எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

வேதம் - 20

admin

Administrator
Staff member

அத்தியாயம் - 20 (Final epi)​

ஆதவன் உதிக்கும் அழகிய காலை. லேசாக சோம்பல் முறித்தவாறு, துயில் கலைந்தாள், சாத்விகா. மெதுவாக கை, காலை அசைத்து விழிகளை திறந்தவள், பக்கவாட்டாகப் படுத்து இருந்தமையால், வலித்த கால்களை, இல்லை லேசாக விரலில் நீவி விட்டுக் கொண்டு கண்ணைத் திறக்கவும். அவளுக்கு அருகில் சர்வேஷ் நிர்சலனமாக​

உறங்கிக் கொண்டிருந்தான்.​

அவன் அடர்ந்த தாடி, மீசையும், பிடரி முடியும், நீண்ட முகவெட்டுமாக அன்று அதிகாலை வேளையிலேயே மனைவியை மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டினான்.​

‘கிறுக்கு புருஷ்! வெறுப்பாம், இந்த மூஞ்சி மேல, இந்த உடம்பு மேல. பேச்சைப் பாரு. ரொம்ப, ரொம்ப விருப்பு. ம்ச்.. அந்தக் கன்னத்து தாடி ஓரம் நிற்குதே ஒத்த வெள்ளை முடி, அது கூட என்னது. எனக்குச் சொந்தமானது. இப்படி இருக்கும் போது, யாருக்கு சொந்தமானதை யாரு வெறுக்கிறது!’​

மென் புன்னகையோடு அவன் சிகை வருடியவள், தன் பிள்ளை சுமந்த வயிற்றை அணைத்துப் பிடித்த அவன் கரத்தை மெதுவாக நகர்த்தி விட்டு, எழுந்து குளியலறை நோக்கிச் சென்றாள்.​

“அடடே! வாங்க, வாங்க அண்ணா! நான் கூப்பிட்டாலும் வரேன்மான்னு சொல்றவரு, காலையிலேயே வந்துருக்கிங்களே! இன்னைக்கு மழை பெய்யப் போகுது!”​

ஜனனியின் குரல் பெரும் உற்சாகத்தோடு வெளிப்பட, ஹாலில் அமர்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருந்த அக்கண்யனும், காப்பி குடித்துக் கொண்டிருந்த ஆத்விக்கும் ஒரு சேர திரும்பி உள்ளே நுழைந்து கொண்டு இருந்த அரவிந்தனைப் பார்த்து முகம் மலர, நொடியில் முகம் மலர்ந்த மூவரின் வதனமும் நொடியில் இருள,​

சமையலறையில் இருந்து சத்தம் கேட்டு வெளியே வந்த ராகவியோ..​

‘ஆத்தா! நேத்து அடிச்ச புயலே இன்னும் முடியல! மறுபடியும் இன்னைக்கா. எது உடையப் போகுதுன்னு தெரியலையே..!’​

அவள் மனம் பேச, விழிகளோ வீட்டை நாலாபுரமும் சுத்தி ஆராய்ந்தது. அதில் அரவிந்தன் ஒரு சங்கடமான புன்னகையோடு உள்ளே நுழைந்தவன்...​

“அகி!”​

“வாடா, நீ ஏம்மா அங்க நிக்கிற, உள்ள வா! என் நண்பனோட மனைவிக்கு, என்னைக்கும் இந்த வீட்டில முதல் மரியாதை உண்டு.”​

சொல்லால் ஒரு கொட்டு வைத்த அக்கண்யன், சம்பிரதாயத்திற்காகக் கூட சயத்தாவை ஒரு பொருட்டாக மதிக்கவில்லை.​

அதிர்ந்து போயிருந்த ஜனனியை கண்களால் ஆசுவாசப்படுத்தி விட்டு, ஆத்விக்கை அழுத்தமாக ஒரு பார்வை பார்த்தான். அதில் ஆத்விக் தன் தலையை அழுந்த கோதிக் கொண்டு, மனைவியைப் பார்த்து தலையசைக்க, அனைவருக்கும் காபி எடுத்து வர, அவள் மீண்டும் சமையலறைக்குள் நுழைந்து கொண்டாள்.​

“வாடா! இன்னைக்கு ஹாலிடே. சோ.. வெளியே கிளம்ப ஏதும் பிளான் பண்ணி இருக்கியா?”​

அதில் அக்கண்யனை புரியா பார்வை பார்த்தான், அரவிந்தன்.​

“அகி?”​

கேள்வியாக நோக்கவும்,​

அதே நேரம்.​

“டேட்!” என்ற சத்தத்தோடு உள்ளே நுழைந்த வருண்.​

“கொஞ்சம் வெயிட் பண்ணி இருக்கலாம் இல்லையா? சேர்ந்தே வந்திருக்கலாம். நான் வாஷ் எடுத்துட்டு வரும் முன்னே நீங்க கிளம்பிட்டீங்க. பாருங்க காபி குடிக்காம அவசர, அவசரமா வாரேன்.”​

தம்பியின் சத்தத்தில் அவன் வருகையை அறிந்த ராகவி, அவனுக்கும் சேர்த்து காபியை எடுத்துக் கொண்டு வந்தவள்...​

“டேய் பறக்கா வெட்டி! இருடா, உனக்கும் சேர்த்து தான் எடுத்துக்கிட்டு வந்து இருக்கேன்.”​

“ஹா.. ஹா..”​

அதில் ஆத்விக் வாய்விட்டு சிரிக்க.​

“அத்தான், திஸ் இஸ் டூ மச். உங்க பொண்டாட்டி என்னை இன்ஸல்ட் பண்றா. நீங்க சிரிக்கிறீங்க. மை டியர் மச்சான்! நீ என்ன சொன்னாலும், நான் என் பொண்டாட்டிக்கு தான் சப்போர்ட்டா இருப்பேன்.”​

“அது சரி, எல்லாரும் பொண்டாட்டி முந்தானையைத் தான் முடிஞ்சு நிற்பாங்க. நீங்கதான் தொபுக்கடிர்னு எங்க அக்கா காலுலயே கவுந்த ஆளாச்சே.!​

அதில் ராகவியை நோக்கியவன் இதழ்களில் ஒரு மந்தகாசப் புன்னகை எனில், ராகவியின் இதழ்களில் நாணப் புன்னகை. இதை பெற்றவர்கள் பூரிப்போடு பார்க்க, சயத்தாவின் உள்ளம் வேதனை கொண்டது.​

‘ஏன், ஏன் எனக்கு இப்படி ஒரு குடும்ப அமைப்பு கிடைக்கலை. ஏன் என் குடும்பம் என்னை அவங்களோட ஏத்துக்கல. ஏன் எனக்கு மட்டும் அம்மா, அப்பா பாசம் சின்ன வயசிலயே தூரப் போச்சு?’​

அவள் விழிகளில் தோன்றி மறைந்த வேதனையை அக்கண்யன் கண்டு கொண்டாலும், அவன் அமைதிக்காக்க.​

நொடிகளில் வேதனை படர்ந்த விழிகளில்...​

‘யார் இல்லைனா, என்ன? இந்த உலகத்திலேயே என்னை அதிகமாக நேசிக்க என் பாவா ஒருத்தரு போதும். வேறு யாரும் எனக்கு தேவையில்லை. என் பாவா கூட ஒரு வாழ்க்கை சொர்க்கத்தை விடப் பெருசு. அதுக்காக எதையும் செய்யலாம்.’​

காதல் தீவிரம், அதில் தொக்கில் நின்ற வெறி படர்ந்து பரவியது.​

“அரவிந்தா! என்னடா அவுட்டிங் போறதுக்கு பிளான் பண்ணி இருக்கியா? அதான் ராகவியையும் ஆத்விக்கையும் கூட்டிட்டு போக வந்து இருக்கியா?”​

“என்ன அகி? நீ இப்படி கேட்குற? மார்னிங் சாத்வி கால் பண்ணி, எல்லாரையும் கூட்டிட்டு வாங்கப்பான்னு சொன்னா, அதான் வந்தேன்.​

நான் கூட நீ தான் வரச் சொன்னனு நினைச்சேன்டா! ஆனா.. உனக்கே தெரியலன்ற.”​

அக்கண்யன் புருவம் நெரியப் பார்க்க, ஜனனியோ..​

“என்ன சாத்வியா?”​

வாய்விட்டே அதிர்ச்சியைக் காட்டி விட்டாள்.​

அதில் அரவிந்தன் முகத்தில் குழப்ப ரேகைகள். நேற்று நடந்த எந்தக் கலவரங்களும் அரவிந்தனுக்கு தெரியாது. நேற்று என்பதை விட, கடந்த மூன்று மாதமாக நடக்கும் எதுவுமே அவன் பார்வைக்கு மறைத்தே நடத்தப்பட்டது.​

இப்போது தான், கவிதாவின் முகத்தில் மரண பயமே தாண்டவம் ஆடியது. என்று மகளை அரவிந்தன் வீட்டுக்குள் சேர்த்தானோ, அன்றே, மனைவியோடு உள்ள உறவை விட்டு விட்டான். அதிலேயே, அவள் பாதி செத்து விட்டாள். நேற்று நடந்தது தெரிந்து விட்டால், கணவன் தன்னை அடியோடு ஒழித்துக் கட்டி விடுவான் என்பதில் சந்தேகமே இல்லை. அதில் கவிதாவின் கையெல்லாம் சில்லிட்டுப் போக,​

 

admin

Administrator
Staff member

அருகில் அமர்ந்திருந்த வருணோ தாயையும், தங்கையையும், சந்தேகமாக ஒரு பார்வை பார்த்து வைத்தான்.​

“ஹம்.. ஓகே சாத்வி வரச் சொல்லி இருக்கா இல்லையா? அப்போ.. கண்டிப்பா விஷயம் இருக்கும். முதல்ல பிரேக்ஃபஸ்ட்டை முடிச்சுடுவோம்.”​

“ஆமா அண்ணா! ரொம்ப நாளைக்கு அப்புறம் நீங்க வந்து இருக்கீங்க. வாங்க சாப்பிடலாம்.”​

சிறு தலையைசைப்போடும் மாறாத குழப்பத்தை முகத்தில் சுமந்து கொண்டும், அரவிந்தன் டைனிங் டேபிளை நோக்கிச் சென்றான்.​

அங்கே சோம்பலோடு கண் விழித்த சர்வேஷ், அருகில் இருந்த டேபிளை தடவி, தன் ஹார் பேண்ட்டை எடுத்து முடியை முடிந்தவன், கட்டலில் சாய்ந்து அமரவும்.​

ஃஹார் டிரை செய்யப்பட்ட கூந்தலை, மெதுவாக கையால் தளர்த்திக் கொண்டே பிரக்னன்சி மேக்சி ஒன்றை அணிந்து, சாத்வி ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து, மெதுவாக வெளியே வந்தாள்.​

ஏசி நிறுத்தி வைக்கப்பட்ட அறையில் வேலை செய்த ஃபேனும், திறந்திருந்த பிரெஞ்சு விண்டோ வழியாக வந்த காற்றும், வானத்தில் கலைந்து செல்லும் வான் மேகங்களைப் போல், அவள் கூந்தல் காற்றில் களைந்து தாளமிட, அந்த காலைப் பொழுதை ரசனையோடு ரசித்தான், சர்வேஷ்.​

கணவனின் பார்வையில் தோன்றிய மையலில்​

“என்ன புருஷ் ஹேங்கோவரா?”​

அவள் கேட்டதன் பொருள் புரிந்து, லேசாக நுனி மூக்கு சிவக்க முறைத்தவன்...​

“அகம் புடிச்சவடி! ஒரு பாடி பில்டர, இராத்திரி எல்லாம் காலில் விழுந்து கத்தி கதற வச்சுட்டு, ஹேங்கோவர்னு கேட்கிறல்ல...!”​

“ஏன் பொண்டாட்டி கால்ல புருஷன் விழக் கூடாதா? இன்னும் 80ஸ் கான்செப்டோட சுத்துற டிபிக்கல் ஹஸ்பண்டா இருக்காதிங்க, புருஷ். இப்ப இருக்க 20 கிட்ஸ்க்கு ஏத்த மாதிரி அப்டேட் ஆகுங்க.”​

அவன் வசீகரப் புன்னகையோடு, தன் தாடியை வருடி கொண்டே புருவம் தூக்கிப் பார்க்க..​

“என்ன நான் 90 கிட்ஸ்னு சொல்றீங்களா? இருந்தாலும், மேரேஜ் கான்செப்ட்கே நமத்துப் போன பீசான 90ஸ் கிட்ஸ்க்கு, ரெண்டு மேரேஜ் ஒரு லவ் எல்லாம் ரொம்ப ஓவர்.”​

அவன் விழிகளை ஆழ்ந்து பார்த்துக் கொண்டே அவள் அம்பை எரிய, அதை விழி வீச்சால் தடுத்தவன், விழிகளுக்குள் நக்கலையும் திமிரையும் சரிசமமாகக் கொண்டு வந்து..​

“லிஸ்ட் பெருசுடி! எக்கச்சக்கமான கேர்ள் பிரெண்ட்ஸ் எல்லாம் இருக்காங்க. வேணும்னா, இன்னொரு சைடு செட்டப் கூட ட்ரை பண்ணிக்கலாம்.”​

சாத்வி புருவம் தூக்கி கணவனை மெச்சம் பார்வை பார்க்க, தன்னருகில் நின்றிருந்தவளின் கையைப் பிடித்து இழுத்தவன், அவளை தன் மடியில் அமர்த்திக் கொண்டு, விரிந்திருந்த அவள் கூந்தலுக்குள் அதிரடியாக முகத்தை நுழைத்தவன்.​

“நைஸ் அரோமா! உன்கிட்ட மட்டும்தான்டி இப்படி வாசனையா இருக்கு. அடிக்கடி விரிந்து இருக்கிற இந்த கூந்தலுக்குள்ள, என்னை புதைச்சுக்கணும்னு தோணுது. அப்படி என்னை புதைச்சுக்கும் போது, இந்த வாசனையை என் மேல எல்லாம் அப்பிக்கணும்னு ஒரே லவ்சா இருக்குடி.”​

காதலோடு ஆரம்பித்து உருகி குழைந்து நக்கலில் முடித்தவன், அவள் அணிந்திருந்த மேக்சியின் முன் பட்டன்களை நகர்த்தி விட்டு, அவள் வெற்று வயிற்றில், தன் கரத்தைக் கொண்டு ஊர்வலம் நடத்த..​

“ஸ்ஸ்ஆ.. கூசுது புருஷ்.”​

“கூசட்டும்.”​

மேலும் வருட.​

“யோவ் கூசுதுயா!”​

“நல்லா கூசட்டும்டி. காலையிலேயே என்ன பேச்சு பேசுது இந்த வாய்.”​

அவன் மடியில் நெளிந்து கொண்டிருந்த அவளை, தொடையில் கை கொடுத்து தன்னோடு இறுக்கியவன்...​

“போட்டுப் பார்க்கிறியா? இன்னும் இவன் பைத்தியமா தான் இருக்கானா? இல்லையானு தெரிஞ்சுக்க.. வார்த்தையில்​

விளையாண்டு பார்க்கிற இல்ல?​

அரக்கனா தான்டி இங்க வந்தேன். பட் இங்க வந்து ஒருத்தி கைப்பிடியில விரும்பியே சிக்கிட்டேன். அவ கொஞ்சம், கொஞ்சமா என்னை ராட்சச ராவணனா மாத்திட்டா.”​

அதில் நாணிச் சிரித்தவள்...​

“எனக்காக வாய், உங்களுக்கு தான் ஓவர் பேச்சு.” என்றவள் அவன் மூக்கைப் பிடித்துத் திருகி.​

“பின்ன நேத்து முழுக்க கத்தி கதறி அழுது முடிச்சாச்சு. எல்லாம் நேத்தோட போயே போச்சு! இனி அதை நினைக்கவும், டௌவுன் பீல் பண்ணவும் கூடாது. என்ன தான் நீங்க ஓகேன்னு நான் நினைச்சாலும், அதை உங்ககிட்ட தெரிஞ்சுக்க வேணாமா? அதுக்கு தான் லைட்டா ஒரு எக்ஸாம் வெச்சேன். பரவாயில்லையே! புருஷ் ஒரே அட்டெம்டுல பாஸ் பண்ணிட்டீங்க.”​

“வேற வழி.”​

இப்போது அவனை அழுத்தமாகப் பார்த்தவள்...​

“சீக்கிரம் டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு வாங்க. கீழ போறோம்.”​

சர்வா யோசனையோடு பார்க்க...​

“கேள்வி கேட்கக் கூடாது. புருஷன் கூப்பிட்டா பொண்டாட்டி எப்படி வாரா, அது மாதிரி இந்த பொண்டாட்டி கூப்பிட்டாலும், புருஷன் வரணும்.”​

அதில் அவன் இதழ்கள் விரிய, அவளோ மாறாத அழுத்தத்தோடு...​

“கேள்வி கேட்கக் கூடாது.” மீண்டும் கூற,​

“கேட்க மாட்டேன்.”​

அதில் சர்வாவை சாத்வி ஆழமாகப் பார்க்கவும்,​

“சரி. கீழ வந்தும் எந்தக் கேள்வியும் கேட்க மாட்டேன். இந்த கண்ணுல திமிருக்குப் பதிலா ஒரு கோபம் தெரியுது, அது என்னமோ பண்ணப் போகுதுன்னு சொல்லுது. பண்ணப் போற விஷயம் சுத்தி இருக்குறவங்கள பதற வைக்கும்னு சொல்லுது. என் புருஷனோட கதறிக்கிட்டு இருக்க ஆத்மாவுக்கு, மோட்சம் கொடுப்பேன்னு சொல்லுது. இந்தக் கோபம் எனக்கான நீதின்னு சொல்லுது. இந்தக் கோபம் எனக்கான வாய்ஸ்னு சொல்லுது. இந்தக் கோபம் என் மேல இருக்க காதல்னு சொல்லுது.​

இந்தக் கோபத்து கிட்ட சொல்லனும், எனக்காக இல்ல, இந்தக் கண்களுக்கு சொந்தக்காரிக்காக அவளுக்கு கட்டுப்படவேன்னு! அதை சத்தமாச் சொல்ல ஆசையா இருக்கு.”​

அவன் தலையை தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டவள்...​

“நீங்க சொல்லுவீங்களா தெரியல. ஆனா.. எனக்கு சொல்லனும் போல இருக்கு.”​

“என்ன சொல்லணும் போல இருக்கு.”​

“எப்பவும் என்னைப் பார்த்து சொல்லுவீங்களே? ‘இப்படி எல்லாம் லவ் பண்ணாத, என்னால ரெசிஸ்ட் பண்ணிக் கொள்ள முடியலன்னு. அதை சத்தமா சொல்லணும் போல இருக்கு.”​

சர்வேஷ் முகத்தில் மாறாத ஒரு மோகனப் புன்னகை. அவளில் பிரிந்தவன்...​

“ரெடியாயிரு, கீழே போகலாம்.”​

என்று குளியலறை நோக்கிச் சென்றான்.​

அனைவரும் உணவை முடித்துக் கொண்டு அமர்ந்து பேசிக் கொண்டிருக்கவும்,​

சர்வேஷ் சாத்விகாவுடன் படிகளில் இறங்கி வரவும் சரியாக இருந்தது. மனைவி தோளில் ஒரு கையும், தன் குழந்தைகளை சுமக்கும் வயிற்றில் ஒரு கையும் வைத்து, தாங்கிப் பிடித்து அழைத்துக் கொண்டு வந்தவனை,​

சயத்தா வெறித்த பார்வை பார்த்தாள் என்றால்,​

தன்னைக் குத்திக் கிழிக்கும் சாத்வியின் பார்வையில், கவிதாவுக்கு குளிர் ஜுரம் வரும் போல் இருந்தது.​

அதுவரையிலும் மனைவியைத் தவிர வேறு எதிலும் கவனம் இல்லாமல் இருந்த சர்வேஷ் நிமிர்ந்து பார்க்க, அங்கிருந்தவர்கள் அத்தனை பேரையும் ஒருசேரப் பார்த்து புருவம் உயர்த்தினானே தவிர, வேறெந்த பாவனையும் அவனில் இல்லை.​

இன்று எது வந்தாலும் இரண்டில் ஒன்று பார்க்கும் முடிவோடு ஆத்விக் அமர்ந்திருக்க,​

ஜனனி நொடியில் கண்டு கொண்டாள், மகனின் முகத்தில் இருக்கும் தெளிவை, நிம்மதியை, துளிர்த்து நின்ற மகிழ்ச்சியை.​

அதைவிட அவளுக்கு வேறென்ன வேண்டும்?​

“என்ன புருஷ்?” அவள் குரலுக்கு மனைவியை திரும்பி அழுத்தமாகப் பார்க்க, அவளோ அவனை விட அழுத்தமாகப் பார்த்தாள் அதில் அவன் இதழ்களின் ஓரம் சிறு நெளிவு.​

அக்கண்யனின் விழிகளிலும், மருமகளை எண்ணி ஒரு மெச்சுதல்! அதே நேரம்.. நண்பனுக்காக அவன் மனம் வருந்தவும் செய்தது.​

“சாரிப்பா! ரொம்ப காக்க வச்சுட்டேனா...?”​

“அதெல்லாம் இல்லடா! நாங்க சாப்பிட்டு ரிலாக்ஸா பேசிகிட்டு இருக்கோம். நீ போய் சாப்பிட்டு வா.”​

அரவிந்தனுக்கு சிறு தலையசைப்பை கொடுத்து விட்டு, உணவு மேசையை நோக்கிப் போகவும், ஜனனி அவளுக்கு பரிமாறும் பொருட்டு அமர்ந்திருந்த இடம் விட்டு எழும்பவே.​

“அம்மா!”​

கணீர் என அழைத்த சர்வேஷ்.​

“அவளுக்கு சாப்பாடு நான் சேர்வ் பண்றேன். நீங்க இருந்து பேசிக்கிட்டு இருங்க.”​

ஜனனி தலையசைப்போடு அமர்ந்து கொண்டாள்.​

“என்ன புருஷ்? கவனிப்பெல்லாம் பலமா இருக்கு! அடி வாங்கும் முன்னவே மருந்து போட்டுகிறீங்களா?”​

“சாத்வி, எதைச் செஞ்சாலும் எல்லாரோட மனநிலையையும் மனசுல வச்சுக்கிட்டு செய்.”​

“ஹூ..ஹூம்..” அழுத்தமாக மறுத்தவள்.​

“முடியாது புருஷ்! நீங்க ரொம்ப, ரொம்ப நல்லவரு. அது இங்க இருக்க யாருக்குமே தெரியாது. அவங்களப் பொறுத்த வரை நீங்க கோவக்காரன். ஆணவம் பிடித்தவன். ஈகோ பிடித்தவன். கர்வம் பிடித்தவன். இவ்வளவுதான்! சர்வேஷ்னா வரைவிலக்கணம். உண்மை என்ன தெரியுமா?​

உங்களை ஒருத்தி மரண அடி அடிச்சும், அவள கை புடிச்சப்போ உன்னை பாதுகாப்பேன்னு கொடுத்த சத்தியத்துக்காக, இன்று வரைக்கும் அவ பேரை அசிங்கப்படுத்தாம இருக்கீங்க. முழு குடும்பமும், எங்கேயோ ஒரு மூலையிலயாவது சந்தோஷமா இருக்கணும்னு, மூணு வருஷமா அசிங்கத்தில் குளிச்சிட்டு இருக்கீங்க.”​

அவளை அழுத்தமாக தடுத்தவன்...​

“அதுக்காக, யார்கிட்டயும் என்னை நிரூபிக்கணும்னு அவசியம் இல்ல. எஸ் மனசுக்குள்ளேயே புழுங்கி செத்துக்கிட்டு இருந்தேன். என்னோட உணர்வுகள் கொஞ்சம், கொஞ்சமாக உருக்குலைஞ்சு போச்சு! அதை நீ சரி பண்ணிட்ட. என்னை உனக்கு மட்டும் தெரிஞ்சாப் போதும். எல்லாருக்கும் தெரியணும்னு அவசியம் இல்லை. இந்த சர்வேஷ், மத்தவங்க புரிஞ்சு கொள்ள முடியாத சித்தாந்தம் தான்.​

அவனுக்கு மறுக்கப்பட்ட உணர்வுகள், மறைக்கப்பட்ட பக்கங்கள் எல்லாமே இருக்கு. அதை யாருக்கும் நிரூபிக்கணும்னு அவசியம் இல்லை.”​

அவன் பரிமாறிய உணவை உண்டு கொண்டே, விழிகளில் கோபம் தெறிக்கப் பார்த்தவள்.​

“ரூம்ல வச்சு, என்ன நடந்தாலும் தடுக்க மாட்டேன்னு சொன்னீங்க.”​

பெருமூச்சு விட்டவன்...​

“சரி செய்!”​

அதில் அவள் இதழ்களில், அழகான புன் ழுறுவல்.​

 

admin

Administrator
Staff member

“இன்னும் ரெண்டு இட்லி வைக்கட்டுமா?”​

“வேணாம் புருஷ், ஃபுள்.”​

“ஹம்ம்..”​

அவள் கை கழுவி வரும்வரை தானும் நின்று கை கழுவி விட்டு, அவளை மெதுவாக அவர்களை நோக்கி அழைத்து வர,​

அவள் பெரிய வயிற்றை சுமந்து கொண்டு வரவே, தானும் அமர்ந்து அவளை அமரச் சொல்ல,​

மறுத்து விட்டு அக்கண்யன் முன் சென்று அன்று போல் இன்றும்..​

“அகிப்பா, நான் பேசணும். பேசட்டுமா...?”​

அத்தனை பேரும் ஒரு கணம் அதிர்ந்து போயினர். அதில் வெகுவாக அதிர்ந்தது, கவிதாவும் வருணும் தான்.​

அவள் சாட்டையை எடுத்தால் எப்படி சுழற்றுவாள் என்று நன்கு அறிந்தவர்கள் அவர்கள். அப்போதே தாயின் கை சிலிட்டுப் போய் இருப்பதற்கான காரணத்தை வருண் கண்டு கொண்டான். அவன் உள்ளம் அடித்துக் கொண்டது. இன்று ஏதோ ஒரு பெரும் பிரளயம் வெடிக்கப் போகுது என்பதில்.​

“சாத்வி!”​

அக்கண்யன் தடுக்க நினைக்க..​

“ப்ளீஸ் அகிப்பா! இன்னைக்கு இதை பேசுற நான், இனி எப்பவுமே இதை பேச மாட்டேன். இப்போ இதைப் பேசலைனா, அதோ நிற்கிறாரே.”​

கணவன் புறம் கைகாட்டி...​

“உங்க புள்ள! என்னோட புருஷன்! அவருக்கு என்னைக்குமே நியாயம் செஞ்சதா என் மனசு சொல்லாது.”​

அவனோ நிர்மலமான முகத்துடன் அமைதியாக அமர்ந்திருந்தான்.​

சர்வேஷை இத்தனை அமைதியாக இது வரையும், யாரும் கண்டதில்லை.​

அதில் புருவம் நெரித்த அரவிந்தன்.​

“அகி.. சாத்வியப் பேசவிடு.”​

“அரவிந்தா!”​

“ம்ச்! விடு அகி. இங்கே வரும் வரைக்கும் எனக்கு எதுவுமே நெருடலா இருக்கல. வந்தபின் கொஞ்சம், கொஞ்சம் மனசு பேசுனுச்சு. ஆனால் இப்போ சாத்விய தடுக்குற பார்த்தியா, இதுல ஏதோ ஒன்னு இருக்கு. பேச விடு, அவ பேசட்டும்.”​

“தாங்கிக் கொள்வியாடா?”​

அவன் குரலில் வேதனையின் சாயல். அதில் அருகில் அமர்ந்திருந்த நண்பனின் கரத்தை இறுகப் பற்றிய அரவிந்தன்...​

“நீ இருக்க அகி, தாங்கிப்பேன்.”​

இருவர் நட்பிலும் அங்கிருந்தவர்கள் மெய் சிலிர்த்தனர்.​

ஆனாலும் சாத்வி, தான் வாய் திறக்க வேண்டியதன் அவசியம் உணர்ந்து...​

“நான் பேசனும் அரவிந்தப்பா, ஆனா.. உங்க கிட்ட இல்ல. உங்க பொண்ணு கிட்ட.”​

“ராகவி கிட்ட பேச, என்கிட்ட என்னமா பர்மிஷன்?”​

அப்போதும் அவன் மனம் சயத்தாவை எண்ணவில்லை, அதை அங்கிருந்தவர்கள் அறிந்தாலும், காட்டிக் கொள்ளவில்லை.​

“இல்லப்பா! நான் ஆத்விக் அத்தானோட மனைவிகிட்ட பேசணும்னு நினைக்கல. உங்களோட சின்னப் பொண்ணு சயத்தாகிட்டயும், உங்க மனைவிகிட்டயும் பேசணும்னு நினைக்கிறேன்!”​

அதில் விழிகளை ஒரு கணம் இறுக மூடித் திறந்தவன்...​

“பேசுடா! இன்னைக்கே எல்லாம் பேசி முடிச்சிடு. என் நண்பன் எதையோ என்கிட்ட இருந்து மறைக்கிறான்னு, எனக்கு நல்லாவே தெரியும். அது என் நல்லதுக்காகன்னும் தெரியும்.”​

அரவிந்தனை அக்கண்யன் ஆதுரமாகப் பார்க்க...​

“நீயும், நானும் வேறில்லை, அகி. இந்த நட்பை எதைக் கொண்டும் பிரிக்க முடியாது” என்ற தைரியத்தில்,​

சாத்வி கணவனைப் பார்க்க, அவன் விழி மூடிச் சம்மதித்தான்.​

நேரே சயத்தா முன் சென்றவள்...​

“சயத்தா!”​

அழுத்தமாக அழைக்கவே, தன்னை போல் அவள் எழுந்து நின்றாள்.​

குத்திட்ட பார்வையால் அவளை ஆழ நோக்கி..​

“எதுக்காக என் புருஷன நீங்க மூனு வருஷத்துக்கு முன்ன டிவோஸ் பண்ணுனீங்க?”​

சயத்தா சர்வேஷைப் பார்க்க, அவன் முகத்தில் இதுவரை அவள் கண்ட பதட்டமோ, பயமோ, ஆர்ப்பரிப்போ.. எதுவும் இன்றி,​

மிக நிதானமாக ஏதோ சினிமாவை ரசிக்கும் பாவனை ஒன்று முகத்தில் தோன்றிட, அதில் ரௌத்திரமானவள்..​

“ஏன் உங்களுக்கு தெரியாதா? மிஸஸ்.சர்வேஷ்.”​

“நல்லாவே தெரியும். அது ஏன்னு நீங்களே உங்க வாய் திறந்து சொன்னா, மறுமுறை ஒருக்கா கேட்டுக்குவேன் இல்லையா...!”​

ஜனனி தன் மகனின் நிலையை மீண்டும் ஒரு முறை கேட்க நேரிடும் கொடூரத்தில் மனம் நொந்தாள் என்றால், ராகவியும், கவிதாவும் பதறிப் போய் நின்றிருந்தனர்.​

அதில் ராகவி, ஒரு அடியைக் கூட அவர்களுக்காக எடுத்து வைக்கத் துணியவில்லை.​

ஒன்று அவர்கள் புறம் இருக்கும் தர்மம், இன்னொன்று சாத்வியின், ‘ஆத்விக் அத்தானோட மனைவி’ என்ற விழிப்பு, அவளை அமைதி காக்க வைத்தது.​

“அதுல எனக்கு என்ன தயக்கம்? சொல்லிட்டா போச்சு.”​

“சயத்தா!”​

அரவிந்தனின் அதட்டலில்.​

“இப்பதான் எனக்கு பெயர் இருக்கிறதே உங்களுக்கு தெரியுதா? உங்க பிரண்டோட மகன் லட்சணசத்தைச் சொல்லப் போறேன்னு சொன்னதும் வலிக்குதோ...?”​

அவள் தந்தையை குரூரமாகப் பார்த்தவிட்டு, சாத்விகாவின் புறம் திருப்பி...​

“ஏன்னா? உன் புருஷனுக்கு ஒரு பெண்ணை சேட்டிஸ்ஃபை பண்ணத் தெரியாதுன்னு அர்த்தம். அவனால ஒரு பெண் கிட்ட கணவனா நடந்துக்க முடியாது! தெரியாதுன்னு அர்த்தம். அவன் ஆண்மை இல்லாதவன்னு அர்த்தம்!”​

அவள் பேச்சில் அங்கிருந்தவர்கள் முகம் சுளிக்க...​

“ஓவ்!” என்ற சாத்விகா.​

“என்னை மன்னிச்சிடுங்க. இங்க எல்லாரும் பெரியவங்களா இருக்கீங்க. ஆனா, சென்சார் போட வேண்டிய நிலைமையில் நான் இல்லையே!”​

கணவன் புறம் திரும்பி...​

“என்னங்க புருஷ். அமைதியா இருக்கீங்க? இந்தப் பொண்ணு உங்கள, ஆண்மை இல்லாதவன்னு சொல்லுது.”​

அவள் படு நக்கலாகச் சொல்ல, அதில் சர்வேஷோ...​

“ஹும்.. புள்ள கொடுக்கிறவன் தான் ஆம்பளைன்னு, எனக்கு தெரியாமப் போச்சு மண்டோதரி!​

ப்ச்.. அப்போ புள்ள கொடுக்கிறவன் ஆம்பளைனா, நான் எப்பேர்பட்ட ஆம்பளனு பாரேன், ஃபர்ஸ்ட் அட்டம்டுலயே எனக்கு ட்வின்ஸ்.”​

அக்கண்யன் மற்றும் அரவிந்தனின் முகத்திலும் கீற்று புன்னகை.​

“அப்போ.. இந்தப் பொண்ணு அப்படி சொல்லி தானே உங்ககிட்ட டிவோர்ஸ் வாங்குனா.”​

“மே பீ.. அவகிட்ட நான் ஆம்பளையா நடந்துக்கலை போல இருக்கு. ஒருவேளை அடி, உதை, மிதின்னு உன் பாஷையில் சொல்லனும்னா, 80ஸ் டிபிக்கல் ஹஸ்பென்டா நடந்திருக்கணுமோ?​

விரிந்த முகத்தோடு சயத்தா புறம் திரும்பிய சாத்விகா, அவளை நெருங்கி நின்று...​

“ஒரு பொண்ணை திருப்திப் படுத்த முடியாதவர் சொன்ன இல்லையா? ஆறு மாசம் அவரோட வாழ்ந்த தானே...”​

அதில் சயத்தா முகம் கறுக்க, சாத்வி அவளை இன்னும் நெருங்கி...​

“என் புருஷனை திருப்திப்படுத்த முடியாதுன்னு சொன்ன உன் நாக்கை அறுக்கனும் போல இருக்கு. ஆனா.. செய்ய மாட்டேன். நாங்க இன்னும் மூனு புள்ள பெத்துக்கணும். அதெல்லாம் பார்த்து நீ வயிறு எரிஞ்சி, வாய் விட்டு புலம்ப வேணாமா? அதுக்காகவாவது உனக்கு நாக்கு இருக்கணுமே. பெட்ல உனக்கு எப்படியோ? எனக்கு அவர் பர்பாமன்ஸ் எப்படின்னு போஸ்டர் அடிச்சு ஓட்டணும்னு அவசியம் இல்லை!”​

அவள் சொல்லால் அடித்த அடி கொஞ்சம் பலமாக விழவே, சயத்தாவின் ரௌத்திரம் மேலும் பெருக.. ஆக்ரோஷமாக குரல் உயர்த்தியவள்...​

“என்னடி ஓவரா பேசுற. ஓ.. உன் புருஷனை சரி செஞ்சுட்டங்கிற திமிரா? நான் நினைச்சா இப்பவே அவனை ஒத்த வார்த்தையில் சாய்க்க முடியும். அவன் ஒரு கே. அவனுக்கு ஒரு பொண்ணு மட்டும் வாழப் போதாது! பையனும் வேணும். ஏன்னா அவன் ஒரு..”​

எனும் போதே ‘பளார்’ என அரை விழ, அவள் கன்னத்தைப் பிடித்துக் கொண்டு நிமிரும் முன், மேலும் மூன்று அறைகள் ‘பளார், பளார், பளார்’ என விழவும்,​

தடுமாறிய சயத்தா கீழே விழவே, டேபிளின் கூர்முனை அவள் நெற்றியை பதம் பார்த்தது. அதில் லேசாக குருதி கசிய,​

அதுவரையும் பல்லை கடித்துக் கொண்டு அமர்ந்திருந்த வருண் பொறுமை கரையைக் கடந்தது. அவன் தங்கையின் மீது அதீத பாசம் கொண்டவன்.​

‘அவள் என்ன தவறு செய்தாலும், அடிக்க இவள் யார்’ என்று கோபமானவன்.​

“சாத்வி!” என்று அதட்டலோடு எழும்பவும்,​

அதைவிட ரௌத்திரமாக எழும்பிய சர்வேஷ்.​

தன் முழு உயரத்திற்கும் நிமிர்த்து நின்று.​

“எவனாவது என் பொண்டாட்டி பக்கத்துல நெருங்க நினைச்சா, நெருங்க நினைக்கிறவன அந்தரத்தில் தொங்க விட்ருவேன்.​

அவ பேசி முடிக்கும் வரைக்கும், யாரும், யாரும் உட்கார்ந்த இடத்தை விட்டு அசையக் கூடாது.”​

அவள் உறுமலில் வருண் முகம் கருக்க, தானாக அமர்ந்து கொண்டான்.​

கவிதாவோ சயத்தாவை தாங்கிப் பிடித்துக் கொண்டாள்...​

“சொல்லு, என் புருஷனுக்கு ஒரு பெண்ணோட வாழ முடியாதா? அவரு கேயா? சொல்லு சொல்லுடி!”​

அவள் சத்தமாக குரலை உயர்த்திக் கத்தவே, ஜனனி...​

“சாத்வி!”​

என்று நெருங்கும் முன், அவளைத் தாங்கிய சர்வேஷ், நெஞ்சாங்கூடு ஏறி இறங்க நின்றவளைப் பார்த்து.​

“மூச்! சத்தம் வரக் கூடாது. மெதுவாப் பேசுடி. எதுக்கு டென்ஷன் ஆகுற. ரிலாக்ஸ்! இல்ல.. இப்படி கத்தி ஆர்ப்பாட்டம் பண்ணுவேனா, இங்கிருந்து தூக்கிட்டுப் போயிடுவேன்.”​

 

admin

Administrator
Staff member

“இல்ல, இல்ல.. நான் பேசணும். என்னை விடுங்க.”​

அவனோ அவளை விலக்காது..​

“நீ இப்படியே நின்னுகிட்டே பேசு. நான் தாங்கிக்கிறேன்.”​

அதில் சற்று நிதானமானவள், தன்னை முறைத்துக் கொண்டு இருந்த சயத்தாவைப் பார்த்து...​

“உனக்கு ரஷ்யா மியூசியத்தில் இருக்க, மகளின் மார்பில் பால் குடித்த தந்தை, மகள் ஓவியத்தைப் பற்றி தெரியுமா சயத்தா.”​

சாத்விகாவை குழப்பமாகப் பார்க்க...​

“அது பீட்டர் பவுல் ரூபன்ஸ் வரைந்த ஓவியம். இது, ஒரு உலகப் புகழ் ஓவியம். ஆனால் புரியாதவங்க பார்வைக்கு கொஞ்சம் ஆபாசமா தெரியுமோ! ஆனால், அது ஆபாசமில்லை. ஏன்னு தெரியுமா?”​

சாத்விகா ஒவ்வொரு வார்த்தையையும் நிறுத்தி, நிதானமாகக் கேட்க.​

அங்கிருந்தவர்களின் காதுகள் கூர்மை ஆகியது.​

“சொல்லு சயத்தா? ஏன்னு தெரியுமா?”​

அவள் மறுக்கவே..​

“நிர்வாணம்!” அவள் ஒற்றை வார்த்தையில் சர்வேஷைத் தவிர மற்றவர்கள் திகைத்தனர்.​

சாத்விகா வெகு நிதானமாக..​

“ஜார்.. எனும் அரசனுக்கு எதிராக. இந்தப் போராளி நடத்திய புரட்சியின் காரணமாக. ஜார் மன்னனோட படை வீரர்களால் கைது செய்யப்படுகிறார், இந்தப் போராளி.​

கைது செய்யப்பட்டது மட்டுமின்றி, சிறையில் உணவு, தண்ணீர் கொடுக்கப் படக் கூடாதுனு உத்தரவுடன், தனிமைச் சிறையில் சில காவலர்களின் கண்காணிப்பில் அடைக்கப் பட்டிருகிறார்.​

இவர் பசியில் வாடி, தாகத்திற்காக தண்ணீர் கேட்டு கெஞ்சியிருகிறார். ஆனால், இரக்கமற்ற காவலர்கள், தண்ணீர் கொடுக்க மறுத்தாங்களாம்.​

அப்போ.. அந்த வயதான புரட்சியாளன, அவனுடைய மனைவியும் மகளும் பார்க்க வந்தாங்களாம். அந்த மகள், ஒரு இளம் தாயாம். தந்தையோட பசி கொடுமையை பொறுக்க முடியாத மகள், இப்படியே விட்டா இன்னும் கொஞ்ச நேரத்துல தந்தை இறந்து விடுவார்னு துடிச்ச மகள், தன் மார்பில் தந்தைக்கு பால் கொடுத்தாளாம்.”​

அவள் நிறுத்தி சயத்தாவைப் பார்க்க, சயத்தாவின் கண்களில் அதிர்வலைகள். ஆனால் சாத்வியைப் பார்த்த மற்றவர்களின் கண்களில், பிரமிப்பும் குழப்பமும் மாறி மாறி வர.​

“சொல்லு.. மரணத்தோடு போராடிக்கிட்டு இருந்த தந்தைக்கு, மார்பில் பால் கொடுத்த மகளின் தோற்றம் நிர்வாணமாம். அந்த நிர்வாணம் உனக்கு ஆபாசமாத் தெரியுதா? அந்த நிர்வாணம் அருவருப்பா இருக்கா? அந்த நிர்வாணம் உணர்வுகளைத் தூண்டுதா? இல்லை.. அந்த நிர்வாணம் காமத்தோட பார்க்கப்பட வேண்டியதா?​

400 வருஷத்துக்கு முன்ன இருந்த மனுஷனுக்கே, பிற்போக்கு வாதங்களைத் தாண்டி, பகுத்தறியும் பகுத்தறிவு இருந்தப்போ, நீ ஒரு டிகிரி ஹோல்டர். சமூகத்தையும், கல்வியையும் ஒழுங்கா படிச்சவ.​

நீ சமூகத்துக்கு முரணான ஒரு உறவையே தைரியமா ஆதரித்து ஏத்துக்கிட்டவ, உனக்கு ஏன் அந்தப் பகுத்தறிவு இல்லாமப் போச்சு. பதில் சொல்லு சயத்தா..!”​

சாத்விகா அதட்டவே, அவள் மௌனமாக தலை குனிந்தாள். அதில் சாத்வியின் கோபம் பெறுக.​

“உன்னப் பொறுத்தளவு நிர்வாணம் என்பது அசிங்கம் இல்லையா? ஆம்பளனா படுக்கையில் வீரத்தை காட்டுறதுன்னு நினைச்சுட்டியா? நீ ஒரு நல்ல அப்பாவுக்கு பிறந்து, இதோ, நீ என்ன செஞ்சன்னு தெரியாம உனக்காக துடிச்சுகிட்டு வாராரே, இப்படி ஒரு அண்ணனுக்கு தங்கச்சியா இருக்கிறவ, அப்படி இருக்கும் போது, எப்படி உன்னால இப்படி ஒரு பழியைப் போட முடிஞ்சது.”​

அவள் எதிர்பாராத நேரம் இன்னும் இரண்டு அரை விட, அதுவரை பொறுமை காத்த ஜனனி.​

“வேணாமா, அவ பிழையே செஞ்சி இருக்கட்டும். நாங்க பார்த்து வளர்ந்த பிள்ளை, விட்டுடுடா.”​

“இதோ.. நீங்க இப்படி பாவம் பார்த்து தான், இந்த நிலைமைக்கு உங்கள் பிள்ளையைக் கொண்டு வந்து விட்டுட்டீங்க. இவ என்ன பண்ணுனா தெரியுமா? உங்க புள்ளைக்கு வாழ்க்கையில எப்படி ஒரு பக்கத்தை காட்டுனான்னு தெரியுமா? இப்போ நான் சொன்ன நிர்வாணம் உங்க எல்லாருக்கும் அசிங்கமா இருந்துச்சா! இல்லை தானே! ஆனா நிர்வாணம்கிற வார்த்தையை அசிங்கம்கிற அளவுக்கு உங்க மகன மாத்தி வச்சவ இவ.​

அவரை ஒரு செக்ஸ் டாயா யூஸ் பண்ணிக்கிட்டவ. அவரை படுக்கையில் தன்னுடைய இன்வெஸ்டிகேஷன் மெட்டீரியலா பாவிச்சவ! இவள அப்படியே விடச் சொல்றீங்களா? சொல்லுங்க...!”​

சாத்விகா குரல் உயரத்தவும், இருமல் வரவே அவள் இரும, அதிர்ந்து போன ராகவி நீரைப் பருக வைத்து...​

“தங்கமே! நீ சொல்றதெல்லாமே அதிர்ச்சியா தான் இருக்கு. ஆனா தயவு செய்து டென்ஷன் ஆகாத. உன்னோட பிரஷர் லெவல் கூடக் கூடாது. ரெண்டு குழந்தைகளை வயித்துல வச்சிக்கிட்டு இருக்க மனைவி.”​

முதுகை வருடிக் கொடுத்தவன், நீரை பருக விட்டு, அவளை அப்படியே அணைத்துக் கொண்டு.​

“வேணான்டி! வந்துரு போயிரலாம்.”​

கணவனைப் பலமாக தன்னில் இருந்து பிரித்தவள்...​

“இஈஈ.. இல்லை சொல்லியே ஆகனும். சொல்லத்தான் வேணும்.”​

அவள் விழிகள் நீரை நிறைக்க...​

“மூச்! சாத்வி, அழுத தொலைச்சிடுவேன்.”​

“இல்ல அழலை, அழலை.”​

வடியும் விழி நீரை இரு கரங்களால் துடைத்துக் கொண்டே...​

“இவ என்ன பண்ணிருக்கா தெரியுமா? இவ இவரோட எப்படிப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்து இருக்கா தெரியுமா? வாழ்க்கைன்னா என்னன்னு இவருக்கு எப்படிப்பட்ட நரகத்தை காட்டிருக்கா தெரியுமா?”​

என்றவள், முதல் நாள் கணவன் கூறிய அத்தனையையும் ஒன்று விடாது கூற, அங்கிருந்தவர்கள் அதிர்ந்து போயினர். இப்படி ஒன்று அவர்கள் எதிர்பார்க்கவில்லை.​

எதிர்பார்க்காத கோணம். எதிர்பார்க்காத பிரச்சனை. இதுவரை யாரை அரக்கன் என்று நினைத்தார்களோ! அவன் தெய்வமாய் நிமிர்ந்து நின்றான். யாரை அப்பாவிப் பெண் என்று நினைத்தார்களோ? அவளுக்குள் இப்படி ஒரு அரக்கத்தனத்தை காணாது அதிர்ந்து போயினர்.​

அரவிந்தன் முகம் வெளிறியது. அவன் ஆறடி உயரம் குறுகிப் போனான்.​

வருண் நிமிரவே இல்லை. கைகளில் முகம் புதைத்து குன்றிப் போனான். ராகவியை ஆத்விக் தாங்கிக் கொண்டான்.​

அங்கு அக்கண்யன் பார்வையாளன் என்றால்? ஜனனியோ...​

“ஆஆ... ஐயோ!”​

தலையில் அடித்துக் கொண்டு அப்படியே முழங்கால் இட்டு தரையில் அமர்ந்து கதறத் தொடங்கினாள்.​

அவள் அழட்டும் என்று அமைதி காத்த அக்கண்யனும் அருகில் நெருங்கவில்லை.​

இது தாய் மகனுக்கான நேரம் என ஒதுங்கி நின்றான்.​

“என்னால தான். எல்லாம் போச்சே! எல்லாம் போச்சே! என் புள்ள வாழ்க்கையை நாசம் பண்ணிட்டனே! இந்த மேரேஜ் வேணாம்னு சொன்னவன, கட்டாயப்படுத்தி பண்ணி வச்சிட்டனே! நானே என் பிள்ளையை வலிக்க வச்சுட்டேனே! ஒரு பெத்த தாய்க்கு தன் புள்ள தற்கொலைக்கு முயன்றான்னு கேட்கிறது எத்தனை பெரிய வருத்தம். என் புள்ள இல்லாமப் போயிருந்தா, என்ன ஆயிருக்கும்? நான் எல்லாம் ஒரு அம்மாவா? நான் எல்லாம் ஏன் வாழனும்...?”​

தலையில் அடித்துக் கொண்டு கதற, தாயைத் தூக்கி சர்வேஷ் தன்னோடு இறுக்கி அணைத்துக் கொண்டு...​

“உஷ்! அழாதீங்க, ம்ச்.. அழாதீங்கமா. எந்த அம்மாவும் தன்னுடைய பிள்ளைக்கு கெட்டது நினைக்க மாட்டாங்க. அதுவும் எங்க அம்மா நினைப்பாங்களா? நீங்க ஒரு தேவதை அம்மா. எல்லாரும் அம்மா ஆகலாம். ஆனால் அஞ்சு பிள்ளைகளை பெற்று ஒரே ஒரு இடத்துல கூட அவங்க முகம் சுளிக்காமல் வளர்த்தவங்க நீங்க. எனக்கு இப்படி ஒருத்தி கிடைக்கணுங்குறதுக்காக இப்படி ஒன்னு நடக்கணும்னு இருந்திருக்கு.”​

என்றவன் மனைவியையும் மறுகையில் அணைத்துக் கொள்ள, அரவிந்தன் என்ற சிலைக்கு உயிர் வந்து, முதல் முறை கவிதாவை ஓங்கி அறைந்தான்.​

“அரவிந்தா!”​

“வேணாம், என்னைத் தடுக்காத அகி. இதை எப்பவோ செஞ்சிருக்கணும்.”​

அவள் கழுத்தை இறுக்கிப் பிடித்தவன்...​

“நீயெல்லாம் ஒரு அம்மாவா? உன்னை நினைச்சாலே அசிங்கமா இருக்குடி. உன்னையா காதலிச்சேன்? உன்னையா அவ்வளவு போராட்டத்துக்கு மத்தியில கை புடிச்சேன்? நான் காதலிச்சவளோ, கைபிடிச்சவளோ நீ இல்ல. நீ இந்த அரக்கியப் பெத்த அரக்கி. இனியென் மூஞ்சில முழிக்காத.”​

குற்றக் குறுகுறுப்பில், கவிதா மௌனமாக கண்ணீர் வடித்தாள். அரவிந்தன் சயத்தாவையும் மாறி மாறி அடித்தான்.​

தந்தையின் அடிகளை வாங்கியவள், ஒரு கட்டத்தில், வெறிப் பிடித்தவளைப் போல் அரவிந்தனை பிடித்துத் தள்ள, அவன் ஒரு அடி பின்னே நகரவும்.​

“நீ யாரு என்னை அடிக்க? நீ யாரு? உனக்கு என்ன உரிமை இருக்கு? நான் இப்போ உன் பொண்ணு இல்ல. நான் இன்னொருத்தர் பொண்டாட்டி. சட்டப்படி மேரேஜ் பண்ணிக்கிட்ட பொண்டாட்டி. அடிக்கிற வேலை, கை நீட்டற வேலை வச்சுக்காத. அப்படி என்ன பண்ணிட்டேன்? காதலிச்சது தப்பா! இல்ல... அவரோட வாழனும்னு நினைச்சது தப்பா? இதோ இங்க நிற்கிற உங்க மனைவி தான், நான் வேணா வேணான்னு சொல்ல, மேரேஜ் பண்ணி வச்சாங்க.”​

மகளின் ஒருமையிலும் ஆவேசத்திலும் அதிர்ந்து போனவன்...​

“அதை என்கிட்ட சொல்லி இருக்கணுமே! இல்லை, சர்வா கிட்ட சொல்லி இருக்கணும். அதை விட்டுட்டு அவன் வாழ்க்கையை நாசம் பண்ணது என்ன நியாயம்?”​

“நானா அவர் வாழ்க்கைக்குள்ள போகல. நீங்க எல்லாரும் சேர்ந்து போக வச்சீங்க. என்னைக் கேட்க, உங்க எல்லாருக்கும் என்ன தகுதி இருக்கு?”​

“சயத்தா!”​

வருண் அருகில் நெருங்கவும், அவனைத் தடுத்த அரவிந்தன்...​

“அதுக்குனு வெட்கமா இல்லையா இப்படி நடந்துக்க? உன்னோட ஈர்ப்பு தவறுனு சொல்லல. உனக்கு தோன்றிய உணர்வு தவறுனு சொல்லல. ஆனா, நீ தேர்ந்தெடுத்த வழியை தவறுன்னு சொல்கிறேன்.​

உன்னோட நல்லதுக்காக இன்னொருத்தரோட வாழ்க்கையை சிதைச்சி இருக்கியே! அதைத் தவறுனு சொல்கிறேன்.”​

அத்தனை பேரையும் வன்முமாகப் பார்த்தவள்...​

“எவரி திங் இஸ் ஃபேர் இன் லவ். யெஸ் எவ்ரி திங் இஸ் ஃபேர் இன் லவ் அண்ட் வார்.”​

அவள் கத்தவும், கணவனில் இருந்து பிரிந்த சாத்வி.​

“எது காதல்? உன்னுடையது காதலா? உன்னோடதுக்கு பேர் காதல் இல்ல! வெறும் காமம். காதல் எதையுமே பார்க்காது. சுயநலமா இருக்காது. வஞ்சகமா இருக்காது. காய்ப்பு இருக்காது. இன்னொருத்தன அழிக்க நினைக்காது.​

ஆனா.. உன்னோட காதல் சுயநலமானது. வஞ்சகமானது. மத்தவங்கள அழிச்சிட்டு வாழணும்னு நினைக்கிறது. இது காதலா? நீ ஒரு பெண்ணோட வாழ நினைச்சதைக் கூட நான் தவறு என்று சொல்ல மாட்டேன், அது உன்னோட விருப்பு, வெறுப்பு சார்ந்தது.​

ஆனால், இப்படி ஒரு மனுசன கூனிக் குறுக வச்சு, இப்படி ஒரு மனுஷனோட மனச வலிக்க, வலிக்க பிடிங்கி எறிஞ்சியே! அதை தவறுனு சொல்கிறேன்.​

அதுவும் இங்கே நிற்கிறாரே, இவரை நீ காதலிக்கல, அது உன்னோட துரதிஷ்டம். அப்படி மட்டும் நீ காதலிச்சிருந்தீன்னா, இந்த சாத்வீயோட இடம் உனக்கு கிடைச்சிருக்காது!​

நீ இதை விட பெரிய இடமா, நீயே நினைச்சுப் பார்க்காத ஒரு காதல அவர் உனக்கு கொடுத்திருப்பார். அதைச் சொல்றதுல எனக்கு ஜெலஸ் இல்ல! அவர் காதல் மேல அவ்வளவு கர்வம் இருக்கு. அதை, இதோ உன் முன்னுக்கு சொல்ற அளவுக்கு, அவர் காதலை நினைத்து நெஞ்சு நிறைய ஆணவம் இருக்கு.”​

அவள் கணவனைப் பார்க்க, சர்வேஷ் கண்களில் சாத்வியின் காதலை நினைத்து அவள் கூறிய அதே கர்வம்.​

அதைக் கண்ட பெருமிதத்தோடு.​

“அவர் மனசு முழுக்க அவமானத்தையும், துன்பத்தையும், அசிங்கத்தையும் சுமந்துகிட்டு இருக்கும்போதே, என்னை அவ்வளவு நேசிச்சவரு, உடலும், உள்ளமும் தூய்மையா காதல் என்ற முதல் பூ மலருரதுக்காக காத்திருந்த அந்த அழகான மனசோட, உனக்குனு ஒரு காதலை தந்திருந்தா அது எப்படி இருந்திருக்கும் நினைச்சு பாரு. இஸ் ஹெவன்!”​

ஆழ்ந்து அனுபவித்துச் சொன்னவள்...​

“எல்லாத்தையும் விட இந்த சாத்விகாவுக்கு அவர் தந்த காதலை விட, அது பெருசா இருந்திருக்கும். அதை இழந்த நீ துரதிஷ்டசாலி. அந்தக் காதலோட மகத்துவத்தை புரிந்து கொள்ளாத நீ முட்டாள்.​

நீ எவ்வளவு பெரிய சுயநலவாதினா, உன்னோட இணை உன்னை மனரீதியா கட்டுப்படுத்தி வச்சிருக்காருனு தெரியாம, வழி தவறி அடுத்தவங்க மனச உடைச்ச பார்த்தியா! அந்தளவுக்கு பெரிய சுயநலவாதி நீ.”​

சர்வேஷின் கெண்டைக்கால் முடி கூட கர்வத்தில் சிலிர்க்க, அவன் ஆறடிக்கு தாயை ஒரு கையில் அணைத்து கொண்டு, மனைவிய ஒரு கையில் தாங்கிக் கொண்டு நிமிர்ந்து நிற்க,​

அக்கண்யன் என்றும் போல் இன்றும் கர்வத்தில் மீசையை முறுக்கிக் கொண்டான்.​

“ஒரு பெண்ணோட பெண்மையை பகடையா வச்சு உருட்டி இருக்க, உன் காதல் பெருசுனா? என் கண்ணோரத்தில் இருக்கும் திமிருக்காக மொத்த உலகத்தையும் என் காலின் கீழே கொண்டு வந்து போட தயாரா இருக்கும் என் புருஷனோட காதல், எவ்வளவு பெருசுனு நீயே சொல்லு. எவ்ரி திங் இஸ் ஃபேர் இன் லவ். யூ நோ! இதோ நிற்கிறாரே இந்த மனுஷன்.​

சர்வேஷ் நெஞ்சில் கை வைத்துக் காட்டியவள்...​

“சொன்னாரு, நான் வாங்கின மெடல், உலகம் முழுக்க நான் சாதிச்ச சாதனை, சம்பாதிச்ச சொத்து இது எல்லாத்தையும் விட பெருசு, உன்னோட ஒத்த முடி என்னை வருடும் போது தரும் சுகம்னாரு. என்னோட சுண்டு விரல் தீண்டலுக்கும் மதிப்பு கொடுத்து எல்லாத்தையும் விட்டுட்டு, என்னோட சொல்லுக்குக் கட்டுப்பட்டு இருக்காரே! இந்த காதலுக்கு நான் எதுவும் செய்யலாம்.​

உன்னோட ஈர்ப்பு சேர்ந்த இடம் வேண்டும்னா வேறயா இருக்கலாம். ஆனா.. உன்னோட காதல் நிஜம் இல்ல, உன்னோட நேசமும் நிஜம் இல்ல, நீயும் போலி. உன்னை நான் என்னைக்கும் மன்னிக்க மாட்டேன்.​

 

admin

Administrator
Staff member

என் புருஷனோட உணர்வுகளோட விளையாடிய உன்னை, சாகு வரைக்கும் மன்னிக்க மாட்டேன். நீ நினைக்கலாம், உலகம் முழுக்க அவருக்கு நீ தண்டோரா போட்டு வாங்கி வச்ச இந்த பேரு அவரையும், என்னையும் சிதைச்சிடும்னு. எங்க ஒத்த முடியக் கூட அது அசைக்காது.​

இந்த உலகம் சொல்லத் தேவையில்லை. அவர் என்னோட வாழ்கிற வாழ்க்கை போதும், எங்க காதலைச் சொல்ல. இதுக்கு மேலயும் இதோ நிற்கிறாரே, இவருக்காக நான் உன்கிட்ட பேசினாலோ, இல்ல எங்க காதல உன் கிட்ட சொன்னாலும், அந்த காதலுக்கே மதிப்பில்லை.” என்றதும்,​

அதுவரை அமைதியாகக் கேட்டவள் ரௌத்திரம் கொஞ்சம் கொஞ்சமாக எல்லையை கடக்க, சாத்வியைத் தாக்க..​

“ஏய்ய்...!” என்று அருகே நெருங்கவும் அரவிந்தன் மீண்டும் ஒரு அறை விட்டான். அந்த அறையில் அவளை இருகரம் தாங்கியது. இத்தனை பிரச்சனைக்கு மத்தியில், சயத்தா இங்கே வருவதற்கு முன் கொடுத்த தகவலின் பெயரில், உள்ளே வந்து அவளைத் தாங்கிக் கொண்டாள், வர்ஷா.​

அவள் தோற்றத்தை முன்பு அவர்கள் கண்ட சர்வாவின் தோற்றத்துக்கு இணையாகக் கண்டதும், வீட்டில் இருந்தவர்களின் முகம் அருவருப்பை பிரதிபலித்தது.​

அதை எல்லாம் சட்டை செய்யாது, சாத்வியைப் பார்த்தவள்...​

“உங்கள நான் பாராட்டுகிறேன். அது எதுக்குனா? எவன் என்ன வேணும்னாலும் சொல்லிட்டு போகட்டும். என் புருஷன பத்தி எனக்கு தெரியும்னு சொன்னீங்க பார்த்தீங்களா, அந்தக் காதலுக்கு. ஆனா.. என்னோட சாயா மேல கை வைக்க யாருக்கும் உரிமை இல்லை. சீ இஸ் மை கேர்ள்.”​

“பாவா!” அவள் கதறவே, அவளை கையணைப்பில் வைத்தவள்...​

“தப்பு தான், என் தப்பு தான்! உன்னை கம்பெல் பண்ணி குழந்தைக்காக இங்க அனுப்பி வச்சது என் தப்பு தான். இப்ப சொல்றேன், பேபி. இனி நமக்கு இவங்க யாருமே தேவையில்லை.​

எனக்கு என் ஃபேமிலியும், உனக்கு உன் ஃபேமிலியும் தேவையில்லை. நாம இங்கேயும் இருக்க வேணாம். இந்தியாவிலும் இருக்க வேணாம். இந்த நாட்டை விட்டே போயிருவோம்.”​

அங்கிருந்தவர்கள் யாரும் தடுக்கவும் இல்லை. அவளோடு வாதம் செய்யவும் இல்லை. ஏனெனில் அங்கு பேச வேண்டிய அத்தனையையும் சாத்வி பேசி விட்டாள்.​

தன் சகோதரனுக்காக ஆத்விக்கால் கண்ணீர் வடிக்கவே முடிந்தது.​

ராகவியோ துவண்டு போனாள். அத்தனை பேரும் ஒவ்வொரு எண்ணத்தில் நொடிந்து போக. வர்ஷா சயத்தாவோடு வெளியே செல்ல, எத்தனிக்கவும்.​

அவர்களைத் தடுத்த அரவிந்தன்...​

“சயத்தா, போகும்போது உங்க அம்மாவையும் உன்னோட கூட்டிட்டு போ.”​

“அர்வி!” அவள் திகைத்துப் போய்...​

“நான் எப்படி என்னை, என்னை நீங்க.” திணற.​

“நீதான் அவளோட போகணும். அவளோட இந்த நிலைமைக்கு நீ தான் காரணம். சர்வாவோட இந்த நிலைமைக்கும், நீ தான் காரணம். அன்னைக்கு சொன்னியே, தாலியை கழட்டிட்டு என் பொண்ணோட போயிருவேனு. ஆனா, நான் தாலியை கேட்க மாட்டேன். உன் பொண்ணோட போக தான் சொல்றேன். எப்ப என் மனசு உன்ன மன்னிக்கணும்னு தோணுதோ, எப்ப என் மனசு உன் தவறுகளை சகிக்கணும்னு தோணுதோ, அப்போ உன்ன அழைச்சிக்கிறேன்.”​

“அரவிந்தா, இது பெரிய முடிவு.”​

“அகி, அவ தப்பு செஞ்சுட்டா தான். அதுக்கு இந்த முடிவு சரி இல்ல.. இல்லனு நீ நினைக்கலாம். பட் சில காயங்களுக்கு மருந்துண்டு. சில காயங்களுக்கு மருந்து இல்லை. சில காயங்களுக்கு வலிக்க, வலிக்க தான் மருந்து போடணும். தவறு செய்யும் போது, அவ மகளுக்கு வலிக்கல. மகளுக்கு துணையாக இருக்கும் போது அவளுக்கு வலிக்கல, ஆனா.. இப்ப மட்டும் கஷ்டமா இருக்கா. அனுபவிக்கட்டும் அகி. அப்போதுதான் மத்தவங்களோட துன்பம் என்னன்னு அவளுக்கும் தெரியும்.”​

என்றவன் மனைவியை கண்டால் உடைந்து விடுவோமோ என்று அஞ்சி, திரும்பி நின்று கொண்டான். தான் செய்த தவறுக்கு, இதுதான் தண்டனை என்று எண்ணியவள், சயத்தாவோடு அவ்விடம் விட்டு அகல நினைக்க,​

அவர்களை தடுத்து நிறுத்தியது..​

“சயத்தா!” சர்வேஷின் அழைப்பில், அத்தனை பேரும் அதிர்ந்து பார்க்க,​

சயத்தாவை நோக்கிச் சென்றவன்...​

“விஷ் யூ ஆல் தி பெஸ்ட்.”​

அவள் திகைத்து அதிரவும்...​

“நீ எனக்கு செஞ்சது பாஸிங் க்ளவுட்ஸ். இதுல என்னோட ஈகோ என்னோட மனசு எல்லாமே அடிபட்டுச்சு தான். ஆனால், என் பொண்டாட்டியோட லவ்வுக்கு முன்னால, அதெல்லாம் பெருசா தோணல.​

அதேசமயம் நீ கொடுத்த அசிங்கங்களை மறக்க முடியாமல், நானும் தவறு செய்தேன். என்னோட பிழைகளோட தான் என்னை பிடிச்சிருக்குன்னு என் பொண்டாட்டி சொன்னா. அப்படிப்பட்ட அவளோட காதல் பெருசுனா, உன்னோட காதலுக்காக நீ எனக்கு செஞ்சத நான் மன்னித்து விடுறேன்.​

இனி துரோகம் செய்யாத. எஸ் எவ்ரிதிங் இஸ் ஃபேர் இன் லவ் தான்! பட் அந்த லவ் ட்ரு லவ்வா இருக்கணும். இனி, நீ வாழு உனக்காக வாழு. உன் காதலுக்காக வாழு. உங்க ரெண்டு பேரையும் உங்க காதலையும் ஏற்றுக் கொள்கிற இடத்தில, உங்களுக்கான ஒரு வாழ்க்கை வாழுங்க.”​

சயத்தா வெட்கித் தலை குனிய, சாத்வியின் கண்களில் கணவனின் குணத்தைப் பார் என்ற கர்வம் துளிர்த்து நின்றது என்றால்,​

அத்தனை பேரும் அரக்கனென்று எண்ணியவனின் இனிய குணத்தில் திகைத்தனர்.​

அக்கண்யனுக்கோ, நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு இவன் என் மகன் என்று உரக்கக் கத்தத் தோன்றியது. வந்தவளோ.. சயத்தாவோடும் கவிதாவோடும் அங்கிருந்து செல்ல..​

அவர்களை நெருங்கிய ஜனனி, அவன் முகத்தை மெதுவாக வருடிக்கொண்டு...​

“எனக்கு மிகப்பெரிய கர்வம் உண்டு சர்வா! உங்க அப்பாவ என்னளவுக்கு யாரும் காதலிக்க முடியாதுனு, உங்க அப்பாவோட காதல விட, பெரிய காதல் உலகத்திலேயே இல்லைனு, எங்கள மாதிரி ஒரு காதலர்கள் இருக்கவே மாட்டாங்கன்னு மிகப்பெரிய கர்வம் உண்டு.​

ஆனா.. அந்தக் கர்வம் இன்னைக்கு என் புள்ள கிட்ட, என் மருமகள் முன்ன உடைஞ்சிடுமோனு பயமா இருக்கு.​

உங்க அப்பா சொல்லுவாரு. அப்போ, அப்போ நீ அக்கண்யனோட ஜனனினு. அப்போ எல்லாம் திமிரா நெஞ்ச நிமிர்த்திக்க தோணும். ஆனா இப்ப தோணுது, இந்த சர்வேஷோட அம்மானு ரொம்ப, ரொம்ப திமிராச் சொல்லணும்னு தோணுது.”​

சாத்வியின் முகத்தை வருடியவள், “என்னோட... ரெண்டு பிள்ளைகளையும் வேற வீட்டுக்கு கொடுத்தேன். ஆனால், கடவுள் அந்தக் குறையை ஆயிரம் மடங்கா நிவர்த்தி செய்ய, மூனு தேவதைகளை கொடுத்திருக்கிறார். அதோ அங்க நிற்கிறாளே.”​

ஆத்விக்கின் கையணைப்பில் அழுது கொண்டிருந்த ராகவியைக் காட்டி..​

“அவளோட குடும்பமே தவிச்சுகிட்டு இருந்துச்சு. அப்பக் கூட நியாயம் இந்தப் பக்கம்னு நினைத்து எங்க கையை இறுக்கிப் பிடிச்சுகிட்டு நின்னா.. இதோ என் பிள்ளைக்கான நியாயத்தை மூன்று வருஷம் கழிச்சு நீ செஞ்சிட்ட. ஒரு அம்மாவா இன்னைக்கு தான், எனக்கு நிஜமா பெருமையா கர்வமா இருக்குடா.”​

அவள் நெற்றியில் முத்தமிட்டு...​

“என் பிள்ளைங்க எல்லாம் நல்லா இருப்பீங்க.”​

அரவிந்தனும் அவர்களை நெருங்கி...​

“அப்பவும் சரி இப்பவும் சரி, இந்த சர்வேஷை நான் சந்தேகப்படவில்லை. ஏன்னா... நீ என் அக்கண்யனோட புள்ளடா. அவன் இரத்தம் தப்பு செய்யாதுன்னு எனக்கு நல்லாத் தெரியும். நீ இனியாவது இந்த மாமாவோட பேசுவியா...”​

உருகிப் போய் கேட்ட அரவிந்தனின் கையை இறுக்கிப் பிடித்துக் கொண்டான், சர்வேஷ்.​

அக்கண்யனோ...​

“அரவிந்தா, கவிதா விஷயத்துல யோசிக்கக் கூடாதா?”​

“இல்லடா! என்னோட இத்தனை வருஷக் காதல, இத்தனை வருஷ திருமண வாழ்க்கை தந்த அழகான உறவை உடைச்சுட்டா. அவ தப்பு பண்ணும் போது, என்னை ஒரே ஒரு நிமிஷம் யோசிச்சி இருக்கணும். யோசிக்கல. அப்போ.. என் மேல அவ வச்சிருக்க நேசத்திற்கு என்ன மதிப்பு. அவளை பிரிந்து இருக்கிறது, எனக்கும் வலி தான். ஆனால் என் மகளோட கொஞ்ச நாள் இருக்கட்டும். அந்த மகள் வாழ்கிற வாழ்க்கையைப் பார்க்கட்டும்.​

அப்போதான் இப்படி ஒருத்தனுக்கு துரோகம் செஞ்சத நினைச்சு, நினைச்சு அவ வருந்துவா. என்னாலையும் அவ இல்லாம ரொம்ப நாள் இருக்க முடியாது. கண்டிப்பா என்கிட்ட கூப்பிடுவேன். அதுவரைக்கும் வருண் பார்த்துக்குவான்.”​

“நான் பார்த்துகிறேன், மாமா. நீங்க ஒன்னும் கவலைப்படாதீங்க. எதுவும்னா உங்களத்தானே தேடி வர போகிறோம்.”​

அவனும் சாத்வியின் தலையை மெதுவாக வருடிக் கொடுத்துவிட்டு அரவிந்தனோடு அகல,​

அக்கண்யன் மகனின் தோளில் தட்டி விட்டு, அவனும் ஜனனியை தன்னோடு கூட்டிச் சென்றான்.​

சர்வேஷூம் சாத்வியை மெதுவாக அழைத்துக் கொண்டு அறைக்கு வந்தவன், எதுவும் பேசாது அமைதியாக அமர...​

“என்ன புருஷ்!”​

“வலிக்கனும்டி.”​

அவன் கண்களில் தோன்றிய பரிதவிப்பை... அவள் நேசத்தோடு பார்க்க...​

“ஹூம்.. வலிக்க, வலிக்க வேணும்.”​

அவள் இரு கரங்களை விரிக்க, அந்த கரங்களுக்குள் புகுந்தவன், அவளது வயிற்றில் தன் முகத்தை புதைத்துக் கொண்டு மௌனம் காத்தான். சில துளிகளை மௌனத்தில் கரைத்தவன்.​

“நீ என் உயிருனு சொல்ல மாட்டேன். ஆஃப்டர் ஆல் ஒரு ஹார்ட் அட்டாக் வந்தா போகக்கூடிய இந்த உயிர் தானா என்னோட காதல். ப்ச்.. இந்த உயிர் கூட என் காதலை, உன்னோட காதலை அளக்க முடியாது.​

“சரி..”​

“ உனக்கு ப்ரபோஸ் பண்ணத் தோணல.”​

“பண்ணாதீங்க. யாருக்கு வேணும் அந்த ப்ரபோசல்.”​

இதழ் பெரிதாக விரிய, சிரித்துக் கொண்டே..​

“அப்படியே இந்த நெஞ்சக் கிழிச்சு உன்ன வச்சுக்கிட்டா என்னனு தோணுது.”​

“ம்ச்.. வாய்ப்பில்லை புருஷ். இப்போ, நான் கொஞ்சம் பெரிய உருவம்.”​

“இப்படி குதர்க்காமல் பேசுற வாயக் கடிச்சு வைக்கணும்னு தோணுது.”​

“அதுக்கு நிறைய வாய்ப்பு இருக்கு, புருஷ்!”​

அவனும் அவளோடு சேர்ந்து சிரிக்க, கணவனை ஆழமாகப் பார்த்த சாத்வி.​

“வலிக்க வைக்கணுமா.”​

“ஹம்..”​

“வைச்சுங்கோங்க.”​

முகம் நிறைந்த பரவசத்தோடு, அவளை கைகளில் ஏந்தியவன் மஞ்சத்தில் கிடைத்தி, பெண் மலரில் மது உண்ணத் தொடங்கினான்.​

கண்ணீர் காதலின் முதல் அங்கீகாரம், என்றோ ஒருநாள் கவிஞன் சொன்னதை நிஜமாக்கிக் காட்டினான். அவன் கண்ணீர் துளிகள் கர்ப்பிணியின் வெற்று மேனி எல்லாம் தீர்த்தமாகத் தெளிக்க முத்தமிட்டான். பெண்ணில் முக்குளித்தான், அவளை துளி வருத்தவில்லை, துளி அழுத்தவில்லை. அவள் பெண்மேனி சுமை தாங்கி விடாதவாரு, அவளையும் மஞ்சத்தில் தாங்கினான்.​

“காதலை எப்படி காட்டணும்னு தெரியாது. காதலை எப்படி சொல்லணும்னு தெரியாது. காதலை எப்படி கையாளனும் தெரியாது. ஆனா காதலிக்கத் தெரியும். வலிக்க, வலிக்க காதலிக்க தெரியும். எதையும் புரிய வைக்க தோணல. எதையும் புரிஞ்சுக்க தோணல. இனி தவறே செய்ய மாட்டேன்னு சத்தியம் பண்ணவும் தோணல. நான் இப்படித்தான், இப்படியே தான்!​

கர்வம் பிடிச்சவனா, திமிர் பிடித்தவனா, ஆணவம் பிடித்தவனா, ஆறடி உருவத்துல டேட்டுவும், பிடரி முடியும், தாடி மீசையும், முரட்டு, மூர்க்கனா தான் இருப்பேன். என்னை மாத்திக்கணும்னு தோணல. மாத்திக்கவும் நினைக்கல. நீ சொன்ன மாதிரி, நம்ம பசங்க கேட்டா மாத்திக்கிறேன். அதுவும் கொஞ்சமா. இப்ப சொல்லு, இந்த ராட்சச ராவணனே தான் வேணுமா?”​

அவன் முதுகில் தன் விரல்கள் கொண்டு காயம் வடித்தவள்...​

“முரடா! முசுடா! அப்பப்போ எனக்கே தெரியாம ரெண்டு விரலுக்குள்ள மூன்றாம் வரல வைச்சு ஊதி தள்றவரா, டெரஸ்ல வச்சு திருட்டுத்தனமா குடிக்கிறவரா, அதை மறைப்பதற்கு என்கிட்ட முழிக்கிறவரா, இருந்தா ஏத்துக்கிறேன்..!”​

அவள் நக்கலோடு முடிக்க...​

“மாத்திக்கணும்னு நினைக்கிறியா?”​

“மாற்றங்களை நேசிக்கிறது ஒருவகை காதல்னா, மாறாத சுயத்தை சுயம் இழந்து காதலிக்கிறது, இன்னொரு வகை காதல். ம்ச்.. நான் சுயம் இழந்துக்கிறேன், ராவணா!”​

“என் மண்டோதரி!”​

அவளில் கலந்து கார்கூந்தல் கலைத்து, கருங் கூந்தலில் புதைந்து, காதலின் இமயம் தொட்டு முக்தி பெற்றான். அவளிடம் வலியைக் கேட்டவன், வலியைத் தருவேன் என்றவன், நேசித்து வலிக்க வைக்கின்றேன் என்று சொல்லாமல் சொல்லி விட்டான்.​

கலைத்து கலைந்தவன், அவளை நெஞ்சில் சாய்த்துக் கொண்டவன் இதழ்கள்..​

“காதலடி நீயெனக்கு,​

காந்தமடி நானுனக்கு!​

வேதமடி நீயெனக்கு,​

விந்தையடி நானுனக்கு!”​

மெதுவாக அசைந்து இசைக்க..​

“வீசு கமழ் நீயெனக்கு​

விரியுமலர் நானுனக்கு!​

பேசுபொருள் நீயெனக்கு,​

பேணுமொழி நானுனக்கு!”​

பதிலுக்கு சாத்விகாவின் இதழ்கள் நெளிந்து, வளைந்து சர்வேஷின் இதழ்களோடு இணைந்து கொண்டது.​

சாத்விகா சர்வேஷின் வாழ்வில் புது வேதமானாள்!​

சர்வேஷ் என்பவன் சாத்விகாவின் விந்தையாகினான்!​

வேதமாகி விந்தையாகி காதலாகியது!​

 

santhinagaraj

Well-known member
செம்ம அதிரடி எபி சூப்பர் 👌👌👌

என்ன சொல்றது வார்த்தை இல்லை அப்படி ஒரு காதல், புரிதல் உணர்வுகள் ஒவ்வொரு உணர்ச்சியின் வெளிப்பாடும் சூப்பர் 👌👌
 

shasri

Member
மனைவியா புருஷ்காக இதைவிட எப்படி நியாயம் கேட்க 👏👏👏👏 நல்ல முடிவு
 

admin

Administrator
Staff member
செம்ம அதிரடி எபி சூப்பர் 👌👌👌

என்ன சொல்றது வார்த்தை இல்லை அப்படி ஒரு காதல், புரிதல் உணர்வுகள் ஒவ்வொரு உணர்ச்சியின் வெளிப்பாடும் சூப்பர் 👌👌
ரொம்ப நன்றிக்கா.. அன்புகள்❤️❤️
 
Top