எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

காந்தையே காதலுற்றேன்

zeenath

Active member
#நறுமுகைநிலாக்காலம்_02
#NNK47
#காந்தையேகாதலுற்றேன்!
நறுமுகை தளத்தில் நடக்கும் போட்டி கதைகள்....
விபு பிரசாத்.. தன் உயிரான தோழி மற்றும் மாமன் மகளை ஒரு இக்கட்டான சூழ்நிலையில் திருமணம் முடிக்கிறான்.. அவள் மகன் சச்சின் உடன் இவனுக்கு வயதுக்கு மீறிய நட்பு🥰 சச்சி மச்சி என அழைத்துக் கொள்வது அழகு 🥰
கணவன் மனைவியாக இருந்தாலும் பிரிந்தே வாழ்கிறார்கள் இருவரும் மனம் நிறைந்த நட்புடன் 🥰 இதற்கிடையில் காதல் மலர்கிறது விபுவிற்கு ஜோவிகாவின் மீது.. இவன் ஆசிரியராக வேலை பார்க்கும் பள்ளியில் புதிய ஆசிரியை யாக அவள் வந்து சேர்கிறாள்.. தாய் தந்தையை பிரிந்து குழந்தையாக அழும் அவளிடம் வம்பு வளர்ப்பவனுக்கு அப்போதே அவள் மீது ஈர்ப்பு ஏற்படுகிறது.. இவனின் அன்பிலும் அக்கறையிலும் ஜோவிர்க்கும் இவன் மீது காதல் உண்டாக அவள் மீது மூச்சு முட்டும் அளவுக்கு காதல் இருந்தாலும் ஜனனியுடன் இவன் வாழ்வை நினைத்து அதை சரிப்படுத்திய பிறகு இவளை கைபிடிக்க நினைத்து இவளை தவிர்க்க நினைக்கிறான்.. என்ன சூழ்நிலை என தெரியாமல் இவனின் நிராகரிப்பை நினைத்து மறுக்கும் பெண் அவளின் துயர் கண்டு இவனும் துடித்து காதலை ஒப்புக்கொள்கிறான்.. ஆனால் ஜனனியுடன் ஆன இவனின் திருமணம் இவர்கள் காதலுக்கு குறுக்கே நின்றதா என்பதும் ஜனனியின் வாழ்வு என்ன ஆனது அவளின் மகனுடன் என்பதும் கதையில்... மிக சுவாரசியமாகும் விறுவிறுப்பாகவும் நகர்ந்தது கதை நீங்கள் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் 🥰👏
Good luck 🥰🌹💐
 
Top