மூச்சு முட்டுதுங்க. ஏன் இப்படி வலி தவறிப் போனீங்க?”
“நீ பேசுனா உன் உணர்வுகள் வெடிச்சிருமோன்னு சொன்ன, ஒரு வேளை நான் பேசாம இதுவரை மௌனம் சாதிச்ச விஷயங்களை நீ உன் உணர்வுகளுக்குப் பதில், உன் இதயமே வெடிச்சிருமேடி!”
அதில் திடுக்கிட்டவள்..
“ஏன் இப்படி எல்லாம் பேசுறீங்க?” ஒரு வலி நிறைந்த புன்னகையோடு,
“பெண்ணோட கண்ணீரை பார்த்து வளர்ந்த சமூகத்தை சேர்ந்தவ நீ, அதனால் ஒரு ஆணோட கண்ணீரை பார்த்திருக்கமாட்ட. ஒரு ஆணோட அவமானங்களை பார்த்திருக்கமாட்ட. ஒரு ஆணோட உணர்வுகளின் நிர்வாண நிலையை அனுபவித்து இருக்கமாட்ட. ஒரு ஆணோட வாழ்க்கையில நடந்த அருவருப்பான பக்கத்தை சகிச்சுக்கிட்டு கடந்து இருக்கமாட்ட. ஆனா... நான் அந்த அருவருப்புல தினமும் குளிச்சவன்.
நான் எப்படி என்னோட மணவாழ்க்கையில ட்ரீட் செய்யப்பட்டேன்னு தெரியுமா? தெரிஞ்சுக்க விரும்புறியா? என்னோட மணவாழ்க்கை எனக்கு தந்த காயங்கள தெரிஞ்சுக்க விரும்புகிறாயா? அதை விட அசிங்கமான நினைவுகளை தெரிஞ்சுக்க விரும்புறியா? நான் என்னவா இருந்தேன்னு தெரிஞ்சுக்க விரும்புறியா?”
என்றவன் மூச்சுக்குத் தவிக்க, உடலெல்லாம் அப்படியே வியர்த்து நடுங்கத் தொடங்கியது.
அவன் கன்னத்தில் பலமாகத் தட்டியவள்,
“ஏன்? ஏன் இப்படி டென்ஷன் ஆகறீங்க? ப்ளீஸ் வேணாங்க, விட்ருங்க எனக்கு தெரிஞ்சுக்க வேணாம். தெரிஞ்சிட்ட வரைக்கும் போதும். நார்மல் ஆகுங்கள், நார்மல் ஆகுங்க..”
அவனை தட்டி, தட்டி ஆசுவாசப்படுத்தினாள். சர்வேஷோ, சாத்வி கண்களில் தென்பட்ட பதட்டத்தை இனிப்பாக தன் எண்ணங்களில் நிரப்பினான். தன்னை என்ன தான் ஆசுவாசப் படுத்திக் கொண்டாலும், அவன் கையின் நடுக்கம் மனதின் நடுக்கத்தை அப்பட்டமாகக் காட்டியது.
“ப்ளீஸ்.. எதுவும் தெரிஞ்சுக்க வேணாம். தெரிஞ்ச வரைக்கும் போதும். தெரிஞ்சுக்கிட்டேன், வலிக்க வலிக்க தெரிஞ்சிக்கிட்டேன். மூனு நாள் முழுக்க அழுதேன். ஜீரணிக்க முடியாத அளவு பசி தூக்கம் மறந்து அழுதேன். அதுவரைக்கும் போதும். இனி தெரிந்து கொள்வதை காலம் எனக்கு தெரியப் படுத்தட்டும்.”
என்றவள் அவனை இழுத்து அணைத்துக் கொண்டாள். அணைத்தவாறு சர்வேஷ் முதுகை வருடிக் கொடுப்பதை நிறுத்தவே இல்லை.
நடுங்கிய அவன் உடல் மெதுமெதுவாக ஆசுவாசப்படும் என்று பார்த்தால் மீண்டும் கோபத்தில் இறுகியது, மூர்க்கத்தில் விறைத்தது, அருவருப்பில் கூனிக் குறுகியது. அவளிலிருந்து வலுக்கட்டாயமாகப் பிரிந்தவன், எழுந்து நின்று ஆழ்ந்த மூச்செடுத்துப் பார்த்தான். முடியவில்லை.
அங்கு டேபிளில் இருந்த தண்ணீரை தலைவழியே ஊத்திக் கொண்டவன், தன்னை நிதானப்படுத்த முயன்றான். உடலில் நீர் பட்டதும், வெடித்த உணர்வுகள் மெதுமெதுவாக நிதானமாகத் தொடங்கியது. அவனுக்கோ பயம் வந்து விட்டது, எங்கே ஏதேனும் கோபத்தில் எதையேனும் அடித்து உடைத்து விடுவோமோ என்று.
அவன் நிலையை உணர்ந்தவள்,
“ஏங்க ப்ளீஸ்....” அவன் முதுகில் கை வைக்க பலம் கொண்ட மட்டும் அவளை உதறித் தள்ளினான். அதில் அதிர்ந்து விழப்போனவளை, பட்டென்று ஒரு கரம் நீட்டி இழுத்து மீண்டும் அணைத்தவன்.
“நீ வேணும்னு நினைக்கிறேன்டி வாழ்க்கை முழுக்க வேணும்னு நினைக்கிறேன்டி. வாழ்வோ சாவோ உன்னோட வாழ்ந்து பார்த்துடணும்னு நினைக்கிறேன். ஆனா, என்னோட மூர்க்கம், என்னோட கோபம், எனக்குள்ள அணையாம இருக்க வெறி, என் வாழ்க்கையை வாழ விடுமான்னு தெரியலடி. இதுதான் நான். எனக்கு மென்மையா பேசத் தெரியாது. நிதானமா நடந்துக்கத் தெரியாது. என்கிட்ட பொறுமையே இல்லடி. பயமா இருக்குடி!”
அவன் அணைப்பில் அடங்கியவள், அவனை நோக்கி முகம் நிமிர்த்தி, “அன்னைக்கு சொன்னீங்க. என்னமோ சொன்னீங்களே? உன்னோட கண்ணோரச் சுருக்கம் கூட நான் வேணும்னு எனக்கு சொன்னுச்சுன்னா, எவன் தடுத்தாலும், உன்னை உனக்காகக் கூட விட்டுக் கொடுக்க மாட்டேன்னு. ஏன் இப்போ தெரியலையா?”
மதம் பிடித்த யானை போல் ரௌத்திரத்தில் சிலிர்த்துக் கொண்டிருந்த அவனின் உணர்வுகளில் ஒரு அமைதி தென்பட்டது. அவன் முகத்தில் மெதுமெதுவாக மென்மையின் சாயல்.
“என்ன சொல்ற?”
“நான் சொல்ல என்ன இருக்குங்க? நீங்க தான் சொல்லணும். என் கண்ணோர சுருக்கம் மட்டும் தான் சொல்லணுமா? இந்த கண்களுக்குள் இருக்க கருவிழிகள் சொல்லக் கூடாதா?”
“சாத்வி!”
“ஹூம்.. ஹூம்..! நான் இந்த ராட்சச ராவணனோட மண்டோதரி. என்னை சிறை எடுத்தது ராவணன் தான். ஆனால், அந்த ராவணனோட இதயத்துக்குள்ள சிறைப்பட்ட நான், ராமனோட சீதையில்லை, இந்த ராவணனோட மண்டோதரி!”
இதோ தனக்குள் துடித்துக் கொண்டிருந்த அவனின் உணர்வுகளை ஒற்றை விரலில் ஆட்டி வைக்கத் தொடங்கி விட்டாள். அவன் வாழ்வின் பாவங்களை துடைத்து, புது வேதம் படைக்கத் தொடங்கி விட்டாள்.
தன் காதல் தேவதையிடம் கர்வம் தொலைக்க சித்தம் கொண்டவன்,
“நீ நிஜமாத்தான் சொல்றியா?”
“ஹம்.. நிஜந்தான்”
“என் தவறுகளை நீ மன்னிச்சுட்டியானு தெரியணும். இல்லை, என் கடந்த காலத்தை நீ சகிச்சுக்கிட்டியானு தெரியணும்”
அவனை அழுத்தமாகப் பார்த்தவள், “உங்க தவறுகளை மன்னிக்கத் தோனல தண்டிக்கத் தோனுது. உங்க கடந்த காலத்தை சகிக்கத் தோனல, முழுமையா உங்க நிழலில் இருந்து ஒதுக்கணும்னு தோனுது. மறுபடியும் நீங்க பிழை செஞ்சா, வலிக்க வலிக்க உங்கள அடிக்கணும்னு தோனுது. ஆனா எதுக்காகவும் உங்களை விலக்கணும்னு தோனல!”
“இது, இது போதுமேடி!”
“ஆனால், எனக்கு போதாது. உங்களை நிறைய வலிக்க விடணும். அப்போதெல்லாம் சாத்வி, சாத்வின்னு என் பேர நீங்க நினைக்கிற மாதிரி, உங்க வலிகளில் கூட நான் இருக்கிற மாதிரி செய்யனும். என்னை நிறைய நீங்க நேசிக்கனும். அப்படி நேசிக்கும் போது, உங்க எண்ணத்துல மட்டும் இல்ல, சுவாசத்திலும் நான் மட்டும் தான் இருக்கணும். என்னோட இமை அசைவுக்காகக் கூட, உங்களை காத்திருக்க விடணும்னு தோனுது. அந்த ஒத்த அசைவுல, இந்த கெத்து மனுஷன் தலைகுப்புற விழணும்!”
அவளை ரசனையாகப் பார்த்தவன்,
“சரி” அவன் பதிலில்,
“என்ன சரி?”
“என்னோட கர்வம் தொலையப் போறது சாத்வி கிட்டயா இருந்தா, நான் என் கர்வம் தொலைக்க சம்மதம். என்னோட ஆண்மையை நிறைக்கப் போவது சாத்வீனா, என்னோட அகம் திறக்கச் சம்மதம். என்னோட திமிரை ஆளப்போறது சாத்வீனா, இந்த சர்வேஷோட சர்வமும் சாத்வியா மாறச் சம்மதம்!”
அவளை இறுக்கி அணைத்துக் கொண்டான்.
“எப்படி தெரிஞ்சுகிட்ட?”
“உங்க கண்ணுல இருந்த ஏதோ ஒன்னு என்னை உங்கள தொரிஞ்சுக்கச் சொல்லி, பாடா படுத்துனுச்சு. அதுதான் வருண் அண்ணா கிட்ட கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டேன்.”
அதில் அவன் உடல் ஒரு கணம் இறுகி இயல்பாக,
“அவர் சொல்ல மாட்டேன்னு தான் சொன்னாரு ஆனா எனக்கு உங்கள பிடிச்சி இருக்குன்னு சொன்னேன். உங்களுக்கும் என்னை பிடிச்சிருக்குன்னு சொன்னேன். உங்களோட கடந்த காலத்தை அவருக்கு தெரிந்த அளவு சொல்லச் சொன்னேன். அப்பவும் அவர் சொல்லல. என்கிட்ட ஒரு கேள்வி கேட்டாரு, நான் சொல்லுவேன், ஆனா எதுக்காகவும் அவரை விட்டு நீ போகக்கூடாதுனு சொன்னாரு. அவருக்கே அவ்வளவு இருக்கும் போது, உங்கள இங்க, இங்க..”
என்றவள் தன் நெஞ்சில் கை வைத்துக் காட்டி,
“சுமக்கிற எனக்கு உங்க மேல எவ்வளவு வெறி இருக்கும். விட்டுட்டு போக மாட்டேன்னு சொன்னேன். அப்போ தான் உங்களுக்கு திருமணமானது சொன்னார். அது அவரு தங்கச்சினு சொன்னாரு. உங்களுக்கு டிவோர்ஸ் ஆயிடுச்சுன்னு சொன்னாரு. நீங்க அதுக்கப்புறம் பாதை மாறிப் போயிட்டிங்கன்னு சொன்னாரு.”
அவள் கண்கள் கண்ணீர் வடிக்க..
“அழாதடி! நீ அழுதா என் இதயத்தை பிச்சு எறியணும்னு தோனுதுடி!”
“எப்படி அழாம இருக்க முடியும்? சந்தோஷப் படுற விஷயமா இது? தான் நேசிக்கிற ஒருத்தர், இன்னொருத்திக்கு சொந்தமானவரா பார்க்கும் வலி இருக்கே, அதை அனுபவிச்சுப் பார்த்தா தான் தெரியும்!”
அந்த வார்த்தையில் அவன் மனம் செத்து மடிந்தது. சொல்லப்படாத ரகசியங்கள் இன்னும் ஏராளம் உண்டு. தொண்டையை செறுமிக் கொண்டு,
“நீ தெரிந்து கொண்டது இவ்வளவு தான். ஆனால், அந்தத் திருமணம் ஏன் தோல்வியில முடிந்ததுனு தெரியுமா? என்னோட திருமண வாழ்க்கை தந்த பரிசு என்னன்னு தெரியுமா? என்னோட கருப்பு பக்கங்கள் என்னன்னு தெரியுமா?”
என்றவன் வேதனையை எச்சிலோடு சேர்த்து விழுங்க,
ஏறி இறங்கிய அவன் தொண்டைக் குழியும், இறுகிய கை முஷ்டியும் ஏதோ பயங்கரமான ஒன்று இருப்பதை அறிவுறுத்த, அவள் மனம் அடித்துக் கொண்டது.
“இல்ல வேணாம். நான் தெரிஞ்சுக்கிட்ட வரைக்கும் போதும். ஆனால், அந்த ரகசியம் எப்ப எனக்கு தெரியணும்னு நான் நினைக்கிறேனோ நான் அப்ப தெரிஞ்சுக்கிறேன். அதுவரைக்கும் எனக்கு தெரிஞ்சுக்க வேணாம். எனக்கு நீங்க வேணும், உங்களோட ஒரு வாழ்க்கை வேணும். அதுக்காக எல்லாம் மறந்துட்டு ஒரு நார்மல் பொண்டாட்டியா இருப்பேன்னு கேட்டா பதில் இல்ல. படுக்கையப் பகிர்ந்து கொள்ள அருவருப்பு படாமல் இருப்பனானு கேட்டா, என்கிட்ட பதில் இல்லை. என்னைத் தொடும் போது மத்த பொண்ணுங்களை தொட்ட கை தானேனு நான் நினைக்காம இருப்பேனானு கேட்டா என்கிட்ட பதில் இல்ல. இந்த நெஞ்சில் சாய்ந்திருக்கும் போது, இதுக்கு முன்ன ஒருத்திக்கு இங்கே இடம் கொடுத்து இருப்பார் தானேனு நினைக்காமல் இருப்பனானு கேட்டா அதுக்கும் பதில் இல்ல!”
ஒவ்வொரு வார்த்தையும் அர்ஜுனன் தொடுத்த அம்புகளாக அவனை வதம் செய்தது. ஆனால், தான் சரிந்து விட்டால், அவள் செத்து விடுவாள் என்பதை அறியாதவனா அவன்!
“நீ பதில் சொல்லாத, ஆனா.. உன்னை நான் தொடும் போது, என்னை எனக்காக மட்டும் நினைக்க வைக்க எனக்குத் தெரியும். நான் அருகில் இருந்தா, என்னை எனக்காக மட்டும் உன்னை சுவாசிக்க வைக்க எனக்குத் தெரியும். இந்த நெஞ்சில் இப்படி உரிமையா சாஞ்சுகிட்டவ நீ ஒருத்தி தான்னு புரிய வைக்க எனக்குத் தெரியும். வாழ்க்க முழுக்க இந்த கையப் புடிச்சுகிட்டு வா, உன்னை விடாம கூட்டிட்டுப் போறேன்.”
அவன் உருக்கமாகக் கூற, மறைக்கப்பட்ட பக்கங்கள் மறைக்கப்பட்டதாக ஆயிற்று. அவர்கள் காதல் காயங்களைக் கடந்து மேலே வந்தது.
“சொல்லு! என்னோட வாழத் தயாரா? என்னை கல்யாணம் கட்டிக்கிறியா?”
“கட்டிக்கிறேன். ஆனா எப்ப எல்லாம் தோனுதோ அப்போலாம் சண்டை பிடிப்பேன், அடிப்பேன்! உங்களுக்கு வலிக்கலைன்னாலும் வாங்கிக்கணும்.”
“வாங்கிப்பேன்” பிரிந்த புன்னகையோடு.
“நான் ரொம்ப சென்சிடிவ்! உங்க மூர்க்கத்தை எவ்வளவு தாங்குவேன்னு தெரியாது. தாங்க முடியாதப்போ அழுவேன், திட்டுவேன். அதை தாங்கிப்பீங்களா?”
அவன் முகம் நோக்கிக் கேட்க, “சந்தோஷமா” என்றான் ஒற்றைச் சொல்லாக.
திடீரென அடிபட்ட குழந்தையின் சாயலை அவள் முகத்தில் கண்டவன்.
“என்னடா?”
“என்னை விட்டுர மாட்டீங்களே...?”
“செத்தாலும் கூட்டிட்டு தாண்டி போவேன். இந்தத் தனிமை வலிக்குது. வேதனையா இருக்கு. பயமாவும் இருக்குடி!”
விழிகளில் விழி நீர் வடிந்தாலும், அவள் இதழ்கள் புன்னகைத்தன. அவள் முக வடிவத்தை விரலால் அளந்தவன்.
“என் தொடுகை அருவருப்பா இருக்குமா? பட்.. உன் ஒவ்வொரு அசைவிலும் நான் என் சுயம் தொலைக்கணும். என்னை மறக்கணும். ஒரு பெண்ணோட தொடுகை காமத்தின் வாசலை மட்டும் இல்லை, ஆணோட ஆன்மாவின் வாசலையும் திறக்கும். அதை இது வரை நான் உணர்ந்ததில்லை! இனி உணரனும்டி. எங்க அம்மா அப்பா மாதிரி நிறைய குழந்தைகள பெத்துக்கணும். ஐ லவ் கிட்ஸ். சம்மதமா?”
“ஹூம்” மறுப்பாக தலையாட்டியவள் இதழ்களோ,
“கொஞ்சம் கஷ்டமெல்லாம் இல்ல. ரொம்பவே கஷ்டப்படணும். உங்களுக்கு சம்பந்தமா?”
“எஸ்.. எஸ் ஐ ஆம் ரெடி. ஐ அம் ரெடி டு பிகம் மிஸ்டர் சாத்வி!”
இருவர் உள்ளத்திலும் தீராத வலிகளுண்டு, காயங்களுண்டு, கடந்த காலம் தந்த சுவடுகளுண்டு. ஆனால், அதை எல்லாம் மறக்க வைக்கும் காதல் உண்டு. அந்தக் காதல், அவளை அவனுக்காக சுயம் தொலைக்க வைக்கும் என்றால், அவனுக்கோ அவளுக்காக அடி பணிந்து போக வைக்கும்.
தன் திமிரை அவளுக்குத் தாரை வார்த்தான். தெரிந்தே அவன் கர்வத்தின் தலையை, தன் பிடிக்குள் கொண்டு வந்தாள்.
“ஆமாம் இப்படி அழுது இருக்கியே! உன் ஃப்ரெண்ட் என்னனு கேட்கலையா?”
“இல்ல... அவ ஊருக்குப் போயிட்டா.”
“இனி அழாத..”
“அதெப்படி, தோனும் போது எல்லாம் அழுவேன்.”
அவளை முறைத்தவள்,
“மூச்! அழுத தொலைச்சிடுவேன்!”
“ராட்சச ராவணன் இஸ் பேக்.”
“எப்பவும் உனக்கு ராட்சச ராவணனா இருக்கிறதத் தான்டி விருப்புறேன். அதுல ஒரு தனி கிக் இருக்குடி!”
அவள் கண்களை அழுந்தத் துடைத்து, சாத்வியின் இதழ்களை நோக்கிக் குனிந்தவன், அவள் இதழ் மீது தன் இதழ் உரசும்படி சென்று,
“இப்போ இல்ல. இந்த இதழ் முத்தம் என்னை மட்டுமே நினைக்கிற மாதிரி, கண்டிப்பா கொடுப்பேன்!”
என்றவன் அவள் காதோரம் நெருங்கி,
“இன்னும் நாலு நாள்ல நமக்கு மேரேஜ். வீட்ல பேசிட்டேன். ரெடியாகிரு.”
அவனைத் தள்ளி விட்டு, விழிகள் பெரிதாக விரிய, அதிர்ந்து அவன் முகம் நோக்கியவள்.
“எஎ.. என்ன சொல்றீங்க. வீட்ல பேசிட்டீங்களா? என்ன சொன்னாங்க?” பரிதவிப்போடு கேட்கவும்,
“அவங்களுக்கு உன்ன ரொம்பப் பிடிக்கும். இதுல யாரு என்ன சொல்ல இருக்கு? உனக்கான எதுவும், அதை நான் தான் சொல்லணும். உனக்காக எதுவும்..” அழுத்திக் கூறியவன்,
“அது என்னோடதா மட்டும் தான் இருக்கும். அது முடிவா இருந்தாலும் சரி, உனக்கான அன்பா இருந்தாலும் சரி!”
அவள் கண்களில் தோன்றிய ஒளியை ரசனையோடு பார்த்துக்கொண்டே, சாத்வியின் இரு இமை மீதும் முத்தமிட்டவன்,
“இந்தக் கண்கள்ல கண்ணீரையோ பயத்தையோ பார்க்கக் கூடாது. அதை பார்க்கிறதுல எனக்கு விருப்பமும் இல்லை. இப்ப மனசுக்குள்ள வந்துட்ட, இன்னும் நாலு நாள்ல.. எனக்கே எனக்குனு முழுசா எனக்குள் நீ வந்துடணும். வரவச்சுடுவேன்!”
அழுத்தமாக நெற்றி முத்தமிட்டவன், அவளை அழைத்துக் கொண்டு ஹாஸ்டல் நோக்கிச் சென்றான். இருவரின் பயணமும் மௌனத் துளிகளில் மூழ்கி இருக்க, கண்களோ நேசத்தின் சாயலில் மூழ்கி விரிந்தன.
ஹாஸ்டல் வரவே சிறு தலையசைப்போடு அவனிடம் விடை பெறவும்,
அவன் கார் நேராகச் சென்று நின்ற இடம் ஜனனி பேலஸ்.
“சர்வா! இப்படி அமைதியாக இருந்தால் என்ன அர்த்தம்? என்னதான் நடந்துச்சு?”
அவனிடம் நீண்ட மௌனம்.
“கண்ணா! கேட்கிறேன்ல, ஏதாவது சொல்லேன்.”
அவனிடம் மீண்டும் மௌனம்.
“கண்ணா!” ஜனனி குரல் உயரவும். அக்கண்யனின் “ஜனனி!” என்ற அழுத்தமான அழைப்பு கண்டிக்கவே,
“இல்லங்க.. சர்வா”
“தெரியும், அவனே சொல்லட்டும்.” மகனை உறுத்து விழிக்க,
“அழுவுறா அப்பா! ரொம்ப அழுவுறா. அவ அழும் போது ஐ எம் கெட்டிங் ஸ்ட்ரெஸ். அவளோட கண்ணீரைப் பார்க்க முடியல. டைஜஸ்ட் பண்ணிக்க முடியல. கோவமா வருது. என்னை நானே ஏதாவது பண்ணிட்டா, என்னனு தோனுது.”
“சர்வேஷ்!” அதட்டலாக அழைத்த அக்கண்யன்.
“இதுவரைக்கும் எப்படியோ இனி உன்னோட கோபம் ஒவ்வொரு துளியும் சாத்விய பாதிக்கும். சாத்விய மட்டும் தான் பாதிக்கும். யூ அண்டர்ஸ்டாண்ட், ரைட்!”
பெருமூச்சோடு எழுந்தவன்,