எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

சமுத்திரா - 6

சமுத்திரா - 6:​

கருநிற வானில் வெண்புறாவின் கூட்டம் படபடவென வெண்மை நிற சிறகுகளை அடித்துக் கொண்டே பறப்பது போல் இருட்டடித்து கருத்திருந்த கடலில் வெள்ளைநிற பாய்களை இறக்கையாய் கொண்ட கப்பல் மிதந்தவண்ணம் இருந்தது.​

e2af70d918f80cbca3d82549ce508fd7.jpg

அதனின் மேல் தளத்தில் இருந்த பாதி இடத்தை மூடிக்கிடந்த அட்டைப் பெட்டிகளே ஆக்கிரமித்திருந்தது.​

விலோச்சனா ப்ரதீப்பை முறைத்துப் பார்த்து திட்டிக் கொண்டிருக்க, ஆடவர்கள் மூவரும் சிரித்துக் கொண்டிருந்தனர். ப்ரதீப்பும் சலைக்காமல் விலோவை முறைத்து பார்த்துக் கொண்டிருந்தான்.​

"ச்சி.. உன்னை போய் என்னோட ஃபிரென்ட்னு சொல்லிக்கிறேன் பாரு. என்னோட புத்திய.." என்று ஆரம்பித்த விலோ முடிக்கும் முன்,​

"நான் ஷூ தான் விலோ போட்டுருக்கேன். உனக்கு ஓகே வா..?" என நகைத்த ப்ரதீப்பை பார்த்தவள்,​

"ச்சி குடிகாரா.. வாய மூடு" எரிச்சலுடன் கூறினாள். ஷிவன்யாயும் அவனை ஏற இறங்க ஒரு பார்வை பார்த்தவள் விலோவுடன் ஒதுங்கிக் கொண்டாள்.​

கண்ணைமூடிக் கொண்டு அந்த அற்புத பூதத்திடம் ப்ரதீப் வேண்டியது வேறொன்றுமில்லை.. ‘அவர்கள் இருந்த கப்பல் பாதியளவு இயற்கை முறையில் தயாரான மதுவால் நிரம்ப வேண்டும்!’ என்பதே!​

அதனை ப்ரதீப் கேட்டு முடித்து, அற்புத விளக்கு கடலில் அமிழ்ந்து அடங்கிய மறுநொடியில் அனைத்தும் நிறைவேறியதை பார்த்த அனைவரும் சற்று மிரண்டே போயினர்.​

பின், ‘அப்படியென்ன கேட்டிருக்கான்..’ என்று அனைவரும் ஒரு அட்டைப்பெட்டியை பிரித்துப் பார்த்தனர். மண் குடுவையில் நிரப்பப்பட்ட இயற்கை முறையில் தயாரான மதுபானம் அவர்களை பார்த்து பல்லிளித்தது. அதிலிருந்து தான் விலோ ப்ரதீப்பை திட்டிக் கொண்டிருக்கிறாள்.​

downloadfile-5.jpg

"டேய் மச்சான் சத்தியமா எனக்கு என்ன கேட்கணும்னு தெரியல டா. விளையாட்டை தவிர்த்து வேற அந்த பூதம் கேட்க சொல்லிடுச்சு. இல்லனா கூட இந்த விளையாட்டில் இருந்து நமக்கு விடுதலை கேட்டிருப்பேன். அந்த நேரம்.. அந்த பூதத்தை பார்த்த நொடி.. மொத்தமா என்னால யோசிக்கவே முடியல டா.." என்றான் ப்ரதீப் தன்னிலை விளக்கமாக.​

அமரன் நக்கல் வழிந்தோடிய குரலில், "கேட்டதும் தான் கேட்ட.. தங்கம் விக்குற விலைக்கு தங்ககட்டியை கேட்டிருக்கலாம்.." என இழுத்து கூற,​

"டேய் நானே என்னோட வரத்தை வேஸ்ட் பண்ணிட்டேன்னு கடுப்புல இருக்கேன். நீ வேற அதுல எண்ணையை ஊத்துகிறாயா..?" என்ற ப்ரதீப் அமரன் மீது பாய்ந்தான்.​

“நான் நீ வேற ஒன்னு கேட்பனு எதிர்பார்த்தேன். அதுக்கு இது எவ்வளவோ பரவாலை! விடு ப்ரதீப்” என்று ரங்கா சிரிப்புடன் சொல்ல, “என்னது ரங்க்ஸ்?” என்று விலோ கேட்டாள்.​

“ப்ரதீப் தான் எப்பவும் ஆள் இல்லன்னு பீல் பண்ணுவானே.. அதான் பொண்ணு கேட்பானோன்னு நினைச்சேன்..” என்று ரங்கா முடிக்க,​

“அந்தளவுக்கெல்லாம் அவனுக்கு திறமை இருந்தா தான் எப்பவோ கமிட் ஆகிருப்பானே டா..” என்று அமரன் கேலி செய்ய,​

‘ஐயோ! அருமையான ஐடியாவா இருக்கே.. இது அப்ப தோணாம போய்டுச்சே..’ என்று மனதிற்குள் எண்ணிக்கொண்ட ப்ரதீப் வெளியே, “ஹலோ வெட்டி ஆபீசர் அமரன், நான் யூனிவெர்சிட்டி டப்பர். தெரியும்ல..?” என்று கெத்தாகவே அமரனிடம் சொன்னான். அதற்கும் அவர்கள் சிரித்தனர்.​

'கைக்கெட்டியது வாய்க்கு எட்டவில்லை' என்ற பழமொழிக்கு ஏற்ப, இப்படி ஒரு வரம் கிடைத்தும் தன் அவசரத்தினால் தவறவிட்ட தருணத்தை அந்நொடி மனதிற்குள் சபிக்கவே செய்தேன் ப்ரதீப். சுற்றியிருந்தோர் வேறு அதற்கு தூபம் போடும் விதத்தில் அவனை மேலும் கிண்டலடித்துக் கொண்டிருந்தனர்.​

"எங்க கிட்ட கூட எதுவும் கேட்கவே இல்லைடா நீ.." என்று மீண்டும் தொடங்கிய விலோவை தடுத்த சக்தி அனைவரையும் பார்த்து சமாதானமாக, "சரி விடுங்க. அதான் முடிஞ்சிடுச்சே.. இப்ப பேசி அதை மாத்தவா முடியும்..? அடுத்து என்னன்னு பார்க்கலாம்" என்றான்.​

"அதான! உனக்கு ப்ரதீப்ன்னா ஒரு படி மேல தான்!" என விலோ சடைத்துக் கொண்டாள்.​

“நீ இந்த விளையாட்டுல இருந்து விடுதலை வேணும்னு கேட்க சொன்ன. ஆனா அது உஷாரா விளையாட்டை தவிர்த்து கேட்க சொல்லிடுச்சி. வேற என்ன கேட்டிருந்தாலும் நமக்கு அதுனால ஒன்னும் கிடைக்க போறதில்லை விலோ..” என்றான் சக்தி.​

“இருந்தாலும்.. உபயோகமா எதாவது கேட்டிருக்கலாம்..” என்று வாய்க்குள்ளேயே முனங்கினாள்.​

“சரிங்க மேடம். அடுத்த முறை அந்த ஜீபூம்பா வரப்ப நீங்களே உபயோகமா கேளுங்க..” என்ற ப்ரதீப் அமரனின் அருகில் சென்று அமர்ந்தான்.​

சக்தி, "அடுத்து நம்ம மூணு பேர்ல ஒருத்தர் போடணுமா..?" என அமரனையும் ரங்காவையும் பார்த்தான்.​

ப்ரதீப்போ, "இவன் போடுவான் சக்தி” என்று அமரனை கைக்காட்டினான்.​

"நானா..?" என வினவிய அமரனை கைசிறையில் பிடித்த ப்ரதீப், "நீ தான். என்னைய இப்படி தான பிடிச்சி போட வெச்ச. வா டா ராசா வா.." என மிரட்டல் விடுத்தான்.​

சிரிப்புடன் அவனின் கையை தட்டிவிட்ட அமரன், "சரிடா. நானே போடுறேன்" என்று சம்மதித்தான்.​

‘ஓ காட்! யார் போடுறதுன்னு முடிவு பண்ண ஒரு மணி நேரம். வந்த குறிப்புக்கு டிஸ்கஸ் பண்ண ஒரு மணிநேரம்னு போச்சுன்னா இவங்க எப்ப இதை முடிப்பாங்க..?’ என்றெண்ணிய ஷிவன்யாவிற்கு பெருமூச்சு தான் வந்தது.​

பின், சமுத்திரா பெட்டியை எடுத்து வந்த ஷிவன்யா அமரனின் முன் வைத்தாள். பகடையை அமரனின் கையில் கொடுத்தவள், அவனின் மற்றொரு பக்கத்தில் அமர்ந்துக் கொண்டாள்.​

விலோ, ரங்கா, சக்தியும் அவர்களுடன் இணைந்துக் கொள்ள அந்த பெட்டியை சுற்றி அருவரும் முழு வட்டமாக அமர்ந்துக் கொண்டனர். தன்னிடம் உள்ள பகடையை கீழே போட போன அமரனை, "வாட்ஸ் கோயிங் ஆன் ஹீயர்..?" (இங்கே என்ன நடக்கிறது ..?") என்ற கடுமையான குரல் தடை செய்தது.​

குரல் வந்த திசையில் இருந்து அக்கப்பலில் அவர்களுடன் பயணம் செய்துக்கொண்டிருந்த மாலுமிகளில் இருவர் வந்தனர். அந்த இருவரில் அவர்களால் மாஸ்டர் என்று அழைக்கப்பட்ட மார்ட்டினும் இருந்தார்.​

நண்பர்களின் கூட்டத்திடம் வந்தவுடன் மீண்டும், "இங்கே என்ன நடக்குது..?" என்று கப்பலில் தோன்றிய மாற்றத்தை பார்த்துக்கொண்டே குழப்பத்துடன் வினவினார் மார்ட்டின்.​

(கேப்டன்களிற்கும் இவர்களுக்கும் நடக்கும் உரையாடல் தமிழில் வரும்)​

அங்கிருந்து எழுந்த சக்தி, "மார்ட்டின்! நாங்களே உங்ககிட்ட கேட்கலாம்னு இருந்தோம்..” என்று விலோ அந்த பெட்டியை எடுத்தத்தில் இருந்து அதுவரை நடந்த அனைத்தையும் ஒன்று விடாமல் அவர்களிடம் சொல்லிவிட்டு, "இந்த பெட்டி உங்களுக்கு எப்படி கிடைத்தது..?" என்று சந்தேகக் கண்கொண்டு அவர்களை கூர்ந்து பார்த்தான்.​

downloadfile-7.jpg



‘நிச்சயமாக இவர்களுக்கு தெரியாமல் இதை போன்றோரு அமானுஷ்யங்கள் நிறைந்த அரியவகை விளையாட்டு இந்த கப்பலில் இருக்க வாய்ப்பில்லை’ என்றே சக்தி நினைத்திருந்தான்.​

சக்தியை தொடர்ந்து அனைவரும் எழுந்துக் கொண்டனர். ‘அந்த பெட்டியை எடுத்ததற்கு எதாவது சொல்லுவர்களோ..?’ என்றெண்ணிய நண்பர்கள் கூட்டம் அவர்களை பார்க்க, "இந்த பெட்டி(சமுத்திரா) எங்களுக்கு மலகாவில்(malaka) கிடைத்தது. அங்க மீன்பிடிக்க போனப்ப தான் எங்களோட வலைல மாட்டுச்சு. இத எங்களால திறக்கவே முடியல. அதனால தான் நாங்க இதை இங்க இருக்க பழைய பொருட்களுடன் கட்டி வைத்திருந்தோம்" என்றார் மார்ட்டின்.​

“நீங்க கடைசியா ஸ்பெயின்ல இருந்ததா தான சொன்னீங்க..” என்றான் அமரன் சந்தேகத்துடன்.​

“யெஸ். மலகா ஸ்பெய்ன்ல தான இருக்கு. அதுமட்டுமில்ல மலகாவில் இருக்க ஆண்டலூசியால தான் எங்களுக்கு இது(சமுத்திரா) கிடைச்சது. உங்களுக்கு தெரியாம இருக்காது, ஆண்டலூசியா, உலகத்துல இருக்க பழைய துறைமுகத்துல ஒன்று. அதுல தான் இது எங்களோட வலைல மாட்டுச்சு” என்று விளக்கத்துடன் மார்ட்டின் கூறினார்.​

‘இந்த விளையாட்டு பழைய திறைமுகத்துல கிடைச்சிருக்குன்னா.. இது பழங்காலத்துலயே இருந்திருக்க வாய்ப்பிருக்கா..’ என்று அனைவருக்குமே தோன்றியது.​

"இது அங்க கீழ கட்டி வைக்காம தான் இருந்தது. ஒருவேளை நீங்க கட்டிவைத்தது அவிழ்ந்திருக்கும். எங்கயாவது இடிச்சிடுமோன்னு தான் நான் எடுத்துட்டு வந்தேன்" என விலோவும் கூறினாள்.​

மார்ட்டினுடன் இருந்த விக்டர் என்பவன், "நீங்க அங்க இருந்து எடுத்தீங்க, ஓகே. ஆனா, எதுக்கு இத மாதிரி ஒரு விளையாட்டென்று தெரிந்தும் விளையாடினீர்கள்..?" சற்று கோபம் தொனிக்க அனைவரையும் பார்த்து கேட்டான்.​

இவர்களால் கப்பலில் எதாவது கோளாறு ஏற்பட்டால் அவர்களின் முதலாளிக்கு பதில் சொல்ல வேண்டும் என்ற கவலை அவனுக்கு.​

கப்பலில் தங்களுக்கு தேவையானதை செய்ய வந்தவன் தங்களை எதிர்த்து கேள்வி கேட்பதா என எரிச்சலான சக்தி, "இந்த கப்பலோட நிலைக்கு எவ்ளோ செலவாகுதோ..? அதை நானே கொடுத்திடுறேன். எங்களை கேள்வி கேட்கிற உரிமை உங்களுக்கு இல்லை!" திமிருடன் சொல்லிக்கொண்டே அணிந்திருந்த வெள்ளை நிற சட்டையை கைமுட்டிவரை மடித்துவிட்டுக் கொண்டே விக்டரை நெருங்கினான்.​

விட்டால் அடித்துவிடுபவன் போல் முன்னே வந்துக் கொண்டிருந்த சக்தியை கண்ட விக்டர் இரண்டடி பின்னே வைத்தான். "இங்க பாருங்க மிஸ்டர் சக்தி. விக்டர் சொன்னதுல தவறேதும் இல்லையே! நீங்க உங்க இஷ்டத்துக்கு பண்ண போய் இப்ப எல்லாரும் தான மாட்டிக்கிட்டோம். அவர் அதை கொஞ்சம் கோபமா கேட்டுட்டாரு.. அவ்ளோதான..?" குரலை தழைத்து மார்ட்டின் பேச, அவரையும் முறைத்துப் பார்த்தான் சக்தி.​

அவர்களின் நடுவே வந்த ரங்காவும் அமரனும் சக்தியை தள்ளி அழைத்துச் சென்று, "டேய் சக்தி, தப்பு நம்ம மேல தான இருக்கு..? வந்த இடத்தில் சும்மா இருந்திருக்கணும் தான..?" என சமாதானப்படுத்த முயன்ற ரங்காவை ஒரு பார்வை பார்த்த சக்தி அதே கோபத்துடன் முகத்தை திருப்பினான்.​

தள்ளிச்சென்ற அவர்களையே பார்த்த விலோவிற்கு தன்னால் தான் என்ற குற்றவுணர்ச்சி உருவானது. 'நம்மிடம் சண்டை போட்ட அன்றும் இதேபோல் தானே ருத்ரமூர்த்தியாய் இருந்தான். பணக்காரனா இருந்தா யாருக்கும் மரியாதை கொடுக்க தெரியாது போல..' என்று ஷிவன்யா மனத்திற்குள்ளே சக்தியை வருத்தெடுத்தாள்.​

downloadfile-6.jpg

"சக்தி! உனக்கு நான் சொல்லி தெரியனும்னு இல்லை. இப்போதைக்கு நமக்கு இருக்குற பிரச்னையை பார்க்கலாம்" என்ற அமரனின் பேச்சிற்கு மதிப்பு கொடுத்தான் சக்தி.​

விக்டரிடம் சென்ற சக்தி, "மத்த சைலர்ஸ்(மாலுமிகள்) எல்லாரும் எங்க..?" என மிடுக்குடனே கேட்டான்.​

விக்டரை முந்திக் கொண்ட மார்ட்டின், "அவங்க முதல் தளத்திற்கு தூங்க சென்றார்கள். அங்க தான் இன்னும் இருக்கனும்" யோசனை நிறைந்த முகத்துடன் கூறினார்.​

விக்டர், "நீங்க என்ன செய்யுறதா முடிவு பண்ணிருக்கீங்க..? கப்பலை கரைக்கு திருப்பிடலாமா?" தன்மையாகவே சக்தியின் முகத்தை பார்த்து கேட்டான். இவர்கள் அந்த பக்கம் சென்றதும் மார்ட்டின் விக்டரை மலையிறக்கி விட்டிருந்தான்.​

"இந்த விளையாட்டை முடிக்க முடியலனா..? கண்டிப்பா ஏதாவது அசம்பாவிதம் நடக்க வாய்ப்பிருக்கு. அதான் நாங்க ஆறு பேர் விளையாடி முடிக்க போகிறோம்" அழுத்தம் நிறைந்த குரலில் சக்தி கூறினான்.​

“உங்களால முடியுமா? எனக்கு தெரிஞ்சி இது ரொம்ப ஆபத்தான விளையாட்டாக இருக்கும் போல. இன்னொரு முறை யோசிச்சிக்கோங்க” என்றார் நாற்பது வயதை கடந்த அனுபவமிக்க மார்ட்டின்.​

"தேவையில்லை. எங்களால் உருவான பிரச்னையை நாங்களே சரி செய்துக் கொள்வோம்" என்று குரலில் மட்டுமில்லாமல் முகத்திலும் மறுப்பை தெரிவித்தான் சக்தி.​

எங்கே மறுபடியும் எதாவது சொல்லிவிடுவானோ என சக்திக்கு பயந்த ரங்கா "டேய்.." என்று சக்தியை அதட்டினான்.​

பின்பு மார்ட்டினையும் விக்டரையும் பார்த்த ராங்க, "எங்களுக்கு உங்க உதவி தேவைப்படும்பொழுது கட்டாயம் கேட்போம்" என்றவன் அமரனை பார்த்து விளையாடும் படி கூறினான்.​

கீழே அமர்ந்த அமரன், தன் கையில் இருந்த பகடையை உருட்ட, இரண்டு என்று வந்தது. ஊதா நிறத்தில் இருந்த காயினும் இரண்டாம் இடத்திற்கு சென்று நின்றது.​

 

அனைவரின் முகத்தையும் ஒருமுறை பார்த்த அமரன், அந்த நீர்குமிழியில் தோன்றிய எழுத்துக்களை வாசிக்க தொடங்கினான். ஷிவன்யாவும் ப்ரதீப்பும் அமருடன் சேர்ந்து வாசித்தனர்.​

"குருதியுண்பவன் வருகிறான். பிழைத்துக்கொள்!!!"

அந்த குறிப்பை அவர்கள் மூவரும் வாசித்துவிட்டு நிமிர, "என்ன டா போட்டிருந்தது..?" என நின்றபடியே வினவிய ரங்காவிடம் வாசித்ததை கூறினார்கள்.​

"குருதினா..? இரத்தம். அதை உண்ண எது வரும்..?" என்று பேசிக் கொண்டே யோசித்த ரங்காவின் யோசனை தான் அங்கிருந்த அனைவரின் சிந்தையையும் நிறைத்திருந்தது.​

அந்நேரம் சட்டென்று அங்கு மின்னிக் கொண்டிருந்த விளக்குகள் அனைத்தும் அணைந்து அவர்கள் இருளில் மூழ்கினர்.​

நிலா இல்லாத இருண்ட வானம்; விளக்குகள் அணைந்த இருண்ட கப்பல் என்று எல்லாம் சேர்த்து கும்மிருட்டாக காட்சியளித்தது. அதில் ஆக்ரோஷமாக சீறிக்கொண்டிருக்கும் அலையின் சத்தம் மட்டும் அங்கு நிலவிய நிசப்தத்தை விரட்டிக்கொண்டிருந்தது.​

"நாங்க போய் எதனால விளக்கு அணைந்திருக்குன்னு பார்த்துட்டு வரோம்" என கூறிய இரண்டு மாலுமிகளும் மேல் தளத்தில் உள்ள எமெர்ஜென்சி கதவின் வழியாக ஜெனெரேடர் அறைக்கு கீழே சென்றனர்.​

“ஊ.. ஊ..” என சுழற்றியடித்துக் கொண்டிருந்த காற்றின் இறைச்சல் வேறு அவர்களை பயமுறுத்துவதாக இருந்தது.​

பயத்தில் சில்லிட்ட கரத்தால் ரங்காவை விலோ கெட்டியாக பற்றியப்படி நின்றிருந்தாள். ரங்காவின் அருகினில் தான் சக்தியயும் நின்றுக் கொண்டிருந்தான். ப்ரதீப்பும் ஷிவன்யாயும் அமரனின் இருபுறமும் அமர்ந்துக் கொண்டனர்.​

“என்னங்க டா? பேய் வர மாதிரி எஃபெக்ட் கொடுக்குது. ஒருவேளை உண்மைலையே ரத்தத்தை குடிக்க பேய் இல்ல காட்டேரி வருமோ..” என பயத்தில் உளறிய ப்ரதீப் தானும் பயந்து அவர்களையும் பயமடைய செய்தான். அதன் விளைவாக ஷிவன்யா அமரனின் வலது கையை இறுக்கி கொண்டாளென்றால், ப்ரதீப் அமரனின் இடது கையை பிடித்துக்கொண்டான்.​

IMG_20241116_124246.jpg

“பேசாம ரெண்டு பேரும் என் மேல ஏறிக்கோங்க..” என்று எரிச்சலாய் கூறிய அமரன் அவனின் கையை உதறினான். அந்நேரம் பட படவென சத்தம் அவர்களின் கப்பலின் உள்ளிருந்து வந்தது.​

இருட்டில் ஒன்றும் தெரியவில்லை என்றாலும் சத்தம் வரும் திசையை அனைவரும் பார்த்தனர். மீண்டும் படபடவென சத்தத்துடன் சிறகுகளை அடித்துக்கொண்டே உள்ளிருந்து வௌவால்கள் பறந்து வரத்தொடங்கின.​


பார்க்க முடியவில்லை என்றாலும் அவர்களை நோக்கி எதுவோ பறந்து வருவதை உணர்ந்த ப்ரதீப், “ஐயோ! எதோ வருதே..” என பயத்தில் எச்சில் விழுங்கியபடியே அமரனை மேலும் இடித்துக்கொண்டு அமர்ந்தான்.​

பாலூட்டிகளில் பறக்கும் தன்மைக்கொண்ட ஒரே உயிரினமான வௌவால்களின் கூட்டம் தான் அவர்களின் கப்பலின் உள்ளிருந்து படப்படவென சிறகுகளை அடித்துக் கொண்டு வேகமாக வெளியே வந்தது. அந்த இருட்டில் கருப்பு நிறத்தில் இருந்த வௌவால்களின் கண்கள் மட்டும் சிவப்பு நிறத்தில் பளபளத்து ஜொலித்தது.​

downloadfile-10.jpg

வருவது வௌவால் என புரிந்துக்கொண்ட ரங்கா, "இரத்தத்தை உண்ணும்னு சொன்னாங்க..? ஆனா இங்க வௌவால் தான பறந்து வருது. அது பழத்தை தான சாப்பிடும்.." என கப்பலின் உள்ளிருந்து தொடர்ந்து வந்துக் கொண்டிருந்த வௌவால்களை பார்த்த ரங்கா சொன்னான்.​

“வௌவாலா வருது..?” என்ற அமரனின் கேள்விக்கு “ஆமா டா” என்றான் சக்தி.​

“டேய் கவனிச்சியா அதுங்க நம்ம கப்பல்ல இருந்து தான் வருதுங்க. எனக்கென்னமோ நம்ம கப்பல் வேடந்தாங்கலா மாறிடுச்சி போல தோணுது. ஆமை, முதலை, வௌவால்னு வரிசையா வருது..” என்று ப்ரதீப் கூற,​

அவனின் தோளில் கைப்போட்டு வலுவாக அழுத்திய அமரன், “கொஞ்ச நேரம் உன்னோட வாய மூடு. வௌவால்க்கு நல்லா காது கேட்கும்” என்றான்.​

கூட்டமாக வந்த வௌவால்களில், இப்பொழுது​

கூம்பு வடிவு கொண்ட நாசியை உடைய வௌவால் அவர்களை நோக்கி பறந்து வந்தது.​

அது வந்த வேகத்தில் விலோவின் மேல் பாய முயன்றது. அதில், “வீல்..” என்ற அலறலுடன் ரங்காவின் மார்பில் ஒன்றிவிட அவனும் அவளை பாதுகாப்பாய் வேறொரு பக்கம் அழைத்துச் சென்றான்.​

downloadfile-19.jpg

அந்த கூம்பு வடிவ வௌவாலை குறுதியுண்ணும் வௌவால் என்றும் அழைப்பர். அது ஒருவகையான காட்டேரி(vampire) வௌவாலின் இனத்தை சேர்ந்தது. விலங்குகள் மட்டுமில்லாமல் மனிதர்களின் இரத்தத்தை உண்டு வாழக்கூடிய தன்மையுடையது.​

அதனின் கூம்புவடிவ நாசியினால் மனிதனின் இரத்த ஓட்டத்தை இனம்காண முடியும். அப்படிப்பட்ட வௌவால்கள் தான் அவர்களின் இரத்த ஓட்டத்தை மூலம் அவர்களை கண்டுபிடித்து முற்றுகையிட வந்தது.​


images (10).jpeg

மேலும் மேலும் உள்ளிருந்து வந்த வௌவால் எண்ணிக்கை அதிகரித்து அவர்களை துரத்த தொடங்கியது. அனைவரும் இருட்டில் ஓடி மறைய தொடங்கினர்.​

downloadfile-14.jpg


வேகமாக பறந்து வந்த வௌவால் ஒன்று ஓடிக்கொண்டிருந்த சக்தியின் இடபுற தோள்பட்டை வளைவின் கீழ் மார்பின் மேல் கடித்தது. அது தன் மேல் வந்த உடனே அதனை தன்னிடமிருந்து பிரிக்க முயன்ற சக்தி வெற்றிகரமாக தோல்வியையே தழுவினான். அந்த வௌவால் சக்தியின் உடம்பில் காயத்தை ஏற்படுத்தி அதன் மூலம் வெளியேறும் உதிரத்தை நக்கி உண்ண தொடங்கியது.​

வலியில் கத்திய சக்தியின் கத்தலில் அவனை காப்பாற்ற வந்த மற்றவர்களையும் வௌவால்கள் சூழ்ந்துக் கொள்ள சக்தியை யாராலும் நெருங்க முடியவில்லை.​

IMG_20241116_145830.jpg

எப்படியோ கப்பலின் உள்ளிருந்து வந்த நூற்றுக்கணக்கான வௌவால்களிடம் சிக்காமல் சில பல கீரல்களுடன் தப்பித்த அனைவரும் சக்தியை இருட்டில் தேடினர்.​

அந்நேரம் மாலுமிகளின் உபயத்தால் விளக்குகள் ஒளிர, அங்கு சக்தி இருந்த நிலைமையை பார்த்த அனைவருக்கும் திக்கென்று இருந்தது. பின் முயன்று அந்த வௌவாலை சக்தியிடமிருந்து பிரித்து அப்படியே தூங்கி விசீனான் ரங்கா.​

எழமுடியாமல் எழுந்த சக்தியை ப்ரதீப் பிடித்துக்கொண்டான். தோள்பட்டையில் இரத்தம் கசிய பல்லை கடித்துக்கொண்டு வலியை பொறுத்துக் கொண்டிருந்த சக்தியை பார்த்தவர்களுக்கு வேதனையாக இருந்தது.​

மேலேறி வந்த மார்ட்டின், அங்கு பறந்து சென்றுக்கொண்டிருந்த வௌவால்களையும் சக்தியின் நிலையையும் பார்த்தவருக்கு நிலைமை புரிந்தது. அந்த தளத்தில் இருந்த முதலுதவி பெட்டியை எடுத்து வந்து அவரே சக்திக்கு சிகிச்சை அளித்தார்.​

சக்தி அணிந்திருந்த வெள்ளை நிற சட்டை செங்குறுதியின் விளைவால் செந்நிறமாக மாற தொடங்கியது. “இரத்தம் நிக்காம போகுது. இவரை உடனே ஹாஸ்பிடல் கூட்டிட்டு போகணும்..” என்றான் விக்டர்.​


“வௌவால் இப்படி கடிக்குமா.. எங்க வீட்டு பக்கத்துல இருக்க பழத்தை சாப்பிட வர வௌவால் இப்படிலாம் ஒருநாளும் பண்ணதே இல்லையே..” - ரங்கா.​

“சக்தியை கடிச்சது சாதாரணமா வீட்ல இருக்க வௌவால் இல்லை. அது ஒருவிதமான இரத்தகாட்டேரி(vampire) வௌவால். இரத்த காட்டெரியான வௌவாலின் உமிழ் நீர்ல ட்ராகுலின் (Draculin) எனும் நச்சுப்பொருள் இருக்கும். அந்த ட்ராகுலினால இரத்தத்தை உறைய வைக்குற சுரப்பியை செயல் இழக்க வைக்க உடையும். அதுனால தான் சக்திக்கு இவ்வளவு ரத்தப்போக்கு இருக்கு..” என்ற மார்ட்டின் சக்தியின் ரத்தப்போக்கை ஓரளவு நிறுத்தினார்.​

“காட்டேரி வௌவாலா..” என்ற விலோ அதிர்ச்சியுடன் கேட்க,​

“ஆமா.. இந்த காட்டேரி வௌவால்களை அடிப்படையா வெச்சி தான் காட்டேரி வரலாறு இருந்தது” என்றார் மார்ட்டின்.​

சிறுவயதில் இருந்து சக்தியுடன் பழகியிருக்கிறாள் விலோ. உடம்பு சரியில்லை என்றாலும் திடமாக இருப்பவனை இப்பொழுது இப்படி இரத்தம் படிந்த சட்டையுடன் பார்த்ததும் கலங்கிவிட்டாள்.​

“சாரி சக்தி! என்னால தான இதெல்லாம். நான் அங்க போகாம இருந்திருந்தா உனக்கு இந்த நிலைமை வந்திருக்காது தான..?” என விலோ கண்ணீர் சிந்த, “அப்டிலாம் இல்ல விலோ. ஐம் ஓகே. அடுத்து நீ போடுறியா ரங்கா” என ரங்காவை பார்த்தான் சக்தி.​

“உனக்கென்ன பைத்தியமா சக்தி. பறந்து போன வௌவால்கள் எப்ப வேணாலும் திரும்பி வரும். முதல்ல நாம கரைக்கு போகலாம். அப்புறம் எல்லாத்தையும் முடிவு பண்ணிக்கலாம்” என்றான் ரங்கா.​

“ஆமா டா. உன்னை முதல்ல டாக்டர் கிட்ட காட்டனும். இவரு வேற காட்டேரி கதைலாம் சொல்லுறாரு..” - ப்ரதீப்​

“ஆமா சக்தி. இதுக்கு மேல இதுல என்னலாம் வருமோ. நீ ஒருத்தன் இரத்தம் சிந்தனதே போதும் டா” சக்தியின் தோளை தட்டியபடி அமரனும் உருக்கமாக சொன்னான்.​

அவர்களின் பேச்சு புரியவில்லை என்றாலும் அவர்கள் என்ன பேசுவார்கள் என்பதனை ஓரளவு ஊகித்தார் மார்ட்டின். இதில் இருந்து அனைவரும் தப்பித்தால் போதும் என்ற எண்ணத்துடன், “நான் சொல்லுறதை கேளுங்க. இங்க ரெண்டு ரெஸ்க்யூ போட்(மீட்பு படகு) இருக்கு. அது மூலமா நாம கரைக்கு போயிடலாம். இந்த கப்பல்லையே இந்த விளையாட்டையும் போட்டு கடல்ல மூழ்கடிச்சிடலாம். யாருக்கும் எதுவும் தெரிய வராது” என்றார்.​

“ஓகே மார்ட்டின். அப்படியே செய்யலாம் ஆனா என்னால ரொம்ப நேரமா நாம இருக்க லொகேஷன் கண்டுபிடிக்க முடியல. மேல வந்தப்பவே நான் லைட் ஹவுஸ் பார்த்தேன். ஆனா என்னால இப்ப அதை பார்க்கவே முடியல. என்னோட ஃபோன் சுத்தமா சார்ஜ் இல்ல. நீங்க சாட்டிலைட்ல பார்த்துட்டு நாம எங்க இருக்கோம்னு சொல்லுங்க. அதுக்கு ஏற்ற மாதிரி நாம பிளான் பண்ணலாம்” என அமரன் திட்டம் வகுத்தான்.​

“ஓகே அமரன்” என்ற மார்ட்டின் விக்டரிடம் திரும்பி, கீழ இருக்க மூணு மாலுமிகளையும் அழைத்து வருமாறு சொல்லிவிட்டு கன்ட்ரோல் அறைக்கு சென்றனர்.​

“நாம கரைக்கு திரும்ப போறோமா? இதுனால எந்த பிரச்னையும் வராது தான” என விலோ அந்த விளையாட்டை பார்த்து முழித்துக்கொண்டே தெளிவில்லாமல் கேட்க,​

“பிரச்சனை வராதுன்னு நம்புவோம்” என்றாள் ஷிவன்யா நம்பிக்கையாக. ஆனால் அந்த நம்பிக்கைக்கு ஐந்து நிமிடம் மட்டுமே ஆயுள் இருக்கப்போவதை அறியாமல்.​

சுற்றி சுற்றி பார்த்த அமரன், பாய்மரத்தில் இருந்த கயிற்றை பிடித்துக்கொண்டு கப்பலின் கைப்பிடியில் ஏறி நின்று சுற்றியும் எதையோ தேடினான். அவன் தேடியது அவனுக்கு கிடைக்கவே இல்லை.​

“என்னடா குரங்கு மாதிரி பண்ணிட்டு இருக்க..” என கேட்ட ரங்காவை பொருள் புரியாத பார்வை பார்த்த அமரன், “லைட் ஹவுஸ் தான் டா தேடுறேன். என்னால பார்க்கவே முடியல..”​

“நாம ரொம்ப தூரம் வந்துட்டோம் போல..”​

“எவ்வளவு தூரம் போனாலும். எங்க இருந்து பார்த்தாலும் லைட் ஹவுஸ் தெரியும் ரங்கா. எதோ தப்பா இருக்கு..” என்ற அமரன்,​

“என்கூட வா..” என்று அவனின் கையை பிடித்துக்கொண்டு, “நீங்க நாலு பேரும் இங்கயே இருங்க. வேற எங்கேயும் போகாதீங்க. கடல்ல எட்டி பார்க்காதீங்க. விக்டர் எல்லாரையும் கூட்டிட்டு வந்தா அவங்கள இங்க வெயிட் பண்ண சொல்லுங்க” என்று ரங்காவையும் இழுத்துக்கொண்டு கப்பலின் உள்ளே செல்ல தொடங்கினான் அமரன்.​

“என்ன பிரச்சனை அமர்?” என்று அவர்கள் கேட்டது காற்றிலே கரைந்து போனது.​

அமரன் ரங்காவை அழைத்துக்கொண்டு கப்பலின் கண்ட்ரோல் ரூமிற்கு சென்றான். அங்கு தான் மார்ட்டின் இருந்தார். அவரின் முகத்தில் இருந்த மிரட்சியே அமரனுக்கு ஓரளவு செய்தியை கூறிவிட்டது.​

அவரும் இவர்களை பார்த்துவிட்டு பரிதவிப்புடன் அமைதியாகவே இருக்க, “டேய். என்னடா ஆச்சி? சொல்லி தொலை” என அமரனை உலுக்கினான் ரங்கா.​

உணர்வுகள் அற்ற விழிகளால் ரங்காவை ஏறிட்ட அமரன், “ரங்கா.. நாம இப்ப சென்னை கடல்ல இல்லை” என்றான் தொண்டை குழி எற இறங்க.​

“அப்படினா.. பாண்டி வந்துட்டோம்மா?” என்ற ரங்காவின் கேள்விக்கு, இல்லை என்று தலையசைத்தவன், “நாம இப்ப நம்ம உலகத்துலயே இல்லை.. நம்மளோட வைஃபை, சாட்டிலைட் எதுவுமே வேலை செய்யல.. லைட் ஹவுஸ் கூட கண்ணனுக்கு தெரியல..” என்றவனின் குரல் கலங்கி இருந்தது.​

“அப்.. அப்படினா..? என்னடா சொல்லுற..?” என ரங்கா கத்த,​

“நாம வேற எதோ தீவா இல்லை உலகமானு தெரியாத இடத்துல மாட்டிக்கிட்டு இருக்கோம்” என்று முடித்தான். அவன் கூறியதை நம்ப முடியாமல் ரங்கா மார்ட்டினை பார்த்தான். அவரும் அமரன் கூறியதையே ஆங்கிலத்தில் மொழி பெயர்தனர்.​

“அந்த கேம்ல தான் சமுத்திர உலகம்னு போட்டிருந்ததே.. நாம அதுக்குள்ள மடிக்கிட்டோமா? இப்ப என்ன டா பண்ணுறது..” என்று பதட்டத்துடன் ரங்கா கேட்டான். “நாம மேல போய் பேசலாம்” என மூவரும் மேலே வந்தனர்.​

“என்னடா அமர்? போனப்ப நீங்க தனியா போனீங்க இப்ப இவர் கூட வரீங்க?” என்று மார்ட்டினை பார்த்த படி கேட்ட ப்ரதீப், “என்ன பிரச்சனை டா?” என்றான்.​

அனைவரின் முகத்தையும் பார்த்து அமரன், “நாம இப்ப பூமிலையே இல்ல..”​

“பூமில இல்லையா? அப்படினா எங்க இருக்கோம்..?” என்று விலோ பதட்டத்துடன் ரங்காவை பார்த்து கேட்டாள்.​

“சமுத்திரா உலகத்துல மாட்டிக்கிட்டோம். நாம முழுசா அந்த விளையாட்டை விளையாடினா மட்டும் தான் நம்மால நாம வாழ்ந்துட்டு இருந்த நம்ம உலகத்துக்கு போக முடியும்” என்று ரங்கா கூறிவிட, அவர்களின் நெஞ்சுக்கூட காலியானது போல் திக்கென்றனது.​

“என்னடா சொல்லுறீங்க? இதுக்கு மேல இந்த கேம்ல என்ன வருமோ..” என்றான் சக்தியும்.​

“எனக்கு ஒன்னுமே புரியல டா..” என்ற ரங்கா பொத்தென்று சக்தியின் அருகில் அமர்ந்தான். சக்தி அவனின் ஃபோனை எடுத்து பார்த்தான். ஃபோன் வேலை செய்தது ஆனால் எந்த ஒரு நெட்வர்க்கும் வேலை செய்யவில்லை.​

அமரன் மீண்டும் அந்த கைப்பிடியின் அருகில் சென்று கடலை சுற்றி பார்த்தான். ஆனால் கடல் மட்டுமில்லாமல் அவர்களையும் இருள் மட்டுமே சூழ்ந்து இருந்தது.​

அவன் அருகில் வந்த ஷிவன்யா, “வேற வழியே இல்லையா அமர்?” என்றாள் விடைத்தெரிந்தே,​

“இல்லை ஷிவ்..” என்று அவளிடம் கூறியவன், சுற்றியும் பார்த்துக்கொண்டே,​

“நோ……!” என்று மனதிற்குள்ளே அரற்றினான். அவன் மனதின் கூக்குரல் நூற்றுக்கணக்கான கோள்களால் இயங்கி கொண்டிருந்த பிரபஞ்சத்தில் ஒரு புள்ளியாக எதிரொலித்தது!​

IMG_20241116_151354.jpg
 
Top