எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

நேசப் பொருண்மை அழியுமோ கதை திரி

Status
Not open for further replies.
அத்தியாயம் 1

"விஸ் யூ ஆல் சக்ஸஸ் சர்"

"பெஸ்ட் ஆப் லக் சர்"

"வாழ்த்துகள் அமுதன் ஆழியன்"

அறை முழுவதும் பூங்கொத்துகளாக இரைந்து கிடந்தன. அனைவரது வாழ்த்துக்களையும் ஏற்றுக் கொண்டவன் தனது நாற்காலியில் அமரந்தான்.அப்போது அறைக்குள் நுழைந்த ஸ்ரீதரன்

"யு டி சேர்வ் இட் டா காங்குராஜிலேஷன்" என்றபடி தன் கையில் இருந்த மலர்கொத்தை தர

"ஸ்ரீதர் நீயுமாடா " என அவன் கையில் இருந்த செண்டை வாங்கி மேசையில் ஓரமாக வைத்தவன் "ஸ்ரீ உட்காருடா ."
எனவும் அமர்ந்தவன்.

"டேய் வைஷ்ணவி உன்ன இன்னிக்கு வீட்டு சாப்பிட வரச்சொன்னா டா நீ வரலை நானும் உள்ளவரப்படாதுன்னு சொல்லியிருக்காடா"

அவனும் வேறு எங்கும் பார்ட்டி அது இது என போவதில்லை. மீறி சூழ்நிலை அப்படி அமைந்தாலும் தலையைக் காட்டிவிட்டு வீட்டுக்குச் சென்றுவிடுவான். ஸ்ரீதரன் மட்டும்தான் அவனது பால்ய சினேகிதன்,
"சரி டா வரேன் "
என்று அவனின் ஒப்புதலை வாங்கியபின்பே வெளியே வந்தான்.
"இருடா நானும் வரேன்"
என்றான்
ஸ்ரீதரனும் அவனுடன் இணைந்து ஏதோ பேசிக் கொண்டு உணவுக் கூடத்தை தாண்டிச் சென்றனர் .

உணவருந்தி கொண்டிருந்த பெண்களில் ஒருத்தி

"ஏய் அங்க பாரு அமுதன் ஆழியன் சார் கூட போறது நம்ம ஹெச்ஆர் ஸ்ரீ தரன் தான..."

என்று ஒருவள் கேட்க. அனைவரும் ஒருசேர கை வேலையை நிறுத்தி அவர்களைப் பார்த்தனர். அவர்கள் இவர்களை தாண்டிச் சென்ற பிறகு அவர்களை பற்றி அரைக்கத் துவங்கினர்.

"ஏன் நித்யா நம்ம ஸ்ரீ யும் அமுதனும் ஒரே வயசாடி?"

என்றாள் ஸ்ரீதரனின் லேசாக விழுந்த தொப்பை தனது கண்ணாடி மற்றும் அவனது பதினைந்து வயது மற்றும் பதிமூன்று வயது மகள்களை சென்ற முறை கெட்டு கெதரில் பார்த்ததை நினைவுக்கு கொண்டுவந்த லதா கேட்க நித்யா

"அதென்ன ஸ்ரீ அமுதன் நீயாடி பெயர் வைச்ச மரியாதை கொடுக்கனும்னு தெரியுதா?"

"இதென்னடி வம்பா போச்சு . அவங்கதான சொன்னாங்க"

"என்ன சொன்னாங்க போடா வாடா பொட்ட கண்ணான்னு கூப்பிடுன்னா…ப்ரண்டு மாதிரின்னு சொல்லியிருக்காங்க ப்ரண்டுன்னு சொல்லல புரியதா"

"சரி அத வுடு நித்தி நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு?"

"என்னடி கேட்ட என்றாள் புளியோதரையில் கைவைத்த படி "

அவளது டிபன் பாக்ஸை பிடிங்கியவள்

." உனக்கு புளியோதரைய பார்த்தா பூலோகமே மறந்துருமே"

எனவும் டிபன் பாக்ஸில் இருந்து கண்ணை அப்போதும் எடுக்காமல் புளியோதரைக்கு கைநீட்ட லதா இன்னும் தள்ளி வைத்தாள். நித்யாவுக்கு கேள்விக்கு பதில் கூறாமல் அது கிடைக்காது என்பது புரிய

"சொல்லித் தொலை என்ன தெரியனும்?"

"அமுதா சார பத்தி சொல்லு"

"அவரோட முழு பெயர் அமுதன் ஆழியன் வயசு ப்ரட்டி பார்ட்டி ப்ளஸ் , ஒரே ஒரு தடவ கல்யணம் ஆகி
டிவெர்ஸ் ஆகிருச்சி. வீட்ல சாரும் அவங்க அம்மாவும் தான் … ஆனா அப்புறம் எந்த பொண்ணையும் பார்க்கிறது இல்லை. எந்த கெட்ட பழக்கமும் இல்லாத எலிஜிபில் பேச்சிலர் . நம்ம எச்ஆரும் அவரும் ஒன்னா படிச்சவங்க. இதுக்கு மேல எதுவும் தேவைன்னா நீ சார்கிட்ட தான் கேட்கனும். "

"இதான் எல்லாருக்கும் தெரியுமே என்ன காரணத்துக்கு டிவெர்ஸ் ஆச்சி "

"அது சரியா தெரியல ஆனா ஒரே வருஷத்தில் டிவெர்ஸ் ஆகி அந்த பொண்ணு இப்ப பாரின்ல எங்கயோ இருக்குறதா கேள்வி. "

"என்ன காரணமா இருக்கும் சர் இருக்கற அழகுக்கும் பிட்னஸ்க்கும் அவ்வளவு பொண்ணுங்களும் ஆசைதான படனும் . எந்த கெட்ட பழக்கமும் கிடையாது வேற ஏன் டிவெர்ஸ் பண்ணா"

"யாரு கண்டா பட் அமுதன் சார பத்தி யாருக்கும் இங்க அவ்வளவா தெரியாது. அவரோட பர்சனல் பத்தி தெரிஞ்சது ஸ்ரீ சர் மட்டும் தான் ஆனா அவரும் எந்த சூழ்நிலையிலும் ஒரு வார்த்தை சொல்ல மாட்டார்."

"ஆமா அவர்கிட்ட கேட்கறதுக்கு சுவத்தில முட்டிக்கலாம். இப்ப எப்படி தெரிஞ்சிக்கறது ". என புலம்பியவாறு சிந்திக்க

"ஆங்...வீட்டுக்கு போய் நேர்ல கேட்டுட்டு வா, கை காயுது எந்திரிடி.இந்த கவலைய அப்புறம் படலாம் முத வேலைய முடிச்சிட்டு நேரங்காலத்தில வீட்டுக்கு போய் உன் புள்ளைய பார்க்கிற வழியப் பாரு"
என்று எழுந்து கொண்டா நித்யா சுற்றிலும் ஒரு பார்வை பார்க்க,

அது லதாவுக்கான வார்த்தைகள் மட்டும் அல்ல என்னவாக இருக்கும் என்று அறிய இவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த தங்களுக்கும் சேர்த்துதான் என்பதை புரிந்து கொண்டவர்கள் தலையை கவிழ்ந்து கொண்டனர்.லதா தனது உணவுப்பாத்திரத்தை மூடியவள்

"ஆமா நித்து வீட்டுக்கு ஹோம் வொர்க் செய்ய வைக்கறதுக்குள்ள சின்ன யுத்தகாண்டமே நடக்குது. என்னால முடியல … நீ அந்த ஸ்கூல்ல அப்ளிகேஷன நாளைக்கு வரும்போது வாங்கிட்டு வாடி அங்க ட்யூஷனும் சேர்த்து பார்த்துக்கறாங்க தான"

என்றவாறு எழுந்து கொண்டாள் . பேசிக்கொண்டே கைகளைகழுவிட்டு பணியிடத்திற்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அவர்கள்
எதிரில் வந்த ஆழியன்.

" நித்யா, நான் யுகே கிளையன்ட் மீட்டிங்காக போறேன் அந்த டீடெய்ல்ஸ் எனக்கு மெயில் பண்ணுங்க "

"ஒகே சர் வித் இன் ப்யூ மினிட்ஸ்ல "
என்றவள் தனது கேபினை நோக்கி ஓடினாள்.

அந்த உயர்தர ஐந்து நட்சத்திர உணவகத்தில் தனது வாடிக்கையாளர்களுடனான சந்திப்பையும் உணவையும் முடித்தவன். கடிகாரத்தை பார்க்க நேரமாகிவிட்டது புரிய நேரமாகிவிட்டதை உணர்ந்தவன் ஸ்ரீதரனுக்கு அழைத்தான்.

"ஸ்ரீ இங்க இப்பதான் மீட்டிங் முடிஞ்சது. இங்க இருந்து உங்க வீட்டுக்கு வர லேட் நைட் ஆயிடுமேடா"

பதிலுக்கு அவன் ஏதோ கூற

" சரிடா அவ கிட்ட நான் பேசிக்கறேன். சன்டே வரேன்டா ப்ரீயா இருக்கும்."

என்றவன் அலைபேசியை வைத்துவிட்டு எழுந்தான். அவன் முன் அவள் வந்து நின்றாள்.


அமெரிக்காவில்

தனது அறையில் இருந்த வந்த மகரவிழி. நேரே அடுப்படிக்கு சென்று தேனீர் தயாரித்தாள். கூடவே இரண்டு பிரட் துண்டுகளையும் டோஸ்ட் செய்தவள் . தேனீர், ப்ரட் இரண்டையும் மேசை மீது வைத்தவள்.

தனது அறைக்கு பக்கத்தில் இருந்த அறைக்கதவை தட்டியவள் "நிலன்" என்றாள்.

"யா மாம் " என்றவன் வெளியே வந்தான். பள்ளிக்கு செல்ல ஆயத்தமாகி இருந்தவன் சீருடையோடு வந்து உணவு மேசையில் அமர்ந்தான். நிலன் தனது பதின் பருவத்தில் இருந்தான். அதிகமாக தாயை ஒத்திருந்தவனின் கண்கள் மட்டும் அவனை ஒத்திருந்தன. எப்போதும் அவனை நினைவு படுத்துவது போல் இப்போதும் படுத்தியது. அதை ஒதுக்கி தன் நினைவுக்கு வந்தவள்

"நிலா மாம்க்கு இன்னிக்கு கிறிஸ்மஸ் கலெக்ஷன்ஸ் வெர்க் இருக்கு நீ இருந்துகறியா ? இல்ல ஆபிஸ் வந்து வெயிட் பண்றியா?"

"எனக்கும் ஸ்கூல்ல கொஞ்சம் ப்ரொஜட் வெர்க் இருக்கு."

"அப்ப உன் ப்ரண்ட் நரேன் வீட்டுக்கு போயிடு. உன்ன அங்க வந்து பிக்கப் பண்ணிக்கறேன்."

"நோ மாம் அங்க போனா, எனக்கு பிடிக்கல ஓவர் ரெஸ்ட்ரிக்ஷன்ஸ். "

"என்ன ரெஸ்ட்ரிக்ஷன்ஸ் பண்ணாங்க எதாவது பேசிட்டாங்களா.?"

" அதிகமா மொபைல் யூஸ் பண்ண கூடாது. அது இதுன்னு "

" நல்லதுக்கு தானடா சொல்லறாங்க.படிக்கும்போது கவனம் சிதறக் கூடாதுன்னு"

"அவங்க யாரு என்ன கண்ட்ரோல் பண்ண? ஐ ஹேவ் மை ஒன் ப்ரீடம். அது மட்டுமில்லாம உங்களையும் டாட்யும் பத்தி தப்பா பேசறாங்க."

என்றவன் விழிகள் நடுவில் தான் நிற்க ஒரு புறம் மேத்யூவும் மறுபுறம் மகர விழியும் இருக்கும் அந்த புகைப்படத்தில் நிலைத்தது.

"எங்கள பத்தி என்னடா தப்பா பேச போறாங்க. அவங்க வேற எதையாவது சொல்லி இருப்பாங்க உனக்கு தப்பா புரிஞ்சிருக்கும் " என்றாள்

ஆனாலும் தனிமனித உரிமையை பற்றி பேச, உள்ளுக்குள் உதறத் தொடங்கியது என்றால் அவன் விழிகள் படத்தில் நிலைத்திருந்ததில் அடுத்து என்னவருமோ என பயம் வந்திருந்தது அவளக்கு, பதின் பருவ குமரக்குழந்தை அவனை கையாளுவது எளிதாக இல்லை.

ஏதேனும் கூறும் முன் பலமுறை யோசிக்க வேண்டியிருக்கிறது. மூச்சை உள்ளிழித்து நிலைப்படுத்தியவள்.

"என்ன ஆச்சு நிலன் என்றாள்?"

போன சன்டே அவங்க வீட்டுக்கு போயிருந்தேன்ல. நானும் அவனும் பேசிட்டு இருக்கும் போது
நரேன் அம்மா கொஞ்சம் கூட மேனர்ஸ் இல்லாம அவங்க பாட்டு உள்ள வராங்க. என்ன பேசிக்கறீங்க சொல்லுங்கங்கறாங்க.

"அவன் அவங்க அம்மா கேட்ட உடனே ப்ரொஜெட் பத்தி சொன்னான்."

"இதுல என்ன தப்பு இருக்கு "
அவன் பொய் சொன்னான் மாம் அது வரைக்கும் அவன் அவங்க வீட்டுக்கு தெரியாம லிசி கூட டேட் போனத பத்தி சொல்லிட்டு இருந்தான். "

அவளுக்கு திக் என்று இருந்தது. எவ்வளவு தான் இதைப்பற்றிய தெளிவும் புரிதலும் நிலனுக்கு இருக்கிறது. என்பதை அவனிடம் வெளிப்படையாக மேத்யூ பேசி புரிய வைத்து இருந்தாலும் ஒரு தாய் எனும் முறையில் இதைக் கேட்டு திக்கென்று இருந்தது .தனது மகன் தவறிவிடக் கூடாதே என்று பதட்டம் வந்து சேர்ந்தது.

பட் நான் சொன்னேன் இப்ப சும்மா சுத்தி வரலாம் ஆனா எல்லைய தாண்டி போனா நம்ம ப்யூச்சர் ஸ்பாயில் ஆகும் ன்னு எங்கப்பா சொல்லி இருக்காங்க. அது மட்டும் இல்லைமா இப்படி பேரண்ட்ஸ்ட மறைச்சி செய்ய னற எந்த விஷயமும் பிரச்சினையாத்தான் வரும்ன்னு நீங்க சொன்னத சொன்னேன். "

என்றவனை அனைத்து முத்தம் வைத்தாள். இப்போது குழந்தையாகி விட்டிருந்தான்.

"அன்னிக்கு நரேன் எனக்கு அவங்க அம்மா அப்பா கல்யான ஆல்பம் காட்டினான்."

" அதில் அவன் இல்லை நான் நீ ஏன்டா இல்லைன்னு கேட்டேன் "

" அப்ப அவங்க அம்மா அதெல்லாம் முறைப்படி கல்யாணம் பண்ணி புள்ளய பெத்தா தெரியும் இப்படி பெத்தா எது முறைன்னு எப்படி தெரியும்னு கேட்டாங்க? "

"ஏன் ஆண்டி இப்படி சொல்றீங்கன்னு கேட்டேன் .அதுக்குள்ள அவங்க அப்பா வந்து அவ ஏதோ உளறிட்டா நிலன் நீ தப்பா நினைச்சிக்காதன்னு சொல்லி எங்க இரண்டுபேரையும் வெளியபோக சொல்லிட்டாங்க"

"நான் தப்பா பொறந்த பையனா மா?"

இந்த வார்தைகள் தந்த வலியில் முகம் சிவந்து விட அவள் கண்களில் கண்ணீர் பெருகியது.

" நோ நிலா டாட் ஆல்ரெடி டொல்ட் யூ . அம்மாவுக்கும் அப்பாவுக்கும் இந்தியாவில கல்யானம் ஆகிருச்சி சிம்பிளா. அதுக்கு அப்புறம் இங்க அமெரிக்கா கிராண்டா வெட்டிங் பண்ணிக்கிட்டோம்ன்னு சொல்லி இருக்கேன் தான...அப்புறம் எப்படி நீ முறையில்லாத பையன் ஆவ?"

என தனது மகன் அருகில் வந்து அமர்ந்து கொண்டான் மேத்யூ ஹைடன்.அவனது தலையை கோதியவனிடம்
"எஸ் டாட் யூவார்…"
என ஆமோதிதத்தவன்" தென் மாம் ஏன் அழறாங்க"
"அவங்க அவங்க அப்பாவ நினைச்சி அழறாங்க அப்படிதான ஹனி "
எனவும்
"ம் ம் "
என தலையை ஆட்டியவளுக்கு டிஷ்யூவை எடுத்து முகம் துடைத்து விட்டான்.
"ஓ நோ "என்ற நிலன்
என்னாச்சு என்பது போல் பார்க்க
"என் ஹேர் ஸ்டைல் கலைச்சிட்டீங்க திரும்ப கோம்ப் பண்ணிக்கனும் "
என அறைக்குள் ஓடினான்.

"ஈஸி ஹனி அழாத"

என்றவன் அவளை அனைத்து கொண்டான்.



 
Status
Not open for further replies.
Top