எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

வேதம் - 12

admin

Administrator
Staff member

அத்தியாயம் - 12​

"என்னங்க!"​

மௌனம்..​

“உங்களத் தாங்க...”​

மீண்டும் மௌனம்.​

“ம்ச்!” அவன் மௌனத்தில் சலித்துக் கொண்டே குறும்போடு,​

“புருஷ்!” ஒரு நொடி புருவங்கள் ஏறி இறங்க, காதை லேசாக வருடிக் கொண்டான். ஆனால் மௌனம் களையவில்லை. காரில் ஏறியது முதல் நீடித்த மௌனத்தில் கடுப்பானவள்,​

“யோவ் ராவணனா!” உரக்க அழைக்கவும், உதடுகள் லேசாக விரிய...​

“ராவணனுக்கு என்னவாம்?”​

“இப்போ மட்டும் பேசுங்க. அவ்வளவு ஆணவம்!”​

“என்னடி பேசணும்? இவ... க்ரஷ் ஹஸ்ப்பிடல்ல போய், கவுந்து கிடக்குறானாம், அவனப் பார்க்கப் போக,​

இவங்களுக்கு நான் பௌன்சர் வேலை பார்க்கணுமாம்”​

உச்சக்கட்ட கடுப்பில் அவன் விரல்களுக்கு நடுவே மூன்றாம் விரலை பொறுத்திக் கொண்டால், என்னவென்று மனம் முணுமுணுக்க,​

“ம்ச்.. இப்படி எல்லாம் பேசாதிங்க. அவன் எனக்கொன்னும் க்ரஷ் இல்ல. அவனுக்கு தான் என் மேல ஒரு க்ரஷ், புருஷ்!”​

அவள் அபிநயத்தோடு சொல்லவும், மீண்டும் புருவங்கள் இரண்டும் ஆச்சரியமாக ஏறி இறங்க, காரோட்டியபடி அவளை தலைசாய்த்து பார்த்து,​

“என்னவாம்?”​

“புருஷ்?” என்றவள் கேள்வியாக நிறுத்தி,​

“ஏன் இல்லையா என்ன?”​

“சொல்லிக்கோ, சொல்லிக்கோ!”​

அவன் முகம் மீண்டும் கடுமையை தத்தெடுக்க..​

“இப்போ எதுக்கு முகத்துல முள்ளக் கட்டிட்டு இருக்கீங்க?”​

“கிண்டலாடி உனக்கு இப்போ என்ன டேஷ்க்கு அவனைப் பார்க்கப் போகணும்?”​

“ரொம்ப கெட்டவார்த்தை பேசறீங்க புருஷ்”​

“பச்சையா பேசுவேன். நீங்கிறதுனால இதோட விட்டுட்டேன்.”​

“ஏனாம்?”​

“என்னைப் பார்த்தா எம் பொண்டாட்டி மூஞ்சி வெட்கத்துல சிவந்து, கூச்சத்துல சுருங்கணுமே ஒழிய, அருவருப்பில சுருங்கக் கூடாது!”​

பெண்மையின் மென்மையை ஆராதிப்பதும் ஆண்மை தானே. அவனிடம் நல் ஆண்மையைக் கண்டவள் விழிகளில் கர்வத்தின் சாயல்.​

“என்ன மிஸஸ்.மண்டோதரி சைலட் ஆகிட்டாங்க?”​

“என் மேல உங்களுக்கு சந்தேகமே வரலையா?”​

“ஏனாம்?”​

“இல்ல ரகுவரன்..” அவள் இழுக்கவும்.​

“என்ன விஷத்தை குடிச்சான் கிறுக்கன்? லோக்கல் ப்ராண்ட்டா இருக்கும். நல்ல ஒரிஜினல் ஐட்டம் பார்த்து வாங்கிக் கொடுக்கணும். பட்டுனு குடிச்சா பொட்டுன்னு போக வேணாமா?”​

“ஏதே?” அவள் அதிர்ந்து நெஞ்சில் கை வைக்கவும்,​

“பின்ன என்னடி? இடியட்! அவன் விஷம் குடிச்சானாம். இவங்க பெரிய மதர் தெரேசா ஐயோ பாவமேன்னு உருகி ஓடுறாங்களாம். அதை நாங்க சந்தேகம் வேற படணுமாம்.”​

“புருஷ்!” அவள் உணர்ச்சி வசப்பட்டு அழைக்கவே,​

“பொண்டாட்டிய சந்தேகப்பட்டு அடிச்சு கொடுமைப்படுத்துறது ஆம்பளை தனம்னா, நான் அப்படி ஒன்னும் ஆம்பளைன்னு பேர் வாங்க வேணாம்!”​

ஒற்றை வார்த்தையில் ஆண், பெண் எனும் மிக பெரும் தீண்டாமையை ஒழித்து விட்டான். இரவும் நிலவும் உறவாடும் அந்த வேளையில் அவன் வார்த்தை அவளை மௌனி ஆக்கியது. அப்படியே அவன் புஜங்களை இரு கரங்களால் பிடித்துக் கொண்டு, தோளில் தலை சாய்ந்துக் கொண்டாள். அவள் தலை மீது தன் தலை சாய்த்து முத்தமிட்டவன், ஹாஸ்பிட்டல் பார்க்கிங்கில் காரை நிறுத்தி விட்டு அவளோடு இறங்க,​

“புருஷ், ஒரு நிமிஷம்.” ஒரு விரலால் நாசியை தேய்த்துக் கொண்டே,​

“வாட்?” அமெரிக்கன் இங்கிலீஷ் மிக ஸ்டைல்லாக வரவே, எங்கே வாயை பிளந்து கொண்டு அவனை ரசித்துவிடுவோமோ என்று பயந்தவள், விழிகளை அங்கும் இங்கும் உருட்டி தன்னை சமன் செய்து கொண்டு.​

“நோ வையலன்ஸ்..”​

“வாட்?” அவன் உறுமவே, எச்சிலை முழங்கிக் கொண்டு.​

“அங்க வந்து அடிதடில இறங்கக் கூடாது. முக்கியமா ரகுவரனை ஒன்னுமே பண்ணக் கூடாது.”​

“சாத்விகா!” அவன் கடுமையில்.​

“சர்வேஷ் அக்கண்யன் வேணும்னு நினைச்சா மட்டும் போதுமா? எம்மாம் பெரிய ஹல்க் பல்க் அவரு. ம்ச்.. அவரை கட்டிக்க போற நான் கொஞ்சமாவது சூழ்நிலையை சமாளிக்க தெரிஞ்சவளா இருக்கக் கூடாதா?”​

“ஓவ்! இஸ் இட்?” என்றவன் தாடையை தடவிக் கொண்டே,​

“ஷல் ஐ ஸ்மோக்?” அவள் முழிக்கவும்,​

“ம்ச்! என்னடி முழிக்கிற? தம் அடிக்கவானு கேட்கிறேன்..”​

“நீ.. நீங்க தம்மு?”​

“அடிப்பேன், அடிப்பேன் அப்போ, அப்போ. இப்போ நீ வேணான்னு சொன்னா, இருக்க டென்ஷன்ல அவனை அடிப்பேன்!”​

அவள் தலை தன்னை போல் ஆட, வாயோ “ஸ்மெல் வந்ததே இல்லையே!”​

“டேவிட் ஆப்(David off)” என்றான் வாயில் சிகரெட்டை பொறுத்திக்கொண்டே.​

“என்ன?” மீண்டும் முழிக்க, அதில் இதழ் கடையோரம் பூத்த புன்னகையோடு​

“ப்ரான்ட் நேம்டி. அது அப்படி ஒன்னும் ஸ்மெல் வராது. அண்ட் உன்கிட்ட வரும்போது ஸ்மோக் பண்ணிட்டு வர மாட்டேன்!”​

ஹாஸ்பிடல் வளாகத்தின் வெளியே நடந்தவாறு..​

“ஏனாம்?” அவள் காதோரம் குனிந்தவன்​

“ஹம்.. புதுசா ஒன்னுமில்ல. அப்போ சொன்னது தான். என் பொண்டாட்டி முகம் வெட்கத்துல சுருங்களாம், அருவருப்பில் இல்ல!”​

அவள் முகத்தில் நாணக்கோடுகள். அதை ரசித்தவன் புகைத்து முடித்து விட்டு,​

“ஓகே! லெட்ஸ் கோ.”​

ரகுவரன் அறைக்கு வர லேசாக கதவைத் தட்டிவிட்டு சாத்வி நுழையவும், அவளைப் பார்த்தவன் கண்கள் இரண்டும் மலர்ந்து,​

“சாத்வி! வா! வா!. எனக்கு தெரியும் நீ வருவனு. என் மேல உனக்கு ஒரு சிம்பத்தி இருக்கு.அப்படியே என்ன விட்டுருவியா என்ன? உன்னை என்கிட்ட வரவைக்கிறதுக்கு என்ன பண்றதுன்னு தெரியலை. அதான் எலி பாய்சன் கொஞ்சூண்டு சாப்பிட்டேன். இதை கேள்விப்பட்டா, உடனே நீ ஓடி வந்துருவனு தெரியும்”​

என்றவன், பின் வந்த புலியை கோட்டை விட்டு விட்டான். தொண்டை வரை வண்ணம் வண்ணமாக வந்த வார்த்தைகளை, சாத்வியின் பொருட்டு எச்சிலோடு விழுங்கிய சர்வேஷ்,​

“ஏன் மிஸ்டர். ரகுவரன் கொஞ்சூண்டு எலி பாய்சன் சாப்பிட்டீங்க? ஏதாவது ஹெவி பாய்சன் சாப்பிட இருந்துச்சே!”​

“புருஷ் ப்ளீஸ்.. நான் பேசிக்கிறேன்!”​

“சீக்கிரம் பேசு. என் பொறுமை எவ்வளவு நேரம் தாக்குப் பிடிக்கும்னு தெரியல.” என்றவன் அங்கிருந்த சோஃபாவில் அமர்ந்து கொள்ள,​

ரகுவரனை அழுத்தமாகப் பார்த்த சாத்வி,​

“ஏன் சார் இப்படி ஒரு வேலை பார்த்தீங்க?”​

“உன்னை அடைய வேற மார்க்கம் தெரியலை. நாளைக்கு உனக்கு மேரேஜ். இதை விட்டா வேற வழி இல்லை எனக்கு.”​

அங்கே ஒருத்தன் கொஞ்சம் கொஞ்சமாக அரக்கனாகிக் கொண்டு இருக்கிறான் என்பதை அறியாது வார்த்தையைச் சிதற விட்டான்.​

“பிறர் மனை நாடுவது பாவமன்னு தோணலையா?”​

ஆக்ரோஷமானவன், “எது பாவம்? இல்லை, எது பாவம்னு கேட்கிறேன். நீ எனக்கானவ சாத்வி. உன்னை நான்தான் முதல் முதல்ல ப்ரபோஸ் செய்தேன்.”​

“ஆனால், அதை நான் ஏத்துக்கலையே சார். அந்த பௌர்ணமிய யாரு வேணும்னாலும் வர்ணிக்கலாம். ஆனால்... அது வானத்துக்கு மட்டும் தான் சொந்தம் சார்.”​

விலகாத நிதானத்தோடு அவள் பேச, எதிரே இருந்தவன் அவள் நிதானத்தை வார்த்தைகள் கொண்டு சிதைக்கத் தொடங்கினான். அவளை குரூரமாகப் பார்த்துக்கொண்டே,​

“நீ எப்போ சாத்வி, இப்படி பேசக் கத்துக்கிட்ட? வாய் பேசத் தெரியாத மென்மையான சாத்வி தொலைந்து போயிட்டான்னு தோணுது. என்ன உன்னையும் இந்தப் பணம் விட்டு வைக்கலையா? அநாதைங்கிற இமேஜை மாத்த நினைக்கிறீங்களா? இல்லை, என்னை விட ஹைட்டா, வெயிட்டா, வாட்டசாட்டமா, ஹை கிளாஸ் பப்ளிக் செலிப்பிரிட்டியா இருக்க இவரு மேலயும், இந்த உடம்பு மேலயும் ஒரு நாட்டமா?”​

அவன் வார்த்தையை முடிக்கும் முன், சர்வேஷ் அவன் அமர்ந்திருந்த சோஃபா முன்னிருந்த கண்ணாடி டேபிளை ஓங்கி எத்த, அது கவிழ்ந்து விழுந்தது. எதையும் பொருட்படுத்தாதவன் புயலென எழும்பி ரகுவரனை நோக்கி அடி எடுத்து வைக்க,​

“யோவ் ராவணா!”​

சாத்வியின் ஒற்றை அதட்டல் மொழிக்கு, அவன் கால்கள் அடுத்த அடி எடுத்து வைக்கத் தங்கியது. ‘நகராதே!’ என்று விழிகளால் கட்டளையிட்டவள்.​

“புருஷ்! அடுத்த அடி எடுத்து வைக்கக் கூடாது!”​

“ஏய்! நீயும் உதை வாங்கப் போறடி!”​

“அத அப்புறமா பாத்துக்கலாம். ஒரு அடி எடுத்து வைக்கக் கூடாதுனு சொன்னேன். போய் இருங்க.” என்றவள் குரலுக்கு, அந்த ஆறடி உருவம் அடிபணிந்தது.​

அவன் ருத்ரத்தில் ரகுவரனின் ஈரக்குலையே நடுங்கி விட்டது. ஒரு கணம் அவன் உயிர் அந்தரத்தில் மிதந்ததைக் கண்டான். எங்கே சங்கை நெறித்தே கொன்று விடுவானோ என்று பதைபதைத்து விட்டான். உடம்பெல்லாம் வியர்த்து பேய் அடித்ததைப் போல் இருந்தவன்...​

‘ஜஸ்ட் மிஸ் எலிபாய்சன்ல தப்பிச்சு புலிப் பாய்ச்சல்ல சிக்கி இருப்ப மேன்!’​

அவன் மனம் எள்ளி நகையாட, யூஎஃப் சாம்பியன்னு ஊரே தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் வீரன், சாத்விகாவின் ஒற்றை சொல்லுக்கு சிறு முயலின் முன் அடிபணிந்த சிங்கத்தைப் போல அமைதியாகிய தோற்றத்தை, அத்தனை பயத்திலும் மெய் மறந்து அதிசயத்துப் பார்த்தான்.​

 

admin

Administrator
Staff member

ரகுவரன் பயந்து, வியர்த்து, அதிசயத்து என கலவையான உணர்வில் இருக்க, இப்போது சரம் தொடுப்பது பெண் அம்பையின் முறையானது.​

“என்ன கேட்டிங்க ரகுவரன்?”​

“சாத்வி!”​

“பேசக் கூடாது!” அவள் அழுத்தத்தில் சர்வேஷ் “சரி” என்க,​

மீண்டும்.. “பேசக் கூடாது புருஷ்”​

“ஹம்.. சரிடி.” அவனின் அலட்சியத்தில் அவள் உதடுகள் வளைய, இவர்கள் இருவரின் மௌனத்துக்குள் இருக்கும் அன்னியோன்யத்தை கண்களால் கண்ட ரகுவரனின் இதயத்துக்குள், ஏதோ ஒன்று உடையும் உணர்வு.​

“சொல்லுங்க, இப்போ என்ன தெரியணும்?”​

“சாத்வி!” அவன் தடுமாறவும். சிறிதும் தயக்கமின்றி,​

“ஆமா! எனக்கு மயக்கம் தான். அவர் உயரத்து மேல, உருவத்து மேல, உடம்பு மேல, அவரோட வனப்பு மேல, அவர் டிரெஸ்ஸிங் சென்ஸ்ல, கையில இருக்க காப்ப முறுக்கி விடுற அழகுல, அப்பப்போ நின்னுக்கிட்டே கால முட்டி வர மடிச்சு லேஸ் கட்டுற ஸ்டைல்ல, கோதி விடுற பிடரி முடி மேலே, வருடிக் கொடுக்குற தாடி மேல.. எனக்கு மயக்கம் தான். அவ்வளவு ஏன்? அவர் தலையில் இருந்து விழுற ஒத்த முடி மேலையும் எனக்கு தீராத மயக்கம் உண்டு. இதச் சொல்றதுல எனக்கு என்ன வெட்கம்? எனக்கு என்ன தயக்கம்?.. இல்ல எனக்கு என்ன கூச்சம்னு கேட்கிறேன்?”​

அவள் அழுத்தத்தில் அதில் தொக்கி நின்ற கர்வத்தில், சர்வேஷின் பற்கள் மிக அந்தரமாக தன் கீழ் உதட்டை கடிக்க.​

ரகுவரன் சாத்வியை அதிர்ந்து பார்த்துக் கொண்டிருந்தான்.​

“என்ன ரகுவரன் சார், அப்படி பார்க்கறீங்க? நெஜம்தானே! அவர் மேல எனக்கு மயக்கம் இல்லைனா தான் தவறு. ஏன்னா... நான் மயங்கறதுக்கு தான், அந்த ஆறடி உருவம்.”​

அவள் விழிகள் ரசனையாக சர்வேஷைப் பார்க்க, எங்கே வெட்கத்தில் தன் இமைகளை தாழ்த்தி விடுவோமோ என்று முரடனுக்குள் ஒரு தோற்ற மயக்கம்.​

சட்டென்று பார்வையை மாற்றியவள்,​

“எஸ்! அவர் பணக்காரர், நான் லோ கிளாஸ். என் பெயருக்கு பின்னால முகவரியே இல்ல தான். நான் அனாதை தான்!”​

அழுத்தி நிறுத்தியவள், சர்வேஷ் புறம் பார்வையைத் திருப்பி,​

“ஏங்க புருஷ். நான் கேட்டா உங்க சொத்தெல்லாம் என் பேர்ல எழுதி வைக்க மாட்டீங்களா என்ன?”​

“நானே உனக்கு தான், சொத்து என்னடி, சொத்து!”​

“நான் அநாதையாமே...”​

தாடையை தடவிக்கொண்டே,​

“மாமனார், மாமியார், ரெண்டு நாத்தனார், ரெண்டு அத்தான்ஸ் அண்ட் எங்க அம்மா, அப்பாவுக்கு என்னோட சேர்த்து அஞ்சு பசங்க. நமக்கு இப்போதைக்கு ஆறு பசங்க போதும்!”​

அவன் பதிலில் சாத்வி நாணத்தில் உதடு வளைத்தாள்.​

மாறாத நிதானத்தோடு ரகுவரன் புறம் திரும்பி,​

“ஏன் அவருமே என்னை அப்படி சொல்லி திட்டி இருக்காரு.” என்றவள் விழிகளில் தோன்றி மறைந்த வேதனையை, சர்வேஷின் விழிகள் படம் பிடிக்கத் தவறவில்லை.​

“இத சொல்றதுல எனக்கு என்ன வெட்கம்? ஏன்னா? இதுதான் நான். இந்த என்னைத் தான் அவர் வேணும்னு சொன்னாரு. கர்வமா, திமிரா, ஆணவமா ஆங்காரத்தோடு சொல்லுவேன். யூ எஃப் வேர்ல்ட் சாம்பியன், சர்வா குரூப் ஆஃப் கம்பெனிசோட சேர்மன், தி மாஸ்டர் பீஸ் சர்வேஷ் அக்கண்யன் பின்னால நான் அலையல. அவர்தான் என் பின்னால அலைஞ்சாரு. அவர் தான் நான் வேணும்னு நினைச்சாரு. அவர்தான் என் உணர்வுகளை வென்றாரு. அவர்தான் ஒத்தப் பார்வையில் என் பெண்மையை உணர வச்சாரு.​

ஆமா, நான் லோ கிளாஸ் தான். அதைச் சொன்ன, என் புருஷனோட சண்டை போடுற மொத்த உரிமையையும் எனக்குக் கொடுத்து இருக்காரு. நான் சாகுற வரைக்கும் என் பேருக்கு பின்னுக்கு, அவரு பேரை முகவரியா கொடுத்திருக்கிறார். இப்ப சொல்லுங்க, அவர் வேணும்னு நினைக்கிறதுல என்ன தப்பு?”​

அவள் ‘வேணும்’ என்றதில் கொடுத்த அழுத்தத்தில்,​

ரகுவரன் முகமோ அவமானத்தில் கசங்கியது என்றால், சர்வேஷின் முகத்தில் பெரும் கர்வம்.​

“இப்போ சொல்லுங்க சார்! மயங்கியே கிடக்கேன். இதுல கிறங்கி போய் இருக்கிறதுல என்ன தப்பு?”​

“ஏன் சாத்வி, இப்படி பேசறீங்க? ஏதோ ஆதங்கத்துல கொஞ்சம் அதிகமா பேசிட்டேன். பட்.. உங்களோட வாழ எனக்கு தகுதி இல்லைங்கிற மாதிரி பேசுறீங்களே. இதோ... நீங்க சொன்ன உங்க ஹீரோவுக்கு மட்டும் என்ன தகுதி இருக்கு? நான் ராமன் சாத்வி. நான் நேசித்த முதல் பெண் நீங்கதான். ஆனா.. அவர் ராமன் இல்லை. அவரோட முதல் பெண் நீங்களும் இல்லை.​

ஆசிரமத்துக்குள்ள வளர்ந்த உங்களுக்கு அவரோட மறுபக்கமும், இந்த உலகத்துல அவருக்கு இருக்க பெயரோ தெரிஞ்சி இருக்க வாய்ப்பில்லை. ஹீ இஸ் டிவோர்ஸி. ஒரு பெண்ணோட வாழ்ந்த மனுஷன். பல பெண்களோட உறவு வச்சுகிட்டவரு. எத்தனை மேகசீன்ல அவரைப் பத்தின நியூஸ் வந்திருக்கு தெரியுமா? அப்படிப்பட்டவருக்கு ஈசியா ஹீரோ இமேஜ் குடுத்துட்டீங்க. ஆனா.. நீங்க வேணும்னு ஹாஸ்பிடல் வரை வந்து படுத்திருக்க என்னை, ஏதோ லோ கிளாஸ் நாலேஜ் இருக்கிற பர்சனை பார்க்கிற மாதிரி பார்க்கிறீங்க. அதுதான் ரொம்ப வலிக்குது. எந்த வகையில குணத்துல அவரை விட நான் குறைஞ்சிட்டேன்!”​

அவள், ரகுவரன் பேசப் பேச சர்வேஷை தான் பார்த்துக் கொண்டிருந்தாள். முகம் கறுத்து, இரும்பாக இறுகிப் போயிருந்தான். கண்களில் கனல்! ஆனால், முகம் முழுவதும் அவமானத்தின் சாயல்.​

ரகுவரன் பயந்து, வியர்த்து, அதிசயத்து என கலவையான உணர்வில் இருக்க, இப்போது சரம் தொடுப்பது பெண் அம்பையின் முறையானது.​

“என்ன கேட்டிங்க ரகுவரன்?”​

“சாத்வி!”​

“பேசக் கூடாது!” அவள் அழுத்தத்தில் சர்வேஷ் “சரி” என்க,​

மீண்டும்.. “பேசக் கூடாது புருஷ்”​

“ஹம்.. சரிடி.” அவனின் அலட்சியத்தில் அவள் உதடுகள் வளைய, இவர்கள் இருவரின் மௌனத்துக்குள் இருக்கும் அன்னியோன்யத்தை கண்களால் கண்ட ரகுவரனின் இதயத்துக்குள், ஏதோ ஒன்று உடையும் உணர்வு.​

“சொல்லுங்க, இப்போ என்ன தெரியணும்?”​

“சாத்வி!” அவன் தடுமாறவும். சிறிதும் தயக்கமின்றி,​

“ஆமா! எனக்கு மயக்கம் தான். அவர் உயரத்து மேல, உருவத்து மேல, உடம்பு மேல, அவரோட வனப்பு மேல, அவர் டிரெஸ்ஸிங் சென்ஸ்ல, கையில இருக்க காப்ப முறுக்கி விடுற அழகுல, அப்பப்போ நின்னுக்கிட்டே கால முட்டி வர மடிச்சு லேஸ் கட்டுற ஸ்டைல்ல, கோதி விடுற பிடரி முடி மேலே, வருடிக் கொடுக்குற தாடி மேல.. எனக்கு மயக்கம் தான். அவ்வளவு ஏன்? அவர் தலையில் இருந்து விழுற ஒத்த முடி மேலையும் எனக்கு தீராத மயக்கம் உண்டு. இதச் சொல்றதுல எனக்கு என்ன வெட்கம்? எனக்கு என்ன தயக்கம்?.. இல்ல எனக்கு என்ன கூச்சம்னு கேட்கிறேன்?”​

அவள் அழுத்தத்தில் அதில் தொக்கி நின்ற கர்வத்தில், சர்வேஷின் பற்கள் மிக அந்தரமாக தன் கீழ் உதட்டை கடிக்க.​

ரகுவரன் சாத்வியை அதிர்ந்து பார்த்துக் கொண்டிருந்தான்.​

“என்ன ரகுவரன் சார், அப்படி பார்க்கறீங்க? நெஜம்தானே! அவர் மேல எனக்கு மயக்கம் இல்லைனா தான் தவறு. ஏன்னா... நான் மயங்கறதுக்கு தான், அந்த ஆறடி உருவம்.”​

அவள் விழிகள் ரசனையாக சர்வேஷைப் பார்க்க, எங்கே வெட்கத்தில் தன் இமைகளை தாழ்த்தி விடுவோமோ என்று முரடனுக்குள் ஒரு தோற்ற மயக்கம்.​

சட்டென்று பார்வையை மாற்றியவள்,​

“எஸ்! அவர் பணக்காரர், நான் லோ கிளாஸ். என் பெயருக்கு பின்னால முகவரியே இல்ல தான். நான் அனாதை தான்!”​

அழுத்தி நிறுத்தியவள், சர்வேஷ் புறம் பார்வையைத் திருப்பி,​

“ஏங்க புருஷ். நான் கேட்டா உங்க சொத்தெல்லாம் என் பேர்ல எழுதி வைக்க மாட்டீங்களா என்ன?”​

“நானே உனக்கு தான், சொத்து என்னடி, சொத்து!”​

“நான் அநாதையாமே...”​

தாடையை தடவிக்கொண்டே,​

“மாமனார், மாமியார், ரெண்டு நாத்தனார், ரெண்டு அத்தான்ஸ் அண்ட் எங்க அம்மா, அப்பாவுக்கு என்னோட சேர்த்து அஞ்சு பசங்க. நமக்கு இப்போதைக்கு ஆறு பசங்க போதும்!”​

அவன் பதிலில் சாத்வி நாணத்தில் உதடு வளைத்தாள்.​

மாறாத நிதானத்தோடு ரகுவரன் புறம் திரும்பி,​

“ஏன் அவருமே என்னை அப்படி சொல்லி திட்டி இருக்காரு.” என்றவள் விழிகளில் தோன்றி மறைந்த வேதனையை, சர்வேஷின் விழிகள் படம் பிடிக்கத் தவறவில்லை.​

“இத சொல்றதுல எனக்கு என்ன வெட்கம்? ஏன்னா? இதுதான் நான். இந்த என்னைத் தான் அவர் வேணும்னு சொன்னாரு. கர்வமா, திமிரா, ஆணவமா ஆங்காரத்தோடு சொல்லுவேன். யூ எஃப் வேர்ல்ட் சாம்பியன், சர்வா குரூப் ஆஃப் கம்பெனிசோட சேர்மன், தி மாஸ்டர் பீஸ் சர்வேஷ் அக்கண்யன் பின்னால நான் அலையல. அவர்தான் என் பின்னால அலைஞ்சாரு. அவர் தான் நான் வேணும்னு நினைச்சாரு. அவர்தான் என் உணர்வுகளை வென்றாரு. அவர்தான் ஒத்தப் பார்வையில் என் பெண்மையை உணர வச்சாரு.​

ஆமா, நான் லோ கிளாஸ் தான். அதைச் சொன்ன, என் புருஷனோட சண்டை போடுற மொத்த உரிமையையும் எனக்குக் கொடுத்து இருக்காரு. நான் சாகுற வரைக்கும் என் பேருக்கு பின்னுக்கு, அவரு பேரை முகவரியா கொடுத்திருக்கிறார். இப்ப சொல்லுங்க, அவர் வேணும்னு நினைக்கிறதுல என்ன தப்பு?”​

அவள் ‘வேணும்’ என்றதில் கொடுத்த அழுத்தத்தில்,​

ரகுவரன் முகமோ அவமானத்தில் கசங்கியது என்றால், சர்வேஷின் முகத்தில் பெரும் கர்வம்.​

“இப்போ சொல்லுங்க சார்! மயங்கியே கிடக்கேன். இதுல கிறங்கி போய் இருக்கிறதுல என்ன தப்பு?”​

“ஏன் சாத்வி, இப்படி பேசறீங்க? ஏதோ ஆதங்கத்துல கொஞ்சம் அதிகமா பேசிட்டேன். பட்.. உங்களோட வாழ எனக்கு தகுதி இல்லைங்கிற மாதிரி பேசுறீங்களே. இதோ... நீங்க சொன்ன உங்க ஹீரோவுக்கு மட்டும் என்ன தகுதி இருக்கு? நான் ராமன் சாத்வி. நான் நேசித்த முதல் பெண் நீங்கதான். ஆனா.. அவர் ராமன் இல்லை. அவரோட முதல் பெண் நீங்களும் இல்லை.​

ஆசிரமத்துக்குள்ள வளர்ந்த உங்களுக்கு அவரோட மறுபக்கமும், இந்த உலகத்துல அவருக்கு இருக்க பெயரோ தெரிஞ்சி இருக்க வாய்ப்பில்லை. ஹீ இஸ் டிவோர்ஸி. ஒரு பெண்ணோட வாழ்ந்த மனுஷன். பல பெண்களோட உறவு வச்சுகிட்டவரு. எத்தனை மேகசீன்ல அவரைப் பத்தின நியூஸ் வந்திருக்கு தெரியுமா? அப்படிப்பட்டவருக்கு ஈசியா ஹீரோ இமேஜ் குடுத்துட்டீங்க. ஆனா.. நீங்க வேணும்னு ஹாஸ்பிடல் வரை வந்து படுத்திருக்க என்னை, ஏதோ லோ கிளாஸ் நாலேஜ் இருக்கிற பர்சனை பார்க்கிற மாதிரி பார்க்கிறீங்க. அதுதான் ரொம்ப வலிக்குது. எந்த வகையில குணத்துல அவரை விட நான் குறைஞ்சிட்டேன்!”​

அவள், ரகுவரன் பேசப் பேச சர்வேஷை தான் பார்த்துக் கொண்டிருந்தாள். முகம் கறுத்து, இரும்பாக இறுகிப் போயிருந்தான். கண்களில் கனல்! ஆனால், முகம் முழுவதும் அவமானத்தின் சாயல்.​

 

admin

Administrator
Staff member

சாத்வி அவனைக் கூர்ந்து பார்க்க, அவன் விழிகளில் அவள் விழிகளை கூர்ந்து நோக்கவே, தயக்கம் கொட்டிக் கிடந்தது. அதை உணர்ந்தவள் அவனை முறைத்துப் பார்த்து,​

‘உன் கர்வத்தை தொலைக்காதே! அந்த கர்வத்துக்குள் என் காதல் உண்டு!’ என்று விழிகளால் பதில் சொல்ல, கண்களை மூடித் திறந்து அவளுக்கு சம்மதம் கூறினான்.​

மீண்டும் ரகுவரன் புறம் திரும்பி, “ஓவ்! இதான் உங்க பிராப்ளமா?”​

தொலைக்காத நிதானத்தோடு கேட்க, அதில் சற்றே குதூகலமானவன், “இல்ல... இன்னொன்னு இருக்கு”​

புலி பதுங்குவதால் பயந்து விடுவதில்லை என்பதை மறந்து போனான் போலும், சர்வேஷ் புறம் விரல் நீட்டி பயத்தில் அதிகமாக சுரந்த எச்சிலை விளங்கி விட்டு,​

“இ.. இவர், இவருக்கு”​

“சும்மா தயங்காமச் சொல்லுங்க சார். அவருக்கு என்ன?”​

“இவரோட டிவோஸ்க்கு ஒரு காரணம், என்னன்னு தெரியுமா?”​

சற்றே சாய்ந்து அமர்ந்து விட்டு,​

“சர்வேஷ் அக்கண்யன், ஆண்மை இல்லாதவர். ஹூம்.. அதையும் விட ஹீ இஸ் அ கே(He is a gay). அதைச் சொன்னது நான் இல்ல இவங்களோட வாழ்ந்த இவங்க எக்ஸ் ஒய்ஃப் சயத்தா அரவிந்தன். தானே நேரில் பார்த்ததா, அவங்களே ஒரு பேட்டில சொல்லி இருக்காங்க. அந்தப் பீரியட்ல ரொம்ப கான்ட்ரவசியான டாபிக்கே, மிஸ்டர் சர்வேஷ் அக்கண்யன் தான்!”​

ரகுவரன் வன்மத்தோடு கூறவே, இங்கே ஒரு ஆறடி மனிதன் அரை அடி நிலத்துக்குள் புதைந்தால் என்னவென்று மனதாலே செத்துக் கொண்டிருந்தான். ஒரு முறையா, இருமுறையா மூன்று வருடங்கள் அவனைச் சுற்றும் ஆண்மை இல்லாதவன், கே என்ற அவச்சொற்களில் தன் ஆணுறுப்பை வெட்டி வீசினால் என்னவென்று எத்தனையோ முறை முயன்றிருக்கிறான். அந்த அளவுக்கு இந்த வார்த்தையும், இந்த வார்த்தைக்கு பின் இருக்கும் வன்மமும், அவனை மன ரீதியாக சிதைத்த காலங்கள் ஏராளமே.​

அதிலிருந்து எல்லாம் மீண்டு வந்தவனுக்கு, தான் நேசிக்கும் பெண்ணின் முன் அவளை நேசித்த இன்னொரு ஆண்மகன் அதை சொல்லக் கேட்க, செத்தே விட்டால் என்னவென்று தோன்றிற்று. கூனிக்குறுகி அவமானத்தில் அவன் தலை குனிய எத்தனிக்க,​

“பளார்” என்ற அறை விழ, அந்த சத்தத்தில் சர்வேஷ் நிமிர்ந்து பார்த்தான். அறை வாங்கிய ரகுவரனோ, கன்னத்தைப் பிடித்து அதிர்ந்து போயிருந்தான். முற்றிலும் எதிர்பார்க்காத இந்த அறையில் இருந்து ரகுவரன் மீள்வதற்குள், மீண்டும் ஒரு அறை “பளார்” என அவன் அடுத்த கன்னத்தில் அறைந்தவள், சர்வேஷை நோக்கி,​

“யோவ் ராவணா! தல குனிஞ்ச! இதே அறை அங்க விழும். அத்தனை வேதனையிலும் அவன் முகத்தில் சிறு ஒளி. இதழ்களில் துளி வளைவு. சாத்வியோ குறையாத ஆங்காரத்தோடு, ரகுவரனை நோக்கித் திரும்பியவள்​

“யார் ஆம்பள? எது ஆம்பளத்தனம்? முதல்ல ஆண்மைக்கு அர்த்தம் தெரியுமா? பெண்ணின் மார்பு காமத்தின் பார்வையில் பார்க்கப்பட வேண்டியது இல்லை பரிசுத்தம் ஆனதுன்னு சொல்ற அத்தனை ராமன்களும், அவங்க வீட்டு பொம்பளையோட மூனு நாள் வலியக் கூட தாங்க மாட்டானுங்க. அந்த மூனு நாளும் பொம்பளைய தீட்டா, தீண்டாமையா பார்க்கிறவன் ஆம்பளையா? இல்ல.. காசு கொடுத்து போற விபச்சாரிக்கும், மனசு இருக்குன்னு பாரக்கிறவன் ஆம்பளையா?​

ஒரு தாயோட மார்பு காம்புல ஒட்டிட்டு நிக்கிற ஒரு துளி பாலையும் காமத்தோடு பார்க்கிறவன் ஆம்பளையா? இல்லை... பஸ் ஸ்டாண்ட்ல நின்னு பசிக்கிற குழந்தைக்கு பால் கொடுக்கிற தாய்க்கு தன் அழுக்கு வேஷ்டியை கழட்டி போத்தி விடுற, சாதாரண மூட்டை தூக்கிற தொழிலாளி ஆம்பளையா? ஒரு பொம்பளையோட படுக்கையில் புரள்றவனும், வத, வதனு புள்ள பெத்துக்கிறவனும் ஆம்பளையும் இல்ல, ஆம்பளத் தனம் உள்ளவனும் இல்ல.​

நாய் கூட தான் குட்டி போடுது சார். நீங்க சொல்ற பல ஆம்பள ராமன்கள் தான் வெளியே ஏக பத்தினி விரதனுங்கிற போர்வைக்குள்ள இருந்துட்டு, கட்டிக்கிட்ட பொண்டாட்டியை படுக்கையில விபச்சாரிய விட கேவலமா நடத்துற கொடுமைகளும் இருக்கு. தாய் தகப்பன் பார்த்து திருமணம் பண்ணி வைச்ச பொண்ணத் தவிர வேற பொண்ண நிமிர்ந்து பார்க்காத எத்தனையோ ஆம்பளைங்க, பொண்டாட்டி பெண் குழந்தை பெத்துட்டாலே, அவள அடிச்சு துன்புறுத்துற ஆண்மையும் இருக்கு. அதே நேரம் பெத்த பெண் குழந்தையை கள்ளிப்பால் ஊத்தி கொல்ற ஆம்பளத்தனமும் இருக்கு.​

இப்படி கூட படுகிறவனும், பிறப்புக்கு காரணமாக இருந்தவனெல்லாம் ஆம்பள இல்ல. அவரோட ஆண்மையை பத்தி பேச உங்களுக்கு என்ன தகுதி இருக்கு? அந்த பொண்ணு.. என்ன பேர் சொன்னீங்க? சயாத்தா! அவ இவரோட வாழலைனா, குறை அவ மனசுல இருக்குன்னு நான் அடிச்சு சொல்லுவேன்!” என்று விட்டு துளி மௌனம் காத்தவள்,​

“நீங்க ராமன்னு சொல்றீங்க தானே? ஒரு பெண்ணோட விருப்பம் இல்லாம அவளை கத்தி முனையில் வைத்து அடைய நினைக்கிறீங்களே! நீங்க ராமனா? இல்லை, அவர எனக்கு எவ்வளவு பிடிக்கும்னு தெரிஞ்ச அவர் நினைச்சிருந்தா என்னைக்கோ உடலால அவருக்கு நான் மனைவியாகி இருக்கலாம். அந்த மனுஷனோட ஒத்த தொடுகைல, நான் உருகி கரைஞ்சுருவேனு தெரிஞ்சும் கண்ணியம் காத்த என்னோட ராவணன் ராமனா? அண்ட் அவர் ஆம்பளையா? ஆம்பள இல்லையா? அப்படிங்கறத அவரோட வாழ்ந்து பார்த்து நான் தெரிஞ்சுக்கிறேன். எவனுக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. உங்களைப் பார்க்க வந்தது ஒரு மனிதாபிமானத்துக்காக மட்டும் தான் சார். மற்றபடி வேற எதுக்காகவும் இல்லை.​

வாழ்க்கையில இனிமே உங்கள பார்க்கக் கூடாதுன்னு நினைக்கிறேன். நான் லேசா கண்ணசைச்சா போதும், இந்த இடத்துல உங்கள காணாமப் பண்ணிருப்பார்! அப்படி செஞ்சுட்டா வார்த்தையில வன்மம் வச்சிட்டு இருக்க உங்களுக்கும், மனசுல ஒழுக்கத்தை வச்சுட்டு இருக்க அவருக்கும், வித்தியாசம் இல்லாமப் போயிரும்.”​

குறையா நிமிர்வோடு பேசியவள், அது வரையிலும் இறுகிப் போய் வெறித்த பார்வையுடன் அமர்ந்திருந்த சர்வேஷ் புறம் சென்று,​

“வாங்க புருஷ், போகலாம்.”​

அவனை வலுக்கட்டாயமாக இழுக்க, அவன் வலுவுக்கு முன் அவள் ஒன்றும் இல்லை என அறிந்தும், அந்த முயலின் பிடிக்குள் சிங்கம் விரும்பியே தன்னைக் கொடுத்தது. அவன் கையைப் பிடித்துக் கொண்டு ரகுவரனை கடக்க முனைந்தவள், நின்று திரும்பி அவனைப் பார்த்து.​

“அஞ்சு கணவர்களை கொண்ட பாஞ்சாலி அஸ்தினாபுர சபையில வஸ்திரம் உரிய மானபங்கப் படுத்தப்பட்டா, அதே கெட்டவன்னு சொல்லப்பட்ட துரியோதனன், தன் மனைவியை பார்த்து எடுக்கவா, கோர்க்கவான்னு கேட்டான்.​

இதயத்தில் சீதையை மட்டும் சிறை வைத்து வாழ்ந்த ராமன், உலகத்துக்கு முன் சீதையை தீக்குளிக்கச் சொன்னாரு, ஆனால், சீதையை சிறை எடுத்த ராவணன், தன் மனைவி உயிரோடு இருக்கிற வரைக்கும் சிதையில இறங்க விடல. எனக்கு இலக்கியத்துல ராமனை ரொம்ப, ரொம்ப பிடிக்கும் தான். ஆனால், வாழ்க்கையோட இலக்கண விதிப்படி, இந்த ராவணனைத் தான் பிடிக்கும்!”​

என்றவள் மேலும், மேலும் விளக்கம் கொடுக்கவோ, கேட்கவோ விரும்பாதவளாக இறுக்கிப் பிடித்த சர்வேஷ் கையை விடாதவாறு அவனோடு கார்பாக்கிங் செல்ல, தங்கள் காரில் ஏறி கொண்டனர்.​

இப்படியே அவர்கள் பயணம் ஹாஸ்டல் நோக்கிச் செல்ல, சர்வேஷ் அந்தப் பயணம் முழுவதிலும் மௌனியானான். அவன் மௌனங்களுக்குள் மறைய நினைக்காத ரணங்கள் வலிக்கத் தொடங்கியது. இறுகிப் போயிருந்த முகத்தில், அடர்ந்த கடுமையும் தெரிந்த ஆங்காரமும், அவன் தன்னை எத்தனை அடக்கி ஆள்கிறான் என்பதற்கு சாட்சி ஆகியது. ஹாஸ்டலில் கார் நிற்கவும், கார் கதவை திறக்கப் போனவள் நின்று சர்வேஷ் டி-ஷர்ட் காலரைப் பிடித்து நிறுத்தி, அவன் இரு கன்னத்திலும் மாற்றி, மாற்றி முத்தமிட்டவள்,​

“சரினா, அங்க விழுந்த அறை இங்கே விழுந்திருக்கணும். அவன் பேசுனா தலையக் குனியப் போவீங்களா நீங்க? அடிச்சு இருப்பேன், பட் மனசு கேட்கல. சந்தர்ப்பம் அமையும் போது கண்டிப்பா தாரேன்.”​

அவனின் பார்வையில் துளியும் மாற்றம் இல்லை. அதைப் பெரிதாய் எண்ணாதவள்,​

“ரகு சார் சொல்லுறாரு. நான் முன்ன ரொம்ப பேச மாட்டேனாம். இப்போ நிறைய பேசுறனாம். ஏன்னா, முன்ன என் பேச்சை உரிமையா கேட்கவும், நான் உரிமையா பேசவும் யாரும் இல்லை. இப்போ நீங்க இருக்கிறீங்க. இப்படி என்னை நிறையவே தாங்க வேண்டி இருக்கும். இதுக்கே மூஞ்சி தேஞ்சு போயிட்டா எப்படி? இந்த உணர்வு தொலைத்த விழிகள் வேணாம். இறுகிப்போன இந்த உருவமும் வேண்டாம். கண்ணுல கர்வத்தோட உடல் மொழிகள்ல திமிரோட, நான் சர்வேஷ் அக்கண்யன்னு சொல்லுவிங்க பார்த்தீர்களா? அந்த சர்வேஷ் தான் வேணும். நாளைக்கு என் கழுத்துல தாலி கட்டுவது, அந்த சர்வேஷா தான் இருக்கணும்.”​

அவன் பதிலை எதிர்பாராது இறங்கிப் போனாள்.​

இங்கே அதே இறுகிய முகத்தில் பழைய கடுமையோடு இறங்கி வந்த மகனைக் கவனித்த அக்கண்யன், அவன் எங்கு சென்று வந்தான் என்பதை அறிந்து கொண்டு,​

“சர்வா!” அழுத்தமாக அழைக்க, அதை விட அழுத்தமாக மகனும் தந்தையை பார்த்து வைத்தான்.​

ரகுவரனை சாத்வி பார்க்கச் சென்று வந்ததால், தவறாகப் புரிந்து கொண்டு சாத்வியை கோபிக்கிறான் என்றெண்ணி,​

“சந்தேகப்படுறியா சர்வா!”​

“என்னை நானே சந்தேகப்பட மாட்டேன் டாட்!”​

தந்தையின் கண்களை நேருக்கு நேர் பார்த்துக் கொண்டே,​

“நான் ஒன்னும் அக்கண்யன் இல்லை. நான் சர்வேஷ். அது போல அவளும் தழைந்து போக ஜனனி இல்ல, சாத்விகா. நான் சந்தேகப்பட்டா, சந்தேகப்படுவியானு கேட்டு வாய் மேலயே ரெண்டு போடுவாளே ஒழிய, நம்ம புருஷன் தானேனு என்னை மன்னிக்க மாட்டாள்!”​

என்றவன் விறுவிறு என அந்த இடம் விட்டு அகல, தான் ஒரு காலத்தில் விட்ட பிழையை, மகன் குத்தி காட்டியதில் வலித்தாலும், மகனின் புரிதலில் அவன் இதழ்கள் மென்மையாக விரிந்தன.​

“பெரியவா காலுல விழுந்து ஆசீர்வாதம் வாங்குங்கோ!”​

அது வரையிலும் ஆண் அகலிகை சிலைக்கு உயிர் இல்லை போலும். நேற்றைய தாக்கமா? இல்லை, முதல் திருமண நினைவுகளா? ஏதோ ஒன்றில் வெந்து கொண்டிருந்தவன், உயிர் மட்டும் பிழைக்க உணர்வுகள் மௌனியாகின.​

ஐயர் குரலில் தன்னவன் எஃகு போல இருக்க, மணமேடை வந்தது முதல் இந்த நொடி வரை அவனை, அவன் சிறு பார்வையை, துளி தீண்டலை எதிர்பார்த்து ஏமாந்தவள், சினம் எல்லையை நெருங்கவே, எரிமலை வெடிக்கத் தயாராகியது. அவனை லேசாக அசைத்தவள், அவனை நோக்கி சரிந்து,​

“ஐயர் ஆசீர்வாதம் வாங்கச் சொல்றாங்க, புருஷ்”​

“ஹ்ம்” என்றவன் தாய், தந்தை மற்றும் அண்ணனிடம் ஆசி பெற்றான். மறந்தும் அரவிந்தன் புறம் செல்லவில்லை. அதில் அரவிந்தனுக்கு வேதனை உண்டு. ஆனால், அதை தன்னில் புதைத்துக் கொண்டான். அதுவரையிலும் சாத்விக்கு அவன் கடுமையை, வானிலை மாற்றம் போல நிகழும் அவன் மனநிலையை பொறுத்தவளுக்கு, அவன் தன்னை சிறு பார்வையால் கூட தீண்டாத ஒதுக்கத்தை தாங்கவே முடியவில்லை.​

‘பொறு மனமே! பொறு! நீ அவனை தென்றல் என்று நினைத்தால், அவனோ புயல். நீ ஒரு துளி என்றெண்ணினால், அவன் பெரும் வெள்ளம். மாறும் மனநிலையும் அவன் மூர்க்கமும் கையாள்வது அத்தனை எளிதல்ல!’ மனமோ முணுமுணுக்க.. அவள் மனதில் இன்னோர் குரல்,​

‘இன்றைய நாள் எனக்கு எவ்வளவு முக்கியம்னு தெரிஞ்சும் சிலையான அவரை சும்மா விடச் சொல்லுறியா?’ மௌனம் காத்த அவள் உள்ளம் திடீரென குரல் கொடுத்தது. ‘செஞ்சிரு..’ அதன் பின்னே மௌனமானாள்.​

இவள் இரு கன்னத்திலும் கை வைத்து ஜனனி முத்தமிட்ட தொடு உணர்வில், நினைவில் மீண்டவள் மலர்ந்து சிரித்தாள்.​

“சந்தோஷமா இருக்குடா. என் வீட்டுக்கு இன்னோரு மகாலஷ்மி. எனக்கு உன்னை சர்வாக்கு கட்டி வைக்கணும்னு ரொம்ப ஆசை. ஆனா.. அவங்க அப்பா தான் ஒத்துவரலை.”​

‘அச்சோ! அக்கண்யன் சார்க்கு நம்மளை பிடிக்காதா?’ அவள் அதிர்ந்து நோக்க,​

அதைக் கண்ட அக்கண்யன் தன் நெற்றியில் தட்டிக்கொண்டே,​

“ஏன் பேபி? சொல்றதை ஒழுங்காச் சொல்லேன். சும்மாவே சாத்வி என்னோட பேசமாட்டா, பயப்படுவா. இப்போ இது வேறு. அதெல்லாம் பிடிக்காம இல்லம்மா. சர்வேஷோட முடிவு என்னன்னு தெரியாம, ஜனனியை டிசைட் பண்ண வேணாம்னு சொன்னேன். அதைவிட என்னோட மகனோ மாமிச மலை, நீயோ அழகான பூச்செடி. அவன் முரட்டு குணத்த உன்னால தாக்கு பிடிக்க முடியுமான்ற ஒரு யோசனை இருந்துச்சு. வேற ஒன்னும் இல்ல.”​

என்றவனின் குரலில் தெறித்த நக்கல், விழிகளில் தொக்கி இதழ்களில் வெளிப்பட, இறுகி இருந்தவன், அதில் பல்லைக் கடித்தான்.​

இதையெல்லாம் கண்டும் கவனியாத சாத்வி, அவளுக்கான நேரம் வரும்வரை பொறுமை காத்தாள்.​

அப்போது அவனை நெருங்கிய அரவிந்தன்,​

“கங்கிராஜுலேசன், போர்த் ஆப் யூ!”​

இருவர் தலையிலும் கை வைத்து ஆசீர்வதித்தவன்,​

“இட்ஸ் அ நியூ பிகினிங். சர்வா கண்ணா! நீ நல்லா இருப்ப. நல்லதே நடக்கும். இனி உனக்கு நல்லது மட்டும்தான் நடக்கும்.”​

என்னதான் சர்வா ஒதுங்கிப் போனாலும், அரவிந்தனால் அப்படி ஒதுங்கி விட முடியுமா என்ன? அவன் ஆருயிர் தோழன் அக்கண்யனின் செல்ல மகனாயிற்றே. ஆனால் கணவனுக்கு உள்ள இங்கிதம், மனைவிக்கு இல்லை போலும். இடம் பொருள் மறந்த கவிதா, கண்ணுக்குள் அவள் மகள் மட்டுமே வலம் வந்தாள். மகள், மகளின் வாழ்க்கை, அவள் எதிர்காலம் இதை சுற்றியே அவள் எண்ணங்கள் சுழன்றன.​

அதை வார்த்தையாகக் கோர்க்க நினைத்த அவள், “உனக்கென்ன நல்லா இருமா. சாதாரண வீட்டுக்கா மருமகளாப் போற. அதுவும் உன் தகுதிக்கு உலக சாம்பியன் புருஷனா கிடைக்கிறது எல்லாம் வரம் தானே. புடிச்சாலும் புளியங்கொம்ப தான் புடிச்சு இருக்க. என் மகளுக்கு தான் வாழக் கொடுத்து வைக்கல. நீயாவது நல்லபடியா வாழு!”​

அந்த வாழ்த்தில் தான், எத்தனை வன்மம். இதுவரையிலும் கவிதா ஆதங்கத்தில் நடந்து கொள்கிறார் என்று நினைத்தவர்கள், உள்ளத்தில் அவர் தரம் மிகவும் தாழ்ந்து போனது.​

கைகளை முறுக்கிக் கொண்டு சர்வேஷ் சண்டைக்குக் கிளம்பும் முன்..​

“கவிதா!” அதட்டிய அரவிந்தன், “கிளம்பலாம்!” என்று அக்கண்யனிடம் ஒரு தலையசைப்போடு விடைபெற, இப்போது தனக்குள் இறுகிப் போவது சாத்வியின் முறையானது.​

அதுவரையிலும் தன் எண்ணங்களில் சுழன்றவன், பட்டென்று சாத்வியை நெருங்கி அவள் கையைப் பிடிக்க, அவன் பிடித்த அதே வேகத்தில் உதறித் தள்ளியவள் குரலைத் தாழ்த்தி,​

“என்ன எக்ஸ் மாமியாருக்கு சப்போர்ட்டா?”​

“என்ன வாய்டி இது? என்ன பேச்சு பேசுற?”​

“ஓவ்! இப்போ தான் தெரியுதா? இத்தனை நேரம், ஏனோ தானோன்னு இருந்துட்டு, இப்போ அவங்க என்னைப் பேசவும் கொஞ்சுறதுக்கு வாறீங்களா?”​

“சாத்விகா!” அவன் கடுமையில் அவளுக்கோ, கோபத்தில் மூக்கு நுனி சிவந்து விட்டது.​

“பொண்டாட்டி போஸ்டிங் கிடைச்சிட்டாலே, பொண்ணுங்க எல்லாம் ட்ராஜிட்டியா மாறிருவீங்கடி!”​

அவள் முகம் திருப்பி மௌனம் சாதிக்க. சாத்வியின் கையை நெறித்தவன்,​

“பேசுடி!”​

“ஸ்.. ஆஆ.. வலிக்குது.”​

“புருஷ்.. சொல்லுடி!” மௌனம்..​

“நேத்து கேட்காமச் சொல்லத் தெரிஞ்சவளுக்கு இப்போ சொல்றதுக்கு என்னவாம். புருஷ் சொல்லுடி!”​

அவள் மௌனம் அவன் மூர்க்கத்தைக் கூட்டியது.​

“நான் அப்படி சொல்லுற மாதிரி, நீங்க நடந்துக்கலை!”​

“என்னடி நடந்துக்கலை?” கைப் பிடியை அழுத்த, வலித்தாலும் பொறுத்துக்கொண்டே,​

“என் திருமணம் எதிர்பார்ப்பு இல்லாதது தான். பட், என் புருஷன் அட்லீஸ் என் முகத்தையாவது பார்க்கணும்னு நினைச்சேன். ஏமாத்திட்டீங்கல்ல?”​

“ஏய் மண்டோதரி!” அவள் கையை பட்டென்று விட்டுவிட்டு, அவளை லேசாக அணைத்துக் கொள்ள,​

“ஒன்னும் வேணாம் போயா!” அவள் முகம் திருப்பவே, சர்வேஷ் சன்னமான புன்னகையோடு,​

“திட்டிக்கோ, திட்டிக்கோ!”​

அவள் விழிகள் இரண்டிலும் விழி நீர் தேங்கி நிற்க, தன்னை நிமிர்ந்து பார்த்தவளை..​

“ஐ ஆம் ஸ்ட்டக்டி. என்னால ஜென் நிலையிலோ, ஸ்டேபலாவோ இருக்க முடியாதுடி. நான் காட்டான்! இப்படியே பழகிட்டேன்.”​

இன்னும் அவளை நெருங்கி,​

“ரூம்ல வச்சு வேணுனா, தனியா அடிச்சுக்கோடி. இங்க சுத்தி கேமரா இருக்கு.”​

“ரொம்ப தான்.”​

இன்னும் அவளை நெருங்கியவன்...​

“உன் உதட்டால அடிச்சா ஆயுசுக்கும் வாங்கிக்கிறேன். கடிச்சா கூட ஓகே!”​

சாத்வியின் முகமோ வெட்கத்தில் சிவந்தது. அவள் அந்தரங்கம் அறியப் போகும் முதல் ஆண் அவன். கலவி, காமம் இரண்டுக்கும் துளி அறிவு இல்லாதவளுக்கு, அவனது சிறு, சிறு ஸ்பரிசமும் மயக்கத்தைத் தந்தது.​

“க்கும்” குரலைச் செருமிய ஆத்விக், “போதும் கிளம்பலாம் சர்வா. வாமா போகலாம். ராகவி கூட்டிட்டு வா”​

எல்லாரும் வீட்டுக்கு கிளம்பிச் செல்ல. அந்த வீட்டுக்குள் வலது காலை எடுத்து வைத்து உள்ளே வந்தவள், சர்வா வாழ்க்கைக்குள்ளும் நீங்காத இடத்தைப் பிடித்து விட்டாள். இப்படியே சம்பிரதாயங்கள் அனைத்தும் முடிந்து, முதல் இரவு அறைக்குள் அவளை அழைத்து வந்த ஜனனி, சாத்வியின் கைகளை இறுகப்பற்றிக் கொண்டு.​

“ரொம்பவே வலியை என் மகன் அனுபவிச்சுடான்டா. மத்தவங்க பார்வைக்கு ஆச்சரியமா, பிரமிப்பா, பலசாலியா தெரியிற என்னோட பையன் சர்வேஷ் அக்கண்யன், அவமானத்தில் கூனிக்குறுகி நின்னதை இந்தக் கண்ணால பார்த்திருக்கேன். பெரிய இடத்துப் பிள்ளைகிட்டவும் நல்லது இருக்கும்னு யாரும் நினைக்கிறது கம்மி. ஏன்னா பணம் இருக்கே, என்ன வேணும்னாலும் பண்ணிடுவாங்க அப்படிங்கிற ஒரு எண்ணம், நம்ம சமுதாயத்துல ஆழமா பதிந்து போச்சு. அவனுக்குள்ள இருந்த நல்ல மனுஷனை மைக் போட்டு பேசி, பேசியே கொன்னுட்டாங்க.​

மூனு வருஷம் ஆச்சு சாத்விமா. என் சர்வா இந்த வீட்டுக்குள்ள வர. மூனு வருஷம் ஆச்சு என் புள்ள என்னை அம்மான்னு கூப்பிட. என் கண்ணீர் கரைக்கல, என் வேதனை கரைக்கல, ஏன் என் யாசகம் கூட அவனைக் கரைக்கலை.​

ஆனா... உன்னோட ஒத்த பார்வையில அவன் கட்டுப்பட்டு நிற்கிறான். உன்னோட விழி அசைவு தடம் பிடித்து நடக்கிறான். இதெல்லாம் என் சர்வாவான்னு நினைக்கும் போது ஆச்சரியமா இருக்கும். யாருக்குமே அடங்காத மூர்க்கன்னு பேர் வாங்குன என் புள்ள, அன்னைக்கு ஆஃபீஸ்ல வச்சு, உனக்காக சேவகம் செய்ததை கண்ணால பார்த்தேன். சத்தியமா சொல்றேன்மா, பெத்த வயிறு குளிர்ந்து போச்சு.​

என் மத்த புள்ளைங்க எல்லாம் வாழ்க்கையில செட்டில் ஆயிட்டாங்க. இவன் ஒருத்தன் தான் வாழ்க்கையை தொலைச்சிட்டு நின்னான். ஆனால் இப்போ நான் செத்தாலும் கவலை இல்லடா. அவன நீ பாத்துப்பனு நம்பிக்கை இருக்கு”​

“என்ன ஜனனிமா ஏன் இப்படி பேசுறீங்க? நான் இந்த வீட்டுக்குள்ள அவருக்காக மட்டுமே வரல. உங்களோட இருக்க போறேன்னு ரொம்ப சந்தோஷமா வந்து இருக்கேன். இந்த மாதிரி அபசகுணமா பேசாதீங்க.”​

இல்லடா இது அபசகுணமில்ல. ஒரு தாயோட மிதமிஞ்சிய சந்தோஷம். தன்னோட குஞ்சி எல்லாம் வயிறு நிரம்ப சாப்பிட்டாலும், குறை வயிரா இருக்க அந்த ஒத்த குஞ்சு மேல தான் தாயோட பார்வை அதிகமாக படியுமாம், அப்படித்தான் எனக்கும். என் பிள்ளை எப்படின்னு இன்னும் வர எனக்குமே புரிஞ்சுக்க முடியல. அவங்க அப்பாவை தவிர அதிகமா யாரையும் பக்கத்துல சேர்க்க மாட்டான். அவனை புரிஞ்சுக்கிட்ட அவருமே அவன் விஷயத்துல என்கிட்ட வாய் திறக்க மாட்டாரு. நீயாவது புரிஞ்சுக்கோ. சர்வேஷ்க்கு யாருக்கும் தெரியாத மறுபக்கம் ஒன்னு இருக்கு, அந்தப் பக்கத்தை உன்னோடு இருக்கும் போது நீயாவது நேசிடா!”​

என்றவள் சாத்வியின் நெற்றியில் முத்தமிட்டு விலகிச் செல்ல, விஸ்தீரமான அந்த அறையை சுற்றி சுற்றி பார்த்துக் கொண்டிருந்தாள். ஒரு ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் ரூமுக்கு இணையான அந்த ரூமுக்குள் அத்தனை வசதிகளும் கச்சிதமாக இருந்தது. பெயிண்டிங் அண்ட் ஆன்டிக் திங்ஸ் என மிக அழகாக வடிவமைக்கப்பட்டிருந்தது. அந்த அறையைப் பார்த்தவள் அப்படியே பெட்டில் அமர்ந்தாள்.​

அலைபேசியில் வந்த அழைப்பில் மூழ்கியவன், எத்தனை நேரம் பால்கனியில் நின்று இருந்தானோ அறியவில்லை. சற்று நேரத்துக்கு முன் வந்த அழைப்பில் பேசிய அவன் தொழில்துறை எதிரி ஒருவன்,​

 

admin

Administrator
Staff member

“இந்தப் பொண்டாட்டியையாவது வச்சி வாழுங்க மிஸ்டர்.சர்வேஷ் இல்லைனா கேனு சொல்லிறப் போறாங்க. எதுக்கும் நீங்க இம்போட்டன்ட்டானு பார்த்துகங்க.” என்ற வார்த்தைகள் அவன் செவியில் அறைய, முகத்தில் இதுவரை காணாத ரௌத்திரமும் வெறியும் பொங்கியது.​

தன் சினத்தை அடக்கத் தெரியாத ஆதங்கம், எதைக் கொண்டு தன்னை தணிக்க, எதைக் கொண்டு தன் உணர்வுகளை அடக்க, எதைக் கொண்டு தன் மூர்க்கத்துக்கு கடிவாளம் இட என்று தவித்தவன், தன்னை கட்டுப்படுத்த முடியாது பித்துப் பிடித்தான்.​

அவன் ரத்த நாளங்களே வெடித்து விடுமோ என்று அஞ்சுமளவுக்கு டென்ஷனில் இருந்தவன், பால்கனிக்குள் நடைப்பயின்றான், முடியவில்லை. புகைத்துப் பார்த்தான், அப்போதும் அவன் நமைச்சல் அடங்கவில்லை.​

அப்போதே பக்கவாட்டில் திரும்பியவன் பார்வையில் விழுந்தால் அவன் பெண் தேவதை. அவன் பார்வையில் ஒரு கூர்மை, இதழ்களில் ஒரு வளைவு, உடல் இடுங்கியது, உள்ளமோ நடுங்கியது, உணர்வுகளோ அவளைக் கொண்டு தன்னை தணி என்றது. இதயம் சொன்னதைக் கேட்டான். யோசிக்கவில்லை! அவள் தனக்கே தனக்கானவள் என்ற எண்ணத்தை மட்டும் நெஞ்சில் நிறுத்திய அவன், விரைந்து சென்று அவள் சேலை முந்தானையை இழுக்கவும் சோல்டரில் குத்திருந்த பின் தெறித்து முந்தானை லேசான கிழிச்சலோடு, அவன் கையோடு வந்தது.​

திடீரென நடந்த தாக்குதலில் நடுங்கியவள், சர்வேஷின் முகத்தில் தெரித்த ருத்ரத்திலும், அவன் விழிகளில் ஒரு நொடியே வந்து மறைந்த அருவருப்பிலும் துடிதுடித்தவள் இதழ்களில்,​

“ச்சீஈஈஈ!” என்ற சொல் தன்னை அறியாமல் வரவே, மூர்க்கனானவன் தன் வலுவான கரத்தால் அவள் கழுத்தைப் பிடித்து நெறித்தான்.​

வேதங்களை சாட்சியாக்கி கை பிடித்தவன், விந்தையானவன் என்பதை பெண் அறிந்து கொள்ளும் தருணமிது!​

 

santhinagaraj

Well-known member
ஆரம்பத்துல அமைதியா இருந்தா சாத்வியா இப்போ இப்படி பேசுறதுன்னு இருக்கு 😍😍
அடேய் ராவணா எவனோ உன்னோட கோபத்தை கிளறனும்னு இப்படி பேசினா நீ யோசிக்காம அவ கழுத்தை பிடிச்சு நிறுத்திக்கிட்டு இருக்கேன் இதுக்கெல்லாம் சேர்த்து வச்சு அனுபவிக்க போற
 

shasri

Member
Sathvi raguvaran ku sema saatai adi pathi kuduthanga 👏👏 athivum antha aanmai na enna? Nu sollurathu awesome 😊 avalukay avalukana marriage ay ippadi pannitanay sarva 😎😎 hiyo finally ravanan mode on aayuduchu
 

admin

Administrator
Staff member
ஆரம்பத்துல அமைதியா இருந்தா சாத்வியா இப்போ இப்படி பேசுறதுன்னு இருக்கு 😍😍
அடேய் ராவணா எவனோ உன்னோட கோபத்தை கிளறனும்னு இப்படி பேசினா நீ யோசிக்காம அவ கழுத்தை பிடிச்சு நிறுத்திக்கிட்டு இருக்கேன் இதுக்கெல்லாம் சேர்த்து வச்சு அனுபவிக்க போற
அதானே பொண்டாட்டி கழுத்த புடிச்சா பின்னுக்கு காலுல விழனும்..
 

admin

Administrator
Staff member
Sathvi raguvaran ku sema saatai adi pathi kuduthanga 👏👏 athivum antha aanmai na enna? Nu sollurathu awesome 😊 avalukay avalukana marriage ay ippadi pannitanay sarva 😎😎 hiyo finally ravanan mode on aayuduchu
Thank you dear..
 
Top