தீபாகோவிந்த்
Moderator
அத்தியாயம் 1
விமானத்தின் உள்ளே அமர்ந்து இருந்த அவன் நிலையும் இது தான்.போய்த்தான் வேண்டுமா?
எந்த தைரியத்தில் வந்தோம்?
ஏறி அமர்ந்தாகி விட்டது இனி அதைப்பற்றி ஆலோசனை செய்து பயன் இல்லை.வந்தது வந்து விட்டோம் பார்த்துவிடலாம் என்று குருட்டு தைரியமாக அமர்ந்து கொண்டான். இருந்தாலும் கைகள் வியர்த்து நடுக்கத்தை பறைசாற்றி வைத்தது.
அதை பயம் என்று சொல்வதைவிட அவனது எதிர்பார்ப்பு இத்தனை வருடங்களாக சேர்த்து வைத்த அவனது ஆவல்களின் காரணமாக கூட இருக்கலாம்.இத்தனை நேரமாக விரித்து வைத்துக் கொண்டு இருந்த பத்திரிகையை மூடி வைத்து விட்டு நிமிர்ந்தவனுக்குள் ஒருவித மகிழ்ச்சி எதிர்பார்ப்பு பயம் எல்லாம் பரவலாக இருந்தது.
இது இன்றல்ல என்று அன்னையிடம் வாக்குறுதி அளித்தானோ அன்றிலிருந்து இன்றுவரை தொடர்கிறது.
"இத்தன வருஷமா வேற கல்யாணம் பண்ணிக்கன்னு உன்கிட்ட சொல்லி சொல்லி.."
என ஆரம்பித்தவர் அவனது கண்டன பார்வையில்
" இனி அத பத்தி பேச ல ஆனா உனக்கு உம் புள்ளைய உனக்கு வேணும்னா பார்க்காம இருக்க முடியும் ஆனா என்னால முடியாது ஒன்னு வேற கல்யாணம் பண்ணிக்க இல்லை யா என் பேரன கூட்டிட்டு வா கண்ணார பார்த்துக்கறேன் போற காலத்தில் எனக்கு இந்த கொடுப்பினையாவது
கிடைக்கட்டும்"
என்று தனது இறுதி நாட்களில் இருக்கும் தாயின் வேண்டுதலை மறுக்க முடியவில்லை. தன் வாழ்நாள் முழுவதும் ஆழியன் அவனுக்காகவே வாழ்ந்து இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கும் தாய் என்னும் அந்த உயிர் ஓவியம்... காலநீரில் வண்ணம் கலைந்து மெல்ல உயிர் கரைந்து கொண்டிருந்தது . அவரிடம் மறுதலித்து செய்த தவற்றை சுட்டி வீம்பு உரைத்து ஆகப் போவது என்ன ?
அவனால் முதல் கோரிக்கையை ஏற்க இயலாது ஆகையினால் இரண்டாவதை நிறைவேற்றி ஆக வேண்டும். அதையும் தாண்டி உள்ளூர தன் மகனைக் குறித்த தேடல் அவனைப் நிழற்படத்தில் கண்ட நாள் முதல் விஸ்வரூபமாய் வளர்ந்து அவனை ஆட்டி வைக்கும்
விதத்தில் கிடைத்த வாய்ப்பை வேண்டும் என்று பற்றிக் கொண்டது மனம் .
"சரி உங்களுக்காக போறேன் "
என்றவனின் வார்த்தைகளை கேட்டு மகிழ்ந்து போனார். பிரவசவ அறைக்குள் புதிதாய் நுழையும் பெண்ணின் பயம் எதிர்பார்ப்பு மகிழ்ச்சி அத்தனையும் தாண்டி பிரசவிக்கும் வலி அவனுள்ளும்
ஆனால் நிகழ்ந்தவை நிகழப்போகின்றவை இரண்டையும் நினைக்க நினைக்க நிகழ்வில் தொண்டை வறண்டு போனது போன்ற எண்ணம் எழுந்தது. லேசாக செருமி சரி செய்தவனுக்கு ஒரு கோப்பை தேநீர் வேண்டும் என்று தோன்ற பணிப் பெண்னை அழைத்து
"ஒன் கப் டீ " என்றான்.
அது தொண்டையை நனைத்ததும் தான் இயல்பு நிலை வந்ததாக உணர்ந்தான். மீண்டும் தன்னை இழுத்து பத்திரிகையில் பதிவிறக்கம் செய்தான்.
அங்கு
அந்த அறைக்குள் நுழைந்தாள் அவள் . எதையோ வரைந்து கொண்டிருந்த பதினெட்டு வயதுநிலனின் சட்டையை பிடித்து இழுத்தாள். கவனம் கலையத் திரும்பியவன் காலுக்குள் வந்த பன்னீர் ரோஜாவை தூக்கிக் கொண்டான்.
"ஹே கியூட்டி. என்ன ஆச்சு "
எனவும் அழுது வைத்தாள் ஏழு வயது குழந்தை அவள்
"என்ன ஆச்சு? யார் என்ன சொன்னாங்க"
உதடு பிதுங்க
"மாம் "
என்றாள்.
"எது மாம்மா கியூட்டிய அடிச்சது வா கேட்போம்."
என்று தங்கையை தூக்கிக் கொண்டு சென்றான்.
அந்த அறையில் தனது அடுத்த வெளியீட்டுக்கான உடையை வடிவமைப்பு செய்து கொண்டு இருந்தனர். மேத்யூவும் மகரவிழியும்.இவனது அரவம் கேட்டதும் திரும்பியவர்களுக்கு. அவனையும் அவன் கையில் பாந்தமாக உட்கார்ந்திருந்த மகளைக் கண்டதும் புன்னகை மலர்ந்தது.
"தூங்கி எழுந்ததும் நேரா உன் கிட்ட வந்துட்டாளா வழக்கம்போல"
என்றபடி மகளிடம் வந்தவள். அவளை தூக்கிக் கொள்ள முயல முடியாது எனும் விதமாக தலையாட்டி விட்டு மீண்டும் அண்ணன் கழுத்தை கட்டிக்கொண்டாள். தங்கையுடன் நாற்காலியில் அமர்ந்து கொண்டவன். தங்கையை மடியில் அமர்த்தியபடி
"மாம் கியூட்டி கோபமா இருக்காங்க? அப்படி தான டாட்"
என்றவனின் அழைப்பில் மேத்யூ
"எஸ் எஸ் என்ற படி மகனின் அருகில் அமர்ந்து கொண்டு அடுத்த நடக்கும் சமாதான உடன்படிக்கை நிகழ்வுகளை காண தயாரானான்.
மகரவிழி மேத்யூவை உதவி கிடைக்குமா என்று பரிதாபமாக பார்க்க
"சீ ஹனி என்னால இந்த விஷயத்தில் ஹெல்ப் பண்ண முடியாது."
எனவும் அவனை முறைத்துவிட்டு மகனைப் பார்க்க
"ஸாரி மாம் அயம் ஹெல்ப்லெஸ்." என்று தோளை குலுக்கி தலையை இருபுறமும் ஆட்டி விட்டு தங்கையை மடியில் சரியாக வைத்துக் கொண்டான். மகர விழி வேறு வழியற்று குழந்தை முன் மண்டியிட்டு
"ஸாரி ஸாரி கியூட்டி" என்று மகளிடம் இறைஞ்சி கொண்டிருந்தாள். அவளை விட்டு விட்டு பாரீஸ் சென்று வந்ததற்கு.அப்போதும் கடந்த சில நாட்களாக தான்தேடிய உடன் வராத அன்னையிடம் கொண்ட கோபம் குறைவதாக இல்லை.
"டேய் இதெல்லாம் நல்லா இல்லை அப்பா மகன் மகள் எல்லாம் ஒரு கட்சி நான் மட்டும் தனியா எப்படியாவது காப்பாத்துங்கடா"
அப்போது நிலன் தான்
"ஹேய் கியூட்டி மாம் உனக்கு பார்பி டால் வாங்க போயிருந்தாங்க."
"ரியலி"
என மேத்யூவை பார்க்க
"எஸ் டியர்" என்று அவளை தூக்கிக்கொண்டான்.
"எங்கம்மா பார்பி "
என்றதும் வாங்கிவராத ஒன்றை எப்படி தருவது ? இன்னும் சற்று பொறுத்து தருவித்துவிடலாம் என்றாலும் அது வரை எப்படி சமாளிப்பது என்று விழித்தபடி நின்று கொண்டிருந்தவளின் கரத்தில் தான் ஏற்கனவே தங்கைக்கு என வாங்கி வைத்திருந்த அந்த பொம்மையை வைக்க தனது சூழலை புரிந்து கொண்டு அதற்கு தீர்வையும் தந்த மகனை தழுவிக் கொண்டாள் மகர விழி. நிலனைத் தொடர்ந்து தானும் தாயிடம் தாவியவளை அள்ளிக் கொண்டவள். அவளிடம் பொம்மையை கொடுத்தாள்.
"ப்யூட்டிபுல்" என்று அதை கொஞ்சத் துவங்கிவிட
மகரவிழி அதைப் பார்த்தபடி அமர்ந்து கொண்டாள். அடுத்து எதையோ கேட்க துவங்கும் முன்
"ஓகே மாம் எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு ஃநைட் டின்னர்ல பார்க்கலாம்"
என்றவன் வெளியேறி இருந்தான்.
விமானத்தின் உள்ளே அமர்ந்து இருந்த அவன் நிலையும் இது தான்.போய்த்தான் வேண்டுமா?
எந்த தைரியத்தில் வந்தோம்?
ஏறி அமர்ந்தாகி விட்டது இனி அதைப்பற்றி ஆலோசனை செய்து பயன் இல்லை.வந்தது வந்து விட்டோம் பார்த்துவிடலாம் என்று குருட்டு தைரியமாக அமர்ந்து கொண்டான். இருந்தாலும் கைகள் வியர்த்து நடுக்கத்தை பறைசாற்றி வைத்தது.
அதை பயம் என்று சொல்வதைவிட அவனது எதிர்பார்ப்பு இத்தனை வருடங்களாக சேர்த்து வைத்த அவனது ஆவல்களின் காரணமாக கூட இருக்கலாம்.இத்தனை நேரமாக விரித்து வைத்துக் கொண்டு இருந்த பத்திரிகையை மூடி வைத்து விட்டு நிமிர்ந்தவனுக்குள் ஒருவித மகிழ்ச்சி எதிர்பார்ப்பு பயம் எல்லாம் பரவலாக இருந்தது.
இது இன்றல்ல என்று அன்னையிடம் வாக்குறுதி அளித்தானோ அன்றிலிருந்து இன்றுவரை தொடர்கிறது.
"இத்தன வருஷமா வேற கல்யாணம் பண்ணிக்கன்னு உன்கிட்ட சொல்லி சொல்லி.."
என ஆரம்பித்தவர் அவனது கண்டன பார்வையில்
" இனி அத பத்தி பேச ல ஆனா உனக்கு உம் புள்ளைய உனக்கு வேணும்னா பார்க்காம இருக்க முடியும் ஆனா என்னால முடியாது ஒன்னு வேற கல்யாணம் பண்ணிக்க இல்லை யா என் பேரன கூட்டிட்டு வா கண்ணார பார்த்துக்கறேன் போற காலத்தில் எனக்கு இந்த கொடுப்பினையாவது
கிடைக்கட்டும்"
என்று தனது இறுதி நாட்களில் இருக்கும் தாயின் வேண்டுதலை மறுக்க முடியவில்லை. தன் வாழ்நாள் முழுவதும் ஆழியன் அவனுக்காகவே வாழ்ந்து இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கும் தாய் என்னும் அந்த உயிர் ஓவியம்... காலநீரில் வண்ணம் கலைந்து மெல்ல உயிர் கரைந்து கொண்டிருந்தது . அவரிடம் மறுதலித்து செய்த தவற்றை சுட்டி வீம்பு உரைத்து ஆகப் போவது என்ன ?
அவனால் முதல் கோரிக்கையை ஏற்க இயலாது ஆகையினால் இரண்டாவதை நிறைவேற்றி ஆக வேண்டும். அதையும் தாண்டி உள்ளூர தன் மகனைக் குறித்த தேடல் அவனைப் நிழற்படத்தில் கண்ட நாள் முதல் விஸ்வரூபமாய் வளர்ந்து அவனை ஆட்டி வைக்கும்
விதத்தில் கிடைத்த வாய்ப்பை வேண்டும் என்று பற்றிக் கொண்டது மனம் .
"சரி உங்களுக்காக போறேன் "
என்றவனின் வார்த்தைகளை கேட்டு மகிழ்ந்து போனார். பிரவசவ அறைக்குள் புதிதாய் நுழையும் பெண்ணின் பயம் எதிர்பார்ப்பு மகிழ்ச்சி அத்தனையும் தாண்டி பிரசவிக்கும் வலி அவனுள்ளும்
ஆனால் நிகழ்ந்தவை நிகழப்போகின்றவை இரண்டையும் நினைக்க நினைக்க நிகழ்வில் தொண்டை வறண்டு போனது போன்ற எண்ணம் எழுந்தது. லேசாக செருமி சரி செய்தவனுக்கு ஒரு கோப்பை தேநீர் வேண்டும் என்று தோன்ற பணிப் பெண்னை அழைத்து
"ஒன் கப் டீ " என்றான்.
அது தொண்டையை நனைத்ததும் தான் இயல்பு நிலை வந்ததாக உணர்ந்தான். மீண்டும் தன்னை இழுத்து பத்திரிகையில் பதிவிறக்கம் செய்தான்.
அங்கு
அந்த அறைக்குள் நுழைந்தாள் அவள் . எதையோ வரைந்து கொண்டிருந்த பதினெட்டு வயதுநிலனின் சட்டையை பிடித்து இழுத்தாள். கவனம் கலையத் திரும்பியவன் காலுக்குள் வந்த பன்னீர் ரோஜாவை தூக்கிக் கொண்டான்.
"ஹே கியூட்டி. என்ன ஆச்சு "
எனவும் அழுது வைத்தாள் ஏழு வயது குழந்தை அவள்
"என்ன ஆச்சு? யார் என்ன சொன்னாங்க"
உதடு பிதுங்க
"மாம் "
என்றாள்.
"எது மாம்மா கியூட்டிய அடிச்சது வா கேட்போம்."
என்று தங்கையை தூக்கிக் கொண்டு சென்றான்.
அந்த அறையில் தனது அடுத்த வெளியீட்டுக்கான உடையை வடிவமைப்பு செய்து கொண்டு இருந்தனர். மேத்யூவும் மகரவிழியும்.இவனது அரவம் கேட்டதும் திரும்பியவர்களுக்கு. அவனையும் அவன் கையில் பாந்தமாக உட்கார்ந்திருந்த மகளைக் கண்டதும் புன்னகை மலர்ந்தது.
"தூங்கி எழுந்ததும் நேரா உன் கிட்ட வந்துட்டாளா வழக்கம்போல"
என்றபடி மகளிடம் வந்தவள். அவளை தூக்கிக் கொள்ள முயல முடியாது எனும் விதமாக தலையாட்டி விட்டு மீண்டும் அண்ணன் கழுத்தை கட்டிக்கொண்டாள். தங்கையுடன் நாற்காலியில் அமர்ந்து கொண்டவன். தங்கையை மடியில் அமர்த்தியபடி
"மாம் கியூட்டி கோபமா இருக்காங்க? அப்படி தான டாட்"
என்றவனின் அழைப்பில் மேத்யூ
"எஸ் எஸ் என்ற படி மகனின் அருகில் அமர்ந்து கொண்டு அடுத்த நடக்கும் சமாதான உடன்படிக்கை நிகழ்வுகளை காண தயாரானான்.
மகரவிழி மேத்யூவை உதவி கிடைக்குமா என்று பரிதாபமாக பார்க்க
"சீ ஹனி என்னால இந்த விஷயத்தில் ஹெல்ப் பண்ண முடியாது."
எனவும் அவனை முறைத்துவிட்டு மகனைப் பார்க்க
"ஸாரி மாம் அயம் ஹெல்ப்லெஸ்." என்று தோளை குலுக்கி தலையை இருபுறமும் ஆட்டி விட்டு தங்கையை மடியில் சரியாக வைத்துக் கொண்டான். மகர விழி வேறு வழியற்று குழந்தை முன் மண்டியிட்டு
"ஸாரி ஸாரி கியூட்டி" என்று மகளிடம் இறைஞ்சி கொண்டிருந்தாள். அவளை விட்டு விட்டு பாரீஸ் சென்று வந்ததற்கு.அப்போதும் கடந்த சில நாட்களாக தான்தேடிய உடன் வராத அன்னையிடம் கொண்ட கோபம் குறைவதாக இல்லை.
"டேய் இதெல்லாம் நல்லா இல்லை அப்பா மகன் மகள் எல்லாம் ஒரு கட்சி நான் மட்டும் தனியா எப்படியாவது காப்பாத்துங்கடா"
அப்போது நிலன் தான்
"ஹேய் கியூட்டி மாம் உனக்கு பார்பி டால் வாங்க போயிருந்தாங்க."
"ரியலி"
என மேத்யூவை பார்க்க
"எஸ் டியர்" என்று அவளை தூக்கிக்கொண்டான்.
"எங்கம்மா பார்பி "
என்றதும் வாங்கிவராத ஒன்றை எப்படி தருவது ? இன்னும் சற்று பொறுத்து தருவித்துவிடலாம் என்றாலும் அது வரை எப்படி சமாளிப்பது என்று விழித்தபடி நின்று கொண்டிருந்தவளின் கரத்தில் தான் ஏற்கனவே தங்கைக்கு என வாங்கி வைத்திருந்த அந்த பொம்மையை வைக்க தனது சூழலை புரிந்து கொண்டு அதற்கு தீர்வையும் தந்த மகனை தழுவிக் கொண்டாள் மகர விழி. நிலனைத் தொடர்ந்து தானும் தாயிடம் தாவியவளை அள்ளிக் கொண்டவள். அவளிடம் பொம்மையை கொடுத்தாள்.
"ப்யூட்டிபுல்" என்று அதை கொஞ்சத் துவங்கிவிட
மகரவிழி அதைப் பார்த்தபடி அமர்ந்து கொண்டாள். அடுத்து எதையோ கேட்க துவங்கும் முன்
"ஓகே மாம் எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு ஃநைட் டின்னர்ல பார்க்கலாம்"
என்றவன் வெளியேறி இருந்தான்.