சுயம் நோக்கி
கல்வியில் கிடைக்கும்
என்றெண்ணி
கணினியின் துணை
கொண்டு
தகை சான்றோர்
புறம் இருக்க
நகை சான்றோர்
உடனிருக்க நாடிய
பண்புகள் வேலிகள்
என்றே நடையிடவில்லை
பாசறையில் பாதுகாப்பு
பாதகம் பாசங்கள்
என பிற்போக்கு சூழலையும்
முற்போக்கு சுழல்களையும்
முன்னறிவிப்பார் இன்றி
நானும் கடக்க நாளும் கடக்க
சற்றே தளர்ச்சி
தனிமைதான் தெரிந்தது
சிந்திக்கிறேன் செலுத்துகிறேன்
சுயம் நோக்கி
கல்லறையிலும்
சுயம் நோக்கு
மனிதர்களை அன்றி
வேறெங்கும் இல்லையே
நான் நான் என
பறையறைய வேண்டிய அவசியம்
ஆணோ பெண்ணோ
நான் நானாகவே வாழ
ஆங்கு இடம் உண்டு
எனக்கான சுயம் உண்டு
ஈங்கு இடமில்லையோ
மனிதர்கள் மனிதர்களாக
வாழும் சுயம் அற்ற இம்
மேதினியில்
சுயம் நோக்கு சுயநலநோக்கு.
கல்வியில் கிடைக்கும்
என்றெண்ணி
கணினியின் துணை
கொண்டு
தகை சான்றோர்
புறம் இருக்க
நகை சான்றோர்
உடனிருக்க நாடிய
பண்புகள் வேலிகள்
என்றே நடையிடவில்லை
பாசறையில் பாதுகாப்பு
பாதகம் பாசங்கள்
என பிற்போக்கு சூழலையும்
முற்போக்கு சுழல்களையும்
முன்னறிவிப்பார் இன்றி
நானும் கடக்க நாளும் கடக்க
சற்றே தளர்ச்சி
தனிமைதான் தெரிந்தது
சிந்திக்கிறேன் செலுத்துகிறேன்
சுயம் நோக்கி
கல்லறையிலும்
சுயம் நோக்கு
மனிதர்களை அன்றி
வேறெங்கும் இல்லையே
நான் நான் என
பறையறைய வேண்டிய அவசியம்
ஆணோ பெண்ணோ
நான் நானாகவே வாழ
ஆங்கு இடம் உண்டு
எனக்கான சுயம் உண்டு
ஈங்கு இடமில்லையோ
மனிதர்கள் மனிதர்களாக
வாழும் சுயம் அற்ற இம்
மேதினியில்
சுயம் நோக்கு சுயநலநோக்கு.
- தீபாகோவிந்