வணக்கம் தோழமைகளே,
நான் நிலா 29 என் கதையின் அறிமுகத்துடன் வந்துள்ளேன்.?
இதுவே தாமதம் தான் இருந்தும் வந்துவிட்டேன். Late at Latest Finally, I am arrived.?
என் நிலா எழுத்தாள தோழமைகள் சிலர் கதையையே முடித்து விட்டார்கள். நானோ இப்போ தான் அறிமுகத்தோடு வந்துருக்கேன். கொஞ்சம் படபடப்பா தான் இருக்கு.
ஏன்னா எனக்கு இது தான் முதல் போட்டி அதனால சாதரனமா வரப் படபடப்போட இன்னும் கொஞ்சம் அதிகமாவே இருக்கு உங்க அனைவரோட எதிர்ப்பார்ப்பையும் பொய்யாக்காம பூர்த்தி செய்துடுவேன்னானு தான். ஆனா என்னால் முடிந்தளவு சிறப்பா கொடுக்க முயற்சி செய்றேன்.?
நறுமுகை நிலா கால போட்டியில் பங்குபெற வாய்ப்பு அளித்த ப்ரஷா நட்புக்கு என் மனமார்ந்த அன்பை தெரிவித்து கொள்கிறேன் மற்றும் சக எழுத்தாள தோழமைகளுக்கு என் வாழ்த்தையும் கூறிக் கொள்கிறேன்.????
இப்போது கதையின் பக்கம் செல்வோம்,
நிலா - 29
கதை பெயர் - கனலில் பூத்த சீ(தை)தன் அவன்(ள்)
ஹீரோ - ஹீரோயின் கதையின் போக்கில் பார்க்கலாம்..?
இப்பொழுது ஒரு சிறு முன்னோட்டம் உங்களுக்காக விரையில் பதிவுகளுடன் வருகிறேன்..?
கனலில் பூத்த சீ(தை)தன் அவன்(ள்)
முன்னோட்டம்:
அடர்ந்த காரிருள் சூழ்ந்த வனப்பகுதி அது. மழைமகள் வந்து சென்றதற்கான அறிகுறியாய் மண்ணில் படர்ந்து இருக்கும் ஈரப்பதம்.
மண்ணில் இருக்கும் ஈரப்பதம் அங்கு நின்று இருப்பவர்கள் நெஞ்சில் இல்லையோ? அப்படித் தான் போலும், இருந்திருந்தால் இச்செயலை செய்யத் தான் துணிவார்களா?
"ஐயோ! அம்மா என்ன விட்டுறுங்களேன்… நான் எதுவும் சொல்லமாட்டேன்
என்னைப் போக விடுங்க… என்னை எதுவும் செய்யாத ப்ளீஸ், என்னை விட்டுறு…" அவள் கெஞ்ச,
எதிரில் இருப்பவன் விகாரமாய் சிரித்தான். "என்ன உன்னைக் காதலிச்சு உன் கூட வாழ்ந்து குடும்பம் நடத்துவேன்னு நினைச்சீயா… அப்படி எல்லாம் கிடையாது, எனக்கு உன் அழகு மட்டும் தான் தேவை… அது கிடைக்குற வரைக்கும் லாபம் நினைச்சு தான் உன் கூடப் பழகினேன். நீயும் அதுக்கு ஒத்துக்கிட்ட இப்போ என்ன பத்தினி வேஷம் போட்டா உன்னை விட்டுறனுமா…"
அங்கு நடக்கும் அநியாயத்தைத் தட்டி கேட்கும் நபர்கள் எவரும் இல்லை என்பது தான் பரிதாபத்திற்குரிய விடயமாகியது. அப்பெண்ணின் அலறலிலும், வலியின் முனகலிலும் அந்த அநியாயம் நடந்தேறியது.
களவாண்ட அந்த மிருகங்களை அவளைத் தூக்கி ஒரு ஓரமாய் வீதியோரம் வீசிவிட்டு சென்றனர்.
அநியாயமாக அவளின் வாழ்வு சூணியமாக்கப்பட்டது வெறும் காதல் எனும் ஒற்றைச் சொல்லில்.
அந்த வலியிலும் அவள் எண்ணங்கள் தன்னையே குற்றம் சாட்டியதோ? பொய்யெது? உண்மையெது? என அறியாமல் போன தன் அறியாமையால்.
********************************************
மும்பை அந்தேரி வெர்சோவா பீச் அருகில் விடியற்காலை 2:45 மணி அங்கு ஒரு ஆண் கதற கதற அவனின் ஈன செயலுக்கு மிகவும் கொடுமையாகத் தண்டனை கொடுக்கப்பட்டு கொண்டிருந்தது.
"என்ன டா. பொண்ணுங்கன்னா அவளோ இளக்காரமா போச்சா, நீங்க நினைச்சா பொண்ணுங்களை தூக்கிட்டு போய் யூஸ் பண்ணுவீங்க இல்ல காதலுன்னு பெயருல பொண்ணுங்களை ஏமாத்திட்டு கொண்ணுட்டோ இல்ல குற்று உயிராய் போட்டுட்டு போவீங்க அவங்க இது எல்லாம் சகிச்சிட்டு அமைதியா போகனுமா. இதுக்காகத் தான் அவங்க அம்மா, அப்பா பாசத்தையும் உயிரையும் கொடுத்து வளர்த்து இருக்காங்க பாரு."
"அது எப்படி எப்படி உங்க டைம் பாஸ்க்கு, அவங்க உங்களுக்கு உடன்பட்டு தான் ஆகனுமா. எவ்வளோ திமிர், ஏன்? உங்க அரிப்புக்கு பொண்ணுங்க தான் கிடைச்சாங்களா, ஏன் சுவத்துல போய்ச் சொரிய வேண்டியது தான அப்பத் தெரியும் கச்சேரி."
"அது முடியாதுன்னு பொண்ணுங்க வாழ்க்கையை நாசம் பண்ண வேண்டியது.. உங்களைக் கொல்ல போறதுனால இதைப் பார்த்து இன்னொருத்தன் திருந்துவான் அதுக்கு இது முன் மாதிரியா இருக்கும் சொல்றது எல்லாம் ரொம்பவே அபத்தமான விஷயம்."
"ஆனா, இப்ப நான் உன்னை அந்தப் பொண்ணு கையால கொலை பண்ண தான் போறேன்.. அதனால நீ கதறுறது வேஸ்ட்.."
அந்தப் பெண், அவன் பேச்சுக்குச் செவி சாய்த்து ஏற்கனவே வேட்டை நாய்களால் குதறி எடுக்கப்பட்டு இருந்தவனை தன் மனம் அமைதியுற சுட்டுக் கொண்றாள்.
இங்கு ஒரு ஆணை வேட்டையாடியவன் நேரே நவீன ரக உல்லாச விடுதிக்குள் நுழைந்தான். அங்கு மஞ்சத்தில் அவனுடன் கிறங்கிய பெண்ணுக்குச் சத்தமில்லாது இடுப்புக்கு கீழ் உணர்வே வராத ஊசியைச் செலுத்தி விட்டு அவளைத் தன்னுடன் இசைக்க உந்த, அவள் உணர்வு வராது முழிக்க.. அவளைக் கூர்மையாய் பார்த்தவன், அவளின் அறை குறை ஆடையில் இழுத்து வந்து அவ்உல்லாச விடுதி முன் அவளைப் பகிரங்கமாக நிற்க வைற்று தகாத வார்த்தையில் பேசி அவமானப்படுத்தி விட்டுச் சென்றான்.
பெண்களுக்காய் நியாயம் கேட்பவன்,
அதே பெண்களை மான பங்கம் படுத்தவும் தயங்காத அஞ்சா நெஞ்சன் இவன் காக்கும் தேவனா அல்ல அழிக்கும் ருத்ரனா இவனைப் படைத்தவேனே அறியான்.
ஆயினும் இவனையும் அறிய வருவாள் இவனின் மறுபிம்பம்.
********************************************
இக்கதையின் பதிவுகளுடன் விரைவில் உங்களைச் சந்திக்க வருவேன் முழு நிலவாக.. இப்போதைக்கு கதையின் முன்னோட்டத்தை படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிருங்கள்.?
வாசக தோழமைகளே உங்களின் கருத்துக்களே எனது ஊக்கம்.. அதனால் உங்கள் மனதின் கருத்தைத் தயங்காது கூறவும். ?
கதை எப்படி இருக்கு என்ன நினைக்கிறீங்க.. என்ன எதிர்ப்பார்ப்பு வருது முன்னோட்டம் படிச்சுன்னு இப்படி என்ன என்னாலம் சொல்ல நினைக்கிறீங்களோ தாராளமா கீழே கருத்து சொல்லுங்க.. விரைவில் நான் கதைக்கான பதிவுகளுடன் வரேன்.. ?
அதுவரை மேகத்துக்குள் மறைந்திருக்கும் நிலவாய் நான்.???
கருத்து திரி
அன்புடன்
நிலா 29
நான் நிலா 29 என் கதையின் அறிமுகத்துடன் வந்துள்ளேன்.?
இதுவே தாமதம் தான் இருந்தும் வந்துவிட்டேன். Late at Latest Finally, I am arrived.?
என் நிலா எழுத்தாள தோழமைகள் சிலர் கதையையே முடித்து விட்டார்கள். நானோ இப்போ தான் அறிமுகத்தோடு வந்துருக்கேன். கொஞ்சம் படபடப்பா தான் இருக்கு.
ஏன்னா எனக்கு இது தான் முதல் போட்டி அதனால சாதரனமா வரப் படபடப்போட இன்னும் கொஞ்சம் அதிகமாவே இருக்கு உங்க அனைவரோட எதிர்ப்பார்ப்பையும் பொய்யாக்காம பூர்த்தி செய்துடுவேன்னானு தான். ஆனா என்னால் முடிந்தளவு சிறப்பா கொடுக்க முயற்சி செய்றேன்.?
நறுமுகை நிலா கால போட்டியில் பங்குபெற வாய்ப்பு அளித்த ப்ரஷா நட்புக்கு என் மனமார்ந்த அன்பை தெரிவித்து கொள்கிறேன் மற்றும் சக எழுத்தாள தோழமைகளுக்கு என் வாழ்த்தையும் கூறிக் கொள்கிறேன்.????
இப்போது கதையின் பக்கம் செல்வோம்,
நிலா - 29
கதை பெயர் - கனலில் பூத்த சீ(தை)தன் அவன்(ள்)
ஹீரோ - ஹீரோயின் கதையின் போக்கில் பார்க்கலாம்..?
இப்பொழுது ஒரு சிறு முன்னோட்டம் உங்களுக்காக விரையில் பதிவுகளுடன் வருகிறேன்..?
கனலில் பூத்த சீ(தை)தன் அவன்(ள்)
முன்னோட்டம்:
அடர்ந்த காரிருள் சூழ்ந்த வனப்பகுதி அது. மழைமகள் வந்து சென்றதற்கான அறிகுறியாய் மண்ணில் படர்ந்து இருக்கும் ஈரப்பதம்.
மண்ணில் இருக்கும் ஈரப்பதம் அங்கு நின்று இருப்பவர்கள் நெஞ்சில் இல்லையோ? அப்படித் தான் போலும், இருந்திருந்தால் இச்செயலை செய்யத் தான் துணிவார்களா?
"ஐயோ! அம்மா என்ன விட்டுறுங்களேன்… நான் எதுவும் சொல்லமாட்டேன்
என்னைப் போக விடுங்க… என்னை எதுவும் செய்யாத ப்ளீஸ், என்னை விட்டுறு…" அவள் கெஞ்ச,
எதிரில் இருப்பவன் விகாரமாய் சிரித்தான். "என்ன உன்னைக் காதலிச்சு உன் கூட வாழ்ந்து குடும்பம் நடத்துவேன்னு நினைச்சீயா… அப்படி எல்லாம் கிடையாது, எனக்கு உன் அழகு மட்டும் தான் தேவை… அது கிடைக்குற வரைக்கும் லாபம் நினைச்சு தான் உன் கூடப் பழகினேன். நீயும் அதுக்கு ஒத்துக்கிட்ட இப்போ என்ன பத்தினி வேஷம் போட்டா உன்னை விட்டுறனுமா…"
அங்கு நடக்கும் அநியாயத்தைத் தட்டி கேட்கும் நபர்கள் எவரும் இல்லை என்பது தான் பரிதாபத்திற்குரிய விடயமாகியது. அப்பெண்ணின் அலறலிலும், வலியின் முனகலிலும் அந்த அநியாயம் நடந்தேறியது.
களவாண்ட அந்த மிருகங்களை அவளைத் தூக்கி ஒரு ஓரமாய் வீதியோரம் வீசிவிட்டு சென்றனர்.
அநியாயமாக அவளின் வாழ்வு சூணியமாக்கப்பட்டது வெறும் காதல் எனும் ஒற்றைச் சொல்லில்.
அந்த வலியிலும் அவள் எண்ணங்கள் தன்னையே குற்றம் சாட்டியதோ? பொய்யெது? உண்மையெது? என அறியாமல் போன தன் அறியாமையால்.
********************************************
மும்பை அந்தேரி வெர்சோவா பீச் அருகில் விடியற்காலை 2:45 மணி அங்கு ஒரு ஆண் கதற கதற அவனின் ஈன செயலுக்கு மிகவும் கொடுமையாகத் தண்டனை கொடுக்கப்பட்டு கொண்டிருந்தது.
"என்ன டா. பொண்ணுங்கன்னா அவளோ இளக்காரமா போச்சா, நீங்க நினைச்சா பொண்ணுங்களை தூக்கிட்டு போய் யூஸ் பண்ணுவீங்க இல்ல காதலுன்னு பெயருல பொண்ணுங்களை ஏமாத்திட்டு கொண்ணுட்டோ இல்ல குற்று உயிராய் போட்டுட்டு போவீங்க அவங்க இது எல்லாம் சகிச்சிட்டு அமைதியா போகனுமா. இதுக்காகத் தான் அவங்க அம்மா, அப்பா பாசத்தையும் உயிரையும் கொடுத்து வளர்த்து இருக்காங்க பாரு."
"அது எப்படி எப்படி உங்க டைம் பாஸ்க்கு, அவங்க உங்களுக்கு உடன்பட்டு தான் ஆகனுமா. எவ்வளோ திமிர், ஏன்? உங்க அரிப்புக்கு பொண்ணுங்க தான் கிடைச்சாங்களா, ஏன் சுவத்துல போய்ச் சொரிய வேண்டியது தான அப்பத் தெரியும் கச்சேரி."
"அது முடியாதுன்னு பொண்ணுங்க வாழ்க்கையை நாசம் பண்ண வேண்டியது.. உங்களைக் கொல்ல போறதுனால இதைப் பார்த்து இன்னொருத்தன் திருந்துவான் அதுக்கு இது முன் மாதிரியா இருக்கும் சொல்றது எல்லாம் ரொம்பவே அபத்தமான விஷயம்."
"ஆனா, இப்ப நான் உன்னை அந்தப் பொண்ணு கையால கொலை பண்ண தான் போறேன்.. அதனால நீ கதறுறது வேஸ்ட்.."
அந்தப் பெண், அவன் பேச்சுக்குச் செவி சாய்த்து ஏற்கனவே வேட்டை நாய்களால் குதறி எடுக்கப்பட்டு இருந்தவனை தன் மனம் அமைதியுற சுட்டுக் கொண்றாள்.
இங்கு ஒரு ஆணை வேட்டையாடியவன் நேரே நவீன ரக உல்லாச விடுதிக்குள் நுழைந்தான். அங்கு மஞ்சத்தில் அவனுடன் கிறங்கிய பெண்ணுக்குச் சத்தமில்லாது இடுப்புக்கு கீழ் உணர்வே வராத ஊசியைச் செலுத்தி விட்டு அவளைத் தன்னுடன் இசைக்க உந்த, அவள் உணர்வு வராது முழிக்க.. அவளைக் கூர்மையாய் பார்த்தவன், அவளின் அறை குறை ஆடையில் இழுத்து வந்து அவ்உல்லாச விடுதி முன் அவளைப் பகிரங்கமாக நிற்க வைற்று தகாத வார்த்தையில் பேசி அவமானப்படுத்தி விட்டுச் சென்றான்.
பெண்களுக்காய் நியாயம் கேட்பவன்,
அதே பெண்களை மான பங்கம் படுத்தவும் தயங்காத அஞ்சா நெஞ்சன் இவன் காக்கும் தேவனா அல்ல அழிக்கும் ருத்ரனா இவனைப் படைத்தவேனே அறியான்.
ஆயினும் இவனையும் அறிய வருவாள் இவனின் மறுபிம்பம்.
********************************************
இக்கதையின் பதிவுகளுடன் விரைவில் உங்களைச் சந்திக்க வருவேன் முழு நிலவாக.. இப்போதைக்கு கதையின் முன்னோட்டத்தை படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிருங்கள்.?
வாசக தோழமைகளே உங்களின் கருத்துக்களே எனது ஊக்கம்.. அதனால் உங்கள் மனதின் கருத்தைத் தயங்காது கூறவும். ?
கதை எப்படி இருக்கு என்ன நினைக்கிறீங்க.. என்ன எதிர்ப்பார்ப்பு வருது முன்னோட்டம் படிச்சுன்னு இப்படி என்ன என்னாலம் சொல்ல நினைக்கிறீங்களோ தாராளமா கீழே கருத்து சொல்லுங்க.. விரைவில் நான் கதைக்கான பதிவுகளுடன் வரேன்.. ?
அதுவரை மேகத்துக்குள் மறைந்திருக்கும் நிலவாய் நான்.???
கருத்து திரி
கனலில் பூத்த சீ(தை)தன் அவ(ன்)ள் - கருத்து திரி
வணக்கம் தோழமைகளே, கனலில் பூத்த சீ(தை)தன் அவன்(ள்) கதைக்கான கருத்துக்களை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள். அன்புடன் நிலா 29
www.narumugainovels.com
அன்புடன்
நிலா 29
Last edited: