அத்தியாயம் - 16
மறையும் சூரியனின் மந்த ஒளி, சுடும் மணல், பரந்து விரிந்த பூமி, நீலக்கடல் இப்படி தன்னைச் சுற்றி உள்ள வித்யாசங்களை, சாத்வி பல மணி நேரமாக ரசித்துக் கொண்டிருக்கிறாள். ஒரே நாளில் ஹனிமூன் செல்ல வேண்டும் எனத் திட்டமிட்டவன், இரவோடு, இரவாக இருவருக்குமான உடைகள், பிளைட் டிக்கெட், பிரைவேட் ஹைலேண்ட் என அத்தனையையும் தயார் பண்ணி, புக்கிங் செய்து விட்டு, விடி காலை விமானத்தில் சாத்வியை ஏற்றிக் கொண்டு நான்கரை மணித்தியாலப் பயணத்தில் மாலைதீவுக்கு கடத்திவிட்டான்.
இது, அவள் முதல் தூரப் பயணம், தூரதேசப் பயணம், விமானப் பயணம். அஞ்சியவளுக்கு நெஞ்சம் தந்தான்.
“வாமிட் வார மாதிரி இருக்குங்க, புருஷ்!”
“அதெல்லாம் வராதுடி! இப்படியே நெஞ்சில சாய்ந்து கண்ணை மூடிக்கோ! பெருசா ஒன்னும் தெரியாது.”
மனைவியை தாங்கிக் கொள்ள.. அந்த பிசினஸ் கிளாஸ் பயணச்சீட்டு வெகுவாக உதவியது.
ஒரு மாதத் தேன் நிலவுப் பயணம். இதை கேட்டவுடன் மலைத்துப் போனாள். அவனோ..
“உன்னை நான் நிறைய தெரிஞ்சுக்கணும். இன்னும் ஆழமா தெரிஞ்சுக்கணும். அதுக்கு இந்த தனிமை நமக்குத் தேவை.”
ஒற்றை வார்த்தையில் முடித்துக் கொண்டவன், மாலத் தீவில் உள்ள குறமதி (Kuramathi Island) பிரைவேட் தீவினை, தங்களுக்காக புக்கிங் செய்து விட்டான். கடலுக்கு நடுவே லக்சரி ஹவுஸ், வாலிபால் கோட், ஸ்விம்மிங் பூல். அதிலிருந்து இறங்கிச் சென்றால், நீலக்கடல் என அத்தனை ரம்யமான சுற்றம். அவர்கள் அறைக்கு வந்து சில மணி நேரத்தில், அவளின் தலையை வருடிக் கொடுத்தவன், உடையை மாற்றி விட்டு...
“சாத்வி! எனக்கு முக்கியமான ஆபிஸ் ஒர்க் இருக்கு. நான் முடிச்சிட்டு வாரேன். அதுவரை தூங்கி ரெஸ்ட் எடு.”
“ஹூம்.. இல்லைங்க. இங்க எல்லாம் ரொம்ப அழகா இருக்கு. நான் வெளிய போய் பார்க்கட்டுமா.”
அவன் முகத்தில் தோன்றிய யோசனையில்...
“வேணாம்னா விடுங்க.”
“நோ! நோ! இங்க ஏதும் பயமில்லை. இட்ஸ் ஹவர் பிரைவேட் ப்ளேஸ்.”
இதோ அவனின் அனுமதியோடு வந்து கடலை ரசிக்க ஆரம்பித்து ஒன்றரை மணி நேரம். தன் உடையை கீழே குனிந்து பார்த்து அதை வருடிக் கொடுத்தவள், மெதுவாக புன்னகைத்து கொண்டாள். முட்டியை தொட முயன்ற டெனிம் ஷார்ட்ஸ், கையில்லாத ஹார்ம் கட் டி-ஷர்ட். அவளுக்கோ அது வினோதமான ஆடை.
‘முரடு, அப்படி என்ன பிடிவாதம்? இதை நான் போட்டே ஆகணும்னு. ச்சோ! நல்லாவே இல்ல.’
மனோதோடு புலம்பிக் கொண்டிருந்தவளின் இடையோடு ஒரு கரம் ஊற, தன்னை அத்தனை நெருக்கத்தில் இறுக்கி பிடித்து இருந்தவனின் வாசம் அவள் நாசிக்குள் நுழைந்து, நேற்றைய இரவு தந்த நினைவுகளை மீட்டுக் கொண்டு வந்தது. அதில் நாணி முகம் சிவந்தவள், தலையை திருப்பிப் பார்க்க.
படர்ந்த சிகை, அடர்ந்த தாடி மீசை, அவனது உயரமும், ஆஜானுபாகுவான அவனது தேகமும், அவளை சுற்றி ஆக்கிரமித்த அவன் தோரணையும், கண்களில் மித மிஞ்சிய கிறக்கமும், நேற்றைய இரவு அவன் விழிகளில் தோன்றிய அதே மயக்கத்திற்கு சற்றும் குறையாத மயக்கத்தோடு, அவன் மார்பில் துஞ்சிய நினைவுகளை தட்டி எழுப்ப, மேலும் முகம் நாணிச் சிவந்தாள்.
“இப்படி சிவக்காதடி. உன் கன்னத்து சிவப்பும், மூக்குத்தி ஜொலிப்பும் என்னை என்னமோ பண்ணுது. அப்புறம் திறந்த வெளியில பிறந்த மேனியா, இருக்க வேண்டி வரும்.”
“ச்சீ.. போயா! வெட்கம் கெட்ட மனுஷன்.” என்றவள் நாக்கை கடிக்க..
“அந்த ச்சீக்கு.. உன்னை வதைக்கணும்னு வெறி வந்துச்சுடி. இந்த ச்சீக்கு.”
அவளை மேலும் நெருங்கி...
“உன்னை ஆண்டு அனுபவிக்கணும்னு வெறி வருதுடி. இப்போவும் வதைக்கத் தோணுது. உன் விரல் நுனி கூட வலிக்காத வண்ணம், சுகவதை கொடுக்கணும்னு தோணுது.”
“புருஷ்!” என்றவள் வெட்கத்தோடு அவன் மார்பில் தஞ்சம் புக.
“இந்த ட்ரெஸ் எல்லாத்துக்கும் ரொம்ப வசதியா இருக்குடி.”
அவள் கட்டுப்பாட்டை தகர்க்கும், அவன் கரத்தை தடுத்துக் கொண்டே.
“இந்த ட்ரெஸ் எனக்கு நல்லாவே இல்ல, புருஷ்.”
அவளை ரசனையாகப் பார்த்தவன்.
“எனக்கு ரொம்ப நல்லா இருக்குடி.”
அவன் விஷமப் புன்னகையில் முறைத்தாள் சாத்விகா.
“ஹா.. ஹா..” வாய் விட்டுச் சிரித்தவன். இரு கரத்தையும் மேலே தூக்கி..
“ஓகே சரண்டர்.”
அவளும் உடன் சேர்ந்து சிரிக்க...
“சாத்வி சர்ஃபிங் (surfing) போகப் போறேன். ஹோப் யூ என்ஜாய்.”
அதில் முழித்தவள்...
“கேள்விப் பட்டு இருக்கேன். இந்த வேர்ட, பட் அப்படினா என்னங்க புருஷ்.”
வெளிப்படையான அவள் பேச்சில் தோன்றிய மென்மையோடு...
“இதுவொரு நீண்ட, வெற்று, ஆழமற்ற நீர் பரப்பில் செய்யக் கூடிய, டைப் ஆஃப் சீ ட்ரைவ்.”
“ஓஓ!” அவள் உதடு குவிக்கவே, அதில் உதட்டோடு உதட்டை புதைத்து தேன் பருகி, அந்த சுவையில் அவன் கிறங்கி விலக.
“யோவ் ராவணா! நீ சரில.”
சாத்வி சர்வேஷை பிடித்துத் தள்ளிவிட மோகனப் புன்னகையோடு, ஒற்றை கையில் சார்ஃபிங் கியரை(surfing gear) பிடித்துக் கொண்டு எழுந்தவன், மற்ற கையால் தலைவலியே டி-ஷர்டை கழட்டி அவள் முகம்மீது வீசிவிட்டு, வெறும் ஷார்ட்சுடன்...
“ஊஊவ்!” என்ற உற்சாகக் கூச்சலோடு கடலை நோக்கிப் போனான். அவனுக்கு அவனை நினைத்தே பிரமிப்பு. ஒன்றா இரண்டா எத்தனை வருடங்களுக்குப் பின், அவன் சந்தோஷ ஆர்ப்பரிப்பு மீண்டிருக்கிறது.
அவன் கழட்டி எரிந்த டி-ஷர்ட்டை நாசியில் வைத்து ஆழ சுவாசித்தவள், அவன் ஆண் வாசத்தில் கிறங்கி, அது கொடுத்த புத்துணர்ச்சியோடு.
“என்னங்க பார்த்து.” அவள் சத்தம் காற்றில் கரைந்தது.
சர்ஃபிங் கியரை காலில் பொருத்தியவன், கடலுக்குள் இறங்கி கைகள் ரெண்டையும் விரித்த கடலை ஆளும் திமிங்கிலத்தைப் போல காற்றையும், கடலையும் கிழித்துச் செல்ல,
அது தந்த முதல் அனுபவத்தில் சாத்வியோ...
“ஐயையோ ராவணா!”
பதறி எழுந்து கடல் கரையை நோக்கி ஓடத் தொடங்கினாள்.
அந்த சாகச விளையாட்டைக் கண்டவள், நொடியில் உருக்குலைந்து விட்டாள். ‘அவனுக்கு ஏதோ ஆகிவிடுமோ? இல்லை, தவறி கடலில் விழுந்து விடுவானோ’? என்றே அவள் எண்ணங்கள் பலவாறு சுற்றி வர.
“பயமா இருக்கு புருஷ், பார்த்து மெதுவா.”
“ஐ அம் பைன் மை டியர் மண்டோதரி!”
கடல் அலையை கிழித்துக்கொண்டு, அவன் சத்தம் கடல் கரையை அடைந்தது.
கடல் காற்றில் அசைந்து, கலைந்த அவன் கேசம் கடலலையை கிழித்துக்கொண்டு வந்த அவன் நெடிய உருவம், திண்ணிய அவன் புஜங்கள் என அவள் பிரமித்த அவன் உருவம் காற்றிலும், கடல் அலையிலும் கிழித்து, தவழ்ந்து, சுழன்று வர, இவள் நெஞ்சில் தோன்றிய பயம் சற்றே மட்டுப்பட அவன் வீரத்தை, துணிச்சலை அதில் தொக்கி நின்ற ஆளுமையை, கர்வத்தை வெகுவாக ரசித்தாள்.
நீண்ட நேர விளையாட்டுக்குப் பின் முழுதாக நனைந்த தன் உடலை லேசாக உதறி, கேசத்தை விரல்களால் தண்ணீர் வடிய கோதிவிட்டு கரைக்கு வரவும், அதுவரை உயிரை கையில் பிடித்துக் கொண்டிருந்தவள், கணவனை நெருங்கி அவனை இடையோடு கட்டிக் கொண்டாள். அப்படியே அவள் இடையில் கை கொடுத்து குரங்கு குட்டியை போல் தன்னோடு தூக்கிக் கொண்டவன், மணலில் அவளோடு விழுந்தான்.
“என் மண்டோதரிக்கு, என்ன பயமாம்.”
“ராவணா!” அவள் உடல் நடுங்கவே, தன்னோடு இறுக்கிக் கொண்டவன்.
“என் மண்டோதரி!” துளிகள் மௌனத்தில் கரைய.
“சிதையில் விழுந்தாலும், அவள் ராவணனோடு சேர்ந்து தான் விழனும்னு ரொம்ப பயமாம்.”
ஒரு வரி காவியத்தை அந்த ஒற்றை வரியில் காதலாகச் சொல்லிவிட முடியுமா? இதோ சொல்லி விட்டாள். நெகிழ்ந்தவன் அவளை அணைத்துக் கொண்டே முகம் நோக்கி நெருங்கி...
“இப்படி எல்லாம் அட்வென்ஞ்சர்ஸ் பண்ணுறது எனக்கு ஒன்னும் புதுசு இல்லை. ஆனா.. எனக்கு தான் இப்ப ரொம்ப பயமா இருக்குதுடி.”
“சர்வேஷ் அக்கண்யனுக்கு பயமா?” அவள் கேலியில்.
“ஒற்றை இரவில் இப்படி என் உயிரோட கலந்துட்டியே! இந்த ஆழத்தை என்னால தாங்கிக்க முடியுமானு பயமா இருக்குடி. இந்த கண்ணு எங்கிருந்தாலும் என்னை சுத்தி, சுத்தி வருதே, ஒரு நொடி நான் திடீர்னு மறைஞ்சுட்டா! இந்தக் கண்கள் தாங்கிக்குமானு பயமா இருக்குடி.
உள்ளுக்குள்ள பதட்டம் கொட்டிக் கிடந்தாலும், நடுங்குற உன் கைகள் கூட என்னை அணைக்கும் போது, அதை காட்டிக் கொடுக்கக் கூடாதுன்னு நினைக்கிறியே? இந்த நேசத்தை நினைத்தால் பயமா இருக்குடி!
இது எல்லாத்தையும் விட இந்த விளையாட்டுக்கே இப்படி பயப்படுறியே! நான் யூஎஃப் டோர்னமண்ட்னு வந்துட்டா, நிதானமா இருக்க மாட்டேன். என் பொறுமை தொலைந்து போய் விடும். எண்ணங்கள் எல்லாம் ரிங்க்குள்ள இருக்க எதிரி மேலே தான் இருக்கும். அப்போ எதிராளிக்கு காயங்களை கொடுக்கிற மாதிரி, திரும்ப காயங்களை வாங்கும் நிலைமையும் வரும். காயங்கள் வேதனையை கொடுக்கும். இந்த உடல் குருதில கூட நனையும், அப்போ அந்த வலியை அந்த பயத்தை, அந்த ரணத்தை நீ தாங்குவியான்னு, இப்ப நினைச்சா ரொம்ப பயமா இருக்குடி..!”
மொத்த உயிரையும் இரு விழிகளில் தேக்கி, அவனைப் பார்த்தவள்.
“தெரியலை! இந்த பயத்துக்கு எல்லாம் என்னிடம் பதில் இல்லை. உங்க விஷயத்துல நிறைய பயம் இருக்கு, பதில் இல்லை. சாத்வி மத்தவங்களைப் பொறுத்தளவு மௌனமானவள். ஆனால் உங்களுக்கு அப்படி இல்லை. ஏன்னா உங்களுக்கு நான் சாத்விகாவா தான் இருக்கேன்.
கண்டிப்பா நீங்க நேசிக்கிற உங்க விளையாட்ட, நான் நேசிக்க முயற்சி செய்வேன். அந்த விளையாட்டில் நீங்க வாங்குற காயங்களை வீரத் தழும்பா நீங்க நினைக்கலாம். அது எனக்கு மரண வலியைத் தரும். அந்த வலியை தாங்கிக் கொள்வேனான்னு தெரியலை. அதை நினைச்சா இப்பவும் பயமா இருக்கு. ஆனா.. அந்த பயத்தை, அந்த ரணத்தை அந்த க்ஷனத்தை உங்களுக்காக தாங்கிக்கணும்னு தோணுது.”
இருவருக்குள்ளும் மௌனம் பாஷையாகிப் போனால், வார்த்தை பஞ்சம் ஆகும். இதுவே வார்த்தைகள் பாஷையாகி போனால், மௌனம் பஞ்சமாகிவிடும். வாய்கள் பேசிக் கொள்ளவில்லை வார்த்தைகள் வாதாட வில்லை. மௌனம் பேசியது.
அவளை அப்படியே கைகளில் அள்ளியவன் தன்னோடு இறுக்கி அணைத்துக் கொண்டு தனது அறைக்குச் சென்று, மலரோடு மது உண்ண மஞ்சத்தில் சரிந்தான். இது இரு இதயம் இணைந்த இரண்டாவது இரவு..
அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்து..
“ஹம்.. லவ் திஸ் அரோமா. இட்ஸ் சோ நேச்சுரல்.”
வியர்வையில் குளித்திருந்த அவள் இயற்கை மனதை விரும்பும், இந்த பித்துப் பிடித்தவனின் காதல், அவளையும் பித்துப் பிடிக்க வைத்தது. நேற்றைய பொழுது அவன் தன்னை நுகர்ந்து புணைந்த பொழுதுகள், நினைவில் தோன்றிச் சிவக்க..
“அச்சோ!” விலகப் பார்த்தாள்.
“ப்ளீஸ்.. விடுங்க புருஷ். கு..குளிக்கணும் வியர்வை மணக்குது.”
“காதல் சுத்த பத்தம் பார்ப்பதில்லைனு என் மனைவி சொன்னா. அது உண்மையானு நானும் தெரிந்து கொள்ள வேண்டாமா?”
ஒருவர் மற்றவரில் ஒழித்து வைத்திருந்த காதலை மௌனத்தில் தேடியவர்கள், வார்த்தையிலும் செயல் வடிவிலும் தேடத் தொடங்கினர்.
“உங்ககிட்ட என்னோட சுயத்தை கொஞ்சம் கொஞ்சமா கொடுத்துக்கிட்டு இருக்கேன்.”
“ஏன் கொஞ்சமா கொடுப்பானே! மொத்தமா கொடுத்து தான் பாரேன்டி.”
“இந்த சுயத்தை மொத்தமா உங்ககிட்ட தொலைக்கிறதுக்காகவே, நீங்க என்கிட்ட யாசகம் கேட்டா என்னனு ஆசையா இருக்கு.”
“என் பொண்டாட்டி விரிந்த கூந்தலுக்குள் முகம் புதைத்து காலமெல்லாம் யாசித்து வாழச் சொன்னாலும், ஆசையா வாழ்ந்து பார்ப்பேன். என்னடி வாழ்ந்து பார்க்கட்டுமா...?”
சர்வேஷ் கண்களின் மயக்கம், அவளை மயக்கியது. மேலும் முன்னேறியவன், அவள் சொற்ப ஆடையை களைந்து, தான் அணிந்திருந்த ஒற்றை ஆடையையும் துறந்தான். கொஞ்சம் கொஞ்சமாக தன்னையும் தன் காதலையும் அவளுக்கு உள்ளத்தாலும் உடலாலும் உணர்த்தியவன் சர்வமும் சாத்விகாவே. அங்கே கிறங்கி, நெகிழ்ந்து, தவித்த அவள் இதழ்களோ..
“யூ எஃப் அட்ரிக் சாம்பியன், டைம்ஸ் பத்திரிக்கையோட தி மோஸ்ட் செலிபிரிட்டி, இளைஞர்களின் ரோல் மாடல், சர்வேஷ் குரூப் ஆப் கம்பெனிஸோட சேர்மன். ஏஜே அக்கண்யனோட செல்ல புள்ள, தன் பொண்டாட்டி கூந்தலில் முகம் புதைத்து காலம் முழுக்க யாசித்து இருக்குறேன்னு சொல்றாரே, நடக்கிற காரியமா.”
“நீ சொல்ற சாம்பியன்ஷிப், மூன்று முறை வாங்குன அட்ரிக் வேர்ல்ட் கப், மெடல்ஸ், உலகம் முழுக்க எனக்கு இருக்க ரசிகர்கள், எனக்கு இருக்க மீடியா பவர், என் மீது இருக்க செலிபிரிட்டி கிரஷ், இதன் மீது அவங்களுக்கு இருக்கும் போதை, ஏன் எனக்கான அவங்களோட துடிப்பு, ஆர்ப்பாட்டம், இந்த ப்ரைம்ங்கிற அந்தஸ்து, இது எதுவுமே தராத போதையை, நிம்மதியை உன் ஒற்றை ஸ்பரிசம் தரும். அதை விட பெருசு பல வருஷமா தூக்கமே வராமல் தவித்த அரக்கனோட உணர்வுகள் ஆழ்ந்து உறங்கினதே உன் மேனியில் கவிழ்ந்த வாசத்தில், அந்த உன் தொடுகையிலும் தான்.”
என்றவன் புயலாக மாறி அவளை சுழற்றி எடுத்தான். அவனால் முடிந்து இருந்தால் சாத்விகாவை சுருட்டி தன் உயிருக்குள் புதைத்து இருப்பான். அத்தனை நெருங்கினான். முத்தமிட்டே அவளை மூச்சுக்கு ஏங்க வைத்தான். தொடுகையில் சிவந்தாள்.
அவன் வியர்வை வாசம் கூட பெண்ணை கிறங்க வைத்தது. உணர்வுகள் அவனாகியினால் அவன் உயிர் அவளாகிப் போனாள். தொட்ட இடமெல்லாம் தீப்பற்றிக் கொண்டது.
அவள் இதழ் பட்ட இடமெல்லாம் அவன் பாவம் கரைவதை உணர்ந்தான். எத்தனை முறை கூடிக் களைத்தானோ அவனே அறியவில்லை. கூடலின் பொழுது அவனில் ஒரு திருப்தி!
கூடல் முடித்ததும் அவளில் மீண்டும் ஒரு தேடல். உதடுகள் புண்ணாகின, அவன் வேகத்தை தடுக்கும் போதெல்லாம்.
“என்னைத் தடுக்காத, உன்கிட்ட தோற்றுப் போகணும்னு நினைக்கிறேன். தோற்கவாடி..!”
“ஹம்.. ஒரு முறை என்னிடம் நீங்கள் தோற்றால், மறுமுறை என்னை ஜெயிக்க நினைக்கக் கூடாது.”
“ஆல்வேஷ்!”
என்றவன் தாம்பத்யத்தின் வெற்றியே தன் இணையிடம் தோற்பது என்று, ஒற்றை வார்த்தையில் காதலின் முதல் எதிரியான ஈகோவை தீயிட்டுக் கொளுத்தினான். அவளில் முத்துக் குளித்து ஓய்ந்து போனவன், சோர்ந்து போனவளை தன் மீது சாய்த்துக் கொண்டு..
“ஒரு தேடல் என்ன செஞ்சிடும்னு நினைச்சேன்! ஆனா ஒரு தேடல் எனக்குள்ள இருக்க மனுஷனை தட்டி எழுப்புதுடி. ஒரு தேடல் எனக்குள்ள இதயம் இருக்குதுன்னு சொல்லுதுடி. ஒரு தேடல் என்னையும் ஆண்ணு முதல் முறை சத்தமா கத்திச் சொல்லுதுடி.