உயிர் - 7
எழுந்த வேகத்தில் செல்ல முயன்றவளை, “நான் இன்னும் பேசி முடிக்கல” என்ற அழுத்தமான வார்த்தைகள் தடுத்தது.
“ஒருத்தர் பேசுட்டு இருக்கும் போது எந்திருச்சி போக கூடாதுங்குற பேஸிக் சென்ஸ் கிடையாதா?” புருவங்களை ஏற்றி இறக்கினான்.
“நான்!!” அவளை பேச விடாது, “சிட் டவுன்” என்றான் அழுத்தமாக..
சட்டென அதே இடத்தில் அமர்ந்து விட்டாள்.
“வெல் மிஸிஸ் தீக்ஷிகா, நான் உங்களுக்கு ஒரு ஒபர் தரலாம்ன்னு இருக்கேன்” என்றான்.
அவளோ புரியாது அவனை பார்க்க, “உங்க கையில இருக்க லெட்டர்ர ஓபன் பண்ணி படியுங்க” என கண்களால் அவள் கையிலிருந்த கடிதத்தை சுட்டிக்காட்டினான்.
அடுத்து என்ன ஏழரையை கூட்டப் போகின்றானோ என்ற விதிர்ப்புடன் தீக்ஷி அவனை பார்க்க, “படி” என்றான் கண்களை அசைத்து..
ஏதோ ஒரு விறுவிறுப்பில் கடிதத்தை திறந்து படித்தவள் அவனை அதிர்ச்சியாகப் பார்த்தாள்.
“பீ ஏ வா?”
“ஆ பீ ஏ தான்.. நான் இந்த கம்பெனிய அசிஸ்ட் பண்ணும் வர எனக்கு ஒரு பீ ஏ தேவைபடுது. எதுக்கு தேவ இல்லாம இன்டெர்வியூ வைக்கனும்.. மோரோவர் உன்னோட குவலிபிகேஷனுக்கு என்னால கொடுக்க முடிஞ்ச அன்பளிப்பு” அவன் கூறியவற்றை அவளால் கிரகிக்க முடியவில்லை.
பதவி உயர்வடைகையில் அதற்கான பொறுப்பும் பன்மடங்கு அதிகரிக்கிறது.
பொறுப்புக்களோடு சேர்ந்து அதற்காக செலவிடு வேண்டிய நேரமும் அதிகரித்துச் விடுகிறதல்லவா!!
இவை அனைத்து வெறும் சாக்குகள் மட்டுமே..
பெண்ணவளின் தலையாய பிரச்சினையானது அவளது முழு
நேரத்தையும் ரிஷியின் கண்ணோட்டத்திலேயே செலவளிக்க வேண்டி நேர்ந்து விடும் என்பதாகும்.
வேண்டுமென்றே வேலைப் பளுவை அதிகரித்துள்ளான் என்பது அப்பட்டமாய் புரிந்து விட்டது
சிறிதும் யோசிக்காது, “இல்ல சார் என்னால முடியாது.. “ அவள் முடிக்க முன், “நான் முடியுமான்னு கேட்கல வெறும் இன்போர்மேஷன் தான் கொடுத்தேன் ” என்றான்.
அவளிற்கு அவன் முடிவை ஏற்றுக் கொள்ள ஓர் சில காரணங்கள் இருப்பினும் அதை தாண்டி மறுப்பதற்கு பல காரணங்கள் ஒன்றன் பின் ஒன்றாய் வரிந்து கட்டிக் கொண்டு வந்து நின்றது.
தற்சமயம் அவளின் இயலாமை, கோபம் அனைத்தும் மேலுள்ளவனை சாடி நின்றது.
அவனை நேரே பார்த்து,“என்னால இந்த பொறுப்ப சுமக்க முடியும்ன்னு எனக்கு தோணல.. உங்க டிசிஷன் இதான்னா, எனக்கு இதுல துளி கூட இஷ்டம் இல்ல, நான் என்னோட வேலைய ரிசைன் பண்ணிடுறேன்” என்றாள் ஆழ்ந்த மூச்சுடன் திடமாய்..
“சோ இந்த போஸ்ட் பிடிக்கல அதனால இந்த வேலையும் வேண்டாம் அதானே!!” ஆழ்ந்த பார்வையுடன் அவன் கேட்ட கேள்வியிற்கு ஆம் என தலையசைத்தாள்.
“ஓகே!!”
“என்னோட டிசிஷன் எந்த சேன்ஜ்ஜும் இல்ல” இளங்காரமாய் அவன் குரல் ஒலிக்க,
“நான் வேலைய ரிசைன் பண்ணிட்டா உங்க டிசிஷன் எந்த வகையிலயும் செல்லுபடியாகாது” என்றாள் அவளும் இதழ் வளைத்து..
“அதான் இல்ல..நீயா நினைச்சாலும் கூட உன்னால இந்த வேலைய ரிசைன் பண்ண முடியாது”
“ப்ளாக் மெயில் பண்றீங்களா?” எனக் கேட்டவளின் புருவங்களை அவனை நோக்கி வில்லாய் வளைந்துக் கொண்டன.
“நோ டா.. இது கம்பெனி ரூல்ஸ்” தோளை குலுக்கினான்.
பெண்ணவளின் மருண்ட விழிகளும் கீழ் நோக்கி வளைந்த புருவங்களும் அவளிற்கு எதுவும் புரியவில்லை என்பதனை வெளிப்படையாய் எடுத்துக் காட்டியது.
‘ரொம்பத்தான் தெளிவு’ என்ற முணுமுணுப்புடன் கைகளை மேசையில் குற்றியவாறு, “எம் எஸ் கம்பெனிக்குன்னு ஒரு சில ரூல்ஸ் இருக்கு.. அதான் இங்க ஒர்க்குக்கு ஜோஇன் பண்ணும் போது ஒரு அக்ரீமெண்ட் பேப்பர் கொடுத்து சைன் பண்ண சொன்னாங்கல்ல, அதுல இந்த கம்பெனியோட எல்லா கன்டிஷனும் எசம்பில் பண்ணியிருப்பாங்க.. நீ கூட சைன் பண்ணல்ல!! அந்த பேப்பர்ல போத் ரூல் இந்த வேலைய ரிசைன் பண்ணனுங்குர தோட் உங்களுக்கு வந்திருச்சின்னா அதுக்கு நீங்க இங்க பைவ் இயர்ஸ் ஒர்க் கம்ப்ளீட் பண்ணியிருக்கனும்.. அதையும் தாண்டி ரூல்ஸ்ச பிரேக் பண்ணிடீங்கன்னா அதுக்கு லீகளா என்ன ஆக்ஷன் எடுக்கனுமோ அதை எடுக்குற முழு உரிமையும் கம்பெனியோட உரிமையாளருக்கு இருக்கு” என விளக்கமாய் கூறி கண்களை சிமிட்டினான்.
‘இதை எப்படி மறந்து போனேன்’ எனும் நிலையில் பெண்ணவள் தடுமாற்றத்துடன் அமந்திருந்தாள்.
“மிஸிஸ் தீக்ஷிகா நீங்க இந்த கம்பெனில ஜோஇன் பண்ணி இப்போ தானே த்ரீ இயர்ஸ் ஆகப் போகுது” தெரிந்தே அறியத்தருகிறான் என்பதை உணர்ந்து கொள்ள முடியாத அளவு அவள் சிறுகுழந்தையல்லவே!
“எப்போத்துல இருந்து என்னோட ஒர்க்க ஸ்டார்ட் பண்ணனும்” எனக் கேட்டவளின் குரல் அவளின் பிடித்தமின்மையை எடுத்துக் காட்டியது.
வெறுமையான பார்வையுடன், “க்ரேட்!! இந்த நேரத்துல இருந்து நீங்க என்னோட பீ ஏ.. நாளைல இருந்து உங்க கவுண்டர் டவுன் ஸ்டார்ட்” என்றான்.
அக்கணம் இருவரின் விழிகளும் ஒரே நேர் கோட்டில் சந்தித்து மீண்டது.
**
“அகில்”
“சொல்லுடா?”
“வீத்துக்கு போகும் போது எனக்கு ஐஸ்கிரீம் வாங்கி தரியா?” என அவள் முகத்தை நோக்கி அண்ணார்ந்து பார்த்து கேட்டவளின் மூக்கு நுனியை பிடித்து ஆட்டி, “ஓ வாங்கலாமே ” எனக் கூறி புன்னகைத்தாள் அகிலா.
கையிலிருந்த பெயர் பட்டியலை நோட்டமிட்டபடி நர்ஸ், “அம்ரிதா” என்று அழைப்பு விடுவிக்க..
“அடுத்து நாம தான் வா உள்ள போலாம்” எனக் கூறி அம்ரிதாவின் கரத்தை பிடித்துக் கொண்டு வைத்தியரின் அறைக்குள் நுழைந்தாள் அகிலா.
“அம்ரிதா” என்னும் பெயரை உச்சரித்துக் கொண்டே நிமிர்ந்த அருண் ஷ்ரேஸ்திரியின் விழிகள் தன் முன் நின்றிருந்த அகிலாவின் மீது நிலைத்து நின்றது.
மரியாதை கருதி, “ஹலோ டாக்டர்” என்றவளிம் குரலில் சிந்தை கலைந்து, “உட்காருங்க” என்றவன் அதன் பிறகே அவளை கையை பற்றியிருந்த குழந்தையை பார்த்தான்.
எங்கோ கண்ணாடிக் குவளை சில்லுசில்லாக உடையும் ஒலி அவன் காதில் மட்டும் உயிர்தொனியில் கேட்டது.
“இவள் வேறு ஒருவனுக்கு மனைவி என்பதை தாண்டி ஓர் குழந்தை தாய்.. இவளை நினைத்தா இத்தனை நாள் கனவுக் கோட்டை கட்டினாய்.. தவித்திருந்தாய் விவஸ்தை கெட்டவன்..” மனசாட்சியின் சாட்டை அடிக்கு மத்தியில் நெஞ்சை மெல்ல வருடிக் கொண்டான்.
ஒரே இடத்தை பார்த்துக் கொண்டிருந்தவனை விசித்திரமாய் பார்த்தவள், “டாக்டர் ஆர் யூ ஓகே” எனக் கேட்டு விட்டாள்.
“ஹா.. ஐ அம் ஓகே” என்றவன் தடுமாற்றத்துடன், “வாட்ஸ் யுவர் நேம்?” எனக் கேட்க,
உடனே, “அம்ரிதா.. ரிப்போர்ட் ல போட்டு இருக்குமே” என்றாள்.
‘சொதப்பிட்டியேடா’ குரலை செருமிக்கொண்டு, “நான் குழந்தையோட மைண்ட் ட ஸ்டேபல்லா வெச்சிக்கலாம்ன்னு அவ வாயால தெரிஞ்சிக்க நினச்சேன்” என்ற சமாளிப்புடன்,“பாப்பா பேரு என்ன?” என சினேகமான புன்னகையுடன் அம்ரிதாவை பார்த்துக் கேட்டான்.
“அம்ரிதா” எனக் கூறி புன்னகைத்தாள் அம்ரிதா.
“ஓ!! அம்ரிதா நைஸ் நேம்”
சிறு புன்னகையுடன், “தான்க் யூ” என்றாள்.
“க்யூட்..” என்றவன் ஏதோ ஒரு உந்தளோடு, “இது யாரு? இதான் உங்க அம்மாவா?” என்ற கேள்வியுடன் குழந்தையின் பதிலை எதிர்பார்த்து காத்திருந்தவனை விசித்திரமாய் பார்த்து வைத்தாள் அகிலா.
அவனால் அவளுக்கு திருமணம் ஆகி விட்டது என்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.. கழுத்தில் தாலி இல்லை, நெற்றியில் குங்குமம் இல்லை, ஏன் கையில் ஒரு மோதிரம் கூட அணிந்திருக்க வில்லை,
‘ஓருவேளை தான் தவறாக எண்ணிக் கொண்டேனோ.. ஆம் அப்படியும் இருக்கலாம்.. இல்லை இல்லை அப்படித் தான் இருக்க வேண்டும்’ தனக்குள் நடந்தேறிக் கொண்டிருந்த பட்டிமன்றத்தின் நடுவே தன் எண்ணங்கள் பொய்க்க வேண்டும் என்ற எண்ணத்துடன் தன் சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொள்ளும் உந்தல் அவனுக்கு..
“இன்னிக்கு ராதா மேம் இல்லையா? “ எனக் கேட்டாள் அவள்.
“அவங்க வேற ஹாஸ்பிடக்கு சேன்ஜ் பண்ணிட்டாங்க.. இனி இந்த செக்ஷனக்கு நான் தான் இன்ச்சார்ஜ்.. உங்களுக்கு இதுல ஏதாச்சும் ப்ராப்லம் இருக்கா” என்று அவன் கேட்க, “இல்ல சும்மா தான் கேட்டேன்” என்றவளின் பார்வை வேறு எங்கோ படிந்தது.
அவன் நினைத்திருந்தால் அவளின் கேள்வியை சட்டை செய்யாது தன் வேலையை தொடர்ந்திருக்க முடியும், ஆனால் அவன் நிதானமாய் அவளுக்கு பதிலளித்தான்.
“ஆமா நாங்க எங்க விட்டோம் பாப்பா?” அமித்ரிதாவிடம் விட்ட இடத்திலிருந்து கேள்வியை தொடர, அவளோ “அகில் யாருன்னு கேத்தீங்க ” என்றாள் கண்களை சிமிட்டி..
அகிவாவோ நெற்றியை வருடிக் கொள்ள, அவனிற்கோ பெண்ணவளிண் பெயர் தெரிந்து விட்ட குதூகலம் ஒருபுறம் இருப்பினும், தன்னுடைய எண்ணங்கள் பொய் ஆக வேண்டும் என்ற வேண்டுதலுடன், “பாப்பா அம்மாவ பெயர் சொல்லி தான் கூப்பிடுவீங்களா?” எனக் கேட்டான்.
“பழகிடுச்சி” என்று குழந்தை இழுவையாக கூறி கூரிய அம்பை ஆடவனின் இதயத்தில் இறக்கியிருந்தாள்.
ஆடவனுக்கோ மினி ஹார்ட் அடாக் தாக்கிக் சென்ற உணர்வு!!
அகிலாவோ அம்ரிதாவின் கூந்தலை கலைத்து புன்னகைத்தவாறு
அருணை கேள்வியாய் பார்த்தாள்.
உணர்வுகளை வெளிப்படுத்தும் இடமல்லவே அது!!
ஆழ்ந்த மூச்சுடன் தனது உணர்வுகளை மூட்டை கட்டி வைத்து விட்டு குழந்தையின் எடை,உயரம் என கையில் இருந்த அட்டவணையில் குழந்தையின் வளர்ச்சிப் போக்கினை அவதானித்து விட்டு, “இன்ஜெக்ஷன் போட்டா வலிக்குமா??” என அம்ரிதாவை பார்த்து கேட்டான்.
“நீங்க பயப்பிடாதீங்க.. நான் சின்ன பொண்ணு போல இன்ஜெக்ஷன்க்கு பயந்து அழ மாத்தேன்.. ஐ அம் அ ஸ்ட்ராங் கேர்ள்“ தலையை வளைந்து அவள் கூறிய விதத்தில் அவன் இதழ் விரிந்து கொண்டது.
“ஸ்ட்ரோங் கேர்ள் தான் போல!!” என்றவன் மறந்தும் அகிலாவின் புறம் திரும்ப வில்லை.
குழந்தையுடன் பல சுவாரஷ்யமான கேள்விகளை எழுப்பியும் விடயங்களை பகிர்ந்தும், அவள் உணராதவாறு ஊசியை அவளுள் செலுத்தி விட்டு அவளுடன் சேர்ந்து பாவலா செய்து கொண்டிருந்தான்.
குழந்தையின் ரிப்போர்டை அகிலாவிடம் ஒப்படைத்தவன், “நான் ஒத்துக்கிறேன் பாப்பா ரொம்ப ஸ்ட்ரோங் அண்ட் போல்ட், அப்படியே உங்க அம்மா போல..” என்று ட்ராயரை திறந்து சாக்லேட் ஒன்றை எடுத்து அம்ரிதாவிடம் நீட்டினான்.
“ஆ நான் ரொம்ப ஸ்ட்ரோங் அப்பதியே மம்மி போல, ஆனா மம்மிக்கு ஸ்ட்ரோங் வந்தது அகில் கிட்டயிருந்து” கண்களை சிமிட்டி தீவிரமாய் கூறியவளை விழி விரித்துப் பார்த்தான் மருத்துவன்.
பட்டர்ப்ளை எபெக்ட் கேள்வி பட்டிருக்கின்றான்.. தற்சமயம் நிஜத்தில் உணர்கிறான்.
கையிலிருந்து சாக்லேட்டுடன் இன்னும் இரண்டை சேர்த்து அவளிடம் நீட்டினான்.
“தெரியாதவங்க எது கொடுத்தாலும் வாங்க கூதாதுன்னு மம்மி சொல்லிருக்காங்க” என்றாள் குழந்தை விழிகளை உருட்டி..
“அது தெரியாதவங்க கொடுத்தாலே தவிர நான் கொடுத்தா இல்லையே!! இந்த சாக்லேட்ட வாங்கிட்டா தான் நாங்க பிரண்ட்ஸ் ஆகிடுவோமே. சோ எடுத்துக்கலாம் தப்பில்ல”
அவளோ அகிலாவை பார்த்து விட்டு, அவள் பார்வையில் என்ன கண்டாளோ தெரியவில்லை புன்னகையுடன் அவன் கையிலிருந்த சாக்லேட்களை வாங்கிக் கொண்டாள்.