்கூற வர சிதாராவின் பார்வையில் அவசரமாக,

"சிதாரா.. நான் உன் கூட கொஞ்சம் பேசனும்.." என்க,

ஆர்யான் கோவமாக எழுந்து ஏதோ கூற வர அவனைத் தடுத்த சிதாரா,

"சொல்லுங்க பிரணவ்.." என சிறிதும் மாற்றமின்றி தெளிவான குரலில் கூறினாள்.

அவளின் தெளிவான பேச்சில் அங்கிருந்த அனைவருமே வியக்க ஆர்யான் மட்டும் மகிழ்ந்தான்.

பிரணவ், "உன் கிட்ட மன்னிப்பு கேட்க கூட எனக்கு தகுதி இருக்கான்னு தெரியல... எதுவும் தெரியாம பண்ணேன்னு பொய் சொல்ல மாட்டேன்... தெரிஞ்சி தான் எல்லாம் பண்ணேன்... பட் ப்ளீஸ் முடிஞ்சா என்ன மன்னிச்சிடு.." என்க,

சிதாரா ஒரு நொடி கூட யோசிக்காது, "சரி மன்னிச்சிட்டேன்... வேற ஏதாவது சொல்லனுமா.." என்றாள்.

சிதாராவின் தெளிவான பேச்சை பிரணவ் கூட எதிர்ப்பார்க்கவில்லை.

அதை அவன் முகமே காட்டிக் கொடுத்தது.

ஆர்யானுக்கு அப்போது பிரணவ்வைக் காணும் போது ஏனோ சிரிப்பு வந்தது.

வாயை மூடி சிரித்தான்.

"எனக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் தர மாட்டியா தாரா..." என சட்டென பிரணவ் ஏக்கமாக வினவ,

ஆதர்ஷ் கோவத்தில் பிரணவ்வை ஏதோ சொல்ல முன்னேற அவன் கைப் பிடித்து தடுத்தான் அபினவ்.

அனைவரும் சிதாராவின் பதிலை எதிர்ப்பார்க்க சிதாராவோ திரும்பி ஆர்யானைப் பார்த்து புன்னகைத்தாள்.

ஆர்யான் கூட சிதாராவின் முகத்தை தவிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான்.

சிதாரா, "சாரி பிரணவ்... என்னால நீங்க கேட்டத தர முடியாது... நான் உங்கள மன்னிச்சிட்டேன் தான்.. ஆனா நீங்க பண்ண எதையுமே மறக்கல... அத என்னால மறக்க முடியுமான்னு கூட தெரியல... அதை மனசுல வெச்சிக்கிட்டு திரும்ப உங்க கூட என்னால இருக்க முடியாது... சோ நீங்க ஆசைப்படுற மாதிரி உங்களுக்கு ஏத்த ஒரு நல்ல பொண்ணா பாத்து கல்யாணம் பண்ணிக்கோங்க... சாரி..." என்க,

பிரணவ், "நான் நிஜமாவே திருந்திட்டேன் தாரா... என் தப்ப உணர்ந்துட்டேன்... என்னால இனி உன்ன தவிர யாரையும் கல்யாணம் பண்ணிக்க முடியாது... நம்ம பிரேக்கப் அப்போ நீ கூட சொன்னாய் தானே என்ன தவிர யாரையும் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு... நாமளே கல்யாணம் பண்ணிக்கலாமே..." என்கவும் சிரித்தாள் சிதாரா.

பின், "அந்த டைம்ல காதல் கண்ண மறச்சிடுச்சி பிரணவ்... ஏதோ உங்க மேல அப்போ இருந்த அளவுக்கதிகமான காதல்ல அப்படி சொன்னேன்... இப்போ தான் வெளியுலகத்த பாத்து கொஞ்சம் மெச்சூர்ட் ஆகி இருக்கேன்... அதனால தான் நான் எவ்வளவு பைத்தியக்காரியா இருந்திருக்கேன்னு புரிஞ்சிக்கிட்டேன்..." என சிரித்தபடி கூறிய சிதாரா பின் பிரணவ்வின் கண்களைப் பார்த்து அழுத்தமாக தெளிவாக,

"ஆனா இப்போ தெளிவா சொல்றேன் கேட்டுக்கோங்க... நான் நிச்சயம் கல்யாணம் பண்ணிப்பேன்... ஆனா அது என்ன பத்தி முழுசா தெரிஞ்சி என்ன புரிஞ்சிக்கிட்டு என்ன நானாவே ஏத்துக்குற ஒருத்தனா இருப்பான்... நிச்சயம் அது நீங்க இல்ல.." எனக் கூறினாள்.

அவள் இன்னொருவனைத் திருமணம் செய்வேன் எனக் கூறியதைக் கேட்ட பிரணவ்விற்கு கோவமாக வந்தது.

பிரணவ், "உன்னால நிச்சயமா என்ன தவிர யாரையும் கல்யாணம் பண்ணிக்க முடியாது தாரா.. எப்போ இருந்தாலும் நீ என்ன தான் கல்யாணம் பண்ணிப்பாய்.." என சிதாராவைப் பார்த்து கூறியவன் தனது பையுடன் அவசரமாக அங்கிருந்து கிளம்பினான்.

அவன் செல்வதை புன்னகையுடன் பார்த்தக் கொண்டிருந்தாள் சிதாரா.

ஆதர்ஷ், *சாரிம்மா.. அவன் சொன்னது எதையும் நீ கண்டுக்காதே... அவன் சும்மா பைத்தியம் போல ஒலரிட்டு போறான்... நாங்களும் கிளம்புறோம்மா.." என சிதாராவிடம் கூறினான்.

பின் அபினவ், ஆதர்ஷ் இருவரும் எல்லோரிடமும் சொல்லிக் கொண்டு கிளம்ப அனைவரும் அவர்களை வழியனுப்பி வைத்தனர்.

அவர்கள் சென்றதும் ஆர்யானுக்கு அழைப்பு வர பேசி விட்டு துண்டித்தவன் சிதாராவிடம்,

"மினி..‌ கேப் புக் பண்ணி இருக்கேன்.. இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துரும்... ரெண்டு பேரும் முதல்ல எங்க வீட்டுக்கு போய்ட்டு அப்புறம் நான் உன்ன உங்க வீட்டுல ட்ராப் பண்றேன்.." என்கவும் அவனைப் பார்த்து சரி என தலையசைத்தாள் சிதாரா.
 

Nuha Maryam

Moderator
அத்தியாயம் - 10

ஆர்யானும் சிதாராவும் கிளம்பத் தயாராகிக் கொண்டிருந்தனர்.

லாவன்யாவின் தாய், தந்தை, பாட்டி என‌ அனைவரும் சிதாராவுக்கு பல அறிவுரைகள் வழங்கினர்.

பாட்டி, "இங்க பாரு சீதா கண்ணு... நீ இன்னும் அம்மா அப்பாவ பாக்கலன்னு தான் உன்ன போக விடுறேன்... இல்லன்னா என் கூடவே வெச்சிப்பேன்... திரும்ப வெளிநாட்டுக்கு போக முன்னாடி இந்த கிழவிய வந்து பாத்துட்டு தான் போகனும்..." என்க,

"சரி லட்சு..." என அவரை அணைத்துக் கொண்டாள் சிதாரா.

சிதாராவை பாட்டியிடமிருந்து விலக்கிய ஆர்யான் அவர் தோளில் கை போட்டு,

"என்ன டார்லிங் நீ.... உன்ன போய் கிழவின்னு சொல்ற... நீ இன்னுமே ஸ்வீட் சிக்ஸ்டீன் டார்லிங்... உன்ன கல்யாணம் பண்ணிக்க ஐடியால இங்க நான் இருக்கேன்... நீ என்னன்னா..." என்றவன் பட்டென அவர் கன்னத்தில் முத்தமிட்டான்.

அனைவரும் சிரிக்க, "போடா பொடிப் பயலே..." எனக் கூறி வெட்கப்பட்டார்.

பின் அனைவரிடமும் சொல்லிக் கொண்டு இருவரும் கிளம்பினர்.

கேப்பில் இருவரும் பின் சீட்டில் அமர்ந்திருக்க ஆர்யான் மொபைல் நோண்டிக் கொண்டிருந்தான்.

சிதாராவோ அவனையே பார்த்துக் கொண்டிருக்க ‌ஆர்யான்,

"நான் ரொம்ப ஹேன்ட்சமான பையன்னு எனக்கு தெரியும் மினி... அதுக்காக இப்படி வெச்ச கண் வாங்காம பார்த்துட்டு இருக்காதே..
கண்ணு பட்டுரும்... அப்புறம் யாரு என்ன கல்யாணம் பண்ணிப்பாங்க..." எனக் கூற கையில் இருந்த ஹேன்ட் பேக்கால் அவனை அடித்த சிதாரா,

"ஜிராஃபி... நானும் ரெண்டு நாளா உன்ன பார்த்துட்டு தான் இருக்கேன்... நீ ஏதோ ப்ளான் பண்ணி இருக்க... மவனே ஏதாவது கேடி வேலை பண்ணன்னு தெரிஞ்சது அப்புறம் உனக்கு கடைசி வரை கல்யாணமே நடக்காம பண்ணிருவேன்...." என்றாள்.

ஆர்யான் அவள் கூறியதைக் கேட்டு அதிர்வது போல் நடித்தவன்,

"வேணாம் மினி... வாழ வேண்டிய வயசு... அதுவும் எங்க வீட்டுக்கு நான் ஒரே புள்ள.." என்க அவனை முறைத்து விட்டு திரும்பிக் கொண்டாள்.

ஆர்யான் மனதில், "இந்த தடவ நான் நெனச்சத கண்டிப்பா நடத்தி காட்டுவேன் மினி.." எனக் கூறிக் கொண்டான்.

சற்று நேரத்தில் அவர்கள் ஆர்யானின் வீட்டை அடைந்தனர்.

வீடு என்று அதனைக் கூற முடியாது.

மாளிகை என்று கூட சொல்லலாம்.

ஒவ்வொரு இடமும் அவர்களின் செல்வச் செழிப்பை எடுத்துக் காட்டியது.

ஆர்யானின் தந்தை ரஞ்சித் தான் அந்த மாவட்டத்திலே நம்பர் வன் கம்பனி எனப் பெயரெடுத்த AR GROUP OF COMPANIES இன் ஸ்தாபகர்.

அவரின் கடின உழைப்பின் பலனே அந்த கம்பனி.

கேட்டிலிருந்து வீடு வரையுமே சற்று தூரம் செல்ல வேண்டி இருந்தது.

சிதாராவுக்கு உள்ளே செல்லவே தயக்கமாக இருந்தது.

சிதாராவின் குடும்பமும் வசதியில் குறைந்தவர்கள் இல்லை.

தேவைக்கு அதிகமாகவே அவர்களிடம் பணம் இருக்கும்.

ஆனால் ஏதோ ஒரு தயக்கம் அவளை ஆட்கொள்ள மெதுவாக அடியெடுத்து நடக்க,

ஆர்யான் அவள் கையைப் பற்றி உள்ளே அழைத்துச் செல்லப் பார்க்க உள்ளிருந்து,

"அங்கயே நில்லுங்க..." என கம்பீரமான பெண் குரலொன்று ஒலிக்க சிதாரா அடுத்த அடி எடுத்து வைக்காது நின்றாள்.

அந்த குரலுக்கு சொந்தக்காரரான ஆர்யானின் தாய் அகிலா அமைதியே திருவுருவமாக மாடிப் படியில் இறங்கி வந்தார்.

நேராக இருவரையும் நோக்கி வந்தவர் சிதாராவின் முகத்தையே உற்று நோக்கினார்.

பின் இருவரின் கோர்த்திருந்த கையையும் பார்க்க அவசரமாக ஆர்யானின் கரத்திலிருந்து தன் கையை விலக்கினாள் சிதாரா.

"ராணி... அத எடுத்துட்டு வாங்க.." என அகிலா உள்ளே நோக்கி குரல் கொடுக்க சிதாரா என்னவோ ஏதோவென பயந்தாள்.

ஆர்யானோ அமைதியாக நடப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.

அவர்கள் வீட்டில் வேலை செய்யும் ராணி ஆரத்தி தட்டுடன்‌ வர அவரிடமிருந்து அதை வாங்கிக் கொண்டவர் இருவருக்கும் ஆரத்தி எடுக்க,

சிதாரா தான் என்ன நடக்கிறது எனத் தெரியாமல் அவரைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

ஆரத்தி எடுத்து முடித்தவர் தட்டை ராணியிடம் கொடுத்து, "இத வெளிய கொட்டிடு..." என்று விட்டு சிதாராவின் பக்கம் திரும்பி,

"முதன் முதலா எங்க வீட்டுக்கு வர... அதான் ஆரத்தி எடுத்து வரவேற்றேன்... " என்றவர் ஆர்யானிடம்,

"ஃபோட்டோவ விட நேர்ல மகாலக்ஷ்மி மாதிரி இருக்காடா.." என சொல்லி அவள் முகத்தை புன்னகையுடன் வருட,

அப்போது தான் சிதாராவுக்கு மூச்சே வந்தது.

ஆர்யானோ அவர் கழுத்தைக் கட்டிக்கொண்டு,

"மாம்... அஞ்சி‌ ரூபாக்கு நடிக்க சொன்னா ஐநூறு ரூபாக்கு நடிக்கிறியே மாம்... பாவம்... புள்ள வேற பயந்துட்டா..." என நக்கலடிக்க சிதாரா அவனை முறைத்தாள்.

அகிலா சிரித்தவர், "அட... இன்னும் வெளியவே நின்னுட்டு இருக்காய்... வாம்மா உள்ள... இது உன் வீடுன்னு நெனச்சிக்கோ..." என்க சிதாரா புன்னகையுடன் உள் நுழைந்தாள்.

சிதாரா முன் செல்ல ஆர்யான் தாயின் காதில், "பெரிய ஆள் தான் மாம் நீ..." என்க,

"அமைதியா இருடா... அவளுக்கு கேட்டுற போகுது..." என அவன் வாயை அடைத்தார் அகிலா.

"சரிம்மா நீங்க ரெண்டு பேரும் பேசிட்டு இருங்க... நான் உங்களுக்கு குடிக்க ஏதாவது எடுத்துட்டு வரேன்..." என அகிலா சொல்ல,

சிதாரா, "சரிங்க ஆன்ட்டி..." என்கவும்,

அகிலா, "இன்னும் என்னமா ஆன்ட்டி அது இதுன்னுட்டு... அழகா அத்தன்னு கூப்பிடு..." என்க,

சிதாரா அவரைப் புரியாமல் நோக்கினாள்.

ஆர்யான், "மாம்..." என அழைத்து கண்களால் எச்சரிக்க அகிலா அவசரமாக,

"அது ஒன்னுமில்லமா.. ஆன்ட்டிக்கு தமிழ்ல அத்தன்னு தானே சொல்லுவாங்க... அதான் நம்ம பாஷைலே அப்படி கூப்பிட சொன்னேன்..." என சமாளிக்க,

"ஓஹ்... சரி அத்த..." எனப் புன்னகைத்தாள் சிதாரா.

அவள் அத்தை என்றதும் அகிலாவின் மனம் குளிர,

ஆர்யானோ வானில் பறக்காத குறை.

பின் அகிலா செல்ல இருவரும் பேசிக்கொண்டு இருந்தனர்.

அப்போது, "ஹேய்... மை பாய்... ஒரு வழியா வந்து சேர்ந்துட்ட... நான் கூட அப்படியே யூ.எஸ் போய்ருவியோன்னு நெனச்சேன்..." எனக் கூறிக்கொண்டு ஆர்யானின் தந்தை ரஞ்சித் கோட் சூட்டில் இறங் வர,

அவரைக் கண்டு சிதாரா அவசரமாக எழுந்து நின்றாள்.

"டாட்.... சும்மா கலாய்க்க வேணாம்..." எனக் கூறி அவரை அணைத்துக் கொண்டான் ஆர்யான்.

ரஞ்சித் சிதாராவைப் பார்த்து,

"நீ என்னமா நின்னுட்டு இருக்காய்... உக்காரு... நீ பயப்படுற அளவுக்கு நான் ஒன்னும் டெரர் பீஸ் இல்லமா... இவன் அப்படியா என்ன பத்தி சொல்லி வெச்சிருக்கான்..." என்க அமர்ந்தவள்,

"அச்சோ... அப்படி எதுவும் இல்ல அங்கிள்..." என்க சரியாக கையில் ட்ரேயுடன் அங்கு வந்தார் அகிலா.

ஒவ்வொருவருக்கும் காபி, திண் பண்டங்கள் என கொடுத்தவர் சிதாராவிடம்,

"என்ன அத்தன்னும் அவர அங்கிள்னும் சொல்றாய்... கேக்கவே என்னவோ போல இருக்கு... அவரையும் மாமான்னே கூப்புடுமா..." என்கவும்,

மனதுக்குள்ளே அவருக்கு சபாஷ் கூறினான் ஆர்யான்.

சிதாராவோ ஏன் இவர் வித்தியாசமாக நடக்கிறார் எனப் புரியாமலே சரி எனத் தலையசைத்தாள்.

அதன் பின் ரஞ்சித் ஆஃபீஸ் செல்ல அகிலா ஆர்யானிடம், "ட்ராவல் பண்ணி டயர்டா இருப்பா... நீ அவள கெஸ்ட் ரூமுக்கு கூட்டிட்டு போ..." என்கவும் ஆர்யான் சிதாராவை விருந்தினர் அறைக்கு அழைத்துச் சென்றான்.

சிதாரா அறையை சுற்றிப் பார்த்துக் கொண்டிருக்க ஆர்யான்,

"மினி... நான் உன் கூட கொஞ்சம் பேசணும்.." என்க,

"என்னடா ஜிராஃபி... புதுசா பேசுறத்துக்கு பர்மிஷன் எல்லாம் கேக்குறாய்... என்ன விஷயம்..." என சிதாரா கேட்க அவளின் கைப்பிடித்து கட்டிலில் அமர வைத்தவன் அவள் காலின் கீழ் அமர்ந்து கொண்டு அவள் கையைப் பிடித்துக் கொண்டவன்,

"நான் ஒன்னு சொன்னா கேப்பியா மினி..." என்றான்.

சிதாரா, "ஹ்ம்ம்" என்க,

"மினி.... எனக்காக உன் மனசுல இருக்குற கஷ்டம் எல்லாம் வெளிய கொட்டிரு... உன் பாஸ்ட்ட திரும்ப சொல்லு... பரவாயில்லை... நான் கேக்குறேன்.. பட் அதை உன் மனசுல இருந்து தூக்கி போடுறேன்னு நெனச்சிட்டு பேசு... நீ சொல்ற விஷயம் நீ சொல்லி முடியும் போது உன் மனச விட்டு மொத்தமா வெளிய போயினும்... என் கைய கெட்டியா பிடிச்சுக்கோ... நீ சொல்லும் போது உன்ன அந்த விஷயம் ரொம்ப பாதிச்சுதுன்னா என் கைய அழுத்தி பிடி... உன் கூட நான் இருக்கேன்னு அப்போ உனக்கு ஒரு நம்பிக்கை வரும்... உனக்கு அழ வேணும்னா தாராளமா எவ்ளோ வேணாலும் அழு... உனக்கு தோள் சாய நான் இருக்கேன்... பட் ஒரே விஷயத்துக்கு திரும்ப அழ மாடேன்னு முடிவு பண்ணிட்டு அழு... உன் மனசுல இருக்குற பாரம் எல்லாம் இத்தோட காணாம போகனும்... செய்வியா..." எனக் கேட்டான் ஆர்யான்.

சிதாரா அமைதியாக அவனையே வெறித்துக் கொண்டிருந்தவள் மெதுவாக ஆர்யானின் கரம் மேல் தன் கரத்தை வைத்து அழுத்திப் பிடித்துக் கொண்டாள்.

அதன் பின் தன மனதிலுள்ள பாரத்தை மொத்தமாக அவனிடம் இறக்கி வைத்தாள்.

ஃபிளாஷ்பேக்

சிதாரா, அக்ஷரா, லாவண்யா மூவரும் ப்ளஸ் டூ படித்துக் கொண்டிருந்த சமயம் அது.

மூவரின் குடும்பமும் அந்த நேரம் அங்கு தான் இருந்தனர்.

பூஞ்சோலைக் கிராமத்திலிருந்த பள்ளியிலேயே மூலரும் படித்தனர்.

இவர்கள் மூவரின் நட்பால் இவர்களின் குடும்பமும் ஒற்றுமையாக இருந்தனர்.

லாவண்யாவின் அத்தை மகன் தான் ஆதர்ஷ்.

அவளை விட நான்கு வருடம் மூத்தவன்.

ஆதர்ஷின் தாய் சிவகாமி லாவண்யாவின் தந்தை ராஜேந்திரனின் ஒரே தங்கை.

வேந்தன்யபுறத்திலிருந்த வசதியான குடும்பமொன்றில் அவரை திருமணம் செய்து கொடுத்தார் ராஜேந்திரன்.

சிவகாமிக்கு தன் அண்ணன் மகளே தனக்கு மருமகளாக வேண்டும் என ஆசை.

அவரின் கணவன் ஜெயராமும் அதற்கு மறுப்பு கூறவில்லை.

அவர்கள் ஆசையை ராஜேந்திரனிடம் தெரிவிக்க அவருக்கும் அவர் பத்தினி ஆண்டாளுக்குமே அதில் உடன்பாடு.

ஆனால் தம் ஆசையை பிள்ளைகள் மீது அவர்கள் திணிக்கவில்லை.

ஆதர்ஷுக்கு சிறு வயதிலிருந்தே லாவண்யாவைப் பிடிக்கும்.

எப்போதும் அவளுடன் வம்பு வளர்த்துக் கொண்டே இருப்பான்.

லாவண்யாவின் நட்பால் சிதாரா அக்ஷரா இருவருக்கும் ஆதர்ஷ் நல்ல பழக்கம்.

லாவண்யாவுடன் வம்பு பண்ணினாலும் அவளுக்கு ஒன்றென்றால் முதல் ஆளாக வந்து நிற்பான்.

சிதாரா மற்றும் அக்ஷராவுக்கு நல்ல சகோதரனாக இருந்தான்.

அதிலும் எப்போதும் துறுதுறுவென இருக்கும் சிதாரா என்றால் அவனுக்கு தனிப் பிரியம்.

தனக்கு தங்கை இல்லாத குறையை அவள் மூலம் தீர்த்துக் கொண்டாள்‌.

ஆதர்ஷ், அபினவ் இருவரும் சகோதரர்கள்.

ஆனால் சகோதரத்துவத்தைத் தாண்டி ஒரே வயதினர் என்பதால் இருவருக்கிடையிலும் நல்ல நட்பு இருந்தது.

ஆதர்ஷின் தந்தை ஜெயராமின் சகோதரர் ஜெயக்குமார்.

ஜெயக்குமார் மற்றும் பத்மா தம்பதியின் மகனே அபினவ்.

ஆதர்ஷ் பெற்றோரையும் லாவண்யாவையும் விட்டு பிரிய மனமில்லாமல் ஊரிலேயே படித்தான்.

அபினவ் மாத்திரம் சென்னையில் தங்கி படித்தான்.

சென்னையில் அபினவ்வுக்கு பிரணவ்வின் நட்பு கிடைத்தது.

ஆரம்பத்தில் ஹாஸ்டலில் தங்கிப் படித்த அபினவ் பின் பிரணவ்வின் வற்புறுத்தலால் அவர்கள் வீட்டில் தங்கினான்.

அபினவ்வை காணச் செல்வதால் ஆதர்ஷுக்குக்கும் பிரணவ்விற்கும் நல்ல பழக்கம் ஏற்பட்டு பின் நட்பாக மாறியது.

பூஞ்சோலை கிராமமும் வேந்தன்யபுறமும் இணைந்தே எப்போதும் ஊர்த் திருவிழா நடத்துவர்.

இம்முறை ஊர்த் திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டிருக்க அதனைக் காண ஆசைப்பட்டு அபினவ்வுடன் பிரணவ்வும் கிளம்பி வந்திருந்தான்.

வருடா வருடம் வைகாசியில் இந்தத் திருவிழா நடக்கும்.

வைகாசி மாதம் பள்ளி, கல்லூரிகளில் பரீட்சை விடுமுறை என்பதால் சிறுவர், சிறுமியர் கூட்டத்திற்குப் பஞ்சமே இருக்காது.

பெரியவர்கள், வயதானவர்களும் வெளியூரில் இருந்தாலும் திருவிழாவை முன்னிட்டு எப்பாடுபட்டாவது ஊருக்கு வந்து விடுவர்.

திருவிழாவிற்கே உரித்தான விளையாட்டுப் பொருட்கள், பலூன், காத்தாடி, கண்ணாடி, ஊதுவான் என கடைகள் கட்டி விற்பார்கள்.

இரவில் பாட்டுக் கச்சேரி, நாடகம் என்று ஊரே களை கட்டும்.

சிதாரா, லாவண்யா, அக்ஷரா மூவரும் கிராமத்திலே வளர்ந்து வந்ததால் பாவாடை தாவணி தான் அணிவர்.

மூவரும் ஒன்றாக திருவிழா பார்க்க செல்ல அபினவ்வுடன் வந்த பிரணவ்வின் பார்வையில் பட்டாள் சிதாரா.

பிரணவ்வின் உதடுகள் தானாக, "இன்ட்ரஸ்ட்டிங்..." என அசைந்தது.

சிறுவர்களுக்கு போட்டியாக மூவரும் அங்கிருந்த கடைகளில் பலூன், காத்தாடி என வாங்கி விளையாடிக் கொண்டிருக்க,

பிரணவ்வின் கண்கள் சிதாராவையே மொய்த்தன.

அவன் பார்வையின் அர்த்தம் அவன் மட்டுமே அறிவான்.

இரவில் மேடை நாடகம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்க தோழிகள் மூவரும் நாடகம் பார்க்க நாடகம் நடக்கும் மேடைக்கு கீழே அமர்ந்தனர்.

நாடகம் ஆரம்பித்து சற்று நேரத்தில் லாவண்யாவின் தோளில் சிறு கல் ஒன்று படவும் வீசியது யார் என திரும்பிப் பார்க்க அந்த மங்கிய ஒளியில் யாரும் தென்படவில்லை.

தொடர்ந்து இவ்வாறே நடக்கவும் லாவண்யா கல் வந்த திசையைப் பார்க்க அங்கு ஆதர்ஷ் நாடகமே கதியெனப் பார்த்துக் கொண்டிருந்தான்.

லாவண்யா மனதில், "கல்ல வீசி அடிச்சிட்டு நாடகம் பாக்குறது போல நடிக்கிறியா... நாடகம் முடியட்டும் மவனே இருக்கு‌ உனக்கு..." என ஆதர்ஷை வசை பாடியவள் மீண்டும் திரும்பி நாடகத்தில் கண் பதித்தாள்.

அதன் பின் எந்த கல்லும் வரவில்லை.

சில மணி நேரத்தில் நாடகம்‌ முடிய அனைவரும் எழுந்து செல்ல வேகமாக சென்று ஆதர்ஷைப் பிடித்துக் கொண்டாள் லாவண்யா.

ஆதர்ஷுக்கு பின்னால் வந்த அபினவ்வும் பிரணவ்வும் அங்கு என்ன நடக்கிறது எனப் பார்க்க,

லாவண்யா திடீரென ஓட அவளுடன் பின்னே ஓடி வந்த அக்ஷராவும் சிதாராவும் லாவண்யாவின் செயலைப் புரியாமல் பார்த்தனர்.

லாவண்யா தன்னைத் தடுத்து நிறுத்தவும் அவளைப் பார்த்த ஆதர்ஷ்,

"என்ன செல்லம்... மாமன் மேல இருக்குற காதல்ல இப்படி பொது இடத்துல எல்லாம் ரொமான்ஸ் பண்ணுவியா‌.." என கேலியாகக் கேட்க அவனை முறைத்த லாவண்யா,

"சாருக்கு ரொமான்ஸ் கேக்குதா ரொமான்ஸ்... சின்ன பசங்க போல கல் எறிஞ்சி விளையாடுறியா..." எனக் கேட்கவும் அவளைப் புரியாமல் பார்த்தான்.

பிரணவ் சிதாராவையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருக்க, அவன் பார்வை சிதாராவை ஏதோ செய்ய அவள் அவசரமாக தலை குனிந்து கொண்டாள்.

ஆனால் அவளுடன் நின்ற அக்ஷராவோ ஆதர்ஷுக்கு பின்னே நின்றே அபினவ்வைப் பார்த்து வாயை மூடி சிரித்தாள்.

அபிணவ் அவளைப் பார்த்து இளித்து வைக்க அதற்குள் லாவண்யாவின் சத்தம் அவர்கள் கவனத்தை அவள் பக்கம் எடுத்தது.

லாவண்யா ஆதர்ஷைப் பார்த்து,

"திரும்ப ஏதாவது பண்ணன்னு வை... மவனே நீ செத்தடா..." என்றவள் சிதாராவையும் அக்ஷராவையும் இழுத்துக்கொண்டு சென்றாள்.

ஆதர்ஷ் அவள் கூறி விட்டு சென்றது புரியாமல் விளித்தவன் அபினவ்விடம்,

"என்னடா இவ... ஏதேதோ ஒளரிட்டு போறா... பேய் பிசாசு ஏதாவது பிடிச்சிடுச்சோ..." என்க,

அபினவ், "உன் கூட பேசனும்னு சும்மா ஏதாவது பண்ணிருப்பாடா... வா நாமளும் கிளம்பலாம்..." என்றான்.

பின் அவர்களும் அங்கிருந்து சென்றனர்.

ஆனால் உண்மையில் நடந்ததே வேறு.

ஆதர்ஷுக்கு பின்னே நேராக அபினவ்வும் பிரணவ்வும் அமர்ந்திருந்தனர்.

அபினவ் தான் அக்ஷராவை நோக்கி கல் எறிந்தான்.

ஆனால் ஒவ்வொரு முறையும் அவனின் குறி தவறி கல் லாவண்யாவின் மீது பட அப்பாவி ஆதர்ஷ் மாட்டிக் கொண்டான்.

இறுதியாக அடித்த கல் குறி தவறாது அக்ஷராவின் தோளில் பட திரும்பி அவனைப் பார்த்தவள் புன்னகைத்தாள்.

அக்ஷரா தன்னைப் பார்த்து புன்னகைக்கவும் அபினவ்வோ றெக்கை கட்டிப் பறந்தான்.

டென்த் வரை அபினவ்வும் இதே ஊரில் தான் படித்தான்.

அதன் பின் மேற்படிப்புக்காக சென்னை சென்றான்.

பள்ளிக் காலத்திலிருந்தே அவனுக்கு அக்ஷரா மீது காதல்.

அவள் செல்லுமிடமெல்லாம் இவன் இருப்பான்.

ஆனால் அவன் அறியாதது தான் அவன் மீது அக்ஷராவுக்கு ஏற்கனவே இருந்த க்ரஷ்.

யாரிடமும் அவள் அதைப் பற்றி வெளிப்படுத்தியதில்லை.

அடுத்து வந்த நாட்களும் திருவிழா களை கட்ட பிரணவ்வோ சிதாராவையே எப்போதும் பின் தொடர்ந்தான்.

இதனை அபினவ் அவதானித்து பிரணவ்விடம் கேட்க அவனோ,

"எனக்கு அவள பிடிச்சிருக்குடா மச்சி..." என்கவும் பிரணவ் சிதாராவை காதலிக்கிறான் என நினைத்துக் கொண்டான் அபினவ்.

அபினவ் பிரணவ் கூறியதை ஆதர்ஷிடம் கூற,

"இங்க பாருடா... அவன் எனக்கு ஃப்ரென்ட் ஆக முன்னாடியே சித்து என்னோட தங்கச்சி... இவனோட காதலால அவளுக்கு எந்த பிரச்சினையும் வராம பார்த்துக்கோ..." என்றான்.

லாவண்யாவும் அக்ஷராவும் ஒரு ஐஸ் க்ரீமிற்காக சண்டை பிடித்துக் கொண்டிருக்க சிதாரா அவர்களை விட்டு சற்று தள்ளி வர அவளிடம் வந்த பிரணவ்,

"தாரா.. நான் உன் கூட கொஞ்சம் தனியா பேசணும்..." என்று கூற,

அவனது தனிப்பட்ட தாரா என்ற அழைப்பில் அவனையே விழி விரித்து நோக்கினாள் சிதாரா.
 

Nuha Maryam

Moderator
அத்தியாயம் - 11

பிரணவ்வின் தனிப்பட்ட தாரா என்ற அழைப்பில் விழி விரித்து நின்றாள் சிதாரா.

பிரணவ், "எனக்கு உன்ன பிடிச்சிருக்கு தாரா... நீ ரொம்ப அழகா இருக்காய்... ப்ளீஸ் உன் நம்பர் கிடைக்குமா..." என்க,

அவனின் பார்வை ஏற்கனவே சிதாராவை ஏதோ செய்ய,

தன் அண்ணனின நண்பன் தன்னிடம் இவ்வாறு கூறவும் எப்படி எதிர்வினையாற்ற என தெரியாமல் முழிக்க,

அவள் யோசிக்கும் இடைவேளையில் அவள் கரத்திலிருந்த மொபைலைக் கண்டு கொண்ட பிரணவ் அவள் கையிலிருந்து அதனைப் பறித்து அவசரமாக தன் எண்ணுக்கு மிஸ்ட் கால் கொடுத்து விட்டு அவளிடமே ஒப்படைத்தான்.

பிரணவ்வின் இந்த திடீர் செயலில் அதிர்ந்த சிதாரா அவன் விரல் தன் கரத்தை தீண்டவும் அவளுள் நடந்த இரசாயன மாற்றத்தில் அவஸ்தைப்பட்டாள்.

அதற்குள் லாவண்யாவும் அக்ஷராவும் அவர்களை நோக்கி வருவதைக் கண்ட பிரணவ் சிதாராவிடம் ஹஸ்கி வாய்சில்,

"பாய் தாரா... அப்புறம் கால் பண்றேன்..." என்று விட்டு அங்கிருந்து சென்றான்.

அவனின் தீண்டல் ஏற்படுத்திய குறுகுறுப்பு ஒருபக்கம் இருக்க அவனின் செயலில் சிதாரா இன்னும் அதிர்ச்சியில் இருக்க,

அங்கிருந்து வேகமாக செல்லும் பிரணவ்வைப் பார்த்தவாறே அவளிடம் நெருங்கிய தோழிகள் அவளை உலுக்கவும் தான் தன்னிலை அடைந்தாள் சிதாரா.

லாவண்யா, "என்னாச்சி சித்து... ஏன் நீ இப்படி ஷாக் அடிச்ச மாதிரி நிக்கிறாய்... அது அபி அண்ணா கூட சென்னைல இருந்து வந்த அவர் ஃப்ரென்ட் தானே... அவர் உன் கிட்ட தனியா என்ன பேசிட்டு போறாரு..." என்க சிதாராவோ திருதிருவென முழித்தாள்.

"வனி உன் கிட்ட தான் சித்து கேட்டுட்டு இருக்கா... பதில் சொல்லு..." என அக்ஷரா கூற,

சிதாரா, "அவருக்கு என்ன பிடிச்சிருக்குன்னு சொல்லிட்டு போறாருடி..." என்கவும் அதிர்ந்த இருவரும் ஒரே சமயத்தில், "என்ன..." என்றனர்.

பின் அக்ஷரா, "ஹேய்...... ஜாலி... நம்ம சித்துவ ஒருத்தர் பிடிச்சிருக்குன்னு சொல்லிட்டாரு.... சீக்கிரமா ட்ரீட் குடு சித்து..." என கத்த லாவண்யாவும் அதற்கு ஒத்து ஊதினாள்.

அவசரமாக இருவரின் வாயையும் அடைத்த சிதாரா, "கத்தாதுங்கடி லூசுங்களா... நாம ஒன்னும் சிட்டில இல்ல இருக்கோம்.. கிராமத்துல... பெரிசுங்க காதுல விழுந்துச்சி.. அவ்வளவு தான்..." என்கவும் இருவரும் அமைதியாகினர்.

பின், "அவர் தான் பிடிச்சிருக்குன்னு சொன்னார்.. நான் சொல்லல.. அப்போ நான் எதுக்கு ட்ரீட் தரணும்.." என்க,

லாவண்யா, "ஓஹோ.... சமாளிக்கிறீங்களா மேடம்... அப்போ இந்த வெட்கத்துக்கு அர்த்தம் என்னம்மா..." என்க,

வெட்கப்பட்ட சிதாரா, "போடி..." என்று விட்டு அங்கிருந்து ஓடவும்,

"ஹேய்... நில்லுடி..." என கத்திக் கொண்டு அவளை துரத்தினர் அக்ஷரா மற்றும் லாவண்யா.

வீட்டுக்கு வந்த சிதாரா அடிக்கடி மொபைலையே பார்த்த வண்ணம் இருக்க அவள் எதிரப்பார்த்த அழைப்பு தான் வரவில்லை.

மறுநாள் காலை சிதாராவின் மொபைல் ஒலிக்க அழைப்பை ஏற்கவும் மறுபக்கம் பிரணவ், "தாரா..." என்றான்.

சிதாரா அவசரமாக, "ஏன்ங்க நைட்டு கால் பண்ணல..." என்க பிரணவ்விற்கோ ஏதோ சாதித்த உணர்வு.

பிரணவ், "என் காலுக்கு வெய்ட் பண்ணியா தாரா..." என்க,

"ஹ்ம்ம்.." என்ற சத்தம் மட்டும் தான் அவளிடம் வந்தது.

மனதிற்குள் சிரித்த பிரணவ், "உன்ன பாத்ததும் எனக்கு உன்ன ரொம்ப பிடிச்சு போச்சி தாரா... இதை முதல்ல உங்க ஆதர்ஷ் அண்ணா கிட்ட தான் சொன்னேன்... அவருக்கும் சம்மதம்னு சொன்னாரு..." என்றான்.

சிதாரா ஆதர்ஷ் மீதிருக்கும் பாசத்தில் ஆதர்ஷ் என்ன கூறினாலும் செய்வாள் என அறிந்து வைத்திருந்த பிரணவ் அதற்காகத்தான் முதலிலே இதனை சிதாராவிடம் கூறினாள்.

அதே போல் சிதாராவும் அவன் கூறியதை நம்பி ஆதர்ஷ் எப்போதும் தனது விடயத்தில் தவறான முடிவு எடுக்க மாட்டான் என அதன் பின் பிரணவ்வுடன் எந்த தயக்கமுமின்றி பேச ஆரம்பித்தாள்.

திருவிழா முடியும் வரையிலுமே இருவரும் அடிக்கடி சந்தித்துக் கொண்டனர்.

லாவண்யா, அக்ஷரா கூட இதனை அறிந்து சிதாராவை கேலி செய்தனர்.

அபினவ்வோ சிதாராவும் பிரணவ்வை விரும்புவது அறிந்து தன் நண்பனுடன் அவள் இணைந்தால் நண்பர்களுக்குள் பிரிவு வராது என எண்ணி அக்ஷராவை சைட்டடிக்கும் வேலையில் மூழ்கினான்.

ஆதர்ஷ் தான் பிரணவ்விடம் அடிக்கடி, "அவ என் தங்கச்சிடா... அவளுக்கு குழந்தை மனசு... எந்த காரணம் கொண்டும் அவள கஷ்டப்படுத்திராதே.." என்பான்.

பிரணவ்வும் ஒரு தலையசைப்புடன் கடந்து விடுவான்.

பிரணவ்வின் தீண்டல் சிதாராவில் மாற்றத்தை ஏற்படுத்துவதை அறிந்து கொண்டவன் ஒவ்வொரு முறையும் அவளை சந்திக்கும் போதும் அவள் கரத்தை பிடித்து தடவியபடி பேசுவான்.

சிதாராவோ அவன் தீண்டலில் மயங்கி கிடக்கவும் பல தடவை அவளை மேலும் நெருங்க முயற்சித்தான்.

ஆனால் ஏதாவது ஒரு தடங்கல் வந்து அவனால் முடியாமல் போய்விடும்.

திருவிழா முடிய அபினவ், பிரணவ் இருவரும் மீண்டும் சென்னை கிளம்பினர்.

ஆனால் பிரணவ் சிதாராவுடன் எப்போதும் தொடர்பில் இருந்தான்.

நாட்கள் வேகமாகக் கடக்க அக்ஷரா, சிதாரா, லாவண்யா மூவரினதும் இறுதிப் பரீட்சைகளும் முடிந்தன.

பலர் இன்னுமே பெண்களின் படிப்புக்கு வரையறை வைத்து அதன் பின் அவர்களை திருமணம் எனும் பெயரில் வீட்டிலே அடைப்பர்.

அது போலவே சிதாராவின் தந்தையின் சகோதரி ஒருவர் அவளின் பரீட்சை முடிவடைந்ததை அறிந்து குடும்பத்துடன் தன் மகனுக்கு பெண் கேட்டு வந்தனர்.

நல்ல நேரம் சிதாராவின் தாய்க்கு சகோதரர்கள் இருக்கவில்லை.

இல்லையேல் அவர்களும் தட்டைத் தூக்கிக்கொண்டு வந்திருப்பர்.

சிதாராவின் தந்தை சங்கர், தாய் தேவி இருவருமே செய்வதறியாது முழித்தனர்.

பெண் தர முடியாது என்று கூறினாலும் குடும்பத்தில் சச்சரவு ஏற்படும் என இருவரும் சிதாராவிடம் கேட்க,

சிதாராவுக்கோ மேற்படிப்பை முடிக்க ஆசை ஒரு பக்கம் இருக்க பிரணவ்வுடனான காதல் அவளை சம்மதிக்க வைக்கவில்லை.

பெற்றோரிடமும் மேற்படிப்பை முடிக்கும் தன் ஆசையைக் கூற சங்கரும் தன் தமக்கையிடம் சிதாராவின் படிப்பைக் காரணம் காட்டி மறுக்க,

அவரோ நிச்சயத்தை மட்டுமாவது வைத்துக் கொள்ளலாம் என ஒரே பிடியில் நின்றார்.

சிதாராவுக்கோ தன் அத்தையைப் பற்றி நன்றாகவே தெரியும்.

தான் விரும்புவதை எப்பாடுபட்டாவது சாதித்துக் கொள்வார்.

அவர் ஏதாவது செய்து பெற்றோரை சம்மதிக்க வைத்து விடுவார் எனப் பயந்தவள் உடனே பிரணவ்வுக்கு அழைத்து காரணத்தைக் கூறாது மறுநாளே அவளை சந்திக்க வருமாறு கூறினாள்.

மறுநாள் பிரணவ்வும் அபினவ்விடம் கூட கூறாது பூஞ்சோலை கிராமம் வர அவனை சந்திக்க கோவிலுக்குச் சென்றாள் சிதாரா.

பிரணவ்வோ சிதாரா வந்ததும் அவள் கைப்பிடித்து, "எப்படி இருக்காய் தாரா... ஐ மிஸ்ட் யூ சோ மச்.." எனக் கூறி அவளை அணைக்க வர அவனைத் தடுத்த சிதாரா,

"பிரணவ்... எனக்கு பயமா இருக்கு... தயவு செஞ்சி எங்க வீட்டுல வந்து உடனே பேசுங்க..." என்க,

அவள் கூறுவது புரியாது முழித்த பிரணவ்,

"என்னாச்சு தாரா... உங்க வீட்டுல வந்து நான் என்ன பேசனும்..." என்றான்.

சிதாரா, "எங்க வீட்டுல எனக்கு கல்யாணம் பேசுறாங்க பிரணவ்... எங்க அத்த அவங்க பையனுக்கு என்ன கல்யாணம் பண்ணி வைக்க ட்ரை பண்ணுறாங்க.." என்க,

பிரணவ்வோ அவள் கையைத் தடவியபடியே, "இனி கல்யாணம் பண்ணிக்க வேண்டியது தானே..." என்க சிதாரா அதிர்ந்தாள்.

பிரணவ் தன்னைக் கேலி செய்கிறான் என நினைத்த சிதாரா,

"என்ன விளையாடுரீங்களா பிரணவ்... நான் சீரியசா பேசிட்டு இருக்கேன்..." என்கவும்,

"நானும் சீரியசா தான் சொல்றேன் தாராமா..." என்றான்.

"என்ன பிரணவ் சொல்றீங்க... உங்கள காதலிச்சிட்டு நான் எப்படி இன்னொருத்தனுக்கு கழுத்த நீட்டுவேன்... நீங்களும் என்ன காதலிக்கிறீங்கல்ல... அப்போ எங்க வீட்டுல வந்து பேசுங்க.." என அழுதபடி சிதாரா கேட்க,

அவள் கரத்தை விட்ட பிரணவ்,

"நான் எப்போ உன்ன காதலிக்கிறதா சொன்னேன்..." என்றான்.

பிரணவ் தன் கையை விட்டதும் அவனைப் புரியாது பார்த்த சிதாரா அதன் பின் கூறியதை கேட்டு அதிர்ச்சியில் உறைந்தாள்.

சிதாரா, "திருவிழா நேரம் நீங்க தானே என்ன பிடிச்சிருக்கிறதா சொன்னீங்க... அதுக்கப்புறம் பேசும் போது கூட ரொம்ப உரிமையா காதலிக்கிறது போல தானே பேசினீங்க..." என்க,

சத்தமாக சிரித்த பிரணவ்,

"நீ என்ன லூசா தாரா... பிடிச்சிருக்குதுன்னு சொன்னா காதலிக்கிறேன்னு அர்த்தமா... இப்போ கூட எனக்கு உன்ன பிடிச்சிருக்கு தான்... அதுக்காக உன்ன காதலிக்க எல்லாம் இல்ல... பார்க்க ஏதோ அழகா இருந்தாய்... பிடிச்சிருக்குன்னு சொன்னேன்... அவ்வளவு தான்..." என்றான்.

சிதாரா, "இல்ல... எனக்கு தெரியும்... நீங்க பொய் சொல்லுறீங்க... வாங்க இப்பவே போய் வீட்டுல பேசலாம்..." என அழுதுகொண்டே அவன் கைப்பிடித்து இழுக்க,

அவள் கையை உதறியவன், "ஏய்... ஒரு தடவ சொன்னா புரியாதா உனக்கு... அறிவில்லயா... அதான் சொல்றேனே நான் உன்ன காதலிக்கலன்னு... நீ ரொம்ப அழகா இருந்தாய்... உன் அழக நானும் கொஞ்சம் அனுபவிக்கனும்னு தோணுச்சி... அதான் பிடிச்சிருக்குன்னு சொன்னேன்... பல தடவ உன்ன நெருங்க ட்ரை பண்ணேன்... முடியல... அதுக்காக உன்னயெல்லாம் கல்யாணம் பண்ணிக்க முடியுமா...

அழகான பையன் ஒன்னு.. அதுவும் சிட்டில இருந்து வந்தவன்.. பிடிச்சிருக்குன்னு சொன்னதும் உடனே பிடிச்சிக்குவீங்களே... இவ்வளவு மாடர்ன் வேர்ல்ட்ல இன்னுமே பாவாடை தாவணி கட்டி, முடிய கூட எண்ணைய பூசி இழுத்து கட்டிக்கிட்டு இன்னும் அந்தக் காலத்துலயே இருக்குற உனக்கெல்லாம் என்ன கல்யாணம் பண்ணிக்குற தகுதி இருக்கா... நான் எங்கயாவது போறன்னா கூட உன்ன கூட்டிட்டு போய் என் பக்கத்துல நிற்க வெச்சா எனக்கு தான் அசிங்கம்... உனக்கும் எனக்கும் ஏணி வெச்சா கூட எட்டாது...

சாதாரண கிராமத்துக்காரி நீ... உனக்கு சிட்டி வாழ்க்கை கேக்குதோ... உன்னயெல்லாம் அனுபவிச்சிட்டு தூக்கி போட மட்டும் தான் நல்லா இருக்கும்... கல்யாணம் பண்ணி வாழ்க்கை பூரா குப்பை கொட்ட முடியாது... உனக்கேத்த கிராமத்துப் பையனா பாத்து கல்யாணம் பண்ணிக்கிட்டு பத்து பதினஞ்சி குழந்தை பெத்து போட்டு அத வளத்துட்டு வீட்டோட இரு... அத விட்டுட்டு சிட்டி வாழ்க்கை எல்லாம் ஆசப்படாதே..." என்றான்.

பிரணவ்வின் வார்த்தைகள் சிதாராவின் மனதை சுக்குநூறாக உடைத்தது.

பின், "வரட்டா பேபி..." என அவள் கன்னத்தை கிள்ளியவன் செல்லப் பார்க்க பிரணவ்வின் காலில் விழுந்த சிதாரா அவன் காலைக் கட்டிக் கொண்டு,

"தயவு செஞ்சி என்ன விட்டு போய்டாதீங்க... என்னால நீங்க இல்லாம வாழ முடியாது... உங்கள தவிர என்னால வேற யாரையும் கல்யாணம் பண்ணிக்க முடியாது... ப்ளீஸ்... உங்களுக்கு பிடிச்ச மாதிரி கூட என்ன நான் மாத்திக்குறேன்... என்ன விட்டு மட்டும் போக வேணாம்..." என அழுது கெஞ்ச,

"ச்சீ... போடி அந்தப்பக்கம்.." என அவளை உதறி விட்டுச் சென்றான் பிரணவ்.

அவன் சென்ற பின்னும் அவன் கூறிய வார்த்தைகளையே நினைத்து அழுதவள் அப்படியே மயங்கி சரிந்தாள்.

சிதாராவைத் தேடி லாவண்யாவும் அக்ஷராவும் அவள் வீட்டிற்குச் செல்ல அவள் கோவிலுக்கு சென்றுள்ளதாக தேவி கூற இருவரும் கோவிலுக்குச் சென்றனர்.

கோவில் குளத்தின் அருகில் சிதாரா விழுந்து கிடப்பதைக் கண்டவர்கள் அவசரமாக அவளிடம் ஓட அவளோ சுயநினைவின்றிக் கிடந்தாள்.

லாவண்யா அவள் முகத்தில் தண்ணீர் தெளிக்கவும் மெதுவாகக் கண் விழித்த சிதாரா,

மீண்டும் பிரணவ்வின் வார்த்தைகள் நினைவு வர இருவரையும் கட்டிப்பிடித்து கதறினாள்.

தோழிகள் இருவருமே சிதாராவின் அழுகைக்கு காரணம் புரியாது அவளிடமே கேட்க சிதாராவிடமிருந்து அழுகை மட்டுமே வெளி வந்தது.

அக்ஷரா, "என்னாச்சு சித்து... ஏன் இப்படி அழுதுட்டு இருக்காய்..." என்க,

"எல்லாமே முடிஞ்சி போச்சு அச்சு... எல்லாமே முடிஞ்சி போச்சு..." எனக் கூறி அழுதாள் சிதாரா.

லாவண்யா புரியாமல், "என்ன முடிஞ்சி போச்சுடி... தெளிவா சொல்லேன்.." என அதட்ட,

சிதாரா, "போய்ட்டான்... மொத்தமா என்ன விட்டு போய்ட்டான்..." என்க இருவரும் அதிர்ந்தனர்.

அக்ஷரா, "பிரணவ் அண்ணன பத்தியா சொல்றாய்... என்னாச்சுடி..." என்க ஆம் என தலையசைத்த சிதாரா வேறு எதுவும் கூறாது அழுதாள்.

லாவண்யா அக்ஷராவிடம், "இப்படி கேட்டா இவ எதுவும் சொல்ல மாட்டாள்.. அழுதுட்டே தான் இருப்பா... நான் ஆதுவ வர சொல்றேன்..." என்றவள் உடனே ஆதர்ஷுக்கு அழைத்து தகவல் தெரிவித்தாள்.

சற்று நேரத்தில் ஆதர்ஷ் வரவும் அவன் கண்டது அழுது கொண்டிருந்த சிதாராவைத் தான்.

ஆதர்ஷ், "என்னாச்சு நியா.. ஏன் சித்து அழுதுட்டு இருக்கா.." என்க,

லாவண்யா அவனிடம் விஷயத்தை கூறியவள், "வேற என்ன கேட்டாலும் சொல்லாம அழுதுட்டே இருக்கா ஆது... அதான் உன்ன கூப்பிட்டோம்.." என்றாள்.

ஆதர்ஷ், "சித்தும்மா.. என்னாச்சிடா... அண்ணன் கிட்ட சொல்லு... பிரணவ் உன்ன ஏதாவது சொன்னானா.." என்றான்.

தன்னைப் போல் தான் ஆதர்ஷும் பிரணவ் பிடித்திருப்பதாக கூறியதை காதலிப்பதாக எண்ணிக்கொண்டு சம்மதம் கொடுத்துள்ளான் எனப் புரிந்து கொண்ட சிதாரா,

தற்போது அவள் உண்மையைக் கூறினால் நிச்சயம் ஆதர்ஷுக்கு குற்றவுணர்வாக இருக்கும் என,

"பிரணவ் மேல எந்தத் தப்பும் இல்லண்ணா... நான் தான் அவன சரியா புரிஞ்சிக்கல..." என பாதி உண்மை பாதி பொய்யாக கூறினாள்.

"நான் வேணா பிரணவ் கிட்ட பேசி பார்க்கவா சித்தும்மா.." என ஆதர்ஷ் கேட்க அவனை அவசரமாகத் தடுத்த சிதாரா,

"இல்ல வேணாம் அண்ணா.. அவர எதுவும் கேக்காதீங்க... எங்களுக்குள்ள எல்லாம் முடிஞ்சி போய்டுச்சு அண்ணா... நான் தான் அவர புரிஞ்சிக்கல... என்ன வேணாம்னு சொல்லிட்டு போய்ட்டான்.. ப்ளீஸ் அண்ணா.. என்னால ஃப்ரெண்ட்ஸ் உங்க ரெண்டு பேருக்கும் இடைலயும் எந்த பிரச்சினையும் வர வேணாம் அண்ணா... கொஞ்ச நாள் போனா நானே சரி ஆகிடுவேன்..." என்றாள்.

அதன் பின் அவர்களும் அவளை எதுவும் கேட்கவில்லை.

பிரணவ் பேசிய எதையுமே சிதாரா யாரிடமும் கூறவில்லை.

இருவருக்குள்ளும் ஏதோ சிறிய கருத்து வேறுபாடு என நினைத்து அவர்களும் விட்டனர்.

அடுத்து வந்த நாட்களில் சிதாராவிடம் இருந்த பழைய உற்சாகம் முழுவதும் குறைந்திருந்தது.

ஆதர்ஷ் அபினவ்விடம் கூற அபினவ் பிரணவ்விடம் கேட்டதற்கு அவன்,

"ரெண்டு பேருக்கும் செட் ஆகல.." என்று மட்டும் கூறினான்.

ஒரு மாதத்திற்கு மேல் கடந்திருக்க மூவரின் பரீட்சை முடிவுகளும் வந்திருந்தன.

மூவருமே நல்ல மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைந்திருந்தனர்.

ஒரு வாரம் கழித்து திடீரென பெற்றோரிடம் வந்து நின்ற சிதாரா மேற்படிப்பை வெளிநாட்டில் படிக்க வேண்டும் என்று கூறினாள்.

பெற்றோர், தோழிகள் என அனைவரும் அதிர்ந்து ஏன் எனக் கேட்டதற்கு,

"சின்ன வயசுல இருந்தே அப்ரோட்ல ஹயர் ஸ்டடீஸ் முடிக்கனும்னு ஆசை... அதான்.." என்றாள்.

அதன் பின் நியுயார்க் ஃபோர்தம் யுனிவர்சிட்டியில் சங்கர் சிதாராவுக்கு அட்மிஷன் வாங்க,

பெற்றோர், தோழிகள் என அனைவரிடமும் விடை பெற்று தன் எதிர்காலத்துக்காக வேண்டி விமானத்தில் நியுயார்க் பறந்தாள் சிதாரா.
 

Nuha Maryam

Moderator
அத்தியாயம் - 12

தன் கை மீதிருந்த சிதாராவின் கையின் அழுத்தத்திலே அவள் எவ்வளவு உணர்ச்சிப் பிடியில் சிக்கித் தவிக்கிறாள் என ஆர்யானுக்குப் புரிந்தது.

அவள் கரத்தை மறு கையால் அழுத்தியவன்,

"கூல் மினி... கூல்... இப்போ நான் உன் பக்கத்துல இருக்கேனே... சோ நீ எதை பத்தியும் திங்க் பண்ணாதே... இப்போ உன் மனசுல எதுவும் இல்ல... எல்லாம் தூக்கிப் போட்டுட்டேன்னு நினை... புரியுதா..." என ஆர்யான் கூற சரி என்பதாய் தலையசைத்தாள் சிதாரா.

ஆர்யான், "நீ ரெஸ்ட் எடுத்துக்கோ மினி... லஞ்ச் முடிச்சிட்டு நான் உன்ன வீட்டுல ட்ராப் பண்றேன்..." என்று விட்டு அறையிலிருந்து வெளியேறினான்.

பகல் உணவை முடித்துக் கொண்டு இருவரும் புறப்பட்டனர்.

சிதாரா கிளம்பும் முன் ஆர்யானின் தாய் அகிலா அவள் கையில் அழகான வேலைப்பாட்டுடன் கூடிய பட்டு சேலை ஒன்றை வழங்க சிதாரா புரியாமல் முழித்தாள்.

சிதாரா, "எதுக்கு அத்த இந்த சாரி... " என்க,

"முதன் முதலா எங்க வீட்டுக்கு வந்திருக்காய்... உன்ன வெறும் கையோட அனுப்ப முடியுமா... அதான் இந்த அத்தயோட ஒரு சின்ன பரிசு..." என அகிலா கூற,

அதனை நன்றி கூறி புன்னகையுடன் பெற்றுக் கொண்டாள்.

அதன் பின் இருவருமே கிளம்பினர்.

சிதாராவின் வீட்டை அடையும் வரையுமே அப் பயணம் அமைதியாகக் கழிந்தது.

இருவரும் தத்தம் சிந்தனையில் மூழ்கிக் கிடந்தனர்.

சிதாராவின் வீட்டில் ஆர்யான் காரை நிறுத்தியது கூட அறியாமல் சிதாரா சிந்தனை வசப்பட்டிருக்க,

ஆர்யான் அவள் தோள் தொட்டு உலுக்கவும் தூக்கத்திலிருந்து விழித்தது போல், "ஆஹ்... " என சிதாரா விளிக்க,

"வீடு வந்திருச்சி மினி..." என்றான் ஆர்யான்.

அப்போது தான் சுற்றும் பார்த்தவள் எதுவும் கூறாது காரிலிருந்து இறங்கி வீட்டை நோக்கி நடந்தாள்.

ஆர்யான் காரில் அமர்ந்து கொண்டு அவள் செல்வதையே பார்த்துக் கொண்டிருக்க சிதாராவின் நடை தடைப்பட்டது.

மீண்டும் திரும்பி வந்தவள் ஆர்யானிடம்,

"சாரி ஜிராஃபி... ஏதோ யோசனைல இருந்தேன்.. வீட்டுக்கு வந்துட்டு போ... அம்மா கிட்ட நீ வரதா சொல்லி இருந்தேன்..." என்க,

ஆர்யான், "இல்ல மினி... நீ போ... ஆல்ரெடி ரொம்ப லேட் ஆகிடுச்சு... நீ வேற டயர்டா இருப்பாய்... போய் தூங்கு... நான் இங்க ஃப்ரென்ட் ஒருத்தன மீட் பண்ண வேண்டி இருக்கு... ஆன்ட்டி கிட்ட சொல்லு வேற ஒரு நாள் கண்டிப்பா வரேன்னு.." என்க சரி எனத் தலையசைத்தாள்.

சிதாரா செல்ல, "மினி..." என ஆர்யான் அழைக்கவும் அவள் திரும்பிப் பார்க்க,

"நான் சொன்னதெல்லாம் ஞாபகம் இருக்கு தானே... " என ஆர்யான் கேட்க,

அவனைப் பார்த்து புன்னகைத்த சிதாரா ஆம் எனத் தலையாட்டினாள்.

ஆர்யான் அவளைப் பார்த்து புன்னகையுடன், "ஓக்கே.. டேக் கேர்... பாய் மினி..." என்றவன் கிளம்பினான்.

ஆர்யானின் கார் மறையும் வரை அதனையே பார்த்துக் கொண்டிருந்தாள் சிதாரா.

வெய்யோனின் வருகையால் தண்மதி அவள் மேகக் கூட்டங்களிடையே ஒளிந்து கொள்ள,

வெய்யோன் தன் ஒளிக்கதிர்களால் பூமித்தாயை அணைத்துக் கொள்ள அந் நாள் அழகாய் விடிந்தது.

மணி காலை எட்டைக் கடந்திருந்தது.

காலை சமையலை முடித்தவர் வேகமாக மாடி ஏறிச் சென்று இரவு சாத்தியது போலவே இன்னும் சாத்திக் கிடந்த கதவைத் திறந்தவர்,

"மணி எட்டாகிடுச்சி.... ஆனா இவ இன்னும் எந்திரிக்கல... இன்னொரு வீட்டுல வாழப் போற பொண்ணு இப்படியா விடிய விடிய இழுத்துப் போத்திட்டு தூங்குறது... பாக்குறவங்க என்ன தான் கதை சொல்லுவாங்க... எவ்வளவு நேரமா நானும் கத்திட்டு இருக்கேன்... கண்ண தொறக்குறாளா பாரு.... எல்லாம் இவங்க அப்பாவ சொல்லனும்... ரொம்ப தான் இடம் கொடுக்குறாரு..." என காலையிலேயே மகளுடன் சேர்த்து கணவனையும் அர்ச்சித்தவர் சாக்ஷாத் சிதாராவின் தாய் தேவி தான்.

வீட்டினுள் நுழைந்ததிலிருந்து பெற்றோரின் பாச மழையை அனுபவித்தவள் ஏதோ மனதிலுள்ள பெரிய பாரம் இறங்கியது போல் பல நாட்கள் கழித்து நிம்மதியாக கண்ணயர்ந்தாள்.

எவ்வளவு வசதியான சொகுசான இடத்தில் உறங்கினாலும் தன் வீட்டில் உறங்குவது போல வருமா...

தேவியின் அர்ச்சனைகளை ஏதோ இசை கேட்பது போல் கேட்டுக் கொண்டு தன் பாட்டிற்கு தூங்கினாள் சிதாரா.

எட்டு முப்பது போல் எழுந்து கீழே வர அவள் தந்தை சங்கர் வேலைக்கு செல்ல தயாராகி இருந்தார்.

"மா... காஃபி..." எனக் கத்திக் கொண்டு வந்தவள் தந்தையைக் கண்டு,

"குட் மார்னிங்பா...." என்று அவரை அனைத்துக் கொண்டாள்.

"குட் மார்னிங் சித்துமா... நைட் நல்லா தூங்கினியாடா..." என சங்கர் கேட்கவும் அவரை விட்டு விலகியவள்,

"எங்க நல்லா தூங்க... அதான் உங்க தர்ம பத்தினி காலையிலேயே ஒடஞ்சி போன ரேடியோவ ஆன் பண்ணிட்டாங்களே..." என பொய்யாக அலுத்துக் கொண்டாள் சிதாரா.

கையில் தோசைக் கரண்டியைத் தூக்கிக் கொண்டு தேவி கோவமாக வர அவசரமாக தந்தையின் பின்னால் மறைந்து கொண்டாள் சிதாரா.

"ஆமா... விடிய விடிய தூங்கிட்டு பேச்ச பாரு... மத்த பொண்ணுங்கள பாரு... காலையிலையே நேர காலத்தோட எழுந்து தலைக்கு குளிச்சி வாசல் தெளிச்சி கோலம் போட்டுட்டு வீட்டு வேலைல எல்லாம் அவங்க அம்மாக்கு ஒத்தாசையா இருப்பாங்க... நீயும் இருக்காய் பாரு... பசங்க கூட இந்த நேரத்துக்கு எந்திரிச்சி இருப்பாங்க.... படிக்க போறேன்னு சொல்லிட்டு படிச்சிட்டு வந்தியோ இல்ல நல்லா தூங்க கத்துக்கிட்டு வந்தியோ தெரியல..." என சிதாராவைக் கடிந்தார் தேவி.

சிதாரா, "அப்பா.... பாருங்கப்பா அம்மாவ... சும்மா திட்டிக்கிட்டே இருக்காங்க... " என சிணுங்கவும் தேவி மீண்டும் ஏதோ கூற வர அதற்குள் அவரைத் தடுத்த சங்கர்,

"என்ன தேவிமா நீ.... பொண்ணு எவ்வளவு நாள் கழிச்சி வீட்டுக்கு வந்திருக்கா... அவளுக்கு பிடிச்சதா பாத்து சமச்சி போடாம அவள திட்டிட்டு இருக்காய்... என் பொண்ணு ஒன்னும் அவ்வளவு சோம்பேரி எல்லாம் இல்ல... நியுயார்க்ல இருக்கும் போது எப்பவும் நேரத்தோட எந்திரிச்சி படிப்பாள்... ஏதோ வீட்டுக்கு வந்திருக்குற சந்தோஷத்துல கொஞ்சம் அசந்து தூங்கிட்டா... அதுக்கு எதுக்கு மத்த பொண்ணுங்க கூட ஒப்பிட்டு இவ்வளவு திட்டுற... என் சித்துக்குட்டி எப்போதுமே ஸ்பெஷல் தான்... யாரப் போலவும் இல்ல... " என சிதாராவுக்கு ஆதரவாக சங்கர் பேச,

அவர் பின் நின்றிருந்த சிதாரா தேவியைப் பார்த்து பழிப்புக் காட்டினாள்.

தேவி சிதாராவை முறைத்து விட்டு,

"நீங்க இருக்கும் வர இவள திருத்த முடியாது... அப்பாவும் பொண்ணுமா சேர்ந்து ஏதோ பண்ணுங்க... நாளைக்கு கல்யாணம் பண்ணிக்கிட்டு போற வீட்டுல இவ மாமியார் நல்லா வேலை வாங்குவாங்கல்ல... அப்போ இந்த அம்மாவோட அருமை புரியும்..." என்று விட்டு சென்றார்.

தேவி சென்றதும் சிதாரா உதட்டை சுழிக்க,

சங்கர், "அவ கெடக்குறா... நீ கண்டுக்காதே சித்தும்மா... என் பொண்ணுக்கு அவள தங்கத்தட்டுல வெச்சி தாங்குறது போல ஒரு சம்பந்தம் தான் நான் தேடி கொண்டு வருவேன்... அங்க அவ ராணி மாதிரி வாழ்வா..." என்று அவள் தலையை வருடினார்.

பின், "சரி சித்து... நான் வேலைக்கு கிளம்புறேன்... இன்னெக்கி சீக்கிரமாவே வீட்டுக்கு வந்துருவேன்... என் பொண்ணு கூட டைம் ஸ்பென்ட் பண்ணனுமே..." என்றவர் தேவி, சிதாரா இருவரிடமும் சொல்லிக் கொண்டு கிளம்பினார்.

சங்கர் சென்றதும் குளித்து தயாராகியவள் முதல் வேலையாக ஆர்யானுக்கு அழைத்தாள்.

பல தடவை முயற்சி செய்தும் அழைப்பு ஏற்கப்படவில்லை.

சிதாரா, "என்னாச்சி இந்த ஜிராஃபிக்கு... கால் பண்ணா எப்போதும் ஃபர்ஸ்ட் ரிங்லயே எடுத்துருவானே... ஆஹ்... ஒரு வேலை மயூ கிட்ட பேசிட்டு இருக்கானோ தெரியல... அன்னக்கி இருந்த டென்ஷன்ல மயூ என்ன சொன்னாள்னும் கேக்க முடியல..." என்றாள்.

பின் லாவண்யா, அக்ஷரா இருவருடனும் சிறிது நேரம் பேசி விட்டு வைத்தாள்.

சொன்னது போலவே அன்று சீக்கிரமாகவே வீட்டுக்கு வந்தார் சங்கர்.

நீண்ட நாட்களின் பின் சிதாரா வீட்டுக்கு வந்துள்ளதால் சங்கர் மனைவி, மகள் இருவரையும் அழைத்துக் கொண்டு இரவுணவுக்காக அருகிலுள்ள ரெஸ்டூரன்ட் சென்றார்.

அன்று முழுவதுமே சிதாரா மகிழ்ச்சியாக இருந்தாள்.

தங்களது மகள் பழையபடி கிடைத்ததில் சங்கர், தேவிக்குமே அளவில்லா சந்தோஷம்.

மறுநாள் சிதாரா தோள் பையையும் மாட்டிக் கொண்டு எங்கோ வெளியே செல்லத் தயாராகிக் கொண்டிருந்தாள்.

அங்கு வந்த தேவி, "எங்க கிளம்பிட்ட சித்து..." என்க,

"வெளிய சின்ன வேலையொன்னு இருக்குமா... சீக்கிரம் முடிச்சிட்டு வரேன்..." என்றாள் சிதாரா.

தேவி, "கண்டிப்பா போய் தான் ஆகனுமா சித்து... இன்னெக்கி ஈவ்னிங் உன்ன பொண்ணு பாக்க வராங்க..." என்கவும் அதிர்ந்த சிதாரா,

"மா.... என்ன சொல்றீங்க... யாரக் கேட்டு இப்போ பொண்ணு பாக்க வர சொன்னீங்க... என் கிட்ட ஒரு வார்த்த கூட சொல்லல.." என கோவமாகக் கேட்டாள்.

"பெத்தவங்களுக்கு தெரியாதா தன் பொண்ணுக்கு எது நல்லது கெட்டதுன்னு... அதுவுமில்லாம இது நல்ல சம்பந்தம் ஒன்னு..." என்றார் தேவி.

சிதாரா, "ஐயோ ஏன்மா புரிஞ்சிக்க மாட்டேங்குறீங்க... எனக்கு இப்போதே கல்யாணம் வேணாம்... நான் இன்னும் படிக்கனும்..." என்க,

தேவி, "யாரு இப்போ உனக்கு படிக்க வேணாம்னு சொன்னது... ஜஸ்ட் இப்போ பொண்ணு பார்க்க தானே வராங்க... நீ வந்து சும்மா நின்னா போதும்..." என்றார்.

"என்னால அப்படி யாரு முன்னாடியும் போய் பொம்மை மாதிரி நின்னுட்டு இருக்க முடியாது.." என சிதாராவும் பதிலுக்கு பேச,

அம்மா, மகள் இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கும் சத்தம் கேட்டு அங்கு வந்த சங்கர்,

"தேவி... நீ போ... நான் சித்து கிட்ட பேசுறேன்..." என்கவும் அங்கிருந்து அகன்றார் தேவி.

சிதாரா, "ஏன்பா இப்போ பொண்ணு பாக்க வர சொல்லி இருக்கீங்க... நான் உங்களுக்கு அவ்வளவு பாரமா இருக்கேனா..." என்கவும்,

"என்ன சித்துமா இப்படி எல்லாம் பேசுறாய்... நீ எங்களுக்கு எப்படிமா பாரமா இருப்பாய்... உனக்கு விருப்பம் இல்லன்னா வர வேணாம்னு சொல்றேன்... ஆனா தங்கமான பையன்மா.. குடும்பமும் ரொம்ப நல்ல மரியாதையான குடும்பம்... விசாரிச்சி பார்த்தப்போ எல்லாரும் நல்ல விதமா தான் சொன்னாங்க... எங்களுக்கும் பையன ரொம்ப பிடிச்சிருக்கு... நீயும் பையன் கூட பேசி பாரு... பிடிச்சிருந்தா பேசி முடிக்கலாம்... இப்பவே கல்யாணம் பண்ணனும்னு இல்ல... உனக்கு சம்மதம்னா மட்டும் தான் மேற்கொண்டு பேசுவோம்... இதுக்கு மேலயும் உனக்கு இஷ்டமில்லன்னா பரவாயில்லமா... எங்களுக்கு உன் சந்தோஷம் தான் முக்கியம்..." என்றார் சங்கர்‌.

தனது பெற்றோர் தன்னிடம் இவ்வளவு கெஞ்சுவது பிடிக்காமல் விருப்பமே இல்லாமல் சம்மதித்தாள் சிதாரா.

சங்கர் சென்றதும் கோவமாக தோள்ப் பையை கழற்றி கட்டிலில் வீசியவள் இது பற்றி ஆர்யானுக்கு தெரிவிக்க அழைக்க இப்போதும் பிஸி என்றே காட்டியது.

கடுப்பாகிய சிதாரா, "உனக்கு காதல் வந்தா ஃப்ரென்ட கூட மறந்து போயிடுமே ஜிராஃபி... மினி மினினு வருவாய்ல... மவனே அப்போ இருக்கு உனக்கு...." என ஆர்யானைத் திட்டினாள்.

மாலை நேரத்தை நெருங்க சிதாராவின் வீட்டில் பெரிய கலவரமே நடந்தது.

வேறென்னவாக இருக்கும்... பெண் பார்க்கும் படலத்திற்காக சிதாரா என்ன அணிய வேண்டும் என்று தான் தாய் மகள் இருவரும் வாதிட்டுக் கொண்டிருந்தனர்.

தேவி ஒன்றைக் காட்டினால் சிதாரா அதற்கு ஏதாவது குறை கூறுவாள்.

சிதாரா ஒன்றைக் காட்டினால் தேவி அதை மறுப்பார்.

இப்படியே ஒவ்வொன்றாக மறுத்துக் கொண்டிருக்க தேவியின் கண்களில் பட்டது ஆர்யானின் தாய் அகிலா கொடுத்த சேலை.

தேவி, "இதென்ன புதுசா இருக்கு சித்து... இது ரொம்ப அழகா இருக்கு... நீ வேண்ணா இதையே போட்டுக்கோ.." என்க,

அவர் காட்டிய சேலையைக் கண்ட சிதாராவின் கண்கள் மலர்ந்தன.

"வாவ்மா... இது நல்லா இருக்கு... இது என் ஃப்ரென்டோட அம்மா எனக்கு கிப்ட் பண்ண சேரி... நான் இதையே போட்டுக்குறேன்..." என்ற சிதாரா அதை உடுத்தி சாதாரண ஒப்பனையுடன் எளிய ஆபரணங்கள் அணிந்து தயாராகினாள்.

அவள் தயாராகி முடிய சரியாக அங்கு வந்த தேவி,

"மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வந்துட்டாங்க சித்து... நீ ரெடி ஆகிட்டேல்ல..." என்றவர் சிதாராவைக் கண்டதும் தன்னையறியாமல் அவர் கண்கள் கலங்கின.

சிதாராவை நெருங்கியவர் அவள் நெற்றி வழித்து முத்தமிட்டு,

"ரொம்ப அழகா இருக்காய் சித்து... என் கண்ணே பட்டுடும்... என் பொண்ணுக்கும் இப்போ கல்யாண வயசாகிடுச்சுன்னு என்னால நம்பவே முடியல..." என்றார்.

தாயின் வார்த்தையில் மகிழ்ந்த சிதாரா பின் அவரை சீண்டும் விதமாக,

"எனக்கொன்னும் இன்னும் கல்யாண வயசு ஆகல... இது ஜஸ்ட் உங்க ரெண்டு பேருக்காகவும் வந்து நிக்க போறேன்... எப்படியும் மாப்பிள்ளை வீட்டுக்காரங்க கிட்ட பிடிக்கலன்னு தானே சொல்ல போறேன்..." எனத் துடுக்காக பேச,

அவள் தலையில் தட்டிய தேவி,

"இப்பவாச்சும் பொண்ணு மாதிரி நடந்துக்குரியா பாரு... வாய்க்கு வாய் பேசிக்கிட்டு... கொஞ்சம் வெட்கப்பட்டு தலை குனிஞ்சி நடக்குறது போல நடிக்கவாவது செய்..." என்றவர் அவளை கீழே அழைத்துக் கொண்டு சென்றார்.

சிதாராவின் கையில் காஃபி ட்ரேயை ஒப்படைக்க,

அவள் தேவி சொன்னது போல் தலை குனிந்த படி ஒவ்வொருவருக்கும் கொடுக்க,

இறுதியில் மாப்பிள்ளையாக வந்திருந்தவனுக்கு காஃபியை நீட்டும் போது அவன் முகம் பார்த்தவள் அதிர்ந்தாள்.
 

Nuha Maryam

Moderator
அத்தியாயம் - 13

தன் முன்னே இருந்தவனை அதிர்ச்சியுடன் பார்த்தாள் சிதாரா.

"என்ன கண்ணு இப்படி பாக்குற... மாப்பிள்ளைய அவ்வளவு பிடிச்சிருக்கா என்ன..." என சிதாராவைப் பார்த்துக் கண்ணடித்துக் கேட்டது சாக்ஷாத் ஆர்யான் தான்.

ஆர்யான் தான் தன் பெற்றோருடன் சிதாராவைப் பெண் கேட்டு வந்திருந்தான்.

ஆர்யானின் கேள்வியில் தன்னால் இயன்ற மட்டும் அவனை முறைத்த சிதாரா,

காஃபியை அவனிடம் கொடுக்காமல், "மா... இவருக்கு எதுவும் வேணாமாம் மா... வயிரு சரி இல்லயாம்..." என்று விட்டு ட்ரேயுடன் எடுத்து சென்றாள்.

ஆர்யானோ கைக்கு வந்தது வாய்க்கு எட்டாமல் போனதே என வருத்தப்பட்டான்.

அன்று சிதாராவை அவள் வீட்டில் விட்டவன் சொன்னபடியே தன் நண்பன் ஒருவனை சந்திக்க சென்றான்.

அன்று இரவு நண்பனின் வீட்டில் தங்கியவன் ரஞ்சித்துக்கு கால் செய்து விடிந்தவுடன் அகிலாவையும் அழைத்துக் கொண்டு கோயம்புத்தூர் வரக் கூறினான்.

மறுநாள் காலை சங்கர் வேலை செய்யும் பேங்கிற்கு சென்று அவரை சந்தித்தான்.

சங்கர், "யாருப்பா நீ... ஏதாவது லோன் விஷயமா வந்திருக்கியா..." என்க,

"இல்ல அங்கிள்... பர்சனல் விஷயமா தான் உங்கள பார்க்க வந்திருக்கேன்..." என ஆர்யான் கூறவும் புருவ முடிச்சுடன் அவனை ஏறிட்டான் சங்கர்.

ஆர்யான், "அங்கிள் என் பேரு ஆர்யான்... நானும் ஃபோர்தம் யுனிவர்சிட்டில தான் படிச்சேன்... உங்க பொண்ணு சிதாராவோட சீனியர்... இப்போ அங்கயே ஒரு கம்பனில வர்க் பண்ணுறேன். எங்க அப்பா ரஞ்சித். AR GROUPS OF COMPANIES எம்.டி." என்று நிறுத்த,

சங்கர், "இதெல்லாம் எதுக்குப்பா என் கிட்ட சொல்லிட்டு இருக்க.." என்றார்.

"அங்கிள் நான் இப்போ சொல்ல போற விஷயம் உங்களுக்கு அதிர்ச்சியா இருக்கலாம்.. ப்ளீஸ் டென்ஷன் ஆகாதீங்க..." என்ற ஆர்யான் சிதாரா பிரணவ்வைக் காதலித்தது முதல் தற்போது அவளின் உடல்நிலை வரை கூற சங்கர் அதிர்ந்தார்.

சங்கர், "என்ன தம்பி சொல்றீங்க... என் பொண்ணுக்கு இவ்வளவு பிரச்சினை இருக்கா... அவ எங்க கிட்ட கூட இதை பத்தி சொல்லல... எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை... யாராவது பெரிய டாக்டர் கிட்ட காட்டி எப்படியாவது என் பொண்ண நான் குணப்படுத்துவேன்..." என பதட்டத்துடன் கூற,

"அங்கிள் டென்ஷனாக வேணாம்... முதல்ல இந்த தண்ணிய குடிங்க..." என்ற ஆர்யான்,

"இங்க செலவ பத்தி பிரச்சினை இல்ல அங்கிள்.... பட் இது உங்க பொண்ணோட மனசு சம்பந்தப்பட்டது... எந்த ட்ரீட்மெண்ட் பண்ணினாலும் பர்மனன்ட்டா அதை கியுர் பண்ண முடியாது..." என்றான்.

சங்கர், "அப்போ இதுக்கு வேற என்னப்பா வழி.." எனக் கேட்க சற்று அமைதி காத்த ஆர்யான்,

"எனக்கு மினிய கல்யாணம் பண்ணி கொடுங்க அங்கிள்... எப்படியும் அவ யாரையாவது கல்யாணம் பண்ணி தான் ஆகனும்... பட் அவ இருக்குற நிலமைல யாராலையும் அவள ஸ்மூத்தா ஹேன்டில் பண்ண முடியாது... அது மினிய தான் பாதிக்கும்... அவள் என்னோட க்ளோஸ் ஃப்ரென்ட்... எனக்கு அவள ரொம்ப பிடிக்கும்... நிச்சயமா அவ மனசுல இருக்குற எல்லா பிரச்சினையையும் நான் சரி பண்ணுவேன்... எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு அங்கிள்... ஆனா இதை பண்ண நான் அவ கூட இருக்கனும்... திரும்ப அந்த பிரணவ்வால மினிக்கு எந்த பிரச்சினையும் வரக் கூடாது... என்ன நம்புங்க அங்கிள்..." என்றான்.

ஆர்யான் கூறியதைக் கேட்டு யோசித்த சங்கர்,

"ஆனா தம்பி... உங்க பேரன்ட்ஸ் இதுக்கு ஒத்துக்குவாங்களா... சித்துக்கு இப்படி ஒரு பிரச்சினை இருக்குன்னு தெரிஞ்சா அவங்க இந்த கல்யாணத்துக்கு சம்மதிப்பாங்களா..." என்க,

"அதப் பத்தி நீங்க கவல பட வேணாம் அங்கிள்... அப்பா அம்மாக்கு ஆல்ரெடி மினிய தெரியும்... அவங்களுக்கும் இந்த சம்பந்தத்துல இஷ்டம்... அவங்க இன்னைக்கே இங்க வருவாங்க... நான் நாளைக்கு அவங்கள கூட்டிக்கிட்டு உங்க வீட்டுக்கு வரேன் அங்கிள்..." என ஆர்யான் கூறவும் சங்கர் சம்மதித்தார்.

அதன் பின் அகிலா ரஞ்சித் இருவரும் கோயம்புத்தூர் வர அவர்களிடம் விஷயத்தைக் கூறி மறுநாளே சிதாராவின் வீட்டுக்கு பெண் கேட்டு வந்தனர்.

சிதாரா கையிலிருந்த ட்ரேயை சமையலறை மேடையில் வைத்தவள் கோவமாக அங்கிருந்து மாடிக்கு சென்றாள்.

சங்கர், தேவி இருவரிடமும் அனுமதி பெற்றுக் கொண்டு ஆர்யானும் அவளைப் பின் தொடர்ந்தான்.

மாடிக்குச் சென்ற சிதாரா கோவமாக அங்குமிங்கும் நடந்தவள் ஆர்யான் வரவும்,

"என்ன எனக்கு வாழ்க்கை பிச்ச போடுறியா..." எனக் கோவமாகக் கேட்க,

"ச்சீச்சீ... எனக்கென்ன லூசா..." என ஆர்யான் கலாய்க்க,

அவனை முறைத்த சிதாரா, "ஏன் ஜிராஃபி இப்படி பண்ணுற.... என் ஒருத்தியால வீணா எதுக்கு உன் வாழ்க்கையையும் பாழாக்குற..." என வேதனையுடன் கேட்டாள்.

அவள் அருகில் வந்த ஆர்யான் அவள் இரு தோளையும் பற்றி,

"என் மேல உனக்கு நம்பிக்கை இருக்குல்ல மினி... நான் எது பண்ணாலும் அது உன் நல்லதுக்கு தான்னு நம்புறல்ல... நிச்சயம் நீ வேற யாரையாவது கல்யாணம் பண்ணிக்கிட்டாலும் அந்த பிரணவ்வால ஏதாவது பிரச்சினை வரும்... என்ன கல்யாணம் பண்ணிக்கிட்டா எந்த பிரச்சினையும் இல்லல்ல.." என்க,

சிதாரா, "அதெல்லாம் சரிடா... பட் அதுக்கும் உன்ன கல்யாணம் பண்ணுறதுக்கும் என்ன சம்பந்தம்.." எனக் கேட்டாள்.

ஆர்யான், "சம்பந்தம் இருக்கு மினி... அந்த பிரணவ்வால இதுக்கு மேலயும் உனக்கு எந்த பிரச்சினையும் வரக் கூடாது... அதுக்காக நான் என்ன வேணாலும் பண்ணுவேன்..." என ஏதோ மனதில் வைத்துக் கொண்டு தீவிரமாகக் கூற அவனைப் புரியாமல் நோக்கினாள் சிதாரா.

சிதாரா, "அவனால எனக்கு என்ன பிரச்சினை வர போகுது... அதான் அவன் கிட்ட தெளிவா சொல்லிட்டேனே..." என்க,

"ஏதோ ஒன்னு... ஏன் இவ்வளவு கேள்வி கேக்குற... நான் உனக்கு செட் ஆக மாட்டேன்னு நினைக்குறியா... இல்லாட்டி என்ன உனக்கு பிடிக்கலயா..." என ஆர்யான் கோவமாகக் கேட்டான்.

"போடா கிறுக்கா... சும்மா கண்டதையும் பேசிக்கிட்டு.... கல்யாணம் பண்ணியும் வாழ்க்கை பூரா பிரமச்சாரியாவே இருக்கனும்னு முடிவு பண்ணிட்ட... இதுக்கு மேல நான் என்ன பண்ண முடியும்... உன் இஷ்டம்..." எனக் கூறிய சிதாரா கீழே சென்றாள்.

அவள் பின்னே பார்த்தவாறு, "அதையும் பார்க்கலாம் மிசிஸ்.ஆர்யான்..." எனக் கத்தியவன் புன்னகைத்துக் கொண்டே கீழே சென்றான்.

இருவரும் புன்னகையுடன் கீழே வர இருவரின் பெற்றோருக்கும் அதைக் காண திருப்தியாக இருந்தது.

சிதாரா கீழே வரவும் அவளை தன் பக்கத்தில் அமர்த்திக் கொண்ட அகிலா,

"சித்தும்மா... இந்த சேரில நீ ரொம்ப அழகா இருக்க... உனக்குன்னே சொல்லி நெய்ஞ்சது போல இருக்கு... நீ எங்க வீட்டுக்கு மருமகளா வர நாங்க ரொம்ப குடுத்து வெச்சி இருக்கனும்..." என்கவும்,

ரஞ்சித், "அகி... பாவம் என் மருமக... ஒரேயடியா இவ்வளவு ஐஸ் வைக்காதே..." என அவரைக் கேலி செய்யவும் ரஞ்சித்தை முறைத்தார் அகிலா.

பின் அகிலா சிதாராவிடம் திரும்பியவர், "அவர் கெடக்குறார்... என் மருமகளுக்கு தெரியும் என்னை பத்தி..." எனக் கூறியவர் சிதாராவின் தலையை வருடினார்.

சங்கர், தேவி இருவருக்குமே ஆர்யானின் பெற்றோர் சிதாரா மீது வைத்துள்ள பாசத்தைப் பார்த்து சந்தோஷத்தில் கண்கள் கலங்கின.

அகிலா, ரஞ்சித் இருவரையும் பார்த்து புன்னகைத்தாள் சிதாரா.

அவளுக்கு அந்த சூழ்நிலை மிகவும் சங்கடமாக இருந்தது.

பெற்றோரின் முகத்தில் தெரிந்த மலர்ச்சியும் ஆர்யான் கூறிய காரணமும் அவளை திருமணத்தை மறுக்க முடியாமல் செய்தது.

ரஞ்சித், "அப்புறம் சம்பந்தி... எல்லாருக்கும் ஓக்கேன்னா மிச்ச விஷயத்த பத்தி பேசலாமே..." என்க சரி என சம்மதித்தார் சங்கர்.

ரஞ்சித் அவ்வாறு கூறியதும் சிதாராவின் முகம் வாடியது.

அவளுக்கு இதனை ஏற்றுக் கொள்ள இன்னும் நேரம் தேவைப்பட்டது.

சிதாராவின் முக மாற்றத்தை ஆர்யானும் அவதானித்துக் கொண்டு தான் இருந்தான்.

ரஞ்சித் ஏதோ கூற வரவும் ஆர்யான் அவசரமாக,

"டேட் ஒரு நிமிஷம்.." என்க அனைவரும் அவன் முகம் நோக்கினர்.

ஆர்யான், "அங்கிள்... அப்பா... நிச்சயத்த மட்டும் சீக்கிரம் வெச்சிக்கலாம்... கல்யாணம் இன்னும் கொஞ்ச நாள் போகட்டும்... மினிக்கும் கொஞ்சம் டைம் வேணும்ல..." என்க அவனை நன்றிப் பார்வை பார்த்தாள் சிதாரா.

ஆர்யான் கூறுவது அனைவருக்கும் சரி எனப்பட இரு வாரத்தில் நிச்சயத்தை நடத்த முடிவு செய்தனர்.

அனைவரும் கிளம்ப ஆர்யானிடம் வந்த சிதாரா,

"தேங்க்ஸ் ஜிராஃபி... அப்பா அம்மாக்காக இந்த கல்யாணத்துக்கு சம்மதிச்சிருந்தாலும் எனக்கு இன்னும் கொஞ்சம் டைம் தேவைபட்டுச்சி... நான் சொல்லாமலே நீ அத புரிஞ்சிக்கிட்ட..." என்க அவளைப் பார்த்து புன்னகைத்த ஆர்யான்,

"என்ன மினி நீ... புருஷன் கிட்ட தேங்க்ஸ் எல்லாம் சொல்லிக்கிட்டு... பொண்டாட்டிக்காக இதை கூட பண்ணலனா எப்படி..." எனக் கூறி கண்ணடித்தான்.

ஆர்யானை முறைத்த சிதாரா,

"மவனே இந்த புருஷன் பொண்டாட்டின்னு சொல்லிக்கிட்டு வந்தா சாவடிப்பேன்... தெரியாத பேய்க்கு தெரிஞ்ச பிசாசே மேல்னு தான் உன்ன கல்யாணம் பண்ணிக்க ஒத்துக்கிட்டேன்... ஆனாலும் நீ ஏதோ என் கிட்ட பெரிசா மறைக்குறன்னு மட்டும் தெளிவா புரியிது... மாட்டுவேல்ல ஒருநாள்... அப்போ பாத்துக்குறேன் ஜிராஃபி உன்ன..." என்க,

அவளைப் பார்த்து கள்ளச் சிரிப்பொன்றை உதிர்த்தான் ஆர்யான்.

அவர்கள் சென்றதும் தன் அறைக்கு வந்த சிதாரா அன்று திடீர் திடீரென நடந்த அதிர்ச்சிகளை நினைத்து பெருமூச்சு விட்டாள்.

லாவண்யாவுக்கு அழைத்தவள் அவள் அழைப்பை ஏற்றதும், "வனி..." என்று விட்டு அமைதி ஆகினாள்.

லாவண்யா, "என்னாச்சு சித்து... ஏதாவது ப்ராப்ளமா..‌" என்க,

"நான் ரொம்ப குழப்பமா இருக்கேன் வனி... என்ன பண்ணனும்னு கூட புரிய மாட்டேங்குது..‌. நான் எடுத்த முடிவு சரியா தப்பான்னு தெரியல..." என்றாள் சிதாரா.

சிதாராவின் குரலில் இழையோடிய அமைதியிலே அவள் வேதனையில் இருக்கிறாள் எனப் புரிந்து கொண்டாள் லாவண்யா.

"எதனால இப்படி திங்க் பண்ற சித்து... பிரணவ் அண்ணா திரும்ப ஏதாவது பிரச்சினை பண்ணிட்டாரா... எதப்பத்தி முடிவெடுத்து இருக்குற நீ.." என லாவண்யா கேட்க,

பெருமூச்சு விட்ட சிதாரா, "ப்ச்ச்... இந்த தடவ அவன் ஏதும் பண்ணல... " என்க,

"அப்போ என்ன தான்டி நடந்துச்சி... தெளிவா சொல்லேன்..." என லாவண்யா கேட்டாள்.

"என்ன இன்னெக்கி பொண்ணு பார்க்க வந்திருந்தாங்க... ரெண்டு வாரத்துல நிச்சயம்..." என சிதாரா கூறவும் அதிர்ந்த லாவண்யா,

"என்ன சொல்ற சித்து... நைட் பேசினப்போ கூட பொண்ணு பாக்க வரதா நீ எங்க கிட்ட சொல்லவே இல்லயே... எது எப்படியோ சந்தோஷமான விஷயம் தான் சொல்லிருக்க... மாப்பிள்ளை யாரு... என்ன பண்றாரு..." எனக் கேள்விக்கு மேல் கேள்வி தொடுக்கவும்,

சிதாரா, "ஆர்யான் தான் மாப்பிள்ளை..." என்றதும் அமைதியாகினாள் லாவண்யா.

"எனக்கே இன்னெக்கி காலைல தான் தெரியும்... அதுவும் மாப்பிள்ளை யார்னு கூட சொல்லல..." என்ற சிதாரா காலை முதல் நடந்தவற்றை கூறினாள்.

பின், "அவன கல்யாணம் பண்ணிக்குறதுல எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்ல... நிச்சயமா யாரோ தெரியாத ஒருத்தன கல்யாணம் பண்ணிக்கிற நிலமைல நான் இல்ல... அதனால ஆர்யான கல்யாணம் பண்ணுறது பிரச்சினை இல்ல... பட் என்னால அவன் லைஃப் ஸ்பாய்ல் ஆகிடுமோன்னு பயமா இருக்கு வனி... அவன் என்னன்னா ரொம்ப ஜாலியா பேசிட்டு போறான்... அவன் ஏதோ என் கிட்ட மறைக்கிறான்னு தோணுது வனி..." என தன் மனதிலுள்ள குழப்பங்களை லாவண்யாவிடம் தெரிவித்தாள் சிதாரா.

லாவண்யா, "நீ இதுல ஃபீல் பண்ண எதுவுமே இல்ல சித்து... உண்மைய சொன்னா ஆர்யான் அண்ணன கல்யாணம் பண்ணிக்க நீ ரொம்ப குடுத்து வெச்சிருக்கனும்... ஜஸ்ட் ஃப்ரென்டா இருக்கும் போதே உன்ன அவ்வளவு கேரிங்கா பார்த்துக்கிட்டாரு... இதே அவர் உன் வாழ்க்கைத் துணையா வந்தாருன்னா கடைசி வர உன்ன ரொம்ப சந்தோஷமா பார்த்துப்பாரு..." என்றவள்,

"அதனால.... இப்போ எங்க கல்யாணப் பொண்ணு எதையும் மனசுல போட்டு குழப்பிக்காம சந்தோஷமா இரு... அச்சு கிட்டயும் நான் சொல்றேன்... இந்த வாரமே நானும் அச்சுயும் கிளம்பி அங்க வரோம்... என்ஜாய் பண்றோம்...." என மகிழ்ச்சியாக கூறினாள்.

சிதாரா, "உன் கூட பேசினதுக்கு அப்புறம் தான் மனசுக்கு ரிலேக்ஸா இருக்கு வனி... அபி அண்ணாக்கும் ஆதர்ஷ் அண்ணாக்கும் சொல்லிடு.... கட்டாயம் இந்த வாரமே ரெண்டு பேரும் வந்துடுங்க..." என்று விட்டு அழைப்பைத் துண்டித்தாள்.

லாவண்யா அழைப்பைத் துண்டித்ததுமே சிதாராவின் மொபைலுக்கு மெசேஜ் ஒன்று வந்தது.

ஆர்யான், "குட் நைட் மிசிஸ்.ஆர்யான்😜" என அனுப்பி இருந்தான்.

அதைக் கண்டு தலையில் அடித்துக் கொண்ட சிதாரா,

"இவன் ஒருத்தன்... லூசு மாதிரி பண்ணிக்கிட்டு..." என அவனைத் திட்டினாலும் அவள் முகத்தில் புன்னகையொன்று வந்து மறைந்தது.

இங்கு லாவண்யா மொபைலை வைத்தவள்,

"ஆர்யான் அண்ணன் என்ன காரணத்தால உன்ன கல்யாணம் பண்ணிக்குறேன்னு சொன்னார்னு தெரியல சித்து... ஆனா நீ ஹாஸ்பிடல்ல சுய நினைவில்லாம கிடந்தப்போ அவர் உனக்காக துடிச்சத கண்கூடா பார்த்தேன்... நிச்சயம் அவர் உன்ன நல்லா பார்த்துப்பாரு.." எனத் தனக்கே சொல்லிக் கொண்டவள் அக்ஷராவிற்கும் ஆதர்ஷுக்கும் அழைத்து தகவல் கூறினாள்.

லாவண்யா கூறிய செய்தியில் மகிழ்ந்த ஆதர்ஷ் உடனே ஆர்யானுக்கும் சிதாராவுக்கும் வாழ்த்து தெரிவித்து குறுஞ்செய்தி அனுப்பினான்.

ஆதர்ஷ் அபினவ்விற்கு அழைத்துக் கூற,

அபினவ்வின் அருகில் இருந்த பிரணவ்வும் கேட்டுக் கொண்டிருந்தான்.

பிரணவ் மனதில், "உன்னால அவ்வளவு சீக்கிரம் தாராவ என் கிட்ட இருந்து பிரிக்க முடியாது ஆர்யான்... குறுக்கு வழிலயாவது நான் அவள அடஞ்சே தீருவேன்..." என நினைத்துக் கொண்டான்.

இவர்களில் யார் நினைப்பது நடக்கும்????
 

Nuha Maryam

Moderator
அத்தியாயம் - 14

ஒரு வாரம் கழிந்திருந்த நிலையில் லாவண்யா, அக்ஷரா இருவருவருமே கோயம்புத்தூர் வந்தடைந்தனர்.

நிச்சயத்துக்கு ஒரு வாரமே இருக்கும் நிலையில் ஆர்யான் மற்றும் சிதாராவின் குடும்பம் இணைந்து நிச்சயத்துக்கு அனைவருக்கும் உடைகள், ஆபரணங்கள் வாங்கச் சென்றனர்.

ஆடைத் தேர்வை பிள்ளைகள் வசமே பெரியவர்கள் ஒப்படைத்து விட்டனர்.

கீழ் தளத்தில் பெரியவர்கள் ஒரு பக்கம் தேர்வு செய்து கொண்டிருக்க,

மேல் தளத்தில் ஆர்யான் ஆண்கள் பிரிவிலும் தோழிகள் மூவரும் பெண்கள் பிரிவிலும் தமக்கு வேண்டியவற்றை தேர்வு செய்து கொண்டிருந்தனர்.

பெண்கள் அவசரமாக உடை தேர்வு செய்தால் அதிசயம் தானே.

இவர்கள் மட்டும் விதிவிலக்கா என்ன.

ஆர்யான் தனக்கு பொருத்தமான வேஷ்டி சட்டை எடுத்துக் கொண்டு தோழிகள் இருந்த பக்கம் வந்தான்.

அவர்களோ அங்கிருந்த பணியாளரை வைத்து செய்து கொண்டிருந்தனர்.

அடுக்கி வைக்கப்பட்டிருந்த அனைத்து உடைகளும் தோழிகள் முன் கடை பரப்பப்பட்டிருக்க இன்னுமே தேர்வு செய்தபாடில்லை.

அதைக் கண்ட ஆர்யான்,

"இதுங்கள திருத்தவே முடியாது... எவ்வளவு நேரம் தான் செலக்ட் பண்ணுவீங்க... இன்னும் முடிஞ்ச மாதிரி தெரியல... தள்ளுங்க நானே பாக்குறேன்..." என மூவரிடமும் கூற,

தோழிகள் மூவரும் அவனுக்கு வழி விட்டு நின்றனர்.

சிதாரா மெதுவாக அக்ஷராவின் காதில்,

"என்னவோ பெரிய ஹீரோ போல வந்து சீன் போடுறான் பாரு... பொண்ணுங்களோட ட்ரஸ் செலக்ட் பண்ணுறது அவ்வளவு ஈசியா என்ன... எப்படி முழிக்க போறான் பாரு..." என்க அக்ஷரா வாய் மூடி சிரித்தாள்.

ஆர்யானோ ஐந்து நிமிடத்திலே அவர்கள் பக்கம் திரும்ப,

சிதாரா, "என்ன ஜிராஃபி... ஏதாவது ஹெல்ப் வேணுமா..." என அவனைக் கேலி செய்ய,

ஆர்யான் மூவரின் கையிலும் அழகான வேலைப்பாடுடைய லெஹேங்காவை வைக்கவும் மூவருமே அதனை விழி விரித்து நோக்கினர்.

லாவண்யா, "அண்ணா.... சும்மா சொல்லக் கூடாது... அவ்வளவு அழகா இருக்கு இந்த ட்ரஸ்... நாம பல மணிநேரம் உக்காந்து தேடினாலும் இவவ்ளவு நல்லதா செலெக்ட் பண்ண மாட்டோம்..." என்க,

அக்ஷராவும் அதனை ஆமோதித்தாள்.

சிதாரா இன்னும் அமைதியாக இருக்க,

அவளை குறும்படன் நோக்கிய ஆர்யான்,

"ஏதாவது சொல்லனுமா மினி... பரவாயில்ல தேங்க்ஸ் எல்லாம் சொல்ல அவசியமில்ல... நமக்குள்ள எதுக்கு இதெல்லாம்..." எனக் கூறி கண்ணடித்தான்.

சிதாரா சமாளிப்பாக, "ஹ்ம்ம்... ஏதோ பரவாயில்லை... நல்லா தான் செலெக்ட் பண்ணி இருக்க... " எனக் கூறியவள் ஆர்யான் மீண்டும் ஏதாவது கூறும் முன் தோழிகளை இழுத்துக் கொண்டு கீழே சென்றாள்.

அவர்கள் சென்று சிறிது நேரத்தில் ஆர்யானும் கீழே சென்றான்.

நகைக்கடைக்கு சென்று விட்டு ஒரு ஹாட்டலில் இரவுணவை முடித்தனர்.

சங்கர் இரவு அங்கேயே ஆர்யானின் குடும்பத்தைத் தங்கி விட்டு செல்லக் கூற,

ரஞ்சித், "இல்ல சம்மந்தி... கல்யாணத்துக்கு முன்னாடி நாங்க அப்படி தங்கினா அவ்வளவு நல்லா இருக்காது... பக்கத்துல ஏதாவது ஹாட்டல்ல தங்கிட்டு காலைல கிளம்புறோம்... அப்போ வரோம் சம்மந்தி..." என்று விட்டு அவர்கள் விடை பெற்றனர்.

செல்லும் முன் சிதாராவிடம் வந்த ஆர்யான் அவள் கையில் ஒரு பொலித்தீன் பையைக் கொடுக்க சிதாராவோ அவனை கேள்வியாய் ஏறிட்டான்.

"மினி இதுல ஒரு சேரி இருக்கு... உனக்குன்னு சொல்லி நானே ரெடி பண்ணது... உனக்கு மனசுக்கு ரொம்ப ஸ்பெஷலா ஃபீல் பண்ணுற ஏதாவது ஒரு நாளைக்கு தான் நீ இத கட்டனும் மினி..." என ஆர்யான் கூற,

அவனுக்கு நன்றி கூறி பெற்றுக் கொண்ட சிதாரா,

"இந்த கொஞ்ச நாளா நீ ரொம்ப டிஃபரன்ட்டா பிஹேவ் பண்ணுற ஜிராஃபி... எனக்கு இன்னுமே உன் மேல டவுட்டா இருக்கு..." என்க,

அவளுக்கு பதிலேதும் கூறாது புன்னகைத்து விட்டு கிளம்பினான் ஆர்யான்.

நாட்கள் வேகமாகக் கடந்து நிச்சய தினத்தை அடைந்தது.

சாதாரணமாக நிச்சயத்தை நடத்தலாம் என ஆர்யானும் சிதாராவும் எவ்வளவு கூறியும் கேட்காது ரஞ்சித், சங்கர் இருவருமே பெரிய மண்டபமாகப் பார்த்து அனைவரையும் அழைத்து விமர்சையாக நிச்சயத்தை ஏற்பாடு செய்தனர்.

ஆதர்ஷ், அபினவ், அவர்களின் குடும்பத்தினர், லாவண்யா மற்றும் அக்ஷராவின் குடும்பத்தினர் என அனைவரும் நிச்சயத்துக்கு வந்திருந்தனர்.

ஆர்யான் அன்று தோழிகள் மூவருக்கும் தேர்ந்தெடுத்த லெஹேங்காவையே மூவரும் அணிந்திருந்தனர்.

நல்ல நேரம் பார்த்து நிச்சயப் பத்திரிகை வாசிக்கவென தேவி லாவண்யாவிடம் சிதாராவை அழைத்து வரக் கூற,

சிதாரா இருந்த அறைக்குள் நுழைந்த லாவண்யா அவளை அங்கு காணாமல் குழம்பினாள்‌.

பாத்ரூமிலும் பார்க்க அங்கும் இல்லை.

பதட்டமாக சங்கர், ரஞ்சித், அகிலா, தேவி நால்வரும் இருந்த இடத்திற்கு வந்தவள் சிதாரா அறையில் இல்லாத விஷயத்தைக் கூற,

சரியாக அபினவ்வும் வந்து ஆர்யானையும் காணவில்லை எனக் கூறினான்.

அனைவரையும் பதற்றம் தொற்றிக் கொண்டது.

இருவருக்கும் அழைத்துப் பார்க்க இருவருக்குமே முழு ரிங் சென்று கட் ஆகியது.

ஆதர்ஷும் அபினவ்வும் அவர்களைத் தேடி விட்டு வருவதாக செல்லப் பார்க்க மண்டப வாயிலில் ஆர்யான் சிதாராவின் கைப் பிடித்து அழைத்து வருவதைக் கண்டதும் தான் அனைவருக்கும் நிம்மதியாக இருந்தது.

ரஞ்சித், "எங்கடா போனீங்க... ரெண்டு பேரையும் காணோம்னு சொன்னதும் எங்க எல்லாருக்கும் எவ்வளவு டென்ஷனா இருந்தது தெரியுமா..‌. இன்னும் கொஞ்ச நேரத்துல வந்திருக்குற விருந்தாளிங்களுக்கும் தெரிஞ்சிருக்கும்..." என ஆர்யானைக் கடிந்து கொள்ள,

"சாரிப்பா... மினிக்கு கொஞ்சம் தலைவலியா இருக்குறதா சொன்னா.. அதான் ரெண்டு பேரும் கொஞ்சம் வெளிய நின்னு காத்து வாங்கிட்டு இருந்தோம்..." என ஆர்யான் கூற,

ரஞ்சித் மீண்டும் அவனைத் திட்ட வாயெடுக்க அவரைத் தடுத்த சங்கர்,

"அப்புறம் இத பத்தி பேசிக்கலாம் சம்மந்தி... நல்ல நேரம் முடியிறதுக்கு முன்னாடி பத்திரிகைய வாசிச்சு நிச்சயத்த முடிக்கலாம்..." என்கவும் ரஞ்சித் அமைதியாகினார்.

ஆனால் ஆர்யானின் முகம் ஒரு வித இறுக்கத்துடனும் சிதாராவின் முகம் பயத்துடனும் இருப்பதை ஆதர்ஷ் அவதானித்து விட்டான்.

பின் பத்திரிகை வாசித்து முடித்ததும் இருவரையும் மோதிரம் மாற்றிக் கொள்ளக் கூறினர்.

ஆதர்ஷ் கையை நீட்ட சிதாரா கைகள் நடுங்க தயக்கத்துடன் அவன் கைப் பிடித்து மோதிரத்தை அணிவித்தாள்.

பின் சிதாரா கையை நீட்ட அவள் கரம் இன்னும் நடுங்கிக் கொண்டிருப்பதைக் கண்ட ஆர்யான்,

அவள் கரத்தை எடுத்து சற்று அழுத்தியவன் அவள் கண்களைப் பார்க்க,

சிதாராவும் அவனைத் தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.

ஆர்யான் சிதாராவின் கைப் பற்றி அழுத்தவும் சிதாராவின் கை நடுக்கம் குறைந்து அவளும் அமைதியாகினாள்.

ஆர்யான் சிதாராவைப் பார்த்து தன் கண்களை மூடித் திறக்கவும் சிதாரா கண்கள் லேசாகக் கலங்க ஆர்யானைப் பார்த்துப் புன்னகைத்தாள்.

பதிலாக சிதாராவைப் பார்த்து புன்னகைத்த ஆர்யான் அவள் விரலில் மோதிரத்தை அணிவித்தான்.

வந்திருந்த விருந்தாளிகள் அனைவரும் விருந்து உண்டு விட்டு வாழ்த்துக் கூறி விடை பெற்றனர்.

பின் அனைவரும் மண்டபத்திலிருந்து கிளம்பி சிதாராவின் வீட்டுக்குச் சென்றனர்.

லாவண்யா, அக்ஷராவிடம் ஆர்யான்,

"மினி ரொம்ப டையர்டா இருப்பா... நீங்க ரெண்டு பேரும் அவள ரூமுக்கு கூட்டிட்டு போங்க..." என்க அவர்களும் சிதாராவை அழைத்துக் கொண்டு சென்றனர்.

மற்ற அனைவரும் ஹாலில் இருக்க, "உங்க எல்லோரு கிட்டயும் நான் ஒரு விஷயம் சொல்லனும்..." என ஆர்யான் பீடிகையுடன் ஆரம்பிக்கவும் அனைவரும் அவனைக் குழப்பமாய் நோக்கினர்.

ஆர்யான், "அங்கிள்... அப்பா... எனக்கும் மினிக்கும் நாளைக்கே கல்யாணம் நடக்கனும்..." என்க அங்கிருந்த அனைவருமே அதிர்ந்தனர்.

அறைக்குச் சென்றதுமே மனதில் இருந்த பாரத்தை மறக்க வேண்டும் என்ற எண்ணத்திலோ தெரியாது, சிதாரா உடையைக் கூட மாற்றாது தூங்க,

அவளை அறையில் விட்டு வெளியே வந்த அக்ஷரா, லாவண்யாவுமே ஆர்யான் கூறியதைக் கேட்டு கிளம்பினர்.

ஆதர்ஷ் ஏற்கனவே மண்டபத்திலிருந்தே இருவரையும் அவதானித்துக் கொண்டிருந்ததால் ஆர்யான் என்ன சொல்ல வருகிறான் எனப் பார்த்துக் கொண்டிருந்தான்.

சங்கர், "என்ன மாப்பிள்ளை சொல்றீங்க... திடீர்னு இப்படி சொன்னா என்ன பண்ண முடியும்... அதுவுமில்லாம நீங்க தானே சொன்னீங்க ரெண்டு பேரும் வன் வெகேஷன்ல தான் வந்திருக்கீங்க... அதனால திரும்ப நியுயார்க் போய்ட்டு சித்துவோட ஸ்டடீஸ முடிச்சிட்டு வந்து அதுக்கப்புறம் கல்யாணம் பண்ணிக்குறேன்னு... நீங்களும் அது வரை அங்கயே பண்ணுறேன்னீங்க... நீங்க சொன்னதுனால தானே கல்யாணத்த தள்ளி போட்டுட்டு நிச்சயத்த மட்டும் ஏற்பாடு பண்ணிணோம்..." என்றார்.

ரஞ்சித்தோ கோவமாக, "வர வர நீ உன் இஷ்டத்துக்கு முடிவெடுக்குற ஆரு... நாளைக்கே கல்யாணம் பண்ணனும்னா எப்படி... உனக்கு இதெல்லாம் விளையாட்டா இருக்கா... அப்படி உடனடியா கல்யாணத்த நடத்தனும்னு ஏன் திடீர்னு முடிவெடுத்திருக்க... என்ன நடந்தது..." எனக் கேட்டார்.

தாய்மார் இருவரும் என்ன சொல்வது எனத் தெரியாமல் முழிக்க ஏனையோர் பார்வையாளராக இருந்து வேடிக்கை பார்த்தனர்.

"ஆமா நான் தான் கல்யாணத்த லேட் ஆகி வெச்சிக்கலாம்னு சொன்னேன்... ஆனா இப்போ இந்த கல்யாணம் நடந்தே ஆகனும்... என்ன ஏதுன்னு எல்லாம் கேக்காதீங்க... எப்பவா இருந்தாலும் நானும் மினியும் தானே மேரேஜ் பண்ணிக்க போறோம்... அதை கொஞ்சம் அவசரமா நாளைக்கே வைங்கன்னு நான் சொல்றேன்... அதான் இப்போ இங்க எல்லாரும் இருக்காங்க தானே... ஏதாவது கோயில்ல சிம்பிளா மேரேஜ வெச்சிக்கலாம்..." என ஆர்யானும் பதிலுக்குப் பேச,

ரஞ்சித்துக்கு ஆர்யானின் நடவடிக்கையில் ஆத்திரம் வந்தது.

அகிலா தான் அவரை சமாதானப்படுத்தி அமைதியாக இருக்க வைத்தார்.

சங்கர், "ஆனா மாப்பிள்ளை..." என ஏதோ கூற வர,

ஆர்யான், "அங்கிள் ப்ளீஸ்... அப்பா தான் புரிஞ்சிக்க மாட்டேங்குறாரு... நீங்களாவது நான் சொல்றத கேளுங்க... இந்த கல்யாணம் கண்டிப்பா நாளைக்கே நடந்தாகனும்..." எனக் கெஞ்சினான்.

ஆர்யான் கூறியதைக் கேட்டு சங்கர் யோசிக்க,

அவ்வளவு நேரம் பார்வையாளராக இருந்த லாவண்யாவின் தந்தை ராஜேந்திரன்,

"சங்கர்... அதான் மாப்பிள்ளை தம்பி அவ்வளவு சொல்றாரே... ஏதாவது காரணம் இல்லாமலா இருக்கும்... நம்ம குடும்பத்துல முக்கியமானவங்க எல்லாருமே இங்க இருக்காங்க... நம்ம பொண்ணுக்கு நம்ம ஆசிர்வாதம் போதாதா.. எங்க எல்லாரையும் விட மூணாவது மனுஷங்களா இவங்க நல்லா இருக்கனும்னு ஆசை பட போறாங்க... நீ சரின்னு சொல்லு... சம்மந்தி நீங்களும் தான்... நாளைக்கே ஏதாவது நல்ல கோயில்ல நான் கல்யாணத்த ஏற்பாடு பண்ணுறேன்... அதுவுமில்லாம ரெண்டு பேரும் எப்படியும் இன்னும் கொஞ்சம் நாள்ள வெளிநாட்டுக்கு போக போறாங்க... அது புருஷன் பொஞ்சாதியா போனா எங்களுக்கும் நிம்மதியா இருக்கும் தானே..." என சங்கரிடமும் ரஞ்சித்திடமும் கூறினார்.

அனைவருக்கும் அவரது சொல் சரி எனப்பட சங்கர், ரஞ்சித் இருவருமே சம்மதித்தனர்.

அவர்கள் சம்மதித்ததும் தான் ஆர்யான் நிம்மதியாக உணர்ந்தான்.

ஆர்யான் வெளியே செல்ல அபினவ், ஆதர்ஷ் இருவரும் அவனைப் பின் தொடர்ந்தனர்.

ஆதர்ஷ், "ஏதாவது ப்ராப்ளமா ஆர்யான்..." எனக் கேட்க,

இருவரையும் கண்டு நொடியில் முக பாவனையை மாற்றிக் கொண்ட ஆர்யான்,

"ச்சீச்சீ... அப்படி எதுவும் இல்லையே..." என சிரித்து சமாளிக்க,

அபினவ், "அப்போ எதுக்கு சடன்னா மேரேஜ‌ நடத்தனும்னு சொல்ற..." என்றான்.

ஆதர்ஷும் ஆர்யானைத் தான் சந்தேகமாகப் பார்த்துக் கொண்டிருந்தான்.

ஆர்யான், "அது வேற ஒன்னுமில்ல... நிச்சயம் தான் முடிஞ்சதிடுச்சில்ல..‌. மேரேஜையும் அப்படியே முடிச்சிட்டா சந்தோஷம் தானே... எனக்கும் மினி கூடவே இருந்தது போல இருக்கும்... வன் மினிட்... எனக்கு இம்போர்டன்டான கால் ஒன்னு... நாம அப்புறம் பேசலாம்..." என்று விட்டு அவசரமாக அங்கிருந்து சென்றான்.

செல்லும் அவனையே யோசனையுடன் பார்த்துக் கொண்டிருந்தான் ஆதர்ஷ்.

பின் அபினவ்விடம், "சித்துக்கு இன்னைக்கு என்கேஜ்மன்ட்னு பிரணவ்வுக்கு தெரியுமா..." என்க,

"ஆமாடா... பட் டூ டேய்ஸ் முன்னாடி ஏதோ பிசினஸ் விஷயமா வெளியூர் போய்ட்டு வரேன்னு சொல்லிட்டு போனான்... எங்க போறேன்னு சொல்லல... டேய்.. அவன் இப்ப முன்ன மாதிரி இல்லடா... சித்துவ நெனச்சி உண்மையாவே திருந்திட்டான்... நீ அவன் கூட முன்ன மாதிரி பேசுடா... ரொம்ப ஃபீல் பண்ணுறான்..." என அபினவ் கூறவும் வெறும் தலையசைப்பை மட்டும் பதிலாக அளித்தான் ஆதர்ஷ்.

மறுநாள் காலை கோயிலில் குடும்பத்தினர் மத்தியில் அனைவரின் ஆசியுடனும் ஆர்யான் மற்றும் சிதாரா திருமணம் எளிமையாக நடந்தது.

சிதாராவின் கழுத்தில் மூன்று முடிச்சிட்டு அவளைத் தன்னவளாக்கிக் கொண்டான் ஆர்யான்.

ஆர்யான் சிதாராவின் கழுத்தில் தாலி கட்டியதும் அவளையும் அறியாமல் கன்னம் தாண்டி கண்ணீர் வடிந்தது.

அவள் கண்ணீரைத் துடைத்து விட்ட ஆர்யான்,

"நான் உன் பக்கத்துல இருக்கும் போது எதுக்காகவும் நீ அழக் கூடாது மினி..." என்கவும் சரி எனத் தலையாட்டினாள்.

பின் இருவரும் பெரியவர்களின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினர்.

திருமணத்தை ஆர்யான் உடனடியாக நடத்த வேண்டும் என்று கூறியதில் மாத்திரமே ரஞ்சித்துக்கு கோவம் இருந்தது.

மற்றபடி சிதாரா தன் வீட்டு மருமகளானது அவருக்கும் மட்டற்ற மகிழ்ச்சி.

சிதாராவை அணைத்துக் கொண்ட அகிலா,

"எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு சித்துமா... எது எப்படியோ நீ எங்க வீட்டு மருமகள் ஆகிட்ட... நீ எங்க ரெண்டு பேருக்கும் பொண்ணு இல்லங்குற குறையை தீர்க்க வந்தவ... எங்க வீட்டுல உன்ன ராணி மாதிரி பார்த்துப்போம்... உனக்கு என்ன வேணும்னாலும் இந்த அத்த கிட்ட தயங்காம கேளு..." எனக் கூறவும் சிதாரா அவரைப் பார்த்து புன்னகைத்தாள்.

சங்கர், தேவி இருவருக்கும் சிதாராவுக்கு நல்ல வாழ்க்கை அமைந்ததில் மகிழ்ச்சி.

தேவி சிதாராவிடம், "இனி அவங்க ரெண்டு பேரும் தான் உனக்கு அப்பா அம்மா... அந்த குடும்பத்தோட மருமகளா அவங்க மரியாதைய காப்பாத்துற கடமை உனக்கும் இருக்கு சித்து... மாப்பிள்ளை பேச்சை கேட்டு நட... அவர் எது பண்ணாலும் நிச்சயம் அது உன் நல்லதுக்காகத் தான் இருக்கும்..." என்று விட்டு அவளை அணைத்துக் கொண்டாள்.

சங்கரும் சிதாராவை உச்சி முகர்ந்து, "சந்தோஷமா இருமா... உனக்கு என்ன பிரச்சினை வந்தாலும் மாப்பிள்ளை பாத்துப்பாரு..." என்க அவரை அணைத்து கண்ணீர் விட்டாள்.

சற்று நேரத்திலே நண்பர்கள் அனைவரும் சிதாராவை கேலி கிண்டல் செய்து சிரிக்க வைத்தனர்.

கோயிலுக்கு வந்த அனைவருக்கும் விருந்து ஏற்பாடு செய்திருந்தார் ராஜேந்திரன்.

அனைவரும் விருந்து பரிமாறுவதில் கவனமாக இருக்க,

சிதாராவை அழைத்துக் கொண்டு ஒரு ஓரமாய் வந்தான் ஆர்யான்.

அவனை அணைத்துக் கொண்டு கண்ணீர் விட்ட சிதாரா,

"எனக்கு ரொம்ப பயமா இருக்கு ரயன்... அவன் திரும்ப ஏதாவது பண்ணிட்டா என்ன பண்றது... ப்ளீஸ்... என்ன விட்டு எங்கையும் போயிடாதே..." என அழுதாள்.

ஆர்யான், "மினி... இனிமே நீ எதுக்கும் கவலைப்பட வேண்டிய அவசியமில்ல... நான் தான் உன் கூட இருக்கேன்ல... என்ன பிரச்சினையா இருந்தாலும் என்ன தாண்டி தான் உன்ன நெருங்கனும்..." என்றான்.

நண்பர்கள் அனைவரும் அவர்கள் பக்கம் வருவதைக் கண்டதும் ஆர்யானை விட்டு விலகிய சிதாரா அவசரமாக கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள்.

அக்ஷரா, "என்ன ஆர்யான் அண்ணா... இப்போ தானே கல்யாணம் முடிஞ்சது... அவ்வளவு பொறுமை இல்லயா உங்களுக்கு... அதுக்குள்ள பொண்டாட்டிய தனியா கூட்டிட்டு வந்து ரொமான்ஸ் பண்ணுறீங்க..." எனக் கேலி செய்ய அனைவரும் நகைத்தனர்.

ஆர்யான் அவர்களைப் பார்த்து இளித்து வைக்க,

சிதாராவோ சங்கடமாக புன்னகைத்தாள்.

லட்சமி பாட்டி நண்பர்கள் இருந்த இடம் வந்தவர்,

"என்னைய டார்லிங் டார்லிங் சொல்லி கொஞ்சிட்டு மெதுவா என் பேத்திக்கு ரூட்டு விட்டு கல்யாணம் பண்ணிக்கிட்டேல்ல படுவா..." என ஆர்யானிடம் கூற,

"டார்லிங்... ரொம்ப பொறாமைப்படுற போல தெரியிது... நீ மட்டும் சரின்னு சொல்லு... இதே மேடைல உன்ன ரெண்டாம் தாரமா கட்டிக்கிறேன்..." என ஆர்யான் கூறவும் அனைவரும் சிரித்தனர்.

லட்சுமி பாட்டி, "பாத்தியா சீதா கண்ணு... எப்படி பேசுறான்னு... இப்போ தான் கல்யாணம் ஆச்சு... அதுக்குள்ள ரெண்டாம் தாரம் கேக்குதாம்..." என சிதாராவிடம் ஆர்யானை மாட்டி விட,

சிதாரா ஆர்யானைப் பார்த்து பொய்யாக முறைத்தாள்.

ஆர்யான் உடனே முகத்தைப் பாவமாக வைத்துக் கொள்ளவும் அவளுக்கு சிரிப்பு வந்தது.

லட்சுமி பாட்டி, "இவன இப்போ இருந்தே உன் முந்தானைல முடிச்சு வெச்சிக்கோ சீதா... உன்ன விட்டு வேற எவளையாச்சும் பார்த்தா என் கிட்ட சொல்லு... இவன் கண்ண புடுங்கி காக்காக்கு போடுறேன்..." என்கவும்,

"டார்லிங்.... வை திஸ் கொலவெரி.." என ஆர்யான் சோகமாகக் கேட்கவும் அனைவருக்கும் அவனைப் பார்த்து சிரிப்பு வந்தது.

இவர்கள் இங்கு சந்தோஷமாக இருக்க,

"ஓஹ்ஹ்ஹ்... என் கிட்ட இருந்து அவள காப்பாத்த உடனே கல்யாணம் பண்ணிக்கிட்டீங்களா... விட மாட்டேன்டா... அவள உன் கிட்ட இருந்து பிரிச்சு உன்ன பலி வாங்காம விட மாட்டேன்டா... உன்ன கதற வைக்கிறேன் பாரு...." எனக் கூறி பயங்கரமாக சிரித்தான் அவன்.
 

Nuha Maryam

Moderator
அத்தியாயம் - 15

திருமணம் முடிந்த கையோடு அனைவரும் சிதாராவின் வீட்டுக்கு கிளம்பினர்.

காலையிலிருந்தே திருமணத்திற்காக தயாரானதில் சிதாராவுக்கு சோர்வாக இருக்கவும் தேவியிடம்,

"மா... எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு... நான் கொஞ்சம் தூங்கி எழுந்திருக்கிறேன்..." என்க,

தேவி அவசரமாக, "இல்ல சித்து... இன்னும் கொஞ்ச நேரத்துல எல்லாரும் மாப்பிள்ளை வீட்டுக்கு கிளம்பி ஆகனும்... உன்ன அங்க கொண்டு போய் விடனுமே..." என்க சிதாராவின் முகம் வாடியது.

யாருக்கு தான் பிறந்த வீட்டைப் பிரியும் சோகம் இல்லாமல் இருக்கும்.

அதுவும் ஒரு பெண் திருமணத்திற்கு பின் தன் சொந்த வீட்டுக்கே விருந்தாளியாகி விடுவாள்.

சரியாக சங்கரும் ஆர்யானுடன் அவ்விடம் வர,

"என்னாச்சு தேவி... ஏன் சித்து ஃபேஸ் டல்லா இருக்கு..." என சங்கர் கேட்டார்.

தேவி, "ஒன்னுமில்லங்க... டயர்டா இருக்கு தூங்குறேன்னு சொன்னா... நான் தான் மாப்பிள்ளை வீட்டுக்கு போகனும்னு வேண்டாம்னு சொன்னேன்..." என்க,

ஆர்யான், "அதொன்னும் பிரச்சினை இல்ல அத்த... மினி நீ போய் ரெஸ்ட் எடு..." எனக் கூறினான்.

சங்கர், "இல்ல மாப்பிள்ளை... இப்போவே உங்க வீட்டுக்கு கிளம்பினா தான் நேரமா போய் சேர முடியும்... கல்யாணம் முடிஞ்சதும் முதல்ல மாப்பிள்ளை வீட்டுக்கு போறது தான் முறையும் கூட..." என்கவும் ஆர்யான் ரஞ்சித்தை அழைத்தான்‌.

ரஞ்சித் வர அவரிடம், "டாட்... நான் சொன்ன விஷயம் என்னாச்சு... எல்லாம் ஓக்கேயா..." என ஆர்யான் கேட்க,

"ஆமா ஆரு.. எல்லாம் அரேன்ஜ் பண்ணி இருக்கேன்.. நாம கிளம்பினா சரி.." என்றார் ரஞ்சித்.

தந்தை மற்றும் மகனின் உரையாடலில் சங்கர், தேவி, சிதாரா மூவரும் புரியாமல் குழம்ப,

ஆர்யான் சங்கரிடம், "மாமா... இப்ப என்ன... உங்களுக்கு கல்யாணம் முடிஞ்சதும் நேரா மாப்பிள்ளை வீட்டுக்கு போகனும்னு தானே யோசிக்கிறீங்க... தாராளமா போலாம்... இங்க கோயம்புத்தூர்லே அப்பா ஒரு வீடு வாங்கி இருக்காரு... அங்க போய் எல்லாம் செய்யலாம்..." என்றான்.

"எப்போ மாப்பிள்ளை வீடெல்லாம் வாங்குனீங்க... அதுவும் இங்க எதுக்காக வாங்கி இருக்கீங்க.." என சங்கர் கேட்டார்.

"இல்ல மாமா... எப்படியும் கல்யாணம் முடிஞ்சா மறுவீடு அது இதுன்னு நிறைய சம்பிரதாயம் இருக்கும்... எனக்கும் மினிக்கும் இப்போதைக்கு அத பத்தி பிரச்சினை இல்லன்னாலும் இருக்குற சின்ன சின்ன சடங்கயாவது செஞ்சா பெரியவங்க உங்களுக்கு திருப்தியா இருக்கும்... என்ன இருந்தாலும் எங்க கல்யாணம் அவசரத்துல நடந்தது உங்க மனசுல ஒரு பெரிய குறையா இருக்கும்... அதான்... சென்னை கோயம்புத்தூர் மாறி மாறி போய்ட்டு இருந்தாலும் கஷ்டமா இருக்கும்... கொஞ்ச நாளுக்கு தானே நாங்க ரெண்டு பேரும் இங்க இருக்க போறோம்... அது வர அந்த வீட்டுலயே தங்கிக்கலாம்னு இருக்கோம்... அம்மாவும் அப்பாவும் எங்க கூடவே இருக்கேன்னு சொன்னாங்க... மினிக்கும் இங்க இருந்தா உங்கள அடிக்கடி பாக்கலாம்..." என்றான்.

ஆர்யான் கூறியதைக் கேட்டு சிதாராவுக்கு சந்தோஷமாக இருந்தது.

அதை அவளது முகமே காட்டிக் கொடுத்தது.

அதன் பின் அனைவரும் ஆர்யான் வாங்கிய வீட்டுக்கு கிளம்பினர்.

சென்னையிலிருக்கும் வீடு போல் இல்லாவிட்டாலும் ஓரளவு பெரிய வீடாகவே வாங்கி இருந்தார்கள்.

சங்கர், தேவி இருவருக்குமே தம் மகள் நல்ல இடத்தில் வாக்கப்பட்டு உள்ளதில் மகிழ்ச்சி.

அகிலா இருவருக்கும் ஆரத்தி எடுத்தவர், "வலது கால எடுத்து வெச்சி உள்ள வாம்மா..." என்க சிதாராவும் அதன் படி செய்தாள்.

பின் சிதாராவை விளக்கேற்றக் கூற அதையும் செய்தாள்.

அவளுக்கு எப்போதுடா இந்த சடங்குகள் முடியும் என்றிருந்தது.

சிறிய சிறிய சடங்குகள் எல்லாம் முடிய சிதாரா இன்னும் களைத்துப் போய் இருந்தாள்.

சிதாராவிடம் வந்த அவளது தோழிகள் இருவரும் சிதாரா ஏதோ யோசனையில் இருப்பதைக் கண்டு அவள் காதில் பே.... எனக் கத்தினர்.

பதறிய படி தன்னிலைக்கு வந்தவள் இருவரையும் முறைக்க,

அக்ஷரா, "என்னாச்சு சித்து... நானும் நேத்துல இருந்து பாத்துட்டு தான் இருக்கேன்.. ஒன்னு ஏதோ பெரிய யோசனைல இருக்க... இல்லன்னா முகத்த சோகமா வெச்சிட்டு இருக்க... ஒருவேளை உனக்கு இந்த கல்யாணத்துல இஷ்டமில்லையா..." என்க லாவண்யாவும் அதை ஆமோதித்தாள்.

"ச்சீச்சீ... அப்படில்லாம் எதுவுமில்ல... ஐம் ஓக்கே..." என சிதாரா அவசரமாகக் கூற,

அவளை சந்தேகமாக பார்த்த லாவண்யா,

"இல்ல... கன்ஃபோர்ம் நீ எதையோ எங்க கிட்ட மறைக்குற... சொல்லு சித்து..." என்க சிதாராவின் முகம் பதட்டமடைந்தது.

சிதாரா பதட்டமாக இருப்பதை தூரத்திலிருந்து அவதானித்த ஆர்யான் அவசரமாக அவ்விடம் வந்து அக்ஷரா மற்றும் லாவண்யாவிடம்,

"என்ன சிஸ்டர்ஸ்... நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து என் பொண்டாட்டிய டிஸ்டர்ப் பண்ணுறது போல தெரியுது... புதுசா கல்யாணம் ஆனவங்களுக்கு பிரைவசி குடுத்துட்டு போங்க அந்த பக்கம்...." எனப் பொய்யாக முகத்தை சீரியசாக வைத்துக் கொண்டு கூறினான்.

அவனைப் பார்த்து சிரித்த அக்ஷரா, "சாரி ப்ரதர்... உங்க பொண்டாட்டிய நாங்க ஒன்னும் கொத்திட்டு போய்ட மாட்டோம்... பரவாயில்ல... ஏதோ நீங்க சொல்றதுக்காக நாங்க போறாம்..." என ஆர்யானிடம் கூறியவள்,

சிதாராவைப் பார்த்து, "நீங்க நடத்துங்க மேடம்... " எனக் கூறி கண்ணடித்து விட்டு லாவண்யாவுடன் அங்கிருந்து சென்றாள்.

சிதாரா இன்னும் பதட்டமாக இருக்க,

"மினி... நீயே இப்போ எல்லாரு கிட்டயும் நடந்தத சொல்லிடுவ போல... டென்ஷன் ஆகாம இரு முதல்ல... நான் தான் சொல்றேன்ல... நான் எல்லாம் பாத்துக்குறேன்..." என ஆர்யான் கூற சிதாரா அவனிடம் சரி என தலையாட்டினாள்.

பின் அனைவரும் சொல்லிக் கொண்டு கிளம்ப சிதாராவிடம் வந்த அகிலா,

"நீ மேல ரூம்ல போய் ரெஸ்ட் எடுமா... நான் ஆருவ அனுப்பி வைக்கிறேன்..." என்க,

"சரி அத்த..." என்று விட்டு மேலே இருந்த அறைக்குச் சென்றாள்.

அறையைக் கண்டதும் தான் சிதாராவுக்கு சீராக மூச்சு வந்தது.

அகிலா சடங்கு என்று ஏதாவது ஏற்பாடு செய்திருந்தால் என்ன செய்வது என யோசித்துக் கொண்டிருந்தவள் அறை எந்த அலங்காரமுமின்றி சாதாரணமாக இருக்கவும் நிம்மதியாக இருந்தது.

ஆனால் ஆர்யான் தான் இப்போதைக்கு எதுவும் ஏற்பாடு செய்ய வேண்டாம் எனத் தாயைத் தடுத்திருந்தான்.

வீட்டு முற்றத்தில் கையில் இருந்த மொபைலை வெறித்த வண்ணம் இருந்த ஆர்யானுக்கு முந்தைய நாள் இரவு நடந்தவைகள் நினைவு வந்து அவன் உடல் இறுகியது.

முந்தைய நாள் இரவு

லாவண்யா, அக்ஷரா இருவரும் சிதாராவை நிச்சயத்துக்கு தயார்ப்படுத்தி விட்டு வெளியேற,

அறைக்குள்ளே அடைந்து கிடக்கப் பிடிக்காமல் மொபைலை எடுத்துக் கொண்டு பின் வாயில் வழியாக மண்டபத்திற்கு வெளியே‌ வந்தாள் சிதாரா.

அவளின் கெட்ட நேரம் அனைவரும் நிச்சய வேலைகளில் மூழ்கி இருந்ததால் யாரும் அவள் வெளியே சென்றதைக் கவனிக்கவில்லை.

சிதாரா மண்டபத்துக்கு வெளியே சற்று மறைவான இடத்தில் நின்று காற்று வாங்கிக் கொண்டிருக்க,

திடீரென பின்னாலிருந்து ஒரு கை வந்து முரட்டுத்தனமாக அவள் வாயை அடைத்தது.

அதிர்ந்தவள் கத்தவும் முடியாமல் தன் வாயை மூடியிருந்தவனின் கையை ஒரு கையால் எடுக்கப் பார்க்க,

சிதாராவின் வாயை மூடி இருந்தவனோ இன்னும் அழுத்தமாக அவள் வாயை அடைத்துப் பிடித்து,

"ஒழுங்கு மரியாதையா கத்தி கூச்சல் போடாம என் கூட வந்துடு... இல்லன்னா சங்க அறுத்துறுவேன்..." என மிரட்டினான்.

அவன் யாரென சிதாராவுக்கு அடையாளம் தெரியவில்லை.

முகத்தை மறைத்திருக்க இதற்கு முன் கேட்டிராத குரலாக வேறு இருந்தது.

அவனின் முரட்டுப் பிடி போலவே அவன் குரலும் பயங்கரமாக இருந்தது.

தலையை அங்குமிங்கும் ஆட்டி அவனிடமிருந்து விடுபடப் போராடியவள் கையிலிருந்த மொபைல் ஞாபகம் வரவும் அவனுக்கு தெரியாதவாறு கடைசியாக அழைத்து இருந்த எண்ணுக்கு அழைத்தாள்.

மண்டபத்தினுள் ரஞ்சித்துடன் பேசிக் கொண்டிருந்த ஆர்யான் திடீரென சிதாராவிடமிருந்து அழைப்பு வரவும் யோசனையுடன் சற்று தள்ளி வந்து அழைப்பை ஏற்றான்.

மொபைல் வைப்ரேட் ஆகியதும் அழைப்பு ஏற்கப்பட்டது எனப் புரிந்தவள் அவசரமாக மொபைலைக் கீழே போட்டு விட்டு இரு கையாலும் அந்த முரடனின் கையை விலக்கப் போராடினாள்.

"ம்ம்ம்.... ம்ம்ம்ம்...." என சிதாரா சத்தமெழுப்ப,

அந்த முரடன், "ஹேய்... சத்தம் போட்டா கொன்னுருவேன்...‌ இப்போ ஒழுங்கா என் கூட வரலன்னா உன் கூட சுத்துறானே... அவனையும் சேர்த்து போட்டு தள்ளிருவேன்..." என்க சிதாரா அதிர்ந்தாள்.

அவளுக்கு அழுகையாக வந்தது.

எதுவும் செய்ய முடியவில்லை.

அந்த முரடன் பேசியதைக் கேட்ட ஆர்யான் சிதாராவுக்கு ஏதோ ஆபத்து என விளங்கி மொபைலைக் காதில் வைத்தவாறே வெளியே ஓடி வந்தான்.

மண்டபத்துக்கு வெளியே‌ சுற்றி முற்றிப் பார்க்க எதுவுமே தெரியவில்லை.

அந்த முரடனின்‌ கையை தன் பலம் கொண்ட மட்டும் தள்ளிய சிதாரா,

"விடுடா... யாருடா நீ.. பின் வாசல் வழியா வந்து என்ன எங்க கூட்டிட்டு போகப் போற..." என அழைப்பில் இருந்தவருக்கு தான் எங்கிருக்கிறோம் என விளங்கிக் கொள்ளக் கூறினாள்.

சிதாரா தன் கையை விலக்கி விட்டு கத்தத் தொடங்கவும் அவசரமாக தன் ஜீன்ஸ் பாக்கெட்டிலிருந்த மயக்க மருந்தடித்த கைக்குட்டையை எடுத்து அவள் மூக்கைப் பொத்தினாள்.

அந்த மயக்க மருந்தின் தாக்கத்தில் சிதாரா மயக்கமடைய,

அவளை எடுத்துச் செல்ல சிதாராவின் வாயையும் கையையும் கட்டிக் கொண்டிருக்கும் போது அவனின் பின் பக்கத்திலிருந்து முதுகில் பட்ட உதையில் சிதாராவை விட்டு தள்ளிச் சென்று விழுந்தான் அந்த முரடன்.

சிதாரா கூறியது விளங்கி ஆர்யான் தான் அங்கு வந்திருந்தான்.

ஆர்யான் அங்கு வரவும் பயந்த முரடன் அவசரமாக அங்கிருந்து ஓட்டம் பிடிக்க ஆர்யான் அவனைத் துரத்திச் சென்றான்.

பாதி தூரம் செல்லும் போதே எப்படியோ அந்த முரடன் தப்பித்து விட,

சிதாராவிடம் மீண்டும் ஓடி வந்தான் ஆர்யான்.

அவள் இன்னும் மயக்கத்திலிருக்க,

"மினி... மினி.." என அவள் கன்னம் தட்டியவன் அருகிலிருந்த டெப்பிலிருந்து தண்ணீர் எடுத்து சிதாராவின் முகத்தில் தெளித்தான்.

சிதாரா கண் முழித்தவள் ஆர்யானைக் கண்டு, "ரயன்...." என அவனை அணைத்துக் கொண்டு அழுதாள்.

பயத்தில் அழுது அவளுக்கு மூச்சு வாங்க மீண்டும் வலிப்பு வந்திடுமோ எனப் பயந்த ஆர்யான்,

"எதுவும் ஆகல மினி... அழாதே... அழாதே.. கூல்... கூல்... நான் தான் உன் கூட இருக்கேனே... உனக்கு எதுவும் ஆக விட மாட்டேன்... காம் டவுன்..." என அவளை சமாதானம் செய்ய சற்று ஆசுவாசமடைந்தாள் சிதாரா.

சிதாரா, "யாரு ரயன் அது... எனக்கு ரொம்ப பயமா இருக்கு.. எதுக்காக என்ன கடத்த முயற்சி பண்ணான்.." என பயந்து நடுங்கியவாறு கேட்க,

"அதான் நான் வந்துட்டேனே மினி... நீ பயப்படாதே... முதல்ல கண்ண தொடச்சிக்கோ... யாராவது பாத்துட போறாங்க... வா நாம உள்ள போலாம்... யாரு கிட்டயும் இத பத்தி சொல்லாதே... பயந்துடுவாங்க... உனக்கு எதுவுமில்ல... அமைதியா இரு..." என பல சமாதானம் கூறி சிதாராவை உள்ளே அழைத்துச் சென்றான்.

ஆர்யான் கூறியதால் சிதாரா இது பற்றி யாரிடமும் தெரிவிக்கவில்லை.

ஆனால் அவள் மனதில் பயமும் குழப்பமும் இருந்து கொண்டே இருந்தது.

அது பற்றி யோசித்துக் கொண்டிருந்த ஆர்யான் டூர் சென்று வந்த அன்று இரவு பூஞ்சோலைக் கிராமத்தில் வைத்து பிரணவ் தன்னிடம் கூறியதை எண்ணிப் பார்த்தான்.

இரவு டூர் சென்று வந்த களைப்பில் அனைவரும் தூங்கி இருக்க அகிலாவுடன் பேசுவதற்காக தோட்டத்தில் இருந்தான் ஆர்யான்.

தாயுடன் பேசி விட்டு வீட்டினுள் செல்லத் திரும்ப அங்கு பிரணவ் நின்று கொண்டிருந்தான்.

ஆர்யான் அவனைக் கேள்வியாகப் பார்க்க,

"உனக்கும் தாராவுக்கும் இடைல என்ன இருக்கு..." எனத் திடீரென பிரணவ் கேட்டான்.

அவனைப் பார்த்து சிரித்த ஆர்யான்,

"எங்க ரெண்டு பேருக்கும் இடைல என்ன இருந்தாலும் அது உனக்கு தேவையில்லாதது..." என்றான்.

பிரணவ், "தேவை இருக்கு... நான் தாராவ காதலிக்கிறேன்... அவளும் என்ன தான் காதலிக்கிறா..." என்க சத்தமாக சிரித்தான் ஆர்யான்.

"யாரு நீ அவள லவ் பண்ற... போடா... ஏதாவது அசிங்கமா சொல்லிடப் போறேன்... " என ஆர்யான் கூறவும் பிரணவ்விற்கு கோவம் வந்தது.

பிரணவ், "இங்க பாரு... எனக்கும் தாராவுக்கும் நடந்த சின்ன பிரச்சினைல நாங்க பிரிஞ்சிருக்கோம்.. அவ்ளோ தான்... ஆனா அவ மனசுல நான் மட்டும் தான் இருக்கேன்... வீணா எங்க ரெண்டு பேருக்கும் இடைல வர ட்ரை பண்ணாதே..." என்க,

பிரணவ்வின் சட்டையைப் பிடித்த ஆர்யான், "ச்சீ... திரும்ப திரும்ப உன் வாயால நீ பண்ணின அந்த கருமத்த காதல்னு சொல்லாதே... அது காதலுக்கே அசிங்கம்... உன்னால ஆல்ரெடி மினி ரொம்ப கஷ்டப்பட்டுட்டா... இதுக்கு மேல ஏதாவது பண்ணி அவள நெருங்க ட்ரை பண்ண... என்னோட இன்னொரு முகத்த பார்க்க வேண்டி வரும்..." என மிரட்டினான்.

தன் சட்டையிலிருந்து ஆர்யானின் கையை எடுத்து விட்ட பிரணவ் அவனைப் பார்த்து சிரித்துக் கொண்டு,

"உன்னால முடிஞ்சத பாத்துக்கோ... சும்மா மினி மணின்னு அவ பின்னாடி சுத்திட்டு இருக்காம வேற வேலை இருந்தா பாரு... நீ என்ன பண்ணாலும் சரி... தாரா எனக்கு தான்... நான் அவளை அடஞ்சே தீருவேன்..." என்று விட்டு அங்கிருந்து சென்றான்.

பிரணவ்வால் மீண்டும் சிதாராவுக்கு ஏதாவது பிரச்சினை வரும் என்று தான் சங்கரிடம் கூறி திருமண ஏற்பாட்டை செய்தான்.

அன்று தன்னிடம் சவால் விட்டுச் சென்ற பின் பிரணவ்விடமிருந்து எந்த ஒரு பிரச்சினையும் வராததால் தான் திருமணத்தைத் தள்ளிப் போட்டு விட்டு நிச்சயத்தை மட்டும் முடிக்கலாம் எனக் கூறினான்‌.

ஆனால் நேற்று ஒருவன் சிதாராவைக் கடத்த முயன்றதும் அவளுக்கு ஏதாவது ஆபத்து வரும் எனப் பயந்து இன்றே திருமணத்தை நடத்த வைத்தான்.

நிச்சயம் பிரணவ் தான் இந்த காரியத்தை செய்தான் என்றே ஆர்யான் நினைத்தான்.

ஆனால் இது பற்றி சிதாராவிடம் கூறினால் எங்கே அவள் மீண்டும் பயப்படுவாள் என்று தான் அவளிடம் மறைத்தான்‌.

ஆனால் வந்தவன் இதற்கு முன் பரிச்சயம் இல்லாத ஒருவனாக இருப்பது தான் ஆர்யானுக்கு சற்று குழப்பத்தைத் தந்தது.

கூடிய சீக்கிரம் வந்தவன் யார் எனக் கண்டு பிடிக்க வேண்டும் என நினைத்துக் கொண்டவன் வீட்டினுள் சென்றான்.

நேராக சிதாரா இருந்த அறைக்குள் நுழைய,

அவளோ கட்டிலில் கால்களை மடித்து அமர்ந்து அதனுள் முகம் புதைத்து படுத்திருந்தாள்.

அவள் அருகில் சென்ற ஆர்யான் அவள் தோள் தொட,

சிதாரா பதறி எழுந்தாள்.

"ஹேய்.. ரிலாக்ஸ் மினி... நான் தான்..." என ஆர்யான் கூறவும் தான் சிதாராவுக்கு சீராக மூச்சு வந்தது.

சிதாரா, "நைட் வந்தது யாருன்னு கண்டு பிடிச்சியா ஜிராஃபி... எனக்கு பயமா இருக்கு... அவன் திரும்பவும் வந்தா என்ன பண்றது..." எனக் கேட்க,

"இன்னும் இல்ல மினி... கூடிய சீக்கிரம் அவன் யாருன்னு நான் கண்டு பிடிச்சிடுவேன்... அதான் நான் கூட இருக்கேன்ல... உனக்கு எதுவும் ஆகாது... நீ டயர்டா இருப்ப... தூங்கு..." என்றான் ஆர்யான்.

"நீ தூங்கலயா ஜிராஃபி..." என சிதாரா கேட்க,

ஆர்யான், "நீ இந்த ரூம்ல தூங்கு மினி... நான் அடுத்த ரூம்ல தூங்குறேன்... உனக்கு ஏதாவது தேவைப்பட்டா என்ன கூப்பிடு..." என்க,

சிதாரா சரி என அவனைப் பார்த்து புன்னகைத்தாள்.
 

Nuha Maryam

Moderator
அத்தியாயம் - 16

At the same time

அந்த இருட்டறையில் சோஃபாவில் அமர்ந்து கால் மேல் கால் போட்டு வாயிலிருந்த சிகரெட் மூலம் புகையை ஊதித் தள்ளிக் கொண்டிருந்தான் அவன்.

பின் ஜீன்ஸ் பாக்கெட்டிலிருந்த அலைபேசியை எடுத்து சில எண்களைத் தட்டியவன் மறுபக்கம் அழைப்பு ஏற்கப்பட்டதும் டீபாய் மீதிருந்த ஏஷ்ட்ரேயில் சிகரெட்டின் புகையை அணைத்தான்.

அவன் ஏதும் பேசாமல் அமைதியாக இருக்க,

மறுபக்கம் அழைப்பை ஏற்றவருக்கு இவனின் கோவம் புரிந்தோ என்னவோ,

"சாரி பாஸ்... பக்காவா ப்ளேன் போட்டு தான் பண்ணினோம்... பட் கடைசி நேரத்துல அந்த பொண்ண கட்டிக்க போறவன் குறுக்கால வந்து எல்லாத்தையும் கெடுத்து விட்டுட்டான்..." என்க,

"குடுத்த வேலைய ஒழுங்கா முடிக்க துப்பில்ல... இப்போ வந்து காரணம் சொல்றியா... டாமிட்...." எனக் குரலில் கடுமையை தேக்கி வைத்து கேட்டான்.

மறுபக்கம், "அடுத்த தடவ ஒழுங்கா முடிச்சிடுவோம் பாஸ்..." என்க,

"வேணாம்... இப்போ நிச்சயம் அந்த ஆர்யான் ஃபுல்லா செக்கியுரிட்டி டைட் பண்ணி இருப்பான்... கொஞ்சம் நாள் போகட்டும்... இனிமே நானே இத பாத்துக்குறேன்... உனக்கு பேசின பணம் உன் அக்கவுன்ட்டுக்கு வந்து சேரும்..." என்று விட்டு அழைப்பைத் துண்டித்தான்.

பின் எழுந்தவன் அறையின் விளக்கை ஒளிர விட,

அவனைச் சுற்றியிருந்த சுவர் முழுவதும் சிதாராவின் புகைப்படங்கள் நிறைந்து இருந்தன.

அவனுக்கு நேரெதிரே இருந்த சிதாராவின் ஆளுயர புகைப்படத்தை நெருங்கியவன்,

அதனை வருடி விட்டபடி, "பேப்....." என்றான் கிறக்கமாக.

_______________________________________________

மறுநாள் காலை அழகாக விடிய கண்களை மூடியபடியே எழுந்து சோம்பல் முறித்து விட்டு மெதுவாகக் கண் திறந்த சிதாரா,

"ஆஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்....." என்று கத்தினாள்.

அவள் கண் விழிக்கும் வரை அவளையே பார்த்துக் கொண்டிருந்த ஆர்யானும் சிதாரா கத்தவும்,

"ஆஹ்ஹ்ஹ்.... அம்மா பேய்....." என்று கத்தினான்.

இருவரின் கத்தல் சத்தம் கேட்டு ஓடி வந்த அகிலா,

"என்னாச்சு ஆரு... என்னாச்சு சித்துமா... ஏன் கத்தினீங்க ரெண்டு பேரும்...." என பதறிக் கேட்க அப்போது தான் அமைதியாகினர் இருவரும்.

சிதாரா அவசரமாய், "ஒன்னுமில்ல அத்த... ஏதோ கெட்ட கனவு... கனவுல கொரில்லாக் குரங்கு ஒன்னு வந்துச்சி... அதான்.." என ஆர்யானை முறைத்த வண்ணம் கூற,

அகிலாவின் பார்வை ஆர்யானின் பக்கம் திரும்பியது.

ஆர்யானும், "ஆமா மாம்...‌ எனக்கும் கெட்ட கனவு தான்... கனவுல மோகினி பிசாசொன்னு வந்து கத்துச்சி..." என்றான் சிதாராவை முறைத்துக் கொண்டு.

அகிலாவோ இருவரின் பதிலில் தலையிலடித்துக் கொண்டவர்,

"என்னப் பசங்களோ... கல்யாணமே ஆகிடுச்சி... இன்னும் சின்ன குழந்தைங்கன்னு நெனப்பு போல..." என்று விட்டு சென்றார்.

அவர் சென்றதும் ஆர்யானின் மீது தலையணையை எறிந்தவள்,

"ஏன்டா தடி மாடே... இப்படி தான் உன்னோட மூஞ்ச காட்டி பச்ச புள்ளய காலைலயே பயப்புடுத்துறியா...." என்றாள்.

ஆர்யானும் பதிலுக்கு அவளை நோக்கி தலையைணையை வீசியவன்,

"யாரு... நீயா பச்ச புள்ள... முடிய வேற விரிச்சி போட்டுட்டு பேய் மாதிரி கத்தினா மனுஷன் பயப்படாம இருப்பானா.." எனக் கோவமாகக் கேட்டான்.

கட்டிலிலிருந்து வேகமாக இறங்கிய சிதாரா ஆர்யானின் தலை முடியை இழுத்து,

"என்ன பாத்தா உனக்கு மோகினி பிசாசு மாதிரி இருக்கா ஜிராஃபி..." என அவனை முறைத்துக் கொண்டு கேட்டாள்.

அவள் கையிலிருந்த தன் தலை முடியை விடுவித்தவன்,

"அப்போ உனக்கு மட்டும் என்ன பாத்தா கொரில்லா மாதிரி இருக்கா..." என்றான் பதிலுக்கு.

ஆர்யானைப் பார்த்து உதட்டை ஒருபக்கம் வளைத்துக் காட்டிய சிதாரா குளியலறைக்கு செல்லும் போது கட்டிலில் கால் தடுக்கி கீழே விழப் பார்க்க அவளை அவசரமாகத் தாங்கிப் பிடித்துக் கொண்டான் ஆர்யான்.

சிதாரா அவன் கண்களைப் பார்க்க,

ஆர்யான், "தம் தன நம் தன தம் தன நம் தன னன னான னனா..." என ராகம் பாடினான்.

அவன் காலில் ஓங்கி ஒன்று மிதித்த சிதாரா குளியலறைலக்குள் புகுந்து கொண்டாள்.

ஆர்யான் வலியில் காலைப் பிடித்துக் கொண்டு, "அம்மா......" எனக் கத்தினான்.

ஆர்யானின் சத்தத்தில் அகிலா கீழே இருந்து,

"இப்போ என்னடா...." எனக் கோவமாகக் கேட்க,

வலியில், "புல்டோசர் ஒன்னு கால்ல ஏறிடுச்சுமா...." என்றான்.

ஆர்யானின் பேச்சில் கோவமடைந்த அகிலா,

"திரும்ப கத்திட்டு இப்படி ஏதாவது ஒலரிட்டு இருந்தன்னா வந்து துடப்பக்கட்டையாலே அடிப்பேன்..." என்க,

அவசரமாக வாயை மூடிக் கொண்டான் ஆர்யான்.

சற்று நேரத்தில் இருவரும் ஒருவரையொருவர் முறைத்துக் கொண்டு கீழே வர,

ரஞ்சித், "சாப்பிட வாங்க ரெண்டு பேரும்..." என்றவர் ஆர்யானைப் பார்த்து,

"ஆரு... இன்னைக்கு மறுவீட்டுக்கு போகனும்... இன்னும் கொஞ்ச நேரத்துல சம்பந்தி வருவாரு உங்கள கூட்டிட்டு போக... சீக்கிரம் சாப்பிட்டு ரெடி ஆகுங்க..." என்க சிதாராவின் முகம் மலர்ந்தது.

சாப்பிட்டு முடித்ததும் சங்கர் வர அவருடன் சிதாராவின் வீட்டுக்கு சென்றனர் இருவரும்.

லாவண்யா, அக்ஷரா, ஆதர்ஷ், அபினவ் மாத்திரமே இருந்தனர்.

மற்ற அனைவரும் அன்று காலையிலேயே ஊருக்கு சென்றிருந்தனர்.

நண்பர்கள் சிதாராவையும் ஆர்யானையும் கிண்டல் செய்து கொண்டிருக்க அபினவ்விற்கு அழைப்பொன்று வந்தது.

பேசி விட்டு வருவதாகக் கூறி வெளியே சென்றான் அபினவ்.

பிரணவ் தான் அழைத்திருந்தான்.

பிரணவ், "என்னடா பண்ற இன்னும்... என்கேஜ்மன்டுக்கு போய்ட்டு வரேன் சொல்லிட்டு போன... இன்னுமே திரும்ப வரல..." என்க,

"நீ ஏன்டா ரெண்டு நாளா கால் ஆன்சர் பண்ணல... என்கேஜ்மன்டுக்கு தான் வந்தேன்... பட் சடன்னா மேரேஜ் எடுக்க வேண்டிய நிலமை... அதான் வர முடியல.." என்றான் அபினவ்.

"ஓஹ்...." என்று விட்டு சற்று நேரம் அமைதியாக இருந்த பிரணவ்,

"சரி மச்சான்... சின்ன வேலை ஒன்னு... நான் அப்புறம் பேசுறேன்..." என்று விட்டு அபினவ்வின் பதிலைக் கூட எதிர்ப்பாராது அழைப்பைத் துண்டித்து விட்டான்.

பிரணவ்விடம் பேசி விட்டு திரும்ப ஆர்யான் நின்றிருந்தான்.

அபினவ் அவனைக் கேள்வியாகப் பார்க்க,

"ஜூஸ்..." என்று கையிலிருந்த பழச்சாற்றை நீட்டினான் ஆர்யான்.

அபினவ் நன்றி கூறி பெற்றுக் கொள்ள,

"ஆமா யாரு ஃபோன்ல... பிரணவ்வா..." எனக் கேட்டான் ஆர்யான்.

அபினவ், "ஆமா ப்ரோ... உங்க என்கேஜ்மன்டுக்கு ரெண்டு நாள் முன்னாடி ஏதோ வேலை விஷயமா வெளியூர் போனான்... அதுக்கப்புறம் கால் பண்ணேன்.. எடுக்கவும் இல்ல... இன்னைக்கு தான் வீட்டுக்கு வந்திருக்கான் போல... அதான் நான் ஏன் இன்னும் வரலன்னு கேட்டான்..." என்றான்.

ஆர்யான், "ஆஹ்... ஓக்கே.. ஆமா கேக்கனும்னே இருந்தேன் ப்ரோ... நீங்க எப்போ அக்ஷரா கிட்ட உங்க லவ்வ சொல்லி கல்யாணம் பண்ணிக்க போறீங்க..." என்க,

வெட்கப்பட்ட அபினவ், "சீக்கிரமா சொல்லனும் ப்ரோ... இப்போ தான் உங்க கல்யாணம் முடிஞ்சிருக்கு.. அடுத்து ஆதர்ஷ், லாவண்யா கல்யாணம் முடியட்டும்... அப்புறம் டேரக்ட்டா எங்களோடது தான்..." என்றான்.

அபினவ்வின் பதிலில் புன்னகைத்த ஆர்யான்,

"சரி நீங்க உள்ள போங்க ப்ரோ... நான் முக்கியமான கால் ஒன்னு பேசிட்டு வரேன்...." என்க சரி எனத் தலையசைத்து விட்டு சென்றான் அபினவ்.

ஆர்யான் யாருக்கோ அழைப்பு விடுத்து,

"என்ன ஆச்சுடா... ஏதாவது இன்ஃபர்மேஷன் கெடச்சுதா..." எனக் கேட்டான்.

மறுபக்கம், "தேடிட்டு தான் மச்சான் இருக்கோம்... ஆனா அன்னைக்கு தங்கச்ச கடத்த ட்ரை பண்ணவன் அதுக்கப்புறம் எங்கயோ தலை மறைவாகிட்டான்... சீக்கிரம் கண்டு பிடிச்சிட்டு சொல்றேன்டா..." என்க,

"சரி... எதுக்கும் பிரணவ் மேல ஒரு கண்ணு வெச்சிட்டே இரு... எனக்கு என்னவோ அவன் மேல தான் டவுட்டா இருக்கு..." என்று விட்டு அழைப்பை துண்டித்தான்.

_______________________________________________

"சார்... ஒரு முக்கியமான விஷயம்...." என்க,

அமர்ந்து இருந்த சுழல் நாற்காலியை சுற்றி அவன் பக்கம் திரும்பியவன் கேள்வியாய் அவனை நோக்க,

"அந்த ஆர்யான் நம்ம ஏற்பாடு பண்ணி இருந்த ஆள பத்தின டீட்டைல்ஸ் கலெக்ட் பண்ணிட்டு இருக்கான்... அவன் அவங்க கைல மாட்டிட்டான்னா உங்கள பத்தி வெளிய சொல்லிருவான் சார்.." என்றான்.

மர்மச் சிரிப்பொன்றை அவனை நோக்கி உதிர்த்தவன்,

"ஆர்யானால நிச்சயம் அவனயோ, அவன் மூலமோ என்னையோ கண்டுபிடிக்க முடியாது... நான் குடுத்த வேலைய ஒழுங்கா முடிக்காதவன் இந்த உலகத்துல இருக்குறதுலே அர்த்தம் இல்ல..." என்றவன் தன் முன்னாலிருந்தவன் கையில் மதுக் கோப்பையொன்றைத் திணித்து விட்டு, "சியர்ஸ்..." என்றான்.

தன் எஜமானின் பேச்சுக்கு மறு பேச்சின்றி அவனும், "சியர்ஸ் சார்..." என்றான்.

_______________________________________________

இங்கு சமையலறையில் சிதாரா தன் தாய் தேவிக்கு உதவியாக இருக்க,

தேவி, "என்ன சித்து... உனக்கு எல்லாம் சொல்லி தந்துட்டு இருக்கனுமா... நேத்து தான் கல்யாணம் ஆச்சு... அழகா சேலை கட்டிக்கலாம்ல... சுடிதார் போட்டுட்டு இருக்க.." என்க,

"என்னம்மா நீ...‌ இன்னும் அந்தக் காலத்துலயே இருக்க... அதுவும் நான் இன்னைக்கு சேலை தான் கட்டினேன்... அத்த தான் உனக்கு கம்ஃபர்டபிளா இருக்குறத போட்டுக்க சொன்னாங்க..." என்ற சிதாரா சற்று நிறுத்தி விட்டு,

"அதுவும் என்னோட அத்த ஒன்னும் உங்கள மாதிரி இல்ல.... ரொம்ப ஸ்வீட்... எனக்கு பிடிச்ச மாதிரி இருக்க சொன்னாங்க... நீ தான் எப்ப பாரு என்னை ஏதாவது குறை சொல்லிட்டே இருப்ப..." என தேவியைக் கேலி செய்ய,

"என்னடி சொன்ன.." எனப் பொய்யாக முறைத்த வண்ணம் அவளை அடிக்கத் திரும்ப அதற்குள் அங்கிருந்து ஓடி விட்டாள் சிதாரா.

அவள் சென்றதும் சிரித்துக் கொண்ட தேவி,

"கடவுளே என் பொண்ணு இப்படியே எந்த கஷ்டமும் இல்லாம சந்தோஷமா இருக்கனும்..." என வேண்டிக் கொண்டார்.

ஆனால் அவரது வேண்டுதலை கடவுள் செவி சாய்த்தாரா இல்லையா என பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

அதன் பின் வந்த நாட்களில் சிதாரா, ஆர்யான் இருவரின் வாழ்வும் எந்தவொரு பிரச்சினையும் இன்றி சென்றது.

ஏதாவது ஒரு காரணம் கொண்டு இருவரும் பொய்யாக சண்டை பிடித்துக் கொண்டு திரிய,

அகிலாவுக்கும் ரஞ்சித்துக்கும் இவர்களை என்ன பண்ணினால் தகும் என்ற யோசனை தான்.
_______________________________________________

அன்று இரவு ஆர்யானின் வீட்டில் அனைவரும் உறங்கியிருந்த சமயம் ஆர்யானின் மொபைல் ஒலி எழுப்பியது.

தூக்கக் கலக்கத்துலே கொட்டாவி விட்டபடி, "இந்த நேரத்துல யாரா இருக்கும்.." என ஆர்யான் மொபைலை எடுத்துப் பார்க்க,

திரையில் காட்டிய எண்ணைக் கண்டதும் அவசரமாக அழைப்பை ஏற்று காதில் வைத்தான்.

ஆர்யான், "என்னடா இந்த நேரத்துல கால் பண்ணி இருக்க..." என்க,

மறுபக்கம், "நம்ம தேடிட்டு இருக்குறவன் செத்துட்டான்.." என்க,

முழுத் தூக்கமும் ஆர்யானை விட்டு ஓடியது.

"என்னடா சொல்ற... எப்படி.." என ஆர்யான் கேட்கவும்,

மறுபக்கம் அழைப்பில் இருந்தவன்,

"இப்ப கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி பீச் பக்கத்துல ஏதோ டெட் பாடி இருக்குறதா கால் வந்தது... போய் பார்த்தப்போ யாரோ அவன ரொம்ப கொடூரமா கொன்னு போட்டுட்டு போய் இருக்காங்க... பாடி பத்தின டீட்டைல்ஸ் கலெக்ட் பண்ணினப்போ தான் அவன் தான் அன்னைக்கு தங்கச்ச கடத்த ட்ரை பண்ணவன்னு தெரிய வந்தது..." என்றான்.

தன் நெற்றியை நீவி விட்ட ஆர்யான்,

"இப்போ எப்படிடா அவன அனுப்பினது யார்னு கண்டுபிடிக்கிறது..." எனக் கவலையாகக் கேட்க,

"இவன கொன்னது யாருன்னு முதல்ல கண்டுபிடிச்சா தான் அத பத்தி தெரிஞ்சிக்க முடியும்.. போஸ்ட் மார்டம் பண்ண குடுத்திருக்கோம்... அதோட ரிப்போர்ட் வந்ததும் தான் மத்த விஷயங்கள பத்தி பார்க்க முடியும்... நீ கவலைப்படாதே.. ஏதாவது வழி கிடைக்கும்...‌எதுக்கும் தங்கச்ச பத்திரமா பார்த்துக்கோ..." என்று விட்டு அழைப்பு துண்டிக்கப்பட்டது.

ஆர்யான் கேட்ட செய்தியில் அன்று இரவு முழுவதுமே தூங்காமல் முழித்திருந்தான்.

_______________________________________________

நாட்கள் வாரங்களாகக் கடக்க ஆர்யான், சிதாரா இருவரும் நியுயார்க் செல்லும் நாளும் வந்தது.

ஆர்யானின் வீட்டில் சிதாராவின் பெற்றோர், நண்பர்கள் என அனைவரும் அவர்களை வழி அனுப்ப கூடி இருந்தனர்.

அகிலா, "சித்துமா... ஆரு... உங்க ரெண்டு பேருக்கும் சொல்ல தேவையில்ல.. ஆனா இதுக்கு முன்னாடி நீங்க ஃப்ரன்ட்ஸா இருந்தீங்க... இப்போ அப்படி இல்ல... புருஷன் பொண்டாட்டி ஆகிட்டீங்க... இங்க இருக்கும் வர சும்மா மாறி மாறி சண்டை போட்டுக்கிட்டே இருந்தீங்க... அங்க நாங்க இல்ல.. நீங்க ரெண்டு பேரும் மட்டும் தான் இருக்க போறீங்க... அதனால ஒருத்தொருக்கொருத்தர் துணையா இருங்க..." என்க,

ரஞ்சித், "இதெல்லாம் நீ அவங்களுக்கு சொல்லனுமா அகி... நம்ம முன்னாடி ரெண்டு பேரும் சும்மா ஜாலியா சண்டை போட்டுட்டு இருந்தாங்க... நம்ம புள்ள ரொம்ப பொறுப்பானவன்.. அதெல்லாம் ஒழுங்கா தான் இருப்பான்..." என்றவர் ஆர்யானைப் பார்த்து கண்களை அசைத்தார்.

ஆர்யானும் அதனைப் புரிந்து கொண்டது போல் தலையாட்டினான்.

ஆர்யான், "மாம்.. நீங்க எதுக்கும் கவலைப்பட வேணாம்... ஜஸ்ட் வன் இயர் தானே... மினியோட ஸ்டடீஸ் முடிஞ்சதும் இங்கயே வந்துட போறோம்..." என்றான்.

பின் இரவு நேர விமானம் என்பதால் நண்பர்கள் மாத்திரம் அவர்களுடன் கோயம்புத்தூர் விமான நிலையம் கிளம்பினர்.

ஃப்ளைட் கிளம்பியதும் ஆதர்ஷ் லாவண்யாவுடன் பேசியபடி முன்னே செல்ல,

அவர்கள் பின் செல்ல இருந்த அக்ஷராவின் கைப் பிடித்து தடுத்தான் அபினவ்.

அக்ஷரா அவனைக் கேள்வியாகப் பார்க்க,

"மேடம் ரொம்பத் தான் பிஸி போல... எங்க கூட எல்லாம் பேச டைம் இருக்காதா என்ன..." என்றான் அபினவ்.

அவனைக் குறும்பாகப் பார்த்த அக்ஷரா,

"அது ஒன்னுமில்ல சீனியர்... என்னோட க்ரஷ்ஷோட ஞாபகமாவே இருக்கு... அதான் வேற யாரு கூடவும் பேச டைம் இல்ல..." என்றாள்.

அக்ஷரா க்ரஷ் பற்றி கூறவும் கடுப்பான அபினவ் பட்டென அவள் கையை உதறி விட்டு முன்னே செல்லப் பார்க்க,

அவன் கரத்தைப் பற்றிய அக்ஷரா, "என்னோட க்ரஷ்ஷ பத்தி கேக்காமலே போறீங்களே சீனியர்..." என புன்னகைத்தவாறு கேட்டாள்.

அபினவ் அவள் பக்கம் திரும்பாமலே,

"எனக்கு யார பத்தியும் தெரிஞ்சிக்கனும்னு அவசியம் இல்ல... நீ உன் க்ரஷ் பத்தி யோசிச்சிட்டே இரு..." என்க,

அவன் கையை விட்ட அக்ஷரா பெருமூச்சு விட்டபடி,

"ஹ்ம்ம்.. ஓக்கே... உங்களுக்கு தான் அப்போ நஷ்டம் சீனியர்..." என்றாள்.

அபினவ் ஏதும் பேசாமல் இருக்கவும்,

"உங்களுக்கு ஒன்னு தெரியுமா சீனியர்... எனக்கு அந்த நேரம் அவர் மேல க்ரஷ் மட்டும் தான் இருந்தது... ஆனா அவருக்கு அந்த நேரமே என் மேல டீப் லவ்... நான் எங்க போனாலும் அவர் இருப்பாரு... எனக்கொன்னுன்னா என்ன வேணாலும் பண்ணுவாரு... ஒரு தடவ நான் மார்னிங் சாப்டாம மயக்கம் போட்டு விழுந்தப்போ அவர் தான் முதல்ல வந்து என்ன கேர் பாத்துக்கிட்டாரு.. ரொம்ப பதறிட்டாரு... என்ன ரேக்கிங் பண்ண பசங்கள கூட அவரு விட்டு வெச்சதில்ல... அதனால எனக்கும் இப்போ அவர் மேல லவ் வந்திடுச்சு..." என்ற அக்ஷரா,

"ஹேய் வனி... எங்க போற என்ன விட்டு... இரு நானும் வரேன்..." எனக் கத்தியவள் லாவண்யாவிடம் ஓடினாள்.

அக்ஷரா கூறியதைக் கேட்டு கடுப்பாக இருந்த அபினவ் அவள் கூறிய சம்பவங்களைக் கேட்டு முகம் மலர்ந்தவன்,

"அப்போ நான் தான் உன் க்ரஷ்ஷா..." என நினைத்தவன் சந்தோஷமாக அக்ஷராவைப் பார்க்க அவளோ ஏற்கனவே அங்கிருந்து சென்றிருந்தாள்.

"ஹுஹூ....... என் சாரா என்ன லவ் பண்ணுறா..." என நின்ற இடத்திலே துள்ளிக் குதித்து கத்திய அபினவ் சுற்றி இருந்தவர்கள் தன்னை ஒரு மாதிரி பார்ப்பதைக் கண்டு அவசரமாக அங்கிருந்து சென்றான்.

_______________________________________________

அன்று போல இன்றும் அதே அறையில் இருட்டில் அமர்ந்திருந்தான் அவன்.

"ஹஹஹஹா..." எனப் பேய் சிரிப்பு சிரித்தவன் வாயிலிருந்த சிகரெட் மூலம் புகையை வெளியிட்டு விட்டு,

"ஆர்யான்..... ஆர்யான்.... பெரிய தப்பு பண்ணிட்ட.... ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்ட... என்னோட பேபிய பாதுகாக்குறேன்ற பேர்ல அவள நான் இருக்குற இடத்துக்கே கூட்டிட்டு வராய்.... இனிமே என்ன யாராலையும் தடுக்க முடியாது..... ஹஹஹா... ஹஹஹஹஹஹா...." எனக் கூறிச் சிரித்தான்.

அவன் இருந்த அறைக்கு வெளியே இருந்த இருவரும்,

"இவருக்கென்ன பைத்தியம் பிடிச்சிருச்சா..." என்ற ரீதியில் பார்த்துக் கொண்டனர்.

_______________________________________________

முழுதாக ஒரு நாள் கடக்க ஆர்யான், சிதாரா இருவரும் நியுயார்க்கை அடைந்தனர்.

நியுயார்க்கில் அப்போது பகல் நேரம்.

முதலில் சிதாரா தங்கியிருந்த அறைக்குச் சென்றவர்கள் அதனை வெகேட் செய்து விட்டு அங்கிருந்த அவளது உடைமைகள் அனைத்தையும் எடுத்துக் கொண்டு ஆர்யான் தங்கியிருந்த வீட்டை அடைந்தனர்.

ஆர்யான் மட்டும் தான் தங்கி இருப்பதால் ஓரளவு சிறிய வீடே எடுத்திருந்தான்.

ஆர்யான், "மார்னிங் வேலைக்கு போனா அப்புறம் நைட் தூங்க மட்டும் தான் இங்க வரதால சின்ன வீடொன்னு தான் வாங்கி இருந்தேன் மினி... இன்னும் வன் வீக்ல போல ரெண்டு பேருக்கும் கம்ஃபர்டபிலான நல்ல வீடொன்னா பாத்து ஷிஃப்ட் ஆகலாம்... " என்க,

"இல்ல ஜிராஃபி... இந்த வீடே ஓக்கே... எனக்கு இப்படி சின்னதா அழகா இருக்குற வீடு தான் பிடிக்கும்... வேற வீடு ஷிஃப்ட் பண்ணவெல்லாம் அவசியமில்ல..." என வீட்டை ரசித்தபடி கூறினாள் சிதாரா.

"பட் மினி... இந்த வீட்டுல ஒரு பெட் ரூம் தான் இருக்கு...." என ஆர்யான் இழுக்க,

அமைதியானவள் சற்று நேரத்தில், "அதுக்கென்ன ஜிராஃபி... அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம்... இந்த வீடு எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.. அதுவுமில்லாம எனக்காக நீ தரைல படுக்க மாட்டியா ஜிராஃபி..." என பாவம் போல் முகத்தை வைத்துக் கொண்டு கேட்டாள்.

ஆர்யான், "அடிங்கு.... நீ வேணா தரைல படுத்துக்கோ... என்னால எல்லாம் முடியாது... நான் வெளிய போய் கொஞ்சம் திங்க்ஸ் வாங்கிட்டு வரேன்... நல்ல பொண்டாட்டி போல புருஷன் வர முன்னாடி வீட்ட க்ளீன் பண்ணி வை..." என்றவன் அவசரமாக வெளியே ஓடினான்.

இல்லாவிட்டால் பொண்டாட்டி எனக் கூறியதற்கு யார் சிதாராவிடம் வாங்கிக் கட்டிக்கொள்வது.

"பொண்டாட்டின்னு சொன்ன வாய்க்கு சாப்பாடு கிடையாதுடா..." எனக் கத்திய சிதாரா ஆர்யான் கண்ணை விட்டு மறைந்ததும் சிரித்துக் கொண்டு வீட்டை க்ளீன் செய்ய ஆரம்பித்தாள்.

ஆர்யான் வரும் போது சிதாரா வீட்டை ஒழுங்கு படுத்தி விட்டு சமைத்தும் முடித்திருந்தாள்‌.

"என்ன மினி... நீயே சமைச்சி முடிச்சிட்ட போல... சமைக்க தேவையான ஐடம்ஸ் எடுக்க தான் நான் போய் இருந்தேன்... அப்படியே வீட்டுக்கு தேவையான திங்க்ஸ் கொஞ்சமும் வாங்கிட்டு வந்தேன்... அதான் லேட் ஆகிடுச்சு..." என வீட்டினுள் நுழைந்தபடி ஆர்யான் கூற,

"பெரிசா எதுவுமில்ல ஜிராஃபி.. கிச்சன்ல மேகி பேக்கட் இருந்துச்சு.. அதை தான் குக் பண்ணேன்..." என்றவள் சமைத்த நூடுல்ஸை இருவருக்கும் தட்டில் போட்டு எடுத்து வந்தாள்.

கை கழுவி விட்டு வந்த ஆர்யான் அதனை சாப்பிட்டுக் கொண்டு,

"உனக்கு எப்போ மினி யுனிவர்சிட்டி அகைன் ஸ்டார்ட் ஆகும்.." என்க,

அவன் தலையில் குட்டிய சிதாரா,

"எத்தன தடவ சொல்றது சாப்பிட்டுக்கிட்டு பேசாதேன்னு..." என்றாள்.

ஆர்யான் தலையில் கை வைத்து சிதாராவைப் பாவமாகப் பார்க்க,

"என்ன லுக்கு... சாப்டு... டே ஆஃப்டர் டுமோரோ தான் ஸ்டார்ட்... நாளைக்கு ஃபுல்லா ரெஸ்ட் எடுக்கனும்.. ஃபுல் டே ட்ராவல் பண்ணது செம்ம டயர்டா இருக்குப்பா..." என்றாள் சிதாரா.

"எல்லாரும் சொல்றது சரி தான்... கல்யாணத்துக்கு அப்புறம் எல்லா பசங்களுக்கும் இந்த பொண்டாட்டி கொடுமை இருக்கு போல..." என முணுமுணுத்தான் ஆர்யான்.

சிதாரா, "ஏதாவது சொன்னியா ஜிராஃபி..." என ஆர்யானைப் பார்த்து புருவம் உயர்த்திக் கேட்க,

அவளைப் பார்த்து இளித்த ஆர்யான்,

"இ.. இல்ல மினி.. நான் சாப்டு முடிச்சிட்டேன்னு சொன்னேன்..." என்றவன் தட்டை எடுத்துக் கொண்டு அவசரமாக சமையலறைக்குள் நுழைந்தான்.

சிதாராவுக்கு ஆர்யானைப் பார்த்து சிரிப்பாக வந்தது.

ஆனாலும் அவனை அடிக்கடி சீண்டிக் கொண்டிருப்பதும் அவளுக்கு பிடித்திருந்தது.

இரவானதும் இருவரும் உறங்கத் தயாராக,

ஆர்யான், "நீ பெட்ல படுத்துக்கோ மினி... நான் ஹால்ல படுத்துக்குறேன்..." என்க,

"ச்சேச்சே.. அதெல்லாம் வேணா ஜிராஃபி... இவ்வளவு பெரிய பெட் இருக்கு தானே... நீயும் ஒரு ஓரமா தூங்கு... நான் ஒன்னும் அவ்வளவு கொடுமைக்காரி எல்லாம் இல்ல..." என்றாள் சிதாரா.

ஆர்யான் அவளை சந்தேகமாகப் பார்க்க,

சிதாரா, "என்னடா பாக்குற... ஏன் உனக்கு தூங்கக் கிட்ட உருண்டு போற இல்லன்னா கை கால தூக்கி போடுற பழக்கம் இருக்கா என்ன.." என்க,

அவளைப் பார்த்து முறைத்த ஆர்யான்,

"நான் எல்லாம் நைட்டு தூங்கினா மார்னிங் வரையும் அசையாம அப்படியே படுத்திருப்போம்... கேக்குறா பாரு கேள்வி...லைட் ஆஃப் பண்ணிட்டு வந்து தூங்கு.. டயர்டா இருக்கு.." என்று விட்டு சென்று கட்டிலில் ஒரு பக்கம் படுத்துக் கொண்டான்.

ஆர்யான் கண்களை மூடவும் சிதாரா அவசரமாக தனது லக்கேஜ் அனைத்தையும் இழுத்து ஏதோ தேட,

ஆனால் அவள் தேடியது தான் கிடைக்கவில்லை.

சிதாரா மனதில், "ஹையோ... என் ஹக்கி பிலோவ காணமே... ஒரு வேளை வீட்டுலயே வெச்சிட்டு வந்துட்டேனா... அது இல்லாம எனக்கு தூக்கம் போகாதே... " என்றவள் ஆர்யானைப் பார்க்க அவனோ ஏற்கனவே நல்ல உறக்கத்தில் இருந்தான்.

தயங்கித் தயங்கி கட்டிலின் அருகே சென்றவள் ஒரு ஓரமாக படுத்துக் கண்ணை மூடினாள்.

சிதாரா கட்டிலில் வந்து படுத்துக் கொள்ள அவ்வளவு நேரம் தூங்கி விட்டது போல் நடித்த ஆர்யான் அவள் பக்கம் திரும்பி மெதுவாக ஒற்றைக் கண் திறந்து பார்க்க,

சிதாரா முடிந்த வரை கட்டிலின் ஓரமாக சென்று படுத்திருப்பதைக் கண்டு புன்னகைத்தான்.
 

Nuha Maryam

Moderator
அத்தியாயம் - 17

மறுநாள் அழகாய் விடிய முதலில் ஆர்யான் தான் கண் முழித்தான்.

குனிந்து பார்க்க சிதாரா அவன் நெஞ்சில் தலை வைத்து ஒரு கையால் அவனை அணைத்தபடி காலையும் அவன் மீது தூக்கிப் போட்டு படுத்திருந்தாள்.

ஆர்யானுக்கு அவளைப் பார்க்க சிரிப்பாக வந்தது.

இரவு அவள் தனக்கு போட்ட சட்டம் என்ன.. இப்போது அவளே அதனை உடைத்து விட்டு தன்னை அப்பியபடி படுத்துக் கொண்டிருப்பதென்ன...

ஆர்யான் அவள்‌ முகத்தையே பார்த்துக் கொண்டிருக்க,

சிதாராவின் கருமணிகள் அசைவது தெரிந்ததும் அவசரமாக கண்ணை மூடிக் கொண்டான்.

கண் விழித்த சிதாரா முதலில் கண்டது தன் முகத்துக்கு மிக நெருக்கமாக இருந்த ஆர்யானின் முகத்தைத் தான்.

பதறியபடி எழுந்து அமர்ந்தவள் தலையில் அடித்தபடி,

"என்ன காரியம் பண்ணி வெச்சிருக்க சித்து.... நைட் பெரிய இவ மாதிரி ஜிராஃபி கிட்ட பேசிட்டு இப்போ அவன கட்டிப் பிடிச்சுக்கிட்டே தூங்கி இருக்கேன்... ஐயோ.... இவனுக்கு தெரிஞ்சா நம்மள ரொம்ப கலாய்ப்பானே..." என தனக்கே சொல்லிக் கொண்டவள் மெதுவாக ஆர்யானைப் பார்க்க அவன் இன்னும் நல்ல உறக்கத்தில் இருந்தான்.

இல்லை இல்லை உறங்குவது போல் நடித்துக் கொண்டிருந்தான்.

அப்போது தான் கண் விழிப்பது போல ஆர்யான் சோம்பல் முறித்தபடி எழுந்து கொள்ள,

சிதாரா எழுந்தமர்ந்து தன்னைப் பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டவன்,

"குட் மார்னிங் மினி..." என்றான் புன்னகையுடன்.

ஆர்யானுக்கு தான் அவனை அணைத்தபடி உறங்கியது தெரிந்திருக்குமோ என பதட்டமாக இருந்தவள் அவனுக்கு, "கு... குட் மார்னிங் ஜிராஃபி.." என்றாள் பதிலுக்கு.

சிதாராவின் பதட்டமான முகத்தைக் கண்டு ஆர்யானுக்கு சிரிப்பு வர அதனைக் கட்டுப்படுத்தியவன் முகத்தை சுருக்கியவாறு தன் கை கால் என தேய்க்கவும்,

"என்... என்னாச்சு ஜிராஃபி..." என அவசரமாக கேள்வி வந்தது சிதாராவிடமிருந்து.

ஆர்யான், "தெரியல மினி... அன்னைக்கு விளையாட்டுக்கு சொன்னது இன்னைக்கு நிஜமாகிடுச்சு போல... உண்மையாவே மோகினி பிசாசொன்னு என் மேல ஏறி அடிச்சு போட்டது போல இருக்கு... தூங்கும் போது கூட நெஞ்சில ஏதோ வெய்ட்டா இருந்தது போல தோணுச்சு... ரொம்ப டயர்ட்னால கண்ண தெறந்து பார்க்க முடியல..." என்கவும் சிதாரா அதிர்ந்தாள்.

சிதாரா ஆர்யானைப் பார்த்து பொய்யாக சிரித்துக் கொண்டு, "ஏதாவது கனவா இருக்கும் ஜிராஃபி... அப்படில்லாம் ஏதும் இருக்காது... சரி நான் குளிச்சிட்டு வரேன்..." என்றவள் அவசரமாக குளியலறைக்குள் நுழைந்து கொண்டாள்.

அவள் சென்றதும் சிரித்துக் கொண்ட ஆர்யான் எழுந்து கட்டிலின் கீழே மறைத்து வைத்திருந்த சிதாராவின் ஹக்கி பிலோவை எடுத்தவன் அதனைப் பார்த்து,

"சாரி மை டியர்... இனிமே உனக்கு இங்க வேலை இல்ல..." என்றவன் அதனைத் தூக்கி கப்போர்டுக்கு மேலே வெளியே தெரியாதவாறு மறைத்து வைத்தான்.

சிதாரா குளித்து முடித்து வெளியே வர ஆர்யான் அறையில் இருக்கவில்லை.

பின் இருவருக்கும் காலை உணவை தயாரித்து விட்டு அதனை எடுத்து டைனிங் டேபிளில் வைக்க குளித்து முடித்து ஆர்யான் வெளியே வந்தான்.

ஆர்யான், "மினி... எனக்கு ஆஃபிஸ்ல இருந்து கால் வந்திடுச்சு.. வன் மந்த் மேல லீவ் எடுத்துட்டேன்ல... கண்டிப்பா போயாகனும்.. சாரி மினி... " என்க,

"இதுக்கு எதுக்கு ஜிராஃபி சாரி எல்லாம் சொல்லிக்கிட்டு... ஏதோ சிச்சுவேஷன் நம்ம கல்யாணம் நடக்க வேண்டிய கட்டாயம்... அதுக்காக நீ உன்னோட ரெகியுலர் ரௌட்டின சேன்ஜ் பண்ணனும்னு ஒன்னும் அவசியமில்ல... எப்பவும் போல இரு..." என சிதாரா கூற,

"ஓஹ்..... ஆமால..." என்று மட்டும் கூறி விட்டு அமைதியாகி விட்டான்.

சிதாரா அவனை யோசனையுடன் பார்த்தவள்,

"ஆமா கேக்கனும்னே இருந்தேன்... உன் அப்பா தான் அவ்வளவு பெரிய கம்பனி வெச்சி நடத்துறார்ல... அப்படி இருக்கும் போது நீ எதுக்கு இங்க வந்து யாரோ ஒருத்தர் கீழ வேலை பாத்து கஷ்டப்படுற..." என்க,

அவளைப் பார்த்து புன்னகைத்த ஆர்யான்,

"எனக்கு க்ரேட் பிஸினஸ்மேன் ரஞ்சித்தோட பையனா இந்த உலகத்துக்கு தெரியிரத விட என் சொந்த முயற்சியால ஜெயித்து ஆர்யானா இந்த உலகத்துக்கு என்ன அறிமுகப்படுத்தனும்னு தான் ஆசை... அதுவுமில்லாம டாடோட கம்பனில வர்க் பண்றது எனக்கு பிரச்சினை இல்ல... பட் சாதாரண எம்ப்ளாயியா இருந்து அதுக்கப்புறம் முன்னேறி வரனும்னு நினைக்கிறேன்... பட் நான் அங்க சாதாரண எம்ப்ளாயியா வர்க் பண்றது டாடுக்கு பிடிக்கல... அவருக்கடுத்து நான் அந்த கம்பனிய எடுத்து நடத்தனும்னு விரும்புறாரு... அதான் எனக்கு எக்ஸ்பீரியன்ஸ் வேணும்னு டாட் கூட சண்டை போட்டு அவர சம்மதிக்க வெச்சி இங்க வர்க் பண்றேன்... அதுக்கப்புறம் சொந்தமா பிஸ்னஸ் ஸ்டார்ட் பண்ண ஐடியா..." என்றான்.

தன் சொந்தக் காலில் நிற்க வேண்டும் என்ற ஆர்யானின் உறுதி
சிதாராவுக்கு பெருமையாக இருந்தது.

ஆர்யான் ஆஃபீஸ் செல்ல அவசரமாக சாப்பிட்டு முடித்தவன்,

"சரி மினி... நான் கிளம்புறேன்... நீ இன்னைக்கு ஃபுல்லா ரெஸ்ட் எடுக்கனும்னு சொன்னேல்ல... டார் லாக் பண்ணிக்கோ... ஏதாவதுன்னா எனக்கு உடனே கால் பண்ணு... பாய்.." என்று விட்டு சென்றான்.

ஆர்யான் சென்றதும் கதவை அடைத்து உள்ளே வந்தவள் பெருமூச்சு விட்டபடி,

"செம்ம போரா இருக்கே... இப்பதே தூங்கவும் என்னவோ போல இருக்கு... பேசாம வீட்ட கொஞ்சம் ஆர்கனைஸ் பண்ணலாம்.. ஜிராஃபிக்கும் சர்ப்ரைசா இருக்கும்..." என்றவள் வீட்டை சற்று மாற்றி அமைக்க ஆரம்பித்தாள்.

சற்று நேரத்தில், "முதல்ல போய் வீட்டுக்கு தேவையான திங்க்ஸ் கொஞ்சம் வாங்கிட்டு வரலாம்... இந்த ஜிராஃபி எதுவுமே வாங்கியில்ல... பேசிக் ஐட்டம்ஸ மட்டும் வாங்கி வெச்சி இருக்கான்... கொஞ்சம் கூட ரசனையே இல்லாதவன்... " என்றவள் தான் வெளியே சென்று விட்டு வருவதாக ஆர்யானிடம் கூற அழைக்க,

அவனோ ஒரு மாதத்திற்கு மேல் விடுமுறை எடுத்துக் கொண்டதால் தலைக்கு மேல் வேலை இருக்க சிதாராவின் அழைப்பைக் கவனிக்கவில்லை.

பல முறை முயன்றும் ஆர்யான் அழைப்பை ஏற்காததால் வந்து சொல்லிக் கொள்ளலாம் என நினைத்து வீட்டை மூடிக் கொண்டு வெளியேறினாள் சிதாரா.

வீட்டிற்கு மிக அருகில் இருந்த கடையொன்றுக்குத்தான் வந்திருந்தாள்.

தனக்கு மற்றும் வீட்டிற்கு என தேவையானவற்றை வாங்கியவள் அடிக்கடி பின்னால் திரும்பி பார்த்துக் கொண்டாள்.

யாரின் பார்வையோ தன் முதுகைத் துளைப்பது போல் ஒரு எண்ணம்.

வீட்டை நோக்கி நடந்தவள் மனதில்,

"ஏன் எனக்கு யாரோ என்ன ஃபாலோ பண்ற மாதிரியே ஃபீல் ஆகுது... ச்சீச்சீ... இருக்காது... நான் தான் சும்மா கண்டதையும் நெனச்சிட்டு இருக்கேன்... இத பத்தி ஜிராஃபி கிட்ட சொன்னா அவன் வேற டென்ஷன் ஆகுவான்..." என நினைத்தபடி வந்தவள் வீட்டை அடைந்ததும் அவசரமாக உள்ளே சென்று கதவைத் தாளிட்டாள்.

மனதை சமாதானப்படுத்திக் கொண்டாளும் உள்ளுணர்வு ஏதோ சொல்லிக் கொண்டிருந்தது.

ஆனால் அது என்ன என்று தான் சிதாராவால் புரிந்து கொள்ள முடியவில்லை.

தன்னால் முடிந்தளவு வீட்டை ஒழுங்குபடுத்தியவள் அதனை ரசித்தபடி,

"பரவால்ல சித்து... அழகா தான் இருக்கு... ஜிராஃபி வந்தா சர்ப்ரைசா இருக்கும்..." என்றவள்,

"ஓக்கே நம்ம ரூமயும் கொஞ்சம் ரீஅரேன்ஜ் பண்ணலாம்..." என்று அவர்களின் அறைக்குள் நுழைந்தாள்.

கட்டிலின் அருகே சிறிய டிராயர் ஒன்றிருப்பதை அப்போது தான் கவனித்தவள் அதனை என்னவெனத் திறந்து பார்க்க இரண்டு டயரிகள் இருந்தன.

சிதாரா, "நம்ம ஜிராஃபிக்கு டயரி எழுதுற பழக்கம் எல்லாம் இருக்கா என்ன... இது வரைக்கும் நம்ம கிட்ட சொல்லியே இல்ல... அதுவும் நான் இங்க வந்த இயர்ல இருந்து தான் இருக்கு... பாக்கலாம் என்னன்னு.. நம்ம பையன் தானே..." என புன்னகையுடன் கூறிக் கொண்டவள் முதல் டயரியை எடுத்து வாசிக்க அமர சரியாக காலிங்பெல் சத்தம் கேட்டது.

அதனை இருந்த இடத்திலே வைத்தவள் யாரெனப் பார்க்க ஆர்யான் தான் வந்திருந்தான்.

அவன் முகத்தைப் பார்க்கும் போதே மிகுந்த களைப்பாக இருக்கிறான் என சிதாராவுக்கு விளங்கியது.

உள்ளே வரும் போதே பேக்கைத் தூக்கி சோஃபாவில் போட்ட ஆர்யான்,

"செம்ம டயர்டா இருக்கு மினி... ரொம்ப வர்க்... முடியல தலைவலி வேற படுத்துது... ப்ளீஸ் மினி.. நல்ல சூடா ஒரு கப் காஃபி கிடைக்குமா..." என்க,

சிதாரா அவசரமாக அவனுக்கு காஃபி கலந்து எடுத்து வந்து கொடுத்தாள்.

ஆர்யான் அதனைக் குடித்து முடிக்க தைலம் எடுத்து வந்தவள், "பின்னாடி சாஞ்சிக்கோ ஜிராஃபி.. நான் தைலம் தேச்சி விடுறேன்... " என சிதாரா கூற,

ஆர்யான், "வேணாம் மினி... நீ போய் உன் வேலைய பாரு... உனக்கு நாளைக்கு யுனி போக இருக்குல்ல... நான் பாத்துக்குறேன்.." என்றான்.

சிதாரா இடுப்பில் கையூன்றி அவனை முறைக்க அவளைப் பார்த்து புன்னகைத்த ஆர்யான் எதுவும் கூறாமல் பின்னால் சாய்ந்து கொண்டான்.

ஆர்யான் பின்னால் சாய்ந்து கண்ணை மூட சிதாரா தைலத்தை எடுத்து அவன் நெற்றியில் தடவி விட்டாள்.

ஆர்யானின் மனதில் பல்வேறு சிந்தனைகள் ஓடின.

_______________________________________________

ஆர்யான் ஆஃபீஸ் சென்றதும் ஒரு மாதத்திற்கான வேலைகளும் மீதமிருக்க அதனுள் மூழ்கினான்.

சில மணி நேரத்திலே அவனின் மொபைலுக்கு ஒரு அழைப்பு வந்தது.

அதனை ஏற்று காதில் வைக்க மறுபக்கம் யாரோ சத்தமாக சிரிக்கும் சத்தம்.

"இருக்குற வேலை பத்தாதுன்னு எவன்டா இது கால் பண்ணி பேய் மாதிரி சிரிச்சிட்டு இருக்கான் லூசுப் பையன்.." என நினைத்த ஆர்யான்,

"யோவ்... யாருயா நீ... கால் பண்ணினா பேசணும்... அதை விட்டுட்டு பைத்தியம் மாதிரி சிரிச்சிட்டு இருக்க... ஆல்ரெடி தலைக்கு மேல வேலை.. இதுல நீ வேற கடுப்ப கிளப்பிக்கிட்டு..." என ஏற்கனவே இருந்த களைப்பில் மறுபக்கம் இருந்தவனை வறுத்தெடுத்தான்.

மறுபக்கம், "என்ன மிஸ்டர்.ஆர்யான்... நாம தேடிட்டு இருந்தவன் செத்துட்டானே... இப்போ எப்படி வந்தது யாருன்னு கண்டுபிடிக்கிறதுன்னு டென்ஷனா இருக்குறியா என்ன..." என மீண்டும் அதே சிரிப்பு.

மறுபக்கம் இருந்தவனின் பேச்சில் அதிர்ந்த ஆர்யான்,

"ஏ...ஏய்... யாரு நீ... எதுக்காக மினிய கடத்த ட்ரை பண்ற... தைரியம் இருந்தா முன்னாடி வாடா... இப்படி கோழை மாதிரி ஒழிஞ்சி ஒழிஞ்சி சீன் காட்டுறியா... என்ன தாண்டி உன்னால மினிய ஒன்னும் பண்ண முடியாதுடா..‌" என ஆத்திரத்தில் கத்தினான்.

"ஹஹஹா... என்ன ஆர்யான் இது... நீ இப்படி பேசினா நான் உடனே முன்னாடி வருவேன்னு நினைச்சியா... நிச்சயம் உன் முன்னாடி வருவேன் ஆர்யான்... ஆனா உன்னால என்ன கண்டு பிடிக்க முடியாது... வந்து என் பேபிய தூக்குறேனா இல்லையான்னு வெய்ட் பண்ணி பாரு..." என மறுபக்கம் இருந்தவன் நக்கலாகக் கூறி விட்டு அழைப்பைத் துண்டித்தான்.

இவ்வளவு நாளும் பிரணவ் தான் ஏதோ செய்கிறான் என ஆர்யான் நினைத்துக் கொண்டிருக்க திடீரென இப்போது யாரோ ஒருவன் அழைத்து இவ்வாறு கூறவும் அவனுக்கு என்ன நடக்கிறதென்றே புரியவில்லை.

அவனுக்கு அழைப்பு வந்த எண்ணை அனுப்பி யாரெனக் கண்டு பிடிக்கக் கூறியவன் அதற்கு மேல் வேலையில் கவனம் செல்லாம் உடனே கிளம்பினான்.

_______________________________________________

அந்த அழைப்பு பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தவனின் புருவம் சுருங்க சிதாரா அதனை நீவி விட்டாள்.

பட்டென ஆர்யான் தன்‌ நெற்றி மீதிருந்த சிதாராவின் கரத்தை பிடித்து அழுத்த,

சிதாரா, "என்னாச்சு ஜிராஃபி... ஏன் டல்லா இருக்க.. இன்னும் தலைவலி குறையலயா..." எனக் கேட்டாள் கவலையாக.

கண்களை இறுக்கி மூடி தன்னை சமன்படுத்திக் கொண்ட ஆர்யான் சிதாராவின் கைகளை விடுவித்து விட்டு கண்களைத் திறந்து புன்னகையுடன்,

"எதுவும் ப்ராப்ளம் இல்ல மினி... ஹெவி வர்க்... அதான் கொஞ்சம் தலைவலி... உன்னோட காஃபிக்கும் தைலத்துக்கும் இப்போ பெட்டரா ஃபீல் பண்றேன்... ஆமா என்ன இது வீட்டுல எல்லாம் புதுசா இருக்கு... " என்க,

சிதாரா, "அழகா இருக்குல்ல ஜிராஃபி.. நான் தான் கடைக்கு போய் எல்லாம் வாங்கிட்டு வந்து வீட்ட அரேன்ஜ் பண்ணேன்..." எனக் கண்கள் பளிச்சிடக் கூறினாள்.

ஆர்யான், "என்னது... நீ தனியா வெளிய போனியா... ஏன் என் கிட்ட சொல்லிட்டு போகல மினி... எதுவா இருந்தாலும் எனக்கு கால் பண்ணுன்னு சொல்லிட்டு தானே போனேன்..." என ஏற்கனவே தனக்கு வந்த அழைப்பில் பதட்டமாக இருந்தவன் கத்த சிதாராவின் முகம் வாடியது.

இதுவரை எதற்குமே தன் மீது கோவப்பட்டோ கத்தியோ இல்லாதவன் திடீரென இப்படிப் பேசவும் சிதாராவுக்கு வேதனையாக இருந்தது.

ஆனால் தான் அவனுக்கு அழைத்தும் ஆர்யான் தான் அழைப்பை ஏற்காமல் இருந்து விட்டு இப்போது தன்னைத் திட்டவும் சிதாரா,

"எதுக்கு இப்ப சும்மா கத்துற... நான் என்ன சின்ன குழந்தையா தனியா போக பயப்பட... இதுக்கு முன்னாடியும் இங்க இருக்கும் போது நான் தனியா வெளியே போவேன் தானே... நீ என்ன கல்யாணத்துக்கு அப்புறம் புதுசா சட்டம் எல்லாம் போடுற... அப்படி இருந்தும் உன் கிட்ட சொல்லிட்டு போக தான் நான் அத்தனை தடவ கால் பண்ணேன்... நீ தான் அட்டன்ட் பண்ணவே இல்ல..." என்றாள் கோவமாக.

ஆர்யான், "அப்போ இருந்த சிட்டுவேஷன் வேற மினி.. இப்ப உன்..." என பாதியில் நிறுத்த,

"எதுக்கு நிறுத்திட்ட... சொல்லு... என்ன மாறிடுச்சு இப்போ மட்டும்..." என சிதாரா அவனின் பதட்டமான முகத்தைப் பார்த்து சந்தேகத்துடன் கேட்க,

"இல்ல... மினிக்கு இது எதுவும் தெரிய வேணாம்.. அவள் வீணா டென்ஷன் ஆகிறுவா... அது அவளோட ஹெல்த்த தான் பாதிக்கும்..." என மனதில் நினைத்துக் கொண்ட ஆர்யான் சிதாராவிடம்,

"சாரி மினி... வர்க் டென்ஷன்... அதான் தேவையில்லாம உன்ன கத்திட்டேன்... விடு... நீ எவ்வளவு ஆசையா பண்ணி இருப்ப... நான் சும்மா கத்தி உன் மூடயும் கெடுத்து விட்டுட்டேன்... எனக்கு டின்னர் வேணாம்... டயர்டா இருக்கு நான் தூங்குறேன்... நீ நாளைக்கு யுனி போக தேவையானத எடுத்து வை..." என்றவன் சிதாராவின் பதிலைக் கூட எதிர்ப்பார்க்காது அறைக்குள் நுழைந்து கொண்டான்.

சிதாராவிற்கு ஆர்யானின் நடவடிக்கை வித்தியாசமாக இருந்தது.

ஆனால் அவனாக கூறாமல் தான்‌ என்ன செய்ய முடியும் என அமைதியாகி விட்டாள்.

பின் சிதாராவும் சாப்பிடாது எல்லாம் முடித்து விட்டு அறைக்கு வர ஆர்யான் கட்டிலில் சாய்ந்து கால்களை நீட்டி ஒரு கையால் முகத்தை மூடியபடி அமர்ந்திருந்தான்.

அவனைத் தொந்தரவு செய்யாமல் இரவு உடைக்கு மாறி வந்த சிதாரா ஆர்யான் இன்னும் அதே நிலையில் இருக்கவும் அவன் அருகில் சென்று அமர்ந்து,

"என்னாச்சு ஜிராஃபி... ஆஃபீஸ்ல ஏதாவது ப்ராப்ளமா... வந்ததுல இருந்து ஏதோ யோசிச்சிட்டே இருக்க..." என்க,

ஆர்யான், "சும்மா தான் மினி... எதுவும் பிராப்ளம்லாம் இல்ல...‌ நீ தூங்கு..." என்றான்.

சிதாரா அதன் பின் எதுவும் கேட்காமல் உறங்கிட சற்று நேரத்தில் கண்ணைத் திறந்து சிதாராவைப் பார்த்த ஆர்யான் அதிர்ந்தான்.

ஆர்யான் அவசரமாக அவளைத் தட்டி எழுப்பி, "மினி... இதென்ன புதுசா இருக்கு..." என்க,

அவனை முறைத்த சிதாரா, "இதை கேக்க தான் தூங்கிட்டு இருக்குற மனுஷிய கத்தி எழுப்பினியா... என்னோட ஹக்கி பிலோ.." என்றாள் கோவமாக.

அசடு வழிய சிரித்த ஆர்யான், "அதில்ல மினி... இது உன்னோட ஹக்கி பிலோ மாதிரி தெரியல... புதுசா இருக்கு... அதான் கேட்டேன்..." என்க,

"இன்னைக்கு வெளிய போனப்போ வாங்கிட்டு வந்தேன்... என்னோடத வீட்டுலயே வெச்சிட்டு வந்துட்டேன் போல... அது இல்லாம எனக்கு தூக்கம் போறதே இல்ல... மரியாதையா என்ன டிஸ்டர்ப் பண்ணாம தூங்கிடு ஜிராஃபி.. மார்னிங் நான் ஏர்லியா கிளம்பனும்..." என்றவள் தன் புதிய ஹக்கி பிலோவை அணைத்தபடி படுத்தாள்.

சில நொடி அந்த ஹக்கி பிலோவையே முறைத்த ஆர்யான், "கூடிய சீக்கிரம் உன்னயும் மேல அனுப்புறேன்..." என மனதில் சூளுரைத்துக் கொண்டு படுத்தான்.

மறுநாள் காலையிலேயே ஆர்யான் சிதாராவை யுனிவர்சிட்டியில் விட்டவன் தன்னிடம் கூறாமல் எங்கேயும் செல்லக் கூடாது... வகுப்பு முடிந்ததும் தனக்கு அழைத்து கூறி விட்டுத் தான் வீடு செல்ல வேண்டும்.. என ஏகப்பட்ட அறிவுரைகள் கூற அனைத்தையும் கேட்டு ஒரு தலையசைப்பை மட்டும் வழங்கினாள் சிதாரா.

ஆனால் அவள் மனதிலும் ஆர்யான் ஏன் இப்படி நடந்து கொள்கிறான் என பல கேள்விகள்.

அங்கிருந்து வீட்டுக்கு வந்த ஆர்யான் உடனடியாக தன் மொபைலை எடுத்து யாருக்கோ அழைத்தான்.

மறுபக்கம் அழைப்பு ஏற்கப்பட்டதும், "அந்த நம்பர் யாரோடதுன்னு தெரிஞ்சிதா..." என்க,

"இல்ல ஆர்யான்... அது ஒரு சேட்டலைட் மொபைல் நம்பர்... யாரோடதுன்னு கண்டுபிடிக்க முடியாது... ரொம்ப கவனமா அவன் யாருன்னு தெரிய கூடாதுன்னு இது மூலமா உன்ன கான்டேக்ட் பண்ணி இருக்கான்..." என மறுபக்கம் கூறப்பட்டதும்,

ஆத்திரத்தில் பல்லைக் கடித்தவன், "ஷிட்.... எல்லா பக்கத்தாலையும் நம்மள ப்ளாக் பண்ணி வெச்சிருக்கான்... ராஸ்கல்... எதுவுமே பண்ண முடியல..." என்றான்.

மறுபக்கம், "டோன்ட் வொரிடா... ஏதாவது வழில அவன் மாட்டிப்பான்... நீ பொறுமையா இரு.." என்று விட்டு அழைப்பு துண்டிக்கப்பட்டது.

ஆனால் அவர்கள் அவனைக் கண்டறியும் போது ஏற்கனவே அனைத்தும் கை மீறி இருக்கப் போவதை பாவம் அவர்கள் அறியவில்லை.
 

Nuha Maryam

Moderator
அத்தியாயம் - 18

சிதாராவை யுனிவர்சிட்டியில் விட்டு வந்த ஆர்யான் ஆஃபீஸ் கிளம்பினான்.

யுனிவர்சிட்டிக்கு சென்ற சில மணி நேரத்தில் சிதாராவிடம் வந்த அவள் வகுப்புத் தோழி ஒருத்தி,

"சிதாரா... சம்வன் இஸ் வைட்டிங் ஃபார் யூ இன் அவுட்சைட்..." என்று விட்டு சென்றாள்.

சிதாரா, "என்ன யாரு பார்க்க வந்து இருப்பாங்க... ஒரு வேளை ஜிராஃபியா இருக்குமோ... பட் அவன் எதுக்கு இப்போ வரனும்... சரி போய் பார்க்கலாம்..." என நினைத்தவள் யாரெனப் பார்க்கச் செல்ல அங்கே யாருமே இருக்கவில்லை.

சுற்று முற்றும் நன்றாக பார்க்க யாருமே தெரியவில்லை.

சிதாரா, "ச்சே... யாராவது விளையாடுறாங்களா இருக்கும்..." என்றாள் கோவமாக.

பின் மீண்டும் வகுப்பிற்குச் சென்றவள் பாடங்களில் பிஸியாக அது பற்றி மறந்தே போனாள்.

மாலையானதும் வீட்டுக்குச் செல்ல வெளியே வர அவளுக்கு முன்னே அங்கு ஆர்யான் பைக்கில் வந்து காத்திருந்தான்.

அவனிடம் சென்ற சிதாரா, "என்ன ஜிராஃபி... நான் கால் பண்ண கூட இல்ல... நீயே வந்துட்ட..." என்க,

"இன்னைக்கு கொஞ்சம் வர்க் கம்மி மினி... அதான் உன்ன பிக்கப் பண்ண வந்தேன்..." என ஆர்யான் கூறினான்.

சிதாரா ஏறி அமர பைக் வீட்டை நோக்கி புறப்பட்டது.

சிதாராவை வீட்டில் இறக்கியவன், "மினி வெளிய சின்ன வேலை ஒன்னு இருக்கு... நீ டார் லாக் பண்ணிக்கோ... நான் சீக்கிரம் வரேன்.." என்று விட்டு சென்றான்.

சிதாராவும் களைப்பு தீர குளித்து விட்டு வந்தவள் ஆர்யானின் டயரி நினைவுக்கு வர அதனை எடுத்துக் கொண்டு அமர்ந்தாள்.

முதல் பக்கத்தைத் திறக்க,

"ஹாய் சேம்ப்... ஐம் ஆர்யான்... யூ நோ வன் திங்... எனக்கு இந்த டயரி எழுதுறதெல்லாம் பழக்கமே இல்ல... பட் இன்னைக்கு எழுதனும்னு தோணுது... என் மனசுல இருக்குறத யாரு கிட்டயாவது சொல்லனும்... ஃப்ரென்ட்ஸ்ட இப்பவே சொல்ல முடியாது... அதான் உன் கிட்ட ஷேர் பண்ணிக்கலாம்னு இருக்கேன்... "

என்று இருக்க சிதாராவுக்கு சிரிப்பு வந்தது.

அடுத்த பக்கத்தைப் பார்க்க,

"இன்னைக்கு ஒரு பொண்ண பாத்தேன் சேம்ப்.. இல்ல இல்ல... பொண்ணுன்னு எல்லாம் சாதாரணமா சொல்லக் கூடாது... தேவதை அவள்... அவள பாத்ததும் மனசுக்குள்ள ஒரு சொல்ல முடியாத ஃபீல்... ஷீ இஸ் அ ஸ்பார்க்ல்..."

என்றிருந்தது.

சிதாரா, "பார்ரா... இவன் இது வர என் கிட்ட கூட இதை பத்தி சொல்லி இல்ல... யாரா இருக்கும்..." என்றவள் மறுபக்கத்தைப் பிரட்டிப் பார்க்க அதற்குள் ஆர்யான் பேசும் சத்தம் கேட்டது.

பிறகு பார்க்கலாம் என டயரியை மூடி இருந்த இடத்திலே வைத்தவள் வெளியே செல்ல,

ஆர்யான், "மினி.. நீ நைட்டுக்கு டின்னர் சமைக்க வேணா... நான் வெளியவே வாங்கிட்டு வந்துட்டேன்..." என்றவன் சிதாராவுக்கு பரிமாறி விட்டு தனக்கும் போட்டு எடுத்துக் கொண்டான்.

இருவரும் அமைதியாக சாப்பிட திடீரென சிதாரா,

"ஜிராஃபி... ஊட்டி போய் வந்ததுமே கேக்கனும்னு இருந்தேன்... அதுக்கப்புறம் நடந்த ப்ராப்ளம்ஸ்ல மறந்துட்டேன்... ஆமா அன்னைக்கு மயூ என்ன சொன்னா உன் கிட்ட... நீ கூட வெக்கப்பட்டுட்டு இருந்ததெல்லாம் பார்த்தேன்..." என்க,

ஆர்யான் அவளைப் பார்த்து புன்னகைத்தவன் அன்று நடந்தவற்றை சிதாராவிடம் கூறினான்.

மயூரி, "அது வந்துங்க... நான்.. அது... நீங்க..." என சொல்லாமல் இழுக்க,

ஆர்யான் அவசரமாக, "ஒன்னும் பிரச்சினை இல்லங்க.. நீங்க நிதானமா அப்புறம் சொல்லுங்க.." என அங்கிருந்து செல்லப் பார்க்க,

"இல்ல இல்ல.. நான் சொல்ல வந்த விஷயத்த இப்பதே சொல்லிட்றேன்..." என அவனை நிறுத்தினான் மயூரி‌.

மயூரி, "ஆர்யான்.. அது வந்து.. உங்கள பாத்ததுமே எனக்கு ரொம்ப பிடிச்சு போச்சி.. உங்க ஹியுமர்சென்ஸ் என்ட் நீங்க சித்துவுக்காக கேர் பண்ற விதம் எல்லாமே என்ன ரொம்ப இம்ப்ரஸ் பண்ணிடுச்சி.. ஐ திங்க் ஐம் இன் லவ் வித் யூ.." என ஆர்யானுக்கு மினி ஹார்ட் அட்டேக் ஒன்றையே ஏற்படுத்தினாள்.

அதிர்ச்சியில் வாயடைத்து நின்ற ஆர்யான் பின் மயூரியிடம்,

"மயூரி.. எனக்கு உங்க கிட்ட என்ன சொல்லன்னே புரியல... உண்மைய சொன்னா நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க... நேத்து நைட் கூட நீங்க என்னயே பாத்துட்டு இருந்தத்த நான் பாத்தேன்... உங்கள கல்யாணம் பண்ணிக்க குடுத்து வெச்சிருக்கனும்... எனக்கும் உங்கள பிடிச்சிருக்கு..." என்றான்.


ஆர்யான் கூறியதைக் கேட்டு அதிர்ந்த சிதாரா,

"என்ன... உனக்கும் அவள பிடிச்சிருக்குன்னு சொன்னியா... என்ன சொல்ற ஜிராஃபி... பின்ன எதுக்கு லூஸு என்ன கல்யாணம் பண்ணிக்கிட்ட... மயூ பாவம்... எதுக்குடா அவள ஏமாத்தின..." என்றாள் கோவமாக.

ஆர்யான், "அட இருமா... இன்னும் முழுசா சொல்லி முடிக்கல... அதுக்குல்ல ஏமாத்திட்ட அது இதுன்னு சொல்ற..." என்கவும் அமைதியாகினாள் சிதாரா.

பின் ஆர்யான், "பட் நீங்க சொல்ற பிடிச்சிருக்குன்னத்துக்கும் நான் சொல்ற பிடிச்சிருக்குன்னத்துக்கும் நெறய டிஃபரன்ட் இருக்கு.. ஒரு அழகான பொண்ணையோ பையனையோ பாத்தா நமக்கு அவங்கள ஸைட் அடிக்க தோணும்.. அப்படி தான் எனக்கும் உங்கள பிடிச்சிருக்கு.. அதனால தான் சைட் அடிச்சேன்.. அதுக்காக நாம ஸைட் அடிக்கிற எல்லாரையும் கல்யாணம் பண்ணிக்க முடியாது... இட்ஸ் ஜஸ்ட் அ நார்மல் ஃபீல்... பட் லவ்வுங்குறது ரொம்ப வித்தியாசமானது... அது யார் மேலயும் அவ்வளவு ஈஸியா வந்துறாது... ஒருத்தர் அழகா இருக்காங்கன்னு அவங்கள நாம லவ் பண்ண முடியாது... அப்படி லவ் பண்ணோம்னா அந்த அழகு போனதும் லவ்வும் முடிஞ்சிரும்... லவ்வுங்குறது மனச பாத்து வரனும்... முடியெல்லாம் நறச்சி போய் தோல் சுருங்கி கண்ணுல குழி விழுந்தத்துக்கு அப்புறமும் உனக்காக நான் எனக்காக நீ.. அப்படி இருக்குறது தான் லவ்.. உங்கள நான் தப்பு சொல்லல.. உங்க ஃபீலிங்ஸ நான் மதிக்கிறேன்... ஒரு பையன் கிட்ட வந்து நேரா எனக்கு உங்கள பிடிச்சிருக்குன்னு சொல்லவும் ஒரு கட்ஸ் வேணும்.. அந்த வகைல நீங்க ரொம்ப தைரியசாலிங்க.. பட் இப்ப உங்களுக்கு என் மேல வந்திருக்குறது ஜஸ்ட் ஒரு அட்ராக்ஷன்.. அதனால பார்க்க ஆர் ஸைட் அடிக்க தோணும்.. கொஞ்ச நாளெக்கி அப்புறம் அழகான வேறொருத்தர பார்க்க கிட்டயும் ஸைட் அடிக்க தோணும்.. பட் உங்களுக்கானவரு ஏதோ ஒரு மூலைல உங்களுக்காக காத்துட்டு இருப்பாரு.. அவர பாக்க கிட்ட உங்களுக்கு தோணும் இவன் தான் என் லைஃப்னு... அந்த நாள் கூடிய சீக்கிரம் உங்க வாழ்க்கைல வர நான் வேண்டிக்கிறேன்.. மோர் ஓவர் என் லைஃப்ல ஆல்ரெடி ஒரு பொண்ணு இருக்கா.. சாரி மயூரி உங்கள ஹர்ட் பண்ணனும்னு எதுவும் சொல்லல.." என்க,

மயூரி, "நோ நோ சாரி எல்லாம் கேக்காதீங்க ஆர்யான்.. என் மனசுல உள்ளத சொல்ல எனக்கு எவ்வளவு உரிமை இருக்கோ அதே அளவு உங்க விருப்பத்த சொல்ல உங்களுக்கும் உரிமை இருக்கு.." என்க,

"தேங்க்ஸ் மயூரி என்றான் ஆர்யான்.

பின் மயூரி, "இதை கண்டிப்பா சொல்லனும் ஆர்யான்... நீங்க லவ் பண்ணுற பொண்ணு ரொம்ப லக்கி.." என்க,

"அவ கெடக்க நான் தான் லக்கி.." எனக் கூறி அழகாக வெட்கப்பட்டான் ஆர்யான்.


சிதாரா, "டேய்... அப்போ கூட உன் மனசுல ஆல்ரெடி ஒரு பொண்ணு இருக்கான்னு சொல்லி இருக்க.. யாருடா அது..." என்க,

அவளைப் பார்த்து இளித்த ஆர்யான்,

"அது சும்மா... போற போக்குல அடிச்சு விட்டேன்... இவ்வளவு ஹேன்ட்சமான பையன் இன்னும் சிங்கிளா சுத்திட்டு இருக்கேன்னு சொன்னா எனக்கு தானே அசிங்கம்... அதான் அப்படி ஒரு பிட்டு..." என்றான்.

அவனைப் பார்த்து கள்ளப் புன்னகை ஒன்றை உதிர்த்த சிதாரா மனதில்,

"என் கிட்டயே மறைக்கிறியா ஜிராஃபி... நீ சொல்லலனா என்ன.. அதான் உன் டயரி இருக்கே... நானே தெரிஞ்சிக்குறேன்.." என நினைத்துக் கொண்டாள்.

அன்று இரவும் சிதாரா ஹக்கி பிலோவை அணைத்துக் கொண்டு உறங்கி விட,

ஆர்யான் அதனை நன்றாக மனதில் வறுத்தெடுத்தவன்,

"இன்னைக்கு மட்டும் தான் உனக்கு மினி கூட தூங்க கிடைக்கும் பாஸ்... நாளைக்கே உனக்கொரு முடிவு கட்டுறேன்..." என நினைத்தவாறு படுத்துக் கொண்டான்.

_______________________________________________

பிரணவ், "ஆமா... எனக்கு எல்லா டீட்டைல்ஸும் தெரியும்... நான் உங்களுக்கு ஹெல்ப் பண்றேன்... தாராவுக்காக நான் என்ன வேணாலும் பண்ணுவேன்... நீங்க எனக்கு எதுவும் தன அவசியமில்ல... இது மூலமா எனக்கும் பெரிய லாபம் கிடைக்குது..." என்று விட்டு அழைப்பைத் துண்டித்தான்.

அழைப்பு துண்டிக்கப்பட்டதும் பிரணவ்வின் முகத்தில் மர்மப் புன்னகை ஒன்று உதித்தது.

பிரணவ்வைத் தேடி வந்த அபினவ், "இங்க தனியா என்னடா பண்ணிட்டு இருக்க... நானும் கொஞ்ச நாளா உன்ன நோட் பண்ணிட்டு தான் இருக்கேன்... ரொம்ப வித்தியாசமா பிஹேவ் பண்ற... அடிக்கடி தனியா போய் மொபைல்ல யாரு கூடவோ பேசிட்டிருக்க... என்னடா பிரச்சினை..." என்க,

அபினவ்வைப் பார்த்து சிரித்து சமாளித்த பிரணவ்,

"ச்சேச்சே.. அப்படி எல்லாம் இல்லடா... ஆஃபீஸ்ல கொஞ்சம் ப்ராப்ளம்... அது பத்தி தான் அடிக்கடி கால் வருது..." என்றான்.

பிரணவ் கூறியதை நம்பிய அபினவ் பின் எதுவும் கூறாமல் சென்றான்.

அபினவ் சென்றதும் பெருமூச்சு விட்ட பிரணவ்,

"இவனுக்கு தெரிஞ்சா நிச்சயம் ஆதர்ஷ் கிட்டயும் சொல்லிடுவான்... அதுக்கப்புறம் பெரிய பிரச்சினை ஆகிடும்... சீக்கிரம் இந்த வேலைய முடிக்கனும்..." என நினைத்துக் கொண்டான்.

_______________________________________________

மறுநாளும் சிதாரா யுனிவர்சிட்டி முடிந்து வர ஆர்யான் அன்று அவளை தனியே வரக் கூறி இருந்தான்.

முதல் நாள் போலவே இன்றும் யாரோ தன்னைப் பின் தொடர்வது போல் சிதாராவுக்கு தோன்றியது.

அதனால் டாக்ஸி பிடித்து அவசரமாக வீடு வந்து சேர்ந்தாள்.

சிதாரா வந்து சிறிது நேரத்திலே ஆர்யான் கையில் ஒரு நாய்க்குட்டியுடன் வீட்டிற்குள் நுழைந்தான்.

சிதாரா, "ஹேய் ஜிராஃபி... யாரோட பப்பி இது... ரொம்ப கியுட்டா இருக்கு... நாம வளர்க்க போறோமா என்ன..." என கண்கள் மின்னக் கேட்டாள்.

ஆர்யான், "இல்ல மினி... இது என் ஃப்ரெண்டோட பப்பி.. பேரு ஃபெபி... அவன் ஏதோ வேலையா போறானாம்... அதான் கொஞ்சம் நேரம் வெச்சிக்க சொன்னான்... நைட் வந்து எடுத்துட்டு போயிருவான்...." என்கவும்,

"ஓஹ்... அப்படியா... பட் ரொம்ப கியுட்டா இருக்கு..." என்ற சிதாரா அதை தன் கைகளில் வாங்கினாள்.

ஃபெபியும் நாக்கால் சிதாராவின் முகத்தை நக்கி அதன் பாசத்தை வெளிக் காட்டியது.

உண்மையில் ஆர்யான் தான் அவன் நண்பன் ஒருவனிடம் கெஞ்சிக் கூத்தாடி அந்த நாய்க்குட்டியை வீட்டுக்கு எடுத்து வந்திருந்தான்.

ஆர்யான், "சரி மினி.. ஃபெபிய என் கிட்ட குடு... நீ ஃபெபிக்கு சாப்பிட கிச்சன்ல இருக்குற பிஸ்கட்ட எடுத்துட்டு வா... நான் இதை நம்ம ரூமுக்கு எடுத்துட்டு போறேன்... ஆஹ் அப்படியே எனக்கும் ஒரு கப் காஃபி எடுத்துட்டு வா மினி.." என்றான்.

சிதாராவும் ஃபெபியை ஆர்யானிடம் கொடுத்து விட்டு கிச்சனுக்கு சென்று விட,

ஆர்யான், "வா ஃபெபி... உனக்கு பெரிய வேலையொன்னு இருக்கு..." என்றவன் ஃபெபியை அறைக்கு எடுத்துச் சென்றான்.

அறைக் கதவை மூடிக் கொண்டவன் ஃபெபியைக் கீழே விட்டான்.

பின் கட்டிலிலிருந்த சிதாராவின் புதிய ஹக்கி பிலோவை எடுத்து ஃபெபியைத் தாண்டி வீசியவன்,

"ஃபெபி கேட்ச்.." என்றான்.

அதுவும் அதனைப் பிடிக்க துள்ளிப் பாய ஆனால் பிடிக்க முடியாமல் போனது.

மீண்டும் மீண்டும் ஃபெபியினால் பிடிக்க முடியாதவாறே எறிந்தவன் இறுதியில் கள்ளப் புன்னகையுடன் ஃபெபியின் அருகில் போட்டான்.

இவ்வளவு நேரமும் தன் கையில் மாட்டாமல் இப்போது மாட்டிய கோபத்தில் ஃபெபியும் தன்னால் முடிந்த அளவு அதனை கடித்து இழுத்து என கொடுமை செய்தது.

அதைக் கண்டு ரசித்தவாறே ஆர்யான் உடை மாற்றி வர குளியலறைக்குள் நுழைந்து கொண்டான்.

சற்று நேரத்தில் சிதாரா ட்ரேயில் தனக்கும் ஆர்யானுக்கும் காஃபியும் ஃபெபிக்கு பிஸ்கட்டும் எடுத்துக் கொண்டு அறைக்குள் நுழைய அவள் கண்டது என்னவோ ஃபெபியின் கையில் மாட்டி சின்னாபின்னமாகி உயிரை விட்டிருந்த அவளது ஹக்கி பிலோவைத் தான்.

ட்ரேயை அங்கிருந்த மேசை மீது வைத்தவள் அவசரமாக தன் ஹக்கி பிலோவைக் கையில் எடுத்து,

"என்னோட ஹக்கி பிலோ...." என்றாள் கவலையாக.

சரியாக ஆர்யானும் வெளியே வர ஆர்யானுக்கு சிதாராவின் கையிலிருந்த ஹக்கி பிலோவைக் காணக் காண அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது.

ஆனால் அதை முகத்தில் காட்டிக் கொள்ளாதவன் எதுவும் தெரியாதது போல்,

"என்னாச்சு மினி... ஏன் சோகமா இருக்க..." என்றான்.

சிதாரா, "ஃபெபி என் ஹக்கி பிலோவ பிச்சி போட்டுடுச்சு..." என்றாள்.

ஆர்யான் தனக்கு வந்த சிரிப்பை மறைத்தபடி, "அதுக்கென்ன மினி.. விடு வேற வாங்கிக்கலாம்... பாவம் ஃபெபி... அதுக்கென்ன தெரியும்..." என்றான்.

சிதாரா பாவமாக முகத்தை வைத்தபடி, "இல்ல ஜிராஃபி... எனக்கு வேற வேணாம்... எவ்வளவு ஆசையா வாங்கினேன் தெரியுமா... இனி நான் சும்மாவே தூங்க பழகிக்கிறேன்...." என்றாள்.

ஆர்யானோ உள்ளுக்குள் துள்ளிக் குதித்தான்.

ஃபெபியைத் தூக்கிக் கொண்ட ஆர்யான் அதைக் கொஞ்சியவாறு சிதாரா கொண்டு வந்த பிஸ்கட்டை அதற்கு ஊட்டி விட்டான்.

இரவானதும் சிதாரா ஹக்கி பிலோ இல்லாததால் கட்டிலிலில் ஓரமாகப் படுத்துக் கொண்டாள்.

ஆனால் மறுநாள் காலை அன்று போல் ஆர்யானின் நெஞ்சில் தான் தலை வைத்து அவனை அணைத்தபடி படுத்திருந்தாள்.

அவளுக்கு முன் விழித்த ஆர்யான் சற்று நேரம் சிதாராவின் முகத்தையே புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்து விட்டு அவளை இரவு படுத்தது போல் ஓரமாகப் படுக்க வைத்தான்.

சிதாரா எழுந்து பார்க்கும் போது இரவு உறங்கியது போலவே தான் படுத்து இருப்பதைக் கண்டு மகிழ்ந்தவள் ஹக்கி பிலோ இல்லாமலே அதன் பின் வந்த நாட்கள் தூங்கினாள்.

ஆனால் அவள் விழித்து விட முன் ஆர்யான் செய்வது எதையுமே சிதாரா அறியவில்லை.

அடுத்து வந்த நாட்கள் சிதாரா யுனிவர்சிட்டி செல்வதிலும் படிப்பதிலும் கவனம் செல்ல ஆர்யானின் டயரி பற்றி மறந்தே போனாள்.

ஆர்யானுக்கும் அந்த தெரியா இலக்கத்திலிருந்து அதன் பின் அழைப்பு வராததால் நிம்மதியாக இருந்தது.

ஆனால் சிதாராவைக் கடத்த முயன்றது யாரென்று தேடிக் கொண்டு தான் இருந்தான்‌.

இருவரின் நாட்களும் எப்போதும் போல ஒருவரையொருவர் சீண்டிக் கொண்டு சந்தோஷமாகக் கழிந்தது.
 

Nuha Maryam

Moderator
அத்தியாயம் - 19

ஆர்யான், சிதாரா இருவரின் திருமணம் முடிந்து ஒரு மாதம் கழிந்திருந்தது.

இப்பொழுதெல்லாம் யுனிவர்சிட்டி பஸ்ஸில் தான் சிதாரா வீடு திரும்புவாள்.

ஆர்யான் தான் அவளின் பாதுகாப்புக்கு அதனை ஏற்பாடு செய்திருந்தான்.

அன்று சிதாரா யுனிவர்சிட்டியிலிருந்து வீட்டுக்கு வந்ததும் ஆர்யானிடமிருந்து கால் வந்தது.

ஆர்யான், "மினி... இன்னைக்கு வீட்டுக்கு வர ரொம்ப லேட் ஆகிடும்... எனக்காக வைட் பண்ணிட்டு இருக்காதே... நீ சாப்டுட்டு டார் லாக் பண்ணிட்டு தூங்கு... என் கிட்ட இன்னொரு கீ இருக்கு... பாய் மினி..." என்று விட்டு அழைப்பைத் துண்டித்து விட்டான்.

சிதாரா குளித்து உடை மாற்றி வந்தவள் சமையலறை சென்று காஃபி கலந்து எடுத்து வந்தாள்.

அப்போது தான் அவளுக்கு ஆர்யானின் டயரியை இன்னும் படிக்காதது நினைவு வரவும் அதனை எடுத்துக் கொண்டு கட்டிலில் அமர்ந்தாள்.

"சேம்ப்..... என்ன பொண்ணுடா அவ... நானும் இங்க படிக்க வந்ததுல இருந்து மாடர்ன் ட்ரஸ்ன பேருல கண்ட கருமத்தையும் போடுற பொண்ணுங்கள தான் பாத்திருக்கேன்... பட் இவ வேற சேம்ப்..."

என்றிருக்க சிதாரா, "பார்ரா.... சார் ரொம்ப பீஃல் பண்ணி எழுதி இருக்காரு... பாக்கலாம் யாருன்னு.." என்றவள் மறுபக்கத்தைப் படித்தாள்.

"ஃபர்ஸ்ட் யேர் ஸ்டுடன்ட்ஸ் ஜாய்னிங் டே... சுத்தி இருந்த அவ்வளவு பொண்ணுங்களுக்கு மத்தியில அவ மட்டும் என் கண்ணுக்கு தனியா தெரிஞ்சா... ஐ ஸ்டாப்ட் ப்ரீத்திங் ஃபார் அ செக்கன்..."

சிதாரா, "ஓஹ்... அவ்வளவு அழகா என்ன..." என நினைத்தவளுக்கு அவளையே அறியாது சற்று பொறாமையாகவும் இருந்தது.

"லாங் சுடிதார் போட்டு, ஷால அப்படியே முன்னால மறைச்ச மாதிரி விரிச்சி போட்டு, நெத்தில குட்டியா ஒரு ஸ்டிக்கர் பொட்டு... புக்ஸ நெஞ்சோட அணைச்சிக்கிட்டு மெதுவா நடந்து வந்தா... அவ போட்டிருந்த அந்த ஸ்பெக்ஸயும் தாண்டி அவ கண்ணுல ஒரு பதட்டம்..."

என்றிருக்க சிதாராவின் நெற்றி யோசனையில் சுருங்கியது.

அவசரமாக மறுபக்கத்தைப் பிரட்டிப் பார்த்தாள்.

"அவ நான் உக்காந்துட்டு இருந்த இடத்த நெருங்க நெருங்க என் ஹார்ட் பீட் அப்படியே எகிரிடுச்சு... "

என்று நிறுத்தி இருந்தான்
.

"சிதாரா... அவ பேரு அது தான்... பேரைப் போலவே அவ ஒரு நட்சத்திரம்... ராத்திரி நேரத்துல கருமைல மூழ்கி போற வானத்துல எப்படி சின்ன தீப்பொறி போல எரியிர நட்சத்திரம் வெளிச்சத்த கொடுக்குமோ.. அது போல தான் என் சிதாரா... என் வாழ்க்கைல சின்ன வெளிச்சம்குற சின்ன சின்ன சந்தோஷங்கள கொண்டு வர வந்தவ... மை ஏஞ்சல்..."

என்றிருந்ததை வாசிக்கவும் சிதாராவின் இதயம் வேகமாகத் துடிக்கத் தொடங்கியது
.

"ஹ்ம்ம்ம்ம்..... சரியா நேரம் பார்த்து பாழாப் போன என் வாய் அதோட வேலைய காட்டிடுச்சு... வந்ததும் வராததுமா அவ கிட்ட போய் பேசினா எங்க அவ என்ன தப்பா நினைச்சிட்டா என்ன பண்றதுன்னு ரேக்கிங் பண்ணுறது போல அவள கலாய்ச்சேன்... அப்ப கூட பயந்துட்டு கீழ பாத்துட்டே இருந்தா... ஒரு வார்த்த கூட பேசல... எனக்கே பார்க்க பாவமா இருந்துச்சு... அப்போ திடீர்னு அவ வலிப்பு வந்து என் கால் கிட்டே விழவும் என் இதயமே நின்னு போச்சு சேம்ப்..."

என்றிருக்க சிதாராவின் கண்கள் கலங்கின.

"அதுக்கப்புறம் அவ கண்ணு முழிக்கிற வரைக்கும் நான் நானாவே இல்ல... அவ கண்ண தெறந்து என்ன பாத்ததும் தான் போன உசுரு திரும்ப என் கிட்ட வந்துச்சு..."

அதன் பின் இருவரும் நட்புக் கரம் நீட்டியது, மாறி மாறி பெயர் சூட்டிக் கொண்டதில் இருந்து அவளுடனான ஒவ்வொரு நிமிடத்தையும் ரசித்து எழுதி இருந்தான்.

"சடன்னா மினி அவளோட ட்ரஸிங் ஸ்டைல்ல இருந்து எல்லாம் மாத்திக்கிட்டதும் எனக்கு அப்படி ஒரு கோவம்... அப்போ தான் அவளோட பாஸ்ட் பத்தி என் கிட்ட சொன்னா.... அந்த பிரணவ்வ கொல்லனும் போல ஒரு வெறி.... அவனுக்கு என்ன தைரியம் இருந்தா என்னோட மினி கிட்ட அப்படி எல்லாம் சொல்லி இருப்பான்... அவன் மட்டும் என் முன்னாடி இருந்தான்னா அது தான் அவனோட கடைசி நிமிஷம்..."

சிதாராவின் முகத்தில் அவளையும் மீறி புன்னகை வெளிப்பட்டது.

"பட் சேம்ப்... அவன் அப்படி பேச போய் தானே மினி நியுயார்க் வந்தா... அதனால தானே எனக்கு அவள பார்க்க முடிஞ்சது... அதுக்காக அவன் பண்ணத நான் மன்னிக்க எல்லாம் இல்ல... திரும்பவும் என் மினிய அவன் கஷ்டப்படுத்த நெனச்சா அதுக்கப்புறம் அவன என்ன பண்ணுவேண்ணு எனக்கே தெரியாது..."

சிதாராவின் மனநிலை என்னவென்று அவளாலே புரிந்து கொள்ள முடியவில்லை.

ஆனால் ஆர்யானின் வார்த்தைகளால் மனதில் ஒரு இதம் பரவுவதையும் மறுக்க முடியவில்லை‌.

"சேம்ப்‌...... நான் இன்னைக்கு அவ்வளவு ஹாப்பியா இருக்கேன்... ஏன் தெரியுமா... ஏன்னா..... நான்.... மினிய...... இல்ல... சொல்ல மாட்டேன்... என் மினியோட கண்ண பாத்து அவ கிட்ட தான் இதை முதல்ல சொல்லனும்... அதுக்கு அவளோட ரியாக்ஷன பார்க்கனும் நான்..."

என முடித்திருந்தான்.

சிதாரா அவசரமாக அடுத்த பக்கங்களைப் பிரட்டினாள்.

ஆனால் அதன் பின் அவன் எதுவுமே எழுதி இருக்கவில்லை.

டயரியை இருந்த இடத்திலேயே வைத்தவள்,

"அப்படின்னா ஜிராஃபி மனசுல இருக்குற அந்த பொண்ணு நானா..." என நினைக்கும் போதே சிதாராவின் முகத்தில் புன்னகை.

சிதாரா, "பட் ஏன் இன்னும் ஜிராஃபி என் கிட்ட இதை பத்தி சொல்லல... கல்யாணத்தப்போ கூட ஏதோ என் நல்லதுக்குன்னு சொல்லி தானே கல்யாணம் பண்ணான்.." என்றவளை,

"அவன் சொல்லி இருந்தா மட்டும் நீ உடனே எக்சப்ட் பண்ணி இருக்கவா போற... " என அவளின் மனசாட்சி திட்டியது.

"பாக்கலாம்.. சார் இதை என் கிட்ட எப்போ சொல்ல போறாருன்னு... போய் முதல்ல டின்னர் பண்ணி வைக்கலாம்.." என்றவள் சமைக்கச் சென்றாள்.

சமைக்க ஆரம்பிக்கும் போதே அவளுள் ஏதோ செய்ய ஆரம்பிக்க அதனைப் புறக்கணித்து விட்டு சமையலை முடித்தவள் எடுத்து டைனிங் டேபிளில் வைத்தாள்.

அப்போது தான் சிதாராவின் கண்களில் நாட்காட்டி பட அன்றைய திகதியைப் பார்த்தவள்,

"ப்ச்... இதை எப்படி மறந்தேன்... " என வயிற்றைத் தடவியபடி அறைக்குள் நுழைந்து தன் சூட்கேசை இழுத்துத் தேடியவள் தலையில் அடித்தபடி, "நான் தான் இருந்த டென்ஷன்ல வாங்கி வைக்கவே இல்லையே..." என தன்னையே நொந்து கொண்டாள்.

கப்போர்ட்டை திறக்க சிதாராவின் கண்களில் மாட்டியது பேப்பரால் சுற்றி வைக்கப்பட்டிருந்த பார்சல் ஒன்று.

அது என்ன என்று எடுத்துப் பார்க்கவும் அதனுள் அவளுக்குத் தேவையானது இருந்தது.

சிதாரா, "இது எப்படி இங்க வந்தது... நான் தான் வாங்கவேயில்லையே..." என நினைத்தவளின் கண் முன் ஆர்யானின் முகம் தோன்றியது.

புன்னகைத்தபடி, "சோ ஸ்வீட் ஜிராஃபி நீ... என்ன பத்தி எல்லாமே தெரிஞ்சி வெச்சி இருக்க.." என்றவள் அதனை எடுத்துக் கொண்டு குளியலறைக்குள் புகுந்தாள்.

சற்று நேரத்தில் வெளி வந்தவள் முகம் வலியில் சுருங்கி இருந்தது.

வலி பொறுக்காது வயிற்றை இறுக்கிப் பிடித்தபடியே சென்று அறை விளக்கை அணைத்து விட்டு படுத்துக் கொண்டாள்.

நன்றாக இருட்டிய பின் தான் ஆர்யான் வீட்டுக்கு வந்தான்.

தன்னிடமிருந்த மாற்று சாவியைக் கொண்டு கதவைத் திறந்தவன் வீடு அமைதியாக இருக்கவும், "மினி தூங்கிட்டா போல.." என நினைத்தவன் டைனிங் டேபிள் அருகில் வர மேசையில் பாத்திரங்கள் அப்படியே இருந்தன.

திறந்து பார்த்தவன், "என்ன எல்லாம் அப்படியே இருக்கு... நான் தான் எனக்காக வைட் பண்ண வேணாம் சாப்டுன்னு சொன்னனே..." என்ற ஆர்யான் சிதாராவைத் தேடி அறைக்குள் நுழைந்தான்.

அறை இருட்டாக இருக்கவும் "மினி.." என அழைத்தபடி விளக்கைப் போட கட்டிலில் ஒரு ஓரமாக முனங்கியபடி ஒரு கையால் வயிற்றையும் மறு கையால் கால்களையும் இறுக்கிக் கட்டிக் கொண்டு சுருண்டு படுத்திருந்தாள் சிதாரா.

பதறிய ஆர்யான், "என்னாச்சு மினி... ஏன் இப்படி படுத்திருக்க..." என சிதாராவை நெருங்கிக் கேட்க,

"ஒன்னுமில்ல ஜிராஃபி... ஜஸ்ட் மந்த்லி த்ரீ டேய்ஸ் எப்பவும் வரது தான்..." என வலியில் கூறி விட்டு கண் மூடவும் ஆர்யானுக்கு புரிந்து போனது.

அவசரமாக அறையிலிருந்து வெளியேறியவன் சில நொடிகளில் கையில் ஒரு க்ளாஸுடன் நுழைந்தான்.

ஆர்யான், "மினி எழுந்து இதை குடி முதல்ல..." என அவளைக் கைப் பிடித்து எழுப்பியவன் அவளை கட்டிலில் சாய்த்து அமர வைத்தான்.

சிதாரா அவன் தந்த க்ளாஸை கையில் வாங்கி, "என்ன ஜிராஃபி இது..." எனக் கேட்க,

"இஞ்சி டீ... இஞ்சிய தண்ணில கொதிக்க வெச்சி அதுல தேன் கலந்து குடிச்சா பெய்ன் குறையும்... அதான் உனக்கு எடுத்துட்டு வந்தேன்..." என்றான் ஆர்யான்.

"ஈ... யக்... எனக்கு வேணா ஜிராஃபி..." என முகத்தை சுருக்கியபடி கூறிய சிதாரா மீண்டும் படுத்துக் கொள்ளப் பார்க்க,

"மினி... சொல்றேன்ல... சாப்பிட கூட இல்ல நீ... ப்ளீஸ் எனக்காக குடி.. பெய்ன் குறையும் உனக்கு.." என ஆர்யான் கூறவும் அவன் கெஞ்சுவதை விரும்பாத சிதாரா கண்ணை மூடிக் கொண்டு ஒரே மிடரில் குடித்தவள்,

"ரொம்ப படுத்துற நீ ஜிராஃபி..." என்றாள் ஆர்யானை முறைத்துக் கொண்டு.

சிதாராவைப் பார்த்து புன்னகைத்த ஆர்யான் அவளிடமிருந்து க்ளாஸை வாங்கி வைத்தவன்,

"சரி கால் ரெண்டயும் நேரா நீட்டி வை மினி..." என்கவும்,

அவன் சொல்லியதை செய்தவள், "எதுக்கு.." எனக் கேட்டாள்.

ஆர்யான், "ஆய்ல் மசாஜ் பண்ணி விடத்தான் மினி... கால் வலிக்கு நல்லது..." என்றவன் சிதாராவின் கால்களில் எண்ணையைத் தடவ அமர,

பட்டென கால்களை இழுத்துக் கொண்டவள், "அ.. அதெல்லாம் ஒன்னும் வேணா... இது நார்மல் தானே‌‌... அதுவா சரி ஆகிடும்.." என்றாள் தடுமாறியபடி.

சிதாராவின் கண்களை அழுத்தமாகப் பார்த்த ஆர்யான், "ஏன் மினி.. நான் உன்னத் தொட்டா உனக்கு அருவருப்பா இருக்கா என்ன.." எனக் கேட்க,

அவசரமாக கால்களை நீட்டினாள் சிதாரா.

சிதாராவின் செயலில் புன்னகைத்த ஆர்யான் அவள் காலை எடுத்து தன் மடி மீது வைக்க சிதாராவுக்குத் தான் ஒரு மாதிரி இருந்தது.

அவளுக்கு அது ஒரு புதுவித உணர்வாக இருந்தது.

என்ன என வரையறுக்க முடியவில்லை அவளால்.

சிதாராவின் நைட்டியை அவள் முழங்கால் வரை உயர்த்தி விட்ட ஆர்யான் அவள் கால்களில் எண்ணையைத் தடவி நன்றாக நீவி விட்டான்.

ஆர்யான் தன் காலைத் தொடவும் முதலில் சங்கடமாக உணர்ந்த சிதாரா அதன் பின் அவன் கண்களையே ஆராய்ந்தபடி பார்த்துக் கொண்டிருந்தாள்.

சிதாராவின் கால்களை தன் மடி மீது வைத்து எண்ணையைத் தடவும் போது கொஞ்சம் கூட அவன் கண்களில் சஞ்சலமோ பார்வை மாறுபடவோ இல்லை.

அவளின் வலியைக் குறைக்க வேண்டும் என்ற நோக்கம் மட்டுமே அவன் கண்களில் தெரிந்தது.

"முடிஞ்சது..." என ஆர்யான் கூறவும் தான் தன்னிலை அடைந்தாள் சிதாரா.

சிதாரா ஆர்யானின் மடியிலிருந்து கால்களை எடுத்துக் கொள்ளவும் எழுந்தவன்,

"நீ தூங்கு மினி... நான் போய் ஃப்ரஷ் ஆகிட்டு வரேன்.." என்று விட்டு சென்றான்.

ஆர்யான் குளித்து முடித்து உடை மாற்றி வரும் போது சிதாரா தூங்காமல் கண்களைத் திறந்தபடி கால்களை மடக்கிப் படுத்திருந்தாள்.

ஆர்யான் வந்து சிதாராவின் அருகில் அமர்ந்தவன், "இன்னும் பெய்ன் இருக்கா மினி..." எனக் கவலையாகக் கேட்க,

சிதாரா, "இப்போ கொஞ்சம் குறைஞ்சிடுச்சு..." என்க,

ஆர்யான் அவளைப் பார்த்து புன்னகைத்தவன் அறை விளக்கை அணைத்து விட்டு வந்து படுத்துக் கொண்டான்.

ஆர்யான் வந்து கட்டிலில் படுத்துக் கொள்ளவும்,

"தேங்க்ஸ் ரயன்..." என அவன் கண்களைப் பார்த்துக் கூறிய சிதாரா ஆர்யானின் நெஞ்சில் தலை வைத்து அவனை அணைத்துக் கொண்டு படுத்தாள்.

வலி பொறுக்காமல் ஆறுதலுக்காகத் தான் சிதாரா தன்னை அணைத்துப் படுத்திருக்கிறாள் என எண்ணிய ஆர்யான் ஒரு கையால் தானும் அவளை அணைத்துக் கொண்டான்.

ஆனால் சிதாராவின் மனதில் என்ன இருந்தது என அவளே அறிவாள்.

சிதாரா ஏதோ யோசனையில் இருக்கவும் ஆர்யான், "தூங்கு மினி.. மார்னிங் ஆகும் போது பெய்ன் குறைஞ்சிடும்.." என்று சிதாராவின் நெற்றியில் தன் முதல் முத்தத்தை பதித்து விட்டு கண் மூடினான்.

ஆனால் அம் முத்தத்தில் கொஞ்சம் கூட காமம் இன்றி சிதாராவின் மீதிருந்த அன்பும் அக்கறையும் மட்டுமே இருந்ததை சிதாராவால் உணர முடிந்தது.

சிதாராவும் நிம்மதியாக கண் மூடி உறங்கினாள்.

_______________________________________________

"பாஸ்... ஏன் இன்னும் எதுவும் பண்ணாம அமைதியா இருக்கீங்க... " என்று அவனிடம் வினவ,

பதிலுக்கு ஒரு சிரிப்பை உதிர்த்தவன், "எதுக்கு இந்த அவசரம்... இதனால தான் நான் உனக்கு பாஸா இருக்கேன்.. நீ எனக்கு கீழ வேலை பார்க்குற..." என்க,

மற்றவன் கப்சிப்பென வாயை மூடிக் கொண்டான்.

சிகரெட் ஒன்றைப் பற்ற வைத்தவன் அதை வாயில் வைத்து, "நான் கண்டதும் வேட்டையாடுற நரி இல்ல... பதுங்கி நின்னு வேட்டையாடுற புலி.. ஆர்யான் எதிர்ப்பார்க்காத நேரம் என் பேபிய தூக்குவேன் நான்..." என்று புகையை ஊதி விட்டான்.

_______________________________________________

அடுத்து வந்த இரண்டு நாட்களும் விடுமுறையாக இருக்க ஆர்யான் சிதாராவை எந்த வேலையும் செய்ய விடவில்லை.

அவளுக்கு தேவையான எல்லாவற்றையும் பார்த்துப் பார்த்து செய்ய சிதாராவின் மனம் கொஞ்சம் கொஞ்சமாக ஆர்யானின் பக்கம் சாயத் தொடங்கியது.

ஆர்யான் தனக்கு பணிவிடை செய்வதைப் பொறுக்காத சிதாரா,

"நான் என்ன சின்ன குழந்தையா ஜிராஃபி... இல்லன்னா நோயாளியா... இப்படி ட்ரீட் பண்ற... எனக்கு சும்மா இருக்க போர் அடிக்குது..." என சிரிப்புடன் கேட்க,

"நீ குழந்தையா இருந்தாலும் இல்ல உனக்கே ஒரு குழந்தை வந்தாலும் நான் உன்ன பாத்துக்குறது மாறாது.." என ஆர்யான் பட்டென்று சொல்லி விட,

"என்ன..." என அதிர்ந்தாள் சிதாரா.

அப்போது தான் ஆர்யானுக்கு அவன் கூறியது புத்தியில் உரைக்க சிதாராவிடம் என்ன சொல்லி சமாளிக்க என எண்ணியவன்,

"அ..அது... அது வந்து... மினி எனக்கு இம்பார்டன்னட் கால் ஒன்னு எடுக்கனும்... இதோ வரேன்..." என்று விட்டு ஓடினான்.

ஆர்யானின் தடுமாற்றத்தைப் பார்த்த சிதாரா வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரித்தாள்.

"நீ இன்னும் எத்தனை நாளைக்கு மறைக்க போறேன்னு நானும் பாக்குறேன் ஜிராஃபி..." என நினைத்து சிரித்தாள்.

_______________________________________________

ரஞ்சித், "இது எப்படி நடந்தது... நம்ம டென்டர் அமவுன்ட் எப்படி அவங்களுக்கு தெரிய வந்தது.." எனக் கோவமாகக் கேட்க,

"தெரியல சார்... ஆனா நிச்சயம் நம்ம கூடவே இருந்து யாரோ அவங்களுக்கு இன்ஃபர்மேஷன் குடுத்து இருக்காங்க..." என அவரின் பி.ஏ. கூறினார்.

"சீக்கிரமா அது யாருன்னு கண்டு பிடிங்க.... அந்த எஸ்.எம் கம்பனியோட ஆளு மட்டும் யாருன்னு தெரியட்டும்... அவன சும்மா விடக் கூடாது... உடனே ரவிய கான்டக்ட் பண்ணி என்ன மீட் பண்ண வர சொல்லுங்க..." என ரஞ்சித் ஆணையிடவும் அவருக்கு சரி என தலையசைத்து விட்டு சென்றார் அவரின் பி.ஏ
 

Nuha Maryam

Moderator
அத்தியாயம் - 20

ரஞ்சித் தன் கேபினில் இருக்க கதவைத் தட்டி விட்டு உள்ளே நுழைந்த ரவி,

"அங்கிள்... நீங்க வர சொன்னதா உங்க பி.ஏ. சொன்னாரு... ஏதாவது ப்ராப்ளமா அங்கிள்.." எனக் கேட்க,

ரஞ்சித், "உட்காருப்பா... கொஞ்சம் பெரிய ப்ராப்ளம் தான்.. ஆரு கிட்ட சொன்னா அவன் வேற டென்ஷன் ஆகுவான்.. அதான் உன் கிட்ட சொன்னா நீ சால்வ் பண்ணி வைப்பன்னு தான் உன்ன வர சொன்னேன்..." என்றவர் சற்று நிறுத்தி விட்டு,

"உனக்கு தெரியுமேப்பா தொடர்ந்து நம்ம கம்பனி தான் நம்பர் வன் இடத்துல இருக்குன்னு... அடுத்ததா எஸ்.எம். கம்பனி இருக்கு... எஸ்.எம். கம்பனி ஓனர் மிஸ்டர்.ராஜசேகர் அவங்க கம்பனிய நம்பர் வன் இடத்துக்கு கொண்டு வரனும்னு ரொம்ப நாளா ட்ரை பண்ணிட்டு இருக்காரு... அது நல்ல விஷயம் தான்.. பட் அதுக்காக இப்போ அவர் தேர்ந்து எடுத்து இருக்குற வழி தான் தப்பா இருக்கு... தொடர்ந்து ரெண்டு தடவ நான் டென்டர்க்கு ஃபிக்ஸ் பண்ணி வெச்சி இருந்த அமவுன்ட்ட விட கரக்டா ஒரு ரூபா கம்மி பண்ணி அந்த டென்டர அவங்க எடுத்துக்குறாங்க.. முதல் தடவ நடக்கும் போது தற்செயலா நடக்குதுன்னு நினைச்சேன்... பட் திரும்ப இப்பவும் நடக்கும் போது தான் எனக்கு டவுட்டா இருக்கு... நம்ம கம்பனி டீட்டைல்ஸ் எல்லாம் ராஜசேகர் தெரிஞ்சி வெச்சி இருக்காரு... அவரோட ஆட்கள் தான் இந்த கம்பனில இருந்துக்கிட்டே அங்க டீட்டைல்ஸ் கொடுக்குறாங்க... நீ தான்பா அது யாருன்னு கண்டு பிடிக்கனும்... இதனால எங்களுக்கு கோடி கணக்கு லாஸ் வேற..." எனப் பிரச்சினையை விளக்கினார்.

ரஞ்சித் கூறியதை அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்த ரவி,

"அங்கிள் உங்க கம்பனி எம்பளாயிஸ் எல்லாரையும் ஒரே இடத்துக்கு கூப்பிட முடியுமா.." என்றான்.

சிறிது நேரத்திலே ரஞ்சித்தின் கட்டளைப்படி அனைவரும் மீட்டிங் ஹாலில் கூடினர்.

முதலில் அங்கு வேலை செய்யும் அனைவருமே வந்திருப்பதை உறுதி செய்து கொண்ட ரவி ஒவ்வொருவரின் முகத்தையும் ஆராய்ந்தான்‌.

அனைவரும் சாதாரணமாக இருக்க அவர்களில் ஒருவனின் முகம் மட்டும் பதட்டமாக இருந்தது.

ரவி ஒவ்வொருவரின் முகத்தையும் ஆராயும் போது அந்த ஜீவா என்றவன் மாத்திரம் மற்றவர்களின் பின்னால் தன்னை மறைத்துக் கொள்ள முயன்றான்.

ரவி, "எல்லாரும் உங்க மொபைல எடுத்து டேபிள் மேல வைங்க.." என்கவும் ஒவ்வொருவராக வைக்க பின்னால் ஒளிந்து நின்றவன் தன் மொபைலை எடுத்து மேசையில் வைக்கும் போது கரம் நடுங்கியது.

அந்த மொபைலைக் கையில் எடுத்த ரவி அதனை அவனிடம் நீட்டி, "அன்லாக் இட்.." என்கவும் நடுங்கியபடியே அன்லாக் செய்தான்.

ரவி கால் ஹிஸ்ட்ரியில் இறுதியாக இருந்த எண்ணுக்கு அழைக்க மறுபக்கம் அழைப்பை ஏற்றவன்,

"நான் கால் பண்ணாம நீயே எனக்கு கால் பண்ணக் கூடாதுன்னு சொல்லி இருக்கேன்ல... " எனக் கத்தியவன்,

"சரி சீக்கிரம் சொல்லு.. என்ன விஷயம்.. அந்த ரஞ்சித் திரும்ப ஏதாவது டென்டர் வாங்க போறானா..." எனக் கேட்கவும் அழைப்பைத் துண்டித்தான் ரவி.

ஜீவாவின் சட்டைக் காலரைப் பிடித்த ரவி அவனை ரஞ்சித்தின் கேபினுக்கு இழுத்துச் சென்று நன்றாக அடித்தான்.

ரவி, "சொல்லு... யாரு உன்ன இப்படி பண்ண சொன்னது... இப்போ பேசினது ராஜசேகர் தானே.." எனக் கேட்டு இன்னும் அடிக்க,

ஜீவா வலி பொறுக்க முடியாமல், "இல்ல..‌இல்ல.. சொல்றேன் சார்.... சொல்றேன்... யாருன்னு நான் பார்த்ததில்லை.... அவரு பேரு கூட தெரியாது... ஆனா எஸ்.எம் கம்பனிக்கு ரொம்ப வேண்டப்பட்டவங்கன்னும் ராஜசேகருக்கு இதை பத்தி தெரியக் கூடாதுன்னும் சொன்னாரு... பணத்துக்கு ஆசைப்பட்டு இப்படி பண்ணிட்டேன் சார்...‌ ப்ளீஸ்..‌ புள்ள குட்டிக்காரன் சார்.. விட்டுருங்க சார்.." எனக் கெஞ்ச ரவி போட்டு இன்னும் அடித்தான்.

ரஞ்சித், "போதும்பா ரவி.. அவன விட்டுரு... உனக்கு இந்த கம்பனில வேலை இல்ல இனி... கிளம்பு..." என ஜீவாவை விரட்டியவர்,

"என்னப்பா பண்ண போற... ராஜசேகரும் இல்ல... ஆனா யாரோ அவருக்கு ஹெல்ப் பண்றாரு..." என்க,

ரவி, "நீங்க கவலைப் பட வேணாம் அங்கிள்... அந்த ஆளோட நம்பர் என் கிட்ட இருக்கு... மத்தத நான் பாத்துக்குறேன்..." என்று விட்டு அங்கிருந்து சென்றான்.

_______________________________________________

நாட்கள் வேகமாகக் கடக்க சிதாரா, ஆர்யான் திருமணம் முடிந்து நியுயார்க் வந்து ஆறு மாதங்களைக் கடந்திருந்தது.

ஆர்யானின் ஒவ்வொரு செயலிலும் சிதாராவின் மனம் அவன்பால் கவரப்பட்டது.

அன்று யுனிவர்சிட்டியில் ஃப்ரீ பீரியட்டில் சிதாரா வகுப்பில் தனியே அமர்ந்தவாறு ஆர்யான் பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தாள்.

அவளின் கையோ மேசை மீதிருந்த கொப்பியில் தன்னாலே ஏதோ கிறுக்கியது.

முதல் முறை தனக்கு வலிப்பு வந்த போது அவன் பதறியது, தனக்காக பிரணவ்விடம் கெஞ்சியது என அவனின் ஒவ்வொரு செயலையும் நினைத்து சிரித்தாள்.

அன்று ஆர்யானின் டயரியைப் படித்த பின் அவளாகவே அவனை அணைத்துக் கொண்டு படுத்தாள்.

அடுத்து வந்த நாட்களும் அவ்வாறே படுக்க முதலில் வலியில் என்று நினைத்திருந்த ஆர்யான் தொடர்ந்தும் சிதாரா அவ்வாறு நடக்கவும்,

"என்ன மினி.. கொஞ்ச நாளா வித்தியாசமா பிஹேவ் பண்ற... தனியா சிரிக்கிற... புதுசா என்ன ஹக் பண்ணிக்க வேற செய்ற..என்னாச்சு.." என சந்தேகமாகக் கேட்க,

திடீரென ஆர்யான் அவ்வாறு கேட்கவும் சமாளிப்பதற்காக சிதாரா,

"எனக்கென்ன... நான் நல்லா தான் இருக்கேன்... ஹக்கி பிலோ இல்லாம எனக்கு தூக்கம் போகாதுன்னு உனக்கு தெரியும் தானே ஜிராஃபி.. அதான் ஆறடிக்கு மேல நீ தண்டமா வளர்ந்து இருக்காய்... அதான் உன்னயே ஹக்கி பிலோவா யூஸ் பண்ணிக்குறேன்... உனக்கு பிடிக்கலன்னா சொல்லு.. நான் நாளைக்கே வேற ஹக்கி பிலோ வாங்கிக்குறேன்.." என்க,

அவசரமாக மறுத்த ஆர்யான், "ச்சேச்சே.. அப்படி எதுவும் இல்ல மினி... நீ தாராளமா என்னைய ஹக் பண்ணிட்டு தூங்கு... எனக்கு ஒரு ப்ராப்ளமும் இல்ல.. எந்த மடையன் காதலிச்சு கல்யாணம் பண்ண பொண்டாட்டியே தன்ன நெருங்கி வரும் போது வேணான்னு சொல்லுவான்.." என இறுதி வாக்கியத்தை மட்டும் தனக்குள் முனங்கினான்.

ஆனால் ஆர்யான் கூறியது சிதாராவுக்கு தெளிவாக விளங்கி விட ஆர்யான் அறியாதவாறு வாயை மூடி சிரித்தாள்.

அதன் பின் வந்த நாட்களில் ஆர்யான் தலையில் ஓடிய பிரச்சினைகளில் சிதாரா ஆர்யானையே எப்போதும் ரசிப்பதையும் அவளின் நடவடிக்கைகளில் இருந்த மாற்றத்தையும் கவனிக்கத் தவறினான்.

ஆர்யான் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தவள் ஏதோ சத்தம் கேட்கவும் தன்னிலை அடைந்து தன் கொப்பியைப் பார்க்க அந்தப் பக்கம் முழுவதும் ஹார்ட் போட்டு ஆர்யானின் பெயருடன் அவளின் பெயரை எழுதி வைத்திருந்தாள்.

அதனைக் கண்டு புன்னகைத்தவள், "அப்போ நான் ஜிராஃபிய லவ் பண்றேனா..." என தன்னையே கேட்டுக் கொள்ள அவள் முகம் வெட்கத்தில் சிவந்தது.

சிதாரா, "யப்... ஐ லவ் ஜிராஃபி... பட் அவன் தான் இன்னும் என் கிட்ட லவ் பண்றதா சொல்லவே இல்லையே... ஹ்ம்ம்ம்.. பரவாயில்ல... நாம ஃபர்ஸ்ட் சொன்னா அவனுக்கு ஷாக்கிங்ஙா இருக்கும்... எப்படி ரியாக்ட் மண்ணுவான்.." என பல விதத்தில் சிந்தித்தவளின் மனசாட்சி,

"முதல்ல அவன் கிட்ட போய் உன் லவ்வ சொல்லு... கல்யாணம் ஆகி ஆறு மாசம் ஆகுது... இப்ப தான் மேடம் லவ் பண்ணவே போறாங்களாம்..." எனக் கேலி செய்தது.

"அதுக்கென்ன... கல்யாணத்துக்கு அப்புறம் வர லவ் தான் பெஸ்ட்... இன்னைக்கு இத சொல்லி ஜிராஃபிய சர்ப்ரைஸ் பண்ணலாம்.." என்ற சிதாரா உடனே சுகயீனம் எனக் காரணம் சொல்லி விட்டு இடையிலேயே யுனிவர்சிட்டியிலிருந்து கிளம்பினாள்.

ஆர்யானுக்கு கூட தகவல் கூறவில்லை.

வீட்டை அடைந்தவள் ஏதோ நெட்டில் சேர்ச் செய்து விட்டு யாருக்கோ அழைத்து பேசி விட்டு குளிக்கச் சென்றாள்.

குளித்து முடித்து வந்தவள் கப்போர்ட்டைத் திறந்து ஆர்யான் முதல் முதலில் அவளுக்கு பரிசளித்த சேரியை எடுத்தாள்.

இளஞ்சிவப்பு நிறத்தில் அழகான கல் வேலைப்பாட்டுடன் கூடிய சில்க் சேரி.

"இது நானே சொல்லி உனக்காக ரெடி பண்ண சேரி மினி... உனக்கு ரொம்ப ரொம்ப ஸ்பெஷலான உன் மனசுக்கு நெருக்கமா ஃபீல் பண்ற மொமன்ட்ல தான் நீ இதை வியர் பண்ணனும்..." என அதை அவளிடம் தந்த போது ஆர்யான் கூறியது ஞாபகம் வந்தது.

சிதாரா, "இந்த சேரிய போட இதை விட ஸ்பெஷலான மொமன்ட் என்ன இருக்க முடியும் ஜிராஃபி.." என்று புன்னகைத்தாள்.

அந்த சேரியை அணிந்து அளவான ஒப்பனையுடன் தயாரானவள் ஆர்யானுக்கு ஏதோ குறுஞ்செய்தியொன்றை அனுப்பி விட்டு வீட்டிலிருந்து வெளியேறினாள்.

_______________________________________________

பிரணவ், "இப்ப தான் ரீச் ஆனேன்... வேலை விஷயமா வெளியூர் போறதா அபினவ் கிட்ட சொல்லி இருக்கேன்... அதனால அவனுக்கு சந்தேகம் வராது... இங்க பக்கத்துல ஒரு ஹோட்டல்ல தான் தங்கி இருக்கேன்.." என அலைபேசியில் யாரிடமோ கூற,

மறுபக்கத்தில் இருந்தவன் ஏதோ கேட்கவும், "அதுக்கு தான் சான்ஸ் கிடைக்கும் வர வெய்ட் பண்றேன்... அவன் சின்னதா ஒரு தப்பு பண்ணினா போதும்... ஆள தூக்கிடலாம்..." என பிரணவ் பதிலளித்தான்.

இன்னும் ஏதோ பேசி விட்டு அழைப்பைத் துண்டித்தான் பிரணவ்.

_______________________________________________

அன்று ஆர்யானுக்கு ஆஃபீஸில் வேலை அதிகமாக இருந்தது.

கிடைத்த சந்தர்ப்பத்தில் மொபைலை எடுத்துப் பார்க்க சிதாராவிடமிருந்து குறுஞ்செய்தி வந்திருப்பதைக் காட்டியது.

அதைத் ஓப்பன் செய்து பார்க்க, "எந்த வேலையா இருந்தாலும் விட்டுட்டு இப்பவே கிளம்பி ரூஃப் கார்டன் வா ஜிராஃபி.." என்றிருக்க,

ஆர்யான், "மினி இந்த நேரம் யுனிவர்சிட்டில தானே இருக்கனும்.. எதுக்கு என்னை ரூஃப் கார்டன் வர சொல்லி இருக்கா.." என யோசித்தான்.

சிதாரா எப்போது குறுஞ்செய்தியை அனுப்பி இருக்கிறாள் எனப் பார்த்தவன் அதிர்ந்தான்.

"என்ன... ரெண்டு மணி நேரத்துக்கு முன்னாடியா... அப்போ மினி அங்க தனியா இருக்காளா... ஷிட்.. அதுக்கப்புறம் எந்த மெசேஜும் இல்ல.." எனப் பதறியவன் அவசரமாக ரூஃப் கார்டன் கிளம்பினான்.

ஆர்யான் அங்கு சென்று பார்க்க அவ்விடம் முழுவதும் பலூன்களாலும் ரோஜாக்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

ஆர்யானுக்கு எதுவுமே புரியவில்லை.

அவனைத் தவிர யாருமே அங்கு இருக்கவில்லை.

சிதாராவும் கண்ணுக்குத் தெரிய இருக்கவில்லை.

"மினி... மினி.. " எனக் கத்திப் பார்த்தவன் பதில் வராமல் போக பயந்து சிதாராவுக்கு கால் செய்தான்.

ஒவ்வொரு ரிங்கிற்கும் அவனின் இதயம் வேகமாகத் துடித்தது.

இரண்டு முறை அழைத்தும் முழுவதுமாக ரிங் சென்று கட் ஆனது.

மீண்டும் ஒருமுறை முயற்சிக்க இம்முறை அழைப்பு ஏற்கப்பட்டது.

மறுபக்கம் எந்த சத்தமும் வராமல் போக நடுங்கும் குரலில், "மினி..." என்றான் ஆர்யான்.

மறுபக்கம்‌ யாரோ சிரிக்கும் சத்தம் கேட்கவும், "ஏ... ஏய்... யாரு நீ.. மினியோட மொபைல் உன் கிட்ட எப்படி வந்தது... மினி எங்க..." என கோவமாக ஆர்யான் கேட்க,

"என்ன ஆர்யான் நீ... இவ்வளவு அழகான பொண்டாட்டிய பக்கத்துல வெச்சிக்கிட்டு எதுவுமே செய்யாம இருந்திருக்க... ஆளு இன்னும் ஃப்ரஷ்ஷா இருக்கா..." என மறுபக்கத்தில் இருந்து பதில் வர ஆர்யான் அதிர்ந்தான்.

அதே குரல்... ஆறு மாதத்திற்கு முன் ஆர்யானுக்கு அழைத்து மிரட்டிய அதே குரல்...

மறுபக்கம், "எல்லாரும் உன்ன மாதிரி முட்டாளா இருப்பானா என்ன... பரவாயில்ல ஆர்யான்... மேரேஜ் வேணா உன் கூட நடந்திருக்கலாம்... பட் ஃபர்ஸ்ட் நைட் இப்போ என் கூட நடக்க போகுது... என் பேபி கிட்ட இருந்து வர வாசனை அப்படியே என்னை வா வான்னு அவ பக்கம் இழுக்குது... ஆஹ்ஹ்ஹ்ஹ்ஹ்... வாட் அ ஸ்ட்ரக்சர்..." என்று விட்டு அழைப்பு துண்டிக்கப்பட்டது.

அவனின் பேச்சில் கோவத்தில் பல்லைக் கடித்த ஆர்யான் மீண்டும் சிதாராவின் எண்ணுக்கு முயற்சிக்க ஸ்விட்ச் ஆஃப் என்று வரவும், "மினி......." எனக் கத்தியவன் அப்படியே மடங்கி கீழே அமர்ந்தான்.

_______________________________________________

ஹோட்டலின் வீ.ஐ.பி. சூட்டில் இருந்த பஞ்சு மெத்தையில் சிதாரா மயங்கிக் கிடக்க அவளின்‌ முகத்தின் அருகில் நெருங்கியவன், "பேப்......" என்றான் கிறக்கமாக.
 

Nuha Maryam

Moderator
அத்தியாயம் - 21

ஆர்யானுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க வேண்டும் என ரூஃப் கார்டனை முன் பதிவு செய்தவள் ஆர்யானுக்கு ரூஃப் கார்டனுக்கு வருமாறு குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பி விட்டு வீட்டிலிருந்து வெளியேறினாள்.

வீட்டிலிருந்து வெளியேறியதிலிருந்து என்றும் போல யாரோ தன்னை பின் தொடர்வது போல் சிதாராவுக்கு தோன்றியது.

ஏதோ தன் பிரம்மை என அதனைப் புறக்கணித்து விட்டு டாக்சி பிடிக்கப் பார்க்க,

அதற்குள் அவளுக்கு அருகில் வந்து நின்ற வேனிலிருந்து இறங்கிய சிலர் மயக்க மருந்து அடித்து கர்சீப் மூலம் சிதாராவை மயக்கமடையச் செய்து வேனில் தூக்கிப் போட்டு கொண்டு சென்றனர்.

மருந்தின் வீரியத்தால் சிதாரா உடனடியாக மயக்கமடையவும் அவர்களுக்கு அவளை கடத்த இலகுவானது.

ஆனால் சிதாராவை உள்ளே தூக்கிப் போடும் போது வேன் கதவைத் திறந்தவனின் கையிலிருந்து விழுந்த பிரேஸ்லட்டை யாரும் கவனிக்கவில்லை.

_______________________________________________

சிதாராவின் நிலையை அறிந்த ஆர்யான் மடிந்து அமர்ந்திட அவனுக்கு என்ன செய்ய என்றே விளங்கவில்லை.

"மினி... ஏன்டி சொல்லாம போன..." என தலையில் அடித்துக் கொண்டு அழுதவன் சில நொடிகளில் தன்னை சமன் செய்து கொண்டு மொபைலில் யாருக்கோ அழைத்தான்.

மறுபக்கம் அழைப்பு ஏற்கப்பட்டதும் ஆர்யான், "டே... டேய்... அவங்க மினிய கடத்திட்டாங்கடா... " என நடந்ததைக் கூற,

மறுபக்கம், "என்னடா சொல்ற... சரி சரி.. தங்கச்சோட மொபைல்ல தானே அவன் பேசினதா சொன்னான்... நான் அந்த லொக்கேஷன ட்ரேஸ் பண்ண ட்ரை பண்றேன்... நீ ஒரு வேலை பண்ணு... அன்னைக்கு ஒரு நம்பரால உனக்கு கால் வந்திச்சுல்ல... அதுக்கப்புறம் நாம ட்ரை பண்ணப்போ அந்த நம்பர் ஸ்விச் ஆஃப் பண்ணி இருந்ததே.. நீ திரும்ப அந்த நம்பருக்கு ட்ரை பண்ணிக்கிட்டே இரு.. நான் உன்ன கூப்பிட்றேன்..." என்று விட்டு அழைப்பு துண்டிக்கப்பட்டது.

ஆர்யான் உடனே அந்த எண்ணுக்கு அழைத்துப் பார்க்க அழைப்பு செல்லவில்லை.

பலமுறை முயன்று விட்டு சிதாராவைக் கடத்தியவர்கள் பற்றி ஏதாவது துப்பு கிடைக்குமா எனப் பார்க்க வீட்டை நோக்கி சென்றான்.

வீட்டை சற்று நெருங்குகையிலே அவன் கண்ணில் பட்டது கீழே விழுந்து கிடந்த ஒரு ப்ரேஸ்லட்.

அதை கையில் எடுத்துப் பார்த்த ஆர்யான் அதிலிருந்த D என்ற ஆங்கில எழுத்தைக் கண்டு யோசனை வயப்பட்டான்.

_______________________________________________

மயக்கத்திலிருந்த சிதாரா மெது மெதுவாகக் கண் விழிக்க அவள் நாசியை அடைந்த சிகரெட் புகையில் மூக்கை கையால் மூடிக் கொண்டு இருமினாள்.

"எழுந்துட்டியா பேபி... நீ மயக்கம் தெளியும் வரை தான் வெய்ட் பண்ணிட்டு இருந்தேன்..." என்ற குரலில் பதறி மறுபக்கம் திரும்பிப் பார்க்க அப்போது தான் அவளுக்கு மிக நெருக்கமாக அமர்ந்து சிகரெட் பிடித்தபடி பார்வையாலே சிதாராவைத் துகிலுரிந்து கொண்டிருந்தவனைக் கண்டாள்.

அவனைக் கண்டு பயந்தவள் கட்டிலின் பின்னே சாய்ந்து, "நீ... நீ... எதுக்கு என்ன கடத்தியிருக்க..." என நடுங்கியபடி கேட்க,

சிதாராவைப் பார்த்து சிரித்தவன் அவளை இன்னும் நெருங்கி,

"என்ன பேபி இப்படி கேட்டுட்ட... உனக்கு வேணா என்னை தெரியாம இருக்கலாம்... ஆனா உன் புருஷன் இருக்கானே... தி க்ரேட் ஆர்யான்... அவனுக்கு என்னை ரொம்ப நல்லாவே தெரியும்... சரி அதெல்லாம் விடு பேபி... " என்றவன் தன் விரல் கொண்டு சிதாராவின் கன்னத்தை வருட அவளுக்கு உடல் கூசிப் போனது.

பட்டென்று அவன் கைகளைத் தட்டி விட்டவள் கண்கள் கலங்கி விட மனமோ, "ரயன்...‌ ரயன்... " என ஆர்யானின் பெயரையே உச்சரித்தது.

சிதாரா கையைத் தட்டி விட்டதும் ஆத்திரம் கொண்டவன் அவள் தாடையை இறுக்கப் பற்ற சிதாரா அவனின் கையை விலக்கப் போராடினாள்.

சிதாராவின் முயற்சியைப் பார்த்தவன், "இன்னைக்கு நீ என்ன பண்ணாலும் உன்னால இங்க இருந்து போக முடியாது பேபி... அன்னைக்கு மாதிரி அந்த ஆர்யானால கூட உன்ன காப்பாத்த வர முடியாது... இன்னைக்கு உன்ன நான் முழுசா அனுபவிக்க போறேன்..." என்றான் வக்கிரப் புன்னகையுடன்.

எவ்வளவு முயன்றும் அவன் கையை விலக்காததாலும் அவனின் பேச்சு தந்த பயத்தினாலும் தன்னைக் காத்துக் கொள்ள அவன் கன்னத்தில் அறைந்தாள் சிதாரா.

அவனைத் தள்ளி விட்டு அவசரமாக கட்டிலை விட்டு இறங்கியவள் ஓடிச் சென்று கதவைத் திறக்கப் பார்க்க அது திறந்து கொள்ளவில்லை.

சிதாராவின் செயலில் பலமாகச் சிரித்தவன், "நான் டோர ஓப்பன் பண்ணாம உன்னால வெளிய போக முடியாது பேபி..." என்றவன் மதுக் கிண்ணத்தை வாயில் சரித்தான்.

சிதாரா அவன் கூறியதைக் கண்டு கொள்ளாமல், "ஹெல்ப்.... ஹெல்ப்..." எனக் கத்திக் கொண்டே கதவைத் திறக்க முயற்சி செய்ய,

சிதாராவை நெருங்கியவன் பின்னாலிருந்து அவளை அணைக்க முயன்றான்.

அவனைத் தள்ளி விட்டு ஓடியவள் மேசையில் அழகுக்காக வைத்திருந்த பூச்சாடியை கையில் எடுத்து,

"கிட்ட வராதே... அடிச்சிடுவேன்..." என்க,

ஏதோ நகைச்சுவை கூறியது போல் சிரித்தவன் அவளை மேலும் நெருங்கினான்.

சிதாரா பயத்தில் பூச்சாடியை அவனை நோக்கி வீச அதிலிருந்து லாவகமாக தப்பியவன், "நீ இப்படி பண்ண பண்ண எனக்கு உன்னை அடையனும்னு வெறி ஏறிட்டே போகுது பேபி..." என்றவன் வலுக்கட்டாயமாக அவளை அணைத்தான்.

அவன் சிதாராவின் கழுத்தில் முகம் புதைக்க,

"ப்ளீஸ்... என்னை எதுவும் பண்ணாதே விட்டுரு..." என அவனிடமிருந்து விடுபடப் போராடியவாறு கெஞ்சினாள் சிதாரா.

ஆனால் போதையின் உச்சத்தில் இருந்த காமுகனின் செவிகளை சிதாராவின் கதறல்கள் எதுவும் எட்டவில்லை.

காத்திருந்து கிடைத்த இரையாக சிதாராவை எண்ணினான் அவன்.

சிதாராவுக்கு கொஞ்சம் கொஞ்சமாக மூச்சு வாங்க ஆரம்பிக்க அவளின் பிடி இளகியது.

அதனை தனக்கு சாதகமாக்கிக் கொண்டவன் சிதாராவைக் கட்டிலில் தள்ளி விட்டு அவள் மீது படர்ந்தான்.

அவன் சிதாராவின் தோளில் கை வைத்து அவளின் ஆடையைக் களைய ஆரம்பிக்க,

அவனைத் தடுக்கக் கூட திராணியற்று சிதாரா, "ரயன்.... ரயன்...." என விடாது அரற்றினாள்.

அவள் கன்னத்தில் அறைந்தவன், "ஏய் வாய மூடு... எப்பப்பாரு அவன் பேரையே சொல்லிக்கிட்டு... அப்படி என்ன அந்த ஆர்யான் கிட்ட கண்டுட்ட... சந்தோஷம்னா என்னன்னு நான் காட்டுறேன்..." என்றவன் சிதாராவை முத்தமிட நெருங்க அதற்குள் கதவு வேகமாகத் தட்டப்பட்டது.

"ஷிட்..." என்று மெத்தையில் அடித்தவன் சிதாராவை விட்டு எழுந்து போதை மயக்கத்தில் யோசிக்காது கதவைத் திறந்தான்.

உடனே அவனைத் தள்ளிக் கொண்டு அந் நாட்டு போலீஸ் உள்ளே வர அவர்களின் பின்னே வேகமாக உள் நுழைந்தான் ஆர்யான்.

ஆர்யானின் பார்வை முதலில் சென்றது சிதாராவிடம் தான்.

தன்னவள் கட்டில் நடுவில் வாடிய கொடியாய் படுத்திருக்க,

"மினி..." என அவளிடம் ஓடியவன் அவசரமாக போர்வையை எடுத்து அவள் மீது போர்த்தினான்.

வேகமாக மூச்சு வாங்கிக் கொண்டிருந்தவளால் ஆர்யானைக் கூட அடையாளம் காண முடியாமல்,

"என்ன... விட்... டுரு..‌ ப்ளீஸ்... தொடாதே.." எனக் கெஞ்சியவளின் கை, கால், தலை என ஒரு பக்கம் வேகமாக வெட்ட வாயில் நுரை‌ தள்ளியது.

சிதாராவின் நிலையைக் கண்டு அதிர்ந்த ஆர்யான் அவசரமாக அவளைக் கையில் ஏந்திக் கொண்டு வெளியேற கதவின் அருகில் செல்ல,

போலீஸ் துப்பாக்கியுடன் சுற்றி வளைக்க நடுவில் என்ன நடந்தது எனப் புரியாமல் போதையில் விளித்துக் கொண்டிருந்தவனைக் கண்டு ஆர்யான் அதிர்ந்தான்.

அவன் உதடுகள் தானாக, "தயா..." என அசைந்தது.

சிதாராவின் நிலை மோசமாக போலீஸின் காவலில் அவனை விட்டு விட்டு ஹாஸ்பிடல் விரைந்தான் ஆர்யான்.

_______________________________________________

கைகளில் தலையைத் தாங்கியபடி ஐ.சி.யு வாசலில் இருந்த கதிரையில் அமர்ந்திருந்தான் ஆர்யான்.

அவனின் கண்களிலிருந்து விடாது கண்ணீர் வடிந்தன.

சிதாராவை மருத்துவமனையில் சேர்த்தவன் அவள் இருந்த நிலையை எண்ணியே கலங்கினான்.

அவ்வளவு பாதுகாப்புடன் இருந்தும் தன்னவளுக்கு இந் நிலைமை வராது காக்க முடியவில்லையே என ஆர்யான் வேதனைப்பட்டான்.

சற்று நேரத்தில் டாக்டர் வர ஆர்யான், "டாக்டர்...‌ என் மினி எப்படி இருக்கா... அவளுக்கு எந்த பிரச்சினையும் இல்லல்ல... அ...‌ அவன்... என்.. என் மினிய எதுவும் பண்ணி இல்ல தானே..." என பதட்டமாக கேட்டான்.

ஆர்யானுக்கு அப்படி கேட்கும் போதே குரல் நடுங்கியது.

"காம் டவுன் மிஸ்டர்... உங்க மனைவிக்கு அங்க எதுவும் நடந்து இல்ல... அவங்கள பலாத்காரம் பண்ண முயற்சி பண்ணி இருக்காங்க... அதனால தான் அவங்களுக்கு ஃபிட்ஸ் வந்திருக்கு... முதல்ல அவங்களுக்கு கான்ஷியஸ் வரனும்... அப்போ தான் என்னால எது வேணாலும் சொல்ல முடியும்... நீங்க போய் உங்க மனைவிய பார்க்கலாம்... பட் டிஸ்டர்ப் பண்ண வேணாம்..." என்று விட்டு சென்றார்.

அவசரமாக ஐ.சி.யுவினுள் நுழைந்தவன் சிதாராவின் அருகில் அமர்ந்தான்.

அப்போது அவள் அணிந்திருந்த உடையை அவதானித்தான்.

கண் கலங்கிய ஆர்யான் அவள் கையை எடுத்து தன் முகத்தில் வைத்துக் கொண்டான்.

"ஏன் மினி என் கிட்ட சொல்லாம போன... ஒரு கால் பண்ணி இருக்கலாம்ல... அதுவும்... இந்த ட்ரஸ்..... எதுவுமே புரியல மினி... ப்ளீஸ்... என் கிட்ட வந்துடு... உன் ஜிராஃபிக்காக..." என அழுதான் ஆர்யான்.

திடீரென சிதாராவின் மூடிய இமைக்குள் கருமணிகள் அங்குமிங்கும் அசைய,

"வேணாம்... வேணாம்... என்னை எதுவும் பண்ணாதே... விட்டுரு... நான் போகனும்... ரயன்... ரயன்... என்ன இவன் கிட்ட இருந்து காப்பாத்து ரயன்... தொடாதே என்ன..." எனக் கத்தினாள்.

சிதாராவின் கத்தலில் ஆர்யான், "மினி...‌மினி... கண்ண திற மினி... என்னை பாரு.." எனக் கன்னத்தில் தட்டியபடி பேச,

சிதாராவோ அவனிடமிருந்து தன் கையை வேகமாக இழுத்தவள்,

"தொடாதே... வேணாம்... விட்டுரு..." என அரற்றியவளுக்கு மீண்டும் வலிப்பு வந்தது.

சிதாராவின் நிலையைக் கண்டு பதறிய ஆர்யான், "டாக்டர்... டாக்டர்..." எனக் கத்திக் கொண்டு வெளியே ஓடினான்.

மருத்துவர் வரவும் ஆர்யான் அவரிடம் சிதாராவின் நிலையைக் கூற அவர் அவசரமாக ஐ.சி.யுவினுள் நுழைந்தார்.

ஆர்யானும் அவரைத் தொடர்ந்து செல்லப் பார்க்க அவனைத் தடுத்து அங்கேயே இருக்கக் கூறினார் நர்ஸ்.

மருத்துவர் சிதாராவைப் பரிசோதிக்க,

ஐ.சி.யு கதவிலிருந்த சிறிய வட்ட இடத்தினால் சிதாராவைப் பார்த்தான் ஆர்யான்.

அவள் கொஞ்சம் கொஞ்சமாக அமைதியாவது தெரிய மருத்துவர் வெளியே வரும் வரை பொறுமையின்றித் தவித்தான் ஆர்யான்.

சில மணி நேரத்தில் மருத்துவர் வர ஆர்யான் அவரிடம் சென்று சிதாராவைப் பற்றிக் கேட்டான்.

மருத்துவர், "சாரி டு சே மிஸ்டர். ஆர்யான்... நாங்க எங்களால முடிஞ்ச அளவு முயற்சி பண்ணோம்..." எனக் கூறும் போதே ஆர்யானின் இதயம் வேலை நிறுத்தம் செய்வது போலிருந்தது.
 

Nuha Maryam

Moderator
அத்தியாயம் - 22

மருத்துவர், "சாரி டு சே மிஸ்டர். ஆர்யான்... நாங்க எங்களால முடிஞ்ச அளவு முயற்சி பண்ணோம்..." எனக் கூறும் போதே ஆர்யானின் இதயம் வேலை நிறுத்தம் செய்வது போலிருந்தது.

ஆர்யான், "எ... என்... என்ன சொல்... றீங்க... டாக்டர்..." என பயத்துடன் வினவ,

"அவங்க கோமா ஸ்டேஜுக்கு போய்ட்டாங்க..." என ஆர்யானின் தலையில் இடியை இறக்கி வைத்தார் டாக்டர்.

டாக்டர், "அவங்க ரிப்போர்ட்ஸ் பார்த்தேன் நான்... ஆல்ரெடி மூணு தடவ அவங்களுக்கு ஃபிட்ஸ் வந்திருக்கு... அவங்களுக்கு ட்ரீட்மன்ட் பார்த்த டாக்டர் சொல்லி இருப்பாங்கன்னு நினைக்கிறேன்... இப்படி தொடர்ந்து ஃபிட்ஸ் வரது ஒருத்தங்களோட ப்ரைன டேமேஜ் பண்ணும்...‌ இதனால உயிர் போற நிலமை கூட ஏற்பட வாய்ப்பு இருக்கு... பட் சிதாரா கோமா ஸ்டேஜுக்கு தான் போய் இருக்காங்க... ஆல்ரெடி மென்டலி டிஸ்டர்ப்டா இருந்தவங்கள அங்க நடந்த விஷயம் இன்னும் பாதிச்சிருக்கு... அதனால தான் சிதாரா கோமாக்கு போய் இருக்காங்க... " என்க,

தன்னை சமன் செய்து கொண்ட ஆர்யான், "பட் அவ சரி ஆகிடுவா தானே..." என பரிதவிப்புடன் கேட்டான்.

"கோமாக்கு போய் உடனே சுயநினைவை அடஞ்சவங்களும் இருக்காங்க..‌ சிதாரா கூட இப்பவே கூட ரிக்கவர் ஆகலாம்... ஒரு நாள் போகலாம்... ஒரு மாசம் போகலாம்.. ஒரு வருஷம் இல்ல பல வருஷம் போகலாம்... ஏன் சுயநினைவு வராம கூட போகலாம்... அவங்களுக்கு நீங்க பேசுறது எல்லாம் கேட்கும்... பட் அவங்களால ரியாக்ட் பண்ண முடியாது... நீங்க போய் அவங்க கூட பேசுங்க... உங்க அருகாமைய அவங்களுக்கு உணர்த்துங்க... ஏன்னா அவங்க உங்க பேர தான் சொல்லிக்கிட்டே இருந்தாங்க... அவங்க ரொம்ப ஆசைப்படுற இல்ல எதிர்ப்பார்க்குற விஷயத்த அவங்க கிட்ட சொல்லுங்க... சீக்கிரம் குணமாகிடுவாங்க... முயற்சி பண்ணுங்க... கடவுள் உங்களுக்கு துணை இருப்பாரு... ஆல் தி பெஸ்ட்.. " என்று விட்டு சென்றார் டாக்டர்.

விடாது வடிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்ட ஆர்யான் ஒவ்வொரு எட்டுகளாக வைத்து ஐ.சியுவை நெருங்கினான்.

ஆர்யானால் ஜடம் போல் படுத்துக் கிடக்கும் சிதாராவைப் பார்க்க முடியவில்லை.

உள்ளே செல்லாமல் ஐ‌.சி.யு கதவின் துவாரம் வழியாக சிதாராவைப் பார்த்தவன் தன் உள்ளங்கையை இறுக்கி மூடி தன்னைக் கட்டுப்படுத்தியவன்,

"இல்ல மினி... உன்ன இந்த நிலமைக்கு ஆளாக்கினவனுக்கு ஒரு முடிவு கட்டாம நான் உன் கிட்ட வர மாட்டேன்... " என்றவன் யாருக்கோ அழைத்து பேசி விட்டு ஹாஸ்பிடலில் இருந்து வெளியேறினான்.

_______________________________________________

நியுயார்க் போலீஸ் ஸ்டேஷனில் தயாவைப் போட்டு வெளுத்துக் கொண்டிருந்தான் ரவி.

ஆனால் தயாவோ ரவி அடிப்பதைக் கூட பொருட்படுத்தாது சிரித்துக் கொண்டிருந்தான்.

சற்று நேரத்திலே ஆர்யானும் அங்கு வர அவனைக் கண்டு இகழ்ச்சியாகப் புன்னகைத்த தயா,

"நைஸ் டு மீட் யூ அகைன் ஆர்யான்..." என்றான்.

ஆத்திரத்தை அடக்க முடியாமல் அவனை அறைந்தான் ஆர்யான்.

ஆர்யான், "ஏன்டா இப்படி பண்ண... உன்ன நான் நல்ல ஃப்ரெண்டா தானே பார்த்தேன்... எதுக்குடா என் மினிக்கு இப்படி பண்ண... சொல்லுடா..." என தயாவை மாற்றி மாற்றி அறைய கத்தி சிரித்தான் தயா.

ஆர்யானைத் தடுத்த ரவி, "என்ன சொல்ற ஆரு... உனக்கு இவன முன்னாடியே தெரியுமா..." என்க,

தனக்கும் தயாவுக்குமான தொடர்பைக் கூறத் தொடங்கினான் ஆர்யான்.

நான்கு வருடங்களுக்கு முன்

ஆர்யான் அப்போது ஃபோர்தம் யுனிவர்சிட்டியில் இரண்டாம் வருடம் படித்துக் கொண்டிருந்தான்.

ஆதித்யாவும் அங்கே தான் படித்தான்.

ஆர்யான் எப்போதும் தன்னைச் சுற்றி உள்ளவர்களை கலகலப்பாக வைத்துக் கொண்டிருப்பதால் அனைவருக்கும் அவனைப் பிடிக்கும்.

தொழில் ஆரம்பித்து சில நாட்களிலே தன் கடின உழைப்பால் முன்னேறி தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருந்தார் ரஞ்சித்.

அதனால் வசதி வாய்ப்பிலும் ஆர்யானுக்கு குறைவில்லை.

அவனின் தந்தை தான் அவனுக்கு எப்போதும் முன்மாதிரியாக இருப்பார்.

தந்தையைப் போலவே தானும் சொந்தக் காலில் நின்று முன்னேற வேண்டும் என்ற நோக்கில் ரஞ்சித்துடன் சண்டை பிடித்து மேற்படிப்புக்காக நியுயார்க் கிளம்பினான்.

AR GROUPS OF COMPANIES இற்கு அடுத்த இடத்தில் இருப்பது SM GROUPS OF COMPANIES.

அதன் உரிமையாளர் ராஜசேகருக்கு எப்படியாவது தனது நிறுவனத்தை முதல் இடத்திற்கு கொண்டு வர வேண்டும் என ஆசை.

பலவாறு முயன்றும் இரண்டாம் இடத்தைத் தான் பிடிக்க முடிந்தது.

ராஜசேகரின் ஒரே மகன் தான் ஆதித்யா.

நினைவு தெரிந்த நாள் முதல் தன் தந்தையை ரஞ்சித் பிஸினஸில் தோற்கடிப்பதாக தன் மனதில் பதிய வைத்துக் கொண்டவன் ரஞ்சித்தை தன் எதிரியாகவே பார்க்க ஆரம்பித்தான்.

ஆதித்யா, ஆர்யான் இருவருமே ஒரே வயதினர்.

யுனிவர்சிட்டியில் கூட அனைவரும் எப்போதும் ஆர்யானை சுற்றியே இருக்க ஆர்யான் மீது பொறாமை ஏற்பட்டது.

எப்படியாவது அனைவர் முன்னும் ஆர்யானை மட்டம் தட்டி விட்டு தான் முன் நிற்க வேண்டும் என நினைத்தவன் நண்பன் என்ற முகமூடியை மாட்டி ஆர்யானுடன் நட்புக் கரம் கோர்த்தான்.

அவனின் நோக்கமே ஆர்யானை வைத்து ரஞ்சித்தை தலை குணியச் செய்வது தான்.

அனைவருடனும் நட்பாக பழகும் ஆர்யான் ஆதித்யாவின் மனதில் இருக்கும் பொறாமையை அறியவில்லை.

சில நாட்களிலே இருவரும் நெருங்கிய நண்பர்கள் ஆகினர்.

ஆதித்யாவை தயா என்றே அழைப்பான் ஆர்யான்.

நாட்கள் செல்ல ஆர்யானுக்கு தெரியாமல் மற்றவர்களிடம் அவனைப் பற்றி தவறான எண்ணம் பதிய வைத்தான்.

யாரையும் ஆர்யானிடம் நெருங்க விடவில்லை.

ஆர்யானும் படிப்பில் கவனம் இருந்ததால் ஆதித்யாவின் செயலை அறியவில்லை.

ஆதித்யாவின் பிறந்த நாளுக்கு ஆர்யான் D என்ற எழுத்திட்ட ப்ரேஸ்லட் ஒன்றை அவனுக்கு பரிசளித்தான்.

ஆதித்யாவுக்கு குடிப்பழக்கம், புகை பிடித்தல் என எல்லா தீய பழக்கமும் உண்டு.

இவை எதையுமே ஆர்யானுக்கு தெரியாமல் மறைத்தான்.

ஆர்யான் யுனிவர்சிட்டி நண்பர்களைப் பற்றி பெரிதாக வீட்டில் பேசாததால் ஆதித்யா ராஜசேகரின் மகன் என்பதையும் அறியாமல் போனான்.

அன்று ஒரு நாள் ஆதித்யா ஸ்போர்ட்ஸ் பிராக்டிஸ் இருப்பதாகக் கூறி வகுப்புக்கு வரவில்லை.

வகுப்பு முடிந்து வெளியே வந்த ஆர்யானின் பார்வையில் பட்டது ஆதித்யா ஒரு பெண் அழ அழ அவளிடம் ஏதோ கோவமாக பேசிக் கொண்டு இருந்ததை.

அங்கு சென்ற ஆர்யான், "என்னாச்சு தயா... ஏன் இந்த பொண்ணு அழுதுட்டு இருக்கா.." என்க,

ஆர்யானை அங்கு எதிர்ப்பார்க்காத ஆதித்யா, "அ.. அது.. ஒன்னுமில்ல ஆரு.... இது எனக்கு தெரிஞ்ச பொண்ணு தான்.. சின்ன பிரச்சினை ஒன்னு.. நான் பாத்துக்குறேன்..." என்றான் சமாளிப்பாக.

அவனை நம்பாத பார்வை பார்த்த ஆர்யான் அப் பெண்ணின் முகம் நோக்க,

அவளோ இன்னும் அழுதபடி தான் இருந்தாள்.

அந்தப் பெண், "இல்ல அண்ணா.. இவர் பொய் சொல்றாரு... " என்க,

ஆதித்யா அவசரமாக, "இவ சும்மா ஏதோ ஒலருரா... நீ போ ஆரு.." என்றான்.

அவன் சட்டையைப் பிடித்த அந்தப் பெண், "நான் பொய் சொல்றேனா... பொய் சொல்றேனா... ஒரு வருஷமா லவ் பண்ணுறதா என்னை ஏமாத்தி என்னை கர்ப்பமாக்கிட்டு இப்போ இந்த குழந்தைக்கு நான் அப்பனே இல்லன்னு சொல்ற... நீ தான்டா பொய் சொல்ற..." என அழவும் அதிர்ந்தான் ஆர்யான்.

"இந்தப் பொண்ணு என்ன சொல்றா தயா... ஒழுங்கா உண்மைய சொல்லு..." என ஆர்யான் கோவமாகக் கேட்க,

ஆதித்யா, "அதெல்லாம் பொய்டா... உனக்கு தெரியாதா என்ன பத்தி..." என்க,

அந்தப் பெண், "இவன நம்ப வேணாம் அண்ணா... இவன் அப்பா பெரிய பிஸினஸ்மேன்... அதனால எங்க கல்யாணத்துக்கு சம்மதிக்க மாட்டாங்க... இதே நமக்கு குழந்தை பிறந்தா எப்படியும் கல்யாணம் பண்ணி வைப்பாரு அது இதுன்னு சொல்லி என்னை இப்போ இந்த நிலமைல நிற்க வெச்சிட்டான் பாவி..." என்க,

ஆர்யான் அந்தப் பெண்ணிடம், "பெரிய பிஸினஸ்மேனா.. யாரம்மா சொல்ற.." எனக் கேட்க,

"எஸ்.எம் கம்பனி ஓனர் ராஜசேகர்..." என்கவும் மேலும் அதிர்ந்தான் ஆர்யான்.

ஆர்யான், "ஏன் தயா என் கிட்ட இதெல்லாம் மறைச்ச.." என அழுத்தமாகக் கேட்க,

"அது... இல்லடா... நான்.." என ஆதித்யா ஏதோ கூற வரவும் அவனின் கன்னத்தில் அறைந்தான் ஆர்யான்.

"ஏய்....." என ஆத்திரமாக ஆர்யானின் காலரைப் பற்றிய ஆதித்யா,

"ஆமாடா... பொய் தான் சொன்னேன்... உன்ன ஏமாத்த தான் உன் கூட ஃப்ரெண்டா பழகினேன்... உன்னையும் உன் அப்பனையும் எல்லாரு முன்னாடியும் தலை குனிய வைக்கனும்.. அதுக்காகத் தான் இதெல்லாம் பண்ணேன்.." என தான் இது வரை செய்த அனைத்தையும் கூற,

கோவத்தில் அவனைப் போட்டு ஆர்யான் அடிக்க இருவருக்கும் கை கலப்பானது.

ஆதித்யா செய்தவை பற்றி யுனிவர்சிட்டி முழுவதும் பரவ அவனை யுனிவர்சிட்டி விட்டே அனுப்பினார்கள்.

ஆர்யான் ரவியிடம் தனக்குத் தெரிந்த வரையில் அனைத்தையும் கூற சத்தமாக சிரித்த ஆதித்யா,

"நீ வேணா அதுக்கப்புறம் என்ன மறந்து இருக்கலாம் ஆர்யான்... பட் நான் மறக்கல... உன்னால நான் பட்ட அவமானத்தையும் மறக்கல... ஒவ்வொரு செக்கனும் உன்ன நான் கண் காணிச்சிக்கிட்டு தான் இருந்தேன்..." என்றவன் அதன் பின் நடந்தவற்றைக் கூறத் தொடங்கினான்.

ஆர்யானைப் பழி வாங்க வேண்டும் என வன்மத்தை வளர்த்துக் கொண்ட ஆதித்யா ராஜசேகரின் செல்வாக்கால் தனக்கென அடியாட்கள் வைத்து ஆர்யானைக் கண்காணித்தான்.

ரஞ்சித்தின் கம்பனியில் நடப்பவற்றை ஜீவா மூலம் அறிந்து ரஞ்சித்துக்கு கிடைக்க இருக்கும் டென்டர்களைக் கைப்பற்றினான்.

ராஜசேகரும் இதற்கு ஆதித்யாவுக்கு உடந்தையாக இருந்தார்.

ஆனால் அவர் பெயர் வெளி வர விரும்பாததால் தான் ஆர்யான் ஜீவாவிடம் கூட தான் யார் என்பதை வெளிப்படுத்தவில்லை.

இவ்வாறிருக்க தன் அடியாட்கள் மூலம் சிதாராவின் புகைப்படம் அவனுக்கு கிடைத்தது.

பார்த்ததுமே அவள் அழகில் மயங்கியவனின் மனம் அவளை அடையத் துடித்தது.

அப்போது தான் ஆர்யானுடன் மட்டும் தான் சிதாரா நெருக்கமாக இருப்பதை அறிந்தவன்,

"இது வரைக்கும் எல்லாத்துலயும் நீ முன்னாடி இருந்து இருக்கலாம் ஆர்யான்... ஆனா இந்த தடவ நான் தான்... ஐம் கமிங் ஃபோர் யூ பேபி..." என சிதாராவின் புகைப்படத்துடன் பேசினான்.

அதன் பின் சிதாராவும் ஆர்யானும் இந்தியா சென்றிருப்பதை அறிந்தவனுக்கு திடீரென இருவருக்கும் திருமணம் நடக்க இருப்பதை அறிந்து சிதாராவைக் கடத்த முயன்றான்.

ஆனால் ஆர்யான் வந்து தடுத்ததால் அம் முயற்சி தோல்வியடைந்தது.

நாட்கள் செல்ல ஆதித்யாவுக்கு ஆர்யான் மீதிருந்த வெறுப்பும் பொறாமையையும் விட சிதாராவை அடைந்தே ஆக வேண்டும் என்ற வெறி மேலோங்கியது.

வாய்ப்புக் கிடைக்கும் வரை காத்திருந்தவனுக்கு சிதாரா பல நாள் கழித்து தனியே கிடைத்ததும் அவளைக் கடத்தினான்.

ஆதித்யா, "நீ இன்னும் கொஞ்சம் லேட் ஆகி வந்திருந்தாலும் என் பேபிய முழுசா எனக்கு சொந்தமாக்கி இருப்பேன்... ஆனா இந்தத் தடவையும் நீ என்ன தோற்கடிச்சிட்ட...." என்றவன்,

"ஆனாலும் பேபியோட பக்கத்துல இருந்தாவே தன்னால போதை ஏறும் மச்சான்... அதே அவள...." என்று இழுத்து நிறுத்தியவன் நக்கல் புன்னகையுடன் ஆர்யானைப் பார்த்து,

"பேசாம ரெண்டு பேரும் பேபிய ஷேர் பண்ணிக்கலாமாடா... என்ன இருந்தாலும் நான் உன்னோட க்ளோஸ் ஃப்ரெண்ட் இல்லையா..." என்க,

"என்ன தைரியம் இருந்தா என் கிட்டே என் மினிய பத்தி தப்பா பேசுவ...உன்ன கொல்லாம விட மாட்டேன்டா..." என்றவன் ஆதித்யாவைக் கீழே தள்ளி அடித்தான்.

ரவி ஆர்யானைத் தடுக்க அதற்குள் அங்கு வந்த போலீஸ் ஆதித்யாவைப் பிடித்து சென்றனர்.

ரவி, "இனிமே நான் இவன பாத்துக்கிறேன் ஆரு... இந்தியா போல இல்ல.. இங்க ரூல்ஸ் ரொம்ப ஸ்ட்ரிக்ட்... அதனால இவனுக்கு நான் தண்டனை வாங்கி குடுக்குறேன்... இவன் அப்பனால கூட இனிமே இவன காப்பாத்த முடியாது... ஆதாரமெல்லாம் பக்காவா இருக்கு..." என்க,

அவனுக்கு சரி என தலையைசைத்த ஆர்யான் வெளியே வந்தான்.

அங்கிருந்து சிதாராவை அனுமதித்திருந்த ஹாஸ்பிடல் வர சிதாரா இருந்த அறைக்கு வெளியே அமர்ந்திருந்தவனை நெருங்கிய ஆர்யான் அவன் தோள் தொட்டு,

"ரொம்ப தேங்க்ஸ் நீங்க பண்ண உதவிக்கு..." என்க,

"தேங்க்ஸ் எல்லாம் எதுக்கு ஆர்யான்... தாராக்கு நான் பண்ண பாவத்துக்கு ஒரு பிராயச்சித்தமா தான் நான் இதை பண்ணேன்.." என்றான் பிரணவ்.

_______________________________________________

நிச்சயம் அன்று சிதாராவை யாரோகடத்த முயன்றதும் ஏற்கனவே பிரணவ் தன்னிடம் சவால் விட்டதால் அவனாக இருக்கும் என்று எண்ணினான் ஆர்யான்.

அபினவ்வும் நிச்சயத்துக்கு இரண்டு நாள் முன் பிரணவ் வேலை விஷயமாக வெளியூர் சென்றிருப்பதாகக் கூறவும் அவனின் சந்தேகம் வலுவானது.

அதனால் போலீஸாக இருக்கும் தன் நண்பன் ரவியிடம் உதவி கோரினான்.

ரவியும் ஆர்யான் கேட்டுக் கொண்டதற்கு இணங்க பிரணவ்வைக் கண்காணித்தான்.

சரியாக ஆர்யான், சிதாரா இருவரின் திருமணத்தன்று மீண்டும் பிரணவ் சென்னைக்கு வர ரவி அவனைப் பின் தொடர்ந்தான்.

ஒருநாள் ரவி ஸ்டேஷனில் இருக்கும் போது அவனை சந்திக்க பிரணவ் வரவும் அதிர்ந்தான்.

பிரணவ், "வேலை நேரத்துல உங்கள டிஸ்டர்ப் பண்ணதுக்கு சாரி சார்... பட் நீங்க கொஞ்ச நாளா என்ன ஃபாலோ பண்ணிட்டு இருக்குறத நான் அவதானிச்சேன்... எதனாலன்னு தெரிஞ்சிக்கலாமா.." என்க,

முதலில் பிரணவ்வைக் கண்டு அதிர்ந்த ரவி அவனின் கேள்வியில் கேலியாகப் புன்னகைத்தவன்,

"ஹ்ம்ம்.. ரொம்ப தைரியம் தான்... போலீஸ் கிட்டயே வந்து எதுக்கு என்ன ஃபாலோ பண்றன்னு கேக்குற அளவுக்கு நல்லவனா நீ..." என்றான் கோவமாக.

பிரணவ் அவனைப் புரியாமல் பார்க்கவும், "எதுக்காக சிதாராவ கடத்த முயற்சி பண்ண..." என ரவி கேட்கவும் அதிர்ந்தான் பிரணவ்.

பிரணவ், "என்ன சொல்றீங்க சார்... நான் எதுக்கு தாராவ கடத்தனும்... " என்க,

ரவி, "சும்மா நடிக்காதேடா... நீ தான் கொஞ்ச நாளுக்கு முன்னாடி ஆர்யான் கிட்ட எப்படியாவது சிதாராவ உன் கிட்ட வர‌ வைக்கிறதா சேலேன்ஜ் பண்ணி இருக்க..." என்க,

"நான் ஆர்யான் கிட்ட அன்னைக்கு அப்படி சொன்னது உண்மை தான்... அது நான் தாராவுக்கு பண்ண தப்ப உணர்ந்தேன்... தாரா என்ன ரொம்ப லவ் பண்ணா... ஆர்யானுக்கு என்னை பிடிக்கல... அதனால தான் நான் அப்படி சொன்னேன்... ஆனா என் மனசுல இப்போ அப்படி எந்த எண்ணமும் இல்ல சார்.." என பிரணவ் கூற அவனை சந்தேகமாய் நோக்கினான் ரவி.

சற்று அமைதி காத்த பிரணவ் பின், "தாராவுக்கு ஆர்யான் கூட கல்யாணம்னு தெரிஞ்சப்ப எப்படியாவது இந்த கல்யாணத்த நிறுத்தனும்னு நான் நெனச்சது உண்மை தான்...‌ ஆனா அவங்க என்கேஜ்மன்டுக்கு ரெண்டு நாள் முன்னாடி நான் வேலை விஷயமா வெளியூர் போனேன்... போன இடத்துல எனக்கு ஒரு ஆக்சிடன்ட்... அதனால என்னால இனிமே எப்பவும் ஒரு குழந்தைக்கு அப்பாவா ஆக முடியாதுன்னு சொல்லிட்டாங்க... தாராவுக்கு நான் பண்ணின அநியாயத்துக்கு தான் எனக்கு இப்படி ஒரு தண்டனை கிடைச்சிருக்குறதா நான் நெனச்சேன்... அப்போவே முடிவு பண்ணேன் தாரா இனிமே சந்தோஷமா இருக்கனும்னு... நிச்சயம் ஆர்யானால தான் அவள சந்தோஷமா வெச்சிக்க முடியும்... அதனால அதுக்கப்புறம் நான் தாராவ டிஸ்டர்ப் பண்ணல..." என்க,

"நீங்களும் சிதாராவ கடத்தலன்னா வேற யாரா இருக்கும்... ஆர்யானுக்கு கூட கால் பண்ணி மிரட்டி இருக்கான்... பட் சேட்டலைட் ஃபோன் யூஸ் பண்றதால எங்களால அவன ட்ரேஸ் பண்ண முடியல..." என்றான் ரவி.

பிரணவ், "உங்களுக்கு ஓக்கேன்னா என்னால தாராவ யாரு கடத்த ட்ரை பண்ணாங்கன்னு கண்டுபிடிக்க உங்களுக்கு ஹெல்ப் பண்ண முடியும்..." என்கவும் அவனைக் கேள்வியாய் நோக்கினான் ரவி.

"காலேஜ் டேய்ஸ்ல நான் ஹேக்கிங் படிச்சிருக்கேன்... அத வெச்சி என்னால கண்டு பிடிக்க முடியும்னு நினைக்கிறேன்... தாராவ கடத்த முயற்சி பண்ணவங்க எவ்வளவு உஷாரா இருந்தாலும் எங்கயாவது ஏதாவது சின்ன தப்பாவது பண்ணி இருப்பாங்க... அதை வெச்சி அவங்கள பிடிக்க முடியும்..." என பிரணவ் கூறவும் ரவி சம்மதித்தான்.

பிரணவ் சென்ற பின் ஆர்யானிடம் கூற அவனுக்கு முதலில் நம்ப முடியவில்லை என்றாலும் தன்னவளின் நலனுக்காக அதற்கு சம்மதித்தான்.

ஆர்யான் பிரணவ்வுக்கு அழைக்க அவனும் சிதாராவுக்கு செய்த தப்புக்கு பிராயச்சித்தமாக செய்வதாகக் கூறினான்.

ஜீவாவிடமிருந்து பெற்ற எண்ணையும் பிரணவ்விடம் வழங்கி யாரெனக் கண்டு பிடிக்கக் கூற அவன் அது நியுயார்க்கிலிருந்து வந்த அழைப்பு எனக் கூறியதும் சிதாராவைக் கடத்த முயன்றவனுக்கும் ஜீவாவிடமிருந்து தகவல் பெறுபவனுக்கும் ஏதோ தொடர்பு இருப்பதாக ரவிக்குப் புரிந்தது.

அதனைக் கண்டு பிடிப்பதற்காக ரவி முதலில் நியுயார்க் செல்ல அவனுக்கு உதவியாக பிரணவ்வையும் வரவழைத்தான்‌.

ஆர்யான் திடீரென அழைத்து சிதாராவைக் கடத்தி விட்டதாகக் கூறி நடந்ததைக் கூறவும் பிரணவ் சிதாராவின் எண் கடைசியாக சிக்னல் கட் ஆன இடத்தைக் கண்டு பிடித்தான்.

ஆர்யான், ரவி, பிரணவ் மூவரும் அங்கு செல்ல அங்கு ஒரு வேன் மட்டும் யாருமின்றி தனியே கிடந்தது.

ரவி அதன் எண்ணை வைத்து யாருடைய பெயரில் அந்த வேன் பதியப்பட்டிருப்பதைத் தேட அதுவோ மிஸ்ஸிங் கேசில் பதியப்பட்டிருந்தது.

என்ன செய்ய என யோசிக்கும் போது தான் ஆர்யானுக்கு தன் வீட்டின் அருகே கிடைத்த பிரேஸ்லெட் ஞாபகம் வந்தது.

ஆர்யான் ரவியிடம், "டேய்.. எனக்கொரு டவுட் இருக்கு... பிரணவ்.. நீங்க நான் சொல்ற நம்பர் இருக்குற இடத்த ட்ரேஸ் பண்ணுங்க... நான் நினைக்கிறது சரின்னா மினி அங்க தான் இருக்கனும்..." என்க,

பிரணவ் உடனே ஆர்யான் தந்த ஆதித்யாவின் எண்ணை ட்ரேஸ் செய்து அது இருக்கும் இடத்தைக் கண்டு பிடித்தான்.

ரவி நியுயார்க் போலீஸ் உதவியுடன் அங்கு சென்று ஆதித்யாவைப் பிடித்தான்.

_______________________________________________

பிரணவ், "சரி ஆர்யான்.. அப்போ நான் கிளம்புறேன்... நான் இதை உங்க கிட்ட சொல்லனும்னு அவசியமில்ல... தாராவ நல்லா பார்த்துக்கோங்க... ஆல்ரெடி அப்படி தான் பாத்துக்குறீங்க... " என்க,

ஆர்யான், "மினிய பார்த்துட்டு போகலையா.." எனக் கேட்டான்.

அவனைப் பார்த்து புன்னகைத்த பிரணவ், "இல்ல ஆர்யான்... அவ இப்போ சுயநினைவு இல்லாம இருக்கலாம்... ஆனா எனக்கு நம்பிக்கை இருக்கு.. நீங்க அவ கூட இருந்தா நிச்சயம் அவ சரி ஆகிடுவா... தாராக்கு என்னை பத்தி எதுவும் தெரிய வேணாம்... அவ லைஃப்ல நான் முடிஞ்சு போன செப்டர்... அது அப்படியே இருக்கட்டும்... எனக்கு தெரியும் தாராவுக்கு நான் பண்ணின காரியத்துக்கு உங்களுக்கு என் மேல கோவம் இருக்கும்... முடிஞ்சா நீங்களும் என்னை மன்னிச்சிடுங்க... நான் போறேன்..." என்றவன் ஆர்யானின் தோளில் தட்டி விட்டு சென்றான்.

பிரணவ் சென்றதும் சிதாரா இருந்த அறைக்குள் நுழைந்தான் ஆர்யான்.
 

Nuha Maryam

Moderator
அத்தியாயம் - 23

மக்களே... கதைக்கு போறத்துக்கு முன்னாடி முந்தைய யூடிக்கு ஒரு சின்ன விளக்கம்.

நிறைய பேர் கேட்டு இருந்தீங்க... சாதாரணமா ஃபிட்ஸ் வரது கோமாக்கு கொண்டு போகுமான்னு... அதுக்கு தான் விளக்கம் தரலாம்னு இருக்கேன்...

ஒருத்தர் கோமாவுக்கு போறதுக்கு பல காரணங்கள் இருக்கு...

ப்ரைன்ல ஏற்படுற பாதிப்பால தான் கோமா ஏற்படும்.

ப்ரைன்ல பிரஷர் அதிகரிப்பு, ப்ளீடிங், ஆக்ஸிஜன் இழப்பு... இப்படி பல காரணங்களால ப்ரைன் பாதிக்கப்பட்டு கோமாவ ஏற்படுத்தும்...

ப்ரைன்ல ஏற்படுற இந்த பாதிப்பு தற்காலிகமாகவோ, திரும்ப வரக் கூடியதாகவோ, இல்ல நிரந்தரமா கூட இருக்கலாம்...

ஒரு தடவை ஃபிட்ஸ் வரதால கோமா ஏற்படாது...

ஆனா தொடர்ந்து வரது... அப்படின்னா ஒரு தடவ ஃபிட்ஸ் வந்துட்டு சின்ன கெப்ல திரும்ப ஃபிட்ஸ் வரும் போது அந்த தாக்கத்துல இருந்து ப்ரைன் மீட்கப்படுவதை அது குறைக்கும்...

இதனால கோமா ஏற்படும்.

இதுல கூட சிதாராவுக்கு ஃபிட்ஸ் வந்துட்டு அவ அதுல இருந்து வெளி வர முன்னாடியே திரும்ப ஃபிட்ஸ் வருது... அதனால அவ கோமா ஸ்டேஜுக்கு போறதா தான் சொல்லி இருக்கேன்...

உங்க எல்லோருடையும் கேள்விக்கு பதில் கிடைச்சிடுச்சுன்னு நினைக்குறேன்... இன்னும் ஏதாவது க்ளியர் இல்லன்னா கேளுங்க... நான் கண்டிப்பா விளக்கம் கொடுக்குறேன்... ☺️ நன்றி....

❤️❤️❤️❤️❤️

பிரணவ் சென்றதும் சிதாரா இருந்த அறைக்குள் நுழைந்தான் ஆர்யான்.

எப்போதும் தான் ஏதாவது சொன்னால் தன்னுடன் ஒன்றுக்கொன்று பேசி சீண்டிக் கொண்டிருப்பவள் இன்றோ தன்னைக் கூட உணராது அமைதியாக படுத்து இருக்கிறாள்.

சிதாராவை இந் நிலையில் கண்ட ஆர்யானின் மனம் கனத்தது.

அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தவனின் கன்னம் தாண்டி கண்ணீர் வடிந்தது.

அவள் கரத்தை எடுத்து தன் கைக்குள் வைத்துக் கொண்ட ஆர்யான் இத்தனை நாளும் தன் மனதில் பூட்டி வைத்திருந்தை எல்லாம் சிதாராவிடம் கொட்ட ஆரம்பித்தான்.

"மினி... நான் இது வரைக்கும் உன் கிட்ட இதெல்லாம் சொல்லி இல்ல... ஆனா இப்போ தோணுது முன்னாடியே உன் கிட்ட எல்லாம் சொல்லி இருக்கலாமோன்னு... உனக்கு ஒன்னு தெரியுமா மினி... உன்ன முதன் முதலா பாத்த அந்த நிமிஷம் என் மனசுக்குள்ள இனம் புரியாத உணர்வு... அதுக்கு என்ன பேர்னு எல்லாம் அப்போ தெரியல... ஆனா எனக்கு அந்த ஃபீல் பிடிச்சிருந்தது... உன்ன பார்க்கும் போது நீ ரொம்ப ரிசர்வ்ட் டைப்னு நெனச்சேன்.. அதான் உன்ன கிண்டல் பண்ணி பேச வைக்க பாத்தேன்... பட் என்னால நீ ஃபிட்ஸ் வந்து கீழ விழுந்ததும் ரொம்ப கஷ்டமா இருந்தது மினி..." என்ற ஆர்யான் சிதாராவின் கரத்தில் முத்தமிட்டான்.

ஆர்யான், "நீ கண்ண தெறந்து என்னைப் பார்க்கும் வரை நான் நானாவே இல்ல மினி... என்னால தான் உனக்கு இப்படி ஆச்சுன்னு குற்றவுணர்வா இருந்தது... உன் கூட ஃப்ரென்ட் ஆக காரணமே எனக்கு உன் கூடவே இருக்கனும் தோணினது தான் மினி... அன்னைல இருந்து உன் கூட ஸ்பென்ட் பண்ண ஒவ்வொரு நொடியையும் பொக்கிஷமா சேமிச்சு வெச்சேன்... நீ என் லைஃப்ல கிடைச்ச வரம் மினி... உன் கிட்ட என்ன அட்ரேக்ட் பண்ணின முதல் விஷயம் என்ன தெரியுமா... உன்னோட நெத்தில இருந்த அந்த குட்டி பொட்டு... டர்டிஷனல் ட்ரஸ்ல தேவதை போல இருந்தாய்... இதுக்கெல்லாம் மேல ஸ்பேக்ஸயும் தாண்டி உன் கண்ணுல தெரிஞ்ச பதட்டம்... உன் முகத்துல இருந்த அப்பாவித்தனம்... விட்டா சொல்லிக்கிட்டே போவேன் நான்..." என்று விட்டு புன்னகைத்தான்.

ஆனால் அவனின் கண்களோ கலங்கி இருந்தன.

"அன்னைக்கு நீ உன் பாஸ்ட் பத்தி சொல்லும் போது எனக்கு பிரணவ் மேல அப்படி ஒரு வெறி... அப்போவே முடிவு பண்ணேன் என் லைஃப்ல என்ன சிச்சுவேஷனா இருந்தாலும் உன்ன மட்டும் மிஸ் பண்ணிற கூடாதுன்னு... பிரணவ் பண்ணினது ரொம்ப தப்பு தான் மினி... ஆனா அவன் அப்படி பண்ணலன்னா நீ எனக்கு கெடச்சி இருக்க மாட்ட... நீ ட்ரடிஷனலா ட்ரஸ் பண்றது தான் எனக்கு உன் கிட்ட ரொம்ப பிடிச்ச விஷயம்... ஆனா ஏதோ காரணம் சொல்லி நீ அதையும் சேன்ஜ் பண்ணிட்ட... எனக்கு உன்ன பழைய மாதிரி பார்க்க ரொம்ப ஆசையா இருந்தது... அதனால தான் இந்த சேரிய கிஃப்ட் பண்ணேன்... ஒன்னு தெரியுமா மினி... நீ சாப்பிட்டு தூக்கி போடுற சாக்லேட் கவர்ஸ கூட உனக்கே தெரியாம நான் எடுத்து பத்திரப்படுத்தி வெச்சிருக்கேன்... சின்ன புள்ள தனமா இருக்குல்ல... நீ ஒரு தடவ ஷாப்பிங் போய்ட்டு வரப்போ உன்னோட ஜிமிக்கி காணாம போனதா சொன்னியே... வர வழில அது விழுந்திடுச்சு.. நீ கவனிக்கல... ரொம்ப நாளா அந்த ஜிமிக்கி என்ன டிஸ்டர்ப் பண்ணிட்டே இருந்தது... அதை கூட நான் தான் எடுத்து வெச்சிருக்கேன்... நீ பேசும் போது கூடவே பேசும் உன்னோட கண்கள்... கைய ஆட்டிக்கிட்டே பேசுறது... என்ன அடிக்கடி முறைக்கிற இந்த கண்ணு... தப்பு பண்ணிட்டு அப்பாவியா முகத்த வெச்சிக்கிறது... இப்படி உன் பக்கத்துல இருந்து உனக்கே தெரியாம ஒவ்வொன்னா சைட் அடிச்சி இருக்கேன்..." எனக் கூறிப் புன்னகைத்தான் ஆர்யான்.

ஆர்யான் அவ்வாறு கூறும் போதே உணர்ச்சி வசப்பட்டு கண்ணீர் வடித்தான்.

அவன் சிதாராவின் கரத்தைப் பார்த்து பேசிக் கொண்டிருந்ததால் ஆர்யான் பேசப் பேச மூடியிருந்த சிதாராவின் கண்களிலிருந்து வடிந்த கண்ணீரைக் கவனிக்கவில்லை.

தன் கண்ணீரைத் துடைத்துக் கொண்ட ஆர்யான், "மினி... ஆரம்பத்துல எனக்கு உன் பக்கத்துலயே இருக்கனும்... உன் கூட டைம் ஸ்பென்ட் பண்ணனும்... உனக்கு எந்த கவலையும் வராம பாத்துக்கனும் இப்படி தான் நெனப்பேன்... ஆனா இது ஏன் எதுக்குன்னு எல்லாம் தெரியாது... ஆனா உனக்கு ஞாபகம் இருக்கா.. எங்க கல்யாணத்துக்கு முன்னாடி நீ ஒரு நாள் கோவத்துல என் கூட பேசாம இருந்தாய் தானே..." என்றவன் அன்று நடந்தைக் கூறினான்.

_______________________________________________

அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சிதாரா, ஆர்யான் இருவருக்குமே விடுமுறை.

பல நாட்களாக சிதாரா ஆர்யானிடம் நியுயார்க்கில் மிகவும் பிரசித்தி பெற்ற Metropolitan Museum இற்கு அழைத்துச் செல்லக் கேட்டு இருந்தாள்.

ஆனால் ஆர்யான் வேலையில் பிஸியாக இருந்ததால் அவனால் சிதாராவை அழைத்துச் செல்ல முடியவில்லை.

அன்று இருவருக்கும் விடுமுறை என்பதால் முன் தினமே சிதாராவை அங்கு அழைத்துச் செல்வதாக வாக்குக் கொடுத்து இருந்தான்.

காலையிலேயே சிதாரா ஆவலுடன் தயாராகி ஆர்யானுக்காக காத்திருந்தான்.

ஆனால் நேரம் சென்றதே தவிர ஆர்யான் வரவில்லை.

பொறுத்துப் பொறுத்து பார்த்திருந்தவள் ஆர்யானுக்கு அழைத்துப் பார்க்க அழைப்பு ஏற்கப்படவே இல்லை.

மீண்டும் மீண்டும் முயற்சி செய்ய சற்று நேரத்தில் ஸ்விட்ச் ஆஃப் என்று வரவும் கடுப்பாகி விட்டாள்.

ஆர்யானுக்கு திடீரென ஆஃபீஸிலிருந்து மீட்டிங் என்று அழைப்பு வரவும் கிளம்பி விட்டான்.

இருந்த அவசரத்தில் சிதாராவிடம் கூட சொல்லவில்லை.

சரியாக அவன் மொபைலும் சார்ஜ் இல்லாமல் ஆஃப் ஆகி விட சிதாராவிடம் வாக்குக் கொடுத்ததையே மறந்து விட்டான்.

ஆர்யானின் வேலை முடியவே இரவானது.

அதன் பின் மொபைலை எடுத்துப் பார்க்க ஸ்விட்ச் ஆஃப் ஆகி இருப்பதைக் கண்டதும் தான் சிதாரா பற்றிய நினைவே வந்தது.

ஆர்யான், "ஷிட்.... இதை எப்படி மறந்தேன் நான்..." எனத் தலையில் கை வைத்தவன் அவசரமாக சிதாரா தங்கியிருந்த ஃப்ளாட்டிற்கு சென்றான்.

நெடு நேரம் அழைப்பு மணியை அழுத்த உள்ளிருந்த எந்தப் பதிலும் வரவில்லை.

மீண்டும் அழைப்பு மணியை அழுத்தக் கையை நீட்ட சரியாக கதவு திறக்கப்பட்டது.

சிதாரா கதவைத் திறக்கவும் ஆர்யான் அவளைப் பார்த்து இளித்து வைக்க அவனை முறைத்த சிதாரா வேகமாக கதவை அடைத்து பூட்டினாள்.

ஆர்யான் மினி மினி என அழைத்து கதவை தட்டித் தட்டி ஓய்ந்து போனவன் இதற்கு மேல் இரவு நேரத்தில் தான் இங்கு வெளியே நின்றால் சிதாராவுக்குத் தான் பிரச்சினை ஆகும் என சோகமாக வீட்டுக்கு கிளம்பினாள்.

வீட்டுக்குச் சென்றதும் முதலில் மொபைலை சார்ஜில் போட்ட ஆர்யான் சிதாராவுக்கு அழைத்தான்.

சிதாராவோ அவனின் அழைப்பைக் கண்டதும் துண்டித்து விட்டாள்.

மீண்டும் மீண்டும் அழைக்க கோவத்தில் மொபைலை ஸ்விச் ஆஃப் செய்து விட்டாள்.

ஆர்யான், "ஹ்ம்ம்... உனக்கு தேவை தான்டா இது... கொஞ்சம் கூட அறிவு இல்ல.. மினிக்கு கொடுத்த வாக்கை மறந்துட்டியே..." எனத் தன்னையே கடிந்து கொண்டவன் இரவு உணவைக் கூட உட்கொள்ளாது உறங்கினான்.

இங்கு சிதாராவோ, "என்னமோ பெரிய இவன் மாதிரி உன்ன அங்க கூட்டிட்டு போறேன் மினி... இங்க கூட்டிட்டு போறேன் மினின்னு கதை விட்டான்... ஒழுங்கா சொன்ன இடத்துக்கே கூட்டிட்டு போகல... அதை கூட மறந்துட்டான்... உன்ன இந்த விஷயத்துல மன்னிக்கவே மாட்டேன் ஜிராஃபி.." என ஆர்யானை வசை பாடியபடி இரவைக் கழித்தாள்.

மறுநாள் காலையிலேயே ஆர்யான் சிதாராவைக் காணச் செல்ல அவளோ ஏற்கனவே யுனிவர்சிட்டி கிளம்பி இருந்தாள்.

அவளது அறை மூடி இருக்கவும், "என்ன இவ சொல்லாம கொள்ளாம கிளம்பிட்டா... எப்போவும் நான் தானே அவள பிக்கப் பண்ணுவேன்.... ஓஹ்... மேடம் கோவமா இருக்கீங்களா... " என நினைத்து சிரித்தவன் சிதாராவைப் பார்க்க யுனிவர்சிட்டிக்கே சென்றான்.

ஆர்யான் யுனிவர்சிட்டிக்கு வெளியே நின்று சிதாராவுக்கு அழைக்க அவளோ அழைப்பை ஏற்கவில்லை.

பின் கேட் கீப்பரிடம் கூறி அவளை வெளியே வரக் கூற சிதாரா மறுத்து விட்டாள்.

அன்று முழுவதுமே ஆர்யானின் கண்ணில் படாமல் ஆட்டம் காட்டிக் கொண்டிருந்தாள் சிதாரா.

அன்று முழுவதும் சிதாராவுடன் பேசாது அவளைப் பார்க்காது இருந்தது ஆர்யானிற்கு ஏதோ இழந்தது போல இருந்தது.

தன் வீட்டில் கவலையாக இருந்த ஆர்யான், "மினிய பார்க்காம அவ கூட பேசாம இருந்தது ஏன் எனக்கு இவ்வளவு கஷ்டமா இருக்கு... அப்படியே என் ஹார்ட்ல இருந்து ஒரு பார்ட்ட பிய்ச்சி போட்டது போல இருக்கே... எனக்கு என்ன ஆகிடுச்சு.." என தன்னையே கேள்வி கேட்டுக்கொள்ள,

"ஏன்னா நீ அவளை காதலிக்கிறடா லூசுப் பையா..." என அவனின் மனசாட்சி பதில் அளிக்கவும் அதிர்ந்தான் ஆர்யான்.

"நா... நான்... மினிய காதலிக்கிறேனா... ஆமா... அவள முதல் தடவ பார்த்ததுமே அவள் என் மனசுக்குள்ள வந்துட்டா... நான் தான் இவ்வளவு நாள் இந்த ஃபீலிங்க்கு என்ன பேருன்னே யோசிக்காம இருந்தேன்.... மினி..." எனப் புன்னகைத்தவன் கண்களை மூடிக் கொண்டு சிதாராவுடன் கழித்த பொழுதுகளை எண்ணிப் பார்த்தான்.

பல நாள் கழித்து டயரியைக் கையில் எடுத்தவன் தான் சிதாராவைக் காதலிப்பதை அதனுடன் பகிரப் பார்த்தவன் நினைவு வந்தவனாக,

"இல்ல... இதை நான் முதல்ல மினி கிட்ட தான் சொல்லனும்... அவளோட கண்ண பார்த்து சொல்லனும்... அதுக்கு அவளோட ரியாக்ஷன ரசிக்கனும்..." என நினைத்தவன் டயரியை மூடி வைத்தான்.

ஆர்யான், "என்ன பண்ணி அவள சமாதானப்படுத்தலாம்..." என வெகுநேரம் யோசித்தவனுக்கு ஒரு யோசனை தோன்றியது.

அடுத்த நாள் காலை யுனிவர்சிட்டி கிளம்பத் தயாராகிக் கொண்டிருந்த சிதாரா, "லூசு ஜிராஃபி... ஃப்ரெண்ட் கோவமா இருக்காளே அவள சமாதானம் பண்ணனும்னு அறிவிருக்கா... கொஞ்சம் நேரம் ட்ரை பண்ணிட்டு போய்ட்டான்... திரும்ப வருவான் தானே... அவனுக்கு இருக்கு.." என்றவள் வெளியேற கதவைத் திறக்க வாசலில் நின்றவனைக் கண்டு அதிர்ந்தாள்.

ஆர்யான் அவள் முன் கை ஆட்டவும் தன்னிலை அடைந்த சிதாரா அவனை முறைக்க,

ஆர்யானோ பட்டென நெடுஞ்சாண் கிடையாக அவள் காலில் விழுந்து விட்டான்.

"டேய்... வளர்ந்து கெட்டவனே... என்னடா பண்ற... முதல்ல எழுந்திரிடா.. யாராவது பார்த்துட போறாங்கடா.." என சிதாரா பதறியபடி கூற,

"சாரி மினி... நேத்து சடன்னா ஆஃபீஸ்ல இருந்து கால்.‌.. அர்ஜன்ட் மீட்டிங்னு சொல்லி... அதான் இருந்த டென்ஷன்ல உன்ன மியூசியம் கூட்டிட்டு போறேன்னு சொன்னதையே மறந்துட்டேன்..." என்றான் ஆர்யான்.

சிதாரா, "நீ இப்போ எழுந்திரிக்கலன்னு வை... என்னைக்குமே உன்ன மன்னிக்க மாட்டேன் ஜிராஃபி..." என மிரட்டவும் அவசரமாக எழுந்து கொண்டான்‌.

சிதாரா ஆர்யானை முறைத்து விட்டு உள்ளே செல்ல அவளைப் பின் தொடர்ந்த ஆர்யான்,

"பேசு மினி... அதான் சாரி சொல்றேன்ல... பேசுடி..." எனக் கெஞ்ச சிதாராவோ உதட்டை சுழித்தாள்.

ஆர்யான், "வேணும்னா நான் தோப்புக்கரணம் போடவா.." என்றவன் இரு காதையும் மாற்றி பிடித்துக் கொண்டு தோப்புக்கரணம் போட,

ஆர்யானின் செய்கையில் வந்த சிரிப்பை அவன் காணாதவாறு அடக்கினாள் சிதாரா.

சற்று நேரம் கழித்து ஆர்யான், "முடியல மினி... சாரி.. மன்னிச்சிட்டேன் சொல்லு... எங்க அம்மா கூட என்ன இப்படி பண்ண வெச்சி இல்லடி... " என சோகமாகக் கூறவும் அவனைப் பார்த்து சிரித்த சிதாரா,

"சரி சரி போதும் எழுந்திரு.. மன்னிச்சிட்டேன்... ரொம்பத் தான் சீன் போடுற.." என்றாள்.

தோப்புக்கரணம் போடுவதை நிறுத்திய ஆர்யான் அவளை நெருங்கி, "நிஜமா மன்னிச்சிட்டியா மினி... என் மேல இருந்த கோவம் போயிடுச்சா..." என கண்கள் மின்னக் கேட்கவும்,

எக்கி அவனின் தலை முடியைக் கலைத்து விட்ட சிதாரா,

"உன் கிட்ட எப்படி ஜிராஃபி நான் கோவமா இருக்க முடியும்... நீ தான் ஏதாவது கோமாளித்தனம் பண்ணி என்னை சிரிக்க வெச்சிடுவியே... நீ அன்னைக்கு கூட்டிட்டு போறேன்னு சொல்லிட்டு வராம இருந்தியே.. அதான் உன்ன கொஞ்சம் சுத்தல்ல விட்டேன்..." என்றாள்.

ஆர்யான், "தேங்க் யூ மை டாலி..." என சிதாராவை அணைத்துக் கொண்டான்.

ஆர்யானின் டாலி என்ற அழைப்பில் புருவம் சுருக்கிய சிதாரா, "என்னடா புதுசா டாலின்னு எல்லாம் சொல்ற... என்னாச்சு.." என்க,

அவளை விடுவித்தவன், "டேய் ஆரு... உணர்ச்சி வசப்பட்டுட்டியே... சீக்கிரம் ஏதாவது சொல்லி மினிய சமாளிடா.." என நினைத்தன் அவளைப் பார்த்து சிரித்தான்.

பின், "அது ஒன்னுமில்ல மினி.. சும்மா தான்... ஆமா நீ எங்க கிளம்பிட்ட.." எனப் பேச்சை மாற்ற,

"உன் கூட பேசிட்டு இருந்ததுல அதை கூட மறந்துட்டேன் பாரு... யுனிக்கு தான் கிளம்பினேன்..‌டைம் ஆச்சு... என்ன ட்ராப் பண்ணி விடு.." என்றாள் சிதாரா.

ஆர்யான், "இன்னைக்கு யுனி கட் பண்ணிடு மினி.. நானும் லீவ் போட்டுட்டேன்..." என்க,

அவனைப் புரியாமல் பார்த்த சிதாரா, "எதுக்கு ஜிராஃபி லீவ் போடனும்.." என்றாள்.

அவளைப் பார்த்து புன்னகைத்த ஆர்யான், "Metropolitan Museum போலாம்..." என்க சந்தோஷத்தில் துள்ளிக் குதித்தாள் சிதாரா.

அன்றைய நாள் முழுவதும் சிதாராவுடனே கழித்த ஆர்யான் சிதாரா அறியாமல் அவளை ரசித்தான்.

_______________________________________________

அன்றைய தினத்தைப் பற்றி சிதாராவிடம் கூறிய ஆர்யான், "அதுக்கப்புறம் பிரணவ்வால உனக்கு ஏதாவது ஆபத்து வரும்னு தான் நம்ம கல்யாணம் பண்ணிக்க மாமா கிட்ட பேசினேன்... இந்த கொஞ்சம் நாளா நீ காட்டின நெருக்கத்துல ரொம்பத் தவிச்சிட்டேன்... காதலிச்சி கல்யாணம் பண்ணிக்கிட்டும் அதை உன் கிட்ட சொலல் முடியாம இருந்தேன்.. யாராலையும் உனக்கு எந்தக் கஷ்டமும் வரக் கூடாதுன்னு நெனச்சேன்... ஆனா கடைசியில என்னாலையே நீ இன்னெக்கி இந்த நிலமைல இருக்க..." என்று அழுதவன்,

"மினி... நான் உன்ன காதலிக்கிறேன்... உன் மேல பைத்தியமா இருக்கேன்... ஐ லவ் யூ மினி... யூ ஆர் மை பேபி டால்... நீ தான் எனக்கு எல்லாமே மினி... உனக்கு ஒன்னுன்னா நிச்சயம் என்னால தாங்க முடியாது மினி.. ப்ளீஸ் என் கிட்ட திரும்ப வந்துடுடி... நீ இல்லாம சத்தியமா என்னால வாழ முடியாது... எனக்கு நீ வேணும் மினி... லைஃப் லாங் வேணும்... என் ஃப்ரென்டா... என் லைஃப் பார்ட்னரா.. என் சண்டக்காரியா... எனக்கு அம்மாவா எல்லாமுமா நீ வேணும்டி... எழுந்திரு மினி... எழுந்து என் கூட சண்டை போடு... பேசு மினி..." என்று கண்ணீர் வடித்தவன் சிதாராவின் வயிற்றில் தலை வைத்து ஒரு கரத்தில் அவள் கரத்தைப் பிடித்துக் கொண்டவன் மறு கரத்தால் சிதாராவைச் சுற்றி கை போட்டு அணைத்துக் கொண்டான்.

ஆர்யானின் சூடான கண்ணீர்த்துளிகள் சிதாராவின் வயிற்றை நனைக்க அவள் விரல்கள் மெதுவாக அசைந்தன.
 

Nuha Maryam

Moderator
அத்தியாயம் - 24

ஆர்யான் சிதாராவின் வயிற்றில் முகம் புதைத்து கண்ணீர் வடிக்க, தன்னவனின் விழி நீர் தந்த வெம்மையில் சிதாராவின் விரல்கள் மெதுவாக அசைந்தன.

ஆர்யான் மினி... மினி... என குரலில் மொத்த காதலையும் தேக்கி வைத்து அவள் பெயரை விடாது உச்சரித்தவன் சில நொடிகளில் அப்படியே உறங்கி விட்டான்.

நன்றாக இரவாகி விட சிதாராவின் வயிற்றில் தலை வைத்து அவளை லேசாக அணைத்தபடி படுத்திருந்த ஆர்யானின் தலையில் மெதுவாக ஒரு கரம் பதிந்தது.

அதில் விழிப்புத் தட்டிய ஆர்யான் அவசரமாக தலையை உயர்த்திப் பார்க்க சிதாரா தான் கண் விழித்து ஆர்யானின் தலையில் கை வைத்திருந்தாள்.

கண்கள் கலங்க, "மினி...." என மகிழ்ச்சியின் உச்சத்தில் கத்திய ஆர்யான், "மி...மினி... நீ கண்ணு முழிச்சிட்டியா... தேங்க் காட்... நீ நல்லா இருக்கேல்ல...." என்றான் பதட்டமாக.

சிதாரா கஷ்டப்பட்டு ஏதோ கூற முனைவதைக் கண்டு அவள் முகத்தினருகே சென்று,

"என்ன மினி... ஏதாவது சொல்லனுமா..." எனக் கேட்டான்.

சிதாரா தலையை மேலும் கீழும் அசைத்து ஆம் என்றவள் கண்களால் ஆர்யானை இன்னும் சற்று நெருக்கமாக வரக் கூறினாள்.

அவளை நெருங்கிய ஆர்யான் சிதாரா கூறுவதைக் கேட்க வேண்டி தன் காதை அவள் வாயின் அருகில் கொண்டு செல்ல,

"ரொ... ரொம்...ப.. பயந்..துட்டி..யா.." எனப் புன்னகையுடன் கேட்டாள் சிதாரா.

சிதாரா அவ்வாறு கேட்டதும் மேலும் கண்ணீர் வடித்த ஆர்யான் பட்டென அவளை அணைத்து அவள் முகம் முழுவதும் முத்தமிட்டவன்,

"ஐம் சாரி மினி... என்ன மன்னிச்சிரு... என்னால தான் உனக்கு இப்படி ஆச்சு... நான் மட்டும் உன் மெசேஜ பார்த்து கரெக்ட் டைமுக்கு அங்கு வந்திருந்தேன்னா உனக்கு இப்படி ஆகி இருக்காதுல்ல... சாரிடி..." என்று அழுதான்.

சிதாரா கடினப்பட்டு கையை உயர்த்தி ஆர்யானின் தலையை வருடி விட்டாள்.

சிதாராவிடமிருந்து விலகிய ஆர்யான் தன் கண்களைத் துடைத்துக் கொண்டு, "இரு மினி... நான் போய் டாக்டர கூட்டிட்டு வரேன்.." என்று விட்டு அறையிலிருந்து வெளியேறிவன் சில நிமிடங்களில் டாக்டருடன் வந்தான்.

சிதாராவைப் பரிசோதித்த டாக்டர், "ஷீ இஸ் பர்ஃபக்ட்லி ஆல் ரைட் நவ்... உங்க அன்பும் நம்பிக்கையும் தான் அவங்கள கியுர் பண்ணி இருக்கு... எப்பவும் இப்படியே ஒத்துமையா இருங்க ரெண்டு பேரும்... ஃபிட்ஸ் வந்ததுனால இவங்க உடம்பு கொஞ்சம் டயர்டா இருக்கும்... சோ டூ டேய்ஸ்க்கு இப்படி தான் இருப்பாங்க... பேச கூட கொஞ்சம் கஷ்டமா இருக்கும்... அதுக்கப்புறம் சரி ஆகிடும்... மத்தபஞி வேற எந்த பிரச்சினையும் இல்ல..." என்றவர் இன்னும் சில பல அறிவுரைகள் கூறி விட்டு அங்கிருந்து சென்றார்.

அவர் செல்லவும் ஆர்யான் சிதாராவைப் பார்த்து நிம்மதிப் பெருமூச்சு விட புன்னகைத்த சிதாரா எழுந்து உட்கார முயற்சி செய்தாள்.

"வைட் மினி... நான் ஹெல்ப் பண்றேன்..." என்றவன் சிதாராவை மெதுவாக எழுப்பி கட்டிலில் சாய்த்து அமர வைத்தான்.

ஆர்யானை தன்னருகில் அழைத்த சிதாரா, "பசிக்..கிது ஜிர்..ராஃபி..." என்றாள் உதட்டைப் பிதுக்கி.

"ச்சே.. நான் ஒரு லூசு... அதை மறந்துட்டேன் பாரு... இரு நான் கேன்டீன் போய் உனக்கு சாப்பிட ஏதாவது எடுத்துட்டு வரேன் மினி.." என்றவன் சிதாரா சரியென தலையசைக்கவும் அவசரமாக கேன்டீன் சென்றான்.

ஆர்யான் செல்லும் திசையை புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தாள் சிதாரா.

வரும் போது கையில் சிதாராவுக்கு பழங்கள் மற்றும் உணவுடன் வந்தவன் சிதாராவுக்கு அவனே ஊட்டி விட்டான்.

ஆர்யான் ஊட்டி விட சிதாரா அவன் கண்களையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவளைப் பார்த்து சிரித்த ஆர்யான், "என்ன மினி.. அப்படி பாக்குற... என்னமோ இன்னைக்கு தான் முதல் தடவ பார்க்குறது போல..." என்க,

"இவ்வளவு வெளிப்படையா அவன சைட் அடிப்பியா சித்து..." என மனதில் தன்னையே திட்டிக் கொண்டவள் பதில் எதுவும் கூறாது ஆர்யானைப் பார்த்து புன்னகைத்தாள்.

சிதாராவுக்கு முழுவதையும் ஆர்யான் ஊட்டி முடிக்கவும் தான் ஆர்யான் இன்னும் சாப்பிடாமல் இருப்பது சிதாராவுக்கு நினைவு வந்தது.

ஆர்யான் கையைக் கழுவி விட்டு வரவும் சிதாரா, "நீ சாப்...பிடலை..யா ஜிர்..ராஃபி..." எனக் கேட்ட,

வலிக்காமல் அவள் தலையில் குட்டு வைத்த ஆர்யான், "எனக்கு இப்ப பசிக்கல... நான் அப்புறமா சாப்பிட்டுக்குறேன்... நீ இப்போ தூங்கு... உனக்கு தான் உடம்புல இன்னும் தெம்பில்லல்ல.. அப்புறம் எதுக்கு பேசி ஸ்ட்ரைன் பண்ணிக்குற..." எனக் கடிந்து கொண்டான்.

அவனை முறைத்த சிதாரா, "நீ முதல்..ல ஏதாவது சாப்டு... அதான் இன்..னைக்கு ஃபுல்லா தூங்கி..னேனே.. நான் அப்..புறமா தூங்குறேன்..." என ஒவ்வொரு வார்த்தையாக கடினப்பட்டு பேச,

இதற்கு மேலும் தான் உண்ணாமல் இருந்தால் தன்னவள் கஷ்டப்படுவாள் என எண்ணிய ஆர்யான் சிதாராவுக்காக வேண்டி அங்கிருந்த பழங்களை எடுத்து உண்டான்.

பின் சிதாராவை படுக்க வைத்தவன் அவள் அருகில் கதிரையைப் போட்டு அமர சிதாரா ஏதோ கூறவும் கீழுதட்டைக் கடித்து கண்களாலே அவளை மிரட்டியவன் தூங்கு என கண்களை மூடி சைகை காட்டினான்.

ஆர்யானைப் பார்த்து உதட்டை வளைத்த சிதாரா கண்களை மூடிக் கொண்டாள்.

சிதாராவின் செய்கையில் புன்னகைத்த ஆர்யான் அவள் நெற்றியில் அழுத்த முத்தமிட்டு விட்டு சிதாராவின் கரத்தை எடுத்து தன் கைக்குள் வைத்துக் கொண்டவன் அவளின் முகம் பார்த்தவாறு அமர்ந்த வண்ணமே கட்டிலில் தலை வைத்து படுத்துக் கொண்டான்.

காலையிலிருந்தே இருந்த குழப்பத்திலும் சிதாராவைத் தேடித் திரிந்த அலைச்சலிலும் உடனே ஆர்யானை உறக்கம் தழுவிக் கொண்டது.

ஆர்யான் உறங்கி சிறிது நேரத்தில் அவ்வளவு நேரம் தூங்குவது போல் நடித்த சிதாரா மெதுவாக ஒற்றைக் கண் திறந்து ஆர்யானைப் பார்க்க,

அவன் தூங்கி விட்டதை உறுதி செய்தவள் ஆர்யானின் தூக்கம் களையாதவாறு எழுந்து அமர்ந்தாள்.

ஒரு கையை மடித்து அதில் தன் கன்னத்தைத் தாங்கிய சிதாரா நிர்மலமான முகத்துடன் குழந்தை போல் உறங்கும் தன்னவனை விழி எடுக்காமல் ரசித்தாள்.

சற்று நேரத்தில் ஆர்யானிடம் லேசாக அசைவு தெரியவும் அவசரமாக கண்ணை மூடி படுத்துக் கொண்டாள்.

அதன் சத்தத்தில் கண் விழித்த ஆர்யான் சிதாராவைப் பார்க்க அவள் தூங்குவது தெரிந்ததும் அவள் வயிற்றை சுற்றி கை போட்டு அணைத்தபடி மீண்டும் உறங்கினான்.

_______________________________________________

மறுநாள் கதிரவன் உதித்து சில மணி நேரத்தில் ஆர்யான் எழுந்து கொள்ள சிதாராவோ சோர்வில் இன்னும் உறங்கிக் கொண்டிருந்தாள்.

சிதாரா எழும் முன் காலைக் கடன்களை முடித்து விட்டு வர நினைத்த ஆர்யான் அந்த அறையிலேயே இருந்த குளியலறைக்குள் நுழைந்து கொண்டான்.

நேற்றே ஆர்யான் தன் நண்பன் ஒருவனிடம் கூறி சிதாராவின் மருத்துவ அறிக்கைகளையும் இருவருக்கும் தேவையான பொருட்களையும் எடுத்து வர வைத்திருந்தான்.

எல்லாம் முடித்துக் கொண்டு குளியலறையிலிருந்து வெளியே வர ஆர்யானின் மொபைல் ஒலி எழுப்பியது.

அதன் சத்தத்தில் சிதாராவின் தூக்கம் களைய முன் அவசரமாக அழைப்பை ஏற்றான்.

ரவி தான் அழைத்திருந்தான்.

ரவி, "சாரிடா மார்னிங்கே கால் பண்ணி டிஸ்டர்ப் பண்றதுக்கு... தங்கச்சிக்கு இப்போ எப்படி இருக்கு... இன்னும் ரெகவர் ஆகலையா..." என்க,

ஆர்யான், "இல்லடா... நைட்டே மினி கண் முழிச்சிட்டா... டாக்டர் செக் பண்ணிட்டு எல்லாம் ஓக்கேன்னு சொன்னாங்க... இப்போ தூங்கிட்டு இருக்காள்... ஆமா நீ எதுக்குடா கால் பண்ணின... அதை இன்னும் சொல்லவே இல்ல..." என்றான்.

"ஆஹ்... நீ இப்போ ஃப்ரீயா மச்சான்... கொஞ்சம் ஸ்டேஷன் வரைக்கும் வர முடியுமா..." என ரவி கேட்கவும்,

ஆர்யான், "ஃப்ரீ தான்டா... நானும் உன்ன சந்திக்க வரணும்னு தான் நெனச்சேன்... வைட் பண்ணு.. ஒரு ஃபிப்டீன் மினிட்ல வந்துட்றேன்.." என்று விட்டு அழைப்பைத் துண்டித்தான்.

அங்கிருந்து நர்ஸிடம் தான் வரும் வரை சிதாராவைக் கவனித்துக் கொள்ளுமாறு கூறிய ஆர்யான் ரவியை சந்திக்க கிளம்பினான்.

நியுயார்க் போலீஸ் ஸ்டேஷனை அடைந்த ஆர்யான் நேரே ரவி இருந்த அறைக்குச் சென்றான்.

ரவி, "வா ஆரு... உட்காரு..." என்க, அங்கிருந்த இருக்கையில் அமர்ந்த ஆர்யான்,

"ஏதோ பேசணும்னு சொன்னியே ரவி... என்ன விஷயம்..." எனக் கேட்டான்.

ரவி, "இன்னைக்கு ஆதித்யாவ கோர்ட்ல ஆஜர் பண்றோம்டா... நம்ம கிட்ட இருக்குற எவிடன்ஸ கோர்ட்ல சப்மிட் பண்ணினா யூ.எஸ் ரூல்ஸ் படி கண்டிப்பா அவனுக்கு தூக்கு தண்டனை கன்ஃபார்ம்..." என்றான்.

பதிலேதும் கூறாமல் அமைதி காத்த ஆர்யான் பின், "மினிய கடத்த ட்ரை பண்ணினதா மட்டும் கேஸ் ஃபைல் பண்ணு ரவி..." என்று கூறவும் அதிர்ந்தான் ரவி.

ரவி, "என்னடா சொல்ற... உனக்கென்ன பைத்தியமா... தங்கச்சிக்கு எவ்வளவு பெரிய அநியாயம் பண்ண ட்ரை பண்ணி இருக்கான் அந்த ராஸ்கல்... நான் அவனுக்கு தண்டனை வாங்கி கொடுக்க ட்ரை பண்ணா நீ கடத்த முயற்சி பண்ணதா மட்டும் கேஸ் ஃபைல் பண்ண சொல்ற... அப்படி மட்டும் பண்ணினா வெறும் மூணோ நாலோ வருஷம் ஜெயில்ல இருந்துட்டு ஈஸியா வெளிய வந்துடுவான்..." என்றான் கோவமாக.

ஆர்யான், "மினிய தயா அப்படி பண்ண நெனச்சதால உன்ன விட பல மடங்கு அவன் மேல கோவம் இருக்கு எனக்கு... அவன் அப்பா அவனுக்கு நல்லத சொல்லி கொடுத்து வளர்த்து இருந்தா அவன் இன்னைக்கு இந்த நிலமைல இருப்பானா... சின்ன வயசுல இருந்தே அவன விட முன்னுக்கு வரனும்.. அவன ஜெய்க்கனும்னு சொல்லி வளர்த்தா இவன் வேற என்ன பண்ணுவான்... எல்லாத்தையும் விட அவனுக்காக ஒரு குடும்பம் காத்திட்டு இருக்கு... பொறந்ததுல இருந்தே அப்பா பாசத்த அனுபவிக்காத அந்த குழந்தை என்ன பாவம் பண்ணிடுச்சு... என் மினி கூட அதை விரும்பமாட்டா... சில வருஷம் ஜெயில்ல இருந்துட்டு வந்தா அவன் திருந்திடுவான்... இல்லன்னா திரும்ப எங்கள பழி வாங்க தான் முயற்சி பண்ணுவான்... என் மேல இருந்த பொறாமைல தான் அவன் அப்படி பண்ணான்... நான் அவனுக்காக இதை பண்ணல... அந்த குழந்தைக்காக பண்றேன்.." என்க, மனமேயின்றி சம்மதித்தான் ரவி.

ஆர்யான் ஆதித்யாவைப் பார்க்க அவனை அடைத்து இருந்த சிறைக்குச் செல்ல தரையில் முகத்தை ஒரு கையால் மூடியவாறு படுத்திருந்தான் ஆதித்யா.

ஆர்யானின் அரவம் கேட்டு எழுந்தமர்ந்த ஆதித்யா தரையில் பார்வையை செலுத்தி இருக்க அவனை நெருங்கிய ஆர்யான்,

"என் முகத்த பார்க்க கூட தயக்கமா இருக்கா..." என்றான்.

ஆதித்யா பதிலளிக்காமல் இருக்கவும், "எனக்கும் உன் கூட பேசவோ உன் முகத்த பார்க்கவோ விருப்பமில்ல... ஆனா நான் இன்னைக்கு பேசியே ஆகனும்... அதான் வந்தேன்... " என்று நிறுத்திய ஆர்யான்,

"எனக்கு நிறைய ஃப்ரென்ட்ஸ் இருக்காங்க... யாரு கூட வேணாலும் சீக்கிரமா ஃப்ரென்ட் ஆகிடுவேன் நான்... என் கேரெக்டர் அப்படி... பட் நீ கொஞ்சம் ஸ்பெஷல்... உன் ஃப்ரென்ட்ஷிப்ப நான் ரொம்ப மதிச்சேன் தயா... ஆனா அப்போ எனக்கு தெரியல நீ என்ன ஏமாத்த தான் இப்படி பண்றன்னு... என் கிட்ட நிறைய பேரு வந்து சொன்னாங்க நீ என் பேர யுனில டேமேஜ் பண்றன்னு.. பட் நான் எதையும் நம்பல... ஆனா அன்னிக்கு நீ உன் வாயாலயே எல்லாம் சொல்லி ஒத்துக்கொள்ளவும் எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது... எல்லாரு முன்னாடியும் உன்ன அடிச்சது கூட நீ என்ன நம்ப வெச்சி ஏமாத்தினதுக்காக இல்ல... ஒரு பொண்ணோட லைஃப்ல நீ விளையாடி இருக்கன்னு தான்... எங்க அம்மா எனக்கு சின்ன வயசுல இருந்தே பொண்ணுங்கள எப்படி மதிக்கனும்னு கத்துத் தந்து இருக்காங்க... அதனால தான் அன்னைக்கு யாரோ ஒரு பொண்ணுக்கு நீ அதுவும் என் க்ளோஸ் ஃப்ரென்ட் அப்படி பண்ணவும் கோவத்துல உன்ன அடிச்சிட்டேன்... அதுக்கப்புறம் ரொம்ப ஃபீல் பண்ணேன் அதை நினைச்சி... என்ன இருந்தாலும் ஒரு பொறாமையில தான் நீ இதெல்லாம் பண்ணி இருக்கன்னு எனக்கு புரிஞ்சது... அதான் உன் கூட பேச ட்ரை பண்ணேன்... ஆனா முடியல... உன்னையும் யுனிய விட்டு தூக்கிட்டாங்க... ஆனா என்னைக்கு என் மினி மேல நீ கை வெச்சியோ அப்பவே உன்ன கொல்லனும்னு நெனச்சேன்... உன்ன கொன்னுட்டு ஜெயிலுக்கு போறது ஒன்னும் எனக்கு பெரிய விஷயம் இல்ல... ஆனா அதுக்கப்புறம் யாருக்காக நான் இதெல்லாம் பண்ணினேனோ அவள் கஷ்டப்படுவா... அதான் உனக்கு சட்டத்தால தண்டனை வாங்கி தரனும்னு நினைச்சேன்... நீ பண்ண வேலைக்கு உனக்கு தூக்கு தண்டனை கன்ஃபார்ம்... ஆனா நான் தான் உன் குழந்தைக்காக அத தடுத்திருக்கேன்..." என்கவும் அவ்வளவு நேரம் ஆர்யான் கூறுவதை அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த ஆதித்யா ஆர்யானைப் புரியாமல் ஏறிட்டான்.

ஆர்யான், "என்ன பார்க்குற... நாலு வருஷத்துக்கு முன்னாடி ஒரு பொண்ண காதலிச்சு கர்ப்பமாக்கிட்டு விட்டு போனேல்ல... ரேவதி... உன் காதல் எப்படியோ... ஆனா அவளோட காதல் உண்மைன்னு சொல்லி தன்னோட குடும்பத்தை எதிர்த்து குழந்தைய பெத்துக்கிட்டு சிங்கிள் மதரா அந்த குழந்தைய வளர்க்குறா... இன்னும் நீ திரும்பி வருவேன்னு நம்பிட்டு இருக்கா... அவ நம்பிக்கைய பொய்யாக்க எனக்கு மனசு வரல... அந்த பச்ச குழந்தைக்காக தான் நான் உன்ன மன்னிக்கிறேன்.... இனிமேலாவது திருந்துற வழிய பாரு... ஆனா திரும்ப பழி வாங்குறேன் அது இதுன்னு என் மினிய காயப்படுத்த நெனச்ச..." என விரல் நீட்டி எச்சரித்தவன்,

"அதுக்கப்புறம் பார்ப்ப இந்த ஆர்யான் யாருன்னு...." என்றவன் அங்கிருந்து சென்றான்.

ஆர்யான் சென்றதும் அவன் கூறிச் சென்றதை எல்லாம் நினைத்து கண்ணீர் விட்டான் ஆதித்யா.

அவன் மனம், "ரேவா... என்ன மன்னிச்சிருடி..." என்று அழுதது.

ரவியிடம் சொல்லிக் கொண்டு இன்னும் சில வேலைகளை முடித்து விட்டு ஹாஸ்பிடல் கிளம்பினான் ஆர்யான்.

ஆர்யான் சிதாரா இருந்த அறைக்குள் நுழையும் போது சிதாரா கட்டிலில் இருக்கவில்லை.

அவள் எங்கே எனத் தேட குளியலறையிலிருந்து வெளியே வந்தாள் சிதாரா.

அவசரமாக அவளிடம் ஓடிய ஆர்யான், "என்ன பண்ற மினி.. தனியா போயிருக்க... உனக்கு துணையா நான் ஒரு நர்ஸ் வெச்சிட்டு தானே போனேன்... எங்க அவங்க.." என்க,

அவன் கை பிடித்து கட்டில் வரை வந்த சிதாரா, "நான் இப்போ நல்லா இருக்கேன் ஜிராஃபி... கொஞ்சம் டயர்டா இருக்கு.. அவ்வளவு தான்... அதான் அந்த நர்ஸ போக சொன்னேன்... அவங்க எனக்கு ப்ரேக்ஃபஸ்ட தந்துட்டு போய்ட்டாங்க... நீ டென்ஷன் ஆகாதே.. ஆமா நீ காலைலயே எங்க போன.. இப்போ தான் வர..." எனக் கேட்டாள்.

"உட்காரு சொல்றேன்.." என சிதாராவை கட்டிலில் அமர வைத்த ஆர்யான்,

"நான் உன் கிட்ட சொல்லாம ஒரு விஷயம் செஞ்சிட்டேன் மினி.." என்றான்.

சிதாரா அவனைக் கேள்வியாகப் பார்க்கவும் தனக்கும் ஆதித்யாவிற்கும் இடையிலான கடந்த காலத்திலிருந்து இப்போது வரை நடந்த அனைத்தையும் கூறினான் ஆர்யான்.

ஆர்யான் கூறி முடித்த பின்னும் சிதாரா முகத்தில் எந்த உணர்வையும் வெளிக்காட்டாமல் அமைதியாக இருக்க,

ஆர்யான், "சாரி மினி... உனக்கு இதுல சம்மதமான்னு கூட நான் கேட்கல.. உறக்கு நிச்சயம் என் மேல கோவம் வரும்.." என்றான் கவலையாக.

அவனை முறைத்த சிதாரா, "ஆமா.. எனக்கு கோவம் தான்.." என்க ஆர்யானின் முகம் வாடியது.

பின் ஆர்யானைப் பார்த்து புன்னகைத்த சிதாரா அவன் கன்னத்தில் கை வைத்து, "எனக்கு உன் மேல கோவம் தான் ஜிராஃபி... பட் அது நீ பண்ண வேலைக்கு இல்ல... எனக்கு பிடிக்குமோ பிடிக்காதோன்னு யோசிக்கிறியே... அதுக்குத் தான்... என் லூசு புருஷன் எது பண்ணாலும் அது சரியாத் நான் இருக்கும்... தனக்கு கெட்டது பண்ணவங்களுக்கு கூட அவன் நல்லது தான் பண்ணுவான்..." என்றதும் இன்ப அதிர்ச்சி அடைந்தான் ஆர்யான்.

அதிர்ச்சி மாறாமலே, "நான் பொண்டாட்டின்னு விளையாட்டுக்கு சொன்னாக் கூட அவ்வளவு கோவப்படுவ... இன்னைக்கு நீயே என்னை பார்த்து புருஷன்னு சொல்ற..." என்றான் ஆர்யான்.

உடனே பொய்யாக முகத்தைத் தொங்கப் போட்ட சிதாரா, "ஏன் நான் அப்படி சொன்னது உனக்கு பிடிக்கலையா ஜிராஃபி.." என்றாள்.

சிதாராவின் முகம் வாடவும் ஆர்யான், "ச்சேச்சே.. அப்படி எதுவும் இல்ல மினி... எனக்கு பிடிச்சிருக்கு... கேக்க நல்லா இருக்கு..." என்றான் புன்னகையுடன்.

பின் ஆர்யான் தான் வரும் போது கொண்டு வந்த உணவை சிதாராவுக்கு ஊட்டி விட்டு தானும் உண்டான்.

ஆர்யான், "சரி மினி... டாக்டர் உன்ன இன்னைக்கு டிஸ்சார்ஜ் பண்ண முடியும்னு சொல்லிட்டாங்க... நான் போய் பில் பே பண்ணிட்டு வரேன்.. நாம கிளம்பலாம்.." என்க சரி எனத் தலையசைத்தாள் சிதாரா.

பணம் கட்டி விட்டு வந்த ஆர்யான் சிதாராவை அழைத்துக் கொண்டு கிளம்பினான்.

இருவரும் ஹாஸ்பிடலில் இருந்து கிளம்பும் போது மாலையாகி இருந்தது.

காரில் செல்லும் போது வெளியே பார்த்த சிதாரா தம் வீட்டுக்குச் செல்லும் வழி இல்லாமல் வேறு வழியில் செல்வதைக் கண்டதும் ஆர்யானைப் பார்த்து, "நாம எங்க போறோம் ஜிராஃபி... இது நம்ம வீட்டுக்கு போற வழி இல்லையே..." என்றாள்.

ஆர்யான், "நம்ம வீட்டுக்கு தான் மினி.. வெய்ட் பண்ணு..." என்க சிதாராவுக்கு குழப்பமாக இருந்தது.

சில மணி நேரத்தில் அவர்களின் கார் ஒரு வீட்டின் முன் நின்றது.

ஆர்யான் முதலில் இறங்கி சிதாராவுக்கு இறங்க கதவைத் திறக்க, காரிலிருந்து இறங்கிய சிதாரா சுற்றியும் குழப்பமாக பார்த்தாள்.

சிதாராவை அழைத்துக் கொண்டு சென்று வீட்டின் கதவைத் திறந்தவன், "வெல்கம் டு அவர் நியு ஹோம் பொண்டாட்டி..." என்றான் ஆர்யான்.

அதிர்ந்த சிதாரா, "என்ன சொல்ற ஜிராஃபி... நம்ம வீடா... எப்ப வாங்கின... " என்றாள்.

ஆர்யான், "என் ஃப்ரென்ட் ஒருத்தனோட வீடு தான் மினி... அவன் வேற வீட்டுல இருக்கான் இப்போ... ஆல்ரெடி நம்ம திங்க்ஸ் எல்லாம் ஷிஃப்ட் பண்ணியாச்சு... அந்த வீடு அவ்வளவு சேஃப் இல்ல.. சுத்தி அவ்வளவா ஆட்கள் கூட இல்ல... நான் வர்க் போனா நீ மட்டும் தனியா இருப்ப... பட் இங்க எப்பவும் ஆட்கள் இருக்கும்... எந்த பிரச்சினையும் இல்ல... உன் ஸ்டடீஸ் முடிஞ்சு நாம ரிட்டன் இந்தியா கிளம்பும் வர இங்க தான் இருக்க போறோம்..." என்றான்.

இரண்டு அடுக்கு வீடு... கீழே ஹாலில் ஒரு கெஸ்ட் ரூமும் டைனிங் ஹாலும் கிச்சனும் இருந்தது.

மேல் மாடியில் பால்கனியுடன் கூடிய இரண்டு பெட்ரூம், ஒவ்வொரு பெட்ரூமிலும் அட்டேச் பாத்ரூம் என ஓரளவு பெரிய வீடாக இருந்தது.

ஆர்யான், "இப்போ சமைக்க டைம் இல்ல மினி.. சோ நான் நமக்கு டின்னர்க்கு ஃபுட் ஆர்டர் பண்ணிட்டு வரேன்... மாடில ஃபர்ஸ்ட் ரூம்ல நம்ம திங்ஸ் வெச்சிருக்கேன்... நீ போய் ட்ரஸ் சேன்ஜ் பண்ணிக்கோ மினி..‌ " என்று மொபைலை எடுத்துக் கொண்டு சென்றான்.

ஆர்யான் சென்றதும் மேலே தங்கள் அறைக்குச் சென்றவள் அறையை சுற்றிப் பார்த்து விட்டு பால்கனிக்கு சென்றாள்.

அங்கிருந்து பார்க்கும் போது சுற்றுப்புறம் அழகாக கண்ணுக்கு குளிர்ச்சியாக தெரிந்தது.

இரவு நேரம் என்பதால் நியுயார்க் நகரத்தின் அழகு பல மடங்கு கூடியது போல் இருந்தது.

சற்று நேரத்தில் ஆர்யான் வர சிதாரா குளித்து விட்டு இரவுடைக்கு மாறி வந்திருந்தாள்.

ஆர்யானும் சென்று குளித்து உடை மாற்றி வர சிதாரா இருவருக்கும் உணவை எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள்.

இருவரும் சேர்ந்து உண்டு விட்டு ஆர்யான் சொல்ல சொல்லக் கேட்காமல் சிதாராவே அனைத்தையும் கழுவுகிறேன் என கிச்சனிற்கு சென்றாள்.

ஆர்யானுக்கு ஆஃபீஸிலிருந்து கால் வரவும் அவன் தங்கள் அறைக்குச் சென்றான்.

சிதாரா எல்லாம் முடித்து விட்டு வர ஆர்யான் கட்டிலில் அமர்ந்து லேப்டாப்பை வைத்து ஏதோ வேலை செய்து கொண்டிருந்தான்.

சிதாரா சென்று கட்டிலில் ஆர்யானுக்கு அருகில் அமர அவனோ சிதாராவைக் கவனிக்காது லேப்டாப்பில் மூழ்கி இருக்க அவனைப் பார்த்து விஷமமாக புன்னகைத்த சிதாரா,

"என்ன புருஷா... நான் சுயநினைவு இல்லாம இருக்கும் போது மட்டும் தான் உன் காதல வெளிப்படுத்துவியா... நேர்ல எல்லாம் சொல்ல மாட்டியா... இரு உனக்கு இன்னெக்கி நல்ல வேலை பண்றேன்..." என மனதில் நினைத்தவள் லேப்டாப்பில் இருந்த ஆர்யானின் கரத்தின் இடையினால் தன் தலையை நுழைத்து அவன் மார்பில் சாய்ந்து கொண்டாள்.

சிதாராவின் திடீர் செயலில் ஆர்யான் கண்கள் விரிய அதிர்ச்சியில் இருக்க,

சிதாராவோ வேண்டுமென்றே இன்னும் நன்றாக அவன் மார்பில் சாய்ந்து, "என்ன பண்ணிட்டு இருக்க ஜிராஃபி..." என்றாள் அப்பாவியாக.

ஆர்யானோ சிதாராவிற்கு பதிலளிக்காது வேறு உலகில் இருந்தான்.

தன்னவளின் அருகாமை தந்த அவஸ்தையில் அவன் இதயம் வேகமாகத் துடிக்க எச்சில் விழுங்கிக் கொண்டவன்,

"ஏன் கடவுளே என்னை இப்படி சோதிக்குற... நானும் எவ்வளவு நாள் தான் என்னை அடக்கி வெச்சி அமைதியா இருப்பேன்... இவ என்ன கொஞ்ச நாளா வித்தியாசமா பிஹேவ் பண்றா... ஐயோ ஆர்யான்... உனக்கு வந்த சோதனை... மினி இப்போ தான் பெரிய கண்டத்துல இருந்து தப்பி வந்திருக்கா.‌‌.. ஏதாவது ஏடாகூடமா நடக்க முன்னாடி அவள தள்ளி வை ஆரு..." எனத் தனக்கே சொல்லிக் கொண்ட ஆர்யான்,

"கொஞ்சம் பிஸியா இருக்கேன் மினி.. ஆஃபிஸ் வர்க்... நீ வேணா லைட் ஆஃப் பண்ணிட்டு தூங்கு... நான் ஹாலுக்கு போய் இந்த வேலைய பார்க்குறேன்.." என்றவன் சிதாராவை விலக்கி விட்டு அவசரமாக எழ முயன்றான்.

ஆர்யானின் நிலையைப் பார்த்து சிதாராவுக்கு சிரிப்பாக வந்தது.

ஆர்யான் காணாமல் அதை மறைத்தவள் அவனை எழ விடாது பிடித்துக் கொண்டு, "நீ இங்கயே இரு ஜிராஃபி... எனக்கு தனியா இருக்க பயமா இருக்கு.." என்றாள் சோகமாக முகத்தை வைத்துக் கொண்டு.

ஆர்யான், "ஐயோ... எனக்கு உன் பக்கத்துல இருக்க பயமா இருக்குடி... நீ புதுசு புதுசா இப்படி எல்லாம் பண்ணும் போது எங்க என் கன்ட்ரோல் மிஸ் ஆகிடுமோன்னு பயமா இருக்குடி.." என மனதில் புலம்பியவன்,

"இப்போ நீ வெளிய போக ட்ரை பண்ணா நிச்சயம் இவ இப்படி ஏதாவது பண்ணி உன்ன தடுக்க பார்ப்பா... அது உனக்கு தான் பிரச்சினை ஆரு.. எப்படியாவது அவள தூங்க வெச்சிடு..." என நினைத்தான்.

ஆர்யான் லேப்டாப்பை மூடி வைத்து விட்டு, "நான் எங்கயும் போகல மினி... நீ தூங்கு... நான் உன் பக்கத்துல தான் இருப்பேன்..." என்றவன் சிதாராவை ஒரு பக்கம் படுக்க வைத்து போர்வையை போர்த்தி விட்டு தானும் மறுபக்கம் படுத்துக் கொண்டான்.

ஆர்யான் படுத்ததும் கண்ணை மூடிக் கொள்ள வாயை மூடிச் சிரித்தாள் சிதாரா.

சிதாரா, "உன்ன அவ்வளவு சீக்கிரம் விடுவேனா ஜிராஃபி..." என நினைத்தவள் ஆர்யானை நெருங்கி அவன் மார்பில் தலை வைத்து ஆர்யானின் கையை எடுத்து தன்னை சுற்றிப் போட்டு அவனை அணைத்தவாறு படுத்துக் கொண்டாள்.

கண்களை மூடி உறங்க முயற்சி செய்து கொண்டிருந்த ஆர்யான் சிதாராவின் செயலில் வேகமாக கண்களைத் திறந்தான்.

அவன் முகத்துக்கு மிக நெருக்கமாக சிதாராவின் முகம் இருந்தது.

சிதாரா ஆர்யானைப் பார்த்து புன்னகைக்க ஆர்யான், "எ..என்..என்னப் பண்..ற மினி.." என திக்கித் திணறிக் கேட்டான்.

உதட்டைப் பிதுக்கிய சிதாரா, "ஹக்கி பிலோவ் இல்லாம தூங்க முடியல ஜிராஃபி... அதான்.." என்றாள் மனதில் சிரித்துக் கொண்டு.

"ஓஹ்.. சரி..." என்ற ஆர்யான் அவசரமாக கண்ணை மூடி உறங்கப் பார்த்தான்.

அவன் எங்கே நிம்மதியாக உறங்க... அவன் மனையாள் விட்டாள் தானே...

ஆர்யான், "படுத்துறாளே... கன்ட்ரோல் ஆரு... கன்ட்ரோல்..." என கண்ணை மூடி அனைத்துக் கடவுளையும் வேண்டிக் கொண்டிருக்க சிறிது நேரத்தில் சிதாரா அவன் மார்பிலும் முகத்திலும் தன் விரலால் கோலம் போட்டாள்.

பெருமூச்சு விட்ட ஆர்யான், "இதுக்கு மேல முடியாது..." என நினைத்தவன் சிதாராவின் இடையைப் பிடித்து சுற்றி தனக்குக் கீழ் கொண்டு வந்தான்.

ஆர்யான் இவ்வாறு செய்வான் என எதிர்ப்பார்க்காத சிதாரா கண்கள் விரிய அதிர்ச்சியில் இருக்க,

ஆர்யான் அவள் கண்ணை ஆழமாகப் பார்த்து, "என்ன பண்ற..." என்றான் அழுத்தமாக.

"அ... அது... ஜி... நான்... வந்து..." என இவ்வளவு நேரமும் ஆர்யானை சீண்டும் போது வராத வெட்கமும் தயக்கமும் சிதாராவை தொற்றிக் கொண்டது.

சிதாராவின் கண்களையே நோக்கிக் கொண்டிருந்த ஆர்யானின் பார்வை கொஞ்சம் கொஞ்சமாக கீழிறங்கி அவள் உதட்டில் நிலைத்தது.

ஆர்யானின் பார்வையின் மாற்றத்தை உணர்ந்த சிதாராவின் உதடுகள் துடிக்க முகம் சிவந்தது.

அதற்கு மேல் பொறுத்துக்கொள்ள முடியாத ஆர்யான் பட்டென சிதாராவின் இதழ்களை சிறை செய்தான்.
 

Nuha Maryam

Moderator
அத்தியாயம் - 25

ஆர்யான் தன் காதலை சிதாராவிடம் இன்னும் நேரடியாக வெளிப்படுத்தாததால் அவள் வேண்டுமென்றே ஆர்யானை சீண்டிக் கொண்டிருந்தாள்.

சிதாராவின் நெருக்கம் ஆர்யானைப் பாடாய்ப்படுத்த அதைத் தெரிந்து கொண்டவள் இன்னும் அவனை சீண்ட எண்ணி அவனின் முகத்திலும் மார்பிலும் விரலால் கோலம் போடத் தொடங்கினாள்.

சிதாராவின் செய்கையில் பெருமூச்சு விட்ட ஆர்யான், "இதுக்கு மேல முடியாது..." என நினைத்தவன் சிதாராவின் இடையைப் பிடித்து சுற்றி தனக்குக் கீழ் கொண்டு வந்தான்.

ஆர்யான் இவ்வாறு செய்வான் என எதிர்ப்பார்க்காத சிதாரா கண்கள் விரிய அதிர்ச்சியில் இருக்க,

ஆர்யான் அவள் கண்ணை ஆழமாகப் பார்த்து, "என்ன பண்ற..." என்றான் அழுத்தமாக.

"அ... அது... ஜி... நான்... வந்து..." என இவ்வளவு நேரமும் ஆர்யானை சீண்டும் போது வராத வெட்கமும் தயக்கமும் சிதாராவை தொற்றிக் கொண்டது.

சிதாராவின் கண்களையே நோக்கிக் கொண்டிருந்த ஆர்யானின் பார்வை கொஞ்சம் கொஞ்சமாக கீழிறங்கி அவள் உதட்டில் நிலைத்தது.

ஆர்யானின் பார்வையின் மாற்றத்தை உணர்ந்த சிதாராவின் உதடுகள் துடிக்க முகம் சிவந்தது.

அதற்கு மேல் பொறுத்துக்கொள்ள முடியாத ஆர்யான் பட்டென சிதாராவின் இதழ்களை சிறை செய்தான்.

ஆர்யான் அவள் இதழ்களைக் கௌவவும் அதிர்ச்சியில் கண்கள் வெளியே தெரித்து விடும் அளவு விரித்த சிதாரா சற்று நேரத்திலே அவன் முத்தத்தில் மூழ்கி கண்களை மூடிக் கொண்டாள்.

இருவருக்கும் முதல் முத்தம்.

பல நாள் தவம் இருந்து கிடைத்தது போல் ஆர்யான் சிதாராவின் இதழ்களை விட மனமின்றி இருக்க சிதாராவும் அதில் லயித்து இருந்தாள்.

அம் முத்தம் நீண்டு கொண்டே செல்ல அப்போது தான் ஆர்யானுக்கு தான் செய்யும் காரியம் புரிந்து அவசரமாக சிதாராவை விட்டு விலகியவன், "ஐ... ஐம்.. ஐம் சாரி.." என்று விட்டு பால்கனியில் சென்று நின்று கொண்டான்.

உள்ளங்கையை மடித்து தன் நெற்றியில் அடித்துக் கொண்ட ஆர்யான், "ஷிட்... என்ன காரியம் பண்ணி வெச்சிருக்க ஆரு... மினி உன்ன பத்தி என்ன நினைப்பாள்... இவ்வளவு நாள் அமைதியா இருந்தது போல இருக்க வேண்டியது தானே... ஓஹ் காட்... அவள் இன்னும் உன்ன ஃப்ரென்டா நெனச்சிட்டு இருக்கா... இன்னெக்கி தான் ஏதோ மனசு வந்து அவ வாயாலே புருஷன்னு சொன்னாள்... அதையும் கெடுத்து விட்டுட்ட... ச்சே... இப்போ நீ எப்படி அவ மூஞ்சில முழிக்க போற..." எனத் தன்னையே திட்டிக் கொண்டான்.

ஆர்யான் திடீரென தன்னை விலக்கி விட்டு செல்லவும் சிதாராவுக்கு அவன் மனநிலை புரிந்தது.

தனக்காகத் தான் அவன் இவ்வளவு யோசிக்கிறான் எனப் புரிந்து கொண்ட சிதாரா எழுந்து ஆர்யானை நோக்கி சென்றாள்.

ஆர்யான் பால்கனியில் நின்று தனது செயலை நினைத்து வருந்தியவன் தலையைக் கைகளால் தாங்கியபடி இருக்க,

இரண்டு மென்கரங்கள் அவன் கரங்களிற்கு இடையில் நுழைந்து அவனை பின்னால் இருந்து அணைத்துக் கொண்டன.

ஆர்யான் அதிர்ச்சியில் இருக்கும் போதே அவனை பின்னாலிருந்து அணைத்திருந்த சிதாரா, "ஐ லவ் யூ ரயன்... லவ் யூ சோ மச்..." என்றாள்.

சிதாரா திடீரென அவ்வாறு கூறவும் அதிர்ச்சியில் உறைந்த ஆர்யான் வேகமாக அவள் பக்கம் திரும்பி அவள் தோள்களைப் பற்றியவன்,

"எ...என்ன சொன்ன மினி.. திரும்ப சொல்லு..." என அதிர்ச்சி மாறாமல் கேட்டான்.

சிதாரா ஆர்யானின் முகம் நோக்காது கீழே குனிந்தபடி, "ஆமா ரயன்... நான் உன்ன காதலிக்கிறேன்... ரொம்ப காதலிக்கிறேன்.. இதை சொல்லத் தான் அன்னைக்கு உன்ன ரூஃப் கார்டன் வர சொன்னேன்... அதுக்காக தான் நீ எனக்குன்னு வாங்கி தந்த சேரிய கட்டிக்கிட்டு உன்ன பார்க்க வந்தேன்... ஆனா... அதுக்குள்ள..." என நிறுத்தவும் மகிழ்ச்சியின் உச்சத்துக்கே சென்ற ஆர்யான்,

"நிஜமா தான் சொல்றியா மினி... உனக்கு என்ன பிடிச்சிருக்கா..." எனச் சிறு பிள்ளை போல் கேட்க ஆம் எனத் தலையசைத்தாள் சிதாரா.

ஆர்யான் சந்தோஷத்தில் வானை நோக்கி, "தேங்க் யூ கடவுளே..... என் லவ் சக்ஸஸ் ஆகிடிச்சு......" எனக் கத்தவும் சிதாரா அவசரமாக தன் கரத்தால் அவன் வாயை மூடியவள்,

"என்ன பண்ற ஜிராஃபி... பைத்தியமா உனக்கு... எல்லாரும் தூங்குற நேரம் இது..." என அவனைக் கடிந்து கொண்டாள்.

தன் வாயை மூடியிருந்த சிதாராவின் கரத்தை விலக்கிய ஆர்யான் அவள் முகத்தைக் கையில் ஏந்தி புன்னகையுடன்,

"நான் எவ்வளவு சந்தோஷமா இருக்கேன் தெரியுமா மினி... இந்த உலகத்துல இப்போ ரொம்ப சந்தோஷமா இருக்குறது நானா தான் இருப்பேன்... அதை வார்த்தையால சொல்ல முடியாது... என் லவ்வ நீ எக்சப்ட் பண்ணுவியா மாட்டியான்னு எவ்வளவு நாள் தூங்காம யோசிச்சிருப்பேன் தெரியுமா... உன் கூட கற்பனையிலேயே நான் வாழ்ந்துட்டு இருந்தேன் மினி.... ஒவ்வொரு செக்கனும் உன்ன பத்தி மட்டுமே நெனச்சிட்டு இருப்பேன்... நீன்னா எனக்கு அவ்வளவு பிடிக்கும்... என்னைக்கு உன்ன காதலிக்கிறேன்னு உணர்ந்தேனோ அப்போவே எங்க வீட்டுல கூட சொல்லிட்டேன் நீ தான் அவங்க மருமகள்னு... லவ் யூடி... லவ் யூ சோ மச் மை பேபி டால்..." என்றவன் சிதாராவின் முகம் முழுவதும் முத்தமிட்டான்.

ஆர்யான் பேசப் பேச மகிழ்ச்சியில் சிதாராவின் கண்கள் கலங்கின.

சிதாராவின் குரல் நடுங்க, "நான் நிறைய இழந்துட்டேன் ரயன்... என்னால நிச்சயம் உன்னையும் இழக்க முடியாது... தப்பானவன காதலிச்சி அவன் தான் எல்லாம்னு நெனச்சிட்டு இருக்கிறப்போ உன்ன உடம்புக்காக மட்டும் தான் காதலிக்கிறது போல நடிச்சேன்னு ஈஸியா தூக்கிப் போட்டுட்டு போனான்... ஆரம்பத்துலயே வாழ்க்கைய சந்தோஷமா அனுபவிக்க வேண்டிய வயசுல சந்தோஷம், நிம்மதின்னு எல்லாத்தையும் இழந்துட்டு நின்னேன்... அடுத்தவங்க மேல இருந்த நம்பிக்கையே போயிடுச்சி... திரும்ப ஒருத்தர நம்பி காதலிக்கவே பயந்தேன் நான்... ஆனா நீ... நீ வித்தியாசமானவன்... சந்தோஷம்னா என்ன... காதல்னா என்னன்னு எனக்கு புரிய வெச்ச.. வெறும் வார்த்தையால சொல்லாம உன்னோட ஒவ்வொரு செயல்லையும் அதை நீ எனக்கு உணர்த்தின... இப்போ கூட ஒரு விஷயம் என் மனசுல உறுத்திக்கிட்டே தான் இருக்கு... எந்தப் பையனுக்கா இருந்தாலும் தான் காதலிக்கிற பொண்ணு தன்னை மட்டுமே காதலிச்சி இருக்கனும்னு ஆசை இருக்கும்... உனக்கு கூட அப்படி இருக்கும் தானே... நான் இப்போ இந்த நிமிஷம் உன்ன உயிருக்கு உயிரா காதலிக்கிறேன் ரயன்... திரும்ப உன்னையும் என்னால இழக்க முடியாது... நீ இல்லாத லைஃப என்னால நெனச்சி கூட பார்க்க முடியாது ரயன்..." என்றாள் கண்ணீர் வடிய.

அவள் உதட்டில் விரல் வைத்த ஆர்யான், "ஷ்ஷ்ஷ்... இதுக்கு மேல எதுவும் பேசாதே மினி... நீ சொல்றது உண்மை தான்... பொதுவா பசங்களுக்கு தான் காதலிக்கிற பொண்ணு தன்னை மட்டுமே காதலிச்சு இருக்கனும்னு ஆசை இருக்கும்... எனக்கும் இருக்கு..." என்று கூறவும் சிதாராவின் முகம் வாடியது.

சிதாராவைப் பார்த்து புன்னகைத்த ஆர்யான், "அதான் என் ஆசை நிறைவேறிடுச்சே... என் மினியும் என்னை மட்டும் தான் லவ் பண்ணினா.. பண்ணிட்டு இருக்கா..‌.‌இனியும் பண்ணப் போறா..." என்க குழப்பமாக அவன் முகம் நோக்கினாள் சிதாரா.

அவளின் இடையை வளைத்து தன்னுடன் நெருக்கமாக நிற்க வைத்தவன் சிதாராவின் மூக்கைப் பிடித்து ஆட்டி விட்டு, "என்ன அப்படி பார்க்குற... அந்த வயசுல உனக்கு பிரணவ் மேல வந்தது காதலே கிடையாது மினி... இட்ஸ் ஜஸ்ட் அன் அஃபேக்ஷன்... அது கொஞ்சம் நாள்ள காணாம போயிடும்... அந்த வயசுல உனக்கு காதல்னா என்னன்னே சரியா தெரியாது மினி... அதான் நீ அதை காதல்னு நெனச்சிட்ட... நம்ம நெருக்கமா பழகின ஒருத்தர் நம்மள விட்டு போனா நமக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும்... அதை நம்மளால தாங்கிக்கவே முடியாது... அது போல தான் பிரணவ் உன்ன விட்டு போனதும் உனக்கு வருத்தமா இருந்தது... மத்தபடி நீ ஒன்னும் அவன லவ் பண்ணல..." என்ற ஆர்யான் சிதாராவின் நெற்றியில் தன் நெற்றியை முட்டிக் கொண்டு,

"என் பேபி டால் என்னை மட்டும் தான் லவ் பண்றா... அவளை விட யாராலயும் என்னை இந்த அளவுக்கு லவ் பண்ண முடியாது... நானும் அவள தவிர யாரையும் இந்த அளவு லவ் பண்ணல... பண்ண போறதும் இல்ல... அது நம்ம குழந்தைங்களா இருந்தாலும் சரி..." என்க,

ஆர்யானைப் பார்த்து புன்னகைத்த சிதாரா அவனை இறுக்கி அணைத்துக் கொண்டாள்.

பின் அவனை விட்டு விலகிய சிதாரா அவன் கண்களையே காதலுடன் நோக்க ஆர்யானும் அவளைக் காதலுடன் நோக்கினான்.

ஆர்யான் மெதுவாக சிதாராவின் முகம் நோக்கி குனிய அவனே எதிர்ப்பார்க்காத நேரம் அவன் இதழ்களை சிறை செய்தாள் சிதாரா.

முதல் தடவை போல் அல்லாது அம் முத்தம் நீண்டு கொண்டே செல்ல,

இருவரும் ஒரு முத்தத்தின் மூலமே தம் காதலை தம் இணையானவர்களுக்கு கடத்த முயற்சி செய்தனர்.

அவ் இதழ் முத்தத்தை மென்மையாக ஆரம்பித்தது என்னவோ சிதாராவாக இருந்தாலும் அதனை வன்மையாக கொண்டு சென்றது ஆர்யான் தான்.

சற்று நேரத்தில் சிதாரா மூச்சு விட சிரமப்பட மனமேயின்றி அவள் இதழ்களை விடுவித்தான் ஆர்யான்.

சிதாராவுக்கு ஆர்யானின் கண்களைப் பார்க்கவே தயக்கமாகவும் வெட்கமாகவும் இருந்தது.

ஒரு கையால் அவள் இடையை வளைத்து அணைத்தவன் மறு கையால் சிதாராவின் பின்னங்கழுத்தை மெதுவாக தடவி விட சிதாராவின் காது மடல் சிவந்தது.

தன் விரலால் சிதாராவின் தாடையை உயர்த்தி தன் முகம் நோக்க வைத்த ஆர்யான் அவள் கண்களை ஆழமாக நோக்கி, "யூ ஆர் தி பெஸ்ட் திங் தெட் எவர் ஹெப்பன்ட் டு மீ மினி..." என்றான்.

சிதாரா அவனைப் பார்த்து மெலிதாகப் புன்னகைக்க ஆர்யானுக்கோ அவள் முன்பை விட பல மடங்கு அழகாக இருப்பது போல் தோன்றியது.

சிதாராவின் கண்களில் தனக்கான காதலைக் கண்டான் ஆர்யான்.

வார்த்தைகள் ஏதுமின்றி இருவரின் பார்வையுமே தம் உணர்வுகளை வெளிப்படுத்தின.

காற்று கூட உள்ளே நுழைய முடியாத அளவு சிதாராவை தன்னுடன் இறுக்கி அணைத்த ஆர்யான், "கடவுள் எனக்குனு கொடுத்த வரம் நீ... உன் கூட வாழ என்ன வேணாலும் பண்ண தயாரா இருக்கேன் நான்... ஐ லவ் யூ மினி..." என்றவன் சிதாராவைக் கைகளில் ஏந்திக் கொண்டு கட்டிலை நோக்கி சென்றான்.

ஈருடல் ஈருயிராக இருந்தவர்கள் ஒருவருக்கொருவர் தாமே ஆடையாகவும் துணையாகவும் மாறி ஓருடல் ஓருயிராக மாறினர்.

அவ் இரவு ஆர்யான், சிதாரா இருவருக்கும் இல்லறம் நல்லறமாக இனிதே ஆரம்பமானது.
 

Nuha Maryam

Moderator
Epilogue

இரண்டு வருடங்களுக்குப் பின்

பூஞ்சோலைக் கிராமம் முழுவதுமே ஒரே கொண்டாட்டமயமாக இருந்தது.

அன்று தான் ஆதர்ஷ் - லாவண்யா, அபினவ் - அக்ஷரா ஜோடிகளுக்கு திருமணம்.

சகோதரர்கள் இருவருக்கும் ஒரே மேடையிலே திருமணத்தை நடத்த வீட்டினர் முடிவு செய்திருந்தனர்.

பெண் வீட்டினருக்கும் அதில் சம்மதம் என்பதால் அவசர அவசரமாக திருமணத்தை ஏற்பாடு செய்திருந்தனர்.

ஊர்த் தலைவர் வீட்டுத் திருமணம் என்பதால் மொத்த ஊருமே ராஜேந்திரனின் வீட்டில் குழுமி இருந்தனர்.

தங்கள் வீட்டுத் திருமணம் போல மகிழ்ச்சியாக ஒவ்வொருவரும் மாறி மாறி வேலை செய்தனர்.

பூஞ்சோலைக் கிராமத்திலே திருமணத்தை நடத்த முடிவு செய்திருந்ததால் மணமகள்கள் ராஜேந்திரன் வீட்டில் தயாராகிக் கொண்டிருக்க அவர்களின் வீட்டிலிருந்து ஒரு தெரு தள்ளி இன்னொரு வீட்டில் மணமகன்கள் தயாராகிக் கொண்டிருந்தனர்.

திருமணத்திற்கு முந்தின மற்றைய சடங்குகளை செய்ய இலகுவாக இருக்கும் என்று தான் ராஜேந்திரன் அதற்கு ஏற்பாடு செய்திருந்தார்.

லாவண்யாவின் தாய் ஆண்டாளுக்கு உதவியாக அகிலா இருக்க வேஷ்டி சட்டை அணிந்து மிடுக்காக அங்கு வந்த ஆர்யான்,

"மினி எங்க மாம்... ஆதர்ஷ் வீட்டிலிருந்து வந்த நேரத்திலிருந்து நானும் தேடிட்டு இருக்கேன்... கண்ணுல கூட பட மாட்டேங்குறா..." என அகிலாவிடம் கேட்டான்.

அகிலா, "அதை ஏன்டா கேக்குற... ஃப்ரெண்ட்ஸோட மேரேஜ்னு சொல்லி கல்யாண வேலை எல்லாம் ஓடி ஆடி செஞ்சிட்டு இருக்கா... காலையில இருந்தே சித்து ரொம்ப டல்லா இருக்கா... ரெஸ்ட் எடுக்க சொன்னாலும் கேக்க மாட்டேங்குறா... லாவண்யா ரூம்ல தான் இருக்கான்னு நெனக்கிறேன்.. அவங்கள தயார் பண்ணிட்டு வரேன்னு போனா... நீ போய் கொஞ்சம் பாரு..." என்க,

ஆர்யான், "சரி மாம்.. நான் போய் பார்க்குறேன்.. இன்னும் கொஞ்சம் நேரத்துல மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வந்திடுவாங்க... சீக்கிரம் எல்லாம் ரெடி பண்ணி வைங்க..." என்றவன் சிதாராவைத் தேடிச் சென்றான்.

லாவண்யா மற்றும் அக்ஷரா இருந்த அறைக்குச் சென்றவன் வெளியே நின்று கதவைத் தட்ட,

கதவைத் திறந்த அக்ஷரா ஆர்யானைக் கண்டு, "என்னண்ணா இங்க நிக்கிறீங்க... ஏதாவது வேணுமா..." என்க,

"ஆஹ்.. அது ஒன்னுமில்லம்மா... மினிய தேடித்தான் வந்தேன்... அவள் இருந்தா கொஞ்சம் கூப்பிட முடியுமா.." எனக் கேட்டான்.

அக்ஷரா, "எங்கள ரெடி பண்ண பார்லர்ல இருந்து ஆட்கள் வந்ததுமே சித்து வெளிய போய்ட்டான்னா... இங்க எங்கயாவது தான் இருப்பா.. நான் வேணா வரவா.." என்க,

"இல்லம்மா... நான் போய் பார்க்குறேன்... நீங்க ரெண்டு பேரும் ரெடியாகி இருங்க.." என்று விட்டு சென்றான்.

_______________________________________________

மணமகன் அறையில், "டேய் ஆது... இந்த வேஷ்டி இடுப்புல நிக்கவே மாட்டேங்குதுடா... யாருடா இதெல்லாம் கண்டு பிடிச்சாங்க... பேசாம நான் ஜீன்ஸ் போட்டுக்கவா...." என அபினவ் வேஷ்டியை கையில் வைத்து திண்டாடிக் கொண்டிருக்க,

அவன் தலையில் தட்டிய ஆதர்ஷ், "குடு அதை இங்க... " என அபினவ்வுக்கு வேஷ்டியை கட்டி விட்டவன்,

"சிட்டி போய் படிச்சன்னு சொல்லி நம்ம பண்பாட மறந்துட கூடாதுடா... எங்க இருந்தாலும் அது படி நடக்கனும்.." என்க பூம் பூம் மாடு போல் தலையாட்டினான் அபினவ்.

அபினவ், "ஆர்யான் எங்கடா..." எனக் கேட்கவும்,

"எங்கள பின்னாடி வர சொல்லிட்டு காலைலயே கிளம்பிட்டான் அவன்..." எனப் பதிலளித்தான் ஆதர்ஷ்.

பின், "ஆமா.. பிரணவ் இன்னெக்கி வரேன்னு ஏதாவது உன் கிட்ட சொன்னானா.." என ஆதர்ஷ் கேட்கவும்,

"தெரியலடா... முடியாதுன்னு தான் சொல்லிட்டு இருந்தான்... நான் தான் கம்பிள் பண்ணி வர சொன்னேன்... பட் கேக்கவே இல்ல..‌ அப்புறம் ஆர்யான் பேசி வர சொன்னதும் பார்க்கலாம்னு சொன்னான்... எனக்கு என்னவோ அவன் வர மாட்டான்னு தான் தோணுது... நானும் அவன எதுவும் சொல்லல... இப்ப தான் அவன் செஞ்ச தப்ப உணர்ந்து திருந்தி இருக்கான்... சித்துவ கண்டால் அவனுக்கும் குற்றவுணர்ச்சியா இருக்கும்... சித்துக்கும் வீணா மனசு கஷ்டமாகிடும்... அவன் வராம இருக்குறது தான்டா எல்லாருக்கும் நல்லது..." எனப் பதிலளித்தான் அபினவ்.

சற்று நேரத்தில் அனைவரும் கிளம்பி ராஜேந்திரன் வீட்டுக்கு சென்றனர்.

அங்கு தான் திருமணம் நடக்க இருந்தது.

செல்லும் வழியெல்லாம் இருவரும் தத்தம் துணைவியருடன் கழிக்கப் போகும் நாட்களை எண்ணி கனவில் மூழ்கினர்.

_______________________________________________

ஆர்யான் சிதாராவைத் தேடிச் செல்ல அதற்குள் சங்கர் அவனை அழைக்கவும் அவரிடம் சென்றார்.

இங்கு சிதாரா மாடியிலிருந்த அறையொன்றில் சோர்வாகப் படுத்திருந்தாள்.

காலையிலிருந்தே அவளுக்கு தலைசுற்றலும் வாந்தியுமாக இருக்க ஏதோ உண்ட உணவு தான் உடலுக்கு ஒத்துக் கொள்ளவில்லை என நினைத்தாள்.

வீட்டில் யாரிடமாவது கூறினால் அவர்களும் அவளை நினைத்து வீணாக கவலைப்படுவார்கள் என யாரிடமும் கூறவில்லை.

மூன்று நாட்களுக்கு முன் பூஞ்சோலைக் கிராமத்துக்கு வந்த நாளே சிதாராவுக்கு தோழிகளுடன் நேரம் செலவழிக்க கூறிவிட்டு ஆதர்ஷ் மற்றும் அபினவ்வுடன் சென்று தங்கிக் கொண்டான் ஆர்யான்.

அன்று காலையிலிருந்தே தன்னவளின் நினைவு அதிகமாக வாட்ட ஆதர்ஷிடம் சொல்லிக் கொண்டு உடனே கிளம்பி வந்திருந்தான் ஆர்யான்.

ஆனால் அவன் வந்தது சிதாராவுக்குத் தெரியாது.

லாவண்யாவையும் அக்ஷராவையும் தானே தயார் செய்வதாக அகிலாவிடம் கூறியவள் அவர்களின் அறைக்குச் செல்ல சற்று நேரத்தில் பார்லர் பெண்மணிகள் வரவும் அங்கிருந்து வெளியே வந்தாள்.

உடல் சோர்வாக இருக்கவும் சற்று தூங்கி எழும்ப நினைத்தவள் யாரும் தொந்தரவு பண்ணாமல் இருக்க மாடியிலிருந்த அறைக்குச் சென்றாள்.

படுத்துக் கொண்டிருந்தவளுக்கு மீண்டும் வாந்தி வருவது போல் இருக்கவும் அவசரமாக குளியலறை நுழைந்தாள்.

குடலைப் பிரட்டிப் போடுவது போல் வாந்தி எடுத்தவள் சோர்வாக கட்டிலில் வந்தமர்ந்தாள்.

அப்போது தான் தனக்கு நாள் தள்ளிச் சென்றுள்ளது நினைவு வரவும் மகிழ்ச்சியில் சிதாராவின் கண்கள் கலங்கின.

தன்னவனின் உயிர் தன் வயிற்றில் வளர்கிறது என நினைக்கவே சிதாராவுக்கு உடல் சிலிர்த்தது.

தங்கள் காதலுக்கு கிடைத்த பரிசு என மெதுவாக தன் வயிற்றைத் தடவிப் பார்த்தாள்.

அவள் நினைவில் கடைசியாக ஆர்யானுடன் நியுயார்க்கில் கழித்த நேரங்கள் வந்து சென்றன.

_______________________________________________

சிதாரா தன் காதலை ஆர்யானிடம் வெளிப்படுத்திய பின் அவர்களின் வாழ்வில் மகிழ்ச்சிக்கு குறைவே இருக்கவில்லை.

ஒருவருக்கொருவர் காதலை அள்ளிக் கொடுத்தனர்.

சிதாராவின் படிப்பு முடியும் வரை குழந்தை வேண்டாம்‌ என்று ஆர்யான் முடிவு செய்ய அதை கடைபிடிக்கத்தான் அவன் அரும்பாடு பட்டான்.

சிதாரா வேண்டுமென்றே அடிக்கடி ஆர்யானை சீண்டிக் கொண்டிருக்க அதற்கு பதிலாக ஆர்யான் அவளின் இதழ்களுக்கு தண்டனை கொடுப்பான்.

நாட்கள் வேகமாக நகர சரியாக ஒன்றரை வருடத்தில் சிதாராவின் படிப்பு முடிந்து பட்டம் பெற்றாள்.

ஆர்யான் இந்தியாவில் சொந்தமாக கம்பனி ஆரம்பித்து நடத்த முடிவு செய்ய சிதாரா ரஞ்சித்திற்கு உதவியாக அவர் கம்பனியில் வேலை செய்ய விரும்பினாள்.

இதில் ரஞ்சித்திற்கு ஏக மகிழ்ச்சி.

தனக்குப் பின் ஆர்யானைக் கம்பனி பொறுப்பேற்க வைக்க அவர் நினைத்திருந்த போது தான் தனியாக தொழில் தொடங்குவதாக ஆர்யான் கூறினான்.

ஆர்யான் இல்லாவிடினும் தன் மருமகள் தனக்குப் பின் கம்பனியைப் பொறுப்பேற்று வழி நடத்துவாள் என அவருக்கு நம்பிக்கை பிறந்தது.

சிதாராவின் பட்டமளிப்பு விழா முடிந்து மறுநாளே இருவரும் இந்தியா செல்ல முடிவெடுத்தனர்.

விழா முடிந்து களைப்பாக சிதாரா வீட்டினுள் நுழைய அவள் பின்னே காரைப் பார்க் பண்ணி விட்டு வந்த ஆர்யான் சிதாராவை அலேக்காக கைகளில் ஏந்திக் கொண்டான்.

அதிர்ந்த சிதாரா, "டேய் ஜிராஃபி... என்னடா பண்ற... கீழ இறக்கி விடுடா... நீ எனக்கு இனிமே ட்ரடிஷனல் ட்ரஸ் போட சொன்னதும் கேட்டது தப்பா போச்சு... " என ஆர்யானின் தோள்களில் அடித்தாள்.

சிதாராவின் இதழைக் கொய்து அவள் பேச்சை நிறுத்தியவன் அறையினுள் நுழைந்த பின் தான் விடுவித்தான்.

சிதாராவை மஞ்சத்தில் கிடத்தியவன் அவளை நெருங்க,

சிதாரா, "ஜி..ஜிரா.. ஜிராஃபி... என்ன.. பண்ற..." என்க,

அவள் வாயை தன் கையால் மூடி சிதாராவின் பேச்சை நிறுத்தியவன் அவள் கண்களைப் பார்த்து, "ப்ளீஸ் மினி..." என்றான்.

ஆர்யானின் கண்களில் காதலைத் தாண்டியும் தெரிந்த ஏக்கத்தைக் கண்டு கொண்ட சிதாரா ஆர்யானின் கரத்தை விலக்கி விட்டு அவனை அணைத்துக் கொண்டாள்.

அதன் பின் அங்கு பேச்சுக்கு இடமிருக்கவில்லை.

ஆர்யான் சிதாராவின் மேனியில் தன் தேடலைத் தொடர சிதாராவும் தன்னவனுக்கு எல்லாவற்றிலும் இசைந்து போனாள்.

அதன் பின் இந்தியா வந்து ஒரு வாரத்திலே ரஞ்சித்தின் உதவியுடன் ஆதர்ஷ் மற்றும் அபினவ்வுடன் இணைந்து சொந்தமாக ட்ரிப்பிள் ஏ க்ரூப் ஆஃப் கம்பனீஸ் (AAA GROUPS OF COMPANIES) ஐ ஆரம்பித்தான் ஆர்யான்.

மூவரின் முயற்சியாலும் அவர்களின் கம்பனி வெகு விரைவில் வளர்ச்சி அடைந்தன.
_______________________________________________

அன்றைய நாளின் நினைவில் இருந்த சிதாராவின் முகம் வெட்கத்தால் சிவந்தது.

தன்னவனிடம் இதனைத் தெரிவிக்க வேகமாக எழுந்து கொண்டவள் இன்னும் இரண்டு நாட்களில் ஆர்யானின் பிறந்தநாள் வர இருப்பது நினைவு வந்ததும் அன்றே அவனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கலாம் என முடிவு செய்தாள்.

பின் திருமணத்துக்காக தன்னை சற்று அலங்கரித்துக் கொண்டு கீழே சென்றாள் சிதாரா.

சிதாரா இறங்கி கீழே செல்லும் போதே அவள் முன் ஆர்யான் வந்து நின்றான்.

ஆர்யான், "எங்க போன மினி... உன்ன நான் எங்க எல்லாம் தேடினேன் தெரியுமா... காலைல இருந்தே உன் ஃபேஸ் டல்லா இருந்ததா மாம் சொன்னாங்க... என்னாச்சு... நீ நல்லா இருக்கேல்ல..." என்றான் பதட்டமாக.

சிதாரா, "அ.. அது ஒன்னுமில்ல ரயன்... நான் நல்லா தான் இருக்கேன்... நீ சும்மா டென்ஷன் ஆகாதே... வேலை செஞ்சது கொஞ்சம் டயர்டா இருந்தது... மத்தபடி எதுவுமில்ல... பாரு எப்படி வேர்த்து ஊத்தி இருக்குன்னு... சாரி..‌ரொம்ப பயந்துட்டியா..." என தன் சேலை முந்தானையால் ஆர்யானின் முகத்தைத் துடைத்தபடி கேட்டாள்.

ஆர்யான், "என் கிட்ட சொல்லாம எங்கயும் போகாதே மினி... ஐ டோன்ட் வான்ட் டு லொஸ் யூ.." என சிதாராவை அணைத்துக் கொண்டான்.

ஆர்யானின் முதுகை ஆறுதலாக வருடி விட்டபடி சிதாரா, "ஐம் ஓக்கே கண்மணி..." என்றாள்.

ஆதித்யா சிதாராவைக் கடத்திய நிகழ்வின் பின் ஆர்யானின் காதலால் சிதாரா அதன் தாக்கத்திலிருந்து மொத்தமாக வெளி வந்திருந்தாள்.

அவளின் மனதிலிருந்த பாரங்கள் அனைத்தும் மறைந்து அங்கு ஆர்யானும் அவனின் காதலும் மட்டுமே நிறைந்து இருந்தது.

ஆர்யான் சிதாராவுக்கு ஆறுதலாக இருந்தாலும் இன்றளவிலும் அந் நிகழ்வு அவன் மனதை விட்டு நீங்கவில்லை.

எங்கே மீண்டும் சிதாராவை இழந்து விடுவோமோ என்ற பயத்தில் எப்போதும் சிதாராவைத் தன் பார்வைக்கு எட்டிய தூரத்திலே வைத்திருப்பான்.

சிதாரா கூட அதைக் கூறி ஆர்யானைக் கேலி செய்வாள்.

ஆர்யான் அவளின் பேச்சைப் புறக்கணித்து விட்டு, "உனக்கென்ன... நீ சொல்லுவ... உனக்கு தான் எதுவுமே தெரியாம தூங்கினியே... நான் தான் நீ கண் முழிக்கிற வரைக்கும் உசுர கைல பிடிச்சிக்கிட்டு இருந்தேன்..." என்பான்.

ஆர்யான் தன் மீது வைத்துள்ள காதலில் சிதாரா திக்குமுக்காடி விடுவாள்.

சிதாரா ஆர்யானின் அணைப்பில் இருக்க அவர்களுக்கு அருகில் திடீரென இருமல் சத்தமொன்று கேட்கவும் இருவரும் அவசரமாக விலகினர்.

ஆதர்ஷ் தான் அங்கு வந்திருந்தான்.

ஆதர்ஷ் இருவரையும் கேலியாகப் பார்த்தபடி, "இன்னைக்கு எனக்கும் அபினவ்வுக்கும் தான் கல்யாணம்... ரெண்டு பேருக்கும் அது ஞாபகத்துல இருக்கும்னு நெனக்கிறேன்..." என்றான்.

ஆர்யான் அவனைப் பார்த்து இளித்து வைக்க,

"நா.. நான் வனி ரூமுக்கு போறேன்.." என அவசரமாக அங்கிருந்து தப்பி ஓடினாள் சிதாரா.

ஆதர்ஷுக்கு தன் செல்லத் தங்கையை இப்படி மகிழ்ச்சியாகக் காண மனநிறைவாக இருந்தது.

ஆர்யானின் தோளில் தட்டி சிரித்தபடி அவனை அங்கிருந்து அழைத்துச் சென்றான் ஆதர்ஷ்.

சில மணிநேரத்தில் சுற்றார் முன்னிலையில் அவர்கள் ஆசிர்வாதத்துடன் ஆதர்ஷ் லாவண்யா கழுத்திலும் அபினவ் அக்ஷராவின் கழுத்திலும் ஒருவர் பின் ஒருவராக மாங்கல்யத்தை கட்டி அவர்களை தம்மில் சரிபாதி ஆக்கிக் கொண்டனர்.

சிதாரா தான் நாத்தனார் இடத்திலிருந்து தன் தோழிகள் இருவருக்கும் மூன்றாம் முடிச்சை இட்டாள்.

அனைவரும் அர்ச்சதை தூவி தம்பதியினரை ஆசிர்வதித்தனர்.

ஆர்யான் ஒரு கரத்தால் தன் மனையாளை பக்கவாட்டில் அணைத்துக் கொள்ள அவன் முகம் பார்த்து புன்னகைத்தாள் சிதாரா.

சற்று நேரத்தில் மணமக்களை வேந்தன்யபுறத்துக்கு அழைத்துச் சென்றனர்.

மற்ற சடங்குகளை அங்கே முடிக்க எப்போதும் தோழிகளுடனே இருந்த சிதாராவை ஒரு வழியாகத் தனியே பிடித்துக் கொண்ட ஆர்யான்,

"மினி... நாம வேணா சீக்கிரமா இங்கிருந்து போயிடலாமா.." என்க அவனைக் குழப்பமாகப் பார்த்தாள் சிதாரா.

சிதாரா, "என்னாச்சு ஜிராஃபி... ஏன் போலாம்னு சொல்ற..." எனக் கேட்க,

"நம்ம மேரேஜ் அவசர அவசரமா நடந்து போச்சி... இதெல்லாம் பார்க்க கிட்ட உனக்கும் இப்படியெல்லாம் கல்யாணம் நடந்திருந்தா நல்லா இருந்திருக்கும்னு கவலையா இருக்கும்ல.." என்றான் ஆர்யான்.

இடுப்பில் கையூன்றி ஆர்யானை முறைத்த சிதாரா எக்கி அவன் தலையில் குட்டி விட்டு, "நான் சொன்னேனா எனக்கு கவலையா இருக்குன்னு... லூசு... லூசு..." எனத் திட்ட,

அவளைப் பாவமாய் பார்த்த ஆர்யான், "என்னடி புருஷன்னு பார்க்காம தலைல குட்டிட்டு இப்போ லூசுன்னு வேற திட்ற... புருஷன்னு கொஞ்சம் கூட மரியாதையே இல்ல..." என்றான்.

சிதாரா, "பின்ன.. நீ லூசு மாதிரி பேசினா உன்ன திட்டாம கொஞ்சுவாங்களா..." என்றவள் ஆர்யான் சோகமாக முகத்தை வைத்துக் கொள்ளவும்,

"மேரேஜ் க்ரேன்டா நடந்ததா இல்லையான்னு எனக்கு பிரச்சினையே இல்ல ஜிராஃபி... அதான் நீ என் கூட இருக்கேல்ல... அது போதும் எனக்கு..." என்றாள் புன்னகையுடன்.

லாவண்யாவையும் அக்ஷராவையும் அவர்களது புகுந்த வீட்டில் விட்டு விட்டு அனைவரும் சென்றனர்.

ராஜேந்திரன் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் வேலை இருக்கிறது என ரஞ்சித், அகிலா, ஆர்யான், சிதாரா நால்வருமே இரவோடு இரவாக சென்னை கிளம்பினர்.

சங்கரும் தேவியும் ஒரு வாரத்துக்கு பூஞ்சோலைக் கிராமத்திலுள்ள தங்கள் சொந்த வீட்டில் தங்கி விட்டு வருவதாகக் கூறினர்.

சில மணி நேரத்திலே ஆர்யானின் வீட்டை அடைய அகிலாவும் ரஞ்சித்தும் களைப்பில் உடனே உறங்கி விட்டனர்.

ஆர்யான் கால் ஒன்று பேசி விட்டு வர சிதாரா அறையில் இருக்கவில்லை.

எங்கே என்று பார்க்க குளியலறையில் சிதாராவின் சத்தம் கேட்டு ஓடிச் சென்று பார்க்க சிதாரா வாஷ்பேசனில் வாந்தி எடுத்துக் கொண்டிருந்தாள்.

ஆர்யான் சிதாராவின் தலையைப் பிடித்துக் கொண்டவன், "என்னாச்சு மினி... ஏன் வாமிட் பண்ற..." என்றான் கவலையாக.

சிதாரா முகத்தைக் கழுவிக் கொண்டு நிமிர்ந்தவள், "சாப்பாடு செட் ஆகல போல ஜிராஃபி... அதோட ட்ராவல் பண்ணது..‌ அதான்.." என சமாளிக்க,

"ஆர் யூ ஷூர்... வேற எதுவும் இல்லல்ல... வேணும்னா ஹாஸ்பிடல் போலாமா..." எனக் கேட்டான் ஆர்யான்.

அவனைப் பார்த்து சிரித்த சிதாரா, "என்ன ஜிராஃபி நீ... இதுக்கெல்லாம் யாராவது ஹாஸ்பிடல் போவாங்களா... எனக்கு எதுவும் இல்ல..." என்றாள்.

ஆனால் ஆர்யானின் மனம் சமாதானம் ஆகவில்லை.

சிதாராவின் கைப்பிடித்து வெளியே அழைத்து வந்தவன் அறை விளக்கை அணைத்து விட்டு சிதாராவை அணைத்துக் கொண்டு உறங்கினான்.

மறுநாள் காலையிலேயே ஆர்யான் ஆஃபீஸ் கிளம்பிச் சென்று விட அகிலாவிற்கு சந்தேகம் வராமல் இருக்க பாதி நேரம் அறையிலேயே இருந்தாள் சிதாரா.

வேலை காரணமாக ஆர்யான் வீட்டிற்கு வரும் போது நன்றாகவே இரவாகி விட்டது.

வீட்டினுள் எந்த சத்தமும் கேட்காததால் நேராக தன் அறைக்குச் செல்ல அறை இருட்டாக இருந்தது.

"மினி.." என அழைத்துக் கொண்டு அறை விளக்கை ஒளிர விட்டவன் சிதாரா அறையில் இல்லாததைக் கண்டு புருவம் சுருக்கினான்.

கட்டிலின் மீது ஏதோ கவர் இருக்கவும் எடுத்துப் பார்க்க அதில் ஆர்யானுக்கு ஒரு உடை இருந்தது.

அதன் மேலே நோட் ஒன்றில், "குளிச்சிட்டு இந்த ட்ரஸ்ஸ போட்டுக்கிட்டு மாடிக்கு வா ஜிராஃபி.." என்றிருக்கவும் புன்னகைத்த ஆர்யான் குளித்து விட்டு சிதாரா வைத்திருந்த உடையைப் போட்டுக் கொண்டு மாடிக்குச் சென்றான்.

அவ்விடம் முழுவதும் பல வர்ண விளக்குகள் ஒளிர விட்டு பூக்களாலும் பலூன்களாலும் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

அதனை ரசித்து விட்டு கண்களால் சிதாராவைத் தேடிக் கொண்டு முன்னேறினான் ஆர்யான்.

நடுவில் சிறிய வட்ட மேசையொன்றிருக்க ஆர்யான் அதனை நோக்கி செல்லப் பார்க்க திடீரென, "ஸ்டாப் என்ட் க்ளோஸ் யுவர் ஐஸ்..." என எங்கிருந்தோ சிதாராவின் குரல் கேட்கவும் அங்கேயே நின்று கண்ணை மூடிக் கொண்டான்.

"நான் சொல்லும் வர கண்ண திறக்க கூடாது ஜிராஃபி..." என சிதாராவின் குரல் வரவும் சரி எனப் புன்னகைத்தான் ஆர்யான்.

சிதாரா, "அப்படியே கீழே குனிஞ்சு அந்த சின்ன பாக்ஸ எடு.." என்க அதன்படி செய்தான்.

"இப்போ மூணு ஸ்டெப் முன்னாடி போ..." என்கவும் கண்ணை மூடிக்கொண்டே மெதுவாக அடியெடுத்து வைத்தான்.

"கண்ண தெறக்காம கைல இருக்குற கிஃப்ட பிரி ஜிராஃபி.." என சிதாரா குரல் கொடுக்க அந்த சிறிய பரிசைப் பிரித்தான் ஆர்யான்.

"இப்போ கண்ண திற ஜிராஃபி..." என்கவும் கண்களைத் திறந்த ஆர்யான் தன் முன்னிருந்த மேசையில் வைக்கப்பட்டிருந்த கேக்கையும் தன் கையிலிருந்த பாக்ஸையுமே சில நொடிகள் மாற்றி மாற்றிப் பார்த்தான்.

ஆர்யானின் முன் வைக்கப்பட்டிருந்த கேக்கில், "Happy Birthday Appa.." என எழுதி இருந்தது.

அவன் கையில் இரண்டு சிவப்பு நிற கோட்டுடன் பிரெக்னன்சி கிட் இருந்தது.

கண்கள் கலங்க அதிர்ச்சியில் உறைந்து போயிருந்த ஆர்யானின் முன் வந்து நின்ற சிதாரா அவன் மார்பில் சாய்ந்து கொண்டு தன் சேலையை சற்று விலக்கி விட்டு ஆர்யானின் கரத்தை எடுத்து அவள் வயிற்றில் வைத்தாள்.

சிதாரா ஆர்யானின் கரத்தை எடுத்து அவள் வயிற்றில் வைக்கவும் ஆர்யானின் கரம் நடுங்கியது.

"மி...மினி.... நான்.... அப்...அப்பா..." ஆர்யானுக்கு வார்த்தைகள் வர மறுத்தன.

சிதாரா தன் வயிற்றின் மீதிருந்த ஆர்யானின் கரத்தை அழுத்தியவள் புன்னகையுடன் அவன் முகம் பார்த்து,

"ஆமா ரயன்... நீ அப்பா ஆக போற... இன்னும் பத்து மாசத்துல நமக்கு குட்டி பாப்பா வரப் போகுது..." என்க,

மகிழ்ச்சியில் கன்னத்தைத் தாண்டி கண்ணீர் வடிந்தோட சிதாராவின் முகத்தை ஏந்தி முத்த மழை பொழிந்தான்.

அவள் நெற்றியில் அழுத்தமாக இதழ் பதித்தவன், "நான்... நான் அப்பா ஆக போறேன் மினி... அப்பா... நான் எவ்வளவு சந்தோஷமா இருக்கேன் தெரியுமா... என் பர்த்டேக்கு கிடைச்ச பெஸ்ட் கிஃப்ட் டி..." என்ற ஆர்யான் சந்தோஷத்தில் சிதாராவின் இடையைப் பிடித்து தூக்கி சுற்றினான்.

சிதாரா பயந்து, "ஏய்... விடு ரயன்... பயமா இருக்கு... தலை சுத்துது..." என்க அவளை இறக்கி விட்ட ஆர்யான் காற்று கூட புகா வண்ணம் அணைத்துக் கொண்டான்.

சில நொடிகள் அவன் அணைப்பில் நின்ற சிதாரா ஆர்யானின் அணைப்பு மேலும் இறுகவும், "ரயன்... பாப்பா..." என்றாள் மெதுவாக.

"ஓஹ்.. ஆமால.. சாரி மினி..." என்ற ஆர்யான் சிதாராவின் அருகில் மண்டியிட்டான்.

அவள் வயிற்றுப் பகுதியில் இருந்த சேலையை விலக்கியவன் சிதாராவின் வயிற்றைத் தடவி தன் உயிரை உணர முயன்றான்.

ஆர்யானின் கண்கள் கலங்கி விட சிதாரா அவன் தலையை வருடினாள்.

பின் சிதாராவின் வயிற்றில் முகம் பதித்து அவளை அணைத்துக் கொண்டான் ஆர்யான்.

சிதாராவின் உடல் சிலிர்த்தது.

சற்று நேரத்தில் தன்னை சமன்படுத்திக் கொண்ட ஆர்யான் சிதாராவின் வயிற்றில் அழுத்தமாக முத்தமிட்டு விட்டு எழுந்தான்.

சிதாரா, "ஓஹ்... உன் குழந்தைய மட்டும் தான் கிஸ் பண்ணுவியா..." என ஆர்யானை முறைத்தபடி கேட்டாள்.

"ஏன்டி... முதல்ல உன்ன தானே கிஸ் பண்ணேன்... குழந்தை உன் வயிற்றுல தானே வளருது... அப்போ கூட உன்ன தானே கிஸ் பண்ணி இருக்கேன்..." என்றான் அதிர்ச்சியாக.

"ஆமா ஆமா... இப்பவே இவ்வளவு அலுத்துக்குற... குழந்தை பிறந்திடுச்சின்னா என்னை எல்லாம் கண்டுக்கவே மாட்ட..." என்றாள் சிதாரா.

சிதாராவின் நெற்றியோடு நெற்றி முட்டிய ஆர்யான், "நமக்கு எத்தனை குழந்தை பிறந்தாலும் நீ தான் என்னோட முதல் குழந்தை... உன் இடத்த யாருக்குமே கொடுக்க மாட்டேன் நான்... அதே போல உன் மேல நான் வெச்சி இருக்குற அன்பும் ஒவ்வொரு நொடியும் அதிகரிச்சிட்டே போகுமே தவிர ஒரு நாளும் குறையாது..." என்றான் புன்னகையுடன்.

பின் இருவரும் சேர்ந்து கேக் வெட்டி ஆர்யானின் பிறந்தநாளைக் கொண்டாடினர்.

மறுநாள் ஆர்யான் அனைவரிடமும் சிதாரா கர்ப்பமாக இருப்பதைச் சொல்லவும் அகிலாவும் ரஞ்சித்தும் மகிழ்ச்சியின் உச்சத்துக்கே சென்றனர்.

ஒரு வாரம் தங்கி விட்டு வருவதாகக் கூறிய சங்கரும் தேவியும் உடனேயே கிளம்பி சிதாராவைக் காண வந்தனர்.

சிதாராவை அணைத்துக் கொண்ட சங்கர், "இப்ப தான் உன்ன முதல் தடவ என் கைல தூக்கினது போல இருக்கு சித்தும்மா... ஆனா இன்னைக்கு நீயே ஒரு குழந்தைக்கு தாயாக போற..." என்றார்.

தேவி, "எப்போவும் என் கிட்ட வம்பு வளர்த்துட்டே இருப்பேல்ல... என் பேரப்புள்ள பிறந்ததும் எல்லாத்துக்கும் சேர்த்து உன்ன வெச்சி செய்யும் பாரு சித்து..." என்க அனைவரும் சிரித்தனர்.

சிதாரா பாவமாக முகத்தை வைத்துக் கொண்டாள்.

அதன் பின் வந்த நாட்களில் அகிலாவும் ரஞ்சித்தும் சிதாராவை எந்தவொரு வேலையையும் செய்ய விடவில்லை.

ஆர்யான் ஒரு படி மேலேயே சென்று சிதாராவின் கால்கள் தரையில் படக் கூட அனுமதிக்கவில்லை.

சிதாரா ஏதாவது மறுத்துக் கூறினால் வேண்டுமென்றே, "நான் ஒன்னும் உனக்காக பண்ணல... என் குழந்தை கஷ்டப்படும்னு தான் பண்றேன்.." என சீண்டுவான் ஆர்யான்.

அதற்கு சிதாரா கோவித்துக் கொண்டு சென்றால் அவள் பின்னேயே சென்று கொஞ்சிக் கெஞ்சி சமாதானப்படுத்துவான்.

சிதாராவின் முகம் கொஞ்சம் சுருங்கினால் கூட ஆர்யானின் மனம் வலிக்கும்.

எல்லா விதத்திலும் சிதாராவை அன்போடும் அரவணைப்போடும் பார்த்துக் கொண்டான் ஆர்யான்.

நாட்கள் மாதங்களாக வேகமாகக் கடக்க ஏழாவது மாதத்தில் ஊரையே கூட்டி கோலாகலமாக வளைகாப்பை நடத்தினர்.

பின் சங்கரும் தேவியும் சிதாராவை தங்கள் வீட்டுக்கு அழைத்துச் செல்லப் பார்க்க ஆர்யானை விட்டு வர மறுத்தாள் சிதாரா.

வேறு வழியின்றி ஆர்யானும் சிதாராவுடன் அவர்களது வீட்டிற்கு சென்றான்.

அன்று இரவு சிதாரா தன் கையிலிருந்த வளையல்களை ரசித்தபடி இருக்க அவளுக்கு பால் கொண்டு வந்த ஆர்யான் அதை சிதாராவிடம் கொடுத்து விட்டு அவள் கால்களை எடுத்து தன் மடியில் வைத்துக் கொண்டான்.

பின் வீங்கியிருந்த அவள் கால்களை மெதுவாகப் பிடித்து விட,

சிதாரா, "என்ன பண்றடா.. இதுவும் உன் குழந்தைக்காக தானா..." எனப் புன்னகையுடன் கேட்டாள்.

சிதாராவின் காலில் முத்தமிட்ட ஆர்யான், "இல்ல... இது என் பேபி டாலுக்காக... என் குழந்தைய பெத்தெடுக்க தான் அவள் இவ்வளவு கஷ்டப்படுறாள்... " என்றான்.

ஆர்யானின் மடியிலிருந்து தன் காலை எடுத்த சிதாரா அவன் மடியில் அமர்ந்து ஆர்யானை அணைத்துக்கொண்டு, "லவ் யூ ரயன்... நீ என் லைஃப்ல கிடைக்க நான் ரொம்ப கொடுத்து வெச்சிருக்கனும்..." என்க,

"ம்ஹ்ம்... இப்படி ஒரு தேவதை கிடைக்க நான் தான் அதிஷ்டம் பண்ணி இருக்கனும்.." என்றான் ஆர்யான்.

சிதாராவின் பிரசவ நாள் நெருங்க நெருங்க ஆர்யானுக்கு பயமாக இருந்தது.

சிதாரா தான் அவனை சமாதானப்படுத்துவாள்.

அன்று ஆர்யான் லேப்டாப்பில் ஏதோ வேலையாக இருக்கவும் சிதாரா வர அதனை மூடி வைத்தவன் சிதாராவின் பக்கம் கரம் நீட்டி அழைத்தான்.

சிதாரா வந்து அவன் மடியில் அமரவும், "என்னாச்சு மினி... ஏன் டல்லா இருக்க... ஏதாவது வலி இருக்கா... ஹாஸ்பிடல் போலாமா..." எனப் பதட்டமாகக் கேட்க,

"இல்ல.. எனக்கு என் ஜிராஃபி கூட பேசணும் போல இருக்கு... இந்த ரயன் கூட இல்ல.." என்க,

அவளைப் பார்த்து புன்னகைத்த ஆர்யான், "சரி சொல்லு... உன் ஜிராஃபி கூட என்ன பேசணும்.." எனக் கேட்டான்.

ஆர்யானின் கரங்களை எடுத்து தன்னை சுற்றி பிடித்துக் கொண்ட சிதாரா, "நான் என் ஜிராஃபிய ரொம்ப மிஸ் பண்றேன்... அவன் கூட வாயடிக்கிறது, சண்டை போடுறது எல்லாத்தையும் மிஸ் பண்றேன்... இந்த ரயன் ரொம்ப மோசம்... குழந்தை வரப் போறது தெரிஞ்சதுல இருந்து எப்பப் பாரு குழந்தைய பத்தியே பேசிட்டிருக்கான்... குழந்தைக்காக தான் எல்லாம் பண்றன்னு சொல்லி சொல்லி பண்றான்... எனக்கு ரொம்ப கடுப்பா இருக்கு... ஆனா என் ஜிராஃபி அப்படி இல்ல... அவன் என்னை பத்தி மட்டும் தான் திங்க் பண்ணுவான்... எனக்கு அப்புறம் தான் அவனுக்கு மத்தவங்க... என் கூட சண்டை போடுவான்... ஆனா கேரும் பண்ணுவான்... எனக்கு அதான் பிடிச்சிருக்கு..." என்றாள்.

"ஓஹ்... ரொம்ப தப்பாச்சே மினி... ஆனா எனக்கு தெரிஞ்சி உன் ரயன் உனக்காக தானே எல்லாம் பண்றான்... சும்மா உன் கிட்ட விளையாட குழந்தைக்காக பண்ணுறன்னு சொல்றானா இருக்கும்.." என ஆர்யான் கூற,

"எனக்கு தெரியும் அது... ஆனா எனக்கு ரொம்ப பொறாமையா இருக்கு... நான் ரயன் மேல ரொம்ப பொசசிவ்வா இருக்கேன்... குழந்தை கிட்ட கூட அவன விட்டு கொடுக்க விரும்பல.. பேச்சுக்கும் சரி..." என்றாள் சிதாரா.

ஆர்யான், "சரி.. இனிமே ரயன் அப்படி பண்ண மாட்டான்... உனக்கு அவன் மேல கோவம் இருந்தா என் கிட்ட அதான் உன் ஜிராஃபி கிட்ட சொல்லு... நான் அவன பனிஷ் பண்றேன்.. ரயனுக்கு அவனோட பேபி டால் தான் எல்லாமே..." என்கவும் புன்னகைத்தாள் சிதாரா.

பின், "ஆனா எனக்கொரு டவுட் மினி... ஜிராஃபி கூட நீ இப்படி மடில எல்லாம் உக்காந்து கட்டிப் பிடிச்சிக்கிட்டு பேசுவியா என்ன.." என நக்கலாக ஆர்யான் கேட்கவும்,

அவனை இன்னும் இறுக அணைத்த சிதாரா, "நான் என் ஜிராஃபி கூட எப்படி வேணாலும் இருப்பேன்... மடில உக்காருவேன்... கட்டிப் பிடிப்பேன்... முத்தம் கொடுப்பேன்... ஏன்னா அவன் என்னோட ஜிராஃபி... என்னோட ரயன்... எனக்கு மட்டும் தான் அதுக்கு எல்லா உரிமையும் இருக்கு..." என ஆர்யானை முத்தமிட்டபடி கூறினாள் சிதாரா.

சிதாராவைப் பார்த்து சிரித்த ஆர்யான், "அதுவும் சரி தான்... உனக்கு தான் எல்லா உரிமையும் இருக்கு... இந்த ஆர்யான் எப்பவோ மொத்தமா சிதாராவோட ப்ராப்பட்டி ஆகிட்டானே... அதனால நீ என்ன வேணாலும் பண்ணிக்கோ..." என்றான்.

இருவரும் ஒருவர் அணைப்பில் மற்றவர் அந்த நொடியை அனுபவித்துக் கொண்டிருக்க திடீரென சிதாராவின் முகம் மாறியது.

பிரசவ வலி வந்து, "ரயன்....." எனக் கத்தினாள் சிதாரா.

அவளையே பார்த்துக் கொண்டிருந்த ஆர்யான் சிதாராவின் முகம் சுருங்கவும் பயந்தவன், "எ.. என்னாச்சு மினி..." என்க,

அடிவயிற்றைப் பிடித்துக் கொண்ட சிதாரா, "ஆஹ்..... முடியல ரயன்... வலிக்கிது.." என்றாள் அழுதபடி.

அவசரமாக அவளைக் கையில் ஏந்திக் கொண்ட ஆர்யான், "அழாதே மினி... சீக்கிரம் ஹாஸ்பிடல் போயிடலாம்..." என்றவன் சங்கரை எழுப்பி தகவல் கூறி தங்களைத் தொடரக் கூறி விட்டு யாருக்கும் காத்திருக்காமல் மருத்துவமனை கிளம்பினான்.

சிதாராவை உள்ளே அழைத்துச் செல்லப் பார்க்க அவளோ ஆர்யானின் கையை விடவேயில்லை.

பின் ஆர்யானும் சிதாராவுடனே ஆப்பரேஷன் தியேட்டருக்குள் நுழைந்தான்.

சங்கரும் தேவியும் மருத்துவமனைக்கு வந்து ஆர்யானின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர்.

அவர்களும் உடனே அங்கிருந்து கோயம்புத்தூர் கிளம்பினர்.

நேரம் செல்ல செல்ல சிதாராவிற்கு வலி அதிகரிக்க ஆர்யானின் கரத்தை இறுக்கமாக பிடித்துக் கொண்டாள்.

சிதாராவின் பிடியில் ஆர்யானின் கை வலித்தாலும் தன்னவள் அதை விட அதிகமாக கஷ்டப்படுகிறாள் என சிதாராவுக்கு சமாதானம் கூறினான்.

சில மணி நேரத்திலே தன் தாயை அதிகம் துடிக்க வைக்காமல் ஆர்யான் மற்றும் சிதாராவின் செல்வப் புதல்வி பூமியில் ஜனித்தாள்.

குழந்தையைப் பிரசவித்ததுடன் சிதாரா மயங்கி விட குழந்தையைக் கூடப் பார்க்காமல் கண்ணீருடன் சிதாராவின் நெற்றியில் அழுத்த முத்தமிட்டான்.

நர்ஸ் குழந்தையை வெளியே நின்றிருந்த தேவியின் கையில் கொடுக்க அவரும் ஆனந்தக் கண்ணீர் வடித்தார்.

தன்னவள் கண் விழிக்கும் வரையுமே ஆர்யான் சிதாராவின் அருகிலேயே அமர்ந்து பார்த்துக் கொண்டான்.

குழந்தையைக் கூட பார்க்க மறுத்து விட்டான்.

சற்று நேரத்திலேயே சிதாரா மெதுவாகக் கண் விழிக்க, "மினி... நீ நல்லா இருக்கேல்ல.." என்றான் ஆர்யான்.

உடல் சோர்வாக இருந்தாலும் அதையும் மீறி ஆர்யானைப் பார்த்து புன்னகைத்த சிதாரா, "குழந்தை எங்க ரயன்..." எனக் கேட்டாள்.

தேவியும் சங்கரும் குழந்தையுடன் அறைக்குள் நுழைய ஆர்யான் கைகள் நடுங்க தன் மகளை கரத்தில் ஏந்தி முத்தமிட்டான்.

சிதாராவை கட்டிலில் சாய்த்து அமர வைத்தவன் குழந்தையை அவளின் முகத்தருகே கொண்டு செல்ல,

தாயானவள் தன்னவனின் கரத்தில் உறங்கிக் கொண்டிருந்த குழந்தையின் நெற்றியில் முத்தமிட்டாள்.

ஒரு கரத்தில் குழந்தையை ஏந்தி மறு கரத்தால் சிதாராவை அணைத்துக் கொண்டான் ஆர்யான்.

_______________________________________________

மூன்று வருடங்களுக்கு பின்

தன் விளையாட்டு சாமான்களை எல்லாம் கடை பரப்பி விளையாடிக் கொண்டிருந்த அந்த மூன்று வயது குழந்தையின் காதில் சிதாரா ஏதோ கூறவும் அதுவும் தலையாட்டி விட்டு ஆர்யானிடம் சென்றது.

ஆர்யான் லேப்டாப்பில் தன் ஆஃபீஸ் வேலை பார்த்துக் கொண்டிருக்க அவனிடம் சென்ற குழந்தை ஆர்யானின் சட்டையைப் பிடித்து இழுத்தது.

லேப்டாப்பில் இருந்து பார்வையை அகற்றியவன் கீழே பார்க்க,

ஆர்யான் மற்றும் சிதாராவின் செல்ல மகள் பிரக்யா நின்றிருந்தாள்.

அவளைத் தூக்கி தன் மடியில் அமர்த்திக் கொண்ட ஆர்யான், "என்னடா குட்டி... ஏதாவது வேணுமா.." என்றான்.

அவனிடம் ஆமென்று தலையசைத்த குழந்தை, "ப்பா... பெகிக்கு தம்மிப் பாப்பா மேணும்..." என மழலை மொழியில் கேட்டது.

அறைக்கு வெளியே மறைந்து நின்று தங்களை அவதானித்துக் கொண்டிருந்த மனையாளைக் கண்டு கொண்டவன் குழந்தையிடம், "உங்க அம்மா தான் பிரகி குட்டி கிட்ட இப்படி கேக்க சொல்லி அனுப்பினாளா..." என்க,

பிரக்யாவும் ஆம் எனத் தலையசைத்தாள்.

வெளியே நின்றிருந்த சிதாரா மகள் தன்னை மாட்டி விட்டதை எண்ணி தலையில் அடித்துக் கொண்டாள்.

குழந்தையைக் கீழே இறக்கி விட்ட ஆர்யான், "அப்பாவுக்கு உன்ன விட பெரிய குழந்தை ஒன்ன கவனிக்க வேண்டி இருக்கு... நீ போய் விளையாடுடா... அந்தக் குழந்தைக்கு பனிஷ்மன்ட் கொடுத்துட்டு அப்பா பிரகி குட்டியோட விளையாட வரேன்.." என்றதும் குழந்தை சென்றது.

உதட்டை சுழித்தபடி கோவமாக அறைக்குள் நுழைந்த சிதாரா ஆர்யானிடம், "நீ ரொம்ப மோசம் ரயன்... உனக்கு மட்டும் பொண்ணு வேணும்... இதே நான் உன்ன போல பையன் கேட்டா முடியாதுன்னு சொல்ற... போ... நான் உன்னோட பேச மாட்டேன்... என் ஜிராஃபி கிட்டே கேட்டுக்குறேன்... அவன் எனக்காக என்ன வேணாலும் பண்ணுவான்..." என சினுங்கினாள்.

அவளைப் பின்னிருந்து அணைத்துக் கொண்ட ஆர்யான், "நீ இன்னைக்கு ஜிராஃபின்னு பேசி எவ்வளவு ஐஸ் வெச்சாலும் நீ சொல்றது நடக்காது... நமக்கு பிரக்யா மட்டும் போதும் மினி... அன்னைக்கு நீ வலில துடிக்கும் போது எனக்கு எவ்வளவு கஷ்டமா இருந்தது தெரியுமா... அப்போவே முடிவு பண்ணிட்டேன்.. நீயும் நம்ம பொண்ணும் மட்டும் எனக்கு போதும் மினி... திரும்ப நீ வலில துடிக்கிறத பார்க்குற தைரியம் எனக்கில்ல.." என்கவும்,

அவன் பக்கம் திரும்பிய சிதாரா ஆர்யானின் முகத்தை தன் கைகளில் ஏந்தி, "நீ நெனக்கிறது போல எதுவும் இல்ல ரயன்... தாய்மைன்னு சொல்றது வரம்... ஒரு பொண்ணுக்கு பிரசவம்கிறது மரணத்தை நெருங்கிட்டு வரது தான்... ஆனா அதையும் தாண்டி அந்தக் குழந்தையை பெத்து எடுக்க அவள் படுற கஷ்டம் அந்தப் பிஞ்சிக் குழந்தையோட முகத்த பார்த்ததும் எதுவும் இல்லாதது போல தோணும்... அந்தக் குழந்தையோட ஒற்றை சிரிப்புக்காகவே ஒரு தாயால எந்தக் கஷ்டத்தையும் தாங்கிக்க முடியும்... ப்ளீஸ் கண்மணி... எனக்கு குட்டி ரயன் வேணும்... ஓக்கே சொல்லு.. ப்ளீஸ்... ப்ளீஸ்..." எனக் கண்களை சுருக்கிக் கெஞ்ச ஆர்யானின் மனம் இளகியது.

ஆர்யான் சிதாராவைப் பார்த்து சம்மதமாக புன்னகைக்கவும் மகிழ்ந்த சிதாரா அவன் இதழை சிறை செய்தாள்.

அதன் பின் சிதாராவின் மீதான ஆட்சி ஆர்யானின் வசம் சென்றது.

❤️❤️❤️சுபம்❤️❤️❤️
 
Status
Not open for further replies.
Top