எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

வேதம் - 13

admin

Administrator
Staff member

அத்தியாயம் - 13​

“ச்சீஈஈஈ..!” என்ற சொல், அவளை அறியாமல் வரவே, மூர்க்கனானவன் தன் வலுவான கரத்தால் அவள் கழுத்தை பிடித்து நெறித்துக்கொண்டே,​

“ச்சீய்யா! என்னடி ச்சீ! நான் என்ன அவ்வளவு அசிங்கமாவும், அருவருப்பாவுமா இருக்கேன்?” என்றவன் மேலும் அவள் சங்கோடு பிடித்து நெறிக்க,​

பஞ்ச் பாக்ஸில் குத்தி, குத்தி பிராக்ட்டிஸ் எடுத்த கையின் உரம், அவள் ஒடுங்கிய கழுத்தை பலமாக இறுக்கவே, நொடியில் அவள் முகம் சிவந்து, கண்கள் கலங்கி, இருமத் தொடங்கினாள். அவன் செயல் வலியைக் கொடுத்தது.​

‘ஆறடியில் அசாத்திய தோற்றத்தில் இருப்பவனின் விரல் கூட, என்னை வன்மையாகத் தீண்டாது’ என்று மார்தட்டி கொள்ளும் சாத்வியின் கர்வம், எங்கோ ஒரு ஓரத்தில் சரிவதைப் போல் உணர்ந்தாள்.​

விழிகள் அதன் வேதனையை பிரதிபலிக்க, அது அவன் உயிரை அசைத்துப் பார்க்கவே, பட்டென்று அவள் கழுத்தில் இருந்து கையை இறக்கியவன், ஒற்றைக் கரத்தை அவள் பின் கழுத்தில் கொடுத்து, தன்னோடு இறுக்கி அணைத்துக் கொண்டான்.​

“ஹாக்.. ஆஆ.. ம்மா.. போ.. போயா!” அவள் திணறவே,​

“சாரிடி சாத்வி! ஐ லாஸ்ட் மை பேஷன்ட்.​

“ஹாக்” சத்தமிட்டுக் கொண்டே அவனில் இருந்து விலகியவள், வலித்த தொண்டையை தடவியபடி,​

“ஆஆ.. ராட்சச ராவணா!” வன்மையாக வசைபாட​

“மூச்! பேசாத!”​

என்றவன் மீண்டும் அணைக்க வர,​

அவனை முன்னை விட அதிகமாக தடுத்து சரிந்த முந்தானையால் தன்னை மறைத்துக் கொண்டே,​

“ச்சீ... போயா!”​

“அப்படி சொல்லாதடி நீ.. ச்சீனு சொல்லும் போது வெறியா இருக்குடி!”​

“இருந்தா, இருந்தா என்ன செய்வீங்களாம்? கழுத்தை திருகி போட்டுருவீங்களோ?”​

“சாரிடி டென்ஷன். ஒரு *** கால் பண்ணி என் பழைய அசிங்கத்த கிளறிட்டான். அதான் உணர்ச்சிவசப்பட்டுட்டேன். என்னை கண்ட்ரோல் பண்ணத் தெரியல. ஏதோ உன்னோட பிரசன்ஸ், உன்னோட அருகாமை என்னைச் சாந்தப் படுத்தும்னு நினைச்சுட்டேன். உன்னை தொட்டா ஆர்ப்பரிக்கும் என்னோட உணர்வுகள் அடங்கிரும்னு நினைச்சுட்டேன். உன்னோட வாசத்தை சுவாசித்து நுரையீரல் வரை நிரப்பும் போது, அலைபாயும் என்னோட ஆவி அடங்கி விடும்னு நினைச்சிட்டேன். சாரிடி!”​

விசும்பிக் கொண்டே, “அதுக்குன்னு பொண்டாட்டினாலும் அவ புடவையை இப்படி தான் காட்டுத்தனமா பிச்சு வீச பார்ப்பீங்களா? என்னை நிர்வாணமாக்கிட்டா உங்க ஆம்பளத்தனம் சாட்டிஸ்ஃபை ஆகிருமா? என்ன இருந்தாலும் துகில் உரிக்கிற இனம் தானே நீங்க!”​

அவள் கோபத்தில் வார்த்தைகளை அம்புகளாக்க, பேசப்பட்ட வார்த்தைகள் அர்ஜுனன் வில்லில் இருந்து தொடுக்கப்பட்ட அம்புகளை போல் சீறிப் பாய்ந்து சர்வேஷ் என்பவனை சரியாகப் பதம் பார்த்தது. அதே நேரம் அவன் பேய் குணத்துக்கு தீனியும் போட்டது.​

அவளிலிருந்து பிரிந்தவன், ரௌத்திரத்தில் நடுங்கும் கைகள் இரண்டையும் மார்புக்கு குறுக்கே கட்டிக் கொண்டு, அவளைக் கூர்ந்து பார்த்தான். அந்தப் பார்வை, தான் சிந்திவிட்ட வார்த்தைகளை எண்ணிக் குமைந்து கொண்டிருந்தவளை, குத்திக் கிழித்தது.​

சிந்திய பிறகே சிந்தியது எத்தனை பெரிய வார்த்தை என்பதை உணர்ந்தாள். என்ன பயன்! பிரதிபலனோடு திருப்பித் தர ஒருவன் காத்திருக்கிறான்?​

அவளை பார்வையால் மிரட்டிய சர்வேஷ்,​

“என்ன சொன்ன? ஒரு பெண்ணோடு நிர்வாணம் காமத்தை தருமா? அப்படி ஒரு பொண்ணுகிட்ட நான் காண்கிற நிர்வாணம் என்னை சாட்டிஸ்ஃபை ஆக்கிருமா?”​

அவன் முழு உயரத்துக்கும் நிமிர்ந்தவன், தலையை அழுந்த கோதிக் கொண்டு,​

“சர்வேஷ் மனுஷனா இருக்குறதும் ராட்சசனா மாறுறதும், எதிர்ல இருக்கவங்க கைல தான் இருக்கு சாத்விகா. அவங்க வார்த்தை பெருசுன்னு நினைச்சா, என் வார்த்தை வன்மம். அவங்க திமிர் பெருசுன்னு நினைச்சா, என் ஆணவம் குரூரம். வீம்புக்கு நின்னா, என் ஒத்த முடியக் கூட புடுங்க முடியாது. என்ன கொடுக்கிறாங்களோ அதை கொடுக்கிறவங்கள பொருத்து ரிட்டர்ன் கொடுக்குறது, என் பாலிஸி. சோ வார்த்தை கொடுத்த நீ தான், நான் பேசப் போறதுக்கும் பொறுப்பு!”​

இது வரை அரக்கன் என்று கேலி செய்தவனை, இன்றே முதல் முறை அரக்கனாகக் கண்டாள். பேச்சில், சிவந்த நுனி மூக்கில், அவன் கர்வத்தில், முகத்தில் துளிர்த்த ஆணவத்தில். சர்வேஷ் என்பவன் வார்த்தையால் வதம் செய்யப் போவதை அறிந்து கொண்டாள். தான் விட்ட சொல் அதிகமே, இருந்தும் அவன் செய்கை சரியில்லையே என்று ஒரு மனம் பிராண்டதான் செய்தது. அதே கணம் வீறு கொண்டு எழுந்த அவன் ஆணவம் சவுக்கெடுத்து ஆடப்போவதை எண்ணி திடுக்கிட்டவள், அலங்க மலங்க அவனைப் பார்த்து முழிக்க,​

“நிர்வாணம் எனக்கு புதுசுன்னு நினைக்கிறியா சாத்விகா?”​

இதோ முதல் சவுக்கடி பலமாக விழுந்தது. அதில் அவள் கண்கள் கலங்கியது என்றால், அவன் விழிகளின் ஓரத்தில் ஒரு குரூரம் இன்னும் தொக்கி நின்றது.​

“ஹூம்..” அவள் மறுக்கவே..​

“எஸ்.. யூ ஆர் ரைட். எனக்கு நிர்வாணம் புதில்ல. என்னோட படுக்கையில் தினம் ஒரு நிர்வாணத்தை பார்த்தவன் நான். அந்த நிர்வாணத்தோடு என்னை பகிர்ந்துக்கிட்டவன் நான்!”​

இதோ அடுத்த சவுக்கடி! மிக, மிக பலமாக அவள் இதயத்தில் விழுந்தது. சர்வேஷ் வாய் மொழி சொல்லக் கேட்ட அவனின் மறுபக்கக் கசடுகள் காந்தின. ஆனால், இதைக் கூறியவன் விழிகளில் அருவருப்பின் சாயல்.​

“ஒரு நிர்வாணம் என்ன செய்யும் தெரியுமா? எதிரில் நிற்கிறவன் என்ன பாலை சேர்ந்தவனோ அதைப் பொறுத்து அவனுக்குள்ள எதிர் உணர்ச்சியை தூண்டும். ஒரு நிர்வாணம் கட்டில்ல காமத்தோடும், சில சமயம் காதலோடும் இணையோடு கலக்கச் செய்யும். ஒரு நிர்வாணம் கட்டில் பாடத்தை படித்துக் கொடுக்கும். ஒரு நிர்வாணம் பத்து நிமிஷம் சுகத்தை ஒரு மணித்தியால சுகமா வேணும்னா கூட்டும். ஒரு நிர்வாணம் ஆடி களைத்து முடிந்ததும், அவன் ஆணவத்துல முதல் சறுக்கல் விழுந்ததை, அவனே அறியாமல் தோற்கச் செய்யும். ஆனால்.. என் வாழ்க்கைல ஒரு நிர்வாணம் என்ன பண்ணுச்சு தெரியுமா?”​

மிக பலமாக சில பல அடிகள் அவள் நெஞ்சில் விழுந்ததை இதுவரை தாங்கியவள், இனி அவன் தரும் வதை மிக்க சொற்களை, தாங்க முடியுமோ எனும் அளவுக்கு, சர்வேஷ் வார்த்தையால் தாண்டவம் ஆடிவிட்டான். ஆனால், அவன் சிந்தும் ஒவ்வொரு சொற்களிலும் சர்வேஷ் என்பவனின் உயிர் நாடி உள்ளுக்குள் துடிப்பதை அந்த விழிகளில் கண்டவள், அவன் இறுதியாகக் கேட்ட கேள்விக்கு,​

“ஹூம்.. ஹூம்.. வேணாம்! நா.. நான்.. எது.. ஏதோ உணர்ச்சிவசப்பட்டுட்டேன். ப்ளீஸ் பேசாதிங்க.”​

“நீ பேசிட்டியேடி!”​

அதில் கலங்கிய அவள் விழிகளை பார்த்துக் கொண்டே,​

“நான் கடுமையானவன், முரடன், காட்டான், உருவத்திலும் குணத்திலும் மென்மை இல்லை இது எல்லாம் உனக்கு தெரியுமே..! யூ ஆர் மை கேர்ள்! சோ நான் ஏன் பொய்யா நடிக்கணும். இது தான் நான். எனக்கு உன்னை ஃபீல் பண்ணனும்னு தோணுச்சு. அந்த ஃபீலிங்கில் இருக்க.. மெஸ்மரைஸ் என்னன்னு பார்க்கணும்னு தோணுச்சு. ஆனா.. நீ அப்படி பேசிட்டுயே!”​

“விட்டுருங்களேன்”​

அவள் தாங்காத வலியோடு கெஞ்ச,​

“ஏன்?” என்றான் ஒற்றை சொல்லாக.​

“வலிக்குது புருஷ்..”​

“ஏன் வலிக்குது? ஏன் வலிக்குதுனு தோனனும்.”​

“அந்தக் கண்ணுல கோபம் வந்தா வீம்புக்கு முரண்டு பிடிக்கனும்னு தோனுதே! அந்தக் கண்ணுல வலி வந்தா, அது இந்த நெஞ்சிக்குள்ள வலிக்கும்னு தோனுதே. அந்த கண்ணு வேதனையில் துடிச்சா, அந்த வேதனையை என் உடம்பு பூரா வாங்கிகிட்டு உங்களுக்கு பதிலா நான் துடிக்கனும்னு தோனுதே! அதே கண்களில் தோன்றும் அருவருப்பான பார்வையை மாற்ற, என்னையே அருமருந்தா மாத்துனா என்னனு தோனுதே!​

இப்படி தோனும் போதெல்லாம் உங்க வார்த்தைகள் உங்களை விட, உங்க வலி உங்களை விட, உங்க காயங்கள் உங்களை விட எனக்கு வலிக்குது!”​

அந்த நொடி, சர்வேஷ் கண்களில் ஒரு மோகனப் புன்னகை. அவன் மனம், மாறும் கால நிலை தான். அவன் குணமே இதுவெனும் போது, எங்கனம் அதை மாற்றிக் கொள்வான்.​

“சோ.. இங்க வலிச்சா, அங்க வலிக்குது.”​

அவள் ‘ஆம்’ என்று தலையாட்ட,​

“எனக்கும் அப்படித்தான், ரொம்ப நேரமா இங்க வலிச்சுச்சு..”​

இதயத்தை சுட்டிக்காட்டி​

“அந்த வலியை உன்கிட்ட பகிர்ந்துட்டு, இன்னொரு வலிய உங்கிட்ட இருந்து வாங்கிக்கணும்னு நினைச்சேன். ஆனா வார்த்தையை விட்டுயேடி!”​

“அது, அது கோவத்துல பேசிட்டேன்.” அவள் தடுமாற,​

“புருஷனா இருக்க நினைக்கிற ஒரு புருஷன் தொட்டாலும், ரேப்னு சொல்ற உங்க ஃபேமினிசத்தை முதல்ல ஒழிச்சுக் கட்டுங்கடி. அப்படியே தாம்பத்தியம்கிற பேருல ரேப் பண்ண நினைக்கிற புருஷனை, கத்தி எடுத்து குத்த முடியாத அளவா பொண்ணுங்க நீங்க வீக்கா இருக்கிறீங்க. அதெல்லாம் முடியும். கத்தி என்ன கத்தி? பொண்ணுங்க உங்க வார்த்தை வாளை விட கூர்மை. இந்தா என்னை இப்ப குத்துனியே ஒத்தச் சொல்லால. இதெல்லாம் செய்யாம தொட்டா துலங்கிப் போச்சு, பார்த்தா பத்திக்கிச்சுன்னு கொடி பிடிக்கிறது. ஃபேமினிசம் பேச வேண்டிய இடத்துல பேசாதீங்க! பேசக்கூடாத இடத்துல பேசுங்க!”​

 

admin

Administrator
Staff member

அவளின் சவாலான பார்வையில்...​

“ம்ச்.. பார்க்காதடி! நீ இப்படி பார்த்தா, பாகா உருகி உன் பாதத்துல பாவமன்னிப்பு கேட்டு, உதடு பதிச்சிருவேன்னு பதட்டமா இருக்குடி!”​

ஆணுக்கு பெண் மட்டுமே பாத பூஜை செய்ய வேண்டும் என்னும் தீண்டாமையை, மீண்டுமொரு முறை சொல்லால் துளைத்தான்.​

“பார்க்காத...”​

“பார்க்கத் தோனுதே!”​

“இப்படி பார்த்து, பார்த்து தான் என்னை காயப்படுத்த உனக்குத் தோனுது மண்டோதரி!”​

இதழ்களில் சுந்தரப் புன்னகை. அந்த வெளிப்படையான புன்னகையில், இரு புருவங்களை ஏற்றி இறக்கியவனின் மனநிலை சடுதியில் மாறத் தொடங்கவே,​

“என்னவாம்”​

“மண்டோதரி!” என்றாள் ஒற்றைச் சொல்லில் பதிலாக.​

அவன் ‘மண்டோதரி’ என அவளை அழைக்கையில் தோன்றும் ஏதோ ஒன்றில், சாத்வி பதிலுக்கு, அதை மீண்டும் உச்சரிக்கையில் தோன்றும் பரவசத்திற்கு, ஈடு இணை எதுவும் இல்லை.​

அதை அவள் விழிகளில் பார்த்து உணர்ந்த அவன்,​

“சாத்வி ஒரு நிர்வாணம் என்ன செய்யும்னு சொல்லிட்டேன். ஆனால், என் வாழ்க்கையில ஒரு நிர்வாணம் என்ன செஞ்சதுன்னு உனக்கு தெரிஞ்சுக்கணுமா?”​

ஆழமான அவன் கேள்வி, அம்பொன்று சர்ரென்று அவள் இதயத்தை துளைத்தது போல் துடித்தவள்,​

“ஹூம்” மறுப்போடு தலையசைக்க..​

“இப்போ.. தெரிஞ்சுக்கணும்னா கேட்டுக்கோடி அப்பதான் அந்த ஒரு வார்த்தை, என்னை எங்க அடித்தது? எப்படி அடித்ததுன்னு உனக்குத் தெரியும்.​

அண்ட் அந்த வார்த்தை கொடுத்த வலியுடைய காயங்களின் தடங்களையும் நீ கண்டுபிடிக்கலாம்!”​

அவனைக் கூர்ந்து பார்த்தவள்,​

“அந்த ரணங்களும் அதன் தடங்களும் எனக்கே எனக்கானதுனா, இப்பவே சொல்லுங்க நான் கேட்டுக்குறேன்.”​

அவன் பிடிவாதம் நிறைந்த ஆணவ குணத்திற்கு சற்றும் குறைந்ததில்லை, நிமிர்வோடு திமிர் நிறைந்த அவள் குணம்.​

“வெல்.. எப்ப அந்த ரணங்களையும் அதோட தடங்களையும் உனக்கே உனக்காக தெரிஞ்சுக்க தோனுதோ, அப்ப தெரிஞ்சுக்கோ!”​

தலையை அழுத்தக் கோதி பெருமூச்சுவிட்டு அந்த இடம் விட்டு அகல நினைக்க, கட்டிலில் அமர்ந்தபடி தன் ஒற்றை கை நீட்டி அவன் ஒற்றைக் கையை, சர்வேஷ் விலகாத வண்ணம் இறுக்கிப் பிடித்து, அவன் கூர்விழிகளை கூர்ந்து நோக்கிக் கொண்டே,​

“வலிக்க வேணாமா?”​

அவள் விழியும், சொல்லும் அவனோடு போர் தொடுக்கத் தயாராகி, சாத்வி கேட்ட ஒற்றைக் கேள்வியில், சர்வேஷ் என்பவனின் சர்வமும் ஆடியது.​

“ம..ண்டோதரி!” முதல் முறை ஆணின் வார்த்தை திக்கி வரவே, சாத்விகாவோ பார்வை மாற்றாது, நின்ற நிலை மாற்றாது..​

“வலிக்க வேணாமான்னு கேட்டேன்..”​

அந்தக் கேள்வியில் தான் எத்தனை உறுதி. எத்தனை திடம். அவள் முடிவு எடுத்து விட்டாள். தான் கொடுக்கப் போகும் காயங்களால், அவன் பழைய ரணங்கள் பொய்த்துப் போக வேண்டும் என்பதை சிந்தையில் நிறுத்தியவள், அவன் தானாக மாறி, தான் அவனாக மாற வேண்டும் என்னும் வேட்கை அவள் நெஞ்சில் விழுந்த கணமது.​

அதுவரை அவள் கேள்வி கொடுத்த வீரியத்தில் திகைத்தவன், அவளை விழி விரித்து நோக்கி, பின் விறைத்து, நிமிர்ந்து சாத்வியின் கண்களை நேருக்கு நேர் பார்த்து,​

“வலிக்க வேணுமா?”​

“ஹூம்.. வலிக்க, வலிக்க வேணும்.”​

“ஆனால்... நான் வலிக்க வாங்கப் போகும் காயங்கள் உன்னைக் காயப்படுத்தும். அந்தக் காயங்களை நான் வாங்க போகும் தருணங்கள் உன்னை அழுத்தும். என்னை வலிக்க வைக்க போகும் வலி, உனக்கும் வலிக்கும்டி!”​

அவளை உச்சி முதல் பாதம் வரை, பரவசத்தோடு பார்க்க, சாத்வியின் சுண்டு விரல் தொடக்கம் நுனி காதுவரை சிவந்தது. உள்ளுக்குள் தோன்றிய சிலிர்ப்பு, அவனுக்கு மெல்லிய படபடப்பை தர..​

“ஹம்.. அது உன்னால முடியாதுடி!”​

“என்ன, என்னால முடியாது? உங்க காதலையே தாங்குறேன். அதைத் தாங்க முடிந்த எனக்கு, வேறு என்ன முடியாது?”​

பொத்துக் கொண்டு வந்த ரோஷத்தோடு உரத்துக் கேட்கவும்,​

“மென்மையான உன்னால, என் கணத்தை தாங்க முடியாது. என் அழுத்தங்களை தாங்க முடியாது. உன்னைப் பார்த்த நாளிலிருந்து எனக்கு சொந்தமான உன்னை, தொட்டு தடவி உணர நினைக்கும் இந்த விரல்களோட தொடுகையை உன்னால தாங்க முடியாது. உன்னை முழுமையாக உணர நினைக்கும் இந்தக் கைகளோட உரத்தை உன்னால் தாங்க முடியாது!”​

என விரக்தியோடு கூறியவன், மென்மையாக அவள் கரத்தை தன்னிலிருந்து பிரித்து விட்டு பால்கனி கதவை திறந்து கொண்டு சென்றான்.​

முதல் வேலையாக அணிந்திருந்த டீஷர்டை தலைவழி கழட்டி வீசியவன், கைமுஷ்டிகள் இரண்டையும் இறுக்கிப் பிடித்து...​

“ஆஆஆஆ..!” என்று வாய்விட்டுக் கத்தினான், கைமுஷ்டியை குவித்து காற்றில் பஞ்ச் செய்து பார்த்தான், தலையை அழுத்திக் கோதினான், தன் கன்னத்திலேயே அவனது இரு கரங்களால் மாறி, மாறி அறைந்து கொண்டான். முடியாத பட்சத்தில், சிகரெட்டை எடுத்து வாயில் பொருத்திக் கொண்டவன், புகைத்துக் கொண்டே மெது, மெதுவாக தன்னை நிதானமாக்க முனைந்தான்.​

அந்த கணம் தவித்த சர்வேஷ் உணர்வுகளை தன் இரு மெல்லிய குளிர்ந்த கையால் தணிக்கவே, இடையோடு இரு வெண்கரங்கள் அவன் கட்டுமஸ்தான தேகத்தை, தன்னால் முடிந்த அளவு இறுக்கிக் கொள்ள நினைத்தது. வாயில் பொருத்திய சிகரெட்டை, இரு விரல்களுக்கு மாற்றி ஆழ புகைத்து தூக்கியெறிந்தவன், ஆச்சரியத்தை விழிகளில் மறைக்காது காட்டி, பக்கவாட்டில் திரும்பிப் பார்க்க,​

அவன் மண்டோதரி ராவணனுக்காக அசோகவனத்தில் தவம் இருக்கத் தயாராகி விட்டாள்.​

அவன் பின்னுடல் அவள் முன்னுடலில் புதைய, அது தந்த குளிர்ச்சியில்.. ஒரு கணம் விழிகளை அழுத்த மூடித் திறந்தான்.​

இத்தனை நெருக்கத்தில் நின்றிருந்தவளின் வாசம் சர்வேஷ் நாசியில் நுழைந்து, புதைத்து வைத்திருந்த அன்றைய இரவுக்கான வேட்கையை வெகுவாகக் கிளறிவிட்டது.​

கிக் பாக்ஸிங்க்குப் பிறகு, அவன் அவளைத் தான் ஆழமாகத் தெரிந்து கொள்ளத் துடித்தான்.​

“ம்ச்.. மண்டோதரி!” தவித்து, குழைந்து வந்த தன் ராவணனின் குரலில், அவன் உணர்வுகள் தரிக்கட்டு ஓடுகிறது என்பதை ஒற்றை அழைப்பில் கண்டு கொண்டாள்.​

“லீவ் மீ!”​

அணைப்பை இன்னும் இறுக்க..​

“காயப்படுத்திடுவேன் சாத்வி!”​

“புருஷ்!” என்றாள் அவன் முதுகில் குட்டி குட்டி முத்தங்களை வைத்துக்கொண்டு. அவனோ கரகரத்த குரலில்..​

“தள்ளிப் போடி! என்னை டெம்ப் பண்ணாத. உன்னை யாரு என் பின்னால் வரச் சொன்னது?”​

“என் புருஷ் வெறி பிடிச்சு கத்துன சத்தம் கேட்டுச்சு. அது தான் வெறி முற்றுவதற்கு முதல் அதை தடுத்துவிடுவோம்னு நினைத்தேன்.”​

இதழ்கள் லேசாக புன்னகையில் துடிக்க, தன் நெஞ்சில் கோடிலுக்கும் அவள் விரல்களின் ஸ்பரிசத்தை ரசித்துக்கொண்டே,​

“இந்த ஒற்றை அணைப்பில் அந்த தவிப்பும், வெறியும் தணியும்னு நினைக்கலடி!”​

“எனக்கும் ஒற்றை அணைப்போடு தணிக்கவோ, நிறுத்தவோ முடியும்னு தோணல புருஷ்..!”​

அதில் சன்னமாகச் சிரித்தவன்..​

 

admin

Administrator
Staff member

“வேற என்ன தோனுதாம்?”​

“முரண்டு பிடிக்கிற இந்த பிடரி முடிய, வலிக்க பிடிச்சு ஆட்டணும்னு தோனுதாம். உங்க விரல்கள் வருடிவிடும் சுகத்தை அடிக்கடி அனுபவிச்சிட்டு, திமிரா இருக்கிற இந்தத் தாடியை வலிக்கப் பிடித்து இழுக்கணும்னு தோனுதாம்.​

இந்த தாடி மீசைக்குள்ள தேடிப் பிடிக்கிற மாதிரி ஒளிஞ்சிருக்க இந்த உதடுகளை வலிக்க, வலிக்க கடிச்சு வைக்கணும்னு தோனுதாம். கோபம் வந்தா சிவக்கிற இந்த காது நுனியை பிடிச்சிக் கிள்ளணும்னு தோனுதாம். கோபத்திலும், கர்வத்திலும் குத்திக் கிழிக்கும் இந்தக் கண்களை எனக்கே, எனக்காக யாசிக்க விடனும்னு தோனுதாம்.​

இதுவரையும் என்னை அணைக்காமல் இருக்கும் இந்தக் கைகளை வலிக்கும் அளவுக்கு, என்னை இறுக்கி அணைக்க வைக்கணும்னு தோனுதாம்.​

என் புருஷனோட பார்வையில, எங்கேயோ ஒரு மூலையில் நிர்வாணம் அசிங்கமா அருவருப்பா, திகட்டலா பதிஞ்சிருக்கு. அந்த நினைப்பை மாற்றி, நிர்வாணம் என்பது நம்ம ரெண்டு பேருக்குமான ரகசிய அந்தரங்க உலகம். அங்க இரு உடல்கள் மட்டுமல்ல, உள்ளமும் எந்த காழ்ப்பும், கயமையும் இல்லாம நிர்வாணமா இணையும் தெய்வீகத் தருணம்.​

அந்தத் தருணத்தில் இருளுக்கும் இரவுக்கும், காற்றுக்கும் கானலுக்கும், நிலவுக்கும் நிழலுக்கும் கூட உரிமை இல்லைனு, கத்தி சொல்லத் தோனுதாம். இப்படி என் புருஷன் விழிகளை பார்த்து, உங்களோட வலிகளை வலிக்க, வலிக்க வாங்கி, அதே வலிகளை நான் உங்களுக்கு வலிக்க, வலிக்க கொடுக்கிறேன் வாங்கிக்க தயாரானு திருப்பி கேட்கத் தோனுதாம்.​

இப்படி என்னை உன்னால தாங்க முடியாதுனு திமிரா சொன்ன அந்தக் கண்களில், இவள் உன்னைத் தாங்கலைனா வேறு யார் உன்னை தாங்குவாங்கனு பெருமையா கர்வமா கேட்டா, அந்த கண்ணுக்குள்ள ஒரு ஸ்பார்க் வருமே, அதை பார்க்கணும்னு தோனுதாம். பார்ப்பேனா?”​

ஆசையாக, நேசமாக, வீம்பாக, கர்வமாக, ஆங்காரமாக ஒரு யாசகம். அப்படி ஒரு யாசகம் இயலுமா? இதோ இயலும் எனும் வேதாந்தத்தை மாற்றிய சித்தாந்தம், அவள். யாசகம் கேட்டதோ வரம் தரும் தேவதை. கொடுக்கப் போவதோ வரம் தரவல்ல யாசகன்.​

சாத்விகா பட்டென்று திரும்ப, தடுமாறியவளை வலிக்க, வலிக்க இறுக்கி அணைத்தவன்.​

“வலியை வாங்கிக்கிறேன் விரும்பியே வாங்கிக்கிறேன். தர்றது நீயாக இருந்தா, என்னோட உயிரையும் வலிக்க, வலிக்க நீ கடிச்சு தின்னாக் கூட சந்தோஷமா அதை உனக்கு கொடுக்கிறேன். பட்.. ஒருமுறை தொட்டா, மறுமுறை உன்னைத் தொடாமல் இருக்க முடியாது.​

இந்த ஒற்றை இரவு இதோடு முடிந்து விடாது. ஒவ்வொரு இரவிலும் என் தேடல் உண்டு. என் தவிப்பு உண்டு. வலிகளும் உண்டு. உனக்கு சம்மதமா?”​

“ஹம்..” அவள் சம்மதிக்கவே, அவளை தன் இரு கைகளில் ஏந்தியவன், பால்கனி கதவை காலால் அடித்துச் சாற்றிவிட்டு, தன் மஞ்சத்தில் அந்தப் பஞ்சணையில் அவளை அன்னப்பறவை ஆக்கினான்.​

அவளை விரல்களால் தொட்டுத் தீண்ட வில்லை. ஆனால் விழிகளால் தொட்டுத் தீண்டினான். விழிகளால் துகிலுரிந்தான். காதல் பாடம் கற்றுக் கொடுத்தான். காமத்தின் பாதையை காட்டிக் கொடுத்தான். தாம்பத்திய நெளிவு, சுளிவுகளை சொல்லாமல் சொல்லிக் கொடுத்தான். இருவரும் இதுவரை காதலை சொல்லிக் கொள்ளவில்லை. நெஞ்சம் நிறைய நேசம் இருந்தும், இருவரின் குணமும் அதைக் கூறுமா என்பதும் தெரியவில்லை.​

முதல் முறை ஒருத்தி அவன் நெஞ்சத்தை ஆகர்ஷிக்க வந்து விட்டாள். முதல் முறை ஒருத்தி அவன் நிர்வாணத்தை, ஆராதிக்க வந்து விட்டாள். முதல் முறை ஒருத்தி, அவன் உடலை தீண்டி சர்வேஷ் எனும் ஆண்மகனுக்குள் ஒளிந்திருக்கும் அருவருப்பை துகிலுரிவிக்க வந்து விட்டாள். முதல் முறை ஒருத்தி சர்வேஷ் எனும் வீரனின் ஆண்மையில் படிந்திருக்கும் அசிங்கத்தை துடைக்க வந்து விட்டாள்.​

தாங்கிக் கொள்வாயா என்றவனின் பார்வையில் தயக்கம் என்றால், தயங்கியவளின் பார்வையில் இப்போது மித மிஞ்சிய சவால். அவன் தயக்கத்தை மனைவியின் சவால் ஜெயித்த தருணமது.​

மெதுவாக அவளோடு மஞ்சத்தில் சரிந்தவன் மனதுக்குள் ஏக தயக்கம்! எங்கே ‘வலியை விரும்பிக் கேட்ட நாமே, வலியை கொடுத்து விடுவோமோ’ என்ற எண்ணம் ஒரு புறம் என்றால், தன் வலிமையின் முன் அவள் மலர் தேகம் தாங்குமோ என்ற கேள்வி ஒருபுறம். அவன் தயக்கத்தில், சாத்வியின் ஒற்றை புருவம் ஏறி இறங்கி, என்னவென்று கேள்வி கேட்டது.​

“முடியுமாடி! தாங்கிப்பியாடி!” மீண்டும் கேள்வி எழுப்ப, அதில் கடுப்பான சாத்விகா,​

“போயா!” எழும்பப் போகவும், அவளை இறுக்கிப் பிடித்துக் கொண்டு, அவளோடு மஞ்சத்தில் சரிந்தான்.​

அவன் சொன்னதைப் போல் இறுக்கி அணைத்தான், அவளுக்கு வலித்தது. கழுத்து வளைவில் அழுத்தக் கடித்தான், அது சுக வேதனை. சாத்வியின் முகத்தில் சர்வேஷின் விரல்கள் கோலம் போட, அவள் விழிகளில் வெட்கம், கூச்சம், சிலிர்ப்பும் மாறி, மாறி தோன்றவே, அவள் வாசத்தை நுகர்ந்து மேலும் தன்னுள் நிரப்பிக் கொண்டு, அவள் விழிகளின் மொழி படித்து, அவள் முகத்தோடு தன் முகத்தைப் புதைத்தவன், மிக மெதுவாக,​

“தாடி மீசைகுள்ள மறைஞ்சி இருக்கும் இந்த உதட்ட கடிக்கத் தோனுதாம்னு சொன்ன என் பொண்டாட்டிக்கு, இந்த உதட்டை அவளுக்கே முழுசா கொடுக்கணும்னு தோனுதாம்..”​

என்றவன் அவளை நெருங்கி மீண்டும் பட்டென்று விலகவே, சாத்வியின் புருவங்கள் நெறிந்தன.​

“ம்ச்.. ஸ்மோக் பண்ணி இருக்கேன்டி!”​

“ஹூக்கும்.. ஒரு முறை பாவ மன்னிப்பு கொடுக்கலாம்.”​

“வாட்?”​

“காதல் சுத்த பத்தம் பார்ப்பதில்லையாமே. ஒரு முறை அதை உண்மையானு தெரிஞ்சுக்கலாமா?”​

அவள் இதழ்கள் அந்த வார்த்தையை முடிக்கும் முன், இருவர் இதழ்களும் ஒன்றோடு ஒன்று புதைந்து கொண்டன. அவனில் இவள் தொலைய, இவளில் அவன் தொலைந்தான். இதழ் முத்தம் இருவரையும் அழகிய தாம்பத்யம் நோக்கித் தொலைய, பாதை அமைத்துக் கொடுத்தது. அவள் சொன்னதைப் போல, அந்த இதழ் முத்தம் சுத்த பத்தம் பார்க்கவில்லை.​

‘என் ஒற்றை இதழ் முத்தம் என் கசடுகளை உன்னை மறைக்க செய்யும்’ என்றவன், அந்த ஒற்றை முத்தத்தில் சொன்னதை செய்து காட்டினான். அவன் கசடுகளை மறக்க வைத்தான். அவளை தன்னிலை இழக்க வைத்தான்.​

அவனுக்கே அவனுக்காக அவளை கரைய வைத்தான். ‘லப்’ என்ற சத்தத்தோடு அவள் இதழில் இதழை பிரித்தவன், பெண் முகத்தோடு முகமுரசி,​

“ஐ வாண்ட் டு, ஃபீல் யூ!”​

அவள் வெட்கி முகம் திருப்ப, தன்னை நோக்கி மீண்டும் அவள் முகத்தைத் திருப்பியவன்,​

“உன்னை உணர வைடி, ப்ளீஸ்...”​

அவன் கெஞ்சவும், அவள் கண்களில் தோன்றிய வியப்பில்...​

“பொண்டாட்டி கிட்ட கொஞ்சலாம், கெஞ்சலாம், மிஞ்சலாம் தப்பு இல்ல...”​

“போயா!” மேலும் அவள் முகம் வெட்கத்தில் சிவக்க, ஒற்றை விரலில் அவள் கன்னத்தை வருடியவன்...​

“அழகா இருக்கடி. எப்படி சிவக்குது பார். இந்த வெட்கத்தையும் நான் ஃபீல் பண்ணனும்...”​

மயக்கம் நிறைந்த குரலில்...​

“பீல் பண்ணனும்னா எப்படி? நீ பீல் பண்ண வை!”​

வார்த்தைகள் இரண்டும் போர் தொடுத்துக் கொண்டிருந்தாலும், அவன் கைகளோ அவளை களைத்து, அவனும் களைந்தான்.​

“என்னோட இரவுகள் அழகா இருந்ததில்ல. அதில் எனக்காக, ஒரு தேடலை நான் உணர்ந்ததில்லை. ஏன் எனக்கான தேவை கூட இருந்ததில்லை. அதில் இருந்தது எல்லாம் வெறுப்பு. என்னை, இந்த உடலை நான் வெறுத்த வெறுப்பு!”​

அவனை அவளுக்கு உணர்த்திக் கொண்டே இருந்தவன், வாய்மொழியில் ‘சாத்விகா’ என்பவள் எத்தனை முக்கியத்துவம் என்பதை சொல்லாமல் சொல்லிக் கொண்டிருந்தான்.​

“இந்த உடல் இன்னைக்கு பரவசத்துல சிலிர்க்கணும். உன்னை உணரனும். என் மனசுக்குள் ஒரு தேடல் இருக்கு, அந்தத் தேடலுக்கு நீ பதில் கொடுக்கணும். கொடுப்பாயா?”​

கணவன் யாசிப்பில் தன் வெட்கம் துறந்தவள்,​

“நான் கொடுக்கிற பதில தாங்குற அளவுக்கு இங்கே...”​

என்றவள் அவன் நெஞ்சில் விரல் சுட்டி, “இங்க வலு இருக்கா தெரியலையே!”​

“ஹம்.. அங்க நீ இருக்கியே தாங்கிப்பேன்” அந்த வசீகரப் புன்னகையில் மொத்தமும் வீழ்ந்தவள், தன்னோடு அவனை இறுக்கிப் பிணைத்துக் கொண்டு, அவன் இதழோடு இதழ் முத்தம் தானாகத் தந்தாள். அதில் சொக்கிப் போனான். இருவரும் ஒருவராகினர். இருவுடல் ஓர் உயிர் ஆகியது.​

உணர்வுகள் தழும்பி தாளமிட்டன. உயிரோ நாதம் பிடித்து இசையமைத்தது. அந்த அறை எங்கும் அவர்கள் தாபம் நிறைந்த ஒலி வீணையின் மீட்டலாக, கெஞ்சல்கள் புல்லாங்குழல் நாதமாக, இருவரின் ஊடலும் அதில் திளைத்த கூடலும் சங்கீத ஸ்வரங்களாக, இன்னிசை படித்த ஒரு இனிமையான உணர்வு.​

“வலிக்க வேணும்டி!” என்றவனை பார்த்துக் கொண்டே, வலிக்க வலிக்க காயம் கொடுத்தாள்.​

“நிறைய தழும்புகள் வேணும்டி. அது என்னோட கருப்புப் பக்கத்தை மறைத்து, இந்த இரவையும் உன்னோடு நான் கழித்த பொழுதையும் ஞாபக வச்சுக்கணும்.”​

“தழும்பு மட்டும் போதுமா? நான் வேணாமா?”​

“நீ இல்லைனா, நானும் இல்லையே!”​

அவளோடு புதைந்தான். அவள் கொடுத்த தழும்புகளை, செல்லமாக உடலெங்கும் வாங்கிக் கொண்டான்.​

“முரடா! மெதுவா பிடிங்க மூச்சு முட்டுது.” என்றவள் செல்லச் சிணுங்களுக்கு,​

“தாங்கிக்கோடி. என்னைத் தாங்குவேன்னு சொன்ன?”​

அவன் ஆணவத்தில் பதில் சொல்ல. ஆணுக்கு பெண் எனும் சமத்துவம் கொண்டவள் வலிக்கச் செய்தாள்.​

“முடிஞ்சா நீங்க தாங்கிக் கொள்ளுங்க புருஷ்” திமிரால் பதில் தந்தாள். அவன் ஆணவம் அவள் திமிரில் கரைந்து காணாமல் சென்ற ஒரு இனிமையான இரவு.​

மீளா இரவில் அவன் வாய் பேசினான். அவள் பதில் கூறினாள். காதலிலும், காமத்திலும் மௌனம் சாதிப்பது ஒரு வகை என்றால் வார்த்தைகள் கொண்டு சத்தமிட்டு, சத்தமிட்டே காதல் செய்வது இன்னொரு வகை. உள்ளங்கள் மௌனம் சாதித்தன. உடல்களில் உணர்வு தீ பற்றிக் கொண்டது. அவளைக் களைத்து அவளில் கலந்து, கரைந்து, களைத்த நொடி...​

“மண்டோதரி!” அன்பை ஒற்றை வார்த்தையில் கூறியவன், அவள் நெற்றியில் இதழ் முத்தமிட்டான். அவளும் அவனை வலிக்கச் செய்து வலிகளை வாங்கி, சோர்ந்து ஆழ மூச்செடுத்து,​

அவனில் பிரிந்தவள் இதழ்கள், “ராட்சச ராவணா!” மெதுவாக அசைந்தன.​

எந்த ராட்சச ராவணாவில் அவன் மூர்க்கனாகி, முரடனாகி, பித்தாகி சுற்றினானோ, அதே வார்த்தையில் இன்று மோகித்து, சுகித்து, மீண்டும் ஒரு மீளா உறவுக்கு, அவளை இறுக்கிப் பிடித்துக் கொண்டு, அவளோடு பயணிக்கச் சித்தமானான்.​

விடியும் வரை வார்த்தையால், உணர்வுகளால் வதம் செய்தவன், விடிந்த பின் தன் வாயால் கன்னி வெடியில் கால் வைக்கப் போவதை அறியாது, அவள் வயிற்றில் தலை வைத்து இடையோடு இறுக்கிக் கொண்டு ஆழ்ந்த நித்திரைக்குச் சென்றான். விரும்பிப் கேட்டதை எல்லாம் கொடுத்தவள் விழிகளால் கேட்ட தூக்கத்தையும் கொடுத்துவிட்டு கண்ணசந்தாள், அவன் வேதங்களுக்கெல்லாம் விந்தையானவள்.​

 

santhinagaraj

Well-known member
செம்ம எழுத்து நடை ரெண்டு பேரோட உணர்வுகள் ரொம்ப அருமையா இருந்தது??
இந்த ராவணனோட வாய் சும்மாவே இருக்காதா அடுத்து என்ன பண்ண போறான்
 

shasri

Member
வார்த்தைல விளையாடும் நீங்கள் தான் ராட்சச ராவணன் ❣️❣️ finally oru gundu podalaina unga manasu aaratho 😏😏
 
Top