எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

" வந்து விடு வெண்ணிலவே" - கதை திரி

Status
Not open for further replies.

Sirajunisha

Moderator
வணக்கம் டியர்ஸ்,
மீண்டும் அடுத்த கதையுடன் ப்ரியா வந்திருக்காங்க. 'வந்து விடு வெண்ணிலவே'.. வெண்ணிலவின் வரவை விரைவில் எதிர்பாருங்கள்
 
வந்து விடு வெண்ணிலவே

அத்தியாயம் - 1

அந்த பெரிய பங்களாவின் வாசலில் ஆட்டோ வந்து நின்றது. அதில் இருந்து இறங்கிய விச்வநாதனும், தேவகியும் அந்த பங்களாவுக்குள் நுழைந்தனர். சோபாவில் அமர்ந்து இருந்த சிவராமன் இவர்களையும் பார்த்ததும் பார்த்ததும் எழுந்து அவர்களை நோக்கி விரைந்தார்.

“வா விஸ்வநாதா எப்படி இருக்க? இவ்வளவு நாள் கழிச்சு தான் உனக்கு எங்க ஞாபகம் வருதா? தேவகி நீ எப்படி இருக்க?”

“நல்லா இருக்கேன் அண்ணா” என்றார் தேவகி.

“கமலம் இங்க வந்து பாரு யாரு வந்திருக்காங்கனு?”

“அடடா வாங்க அண்ணா எப்படி இருக்கீங்க? தேவகி நீ என்ன இப்படி இளைச்சிட்ட?” என விசாரித்தார் கமலம்.

அதெல்லாம் ஒன்னுமில்லை வயசாகிடுச்சு இல்ல அதான்”

“என்ன சாப்பிடற?” என வந்தவர்களை உபசரித்தார் கமலம்.

“அதெல்லாம் இருக்கட்டும் நீ இப்படி வந்து உட்காரு” என அவரை தடுத்தார் தேவகி.

“தேவகி ஆண்ட்டி உங்களுக்கா வயசாகிடுச்சு நோ சான்ஸ். இந்த உடான்ஸ் தானே வேண்டாம். அதெல்லாம் கிடையாது இப்ப கூட யாராவது உங்களை பார்த்தா மலருக்கு அக்கானு சொல்லுவாங்க என்றபடி வந்து அமர்ந்தான் சூர்யா.

சூர்யா சிவராமன் கமலம் தம்பதியின் மைந்தன்.

“சும்மா என்னை ஓட்டாதேப்பா. நீ எப்படி இருக்க பிசினஸ் எப்படி போகுது?”

“எல்லாம் நல்ல போகுது. வெயிட் பிரபு அண்ணி வெளிய போயிருக்காங்க. சுஜிதா காலேஜ்க்கு போயிருக்கா இதை தானே அடுத்து கேட்க வந்தீங்க” என்றான் சூர்யா.

“ஆமாப்பா உன்னோட குறும்பும் துறுதுறுப்பும் மாறவே இல்ல அப்படியே இருக்கு” என்றார் தேவகி.

“அப்புறம் ஆண்ட்டி வீட்ல மலர், பூஜா, சுருதி, ப்ரித்வி எல்லாரும் எப்படி இருக்காங்க?”

“எல்லாரும் நல்லாருக்காங்க சூர்யா. அப்புறம் நம்ம மலருக்கு கல்யாணம் நிச்சயம் பண்ணிருக்கோம். வர்ற புதன்கிழமை கல்யாணம் நீங்க எல்லாரும் கண்டிப்பா கல்யாணத்துக்கு வரணும்” என்றார் விஸ்வநாதன்.

“என்ன அங்கிள் இப்படி சொல்லிட்டீங்க நாங்க இல்லாமலா? கண்டிப்பா நாங்க வருவோம். என்ன ஆண்ட்டி எங்க கிட்ட கூட ஒரு வார்த்தை சொல்லாம மலருக்கு கல்யாணம் நிச்சயம் பண்ணிட்டு பத்திரிகைய நீட்றீங்க” என்றான் சூர்யா.

“அதெல்லாம் இல்ல சூர்யா. திடீர்னு அமைஞ்ச சம்மந்தம். அவளை ஒரு கல்யாண வீட்ல பார்த்து பிடிச்சு போய் வந்தாங்க. ஒரே வாரத்துல கல்யாணம் பேசி முடிச்சாச்சு. அதான் ஒன்னும் சொல்ல முடியலை” என்றார் தேவகி.

“அதனால என்ன ஆண்ட்டி அதெல்லாம் பரவாயில்லை ஆனா மலர் இன்னும் டிகிரி கூட முடிக்கலை. அதுக்குள்ள எதுக்கு அங்கிள் அவளுக்கு கல்யாணம். அவ படிச்சு முடிச்சு அவ சொந்த கால்ல நிக்கட்டுமே” என தன் கருத்தை சொன்னான் சூர்யா.

“இல்லப்பா நான் முதல்ல மலருக்கு முடிச்சா தான் அடுத்தடுத்து என்னோட கடமைய என்னால சரியா செய்ய முடியும். அவளும் படிப்பு முடியட்டுமேனு தான் சொன்னா ஆனா அதுக்கு அப்புறம் எங்களை புரிஞ்சுக்கிட்டு கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டா”

“சரி சிவராமா இன்னும் நிறைய பேருக்கு பத்திரிக்கை கொடுக்க வேண்டியது இருக்கு. அதனால நாங்க கிளம்பறோம். கல்யாணத்துக்கு முதல்லயே வந்துடுங்க நீங்க தான் முன்ன நின்னு கல்யாணத்தை நடத்தி வைக்கணும்” என்றார் விஸ்வநாதன்.

“கண்டிப்பா விஸ்வநாதா நாங்க எல்லாத்தையும் பார்துக்கிறோம். கல்யாணத்தை ஜாம் ஜாம்னு நடத்தலாம் கவலைப்படாம போய்ட்டு வா” என தன் நண்பனை வழியனுப்பினார் சிவராமன்.

“அம்மாடி மலர் அப்பாவுக்கு குடிக்க மோர் கொண்டு வாம்மா.”

“இதோ கொண்டு வர்றேன் அப்பா” என்றபடி உள்ளிருந்து வெளியே வந்தாள் மலர்.

அவள் கொடுத்த மோரை அருந்திவிட்டு “என்னடா முகமெல்லாம் வாடியிருக்கு”

“அதெல்லாம் ஒன்னும் இல்லப்பா.”

“இல்ல மலர் எனக்கு தெரியும் என்னோட பொண்ணை.”

“அப்பா, அது வந்து உங்களை, அம்மாவை, தம்பி, தங்கச்சிகளை விட்டுட்டு போறது கஷ்டமா இருக்கு.”

“விட்டுட்டு எங்கமா போயிடப் போற, கல்யாணத்தை பண்ணிட்டு சந்தோசமா வாழத்தான போறே கவலைப்படாதே.”

“சரி அப்பா.”

“போ அக்கா நீ ரொம்ப மோசம், நீ கல்யாணம் பண்ணிக்கிட்டா தானே எங்களுக்கு ரூட் க்ளியர் ஆகும். நீ இப்படி இருந்தா எப்படி?” என்றாள் பூஜா.

“அடிப்பாவி” என்றபடி மலர் பூஜாவை துரத்த சுருதியும் இனைந்து கொள்ள அங்கு கலகலவென சிரிப்பலை பரவியது.

விரைவிலேயே இந்த சிரிப்பு அடங்கி அந்த குடும்பம் பரிதவிக்கப் போவது அறியாமல் அவர்கள் ஆனந்தமாக இருந்தனர், விதி அவர்களை பார்த்து சிரித்தது.

அன்று கல்யாண மண்டபமே அலங்காரத்தால் ஜொலித்தது. மணமகள் அறையில் அலங்காரத்துடன் இருந்த மலரை அவளது தோழிகள் கேலி செய்து கொண்டிருந்தனர்.

“இன்னைக்கு தான் இவ நமக்கு சொந்தம் நாளைக்கு இவள் மாப்பிளையோட மாடிக்கு சொந்தம்.”

“ச்சீ போங்கடீ இப்படி எல்லாமா பேசுவீங்க?”

“ஆமாடீ அம்மா. உனக்கு என்ன கவலை? கல்யாணம் ஆகப் போகுது. படிக்கணும் எக்ஸாம் பாஸ் பண்ணனும்னு ஒரு கவலையும் இல்லை நல்ல வாழ்கைதான்டி உனக்கு. எனக்கும் இருக்காங்களே படிப்பு முடிஞ்சா தான் கல்யாணம்னு. கொடுத்து வச்சவ தான்டி நீ” என பெருமமூச்சு விட்டாள் நீபா.

“சிவராமா, கமலா வாங்க வாங்க. சூர்யா சுஜிதா எல்லாரும் அப்பொழுதே வந்துட்டாங்க. நீங்க என்ன இவ்வளவு லேட்.”

“அது ஒன்னும் இல்ல விஸ்வநாதா கமலா கிளம்புறா கிளம்புறா இவ்வளவு லேட்ஆக்கிட்டா” என்றார் சிவராமன் சிரித்துக் கொண்டே.

“அட நீங்க வேற சும்மா இருங்க நான் ரூம்ல போய் மலரை பார்த்துட்டு வர்றேன்” என்றபடி கமலம் மலர் இருந்த அறைக்குச் சென்றாள்.

“மலர் நீ இந்த அலங்காரத்துல ரொம்ப அழகா இருக்க.”

“தேவகி ஆண்ட்டி வாங்க, ஆண்ட்டி என்ன இவ்வளவு லேட்டா வந்திருக்கீங்க?”

“அது ஒன்னும் இல்ல மலர், உங்க அங்கிள் மேக்கப் பண்ணி கிளம்ப லேட் ஆக்கிட்டாரு. அவருக்கு என்னமோ தான் தான் மாப்பிளைனு நினைப்பு.”

“சொன்னாலும் சொல்லாட்டியும் அவருக்கு என்ன ஆண்ட்டி குறைச்சல். அவரும் மாப்பிள்ளை மாதிரி ஜம்முனு தானே இருக்காரு.”

“ஆமாண்டி அம்மா நீ உங்க அங்கிளை விட்டுக்கொடுப்பியா?”

“அப்புறம் ஆண்ட்டி வித்யா அக்கா சுஜிலாம் வந்திருக்காங்களா?”

இல்லம்மா வித்யா வரலை. அவள் பையன் சுதிருக்கு உடம்பு சரியில்லை. அதனால அவள் வரலை. பிரபு ஆபீஸ் போயிருக்கான். சுஜியும், சூர்யாவும் எங்க கூட வந்து இருக்காங்க. சரி மலர் நீ ரெடி ஆகு” நான் தேவகியைப் பார்த்துட்டு வர்றேன் என்றார்.

சரி இந்த குடும்பத்தின் நெருக்கத்தை பற்றி ஒரு சிறிய முன்னுரை.

சிவரமனும் விஸ்வநாதனும் பள்ளி நாட்களில் இருந்து நெருங்கிய நண்பன். சிவராமன் தான் விஸ்வநாதனுக்கு தேவகியை மணமுடித்து வைத்தது. அதன் பிறகு தான் அவர்கள் நிலை சிறிது உயர்ந்தது. அதன் பின் சிவராமன் கமலம் திருமணம் நடந்தது.

சிவராமனுக்கும், விஸ்வநாதனுக்கும் குழந்தைகள் பிறந்தார்கள். இரு குடும்பகளும் மேலும் நெருங்கி சொந்தங்கள் போல பழகினார்கள்.

சிவரமனுக்கு தன் மகள் மலரை சூர்யாவுக்கு முடிக்க வேண்டும் என ஆசை. விஸ்வநாதனுக்கும் அதே ஆசை எனினும் இது இரு குடும்பங்களின் நட்பை பாதித்து விடக்கூடாது என இதனை தங்களுக்குள்ளேயே புதைத்து கொண்டனர். சவராமனுக்கோ விஸ்வநாதனின் எண்ணம் தெரியாது. சிவராமனுக்கோ விஸ்வநாதனின் எண்ணம் தெரியாது. எனவே இரு குடும்பங்களின் உறவும் நட்பாகவே இருக்கிறது.

மணவறையில் மணமகன் வந்து அமர்ந்து, மந்திரம் சொல்லிக் கொண்டிருந்தார் புரோகிதர். சிறிது நேரத்தில் மணமகள் வரவழைக்கப்பட்டாள். மலர் மாலைகளோடு தேவதையாக மணவடையில் வந்து அமர்ந்தாள். விஸ்வநாதன் மகளின் அழகை பெருமிதத்தோடு பார்த்தார்.

ஐயர் மந்திரத்தை கூறிக் கொண்டிருந்தபோது மண்டப வாசலில் போலீஸ் ஜீப் நுழைந்தது.

போலீஸை கண்டு விஸ்வநாதன் பதறினார்.

“கல்யாணத்தை முதல்ல நிறுத்துங்க” என்றார் அங்கு வந்த காவல் துறை அதிகாரி.

“என்ன சார் இது நல்லது நடக்கப் போற இடத்துல வந்து அபசகுணமா பேசுறீங்க?” என பதறியபடி அங்கு வந்தார் விஸ்வநாதன்.

“என்ன சார் நீங்க உங்க பொண்ணா அது? பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி வைக்கும் போது மாப்பிள்ளைய பத்தி தீர விசாரிக்க மாட்டீங்களா?” என கோபமாக கேட்டார் அந்த அதிகாரி.

“என்ன சார் சொல்றீங்க?” என பதறினார் விஸ்வநாதன்.

“உங்க பொண்ணுக்கு நீங்க பார்த்த மாப்பிள்ளையோட பேரு என்னனு கொஞ்சம் சொல்லுங்களேன்” என்றார் அந்த அதிகாரி நக்கலாக.

“அவரு பேரு திவாகர்” என்றார் விஸ்வநாதன் குழப்பத்துடன்.

“இல்ல சார் நீங்க நினைக்கிற மாதிரி அவனோட உண்மையான பெயர் திவாகர் கிடையாது அவன் பெயர் மணிகண்டன். அவன் இதுக்கு முன்னாடி ஏழு பொண்ணுங்களை கல்யாணம் பண்ணி ஏமாத்தி இருக்கான். நானே இவனை ரெண்டு தடவை வேற கேஸ்ல அரஸ்ட் பண்ணிருக்கேன்” என்றவர் விஸ்வநாதனிடம் பழைய செய்தித்தாள்களை நீட்டினார்.

‘பல பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த மோசடி காதல் மன்னன் கைது’ என அதில் திவாகரின் புகைப்படம் இருந்தது.

வந்திருந்த அதிகாரி மணிகண்டனை கைதி செய்தார்.

“இனியாவது பொண்ணுங்களுக்கு ஒழுங்கா விசாரிச்சு கல்யாணம் பண்ணுங்க” என்றுவிட்டு அங்கிருந்து சென்றார்.

திருமணம் நின்ற அதிர்ச்சியில் அனைவரும் இருந்தனர்.

“ஐயோ என் பொண்ணு கல்யாணம் நின்னுடுச்சே. நானே என் பொன்னு வாழ்க்கைய நாசம் பண்ணிட்டேனே இனி நான் என்ன பண்ணுவேன்” என ஆரற்றினார் விஸ்வநாதன்.

அவ்வளவு நேரம் அதிர்ச்சியில் நின்ற மலர் பதறி தந்தையிடம் ஓடி வந்தாள்.

“அப்பா விடுங்க எனக்கு ஒன்னும் இல்லப்பா. எனக்கு எந்த வருத்தமும் இல்ல நான் சந்தோசமா தான் இருக்கேன். நல்ல வேளை கல்யாணத்துக்கு முன்னாடியே தப்பிச்சிட்டேன் அவ்ளோ தான் விட்ருங்க. உங்களுக்கு எதாவதுனா என்னால தாங்க முடியாது. டென்ஷன் ஆகாதீங்கப்பா” என அழுதாள் மலர்.

“இல்லம்மா உன்னோட வாழ்க்கையை நானே கெடுத்துட்டேன். நான் என் பொண்ணை எப்படி கரை சேர்க்க போறேன்? இனி அவளை யாரு கல்யாணம் பண்ணிப்பா? சிவராமா பார்த்தியாடா என் பொண்ணை” என அழுதபடி மயங்கி சரிந்தார்.

“ஐயோ! அப்பா உங்களுக்கு என்னாச்சி கண்ணை திறந்து பாருங்கப்பா” என கதறினாள் மலர்.

கமலம் தேவகியை அணைத்தபடி நின்றார்.

சூர்யா வேகமாக ஓடி வந்து தண்ணீரை அவர் முகத்தில் தெளித்து அவரை எழுப்பினான்.

“அங்கிள் ஒன்னுமில்லை நல்லவேளை கல்யாணத்துக்கு முன்னாடியே இதெல்லாம் தெரிஞ்சுதேனு சந்தோசபடுங்க” என அவரை தேற்ற முயன்றான் சூர்யா.

“ஐயோ என் பொண்ணோட கல்யாணம் மணவறை வந்து நின்னுபோச்சே இனி அவளை யாரு கல்யாணம் பண்ணிப்பா கல்யாணம் வேண்டாம் வேண்டாம்னு சொன்னாலே கேட்காம போயிட்டனே?” என அழுதார்.

“டேய், விசுவநாதா முதல்ல அழறதை நிப்பாட்டு உன் பொண்ணோட கல்யாணம் நிக்கலை. குறிச்ச முகூர்த்தத்துல கல்யாணம் நல்லபடியா நடக்கும்” என்றார் சிவராமன்.

“நீ என்ன சொல்ற சிவராமா?” என்றார் குழப்பமாக.

“டேய் சூர்யா போய் அந்த தாலியை எடுத்து மலர் கழுத்துல கட்டு” என தன் மகனுக்கு கட்டளை இட்டார் சிவராமன்.

“அப்பா நான் சொல்றதை கொஞ்சம்” என தயங்கினான் சூர்யா.

“நீ ஒன்னும் பேசாதே. போய் மலர் பக்கத்துல உட்காரு. நீ உண்மையாவே உன் அப்பா மேல மதிப்பு வச்சிருக்கேனா மலர் கழுத்துல தாலிய கட்டு” என்றார்.

தந்தையை எதிர்த்து ஒரு வார்த்தை பேசாமல் மலர் கழுத்தில் தாலியை கட்டினான் சூர்யா.

“டேய் சிவராமா நீ என் குடும்ப மானத்தை காப்பாத்திட்ட. நீ மட்டும் இல்லனா நான் இந்நேரம் குடும்பத்தோட தற்கொலை பண்ணிருப்பேன். நீ எனக்கு செஞ்ச உதவிய எத்தனை ஜென்மம் எடுத்தாலும் மறக்க மாட்டேன்.” என நண்பனிடம் தன் நன்றியை தெரிவித்தார் விஸ்வநாதன்.

“நீ வேற சும்மா இருடா மலர் எங்க வீட்டு மருமகளா வர நாங்க குடுத்து வச்சிருக்கணும். எங்க தேடினாலும் இப்படி ஒரு நல்ல பெண் என் பையனுக்கு கிடைக்க மாட்டா. அதனால எல்லாம் நன்மைக்கேனு எடுத்துக்கோ” என்றார் சிவராமன்.

“இங்க பாருப்பா சூர்யா, நீ உங்க அப்பா வார்த்தைக்காக தான் என் பொண்ணு கழுத்துல தாலி கட்டிருக்கேன்னு தெரியுது ஆனாலும் ஒரு தகப்பனா நான் சொல்லறது என் கடமை அவளை கண் கலங்காம பார்த்துக்கோ” என்றார் கெஞ்சலாக.

“கவலைப்படாதீங்க அங்கிள் இனி மலர் என் பொறுப்பு என் கடமைய நான் சரியா செய்வேன்” என்றான் சூர்யா.

“சரிசரி அதான் எல்லாம் நல்லபடியா முடிஞ்சிடுச்சுல்ல எல்லாரும் வாங்க சாப்பிட போகலாம்” என அனைவரையும் அழைத்துச் சென்றார் கமலம்.

அனைவரும் உணவை முடித்து விட்டு மண்டபத்தை காலி செய்துவிட்டு சிவராமனின் வீட்டிற்கு கிளம்பினர்.

வீட்டிற்கு செல்லும் வழியில் கமலம் அலைபேசியில் அழைத்து வித்யாவை ஆரத்தி கரைத்து வைக்க சொன்னார்.
 
அத்தியாயம் - 2

மணக்கோலத்தில் வந்து இறங்கிய சூர்யவையும்,மலரையும் கண்டு அதிர்ந்தாள் வித்யா.

“என்ன வித்யா பார்த்துட்டே இருக்க ஆரத்தி எடும்மா” என்றார் கமலம்.

வித்தியாவின் முகத்தில் வன்மம் தெரிந்தது.

‘என் தங்கச்சி இருக்க வேண்டிய இடத்துக்கு நீ வந்துட்டியா? இருடீ உன்னை எப்படி ஓட ஓட விரட்றேன்னு பாரு’ என வஞ்சத்தில் கொதித்தாள் வித்யா.

வித்தியாவின் முகத்தில் தெரிந்த பாவனையில் மலர் பயந்து போனால்.

இருவரையும் அமர வைத்து பால் பழம் கொடுத்தனர்.

கமலம் மலரை விளக்கு ஏற்ற பணித்தார்.

மலர் தன் புகுந்த வீட்டில் விளக்கு ஏற்றி இறைவனை மனதார பிராத்திப்பதை அவள் தந்தையும் தாயும் கண்டு நெகிழச்சியுடன் கண் கலங்கினர்.

இரவு நெருங்கி விட்டது.

முதலிரவு சூர்யாவின் வீட்டில் ஏற்பாடு செய்தனர்.

அந்த இருட்டில் மொட்டை மாடியில் தனியாக அமர்ந்திருந்த சூர்யாவை நெருங்கினார் சிவராமன்.

“என்னப்பா இங்க வந்து உட்கார்ந்திருக்க?” என்றவறின் கேள்விக்கு சூர்யா பதிலேதும் பேசாமல் இருந்தான்.

“அப்பா மேல கோவமா?” என்றார்.

“என்னப்பா இப்படி கேட்கிறீங்க?” என்றான் சூர்யா.

இல்லடா பயமா இருக்கு. என் பேச்சை கேட்டு கல்யாணம் பண்ணிகிட்ட ஆனா அவளோட நீ தானே வாழனும். ஒரு வேளை அவளை ஒதுக்கி வச்சிருவியோன்னு ரொம்ப பயமா இருக்குப்பா?” என்றார் சிவராமன் பயத்துடன்.

“இந்த எண்ணம் உங்களுக்கு அவ கழுத்துல தாலிய கட்டுனு கட்டளை போடும் போது எங்க போச்சு?” என்றான் நக்கலாக.

“தயவு செஞ்சு அப்பாவ மன்னிச்சிரு. அப்பா மேல உள்ள கோபத்தை அந்த அப்பாவி பெண் மேல காட்டிறாதே. அவளை விட நல்ல பெண்ணை இந்த உலகத்தில எங்க தேடுனாலும் கிடைக்க மாட்டா. இந்த உண்மைய இன்னைக்கு இல்லைனாலும் என்னைகாவது ஒரு நாள் புரிஞ்சுப்ப.” என்றார்.

“மலரை எனக்கு நல்லாவே தெரியும்ப்பா அவ குணம் நல்ல மனசு எல்லாம் எனக்கு தெரியும். ஆனா உங்க மனசுல இருந்த ஆசைய அவுங்க சூழ்நிலைய பயன்படுத்தி நிறைவேத்தீட்டீங்க” என்ற சூர்யாவுக்கு பதில் சொல்ல முடியாமல் திணறினார் சிவராமன்.

“உங்க எண்ணத்தை நான் தப்பு சொல்லலை. ஆனா இது ரெண்டு பேரோட தனி பட்ட வாழ்க்கை. ஒரு வேளை என் மனசுல வேற பெண் இருந்தா என்ன பன்னுவீங்க? என்னை விடுங்க மலரை யோசிச்சு பார்த்தீங்களா? அவளுக்கு இதுல சம்மதமானு ஒரு வார்த்தை கேட்டீங்களா? அவளுக்குனு விருப்பு வெறுப்புனு இருக்காதா?” என்ற மகனின் கேள்வியில் உடைந்து போனார் சிவராமன்.

“அப்பா உங்கள குத்தி காட்ட நான் இதெல்லாம் சொல்லல. ஆனா ஒரு வார்த்தை நீங்க மலரையும் கேட்டுருக்கணும். இனி இதை பத்தி பேசி ஆக போறது ஒன்னுமில்லை. மலர் கழுத்துல நான் எப்ப தாலி காட்டினேனோ அப்பவே அவ என் பொறுப்பு அவளை நான் நல்ல பார்த்துப்பேன்” என்றான் சூர்யா பொறுப்பான கணவனாக.

“இது போதும்ப்பா இனி நான் நிம்மதியா இருப்பேன்” என அங்கிருந்து அகன்றார்.

அலங்காரத்தை முடித்து விட்டு மலரிடம் வந்த தேவகி “சூர்யா உன்னை கல்யாணம் பண்ணிகிட்டு உன்னோட வாழ்க்கைய மட்டுமில்லாம உன் அப்பா உயிரையும் காப்பாத்திருக்கான். அவன் நமக்கு பண்ணினது ரொம்ப பெரிய விஷயம் அதனால சூர்யா மனசு கோணாம நடந்துக்கு. அவன் கோவப்படாலும் கொஞ்சம் பொறுத்து போ. இந்த குடும்பத்தோட சந்தோசதுக்காக எதையும் செய்ய தயாரா இருக்கணும்” என தன் மகளுக்கு அறிவுரை வழங்கினார்.

“அம்மா, நீங்க ஒன்னும் கவலைப்படாதீங்க எல்லாத்தையும் நான் பார்த்துப்பேன்” என தன் தாயிடம் நம்பிக்கையாக உரைத்தாள் மலர்.

மலர் சூர்யாவின் அறையில் அவன் வரவுக்காக காத்திருந்தாள். கதைவை மூடி விட்டு அவன் தன்னை நெருங்கி வருவதை உணர்தாள்.

அவனை நோக்கி விறைந்த மலர் அவன் பாதங்களில் பணிந்தாள்.

“ஹேய் ! என்ன மலர் என்ன இதெல்லாம் எழுந்திரி” என அதட்டினான்.

“நீங்க மட்டும் இந்த தாலிய கட்டலனா என் குடும்பமே உடைஞ்சு போயிருக்கும்” என கை கூப்பினாள்.

“என்ன மலர் நான் உன்னை கல்யாணம் பண்ணலனா என்ன நடந்திருக்கும் ஒன்னும் ஆகிருக்காது. கொஞ்சம் நாள்ல இதுல இருந்து வெளிய வந்து உனக்கான துணை கூட உன் வாழ்க்கை தொடங்கிருக்கும் அவ்ளோ தான். அதை விட்டுட்டு என்னமோ என்னை கடவுள் போல ட்ரீட் பண்ணாதே” என்றான் சூர்யா.

அவன் சொன்னதை கேட்டு அவள் முகம் சுருங்கியது.

அவள் முக பாவனையை கண்டவன் “நீ தப்பா எடுத்துக்கிட்டாலும் நான் எதார்த்தத்தை தான் பேசுறேன்ம்மா” என்றான்.

புரிந்தது என்பது போல தலையசைத்தாள் மலர்.

“அதுக்காக எனக்கு உன்னை பிடிக்கலைனு சொல்லமாட்டேன். எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும். நீ ரொம்ப நல்ல பொண்ணு. அதனால இப்படி இதெல்லாம் பெரிய விஷயம்னு சொல்லி இப்படி நடந்துக்காதே.”

“சரிங்க”

“மலர், நான் ஒன்னு சொன்னா தப்பா எடுத்துக்காதே” என தயங்கினான் சூர்யா.

“சொல்லுங்க.”

“இல்ல மலர் நம்ம கல்யாணம் தான் எதிர்பாராம நடந்துச்சு. ஆனா நம்ம வாழ்க்கை அப்படி தொடங்க கூடாது. எனக்குனு சில லட்சியங்கள் இருக்கு அதை நான் அடையணும். உண்மையான தாம்பத்தியம் ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்கறதுல தான் இருக்கு.

அதனால நாம ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்கிற வரை இதெல்லாம் வேண்டாமே. நாம்ம நல்ல நண்பர்களா இருக்கலாமே. கல்யாணம் ஆன அன்னைக்கே எல்லாம் நடக்கணும்னு ஒன்னும் கட்டாயம் இல்ல தானே. தாம்பத்தியத்தை உடல்ரீதியா பார்க்காம மனம் சார்ந்ததா பார்க்கணும். உண்மையான குடும்ப வாழ்க்கை உடல் சங்கமத்துல இல்ல ரெண்டு மனசோட சங்கமத்துல இருக்கு. இதை நீ புரிஞ்சுப்பேனு நினைக்கிறேன்.”

“சரிங்க இதான் உங்க விருப்பம்னா எனக்கு இதுல சம்மதம்” என்றாள்.

“என்ன மலர் இப்படிச் சொல்ற? நீ என்னோட மனைவி உன்னோட விருப்பம் எதுனாலும் நீ என்கிட்ட சொல்லலாம். உனக்கு என்கிட்ட எல்லா உரிமையும் இருக்கு அதை உனக்கு இது கொடுத்திருக்கு” என அவன் கட்டிய மாங்கல்யத்தை அவள் கழுத்துலிருந்து எடுத்து நீட்டினான்.

அவன் கை தன் கழுத்தில் பட்டதும் தன் உடம்பில் ஏதோ ரசாயன மாற்றத்தை உணர்ந்தாள் மலர்.

“என்னங்க இப்படில்லாம் பேசுறீங்க. சரியான நேரத்துல எனக்கு தாலி கட்டி என்னோட மானத்தையும் எங்க அப்பாவோட உயிரையும் எனக்கு திருப்பி கொடுத்துருக்கீங்க. இந்த வாழ்க்கை எனக்கு நீங்க போட்ட பிச்சை இதுக்கு நான் நன்றி உள்ளவளா இருப்பேன். உங்களுக்காகவும் இந்த குடும்பத்துக்காகவும் என்னோட உயிரை வேணாலும் கொடுப்பேன்.”
(அட யாரா இவ 80ஸ் ஹீரோயின் கூட இல்லை பிளாக் அண்ட் ஒயிட் காலத்து ஹீரோயினா இருப்பா போல)

“ஸ்டாப் இட் மலர் இப்படி ஸ்டுப்பிட் போல யோசிக்கறத முதல்ல நிறுத்து. நான் நம்ம கல்யாணம் எதிர்பார்க்காம நடந்ததுன்னு தான் சொன்னேன் பிடிக்காம கல்யாணம் பண்ணிகிட்டேன்னு சொல்லல. நான் என் அப்பா சொன்னாங்கனு கல்யாணம் பண்ணிகிட்டது என்னவோ உண்மை தான். ஆனா உனக்கு என்ன குறைச்சல்? அழகு, அமைதி, அடக்கம்னு எல்லாமே உன்கிட்ட இருக்கு அப்புறம் எதுக்கு உனக்கு இந்த தாழ்வு மனப்பான்மை. அதனால நீ உன்னோட மனசுல எது இருந்தாலும் வெளிப்படையா சொல்லலாம் புரியுதா?”

“சரிங்க புரிஞ்சுது” என தலையாட்டினாள் மலர்.

அவள் தலையாட்டும் போது அழகாக அசைந்த ஜிமிக்கி சூர்யாவை கவர்ந்தது.

“நாளைக்கு உன்னை வெளிய கூட்டிட்டுப் போறேன்.”

“சரிங்க” என சந்தோசத்துடன் தலையசைத்தாள் மலர்.

“சொல்லு மலர் நம்ம எங்க போகலாம்?”

“உங்களுக்கு எங்க போகனும்னு இஷ்டமோ நம்ம அங்க போகலாம்” என்றாள்.

‘இவ மாற மாட்டா’ என தலையில் அடித்துக் கொண்டவன் ‘இரு நான் உன்னை எப்படி மாத்துறேன்னு பாரு’ என தனக்குள் சபதம் செய்து கொண்டான்.

“நம்ம கல்யாணம் எதிர்பார்க்காம திடீர்னு நடந்துருச்சு. அதனால என்னோட ஃப்ரெண்ட்ஸ் எல்லாருக்கும் ட்ரீட் கொடுக்கலாம். என்னோட ஃப்ரெண்ட்ஸ்கிட்டயும் உன்னை இன்ட்ரடியூஸ் பண்ண மாதிரி இருக்கும்.”

“சரிங்க போகலாம்” என்றாள் மலர்.

“அப்புறம் இன்னொரு விஷயம்.”

“சொல்லுங்க.”

“நம்ம ரெண்டு குடும்பமும் அவ்ளோ நெருக்கமா இருக்கு நம்ம ரெண்டு பேரால அவுங்க நட்பு என்னைக்கும் கெட்டு போயிடக்கூடாது. அதனால நமக்குள்ள நடக்குற எதுவும் அவுங்களுக்கு தெரிய வேண்டாம்.”

“கண்டிப்பா அப்படி எதுவும் நடக்காது. நம்ம ரெண்டு பேரு குடும்பமும் இதே போல ஒத்துமையா எப்பவும் இருக்கும்” என்றதும் அவன் அவளை பார்த்து புன்னகைத்தான்.

“அங்கிள் அடிக்கடி இங்க வந்து போயிருக்காங்க. ஆனா நீ நம்ம வீட்டுக்கு அடிக்கடி வந்து போனதில்லை. உனக்கே உங்க அப்பா சொல்லி தெரிஞ்சிருக்கும் ஆனாலும் சொல்றேன். அம்மா அப்பாவ பத்தி உனக்கு நல்லா தெரியும். மத்தபடி பிரபு அண்ணா ரொம்ப நல்ல குணம் பயங்கர அமைதியானவர். வித்யா அண்ணிய லவ் பண்ணி கல்யாணம் பண்ணிகிட்டாங்க. அண்ணி கொஞ்சம் ஒரு மாதிரி வித்யாசமா நடந்துகிட்டா எனக்காக கொஞ்சம் பொறுத்துக்க.”

“சரிங்க.”

“அப்புறம் சுதிர் ரொம்ப சமத்து. நம்ம கிட்ட நல்ல பழகுவான். அப்புறம் சுஜிதாவ பத்தி உனக்கு நல்லா தெரியும். அவ ப்ரெண்ட்லியா துறுதுறுனு இருப்பா. உன்னோட புகுந்த வீடு பத்தி சொல்ல இதுக்கு மேல வேற ஒன்னும் இல்ல.”

“சரிங்க.”

“எது சொன்னாலும் சரிங்க இதை தவிர உனக்கு வேற எதுவும் தெரியாதா? ஒரே வார்த்தைல பதில் சொல்லணும்னு எதாவது வேண்டுதலா மலர்?” என்றான் நக்கலாக.

“அப்படில்லாம் ஒன்னும் இல்லைங்க.” என்றாள் புன்சிரிப்புடன்.

“சரி மலர் இந்த பரபரப்பு டென்ஷன் அப்படி இப்படினு உனக்கு டையர்டா இருக்கும். நீ வேணா படுக்கறியா?”

“ம்ம்ம்”

“ஷப்பா இவளோட”

“இப்ப உனக்கு தூக்கம் வருதா வரலையா?” என்றான் தலையை பிடித்துக் கொண்டு.

“அது வந்து”

“அம்மா தாயே இந்த வந்து போய்ய விடு. இப்ப உனக்கு தூங்கணுமா?”

“ஆமாங்க எனக்கு தூக்கம் வருது” என்றாள்.

“இதை சொல்ல உனக்கு இவ்வளவு நேரம்” என சலித்துக்கொண்டான் சூர்யா.

“சரி மலர் நீ தூங்கு. நான் கொஞ்சம் நேரம் புக் படிக்க போறேன். லைட் எறியரது உனக்கு ஒன்னும் தொந்தரவா இருக்குமா?”

“அதெல்லாம் இல்லைங்க நீங்க படிங்க” என்றவள் தலையனையை எடுத்து தரையில் போட்டாள்.

“என்ன பண்ற மலர்?” என வினவினான்.

“நீங்க தானே சொன்னீங்க” என்றாள் தயக்கமாக.

“என்ன சொன்னேன்?” என அவளை எதிர் கேள்வி கேட்டான் சூர்யா.

“நம்ம ரெண்டு பேரும் விலகி இருக்கலாம்னு” என்றாள் தன் கண்களை சுருக்கிக் கொண்டு.

“அட கிறுக்கி விலகி இருக்கலாம்னு நான் எப்ப சொன்னேன்? நம்ம ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சிக்கர வரை பொறுமையா இருக்கலாம்னு சொன்னேன் புரிஞ்சுதா? நீ மேல வந்து படு” என்றான்.

அவன் இவ்வளவு விளக்கியும் அவள் முகத்தில் இருந்த யோசனையை கவனித்தவன் “என்ன ராத்திரி உன் மேல பாய்ந்துடுவேன்னு பயமா இருக்கா?”

“ஐயையோ! அப்படில்லாம் நான் ஒன்னும் பயப்படல” என்றாள் பதட்டத்துடன்.

“இங்க பாரு மலர் தனித்தனியா படுக்க இது சீரியல் இல்லை. நீ ஒரு பக்கம் நான் ஒரு பக்கம் இருந்தா நம்ம எப்படி ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்க முடியும். பேசாம வந்து பெட்ல படும்மா” என்றான்.

அவன் கூறியதை கேட்டு அவன் அக்கறையில் நெகிழ்ந்த மலர் “சரிங்க” என பெட்டில் படித்தாள்.

“குட்நைட் மலர்” அதில் சிரித்தாள் மலர்.

“உங்களுக்கும் குட் நைட்” என்ற மலர் படுத்ததும் தூங்கி விட்டாள்.

சூர்யா வெகு நேரம் புத்தகம் படித்துக் கொண்டிருந்தான். புத்தகத்தை மூடி வைத்து விட்டுச் சூர்யா படுக்க வந்த போது குழந்தையை போல கை கால்களை குறுக்கி படுத்திருந்த மலரை கண்டு அவளுக்கு போர்வையை போர்த்திவிட்டு அவள் தலையை கோதி, “நீ ரொம்ப அழகா இருக்க மலர்” என முனுமுனுத்துவிட்டு படுத்தான்.
தொடரும்...
 
அத்தியாயம் - 2

மணக்கோலத்தில் வந்து இறங்கிய சூர்யவையும்,மலரையும் கண்டு அதிர்ந்தாள் வித்யா.

“என்ன வித்யா பார்த்துட்டே இருக்க ஆரத்தி எடும்மா” என்றார் கமலம்.

வித்யாவின் முகத்தில் வன்மம் தெரிந்தது.

‘என் தங்கச்சி இருக்க வேண்டிய இடத்துக்கு நீ வந்துட்டியா? இருடீ உன்னை எப்படி ஓட ஓட விரட்றேன்னு பாரு’ என வஞ்சத்தில் கொதித்தாள் வித்யா.

வித்தியாவின் முகத்தில் தெரிந்த பாவனையில் மலர் பயந்து போனால்.

இருவரையும் அமர வைத்து பால் பழம் கொடுத்தனர்.

கமலம் மலரை விளக்கு ஏற்ற பணித்தார்.

மலர் தன் புகுந்த வீட்டில் விளக்கு ஏற்றி இறைவனை மனதார பிராத்திப்பதை அவள் தந்தையும் தாயும் கண்டு நெகிழச்சியுடன் கண் கலங்கினர்.

இரவு நெருங்கி விட்டது.

முதலிரவு சூர்யாவின் வீட்டில் ஏற்பாடு செய்தனர்.

அந்த இருட்டில் மொட்டை மாடியில் தனியாக அமர்ந்திருந்த சூர்யாவை நெருங்கினார் சிவராமன்.

“என்னப்பா இங்க வந்து உட்கார்ந்திருக்க?” என்றவறின் கேள்விக்கு சூர்யா பதிலேதும் பேசாமல் இருந்தான்.

“அப்பா மேல கோவமா?” என்றார்.

“என்னப்பா இப்படி கேட்கிறீங்க?” என்றான் சூர்யா.

இல்லடா பயமா இருக்கு. என் பேச்சை கேட்டு கல்யாணம் பண்ணிகிட்ட ஆனா அவளோட நீ தானே வாழனும். ஒரு வேளை அவளை ஒதுக்கி வச்சிருவியோன்னு ரொம்ப பயமா இருக்குப்பா?” என்றார் சிவராமன் பயத்துடன்.

“இந்த எண்ணம் உங்களுக்கு அவ கழுத்துல தாலிய கட்டுனு கட்டளை போடும் போது எங்க போச்சு?” என்றான் நக்கலாக.

“தயவு செஞ்சு அப்பாவ மன்னிச்சிரு. அப்பா மேல உள்ள கோபத்தை அந்த அப்பாவி பெண் மேல காட்டிறாதே. அவளை விட நல்ல பெண்ணை இந்த உலகத்தில எங்க தேடுனாலும் கிடைக்க மாட்டா. இந்த உண்மைய இன்னைக்கு இல்லைனாலும் என்னைகாவது ஒரு நாள் புரிஞ்சுப்ப.” என்றார்.

“மலரை எனக்கு நல்லாவே தெரியும்ப்பா அவ குணம் நல்ல மனசு எல்லாம் எனக்கு தெரியும். ஆனா உங்க மனசுல இருந்த ஆசைய அவுங்க சூழ்நிலைய பயன்படுத்தி நிறைவேத்தீட்டீங்க” என்ற சூர்யாவுக்கு பதில் சொல்ல முடியாமல் திணறினார் சிவராமன்.

“உங்க எண்ணத்தை நான் தப்பு சொல்லலை. ஆனா இது ரெண்டு பேரோட தனி பட்ட வாழ்க்கை. ஒரு வேளை என் மனசுல வேற பெண் இருந்தா என்ன பன்னுவீங்க? என்னை விடுங்க மலரை யோசிச்சு பார்த்தீங்களா? அவளுக்கு இதுல சம்மதமானு ஒரு வார்த்தை கேட்டீங்களா? அவளுக்குனு விருப்பு வெறுப்புனு இருக்காதா?” என்ற மகனின் கேள்வியில் உடைந்து போனார் சிவராமன்.

“அப்பா உங்கள குத்தி காட்ட நான் இதெல்லாம் சொல்லல. ஆனா ஒரு வார்த்தை நீங்க மலரையும் கேட்டுருக்கணும். இனி இதை பத்தி பேசி ஆக போறது ஒன்னுமில்லை. மலர் கழுத்துல நான் எப்ப தாலி காட்டினேனோ அப்பவே அவ என் பொறுப்பு அவளை நான் நல்ல பார்த்துப்பேன்” என்றான் சூர்யா பொறுப்பான கணவனாக.

“இது போதும்ப்பா இனி நான் நிம்மதியா இருப்பேன்” என அங்கிருந்து அகன்றார்.

அலங்காரத்தை முடித்து விட்டு மலரிடம் வந்த தேவகி “சூர்யா உன்னை கல்யாணம் பண்ணிகிட்டு உன்னோட வாழ்க்கைய மட்டுமில்லாம உன் அப்பா உயிரையும் காப்பாத்திருக்கான். அவன் நமக்கு பண்ணினது ரொம்ப பெரிய விஷயம் அதனால சூர்யா மனசு கோணாம நடந்துக்கு. அவன் கோவப்படாலும் கொஞ்சம் பொறுத்து போ. இந்த குடும்பத்தோட சந்தோசதுக்காக எதையும் செய்ய தயாரா இருக்கணும்” என தன் மகளுக்கு அறிவுரை வழங்கினார்.

“அம்மா, நீங்க ஒன்னும் கவலைப்படாதீங்க எல்லாத்தையும் நான் பார்த்துப்பேன்” என தன் தாயிடம் நம்பிக்கையாக உரைத்தாள் மலர்.

மலர் சூர்யாவின் அறையில் அவன் வரவுக்காக காத்திருந்தாள். கதைவை மூடி விட்டு அவன் தன்னை நெருங்கி வருவதை உணர்தாள்.

அவனை நோக்கி விறைந்த மலர் அவன் பாதங்களில் பணிந்தாள்.

“ஹேய் ! என்ன மலர் என்ன இதெல்லாம் எழுந்திரி” என அதட்டினான்.

“நீங்க மட்டும் இந்த தாலிய கட்டலனா என் குடும்பமே உடைஞ்சு போயிருக்கும்” என கை கூப்பினாள்.

“என்ன மலர் நான் உன்னை கல்யாணம் பண்ணலனா என்ன நடந்திருக்கும் ஒன்னும் ஆகிருக்காது. கொஞ்சம் நாள்ல இதுல இருந்து வெளிய வந்து உனக்கான துணை கூட உன் வாழ்க்கை தொடங்கிருக்கும் அவ்ளோ தான். அதை விட்டுட்டு என்னமோ என்னை கடவுள் போல ட்ரீட் பண்ணாதே” என்றான் சூர்யா.

அவன் சொன்னதை கேட்டு அவள் முகம் சுருங்கியது.

அவள் முக பாவனையை கண்டவன் “நீ தப்பா எடுத்துக்கிட்டாலும் நான் எதார்த்தத்தை தான் பேசுறேன்ம்மா” என்றான்.

புரிந்தது என்பது போல தலையசைத்தாள் மலர்.

“அதுக்காக எனக்கு உன்னை பிடிக்கலைனு சொல்லமாட்டேன். எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும். நீ ரொம்ப நல்ல பொண்ணு. அதனால இப்படி இதெல்லாம் பெரிய விஷயம்னு சொல்லி இப்படி நடந்துக்காதே.”

“சரிங்க”

“மலர், நான் ஒன்னு சொன்னா தப்பா எடுத்துக்காதே” என தயங்கினான் சூர்யா.

“சொல்லுங்க.”

“இல்ல மலர் நம்ம கல்யாணம் தான் எதிர்பாராம நடந்துச்சு. ஆனா நம்ம வாழ்க்கை அப்படி தொடங்க கூடாது. எனக்குனு சில லட்சியங்கள் இருக்கு அதை நான் அடையணும். உண்மையான தாம்பத்தியம் ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்கறதுல தான் இருக்கு.

அதனால நாம ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்கிற வரை இதெல்லாம் வேண்டாமே. நாம்ம நல்ல நண்பர்களா இருக்கலாமே. கல்யாணம் ஆன அன்னைக்கே எல்லாம் நடக்கணும்னு ஒன்னும் கட்டாயம் இல்ல தானே. தாம்பத்தியத்தை உடல்ரீதியா பார்க்காம மனம் சார்ந்ததா பார்க்கணும். உண்மையான குடும்ப வாழ்க்கை உடல் சங்கமத்துல இல்ல ரெண்டு மனசோட சங்கமத்துல இருக்கு. இதை நீ புரிஞ்சுப்பேனு நினைக்கிறேன்.”

“சரிங்க இதான் உங்க விருப்பம்னா எனக்கு இதுல சம்மதம்” என்றாள்.

“என்ன மலர் இப்படிச் சொல்ற? நீ என்னோட மனைவி உன்னோட விருப்பம் எதுனாலும் நீ என்கிட்ட சொல்லலாம். உனக்கு என்கிட்ட எல்லா உரிமையும் இருக்கு அதை உனக்கு இது கொடுத்திருக்கு” என அவன் கட்டிய மாங்கல்யத்தை அவள் கழுத்துலிருந்து எடுத்து நீட்டினான்.

அவன் கை தன் கழுத்தில் பட்டதும் தன் உடம்பில் ஏதோ ரசாயன மாற்றத்தை உணர்ந்தாள் மலர்.

“என்னங்க இப்படில்லாம் பேசுறீங்க. சரியான நேரத்துல எனக்கு தாலி கட்டி என்னோட மானத்தையும் எங்க அப்பாவோட உயிரையும் எனக்கு திருப்பி கொடுத்துருக்கீங்க. இந்த வாழ்க்கை எனக்கு நீங்க போட்ட பிச்சை இதுக்கு நான் நன்றி உள்ளவளா இருப்பேன். உங்களுக்காகவும் இந்த குடும்பத்துக்காகவும் என்னோட உயிரை வேணாலும் கொடுப்பேன்.”
(அட யாரா இவ 80ஸ் ஹீரோயின் கூட இல்லை பிளாக் அண்ட் ஒயிட் காலத்து ஹீரோயினா இருப்பா போல)

“ஸ்டாப் இட் மலர் இப்படி ஸ்டுப்பிட் போல யோசிக்கறத முதல்ல நிறுத்து. நான் நம்ம கல்யாணம் எதிர்பார்க்காம நடந்ததுன்னு தான் சொன்னேன் பிடிக்காம கல்யாணம் பண்ணிகிட்டேன்னு சொல்லல. நான் என் அப்பா சொன்னாங்கனு கல்யாணம் பண்ணிகிட்டது என்னவோ உண்மை தான். ஆனா உனக்கு என்ன குறைச்சல்? அழகு, அமைதி, அடக்கம்னு எல்லாமே உன்கிட்ட இருக்கு அப்புறம் எதுக்கு உனக்கு இந்த தாழ்வு மனப்பான்மை. அதனால நீ உன்னோட மனசுல எது இருந்தாலும் வெளிப்படையா சொல்லலாம் புரியுதா?”

“சரிங்க புரிஞ்சுது” என தலையாட்டினாள் மலர்.

அவள் தலையாட்டும் போது அழகாக அசைந்த ஜிமிக்கி சூர்யாவை கவர்ந்தது.

“நாளைக்கு உன்னை வெளிய கூட்டிட்டுப் போறேன்.”

“சரிங்க” என சந்தோசத்துடன் தலையசைத்தாள் மலர்.

“சொல்லு மலர் நம்ம எங்க போகலாம்?”

“உங்களுக்கு எங்க போகனும்னு இஷ்டமோ நம்ம அங்க போகலாம்” என்றாள்.

‘இவ மாற மாட்டா’ என தலையில் அடித்துக் கொண்டவன் ‘இரு நான் உன்னை எப்படி மாத்துறேன்னு பாரு’ என தனக்குள் சபதம் செய்து கொண்டான்.

“நம்ம கல்யாணம் எதிர்பார்க்காம திடீர்னு நடந்துருச்சு. அதனால என்னோட ஃப்ரெண்ட்ஸ் எல்லாருக்கும் ட்ரீட் கொடுக்கலாம். என்னோட ஃப்ரெண்ட்ஸ்கிட்டயும் உன்னை இன்ட்ரடியூஸ் பண்ண மாதிரி இருக்கும்.”

“சரிங்க போகலாம்” என்றாள் மலர்.

“அப்புறம் இன்னொரு விஷயம்.”

“சொல்லுங்க.”

“நம்ம ரெண்டு குடும்பமும் அவ்ளோ நெருக்கமா இருக்கு நம்ம ரெண்டு பேரால அவுங்க நட்பு என்னைக்கும் கெட்டு போயிடக்கூடாது. அதனால நமக்குள்ள நடக்குற எதுவும் அவுங்களுக்கு தெரிய வேண்டாம்.”

“கண்டிப்பா அப்படி எதுவும் நடக்காது. நம்ம ரெண்டு பேரு குடும்பமும் இதே போல ஒத்துமையா எப்பவும் இருக்கும்” என்றதும் அவன் அவளை பார்த்து புன்னகைத்தான்.

“அங்கிள் அடிக்கடி இங்க வந்து போயிருக்காங்க. ஆனா நீ நம்ம வீட்டுக்கு அடிக்கடி வந்து போனதில்லை. உனக்கே உங்க அப்பா சொல்லி தெரிஞ்சிருக்கும் ஆனாலும் சொல்றேன். அம்மா அப்பாவ பத்தி உனக்கு நல்லா தெரியும். மத்தபடி பிரபு அண்ணா ரொம்ப நல்ல குணம் பயங்கர அமைதியானவர். வித்யா அண்ணிய லவ் பண்ணி கல்யாணம் பண்ணிகிட்டாங்க. அண்ணி கொஞ்சம் ஒரு மாதிரி வித்யாசமா நடந்துகிட்டா எனக்காக கொஞ்சம் பொறுத்துக்க.”

“சரிங்க.”

“அப்புறம் சுதிர் ரொம்ப சமத்து. நம்ம கிட்ட நல்ல பழகுவான். அப்புறம் சுஜிதாவ பத்தி உனக்கு நல்லா தெரியும். அவ ப்ரெண்ட்லியா துறுதுறுனு இருப்பா. உன்னோட புகுந்த வீடு பத்தி சொல்ல இதுக்கு மேல வேற ஒன்னும் இல்ல.”

“சரிங்க.”

“எது சொன்னாலும் சரிங்க இதை தவிர உனக்கு வேற எதுவும் தெரியாதா? ஒரே வார்த்தைல பதில் சொல்லணும்னு எதாவது வேண்டுதலா மலர்?” என்றான் நக்கலாக.

“அப்படில்லாம் ஒன்னும் இல்லைங்க.” என்றாள் புன்சிரிப்புடன்.

“சரி மலர் இந்த பரபரப்பு டென்ஷன் அப்படி இப்படினு உனக்கு டையர்டா இருக்கும். நீ வேணா படுக்கறியா?”

“ம்ம்ம்”

“ஷப்பா இவளோட”

“இப்ப உனக்கு தூக்கம் வருதா வரலையா?” என்றான் தலையை பிடித்துக் கொண்டு.

“அது வந்து”

“அம்மா தாயே இந்த வந்து போய்ய விடு. இப்ப உனக்கு தூங்கணுமா?”

“ஆமாங்க எனக்கு தூக்கம் வருது” என்றாள்.

“இதை சொல்ல உனக்கு இவ்வளவு நேரம்” என சலித்துக்கொண்டான் சூர்யா.

“சரி மலர் நீ தூங்கு. நான் கொஞ்சம் நேரம் புக் படிக்க போறேன். லைட் எறியரது உனக்கு ஒன்னும் தொந்தரவா இருக்குமா?”

“அதெல்லாம் இல்லைங்க நீங்க படிங்க” என்றவள் தலையனையை எடுத்து தரையில் போட்டாள்.

“என்ன பண்ற மலர்?” என வினவினான்.

“நீங்க தானே சொன்னீங்க” என்றாள் தயக்கமாக.

“என்ன சொன்னேன்?” என அவளை எதிர் கேள்வி கேட்டான் சூர்யா.

“நம்ம ரெண்டு பேரும் விலகி இருக்கலாம்னு” என்றாள் தன் கண்களை சுருக்கிக் கொண்டு.

“அட கிறுக்கி விலகி இருக்கலாம்னு நான் எப்ப சொன்னேன்? நம்ம ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சிக்கர வரை பொறுமையா இருக்கலாம்னு சொன்னேன் புரிஞ்சுதா? நீ மேல வந்து படு” என்றான்.

அவன் இவ்வளவு விளக்கியும் அவள் முகத்தில் இருந்த யோசனையை கவனித்தவன் “என்ன ராத்திரி உன் மேல பாய்ந்துடுவேன்னு பயமா இருக்கா?”

“ஐயையோ! அப்படில்லாம் நான் ஒன்னும் பயப்படல” என்றாள் பதட்டத்துடன்.

“இங்க பாரு மலர் தனித்தனியா படுக்க இது சீரியல் இல்லை. நீ ஒரு பக்கம் நான் ஒரு பக்கம் இருந்தா நம்ம எப்படி ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்க முடியும். பேசாம வந்து பெட்ல படும்மா” என்றான்.

அவன் கூறியதை கேட்டு அவன் அக்கறையில் நெகிழ்ந்த மலர் “சரிங்க” என பெட்டில் படித்தாள்.

“குட்நைட் மலர்” அதில் சிரித்தாள் மலர்.

“உங்களுக்கும் குட் நைட்” என்ற மலர் படுத்ததும் தூங்கி விட்டாள்.


சூர்யா வெகு நேரம் புத்தகம் படித்துக் கொண்டிருந்தான். புத்தகத்தை மூடி வைத்து விட்டுச் சூர்யா படுக்க வந்த போது குழந்தையை போல கை கால்களை குறுக்கி படுத்திருந்த மலரை கண்டு அவளுக்கு போர்வையை போர்த்திவிட்டு அவள் தலையை கோதி, “நீ ரொம்ப அழகா இருக்க மலர்” என முனுமுனுத்துவிட்டு படுத்தான்.
தொடரும்...
 
அத்தியாயம் - 3

கணவனின் முதல் தீண்டலை உணராதவளாக ஆழ்ந்த உற்கத்தில் இருந்தாள் மலர்.

அதிகாலையில் எழுந்த மலர் குளித்து முடித்து பூஜை அறைக்கு வந்தாள். விளக்கு ஏற்றி திருநீர் பூசி விட்டு கழுத்தில் கிடந்த பொன் மாங்கல்யத்தை எடுத்துக் கண்களில் ஒற்றிக் கொண்டாள்.

அங்கு வந்த கமலம் மலரை பார்த்து “என்னம்மா ஏன் காலைலயே எந்திரிச்சிட்டே. உனக்கு அசதியா இருக்கும். இன்னும் கொஞ்ச நேரம் தூங்க வேண்டியது தானே?”
(அசதியா அதான் ஒன்னும் நடக்கலையே)

“இல்ல அத்தை வீட்டுப் பெண்கள் காலைல எந்திரிச்சி குளிச்சி முழுகி இருந்தா தான் அந்த வீட்டுக்கு மகாலக்ஷ்மி வருவாங்கனு எங்க அம்மா அடிக்கடி சொல்லுவாங்க அத்தை.”

“அம்மாடி மலர் நீயே இந்த வீட்டோட மகாலக்ஷ்மி தான் உன்னை விட வேற எந்த மகாலக்ஷ்மி இந்த வீட்டுக்கு வர முடியும்.”

“போங்க அத்தை எப்ப பார்த்தாலும் ஜோக் அடிச்சிட்டு” என சிரித்தாள் மலர்.

“அத்தை அப்புறம்…” என ஆரம்பித்து தயங்கினாள் மலர்.

“என்னம்மா.”

“இல்ல அத்தை அது வந்து அவரு.”

“எவரு மா?” என்றார் கமலம் சிரிப்பை அடக்கிக் கொண்டு.

“உங்க பிள்ளை இருக்காருல.”

“யாரு பிரபு வா?”

“அத்தை உங்க சின்ன மகனை சொல்றேன்”

“ஏன் உன் புருஷன்னு சொல்ல மாட்டியா?”

“அவரு இன்னைக்கு வெளிய போகனும்னு சொன்னாரு அத்தை.”

“சரி.”

“அவரு ப்ரெண்ட்ஸ்க்கு ட்ரீட் கொடுக்கணுமாம்.”

“சரி.”

“அவரு என்னையும் கூப்பிட்டாரு அத்தை.”

“சரி”

சிறிது நேரம் தயங்கி விட்டு “நானும் அவரு கூட போயிட்டு வரட்டுமா?” என அனுமதி கேட்டாள். (யாரும்மா நீ பாகவதர் காலத்து மருமகளா இருக்க)

“என்ன மலர் இது உன் புருஷன் கூட நீ வெளிய போற அதுக்கு எதுக்கு என்கிட்ட இவ்ளோ தயங்கி அனுமதி கேட்கிற போயிட்டு வா.” என்றார் கமலம்.

“அத்தை அவரு உங்க பிள்ளை நான் உங்க மருமக உங்களோட அனுமதியும் சம்மதமும் இல்லாம நாங்க எதுவும் செய்ய மாட்டோம். எங்க வீட்ல எது நாளும் எங்க அம்மா கிட்ட அனுமதி கேட்டு தான் செய்வோம். இனிமே நீங்க தானே அத்தை என்னோட அம்மா. அதனால தான் உங்க கிட்ட அனுமதி கேட்டேன்.” (அடடடடா இந்த பிளக் அண்ட் ஒயிட் காலத்து ஹீரோயின் தொல்லை தாங்க முடியலையே)

“அட போம்மா கொஞ்சம் கூட என்னை மாமியார் ரோல் பண்ண விட மாட்ட போல. சந்தோசமா போயிட்டு வாம்மா”

“சரி அத்தை பால் காய்ச்சிட்டேன் காபி தர்றேன்.”

“சரிம்மா கொண்டு வா.”

“அத்தை இந்தாங்க காபி.”

அவள் கொடுத்த காஃபியை வாங்கி ஒரு மடக்கு அருந்திய கமலம் “காபி அருமையா இருக்கு” என மருமகளை பாராட்டினார்.

“தேங்க்ஸ் அத்தை.”

“அடுத்து அவருக்கு காபி எடுத்துட்டு போகவானு கேட்காதே அவனுக்கு காபி கொண்டு போய் கொடு” என்றார்.

“சரிங்க அத்தை நான் போய் அவருக்கு காபி கொடுத்துட்டு வர்றேன்.”

மலர் காபியோடு அறைக்குள் வந்த போது ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான் சூர்யா.

“என்னங்க என்னங்க” ஊஹூம் அவனிடம் அசைவில்லை.

என்ன செய்யலாம் என யோசித்த மலர் தன் கைகளில் இருந்த கண்ணாடி வளையலை பார்த்தாள் ஏதோ எண்ணம் தோன்ற தன் கைகளை குழுக்கினாள். கலகலவென்ற வளையல் ஓசையில் அவன் எழுந்து அமர்ந்தான்.

தன் அருகில் மலர் கையை குலுக்குவதையும் அது அவள் வளையலின் ஓசை என்பதை உணர்ந்தவன் “மலர் காலைலயே இது என்ன விளையாட்டு.”

“இல்ல காபி குடுக்க உங்களை எழுப்பனும். எப்படி எழுப்பறதுன்னு தெரியலை. சாரிங்க பிளீஸ் கோபப்படாதீங்க.”

மலரின் பயந்த முகத்தைப் பார்த்து கலகலவென சிரித்தான் சூர்யா.

“மலர் உன்னோட பயந்த அம்மாஞ்சி முகம் பார்க்க அவ்வளவு கூயூட்டா இருக்கு.” என்றதும் அவள் முகம் போன போக்கை பார்த்து மேலும் அவனுக்கு சிரிப்பு பொத்துக் கொண்டு வந்தது.

“என்னங்க காபி.”

“கொடு இங்க.. மலர் காபி வித்தியாசமா சூப்பரா இருக்கு நீயா போட்ட?”

“ஆமாங்க எப்படி நான் தான் காபி போட்டேனு கண்டு பிடிச்சீங்க?”

“அதுவா டெய்லி நான் குடிக்கிற காபி கழனி தண்ணி மாதிரி இருக்கும். இன்னைக்கு காபி சூப்பரா இருக்கும் போது நீ தான் காபி போட்றுப்பேன்னு என் ஆறாவது அறிவு சொல்லுச்சு.” என்றான்.

“இருங்க நான் அத்தைகிட்ட போட்டு குடுக்கிறேன்.”

“ஆஹான் என்னனு சொல்லுவ?” என்றான் சிரித்துக் கொண்டே.

“உங்க பிள்ளை சொல்றாரு உங்க காபி கழனி தண்ணி மாதிரி இருந்துச்சாம்னு சொல்லுவேன்” என்றாள் சிரித்துக் கொண்டே.

“ இப்படியெல்லாம் கூட உனக்கு பேச தெரியுமா? ஐ லைக் இட். போ போய் உன் மாமியார்ட்ட போட்டுக் கொடு” என்றான் சிரித்துக் கொண்டே.

“என்னங்க பாத்ரூம்ல ஹீட்டர் போட்டு வெந்நீர் விளாவி வைச்சிட்டேன். டவல் எடுத்து நீட்டியவள் நீங்க குளிச்சிட்டு வாங்க.” என்றவள் அங்கிருந்து கிளம்ப போனாள்.

“மலர் ஒரு நிமிசம் நில்லேன்.”

“சொல்லுங்க.”

“மலர் அப்படியே நீயே என்னை குளிப்பாட்டி விட்றேன்.” என்றான் குறும்பாக.

அவன் சொன்னதை கேட்டு அவள் முகம் குங்குமமாக சிவந்தது.

“இல்ல நான் என்ன குழந்தையா? நீ இப்படி எனக்காக எல்லாம் செஞ்சு என்னை சோம்பேறி ஆக்காதே. ஒரு மனுஷனை சோம்பேறி ஆக்கவா கல்யாணம். நீ என்னை கவனிக்கிறேன்னு என்னை சோம்பேறி ஆக்காதே அதை நான் விரும்பமாட்டேன். இன்னைக்கு நீ செஞ்சிட்ட தாங்கஸ். ஐ லைக் யூ” என்றதும் அவள் முகம் சிவந்து செவ்வானமாய் மாறியது.

வெட்கத்துடன் வேகமாக அறையை விட்டு வெளியேறவள் கவனிக்காமல் எதிரே வந்த வித்யாவின் மீது கவனிக்காமல் மோதினாள்.

“அக்கா சாரி கவனிக்காம மோதிட்டேன்” என மன்னிப்பு கேட்டாள்.

“ஆமாடீ நீ இந்த உலகத்துல இருந்தா தானே. நேத்து வரைக்கும் பிச்சைக்காரியா இருந்தவளுக்கு இன்னைக்கு பணக்கார ராஜ வாழ்க்கை கிடைச்சிருக்குல அதான் கண்ணு முன்னு தெரியாம ஆடுற. இந்நேரம் உன் புருஷன மயக்கி போட்டு உன் லோ கிளாஸ் புத்திய காட்டிருப்ப. ச்சே காலங் காத்தால உன் முகத்துல முழுச்சிருக்கேன் விளங்கும்” என முகத்தை சுளித்தாள்.

மலரால் அவள் பேசியதை ஜீரணிக்க முடியவில்லை. மறுபடியும் அறைக்குள் ஓடி வந்தவள் கண் கலங்கியபடி கட்டிலில் அமர்ந்து அழுதாள்.

அவள் அழுவதை கவனிக்காத சூர்யா “என்ன மலர் இப்ப தான் கீழ போன அதுக்குள்ள திரும்பி வந்துட்ட” என அவள் அருகில் சென்றவன் திகைத்தான்.

அவள் அருகே அமர்ந்தவன் அவள் முகத்தை பற்றி நிமிர்த்தியவன் “என்னம்மா எதுக்கு அழற?” என்றான் பதட்டத்துடன்.

அவனது என்னம்மாவில் மேலும் பொங்கி வந்த அழுகையை அடக்கியவள் “அதெல்லாம் ஒன்னுமில்ல கண்ணுல தூசி விழுந்துடுச்சு. அவ்வளவு தான் நான் கீழ போறேன் விடுங்க” என அவனிடமிருந்து விலகினாள்.

“மலர் எங்க போற இங்க உட்காரு” என அதட்டியவன் அவள் முகத்தை பார்த்து தன் கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டான்.

“என்னம்மா என்ன பிரச்சனை?”

“அதெல்லாம் ஒன்னும் இல்லைங்க. வெளிய போகனும்னு சொன்னீங்க தானே நீங்க ரெடி ஆகுங்க. நான் வேற சாரி மாத்திட்டு வர்றேன். நீங்க பார்த்து சொல்லுங்க இந்த சாரி கட்டவா இல்லை அந்த சாரி கட்டவா?” என பேச்சை மாற்றினாள்.

அவள் பேச்சை மாற்றுவதை புரிந்து கொண்டவன் மேலும் அதை பற்றி பேசவில்லை.

“உன்கிட்ட டிசைனர் சாரி இருக்கா?”

“இதோ இதை பாருங்க” என புடவையை அவனிடம் காட்டினாள்.

“இது நல்லாருக்கு உனக்கு ரொம்ப பொருத்தமா இருக்கும். இதை கட்டிக்க” என்றான்.

“சரிங்க நான் ரெடி ஆகுறேன்.”

“சரி மலர் நீ கிளம்பு” என அந்த அறைக்குள் இருந்த மற்றொரு அறைக்குள் நுழைந்தான் சூர்யா.

‘என்னாச்சு நல்லா தானே இருந்தா’ என யோசனையில் மூழ்கினான்.

நேரம் செல்ல தன் யோசனையில் இருந்து விடுபட்டவன் தன்னை தானே கண்ணாடியில் பார்த்தான். ‘நல்லா தான்டா இருக்க’ என விசிலடித்தபடி பர்ப்பூயூம் அடித்தான்.

டக் டக் என கதவை தட்டிவிட்டு “என்னங்க நான் உள்ள வரட்டுமா?” எனக் கேட்டாள் மலர்.

“நான் ரெடி நீ உள்ள வா” என அவளை அழைத்தான்.

ஆகாய நீல நிற புடவையில் தேவதையாக ஜொலித்தாள் மலர்.

“வாவ் தேவதை போல இருக்க” என மலரின் அழகை புகழ்ந்தான்.

“தேங்க்ஸ்ங்க நீங்களும் ஸ்மார்ட்டா இருக்கீங்க.”

அப்படியா? இப்படிக் கூடவா உனக்கு பேசத் தெரியும் மலர்?” என அவன் கேலி செய்தான்.

“சரி வாங்க கிளம்பலாம். டைம் ஆச்சு.”

“வா போகலாம்” என அவளை அழைத்துக் கொண்டு கிளம்பினான்.

“அத்தை ஒரு நிமிஷம் இங்க வாங்களேன்” என கமலத்தை அழைத்தாள் மலர்.

“சொல்லு மலர்.”

“அத்தை காலைல நான் சொன்னேன்ல அவுங்க வெளிய போகனும்னு சொன்னாங்கனு.”

“அதான் போயிட்டு வானு சொல்லிட்டேன்ல.”

“அதில்லை அத்தை நாங்க ரெண்டு பேரும் முதல் முதலா சேர்ந்து வெளிய போறோம். எங்களை ஆசிர்வாதம் பண்ணுங்க அத்தை.”

“என்னங்க இங்க வாங்க.” என மலர் அழைத்ததும் இருவரும் கமலத்தின் கால்களில் வீழ்ந்து பணிந்தனர்.

“சந்தோஷமா இருங்க.”

“வேற லெவல் டிராமா. பணக்கார மாமியாரை இப்படி எதாவது பண்ணி தானே கைக்குள்ள போட்டுக்க முடியும்” என்றபடி அங்கு வந்தாள் வித்யா.

“இயல்பா இருக்கறத தப்பா பார்க்காதீங்க அண்ணி.” என்றான் சூர்யா.

“வித்யா மலரும், சூர்யாவும் வெளிய கிளம்புறாங்க. அவளுக்கு போட்டுக்க உன்னோட நெக்லசை எடுத்துக் கொடேன்” என்றார் கமலம்.

“ஒன்னும் இல்லாததுகள் எல்லாம் இந்த வீட்டுக்கு வந்து என் உயிரை எடுக்குது. என்னால நகை எல்லாம் தர முடியாது. கொடுத்தா திருப்பி வருமோ வராதோ யாருக்கு தெரியும்?” என்றாள் வித்யா.

வித்யா பேசிய விதத்தில் மலரின் கண்கள் கலங்கியது.

அதுவரை மலர்ந்து இருந்த மலரின் முகம் வேதனையில் கசங்கியதை கண்டு துடித்துப் போனான் சூர்யா.

“அம்மா நீங்க சும்மா இருக்க மாட்டீங்களா?” என தன் தாயை கடிந்தான் சூர்யா.

“அண்ணி என் பொண்டாட்டிக்கு யாரும் ஓசி தர வேண்டாம். என் பொண்டாட்டிக்கு என்னால புதுசாவே வாங்கித் தர முடியும். நாங்க போற வழியில் வாங்கிக்குவோம்.”

“சூர்யா இந்த பார்ட்டிக்கு உன் ஆசை பொண்டாட்டிய கூட்டிட்டுப் போறியே அங்க இவளுக்கு டீசண்ட்டா பிகேவ் பண்ண தெரியுமா? ஒன்னும் இல்லாத பஞ்சக் கூட்டம் தானே இதுங்க” என கேலி செய்து சிரித்தாள் வித்யா.

“ஆமா அண்ணி நீங்க சொல்றது சரி தான். மலருக்கு பணக்காரங்க எப்படி நடந்துபாங்கனு தெரியாது. அவகிட்ட வசதி நகை நட்டுனு எதுவும் கிடையாது. அவுங்க பஞ்சக் கூட்டம் தான்.” என்றான் சூர்யா.

சூர்யா சொன்னதை கேட்ட மலருக்கு தன் காதில் விழுந்ததை நம்ப முடியவில்லை. வித்யா தன்னை பார்க்கும் பார்வையில் அப்படியே பூமிக்குள் புதைந்து கொள்ளலாம் போல இருந்தது.

“ஆனா அவளுக்கு புருஷன் மனசு கோணாம எப்படி நடந்துக்கணும்னு தெரியும். பெரியவங்கள எப்படி மதிச்சு நடக்கறதுன்னு தெரிஞ்ச குணவதி. மொத்தத்துல எல்லோருக்கும் பிடிச்ச மாதிரி நடக்கற தேவதை. மொத்தத்துல அன்பு, பண்பு, அமைதி, அடக்கம்னு எல்லாமே இருக்கற பணக்காரி. திமிரு, கர்வம், ஆணவம், அகம்பாவம் எதுவும் இல்லாத பிச்சைக்காரி தான்.”

“என்ன எனக்குத் திமிரு, அகம்பாவம் இருக்குனு சொல்றீயா சூர்யா?”

“நான் உங்களை எதுவுமே சொல்லலை அண்ணி. இதெல்லாம் என் பொண்டாட்டி கிட்ட இல்லைனு தான் சொன்னேன்.”

“நேத்து வந்த எவளோ ஒருத்திக்காக உன்னோட அண்ணியை தூக்கி எறியறியா.”

“தப்பா சொல்றீங்க அண்ணி. நேத்து முந்தா நாள் வரைக்கும் யாரோ.. நேத்துல இருந்து நான் தொட்டுத் தாலி கட்டின பொண்டாட்டி. வா மலர் போகலாம்.”

சூர்யா கார் ஒட்டுவதைப் பார்த்தபடியே அமர்ந்து இருந்தாள் மலர்.

“என்ன மலர் என்னையே அப்படிப் பார்க்கற?”

“காலைல ஏன்ங்க எனக்காக உங்க அண்ணி கிட்ட சண்டை போட்டீங்க.”

“சண்டை போடலை மலர் உண்மைய எடுத்து சொன்னேன். காரணமே இல்லாம உன்னை ஒருத்தர் சீப்பா நடத்துறத என்னால எப்படிப் பார்க்காம கண்டுக்காம விட முடியும். என்னால உன்னை யாருகிட்டேயும் விட்டுக் கொடுக்க முடியாது.”

“என்னங்க தாங்க்ஸ்.”

“இதுக்கு எதுக்கு தாங்க்ஸ் சொல்ற. நீ என்னோட மனைவி”

காரை ஒரு நகைக்கடை வாசலில் நிறுத்தினான்.

“என்னங்க இங்க நிறுத்தறீங்க?”

“உள்ள வா மலர்.”

“என்ன சார் என்ன பார்க்கறீங்க?” என்றார் அந்த கடை முதலாளி

“தாலிச் செயின் ஒன்னு, நெக்லஸ், தோடு, மோதிரம் இப்படி எல்லாமே பார்க்கணும்.” என்றான் சூர்யா.

“என்ன சார் புது ஜோடியா?”

“ஆமாம் சார்.” என்றான் சூர்யா மெலிதாக வெட்க புன்னகையுடன்.

“என்னங்க இதெல்லாம் வேண்டாங்க?”

“இது என்னோட கிஃப்ட் . பேசாம வாங்கிக்க. இதை பாரு இது நல்லாருக்கு” என அவளின் கழுத்தில் நெக்லசை வைத்து பார்த்தான்.

மலரின் தேகம் அப்படியே சிலிர்த்தது. அவள் வயிற்றுக்குள் பட்டாம் பூச்சி பறப்பது போல படபடத்து போனாள்.

அவளுக்கான நகைகளை பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்தான் சூர்யா. அதை அணிய வைத்து அவளை பார்ட்டி ஏற்பாடு செய்திருந்த மெரிடியன் ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றான்.

அங்கு சூர்யாவின் தோழர்கள் குழுமி இருந்தனர்.

“சூர்யா யூ லுக் ஹன்ட்சம்” என பெண்கள் கூட்டம் அவனை நெருங்க சட்டென சுதாரித்த சூர்யா “மீட் மை ஒய்ஃப் மலர்.” என மலரை அணைத்து நெருங்கி நின்றான்.

“ஹாய் சூர்யா” என கேட்ட இனிமையான குரலில் அங்கு வந்த யுவதியை யாரென பார்த்தாள் மலர்.

“ஹாய் மினி எப்படி இருக்க?” என நலம் விசாரித்தான்.

“பைன் சூர்யா. மேரீட் லைஃப் எப்படி போகுது?” என விசாரித்தாள்.

“நல்ல போகுது”

“அவசர கல்யாணம்னா கூட அழகான மனைவி விஷ் யூ எ வெரி ஹேப்பி மேரீட் லைஃப்” என சூர்யாவை அணைத்தாள்.

“வித் ப்ளஷர்” என்றான் சிரித்துக் கொண்டே.

இதை பார்த்த மலரின் முகம் சுருங்கியது.

“ஓகே யூ கேரி ஆன். நான் மத்தவுங்க கூட இருக்கேன்.” என அங்கிருந்து சென்றாள் மினி.

“மலர் நீ என்ன சாப்பிடற?”

வழக்கம் போல “உங்க இஷ்டம்” என்றவள் தன் நாக்கை கடித்துக் கொண்டாள்.

அவள் செயலை கண்டு சிரித்த சூர்யா ‘மாட்டுனீயா’ என நினைத்தான்.

“சரி அப்ப சிக்கன் மட்டன் ஆர்டர் பண்ணவா?”

“ஐயையோ! நான் சுத்த சைவம்” என பதறினாள் மலர்.

“இதை முதல்லயே சொல்ல வேண்டியது தானே? சும்மா உங்க இஷ்டம் உங்க இஷ்டம்னா என்ன அரத்தம். இனி உங்க இஷ்டம்னு சொல்லு அடி வாங்குவ.” என்றான்.

அவர்கள் பார்ட்டி முடிந்து வர மாலை ஆகி விட்டது.

“அத்தை பார்தீங்களா இதெல்லாம் இவரு வாங்கிக் கொடுத்தது நல்லாருக்கா?” என்றபடி அவன் வாங்கி கொடுத்த நகைகளை தன் மாமியாரிடம் காட்டினாள்.

“ரொம்ப நல்லாருக்கு மலர். இந்த நகைலாம் போட்டு தேவதை போல இருக்க. சரிம்மா இவ்வளவு நேரம் பார்ட்டி அப்படி இப்படினு டையர்டா இருக்கும் போய் ரெஸ்ட் எடு.”

“சரி அத்தை” என்றபடி தங்கள் அறை நோக்கி சென்றாள் மலர்.

“ஏய் நில்லு” என அவளை வழி மறித்தாள் வித்யா.

“அக்கா”

“இதெல்லாம் உன் புருஷன் உனக்கு வாங்கி கொடுத்த நகையா?”

“ஆமாக்கா நல்லாருக்கா?” என்றாள் வெள்ளந்தியாக.

“ரொம்ப நல்லாயிருக்கு. இதுக்காக தானே நீ அவனை மயக்கி வைச்சிருக்க. இந்த வசதிக்காக தானே அவனை உன் வலைல வச்சிருக்க” என்றாள் வித்யா.

மலர் ஒன்றும் பேசாமல் அங்கிருந்து அகன்றாள்.

“என்னங்க.”

“என்ன மலர்?”

“இந்த நகையெல்லாம் பிடிங்க.” என நகைகளை அவனிடம் நீட்டினாள்.

சூர்யா அதை கையில் வாங்கினான்.

“என்னங்க நான் இந்த தாலிச் செயின் மட்டும் போட்டுக்கறேன் போதும். மத்தது எல்லாத்தையும் நீங்களே பத்திரமா வைச்சுக்கங்க.”

“ஏன் மலர் உனக்கு இந்த டிசைன் பிடிக்கலையா? வேணும்னா நம்ம மாத்திக்கலாம்?”

“அதெல்லாம் இல்லங்க பிளீஸ் இதை நீங்களே பத்திரமா வைங்க நான் போடும் போது வாங்கிக்கிறேன்” என்றவள் அவன் பதிலை எதிர்பார்க்காமல் சென்று படுத்தாள்.

‘என்ன ஆச்சு இவளுக்கு இவ்வளவு நேரமும் நல்லா தானே இருந்தா அம்மாட்ட கூட நல்லா இருக்கானு
ஆசையா கேட்டா பிறகு என்ன?’ என்றபடி உறங்கிவி்ட்டான்.
(ஷப்பா ஹீரோயின் புருஷனா இருப்பதை விட கஷ்டமான டாஸ்க் வேற எதுவும் இல்லை போல)

நல்ல உறக்கத்திலிருந்த சூர்யாவுக்கு முழிப்பு வர அருகில் படுத்திருந்த மலரை காணாமல் எழுந்து அமர்ந்தான்.

அவளை காணாமல் தேடிய சூர்யா அவள் இருந்த கோலத்தை கண்டு துடித்துப் போனான்.


தொடரும்....
 
Status
Not open for further replies.
Top