கவிதைகளிமும் காவியங்களிலும் தான் காதல் என்று நினைத்திருந்தேன் நான் ..
இன்றைய சமூகம் மற்றும் இன்று வரும் படங்களில் காணும் காதலினால் நம்பிக்கையில்லை எனக்கு உண்மை காதலில் ..
அது ஒருவகை இனக்கவர்ச்சி என்றெண்ணியிருந்தேன் உன்னைக்காணும் வரை ..
எந்த வித சலனமுமின்றி என்னுள் நுழைந்தாய் நீ ..
ஒரு துளி அலங்காரமில்லை உன் முகத்தில் .. ஆடம்பரம் இல்லை உன் உடையில் .. திமிரில்லை உன் பேச்சில் ..
வன்மம் இல்லை உன் பார்வையில் ..
உன் அகத்தின் அழகு உன் முகத்தில் தெரிந்தது கண்ணம்மா ..
உண்மை காதல் இந்த இளைஞரிடம் இல்லை முக்கியமாக பெண்கள் மிகவும் மோசம் என்றெண்ணி இருந்த என் உச்சந்தலையில் அப்படியில்லை என்று ஓங்கி அடித்துச்சொன்னது உன் பெண்மை ..
எத்தனை மென்மையடி நீ ..
உன் பார்வை ஒரு வரம் ..
வார்த்தைகளை மெதுமெதுவே தேர்ந்தெடுத்து நீ பேசும் விதம் வசீகரம் ..
ஆடைகளில் உள்ள நேர்த்தி உன்மேல் உள்ள மதிப்பை பன்மடங்கு அதிகரிக்கிறது ..
ஆர்பாட்டமில்லா பேச்சிலும் புன்சிரிப்பிலும் நான் என்னை தொலைத்தேன் ..
உன்னை பார்த்துக்கொண்டே இருக்க ஆசை .. என் மனதில் உள்ள காதலை உனக்கு தெரிவிக்கும் தருணம் நாணத்தால் வெட்கி தலைகுனியும் பொழுது என் சீண்டல் பார்வை உன்னைத்தீண்ட ஆவலாக உள்ளது காதலியே ..
நெருங்கி வந்து என் காதலை சொல்ல வார்த்தைகள் அத்தனையும் சேகரித்தேன் இருப்பினும் உன் கண்ணியமான பெண்மை என்னைத்தடுக்கின்றது ..
மற்ற ஆடவர்களை போல தான் நீயுமென்று என்மேல் அமிலப்பார்வை வீசாதே கண்மணி ..
என் கண்களினால் காதல் மொழி கூறுகிறேன் காதலியே ..
புரிந்து நீ ஒரு புன்னகை செய் ..
நீ போதும் போதும் என்று கூறும் அளவிற்கு காதல் வசனம் பேசி என் காதலை உனக்கு உணர்த்துகிறேன் ..
காதல் மொழி பேச வருவாயா .. காலத்திற்கும் என் காதலில் கரைய சம்மதமா ?
மனம் முழுவதும் காதலை சுமந்து உன் ஓரப்பார்வைக்காக தவம் கிடக்கின்றேன் என்னுயிரே!
இன்றைய சமூகம் மற்றும் இன்று வரும் படங்களில் காணும் காதலினால் நம்பிக்கையில்லை எனக்கு உண்மை காதலில் ..
அது ஒருவகை இனக்கவர்ச்சி என்றெண்ணியிருந்தேன் உன்னைக்காணும் வரை ..
எந்த வித சலனமுமின்றி என்னுள் நுழைந்தாய் நீ ..
ஒரு துளி அலங்காரமில்லை உன் முகத்தில் .. ஆடம்பரம் இல்லை உன் உடையில் .. திமிரில்லை உன் பேச்சில் ..
வன்மம் இல்லை உன் பார்வையில் ..
உன் அகத்தின் அழகு உன் முகத்தில் தெரிந்தது கண்ணம்மா ..
உண்மை காதல் இந்த இளைஞரிடம் இல்லை முக்கியமாக பெண்கள் மிகவும் மோசம் என்றெண்ணி இருந்த என் உச்சந்தலையில் அப்படியில்லை என்று ஓங்கி அடித்துச்சொன்னது உன் பெண்மை ..
எத்தனை மென்மையடி நீ ..
உன் பார்வை ஒரு வரம் ..
வார்த்தைகளை மெதுமெதுவே தேர்ந்தெடுத்து நீ பேசும் விதம் வசீகரம் ..
ஆடைகளில் உள்ள நேர்த்தி உன்மேல் உள்ள மதிப்பை பன்மடங்கு அதிகரிக்கிறது ..
ஆர்பாட்டமில்லா பேச்சிலும் புன்சிரிப்பிலும் நான் என்னை தொலைத்தேன் ..
உன்னை பார்த்துக்கொண்டே இருக்க ஆசை .. என் மனதில் உள்ள காதலை உனக்கு தெரிவிக்கும் தருணம் நாணத்தால் வெட்கி தலைகுனியும் பொழுது என் சீண்டல் பார்வை உன்னைத்தீண்ட ஆவலாக உள்ளது காதலியே ..
நெருங்கி வந்து என் காதலை சொல்ல வார்த்தைகள் அத்தனையும் சேகரித்தேன் இருப்பினும் உன் கண்ணியமான பெண்மை என்னைத்தடுக்கின்றது ..
மற்ற ஆடவர்களை போல தான் நீயுமென்று என்மேல் அமிலப்பார்வை வீசாதே கண்மணி ..
என் கண்களினால் காதல் மொழி கூறுகிறேன் காதலியே ..
புரிந்து நீ ஒரு புன்னகை செய் ..
நீ போதும் போதும் என்று கூறும் அளவிற்கு காதல் வசனம் பேசி என் காதலை உனக்கு உணர்த்துகிறேன் ..
காதல் மொழி பேச வருவாயா .. காலத்திற்கும் என் காதலில் கரைய சம்மதமா ?
மனம் முழுவதும் காதலை சுமந்து உன் ஓரப்பார்வைக்காக தவம் கிடக்கின்றேன் என்னுயிரே!