எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

உணர்வுக்கு உயிர் கொடு!

அத்தியாயம் 1



வெய்யோன் அவனின் வேலையை சரியாக செய்து கொண்டிருந்தான்.



அவளும் எழுந்து அமர்ந்தாள். ஆயிற்று, அகல்யா இங்கு வந்து இரண்டு வாரங்கள் ஆயிற்று!



எழுந்து அமர்ந்தவள், நேரத்தை பார்க்க, அதுவோ ஒன்பது மணி காட்டியது.



"ஐயோ இன்னைக்கும் லேட்டா", என்று புலம்பிக்கொண்டே, எழுந்து குளித்து விட்டு, அவளின் சுடிதாரை எடுத்து அணிந்து கொண்டாள். அவளுக்கு புடவை அணிய தெரியாது. ஆனால் இங்கு அவளுக்கு பிடித்த ஜீன்ஸ் போடவும் முடியாது என்று அவளுக்கு தெரிந்து தான் சுடிதாருக்கு மாறி விட்டாள்.



குளித்து விட்டு வெளியே வந்தவளின் முன் அங்கே அமர்ந்து இருந்த காத்யாயனி தான் தென்பட்டார்.



"அத்தை என்ன எழுப்பிருக்கலாமே", என்று சொல்லிக்கொண்டே அவள் வர, "இதுல என்ன இருக்கு கண்ணு.. நீயே ராத்திரி எல்லாம் படிச்சுக்கிட்டு இருக்க... காலைலயாவது தூங்குவேன்னு தான் விட்டுட்டேன்", என்றதும் அவளுக்கு உண்மையாகவே அவ்வளவு மகிழ்ச்சி.



கொற்றவை, வித்யா, வைஷ்ணவியை விட மிக மிக நல்ல மாமியார் தான் காத்யாயனி.



இது அவரது மகள் யாழ் அங்கு வாழ்வதால் மட்டும் அல்ல என்று அவள் வந்த நாளே புரிந்து கொண்டாள்.



இரண்டு நாட்களுக்கு முன் வந்த பெண் ஒருவர், "ஏனுங்க அண்ணி, உங்க மருமக புடவை எல்லாம் கட்டாதோ?", என்று நக்கலாக கேட்க, "என் மருமக என்ன வேணா போடுவா, நீ எவ டி அது கேட்குறது? நானே என் மருமகளை ஏதும் சொல்லல வந்துட்டாளுக, புடவைய கட்டு, கோமணத்தை கட்டுனு", என்று அந்த பெண்மணிக்கு பதில் அடி கொடுக்க, அந்த பெண்மணியோ ஓடியே விட்டார்.



ஆனால் அகல்யா தான், "நான் வேணா புடவை கட்டுறேன் அத்தை", என்கவும், "அட நீ ஏன் கண்ணு இதெல்லாம் பெருசா எடுடுக்குற? பேசுறவளுங்க பேசிக்கிட்டே தான் இருப்பாங்க... யாழை கூட இப்படி தான் பேசுவாங்க.. இதெல்லாம் கண்டுக்காத.. ஏவலாச்சு ஏதாச்சு சொன்னா சொல்லு, நானே அவளுங்க கழுத்தை சீவி புடுறேன்", என்று சொன்ன கிராமத்தின் மாடர்ன் மாமியார் தான்.



அவளை இங்கு வந்த முதல் நாள் முதல், சாப்பிட்ட தட்டை கூட எடுக்கவில்லை அந்த அளவுக்கு, அவளை தாங்கு தாங்கு என்று தாங்கி கொண்டு இருந்தார்.



"நீங்க ரொம்ப நல்லவங்க அத்தை", என்று அவள் சொல்ல, "அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல கண்ணு... அவளோ நல்லவளா இருந்தா என் பொண்ண என் குடிகார தம்பிக்கு கட்டி தர ஒத்துக்கிட்டு இருப்பேனா?" என்று அவர் கண்களை துடைத்து கொள்ள, "ஐயோ அத்தை அதையெல்லாம் விடுங்க.. எனக்கு பசிக்குது", என்று அவள் சொல்லவும் தான் அவள் சாப்பிடவே இல்லை என்பது அவருக்கு உரைத்தது.



"ஐயோ நான் ஒரு கிறுக்கச்சி உனக்கு சாப்பிட தரமா உட்காந்துகிட்டு இருக்கேன்", என்றவர், அவருக்கு கிச்சடியும், சாம்பார், சட்னி, வடை மற்றும் ஒரு சிறு சொம்பில் கூழும் எடுத்து வந்து கொடுத்தார்.



"எப்படி தான் எல்லாத்தையும் நீங்க தனியா செய்யுறீங்களோ அத்தை", என்று கேட்டுக்கொண்டே அவர் கொடுத்த உணவை சுவைக்க துவங்கினாள்.



உண்மையை ஒப்புக்கொள்ள தான் வேண்டும், கொற்றவையை விடவே நன்றாக சமைத்தார் காத்யாயனி.



"ரொம்ப நல்லா சமைக்கிறீங்க அத்தை", என்று இப்போதும் அவள் சொல்ல, "நீயும் வந்த நாள்ல இருந்து இத சாப்பிடும் போதெல்லாம் சொல்லிகிட்டே இருக்கியே மா", என்றவர் சொல்லவும், "உண்மைய தானே சொல்றேன்", என்றவளை பார்த்து, "ராணி மாதிரி உன்ன கட்டிக்கொடுக்கணும்னு உன் அம்மா அப்பா ஆசைப்பட்டு இருப்பாங்க... நீ இந்த கிராமத்துல வந்து கஷ்ட படுற", என்றவரை பார்த்து, "என் வீட்ல இருக்கவங்க பார்த்து இருந்தா பணக்காரனா கிடைச்சிருப்பான் ஆனா இப்படி பாசமான மாமியார் கிடைச்சி இருக்க மாட்டங்களே", என்றவள் சொல்லவும், "ஐஸ் வெக்குற", என்றதும், "ச்ச உண்மையா சொல்றேன். உங்களுக்கு ஐஸ் வச்சி எனக்கு என்ன ஆக போகுது, வேணும்னா ஐஸ் வாங்கி தரேன்", ,என்று கண்களை சிமிட்டி கொண்டாள்.



அப்போது தான் வீட்டில் யாரும் இல்லை என்பதை பார்த்தவள், "வெற்றி, மாமா, மாறன்லாம் எங்க அத்தை?", என்று கேட்டவளிடம், "வெற்றியும் மாமாவும் இன்னைக்கு சனிக்கிழமைனு வயல்ல வேலை செய்றவங்களுக்குலாம் கூலி கொடுக்க போயிருக்காங்க... இந்த மாறன் பின்னாடி தலைக்கு குளிக்க என்னை தேய்ச்சிகிட்டு இருக்கான்", என்று சொல்லிக்கொண்டு இருக்கும் போதே, "அத்தை", என்று உள்ளே நுழைந்தாள் அழகு மயில்.



"என்ன மயிலு இன்னைக்கு காலைலயே விஜயம்?", என்று கேட்கவும், "வீட்ல நிறைய மல்லி பூத்திருச்சு அத்தை, அம்மா உளுந்தங்களி வேற செஞ்சி இருந்தாங்க அதான் அக்காக்கு கொடுத்து விட்டாங்க", என்று அழகு சொல்லவும், "கிளிம்மாக்கு தேங்க்ஸ் சொன்னேன்னு சொல்லு", என்று அகல்யா சொல்லவும், "ம்கூம் ஏன் நான் வாங்கி கட்டிக்கவா? எத்தனை தடவை சொல்லிருக்காங்க தேங்க்ஸ்லாம் சொல்ல கூடாதுனு... நீங்களும் அவங்களுக்கு பொண்ணு தான் அக்கா", என்று சொன்னவள், "எங்க வீட்ல யாரையும் காணோம்?", என்றதும், "நீ யாரை பார்க்க வந்தியோ அவன் பின்னாடி இருக்கான்", என்று சொல்லி அவள் கொண்டு வந்ததை எடுத்து சென்று விட்டார் காத்தியாயனி.



அவளும் மாறனை பார்க்க பின்னே சென்றாள்.



அதே சமயம் மாறனோ, "டேய் வேலா", என்று அவன் அழைக்கவும், அவர்களின் வீட்டு வேலைக்காரன் வேலன் வந்து நின்றான்.



"இன்னைக்கு எண்ணெய் தேச்சி தலைக்கு குளிக்கணும்... உடம்பு சூடாகிருச்சு போல வந்து எண்ணை தேச்சி விடு", என்று சொன்னதும் அவனும் எண்ணை எடுத்து வர, அவனிடம் இருந்து எண்ணையை பாரித்தது அழகு மயில் தான்.



அவனின் கண்கள் விரிய, அவனை அங்கிருந்து கண்களாலேயே அங்கிருந்து நகர சொன்னாள்.



பின்பு அவனின் பின்னாடி போய் நின்றவளிடம், "டேய் வேலா இன்னும் என்ன நல்லா தேய்ச்சி விடு", என்று சொல்லவும், அவளின் மென்மையான கரங்கள் அவனின் வன்மையான உடலை பற்றியது.



அவனுக்கோ உடலுக்குள் மின்சாரம் பாய்ந்த உணர்வு.



"என்ன டா உன் கை இவளோ மிருதுவா இருக்கு?", என்று அவன் சொல்லவும், அவளால் என்ன சொல்ல முடியும்?



அவனின் முதுகு எங்கும் படிந்த அவளின் கரங்கள், எத்தனை நாட்கள் ஏங்கிருக்கிறாள் அவனை தொடுவதற்கு!! அவன் தான் அவளை கிட்டயே நெருங்க விடுவதில்லையே!



ஆறடிக்கும் மேல் வளர்ந்த திடகாத்திரமான ஆண்மகன் அவன். இந்த வீட்டின் விஷ்வாமித்ரன் என்று கூட சொல்லலாம்.



வெற்றியிடம் புன்னகைத்து பேசுபவர்கள், மாறனை கண்டால் மிரண்டு ஓடிவிடுவார்கள்.



அவனுக்கு நெருங்கி இருப்பது வெற்றி, அவிரன், அர்ஜுன், யாழ் மட்டும் தான். அவனின் சித்தப்பா பெண் மதுவிடம் கூட என்னனென்றால் என்ன என்கிற அளவிற்கு தான் பேசுவான்.



இப்போது தான் அகல்யாவிடம் கொஞ்சம் பேச ஆரம்பித்து இருக்கிறான்.



நல்லவன் தான், ஆனாலும் முரடன் அவன். இன்று வரை பெண்கள் அவன் ஒரு பார்வைக்காக ஏங்க, அவனோ தவத்தில் வாழ்கிறான்.



அவனின் தவவாழ்வை முறியடிக்க தான் முயற்சித்து கொண்டிருக்கிறாள் அழகு மயில்.



"டேய் அப்படியே கொஞ்சம் கையையும் பிடிச்சி விடு", என்று சொல்லவும், அவளின் இரு கைகளினால் கூட அவனின் கரங்களை பற்ற முடியவில்லை.



மல்யுத்த வீரனவன், இவளோ மலரிலும் மெலியவள்! வானிற்கும் பூமிக்கும் இருக்கும் தூரம் தான்.



"சரி அப்படியே வந்து முன்னாடி தேச்சி விடு", என்று சொன்னதும் தான் அவளுக்கு தூக்கி வாரி போட்டது.



அவளின் கைகள் அந்தரங்கத்தில் நின்று விட்டது.



"டேய் முன்னாடி வா", என்று அவளின் கரங்களை பற்றி இழுக்க, அவளோ அவனின் மடியின் மீதே சரிந்து விழுந்தாள்.



விழுந்ததில் அவளின் மாராப்பு விலகி அவனுக்கு விருந்தாகி கொண்டு இருந்தது.



அவனோ கோவத்தில் சிவந்து அவளை கீழே தள்ளி விட்டு விட்டான்.



"அம்மா", என்று அவன் கத்திய கத்தலில், சாப்பிட்டு கொண்டிருந்த அகல்யாவும், காத்யாயணியும் பின்னே ஓடி வர, அவனோ சாபம் கொடுக்க தயாராக இருக்கும் முனிவன் போல காத்து கொண்டு இருந்தான்.



அழகு மயிலோ அப்போது தான் எழுந்து நிற்க, "இவ எதுக்கு இங்க வரா?", என்று பற்களை கடித்து கொண்டு கேட்க, "ஏன் வரக்கூடாது? இது என் தாய்மாமன் வீடு, நான் எப்போ வேணா வருவேனாக்கும்", என்று எகத்தாளமாக அவள் பேச, "வந்தா உன் மாமா, அத்தைய பார்த்திக்கிட்டு போ.. எதுக்கு என் கிட்ட வர?", என்று அவன் எகிறிக்கொண்டு வரவும், "டேய் மாறா விடு டா சின்ன பொண்ணு அவ", என்று காத்யாயனி மருமகளுக்காக பரிந்து பேச, அவ்வளவு தான், "அவ அடுத்த தடவ வந்தா, அவ இடுப்பு எழும்ப உடைச்சி போற்றுவேன் பாத்துக்கோங்க", என்று அவளை முறைத்து கொண்டே கூறினான்.



"நீ எப்போ இடுப்பு எலும்பை உடைப்பெனு தான் காத்துகிட்டு இருக்கேன் டா மாறா... ஆனா நீ அதுக்கு லாயக்கு இல்ல", என்றவள் சொல்லவும், அருகில் இருந்த கர்லாங் கட்டையை எடுத்து விட்டான்.



பயத்தில் அவள் ஓடி விட, "இவளை உள்ள விடாதீங்க", என்று சொன்னவன் குளிக்க சென்று விட்டான்.



"ஏன் டி அவன் கிட்ட எப்போ பாரு வம்பு இழுத்துகிட்டு இருக்க?", என்றவரை பார்த்து, "நீங்க எதுக்கோ உங்க மகனுக்கு செக் பண்ணிக்கோங்க அத்தை, பொண்ணுங்க மேல வேற விருப்பமே இல்லனு சொல்லறாரு... உங்களுக்கு மருமகள் வருவாளோ இல்ல மருமகன் வருவானோ யாருக்கு தெரியும்?", என்று அழகு மயில் சொல்லவும், அவளின் முதுகில் ஒரு அடி போட்டவர், "என் மகனுக்கு நீ வாக்கப்பட்டு வரும் போது உன்ன மாமியார் கொடுமை பண்றேன் பாரு", என்றதும், "அதெல்லாம் உங்களுக்கு செட் ஆகாது அத்தை! ஆகுற கதையா சொல்லுங்க", என்று விட்டு, அகல்யாவை பார்த்து, "அக்கா நீங்க பிரீனா சொல்லுங்க நம்ப வயலுக்கு போய்ட்டு வருவோம்", என்றவளை பார்த்து புன்னகையுடன் தலையசைத்தாள் அகல்யா.



சாப்பிட்டு முடித்து விட்டு, அவளும் அழகு மயிலும் போக, "வெற்றி சம்சாரம் தானே", என்று அனைவரும் பேசிக்கொண்டனர்.



அவள் இங்கு வந்தது முதல் இது தான் முதல் முறை வயலுக்கு வருகிறாள்.



அங்கோ சிதம்பரம் அமர்ந்து மற்றவர்களுக்கு கூலி கொடுத்து கொண்டிருக்க, "மாமா எங்கன்னு தெரியலையே", என்று சொன்ன அழகு மயில், "அதோ", என்று சொல்லவும், அவளின் கண்களும் திரும்ப, வெற்றியை பார்த்தவளாது கண்கள் விரிந்தன.
 
Last edited:

அத்தியாயம் 2



அங்கு ஒரு ஆட்டிற்கு பிரசவம் பார்த்து கொண்டு இருந்தான் வெற்றி வேந்தன். இதெல்லாம் அவனுக்கு சாதாரணம். சிறுவயதில் இருந்தே கிராமத்தில் வளர்ந்தவன் தானே, பார்த்து மட்டும் அல்ல, அப்போதில் இருந்தே சிதம்பரத்துடன் வயலுக்கு வந்து விடுவான்.



அவனுக்கு விவசாயம் என்றாலே ஒரு நேசம்.



"ப்பா என்ன வெற்றி டெலிவரிலாம் பார்க்குறாரு", என்று ஆச்சர்யமாக அவள் கேட்கவும், "இதெல்லாம் சாதாரணம் அக்கா இங்க", என்று சொல்லிக்கொண்டே அவள் கையையும் பிடித்து கொண்டு வெற்றியிடம் அழைத்து சென்றாள்.



அவனோ அப்போது தான் முழு ஆட்டு குட்டியையும் வெளியே எடுத்து இருந்தான்.



"நீங்க ரொம்ப டெலெண்டெட் தான் வெற்றி", என்ற அகல்யாவின் குரலில் தான் அவள் இருப்பதையே அவன் உணர்ந்தான்.



"இதெல்லாம் டெலெண்ட்னா அப்போ எல்லா விவசாயியும் டாலேண்ட் தான்", என்றவன் கண்சிமிட்டவும், அவளும் சிரித்து கொண்டாள்.



"என்ன திடீர்னு வயலுக்கு வந்து இருக்க?", என்றவனை பார்த்து, "நான் தான் மாமா கூட்டிட்டு வந்தேன்", என்ற அழகு மயிலை பார்த்து, "இன்னைக்கும் மாறனை வம்பு இழுத்தியா?", என்று கேட்கவும், அவளோ, "ஹிஹி ஆமா மாமா அது என்னவோ உங்க தம்பிய வம்பு இழுக்கலைனா எனக்கு உறக்கம் வரவே மாட்டேங்குது... நான் என்ன பண்ண?", என்று அவள் சொல்லும் போதே, "அண்ணா", என்று ஒரு குரல் கேட்டது.



மதுமதி தான் நின்று இருந்தாள்.



"என்ன டி உன் அப்பா உன்ன இங்க அனுப்பிட்டாரு?", என்று அழகு கேட்க, "நீ வேற, நான் அண்ணனை பார்க்க போறேன்னு சொன்னதுனால விட்டாரு.. அதுவே இப்போ உங்கிட்ட பேசுறேன்னு எவனாச்சு போட்டு கொடுத்தான் அவளோ தான்", என்று மது புலம்ப, "ம்கூம் இதுல நீ ஏங்கத்த என் அண்ணனை கல்யாணம் கட்டி புள்ள குட்டி பெக்க போற?", என்றவளுக்கு பெருமூச்சு மட்டுமே பதிலாக கிடைத்தது.



"சரி விடு அதெல்லாம் சித்தப்பா கிட்ட நான் பேசுறேன். நீ எதுக்கு என்ன பார்க்க வந்த மது?", என்று வெற்றி வினவ, "இத அம்மா கொடுத்து விட்டாங்க அண்ணா... நம்ப அரசி கண்ணு போட்டு இருக்கு அதான் சீம்பால் உங்களுக்கும் மாறன் அண்ணா, அகல்யா அண்ணிக்கும் கொடுத்து விட்டாங்க", என்று அவனிடம் ஒரு தூக்கை நீட்டினாள்.



"அகல் சீம்பால் சாப்பிட்டு இருக்கியா?", என்று கேட்டவுடன், "சின்ன வயசுல எங்க பார்ம் ஹவுஸ் போகும் போது.. அதுக்கு அப்புறம் இல்ல", என்று அவள் உதட்டை பிதுக்கி கூறவும், "எனக்கும் வேணும்", என்று அழகு மயிலும் சொல்ல, "சரி நீங்க இரண்டு பேரும் வீட்டுக்கு எடுத்துட்டு போய் சாப்பிடுங்க.. நான் இன்னும் இரண்டு மணி நேரத்துல வரேன்... நீயும் வீட்டுக்கு போ", என்று மதுவை பார்த்து கூறவும், "அப்பா வைவாறு அண்ணா", என்று அவள் சினுங்க, "நான் பேசிக்குறேன்.. நீ போ", என்று அவன் சொல்லவும், அவளும் அவர்கள் இருவருடன் நடந்து சென்றாள்.



மூவரும் ஒன்றாக வீட்டிற்கு வரவும், "பெரியம்மா என்ன செஞ்சி வச்சிருக்கீங்க?" என்று கேட்டுக்கொண்டே மது நுழைய, "இன்னைக்கு சனி கிழமை தானே, சைவம் தான், முருங்கைக்காய், முழங்கி போட்டு சாம்பார், வத்த குழம்பு, கேரட் பீன்ஸ் பொரியல், அப்பளம், தயிர், வாழைக்காய் வறுவல், ஊறுகாய், இவளோ தான் இருக்கு", எனவும், "நாளைக்கு மீன் குழம்பு ஆக்கி வைங்க பெரியம்மா", என்று மது சொல்லவும், "சரி டி... முதல்ல வா.. வந்து பதநீர் குடி", எனவும் தான் மூவருக்கும் பதநீர் கொடுத்தார்.



அதே சமயம் அங்கே மாறன் வர, "இன்னும் இவ போகலையா?", என்று அழகுவை பார்த்து அவன் கத்த, மது கூட மிரண்டு தான் விட்டாள்.



"நான் என் போகணும்.. முன்ன சொன்னது தான் இப்பவும்... இது என் தாய் மாமா வீடு எனக்கு முழு உரிமை இருக்கு... வேணும்னா நீ போடா மாறா", என்று அவள் நெஞ்சை நிமிர்த்தி கொண்டு சொல்ல, அவனோ அவளின் கையை பிடித்து ஒரே முறுக்கை முறுக்கி விட்டான்.



"டேய் விடு டா பாவி கைய உடைச்சிறுவ போல... விடு டா", என்று அவள் கத்த, "மாறா விடு டா அவளை... பாவம் வலிக்குது போல", என்று காத்தியாயனி அவரின் மருமகளுக்காக பேசவும், "அம்மா அவ சும்மா கத்துறா, அழுத்தி கூட பிடிக்கல", என்று அவளின் கையை விட்டவுடனாவது அவள் அடங்கினாளா? அப்படி அடங்கி விட்டாள் அது அழகு இல்லையே!



"ஏன் டா தடி மாடு இருக்க நீயும் கிளி மாதிரி இருக்க நானும் ஒண்ணா?", என்று இடுப்பில் கை வைத்து கேட்க, அவனோ அவளை அப்படியே கையில் ஏந்தி கொண்டான்.



"டேய் விடு டா", என்று அழகு கத்தி கொண்டு அவனின் முதுகில் அடிக்க, அதெல்லாம் அவனுக்கு ஒரு அடியா?



"மாறா", என்று காத்தியாயனி கத்த, "அத்தை விடுங்க அவங்க சண்டையை அவங்க பார்த்துக்குங்க", என்று அகல்யா சொல்லவும், காத்தியாயனி மனது தான் சமாதானம் ஆகவே இல்லை.



மாறனோ அழுகுவை அவனின் அறையில் இறக்கி விட்டவன், அவனின் அறையின் கதவில் தாழ்ப்பாள் போட, "மாமாக்கு அவளோ அவசரமா?", என்று கேட்கவும், "அடிங்க... என்ன டி நினைச்சுகிட்டு இருக்க?", என்று அவன் எகிறிக்கி கொண்டு வரவும், "சொன்னா நீ நம்ப மாட்ட, உன்ன தான் நினைச்சுகிட்டு இருக்கேன்", என்று கண் அடித்தாள்.



"நீ சரியே இல்ல... இரண்டு நாள் முன்னாடி ஆத்தங்கரையில் என்ன பண்ண?", என்று கேட்க, "என்ன பண்ணேன்?", என்று ஒற்றை விரலை அவளின் கன்னத்தை வைத்து யோசிப்பது போல் செய்ய, "நடிக்காத டி.. என்ன கிஸ் பண்ணல?", எனவும் அவர்களின் முதல் முத்தத்தின் நினைவில் அவள் உடல் சிலிர்த்தது.



அவளின் நினைவும் இரண்டு நாட்களுக்கு முன் சென்றது.



அவன் அப்போது தான் ஆற்றில் குளித்து விட்டு வெளியே தலையை துவட்டி கொண்டு வந்தான்.



அவனையே விழுங்குவது போல் நின்று பார்த்து கொண்டிருந்தாள் அவள்.



"நான் ஒன்னும் கோழியோ மீனோ இல்ல டி அப்படியே விழுங்குற போல பாக்குற", என்று அவன் சொல்ல, "கோழி மீனெல்லாத்தயும் விட நீ டேஸ்ட்டா இருப்ப மாமா", என்று அவள் நெளிந்து கொண்டு சொன்னாள்.



"அடிங்க நர மாமிசம் சாப்பிடுறவளா நீ?", என்று அவன் வினவ, "ச்சீ நர மாமிசம்லாம் இல்ல ஆனா உன்ன சாப்பிடணும் போல இருக்கே", என்று அவள் கிட்டே நெருங்க, அவன் இரண்டடி தள்ளி சென்றான்.



அவளுக்கோ கோவம் வந்து விட்டது. அவளை நெருங்கவே விடமாட்டேன் என்கிறானே!



"டேய் மாறா", என்று அவள் கத்த, "என்ன டி பயம் விட்டு போச்சா, பேர சொல்லி கூப்பிட்ற", என்று அவன் அவளின் தலையில் கொட்டினான்.



"வலிக்குது டா தடியா", என்று சொன்னவள், "எனக்கு பதில் சொல்லிட்டு போ", என்று சொல்லிக்கொண்டே அவள் அவனை நகர விடாமல் செய்ய, ஆறடிக்கு அதிகமான ஆண்மகன் அவனை தடுக்க இயலுமா? அவரை தாண்டி சென்று விட்டான்.



"இப்போ நிக்கல நான் ஆத்துல குதிச்சிருவேன்", என்று அவள் சொன்னதை அவன் சட்டை செய்யவில்லை.



பட்டென்று ஒரு சத்தம் கேட்க, அவன் சட்டென திரும்பி பார்க்க அவள் ஆற்றில் குதித்து விட்டு இருந்தாள்.



"அழகு", என்று அழைத்துக்கொண்டு, ஆற்றில் அவனும் குதித்து இருந்தான்.



பாழ்ங்கிணற்றில் கூட அவளுக்கு நீந்த தெரியும் என்பது அவனுக்கு தெரியாதல்லவா!



ஆற்றில் குதித்தவனை அவள் தான் பிடித்து இருந்தாள். அவனுக்கு காதலின் ஆயர்கலைகளை சொல்லி தர ஆரம்பித்தாள்.



அந்த குடும்பத்தின் விஸ்வாமித்ரன் என்று எல்லாரும் அவனை அழைக்க அவனின் தவத்தை முறியடிக்க வந்துவிட்டாள் அழகு மயில் எனும் மேனகை.



இருவரும் ஒருசேர மேலே வர, இளமாறனின் இதழை சிறை செய்து இருந்தாள் அழகு மயில்.



அந்த திடகாத்திரமான ஆண்மகனை ஒரே இதழ் ஒற்றலில் கிறங்கடித்து இருந்தாள் அழகு.



முத்தம் இருவருக்குமே புதிது. முதலில் சொக்கி தான் விட்டான் மாறன். முதல் முறை ஒரு பெண்ணின் தொடுகை அவனின் உடலில் நிறைய மாற்றங்களை உண்டு பண்ணி இருந்தது.



அவன் பிறகு தான் சுதாரித்து, அவளை தள்ளி விட, "பொண்ணா டி நீ?", என்று கேட்கவும், "பார்த்தா எப்படி இருக்கு?", என்றவள் தாவணியை சரி செய்ய, "இதோட கிட்ட வந்த சாவடிச்சிருவேன் பார்த்துக்கோ", என்று ஒற்றை விரலை நீட்டி அவன் எச்சரிக்க, அவளோ உதட்டை சுழித்து கொண்டு சென்று விட்டாள்.



மீண்டும் அந்த நினைவில் இருந்து மீண்டு வந்தவளுக்கு, "என்ன டி பிளாஷ்பேக் முடிஞ்சிதா? அன்னைக்கே என்ன சொன்னேன்? கிட்ட வராதேன்னு சொன்னேனா இல்லையா?", என்று கேட்கவும், அவளோ அவனை மேலும் நெருங்கி, "கிட்ட வருவேன்... என்ன பண்ணுவ மாறா?", என்று கேட்கவும், அவளின் காதை பிடித்து திருகி விட்டான்.



"அம்மா வலிக்குது விடு டா பண்ணி, மாடு, எருமை, யானை", என்று வாயில் வந்த அனைத்து மிருகங்களின் பெயரையும் அவள் சொல்லி திட்ட, "வலிக்கட்டும், நல்லா வலிக்கட்டும்... அடுத்த தடவை இந்த மாதிரி வேண்டாத வேலை எல்லாம் பண்ணணு வேய்.. உன்ன அய்யனாருக்கு வெட்டி படையல் போற்றுவேன்", என்று அவன் சொல்லவும், "ம்கூம் போற்றுவ போற்றுவ... போடுற ஆளு எதுக்கு நான் ஆத்துல விழுந்ததும் துடிச்சு வந்து காப்பாத்தணும்?", என்று கேட்கவும், "ஹான், என் அத்தைக்காகவும், அவிகாகவும் தான் போ டி", என்று அவளின் கையை பிடித்து அவனின் அறையில் இருந்து வெளியே தள்ளி இருந்தான்.



அவளோ கீழே வர, அதே சமயம் வெற்றியும் வர, "டேய் வெற்றி, இந்த மாறன் பையன் அழகுவ..", என்று காத்தியாயனி சொல்லும் முதலே, "அத்தை", என்று சொல்லி கொண்டு வந்தாள் அழகு.



"விட்டுட்டானா?", என்று கேட்கவும், "ம்கூம் உன் மகன் சரியான முரடன்", என்று சொல்லி, "நான் கிளம்புறேன்", என்று அவள் சொல்ல, "சாப்பிட்டு போ டி", என்றவரை பார்த்து, "உன் மகனுக்கே கொட்டு", என்று சொல்லி கழுத்தை நொடித்து கொண்டு, வெற்றியை பார்த்து, "வரேன் மாமா" என்று சொல்லி விட்டு சென்று விட்டாள்.



"என்ன டா இவங்க இப்படி இருக்காங்க?", என்ற அவனின் அன்னையிடம், "நீங்க விடுங்க அவங்க பாடு", என்று சொல்லி விட்டான்.



அன்றைய நாள் அப்படியே கழிய, அன்றைய மாலை அவளின் ஆய்வறிக்கையை தட்டச்சு செய்து கொண்டிருந்தாள் அகல்யா.



சட்டென என்ன ஆனதோ தெரியவில்லை, அவளின் மடிக்கணினி உயிரற்று போய் விட்டது.



அவளின் மொத்த ஆய்விற்கான அனைத்து குறிப்புக்களும் அதில் தான் உள்ளது.



ஒரு முறை அல்ல, இரண்டு முறை அல்ல, எத்தனை முறை அவள் முயன்றும் அதை உயிர்ப்பிக்க முடியவில்லை.



கதறி விட்டாள். அவளின் ஐந்து வருட உழைப்பு, ஒரே நொடியில் மொத்தமாக போன்றது போல் தோன்றியது.



அவளின் கதறல் சத்தம் கேட்டு, என்ன ஆனதோ ஏது ஆனதோ என்று, வெற்றி, காத்யாயனி, மாறன் மற்றும் சிதம்பரம் நால்வரும் ஓடிவந்து விட்டார்கள்.



அவர்கள் பார்த்தது என்னவோ அகல்யா அப்படியே நாற்காலியில் மயங்கி சரியும் காட்சி தான்.
 
Last edited:

அத்தியாயம் 3



"அகல் அகல்", என்று வெற்றி அவளின் கன்னத்தை தட்ட, அப்போது தான் எழுந்து அமர்ந்தாள்.



எழுந்து அமர்ந்தவள் கண்களில் கண்ணீர்.



"என்ன ஆச்சு அகல்?", என்று வெற்றி கேட்கவும், அவளுக்கோ அழுகை வந்தது.



"என்னனு சொல்லிட்டு அழு", என்று அங்கிருந்த மாறனும் சொல்ல, "டேய் அவ உன் அண்ணி டா", என்கவும், "அதுக்கு?", என்றவன் அன்னையை பார்த்து "என்ன விட சின்ன பொண்ணு தானே, பேரு சொல்லியே கூப்பிட்டுக்குறேன்", எனவும், "என்னனு சொல்லு அகல்", என்று வெற்றி மீண்டும் கேட்க, "என்னோட லேப்டாப் ஆன் ஆக மாட்டேங்குது... அதுல தான் என்னோட ரிசர்ச் ஒர்க் எல்லாமே இருந்தது. இன்னும் இரண்டு நாள்ல ஒரு ஆன்லைன் கான்பரன்ஸ் இருக்கு அதுக்கு நான் இன்னைக்கு நைட் குள்ள ப்ரெசென்ட்டேஷன் சப்மிட் பண்ணனும், எல்லாமே போயிருச்சு", என்று அவள் தலையில் கையில் வைத்து அமர்ந்து விட்டாள்.



"பேக் அப் இல்லையா?", என்று வெற்றி கேட்க, "இருக்கு ஆனா சென்னைல.. என் பிரண்ட் இந்த வாரம் தான் ஹார்ட் டிஸ்க் கொரியர் பண்ணி விடுறேனு சொன்னா.. ஆனா இன்னைக்கு நைட் நான் கான்பரன்ஸ்க்கு அனுப்பனும். இந்த கான்பரன்ஸ்க்காக நான் நிறைய மெனக்கெட்டு இருக்கேன் வெற்றி" என்றவள் மீண்டும் அழ ஆரம்பிக்க, வெற்றியோ மாறனை தான் பார்த்தான்.



"உன்னோட லேப்டாப் இன்னும் அரைமணி நேரத்துல ரெடி ஆகிடும். பிரச்சனை இல்ல... அழறத நிறுத்து", என்று சொல்லி இருந்தான் மாறன்.



"இந்த ஊருல எப்படி இவளோ சீக்கிரம் லேப்டாப் ரெடி பண்ண முடியும்? இப்பவே மணி ஒன்பது ஆகுது... இங்க தான் கடை எல்லாம் ஏழு எட்டு மணிக்கே மூடிடுறாங்களே", எனவும், "உன் லேப்டாப் அரை மணி நேரத்துல ரெடி ஆகிடும்", என்றவன் அவளின் மடிக்கணினியை எடுத்து கொண்டு சென்று விட்டான்.



"என்ன அவரு பாட்டுக்கு எடுத்துட்டு போறாரு", என்றவள் கண்ணீர் சற்று மட்டு பட்டு இருக்க, வெற்றியோ, "அவன் சொன்னா செய்வான்", என்றதுடன் மட்டும் இல்லாமல், அவளுக்கு பாதாம் பாலும் கொடுக்க, "இல்ல வெற்றி", என்று அவள் சொன்னாலும், அவனே அவளுக்கு புகட்டினான்.



அவளுக்கு ஆதியின் எண்ணம் தான் மேலோங்கியது. இதே போல் அவள் எப்போது சோர்ந்து இருந்தாலும் அவன் தான் அவளை இப்படி பார்த்து கொள்வது.



"தேங்க்ஸ்", என்று குடித்தவள் சொல்ல, அவனும் புன்னகைத்து, அவனின் அன்னை தந்தையை பார்த்து, "நீங்க போங்க நான் பார்த்துக்குறேன்", எனவும் அவர்களும் சென்று விட்டார்கள்.



அவர்கள் சென்றதும் அவள் புறம் திரும்பி, "நீ என்ன இப்படி சின்ன விஷயத்துக்கு எல்லாம் மயக்கம் போடுற? உங்க குடுமபத்துல எல்லாரும் சிங்கம் மாதிரி உறுமிக்கிட்டு இருக்காங்க", எனவும், "கொற்றவை அம்மா அப்படி இல்லையே", என்றவளை பார்த்து, "அவங்க தான் பெண் சிங்கமே ஆளான பட்ட ருத்ரனையே நடு தெருவுக்கு கொண்டு வந்து நிறுத்தி இருக்காங்க...", என்றதும், அந்த பேட்டி தான் அவளின் நினைவிற்கு வந்தது.



"என்ன சொல்றதுன்னே எனக்கு தெரியல.. ஏதோ பெட் டைம் நினைக்குறேன். ஆருஷ் அண்ணா ஒரு பக்கம் தளிர் அண்ணி கிட்ட நடந்துக்குற விதமும் சரி இல்ல, ஆதி அண்ணாவை என்ன சொல்றதுன்னே எனக்கு தெரியல, ஆதர்ஷ் அண்ணா வாழ்க்கையே கேள்வி குறியா இருக்கு! இதுல ஜானு வேற ஒரு பக்கம் அழுதுகிட்டு இருக்கா... அவளுக்கு ருத்ரன் அப்பா தான் எல்லாமே... அவரு இந்த ஜானகியை கூட்டிட்டு வந்து இப்படி பண்ணிட்டாரு", என்றவள் சொல்லவும், "அவ கிட்ட பேசுனியா?", என்று கேட்க, இல்லை என்று தலையசைத்து இருந்தாள்.



"அப்போ அவ கிட்ட பேசு", என்றவன் சென்று அவளின் கைப்பேசியையும் எடுத்து வந்து கொடுத்தான்.



அவன் இன்று வரை ஜானவியிடம் பேசியது இல்லை. ஆனால் அகல்யா பேசும் போது கேட்டு இருக்கிறான். குழந்தை போல தான் அவள் என்று இவள் பேசுவதிலேயே அவனுக்கு தெரிந்து விட்டது.



அவளும் எத்தனையோ முறை, மாமாவை காட்டு என்று சொன்ன போதும், அகல் தான் காட்டியது இல்லை.



இன்று முகத்தை காட்டும் நேரமோ என்னவோ?



அவளும் எடுத்து ஜானவிக்கு அழைக்க, "என்ன அக்கா ரோமன்ஸ் பண்ற டைம்ல எனக்கு கால் பண்ணிருக்க?", என்று கேட்டவளை பார்த்து, "ஏன் டி ஏன்?", என்று கேட்கவும், "சும்மா தான்... சரி அந்த கான்பரன்ஸ்க்கு எல்லாம் வேலையும் முடிஞ்சுதா?", என்று கேட்கவும், "அத ஏன் டி கேட்குற...", என்று ஆரம்பித்தவள் நடந்ததை சொல்லி இருந்தாள்.



"நீ முதல்ல வீடியோ கால் வா", என்றவள் சொல்லி, அழைப்பை நேர்முக அழைப்பாக மாற்றி இருந்தாள்.



"என்ன அக்கா கண்ணு எல்லாம் சிவந்து போயிருக்கு... ஏன் இப்படி இந்த கான்பரன்ஸ் இல்லனா வேற கான்பரன்ஸ் அதுக்கு இப்படியா அழுவ? சரி அழுது மயக்கம் வேற போட்டு விழுந்து இருக்க, பாவம் அங்க இருந்த எல்லாரும் கதி கலங்கி போயிருப்பாங்க", என்று அவள் பேசவும், "நல்லா கேளு உன் அக்காவை", என்று பின்னால் இருந்து ஒலித்தது வெற்றியின் குரல்.



"மாமா இருக்காரா?", என்று உற்சாகமுடன் கேட்டு இருந்தாள் ஜானவி.



"பேசுறிங்களா?", என்று அகல்யா கேட்க, "பேசலாமே", என்று அவனும் சொன்னான்.



ஒரே ஒரு முறை அவள் அறைக்கு வரும் சமயம், அவனின் முதுகை பார்த்து இருக்கிறாள். அதற்கே, "ஐயோ மாமா செம்மயா இருப்பாரு போலவே, கொஞ்சம் கூட கண்ணுல காட்ட மாட்டுற", என்று அகல்யாவிடம் மல்லுக்கு நின்று இருந்தாள்.



இப்போது அவனே பேசலாம் என்றதும், அவளுக்கு மகிழ்ச்சி தான்.



அவன் வந்து அகல்யாவின் கையில் இருந்த கைபேசியை எடுத்து, "உன் அக்காக்கு கொஞ்சம் ஆச்சு உன்ன மாதிரி இருக்க கத்து கொடு... அவ எப்பவும் ஏன் இப்படி பதட்டத்துலயே இருக்கா?", என்று கேட்கவும், "மாமா முதல்ல நீங்க ரொம்ப ஹாண்ட்சம்மா இருக்கீங்க.... ஐயோ ஏன் இவளை போய் கல்யாணம் பண்ணீங்க! கொஞ்சம் வெயிட் பன்னிருக்கலாம்... நானே உங்கள கல்யாணம் பண்ணிருப்பேன்", என்று சொல்ல, "ம்கூம் என்னால தினமும் செவன் ஸ்டார் ஹோட்டல்ல வாங்கி தர முடியாது மா", என்று அவன் பாவமாக சொல்லவும், 'போட்டு கொடுத்துட்டானா', என்று நினைத்தவள், "அது வேணும்னே பண்ணேன்", என்று கோபத்துடன் கூறி இருந்தாள்.



"ஆனா அர்ஜுன் டென்சன் ஆகி நான் பார்த்தேன். நீ ஒரு யுனிக் பிஸ் தான்", எனவும் அகல்யா சிரித்து விட்டாள்.



"ஹலோ உங்க பொண்டாட்டிய சிரிக்க வைக்க நான் தான் கிடைச்சேனா? என்ன பார்த்தா என்ன கோமாளி மாதிரி இருக்கா?", என்று கேட்கவும், "ச்ச ச்ச நீ தான் கோலமாவுல காபி போட்ட சயின்டிஸ்ட்டாமே", என்றவுடன் அவளோ அகல்யாவை பார்த்து, "இதெல்லாம் சொல்லிருக்கியா?", என்று பற்களை கடித்து கொண்டு கேட்டாள்.



"ஹே! எனக்கு சமைக்க தெரியுமான்னு கேட்டாங்க! தெரியாது... தெரியமா எதுக்கு என் தங்கச்சி மாதிரி கோலமாவு காபி போடவான்னு சொல்லிட்டேன்", என்றவள் மனம் வெற்றி மற்றும் ஜானவியால் கொஞ்சம் இளகி தான் இருந்தது.



"புருஷனும் பொண்டாட்டியும் இதுக்கு தான் எனக்கு கால் பண்ணிங்களா? ரொம்ப தான்", என்று கழுத்தை நொடித்து கொண்டாள்.



"சரி சரி நீ எப்படி இருக்க?" என்று வெற்றி கேட்கவும், "ஹப்பா எவளோ சீக்கிரம் கேட்டுட்டீங்க அக்கறை தான்", என்றவள், "ஆமா அர்ஜுன் எப்படி?", என்று கேட்க, "நீ ஏன் டி கேட்குற?", என்ற அகல்யாவிடம், "சும்மா தான் கேட்குறேன். நல்ல ஸ்மார்ட்டா இருந்தாரு... அண்ட் அவரு கம்பெனில தான் நான் இன்டெர்ன்ஷிப் பண்ணிருக்கேன் இதுவே எனக்கு தெரியாது", எனவும், "ரொம்ப ரொம்ப நல்லவன்", என்றான் வெற்றி.



"உங்கள விட இருக்க மாட்டாங்க மாமா", என்றவளிடம், "என்ன விடவே ரொம்ப ரொம்ப நல்லவன்... நானே சொல்றேன்... ரொம்ப டிசென்ட்", என்று சொல்லி இருந்தான்.



அப்படியே அவர்கள் மூவரும் பேசி கொண்டு இருக்க, பின்பு சிறிது நேரம் கழித்து, "சரி இப்போ ஓகே தான, நான் போய் நெட்ப்ளிக்ஸ்ல சீரிஸ் பாக்குறேன் பை", என்று சொல்லி விட்டு அவள் வைத்து விட்டாள்.



இதே சமயம் உள்ளே நுழைந்தான் மாறன். சரியாக அரைமணி நேரம் கடந்து இருந்தது.



வந்தவன் அகல்யாவிடன் அவளின் மடிக்கணியை கொடுத்து இருந்தான்.



"சின்ன ப்ரோப்லேம் தான் சரி பண்ணிட்டேன்", என்றவனின் முகத்தில் துளி கூட சிரிப்பு இல்லை.



அவளோ அதை வாங்கி விட்டு, மடிக்கணியை உயிர்ப்பிக்க, அதுவும் உயிர் பெற்றது. அவளுக்கும் உயிர் வந்தது.



"தேங்க் யு, தேங்க் யு சோ மச் மாறன்... உண்மையாவே யு ஆர் எ ஜீனியஸ்", எனவும், அவனோ குரலை செருமிக்கொண்டு, "அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல... நீ உன் ப்ரசண்டஷன் முடி... இதுக்கு எல்லாம் மயக்கம் போட்டு விழுந்தா எப்படி?", என்று கேட்டவன் செல்ல போகவும் தான் அவளுக்கு சட்டென மூலையில் மின்னல் வெட்டியது.



அவள் வைத்து கொண்டிருப்பது ஒன்றும் சாதாரண மடிக்கணினி கிடையாது, உயர்ரக மடிக்கணினி, அதை கையாள்வதே தனி கலை. இதில் அதை பிரித்து மேய்ந்து இருக்கிறான் ஒருவன் என்றால், அவளால் இவன் என்ன படித்து இருக்கிறான் என்று நினைக்காமல் இருக்க முடியவில்லை.



"மாறன்", என்று அவனை அழைக்க, அவனும் திரும்பி பார்த்தான்.



"நீங்க என்ன படிச்சி இருக்கீங்க?", என்று கேட்டவளிடம், "ஏன் தெரிஞ்சி உங்க கம்பெனில வேலை கொடுக்க போறிங்களா?", என்று நக்கலாக அவன் கேட்க, "டேய் ஏன் டா? அவ ஏதோ சும்மா கேட்குறா", என்றதும், "இல்ல இந்த லேப்டாப்பை ஹாண்டில் பண்றதே கஷ்டம் இதுல நீங்க இதை சரி பண்ணி கொடுத்து இருக்கீங்க அதான் கேட்டேன்... சொல்ல வேண்டாம்னா இட்ஸ் பைன்... தேங்க் யு எனிவெஸ்", என்றவள் அவனை பார்த்து புன்னகைத்தாள்.



அவனும் என்ன நினைத்தானோ, "தேங்க்ஸ்லாம் வேணாம் அகல்யா எனக்கு வேற ஒன்னு வேணும்", என்றவனின் குரலில் இறுக்கம் தான் இருந்தது, "சொல்லுங்க என்ன வேணும்?", என்று கேட்க, அவன் சொன்ன பதிலில் செந்தளிரின் இளவரசி தான் ஆடி போய் விட்டாள்.



அப்படி என்ன கேட்டிருப்பான் மாறன்?



அடுத்த அத்தியாயத்தில்
 

அத்தியாயம் 4

"சொல்லுங்க என்ன வேணும்?", என்று அகல்யா கேட்க, "நாளைக்கு நீ சமைச்சு எங்க வீட்ல இருக்க எல்லாருக்கும் போடு", என்றவுடன் அகல்யா ஆடி தான் போய் விட்டாள்.



அவளுக்கு சுடு தண்ணீர், மேகியை தவிர ஒன்றுமே தெரியாது, அவளை போய் சமைக்க சொல்கிறானே!



"எனக்கு சமைக்க...", என்றவள் துவங்கவும், "உனக்கு சமைக்க தெரியாதுன்னு எனக்கு தெரியும்.. உன் கூடவே அக்கா அக்கானு பின்னாடி வெட்டியா ஒரு அரை லூசு சுத்துமே அதை கூட வச்சிக்கோ... ஆனா நீ தான் சமைக்கணும். எங்க வீட்ல ஒரு வழக்கம் இருக்கு, கல்யாணம் ஆகி வந்தா, மூத்த மருமக எல்லாருக்கும் சமைக்கணும்னு.. ஆனா நீ அத பண்ணவே இல்ல... எங்க அம்மா உங்கிட்ட எதுவும் சொல்லல... ஆனா அவங்க மனசுல இருக்க ஆசை இதுனு எனக்கு தெரியும். நீ இத பண்ணா அவங்க ரொம்ப சந்தோஷ பாடுவாங்க.. சர்ப்ரைஸா பண்ணு", என்று அவன் சொல்லவும், அவளின் கண்கள் தான் விரிந்தன.



அவனின் அன்னையின் சந்தோஷத்திற்காக கேட்கும் பிள்ளை, ஆருஷ், ஆதர்ஷ், ஆதியை விடவும் உண்மையாகவே வெற்றியும் மாறனும் ஒரு படி மேலே தான் என்று கூறியது அவள் மனம்.



"சரி அழகுவை ஹெல்ப்க்கு வச்சி பண்றேன்", என்றவளிடம், "நானும் உனக்கு ஹெல்ப் பண்றேன் அகல்.. நாளைக்கு சண்டே வேற, நான் வெஜ் செய்யணும் உனக்கு கண்டிப்பா ஒருத்தர் ஹெல்ப்லாம் பத்தாது", என்றான் வெற்றி.



"நீங்க சமைப்பீங்களா?", என்று அகல்யா கேட்க, அவனோ குரலை செருமிக்கொண்டு, "செட்டிநாடுல இருந்து சைனீஸ் வரைக்கும் எல்லாமே சமைப்பேன்", என்றவுடன் அவளின் கண்கள் விரிந்தன.



அப்படியே மாறனின் புறம் திரும்பி, "நீங்க என்ன படிச்சி இருக்கீங்கன்னு இன்னும் சொல்லலையே", என்று அவள் கேட்க, "தெரிஞ்சி என்ன பண்ண போற?", என்று அங்கேயே வந்து நின்றான்.



"நான் ஏதும் கேட்கல", என்று முகத்தை அவள் திருப்பி கொள்ள, "அவன் எம்எஸ் ரோபோடிக்ஸ் பண்ணிருக்கான். பசேலார்ஸ் கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங் பண்ணிருக்கான்", என்று சொல்லி இருந்தான் வெற்றி.



அதிர்ந்து விட்டாள். எப்போதும் வேஷ்டி சட்டையில் அதுவும் கர்லாக்கட்டை சுற்றி கொண்டு, மல்யுத்த வீரன், ரோபோடிக்ஸ் படித்து இருக்கிறான் என்றால் அவளும் என்ன தான் செய்வாள்.



"எந்த யூனிவெர்சிட்டில?", என்று அடுத்த கேள்வி கேட்க, இம்முறை மாறனே, "பிஇ ஐஐடி பாம்பேல, எம்எஸ் ஜெர்மனில படிச்சேன்", என்றவுடன் மயக்கம் வராத குறை தான்.



"என்ன இவளோ பெரிய யூனிவர்சிட்டி அண்ட் அப்ரோட்ல படிச்சிட்டு இந்த க்ராம்மத்துல இருக்கீங்க?", என்று கண்கள் விரித்து அவள் கேட்க, "எல்லாரும் அப்படி போய்ட்டா விவசாயம் யாரு பாக்குறது?", என்று மாறன் கேட்கவும், அகல்யாவால் பதில் பேச முடியவில்லை.



"அகல்யா, அவன் தனியா ஒரு ஸ்டார்ட் அப் வச்சிருக்கான். விவசாயத்துல ரோபோட்ஸ் எங்க எல்லாம் யூஸ் பண்ண முடியுமா அந்த மாதிரி சில சின்ன சின்ன ரோபோட்ஸ் ரிலேட்டட்டா அவன் ரெசெர்ச் பண்ணிக்கிட்டு இருக்கான்.", என்று வெற்றி கூறவும், "இந்த பாடி பில்டர் ஒரு ரோபோட் பில்டர்னு நினைக்கும் போதே அதிர்ச்சியா இருக்கு", என்று கூறியே விட்டாள்.



"டோன்ட் ஜட்ஜ் எ புக் பை இட்ஸ் கவர்", என்றான் மாறன்.



"கரெக்ட் தான்... நாளைக்கு அழகுவ கூப்பிட்டு சமைக்கிறேன். அப்புறம் மாறன் ரியலி தேங்க்ஸ்", என்று புன்னகைத்தாள்.



அவனும் தலையசைப்புடன் சென்று விட்டான்.



வெற்றியை பார்த்து, "நீங்க என்ன படிச்சி இருக்கீங்க?", என்று கேட்க, "எம்பிஏ", என்றவுடன், "நீங்களும் நல்லா தான் படிச்சி இருக்கீங்க... எந்த யூனிவர்சிட்டி?", என்று கேட்கவும், வெற்றி தடுமாறி தான் விட்டான்.



அவன் படித்த பல்கலை கழகத்தை சொன்னால், அவனும் ஆதர்ஷும் நண்பர்கள் என்று தெரிந்து விடுமே...



அகல்யாவே, "நீங்களும் ஐஐஎம் தானா? யாழ் அங்க தான் படிச்சானு கேள்வி பட்டேன்", என்று அவளே நினைத்து கொண்டாள்.



வெற்றி ஆம் என்றும் சொல்லவில்லை, இல்லை என்றும் சொல்லவில்லை.



"சரி அதான் எல்லாம் சரி ஆகிருச்சுல... நீ ரெஸ்ட் எடு.. நாளைக்கு வேற நம்ப சமைக்கணும்", என்றதும், அவளும், "அத நினைச்சா தான் பயந்து வருது", என்றவளை பார்த்து முத்து பற்கள் தெரிய சிரித்தவன், "நான் இருக்கேன்ல... நான் இருக்கும் போது நீ எப்பவும் தோற்க மாட்ட", என்று செல்லவும், அவனின் கையை பிடித்து இருந்தாள் அகல்யா.



அவனும் அவளை பார்க்க, விழிகள் நிறைய நன்றி உணர்வுடன், "ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் எல்லாத்துக்கும்", என்றாள்.



அவனும் தலையசைத்து விட்டு சென்று விட்டான்.



அடுத்த நாள் விடிய, முதலில் அகல்யா அழைத்து என்னவோ, அழகு மயிலுக்கு தான்.



அவளிடம் விடயம் சொல்ல, "இப்போ என்னவாம் இந்த மாறனுக்கு உங்கள வேலை வாங்கிட்டு இருக்கான் அக்கா?", என்றவளிடம் நடந்ததை கூறி, "நீ வா அழகு", என்றதும் சரி வரேன் என்று அடுத்த பத்து நிமிடத்தில் வைத்து விட்டாள்.



காத்தியாயனி முன் சென்று, "அத்தை இன்னைக்கு மதியம் நானே சமைக்குறேன்", என்று சொல்லவும், "ஐயோ கண்ணு நீ எதுக்கு மா?", என்று அவர் சொல்லவும், "இல்ல அத்தை ப்ளீஸ்", என்று கெஞ்சி கொஞ்சி சம்மதம் வாங்கி விட்டாள்.



வெற்றியும் அழகுவும் அவளுடன் சமயற்கட்டிற்குள் நுழைய, மூவரும் என்ன என்ன சமைக்க வேண்டும் என்று பட்டியல் போட்டனர்.



அகல்யாவிற்கு மயக்கமே வந்து விட்டது.



ஆனால் இவர்கள் இருவரும் இருப்பதால், சிறிது தைரியம் இருந்தது.



"யாழுக்கு கோவிலே கட்டணும். மம்மி சொன்னாங்க அவ தான் இப்போல்லாம் சமைக்கிறானு", என்று வித்யா சொன்னதை கூற, "இதுல பெரிய விஷயம் ஒன்னும் இல்ல அகல், அவ இங்க இருக்கும் போதே அம்மா அவளை வேலை செய்ய வைப்பாங்க... இவளோ ஏன் மாறனே நல்லா சமைப்பான் தெரியுமா?", என்று வெற்றி சொல்லவும், "என்ன மாறன் சமைப்பானா?", என்று அகல்யா வாயை பிளந்து கொண்டு கேட்க, "ஏன் நீங்க மட்டும் தான் சமைக்கணுமா?", என்கிற மாறனின் குரலில் அப்படியே திரும்பி அவனை பார்த்தாள்.



அவனோ, "ஏதாச்சு ஹெல்ப் வேணுமா?", என்று கேட்டுக்கொண்டே, வெற்றி உடைத்த தேங்காவை வாங்கி துருவ ஆரம்பித்து இருந்தான்.



"கொஞ்சமே கொஞ்சம் சிதம்பரம் மாமா நல்லவரு தான் அக்கா.. எங்க சின்ன மாமா தான் சரியான பழைய பஞ்சாங்கம்", என்று சொல்லி நொடித்து கொண்டாள்.



இதே சமயம், "டேய் மாறா", என்று அழகு கூறவும், அருகில் இருந்த மற்றொரு தேங்காவை எடுத்து, "அடுத்த தடவை பேரு சொல்லி கூப்பிட்ட உன் தலைல தேங்காய் உடைச்சிருவேன் பார்த்துக்க", என்று சொல்லவும், "சரி சரி... கொஞ்சம் கூட வரியா? கோழி உரிக்கணும்", எனவும் அவனும் எழுந்து அவளுடன் சென்று விட்டான்.



இதே சமயம், அகல்யா எண்ணெய் ஊற்றி அது சூடானது தெரியாமல், நெருப்பை அதிகமாக வைத்து அப்படியே அதில் கடுகு போட, அது பொரிந்து, அவள் மேல் எண்ணெய் துளிகள் தெறித்து விட்டது.



சிவந்த மேனி உடைய பெண்ணவளோ, "அம்மா", என்று அலறி விட்டாள்.



"என்ன ஆச்சு?", என்று எழுந்து விட்டான் வெற்றி.



அவளின் மேல், எண்ணெய் துளிகள் பட்டதை கவனித்தவன், சட்டென அருகில் இருந்த ஒரு பருத்தி துணியை எடுத்து அவளின் கையை துடைக்க, அதற்குள் அவளின் கைகள் அங்கங்கே சிவந்து தான் விட்டது.



அவனோ கையை பிடித்து, "சிவந்திருச்சு... மருந்து ஏதாச்சு வேணுமா?", என்று கேட்க, "இல்ல வெற்றி அதெல்லாம் வேணாம்... ஐஸ் க்யூப் எடுத்துடுவாங்க", என்று சொல்லவும், அவனும் சென்று எடுத்து கொண்டு வர, சில இடங்களில் வைத்ததும் அது ஆறி தான் விட்டது.



"நீ கடுகுலாம் போடும் போது, ஒன்னு கொஞ்சம் தள்ளி வந்து போடு... இல்ல கொஞ்சம் தீய கம்மி பண்ணிட்டு போடு", என்று சொல்லவும், அவளும் தலையசைத்து கொண்டாள்.



இதே சமயம், மாறனும் அழகுவும் வந்து விட, அடுத்து சமைக்க துவங்கினர்.



இது சரியாக இருக்கிறதா? உப்பு எவளோ போடணும்? காரம் எவளோ போடணும்? என்று அவர்களை கேட்டு கேட்டு தான் செய்தாள் அகல்யா.



அனைத்தையும் செய்து முடித்தவள், அவர்களிடம், "டேஸ்ட் பண்ணி பாருங்களேன்", என்று சொல்லவும், "அத்தை மாமாவையே டேஸ்ட் பார்க்க சொல்லுவோம்", என்று சொல்லி அவர்களை சாப்பிட அழைத்தனர்.



பயம் தான் அவளுக்கு, வெற்றி அவளின் கையை பிடித்து கொண்டான்.



"அதெல்லாம் ஒன்னும் இல்ல, நீ முதல் முறை சமைக்கிற, அதுவும் நீ எவளோ அக்கறையா சமைச்சனு நான் பார்த்தேன். நீ இத செய்யணும்னு எந்த அவசியமும் இல்ல.. இருந்தாலும் என் அம்மாக்காக தானே செஞ்ச... அதுக்கு தேங்க்ஸ்", என்றதும், அவளும், "உங்களுக்கு தான் தேங்க்ஸ் சொல்லணும் வெற்றி... நீங்க மட்டும் இல்லனா எவளோ விஷயம் ரொம்ப ரொம்ப மோசமா போயிருக்கும்", என்று சொல்லி இருந்தாள்.



காத்தியாயனி மற்றும் சிதம்பரம் சாப்பிட அமர்ந்தனர். அவளே பரிமாறினாள்.



முதல் வாயை எடுத்து வைத்ததும், அவளை நிமிர்ந்து பார்த்து, "நீ உண்மையாவே இது தான் முதல் முறை சமைக்கிறியா மா?", என்று கேட்கவும், "ஆமா மாமா", என்று சொன்னவளிடம், "ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு... உண்மையாவே சொல்றேன்.. டேய் வெற்றி மருமகளுக்கு தங்க வளையல் செஞ்சி போடு.. வீட்டுக்கு வந்த மஹாலக்ஷ்மி முதல் முறை நமக்கு சமைச்சி கொடுக்கும் போது நம்ப ஏதாவது செய்யணும்ல.. நாளைக்கு நீயும் அகல்யாவும் நகை கடைக்கு போய்ட்டு வாங்க", என்றதும், "மாமா நானும் தானே அக்காக்கு உதவி பண்ணேன்... எனக்கு ஏதும் இல்லையா?", என்று அழகு சண்டைக்கு நிற்க, "உனக்கு என்ன வேணும்னு சொல்லு.. வாங்கி தரேன்", என்று அவர் சொல்லவும், "எனக்கு ஒரு பச்சை கல்லு வச்ச மயில் கம்மல் வேணும்", என்று அவள் கேட்க, "விட்டா சொத்தை கூட கேட்பா", என்று மாறன் சொல்ல, "ஆமா டா கேட்பேன்.. எனக்கு உரிமை இருக்கு", என்று இருவரும் மீண்டும் மல்லுக்கு நின்றனர்.



இதே சமயம், "ஐயா ஐயா", என்று ஒரு கர்ப்பிணி பெண் சிதம்பரத்தின் வீட்டின் முன் வந்து நின்றாள்.



யாரென்று அழகு சென்று பார்க்க, "செல்வி அக்கா தான் வந்திருக்காங்க மாமா", என்றதும், வெற்றியும் மாறனும் வெளிய வந்தார்கள்.



செல்வி அவர்கள் வயலில் வேலை செய்யும் வாசுவின் மனைவி தான்.



ஐந்து மாத கர்ப்பிணியும் கூட!



"என்ன மா எதுக்கு இப்படி ஓடி வர? பிள்ளைத்தாச்சி வேற!", என்று வெற்றி கேட்க, அவளோ, "அண்ணா அந்த மருது கிட்ட என் புருஷன் கொஞ்சம் கடன் வாங்கி இருந்தார். அதுக்கு வட்டி மாசம் மாசம் கொடுத்துக்கிட்டு தான் இருக்கோம்... ஆனா இப்பவே முதலும் கொடுன்னு கேட்குறான். ஒரு மூணு மாசம் நேரம் கேட்டதுக்கு...", என்றவளால் அதற்கு மேல் பேச முடியவே இல்லை.



"என்ன சொன்னான்?", என்று கர்ஜனையை வந்தது வெற்றியின் குரல்.



மருதுவை பற்றி நன்கு அவனுக்கு தெரியும். அவன் எப்படி எல்லாம் பேசுவான் என்று அ முதல் அக்கு வரை வெற்றி அறிவான்.



"உன்னால முடியலைன்னா உன் பொண்டாட்டிய ஒரு வாரம் அனுப்பி வைன்னு கேட்குறான் அண்ணா", என்றவுடன், "நீ வா", என்று செல்வியை அவனின் காரில் ஏற்றியவன், மாறனை பார்த்து, "அப்பா கிட்ட எதுவும் சொல்லாத", என்று சொல்லிவிட்டு சென்று விட்டான்.



அவன் நேரே சென்று நின்றது என்னவோ மருதுவின் வீட்டில் தான்.



வேந்தனுக்கே வேந்தன் அவன்! இத்தகைய செயலை பார்த்து கொண்டு அவனால் பொறுத்து கொண்டு இருக்க முடியாதே, உடன் பிறவா தங்கைக்காகவே கடல் கடந்து காப்பாளனாக அவிரனை அனுப்பி வைத்தவன் அவன்.



அவன் முன் அண்ணா என்று வந்து கண்ணீர் மல்க நிற்கும் பெண்ணை நிர்கதியாக விட்டு விடுவானா என்ன?



வெற்றி வேந்தனாக மாறும் தருணம் அடுத்த அத்தியாயத்தில் இருந்து.
 

அத்தியாயம் 5

மருதுவின் வீட்டிற்குள் அவன் நுழையவும், அங்கே அமர்ந்து இருந்தார் அவனின் அன்னை அகிலாண்டேஸ்வரி.



அவன் வருவதை பார்த்ததும், "வா ப்பா வெற்றி... என்ன தீடீர்னு வந்து இருக்க? மோர் தண்ணி என்ன வேணும்?", என்று கேட்கவும், அவரிடம் புன்னகைத்தவன், "அதெல்லாம் எதுவும் வேணாம் மா... மருது எங்க?", என்று கேட்கவும், அப்போது தான் உள்ளே நுழைந்தான் மருது.



செல்வியை பார்க்கவும், அவனுக்கு புரிந்தது வெற்றியிடம் தான் அவள் போய் அவனை பற்றி வத்தி வைத்து இருக்கிறாள் என்று!



'சண்டாளி அவன் கிட்ட போய் சொல்லிருக்கா', என்று நினைக்கவும், "அதோ உன் பின்னாடி தான் பா நிக்குறான்", என்றவுடன், அவன் புறம் திரும்பினான்.



மருதுவுக்கோ உள்ளே கிலி எடுக்க துவங்கியது.



வெற்றியிடம் விடயம் சென்று விட்டது என்று தெரிந்தும் அவனின் கெத்தை அப்படியே தக்க வைத்து கொண்டு இருந்தான்.



"வா... என்ன சொன்ன செல்வி கிட்ட? அத அப்படியே சொல்லு இப்போ?", என்று கையை கட்டி கொண்டு அடி மேல் அடி வைத்து அவன் செல்லவும், மருதுவிற்கோ மேலும் கண்கள் விரிந்தன.



அகிலாண்டேஸ்வரிக்கு புரிந்து விட்டது, மகன் எதையோ செய்து வைத்து விட்டு வந்து இருக்கிறான், அவன் எவ்வளவு கீழ் தனம் ஆனவன் என்று அவருக்கு தான் தெரியுமே.



அதுவும் ஒரு கர்பவதியிடம் என்னவெல்லாம் பேசி இருப்பானோ என்று ஒரு பெண்ணாகவே அவரின் மனம் துடித்தது.



"சொல்லு டா...", என்று மீண்டும் கர்ஜித்து இருந்தான் வெற்றி.



"அவ புருஷன் என்கிட்ட வாங்குன பணம் கொடுக்கல... அதான்...", என்று அதற்கு மேல் அவன் பேச வில்லை.



எப்படி பேச முடியும்? பேசினால் வாய் இருக்காதே!



"சொல்லு என்ன சொன்ன?", என்று மீண்டும் நேருக்கு நேர் அவனை பார்த்து கேட்க, வேங்கையாய் வேந்தன் அவன் கண்கள் சிவந்து இருந்தது.



"அது.. வெற்றி... சும்மா தான்...", என்று அவன் சொல்லவும், அவனின் கன்னத்தில் விட்டான் ஒரு அரை.



"சும்மா வந்து படுக்க சொல்லுவியா டா நாயே", என்று அவனை தர தரவென்று இழுத்து சென்று தெருவின் மத்தியில் போட்டு, மிதிக்க ஆரம்பித்து இருந்தான்.



"காசு வட்டிக்கு தானே விடுற... அதோட நிறுத்திக்கணும்... ஒரு புள்ளத்தாச்சி பொண்ண படுக்கைக்கு கூப்பிட்ற நீ! ராஸ்க்கல்" என்று மிதி மிதி என்று மிதிக்கவும், அவனின் உடலில் மொத்தமும் காயம்.



"வெற்றி", என்ற அகிலாண்டேஸ்வரியின் குரலில் தான் நிறுத்தினான்.



"எனக்கு இவனை போய் புள்ளையா கடவுள் கொடுத்துட்டாரு ப்பா... எனக்குன்னு கொல்லி போடவாவது அவன் இருந்துட்டு போட்டும்... எனக்காக விட்டுடு.... அவன் அடுத்த தடவ இப்படி பண்ணா நானே அவன் அரளிவிதை அரைச்சி கொடுத்துட்றேன்", என்று சொல்லவும் தான் அவனை விட்டான்.



"உங்க அம்மாவால நீ தப்பிச்சிட்டே...", என்றவன் அகிலத்தின் பக்கம் திரும்பி, "நான் அவங்க கடனை திருப்பி கொடுத்துட்றேன்", என்றான்.



அகிலமோ, "வேண்டாம் ப்பா... எனக்கு காசே வேண்டாம். இந்த சண்டாளன் பண்ண வேலைக்கு நான் தான் அந்த பொண்ணோட கால்ல விழணும்", என்று சொன்னவர், கையெடுத்து கும்பிட்டு, "என்ன மன்னிச்சிரு மா செல்வி", என்று சொல்லவும், அவளோ, "ஐயோ வேண்டாம் மா", என்றவளை அழைத்து கொண்டு வெற்றி சென்று விட்டான்.



"அம்மா வலிக்குது", என்று மருது கத்த, "நல்லா வலிக்கட்டும்... மனுஷனா டா நீ", என்று அவனை திட்டி விட்டு உள்ளே சென்று விட்டார் அகிலம்.



செல்வியை வீட்டில் விட்டவன், அப்படியே அவனின் வீட்டிற்கு வர அங்கே மரத்தின் அடியில் அமர்ந்து அழகியிடம் பேசிக்கொண்டு இருந்தாள் அகல்யா.



"என்ன சாப்பிடலையா?", என்று கேட்டுக்கொண்டே அவன் வர, "நீங்க வரணும்னு தான் மாமா வைட்டிங்... இந்த மாறனும் உள்ள அவன் லேப்டாப்பை தட்டிகிட்டு இருக்கான்", என்று அழகு சொல்ல, "சரி வாங்க சாப்பிடலாம்", என்று அவன் அழைக்கவும், அழகு எழுந்து கொண்டு உள்ளே சென்றாள்.



அதே சமயம் ஆலியா கட் குர்த்தி அணிந்து இருந்த அகல்யாவோ எழுந்திருக்கும் சமயம் தடுக்கி விட, அவளின் இடையை பற்றி பிடித்து இருந்தான் வெற்றி.



அவனின் முறுக்கேறிய உடலின் முன், மெல்லிடையாள் அவளும் தான் குழந்தை போல் தெரிந்தாள்.



இருவரின் கண்களும் மோதிக்கொள்ள, அவள் முடியை கட்டி இருந்த கொண்டை அவிழ்ந்து அவளின் கேசம் காற்றில் பறக்க, அவளோ கண்கள் மூட, அவனின் கைகளால் அவளின் மென்மையான முடிகளை அவளின் பட்டு முகத்தில் இருந்து தள்ளி விட்டு இருந்தான்.



ஒரு கை அவளின் இடையை பிடித்து இருக்க, மறு கை அவளின் கன்னத்தை பிடித்து இருக்க, அழகு அவர்களை திரும்பி பார்த்து, அதை அப்படியே புகைப்படம் எடுத்து இருந்தாள்.



"அக்கா மாமா உங்க ரொமான்ஸ் முடிஞ்சிதுன்னா சாப்பிடலாமா?", என்று கேட்கவும், சட்டென சுயநினைவு பெற்றவர்கள், தன்னிலை அடைந்து, ஒன்றாக உள்ளே சென்றனர்.



மாறனோ அப்போது தான் அர்ஜூனுடன் வீடியோ கால் பேசி கொண்டு இருந்தான்.



"அபி உன்னோட புது ப்ராஜெக்ட் எல்லாம் ஓகே தான டா?", என்று கேட்கவும், மறுபக்கத்தில் இருந்தவன், "எல்லாம் ஓகே தான் ஆனா ஏன் உன் பின்னாடி கோமாளி மாதிரி ஒருத்தி ஆடிக்கிட்டு இருக்கா?", என்று அழகுவை பார்த்து கேட்க, "அபி ஏன் டா இப்படி நீயும் கலாய்க்கிற?", என்று கேட்கவும், "யாரு அபி?", என்று கேட்டாள் அகல்யா.



"இவனை தெரியாதா உனக்கு?", என்று அவனது லேப்டாப்பை மாறன் காட்ட, "அர்ஜுன் நீங்களா?", என்று கேட்கவும், "ஆமா அகல்யா.. என்னோட முழு பேரு அர்ஜுன் அபினவ்... வெற்றியும் யாழும் மட்டும் தான் அர்ஜுன்னு கூப்பிடுவாங்க... முக்காவாசி நேரம் இவங்க எல்லாரும் அபி இல்ல அபினவ் தான்" என்றான்.



"எப்படி இருக்கீங்க?", என்று அவள் புன்னகையுடன் கேட்க, "நான் நல்லா இருக்கேன். நீங்க எப்படி இருக்கீங்க? ஊரு செட் ஆகிருச்சா? மும்பைல வளர்ந்த பொண்ணு நீங்க.. அப்புறம் கூட சிட்டி தான்ல.. கிராமத்துல கொஞ்சம் கஷ்டமா இருக்கோ?", என்று கேட்டவனிடம், "அப்படி எல்லாம் இல்ல அர்ஜுன்.. உண்மையாவே எனக்கு இந்த லைப் பிடிச்சி தான் இருக்கு", என்று புன்னகை மாறாமல் அவள் கூறவும், "டேய் அபி எனக்கு ஒரு பத்து சாரீ அனுப்பி வை டா.. திருவிழா வருது", என்று கத்தினாள் அழகு.



"அனுப்ப முடியாது போ டி என்ன பண்ணுவ?", என்று அர்ஜுன் பேச, "டேய் அபி எத்தனை தடவை உனக்கு கடலை மிட்டாய் பிடிக்கும்னு வாங்கி கொடுத்து இருக்கேன். இப்படி பண்ணலாமா? பனை மரம் மாதிரி வளந்தததும் இப்படி பழைய பிரென்ட்ட மறக்குறியே", என்று பாவமாக முகத்தை வைத்து கொண்டு அவள் பேசவும், அர்ஜுனிற்கோ சிரிப்பு வந்து விட்டது.



"நான் உனக்கு பிரென்ட்டா? என்ன விட நாலு வயசு சின்ன பொண்ணு நீ! யாழ் கூட என்ன அண்ணான்னு கூப்பிடுவா! ஆனா நீ?", என்று அவன் நிறுத்த, "உனக்கு இந்த மரியாதையே போதும் டா", என்று சொன்னவுடன், "அப்போ உனக்கு புடவை கிடையாது", என்று சொல்லி விட்டான்.



"சரி சரி அபி ப்ளீஸ்", என்று கெஞ்சவும், "சரி சரி அழாத அனுப்பி வைக்குறேன்", என்றவன், "பை வெற்றி, பை அகல்... டேய் மாறா உன் பாடு கஷ்டம் டா...", என்று சிரிக்கவும், "உனக்கு ஒருத்தி வருவா அப்போ தெரியும்", என்று வைத்து விட்டான்.



அடுத்து நால்வரும் அமர்ந்து சாப்பிடும் சமயம், மாறன் தான், "உனக்கு எப்போ பிஎச்டி முடியுது?", என்று அகல்யாவை பார்த்து கேட்க, "இன்னும் ஆறு ஏழு மாசமாவது ஆகிடும் நினைக்கிறன்", என்றவளிடம், "உன் அண்ணா கிட்ட சொல்லி வை என் தங்கச்சிய மட்டும் அவன் ஏதாவது பண்ணான்...", என்று அவன் அவளை முறைத்து பார்க்க, "மாறன், ஏன் டா அவ என்ன பண்ணுவா? நீ சாப்பிடு", என்று சொல்லி வெற்றி கடியவும், அமைதியா உண்டனர்.



பின்பு மாலை அழகு சென்று விட, அன்றைய நாள் அப்படியே கழிந்தது.



அன்றைய நாள் இரவு ஏனோ அகல்யாவிற்கு தான் உறக்கமே வரவில்லை.



சற்று வெளியே நடக்கலாம் என்று அவள் வெளிய வந்து நடக்க ஆரம்பிக்க, அவளை அப்படியே வாயை பொத்தி இருந்தது ஒரு கரம்.
 

அத்தியாயம் 6

"ம்ம்", என்று அவள் திமிர, "இந்த நேரத்துல எதுக்கு வெளிய வந்த?", என்று கேட்டவனின் குரலில் அவள் அவனின் கையை எடுத்து விட, மாறன் தான் நின்று இருந்தான்.



"உப்", என்று ஊதிக்கொண்டு, "இப்படி தான் பின்னாடி வந்து பயமுறுத்துவீங்களா?", என்று அவள் கேட்க, "ஹலோ மேடம், திருடி மாதிரி இருந்தது நீங்க தான்... அதுவும் இந்த நேரத்துல யாரவது வெளிய வருவாங்களா?", என்று கையை கட்டி கொண்டு கேட்க, "ஏன் வரக்கூடாதா? நான் ஒன்னும் ரோட்டுக்கு கூட போகல", என்றவள், அவனை பார்த்து, "நீங்க ரொம்ப தான் என்ன பார்த்து முறைக்குறிங்க", என்று சொல்லியே விட்டாள்.



"உன் அண்ணா பண்ண வேலைக்கு உன்ன இதோட விட்டு இருக்கேனேனு சந்தோஷ படு", என்று செல்ல முற்பட, "ஒரு நிமிஷம்.. என் அண்ணா அப்படி என்ன பண்ணாரு? உங்க தங்கச்சிய பத்தி பேசுனது தப்பு தான்.. அதுக்கு தான் அவரையே கல்யாணம் பண்ணிக்க வச்சிட்டீங்கள? உங்க தங்கச்சியும் கொஞ்சம் கூட யோசிக்காம என் அண்ணாவை பத்தி பேசுனது தப்பு தான். அதையும் ஒத்துக்கோங்க... என் அண்ணா பின்னாடி எத்தனை பொண்ணுங்க சுத்தி இருக்காங்க தெரியுமா? என் குடும்பத்துலயே என் அப்பாவும் ஆதி அண்ணாவும் தான் செம்ம ஹண்ட்சம்... எங்க சின்ன வயசுல இருந்து ஆதி அண்ணாக்கு எத்தனை ப்ரோபோசல் தெரியுமா வந்து இருக்கு? ஆனா இன்னைக்கு வரைக்கும் அவரு எந்த பொண்ணையும் தொட்டது இல்ல... சும்மா என் அண்ணா மேலயே குறை சொல்லாதீங்க... தப்பு எங்க மேல இருக்கவும் தான் இவளோ அமைதியா பேசிகிட்டு இருக்கேன்.. இல்லனா...", என்று ஒற்றை விரலை நீட்டி அவள் எச்சரிக்க, "அண்ணா பொண்டாட்டியாச்சேன்னு பார்க்குறேன்... இல்லனா நானும் இப்படி நிற்க மாட்டேன்", என்றவன் செல்லும் போது, "என் இப்படி முறைச்சிகிட்டே இருக்கீங்க... லவ் பெயிலியர் ஏதாவது இருக்கா?", என்று கேட்டு இருந்தாள்.



அவனோ திரும்பி பார்த்து, "அது ஒன்னு தான் கேடு", என்று சொல்லி விட்டு சென்று விட்டான். இதே சமயம் வெளியே வந்தான் வெற்றி.



"என்ன அகல் தூங்கலையா?", என்று கேட்கவும், "தூக்கம் வரல அதான் நடக்கலாம்னு வந்தேன்.. உங்க தம்பியோட பஞ்சாயத்து ஆகிருச்சு", என்று சொல்ல, "அவனுக்கு யாரு கூட தான் பஞ்சாயத்து ஆகாது... எல்லாரு கூடையும் முறைச்சிகிட்டு தான் இருப்பான். ஆனா ரொம்ப நல்லவன்.. அத விட ரொம்ப பாசமானவன்", என்று சொல்லவும், "ம்கூம் பாசமா? அது எந்த கடைல விக்குதுனு கேட்பாரு", என்றவளை பார்த்து, "உண்மையாவே சொல்றேன்.. என்ன விட அவனுக்கு தான் எல்லாரு மேலையும் பாசமும் அக்கறையும் இருக்கு... நீ வந்து இவளோ நாள் ஆகுது ஆனா என் அம்மாவை பத்தி நானே யோசிக்கல ஆனா அவன் யோசிச்சான்... இவளோ ஏன் நீ சமைக்கலானாலும் அவன் ஒன்னும் சொல்லிருக்க மாட்டான். உன் மேல அக்கறை இல்லனா அந்த லேப்டாப்பை தொட்டு கூட இருக்க மாட்டான். அழகுவ கூட பிடிக்கும் ஆனா காட்டிக்க மாற்றான்", என்று அவனின் தம்பிக்காக பேசினான்.



"ரொம்ப தான் தம்பிக்கு சப்போர்ட் பண்றீங்க", என்று கழுத்தை நொடித்து கொள்ள, "மேடம் உங்க அண்ணாங்களுக்கு கம்மியா பண்றிங்களோ?", என்று கேட்கவும், "அது.. அது வந்து.. இங்க பாருங்க என் அண்ணாங்க உண்மையாவே நல்லவங்க தெரியுமா?", என்று சொல்ல, "ஆமா ஆமா.. நல்ல அண்ணா தான் கல்யாணத்துக்கு முன்னாடி பிள்ளை கொடுத்து இருக்கான். இன்னொரு அண்ணா என்னன்னே தெரியாம அம்மாவை பிள்ளைங்க கிட்ட இருந்து பிரிச்சி வச்சிருக்கான்... இன்னொரு அண்ணாவை பத்தி பேசவே வேணாம் நினைக்கிறன்", என்று சொல்ல, அகலயாவிற்கோ மூக்கிற்கு மேல் கோவம் வந்து விட்டது.



"எங்க குடும்பத்தை ரொம்ப டேமேஜ் பண்றீங்க", என்று ஒற்றை விரலை நீட்டி எச்சரிக்கை, "சரி சரி டென்சன் ஆகாத... உண்மை கசக்கத்தான் செய்யும்", என்றவனை பார்த்து, "சரி நான் போய் தூங்குறேன்" என்று சொல்லி சென்று விட்டு இருந்தாள்.



ஒரு வாரம் கழிந்து இருக்கும்.



அவளுக்கான கான்பரென்ஸ் இன்னும் நான்கு நாட்களில் இருந்தது. சென்னை செல்ல வேண்டும்.



"நான் சென்னை போகணும் அத்தை", என்று சொல்லவும், "தனியாவாமா போக போற?", என்று கேட்ட காத்தியாயணியிடம், "இவளோ நாள் தனியா தானே இருந்தேன் அத்தை? நான் பார்த்துக்குவேன்", என்று சொல்லி இருந்தாள்.



"ஆனா கொஞ்சம் பொருள்லாம் வாங்கணும்.. ஏனா சென்னை போய் உடனே சிலது வாங்க முடியாது.. நேரமும் இருக்காது", என்றவள் தயங்கி சொல்ல, "வெற்றியை கூட்டிட்டு போயிட்டு வா கண்ணு", என்று அவர் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே, "எங்க போனாலும் நானும் வருவேன்", என்று வந்து நின்றாள் அழகு மயில்.



"எங்க அக்கா போறீங்க?", என்று கேட்டவளிடம், விடயத்தை சொல்ல, "சரி வாங்க இப்பவே போய் மாமாவை பார்த்து சொல்லிட்டு வரலாம்", என்று அவளை கையேடு வயக்காட்டிற்கு அழைத்து சென்று விட்டாள்.



அவனோ அங்கு ஒருவருடன் பேசிக்கொண்டு இருக்க, அவனை அழைக்க வேண்டும்.



"வெற்றி" என்றவள் அழைக்கவும், ஊரே அவளை தான் திரும்பி பார்த்தது. அவர்கள் ஊரில் எல்லாம் கணவனை பெயர் சொல்லி இன்றும் அழைக்க மாட்டார்கள். அவள் சர்வ சாதாரணமாக அழைக்கிறாள் என்று தான் இத்தனை ஆச்சர்யம்.



"நான் ஏதாச்சு தப்பா சொல்லிட்டேனா என்ன?" என்று அழகுவின் காதுகளில் அவள் கேட்க, "ஐயோ இல்ல அக்கா... இங்க எல்லாம் புருஷன் பேரை சொல்ல மாட்டாங்க அதான். நீங்க ஒன்னும் இதெல்லாம் பெருசா எடுத்துக்காதீங்க. நீங்க வெற்றி மாமாவ பேரு சொல்லி கூப்பிட்றத வச்சி தான் நானே அந்த மாறனை பேரு சொல்லி கூப்பிடனும்" என்றவள் சொல்ல, அகலயாவிற்கோ சிரிப்பு தான்.



அவளுக்கு ஜானவியின் மறு உருவமாக தான் அழகு தெரிந்தாள்.



"அப்படியே என் தங்கச்சி மாதிரி பேசுற" எனவும் வெற்றி அங்கு வர சரியாக இருந்தது.



"என்ன அகல்?", என்று அவள் புன்னகையுடன் கேட்க, "அது வெற்றி கொஞ்சம் சிட்டி வரைக்கும் போகணும் சில திங்ஸ் வாங்கணும்", என்று அவள் சொல்லவும், "சரி சாயங்காலம் போகலாம்" என்று சொல்ல, "நானும் வருவேன்" என்று அழகு சொல்லும்போதே, "நீங்க இரண்டு பேரு மட்டும் போய்ட்டு வாங்க, எதுக்கு மூணாவது ஆளு எல்லாம்" என்று அங்கு வந்து நின்றான் இளமாறன்.



அழகோ அவனை பார்த்து, "உனக்கு என்ன டா வந்தது? நான் அக்காவோட போறேன்.. பொறாமை பிடிச்சவனே", என்று சொல்லவும், "மாறா நீயும் வா டா... ரொம்ப நாள் ஆச்சுல வெளிய போய்... மதுவையும் வர சொல்றேன்",என்றதும் அவன் அமைதியாக போய் விட்டான்.



மாலை நான்கு மணி போல் ஐவரும் அவர்களது காரில் கிளம்பினார்கள்.



"வெற்றி நல்லாவே காரி ஓட்டுரிங்க", என்று அகல்யா சொல்லவும், "மாமா லேபிட் ஹாண்ட் டிரைவிங் கூட பண்ணுவாரு அக்கா", என்றாள் அழகு.



"அப்படியா அப்போ நீங்களும் அப்ரோட்ல படிச்சீங்களா?", என்கவும், அவனும், "ம்ம்", என்றதுடன் நிறுத்தி கொண்டான்.



அனைவரும் கடைக்கு வர, அவர் அவருக்கு வேண்டும் என்கிற இடத்திற்கு சென்று விட்டார்கள்.



அகல்யாவிற்கு தேவைப்பட்டது என்னவோ காற்சட்டை மற்றும் சட்டை தான்.



அவளோ அதற்காக சென்று விட, மது சுடிதார் எடுக்க சென்று விட்டாள்.



அழகு நின்று இருந்தது என்னவோ புடவை எடுக்கும் இடத்தில் தான்.



வெற்றி மதுவுடன் சென்று இருந்தான். மாறன் தான் அழகுவுடன் இருக்கும் நிலை.



"இந்த புடவை நல்லா இருக்கா?", என்று எடுத்து காட்ட, ஒரு ரியாக்ஷனும் இல்லை.



"இவனை எல்லாம் நான் கல்யாணம் பண்ணி என்னத்த குழந்தை குட்டி பேக்குறது", என்று முனங்கி கொண்டே, இரு புடவைகளை எடுக்க, அதே சமயம் அகல்யாவும் வந்து விட்டு இருந்தாள்.



"அக்கா நீங்களும் திருவிழாக்கு புடவை எடுங்க", என்று சொல்லவும், அவளுக்கும் எடுக்கும் ஆசை வந்தது.



கட்ட கற்று கொள்ளலாம் என்று நினைத்து கொண்டாள்.



மதுவும் வந்துவிட, "என்ன அண்ணி நீங்களும் புடவை எடுக்குறீங்களா?", என்று கேட்க, "ஆமா அழகு தான் எடுக்க சொன்னா", என்றதும், அவளுக்கு ஒரு புடவையை எடுக்க மூன்று பெண்களும் களம் இறங்கி விட்டார்கள்.



ஒரு மணி நேரம் ஆனது ஆனால் ஒரு புடவை கூட எடுக்கவில்லை.



வெற்றியின் கண்களில் ஒரு பீச் நிற புடவை பட, அதை கையில் எடுத்தவன், "இந்த புடவை எப்படி இருக்கு?" என்று கேட்கவும், அதை கையில் வாங்கிய அகல்யா, "எனக்கு பிடிச்ச கலர்.. ரொம்ப நல்லா இருக்கு வெற்றி", எனவும், "மாமாக்கு புடவை எல்லாம் எடுக்க தெரியும்னு இன்னைக்கு தான் எங்களுக்கு தெரியும் அக்கா", என்று அழகு சொல்ல, "அண்ணா தேறிட்டார்", என்று மதுவும் அவனை வாரினாள்.



அவர்கள் அனைத்தையும் வாங்கி கொண்டு வெளியே வர, அகல்யாவை நோக்கி கத்தியுடன் வந்தது ஒரு கரம்.
 

அத்தியாயம் 7

"அக்கா", என்று அழகு கத்த, அகல்யாவை நோக்கி வந்த கத்தியை பிடித்து இருந்தான் வெற்றி.



அந்த முகமூடி போட்ட நபரை அவன் பிடித்து அடிக்க, இன்னொருவன் அகலயாவை பின்னிருந்து தாக்க வர, அவனை அப்படியே இழுத்து போட்டு மிதித்து இருந்தான் மாறன்.



அழகுவோ அகல்யாவின் கையை பற்றி கொள்ள, மதுவோ அவளின் மற்றொரு கையை பற்றி கொண்டாள்.



இரு ஆண்மகன்களும் மேலும் இரண்டு நபர்கள் அகல்யாவை தாக்க வர, அவர்களையும் புரட்டி போட்டு இருந்தார்கள்.



இவற்றை எல்லாம் பார்த்து கொண்டு இருந்தது ஒரு உருவம்.



அகல்யாவின் கண்கள் அந்த உருவத்தை தான் பார்த்தது.



"அவனை பிடிங்க வெற்றி", என்று சொன்னதும், அந்த நபர் ஓட ஆரம்பிக்க, அதற்குள் மாறன், பக்கத்தில் இருந்த கட்டையை தூக்கி எரிய, அது அவனின் காலில் பட்டு அப்படியே விழுந்து இருந்தான்.



அகல்யாவோ விரைந்து அந்த உருவத்திற்கு பின் செல்ல, "சைலேஷ்", என்று அவனின் முன் நின்று இருந்தாள் அகல்யா.



"இப்படி பண்ண உனக்கு வெட்கமா இல்ல?", என்று கேட்கவும், எழுந்தவன் ஆவேசமாக அவளின் கழுத்தை பற்ற வர, வெற்றியோ அவனின் கையை முறுக்கி இருந்தான்.



"யாரு இது அகல்?",என்று கேட்கவும், "மினிஸ்டர் பையன் என்னோட லெப் மெட்... அவன் மேல ஒரு கேஸ் கொடுத்து இருந்தேன். அதான் என்ன போட வந்து இருக்கான்", என்று சொல்லவும், "இது மட்டும் என் அப்பாக்கு தெரிஞ்சா என்ன ஆகும் தெரியுமா?", என்று சைலேஷை பார்த்து கேட்கவும், "என்ன டி பண்ணுவாரு... என்னோட இத கூட புடுங்க முடியாது", என்று அவன் சொல்லி முடிக்கும் முன் அவனின் முகத்தை குத்தி இருந்தான் மாறன். அவன் அடித்த அடியில் இரண்டு பற்கள் கீழே விழுந்து விட்டன.



"புடுங்க முடியாதுனு சொன்ன... புடுங்க வேணாம் அதுவே விழுந்திருச்சு", என்று அவன் நிதானமாக பேச, வலியில் கத்தியது என்னவோ சைலேஷ் தான்.



"ஓழுங்கா ஊரு போய் சேறு", என்று சொல்லி விட்டு, அவர்கள் அங்கிருந்து நடக்க, "ஏன் அகல் அவன் உன்ன ஆளு வச்சி எல்லாம் அடிக்க வந்தான்?", என்று மீண்டும் வெற்றி கேட்க, "லெப்ல இருக்க பொண்ணு கிட்ட எல்லாம் தப்பா பிஹேவ் பண்ணான். என் மேலையும் கைய வைக்க ட்ரை பண்ணான். அதான் வுமன் ப்ரொடெக்ஷன்ல கம்ப்ளையிண்ட் கொடுத்தேன். அந்த கோவத்துல தான் இப்படி பண்ணிட்டான்", என்று அவள் கூறவும், "அகல் நீ தனியா சென்னை போக வேணாம். நானும் வரேன்", என்று வெற்றி சொல்ல, "நானும் வரேன் மாமா", என்று சொல்லி இருந்தாள் அழகு.



"நானும் வரேன் அண்ணா", என்று மதுவும் சொல்ல, "நீ ஏன் வரேன்னு எனக்கு தெரியும்", என்று வெற்றி அவளை பார்க்க, "ப்ளீஸ் அண்ணா... அவரு வேற யுஎஸ் போய்டுவாருல", என்று சொல்ல, "சித்தப்பாக்கு தெரிஞ்சா என்ன ஆகும் தெரியுமா?", என்று மாறன் கத்தவும், "அதெல்லாம் ஒன்னும் சொல்ல மாட்டாங்க.. அண்ணா ப்ளீஸ்", என்று மீண்டும் கெஞ்சினாள்.



"யாரை பார்க்க இவளோ கெஞ்சுறா?", எனவும், "என் அண்ணா தான் அக்கா", என்றாள் அழகு.



"லவ் தானே செம்ம!", என்று அவள் சொல்லவும், மாறன் அகல்யாவை முறைக்க, "சார் நீங்க தான் கண்ணுக்கு எதிரே தல தலன்னு இருக்க பொண்ண லவ் பண்ண மாற்றிங்க... அட்லீஸ்ட் பண்ற பொண்ணையாச்சு விடுங்க", என்று சொல்லவும், சலிப்பாக தலையை ஆட்டி கொண்டான்.



அனைவரும் வீடு செல்லும் சமயம், "வெற்றி இங்க நடந்த எதையும் யாரு கிட்டயும் சொல்ல வேண்டாம். தெரிஞ்சா பெரிய பிரச்சனை ஆகிடும்", என்று அகல்யா சொல்ல, "இத உன் பின்னாடி ஹனுமான் வாலு மாதிரி சுத்துறாளே அவ கிட்ட சொல்லு", என்ற மாறனின் முதுகில் அடித்து இருந்தாள் அழகு.



அனைவரும் வீடு வந்து சேர்ந்திட, "அம்மா அகல்யாவோட நாங்க எல்லாரும் சென்னை போறோம்", என்று வெற்றி சொல்ல, "எங்க டா தங்குவிங்க?", என்று கேட்கவும், "ஆதர்ஷ் அண்ணா வீடு இருக்கு தான் அத்தை.. ஆனா நாங்க எங்க காலேஜ் கெஸ்ட் ஹோஸ்ல தங்கிக்கிறோம்.. அண்ணா ஆல்ரெடி நிறைய வேலையா இருக்காரு... அங்க கொஞ்சம் சூழ்நிலையும் சரி இல்ல", என்றவள் சொல்ல, வெற்றியின் கண்கள் அவளை தான் மேய்ந்தன.



நல்ல பெண் அவள், அவனின் தங்கைக்காக அவளின் வாழ்க்கையை பகடையாக வைத்து இருக்கிறாள்.



தளிருக்காக ஆருஷிடம் சண்டை கூட போட்டிருந்தாள்.



ஜானவியை சமாளித்து, ஆதியிடமும் பேசி, அனைவரையும் ஓருங்கினைக்கும் அவளின் இந்த பேச்சு தானே அவளை முதலில் ஈர்த்தது.



இன்றும் அவன் நினைவில் முதன்முதலில் அவளின் குரலை கேட்ட தருணம் நினைவில் அப்படியே இருந்தது.



மறக்க முடியா தருணம் அது!



அவளின் குரலில் உள்ள காந்தமா? அல்லது அந்த குரலில் உள்ள அக்கறையா ஏதோ ஒன்று அவனை ஈர்த்து தான் விட்டது.



அவளின் புகைப்படம் கூட பின்பு தான் அவன் பார்த்து இருந்தான்.



"வெற்றி நீ எல்லாத்தையும் பார்த்துக் ப்பா", என்ற தாயின் குரலில் சட்டென சுயத்திற்கு வந்தவன், "சரி மா", என்று சொல்லி சென்று விட்டான்.



அடுத்த நாள் விடிய அனைத்தையும் அடுக்க ஆரம்பித்து இருந்தாள் அகல்யா.



"நான் போய் சித்தப்பா கிட்ட பேசிட்டு வரேன் அகல்", எனவும், "சரி வெற்றி", என்று புன்னகைத்து அனுப்பி வைத்து இருந்தாள்.



அவனும் மதுவின் வீட்டை அடைந்து விட, வீட்டில் பூகம்பமே வெடித்து கொண்டு இருந்தது.



"உன்ன எல்லாம் அனுப்ப முடியாது", என்று ஒற்றை காலில் அவன் சித்தப்பா நிற்க, "அப்பா அண்ணா இரண்டு பேரும் என் கூட தான் வராங்க தானே", என்று சிணுங்கி கொண்டே கண்ணில் கண்ணீருடன் நின்று கொண்டு இருந்தாள் மது.



வெற்றி உள்ளே நுழைய, "அண்ணா", என்று அவனை கட்டி அணைத்து கொள்ள, "வெற்றி நீ அவளுக்கு பரிஞ்சி பேசாத சொல்லிட்டேன்", என்று கறாராக அவர் பேசவும், "நான் தான் போறேன் சித்தப்பா... என் மேல நம்பிக்கை இல்லையா உங்களுக்கு", என்று அவன் கேட்கவும், "உன் மேல இருக்கு ஆனா இவ அங்க யாரை பார்க்க போறான்னு எனக்கு தெரியும்", என்று அவர் மதுமதியை முறைத்து கொண்டே கூறினார்.



"சித்தப்பா பார்த்தா தான் என்ன? அவனுக்கு முறை தானே", என்று அவன் சொல்ல, "யாரு முறை, என்னைக்கு அவன் ஆத்தா நாங்க எல்லாம் வேணாம்னு எங்களை ஒதறிக்கிட்டு போனாலோ அப்பவே ஒட்டும் இல்ல... உறவும் இல்லனு ஆகிருச்சு.. ஆடு பகை குட்டி உறவா?", என்று அவர் பேசவும், "சித்தப்பா அவ என் கூட தான் இருக்க போறா.. என் தங்கச்சிய நான் அப்படியே விற்றுவேனா", என்று அவன் பேசவும் கூட அவர் இறங்குவதாக இல்லை.



வெற்றியோ விழிகளை மூடி திறந்து, "அப்போ உங்களுக்கு உங்க பொண்ணு மேல நம்பிக்கை இல்லையா?", என்று கோவமாக கேட்க, "அதெல்லாம் இருக்கு", என்று அவர் இறங்கி வர, "அப்போ அனுப்பி வைங்க", என்று காட்டமாக பேசினான்.



"இங்க பாரு வெற்றி... உனக்காக தான் அனுப்பி வைக்குறேன்... ஆனா கல்யாணம்லாம் நடக்காது சொல்லிட்டேன்", என்றவர் சொல்ல, மதுவின் கண்ணீர் வெற்றியின் சட்டையை நனைத்தது.



யாழும் அவளும் அவனுக்கு ஒன்று தான்.



யாழின் கண்ணீரை துடைக்க முடிந்தவனால், மதுவின் கண்ணீரை துடைக்க முடியாமல் போய் விட்டது.



அவர் சம்மதம் தெரிவித்ததே பெரிய விடயம் என்பது போல் தான் அவர்களுக்கு தோன்றியது.



அனைத்தையும் அவர்களின் வண்டியில் ஏற்றி விட்டு, மாறன் வண்டியை ஓட்ட துவங்க, "நான் கூட உன்ன மாமா விட மாட்டாரோன்னு நினைச்சேன்", என்று அழகு கூற, "ஏதோ வெற்றி அண்ணா புன்னையத்துல தான் டி", என்று அவளும் சலித்து கொண்டாள்.



அடுத்த நாள் விடிய, அனைவரும் சென்னை வந்து விட்டார்கள்.



மது தான் முதலில் போய் குளித்து விட்டு வந்திருந்தாள்.



"என் அண்ணாவை பார்க்க என்ன விட நீ தான் டி ரொம்ப ஆர்வமா இருக்க", என்று அழகு சொல்ல, "உனக்கு என்ன டி உன் ஆளு உன் கண்ணு முன்னாடியே இருக்காரு.. எனக்கு அப்படியா?", என்று கேட்டுக்கொண்டே அவர்கள் தயாராக, "நீங்க எல்லாரும் போங்க... நான் என் ப்ரொபசரை பார்க்க போறேன்", என்று அகல்யா சொல்லி விட, மது, அழகு, மாறன் மற்றும் வெற்றி மட்டும், அருகில் உள்ள ஒரு உணவகத்திற்கு சென்றனர்.



அங்கே அவர்களுக்காக காத்து கொண்டிருந்தான் அவிரன்.
 

அத்தியாயம் 8

அவிரனை பார்த்ததும், "மாமா", என்று மது சென்று அவனின் அருகில் அமர, மாறனோ குரலை செருமினான்.



"பார்த்து டா தொண்டை அடிச்சிக்க போகுது", என்று அவி சொல்லவும், "அவருக்கு இதே வேலை அண்ணா", என்று அவியின் மற்றோரு பக்கம் சென்று அமர்ந்தாள் அழகு.



அண்ணனும் தங்கையும் எப்போதும் ஒரே போல் தான். கள்ளம் கபடம் இல்லா உள்ளம் அவர்கள் இருவருக்குமே!



"எப்படி டா இருக்க?", என்று வெற்றி கேட்டுக்கொண்டே அவனின் எதிரே அமர, "அதான் மொத்தமா என்ன முடிக்க பிளான் பண்ணிட்டியே", என்றவன் முறைக்க, "உனக்கு மது வேணுமா வேண்டாமா?", என்று புருவம் உயர்த்தி கேட்கவும், "மதிக்காக மட்டும் தான் சும்மா இருக்கேன்.. எனக்கு மதி வேணும்", என்றவன் அவளின் கையை பற்றவும், மாறன் அவனை முறைத்தான்.



"கைய தானே பிடிச்சி இருக்கேன்.. நீ என் தங்கச்சிய கிஸ் பண்ணி இருக்க", என்றவன் சொல்லவும், மாறனின் கண்கள் வெளியே விழுந்து விடும் அளவுக்கு விரிந்து, அப்படியே திரும்பி அழகுவை பார்த்து பொசுக்கும் பார்வை பார்த்தான்.



"ஐயோ அண்ணா என்ன இப்படி போட்டு கொடுத்துட்டே?", என்றவன் காதுகளில் பேசவும், "பின்ன என்ன டி கைய பிடிச்சாலே இப்படி பாக்குறான்", என்று அவனும் சிடுசிடுப்பாக பேசினான்.



"நீ வா என் கூட", என்று வெற்றி அழைத்து கொண்டு நகர்ந்து செல்ல, அவர்கள் அனைவரும் அவர்களுக்கு தேவையான உணவை சொல்லி இருந்தார்கள்.



"சொன்னது எல்லாம் நினைவு இருக்குல", என்றவன் கேட்க, "இருக்கு டா... ஐயோ ஆருஷ் என்ன அடிச்சி கொள்ளாம இருந்தா சரி தான்", என்று புலம்பவும், "உனக்கு என் தங்கச்சி வேணும் தானே", என்று புருவம் உயர்த்தி கேட்கவும், "மதி எனக்கு மட்டும் தான்", என்று அவன் மீண்டும் சொல்ல, "இதையே அவன் முன்னாடி சொல்லு போதும்.. வேற எதுவும் வேண்டாம்... அவனுக்கு சுர்ருன்னு ஏறும்... அப்படியாவது அந்த பொண்ண கல்யாணம் பண்ணிக்கிறானா பார்க்கலாம்", என்றான் வெற்றி.



"நீ ஏன் டா இவளோ எபோர்ட் போடுற? தளிருக்கு நல்ல மாப்பிள்ளை பார்க்கலாம்ல?", என்று கேட்டே விட்டான்.



"ஆருஷ் நல்லவன் தான். ஏதோ கிறுக்கு தனம் பண்ணிருக்கான். எதுக்குன்னு தெரிஞ்சா போதும்", என்றவனை பார்த்து, "உனக்கு எப்படி அவனை பத்தி அவளோ தெரியும்? நல்லவனா கெட்டவனானுலாம் சொல்ற?", என்று அவனை யோசனையுடன் பார்த்தான் அவிரன்.



வெற்றி இப்படி அடுத்தவர்களை பற்றி அவ்வளவு எளிதில் பேச மாட்டான்.



வெற்றிக்கோ மண்டை காய்ந்தது. நண்பனின் தம்பி அவன், ஆதர்ஷ் சொல்லி ஆருஷ் பற்றி கேட்டு இருக்கிறான் தான். ஏன் ஆதியை பற்றியுமே கேட்டு இருக்கிறான்.



அதனால் தானே யாழை திருமணம் செய்து கொடுத்தது. வெற்றி நினைத்து இருந்தால் அந்த திருமணத்தை எப்படி வேண்டுமானாலும் நிறுத்தி இருக்க முடியும். ஆனால் ஆதியுடன் அவனின் தங்கையின் பெயர் இப்படி வெளியுலகிற்கு வந்த பின், வேற மாப்பிள்ளை பார்த்து அவன் திருமணம் முடிக்க விரும்பவில்லை. ஆதியே நல்லவன் தானே! அதற்கு பின் எதற்கு யோசனை என்று தான் அவனுடைய திருமணம் செய்ய வைத்தது.



மாறன் கூட ஒப்புக்கொள்ளவே இல்லை.



"இவன் போய் நம்ப யாழுக்கு மாப்பிள்ளையா? அவனை நாலு தட்டு தட்டி.. மீடியா முன்னாடி பேசுனத்துக்கு மன்னிப்பு கேட்க வச்சா முடிஞ்சிது", என்று அவன் சொன்னது இன்றும் அவனிற்கு நினைவு இருந்தது.



ஆனால் அப்படி எடுத்தோம் கவிழ்த்தோம் என்று அவனால் முடிவு எடுக்க முடியவில்லை.



ஒரு சில நேரம் யாழை பற்றி பேசும் போது ஆதர்ஷ் சொல்லி இருக்கிறான் தான்.



"உன் தங்கச்சி கேரக்டெர்க்கு என் தம்பி ஆதி தான் கரெக்ட்.. அவன் தான் பெரிய மன்மதனு நினைப்பு அவனுக்கு.. இவ தான் அவனை அடக்கி வைக்க பெர்பெக்ட்", என்று சொல்லும் போதெல்லாம், "டேய் அவன் அழகுக்கு என் தங்கச்சிய நிமிர்ந்து கூட பார்க்க மாட்டான்", என்று வெற்றி சொல்லவும், "அவன் அப்படி பட்ட ஆளுலாம் கிடையாது.. அவன் மட்டும் உன் தங்கச்சி நிலாவை பார்த்து, பேசுனானா... விழுந்திருவானு தோணுது... ஆனா நீ தான் நிலா போட்டோவை காட்டவே மாற்றியே", என்று சலித்து கொள்வான் ஆதர்ஷ்.



அந்த சிந்தனைகளை எல்லாம் ஒதுக்கி வைத்தவன், "இங்க பாரு அவி, எனக்கு அவன் மேல நம்பிக்கை இருக்கு.. தளிர் மேல நிறையவே அக்கறை இருக்கு... அந்த பொண்ணு என்ன அண்ணான்னு வாய் நிறைய கூப்பிடும் போதெல்லாம் அவளை நான் தங்கச்சியா தான் பார்த்தேன். இத்தனை நாள் யாழை அவளும் ஒரு சகோதரி மாதிரி தான் நடத்துனா... எனக்கு அவ வாழ்க்கை ரொம்ப முக்கியம்... நீ என்ன பண்ணுவியோ... பொசெசிவ் ஆக்கு, இல்ல அவனை அடி உதை என்னவேனா பண்ணு... அவங்க இந்தியா வரும் போது... தளிர் கழுத்துல தாலி இல்ல.. மது கழுத்துல நீ தாலி கட்ட மாட்ட", என்று சொல்லி இருந்தான்.



"எல்லாம் என் நேரம் டா.. ஐயோ நான் அந்த ஹல்க் கிட்ட அடி வாங்கி சாகாம இருந்தா சரி தான்... சின்ன வயசுல உன் தங்கச்சி படுத்துவா.. இப்போ நீ படுத்துற", என்று நெற்றியில் அடித்து கொண்டு இருவரும் சாப்பிடும் இடத்திற்கு வந்து விட்டார்கள்.



அனைவருக்குமான உணவு வர, சாப்பிட்டு முடித்தவர்கள் அகல்யாவிற்கும் உணவு வாங்கி கொண்டு தான் சென்றார்கள்.



"அண்ணா யுஎஸ்ல இருந்து எனக்கு ஏதாச்சு வாங்கிட்டு வா", என்று அழகு சொல்லவும், "நான் உயிரோட வரேன் டி முதல்ல.. வந்தா பார்ப்போம்", என்று சொன்னவன் மதுவிடம் திரும்பி, "எல்லாத்துக்கும் காரணம் உன் அப்பா தான்.. எனக்குன்னு வந்து செரூரிங்க பாரு... நானே டம்மி பிஸ் என்ன வில்லன் ரேன்ஜ்க்கு நான் காட்டிக்கணும்... ஐயோ ஐயோ எனக்கே சிரிப்பா தான் வருது.. எல்லாத்துக்கும் காரணம் நீ தான் டா", என்று வெற்றியை பார்த்து சொல்ல, "நான் இல்ல எல்லாத்துக்கும் காரணம் கிகி தான் (டேய் என்ன ஏன் டா கோர்த்து விடுற? இரு சீக்கிரம் உன்னையும் அகல்யாவையும் பிரிச்சி விடுறேன்... இன்னும் லவ்வே ஆரம்பிக்கலல...)", என்று வெற்றி சொல்ல, "அது யாரு டா கிகி?", என்று அவி கேட்கவும், "அவ ஒரு அரை கிறுக்கி", என்று அழகு மயில் கூறவும், (உனக்கும் பாயசம் போடுறேன் வா), "சரி பை", என்று சொன்னவன், அப்படியே மதுவை பார்த்து விட்டு சென்று விட்டான்.



அவர்களும் மீண்டும் அகல்யாவின் பல்கலைக்கழகத்திற்கு வந்து விட, உணவை அவளிடம் கொடுத்தார்கள்.



"தேங்க்ஸ் வெற்றி", என்று சொல்லி சாப்பிட துவங்கி விட்டாள்.



"அக்கா நீங்க உங்க அண்ணா வீட்லயே இருக்கலாமே.. உங்க அண்ணா பசங்களையும் பார்த்துட்டு வரலாம்ல", என்று அழகு கேட்க, "போலாம் தான்.. ஆனா இப்போ வேணாம்... அவங்க கொஞ்சம் சாந்தினி அண்ணியோட இருக்கணும்னு தான் நான் ஆசை படுறேன்... அம்மா இல்லமாய் வளருறாங்க... இனியாவது அம்மா கூட வளரட்டும்", என்று அவள் சொல்ல, "அக்கா நீங்க ரொம்ப நல்லவங்க... யாழ் வாழ்க்கைக்காக மாமாவை கல்யாணம் செஞ்சிகிட்டீங்க, சாந்தினி அக்காக இவளோ யோசிக்கிறீங்க.. தளிர் அக்காவை பத்தி கூட கவலை பட்டிங்கனு மாமா சொன்னாரு", என்று அழகை பார்த்து, "எல்லாத்துக்கும் காரணம் கொற்றவை அம்மா தான்.. அவங்க கூடவே இருந்துட்டேன்.. அவங்கள மாதிரியே யோசிக்கிறேனோ என்னவோ", என்று சாப்பிட்டு முடித்து விட்டாள்.



மாலை நேரம் வந்து விட, காடுகள் அடர்ந்து மான்கள் துள்ளி குதித்து ஓடிக்கொண்டு இருந்ததது.



"சென்னை குள்ள இவளோ நல்ல இடம்னு யாருக்கும் தெரியாது அகல்...", என்று வெற்றி சொல்லவும், "ம்ம் ஆமா இது ஒரு தனி உலகம் தான்... ரொம்ப அமைதியாவும் இருக்கும் அதே சமயம் ஸ்டூடெண்ட்ஸோட ஆர்பாட்டமாகவும் இருக்கும்", என்று சொல்ல, அழகழகான பூக்களை பறித்து கொண்டு வந்தாள் அழகு.



"அக்கா செம்ம பிளேஸ்... ஐயோ சொர்கம் மாதிரி இருக்கு.. அப்படியே நடக்கலாமா?", என்று கேட்டவளிடம், தலையசைத்து நடக்க ஆரம்பித்து இருந்தார்கள்.



மாறனும் அவர்களுடன் தான் வந்தான்.



"நீங்க அர்ஜுன்லாம் ஒண்ணா தான் வளர்ந்திங்களா?", என்று கேட்கவும், "ஆமா அக்கா.. எல்லாரும் ஒண்ணா தான் வளர்ந்தோம்.. உங்களோடது பெரிய குடுமபம்ல?", என்ற அழுகுவை பார்த்து, "ஆமா ரொம்ப பெரிய குடும்பம்.. ஜாலியா இருக்கும்.. நான், ஜானவி, ஆதி அண்ணா, ஆதர்ஷ் அண்ணா, ஆருஷ் அண்ணா, அதர்வ் அண்ணா, சிவம் அண்ணானு ஒரே ஜாலியா இருக்கும்... அதர்வ் அண்ணா இறந்தது பிறகு தான் கொஞ்சம் எல்லாரும் பிசி ஆகிட்டோம். ஆருஷ் அண்ணா அப்படியே சைலன்ட் ஆகிட்டாரு... ஆதி அண்ணா இப்போ தான் வந்தே இருக்காரு லண்டன்ல இருந்து... சில நேரம் அவரோட பிரண்ட் விக்ரம் அண்ணாக்கு தான் கால் பண்ணி எல்லாமே கேட்டு தெரிஞ்சிக்குவோம்... ஆதர்ஷ் அண்ணா லைப் ரொம்ப பாவம் தான். ஜானவி தான் எல்லாருக்கும் செல்லம்", என்றவள் சொல்ல, "சூப்பர் அக்கா... அப்போ ஒரே ஹாப்பி பேமிலி", என்றாள் அழகு.



"சொல்லிக்கலாம்.. ஆனா எனக்கு உங்க வில்லேஜ் சைல்டு ஹூட் பத்தி தெரிஞ்சிக்க ரொம்ப ஆர்வமா இருக்கு... சொல்றிங்களா?", என்று ஆசையா கேட்டு இருந்தாள்.



அவள் கண்களில் அத்தனை ஆர்வம்.



"ரொம்ப போரிங்கா இருக்கும்", என்று வெற்றி சொல்ல, "அது போரிங்கா இல்லையானு நான் பாத்துக்குறேன்... சொல்லுங்க", என்று அவள் அவர்களை பார்க்க, அவர்களும் அவர்கள் மழலை நினைவிற்குள் அடி எடுத்து வைத்தார்கள்.



வெற்றி, மாறன், யாழ், அவிரன், அர்ஜுன், அழகு மயில் மற்றும் மதுமதியின் குறும்பான குதூகலிப்பான மழலை பருவம் இனி அடுத்த அத்தியாயத்தில் இருந்து...
 

அத்தியாயம் 9



"ரைட்டா?", என்று ஆறு வயதான குட்டி யாழ் கேட்க, "ரைட்டு", என்று நான்கு முதல் நான்கரை வயது இருக்கும் குட்டி அழகுவும், மதுவும், "ரைட்டு", என்று சொல்லி நொண்டி விளையாடி கொண்டு இருந்தனர்.



இதே சமயம், யாழின் மண்டையில் வந்து விழுந்தது ஒரு சின்ன கருங்கல்.



"ஆஹ்ஹ்ஹ்", என்று அவள் அலறி யார் அவளை அடித்தது என்று திரும்பி முறைத்து பார்க்க, அங்கு ஊண்டுகோளுடன் நின்று இருந்தான் பத்து வயது அவிரன். அவிர் நிலன். அவளின் அத்தை மகன்.



இருவருக்கும் கொஞ்சம் கூட ஆகாது. பெயரில் மற்றும் இருவருக்கும் ஒற்றுமை இருந்தது. நிலவின் நாமத்தை இருவரும் தாங்கி நிற்க, ஆனால் இருவரும் சூரியனை போல் பார்க்கும் போதெல்லாம் எரிந்து கொண்டே இருப்பார்கள்.



"டேய் அவியல்", என்று அவளின் கீச்சு குரலில் அவள் கத்த, "யாரு டி அவியல் நீ தான் டி சரியான குட்டி சாத்தான்", என்று அவனும் வந்து அவளுடன் சண்டைக்கு நின்றான்.



"யாரு டா குட்டி சாத்தான்?", என்று அவள் அவனின் தலைமுடியை பிடிக்க, அவனுக்கோ அப்போதே நன்கு அலையலையாக கேசம் இருக்கும், அவளின் கைகளுக்கு அது எளிதிலேயே மாட்டி கொண்டது.



"ஆஹ்ஹ்ஹ் வலிக்குது விடு டி குட்டி சாத்தான்", என்று அவனும் அவளின் இரண்டு குடிமிகளை பிடிக்க, அங்கே இருவருக்கும் நடுவே போர்க்கலாமே துவங்கி விட்டது.



"அண்ணா யாழ் அண்ணியை விடு", என்று ஒரு புறம் அழகுவும், "அக்கா மாமாவை விடு", என்று ஒரு புறம் மதுவும் சொல்ல, அவர்கள் காதுகளை அதெல்லாம் சென்று அடையவில்லை.



இருவரும் அங்கே பார்க்க, வெற்றி, மாறன் மற்றும் அர்ஜுன் தான் வந்து கொண்டு இருந்தார்கள்.



நேராக இருவரும் அங்கே ஓடினர்.



குட்டி பாவாடை சட்டையில் அழகுவும், குட்டி ப்ராக் அணிந்து கொண்டு மதுவும் வர, "அண்ணா", என்று மது அங்கே கைகளை காட்ட, "இரண்டு பேரும் மறுபடியும் சண்டை போடுறாங்களா?", என்று கேட்டுக்கொண்டே வெற்றி, மாறன் மற்றும் அர்ஜுன் ஓடினார்கள்.



வெற்றிக்கும் அவிரன்னுக்கும் ஒரே வயது தான்.



மாறனுக்கு, அர்ஜூனுக்கும் எட்டு வயது. ஆனால் மாறன் நன்றாக உடல் வைத்து இருப்பான். குண்டு என்று சொல்ல முடியாது ஆனால் பீமனை போல் நன்கு புஷ்டியான குழந்தை தான்.



வெற்றி சென்று அவிரனை பிடிக்க, யாழை அடக்க தான் கடினமாக இருந்தது.



"விடு யாழ் பேபி", என்று அர்ஜுன் அவளை பிடித்து இழுக்க, "விடுங்க அஜ்ஜு அண்ணா... இன்னைக்கு இவனை நான்...", என்றவள் திமிர ஆரம்பிக்க, "அவன் கிட்ட எதுக்கு டி சண்டைக்கு போற?", என்று மாறனும் அவளை மறுபுறம் பிடித்து இழுக்க, அவள் திமிறிக்கொண்டு இருந்தாள்.



ஆனால் அவிரன் அடங்கி தான் விட்டான்.



"என்ன டா நடந்தது?", என்று வெற்றி கேட்கவும், "நான் மங்கா அடிக்கலாம்னு உண்டிக்கோல்ல அடிச்சேன் டா...அது தெரியாம இந்த குட்டி சாத்தான் தலைல விழுந்திருச்சு", என்று அவன் சொல்ல, "யாரு டா குட்டி சாத்தான்? நீ தான் டா அவியல்", என்று மீண்டும் அவனை அடிக்க செல்ல, "நிலா", என்கிற வெற்றியின் ஒற்றை அழைப்பில் மொத்தமாக அடங்கி இருந்தாள் இரு வேங்கைகளின் இளவரசி.



வெற்றி சொன்னால் மட்டுமே அடங்குவாள் அவள்.



அவளோ உடனே முகத்தை திருப்பி கொள்ள, "நீ வீட்டுக்கு போ டா", என்று அவிரனை பார்த்து சொல்ல, அவனோ, "அம்மா உங்க எல்லாரையும் வீட்டுக்கு வர சொன்னாங்க... சாமி கும்பிடுறாங்களாம்", என்று அவன் சொல்லவும், புரட்டாசி மாதம் சாமி கும்பிட்டு வகை வகை சாதங்கள் வைப்பார்கள் என்று பிள்ளைகளுக்கு தெரியும்.



"சரி அப்போ வாங்க சாப்பிட போகலாம்", என்கவும், அனைவரும் அமைதியாக புறப்பட்டனர்.



யாழின் இருபுறமும் அர்ஜுனும், மாறனும் வர, அவிரன் வெற்றியுடன் நடக்க, மது வெற்றியின் கையையும், அழகு அவளின் அண்ணனின் கையையும் பிடித்து கொண்டு வந்தார்கள்.



மதுவின் அப்பா இப்போது ஊரில் இல்லாததால் அவளையும் தைரியமாக அழைத்து கொண்டு சென்று இருந்தான் வெற்றி.



அவர்கள் அனைவரும் உள்ளே வர, அவர்களின் அத்தை அன்னக்கிளி அவரின் கணவர் கணேசனுடன் அமர்ந்து இருந்தார்.



"அத்தை", என்று வெற்றி அழைக்க, "கண்ணு.. எல்லாரும் வந்துட்டீங்களா? வாங்க முதல்ல ஏதாவது குடிக்குறிங்களா?", என்று பாசமாக கேட்டார். அவருக்கு அண்ணன் பிள்ளைகள் என்றால் கொள்ளை பிரியம்.



யாழின் முக வாட்டத்தை கண்டு விட்டு, "என்ன கண்ணு என்ன ஆச்சு? என் எங்க யாழோட முகம் வாடி இருக்கு?", என்று அண்ணனின் மகனிடம் கேட்க அவளோ, "எல்லாம் உங்க மகன் அவியல் தான். உண்டிக்கோல் வச்சி மண்டைல அடிக்குறான்", என்று போட்டு கொடுத்து விட்டாள்.



அவ்வ்ளவு தான், "என்ன டா இதெல்லாம்?", என்று அன்னக்கிளி அவனை அடிக்க வர, "அத்தை அது தெரியாம தான் நடந்தது. உங்களுக்கு தான் அவங்கள பத்தி தெரியும்ல", என்று வெற்றி சொல்லவும் தான் அமைதி ஆகினார் அன்னம்.



"சரி சரி போதும் பிள்ளைங்களுக்கு சோறு போடு.. எல்லாரும் போய் கை கால் அலம்பிட்டு வாங்க", என்று கணேசன் சொல்ல, பிள்ளைகள் அனைவரும் கை கால் கழுவி கொண்டு வந்து அமர்ந்தனர்.



வாழை இலை போட்டு, சர்க்கரை பொங்கல், கேசரி, சுண்டல், பருப்பு வடை, புளியோதரை, எழுமிச்சை சாதம், தக்காளி சாதம், சாம்பார், தயிர் சாதம், முட்டைகோஸ் பொரியல், உருளைக்கிழங்கு வறுவல் மற்றும் ஊறுகாய் என்று அனைத்தையும் வைத்து இருந்தார் அன்னம்.



பிள்ளைகள் ஒவ்வொருவருக்கும் என்ன பிடிக்குமோ அதை அவர்களின் இலையில் நிறையவே வைத்து இருந்தார்.



அர்ஜுனுக்கு பருப்பு வடை பிடிக்கும் என்று மூன்று வடை வைக்க, "வேண்டாம் அத்தை", என்று சொன்னவனின் கையில் போட்டவர், "சாப்பிடுற", என்று மிரட்டி விட்டு தான் சென்று இருந்தார்.



அவிரன் அருகில் அமர்ந்த யாழின் இலையில் அவனின் இலையில் உள்ள முந்திரி பருப்புகள் அனைத்தையும் அவளின் இலையில் வைத்து கொண்டே சென்றான்.



"எனக்கு வேணாம்", என்று அவள் சொல்ல, "உனக்கு பிடிக்கும்ல சாப்பிடு", என்று அவன் வைக்கவும், அவளும் வேண்டாம் என்று மீண்டும் மறுக்கவெல்லாம் இல்லை. அவளுக்கு உண்மையாகவே வறுத்த முந்திரி என்றால் பிடிக்கும். அமைதியாக சாப்பிட்டாள்.



அவ்விரனுக்கு யாழின் மேல் அக்கறை எப்போதும் இருக்கும். சண்டை போட்டாலும், அவளை அவன் விட்டு கொடுத்துவெல்லாம் விட மாட்டான்.



அவனுக்கு எப்போதும் அவள் அவனின் குட்டி சாத்தான் தான். ஆனால் அவனை தவிர யாரையும் அவன் சீண்ட விட்டதே இல்லை.



இங்கோ மாறனின் இலையில் இருந்த கேசரியை எடுத்து சாப்பிட்டு கொண்டிருந்தாள் அழகு.



"ஏன் டி என் இலைல இருந்து எடுக்குற?", என்று அவன் அவளை பார்த்து முறைக்க, குண்டு கண்களை உருட்டி, "நல்லா இருக்கு மாறா... அதான் சாப்பிட்டேன்... உனக்கும் வேணுமா?", என்று அவளின் எச்சில் கையால் அவனுக்கு கொடுக்கவும், "ச்சீ எச்சி", என்று அவன் திரும்பி கொண்டான்.



இதே சமயம், அர்ஜுனின் இலையில் அவனின் பருப்பு வடையும் வைத்து இருந்தான் வெற்றி.



"டேய் ஏன் டா ஆல்ரெடி அத்தை தான் மூணு வச்சிட்டாங்களே", என்று அவன் சொல்ல, "பரவால்ல சாப்பிடு டா", என்றவன் அவனும் சாப்பிட ஆரம்பித்தான்.



அவர்கள் சாப்பிட்டு முடிய, "அத்தை சாப்பாடு ரொம்ப நல்லா இருந்தது", என்ற வெற்றியிடம் அவனின் தாய்க்கு கேசரியும் பருப்பு வடையும் கொடுத்து விட்டனர்.



மதுவோ, "எனக்கும் வேணும்", என்று சொல்ல, அன்னமோ தயங்கி நின்றார்.



"அத்தை சித்தி மட்டும் தான் இருக்காங்க", என்று வெற்றி சொல்லவும், அவளுக்கும் கொடுத்து விட்டார். அவரின் சின்ன அண்ணாவை பற்றி அறிந்தவர் ஆயிர்றே!



"சரி அத்தை நாங்க போய்ட்டு வரோம்", என்று மாறன் சொல்ல, "சரி டா கண்ணா", என்று அவனின் தலையை கொதி விட, "அத்தை நான் ஒன்னும் சின்ன பையன் இல்ல", என்று குட்டி மாறன் கோவப்பட்டான்.



"உனக்கு என்ன கோவம் வருது மருமகனே... உன்ன கட்டிக்க போற பொண்ணு பாவம் டா", என்கவும், "உங்க பொண்ணு தான் கட்டிக்க போறா", என்று சொல்லி இருந்தார் அன்னம்.



"வெற்றி இருக்கானே டி", என்று கணேசன் சொல்ல, "வெற்றிக்கு வெளிய தான் பொண்ணு வரும்னு தோணுது... நீங்க வேணா பாருங்க.. என் மாறனுக்கு தான் அழகு", என்றவர் வாயாலேயே அழகு வேறுஒருவருக்கு என்று சொல்லும் காலம் வரும் போது என்ன செய்வாரோ அன்னம்.



அவர்கள் அனைவரும் வீட்டிற்கு சென்று விட, அர்ஜுன் அவனுக்கு என்று அவர்கள் கொடுத்த அறையில் இருந்தான்.



அவனின் அன்னை இறந்து மூன்று ஆண்டுகள் ஆகி இருந்தது. அனாதையாக இருந்தவனை அப்படியே விட காத்யாயனிக்கு உண்மையாகவே மனம் கேட்க வில்லை.



"நீ எங்க கூடவே இருக்கியா?", என்று கேட்க, அவனும் அழுது கொண்டே தலையசைத்து விட்டான்.



சிறு பிள்ளை அவனுக்கு பாதுகாப்பு தான் முதலில் தேவை பட்டது.



முதலில் இருந்தே வெற்றி மற்றும் மாறனுடன் நன்கு பழகுவான். யாழும் அவனுக்கு பழக்கம் தான்.



அவன் ஒரு பிள்ளையாய் அவனின் அன்னைக்கு போய் விட, யாழை சொந்த தங்கை போல தான் பார்ப்பான்.



அவளுக்கு ஒன்று என்றால், கொதித்து விடும் அண்ணன் தான்.



அவன் தனியாக தூங்கவும், அவனின் அருகில் யாரோ படுப்பது போல் இருந்தது.



திரும்பி பார்த்தான். வெற்றி தான் படுத்து இருந்தான்.



"நீ ஏன் டா இங்க?", என்று கேட்கவும், "மாறன் யாழ் கூட இருக்கான். நீ தனியா இருப்பல அதான் வந்தேன்", என்று சொல்லவும், அர்ஜுனின் முகத்தில் அவ்வளவு ஆனந்தம்.



வெற்றி எப்போதும் அவனுக்கு ஒரு படி மேல் தான். அவன் என்றுமே அவனை தனியாக நிற்க விட்டதே இல்லை.



அந்த வயதிலேயே வெற்றிக்கு பக்குவம் நிறையவே இருந்தது.



நல்லவன் என்பதை தாண்டி அவன் நல்லவனுக்கு நல்லவன். கெட்டவனுக்கு காலன்.



வேந்தனாக உண்மையாகவே அந்த குடும்பத்தை அவன் தான் தாங்கி நிற்பான் என்று அனைவருக்குமே அந்த வயதிலேயே தெரிய ஆரம்பித்து இருந்தது.



யாரிடம் எப்படி பேச வேண்டும்? எப்படி பேச கூடாது என்று அனைத்தையும் அவன் அறிந்து இருந்தான்.



இப்படியாக அவர்கள் நாட்கள் சென்று கொண்டு இருந்தது.



நேரம் செல்ல செல்ல, அவர்களின் குறும்பும் கேலியும் கூட அதிகரித்தது.



பதினெண் பருவத்தை அடைந்தார்கள் அனைவரும்.... பதினான்கு வயது மாறனின் முன் நின்று இருந்தாள் பத்து வயது அழகு மயில்.
 


அத்தியாயம் 10

இளமாறன் முன்பு அவளின் குண்டு கண்களை உருட்டி கொண்டு, லாலிபாப் சாப்பிட்டு கொண்டு நின்று இருந்தாள் அழகு மயில்.



"என்ன டி சொன்ன உன்னோட பிரண்ட் ஐஷு கிட்ட?", என்று அவன் கர்ஜிக்க, அவளோ உதட்டை வெதும்ப, அவளின் உதட்டில் சுண்டி விட்டான்.



"ஆஹ் வலிக்குது", என்றவள் சொல்லவும், "நல்லா வலிக்கட்டும்... பத்து வயசுல கல்யாணம் கேட்குதா உனக்கு? அவ கிட்ட போய் என்ன சொன்ன?", என்று அவன் மீண்டும் கேட்க, "இங்க பாரு மாமா நான் ஒன்னும் பத்து வயசுல கல்யாணம் பண்ணிக்க கேட்கல... வளர்ந்து பெரிய பொண்ணு ஆனதும் தான் கேட்குறேன்... அவ கூட நீ டான்ஸ் ஆடுறது பிடிக்கல அதான் சொன்னேன். என் மாமனை நான் தான் கட்டிக்குவேன். நீ வேற பாய் பிரண்ட் பிடிச்சிக்கோன்னு", என்று கொஞ்சும் மழலை குரலில் அவள் பேச, அவளின் காதை பிடித்து திருகி விட்டான்.



"வலிக்குது விடு டா தடியா", என்று கத்தும் போதே, அங்கு அர்ஜுனும் யாழும் வந்து விட்டார்கள்.



"அண்ணா அவளை விடு", என்று யாழ் வந்து நிற்க, அர்ஜுனோ, "டேய் மாறா என்ன டா பண்ற? அவளை விடு... அப்புறம் உன்ன தான் திட்டுவாங்க", என்று சொன்னதும் தான் அவளின் கையை விட்டான்.



இதே சமயம் அவர்களின் தலைமை ஆசிரியர் முன் நின்று இருந்தார்கள் வெற்றியும் அவிரனும்!



படிப்பில் மட்டும் அல்ல, இருவரும் விளையாட்டிலும் படு சுட்டி.



"இந்த தடவையோட உங்க இரண்டு பேரையும் நாங்க கிரிக்கெட் டீம்ல இருந்து நிறுத்திருவோம். அடுத்த வருஷம் நீங்க ட்வெல்த்... நாங்க ஸ்டேட் ரேங்க் உங்க கிட்ட இருந்து எக்ஸ்பெக்ட் பண்றோம்", என்றவர் சொல்லவும், "இவரை யாரு டா இதெல்லாம் எக்ஸ்பெக்ட் பண்ண சொன்னா?", என்று அவி வெற்றியின் செவிகளில் சொல்லவும், அவனோ சலிப்பாக தலையை ஆட்டி கொண்டான்.



"அவி, கவர்ன்மென்ட் கோட்டால டாக்டர் சீட் வாங்கிறணும்.... வெற்றி நீயும் டாப் காலேஜ்ல சீட் வாங்கணும்", என்று சொல்லி அனுப்பி வைத்து விட்டார்.



"இந்த ஆளு என்ன டா சொதப்புறான். என் பிரண்ட் சொன்னான் அடுத்த தடவை தான் நல்ல மும்பை டீம் வரும் நீங்க ஒப்போனேன்ட்டா வந்தா செம்ம மேட்ச் இருக்கும்னு... சொதப்பிட்டார்", என்று அவி சலித்து கொள்ள அப்படியே இருவரும் பயிற்சிக்கு சென்று விட்டனர்.



இந்த விடயம் அர்ஜுன் மற்றும் மாறனுக்கு கூட தெரிவிக்க பட்டது.



"இந்த ப்ரின்ஸிய தூக்கிரனும் டா", என்று மாறன் சொல்ல, "கண்டிப்பா நீ தூக்கலாம் டா... நல்லா வெயிட்டா தான் இருக்க", என்று அவி சொல்லவும், "சிரிப்பே வரல டா", என்ற மாறனை பார்த்து, "விடு இந்த வருஷமாச்சு விளையாடனும்", என்று சொல்லி கொண்டார்கள்.



பயிற்சிகள் தீவிரமாக நடந்து கொண்டு இருந்தது.



அடுத்த நாள் அவர்களுக்கு கிரிக்கெட் மேட்ச் இருந்தது.



வெற்றி தான் அணியின் தலைவன். பதினாறு வயது தான், பதினோராம் வகுப்பு படித்து கொண்டு இருந்தான்.



ஐபிஎல் ஆரம்பித்து சில வருடங்களே ஆன தருணம் அது.



"என்ன டா இந்த வாட்டி இந்த மும்பை பசங்க வரல போல!", என்று மாறன் வந்து கேட்கவும், "ஆமா அடுத்த வருஷம் அனுப்புறேன்னு சொல்லிருக்காங்க", என்று அவிரன் கூறினான்.



"ஆனா நம்ப அடுத்த வருஷம் ஆட முடியாதே, அடுத்த வருஷம் வெற்றி டூவல்த், நம்ப டென்த் கஷ்டம்", என்றான் இளமாறன்.



"இந்த தடவையும் அப்போ நம்ப மும்பை பாய்ஸ் கூட போட்டி போட முடியாதா?", என்று பதினான்கு வயதான அர்ஜுன் கேட்க, "நீ ரொம்ப பீல் பண்ணாத ஒரு நாள் கண்டிப்பா நம்மளும் மும்பை பாய்ஸ் கூட கிரிக்கெட் ஆடி அவங்கள ஜெயிக்கலாம்", என்று சொல்லி இருந்தான் மாறன்.



"மும்பை வெர்சஸ் தமிழ் பாய்ஸ் எப்பவும் த்ரில்லா இருக்கும்.. இங்க யாரு ஜெயிப்பாங்கனு பார்ப்போம்", என்று சொல்லி இருந்தான் வெற்றி.



உண்மையாகவே அப்படி ஒரு சூழல் வரும் பொழுது அதுவும் சத்திரியன் சாணக்கியனுடன் சேர்ந்து ஆடும் நிலையும் வந்தால் ஜெயிப்பவர் எவரோ?



அடுத்த நாள் போட்டியில் நினைத்தது போல் அவர்கள் தான் வென்று இருந்தார்கள்.



வெற்றி இருக்கும் இடத்த்தில் தோல்வி வந்துவிடுமா என்ன?



வேந்தனாக வழி நடத்தி அவர்களை ஜெயிக்க வைத்து இருந்தான்.



அவர்கள் வீடு வந்த சமயம், வீட்டில் ஒரு கூட்டம்.



"என்ன டா ஒரே கூட்டமா இருக்கு?", என்று சொல்லிக்கொண்டே அவர்கள் நால்வரும் உள்ளே நுழைய, அங்கு அந்த வீட்டின் இளவரசி பூப்படைந்து இருந்தாள்.



"அண்ணா அம்மா என்ன விளையாட விட மாற்றங்க", என்று சிணுங்கி கொண்டே, யாரையும் தொட விடாமல், அவள் பாவமாக இருக்க, அவ்விரனோ, "இனியாச்சு அடக்க ஒடுக்கமா இரு டி குட்டி சாத்தான்", என்று சொல்லவும், "போடா அவியல்", என்று அவள் கத்தவும், அவளின் தலையில் நங்கென்று கொட்டினார் காத்யாயனி.



"அம்மா வலிக்குது", என்று அவள் முறைக்கவும், "வயசுக்கு வந்த பொண்ணு மாதிரி நடந்துக்கோ டி", என்று அவர் கடிய, "அப்படினா நான் என்ன பண்ணனும்?", என்று கேட்டவளிடம், "இவளை கட்டிக்க போறவன் ரொம்ப பாவம்", என்று வாய்விட்டே கூறி இருந்தார்.



"நம்ப நிலனுக்கு தான கொடுப்பிங்க", என்று அங்கிருந்த ஒரு முதியவர் சொல்ல, "சீச்சீ நான் இந்த பஜேரிய கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்.... பொண்ணா இவ பேய்... இவளுக்குனு எவனாச்சு இளிச்சவாயன் சிக்குவான். எனக்குலாம் கொஞ்சம் மென்மையான பெண் தான் வேணும்", என்றவன் சொல்லிக்கொண்டு இருக்கும் போதே, "அப்போ நம்ப மது தான்", என்று வேறொருவர் சொல்ல, யாழின் பின் இருந்த மது அவ்விரனை பார்த்தாள்.



இருவருக்கும் ஆறு வயது வித்தயாசம் இருந்தது.



"அப்படி எல்லாம் நடக்க வாய்ப்பே இல்ல", என்று சீறி இருந்தார் மதுவின் தந்தை.



மதுவின் முகமோ சுருங்கி விட்டது.



அவளுக்கு அவிரான் என்றால் கொள்ளை இஷ்டம்.



அழகானவன் அவன், பொறுப்பானவன், அதையும் தாண்டி பொறுமையானவன்.



யாழுக்கு அவனுக்கும் மட்டும் தான் ஆகாது. மத்த படி அனைவரையும் அனுசரித்து போய் விடுவான்.



யாழுக்கு புட்டு சுத்து நடக்கும் சமயம், காத்யாயணியின் தம்பி வந்து நிற்க, வெற்றியோ, "அவி போடட்டும் மாலை.... இந்த குடிகாரனை எல்லாம் போட வைக்க முடியாது", என்று அழுத்தமாக சொல்லி விட்டான்.



பதினாறு வயது தான் இருந்தாலும் அவனுக்கு நிறைய பக்குவம் இருந்தது.



"அவன் எதுக்கு ப்பா? அவங்க அப்பா வேற ஜாதி", என்று சொல்லிய சித்தப்பாவை பார்த்து, "உங்க பொண்ணுக்கு வேணா இந்த ஆள வச்சி செஞ்சிக்கோங்க", என்று சொல்லவும், "ஐயோ என் பொண்ணுக்கு நிலனை தான் ப்பா மாலை போட வைப்பேன்", என்று அவரின் மனைவி சொல்லி விட்டாள்.



சித்தப்பா மட்டும் தான் இப்படி, ஆனால் சித்தி தங்கமானவர். உண்மையை சொல்லவேண்டும் என்றால் அவருக்கு மதுவை அவிர் நிலனுக்கு கொடுத்து விட வேண்டும் என்று மனதில் ஆசை இருந்தது.



நல்ல பிள்ளை, நன்றாக படிக்கிறான், அழகாக இருக்கிறான். வளர்ந்தும் இப்படி தான் இருப்பான் என்று அவருக்கு ஒரு எண்ணம்.



மகளின் வாழ்க்கை அவரின் கண்முன் நன்றாக இருக்க வேண்டும் என்று தோன்றியது. ஒரே மகள் அல்லவா, அவருக்கு அடுத்து கரு தங்கவே இல்லை. தெரியாத இடத்தில் ஒற்றை மகளை கொடுத்து கவலை படுவதை விட, கண்ணிற்கு கண்ணாக அன்னம் பார்த்து கொள்வர் என்று அவருக்கு நம்பிக்கை இருந்தது.



யாழிற்கு அவி மாலை போட, அவளோ, "போட அவியல்", என்று பற்களை கடித்து கொண்டு கூற, "சரி தான் போ டி குட்டி சாத்தான்", என்று அவனும் சென்று விட்டான்.



அனைத்தும் முடிய, மதுவோ, "என் அக்கா மாமாவை பார்த்து முறைக்கிற, அவரு உனக்கு மாலை தானே போட்டு விட்டார்", என்று அவள் சொல்லவும், "உனக்கு அவளோ அவன் போட்ட மாலை புடிச்சி இருக்குன்னா, இந்த நீயே போட்டுக்கோ", என்று அவி அணிவித்த மாலையை மதுவின் கழுத்தில் போட்டு விட்டு இருந்தாள் யாழ்.



மணாளனின் கையால் மங்கை அவள் பத்து வயதிலேயே மாலை சூடி இருந்தாள்.



இப்படியாக நாட்கள் செல்ல, நினைத்தது போல், அவி மற்றும் வெற்றிக்கு நினைத்த இடத்தில் மேல் படிப்பிற்கான நுழைவு இடம் கிடைத்து விட்டது.



சென்னைக்கு தான் அனுப்பி வைத்தார்கள்.



"இரண்டு பேரும் சேர்ந்து தானே இருக்க போறோம்", என்று காத்யாயணியையும் அன்னத்தையும் தேற்றி விட்டு சென்று இருந்தனர்.



மாறனிடம் வந்து, "நிலா, அர்ஜுன், மது அப்புறம் அழகுவை நல்லா பார்த்துக்கோ", என்று சொல்லவும் வெற்றி தவற வில்லை.



அர்ஜுனிடம் வந்தவன், "இன்னும் இரண்டு வருஷத்துல நீயும் காலேஜ் போய்டுவ டா... நிலாவை மட்டும் கொஞ்சம் பத்திரமா பார்த்துக்கோ", என்று சொல்லி விட்டு இருந்தான்.



அவிரன், தண்ணீர் குடித்து விட்டு வர போக, அங்கே நின்று இருந்தாள் மதுமதி.



"என்ன வேணும்?", என்றவன் கேட்கவும், "ஒன்னும் இல்ல.. நீங்க போறிங்களா?", என்று கேட்க, அவனும் ஆமாம் என்று தலையசைக்க, "சரி", என்றவள் சொல்லி அனுப்பி வைத்து இருந்தாள்.



பதினோரு வயதில் காதல் எல்லாம் இல்லை, அவன் என் மாமன் என்கிற உரிமை மட்டுமே அவளிடத்தில் இருந்தது.



அவர்களும் சென்று விட, இரண்டு வருடங்கள் கழித்து, அழகுவின் முன் மாலையுடன் நின்று இருந்தான் மாறன்.
 

அத்தியாயம் 11



அழகு வயதிற்கு வந்து இருந்தாள். அன்னத்தை கையிலேயே பிடிக்க முடியவில்லை.



விடயம் அவரின் இரு அண்ணன்களுக்கு தெரிவிக்க பட்டது தான். மதுவின் தந்தை அவர் அங்கே எல்லாம் வர முடியாது என்று மறுத்து விட்டாலும், அவரின் மனைவி தான், "இருக்குறது ஒரு தங்கச்சி அவளுக்கும் ஒத்த பொம்பள பிள்ளை அதுக்கு கூட செய்ய முடியாதோ", என்று கேட்டு எப்படியோ அவரை வர வழைத்து விட்டார்.



அவிரன் மற்றும் வெற்றியால் தான் வர முடியவில்லை என்று சொல்லி விட்டார்கள். இருவருக்கும் பரீட்சை நடந்து கொண்டு இருந்தது.



"வெற்றி நீ தான் பா முறை செய்யணும்", என்று சிதம்பரம் சொன்னதற்கு, "அதான் மாறன் இருக்கான்ல, அவனை வச்சி செஞ்சிக்கோங்க", என்று சொல்லி விட்டான்.



இப்படியாக இருக்கையில், "டேய் மாறா இந்த அழகுக்கு மாலை போடு டா", என்று காத்யாயனி கொடுக்க, "நான் இவளுக்கு மாலை போடணுமா?", என்று பற்களை கடித்து கொண்டு கேட்கவும், "அண்ணா போடுங்க... எனக்கு அந்த அவியல் போடும் போது மட்டும் இனிச்சி இருக்குமா?", என்று கேட்டு இருந்தாள் யாழ்.



அவனும் வேறு வழி இன்றி மாலையை வாங்க, பதிமூன்று வயது பாவை அவள் அவனை பார்த்து, "ரொம்ப பண்ற டா மாறா", என்று சொல்லவும், "அடிங்க என் இடுப்பு சைஸ் இருக்க... டா போடுற நீ... இரு டி", என்று சொல்லி அவளின் கழுத்தில் மாலை போட்டுட்டு விட்டு அங்கிருந்து சென்று விட்டான்.



அடுத்து மாறனும் அர்ஜுனும் கூட படிக்க சென்று விட்டார்கள். மதுவும் பெரிய பெண் ஆகி விட்டாள். அவி இல்லை என்றாலும் அவனின் தந்தை கணேசன் அனைத்தையும் செய்து இருந்தார். மதுவின் அன்னை தான் கொஞ்சம் உருட்டி மிரட்டி அமைதியாக இருக்க வைத்தது.



வெற்றி அவனின் இளங்கலை பட்டம் முடித்திட, அடுத்து அவனுக்கு முதுகலை பயில ஹார்வர்ட் பல்கலை கழகத்திலேயே அனுமதி கிடைத்தது.



சிதம்பரம் மற்றும் காத்தியாயனிக்கு கூட அத்தனை மகிழ்ச்சி.



"அண்ணா சூப்பர்... நீங்க ஹார்வர்ட் போறீங்க", என்று யாழ் சொல்ல, "இதே மாதிரி நீயும் போற வழிய பாரு", என்று காத்தியாயனி சொல்லும் போது, "நான் ஐஐஎம்ல படிச்சிக்குறேன்", என்று சொல்லி நொடித்து கொண்டாள்.



"என் பொண்ண விடு டி... நீ அம்மிக்கல்லை விழுங்குன போல ஒருத்தனை பெத்து போட்டு இருக்கியே, அவனை மொதல்ல எதையாவது முடிக்க சொல்லு", என்று சொல்லவும், "அவன் எல்லாம் படிச்சிருவான். நீங்க கவலை படாதீங்க, உங்க இளவரசியை கொஞ்சம் பார்த்துக்கோங்க, அவளை எல்லாம் கட்டிக்கிட்டு என்ன பாடு பட போறானோ என் மாப்பிள்ளை", என்று சொன்ன அம்மாவை முறைத்து கொண்டு இருந்தாள் யாழ் நிலா.



அடுத்து அவி அவனின் டாக்டர் பட்டம் பெற்று அவனின் மேற்படிப்பிற்காக மகப்பேறுவை தான் தேர்வு செய்தான்.



அங்கே அவனுக்கு கிடைத்த நண்பன் தான் சிவம்.



இருவரும் ஒரே கல்லூரியில் ஒரே பிரிவை எடுத்து இருக்க, நல்ல நட்பு ஏற்பட்டது.



அவன் முதுகலை ஆரம்பிக்கும் முன் ஒரு முறை அவனின் ஊரிற்கு வரும் சமயம் தான், பதினெட்டு வயது மது அவனின் முன் வந்து நின்றாள். அப்போது தான் அவள் கல்லூரி செல்ல துவங்கி இருந்தாள்.



"என்ன?", என்று அவன் கேட்கவும், "மாமா, காலேஜ்ல ஒரு பையன் என்ன ரொம்ப டார்ச்சர் பன்றான்", என்று சொல்லவும், அவன் வீட்டு பெண் அல்லவா, தானாகவே கோவம் வந்தது.



"சரி நாளைக்கு உன் காலேஜ்க்கு வரேன்", என்று சொன்னவன் அடுத்த நாள் அவளுடன் அவள் பயிலும் கல்லூரிக்கும் சென்று இருந்தான். அவளும் அழகுவும் ஒரே கல்லூரி தான்.



"அண்ணா நான் சொல்றத கேளு, அவளை நம்பாத.. எனக்கு என்னவோ இவ தான் ஏதோ பண்ணிருப்பானு தோணுது", என்று சொல்லிருந்தாள் அழகு.



"எல்லாரையும் உன்ன மாதிரியே நினைக்காத டி", என்று சொல்லி மது சொன்ன அந்த மாணவனிடம் சென்று, "என்ன எங்க வீட்டு பொண்ண ஏதோ டார்ச்சர் பண்றியாம்", என்று கைகளை கட்டி கொண்டு அவன் கேட்கவும், "ஐயோ அண்ணா, நான் எதுவும் டார்ச்சர் பண்ணல, இவளும் நானும் தான் லெப் பார்ட்னர்ஸ்... கொஞ்சம் கூட ஹெல்ப் பண்ண மாட்டுறா", என்று அவன் சொல்ல, மதுவை திரும்பி பார்த்தான் அவி.



"தினமும், இத பண்ணு, அத பண்ணுனு சொல்லிகிட்டே இருக்கான் மாமா", என்று அவள் குற்றப்பத்திரிகை வாசிக்க, அவி அங்கேயே அவளின் காதை திருகி இருந்தான்.



"விடு டா மாமா, என் அப்பா கிட்ட சொல்லி கொடுத்திருவேன்", என்று மிரட்ட, "என் மாமனுங்க பெத்த இரண்டுமே ஒண்ணுத்துக்கு ஒன்னு சலச்சத்து இல்ல, என்ன சொல்லுவா உன் அப்பா கிட்ட? போய் சொல்லு, நானும் சொல்றேன்", என்று அவன் சொல்ல, "என்ன சொல்லுவீங்க", என்று அவன் தைரியமாக கேட்க, "ஹான், உங்க பொண்ணு யாரையோ லவ் பண்ணுதாம்னு சொல்லுவேன்", என்று சொன்னவனை பார்த்து, "நானும் சொல்லுவேன், ஆமா லவ் பண்றேன், அவி மாமாவை தான் லவ் பண்றேன், கல்யாணம் கட்டி வைங்கன்னு", என்று அவளும் தைரியமாக பேசினாள்.



இளம்கன்று பயமறியாது அல்லவா, அந்த நேரத்தில் மதுவும் காதலிக்க துவங்கி விட்டாள். ஆம், காதலிக்கிறாள், எப்படி? ஏன்? எங்கு? என்றெல்லாம் அவளுக்கு தெரியாது. ஆனால் அவளுக்கு அவியை பிடித்து இருந்தது.



சிறுவயதிலேயே அவளுடன் இருப்பவன் தான், ஆனாலும் அவனிடம் யாழை போல் அவள் சண்டையெல்லாம் போட்டதில்லை. அவன் என்றால் அவளுக்கு எப்போதும் இஷ்டம் தான்.



உரிமையால் வந்த காதலாக கூட இருக்கலாம்.



அவள் இப்படி சொன்னதும், அவள் காதை பிடித்து கொண்டிருந்த அவனின் கையை சட்டென விளக்கி விட்டான் அவி.



"என்ன மாமா?", என்றதும், "இதெல்லாம் செட் ஆகாது! இப்படி எல்லாம் எண்ணம் இருந்தா மறந்திரு", என்று சொல்லிவிட்டு சென்று விட்டான்.



மதுவிற்கு வேண்டும் என்றால் இந்த வயதில் சரி எது, தப்பு எது என்று தெரியாமல் இருக்கலாம், ஆனால் அவிக்கு தெரியுமே!



அவனின் மாமா நிச்சயமாக இதற்கெல்லாம் சம்மதிக்க மாட்டார். யாழ் என்றால் கூட சிதம்பரம் ஒப்புக்கொள்ளவார். ஆனால் மது, வாய்ப்பே இல்லை.



அவனும் இன்று வரை மதுவை அப்படி பார்த்தது இல்லை.



மது அடுத்து அழைத்து என்னவோ வெற்றிக்கு தான். அவனிடம் அனைத்தையும் சொன்னவள், "அண்ணா எனக்கு அவி மாமாவை பிடிச்சி இருக்கு, அவரை தவிர யாரையும் கல்யாணம் பண்ண மாட்டேன் பாருங்க", என்று சொல்லி வைத்து விட்டாள்.



அவர்களும் ஒரு கட்டம் வரைக்கும் பருவ கோளாறு என்று தான் நினைத்து இருந்தார்கள். மது அப்படி இல்லையே! மிகவும் அழுத்தமாக இருந்தாள். ஆனால், காலம் செல்ல செல்ல அவளுக்கு இந்த காதலால் வீட்டில் வர போகும் பூகம்பம் என்ன என்று மட்டும் தெரிந்தது.



ஆனாலும் அவளால் அவியை மறக்க முடியவில்லை. காதலித்து விட்டால், ஒரு கை பார்த்து விடலாம் என்கிற தைரியம் இருந்தது. அதற்கு காரணம் வெற்றியும் மாறனும் தான். அவளுக்கு மலை போல் இரண்டு அண்ணன்கள் இருக்கும் போது எதற்கு பயம்?



அவள் கல்லூரி முடித்து விட, மீண்டும் அவ்விரனை சந்தித்து அவளின் மனதை கூற, "நீ விடவே மாட்டியா டி?", என்று கேட்டு இருந்தான்.



"முடியாது மாமா", என்று அவளும் அப்படியே நின்று இருந்தாள். இந்த நாட்களில் அவனுக்கும் அல்லவா அவளை பிடித்து விட்டது. எவ்வளவு பிரச்சனை வந்தாலும் நீ தான் வேண்டும் என்று சொல்லும் பெண் அவனிற்கு பிடிக்காமல் போய் விடுமா என்ன?



அவனையே நினைத்து கொண்டு இருப்பவளை அவனாலும் எவ்வளவு நாட்கள் விலகி நிறுத்த முடியும்.



"எனக்கு நீங்க வேணும் மாமா", என்றவளுக்கு கண்ணீரே வந்து விட்டது.



அவனாலும் அதற்கு மேல் பொறுக்க முடியவில்லை, "அழாத டி... உன் அப்பா கிட்ட நான் பேசுறேன் போதுமா", என்றதும் அவளின் கண்களில் இருந்து கண்ணீர் அப்படியே நின்று விட்டது.



மாறனும் மேற்படிப்பிற்கு ஜெர்மனி சென்று விட்டான்.



அவனின் துறையில் அவனும் கை தேர்ந்தவன் தான். அர்ஜுன் கூட அவனே ஸ்கொலர்ஷிப் வாங்கி ஆஸ்திரேலியா சென்று படிக்க துவங்கி விட்டான்.



இப்படியாக அவர்கள் பெரியவர்கள் ஆக ஆக படிப்பிற்காக பிரிந்தாலும், அவர்களின் பாசம் மட்டும் குறையவே இல்லை.



இதில் அழகுவிற்கு தான் நாள் செல்ல செல்ல, மாறனின் மேல் நிறையவே காதல் மலர்ந்தது.



அனைவரின் முன்னும் அவனை சீண்டி விட்டாலும், அவளின் மனதிற்குள் ஆயிரம் பூக்கள் அவன் பூக்கவைப்பது அவளுக்கு மட்டுமே தெரியும்.



இப்படியாக அவர்கள் சொல்லி முடிக்க, "செம்ம கியூட்... மது சீக்கிரமே நீ அழகு அண்ணாவை கல்யாணம் பண்ணிக்கனும்னு நான் வேண்டிக்கிறேன்", என்று அகல்யா சொல்ல, "அட போங்க அண்ணி, என் அப்பா எப்போ மனசு மாறி, எப்போ எங்க கல்யாணம் நடந்து, அறுபதாம் கல்யாணம் தான்", என்று பெருமூச்சு ஒன்றை விட்டு கொண்டான்.



அனைவரும் சென்று உறங்கி விட்டார்கள்.



அடுத்த நாள் விடிய, அன்று தான் அகல்யாவின் உரையாடல் இருந்தது.



அவளுக்கு பதட்டம். என்ன தான் அவள் நிறைய முறை இதை எல்லாம் செய்து இருந்தாலும், இந்த முறை நிலையே வேறு! வருபவர்கள் எல்லாம் பெரிய உத்யோகத்தில் இருப்பவர்கள்.



அவர்களின் முன் பேசுவது அவளுக்கு கொஞ்சம் பயத்தை கொடுத்தது என்னவோ உண்மை தான்.



வெற்றி ஒரு அழைப்பு வரவும் சென்று விட, அகலயாவிற்கோ கைகளில் கூட வியர்வை வர துவங்கி விட்டது.



"ஏன் இப்படி நேர்வஸ்ஸா இருக்க?", என்று கேட்டுக்கொண்டே அவளின் அருகே வந்தான் மாறன்.



"வருவாங்க எல்லாம் டாப் சயின்டிஸ்ட் மாறன்.. பயமா இருக்கு", என்றவள் கைகள் பிசைந்து கொண்டே கூற, அவளின் கையை விடுவித்து இறுக பற்றி இருந்தான் மாறன்.



அவளை அப்படியே நாற்காலியில் அமர செய்தவன். அடுத்து பேச பேச அகல்யாவின் மனபாரம் யாவும் இறங்கிய உணர்வு.
 

அத்தியாயம் 12

அகல்யா மேடை ஏறினாள். சிறிது நேரத்திற்கு முன் அவளுக்கு இருந்த பதட்டம் எல்லாம் சுத்தமாக போய் இருந்தது. அனைத்திற்கும் காரணம் மாறன் தான்.



அவனின் பேச்சே அவளுக்கு ஆயிரம் யானை பலத்தை கொடுத்து இருந்தது.



அவளின் கையை பிடித்தவன், "அகல்யா, இந்த ரிசர்ச்சை தானே நீ அஞ்சு வருஷமா பண்ணிக்கிட்டு இருக்க? உன்ன விட இந்த வேலைய பத்தி யாருக்கு தெரியும்? எனக்கு தெரிஞ்சி உன் ப்ரொப்க்கு கூட தெரியாது.. நீ தான் இதுல குயின். நீ என்ன பேச போறியா அதுல இருந்து தான் கேள்வி வரும். தெரிஞ்சா தெரியும் சொல்லு இல்லனா, இந்த ஆங்கல்ல நான் யோசிக்கலனு சொல்லி முடிச்சிரு.. உன்னால கண்டிப்பா இத நல்லா பண்ண முடியும். யாரும் உன்ன க்ரிடிஸைஸ்லாம் பண்ண மாட்டாங்க... சோ சில்", என்று அவன் சொல்லவும், அவளுக்கு கொஞ்சமே கொஞ்சம் பயம் போய் விட்டது தான்.



"அப்படியும் மீறி எவனாச்சு ஏதாச்சு பண்ணா, நான் வேணா அங்கேயே அவன் வாயா உடைகிறேன் போதுமா?", என்று கைகள் விரித்து அவன் கேட்கவும், அகல்யாவிற்கு சிரிப்பு வந்து விட்டது.



இப்போது மொத்தமாக தெளிந்து இருந்தாள்.



அவளின் சிரிப்பை பார்த்தவன், "குட் இதே மைண்ட் செட்ல போய் பேசு", என்று கையை நீட்ட, அவளும் நீட்டினாள்.



"ஆல் தி பெஸ்ட்", என்று சொல்லவும் சிரித்து கொண்டே எழுந்து கொண்டாள்.



இதோ பேசியும் முடித்து விட்டாள். அனைத்து கேள்விகளுக்கும் தைரியமாக பதில் சொன்னாள்.



அனைத்தும் முடிய, மாறனிடம் தான் சென்றாள்.



"ரொம்ப தேங்க்ஸ்... மோட்டிவேஷன் கொடுத்ததுக்கு", என்று அவள் அகமகிழ்ச்சியுடன் கூறவும், "அதெல்லாம் ஓகே தான். ட்ரீட் கொடு", என்றவனை பார்த்து தலையசைத்தவள், "பிரண்ட்ஸ்?", என்று கை நீட்டி இருந்தாள்.



அவனும் இரண்டு நொடி யோசித்து, "பிரண்ட்ஸ்", என்று இருவரும் கை குலுக்கி இருந்தனர்.



இதை சிறிது தூரத்து இருந்து பார்த்த வெற்றி, அழகு மற்றும் மதுவிற்கு தான் கண்கள் விரிந்தன.



"என்ன இந்த மாறன் அகல்யா அக்கா கிட்ட நட்பு பாராட்டுறான்? நம்ப கிட்ட எல்லாம் மூஞ்ச கல்லு மாதிரி வச்சிருக்கிறான்", என்று அவள் கழுத்தை நொடிக்க, "உனக்கு வயித்தெரிச்சல் தானே?", என்று வெற்றி கேட்க, "இல்லனு பொய் சொல்ல மாட்டேன் மாமா... சின்ன வயசுல இருந்து அவன் பின்னாடி தெரியுற என் கிட்ட ஒரு நாலாவது சிரிச்சி பேசி இருக்கானா இந்த மலை மாடு", என்று சொல்லவும், "என் அண்ணாவை மலை மாடுனு சொல்லாத", என்று மது பேசவும், "அட போ டி நீ தான் வச்சுக்கணும் உன் நொண்ணன", என்று பேசி விட்டு சென்று விட்டார்கள்.



இரண்டு நாட்கள் எப்படி சென்றது என்றே தெரியவில்லை. சென்னையை சுற்றி பார்த்தார்கள். இந்த இரண்டு நாட்களில் மாறன் அகல்யாவின் நட்பில் தான் நிறைய முன்னேற்றங்கள் இருந்தது.



அகல்யாவும் பெரிதாக பேசுபவள் அல்ல, மாறனும் பெரிதாக பேசுபவன் அல்ல, இருவரின் குணநலன்களும் ஒன்றாக இருப்பதாலோ என்னவோ இருவராலும் எளிதாக ஒன்ற முடிந்தது.



அனைத்தும் முடிந்து மீண்டும் ஊருக்கும் வந்து சேர்ந்து விட்டார்கள்.



அவர்கள் ஊருக்கு வரும் சமயம், அங்கே வந்து இருந்தான் அர்ஜுன்.



"டேய் அபி", என்று அவன் வந்ததும் மாறன் கட்டி அணைக்க, "எப்படி டா இருக்க?", என்று அவனும் கேட்டான்.



"அவனுக்கு என்ன மலை மாடு மாதிரி நல்லா தானே இருக்கான். அபி எங்க நான் கேட்ட சாரீ?", என்று மாறனை பிரித்து விட்டு அழகு போய் நிற்கவும், "எடுத்துட்டு வந்து இருக்கேன் டி குள்ள கத்திரிக்கா", என்று அவனும் சொல்ல, "யாரை பார்த்து குள்ள கத்திரிக்கான்னு சொன்ன?", என்று அவள் கைகள் இடுப்பில் வைத்து கொண்டு கேட்க, "உன்ன பார்த்து தான் சொல்றான்", என்று சொல்லி இருந்தான் மாறன்.



அழகுவுடன் அவளுக்கு வாங்கி வந்த அனைத்தையும் கொடுக்க, "தேங்க்ஸ் அபி", என்று சொல்லிக்கொண்டு அனைத்தையும் பார்க்க ஆரம்பித்து விட்டாள்.



"அண்ணா எனக்கு?", என்று மது வந்து நிற்க, "இந்தா", என்று அவளின் கைகளிலும் ஒரு பையை கொடுத்து இருந்தான்.



அகல்யா மற்றும் வெற்றியை தான் அவனின் கண்கள் நோக்கின.



அவனுக்கு மட்டுமே தெரியும், அவர்களுக்கு திருமணம் ஆகாதது.



"நம்ப வெளிய போய் பேசலாம்" என்று வெற்றி சொல்லவும், அகல்யாவையும் அழைத்து கொண்டு தான் சென்றான்.



அர்ஜுன் அவனின் கையில் மற்றொரு பையை எடுத்து கொண்டான்.



மூவரும் வெளியே வர, "எப்படி இருக்க அர்ஜுன்?", என்று வெற்றி கேட்க, "எனக்கு என்ன? நல்லா இருக்கேன்", என்றவன் அகல்யாவின் புறம் திரும்பி, "உங்க சொத்து பாதி உங்க தங்கச்சியாலேயே அழிஞ்சிரும் போல", என்று சொல்லவும், அவள் சிரித்து கொண்டே, "அவ எல்லாரு கிட்டயும் அப்படி பிஹேவ் பண்ண மாட்டா அர்ஜுன். எப்படி உங்க கிட்ட இப்படி பிஹேவ் பண்ணான்னு தெரியல... உங்கள ஜென்டில் மென்னு கண்டு பிடிச்சிருப்பா... ஸ்கூலேயே நிறைய சண்டை போட்டு இருக்கா தெரியுமா?", என்று அகல்யா சொல்ல, "என்னவோ போங்க... ரொம்ப கஷ்டம் தான்", என்று சலித்து கொண்டான்.



"நீ ஏன் டா இவளோ பீல் பண்ற? அவளை கல்யாணம் பண்ணிக்குறவன் தான் பீல் பண்ணனும்", என்ற வெற்றியை பார்த்து, "அந்த பாவ பட்ட ஜீவன் யாருனு தெரியல... எந்த ஜென்மத்துல பண்ண பாவமோ", என்று பேச, "கண்ணாடில பார்த்தா தெரியும்", என்று அகல்யா சொல்லவும், வெற்றியும் சரி அர்ஜுனும் சரி அவளை தான் பார்த்தனர்.



"ஏன் இல்ல ஏன்னு கேட்குறேன்" என்று வெளிப்படையாகவே அர்ஜுன் பதற, "அவளுக்கு உங்க மேல இன்டெரெஸ்ட் இருக்கு நினைக்கிறன்", என்று சரியாக கணித்து இருந்தாள்.



"நான் நிம்மதியா இருக்கறது உங்களுக்கு பிடிக்கலையா அகல்?", என்று கையை விரித்து கேட்டுக்கொண்டே, "இது உங்களுக்கு", என்று அவன் வைத்து இருந்த மற்றொரு பையை அவளிடம் நீட்டி இருந்தான்.



"எனக்கா?", என்று கேட்டுக்கொண்டே அதை பிரிக்க, அதில் பீச் நிற புடவை ஒன்றும், மயில் பச்சை நிற அழகான புடவை ஒன்றும் இருந்தது.



"எனக்கு பீச் பிடிக்கும், ஆனா இந்த க்ரீன் ஜானுக்கு தான் பிடிக்கும். இத அவளுக்கு கொடுத்திரட்டுமா?", என்று அவனை பார்க்க, "உங்க இஷ்டம்", என்று முடித்து கொண்டான்.



"திருவிழாக்கு இருப்பியா டா?", என்று வெற்றி கேட்கவும், "நோ வே... நான் இப்பவே கிளம்புறேன்", என்று சொல்லிவிட்டு மூவரும் உள்ளே சென்றனர்.



அன்று மாலையே அர்ஜுன் கிளம்பி விட்டு இருந்தான். காத்தியாயனி தான் அழுது கரைந்தார். அவருக்கு அர்ஜுனும் இங்கயே இருக்க வேண்டும் என்று எப்பொழுதும் தோன்றும். சிறுவயதில் இருந்து அவர்கள் வீட்டிலேயே வளர்பவன், அவர்கள் அவனை தனித்து பார்த்ததே இல்லை. வெற்றி, மாறன், அர்ஜுன், யாழ் நால்வரும் ஒன்று தான்.



"அடுத்த வாட்டி வந்தா இருக்கேன் மா", என்று அவரை அணைத்து விடுவித்து விட்டு சென்று இருந்தான்.



மூன்று நாட்களில் திருவிழாவும் வந்தது.



"எனக்கு புடவை கட்டி விடு அழகு", என்று கேட்டு அகல்யா அன்று கட்டி இருந்தாள்.



மது, அழகு, அகல்யா, மாறன், வெற்றி என்று அனைவரும் திருவிழாவிற்கு சென்று இருந்தார்கள்.



திருவிழா விமர்சியாக நடந்து கொண்டு இருந்தது. அகல்யா, அழகு மயில் மற்றும் மதுமதி என்று மூவருமே திருவிழாவை ஆர்வமாக பார்த்து கொண்டு இருந்தனர்.



அதுவும் அகல்யாவிற்கு அவ்வளவு மகிழ்ச்சி.



இது தான் முதல்முறை அவளும் வெளியே வருவது. அவளின் படிப்பிலே கவனம் செலுத்துபவள், இன்று தான் வெளியே சுற்றி திரிய வந்து இருக்கிறாள்.



"யாரு டா அது புது பொண்ணு? நல்லா பால் கோவா மாதிரி இருக்கா!", என்று மருது கேட்கவும், "அண்ணா அது நம்ப வெற்றியோட சம்சாரம்", என்று சொல்லிக்கொண்டு இருக்க, மாறனோ அகல்யாவிற்கு அப்போது தான் தேன்மிட்டாய்யும் பால் கடும்பும் வாங்கி வந்து கொடுத்து இருந்தான்.



மருதுவிற்கு ஆத்திரம். அன்றே வெற்றி அவனை அடித்து இருக்க, பழி தீர்க்க வேண்டும் என்கிற வெறி.



"என்ன டா அண்ணா பொண்டாட்டிக்கு தம்பி வாங்கிட்டு வந்து கொடுக்குறான். அண்ணாவும் தம்பியும் ஒரே பொண்ண வச்சிருக்காங்களோ?", என்று கேட்டு முடிக்கும் முதல், அவனின் முதுகில் ஓங்கி மிதித்து இருந்தான் வெற்றி வேந்தன்.



மருது கண்களை துடைத்து கொண்டு பார்க்க, அங்கே ருத்ர மூர்த்தியாக நின்று இருந்தனர் வெற்றியும் மாறனும்!
 

அத்தியாயம் 13

மருதுவிற்கு கிலி எடுக்க துவங்கியது. வெற்றி மட்டும் என்றாலே வைத்து செய்து விடுவான், இதில் மாறனும் என்றால் அவனின் நிலையை நினைத்து பார்க்க கூட முடியவில்லை.



"வெற்றி, மாறன்.. அது வந்து...", என்று அவனின் வார்த்தைகள் தந்தி அடிக்க, "என்ன டா வெற்றி மாறன்.. இப்போ சொன்னியே அத சொல்லு, என்ன அண்ணனும் தம்பியும் சேர்ந்து ஒரே பொண்ணு கூட இருப்போமா? உனக்கு நாக்கு கூசல? ச்சை, நீ எல்லாம் மனுஷ ஜென்மமா? அவ யாரு தெரியுமா? சென்ட்ரல் மினிஸ்டர் ருத்ரதேவன் வீட்டு பொண்ணு", என்றதும் அவனுக்கு மொத்த உடலும் நடுங்கி விட்டது.



ஊரில் இருந்தவர்களுக்கும் அப்போது தான் அகல்யா மினிஸ்டர் வீட்டு பெண் என்று தெரிந்தது. அவளை பற்றி அவர்கள் பெரிதாக வெளியே கூறவில்லை.



"ஐயோ வெற்றி ஏதோ தெரியமா பேசிட்டேன்" என்றவன் காலிலேயே விழுந்து விட்டான்.



அவனோ காலால் அவனை தட்டி விட்டு, "இது அவளோட அண்ணனுங்க யாருக்காச்சு தெரிஞ்சுதுனா இந்நேரம் உன்ன கொளுத்தி போட்ருப்பானுங்க", என்றதும் அவனுக்கா தப்பித்தால் போதும் என்கிற நிலை தான்.



"வெற்றி நீ என்ன சொன்னாலும் செய்றேன்", என்று சொல்லவும், "அப்படியா? போ போய் அவ கால்ல விழு", என்றதும், அவன் பார்க்கவே இல்லை போய் சாஷ்டாங்கமாக காலில் விழுந்து விட்டான்.



அழகுவோ சிரிக்க, அவனுக்கு அவமானமாக போய் விட்டது.



மாறன் அத்துடன் விடவில்லை, "உனக்குலாம் எதுக்கு டா மீசை? இப்படி அடுத்தவன் வீட்டு பொண்ண பத்தி தப்பா பேசிகிட்டு திரியிறவன் எல்லாம் ஆம்பளையே கிடையாது", என்றவன், அருகே இருந்த ஒருவனை பார்த்து, "அய்யாக்கு மீசையை வழி", என்று சொல்லவும், "அதெல்லாம் வேண்டாம் மாறா", என்று மருது சொல்ல கேட்பவனா மாறன்? செய்து விட்டு தான் சென்றான்.



மருதுவிற்கோ ஆத்திரம், அவனை இத்தனை பேர் முன்னிலையில் அவமானம் படுத்தி இருக்கிறார்கள். சும்மா விடுபவனா அவன்? அவனின் கண்கள் அகல்யாவில் இருந்து அழகுவின் மேல் தான் படிந்தது.



'அவளை தான நெருங்க முடியாது, இதே ஊர்ல இருக்க இவளை நெருங்கலாம்ல... சரியான நேரம் வரட்டும், மொத்தமா வச்சி செஞ்சிடுறேன்', என்று மனதில் கருவிக்கொண்டான்.



இதே சமயம், ஊரில் உள்ள மக்களோ, "வெற்றி அடுத்தவன் வீட்டு பொண்ணுனாலே விட மாட்டான், அவன் பொஞ்சாதிய பத்தி பேசுனா சும்மா இருப்பானா? தேவை தான் இந்த மருதுக்கு", என்று பேசிக்கொண்டனர்.



அடுத்து வந்த மாதங்கள் நன்றாக கழிந்தது. இந்த சில நாட்களில் புடவை கட்ட பழகி இருந்தாள் அகல்யா. சமைக்கவும் சிறிது கற்றுக்கொண்டாள். காத்யாயனி வேண்டாம் என்று சொன்னாலும் கூட, சில நேரங்களில் அவருடன் சேர்ந்து சமைக்க அவள் தவறுவதில்லை.



அவளுக்கு தேவையான அனைத்தையும் பார்த்து பார்த்து செய்தான் வெற்றி. அவளுக்கு நினைத்தது உடனே கிடைத்து விடும், இப்படியாக நாட்கள் செல்லவும் தான் யாழும் ஆதியும் கூட வந்து விட்டு சென்றார்கள்.



அவர்கள் சென்ற பின்பு, "உன் அண்ணாங்க எல்லாரும் ராஜா மாதிரி இருக்காங்க ம்மா", என்று காத்தியாயனி சொல்ல, "ம்கூம் அந்த ஆதியை பார்க்க ராஜா மாதிரி இருக்கானா? மனசாட்சியோடு பேசு ம்மா... அவனே பார்க்க அர்த்தராத்திரில வர திருடன் மாதிரி இருக்கான்", என்று மாறன் பேச, "டேய் அவரு இந்த வீட்டு மாப்பிள்ளை டா", என்று கடிந்தார் சிதம்பரம்.



"நல்ல மாப்பிள்ளை, நீங்க தான் வச்சுக்கணும். ஏன் அகல் உங்க வீட்ல ஒரு அண்ணாக்கும் மூளை இல்லையா? ஆருஷ் ஒரு கேனக்கிறுக்கன், ஆதி ஒரு அரைலூசு, ஆதர்ஷ்..", என்று அவன் ஆரம்பிக்கும் போதே, "டேய் ஏன் டா இப்படி அவனுங்கள செய்யுற?", என்று வெற்றி நிறுத்தி இருந்தான்.



"உங்களுக்குலாம் ஏன் மூக்கு வேற்குது? எனக்கு ஆத்திரமா வருது... தளிரை அந்த ஆருஷ் பன்னதுக்கே அவன் கைய கால வெட்டி போட்டு இருக்கனும்... ஏதோ தளிர் லவ் பண்ணிட்டானு அமைதியா இருக்கேன்", என்று மாறன் சொல்ல, "டேய் மாறா.. உன்ன விட அவங்க பரவால்ல.. முசுடு", என்று அழகு சொல்லவும், "இந்த முசுடு பின்னாடி அப்புறம் ஏன் டி வர?", என்று சீறினான்.



"என் கிரகம், என்னத்த சொல்ல?", என்று பேசி சிரிக்க துவங்கி விட்டார்கள்.



அனைவரும் சென்றபின், அகல்யாவின் அறைக்குள் வந்தான் வெற்றி.



"மாறன் பேசுனத தப்பா எடுத்துக்காத அகல்", என்றவனை பார்த்து, "இதுல தப்பா எடுத்துக்க என்ன இருக்கு? எனக்கே கோவம் வருது, இதையே எங்களுக்கு யாரவது பண்ணி இருந்தா என் அண்ணாங்க சும்மா இருப்பாங்களா? அவங்க வீட்டு பொண்ணுக்கு ஒரு நியாயம், அவங்களுக்கு ஒரு நியாயம். விடுங்க வெற்றி. ரொம்ப தேங்க்ஸ் எனக்காக எல்லாமே பார்த்து பார்த்து பண்றீங்க", என்று சொல்லவும், "இதுல என்ன இருக்கு? யு ஆர் ஸ்பெஷல் டு மீ", என்று சொல்லிவிட்டு சென்று விட்டு இருந்தான்.



"வெற்றி நீங்க ஹார்வர்ட்ல படிச்சேன்னு சொன்னிங்களே! என்ன பேட்ச்? ஏன் கேட்குறேனா ஆதர்ஷ் அண்ணாவும் அங்க தான் படிச்சாங்க", என்றவுடன் அவனுக்கு தூக்கி வாரி போட்டது.



அவன் ஏதோ பேசுவதற்கு முன், அவளின் கைபேசி சினுங்க, "சரி வெற்றி அப்புறம் பேசலாம்", என்று சொல்லி நிறுத்தி கொண்டாள்.



'உண்மை தெரியுற நேரம் என்ன வச்சி செய்ய போறா', என்று நினைத்து கொண்டான்.



வெற்றியின் கண்கள் வெளியே செல்லும் முன், அகல்யாவில் தான் படிந்தன.



அவன் முதன்முதலில் அவளின் குரலை கேட்ட நினைவு அவனுக்கு வந்து சென்றது.



அன்று ஆதர்ஷின் அமெரிக்காவில் இருக்கும் அபார்ட்மெண்டில் அவன் இருக்க, ஆதர்ஷிற்கு அழைப்பு வந்தது.



"ஸ்பீக்கர்ல போடு டா நல்லவனே", என்று ஆதர்ஷ் கத்த, அவன் கைபேசியை பார்த்தவன், "ராக்ஷஸி ஒன்", என்று அந்த பெயரை படிக்க, அந்த அழைப்பை உயிர் பித்தான்.



"ஆதர்ஷ் அண்ணா", என்று கத்தி இருந்தாள் அகல்யா.



"என்ன பண்ணிருக்கீங்க? என் பின்னாடி சுத்துன என் கிளாஸ்ட்மேட் வந்து, ஐயோ சிஸ்டர் நீங்க எனக்கு தங்கச்சி மாதிரி, இன்னும் இரண்டு நாள்ல ரக்ஷபந்தனுக்கு ராக்கி கட்டுங்க, நீங்க வாங்க வேணாம் நானே வாங்கி வந்து கொடுக்குறேன்னு சொல்றான்", என்று அவள் கத்தவும், வெற்றியின் இதழ்களில் புன்னகை.



"ஹே இப்போ எதுக்கு டி கத்துற? அவனே ஒரு பொம்பள பொறுக்கி, ஏதாவது நல்லவன் உன் பின்னாடி வந்தா நான் கண்டுக்கிட்டு இருக்க மாட்டேன்", என்றதும், "முதல்ல என் பின்னாடி யாரு வாரான்னு பார்க்காம, நீங்க யாரு பின்னடியாவது போங்க", என்று அவள் சொல்லவும், மீண்டும் வெற்றி சிரித்து விட்டான்.



"நீ ரொம்ப பேசுற, போன வை, ஜானுவ பார்த்துக்கோ", என்று சொல்லி வைத்து விட்டான்.



"உன் தங்கச்சியா?", என்று வெற்றி கேட்கவும், "ஆமா டா... இவ பரவால்ல இன்னொருத்தி இருக்கா...ஐயோ சாமி அவ கிட்ட யாரு வாக்குப்பட போறானோ", என்று அவன் புலம்ப, வெற்றியின் கைபேசி சிணுங்கியது.



"அர்ஜுன்", என்று வெற்றி சொல்ல, "என்ன டா சொல்ற?", என்று ஆதர்ஷ் கேட்க, "என் பிரண்ட் கால் பன்றான். நான் பேசிட்டு வரேன்", என்றவன் அர்ஜுனின் அழைப்பை எடுத்து கொண்டு பேசி விட்டு வந்தான்.



"உன் தங்கச்சி செம்மயா பேசுறா", என்று வெற்றி சொல்ல, "ம்கூம் கேட்க நல்லா இருக்கும், கூட இருந்தா தான் தெரியும்", என்றவனிடம், "ஏன் டா இப்படி சொல்ற? உன் தங்கச்சிக்கு என்ன மாதிரி மாப்பிள்ளை எக்ஸ்பெக்ட் பண்ற?", என்று கேட்கவும், "உன்ன மாதிரி தான் டா எக்ஸ்பெக்ட் பண்றேன்", என்று ஆதர்ஷ் சொல்ல, "டேய்", என்று வெற்றி பதறி விட்டான்.



"ஆனா உன் வாழ்க்கையை நான் பாழாக்க விரும்பல, அவ உன் கூட நல்லா இருப்பா ஆனா நீ நல்லா இருக்க மாட்ட", என்றவனை பார்த்து, "உன் தங்கச்சி போட்டோ இருக்கா?", என்று கேட்கவும், ஆதர்ஷ் யோசிக்காமல், அகல்யாவின் புகைப்படத்தை எடுத்து காட்டினான்.



வெற்றியோ அவளின் புகைப்படத்தை பார்த்த உடனையே விழுந்து தான் விட்டான்.



"வெற்றி கொஞ்சம் இங்க வா பா", என்கிற காத்தியாயணியின் அழைப்பில் உயிர் பெற்றவன், அவனின் முந்தைய சிந்தனைகளை ஒதுக்கி வைத்து விட்டு, அவனின் வேலைகளை பார்க்க துவங்கினான்.



வெற்றிக்கும் அகல்யாவிற்கும் உறவு அழகாக மலர துவங்கியது.



அகல்யாவிற்கும் வெற்றியின் மீது ஈர்ப்பு வந்ததது தான். வரமால் இருந்தால் தான் அதிசயம். அவனும் தான் எவ்வளவு நல்லவன். நல்ல மகன், அதை விட நல்ல அண்ணன், அழகுவிற்கு நல்ல மாமா, என்று பல பரிமாணங்கள்.



ஒரு முறை அவளுக்கு காலில் முள் குத்தி விட, அதை கூட அவன் தான் எடுத்து விட்டான்.



அவனிடம் ஒரு சின்ன ஆணாதிக்கம் கூட அவள் பார்த்ததில்லை. அவனின் அன்னைக்கு காய்கறி வெட்டி தருவதில் இருந்து, சில நேரம் வெந்நீர் உட்பட போட்டு கொடுத்தான்.



உண்மையாகவே அவளின் மனதிற்கு கொஞ்சம் கொஞ்சமாக ஆக்ரமிக்கதுவங்கி இருந்தான் வெற்றி.



மாங்காய் காய்க்கும் காலம் அது. அகல்யாவின் கண்களில் வீட்டிற்கு வெளியே இருக்கும் மாங்காய் பட்டது.



அவளுக்கோ மாங்காய் என்றால் கொள்ளை பிரியம். அதுவும் இப்பொது எழில் சூழ்ந்த அழகில் கொத்து கொத்தாய் தொங்கும் மாங்காய்களை பார்த்ததும் சாப்பிட வேண்டும் என்று எச்சில் உரியது.



"கைக்கு கிடைக்கறதெல்லாம் பறிச்சிக்க வேண்டியது தான்", என்று அவளின் மனதில் குதூகலித்து கொண்டு, அருகில் இருந்த கூடை ஒன்றை எடுத்து கொண்டாள்.



கூடை நிறைந்து விட்டது. ஆனால் அவளது மனம் தான் நிறைய வில்லை.



"புடவைல இன்னும் கொஞ்சம் எடுத்துக்கலாம்", என்று மீண்டும் பறிக்க மாங்காய் இல்லை. அவள் தான் கை கிட்டியது எல்லாவற்றையும் பறித்து விட்டாள் அல்லவா!



அடுத்து சில மாங்காய்கள் இருந்தது, ஆனால் அவள் எக்கி எடுக்க வேண்டும்.



அவள் எக்கி எக்கி எடுக்க, தீடிரென்று அவளின் கால் பிரண்டு விட்டது.



"ஆஹ்", என்று அவள் கத்திக்கொண்டு கீழே வீழ, இவள் செய்யும் கூத்துக்களை பார்த்துக்கொண்டு இருந்த வெற்றி அவளின் அருகில் வந்து விட்டான்.



"உனக்கு வேணும்னா என்கிட்ட சொல்லி இருக்கலாம்ல ஏன் இந்த வீர விளையாட்டு உனக்கு", என்று கேட்டுக்கொண்டே அவளின் காலடியில் அமர்ந்து விட்டான்.



அவளுக்கோ ஒரு மாதிரி ஆகி விட்டது.



"அச்சோ என்ன பண்றீங்க?", என்று அவள் காலை இழுக்க, அவனோ அவளின் காலை விடாப்பிடியாக பிடித்து அவளின் சேலையை ஒதுக்கினான்.



"கொஞ்சம் சுளுக்கு தான் இரண்டு நாள்ல சரி ஆய்டும்", என்றவனை தான் கண் இமைக்காமல் பார்த்து கொண்டிருந்தாள்.



அவளும் அவளின் தந்தையின் காதலை பார்த்திருக்கிறாள், சில நேரம் அவளே அவர்களை கிண்டல் அடித்து இருக்கிறாள்.



"என்ன இப்படி அம்மாக்கு கால் எல்லாம் பிடிச்சி விடறீங்க", என்று கேட்பாள்.



இன்று அவளுக்கு வெற்றியை பார்க்கும் பொது அவளின் தந்தையின் உணர்வு தான். என்ன உணர்வென்று அவளுக்கே தெரியவில்லை.



ஆனால் அவன் அவளின் அருகில் வரும் பொது முழு பெண்ணாக உணர்கிறாள்.



அச்சம், மேடம், நாணம், பயிர்ப்பு என்று அனைத்தையும் அவன் உணர வைக்கிறான்.



ஒரு குழந்தையை போல் அல்லவா பார்த்து கொள்கிறான் .



"என்னமா என்னைய பார்க்குற", என்று அவன் கேட்க, "ஒன்னும் இல்லை", என்று அவள் புன்முறுவலுடன் சொன்னாள்.



அழகியே தருணம் அது!



"புடவையை கட்ட தெரியாதுன்னு சொன்ன பொண்ணு இப்போல்லாம் நல்லா கத்துக்குட்ட போல", என்று அவன் சொல்ல, "எல்லாம் உங்க அம்மா ட்ரைனிங் தான்",என்று இருவரும் சிரித்து கொண்டனர்.



"ஏன்பா வேந்தா, உன் பொஞ்சாதிக்கு மாங்காய் சாப்பிட ஆசை வந்திருச்சு போல சீக்கிரம் நேரவேத்துறது", என்று ஒரு பெரியவர் கூற, அவளுக்கோ நிலத்தில் புதைந்து கொள்ளலாம் போல் இருந்துது.



"சீக்கிரம் நல்ல செய்தி சொல்றோம்", என்று அவன் சொல்ல, அவளின் விழிகள் தான் விரிந்து கொண்டது.



அவர் சென்றபின், "சாரி அகல், நான் இப்படி சொல்லலைனா அப்புறம் பேச்சு வரும்", என்று சொல்லவும், அவளின் முகம் தான் சுருங்கி விட்டது.



அவன் தான் பிடி கொடுத்து பேச மாட்டேன் என்கிறானே, ஆனால் அவளின் மனதுள் காதல் வேரூன்றி விட்டது.



அவனோ எழுந்து அவனின் அறைக்குள் வர, அவனின் கையில் இருந்த ஒரு புகைபடத்தை எடுத்தான். ஆதர்ஷும் அவனும் சேர்ந்து இருக்கும் புகைப்படம் அது!



நண்பனின் தங்கை அவள்! காதல் அவள் மீது கொட்டி கிடக்கிறது, ஆனால் காட்டும் நிலையில் தான் அவன் இல்லை. தங்கைக்காக அவளை மனைவியாக நடிக்க கூட்டி கொண்டு வந்து இருக்கிறான்.



மறுபடியும் அவர்களின் பெண்ணாகவே அனுப்ப வேண்டும் என்கிற எண்ணம் அவனின் மனதில் வேரூன்றி இருந்தது.



காதல் இருந்தும் காட்ட தயங்கும் இருமணங்கள் திருமணத்தில் இணையும் தருணம் எப்பொழுதோ?
 
Last edited:

அத்தியாயம் 14

இதே சமயம் தான் அவர்கள் ஊரின் திருவிழாவும் வந்தது. அது தான் அந்த ஊரிலேயே நடக்கும் பெரிய திருவிழா என்று கூட கூறலாம்.



மாறனின் சில நண்பர்கள் வந்து இருந்தார்கள். அர்ஜுன் கூட வந்து இருந்தான். அவனை அழுது வரவழைத்து இருந்தார் காத்யாயனி என்று தான் சொல்ல வேண்டும்.



"என்ன டா அதிசயமா வந்து இருக்க?", என்று வெற்றி கேட்கவும், "ரொம்ப அழுதாங்க அதான்", என்று சொல்லி முடித்து இருந்தான்.



இதே சமயம் மாறனின் தோழி மைதிலி அவனுடன் ஒட்டி உறவாடி கொண்டு இருந்தாள். அவனுடன் ஒன்றாக ஜெர்மனியில் படித்தவள் அவள்.



அகல்யா அளவிற்கு இல்லை என்றாலும், மைத்திரி அவனுக்கு கொஞ்சம் நெருக்கம் தான்.



அவளுடன் தான் அவனின் முதுகலை ஆராய்ச்சி வேலையும் செய்து இருந்தான்.



இதை எல்லாம் பார்த்து கொண்டு இருந்த அழகுவிற்கு தான் காதில் இருந்து புகை வந்து கொண்டு இருந்தது.



"என்ன ஆச்சு அழகு?", என்ற அகல்யாவிடம், "பாருங்க அக்கா இந்த மாறனை என் கிட்ட ஒரு வார்த்தை பேச மாற்றான். ஆனா அந்த வெள்ளச்சி கிட்ட இளிச்சிகிட்டு இருக்கான்", என்று அவள் புகார் பத்திரம் வாசிக்க, அவளுக்கோ அவளை இன்னும் சீண்ட தோன்றியதோ என்னவோ, "ஒரு வேலை மாறன் அந்த பொண்ண லவ் பன்றானோ என்னவோ?", என்று கொளுத்தி போட்டு இருந்தாள்.



"இருக்குமோ?", என்று மதுவும் அவளுடன் சேர்ந்து கொள்ள, அவ்வளவு தான் கொதித்து எழுந்து விட்டாள்.



இதே சமயம் மைதிலி அவனை விட்டு விலகி சென்று இருந்தாள்.



மாறனின் முன் வந்து நின்றாள் அழகு மயில்.



"என்ன டி?", என்றவன் கேட்கவும், "யாரு அந்த வெள்ளைக்காரி?", என்றவுடன், "வெள்ளைக்காரியா யாரு டி அது?", என்று கேட்கவும், "அதான் உங்கள பார்க்க வந்து இருக்காளே ஒருத்தி", என்றவளுக்கு கோவத்தில் மூச்சு வாங்கியது.



சூலம் ஒன்று தான் இல்லை. இல்லையென்றால் சாமி ஆடி இருப்பாள்.



"அவளா என் கேர்ள் பிரண்ட்", என்று அவன் தோள்களை குலுக்கி சொல்ல, "உங்களுக்கு கேர்ள் பிரண்ட்டா? நீங்களே எப்பவும் உம்முனு இருப்பிங்க", என்றவளிடம், "ஆனா அவளுக்கு மட்டும் உம்மா கொடுத்துட்டே இருப்பேன்", என்றவன் சிரித்து கொண்டே நகர்ந்து சென்று விட்டான்.



அழகுவிற்கு கோவமாக வந்தது. அவனின் பின்னே அவனின் அறைக்கு சென்று இருந்தாள்.



"நான் பேசிக்கிட்டே இருக்கேன் போய்கிட்டே இருக்க... டேய் மாறா", என்று மீண்டும் அழைக்க, அறைக்குள் வந்த பின், "என்ன டி திமிறா?", என்று கேட்கவும், அதே சமயம், மைதிலி உள்ளே வந்தாள்.



"மாறன்", என்று அவள் அழைத்து கொண்டே உள்ளே வரவும், "இங்க பாரு என் மாமா எனக்கு தான்", என்ற அழகு, அவளின் முன்னே, மாறனின் கால்களில் நின்று எழும்பி அவனின் உதட்டில் முத்தம் பதிக்க, அவனோ சட்டென அவளின் இடையை பிடித்து தள்ளி நிறுத்தினான்.



"பைத்தியமா டி உனக்கு" என்றவன் அவளின் தலையின் நங் நங்கென்று கொட்டவும், "வலிக்குது டா", என்று சொல்ல, "கிளம்பு போ", என்று அவளை வெளிய தள்ள, அவளோ மீண்டும், மைதிலியை பார்த்து, "என் மாமா எனக்கு தான் சொல்லிட்டேன்", என்று சொல்லிவிட்டு சென்றாள்.



அவள் சென்றதும், மைதிலி சிரிக்க ஆரம்பித்து இருந்தாள். மாறனின் நிறுவனத்தை இப்போது பார்த்து கொள்வது அவள் தான்.



வேலை விடயமாக தான் பார்க்க வந்து இருந்தாள்.



"இவ தான் உன் லவ்வரா?", என்று கேட்க, அவனும் ஆமாம் என்று தலையசைத்தான். ஆம், அழுகுவை காதலிக்கிறான். எப்போதில் இருந்து என்று தெரியாது. ஆனால் காதலிக்கிறான். அவனையே சுற்றி வரும் பெண்ணை காதலிக்காமல் இருக்கவும் முடியுமா?



மைதிலியை அவனை பிடித்து இருக்கிறது என்று போன வருடம் சொல்லியும், "இல்ல மைதிலி நான் என் அத்தை பொண்ண தான் காதலிக்கிறேன்... ஆனா அவளுக்கே தெரியாது", என்று சொல்லி இருந்தான்.



"உனக்கு ஏத்தவ தான். உன்னையே ஏறி மேய்க்கிறா, ஐ லைக் ஹேர்", என்று மைதிலி சிரித்து கொள்ள, அவனும் தலை அசைத்தான்.



அவனுக்கு பிடிக்காமல், ஒருத்தி அவனை தொட முடியுமா என்ன? இந்நேரம் அழுகுவின் இடத்தில் வேறு ஒருத்தி இருந்து இருந்தால், பெண்ணென்று எல்லாம் அவன் பார்த்து இருக்க மாட்டான். கன்னம் பழுத்து இருக்கும்.



மனதிற்கு பிடித்தவளை சீண்டி பார்ப்பது அவனுக்கு அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது.



அழகுவோ அப்படியே அன்று முழுவதும் முகத்தை தூக்கி கொண்டு அமர்ந்து இருந்தாள்.



இரவு உணவு கூட சாப்பிட வில்லை.



அன்னம் தான் அகல்யாவிற்கு அழைத்து இருந்தார்.



"இந்த பொண்ணுக்கு ஏதோ ஆகிருச்சு அகல், சாப்பிட கூட மாட்டேங்குறா", என்று அவர் சொல்லவும், அவள் நேரே சென்றது என்னவோ மாறனிடம் தான். அவளிடமும் அவனின் காதல் பற்றி சொல்லி இருக்கிறானே!



"மாறன், அழகு சாப்பிடாம இருக்காளாம்", என்று சொல்லவும், அவனோ எழுந்து நேரே சென்றது என்னவோ அன்னத்தின் வீட்டிற்கு தான்.



அண்ணனின் மகனை பார்த்ததும், "வா மாறா, என்ன இந்த நேரத்துல", என்று கேட்க, "எங்க உங்க மக?", என்றதும், "அவ வீட்டுக்கு பின்னாடி உட்காந்து இருக்கா டா... மதியமும் சாப்பிடல இப்பவும் சாப்பிடல.. இவ இருக்காளே", என்று அவர் பேசவும், "நான் பேசுறேன்", என்று சொன்னவன் அழகுவை தேடி தான் சென்றான்.



பௌர்ணமி இரவு அது!



அழகு மயில், நிலவின் ஒளியில் ஜொலித்து கொண்டு இருந்தாள்.



ஆனால் கண்களில் கண்ணீர்.



அவளின் தோளை மாறன் தொட, அவளோ தட்டி விட்டு, "இப்போ எதுக்கு இங்க வந்த மாறா? அதான் உன் காதலி இருக்கால... அவ பின்னாடியே போக வேண்டியது தான? நானும் வெளிநாட்டுக்கு போய் படிச்சிட்டு வந்து இருந்தா உனக்கு என்ன பிடிச்சி இருக்குமோ என்னவோ... நான் ஒரு பைத்தியக்காரி இன்னும் பாவாடை தாவணி கட்டிக்கிட்டு பட்டிகாடு மாதிரி இருந்தா உனக்கு எப்படி என்ன பிடிக்கும்?", என்று பிதற்றி கொண்டு இருக்கவும், அவளை அவனின் பக்கம் திருப்பியவன், அவளின் இரு கன்னத்தை பற்றி, அவளின் இதழில் இதழ் பதித்து இருந்தான்.



அவனாக கொடுக்கும் முதல் முத்தம். முதலில் அழகுவின் கண்கள் விரிந்தாலும், பின்பு தாமாக மூடிக்கொண்டது. அவனின் கைகள் அவளின் கன்னத்தில் இருந்து இடையை பற்ற, அவளின் கைகளோ அவனின் அடர்க்கேசத்தை பற்றி கொண்டது.



நீண்ட முத்தத்தை இருவரும் மூச்சு வாங்கி முடித்து கொண்டனர்.



"வந்து சாப்பிடு", என்று மட்டும் தான் சொல்லி இருந்தான். அதற்கு மேல் அவளும் பேசவில்லை.



"அத்தை அவளுக்கு சோறு போடுங்க", என்று மாறன் கத்த, "இப்பவாவது சாப்பிடுறாளா? இவளுக்கு நீ தான் டா மாறா சரி", என்று சொல்லிக்கொண்டே அவர் அவளுக்கு சாதம் போட்டு கொண்டு வர, அவனோ கண்களாலேயே சாப்பிட சைகை செய்ய, அவளும் அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தாள்.



"நான் கிளம்புறேன் அத்தை, நாளைக்கு காலைலேயே நேரத்துக்கு கோவில் போகணும். நீங்களும் வந்திருங்க", என்று சொல்லிவிட்டு சென்று விட்டான்.



காலை அவர்களின் குடும்பத்தின் பூஜை தான் என்பதால் அனைவரும் வேகமாக கிளம்பி விட்டு இருந்தார்கள்.



வெற்றியும் தயாராகி கொண்டு இருந்தான். அப்போது தான் அவனின் சட்டை அகல்யாவின் பையில் இருப்பது அவளுக்கு நினைவிற்கு வந்தது.



அவனோ அப்போது தான் அவனின் சட்டை ஒன்றை எடுக்க அறையின் உள்ளே நுழைந்தான், அவளின் ப்லௌசுடன் சண்டைபோட்டு கொண்டிருந்தாள் அகல்யா.



"இன்னுமா நீ ரெடி ஆகல?", என்று அவன் கேட்க, சட்டென்று அவள் திரும்பி கொண்டாள்.



"நீங்க என்ன பண்றீங்க இந்த ரூம்ல?", என்று அவள் நெளிந்து கொண்டு கேட்க, "என்னோட சட்டை உன்னோட பையில இருக்குனு நினைக்கிறன். அதான் எடுக்க வந்தேன்", என்று விளக்கம் அளித்து கொண்டு அவன் முன்னேறினான்.



குளித்து விட்டு அப்போது தான் வந்திருப்பான் போலும், கீழே வேஷ்டி மேலே டவல் போட்டிருந்தான்.



இப்படி அவனை பார்த்து பழகி விட்டிருந்தாள் தான், ஆனால் இப்போதெல்லாம் அவனை ரசிக்கவும் ஆரம்பித்து விட்டாள்.



அவன் முன்னேற, அவளுக்கோ மேனியில் நடுக்கம்.



"என்ன ஆச்சு? ஏன் இப்படி நெளிஞ்சிகிட்டு இருக்க? உனக்கு தான் இப்போ நல்லா புடவை கூட கட்ட தெரியுதே", என்று சொன்னதும், அவளுக்கு கன்னங்கள் சிவந்து விட்டது.



"ப்லௌஸ் பின்னாடி நோட் போட முடியல", என்று அவள் மென்மையான குரலில் சொல்ல, அவனுக்கோ தர்மசங்கடமான நிலை.



"எல்லாரும் கோவிலுக்கு போய்ட்டாங்க. இப்போ யாரையும் கூப்பிட கூட முடியாதே", என்று அவன் சொல்லவும், "அதான் நானும் யோசிக்கிறேன்", என்று தயங்கியவள், "நீங்க போட்டு விடுறிங்களா?", என்று தயங்கி தான் கேட்டாள்.



"நானா?", என்று கேட்டவனின் குரலிலும் கூட அப்பட்டமான அதிர்ச்சி.



"வேற வழி இல்லையே", என்று அவள் சொல்ல, அவனோ உதட்டை ஊதிக்கொண்டு, "சரி திரும்பு", என்று சொன்னதும் திரும்பினாள்.



அவளின் கூந்தலை எடுத்து அவள் முன்னே போட்டதும், அவனுக்கோ மூச்சே அடைத்து விட்டது.



அவளை நெருங்கியவனுக்கு முதலில் விருந்தானது அவளின் முதுகில் இருக்கும் மச்சத்தில் தான்.



அவனின் மனதோ பேய்யாட்டம் போட துவங்கியது.



கைகளை மேலே உயர்த்தி அவளின் மேலாடையில் உள்ள நாடாவில் அவன் கைவைத்த சமயம், இருவரின் மேனியிலும் சிலிர்ப்பு.



அவனின் கண்களோ அவளின் மச்சத்திலியே தான் நிலைத்து இருந்தது. தலைக்கு குளித்து இருந்ததில் அவளின் முதுகில் இன்னும் நீர் துளிகள் படிந்து இறங்குகையில் அவனின் தொண்டை குழியில் இருந்தும் நீர் இறங்கியது.



"இப்போ புரியுது ஏன் விஸ்வாமித்ரன் கூட இந்த பொண்ணுங்க விஷயத்துல வீக் ஆகிட்டாருனு", என்று நினைத்துக்கொண்டே, நோட்டை போட, அவனின் கைவிரல்கள் அவளின் முதுகில் உரசின.



சிறு உரசல் அவளின் மேனியில் ப்ரளயத்தையே ஏற்படுத்தியது. முன்னே கைகளை கட்டி அவளின் உணர்ச்சிகளை அடக்கி கொண்டாள்.



அவளை கட்டி அணைக்க கைகள் பரபரத்தன. ஆனால் உரிமை இல்லையே! அவனும் காதல் சொல்லவில்லை, அவளும் சொல்லவில்லை.



சொல்லும் நேரம் காதல் நிலைத்து நிற்குமா என்று அவர்கள் தான் முடிவு எடுக்க வேண்டும்.
 

அத்தியாயம் 15

திருவிழா நன்றாக நடந்து முடிந்தது. பின்பு தான் யாழ் மாதமாக இருக்கும் செய்தியை சொல்ல, அவர்கள் மும்பை சென்றது. அன்றே அவளின் மகவு களைந்து இருக்க, அவர்கள் அனைவரும் திரும்பி கிராமத்திற்கு வரும் சமயம், மொத்தமாக உடைந்து இருந்தார் காத்யாயனி.



"இப்போ ஏன் அழறீங்க? எல்லாத்துக்கும் காரணம் நீங்க தான்... உங்க தம்பி அந்த அரக்கிழவனுக்கு அவளை கட்டி கொடுக்குறேனு சொன்னிங்க! அதான் வெற்றி ஆதியையே யாழுக்கு கட்டி வச்சான். இப்போ எங்க கொண்டு வந்து நிக்குறோம் பாருங்க", என்று அவன் கத்திக்கொண்டு இருக்க, அங்கே அகல்யாவை பார்த்தவன், "உன் அண்ணாவா இருக்கவே தப்பிச்சிட்டான்", என்று கூறி விட்டு அவனின் அறைக்கு சென்று விட்டான்.



அகல்யாவுக்குமே ஆதியின் மீது கோவம் இருக்க, ஆனாலும் ஒன்றும் செய்ய இயலாத நிலை தான். அடுத்த ஐந்து மாதங்களில் அவள் பிஎச்டி தீசிஸ் வைத்து விட்டாள்.



முடிக்கும் சமயம் தான். வெற்றி வேறு சீக்கிரமே அவர்களின் திருமண நாடகத்தை வீட்டிலே சொல்லி விடலாம் என்று தான் சொல்லி இருந்தான்.



ஆதியும் யாழிற்கு இடையே கூட அனைத்தும் சரி ஆகி விட்டதே!



வெற்றியின் அகல்யாவின் நெருக்கமும் கூட அதிகரித்து இருந்தது. மெது மெதுவாக அதிகரித்து இருந்தது.



சில தீண்டல்கள் இருக்கும், சில சமயம் கண்ணாலே காதல் செய்து கொண்டு இருந்தார்கள்.



ஆனால் காதலை வாயை திறந்து சொல்லத்தான் வில்லை.



ஒரு நாள் அவள் நடக்கும் போது அவளின் சேலை முள்ளில் குத்தி விட, அவனும் அதை எடுத்து விட்டவன், "முந்திய இப்படி பறக்க விட்டுட்டு போகாத, ஆதாம் முள் செடி இருக்குல", என்றவன் அவனே முந்தியை சொருகியும் விட்டான்.



அவனின் விரல்கள் அவளின் இடையை தீண்டவும், அவளுக்கோ மேனியில் சிலிர்ப்பு.



வேறு ஒரு ஆடவனை இப்படி நிச்சயம் தீண்ட விட்டு இருக்க மாட்டாள்.



ஆனால் வெற்றியின் மீது தான் காதல் கொட்டி கிடக்கிறதே!



ஆருஷ் மற்றும் தளிரை அவன் கையாண்ட விதம், ஆதி மற்றும் யாழின் பிரச்சனையையும் அவன் சீர் செய்து விட்டான்.



ஏதோ ஒன்று அவளை அவனிடம் ஈர்த்து கொண்டே இருக்கிறது.



ருத்ரனை போல் தைரியமானவன், அதே சமயம் விஷ்ணுவை போல் பாசம் காட்டவும் தவறுவதில்லை. விக்ரமனின் குறும்பும் கூட அவனிடம் இருந்தது. சேகரின் சிந்தனையையும் பார்த்து இருக்கிறாள்.



அவளை வளர்த்த தந்தைகளை போன்று குணாதிசியங்களை கொண்டு இருப்பதாலோ என்னவோ தான் இப்படி அவனிடம் சொக்கி இருக்கிறாள் போல!



யாழின் விடயம் தெரிந்து இருக்க, அவர்கள் வீட்டில் இப்போது காத்தியாயனி அவளையும் வெற்றியையும் ஒரே அறையில் வேறு தங்க சொல்லி கொண்டு இருக்கிறார்.



அவனுக்கு தான் தர்மம் சங்கடமான நிலை.



"வீட்ல சொல்லிடலாம் அகல்", என்று அவன் சொல்லவும், அவளுக்கோ ஒரு தயக்கம். சொல்லிவிட்டால் அவள் மும்பை சென்று விட வேண்டும்.



அனைவரும் என்ன எண்ணுவார்கள் என்று வேறு அவளுக்கு பல எண்ணங்கள் எழ, "எது வந்தாலும் சேர்ந்து பார்த்துக்கலாம்", என்று அவளின் கையை பற்றி இழுத்தவன், என்ன நினைத்தானோ, அவளை இறுகி அணைத்தும் இருந்தான்.



அவளது கைகளும் தானாக அவளை அணைத்து கொள்ள, இருவரும் ஒன்றாக, "ஷால் வி கெட் மெரிட்?", என்று ஒரே போல் கேட்டு இருந்தார்கள்.



காதல் சொல்லவில்லை, ஆனால் அடுத்த கட்டமான திருமணத்திற்கே சென்று விட்டார்கள். ஒரு உறவின் அடிநாதம் நம்பிக்கை தானே! அந்த நம்பிக்கை இருவருக்கும் நிறையவே இருந்தது.



இப்போது இருந்தது... எப்போதும் இருக்குமா? என்று காலம் தான் பதில் சொல்லும்.



இருவரும் சட்டென விலகி ஒருவரை ஒருவர் பார்க்க, அவளுக்கோ வெட்கம், அவனுக்கோ அவள் அவனை பார்க்க வேண்டும் என்கிற அவா எழுந்தது.



"அகல்யா", என்றவனின் பாசத்துடன் குரலில் உரிமையும் கலந்து இருக்க, அவளுக்கு தான் அவனை எதிர் கொள்ள முடியவில்லை.



ஏதோ ஒரு ஆவலில் அவனிடம் இப்படி கேட்டு விட்டாள். ஆனால் இப்போது எதிர் கொள்ள முடியவில்லை.



அவனோ அவளின் தாடையை பற்றி அவனை பார்க்க வைத்து, "உண்மையாவா கேட்ட?", என்று கேட்கவும், அவள் அவனின் தோள் சாய்ந்து கொண்டாள்.



இப்படியாக ஒரு நாளில், காத்யாயனி அகல்யாவிடம் வெற்றிக்கு உணவு கொடுத்து அவர்களது வயக்காட்டில் உள்ள வீட்டிற்கு அனுப்பி இருந்தார்.



வெற்றியை தேடி வந்திருந்தாள் அகல்யா. இது தான் முதல் முறை அவர்கள் வயக்காட்டிற்கு நடுவில் உள்ள வீட்டிற்கு வருவது. இத்தனை மாதங்கள் இங்கு வர அவளுக்கு சந்தர்ப்பம் கிடைத்ததே இல்லை.



"வெற்றி", என்று அழைத்து கொண்டே அவள் உள்ளே வர, அவனோ, "நீ ஏன் இங்க வந்த?", என்று கேட்க, "உங்களுக்கு சாப்பாடு கொண்டு வந்தேன்" என்று பையை தூக்கி காட்டினாள்.



"வீட்ல இருக்க யாரு கிட்டயாவது கொடுத்து இருக்க வேண்டியது தானே! நீ ஏன் டி இந்த நேரத்துல வந்த?", என்று கடிந்து கொண்டான்.



இப்போதெல்லாம் உரிமையாக அழைக்க துவங்கி இருந்தான்.



அவளோ வீட்டின் நடுகூடத்தில் நின்று கொண்டு இருக்க, தீடீரென்று மழை பெய்ய துவங்கியது.



"ஹே மழைல நனையாத", என்று அவனும் கூடத்திற்கு வந்து அவளை இழுக்கவும், அவள் வைத்து இருந்த பை கீழே விழ, அவளோ அவனின் மேல் சரிந்தாள்.



அவனோ வெள்ளை சட்டை திறந்து கொண்டு அவனின் பனியன் உடன் நிற்க, அவளின் ஈர சேலையோ அவன் மேனியை உரசி சென்றது.



இருவருக்குமே உடலுக்குள் நடுக்கம்.



இருவரின் கண்களும் மோதிக்கொள்ள, வெற்றியின் கைகள் காரிகை அவளின் இடையை பிடித்து இழுக்க, அவளோ அவனின் நெஞ்சு கூட்டிற்குள் அடைக்கலம் தேடி கொண்டாள்.



இதே சமயம், மாறனும் அழகு மயிலும் உள்ளே வர, "சாரி", என்று ஒரே போல் இருவரும் சொல்ல, சட்டென இருவரும் விலகி விட்டார்கள்.



"நீங்க எங்க இங்க?", என்று வெற்றி கேட்க, மாறனோ அழகுவை தான் முறைத்தான்.



அவளது பற்தடம் வேறு அவனின் கழுத்தில் பல்லை இளித்து கொண்டு இருந்தது.



அகல்யாவின் இதழுக்குள் சிரிப்பு வேறு. மாறனின் கண்களில் இருந்து தப்புமா என்ன?



"இப்போ எதுக்கு சிரிக்கிற?", என்று அகல்யாவை பார்த்து அவன் கத்தவும், "இல்ல கழுத்துல ஏதோ மார்க் இருக்கே", என்று அவள் அழகுவை பார்க்க, அவளோ வாயில் கை வைத்து கொண்டாள்.



வெற்றியோ குரலை செருமிக்கொள்ள, "ஒரு கொசு கடிச்சிருச்சு", என்று அவன் இல்லாத கொசுவை சொல்ல, அகல்யாவோ, "காசுக்கு ரொம்ப பெரிய பல்லு போல... அந்த கொசுவை நம்ப மியூசியம்ல வச்சா நல்ல காசு வரும்", என்று சொல்லவும், அழகுவோ, "ஹலோ என்ன பார்த்தா உங்களுக்கு என்ன கொசு மாதிரி தெரியுதா?", என்று கேட்டே விட்டாள்.



கொலென்று வெற்றியும் அகல்யாவும் சிரித்து விட, இதே சமயம் அழகுவின் தலையில் கொட்டி, "ஏன் டி இப்படி என் மானத்தை வாங்குற?", என்று அவன் கத்தவும், "உனக்கு அதெல்லாம் இருக்கா?", என்று வேறு அவள் கேட்டு வைக்க, அவ்வளவு தான் இருவரும் ஓடிப்பிடித்து சண்டை போட ஆரம்பித்து விட்டார்கள்.



அடுத்த நாள் விடிய, குளித்து விட்டு வெற்றி வர, அணிய உடை எடுக்கவும், அவனின் கையில் அவன் அமெரிக்காவில் படிக்கும் போது எடுத்த புகைப்பட ஆல்பம் கையில் கிடைத்தது.



ஆதர்ஷுடன் அன்று சுப்ரியாவின் தந்தையை பழிவாங்க சென்று வந்ததிற்கு பிறகு பேசவில்லை.



ஆனால் இன்று அவனின் மனதில் நண்பனின் நினைவு எழ, அதை எடுத்து பார்க்க துவங்கினான்.



அவனின் நினைவுகள் ஆதர்ஷ் மற்றும் அவனின் நட்பதிகாரத்தை நோக்கி பயணம் செய்தது.
 

அத்தியாயம் 16



வெற்றியின் முதல் நாள் அது! கிராமத்தில் வளர்ந்தாலும் அவனை பார்ப்பவர்கள் அவனை அப்படி சொல்லிவிட முடியாது.



டெனிம் ஜீன்ஸ் போட்டு கொண்டு, மேலே அடிடாஸ் டீ ஷார்ட் போட்டுகொண்டு, அதற்கும் மேல் டேகேத்லான் ஜாக்கெட் போட்டு கொண்டு வருபவனை யார் கிராம வாசி என்று கூறி விட முடியும்.



அவன் கணினியை பார்க்க அணியும் கண்ணாடி கூட ரெய் பான் தான்!



அங்கே கடந்து செல்லும் வெளிநாட்டு பெண்களும் அவனை பார்க்க தவறவில்லை.



அவனும் வகுப்பறையை தேடி கண்டு பிடித்து போவதற்குள் வகுப்பு ஆரம்பித்து ஐந்து நிமிடங்கள் ஆகி இருந்தது.



அவன் வகுப்பிற்குள் உள்ளே நுழைய, அப்போது தான் அவனது பேராசிரியரும் முதல் நாள் என்பதால் வகுப்பறையில் உள்ள அனைவரையும் அறிமுக படுத்த கூறி இருந்தார்.



வெற்றி கால தாமதமாக வந்து இருக்க, "ஹலோ ஜென்டில் மென்", என்று ஆரம்பித்தவர், "நீ கால தாமதமாக வந்ததற்கு நீயே முதலில் உன்னை அறிமுக படுத்தி கொள். அது தான் உன் தண்டனை", என்று சிரித்து கொண்டே சொல்லவும், அவனும் புன்னகையுடன் அவனை அறிமுகம் செய்ய துவங்கினான்.



அவனின் கண்கள் முழு வகுப்பறையையும் அளக்க துவங்கின.



சட்டென ஒருவனில் நிலைத்து நின்றது. இந்தியன் என்று பார்த்ததும் கணித்து விட்டான்.



அவனை பார்த்ததும் நிச்சயம் அவன் பெரிய இடது மகன் என்று அறிந்தும் கொண்டான்.



அவனின் தோரணையே அனைத்தையும் உணர்த்தியதே!



அவனின் அருகிலே அமர்ந்து இருந்தவளுக்கு இந்தியாவை சேர்ந்தவளாக தான் இருக்க வேண்டும் என்று அவனுக்கு தெரிந்தது.



அவனது அறிமுகம் முடிய, பின்னே சென்று தனியாக அமர்ந்து கொண்டான்.



எல்லாரும் முன்னே வந்து அவர்களை அறிமுக படுத்தி கொள்ள, அந்த இந்தியனின் முறையும் வந்தது.



அரசனை போல் நடந்து சென்றான். நடக்கும் தோரணையில் கூட ஒரு மிடுக்கு இருந்தது.



"ஹாய், ஐ அம் ஆதர்ஷராம்", என்று ஆரம்பித்தவன், சுருக்கமாக அவன் இந்தியாவில் மும்பை மாநகரத்தில் இருந்து வந்து இருக்கிறான் என்பதுடன் முடித்து கொண்டான்.



அவனின் உண்மை அடையாளத்தை அவன் சொல்ல விரும்பவில்லை.



அடுத்து சுப்ரியாவும், அவன் புனேவில் இருந்து வந்து இருக்கிறாள் என்று முடித்து கொண்டாள்.



அனைவரின் அறிமுகமும் முடிய, வகுப்பும் முடிந்தது. அடுத்த வகுப்பில் இருந்து பாடத்தை துவங்கலாம் என்று அவர்களது பேராசிரியர் சொல்லிவிட்டு சென்று விட்டாள்.



கிளம்பும் சமயம், "தமிழா?", என்று ஆதர்ஷினி குரலில் வெற்றி திரும்பி பார்க்க, ஆமாம் என்று தலைமையும் தான் அசைத்தான்.



"நானும் தமிழ் தான். இவளும் தமிழ் தான்", என்று ஆதர்ஷ் பேச, "மும்பைனு சொல்லி இருந்திங்களே", என்று வெற்றி புருவம் சுருக்க, "ஏன் மும்பைல தமிழர்கள் இருக்க கூடாதா? மும்பை வாழ் தமிழர்கள். அப்புறம் இந்த வாங்க போங்கலாம் வேணாம், ஆதர்ஷ்னு கூப்பிடு", என்று எதார்த்தமாக தான் பேசினான்.



"சீன் போடுவன்னு நினைச்சேன். இவளோ எதார்த்தமா பேசுற", என்று வெற்றி கூறியதும் சுப்ரியா தான் சிரித்து விட்டாள்.



"என்ன பார்த்தா சீன் போடுற போலவா இருக்கு?", என்று கேட்டவனிடம், "பார்க்க பெரிய இடம் போல இருக்கியே அதான் சொன்னேன். அப்படி தானே நிறைய பேரு இருக்காங்க", என்று தோள்களை உலுக்கி அவன் சொல்லவும், "நானும் எல்லாரும் ஒன்னு இல்ல", என்று அழுத்தமாக வந்தது அவனின் வார்த்தைகள்.



வெற்றியும் கணித்து விட்டான். அவன் அழுத்தக்காரன், அதே சமயம் பகட்டானவனும் இல்லை, முதல் சந்திப்பில் அவனை ஈர்த்து விட்டான். தைரியம் மிக்கவன் என்று அவன் பேசும் போதே தெரிந்து விட்டது.



"நீங்க ரொம்ப வித்தியாசமானவர்...", என்றவன் ஒரு நொடியில் திருத்தி, "வித்யாசமானவன் தான் ஆதர்ஷ்", என்று முடிக்கும் போதே, என்ன நினைத்தானோ ஆதர்ஷ், அவனின் கைகளை நீட்டி இருந்தான்.



ஆதர்ஷனாக நீட்டும் முதல் நட்பு கரம் அது! உண்மையில் அவன் இளங்கலை படிக்கும் போது அவனுக்கு பெரிதாக நண்பர்கள் கிடையாது. ஆருஷ், ஆதி, சிவம், அதர்வ் என்றே சென்று விட்டது அவன் உலகம்.



முதல் முறையாக அந்த உலகத்தை தாண்டி ஒருவனை அவனின் நண்பர்களின் வட்டாரத்தில் நுழைகிறான்.



உண்மையை சொல்ல வேண்டும் என்றால், சிவம் கூட அவனின் குடும்பத்தில் ஒருவன் தான். ஆதலால் குடும்பம் தாண்டி ஒரு நட்பு.



வெற்றியும் அவனிடம் கை குலுக்க, ஒரு பக்கம் அரிமா மறு பக்கம் வேங்கை என்று இருவரும் நண்பர்களாக மாற துவங்கி இருந்தார்கள்.



இருவரும் ஒன்றாக சமைத்து சாப்பிடுவார்கள். வெளியே ஊர் சுத்துவது என்று நாட்கள் அழகாக சென்றது.



இருவரும் வெவ்வேறு இடத்தில் இருந்தாலும், ஒருவர் வீட்டிலேயே இருவரும் இருந்து கொண்டார்கள்.



இதில் சுப்ரியாவிற்கு நிறையவே பொறாமை இருந்தது. அது எப்போதும் பெண்களுக்கு உரியது தானே!



அவளை விட, ஆதர்ஷ் வெற்றியுடன் நெருங்கி பழகுவதால் தான்.



வெற்றியும் அவள் இருக்கும் போதேல்லாம் அவளை சீண்டுவான்.



உண்மையை சொல்ல வேண்டும் என்றால் வெற்றியும் சுப்ரியாவும் டாம் அண்ட் ஜெரி என்று கூட சொல்லிக்கொள்ளலாம்.



ஆதர்ஷ்க்கு ஏதாவது சமைத்து கொண்டு வந்தால் நிச்சயம் அவளுக்கும் சேர்த்து தான் சமைப்பான்.



அதையும் அவள் வெளுத்து கட்டி விடுவாள்.



இப்படியாக ஒரு நாள் தான் அவன் அகல்யாவின் குரலை கேட்டது. அன்றில் இருந்து அந்த குரலுக்கு சொந்தக்காரியை பார்க்க வேண்டும் என்கிற ஒரு ஆர்வம் அவனிடம் இருக்க தான் செய்தது.



ஆனால் நேரடியாக ஆதர்ஷனிடம் அவன் கேட்கவும் விரும்பவில்லை.



தவறாக நினைத்து விடுவானோ என்கிற எண்ணம் தான்.



இதே நேரம் ஒரு முறை சுப்ரியா, வெற்றி மற்றும் ஆதர்ஷ் மூவரும் ஒரு உணவகத்தில் சாப்பிட்டு கொண்டு இருக்க, "டேய் ஆதர்ஷ், உன் பேமிலி பிக்ச்சர்ஸ் காட்டு டா", என்று கேட்கவும், அவன் மதிக்கவில்லை.



அவனின் கண் தான் உணவை பார்த்து கொண்டு இருந்ததே!



அவன் சாப்பிட்டு கொண்டு இருந்த ஸ்பூனை பிடித்து எடுத்து விட்டாள்.



"என்ன டி உனக்கு", என்று ஆத்திரமாக அவன் கேட்க, "உன் பேமிலி போட்டோஸ்", என்று அவள் மீண்டும் கேட்க, "சைத்தான் டி நீ! காட்டி தொலையுறேன்", என்றவன் அவனின் கைபேசியை உயிர் பித்தான்.



வெற்றியின் கண்கள் மின்னின! அவனின் கண்கள் அவனின் மனதை பறித்த காரிகையின் முகத்தை காண அவளாக இருந்தது.



ஆதர்ஷ் முதலில் ராஜ பார்த்திபனில் தான் ஆரம்பித்தான்.



ஒவ்வொருவறையாக அவன் காண்பித்து கொண்டு வர, வெற்றியின் கண்கள் அவனின் கைபேசியை பார்க்கவில்லை என்றாலும், அவன் கேட்க வேண்டிய வார்த்தைகளுக்காக செவியை தீட்டி வைத்து கொண்டு இருந்தன.



"இது தான் என் தங்கச்சி அகல்யா, அன்னைக்கு வெற்றி கூட இவ குரலை கேட்டான்.", என்று சொன்னதும் தான் தாமதம், ஆதர்ஷின் கைபேசி இருந்தது என்னவோ வெற்றியின் கையில் தான்.
 
Last edited:
Top