எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

மனதில் ஆடும் காதல் மந்தாரா -2

subasini

Moderator
மனம் – 2
எதுவும் எழுதாமல் வைத்திருக்கும் கரும்பலகையான என் மனதில்,
அழியாத காவியமாக நீ எழுதும் காதல் ...
கீர்த்தனையாக ஒலிக்கும் நம் வாழ்வில்...

கல்லூரி என்பது பூந்தோட்டம் அதில் பல வர்ணத்தில் மலரும் மலர்கள் போன்றவர்கள் மாணவ மாணவியினர்.

தங்கள் வாழ்க்கையில் பல வர்ணஜாலங்களைப் படைக்கும் கல்லூரி வாழ்க்கை, மாயாஜாலம் போன்று கண் மூடித் திறப்பதற்குள் பல விந்தைகளைப் படைத்து மறைந்து விடும்.
அதன் தடங்கள் அழகானாதாக இருந்தால் வரும் காலம் சந்தோஷமாக இருக்கும் . துயரமாக இருந்தால் அதன் தடங்களின் தடயங்கள் ரணங்களாக இருக்கும்.

எந்தக் கவலையும் இல்லாமல் தன் வலதுக் காலை எடுத்து வைத்தாள் தாரிகா. அந்தக் கலைக்கல்லூரியில் எல்லாம் மேல் தட்டு மக்களே இருந்தனர். அதனால் அவளுக்கும் அவர்களைப் போன்று மாறா மனம் உந்தியது. முதல் நாளே அவளுக்கு எல்லாம் அதிசயமாக இருந்தது.

"தாரா, பாரேன் எல்லாம் எவ்வளவு அழகாக இருக்காங்க , பேசாமல் நானும் இப்படி டிரஸ் எடுத்து இருக்கலாம்" என்று எதிரே சென்ற பெண்ணின் ஆடையின் அழகில் மயங்கிவாறே கூறினாள்.

"அவங்களுக்கு நல்லா இருக்கும் தாரிகா, நமக்குச் செட் ஆகணும் இல்லையா, அதனால் பார்த்து அப்பறம் எடுக்கலாம்" என்று அவளைத் திசைத் திருப்பினாள்.

"ஆமா ஆமா, சொன்னதும் நீ ஓகே சொல்லிட்டாலும், சரியான பாட்டி தான் நீ , உன்னோட காலேஜில் இன்னும் செமயாக இருப்பாங்களாமாடி எல்லாம் பசங்களும், நான் கேள்வி பட்டேன் டி, என்ன பண்ண எனக்கு இது தான் யோகம் போல, பரவாயில்லை உன்னைப் பார்க்க அடுக்கடி அங்கே வருவேனே" என்றாள் சிறு பிள்ளைப் போல.
தாரிகாவின் ஆர்வமும் அவளின் உற்சாகமும், கல்லூரியில் ஜாலியாக இருக்கலாம் பள்ளியில் படித்தது போன்று கஷ்டப்பட்டுப் படிக்க வேண்டாம் என்றெல்லாம் கனவுக் கண்டிருந்தாள்.
அதை நன்றாக உணர முடிந்தது தாராவிற்கு.

அவளின் கல்லூரியில் சேர்த்தியதும் தாராவின் கல்லூரிக்கு வந்தனர்.

அங்கே பார்த்ததும் தெரிந்தது. மிகவும் கண்டிப்பும் படிப்பும் அருவியாக ஒடுவது போல் ஒரு மாயை உணர்ந்தாள் தாரிகா. 'நல்ல வேலை நாம ஆர்ட்ஸ் எடுத்தோம்' என்று நூறாவது முறையாகத் தனக்குத் தானே சொல்லுக்கொண்டாள்.

எந்த ஆர்பாட்டமும் இல்லாமல் தாராவின் சேர்க்கையை உறுதிச் செய்தனர்.

பின்னர் அவர்களுக்குத் தங்குவதற்குத் தனியாகத் தங்கும் விடுதிப் போன்று வாடகைக்கு ஒரு வீடு எடுத்தனர். அப்பொழுதுத் தான் அடிக்கடி வந்து பிள்ளைகளோடு தங்கிப் பார்த்துக்கொள்ள முடியும் என்று எண்ணினர் கங்காதரன் தம்பதியினர்.

இதெல்லாம் கூட இருந்து பார்த்துக்கொண்டான் மகேந்திரன்.

தங்கும் வீட்டில் இருவருக்குத் தேவையான வசதிகள் பார்த்துப் பார்த்துச் செய்துக்கொடுத்த பெற்றோரைப்பார்த்து மனதில் இவர்களுக்காகவே நன்றாகப் படித்துப் பெரிய அளவில் வரவேண்டும் என்று உறுதி எடுத்தாள் தாரா.

நாம் நினைப்பதெல்லாம் நடக்கத்தான் விட்டு விடுவான நம்மைப் படைத்தவன். அவனுக்குப் போர் அடிக்கும் போது, அவன் விளையாடுவதே நம் வாழ்க்கையில் அல்லவா.

இருபாலரும் படிக்கும் முறையைக் கொண்டு வந்ததே ஆண், பெண் இருவரும் எல்லா விதத்திலும் சமம். நமக்குள் பேதமில்லை என்று உணரவைக்கத் தொடங்கியது. பேதமின்றிப் பழகினர் தான்.. ஆனால் காதலின் பிறப்பிடம் கல்லூரி... அங்குத் தான் தங்கள் மனம் துணையைத் தேடும். காதலும் பேதமின்றி வலம் வந்தது.


கல்லூரியின் முதல் நாள் தாரிகாவிற்கு. பொறியியல் துறை என்பதால் தாராவிற்குக் கல்லூரித் திறக்க இன்னும் நாட்கள் இருந்ததால் அது வரை தங்கள் வீட்டில் இருந்தே தாரிகா, தனியாகச் சென்று வந்தாள் கல்லூரிக்கு. அவர்கள் எடுத்த வாடகை வீட்டிற்குத் தாராவோடு போனால் போதும் என்று கூறிவிட்டாள் அவள் அம்மா. தாரிகாவை, தனியாக விட்டாள் சரியாகாது என்ற பயம் புனிதாவிற்கு மனதில் இருந்தது .

தங்களுடைய அறையில் தயாரிக்கொண்டிருக்கும் தாரிகாவைப் பார்த்ததும், " தாரு, உன்னோட காலேஜ் ரொம்ப ஜாலியாக இருக்கும் நினைக்கிறேன் . உன்னோட காலேஜ் லைஃப் என்ஜாய்ப் பண்ணிக்கோ, அட் தி, சேம் டைம் உன்னோட படிப்பிலும் கவனம் இருக்கணும். பிரென்ட்ஸ் பார்த்துச் செலக்ட் பண்ணு டி, எந்தச் சிக்கலிலும் போய்ச் சிக்கிறாத, இது நம்ம ஸ்கூல் இல்லை , நம்ம மேல் தப்பு இருந்தாலும் கெத்தாகப் போய் மிரட்டி அவங்கள ஏமாத்த, பார்த்து நடந்துக்கோடி" என்று அறிவுரைக் கூறினாள் தாரா.

ஆரம்பிச்சுட்டா என்று மனதில் புலம்பியவள் அவள் அருகே வந்து " ரொம்பப் பயபடாதே தாரா, எனக்குத் தெரியாதா ஸ்கூல் போன்று இருக்காதுக் காலேஜ் " என்றாள்.

"ம்ம் நீ நல்ல பிள்ளை என்று தெரியுமே.. ஆனால் இந்த மேக்கப் கொஞ்சம் அதிகம் தானடி" என்று கேலிச் செய்தாள் தாரா.

"அப்படியா, சொல்லற" என்று மீண்டும் கண்ணாடி முன் போய் நின்றவள், "ஆமாம் இந்த இதழில் அடித்த சாயம் கொஞ்சம் தூக்கலாக இருக்கு, இதற்குப் பதிலாக வேற டல் கலர்ப் போட்டுக்கிறேன்" என்று அதை மாற்றியவள் கல்லூரிக்குக் கிளம்பினாள்.

தாரிகாவிற்குக் கட்டுப்பாடோடு வளர்ந்ததால் கல்லூரி அவளுக்குச் சுதந்திரப் பூமியாகத் தோன்றியது. தன் வகுப்பில் இருக்கும் எல்லோரையும் வியப்பாகப் பார்த்தாள். வேக வேகமாகத் தங்கள் நட்புகளை உருவாக்கி ஆனந்தமாக வலம் வரும் இந்தக் கல்லூரி வளாகம் அவளுக்கு மிகவும் பிடித்து இருந்தது. எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் மிதப்பது போன்ற ஒரு தோற்றம் அவள் மனதில் உண்டாகியது.

நட்போ காதலோ அங்கே எல்லாம் வேக வேகமாக நடந்தேறிக்கொண்டிருந்தது. இதையெல்லாம் பார்த்த மிரண்டுப்போனாள் தாரிகா என்றால் தவறு.
அவள் இதெல்லாம் சாதரணமாக எடுத்துக்கொண்டாள். இந்த மாறி வரும் காலக்கட்டத்தில் ஆண் பெண் நட்பு அதன் எல்லையில் இருந்தால் எந்தத் தவறும் இல்லை என்று நினைத்தாள். எல்லை எது என்பதுதான் இங்குப் பிரச்சனை.

எல்லாம் அழகாக மாற‌த்தொடங்கியது தாரிகாவிற்கு…
கனவும் கல்லூரியும் இணைந்தே பயணித்தது அவளுக்கு…

மாணவர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்திக் கொண்டிருந்தனர்…

அதில் அவளுடைய முறை வந்ததது…
என்ன செய்வது எனச் சில நொடிகள் தயங்கியவள் பின்னர் அழகான‌ப் பாடலைப் பாடினாள்…

“மழை அழகா…
வெயில் அழகா…
கொஞ்சும் போது மழை அழகு…
கண்ணா நீ கோபப்பட்டால் வெயில் அழகு”
என்ற தன் குரலில் அழகாகப் பாடினாள்…
அவளது குரல் இனிமையாக இருந்தது என்பதைக் காட்டிலும் அவள் பாடிய இந்த வரிகள் அவள் குரலில் அழகாக இருந்தது…

இந்தப் பாடலைக் கேட்ட, பல மாணவர்கள் யாரிவள் தேவதை என்று ரசித்தனர்…

நவநாகரீக அழகு என்று இல்லாமல் நிதானமான அழகு அவளிடம் இருந்தது…

அவள் முகத்தில் இருக்கும் ஒப்பனை இங்கிருந்த பெண்களுடன் ஒப்பிட்டதில் குறைவாக இருந்ததாக உணர்ந்தாள் தாரிகா… அதுவே அவளை மிகவும் அழகாகக் காட்டியது உணரவில்லை தாரிகா.
அன்றைய முடிவில் நளினி அவளுக்குத் தோழியாகக் கிடைத்தாள.

கல்லூரியில் தாரிகாவின் வகுப்பைச் சேர்ந்த சதீஷ் அவள் பாடலில், அழகில் மயங்கி அவள் யாரென விசாரித்துக்கொண்டிருந்தான்.

அவனும் இந்தக் கல்லூரிக்குப் புதியவன் என்பதால், அவள் யாரெனக் கண்டு பிடிக்க முடியவில்லை, இங்கே தானே வருவாள் கண்டுப்பிடுத்து விடாலம் என்று வகுப்பறைக்கு வந்தவனுக்கு அதிர்ச்சியில் விழிகள் விரிந்தது. அவன் வகுப்பில் நிலவென வீற்றிருந்தாள். அவளைக்கண்டதும் சதீஷ்ற்கு, காதல் அலைவரிசைப் பண்ணிசைத்தது.

நளினியும் அவளும் ஓரே ஊர் என்றாலும் அவ்வளவு பழக்க மில்லை இந்தக் கல்லூரியில் தான் அவளைப் பார்த்து நட்புக்கொண்டாள் தாரிகா. இருவரும் சேர்ந்தே பஸ் ஏறித் தங்கள் ஊருக்கு வந்தனர். அதில் அவர்கள் நட்பு நல்ல இறுகிப் பிணைத்தது இந்தப் பேருந்துப் பயணம்.

நாட்கள் அதன் போக்கில் பயணிக்கக் கல்லூரி வாழ்க்கை அதிகம் வகுப்பறையில் கழிந்தது. தாரிகாவோ நளினியிடம் எதையோ மிகவும் சுவாரிசியமாகப் பேசிக்கொண்டிருந்தாள். அவள் பேசும் போது அவள் முகம் காட்டும் அபிநயங்களில் வீழ்ந்துக்கொண்டிருந்தான் சதீஷ்.

சதீஷ், பெரிய செல்வந்தரின் வீட்டு இரண்டாம் வாரிசு... அவனுக்குக் கவலை என்பது எதுவும் அறியாமலேயே வளர்ந்து வந்தவன். அவனுக்கு வேணும் என்று நினைத்தாலே அதைச் செயல் படுத்திவிடும் அளவுக்கு அவன் மேல் பாசம் வைத்திருக்கும் அண்ணனுக்குத் தம்பியாகப் பிறந்தவன் சதீஷ். சிறுவயதிலேயே தந்தையை இழந்ததால் தம்பிக்குத் தந்தையாக இருந்து அவனைத் தன் பிள்ளையெனப் பாசம் காட்டி வளர்த்தினான் அவன் அண்ணன்.

தாயின் சிறகில் இவ்வளவு காலம் இருந்தவனுக்குத் தனியாகக் கல்லூரியில் படிக்கும் போது கொஞ்சம் சிறு பிள்ளைத் தனம் மாறி, வரும் காலங்களில் பொறுப்பாக இருப்பான், அதே போன்று வெளி உலகம் அவனுக்குக் கற்றுத்தரும் அனுபவம் தொழிலில் துறையில் அவனுக்கு உதவியாக இருக்கும் என்று நினைத்து அவனை இந்தக் கல்லூரியில் சேர்த்தி இருந்தான் அவன் அண்ணன்.

அண்ணன் நினைத்தது நடக்குமா என்பது கேள்விகுறித்தான்... ஆனால் அனுபவம் அவனுக்கு ஏற்பட்டது.. அது தன் அண்ணன் நினைத்தது போன்றில்லாமல் அவன் இளமைக்கால அனுபவம் தான் கற்றுக்கொண்டான் சதீஷ்.

காதல் அவனை ஆளுவதால் காணும் எல்லாம் அழகாகச் சதீஷ்ற்குத் தோன்றியது.
எப்படியாவது தாரிகாவோடு நட்பை ஏற்படுத்தி மெல்ல மெல்ல அவளிடம் தன் காதலைச் சொல்லி விடாலம் என்று மனதில் நினைத்தவன், அதற்கு முதலில் நளினியின் நட்பை நாடினான்.

நளினியிடம் அவன் நட்பை உருவாக்கினான். அவர்கள் நல்ல நண்பர்காளாக வலம் வந்தனர். அவர்கள் நட்பைப் பார்த்துக் ஒரு கட்டத்தில் தாரிகாவிற்கே அவனோடு 'ப்ரென்டு' என்று கைக்கலுக்கத் தோன்றியது. இதைத் தானே எதிர்ப்பார்த்தான் அவனும்.

"நளினி, சில நோட்ஸ் எல்லாம் எதைப்பார்த்திப் படிக்கிறாய்" என்று கேட்டாள் தாரிகா.

"அதெல்லாம் எனக்குக் கவலையே இல்லையடி, அதெல்லாம் சதீஷ் தருவான், அவன் அழகாக எக்ஸ்பிளைன் பண்ணித் தருவான் டி" என்றாள்.

"ஆமாம் என் கூடத்தானே சுத்திட்டு இருக்க அப்பறம் எப்படிச் சொல்லித்தாரான் நான் பார்த்தே இல்லை" என்றாள் தாரிகா.

"தினமும் நாங்க ஃபோனில் பேசிப்போமடி, அப்போ நான் எனக்கு இருக்கும் சந்தேகமெல்லாம் கேட்டுப்பேன், அதே போல நாங்க வீக் எண்டு அருகே இருக்கும் மாலுக்குப் போனோம், அவன் அவ்வளவு பாதுகாப்பாகக் கூட்டிப்போனான். பயமே இல்லாமல் நானும் கூடப் போனேன்" என்றாள்.

"உங்க வீட்டில் திட்ட மாடாடங்காளாடி" என்றாள் பாவமாக.

"அவன் என்ன விட எங்க அம்மாவிடம் நல்ல பேசுவான் செம க்ளோஸ் இரண்டு பேரும். அவன் தான் இப்படிப் போகலாம் வாங்க அம்மா கூப்பிட்டான்" என்றான் அம்மா தான் நீங்க போய்ட்டு வாங்க என்று அனுப்பி விட்டாங்க" என்றாள் நளினி.

நளினியின் கூற்றில் எந்தப் பயமும் இல்லாமல்பழகக் கூடிய நல்ல தோழன் சதீஷ் என்று மனதில் நினைத்தாள்.

நாட்கள் அதன் போக்கில் போகச் சதீஷிடம் நட்புடன் கைக்கோர்க்கும் நாளும் வந்தது தாரிகாவிற்கு.

கல்லூரியின் வேலை நாட்களிலேயே இடையில் ஒரு நாள் கல்லூரி எதிர்பாரவிதமாக லீவ் விட்டது. எல்லாம் வெளியே போகத் திட்டம் இட, இந்த மூவரணியும் வெளியேப்போகலாம் என்று முடிவுச்செய்தனர்.

அதேப்போல் கிளம்பிப் போயினர். நல்ல ஜாலியாகச் சென்றது அவர்கள் விடுமுறை. மூவரும் சுற்றிக்கொண்டிருக்கும் கொஞ்ச நேரத்தில் நளினிக்குப் போன் கால் வந்தது.

" ஹாலே, என்னம்மா என்ன ஆச்சி" என்று பதட்டமாகக் கேட்டாள்.

கால் வழுக்கிக் கீழே விழுந்துட்டேன் அது தான் உன்னைக் கூப்பிட்டேன் கொஞ்சம் வர முடியுமா? அப்பாக்கு வேலைக்கு இருக்கு இப்ப வர முடியாது சொன்னாரு என்றாள் நளினியின் தாய்.
அதைக்கேட்டதும் சரிம்மா இப்பவே வரேன்" என்றவள், தாரிகா மற்றும் சதீஷிடம் "நீங்க என்ஜாய், பண்ணிங்க நான் அம்மாவைப் பார்க்கப் போறேன்" என்றாள்.

"இல்லை நளினி நாங்களும் வரோம்" என்றவன் இருவரையும் தன் இரு சக்கர வாகனத்தில் அமர்த்தி அவளோட வீட்டிற்குக் கூட்டிச்சென்றான்.

தாரிக்காவிற்கோ, எல்லாம் அவளை மீறி நடப்பது போன்று தோன்றியது. நேரம் மாலை ஆகியதால் வீட்டிற்கு வேறு செல்ல வேண்டும் என்ற பயமும் அவளை வாட்டியது. தன் தோழியின் இக்கட்டான சூழல் தெரிந்ததாதல் அதை வெளிக்காட்டமல் இருந்தாள்.


நளினியின் தாயை மருத்துவமணைக்கு அழைத்துச்சென்று, எல்லாம் பார்த்து அவர் காலுக்கு மருந்து இட்டு,அவர்களை ஆட்டோ ஒன்றில் ஏற்றி வீட்டிற்கு அனுப்பி விட்டான் சதீஷ்.
அவன் அக்கறையில் மனம் நெகிழ்ந்தது என்னமோ தாரிகா மட்டுமே.

நல்ல நண்பன் இவன் என்று மனதில் பூரித்தாள்.

அவர்கள் சென்றதும். "நான் இங்கேயே எதாவது ஆட்டோ பிடித்து வீட்டுற்கு போகிறேன், ஏற்கனவே லேட் ஆச்சு" என்று பயந்தாள் தாரிகா.

"ம்ம் ஆமாம் வா, நானே உன்னை விட்டறேன்" என்றவன் அவள் அனுமதிக் கேட்காமலேயே, ம்ம் வண்டியில் ஏறு" என்றான்.

என்ன செய்ய என்று தயங்கியவளின் முகம் பார்த்து "உன்னை நான் எதுவும் பண்ண மாட்டேன், வா இப்படியே யோசித்துட்டு இருந்தால் இன்னும் நேரம் தான் ஆகும். உன்னைத் தனியாக அனுப்பவும் பயமாக இருக்கிறது, அது தான் சொல்லறேன்" என்றான் சதீஷ். அவன் கூற்றில் இருந்த உண்மையில் அவனோடு அவன் வண்டியில் ஏறினாள் தாரிகா.

மனம் முழுவதும் காதலோடு அவளைத் தன் பைக்கில் இருத்தி, கூட்டிச்செல்லும் இந்தப் பயணத்தை மிகவும் ரசித்தான் சதீஷ்.


உரசாதத் தோளுகளும்
பேசாத இதழ்களும்
தொடாதக் கரங்களும்
இணையாத இதயங்களும்
ஒன்றாகப் பயணிக்கும்
இந்தப் பயணமும்...

தொடரும்...
 
Top