எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

வேதம் - 09

admin

Administrator
Staff member

அத்தியாயம் - 09​

"வீரன் வீரன் வீரன் வீரன்​

எங்க மாமன் வீரன்​

ஆலமர வேர போல​

ஆழம் ஆன வீரன்​

ஆட்டம் காண வைக்கப் போறான்​

ஆட்டுக்குட்டி தேரன்​

நாட்டு தலைவன்​

மோட்சம் கொள்கிறான்​

மீசைவச்ச மிருக மிருகனே​

முத்தத்துல சித்தத்துல​

தித்தித்திட வந்தேன்​

உன் நெத்திக்குள்ள​

புத்தி வைக்க வந்தேன்.."​

கையிலிருந்த செல்போன் பட்டென்று பறித்து அணைத்து வைக்கப்பட, அது வரை யாருக்கோ எனும் மோன நிலையிலிருந்தவள், திடுக்கிட்டு விழித்து.​

“ரம்யா! என்னடி.. என்னாச்சு?" முன்னைய விட அதிகமாக முறைக்கவே.​

“ஏன் ஒஒ.. ஒரு மாதிரி பார்க்கிற?"​

“ஏன்னு உனக்கு தெரியலையா சாத்வி?"​

அவள் அழுத்தமான கேள்வியிலும், பார்வையிலும் தலை குனிந்தவள்,​

“இஇ..ல்ல என்ன, என்னாச்சு?"​

“ஓவ்! அப்போ நிஜமா காரணம் தெரியாத அவளுக்கு வார்த்தை மட்டும் ஏன் தந்தி அடிக்கணும்?"​

எங்கனம் பதிலளிப்பாள்? பேயாக ஆடும் மன எண்ணத்தை அடக்க வழி தெரியாமல் உள்ளுக்குள் செத்துக் கொண்டிருப்பதற்கு, மரணமே மேல் எனும் எண்ணம் மட்டும் விஞ்சி இருந்தது.​

“ஏன் இந்த மௌனம் சாத்வி?"​

“ரமி!" அவள் குரல் தழு தழுக்கவே,​

“சாரோட பையன் சர்வேஷ் சாரும் நீயும் லவ் பண்ணுறீங்களா? ஹூம்.. அப்படி கேட்டா சரியா இருக்குமா? இல்லை, சார் பையனை நீ ஒன் சைட்டா லவ் பண்ணுறியா?"​

அவ்வளவு தான் தெரியும்..​

“ஓஓஓ!" என்ற கதறல் ஒலி மட்டுமே அந்த அறைக்குள் ஒலித்துக் கொண்டிருந்தது. அழுகை என்றால் அப்படி ஒரு அழுகை. அவள் வாழ்வில் இப்படி எதற்குமே கதறி இருக்க மாட்டாள்.​

வெடித்து சிதறிய உணர்வுகளையும், கண்ணீரையும் அடைக்க நினைக்கவில்லை போலும், அழுகையில் விக்கிக்கொண்டே,​

“எப்.. எப்படி என்னா..ல முடியும் ரமி? அவரு, அவர முடியலடி. செத்துகிட்டு இருக்கேன்."​

“ஏய் சாத்வி! என்ன இது? எனக்கு பயமா இருக்குடி, அழாத."​

ரம்யா பயந்து விட்டாள். ஆம், இல்லை என்ற பதிலை மட்டும் எதிர்பார்த்தவளுக்கும், இந்தத் துடிப்பு பயம் கொடுத்தது.​

“நான் எ.. எ..ப்படி அழாம இருப்பேன். எனக்கு தெரியலை. என்னை எனக்கே தெரியலை. என்னை எனக்கே புரியலை. அவரை நேசிக்கணுமா, நேசிக்கக் கூடாதா? ஒன்னுமே புரியலை. ஆனா அவரு இல்லைனா, ஒன்னும் இல்லைனு மட்டும் தோனுது. அது பிழையானு கூடத் தெரியலைடி.​

என் மனசு கேள்வி கேட்குது. உண்ட வீட்டுக்கு துரோகம் பண்ணுறியானு. ஆனால் அவவ.. அவரை பிடிச்சி இருக்கு. என்னை அதிகமா திட்ட மட்டும் தான் செய்வாரு, மட்டம் தட்டுறாரு. ஆனாலும் அவரு வேணுன்னு தோணுது. அப்போ என் மனசு மானம் கேட்ட மனசு தானே..?"​

அவளிடம் கேட்டால் அவள் என்ன பதில் கூறுவாள். சாத்வியிடம் இத்தனை தீவிரம் எதிர்பார்க்கவில்லை, ரம்யா.​

“ஆஆஆ..ம்மா.. முடியலை இந்த வலிய ஜீரணிக்க முடியலை. காயத்து மேல ஈயத்தை காய்ச்சி ஊத்துனா எப்படி இருக்கும்? அப்படி ஒரு வலிடி. கை கூடாதுனு தெரிஞ்சும், நான் தடுமாறிட்டேன் ரமி."​

“உஷ்! சாத்விமா, அதெல்லாம் ஒன்னுமில்ல. முதல்ல நீ சாந்தமாகு."​

தன் அணைப்பை ஒருமுறை இறுக்கி விட்டே, அவளைத் தன்னில் இருந்து பிரித்து, அவள் முகத்தை துடைத்தவள்..​

“கண்ணு, மூக்கு, முகம்னு பாரு, எப்படி செவந்து போய் இருக்குன்னு. அழுறத நிறுத்து, சாத்வி. அழுகையால் எதையும் செய்ய முடியாது. நீ நிதானமானா தான், எதுவும் யோசிக்க முடியும்."​

“எப்படி என்னால அழாம இருக்க முடியும், ரமி?"​

மீண்டும் ஆரம்பிக்கவே..​

“இருந்து தான் ஆகணும். இப்போ என்ன நீயும் அவரும் விரும்புறீங்களா?"​

ஆமாம் என்பதைப் போல பலமாக தலையாட்டியவள் சட்டென்று, “ஹூம்.." என்று அதை மறுத்து..​

“நா..நா..ன் மட்டும்" அழுகையில் உதட்டை பிதுக்கிக்கொண்டு,​

“ஆனால், கை கூடாத காதலே. அவருடைய உயரம் எங்க? நான் எங்க?"​

“அது என்னமோ வாஸ்தவம் தான். மனுஷன் செம்ம ஹைட், வெயிட், கொஞ்சம் பல்க் தான்."​

அழுகையில் பிதுங்கிய சாத்வியின் இதழ்கள் புன்னகையில் லேசாகத் துடிக்க,​

“இது தான் வேணும். இந்த சாத்வி தான் எனக்கு பிடிக்கும்."​

“சும்மா ஒன்னொன்னுக்கும் அழுறது. இப்போ என்ன நீங்க லவ் பண்றீங்க?"​

அவள் மீண்டும். “ஹூம்!" என மறுத்தவள் அழுத்தி,​

“நா.. நான் மட்டும் விரும்புறேன். அவரு ஒன்னும் என்னை விரும்பல."​

என்றவளுக்கு மீண்டும் அழுகை பீறிட்டு வர, ரம்யாவோ,​

“ஓ! அப்படியா? ஆனா உங்க அவரப் பார்த்தா அப்படி ஒன்னும் தெரியலையே!"​

மீண்டும் பலமாகத் தலையசைத்தவள்..​

“அவருக்கு என்னைப் பிடிக்காது. எப்பவும் என்னை திட்டிட்டே இருப்பார். நான் லோ கிளாஸ்சாம். அனாதையாம். அன்னக் காவடியாம். அவங்க ஸ்டேட்டஸ்க்கு தகுதி இல்லையாம். இது எல்லாம் உண்மைதானே. அப்படிப்பட்ட என்னை அவர் விரும்புவாரா என்ன?"​

அவளை அழுத்தமாகப் பார்த்த ரம்யா, “ஒருத்தர் மேல நமக்கு அன்பு இருந்தா, அவங்க மேல தான் அதிக உரிமை எடுத்துக்க முடியும். அவங்கள தான், நாம அதிகமாத் தேடுவோம்."​

சாத்விகா அவளைப் புரியாத பார்வை பார்க்க,​

“என்னடி!"​

“இல்ல, எனக்கு தெரியும். அவருக்கு என்னை பிடிக்காது."​

மெதுவாகப் புன்னகைத்தவள்,​

“நான் வரும் போது அந்த செல்ஃபோனை ஏன் பிடிச்சு நிறுத்துனேன் தெரியுமா?"​

சாத்வி தலை குனியவும்,​

“உங்க அவர நினச்சு தானே, இந்தப் பாட்ட கேட்டுட்டு இருக்க? வீரன் வீரன் எங்க மாமா வீரனா? நானும் பாத்துகிட்டு தானே இருக்கேன். ரிபீட் மோட்ல கேட்டுட்டே இருக்க, நீயா நிறுத்துற மாதிரி இல்ல. அதுதான் நானா நிறுத்திட்டேன்!"​

சாத்வி, அவளை பட்டென்று ஏறிட்டுப் பார்க்க,​

“என்ன மேடம் பார்க்கிறீங்க? அது எப்படி அவருதானு கண்டுபிடிச்சேன்னு பார்க்கிறியா? உங்க ராட்சச ராவணன் ஆஃபீஸ்க்குள்ள வந்து இத்தனை நாளில, அதிகமா அவரு ரூமுக்குள்ள கூப்பிட்டது உன்னை தான். மனுஷனுக்கு சிரிக்க தெரியுமாங்கிறது என்ன, பேசவே தெரியுமானு அவனவன் குழம்பிக்கிட்டு இருக்கான். அந்த அளவு டெரர் பீஸ், கண்ணுல உன்ன பார்த்தா மட்டும் ஒரு ஸ்பார்க் வரும் பாரு, கவனிச்சிட்டு தானே இருக்கேன்.​

நீ ஆபீசுக்குள்ள நடந்து வரும் போது, மேலிருந்து கீழ அழுத்தமா உன்னை ஒரு பார்வை பார்ப்பாரே! அப்பவே என்னமோ ஒன்னு இருக்குன்னு நினைச்சேன். ஆனா... மேடம் இப்படி ஒன்னு வவச்சிருப்பீங்கன்னு நினைக்கலையே!"​

என்றதும் அழுகையில் சிவந்த பெண்முகம் ராமன் தேடிய பொன்மானின் அழகில் வெட்கத்தில் சிவக்க..​

“அப்படியெல்லாம் இல்ல, நான் மட்டும்தான்.."​

“இப்போ நீங்க மட்டுமா இருக்கலாம். ஆனால் அங்கேயும் என்னமோ ஒன்னு இருக்கு. அவர் உன்னைத் திட்றாரா, நீயும் திருப்பித் திட்டு. அத விட்டுட்டு அழாத. இங்க யாரும் யாருக்கும் தகுதி இல்லைனு எல்லாம் இல்ல. எல்லாம் நம்ம மனசு சம்பந்தப்பட்டது தான், சாத்வி. என்னைவிட உனக்கு அது நல்லாவே தெரியும்!"​

என்றதும் வேதனையில் முகம் கசங்க,​

“எனக்கு அவரப் பிடிச்சிருக்கு தான். காதலிக்கத் தோணுது. வாழ்க்கை முழுக்க அந்த தோள்கள்ல சாஞ்சிக்கணும்னு தோனுது. பரந்து விரிஞ்சு இருக்க, அவரோட கைகளுக்குள்ள கோழிக்குஞ்சா சுருங்கி போய் அவர் நெஞ்சு சூட்டில இதம் காணனும்னு தோனுது. அந்த ஆறடி மனுஷனோட இதயத்துல, ஒரு புள்ளியாவது எனக்கே எனக்காக இருக்குமானு தோனுது. ஆனா, இது எல்லாம் நடக்காதுன்னு தோனுது!"​

அவள் அணிந்திருந்த இரவு சட்டையின் கழுத்து பகுதி கண்ணீரில் நனைந்திருக்க, எதையும் பொருட்படுத்தாதவள்...​

“நிதர்சனம்னு ஒன்னு இருக்கு, ரமி. என்ன இருந்தாலும் ஜனனிமாவோட யாசகத்தில் வளர்ந்த நான். அவங்களோட வரத்த அபகரிக்கலாம்னு நினைக்கலாமா?"​

“அப்படி நினைக்கிறவங்களா, அவங்க?"​

“இல்லை தான். இருந்தாலும் என் நினைப்பு அவருக்கும் இருக்குமானு தெரியலையே!"​

என்றதும், அதில் இருக்கும் நிதர்சனம் இருவருக்கும் உரைக்க, அங்கே ஆழ்ந்த அமைதி நிலவியது. அதைக் கலைத்த ரம்யா,​

“சாத்வி!"​

ஆழமான அழைப்பில் ரம்யாவின் முகம் காண,​

“இவ்வளவு நேரம் என் ஃப்ரெண்ட் அவளுக்கு பிடிச்ச வாழ்க்கை வாழணும்னு நினைச்சேன். ஆனா.. இப்போ அந்த வாழ்க்கை நிம்மதியான வாழ்க்கையா இருக்கணும்னு நினைக்கிறேன். அதனால, நான் சொல்லப் போறத கவனமாக் கேளு."​

அவள் பீடிகையுடன் ஆரம்பிக்க, ஏதோ விரும்பத்தகாததை சொல்லப் போகிறாள் என்னும் படபடப்புடன், இதயத்தை அழுந்தப் பிடித்துக் கொண்டு ரம்யாவை நோக்கி,​

“நம்ம சாரோட மகனப் பத்தி நான் நிறைய ரூமர்ஸ் கேள்விப்பட்டிருக்கேன். அது உண்மையா பொய்யா தெரியல. பிரபல வெளிநாட்டு மேகஸின்ல அவரோட கேர்ள் ஃப்ரெண்ட்ஸ் பற்றி எல்லாம் நியூஸ் வந்திருக்கு. அதுவும் பொய்யா உண்மையானு தெரியல. ஏன்னா... அவர் ஒரு சோசியல் ஃபிகர். அதே நேரம் இது எல்லாத்தையும் சாதாரணமா கடந்து விடவும் முடியாது. இதுல எது உண்மை பொய்னு, நீங்க ரெண்டு பேருமே உங்க அன்பை பரிமாறிக்க முன்ன தெரிஞ்சுக்கோ. எதிர்பார்ப்ப வளந்த பிறகு ஏமாற்றம் அடைஞ்சா, ரொம்ப காயப்படுவ சாத்வி."​

என்றவள் அதோடு உறக்கத்துக்குச் செல்ல, சாத்விகாவின் உள்ளமோ அலைகடலாக குமுறத் தொடங்கியது.​

‘எப்படி இதைக் கடப்பது? எப்படி சகிப்பது? எப்படி ஏற்பது?’ என்று இதிலேயே அவள் மனம் உழன்றது. அதிலும் ‘பெண் தோழிகள்' என்ற சொல்லை அறவே வெறுத்தாள்.​

‘அவருக்கு வேற பொண்ணுல ஈடுபாடு இருக்குமோ?'​

அவள் மனம் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லத் தெரியாதவள், அப்படியே தன் இரு கரங்களால் காலை கட்டிக்கொண்டு அதில் முகத்தை புதைத்து மௌனக் கண்ணீர் வடித்தாள். இதற்கே கண்ணீர் வடிப்பவள், அவன் வாழ்ந்த வாழ்க்கையை அறிந்தால் அதன் விளைவு என்னவோ?​

அங்கே பால்கனியில் நிலவை வெறித்துக் கொண்டிருந்த சர்வேஷ், நிலவிடம் ஒரு தூது எழுதிக் கொண்டிருந்தான்.​

“உன்னப் பார்க்க முன்ன தெளிவா தான்டி இருந்தேன். பார்த்த பின் தான், அந்த தெளிவு காணாமப் போச்சு. மூனு வருஷமா இறுக்கி பிடிச்ச என் உணர்வுகளை, வெளியே கொண்டு வந்துருவியோனு பயமா இருக்குடி. நீயும் என்னை விட்டுட்டு போயிருவியோனு, வலிக்க வலிக்க காயம் தந்துடுவியோனு ரொம்ப பயமா இருக்குது!"​

சன்னமான சிரிப்புடன்..​

“சர்வேஷ் அக்கண்யனுக்கு பயமா? கேட்டா சிரிப்பாங்க இல்ல. ஆனா பயம்தான். இந்த இருட்டுக்கு மட்டுமே தெரிந்த என்னோட மனம், என்னைப் பெத்தவங்களுக்கே தெரியல. நீயாவது தெரிஞ்சுப்பியாடி. இந்த இருட்டுல எங்கேயோ ஒரு இடத்துக்குள்ள ஒளிஞ்சிருக்க இந்த சர்வேஷ் மனச தெரிஞ்சுக்குவியா, சவி. அவனுக்குள்ள இருக்க மனுசன புரிஞ்சுக்குவியா? உன்னால முடியுமா? என்னோட கரைகளோடு என்னை ஏத்துக்க உன்னால முடியுமா?​

பயமா இருக்குடி! நீ புத்தம் புது பூ. ஆனால்.. நான் அப்படி இல்லையே? நீ அருகில் இருந்தா, என்னோட சுயம் இழந்திடுவேனோன்னு பயமா இருக்கு. அந்த பயமே உன்னை வார்த்தையால குத்தச் சொல்லுது. ராட்சச ராவணனா? இந்த உடம்பே என் சதைய நான் வெறுத்ததுனால வளர்த்ததுடி. என்னோட குடும்பத்துக்குக் கூடத் தெரியாத அசிங்கங்கள சுமந்துகிட்டு இருக்கிறேன். அதெல்லாம் தெரிஞ்சா நீயும் என்னை அருவருப்பா பார்ப்பியோனு, பயமா இருக்கு.​

அப்படி என்னை அருவருப்பா ஒத்த பார்வை நீ பார்த்தாலும், இந்த ஆறடி உருவம் மண்ணுக்குள்ள போயிரும்டி. அதனாலதான் உன்னை விட்டு தூரப் போக நினைக்கிறேன். அந்த நினைப்பே உனக்குள்ள என்னைத் தொலைஞ்சு போக வைக்குது.​

ஆம்பளைக்கும் வலிக்கும்டி. ஆம்பளைக்கும் அவமானம் இருக்கு. ஆம்பளையும் கூனிக் குறுகிப் போகும் சந்தர்ப்பம் இருக்கு. அது புரியுமா உனக்கு? புரிஞ்சிப்பியா?"​

அவன் முகம் சாந்தமாக அழகிய புன்னகையோடு..​

“பிடிச்சிருக்கு. வாழ்க்கை முழுக்க உனக்கு ராட்சச ராவணனா இருக்கப் பிடிச்சிருக்குடி. என்னோட மண்டோதரி!"​

நெஞ்சம் நிறைந்த வேதனையில் சுயம் தொலைத்தவன் வாய்விட்டுப் புலம்,ப அந்த நிலவு அவன் ரணங்களை எண்ணி மௌனக் கண்ணீர் வடித்தது.​

அங்கே அதே இரவில் ஜனனி, அக்கண்யன் அறையில்...​

“அத்தான்!"​

“ஹம்ம்.."​

“அத்தான்!" அவள் சற்றே அழுத்தி அழைக்க,​

“என்னடி?"​

“என்னை கண்டுக்கிறீங்களே இல்லை."​

“இவ்வளவு நேரம் நல்லாத் தானே பார்த்தேன்"​

“ச்சி! போங்க அத்தான்"​

அந்த வயதிலும் வெட்கத்தில் சிவந்தவள்,​

“என்னத்தான் நீங்க..?"​

“ஹா.. ஹா.." சத்தமிட்டு சிரித்தவன்,​

“பின்ன என்னடி? உன்னை கவனிக்கலைனா, அவன் அக்கண்யனே இல்லை."​

பெருமை பொங்க கணவனைப் பார்க்க, அவளை ஆதுரமாகப் பார்த்துக் கொண்டே,​

“சொல்லு பேபி."​

“நான் ஒன்னு கேட்கணுமே.."​

“கேளேன் யாரு வேணாம்னு சொன்னது?"​

“அது.."​

அவள் தயங்க, மனைவியின் தலையை கோதிக் கொண்டே அவள் தயக்கம் போக்கியவன்,​

“என்கிட்ட என்ன தயக்கம்? சொல்லு பேபி."​

ஜனனியோ தொண்டையை செருமிக் கொண்டு,​

“நம்ம சாத்விய!"​

“சாத்விய?" கேள்வியாக அவன் அழுத்தி நிறுத்தவும்.​

“வ.. வந்து நம்ம சர்வேஷுக்கு வரனா பார்த்தா என்ன?"​

“ஜனனி!" அவன் அதட்டலில் பயந்தவள்.​

“ப்ளீஸ்.. கோபப்படாதீங்க, அத்தான். எனக்கு தோனுது சாத்விக்கும் சர்வாவுக்கும் நடுவுல ஏதோ ஒன்னு இருக்கணும்னு. அன்றைக்கு இங்க வந்துட்டு போகும் போது, சர்வா சாத்வியோட பேசினத மாடியில் இருந்து கவனிச்சுட்டு தான் இருந்தேன். அதே மாதிரி, சாத்வி இங்க இருந்து போகும் போது கண்ணசைக்காம பார்த்தான்"​

அவன் முகம் அதிருப்தியைக் காட்ட,​

“அவ இந்த வீட்டுக்கு மருமகளா வரக் கூடாதுன்னு, நினைக்கிறாங்களா?"​

“அவ்வளவு தான், நீ என்னப் புரிஞ்சுகிட்டதா ஜனனி?"​

அவன் கேள்வியில் வேதனை தொக்கி நிற்க, அதில் தரையில் விழுந்த மீனாகத் துடித்தவள்,​

“அச்சோ... பேசத் தெரியாமப் பேசிட்டேன். நான் அப்படி நினைச்சுக் கேட்கல. நீங்க, நீங்க.."​

“உஷ்! உன்னை எனக்குத் தெரியும். நமக்குள்ள எதுக்கு எக்ஸ்பிலனேஷன்?"​

ஆழ மூச்செடுத்து தழும்பும் நாளச் சுரப்பிகளை சமம் செய்தவன்,​

“முடியுமா? முடியாதாங்கிறது உன்னோட ஒத்த கேள்வி. ஆனா.. அதுக்கான பதில் ரொம்பக் கடினமானது. சாத்வி ரொம்ப மென்மையான பெண். அவ நாம பார்க்க வளர்ந்தவ. நமக்கு நம்ம பொண்ணுங்க எப்படியோ, அப்படித்தான் அவளும். நம்ம சர்வாவுக்கு, சாத்வி வேணாம் பேபி."​

“அத்தான்!"​

குரல் அதிர, விழிகளில் தேங்கி நின்ற விழிநீர் விழும் தருவாயில் அவன் முகம் நோக்க,​

“இது, இதுதான். இந்தக் கண்ணில் நிற்கிற இந்தக் கண்ணீர் தான் சாத்வியப் பற்றி நீ பேச நினைக்கும் போது, அந்த பேச்சை நான் தடுத்தது."​

“நம்ம மகனை நாமளே தாழ்த்தலாமா?"​

“நம்ம மகனை நான் தாழ்த்தல. ஆனா சாத்வியும் அதே நேரம் தாழ்ந்து போகக் கூடாதுனு நினைக்கிறேன்."​

“ஏங்க வாழ்க்கையில ஒருமுறை வரம் தவறிப் போனா, அந்த வரத்தை வாழ்க்கை மறுமுறை தரக் கூடாதா?"​

“ஏன் தரக்கூடாது? ஒரு முறை எனக்கு வாழ்க்கை தந்த வஞ்சகம் மட்டும்தான் என்னோட வாழ்க்கையில மறுமுறை ஜனனிங்கிற வரம் கிடைக்கக் காரணம். ஆனால் இது வேற"​

‘எங்கனம் சொல்வான் மகனின் கசடுகளை?’ அந்த வலியை மனதுக்குள் புதைத்தவன், விழியோரத் தசை துடிப்பில் கூட மனைவி அதை அறிந்து கொள்ளக் கூடாது என்று நினைத்தான்.​

“இந்தப் பேச்சு வேண்டாம் பேபி. அவ மலர்னா அவன் மலை. அந்த மலையோட கனத்த எந்த வகையிலும் மலர் தாங்காது. அவனோட அகம் ஏதாவது ஒரு நாள் அவளோட அகத்த காயப்படுத்தலாம்.​

நம்ம ரெண்டு பசங்களும் சேர்ந்து இருந்து துன்பப்படுறதை விட, தள்ளி நின்னு ஒருத்தர் துன்பப்பட்டாலும் இன்னொருத்தர் சந்தோஷமா இருந்துட்டு போகட்டுமே!"​

என்றவன் அதோடு விழிகளை மூடிக்கொள்ள, தூங்கா விழிகள் ஜனனிக்கு சொந்தமாகின.​

அங்கே தனிமையில் ஒருவனின் கதறலை நிலவு தாங்கியது என்றால், இங்கு தாயின் மௌனக் கதறலை காற்று தாங்கியது.​

 

admin

Administrator
Staff member

இதிலிருந்து சரியாக ஒரு வாரம் கழித்து இலங்கையில் பெட்ரோல் பதுக்கல், தட்டுப்பாடு என திடீரென நாடெங்கும் கலவரம் வெடிக்க, வீதியெல்லாம் அடைத்து வைத்து எங்கும் போராட்டங்கள் வலுக்கத் தொடங்கியது. பதவியில் இருப்பவர்கள் பொதுமக்களால் பந்தாடப்பட்டனர். வீதிகள் போர்க்களமானது. வாகனங்கள் எரிக்கப் பட்டன. நிறுவனங்கள் முடக்கப்பட்டன.​

இங்கு திடீரென ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையில் எதிர்பாராத விதமாக ஸ்டோரில் மாட்டிக்கொண்ட சாத்விகாவும், மன வலியை போக்க தனிமையில் தவித்த சர்வேஷும் மட்டுமே ஏஜே கார்மெண்டில் மிஞ்சி இருக்க,​

உயிர்விடும் தருவாயில் சத்தமிட்ட அவள் தொலைபேசியைக் காதில் வைத்து செவிமடுத்தவள்,​

“என்ன ரம்யா? எதுக்கு கால் பண்ற? வரும் போது ஏதாவது வாங்கிட்டு வரணுமா?"​

“சாத்வி!" என்றவளின் பதட்டமான குரலில் புருவங்கள் இரண்டும் முடிச்சிட​

“ஏன் என்ன ஆச்சு?"​

“இப்ப நீ எங்க இருக்க?"​

“நான் நம்ம ஸ்டோர்ல ஸ்டாக் கவுன்டிங் எடுத்துட்டு இருக்கேன்."​

“பைத்தியம்!"​

“என்னடி? சர்வேஷ் சார் கொஞ்சம் டீடைல் கேட்டாங்க. எடுத்துட்டு இருக்கேன்."​

“லூசே! ஆபீஸ்குள்ள யார், யார் இருக்காங்க, போறாங்கனு எல்லாம் பார்க்க மாட்டியா? வேலைன்னு வந்துட்டா இவ பெரிய வெள்ளைக்காரினு நினைப்பு. நாடு இருக்க நிலைமையில, ஸ்டாக் கிளியர் பண்றது ரொம்ப முக்கியம்!"​

“ஏன்? என்ன ஆச்சுனு இவ்வளவு சத்தமா பேசுற"​

“என்ன ஆச்சா? பெட்ரோல் இல்லாம ரோடு எல்லாம் ஒரே கலவரமா இருக்கு. நிட்டம்புவ மந்திரிய வேற பொதுமக்கள் கொன்னுட்டாங்களாம். அதுவும் இல்லாம பெரிய, பெரிய தலைங்க வீட்டில எல்லாம் பெட்ரோல் பதுக்கி வைச்சிருக்கிறதா பொதுமக்கள் வீடு புகுந்து நெருப்பு வச்சுக்கிட்டு இருக்காங்களாம். இங்க ரோடு எல்லாம் ஒரே ப்ளோக்கா இருக்குடி. நான் எப்படியோ ஹாஸ்டல் வந்துட்டேன். நீ இந்த டைம்ல வெளிய வராத. அவ்வளவு சேஃப்டி இல்ல சாத்வி.​

எப்படியும் நீ நம்ம ஆபீஸ்ல தானே இருக்கப் போற? வெளியே செக்யூரிட்டி இருப்பாரு. நீ அங்கேயே இரு. எக்காரணத்தைக் கொண்டும் லைட் எல்லாம் போட்டு, வெளிச்சமா காட்டிடாதீங்க. உள்ள ஆள் இருக்கிற மாதிரி தெரிஞ்சா, மே பி கலவரக்காரவங்க உள்ள புகுந்து வம்பு பண்ண வாய்ப்பு அதிகம்!"​

பயத்தில் தொண்டையில் மீன் முள் சிக்கியதைப் போல் வார்த்தைகள் சிக்கிக் கொள்ளத் தடுமாறியவள்,​

“என்ன சொல்ற? நான் எப்படி இங்க தனியா?"​

“சொல்றதை கேளு சாத்வி. அங்கேயே இரு"​

“ரம்யா, என் ஃபோன் பேட்ரி லோ, ஆஃப் ஆகப் போகுது."​

என்றவள் குரல் அழுகைக்கு மாற,​

“லூசு அவ்வளோ பெரிய ஆபீஸ்ல ஒரு லேண்ட்லைனுமா இல்லை. இந்த உலகத்தில தானேடி இருக்க?​

போ! போய் ஆபீஸ் ரூம்ல இரு வேற யாராவது ஸ்டாப்ஸ் உள்ள இருக்காங்களா பாரு"​

பயம், கலவரம், அதிர்ச்சி இதையெல்லாம் கடந்து தனிமையில் இருக்கும் தன்னை கலவரக்காரர்கள் அத்திமீது ஏதேனும் செய்து விட்டால், தன்னைக் காப்பது யார்? இல்லை தனக்கே ஏதேனும் நடந்து விட்டால், எனக்கென ஒரு துளி கண்ணீர் வடிக்கவும் உறவென்று சொல்லி அள்ளிப் புதைக்கவும் யார் இருக்கிறார்கள் என்ற எண்ணம் மட்டுமே நெஞ்சமெல்லாம் உறைந்து போய் வலித்துக் கொண்டிருந்தது.​

வலித்த நெஞ்சை புடவையோடு இறுக்கிப் பிடித்தவள் தடதடவென படிகளில் ஏறி மெயின் ஸ்டாப் ரூமை அடைய எம்டியின் அறையில் மட்டும் லைட் எரிந்து கொண்டிருந்தது. அவளுக்கு யோசிக்க ஒன்றும் இருக்கவில்லை புயல் வேகத்தில் உள்ளே நுழைந்தவள், எம்டி சீட்டில் அமர்ந்திருந்த சர்வாவை பார்த்ததும், நெஞ்சாங்கூடு பதட்டத்தோடு பட பட என ஏறி இறங்கியது.​

உடலெல்லாம் வலு இழந்தது போல், விழி நீர் ஒரு புறம் வடிய, அவனைப் பார்த்துக் கொண்டே இருக்க, அவனும் நிலைமையின் தீவிரம் கேள்விப்பட்டான் தான், ஆனால் இவள் ஒருத்தி ஆஃபீஸில் இருக்கிறாள் என்பதை மறந்து போனான்.​

நீருக்கு தவித்த அன்னப்பறவையை போல் தவித்து, துடித்து, பரிதவித்து, அனாதரவான தோற்றத்தில் இருந்தவளைப் பார்த்தவன் பறவையின் சிறகுகளாக தன் கைகளை விரித்து பிடித்துக் கொள்ள, எதைப்பற்றியும் யோசிக்கவில்லை, ஓடிச் சென்று அவனைப் பாய்ந்து அணைத்துக் கொள்ள, அவள் ஐந்தடி உயரத்துக்குக் குனிந்தவன் கழுத்தை, அவள் இரு கரம் இறுக்கி வளைத்துக் கொள்ளவும், அவள் புட்டத்தில் இரு கைகளால் இறுக்கிப் பிடித்தவன், அப்படியே தூக்கி அணைத்துக் கொண்டான்.​

“பயந்துட்டேன் தெரியுமா. நா.. நான்.. எனக்கு எதுனா யாரு.."​

“மூச்!" சத்தம் வர கூடாது. ஜஸ்ட் ஃபீல் மீ அண்ட் மை ப்ரசன்ஸ்."​

அவளை மேலும் தன்னோடு இறுக்கிக் கொள்ள, அவள் வியர்வையோடு பெண்மேனி தந்த வாசத்தில், பெண்ணை ஆதி முதல் அந்தம் வரை புணராமலேயே புத்துணர்ச்சி பெற்றான். கழுத்து வளைவில் மூக்கை நுழைத்து, ஆழ அவள் வாசத்தை சுவாசத்தில் நிரப்பத் தொடங்கினான். அன்று போல் இன்றும் தழும்பிய மன நிலைக்கு இடம் விட்டு நின்றவன்,​

“ஏய் மண்டோதரி! போதும் அழாத. ம்ச்.. அழாதடி!"​

“பயந்துட்டேன் தெரியுமா?"​

“நீ இங்க இருக்கறது தெரியாதுடி, மண்டோதரி"​

அவன் உணர்வுகள் தழும்பும் போது..​

தானாக உச்சரித்த அந்தச் செல்ல அழைப்பை அவள் கவனிக்கவில்லை.​

“தெரிஞ்சிருந்தா என்ன செஞ்சி இருப்பீங்க? உங்க நாக்கை வச்சு வார்த்தையால குத்தி இருப்பீங்க."​

அதில் ஒரு கணம் அவள் இடையில் ஒரு கரத்தை கொண்டு வலிக்க பெண் இடையை கசக்கினான்.​

“ஆஆஆ! ராட்சச ராவணா!"​

அவள் வலியில் அலறவே.​

“அது என்னடி? என்னை நல்லாவே நினைக்கத் தோனாதா?"​

“நல்லா நினைக்கிற மாதிரி நீங்க எதுவும் செய்யலையே. உங்களுக்கு தான் என்னைப் பிடிக்காதே. என்னை திட்டிட்டே தான் இருப்பீங்க. நான் லோ கிளாஸ் தானே?"​

“ஆமா, லோ கிளாஸ் தான். இப்ப அதுக்கு என்னவாம்?"​

“எனக்கு ஒன்னும் இல்லையாம்."​

“இல்லையே! உனக்கு தான் ஏதோ பிரச்சனையாம்."​

இத்தனைக்கும் இருவரும் நின்ற நிலையை மாற்றிக் கொள்ளவில்லை. ஆண் ஸ்பரிசம் அவனைத் தவிர வேறு யாரிலும் உணர்ந்திடாதவளும், கூச்சத்தோடு அவனில் ஒன்ற, பல இரவுகளில் பெண்ணை புசித்தவனின் உணர்வுகள் காமத்தால் அன்றி, அவளிடம் சொல்லப் படாத, உணரப்படாத காதலால் ஒன்றியது.​

நொடிக்குள் மாறும் காலநிலையைப் போல் திடீரென தழும்பிய சர்வாவின் உணர்வுகளில் அவன் பழைய ரணங்கள் மீண்டும் காந்தத் தொடங்கவும், பட்டென்று அவளை கீழே விட்டான்.​

அதில் விழப்போனவள் மேசையை பிடித்துக் கொண்டு தன் கை முட்டியை தேய்த்துக் கொண்டே,​

“வலிக்குதுங்க!" அவன் விழிகளை பார்க்கவும்,​

தாய் பசுவாக தன்னை அணைத்துக் கொண்டவனின் விழிகளில் இருந்த அன்புக்கு பதில், அவளை தேள் கொடுக்காக மாறிக் கொட்டும் போது கண்களில் தோன்றும் வெறியைக் கண்டவள் உணர்வுகள்,​

‘சர்வேஷ் வார்த்தைகளை வாங்கிக் கொள்ள தன்னை தயார்படுத்திக் கொள் என்று சொல்லும் போதே..'​

“ஆம்பளய அணைச்சு பிடிச்சா ஒரேடியா ஒத்த அணைப்புல கவுத்துறலானு நினைக்கிறாயா? அந்த அளவுக்கு உன் உடம்பும், உணர்வும் அடங்க மாட்டேங்குதோ. ஏதோ பயந்துட்டன்னு ஆதரவா நினைச்சா, என் உணர்ச்சிகளை தூண்டலாம்னு நினைப்போ. பொம்பளைகளுக்கு ஆம்பளைய அடக்க ஈஸியான வழி இந்த உடம்பு தானே? அங்கங்க வளைவு, நெளிவும், கொஞ்சம் கலரும் இருந்தா போதும்னு நினைக்கிறீங்க இல்ல. அட்ஜஸ்ட்மெண்ட் இஸ் எ பேட் அப்ரிசியேஷன்!"​

கொட்டிய வார்த்தைகளை அள்ள முடியாது என்பதை மறந்து போனான் போலும். அப்படி இல்லை, அதன் வினையை உடனே அடையலாம் என்பதைப் போல், அமைதியான சாத்வி ஆங்கார காளியாக மாறி, நொடியில் தன் நுனி காலால் எட்டி அவன் கன்னத்தில் தன் வேகத்தை, கோபத்தை, அவன் வார்த்தை கொடுத்த வலியை அத்தனையும் ஒன்று திரட்டி.. “பளார்!" என ஒரு அறை விட,​

சிறு முள் குத்தி சிங்கம் நடுங்குமா? ஆனால் அந்த ஆறடி சிங்கம் சிறு முயலின் எதிர்பாராத தாக்குதலில் அதிர அந்த விழிகளில் ஆக்ரோஷத்துக்கு பதில் ஒரு விரிந்த புன்னகை. அவன் ஒரு விடையில்லா கேள்வி!​

அடித்த பின் செய்த வினையின் வீரியமறிந்தவள், தன் சிவந்த கரத்தை முகத்துக்கு நேரே தூக்கிப் பார்த்தவள், தாடி அடர்ந்த அவன் கன்னத்தை திரும்பிப் பார்த்தாள். கை சிவந்த அளவு கன்னத்து முடிக்குள் இருந்த அவன் சதை சிவந்ததா என்று இனம் காண முடியவில்லை. அடிக்கும் வரை இருந்த ஆக்ரோஷம், அடித்த பின் அமைதியான மனநிலை, ஒரு வித பயத்தை கொடுக்க இரண்டடி பின்னே நடந்தவள்,​

“இல்ல.. நீங்க, நீங்க அப்படி பேசவும் ஒரு கோபத்தில் அடிச்சிட்டேன். என்னை மன்னிச்சிடுங்க ப்ளீஸ். ஏதும் பண்ணிடாதீங்க."​

அவள் பதறவே அடித்த போது கூட அவள் நிமிர்வும், தைரியமும் அவனுக்குள் களிப்பை கொடுத்தது. ஆனால் தன்னை ஒரு பொறுக்கி போல் அவள் பாவிப்பதில் ரௌத்திரம் பெருக,​

“ஏய்! ஓவரா சீன் கிரியேட் பண்ணாத. உன்னோட லோ கிளாஸ் ட்ராமா எல்லாம் உன்னோட நிறுத்திக்க. உண்மைய சொன்னா கோபம் வருதா? என்னை அடிச்சதும் இல்லாம ஒரு ஸ்ரேஞ்சர பார்க்கிற மாதிரி ட்ரீட் பண்ணுற.​

பொண்ணுங்க எல்லாம் நாலு சுவத்துக்குள்ள எப்படி இருப்பாங்க வெளியில எப்படி இருப்பாங்கன்னு எனக்குத் தெரியாதுனு நினைச்சியா?"​

“ச்சீ! உங்க வார்த்தை ஒன்னுமே சரியில்ல. குணமும் சரியில்லை. உங்க பேச்சு சரியில்ல. ஒரு பொம்பள பொறுக்கிய மாதிரி தான் உங்க நடவடிக்கை இருக்கு."​

“இவ்வளவு நேரமும் நான் பொறுக்கியா இல்லாததாலே தானே திமிராப் பேசுற. பொறுக்கி என்ன செய்வான் தெரியுமா?"​

சர்வேஷ் தன் நிதானமிழந்து மூர்க்கத்தை கையில் எடுத்தவன், அவள் கையை பின்பறம் பிடித்து வலிக்க முறுக்கினான். இந்தக் கோபம் தான் சர்வேஷை வெகுவான சமயங்களில் தன்னிலை இழக்கச் செய்யும். கோபம் வந்தால் அவன் அச்சு அசல் ராட்சசனே. ஆண், பெண் பேதம் பார்ப்பதில்லை. சிறுதுளி கோபமும் அவன் மூர்க்கத்துக்கு பெரும் வித்தாகும்.​

“ஆ...ஆவ்! வலிக்குது ராவணா!"​

கோபத்தில் தன்னிலை இழந்தவன் அவள் முந்தானையில் கை வைத்து சடாரென இழுத்து விட்டான். பல முறை பாவிக்கப்பட்ட அந்த பழைய சேலை இடப்பக்க ஜாக்கெட்டில் பின் செய்யப்பட்ட பகுதியோடு கிழிந்து அவன் கையோடு வந்தது. சாத்விகாவோ தன் இதயம் கவர்ந்தவன் ஆயினும் அத்துமீறி அவன் செய்யும் செயலிருந்து தன் மானத்தை காக்க எண்ணியவளாக கண்ணிமைக்கும் நேரத்தில் மீண்டும் பளாரென அந்த ஆறடி உயர ஆண்மகனின் கன்னத்தில் கால்களால் எம்பி நின்று அறைந்தாள்.​

“பொறுக்கினு நிரூபிச்சுட்டிங்கல்ல?"​

அவள் கண்களில் தேங்கி நின்ற மரண வேதனை அவனுக்கே மரண அடியாக திரும்பி விழ தன் முரட்டுத்தனமும், மூர்க்கத்தனத்தால் எழும் முட்டாள்தனமும் தன் மனதுக்கு இனியவளை இத்தனை கலங்கப்படுத்தி விட்டதே என்று தன் மீதே கோபம் கொண்டவனுக்கு ஏனோ ‘பொறுக்கி' எனும் அழைப்பு அவன் கரும்பக்கத்தை மீட்டி காட்ட,​

“இன்னும் உன் வாய் அடங்குவதா இல்ல தானே!"​

அதற்கு பதில் பேச, அவள் இதழ்களுக்கு அவன் விடுதலை அளிக்கவில்லை.​

இதழோடு இதழ் பொருத்தி முத்தத்தால் அவளை மூர்ச்சை ஆக்க நினைத்தானோ?​

அல்லது அவள் இறுதி மூச்சி வரை தன் நினைவுகளை கலக்க நினைத்தானோ, வன்மையாக, ஆழமாக, அழுத்தமாக, வெறியோடு அவள் இதழை ஸ்பரிசித்தவன், அந்த இதழின் ரத்தத்தை சுவைத்த பின்னே அதற்கு விடுதலை அளித்தான்.​

அவனுக்கு என்னவோ அத்தனை ஆக்ரோஷத்திலும் ராஜ போதையை உண்ட களிப்பு! உள்ளத்தின் ஓரத்தில் உண்டானது. ஆனால் சாத்வியோ தன் வாழ்வில் தீண்டத்தகாத துன்பத்தை உடலில் தீண்டியது போல் உடலெல்லாம் எரிய துடித்து நின்றாள்.​

ஊன் உயிர் உறக்கம் மறந்து ஒருவரில் ஒருவர் நிலைத்திருக்க வேண்டிய இதழ் முத்தம் இருவருக்கும் கோபம், வெறி யார் யாரில் ஆதிக்கம், கர்வம் என அதன் சுவையை பாவற்காயின் கசப்பாக மாற்றிக் கொண்டிருந்தனர். அவனின் வேட்கையால் அவளின் வெட்கத்தால் உயிர் கரைய வேண்டிய இதழ் முத்தம், கோபத்தின் சாயலில் வேதனையின் வடுவாக மாறிக்கொண்டிருந்தது.​

சில நொடிகள் அவளும் விழி மூடி அவன் கைகளுக்குள் தன்னையும், தன் உணர்வுகளையும் கரைத்து நொடியில் அதை மீட்டு, மீண்டும் அவனில் ஆத்திரம் கொண்டு தன்னிலிருந்து அவனை வெறி கொண்டு பிரித்தவள், எப்பொழுதும் சாந்த முகத்தோடு என்ன திட்டினாலும் சிரித்துக் கொண்டு கடந்த போகும் சாத்வி,​

எல்லையை மீறிய அவன் செயலில் அசுரனை வதம் செய்த மகிஷாசுரமர்தினியாக அவதாரமெடுத்து அவன் முன் நின்றாள்.​

“ஏழைகள்னா அவ்வளவு இளப்பமா? உங்க ஆம்பள திமிரக் காட்ட நான் தான் கிடைச்சேனா? என்ன முத்தம் கொடுத்து உணர்வுகளத் தூண்டுனா பொம்பள என்னை மடக்கி மடியில போடலாம்னு நினைப்பா?"​

என்றவள் தளர்ந்து விழுந்த தன் முந்தானையை இழுத்து, அவள் பெண்மையை மறைத்தவளாக, ஆழ மூச்சடுத்து எச்சிலோடு தன் வேதனையையும் விழுங்கி..​

“என் மீது அத்துமீறி உங்க அதிகாரத்தச் செலுத்த நினைச்சீங்கன்னா.." என்றவள் அவனை உறுத்து விழித்து ஒற்றை விரல் நீட்டி, “தொலைச்சி விடுவேன்"​

அந்தப் பாவனையில், அவன் இதழ்கள் லேசாக விரிந்தது. இருந்தும் பிழை செய்த குறுகுறுப்பு அவனை அமைதி காக்க வைக்க,​

சாத்விகாவோ, “ஒரு ஆம்பளைக்கு பொம்பளைய அடிக்கணும்னு நினைச்சா வார்த்தையை விட ஈசியா அவ ஒழுக்கத்துல கல் எரிஞ்சுருறீங்க தானே. உருவம் மட்டும் தான் அரக்கன மாதிரி இருக்கு. பேச்சும் அப்பப்ப கொட்டுமே ஒழிய, மத்தபடி உங்களை என்னமோ நினைச்சேன். நீங்களும் சராசரி ஆம்பளன்னு காட்டிட்டீங்கல்ல இப்பதான் ரொம்ப வலிக்குது."​

அவள் கண்ணெல்லாம் சிவந்து வேதனையும், வன்மமாக ‘நீ தந்த வார்த்தையை திருப்பி தருகையில் அதன் வலியை பார்!' என்ற நினைப்போடு, அவள் வார்த்தையால் திருப்பி அடிக்கையில் சர்வேஷின் கசங்கும் முகம் திருப்தியை மட்டுமல்ல, தீரா துயரத்தையும் கொடுத்தது.​

கொக்கென்று நினைத்து என்னை சாம்பலாக்க நினைத்தாயா? நான் தினமும் என் பதிக்கு தர்மத்தோடு கடமை செய்யும் பத்தினி தேவதை என நெஞ்சுரத்தோடு கற்பு நெறியை பறைசாற்றும் கற்புக்கரசிகள் இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள் என அவனுக்கு சொல்லால் சொல்லிவிட்டாள்.​

சர்வேஷ் வலிக்க வாங்கிய வார்த்தையோடு, அவளை ஆழப் பார்த்தவன், அடுத்த நொடி அவள் அணைப்புக்குள் தன்னைக் குழந்தையாக்கி அதில் சுகமாக குளிர் காயத் தொடங்க, முள்ளாக, மலராக, நெருப்பாக, மழையாக சுழன்றடிக்கும், இவன் மனநிலையில் துவண்டது என்னமோ சாத்விகா தான். இத்தனை நின்று துவைத்து எடுத்தவன்,​

“அடிச்ச இல்ல, அடிச்சது வலிக்குது, நீயே ஆறுதல் சொல்லு!"​

என்ற சொல்லோடு அவளில் புதைந்து கொண்டான். அவள் வேதமாகினால் அவன் விந்தையாகிறான்.​

 

shasri

Member
Adai ravana ena make da nee 😍😍 முள்ளாக மலராக நெருப்பாக மழையாக right words for ravanan 👏👏
 

santhinagaraj

Well-known member
இந்த ராட்சச ராவணனோட பேச்சும் செயலும் கொஞ்சம் கூட பிடிக்கல 😡😡😡
 

admin

Administrator
Staff member
Adai ravana ena make da nee 😍😍 முள்ளாக மலராக நெருப்பாக மழையாக right words for ravanan 👏👏
அவன் தான் ராவணன் ஆச்சே
 

admin

Administrator
Staff member
இந்த ராட்சச ராவணனோட பேச்சும் செயலும் கொஞ்சம் கூட பிடிக்கல 😡😡😡
பிடிக்க வச்சிருவோம் அக்கா
 
Top