எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

சிறகுகள்-கதைதிரி

Status
Not open for further replies.
வணக்கம் மக்களே NNK61 இது தான் என்னோட நம்பர் உங்களோட ஆதரவு கொடுக்கனும்னு கேட்டுக்கறேன் மக்களே.........
 
டீசர்1


""தென்றல எங்க தேடியும் காணோம் அத்தை" என கிரிஷ் கூற,

சித்ராவும் இராமச்சந்திரனும் என்ன சொல்வதென தெரியாமல் விக்கெத்து நின்றிருந்தனர்......



"பேசாம போலீஸ் ஸ்டேஷன்ல கம்பிளைண்ட் பன்னிரலாம்' என கிருஷ் கூற,
இருவரும் அதை ஆமோதித்து காவல் நிலையம் சென்றனர்....

""ஈரோடு மாநகர காவல் நிலையம்""
முன்பு மூவரும் நின்றிருந்தனர்.....

ஈரோட்டின் போக்குவரத்து நிறைந்த சாலையில் தலையில் அடிப்பட்டு இரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய படி கிடக்கிறாள் தென்றல்.......
 

NNK-52

Moderator
டீசர்1


""தென்றல எங்க தேடியும் காணோம் அத்தை" என கிரிஷ் கூற,

சித்ராவும் இராமச்சந்திரனும் என்ன சொல்வதென தெரியாமல் விக்கெத்து நின்றிருந்தனர்......



"பேசாம போலீஸ் ஸ்டேஷன்ல கம்பிளைண்ட் பன்னிரலாம்' என கிருஷ் கூற,
இருவரும் அதை ஆமோதித்து காவல் நிலையம் சென்றனர்....

""ஈரோடு மாநகர காவல் நிலையம்""
முன்பு மூவரும் நின்றிருந்தனர்.....

ஈரோட்டின் போக்குவரத்து நிறைந்த சாலையில் தலையில் அடிப்பட்டு இரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய படி கிடக்கிறாள் தென்றல்......

Ayoo paavam thendral
 
அத்தியாயம்1

"அத்தை தென்றல் அங்க வந்தாளா?" என கிருஷ் சித்ராவிடம் தொலைபேசியில் கேட்க,
சித்ராவோ"என்ன மாப்பிள்ளை சொல்றிங்க!!! தென்றல் இங்க வரலயே, அவ எங்க போனா?
உங்க கிட்ட சொல்லிட்டு போகலயா?
அவ போய் எவளோ நேரம் ஆச்சு?
என கேள்வி கனைகளை அடுக்கிக் கொண்டே போக,
"அத்தை,அத்தை பொறுமையா இருங்க,இங்க தான் இருந்தா, கடை வரைக்கும் போய்ட்டு வரேன்னு சொல்லிட்டு போனா.
ஆனா போய் ரொம்ப நேரம் ஆகுது இன்னும் காணோம் , அதான் பயந்து போய் உங்களுக்கு கால் பன்னேன் " என்றான் கிரிஷ்.....
மறுபக்க முனையில் சித்ரா ஓஓவென அழ ஆரம்பித்து விட்டார்...
"என்னங்க நம்ம பொண்ண காணோம்னு மாப்பிள்ளை சொல்றாருங்க" என கணவனிடம் அழ,
போனை அவளிடம் இருந்து இராமச்சந்திரன் வாங்கி "என்ன மாப்பிள்ளை ஆச்சு, தென்றல் எங்க போனா' எனக் கேட்க,
கிரிஷ் சித்ராவிடம் சொன்ன அனைத்தையும் ராமிடமும் சொன்னான்....
'அவ யார்க்கிட்டயும் சொல்லாம போக மாட்டாளே மாப்பிள்ளை'என ராமு கூற,
'ஆமா மாமா நானும் பக்கத்துல இருக்கற கடை, கோவில் எல்லாப்பக்கமும் பாத்துட்டு வந்துட்டேன், அவள காணோம்' என உடைந்த குரலில் கிரிஷ் கூற,
' மாப்பிள்ளை நீங்க வாங்க பேசாம நாம போலீஸ்ல ஒரு கம்ப்பிளைண்ட் குடுத்தறலாம்' என ராமு கூற, இவனும் சரி என்று கிளம்பினான்....
மூவரும் காரில் சென்று கொண்டிருந்தனர்...
சித்ரா தான் மகளை காணாமல் அழுது கொண்டே வந்தார்...
ஆண்கள் இருவருக்கும் அழுகை வரமால் இல்லை, வரும் அழுகையை அடக்கிக் கொண்டு கார் கண்ணாடி வழியே தென்றல் எங்காவது இருக்கிறாளா, என தேடி கொண்டே வந்தனர்...
கிரிஷ் , ஜன்னல் ஓரம் அவன் பழைய நினைவுகளை சுமந்தபடி வந்தான்..
...2 வருடங்களுக்கு முன்பு கிரிஷ் , ஈரோட்டில் இருந்து சில கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சென்னிமலை கோவிலுக்கு சென்றான்....
அது அவனுக்கு விருப்பமான கோவில், ""அந்த ரம்மியமான மலையில் வீற்றிருக்கும் கடவுள் அவனுக்கு மிக பிடித்தமான தமிழ் கடவுள் முருகன்""....
எவ்வளவோ முறை அந்த முருகனை காண சென்றிருக்கிறான்..
ஆனால் இந்த முறை கொஞ்சம் சிறப்பான தரிசனம்...
கிரிஷ் முருகனிடம் வழக்கமான வேண்டுதல்களை வைத்து விட்டு கோயிலை சுற்றி வரும்போது ஒரு காட்சியை பார்க்கிறான்....
மயில் கழுத்து கலரில் பாவாடை பிளௌஸ் போட்டு அதற்கு மேட்ச்சாக லைட் சந்தன கலரில் தாவணி அணிந்து, தனது அம்மா, அப்பா உடன் அங்கிருந்த கடவுள்களை வணங்கி கொண்டிருந்தால்....
அவளின் அழகான நீண்ட முடி,
அதில் வைத்திருந்த மல்லிகைப்பூ,
படர்ந்த நெற்றி , அதில் சின்னதாய் ஒரு பொட்டு, முருகனின் பிரசாதமாய் கிடைத்த திருநீறு குங்குமம் நெற்றியை நிறைத்து இருக்க,
அளவான சிரிப்பு, துறுதுறு பேச்சு என அவளை ரசித்து கொண்டே வந்த ஆடவன் அவள் அழகில் மயங்கித்தான் போனான்....
அவனுக்கு அதில் மிகவும் பிடித்தது அவளுடைய அம்மாவும் ,அப்பாவும்...
அவளை அவர்கள் பார்த்து கொண்ட விதம் ..
அவளுக்கு சந்தனம் வைத்து விடுவது பிரசாதம் ஊட்டி விடுவது ,அவளின் கைப்பிடித்து நடப்பது, அவளிடம் சிரித்து சிரித்து பேசுவது என அவர்கள் மூவரையும் பார்க்கும் போது அவன் மனதில் அளவில்லா சந்தோசம்....
ஏனென்றால் கிரிஷ் சிறுவனாக இருக்கும் போதே அவன் தாய், தந்தை ஒரு விபத்தில் தவறி விட்டனர்....
தாத்தா பாட்டி ஆதரவில் தான் வளர்ந்தான்...
இப்போது படித்து விட்டு ஒரு தனியார் கம்பெனியில் மாதம் 50,000 சம்பளத்தில் வேலை செய்கிறான்...
இவர்களை பார்த்த உடன் இவனுக்கு அவன் தாய் தந்தை ஞாபகம் வந்து விட்டது...
"இவளை கல்யாணம் பன்னிக்கிட்டு அவங்க அப்பா அம்மா அவள பாத்துக்கறத விட இன்னும் அதிகமா அவள பாத்துக்கனும்" என நினைத்துக் கொண்டான்...
கார் போலீஸ் ஸ்டேஷன் வாசலில் நின்றது...
பழைய நினைவிலிருந்து வெளியே வந்தவன், காரிலிருந்து இறங்கினான்..
ராமும், சித்தராவும் காரில் இருந்து இறங்கியவுடன் அவர்களுடன் காவல் நிலையத்திற்குள் சென்றான்...
அங்கே இன்ஸ்பெக்டர் முன் மூவரும் அமர்நதனர் .....
" சொல்லுங்க என்ன பிரச்சினை"என இன்ஸ்பெக்டர் கேட்க,
"சார் வணக்கம், என் பேர் கிருஷ்ணன் .
இது என்னோட மாமனார் இராமச்சந்திரன், மாமியார் சித்ரா....
என் வொய்ப் காலைல கடைக்கு போறேன்னு சொல்லிட்டு போனாங்க ஆனா இப்ப வரைக்கும் வீட்டுக்கு வரலை, வழக்கமா அவங்க போற எல்லா இடத்துலயும் போய் தேடி பாத்துட்டோம், ஆனா அவங்க எங்கயுமே இல்ல சார், அதான் ஒரு கம்பிளைண்ட் குடுத்தறலாம்னு வந்தோம்' என கிருஷ் கூறி முடித்தான்....
" ஓஓஓ சரி, வீட்ல எதாவது பிராப்ளமா, அதாவது புருஷன் பொண்டாட்டிக்குள்ள ஏதாவது பிரச்சனையா" என கேட்க,
ராமு "அதெல்லாம் ஒரு பிரச்சனையும் இல்ல சார் எங்க மாப்பிள்ளை அவள ரொம்ப நல்லா பாத்துக்குவாரு " எனக் கூற,
அவர்கள் இருக்கும் நிலையை பார்த்த இன்ஸ்பெக்டர் அவர்களை மேலும் கஷ்டப்படுத்த விரும்பாமல் " முன்னால போய் கம்பிளைண்ட் எழுதி குடுத்துட்டு உங்க போன் நம்பர் அட்ரெஸ் எழுதி குடுத்துட்டு கெளம்புங்க, தகவல் கெடச்ச உடனே கூப்படறோம்....எனக் கூறி அனுப்பி வைத்தார்....
அவர்களும் வந்து விபரத்தை கொடுத்து விட்டு வெளியில் வந்தனர்...
காரை பக்கத்தில் இருக்கும் ஒரு கோவிலில் நிறுத்தி விட்டு உள்ளே சென்றனர்...
அது ஒரு விநாயகர் கோவில்....
உள்ளே சென்றதும் மூவரும் மனம் உருகி தென்றல் கிடைக்கு வேண்டி கொண்டனர்

சித்ராவும் ராமுவும் கண்ணீர் மல்க தன் மகளுக்காக வேண்டி கொண்டிருந்தனர்....
தீபாராதனையுடன் விநாயகர் அவர்களுக்கு காட்சி அளித்தார்...


கோவிலில் இருந்து வெளியே வந்து காரில் ஏற போகும் போது, இரண்டு பெண்கள் பேசிக் கொண்டு வந்ததை கவனித்தனர்...


"பாவம் ரொம்ப சின்ன பொண்ணா தான் இருக்கு , வண்டிகாரனுங்க வர வர எப்படி தான் வண்டியோட்டிட்டு போறாங்கனே தெரியல" என பேசிக்கொண்டே வர,


சித்ரா அந்த பெண்களை நிறுத்தி "ஏன் மா என்னாச்சிமா என்ன பிரச்சனைனு கேட்க , அந்த பெண்மணி ஒன்னும் இல்லமா , ஒரு ஆக்ஸிடெண்ட் ஒரு வண்டிக்காரன் ஒரு பொண்ண இடிச்சி போட்டுட்டு போய்ட்டான்" என்றனர்...


கிரிஷ் உடனே 'அந்த பொண்ண பாத்திங்களா? எப்படி இருந்தா? என கேட்க ,
"இல்லப்பா, முகமெல்லாம் பாக்கல பொண்ணு சிவப்பு கலர்ல சுடிதார் போட்டு இருந்துச்சி அவ்வளவு தான் தெரியும் " என கூறினர்..
அவர்கள் சொன்னவுடன் கிரிஷ் தலையில் இடியை இறக்கியது போல இருந்தது....
"அத்தை, காலைல தென்றல் சிவப்பு கலர் சுடிதார் தான் போட்டிருந்தா என நா தழுதழுக்க கூற,
"" ஐய்யோ""என கதறினால் சித்ரா,,,
கிரிஷ் அந்த பெண்களிடம், 'அந்த ஆக்ஸிடெண்ட் எங்கக்கா நடந்துச்சி என கேட்க,
தோ அந்த மெயின் ரோட்ல தான் தம்பி, என கூறினர்......
மூவரும் அந்த இடத்தை நோக்கி ஓடினர்...
அந்த பிரதான சாலையில் தலையில் அடிப்பட்டு மயக்க நிலையில் கிடந்தாள் தென்றல்....
ஓடி வந்த அவர்கள் கூடியிருக்கும் கூட்டத்தை விளக்கிக் கொண்டு உள்ளே வந்தனர்....
தென்றலின் கோலத்தைக் கண்டு மூவரும் பித்து பிடித்தது போல கதறினர்....
கிரிஷ் அவளை அள்ளி மடியில் போட்டுக் கொண்டு கதறினான்..
கூட்டத்திலிருந்தவர்கள் யாரோ ஆம்புலன்சிருக்கு சொல்லி இருந்ததில் அங்கு ஆம்புலன்ஸ் வந்தது....
தென்றலை ஆம்புலன்சில் ஏற்றும் போது மூவருக்கும் அவர்கள் உயிர் அவர்களிடத்தில் இல்லை....
ஏன்னா மூனு பேரும் அவங்க உயிர நம்ம தென்றல் மேல தான வச்சிருக்காங்க🥺🥺🥺


 
ஈரோட்டில் அந்த பெரிய தனியார் மருத்துவமனை முன்பு அதற்குரிய சத்தத்துடன் வந்து நின்றது ஆம்புலன்ஸ்...

கிருஷ் தென்றலுடன் ஆம்புலன்சிலேயே வந்திருந்தான்.
ராமும்,சித்ராவும் அவர்கள் காரில் ஆம்புலன்சை பின்தொர்ந்து வந்து சேர்ந்தனர்...


தென்றலை ஆம்புலன்சில் இருந்து இறக்கி மருத்துவமனையின் உள்ளே ICU பிரிவிற்க்கு கொண்டு சென்றனர்.


தென்றலை ICU பிரிவின் வாயிலில் கொண்டு செல்லும் போது "நீங்க மூனு பேரும் வெளிலயே நில்லுங்க" என நர்ஸ் கூறிவிட்டார்....


மூவரும் அந்த அறைக்கு பக்கத்தில் ஒரு மேசையில் இருந்த அந்த சென்னிமலை முருகனை பார்த்து மனமுருகி தென்றல் குணமாக வேண்டிக் கொண்டனர்..‌..


அந்த ICU பிரிவின் கண்ணாடி வழியே மகளைப் பார்த்த இராமசந்திரன் நினைவுகள் 25 வருடதிற்கு முன் சென்றது....


வெள்ளிக்கிழமை காலை 9 மணி....
"உங்களுக்கு பெண் குழந்தை பிறந்து இருக்கு சார்" என செவிலியர் கூற,

மகிழ்ச்சியில் கால் தரையில் நிற்கவில்லை ராமிற்கு,
"நா இப்போ சித்ராவையும், குழந்தையையும் பாக்கலாமா சிஸ்டர்?" என ராம் கேட்க,

"ஒரு பத்து நிமிஷம் கழிச்சி போய் பாருங்க " எனக் கூறி விட்டு செவிலியர் சென்று விட்டார்...


பத்து நிமிடம் கழித்து பிரசவ அறைக்குள் நுழைந்த ராம் முதலில் சித்ராவை தான் பார்த்தார்...


'என்னை ஆண்மகன் என நிரூபிக்க என்னவள் என்ன பாடு பட்டிருப்பாள்' என நினைக்க கண்கள் கலங்கின ராமிற்கு,,

அருகில் சென்று அவள் தலையை மெதுவாக வருடியவன், " நமக்கு பொண்ணு பொறந்திருக்கா சித்ரா" என கூறி அவள் நெற்றியில் அன்பாய் ஒரு முத்தம் வைத்தான்....


அருகில் இருந்த தொட்டிலில் குழந்தையை பார்க்க எத்தனிக்க, குழந்தை அங்கு இல்லை...

"எங்க குழந்தைய காணோம்" என சித்ராவிடம் கேட்க ,

அவள் பதில் கூறும் முன் செவிலியர் குழந்தையை கொண்டு வந்து ராமிடம் கொடுத்தார்.....


" இந்தாங்க சார் உங்க பாப் பா" என குழந்தையை நீட்டினார்...

கண்களில் ஆனந்த கண்ணீர் பெருக, அந்த பிஞ்சு குழந்தையை கைகளில் ஏந்தினான்...


யார் சொன்னார்கள் பிரசவ வலி பெண்களுக்கு மட்டும் தான் என்று,
தனது மனைவியையும் , குழந்தையையும் நலமோடு பார்க்கும் வரை ஒரு ஆண் அனுபவிக்கும் மன வேதனையும் பிரசவ வலிக்கு ஈடானதே....


சித்ராவையும், குழந்தையையும் வீட்டிற்கு அழைத்து வந்தனர்...


குழந்தைக்கு பெயர் வைக்கும் விழாவை பெரிதாக நடத்த திட்டமிட்டிருந்தான் ராம்..

அதன்படியே குறித்த நாளில் சொந்த பந்தங்கள், நண்பர்கள் என அனைவரும் வந்து வீட்டை நிறைத்து இருந்தனர்....


"ராம், குழந்தைக்கு என்ன பேர் செலக்ட் பன்னிருக்க" என நண்பர்களும் , சொந்தங்களும் கேட்க,

"கொஞ்ச நேரம் வெயிட் பன்னுங்க உங்களுக்கே தெரிஞ்சிரும்" என சிரித்துக் கொண்டே கூறிச்சென்றான்..


"ஏங்க எனக்கு மட்டுமாவது சொல்லுங்க" என கெஞ்சிய மனைவியின் தலையை வருடி,

"உனக்கு இல்லாமையா தங்கம், நான் போய் பாப்பா கிட்ட சொல்லும்போது கேட்டுக்கோ"என கூறி ஓடிவிட்டான்...


சில சம்பிரதாயங்கள் முடிந்து குழந்தையை தொட்டிலில் போட்டு "ஒவ்வொருத்ரா வந்து இப்போ பேர் வைங்க " என ஒரு பாட்டி கூற,

ராம் தான் அணிந்து இருந்த தங்க மோதிரத்தை கழட்டி , அதை தேனில் நனைத்து அந்த பிஞ்சு நாக்கில் தடவி ,

"தென்றல், தென்றல், தென்றல்" என மும்முறை அவளின் நாமத்தை கூற அனைவரும் மகிழ்ச்சியில் மனம் நிறைந்தனர்....


*****

"தென்றல், தென்றலோட அட்டெண்டர் யாருங்க" என நர்ஸ் கேட்க,

மகளின் நினைவுகளில் இருந்து வெளிவந்த ராம்,

"நாங்க தான் சிஸ்டர் தென்றலோட பேமிலி" என கிரிஷ் கூற,

"ஓ நீங்க தான, அவங்களுக்கு தலைல கொஞ்சம் பலமா அடிபட்டு இருக்கு, அதனால அவங்களுக்கு தலைல சின்னதா ஒரு ஆப்ரேஷன் பன்னனும்" என கூற மூவரும் சிலை போல நின்றனர்....


"அய்யோ, என் பொண்ணுக்கு என்னம்மா ஆச்சு , அவ உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லையே ", என சித்ரா கதற,

" இல்லம்மா அத டாக்டர் தான் சொல்லுவாரு" என கூறி நர்ஸ் சென்று விட்டார்....


ராமும், சித்ராவும் ஒருவரையொருர் தாங்கிப் பிடித்து கொண்டு அழுது கொண்டிருந்தனர்....


கிரிஷ் இதெல்லாம் கனவாக இருக்க கூடாதா என கடவுளிடம் மனதளவில் மன்றாடிக் கொண்டிருந்தான்...


ஐந்து நிமிடம் கழித்து ICU அறையிலிருந்து வெளிவந்த டாக்டர் கிரிஷ்ஷிடம்" எவ்ளோ சீக்கிரம் ஆப்பரேஷன் பன்றிங்களோ அவ்ளோ சீக்கிரம் உங்க மனைவியோட உயிர காப்பாத்திடலாம்"என கூற,


கிரிஷ்"அப்படினா சீக்கிரம் அதுக்கு ஏற்பாடு பன்னுங்க டாக்டர்"என கூறினான்...


"ம் ஓகே சார்,அவங்களுக்கு தலைல அடிப்பட்டதுல கொஞ்சம் ஹெவி பிளட் லாஸ் ஆகிருக்கு ,அவங்க ஆப்ரேஷனுக்கு கண்டிப்பா பிளட் தேவைப்படும்,அவங்களுக்கு ஏபி பாஸிட்டிவ் அந்த பிளட் குரூப் உங்களுக்கு தெரிஞ்ச யாருக்காவது இருக்கு தா" என கூற,


ராம் உடனே "சார் எனக்கு அதே பிளட் குரூப் தான் என் பொண்ணுக்கு என் இரத்தத்தையே எடுத்துக்கோங்க" என கூறினார்....


உடனே டாக்டர் " சிஸ்டர் இவர கூட்டிட்டு போய் பிளட் செக்கப் பன்னுங்க " என அனுப்பி வைத்தார்...


சித்ரா வெளியில் உள்ள பென்ச்சில் அழுதவாறு 20 வருடங்களுக்கு முன் தன் சிந்தனையை கொண்டு சென்றார்.....


"ஏங்க நம்ம தென்றல நாளைக்கு ஸ்கூல்ல சேத்த போகனும்" என சித்ரா கூற,

ராமோ"அதுக்குள்ள நம்ம தென்றல் ஸ்கூல் போற அளவுக்கு வளந்துட்டாளா"என தன் மடியில் அமர்ந்திருந்த தென்றலின் கண்ணத்தை கிள்ளியவாரே கேட்டார்....


"ஆமா பா நா ஸ்கூல் போறேன்,எனக்கு பேக், வாட்டர் பாட்டில் , சினாக்ஸ் பாக்ஸ் எல்லாம் வேணும்பா" என கொஞ்சி கொஞ்சி பேச, ராமிற்கு சந்தோசம்....


"அப்ப சரி நாளைக்கு நம்ம தென்றல ஸ்கூல்ல கொண்டு போய் சேக்கறோம்" என சித்ரா கூற மூவரும் சந்தோசமாக சிரித்து கொண்டனர்...


அடுத்த நாள் காலை மூவரும் எழுந்து பள்ளிக்கு கிளம்ப தயாரானார்கள்...


"அம்மா எனக்கு பேக் எல்லாம் வாங்கல ,சாப்பாடு எடுத்து வைக்கல ,புக்கெல்லாம் காணோம், வாட்டர் பாட்டில் கூட காணோம் " என சித்ராவின் பின்னாலேயே கேள்விக் கேட்டுக் கொண்டே சுற்றினாள் தென்றல்....


மகளை பார்த்த ராம் அவளை கைகளில் தூக்கிக் கொண்டு "இன்னைக்கு பாப்பாக்கு அட்மிஷன் தான் போடப் போறோம் , அட்மிஷன் போட்ட உடனே அவங்களே அங்க பேக்கும் புக்கும் தருவாங்க,நாம அதுக்கப்பறம் கடைக்கு போய் லன்ச் பேக், வாட்டர் பாட்டில் எல்லாம் வாங்கலாம்" என கூறியதைக் கேட்டு அனைத்தும் புரிந்தவளாய் தலை ஆட்டினாள் தென்றல்.....


10 மணி,
ஒரு தனியார் பள்ளியில் தலைமையாசிரியர் முன் அமர்ந்திருந்தனர் மூவரும்,
"பாப்பா பேர் என்ன?" என ஆசிரியர் கேட்க,

"தென்றல்" என இவள் கூற,
"அழகு" என கொஞ்சி,அவர்கள் பள்ளியில் இருக்கும் வசதிகளை விளக்கி விட்டு , கட்டணத்தை பெற்றுக் கொண்டார்.....

பின் இன்னொரு ஆசிரியர் முதல் வகுப்புக் குண்டான புத்தகம் மற்றும் புத்தகப்பை அனைத்தையும் வழங்கினார் ......


(குறிப்பு அந்த கால கட்டத்துல KG வதலையாட்டினால்.... அதிக முக்கியத்துவம் இல்ல ஸ்கூல்னு சொன்னாலே ஒன்னாவது தான்)


அனைத்தையும் வாங்கி கொண்டு மூவரும் அவர்களது இருசக்கர வாகனத்தில் பஜாரிற்கு சென்றனர்...


அங்குள்ள புத்தகக் கடை ஒன்றில் நுழைந்தவுடன் தென்றலுக்கு பயங்கற குஷி,
"" அப்பா!!! எவ்ளோ புக் இருக்கு நெறய பொம்மை இருக்கு , ஐ!! ஜீ பூம் பா பென்சில்!!!
ஐ ரப்பர் வச்ச பென்சில்!!!!" என அனைத்தையும் பார்த்து வாய்ப்பிளக்க,,

"ஆமா தங்கம் நெறயா இருக்கு உனக்கு என்ன பிடிச்சிருக்கோ எல்லாமே வாங்கலாம்"" என சித்ரா கூற,

தென்றல் சித்ராவிடம்" அம்மா எனக்கு ரப்பர் வச்ச பென்சில் வாங்கித் தறிங்களா"என கேட்க,

"" அது வேணாம் தங்கம் நாம ரப்பர் தனியா பென்சில் தனியா வாங்கிக்கலாம்" என கூற இவளும் தலையாட்டினால்...

"அப்பா எனக்கு கண்ணாடி வச்ச பென்சில் பாக்ஸ் வாங்கி தரிங்களா " என கேட்க,

"இல்லம்மா அது வேணாம் கண்ணாடி திடீர்னு உடைஞ்சிட்டா பாப்பா கைய கிழிச்சிரும்ல, அதனால நாம பொம்மை வச்ச பாக்ஸ் வாங்கிக்கலாம்" என கூற அதற்கும் தலையாட்டினாள்....

" அம்மா எனக்கு ரெண்டு அடுக்கு டிபன் பாக்ஸ் வாங்கித் தறிங்களா?" என கேட்க,

"இல்லடா அத நீ திறக்க தெரியாம திறந்துட்டா குழம்பு மேல கொட்டிக்கும் அதனால நாம தனித்தனியா வாங்கிக்கலாம்" என கூற எப்பொழுதும் போல தலையாட்டினாள்....

கடைக்கு வெளியே வந்து சித்ராவும்,ராமுவும் தென்றல் பாப்பாக்கு பிடிச்சதெல்லாம் வாங்கியாச்சு என கூறி சிரிக்க, தென்றலும் சிரித்தால் அவர்களுடன்....

அன்று இரவு முழுவதும் ஒரே குஷி தென்றலுக்கு பள்ளிப்பையை எடுத்து மாட்டுவது வாட்டர் கேனில் நீர் நிரப்பி குடிப்பது என விளையாடிக் கொண்டிருந்தவள் திடீரென கால் இடறி கீழே விழுந்தாள்....


"அம்மா " என விழுந்தவள், அன்னை வரும் முன் அழ ஆரம்பித்திருந்தாள்...

சித்ரா ஓடி வந்து அவளைத் தூக்கிக் கொண்டாள்..

"என்னாச்சு டா பாப்பாக்கு" என கேட்க,

"கீழ விழுந்துட்டேன் இரத்தம் வருது' என விம்மிக்கொண்டே காலை தூக்கி காட்டினாள்...

அதற்குள் ராமும் வந்துவிட காயத்திற்கு வைக்கும் மருந்தை கொண்டு வந்து தென்றலின் காலில் வைத்து விட்டு இருவரும் அன்று இரவு முழுக்க மகளை மடிமேலும் தோள் மேலும் வைத்துக் கொண்டே பார்த்து கொண்டனர்.....


***

"சித்ரா,சித்ரா" என ராம் சித்ராவை தொட்டு உலுக்க,

நினைவுக்கு வந்தவளாய் சித்ரா ராமைப் பார்த்து,
"இரத்தம் குடுத்துட்டிங்களா" என் கேட்க,

"ம், குடுத்துட்டு வந்துட்டேன் மா, இன்னும் கொஞ்ச நேரத்துல ஆப்பரேஷன் ஆரம்பிச்சிடுவாங்க" என கூறினான்......


இவர்களுக்கு இப்போதைய தேவை தென்றல் குணமாக வேண்டும்...

ஆனால் அங்கு உயிருக்கு போராடுபவளுக்கோ தேவை அவள்,

ஆம் அவள் தான் அவளுக்கு தேவை இவர்களது கண்மூடித்தனமான பாசத்திற்குள் காணமல் போனவள் அவள்......



வருவாள்.......
 
அத்தியாயம் 3

அறுவை சிகிச்சை அறையின் வாயிலில் மூவரும் கண்ணீர் சிந்திய முகத்துடன் அமர்ந்திருந்தனர்.....


அறுவை சிகிச்சை அறைக்கு உள்ளே மருத்துவர் நுழைய,
மூவரும் கடவுளை வேண்டியபடி அமர்ந்திருந்தனர்......


சித்ராவும், ராமும் தம்முடைய இஷ்ட தெய்வங்கள் அனைத்தையும் மனதார வணங்கிக் கொண்டிருந்தனர்....


க்ரிஷ், அவனும் அவன் பங்கிற்கு தனக்கு தோன்றிய அனைத்து தெய்வங்களையும் வணங்கியபடியே, தன் நினைவுகளை பின்னோக்கி கொண்டு சென்றான்......


கிரிஷ் தென்றலை முதல் முறையாக பார்த்ததிலிருந்து அவளின் நினைவாக பித்து பிடித்தவன் போல் அலைந்து கொண்டிருந்தான்......


அவனிடம் ஏற்பட்ட மாற்றங்களினால் நண்பர்கள் அவனிடம்,
" என்ன கிருஷ்ணா கொஞ்ச நாளா ஒரு மார்க்கமா இருக்க" என கிண்டலாய் கேட்க, வெட்கித்துப் போனான்.....


மீண்டும் அடுத்த வாரம் அதே கோவிலில் மறுபடியும் அவளை சந்தித்தான்......

ஆனால் இந்த முறை அவள் அவளுடைய தோழிகளுடன் வந்திருந்தாள்.....

சென்ற முறை பார்த்ததைவிட இன்னும் அழகாக தோன்றினாள்...
இந்த முறை பச்சையும் சிவப்பும் கலந்த நிறத்தில் சல்வார் அணிந்திருந்தாள்..

அவள் அவள் தோழிகளுடன் சந்தோஷமாக சிரிப்பதையும் விளையாடுவதையும் பார்ப்பதற்கு இவனுக்கு மிக மகிழ்ச்சியாக இருந்தது....

அருகில் சென்று பேசலாம் என நினைத்தவுடன் அவனின் இதயம் துடிக்கும் சத்தம் அருகில் இருப்பவருக்கே கேட்கும் அளவிற்கு வேகமாக துடித்தது.....


இவ்வளவு பதட்டமாக அவளிடம் சென்று பேசுவது சரியாக இருக்காது என்று எண்ணி ,அவள் வீட்டில் சென்று பேசலாம் என்று முடிவு எடுத்தான்....

(எவ்வளவு தைரியம் பாத்திங்களா பையனுக்கு )

அவன் படும் பாடு எதையும் பாவம் அந்தப் பாவை அறியவில்லை....

இவளைப் பற்றி தெரிந்து கொள்ள அவனுக்கு வழித் தெரியாமல் தன் நண்பனை வைத்து அவள் தோழி ஒருத்தியிடம் விசாரித்தான்...


விவரங்கள் தெரிந்த பிறகு ஒரு இரண்டு நாட்கள் கழித்து தென்றல் வீட்டிற்கு சென்றான் கிரிஷ்...

அழகான சிறிய வீடு ,இரண்டு இரு சக்கர வாகனங்கள் ,வாசலில் சில ரோஜா செடிகள், பார்ப்பதற்கு அழகாக இருக்க காலிங் பெல்லை அழுத்தினான்....


பெல் அடிக்கும் சத்தம் கேட்டவுடன் சித்ரா வந்து கதவைத் திறந்தார்....

"" வணக்கம் ஆன்ட்டி!! என் பெயர் கிரிஷ் ,உங்க பொண்ண பொண்ணு கேட்கலாம்னு வந்திருக்கேன்"" எனக் கூற சித்ரா ஒரு நிமிடம் ஒன்றும் புரியாமல் விழித்தார்.....


" ஏங்க இங்க ஒரு நிமிஷம் வாங்க வாசல்ல ஒரு தம்பி வந்து என்னென்னவோ சொல்றாரு கொஞ்சம் வந்து என்னன்னு கேளுங்க" என சித்ரா ராமை அழைத்தார்......



" என்னப்பா வேணும் யார் நீங்க என்ன கேட்டுட்டு இருக்கீங்க" என ராம் கேள்விகளை அடுக்க,
" அங்கிள் உள்ள போய்
பேசலாமா" என கிருஷ் கூறினான்...


" சரி வாங்க" என ராம் கிரிசை வீட்டிற்குள் அழைத்துச் சென்றார்...

உள்ளே சென்றதும்" உக்காருங்க தம்பி" என்ன ராம் கூறியதும் அவனும் அங்கிருந்த சோபாவில் அமர்ந்தான்....


" இப்ப சொல்லுங்க உங்க பேர் என்ன, நீங்க எங்க இருந்து வரீங்க ,என்ன வேலை செய்றீங்க, என்ன வேணும் இப்போ" என அடுத்தடுத்து கேட்டதும் சிறிது பதட்டம் இருந்தாலும் கிரிஷும் அவன் பதிலை தொடர்ந்தான்....


" என்னோட பேர் கிருஷ்ணன், ஈரோட்டில் ஒரு தனியார் கம்பெனியில் ஒரு நல்ல வேலையில் இருக்கேன், எனக்கு அப்பா அம்மா யாரு இல்லை, ஆசிரமத்துல வளர்ந்த இப்போ தனியா வீடு எடுத்து தங்கி இருக்கேன்.

உங்க குடும்பத்தை அன்னைக்கு சென்னிமலை கோவிலில் பார்த்தேன்.

ரொம்ப புடிச்சி இருந்துச்சு, உங்க பொண்ணையும் பிடிச்சிருக்கு....

அவங்க மேல நீங்க வெச்சிருக்கிற பாசம் அதைவிட பிடிச்சிருக்கு....

உங்க பொண்ண எனக்கு கல்யாணம் பண்ணி கொடுக்க உங்களுக்கு விருப்பமா?? என மூச்சு விடாமல் கேட்டு முடித்தான்.....

ராம் சித்ரா இருவருக்கும் இவன் பேசுவது புரிந்தாலும் பதில் சொல்வதற்கு சற்று சிரமமாக இருந்தது.....

" அது எப்படி தம்பி உங்களை யாரும் என்னனே எங்களுக்கு தெரியாது, திடீர்னு வந்து நீங்க கேக்குறீங்கன்னு எப்படி எங்க பொண்ணு கொடுக்க முடியும்??
எங்களுக்கு இருக்கிறது ஒரே பொண்ணு ,அதுவும் ரொம்ப செல்லமா பாசமா வளர்த்திருக்கோம், யாருன்னு தெரியாத இடத்துல நாங்க கல்யாணம் பண்ணி கொடுக்க முடியாது இல்ல" என ராம் மறுப்பை கூற வரும் முன் க்ரிஷ் அவரை தடுத்து,

" நீங்க வேணும்னா நான் வளர்ந்த ஆசிரமத்துல கேளுங்க, என் ஃப்ரெண்ட்ஸ் கிட்ட விசாரிங்க
, இப்போ நான் குடியிருக்கிற அக்கம் பக்கத்துலயும் விசாரிச்சு பார்த்துட்டு சொல்லுங்க"" எனக் கூறினான்.....


அவர்களுக்கும் ஏனோ கிரிஷை பிடித்து விட்ட து...

அதனால் அவன் சொல்லுவது அவர்களுக்கும் சரியான பட்டதோ என்னவோ" தென்றல் வெளியில போயிருக்கா அவ வந்த உடனே அவ கிட்ட நாங்க இந்த தகவலை சொல்றோம் அவளுக்கு பிடிச்சிருந்தா மேல பேசலாம்" எனக் கூறி அவனை அனுப்பி வைத்தனர்...


அவனும் சரி என்று கிளம்பியவன் வீட்டிற்கு வந்தும் கூட சிறிதும் பதட்டம் குறையவில்லை" சரியா தான் பேசனமா?
அவங்களுக்கு நம்மள புடிச்சிருக்குமா?
தென்றலுக்கு நம்மள பிடிக்குமா?
என்ன பதில் சொல்லுவாங்க?" என பல நூறு கேள்விகள் அவனுக்குள் தோன்ற பதில் கேட்க முருகனிடமே சென்று விட்டான்.....


நேராக சென்னிமலை ஆண்டவனின் சன்னதிக்கு சென்றவன் முருகனின் முன் நின்று மனம் உருகி வேண்ட ஆரம்பித்தான்.......


"" முருகா எனக்கு தான் அப்பா அம்மா யாரும் கிடையாது அந்த பாசமும் எனக்கு கிடைச்சது இல்லை ஏனோ இவளை பார்த்த உடனே எனக்கு ரொம்ப பிடிச்சது.
அவங்க குடும்பம் தான் அவங்க அவ மேல வச்சிருக்கற பாசம் தான் அவளை எனக்கு இன்னும் பிடிக்க வச்சது..


அவங்க காட்டுற அன்பை விட அவகிட்ட ஒரு படி அதிகமாகவே நான் அன்பு காட்டுவேன்.

நான் என்னோட அப்பா ,அம்மா அவங்க மேல எல்லாம் காட்டணும்னு நினைச்ச அன்பை மொத்தமும் இவளுக்காக நான் கொடுப்பேன்....


" அவளுக்கும் அவ குடும்பத்துக்கும் என்ன பிடிக்கணும், அதுக்கு நீ தான் துணையா இருக்கணும், நான் சின்ன வயசுல இருந்து உன்கிட்ட எதுவும் கேட்டதில்லை , நான் கேட்டதெல்லாம் ஒரு பாசமான குடும்பம் மட்டும்தான் தென்றல் எனக்கு கிடைச்சா அந்த பாசமான குடும்பமும் எனக்கு கிடைக்கும் பார்த்து செய் முருகா🙏🙏🙏" என்ன வேண்டுதலை போட்டு விட்டு வீட்டிற்கு வந்தான்.....


தென்றல் வீட்டில் தென்றல் வீட்டிற்கு வந்தவுடன் ராமும் சித்ராவும் நடந்தவைகளை அவளிடம் எடுத்துக் கூறினர்....

" அந்தப் பையன பாக்க ரொம்ப நல்ல பையனா தான் இருக்கான் ,அவனோட ஆசிரமத்துல போய் விசாரிச்சு பாப்போம்;

நல்லவிதமா சொன்னா பேசி முடிக்கலாம் ,அந்த தம்பியை பார்க்கவே ரொம்ப பாவமா இருக்கு, பாசத்துக்கு ஏங்கிப் போன பிள்ளை மாதிரி இருக்கு அவங்க ஒன்னும் தப்பா சொல்லலையே உன்ன பார்த்திருக்கிறாங்க,
பிடிச்சிருக்காமா, உன்ன வெளியில எங்கேயும் தொந்தரவு பண்ணாம நேரா வீட்டுக்கு வந்து எங்க கிட்ட தான் கேட்டு இருக்காரு
,இப்ப இருக்குற பசங்களாக இருந்தால் பின்னாடி சுத்தி இருக்கிறவங்களுக்கும் இம்சை கொடுத்திருப்பார்கள்,
ஆனா இந்த தம்பி டீசன்ட்டா வீட்ல வந்து பேசுறாரு" என சித்ரா அவள் மனதுக்கு தோன்றியதை தென்றலிடம் கூறினாள்....‌


இவர்கள் கூறியது எதுவும் தென்றலின் மண்டைக்கு ஏறவில்லை" யாரா இருக்கும் ,நம்பள எப்படி பார்த்து இருப்பாங்க, அது இந்த காலத்துல இப்படி ஒரு பையனா" என மட்டும் மனதளவில் நினைத்தால்....

ராமிற்கும் சித்ரா கூறியதை சரி என பட அதையே ஆமோதித்தார்....

தென்றலும் நீங்க ரெண்டு பேரும் என்ன முடிவு பண்றீங்களோ அதுதான் என் முடிவும் எனக்கு கூறி சென்று விட்டாள்......

இரண்டு நாட்கள் கிரிஷைப் பற்றி
விசாரித்தவர்களுக்கு மனதுக்கு நிறைவாய் போக கிருஷ்ணனை வீட்டிற்கு அழைத்து பேசினர்......

அப்போதுதான் தென்றல் கிருஷ்ணனை முதல்முறையாக பார்க்கிறாள் ஏனோ பார்த்ததும் மனதிற்கு பிடித்து விட்டது......

" உங்கள பத்தி விசாரிச்சேன் தம்பி எல்லா இடத்திலும் நல்ல விதமா தான் சொல்றாங்க 'எங்களுக்கும் உங்களை பார்த்த உடனே புடிச்சி இருந்தது ,உங்களுக்கு யாரும் இல்லைன்னு சொல்றீங்க அதனால ஒன்னு கேக்குறோம் தப்பா எடுத்துக்க மாட்டீங்களே?" என ராம் பீடிகையுடன் பேச,

" தயங்காம கேளுங்கள் அங்கிள், உங்க வீட்டோட மாப்பிள்ளையா இருக்க சொல்லிதானே கேட்க போறீங்க இதுக்கு ஏன் தயக்கம்" என கேட்க இருவரும் திருதிருவென விழித்தனர்.‌....


"எனக்கு உங்க வீட்டோட மாப்பிள்ளையா இருக்க சம்மதம் அங்கிள்,நான் ஆரம்பத்துல இருந்தே சொல்லறது எனக்கு உங்க பொண்ண மட்டும் புடிக்கல உங்க குடும்பத்தையும் சேர்த்து தான் பிடிச்சது நான் ஆரம்பத்தில் இருந்து தனியா வளர்ந்தவன் எனக்கு குடும்பனு சொல்ல யாரும் இல்ல என்ன உங்க மாப்பிள்ளையா ஏத்துக்கிட்டீங்கன்னா இனிமே இது தான் என்னோட குடும்பம் அதனால நான் இங்கதான இருக்கணும்" எனக் கூற இருவரும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்...


தென்றலுக்கும் இவன் பேசிய விதம் மிகவும் பிடித்திருந்ததால் அவள் மனதிலும் சுலபமாக இடம் பிடித்து விட்டான் கிருஷ்ணன்.....


மிக தாமதப்படுத்தாமல் அடுத்த முகூர்த்தத்திலேயே இருவருக்கும் திருமண ஏற்பாடுகள் நடத்த திட்டமிட்டனர்.....


கிருஷிற்க்கு யாரும் இல்லாததால் இவர்களே அனைத்தையும் கவனித்துக் கொண்டனர்.



நல்ல நாள் பார்ப்பது , மணமக்களுக்கு முகூர்த்தபட்டு எடுப்பது, நகைக்கடை என அனைத்தையும் ராமும் சித்ராவுமே கவனித்துக் கொண்டனர் ,அவர்கள் செல்லும் எல்லா பக்கமும் கிரிஷ்ஷும் அவர்கள் கூடவே சென்றான்.....



இந்தக் குறுகிய சில நாட்களில் கிரிஷ் தென்றல் வீட்டில் ஒருவனாகவே மாறிப் போனான்..



தென்றலுக்கும் ஏனோ அது மிகவும் பிடித்திருந்தது...



திருமணத்திற்கு இரண்டு நாட்கள் முன்பு தான் கிருஷ்ணனும் தென்றலும் தனியாக பேசும் வாய்ப்பு கிடைத்தது ....



அதற்கு முன்பே கூட ராமும் சித்ராவும் இவர்களை தனியே பேசுமாறு கூறினர் ,



ஆனால் இவர்கள் தேவையில்லை என மறுத்து விட்டார்கள்.....



இப்போது திருமணத்திற்காக ஒரு சில பொருட்கள் வாங்க இவர்களை தனியே அனுப்பி வைத்தனர் தென்றலின் அம்மா அப்பா...



பொருட்களை வாங்கியவர்கள் ஒரு காபி ஷாப் வந்தனர்.



வந்தவர்கள் அவர்களுக்கு தேவையானவற்றை ஆர்டர் செய்தனர்.



ஆர்டர் செய்தது வரும் வரை ஏதாவது பேச வேண்டும் அல்லவா கிருஷ்ணனே பேச்சை தொடர்ந்தான்....



" என்ன உங்களுக்கு பிடிச்சிருக்கா தென்றல்" எனக்கேட்ட கேள்வியில் தென்றல் சற்று விழிக்க,



" இல்ல உங்க கிட்ட இந்த கேள்வியை நான் கேட்கவே இல்ல, கல்யாணத்துக்கு முன்னாடி எப்படியும் கேக்கணும் நெனச்சிட்டு இருந்தேன், அதனால தான் கேட்டேன் என்ன உங்களுக்கு பிடிச்சிருக்கா?" என கேட்க,



" எனக்கு உங்களை ரொம்ப பிடிச்சிருக்கு ,



அதுவும் இல்லாம எங்க அப்பா அம்மாவுக்கு உங்களை ரொம்ப பிடிச்சிருக்கு ,



நீங்க என்ன ஒன்னும் எங்க வீட்ல இருந்து பிரிச்சு கூட்டிட்டு போகவில்லையே,



நீங்கதானே எங்க வீட்டுல வந்து இருக்கப் போறீங்க அதனால இன்னும் கொஞ்சம் அதிகமா பிடிச்சது...



அப்புறம் உங்களுக்கு யாரும் இல்லைன்னு சொன்னீங்க இனிமே நீங்க அப்படி கவலைப்பட தேவையில்லை உங்களுக்கு
எல்லாமுமா நான் இருப்பேன்" எனக்கு கூறி அவன் கையோடு கைகோர்த்தாள்....



கிருஷ்க்கு இந்த உலகமே தன் வசம் அடைந்ததைப் போல ஒரு ஆனந்தம்!!!



அவன் எதிர்பார்த்தது இதை தானே....



அவள் கூறி முடித்தவுடன் தன் பேண்ட் பாக்கெட்டில் இருந்து ஒரு சிறிய பெட்டியை எடுத்து அவளிடம் நீட்டினான்.....



" என்ன இது" என அவள் கேட்க,



" பிரிச்சு பாரு"என கூறினான்...



அவள் பிரித்துப் பார்க்க அதனால் ஒரு வைர மோதிரம் இருந்தது.....



" எதுக்கு இதெல்லாம்" என் அவள் கேட்க,



" கல்யாண தப்ப குடுக்கலாம்னு பார்த்தேன் ஆனா இப்ப கொடுக்கிறது தான் சரின்னு படுது" எனக்கூறி அவள் கையில் அந்த மோதிரத்தை அணிவித்தான்...



அவளுக்கும் அந்த தருணம் மிக மகிழ்ச்சியாகவே முடிந்தது.....



இரண்டு நாட்களில் சொந்த பந்தங்கள் நண்பர்கள் புடைசூழ திருமணம் கோலாகலமாக நடந்து முடிந்தது.....



ராமிற்கும் ,சித்ரா விற்கும் மிகுந்த மகிழ்ச்சி......



அந்த மகிழ்ச்சியான நினைவுகளிலிருந்து வெளிவந்தவன் கண்களில் ஓரமாக சில கண்ணீர் துளிகள்.....
ஆப்ரேஷன் தியேட்டரில் இருந்து வெளிவந்த டாக்டர் , மூவரையும் பார்த்த ஒரு சிறிய புன்னகையை உதிர்த்து, "ஆபரேஷன் நல்லபடியா முடிஞ்சுது இனிமேல் அவங்க உயிருக்கு எந்த ஆபத்து கிடையாது" என நற்செய்தி ஒன்றை கூறி சென்றார்.......
அவர்கள் மூவருக்கும் இப்பொழுதுதான் உயிர் வந்தது போல இருந்தது.....
தாங்கள் வேண்டிய அத்தனை தெய்வத்திற்கும் நன்றி கூறி விட்டு , டாக்கடரிடம் திரும்பி,
"சார் நாங்க இப்போ அவள பாக்கலாமா" என கேட்க,
"இல்ல அவங்க கண் முழிக்க நான்கு மணி நேரம் ஆகும் அதுவரை நீங்க அவங்கள தொந்தரவு பண்ண வேண்டாம்" எனக்கு கூறிச் சென்றார்....
அந்த நான்கு மணி நேரமும் நான்கு யுகங்களாக மூவரின் மனதையும் வாட்டிக் கொண்டிருந்தது ...
தென்றல் கண் திறப்பதை எதிர்ப்பார்த்து மூவரும் கண் மூடாமல் காத்துக் கொண்டிருந்தனர்........
(இவங்களோட பாசம் எந்த அளவுன்னு எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும், அடுத்த எபில நம்ம தென்றல் கண் முழிச்சிடுவா, இவங்க பாசத்தால அவ எவ்வளவு பாதிக்கப்பட்டானு அடுத்த
எபிசோட்ல பார்ப்போம் அதுவரை மறந்துடாதீங்கபா🥰)
 
அத்தியாயம் 4

மெல்ல மெல்ல கடந்தது 4 மணி நேரம்....


அறுவை சிகிச்சை பிரிவிலிருந்து மீண்டும் நார்மல் வார்டிற்க்கு அந்த நான்கு மணி நேரத்தில் மாற்றப்பட்டிருந்தாள் தென்றல்...


நான்கு மணி நேரம் கழித்து ஒரு நர்ஸ் வெளியே வந்து" இப்ப போய் அவங்கள பாருங்க ஆனா ,அழாம அவங்கள தொந்தரவு பண்ணாம பாருங்க" என கூறி சென்றார்.....


நர்ஸ் கூறியதைக் கேட்டு சரி என தலையாட்டிய மூவரும் மெல்ல அறைக்குள் சென்றனர்....


தலையில் கட்டும் கையில் ட்ரிப்ஸ் இறங்க அவளைப் பார்க்கவே பரிதாபமாக இருந்தது....


மூவருக்கும் அழுகை வந்தாலும் நர்ஸ் கூரிய காரணத்திற்காக அவளை தொந்தரவு செய்ய வேண்டாம் என நினைத்து அவளைப் பார்த்து விட்டு மட்டும் வெளியே வந்தனர்....


சிறிது நேரம் கழித்து மீண்டும் அதே நர்ஸ் வந்து "அவங்க கண் முழிச்சுட்டாங்க நீங்க ஏதாவது பேசுறதுனா பேசலாம் ,பதிலுக்கு அவர்கள் அதிகமா பேச விடாதீங்க" என கூறிவிட்டு சென்றார்....


" தென்றல் இப்போ எப்படி இருக்குதுமா, வலிக்குதா, எப்படிமா அடிபட்டுச்சு? யார்கிட்டயும் சொல்லாம நீயே அவ்வளவு தூரம் போன" என சித்ரா கேள்விகளை அடுக்கிக் கொண்டே போக,

ராம் இடையில் தடுத்து நிறுத்தி" அவ இப்பதான் சித்ரா கண்ணு முழிச்சி இருக்கா, கொஞ்ச நேரம் போகட்டும் ஏதாவது இருந்தாலும் கேட்டு தெரிஞ்சுக்கலாம், அவளை தொந்தரவு பண்ணாத" எனக்கு ஒரு சித்ராவும் அமைதியானாள்....


இருவருக்கும் தென்றலைப் பார்க்க பார்க்க அழுகை தான் வந்தது...


கிரிஷ் அவர்கள் இருவரையும் வெளியே இருக்குமாறு கூறினான்...

அவர்களும் சிறை சிறிது நேரம் வெளியில் சென்று வரலாம் என்று கிளம்பினர்....


இதுவரை தென்றல் எதுவும் பேசவே இல்லை..

அவர்கள் சென்றதும் கிரிஷ் அவளின் அருகில் சென்று "ஏன்டி இப்படி பண்ண, நான் எவ்ளோ பயந்துட்டேன் தெரியுமா ,உனக்கு எவ்ளோ தைரியம் இருக்கும், பக்கத்துல கடைக்கு போகிறேன் என்று தானே சொல்லிட்டு போன ,ஏண்டி இப்படி பண்ண ஏன் அங்க போனா வண்டி வந்து எடுக்கிற வரைக்கும் நீ என்ன மனநிலையில் இருந்த" என கண்களில் நீர் கசிய கேட்க...


" ரொம்ப பயந்துட்டியா" என அவள் கஷ்டப்பட்டு உதிர்த்த வார்த்தைகளில் தெரிந்தது அவளது வலியின் வீரியம்...


" நீ ஒன்னும் இவ்வளவு கஷ்டப்பட்டு பேச வேண்டாம் ரெண்டு நாள் பொறுமையா இரு உனக்கு தலையில ஆபரேஷன் பண்ணி இருக்காங்க டாக்டர் உன்னை பேச வேண்டாம் என்று சொல்லி இருக்காரு" என சிறுபிள்ளைத்தனமான கோபத்துடன் அவன் கூற,

" உன்கிட்ட பேசாம தான் என்னால இருக்க முடியாதே" என அவள் மீண்டும் திக்கித் திணறி கூற,

" அப்புறம் ஏண்டி இப்படி பண்ண நாங்க எல்லாம் எவ்வளவு பயந்துட்டோம் தெரியுமா"என சோகமாக அவன் கேட்க,

"ஏதோ யோசனைகளை நடந்து போன, அதனால வண்டி வந்த சத்தம் எனக்கு கேட்கல ,சட்டுனு நகருறதுக்குள்ள வண்டி இடிச்சிடுச்சு, வண்டிக்காரங்க மேல எந்த தப்பும் இல்லை எல்லா தப்பும் என் மேலதான்"என கூறி முடித்தாள்...


" அப்படி என்னடி உனக்கு யோசனை உனக்கு என்ன பிரச்சனை நாங்க எல்லாரும் உன்னை எப்படி பார்த்துக்கிறோம் உன் மேல எவ்வளவு பாசம் வச்சிருக்கோம் உன்னை பொத்தி பொத்தி பாதுகாக்குறோம் இப்படி இருந்தும் உனக்கு என்ன அப்படி யோசனை எல்லாத்தையும் மறந்து நடந்து போற அளவுக்கு"என காட்டமாக கேட்க,

" என் பிரச்சனை என்னன்னு சொன்னா உங்களுக்கெல்லாம்
புரியாது இப்ப சொல்ற நிலைமையிலும் நான் இல்லை, நான் சரியாய் வீட்டுக்கு வரேன், அதுக்கப்புறம் எல்லாமே பேசிக்கலாம்"என முடித்து விட்டாள்...


" அப்போ நெஜமாலுமே உனக்கு ஏதோ பிரச்சனை இருக்கா? அப்படி இருந்து என்கிட்ட கூட ஏன் அதை சொல்லவே இல்ல"என அவன் கேட்க,

அவளிடம் பதில் இல்லாமல் போனது...

அதற்குள் வெளியில் சென்ற சித்ராவும் ராமவும் உள்ளே வந்தனர்....


அவர்கள் வந்து ஒரு ஐந்து நிமிடத்தில் தென்றலும் மருந்தின் வீரியம் காரணமாக உறங்கிப் போனாள்...

அன்று இரவு முழுவதும் மூவரும் மருத்துவமனையிலேயே தங்கினர்....

அடுத்த நாள் காலை தென்றல் எழுந்தவுடன் தண்ணீர் கேட்க "அம்மா அம்மா "என்று மெல்ல அழைக்க, சித்ராவோ இரண்டு நாட்களாக அலைந்ததில் நல்ல உறக்கத்தில் இருந்தார்...


தென்றல் அழைத்த சத்தத்தில் ராம் எழுந்து கொண்டார்,"

தென்றல் என்ன ஆச்சும்மா, வலிக்குதா வேற ஏதாவது வேணுமா" எனக்கு கேட்க,

" குடிக்க கொஞ்சம் தண்ணி வேணும்பா" என் அவள் கூற,

" ஒரு நிமிஷம் இருடா கொண்டுவரேன்" என பிளாஸ்க்கில் இருந்த சுடுநீரை ஒரு கிளாஸில் ஊற்றி எடுத்து வந்தார்.....

அவள் கைகளில் ஊசி போட்டு இருந்த காரணத்தினால் தானே மகளை எழுந்து அமர வைத்து அவரே நீரை குடிக்க வைத்தார்....

தண்ணீர் குடித்துக் கொண்டே அப்பாவை பார்த்த தென்றல்" ஏன்பா என் மேல இவ்வளவு பாசம் வச்சிருக்கீங்க "என கேட்டாள்...


" பாசம் வச்சிருக்கனா உயிரையே வச்சிருக்கோமா"என கண்கள் கலங்க கூறினார்...

" அப்புறம் ஏன் பா என் விருப்பப்படி எதுவுமே நீங்க நடந்துக்கிட்டதே இல்ல"என அவள் கேட்ட கேள்வியில் சிறிது ஆடித்தான் போனார் ராம்....


"உன் விருப்படி நடந்துக்கலயா" என குழப்த்துடன் தென்றலின் கண்களை நோக்க, அதில் பல வலிகள் தெரிந்தது....


அவளிடம் என்ன என்று விசாரிக்க முற்படும் போது சித்ராவும் எழுந்து கொள்ள இப்பொழுது வேண்டாம் என விட்டு விட்டார்.....

இருந்தாலும் அவள் கூறிய வார்த்தைகள் காதில் ஒலித்துக் கொண்டே இருந்தது.....

" சின்ன வயசுல இருந்து எல்லாமே அவ விருப்பப்படி பார்த்து பார்த்து செஞ்சுருக்கிறோமே அப்புறம் ஏன் தென்றல் இப்படி பேசினா" என பலவாறாக யோசனை செய்து கொண்டிருந்தது ராமின் மூளை.....

இரண்டு நாட்களாக படுக்கையில் படுத்திருந்தவள் இன்று எழுந்து நடக்க தயாரானாள்....

மூவரும் அவளை பாதுகாப்பாக கீழே இறக்கி குழந்தைக்கு முதல் முதல் நடைபயில கற்றுக் கொடுப்பது போல அவளை மெது மெதுவாக நடக்க‌ வைத்தனர்....

கிரிஷ்ஷிர்கு ஆபிஸில் இருந்து அவசர வேலை வர அவன் அலுவலகம் கிளம்பினான்...

" மாப்பிள்ளை போற வழியில ஜூஸ் கடையில் என்னை எறக்கி விட்டுருங்க நான் தென்றலுக்கு ஜூஸ் வாங்கிட்டு ஹாஸ்பிடல் வந்துடுறேன்"என கூறி ராமும் அவனுடன் சென்றார்...


மருத்துவமனையில் தென்றலும் , சித்தராவும் மட்டும் இருந்தனர்...
" அம்மா ரொம்ப பசிக்குது சாப்பாடு தரீங்களா" என்ன தென்றல் கேட்க,

" இருமா நானே போட்டு ஊட்டி விடுகிறேன்" என சித்ரா தட்டில் சாப்பாடு போட்டு தென்றலுக்கு ஊட்டினாள்...


சாப்பிடும் போது தென்றல் கேட்டால்" மா என்ன உங்களுக்கு எவ்வளவு பிடிக்கும்"என ,

" இது என்ன கேள்வி தென்றல் எனக்கு இந்த உலகமே நீ மட்டும் தான் உனக்கு தெரியாதா அது"என சித்ரா கேட்க,

" அப்ப என்ன பத்தி உங்களுக்கு எல்லாமே தெரியுமா"என கேட்ட கேள்வியில் சற்று தடுமாறியவள்,
சுதாரித்துக்கொண்டு ,
" என் பொண்ண பத்தி எனக்கு தெரியாமையாடா, உனக்கு என்ன பிடிக்கும் பிடிக்காது எல்லாமே எனக்கு தெரிஞ்சதுதானே" எனப் பெருமையாக கூற,


" எல்லாமே தெரிஞ்சுகிட்ட நீங்க ஏன்மா என் மனசுல இருக்குற ஆசையெல்லாம் தெரிஞ்சுக்கல"என கேட்ட கேள்வியில் உலகமே நின்றது போல் இருந்தது....

" என் பொண்ணோட ஆசைகள நா தெரிஞ்சிக்கலயா??"என குழம்பி போனார்.....

சிறிது நேரத்தில் ராம் உள்ளே வந்து விடவும் இருவரும் பேச்சை நிறுத்தினர்......

மருத்துவமனையில் ஒரு வாரம் கடந்த பிறகு தென்றலை வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.....

அவளுக்குத் தேவையானவை அனைத்தும் இருந்த இடத்திலேயே அவளுக்கு கிடைத்தது.....


"கிரிஷ் மனசு கொஞ்சம் பாரமா இருக்கு எங்கயாவது வெளில போலாமா" என தென்றல் கேட்க,

" வேணா தென்றல் இப்பதான் நீ கொஞ்சம் கொஞ்சமா சரி ஆயிட்டு வர அதுக்குள்ள வெளியில எல்லாம் எங்கே வேண்டாம்" என அவன் மெலிதாக கூற ,
சரியென தலையாட்டினாள்....


தென்றலுக்கு உடல்நிலை சரியாகும் வரை இங்கேயே இருங்க என்று சித்ராவும் ராமும் கூறியதால் இருவரும் இங்கேயே தங்கி விட்டனர்.....


இரவு உணவு முடித்த பின் அறைக்கு சென்று தென்றலை பார்த்தவன் அவள் கையில் இருக்கும் புத்தகத்தை வெடுக்கென பறித்தான்....


" உனக்கு எத்தனை வாட்டி சொன்னாலும் புரியவே புரியாதா புக் படிக்காதன்னு சொல்லிக்கிட்டே இருக்கேன் இல்ல படிச்சா தான் உனக்கு தலை வலிக்குது இல்ல"என கடிந்து கொள்ள ,

"சாரி கிரிஷ் தூக்கம் வரலை அதான்" என்றாள் பாவமாக,

" சரி சரி மூஞ்சிய அப்படி வச்சிக்காத நல்லாவே இல்ல"என கூறியவன்,

அவள் அருகில் அமர்ந்து அவளை தன் மடியில் படுக்க வைத்து தலையை வருடினான்....


"எனக்கு எதாவது ஆயிருந்தா என்ன பண்ணி இருப்ப கிரிஷ்" என்றதும்,

சட்டென்று அவள் கேட்ட கேள்வியில் கலங்கிய கண்களில் இருந்து ஒரு துளி அவள் கன்னத்தை தொட்டது.....


அவள் பதறி எழுந்து "ஏன் நான் இப்போ என்ன கேட்டேன் எதுக்கு இப்படி கண்கலங்கற" எனக் கேட்க,

" இந்த கேள்வி என்னை கேட்கிறதே உனக்கு தப்புன்னு தோணலையா, எனக்கு இருக்கிறது நீ மட்டும் தான் உனக்கு தெரியாதா"என அவன் கண்கள் கலங்கி கேட்க ,

அவளும் கலங்கித் தான் போனாள்....


"என் மேல இவ்ளோ பாசம் வச்சிருக்கற உங்க ஒவ்வொருத்தருக்கும் ஏன் தான் எனக்குனு ஒரு மனசு இருக்கு , அதுக்குன்னு ஒரு ஆசை இருக்குனு எதுவுமே புரியமாட்டேங்குது" என மனதில் நினைத்து வருந்தி கொண்டாள்.....


நினைவுகள் பின்னோக்கி செல்ல.....


அப்போது அவளுக்கு 10 வயது பள்ளியில் இருந்து கண்காட்சிக்கு கூட்டி செல்வதற்காக வீட்டில் அனுமதி வாங்கி வர சொல்லி இருந்தனர்...


மாலை சந்தோஷமாக வீட்டிற்கு வந்தவள் வீட்டிற்குள் நுழைந்த உடன் அம்மாவை சென்று கட்டு பிடித்துக் கொண்டு" அம்மா நாளைக்கு ஸ்கூல்ல இருந்து கண்காட்சிக்கு கூட்டிட்டு போறாங்களாமா, காலையில போயிட்டு சாயந்திரம் எப்பயும் போல வீட்டுக்கு வந்துருவேன் ,ஸ்கூல் பஸ்ஸிலேயே கூட்டிட்டு போறாங்களாமா ,ஸ்னாக்ஸ் மட்டும் கொண்டு வர சொன்னாங்க, மதியம் சாப்பாடு அங்கேயே தந்துருவாங்களாமா செம ஜாலி மா" என துள்ளி குதித்து கொண்டிருக்க,


சித்ராவோ"அதெல்லாம் வேணாம் தென்றல் , நீ நாளைக்கு எங்கயும் போக வேணாம், நீ நான் அப்பா மூணு பேரும் நாளைக்கு எங்கேயாவது வெளில போலாம், ஜாலியா இருக்கலாம் ,ஹோட்டல் போலாம் ஐஸ்கிரீம் சாப்பிடலாம் ஓகேவா"என கேட்க,


"அம்மா பிளீஸ் மா என் பிரண்ட்ஸ் கூட ஜாலியா போய்ட்டு வரேன் மா" என கெஞ்சிக் கொண்டிருக்கும் போதே உள்ளே நுழைந்த ராம்,


"என் தங்கம் ஏன் இப்படி கெஞ்சிட்டு இருக்குது " என கேட்க,

சட்டென்று அவர் புறம் திரும்பி "அப்பா அப்பா நாளைக்கு ஸ்கூல்ல எக்ஸிபிஷன் கூட்டிட்டு போறாங்கப்பா நானும் போறேனு சொன்னா அம்மா வேண்டானு சொல்றாங்கப்பா" என கண்கள் கலங்க கேட்க,


"அம்மா சொன்னா சரியா தான்டா இருக்கும், நாளைக்கு நாம மூனு பேரும் சேர்ந்து வெளில போகலாம்,

அங்க எல்லாம் போனா நெறய கூட்டம் இருக்கும் உங்க மிஸ் எத்தனை குழந்தைகளை பாத்துக்க முடியும், நீ எங்கயாவது தொலைஞ்சி போய்ட்டா நானும் அம்மாவும் என்ன பன்னுவோம் சொல்லு" என பாவமாக கேட்க,


"என் பிரண்ட்ஸ் வீட்ல எல்லாம் அனுப்பறாங்கள்ள பா" என கேட்க,

"அவங்களுக்கெல்லாம் அக்கறை இல்லமா ஆனா எங்களுக்கு அப்படியா" நீதானே எங்கள் உலகம்" என கூற,

இவளும் "சரி பா " என தலையை ஆட்டினாள்.....


நினைவுகளை சுமந்தபடி கண்ணோரத்தில் இரு துளிகளுடன் உறங்கி போனாள்....‌


அடுத்தடுத்த நடவடிக்கைகளில் மூவரும் சிறிது கலங்கத்தான் போகிறார்கள் பார்ப்போம்.....

வருவாள்.....
 
அத்தியாயம் 5



வீட்டிற்கு வந்து ஒரு வாரம் கடந்திருந்த நிலையில்,
அழகான ஒரு காலைப் பொழுதில் கையில் செய்தித்தாளுடன் அமர்ந்திருந்தாள் தென்றல்.....



செய்தித்தாளின் வேலை வாய்ப்பு பக்கத்தில் அவளுக்கு பிடித்த வேலைகளை சிறிய காகிதத்தில் குறிப்பு எடுத்துக் கொண்டிருந்தாள்....



தென்றலுக்கு காபி கொண்டு வந்த சித்ரா அதை பார்த்துவிட்டு" ஏங்க இங்க வந்து பாருங்க இவ என்ன பண்ணிட்டு இருக்கான்னு" என சத்தமிட,


திடுக்கிட்டு திரும்பிய தென்றல்" ஏம்மா இப்படி கத்துறீங்க நான் இப்ப என்ன பண்ணிட்டேனு அப்பாவை கூப்பிடுறீங்க" எனக்கேட்க,


" நீயே இப்பதான் கொஞ்சம் கொஞ்சமா தேறிட்டு வர அதுக்குள்ள என்ன வேலை செய்ற" எனக்கு கோபமாக கேட்க,


அதற்குள் அங்கு இராமும் கிரிஷ்ஷும் வந்துவிட்டனர்...


" என்னாச்சு அத்தை ஏன் சத்தம் போட்டீங்க" எனக் கிரிஷ் கேட்க,
" நீங்களே பாருங்க மாப்பிள்ளை உங்க அருமை பொண்டாட்டி பண்ற வேலைய" எனக்கு கோபம் குறையாமல் கூற,


இப்போது தென்றலுக்கு தான் அளவுக்கு அதிகமாக கோபம் வந்தது....


" இப்ப நான் என்ன பண்ணிட்டேன்னு மூணு பேரு இப்படி வந்து நிக்கிறீங்க" எனக் கோபம் குறையாமல் அவர்களை பார்த்து கேட்க,


கேள்வியில் சற்று தடுமாறினாலும்" ஏம்மா உனக்கு இப்போ உடம்பு இருக்கிற நிலைமையில் இதெல்லாம் தேவையா" என ராம் கேட்க,


" ஓ அப்ப நல்லா இருந்தா மட்டும் இதுக்கெல்லாம் நீங்க எல்லாம் அனுமதிச்சிருவீங்களா" என சற்று நக்கலாக கேட்க,



" தென்றல் உனக்கு என்ன ஆச்சு ஏன் இப்படி எல்லாம் பேசுற" என கிரிஷ் சற்று கோபமாக கேட்க,


" என் மேல எந்த தப்பும் இல்ல நீங்க தான் என்ன சுத்தி நின்னு கேள்வி கேட்டுட்டு இருக்கீங்க" எனக் கோபம் குறையாமல் அவளும் பேச,


க்ரிஷ் அமைதியானான்....

" நான் ஒன்னும் இப்பவே வேலைக்கு போகல தேடிட்டு இருக்கேன் நல்ல வேலையா கிடைச்சா போவேன்" எனக்கோபம் தணிந்த குரலில் தென்றல் கூற,


" இப்போ எதுக்கு தென்றல் நீ வேலைக்கு போகணும் உனக்கு உடம்பு சரி இல்லை , அதுவும் இல்லாம நீ வேலைக்கு போகணும்னு எந்த அவசியமும் கிடையாது" எனக் கிரிஷ்ஷீம் பொறுமையாக கூற,


" வேண்டாங்க ஏற்கனவே இந்த பிரச்சனை அதிகமாய்தான் எனக்கு ஆக்சிடென்ட் ஆகிற அளவுக்கு போச்சு" எனக் கூற மூவரும் விக்கித்து நின்றனர்....



" என்ன இந்த பிரச்சனையால் உனக்கு ஆக்சிடென்ட் ஆச்சா" என சித்ராவும் ராமும் ஒருசேர கேட்க,


" ஆமா எனக்கு இதால தான் ஆக்சிடென்ட் ஆச்சு இந்த பிரச்சனையை என் மண்டையில் போட்டு குழப்பினதனாலதான் அந்த பிரச்சனை வந்துச்சு" என உடைந்த குரலில் தென்றல் கூற,


ஆப்ரேஷன் செய்யப்பட்ட இடம் லேசாக வலி எடுக்க அப்படியே உட்கார்ந்து விட்டாள்....


க்ரிஷ் அவளைப் பிடித்துக் கொண்டு "என்னாச்சு தென்றல், என்ன பண்ணுது தலை வலிக்குதா ,என்ன ஆச்சு "என பதற,


" ஒன்னும் இல்ல ஆப்ரேஷன் பண்ண இடத்துல லைட்டா வலிக்குது" எனக் கூற,


பதறிய க்ரிஷ் அப்படியே அவளை தூக்கிக்கொண்டு அவர்கள் அறையில் உள்ள கட்டிலில் படுக்க வைத்தான்....


" டாக்டருக்கு போன் பண்ணவா இல்ல ஹாஸ்பிடல் போலாமா" என பதட்டமாக கேட்க,


" எதுவும் வேண்டாம் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்தா சரியாகிவிடும்" என்ன மெல்லிய குரலில் அவள் கூற,


" சரி தூங்கு நான் இங்கேயே இருக்கேன் என்ன
பண்ணுச்சினாலும் உடனே சொல்லு" எனக் கூறிய கிரிஷ்,
அவள் அருகிலேயே அமர்ந்து அவள் தலையை கோதி உறங்க வைத்துக் கொண்டிருந்தான்.....


உட்கார்ந்திருந்தவனின் மனநிலை ஆக்சிடென்ட் ஆனதற்கு இரண்டு நாளைக்கு முன்பு நடந்த நிகழ்வுகளை சிந்திக்க ஆரம்பித்தது.....


" என்னங்க ஒரு கம்பெனியில எனக்கு ஒரு நல்ல வேலை கிடைச்சிருக்கு ஆன்லைன் இன்டர்வியூ அட்டென்ட் பண்ண அதுல செலக்ட் ஆயிட்டேன் எப்ப வந்து ஜாயின் பண்ணிக்கரீங்கனு கேக்குறாங்க" என உற்சாகத்துடன் தென்றல் கூற,


" என்ன வேலைக்கா? எதுக்கு? நீ வேலைக்கு போகணும்னு இப்ப யார் சொன்னா? உங்க அம்மா அப்பா கிட்ட கேட்டியா? அவங்க உன்ன போனு சொன்னாங்களா? இல்ல என்கிட்ட கேட்டியா? நான் உன்னை போன்னு சொன்னேனா? இப்படி யார்கிட்டயுமே கேட்காம சொல்லாம இன்டர்வியூ அட்டென்ட் பண்ணிட்டு வந்து இன்ஃபர்மேஷன் கொடுக்கிறியா?"
எனக்கு கோபமாக கேட்டதில் அவள் கண்களில் இருந்து கண்ணீர் பெருக்கெடுக்க ஆரம்பித்து இருந்தது.....



" எதுக்கு எடுத்தாலும் அழாத தென்றல்"என கோபம் குறையாமல் கிரிஷ் கேட்க,

" நான் இப்போ உங்க கிட்ட என்ன கேட்டேன் வேலைக்கு செலக்ட் ஆயிருக்கேன் எப்ப ஜாயின் பண்ணிக்கலாம்னு தானே கேட்டேன்" என கண்களில் வழிந்த நீரை துடைத்துக் கொண்டே தென்றல் கேட்க,


" அதான் நான் கேட்கிறேன் உன்னை யார் வேலைக்கு போக சொன்னா நீ வேலைக்கு போகணும்னு என்ன அவசியம் இருக்கு" என கிரிஷ் திரும்பத் திரும்ப அதையே கேட்க,


" பணப் பிரச்சனை இருந்தால் தான் வேலைக்கு போகணுமா , என்னோட சுய அறிவ வளத்துக்கறதுக்காகவும், என்னோட சந்தோஷத்துக்காகவும், என்னோட திறமையை வெளிக் கொண்டு வருவதற்காகவும் நான் வேலைக்கு போகக்கூடாதா" என அழுகையுடன் சேர்ந்த கோபத்த்தில் கேட்க,


" உனக்கு என்ன தென்றல் இப்ப குறைச்சல் பணம் இல்லையா, உனக்கு திறமை இல்லைன்னு யார் சொன்னா இல்ல உனக்கு சந்தோஷம் இல்லையா எல்லாமே இங்கேயே இருக்குதுல்ல அதைத் தேடி நீ ஏன் போய் கஷ்டப்படுற" என கோபம் குறைந்த குரலில் க்ரிஷ் கேட்க,


" நான் சொல்றது உங்களுக்கு புரியுதா இல்லையா, என்ன வீட்டுக்குள்ளயே வச்சு கொடுமை பன்ற மாதிரி இருக்கு" என அழ,


" கொடுமையா உன் நல்லதுக்காக தானே நான் சொல்றேன் நீ ஏன் வெளியில் போய் தேவையில்லாமல் சிரமப்படற அப்படியே உனக்கு ஏதாவது பிடிச்ச வேலை செய்யவில்லை என்றால் நீ வீட்டில் இருந்தே செய்யலாமே" என கிரிஷ் கேட்க,


" வீட்ல இருந்து செய்ற வேலையை வீட்ல இருந்து செய்யலாம் எனக்கு ஆபீஸ் போய் வேலை செய்யணும்னு ஆசையா இருக்கு" எனக் கூற,


" அப்படின்னா உங்க அப்பா அம்மாவுக்கு ஒரு போன் போட்டு தரேன் பேசு பேசிட்டு அவங்க போக சொன்னா நீ போ நான் உன்னை எதுவுமே கேட்கல" என்ன கோபமாக போனை எடுத்து ராம் நம்பருக்கு டயல் செய்ய,


" வேண்டாம் விடுங்க நான் எங்கேயும் போகல இங்கேயே இருக்கிறேன் வீட்டுக்குள்ளே இருக்கிறேன் போதுமா அவங்களுக்கு போன போட்டு அவங்க இன்னும் கொஞ்ச நேரம் இதே அட்வைஸ கொடுப்பாங்க தேவை இல்லை என கொஞ்சம் நிம்மதியா விட்ருங்க" என அழுது கொண்டே தனது அறையை நோக்கி ஓடினாள்....


" ஏன் தென்றல் வேலைக்கு எல்லாம் போறேன்னு சொல்லி என் மனச கஷ்டப்படுத்தற உன்னை எந்த வேலையும் செய்ய விடாம உன்னை பார்த்துக்கத் தான் நான் இருக்கிறேன் நீ ஏன் கஷ்டப்படணும் உனக்கு எந்த கஷ்டமும் வரவிடாம நான் பாத்துப்பேன் நீ எங்கேயும் போய் சிரமப்பட வேண்டாம் வீட்டில் சந்தோஷமா ஜாலியா இரு" என மனதில் கூறிக் கொண்டே ராமிடமும் சித்ராவிடமும் கூற அவர்கள் வீட்டிற்கு சென்றான்.....


" வாங்க மாப்ள என்ன திடீர்னு வந்து இருக்கீங்க" என்ன ராம் கேட்க,


" ஒன்னும் இல்ல மாமா சும்மாதான் இந்த பக்கம் ஒரு வேலையா வந்தேன் அப்படியே உங்களை பார்த்துட்டு போலாம்னு வந்தேன்" எனக் கூற,


" சரிங்க மாப்பிள்ளை உட்காருங்க சித்ரா மாப்பிள்ளைக்கு ஒரு காபி கொண்டு வா மா" என்ன சித்ராவிடம் கூறிவிட்டு,


" தென்றல் என்ன பண்ற மாப்பிள்ளை நல்லா இருக்காளா" எனக் கேட்க,

சிரித்துக் கொண்டே" நேத்து சாயந்திரம் தான மாமா இங்க இருந்து நாங்க வீட்டுக்கு போனோம் அதுக்குள்ள நல்லா இருக்காளா என்று ஒரு கேள்வி"என சிரித்தவன் சட்டென்று யோசனையில் மூழ்க,


" என்னாச்சு மாப்பிள நல்லா பேசிட்டு இருந்தீங்க அப்படியே திடீர்னு ஏதோ யோசனைல மூழ்கிட்டீங்க என்ன ஆச்சு ஏதாவது பிரச்சனையா" என்ன ராம் கேட்க,


" ஆமா மாமா கொஞ்சம் பிரச்சனை தான்" எனக் கூறியவுடன் சமையல் அறையில் இருந்து வெளிவந்த சித்ரா" என்ன பிரச்சனை மாப்ள தென்றல் நல்லா இருக்கா இல்ல அவளுக்கு ஒன்னும் இல்லையே" என பதற,


" பதறாதீங்க அத்தை அவளுக்கு உடம்புக்கு எல்லாம் ஒன்னும் இல்ல வேலைக்கு போகணும்னு சொல்றா" எனக் கூறிய உடன்,

இருவரின் முகமும் மாறியது....

" வேலைக்கு போகணும்னு சொல்றாளாம் ஏன் மாப்ள ஏதும் பணப்பிரச்சினை ஏதாவது இருக்கா" என ராம் கேட்க,


" ஏன் மாமா நீங்க வேற அதெல்லாம் எந்த பிரச்சனையும் இல்ல, அவளுக்கு வேலைக்கு போகனும்னு ஆசையாமா"என கிரிஷ் கூற,


" அதெல்லாம் எங்கயும் போக வேண்டாம் மாப்பிள்ளை. அவ கெடக்குறா அவ அது இதுனு ஏதாவது ஒன்னு கேட்டுக்கிட்டே தான் இருப்பா சும்மாவே இருக்க மாட்டா நாங்க அவளை எல்லாம் எங்கேயும் வெளில அனுப்புனதே இல்லை மாப்பிள்ளை நீங்க எதுவும் அவளுக்கு பர்மிஷன் கொடுத்திராதீங்க" என சித்ரா கூற,


"எனக்கு தெரியாதா அத்தை நான் எப்படி அவளுக்கு பர்மிஷன் கொடுப்பேன் நீங்க அவள பாத்துக்கிட்டதை விட நான் அவளை கண்ணுக்குள்ள வச்சு பாத்துகிட்டு இருக்கேன் அவள கஷ்டப்பட நான் எப்பயுமே விட மாட்டேன் ஏதோ ஒரு ஆர்வத்துல பேசுறா வேலைக்கு போனா அதுல இருக்குற கஷ்டம் என்னன்னு வேலை செய்ற எனக்கு தான் தெரியும்" என அவன் கூற,


" அவ சின்ன புள்ள மாப்பிள்ளை ஆர்வக்கோளாறுல எதையாவது ஒன்னு சொல்லிட்டு இருப்பா அதெல்லாம் நீங்க கண்டுக்காதீங்க இரண்டு நாள் கோவமா இருப்பா அதுக்கு அப்புறம் சரியாயிடுவா" என இருவரும் கூட சரி என்று தலையாட்டியவன் வீட்டிற்கு கிளம்பி சென்றான்.....


காலையில் இவன் வெளியில் செல்லும்போது வீடு எப்படி இருந்தது எதுவும் எடுத்து வைக்கப்படாமல் அப்படியே இருந்தது....


" ஐயோ பயங்கர கோவமா இருக்கா போல இருக்கே என் செல்லத்தை எப்படி சரி பண்றதுன்னு தெரியலையே சரி போய் பேசி பார்ப்போம்" என் மனதில் கூறிக் கொண்டே அறைக்குள் சென்றான்....


அழுது அழுது சோர்ந்து போய் உறங்கிக் கொண்டிருந்தாள் தென்றல்....


அவளை அள்ளி மடியில் கிடத்தியவன்" ஏண்டி இப்படி சின்ன குழந்தை மாதிரி ரகளை பண்ற வேலைக்கு போறதெல்லாம் கஷ்டமா உனக்கு அதெல்லாம் வேண்டாம் செல்லம் உன்னை ராணி மாதிரி பார்த்துக் கொள்வதற்கு நான் இருக்கேன் நீ ஏன் தேவையில்லாம இந்த கஷ்டத்தை எல்லாம் எடுத்து தலையில் போட்டுக்கற" எனக் கூறிக் கொண்டே தலையை வருடினான்.....


அவன் தொடுகளில் உறக்கம் கலைந்த தென்றல் சற்றென்று அவனை விட்டு விலகி தூரச் சென்றாள்....


" ஏம்மா என் மேல இன்னும் கோவம் குறையலையா உனக்கு" எனப் பாவமாக கேட்க,

" எனக்கு யார் மேலயும் கோவம் இல்ல தயவு செஞ்சு யாரும் என்கிட்ட பேசவும் வேண்டும்" என்ன கோபமாக கூறிவிட்டு வீட்டை ஒழுங்குபடுத்தும் வேலைக்கு சென்று விட்டாள்....


அந்த இரண்டு நாட்களும் இப்படியே தான் கடந்தன.....


விபத்து நடந்த அன்று காலை அருகில் இருக்கும் கடைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றாள்.....


" எங்க பக்கத்துல கடை வரைக்கும் போயிட்டு வரேன் தேடாதீங்க" எனக் கூற,

" ஏம்மா தனியா போற
நான் வண்டியில கூட்டிட்டு போறேன் இரு" எனக் கூற,


" நான் ஒன்னும் சின்ன குழந்தை கிடையாது என்னை யாரும் கடத்திட்டு போக மாட்டாங்க பக்கத்துல இருக்குற கடைக்கு தான் போறேன்" எனக் கோபமாக கூறியவுடன்,


கிரிஷ்" சரி சரி இப்ப என்ன சொல்லி தானே கோபப்படுற நீயே போயிட்டு வா நான் வரல" என அனுப்பி வைத்தான்.....


" இந்த பிரச்சினையால தான் எனக்கு ஆக்சிடென்ட் ஆச்சு" என அவள் கூறியது இவன் காதுகளில் ஒலிக்க,


நிகழ்காலத்திற்கு திரும்பினான்....


அப்போ அந்த சம்பவம் இந்த அளவுக்கு பாதிச்சிருக்கா தென்றல்...


என யோசிக்க யோசிக்க அவனுக்கு பைத்தியம் பிடித்து விடும் போல் இருந்தது.....



வருவாள்.......
 
அத்தியாயம் 6


அடுத்த நாள் பொழுது சிறிது மந்தமாகவே புலர்ந்தது அனைவருக்கும்....

சித்ரா காலையில் எழுந்து காபி போட்டு ராமிற்க்கும் கிருஷ்ஷிற்கும் கொடுத்துவிட்டு தென்றல் அறைக்கு சென்றாள் ,
அங்கே தென்றல் இன்னும் உறங்கிக் கொண்டிருந்ததால் காப்பியை அருகில் இருந்த டேபிள் மீது வைத்து விட்டு வெளியே வந்தாள்....



வந்தவள் காலை டிபன் வேலையை முடித்துவிட்டு அனைவரையும் சாப்பிட அழைத்தாள்....


ராம் க்ரிஷ் இருவரும் உணவருந்தி கொண்டே தென்றலை பற்றிய பேச்சை ஆரம்பித்தனர்....


" ஏ மாப்ள அந்த வேலை விஷயம் தென்றல இந்த அளவுக்கு பாதிச்சிருக்கும்ன்னு நாம நினைக்கவே இல்லை இல்ல அவள் எழுந்து வரட்டும் அவளுக்கு என்ன பிடிக்குது என்ன வேணும்னு கேட்போம்,

அவ வேலைக்கு போகணும்னு சொன்னானா நமக்கு தெரிஞ்ச ஏதாவது ஒரு நல்ல இடத்துல கொஞ்ச நாள் போய் செஞ்சு பார்க்கட்டும்" எனக் கூற,


" சரிங்க மாமா" எனக் கூறினாலும் அவன் மனதிற்கு ஏனோ விருப்பம் இல்லாமலே இருந்தது....


" அத்தை இன்னைக்கு எனக்கு ஆபீஸ்ல ஒரு மீட்டிங் இருக்கு அதனால நான் கிளம்புறேன் தென்றல் எந்திரிச்சா பாத்துக்கோங்க நான் சாயந்திரம் சீக்கிரமா வந்துடுறேன்" எனக் கூறிக்கொண்டு அலுவலகம் சென்றான்....


ராமும் தன் நண்பரை பார்க்க செல்வதாக கூறி வெளியில் சென்று விட்டார்....


சிறிது நேரம் கழித்து வெளியே வந்த தென்றல் சித்ராவை அழைத்த வண்ணமே" மா என்னன்னு தெரியல தல ரொம்ப சுத்துது கிறு கிறுன்னு வர மாதிரி இருக்கு" எனக் கூற,


சித்ரா பதறி போய் " என்னமா ஆச்சு அப்பாவுக்கு போன் பண்ணட்டா, இல்லன்னா மாப்பிள்ளை ஆபீஸ்ல இருந்து வர சொல்லவா" என பதட்டமாக கேட்க,


" மா முதல்ல பதறாதீங்க கிறுகிறுன்னு இருக்கு வேற ஒன்னும் இல்ல நம்ம ரெண்டு பேர் மட்டும் ஹாஸ்பிடல் போய் பாத்துட்டு வரலாம் வரீங்களா" எனக் கேட்க,


"அப்பாவுக்காவது போன் போடவா " என கேட்க ,


"வேணாம் மா நாம போலாம் வாங்க" என கூறி சித்ராவை அழைத்து கொண்டு மருத்துவமனை சென்றாள்....


வரவேற்பறையில் சென்று பெயர் கொடுத்து விட்டு இருவரும் தங்கள் வரிசை வரும் வரை காத்திருந்தனர்....


"தென்றல் பேசன்ட் வாங்க" என நர்ஸ் அழைக்க,


இருவரும் எழுந்து மருத்துவர் அறைக்கு செஈனறனர்...


தென்றலுக்கு விபத்து ஏற்பட்ட போது அனுமதிக்கப்பட்டிருந்த
அதே மருத்துவமனை ஆதலால் மருத்துவர் நன்கு முகத்தை நியாபகம் வைத்திருந்தார்‌....


இவர்கள் உள்ளே சென்றவுடன்"வாங்க தென்றல் எப்படி இருக்கிங்க , உடம்பு பரவால்லையா,என்ன பிரச்சனை என கேட்க,


"தலைசுத்துதுனு சொல்றா டாக்டர்
தலைல ஆப்ரேஷன் பன்னி இருக்கறது ஏதாவது தொந்தரவு ஆயிருக்குமோ" என கூற,


டாக்டர் சிறிய புன்னகையுடன்" அதனால எந்த பிரச்சனையும் வராதுங்க பாக்கறேன் இருங்க" என உள்ளிருந்த தனி அறைக்குள் தென்றலை அழைத்து சென்றனர்...


சிறிது நேரம் கழித்து வெளியே வந்த டாக்டர் சித்ராவிடம் "ஒன்னும் பயப்பட தேவை இல்ல உங்க பொண்ணு அம்மா ஆகப் போறாங்க" எனக் கூறியவுடன்,


சித்ராவிற்கு தலை கால் புரியவில்லை...


"ரொம்ப சந்தோசம் டாக்டர் ரொம்ப நன்றி இப்படி ஒரு சந்தோசமான சேதி சொல்லி இருக்கிங்க" என சந்தோசத்தில் பிதற்றி கொண்டிருக்கும் போதே தென்றல் அறையிலிருந்து வெளியே வந்தாள்...


அவளை பார்த்த உடன் அவளை அள்ளி அனைத்துக் கொண்டாள் சித்ரா...
"தென்றல் நீ அம்மாவாகப் போற நான் பாட்டியாகப் போறேன்" என சொல்லி சந்தோசத்தில் குதிக்க,


இந்த சேதியை கேட்டவுடன் தென்றலுக்கும் அளவுகடந்த சந்தோசம்..


டாக்டர் இருவரையும் பார்த்து "ரொம்ப சந்தோசம் மா , ஆனா இவங்க ரொம்ப வீக்கா இருக்காங்க அதனால ரொம்ப ஜாக்கிரதையா பாத்துக்கனும், சில மாத்திரை எல்லாம் எழுதி தரேன் அதெல்லாம் கரெக்ட்டா சாப்பிடுங்க,



அடுத்த மாசம் செக்கப் வந்தா போதும்" என கூறி மருந்துச்சீட்டை கையில் கொடுத்தார்....



அதை வாங்கிக் கொண்ட சித்ரா மீண்டும் ஒருமுறை டாக்டருக்கு நன்றி கூறிவிட்டு தென்றலை அழைத்துக் கொண்டு மருத்துவமனை விட்டு வெளியே வந்தார்.....



" மா இந்த விஷயத்தை அவர்கிட்ட நீங்க சொல்ல வேண்டாம் நானே சொல்றேன்" எனக்கு தென்றல் கூற,



"ஏன்மா அப்பாக்கிட்டயும் மாப்பிள்ளைகிட்டயும் போன் பன்னி இந்த சந்தோஷமான விஷயத்தை நானே சொல்றேனே" என கெஞ்ச,



" இல்லம்மா இந்த விஷயத்தை நான் தான் அவர் கிட்ட சொல்லுவேன் அவர் ரொம்ப நாளா எதிர்பார்த்து காத்துட்டு இருந்த சந்தோஷமான சேதி இது"என கூற
சரியென கூறிவிட்டாள் சித்ரா....



வரும் வழியில் தென்றலின் தோழி ஒருத்தியை பார்த்தனர்....



" ஏய் தென்றல் எப்படி இருக்க பார்த்து ரொம்ப நாளாச்சு என்ன பண்ற இப்போ வேலைக்கு போறியா" எனக் கேட்க,



" இல்லம்மா தென்றல் வீட்லதான் இருக்கா இப்பதான் மாசமா இருக்கான்னு தெரிஞ்சது நீ எப்படி இருக்க"என சித்ரா நலம் விசாரிக்க,



" நான் நல்லா இருக்கேன் மா கல்யாணம் ஆகி ரெண்டு குழந்தை இருக்கு"என அவளும் மகிழ்ச்சியுடன் தெரிவிக்க,



"ஏய் ரெண்டு குழந்தை இருக்கா சொல்லவே இல்ல " என தென்றல் பொய்யாக கோபம் கொள்ள,



" ஏண்டி நீ வேற கல்யாணம் ஆகி ஒரு வருஷம் குழந்தை இல்லை சரி வேலைக்கு போகலாம்னு நெனச்ச போது வயித்துல முதல் குழந்தை, வீட்ல எல்லாரும் குழந்தை பிறந்ததுக்கு அப்புறம் போய்க்கலாம்னு சொல்லிட்டாங்க, குழந்தை பிறந்ததுக்கு அப்புறம் நாம எங்கிருந்து வேலைக்கு போறது குழந்தையை பார்த்துகரத்துக்கே நேரம் சரியா போயிடும் ரெண்டு வருஷத்துல திரும்பி இன்னொரு குழந்தை இதுக்கப்புறம் அவங்கள ஸ்கூலுக்கு அனுப்பிட்டு தான் வேலைக்கு போறத பத்தி நான் யோசிக்க முடியும்" என வேதனையுடன் கூறினாள்...



" ஆமாமா கல்யாணம் ஆயிட்டா எல்லாரும் அப்படித்தான் முதல்ல குழந்தைய தான் நம்ப பார்த்தாகணும் அதுக்கு அப்புறம் தானே நம்ம வேலையெல்லாம் பார்க்க முடியும்"என சித்ரா கூற,



தென்றல் சித்ராவை நோக்கி முறைக்க "சரி மா ரொம்ப நேரம் வெளில நிக்க வேணாம் டாக்டர் ரெஸ்ட் எடுக்க சொன்னாங்கல்ல வா போவோம் " என சித்ரா தென்றலிடம் கூற,



"சரிடி நீ கெளம்பு வாழ்த்துகள் குழந்தை பிறந்த உடனே கண்டிப்பா கால் பன்னு " என கூறி விடைப்பெற்றுக் கொண்டாள்...



தோழி சொன்னதை மனதில் அசைப்போட்டுக்கொண்டே வீடு சென்றாள் தென்றல்.....



வீட்டிற்க்குள் நுழையும் போதே ராம் வீட்டில் இருந்தார்...



"எங்க போய்ட்டிங்க ரெண்டு பேரும் போன் கூட எடுக்கல"என கேட்க,



" அவளுக்கு தலை சுத்துச்சுனு சொன்னா அதா ஹாஸ்பிட்டல் போய்ட்டு வந்தோம்"என சித்ரா கூற,



"ஐய்யோ என்ன ஆச்சி மா ஏன் ஒரு போன் கூட போடல டாக்டர் என்ன சொன்னாங்க" எனப் பதற,



" டாக்டர் நீங்க தாத்தா ஆகப்போறீங்கன்னு சொன்னாங்க" எனக் கூறி சித்ரா சிரித்தாள்...



என்ன என்று ஒரு நிமிடம் திரு திருவென விழித்த ராம் சட்டென சுதாரித்து " சித்ரா நெஜமாவா சொல்றதென்றல் முழுகாம இருக்காளா"என சந்தோசம் பொங்க கேட்க,



"ஆமாங்க டாக்டர் கன்பார்ம் பன்னி சொல்லிட்டாங்க" என கூற,



மகளின் கன்னத்தை அள்ளி நெற்றியில் முத்தமிட்டார்....



தென்றலுக்கோ வெட்கம் வர அறைக்குள் சென்று கதவடைத்து கொண்டாள்....



" சித்ரா மாப்பிள்ளை கிட்ட சொன்னியா இல்ல நான் போன் பண்ணி சொல்லவா" என்ன ராம் கேட்க,



" நானும் சொல்லல நீங்களும் சொல்ல வேண்டாம் அது அவளே மாப்பிள்ளை கிட்ட சொல்றாளாம் நம்மல சொல்ல வேணானு சொல்லிட்டா"என சித்ரா கூற,



"ஓஓஓ அப்படியா சரிவிடு எப்படியோ அவங்களுக்குள்ள இப்ப இருக்கற இந்த சின்ன மனக்கசப்பு இப்போ சரியாகிடும்...என ராம் கூற, சித்ராவும் " ஆமாங்க சரிதான் இனி அவ வேலைக்கு போற எண்ணமும் அவளுக்கு வராது"என கூறிவிட்டு இனிப்பு செய்ய சமையலறைக்குள் நுழைந்தார்....



மாலை 6 மணி அளவில் கிரிஷ் வீட்டிற்குள் நுழைந்தான்....



" அத்தை தென்றல் எழுந்து வந்தாளா சாப்பிட்டாளா இப்ப எப்படி இருக்கா" என்ன கேள்விகளை அடுக்க,



" நீங்களே போய் பாருங்க மாப்பிள்ளை அவளை,"என கூறிவிட்டு சோபாவில் அமர்ந்தார்....



சரியென்று அறைக்குள் நுழைந்தவன் அறைகதவை திறந்தவுடன் அறை முழுவதும் இருட்டாக இருந்தது. ....



"தென்றல் எங்க இருக்க ஏன் இருட்டா இருக்கு " என கேட்டுக்கொண்டே லைட்டை போட்டவனின் கண்ணில்
தென்பட்டது அரை சுவர் உயரத்தில் இருந்த தென்றலின் ஸ்கேன் செய்தப் படம் அவர்களின் குழந்தையின் முதல் புகைப்படம் சிறியதொரு முட்டை வடிவில் அவர்களின் சிறிய உயிர்,அதன் பக்கத்தில் முகம் முழுக்க வெட்கத்தை பூசிக்கொண்டு நின்றாள் தென்றல்...



கண்டவனின் கண்களில் ஆனந்த கண்ணீர் ஊற்றெடுக்க அப்படியே அவள் அருகில் சென்று மண்டியிட்டு அவள் வயிற்றில் தன் கையை கொண்டு மெதுவாக வருடி தன் குழந்தைக்கான முதல் முத்தத்தை கொடுத்து விட்டு அப்படியே தரையில் உட்கார்ந்து அழ ஆரம்பித்து விட்டான்....



பதறிய தென்றல் அவனை அள்ளி எடுத்து கட்டி அணைத்து நீங்க அப்பா ஆகி இருக்குறீங்க க்ரிஷ் எனக் கூற,



பதிலுக்கு அவனும் அவளை அணைத்து கண்ணீர் சிந்திய நிலையிலேயே சில நிமிடங்கள் கழிந்தன.....



"" ரொம்ப சந்தோஷமா இருக்குது தென்றல் என்னால இதை நம்பவே முடியல நிறைய பேருக்கு இது ஒரு சாதாரண விஷயமா இருக்கலாம் கல்யாணம் ஆனா குழந்தை பிறக்கிறது ஆனால் என்ன மாதிரி அப்பா அம்மா இல்லாம வாழ்ந்த குழந்தைகளுக்கு இது எவ்வளவு பெரிய வரம் தெரியுமா""என கூற,



அவன் அன்பில் நெகிழ்ந்த தென்றல்" எனக்கு தெரியும் இது உங்களுக்கு எவ்வளவு பெரிய சந்தோஷமான செய்தினு அதனால தான் வீட்ல யார்கிட்டயும் உங்க கிட்ட சொல்ல வேணாம் நானே சொல்றேன்னு சொன்னேன்"என புன்னகையுடன் கூற,



"" எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்குது தென்றல் இதை எப்படி வெளிப்படுத்துவது என்று எனக்கு தெரியல""என சந்தோசத்தில் குதிக்க,



சித்ரா ராம் இருவரும் அறைக்குள் நுழைந்து" வாழ்த்துக்கள் மாப்பிள்ளை தென்றல் தான் அவளே உங்க கிட்ட சொல்றேன்னு சொல்லிட்டா இல்லையென்றால் நாங்கள் மதியமே சொல்லி இருப்போம் டாக்டர் செக் பண்ணி பார்த்தாங்க குழந்தை நல்லா இருக்குன்னு சொன்னாங்க அவதான் கொஞ்சம் வீக்கா இருக்காலாம் அவள மட்டும் ஜாக்கிரதையா பாத்துக்க சொன்னாங்க, இருங்க நான் போய் ஸ்வீட் எடுத்துட்டு வரேன் "என கூறிவிட்டு சித்ரா சமையல் அறைக்கு சென்று விட்டார்....



இருவருக்கும் வாழ்த்துகள் கூறிய ராம் அவர்களுக்கு இப்போது தனிமை தேவை என உணர்ந்து ஹாலுக்கு சென்று விட்டார்...



அவர் சென்ற பின் மீண்டும் கிரிஷ் அவளை கைகளில் ஏந்தி கொண்டு " இனிமே நான் உன்ன எப்படி பாத்துகறேன்னு பாரு உன் பாதம் கூட தரையில் பட விடமாட்டேன்"எனக் கூறி அவள் நெற்றியில் வாஞ்சையாய் முத்தமிட,,



அவளுக்கும் உள்ளுக்குள் மிகுந்த மகிழ்ச்சி அவன் திருமணம் ஆன உடன் இவளிடம் விரும்பி கேட்டது குழந்தை மட்டுமே, அது ஒரு வருடம் கழித்து தான் நிறைவேறியது....



இதில் அவனுக்கு எவ்வளவு மகிழ்ச்சி இருக்கும் என முன்கூட்டியே உணர்ந்ததால் தான் தான் இந்த நற்செய்தியை அவனிடம் சொல்ல விரும்பினாள்.....



"தென்றல் நமக்கு பொறக்க போற குழந்தைய எந்த குறையும் இல்லாம வளக்கனும் அதுக்கு என்னவெல்லாம் வேண்டுமோ எல்லாத்தையும் செய்யனும் " என சந்தோசத்தில் பிதற்றி கொண்டிருந்தவனை புன்னகையுடன் ரசித்து கொண்டிருந்தாள்....



"தென்றல் நா மறந்தே போய்ட்டேன் இவ்ளோ பெரிய சந்தோசத்த எனக்கு கொடுத்த உனக்கு நான் எதாவது செய்யனுமே,
சொல்லு உனக்கு என்ன வேணும்னு என்ன வேணும்னாலும் நா வாங்கி தரேன்" என அவள் கைகளை பற்றிக் கொண்டு கேட்க,

அவளோ இந்த கேள்வியை எதிர்பார்த்து இருந்தது போல் "" நான் என்ன கேட்டாலும் செய்வீங்களா மாட்டேன்னு சொல்லமாட்டிங்கள்ள "என கேட்க,

"" நீ என்ன வேணும்னு மட்டும் சொல்லு "" என அவள் கைகளை பிடித்துக் கொண்டே கேட்டான்....


"" நான் வேலைக்கு போகட்டா கிரிஷ்"" எனக்கு தென்றல் கேட்டவுடன் அவள் கை இவன் கைகளில் இருந்து நழுவியது........


வருவாள்.......
 
" நான் வேலைக்கு போகட்டா"என்ற கேள்வியில் சற்று தடுமாறியவன்,



இவளை எந்த விதத்திலும் கவலைப்பட வைக்க கூடாது என எண்ணி" கண்டிப்பா நீ வேலைக்கு போகலாம் ஆனா இப்போ இல்ல குழந்தை பிறந்து குழந்தைக்கு ஒரு வயசு ஆனதுக்கு அப்புறம் நீ தாராளமா வேலைக்கு போ" எனக் கூறினான்....



"அதுக்கு இன்னும் இரண்டு வருஷம் ஆகிடுமே நான் வேணும்னா ஒரு மூனு மாசம் கழிச்சி போகவா" என கேட்க,



இவளை சமாளிப்பது சற்று சிரமம் என தெரிந்து "இப்போ தான் டாக்டர் உன்ன ரொம்ப ஜாக்கிரதையா இருக்க சொல்லிருக்காங்கள்ள வேலைக்கெல்லாம் போனா ஸ்ரெஸ் ஆகும் அலைச்சல் ஆகும் , உனக்கே இந்த அலைச்சல் வேண்டானு நாங்க நெனச்சா நீ குழந்தைக்கும் சேத்து கேக்கறீயேமா" என கொஞ்சியபடி கூற,



"மாசமா இருக்கும் போது கூட நெறய பேர் வேலைக்கு போறாங்கள்ள" என பாவமாய் கூற,



இதற்கு மேல் இவளை சமாளிக்க முடியாது என நினைத்து " நா ஒன்னு சொன்னா கேட்பியா" என கேட்க,



"சொல்லுங்க" என அவளும் ஆவலாக கேட்க,



"" நீ வேணும்னா உன்னோட மேல்படிப்ப படியேன்" எனக் கூற,



இரண்டு நிமிடம் யோசித்தவள்"அதுவும் சரிதான் படிச்சா இன்னும் நல்ல வேலை கிடைக்கும், படிச்ச உடனே போக கூடாதுனு சொல்லமாட்டிங்கள்ள " என கேட்க,



" கண்டிப்பா போக வேணாம்னு சொல்ல மாட்டோம் சரியா அத்தை மாமா கிட்ட நானே சொல்லிறேன் நீ படிக்க போற அந்த நல்ல விஷயத்தை" எனக் கூறிய அவள் நெற்றியில் ஒரு முத்தத்தை தந்து விட்டு வெளியில் சென்றான்....



சென்றவன் சித்ராவையும் ராமையும் அழைத்து "அத்தை , மாமா தென்றல் அவளோட மேல்படிப்ப படிக்க போறா ", என கூற இருவருக்கும் மிகுந்த மகிழ்ச்சி....



" அப்போ அவ வேலைக்கு போகலனு சொல்லிட்டாளா" என சித்ரா கேட்க,



"இதையும் படிச்சிட்டு இன்னும் நல்ல வேலைக்கு போலானு முடிவெடுத்து இருக்கேன்" என அறை கதவில் சாய்ந்தவாறு நின்று தென்றல் கூறினாள்...



"சரி மா உன் விருப்பம்" என ராம் கூற,



" மாப்ள அப்புறம் இன்னொரு விஷயம் தென்றல வேற நல்லா கவனிச்சுக்க சொல்லி இருக்காங்க நீங்க குழந்தை பிறக்கிற வரைக்கும் அந்த வீட்டுக்கு போக வேண்டாம் இங்கேயே இருந்திருங்க" என ராம் கூற,



" நான் அதை ஏற்கனவே முடிவு பண்ணிட்டேன் மாமா நீங்க கவலைப்படாதீங்க"என கிரிஷ் கூறினான்....



எப்படியோ அனைவருக்கும் மகிழ்ச்சி தான்...



பொதுவாகவே அவளை விழுந்து விழுந்து கவனிக்கும் அவளது குடும்பம் அவளது பேறு காலத்தில் சொல்லவா வேண்டும்...



நாட்கள் மெல்ல மெல்ல நகர்ந்து ஏழாம் மாதத்திற்கு சென்றது ....



வளைகாப்பு ஏழாம் மாதமே வைத்துக்கொள்வோம் என ஒருமனதாக முடிவெடுத்து அதற்கான ஏற்பாடுகள் தொடங்கின....



அவளது படிப்பும் தடையில்லாமல் போய்க் கொண்டிருந்தது....



ஏழாம் மாதம் வளைக்காப்பு அன்று காலை வீடு முழுவதும் அலங்கரிக்கப்பட்டு உறவினர்கள், கூட வீடே கோலாகலமாய் இருந்தது..



பட்டாடை உடுத்தி ஆபரணங்கள் அணிந்து தேவதை போல வந்தமர்ந்தாள் தென்றல்...



அனைவரும் நலங்கு வைக்க கர்ப்காலத்திற்குரிய முகப்பூசலில் மஞ்சளும் குங்குமமும் கலந்து முகம் பிரகாசிக்க பார்ப்பவர்கள் அனைவரின் கண்களும் தென்றல் மீதே நின்றது..



கிரிஷ் கதோவோரத்தில் வேலைகளைப் பார்த்து கொண்டே தன்னவளையும் ரசித்து கொண்டிருந்தான்...



வளைகாப்பு முடிந்து அனைவரும் உணவருந்தி விட்டு தென்றலை வாழ்த்தி வணங்கி சென்றனர்...



மருத்துவமனை பரிசோதனைகள், கோவில் வேண்டுதல், மாலை நேர வாக்கிங், குடும்பத்தினரோடு உரையாடல், படிப்பு என அனைத்தும் சிறப்பாக நடைபெற பிரசவ காலம் வந்தது...



ஒரு வெள்ளிக்கிழமை மாலை தென்றலும் சித்தராவும் அருகிலுள்ள கோவிலுக்கு அப்படியே வாக்கிங் போல நடந்து சென்று அம்மனை தரிசித்து விட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர்...



வரும்போதே தென்றலுக்கு சிறியதாக வலி தோன்றியது...



சரி பிரசவ காலத்தில் இதெல்லாம் அவ்வபோது வரும் என எண்ணி விட்டு விட்டாள்...



இரவு உணவை சிரமப்பட்டு உண்டவள் அறைக்கு சென்று தூங்கலாம் என படுத்தவுடன் வலி நன்றாக எடுக்க ஆரம்பித்தது...



"கிரிஷ் கிரிஷ் ரொம்ப வலிக்குது கிரிஷ்" என அவள் சத்தமிட்டதை அப்போது தான் அறைக்குள் நுழைந்த கிரிஷ் பார்த்து பதறியடித்து அவள் அருகில் வந்தவன்,



"அம்மு என்னாச்சு அம்மு பெயின் எடுத்துக்கிச்சா , இருடா இரண்டு நிமிஷம் ஹாஸ்பிட்டல் போய்டலாம்" என அவளை கைகளில் ஏந்திக் கொண்டு,



"அத்தை , மாமா , கொஞ்சம் சீக்கிரம் வாங்க , தென்றலுக்கு வலி எடுத்துக்கிச்சி சீக்கிரம் ஹாஸ்பிட்டல் போகனும்" என கத்திக் கொண்டே வர,



இருவரும் பதறியடித்து கொண்டு வந்தனர்..



அவளுக்கு பிரசவகாலம் அருகில் வந்தவுடனேயே ஹாஸ்பிட்டலுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் அனைத்தையும் தயாராக வைத்திருந்தனர்...



அத்தனையும் எடுத்துக்கொண்டு நால்வரும் மருத்துவமனைக்கு சென்றனர்...



மருத்துவமனை சென்றவுடன் தென்றலை பரிசோதித்த டாக்டர் "அவங்களுக்கு ப்ரஷர் ஹையா இருக்கறதால நார்மல் டெலிவரி பன்னா அது அவங்க உயிருக்கே ஆபத்தாய்டும் " என கூற,



மூவரும் அதிரச்சியின் உச்சத்துக்கே சென்றனர்...



கிரிஷ் பித்து பிடித்தவன் போல் நின்றான்...



"டாக்டர் ப்ளீஸ் என் தென்றல யும் குழந்தையையும் நல்லாபடியா என்கிட்ட மீட்டு குடுத்துருங்க " என கண்களில் நீர் கசிய கேட்ட கிரிஷை பார்த்து , சித்ராவும் , ராமும் வருத்தத்துடனும் பரிதாபத்துடனும் பார்த்தனர்...



டாக்டர் மூவரையும் பார்த்து " நார்மல் டெலிவரி தான் பன்ன முடியாதுனு சொன்னேன், ஆனா சிசேரியன் பன்னி அம்மா குழந்தை இரண்டு பேரையும் பத்திரமா காப்பாத்திரலாம்" எனக் கூற,



சிசேரியன் என்ற வார்த்தையில் பயந்தாலும் இது தான் வழி என்கிற போது வேறு வழி இல்லாமல் சம்மதம் தெரிவித்தனர்...



"" ஆப்பரேஷன் டாக்டர் மார்னிங் தான் வருவாங்க இப்போ வலி நிறுத்த இன்ஜெக்ஷன் போடறோம், மார்னிங் ஆப்பரேஷன் பன்னிடலாம்" என கிரிஷ்ஷிடம் கூறிவிட்டு,



"சிஸ்டர் அந்த பேஷன்ட்க்கு இன்ஜெக்ஷன் போட்டு ரெஸ்ட் எடுக்க சொல்லுங்க நா மார்னிங் வரேன்" என கூற சென்றுவிட்டார்....



செவிலியர் தென்றலுக்கு ஊசியை செலுத்தி விட்டு அறைக்கு கொண்டு வந்து படுக்க வைத்து விட்டு"எதாவது தேவைனா கூப்பிடுங்க மா நா வெளில தான் இருப்பேன், அப்பறம் நைட்ல ஜென்ட்ஸ் நாட் அலோடு நீங்க மட்டும் இருங்க போதும்" என சித்தராவிடம் கூறிவிட்டு சென்றுவிட்டார்...



கிரிஷ் சிறிது நேரம் தென்றலுடன் இருக்க அனுமதி வாங்கி அறைக்குள் சென்றான்...



தென்றல் தூக்கம் வராமல் படுத்திருக்க அவள் அருகில் சென்றவன்"என்னாச்சி அம்மு தூக்கம் வரலயா வலிக்குதா டாக்கடர கூப்பிடவா"என கேட்க,



அவனை அருகில் அழைத்தவள் மெல்ல எழுந்து அவனை கட்டிலில் அமர வைத்து அவன் மார்பில் சாய்ந்து "எனக்கு நல்ல படியா பாப்பா பொறந்துரும்ல,
இந்த ஆப்பரைஷன்ல எனக்கு ஒன்னும் ஆகாதுல்ல" என அவள் கேட்க்கும் போதே அவள் கண்களில் இருந்து சிந்திய கண்ணீர் துளிகள் அவன் மார்பில் பட்டு உருண்டது....



பதறிய கிரிஷ் "லூசு பாப்பா என்ன நீ இப்படி எல்லாம் பேசற ,அதெல்லாம் ஒன்னும் ஆகாது , நாளைக்கு இந்த நேரம் நம்ம பாப்பாவ நாம ரெண்டு பேரும் சேர்ந்து கொஞ்சிக்கிட்டு இருப்போம்" என அவன் மனதில் இருந்த பயத்தை மறைத்து அவளுக்கே தைரியம் சொல்லி உறங்க வைத்தான்.....

அவள் உறங்கியதை உறுதிப்படுத்தி கொண்டு அறையை விட்டு வெளியேறினான்...


வெளியில் சித்ராவிடம் "பாத்துக்கோங்க அத்தை வீட்ல இருந்து என்ன வேணும்னு சொல்லுங்க நான் காலைல கொண்டு வந்தரேன்" என கூறி தேவையானதை கேட்டுக்கொண்டு ராமும், கிரிஷ்ஷும் வீட்டிற்க்கு சென்றனர்...


அடுத்த நாள் பொழுது அனைவருக்கும் மகிழ்ச்சி மற்றும் பயம் கலந்த பொழுதாகவே புலர்ந்தது...


கிரிஷ்ஷும் ராமும் 6 மணிக்கெல்லாம் கோவிலுக்கு சென்று அந்த சென்னிமலை முருகனை வழிப்பட்டு விட்டு மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தனர்...


வரும்போதே பிளாஸ்க்கில் டீ வாங்கி வந்திருந்தனர்...


தென்றலுக்கு ஆபரேஷன் நடைபெற இருப்பதால் அவளுக்கு எதுவும் தர வேண்டாம் என்று செவிலியர் ஏற்கனவே கூறியிருந்தார்....


ஆறு முப்பது மணி அளவில் அந்த செவிலியர் தென்றலை அறுவை சிகிச்சைக்கு தயார் செய்தார்....


அவளுக்கு வேறு உடை அணிவித்து, இரட்டை ஜடைப்போட்டு ,அவள் வளையல்,தோடு, மூக்குத்தி அனைத்தையும் கழட்டி கடைசியில் தாலையை கழட்ட சொல்ல அவள் மறுக்க அதை மட்டும் விட்டு விட்டனர்....


மூவரின் மனமும் ஏதோ போட்டு அழுத்துவது போல் இருந்தது தென்றலை பார்க்கும் போது அவர்களுக்கு...



கடைசியில் தென்றலுக்கு இனிமா கொடுக்கப்பட்ட போதே அவள் மிக பயந்து போய் இருந்தாள்...



கடைசி தயாராக யூரின் டியூப் பொறுத்த செவிலியர் வந்தார்...



அப்போது அவள் அழுத அழுகை சித்ராவினால் தாங்க முடியவில்லை...



"அம்மா ப்ளீஸ் மா வேண்டாம் மா வலிக்குது மா என்ன வீட்டுக்கு கூட்டிட்டு போய்டுங்க மா" என அவள் அழுத அழுகையில் சித்ரா அந்த அறையிலிருந்தே வெளியே சென்று ராமை கட்டியணைத்து கொண்டு அப்படி ஒரு அழுகையை அழுதுக்கொண்டிருந்தார்...



சித்ரா அழுவதை பார்த்த ராமும் கிரிஷ்ஷூம் பயந்து விட்டனர்...



சிறிது நேரம் கழித்து தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு இவர்களிடம் நடந்ததை சொல்லி மீண்டும் தென்றலிடம் சென்றார்...



உள்ளே அவள் தலையை கோதியவாறு"அவ்ளோதான்
மா எல்லா சரியாகிடும் கொஞ்ச நேரம் பொறுத்துக்கடா"என கூறி யூரின் டியூப் போட்டு வீல் சேரில் அமர வைத்து ஆப்பரேஷன் தியேட்டருக்கு அழைத்துச் சென்றனர்....



இந்த பெண்களுக்கு அம்மா அப்பா என்ன தான் உடன் இருந்தாலும் பிரசவத்திற்கு செல்லும் போது மட்டும் தன் ஆசை கணவனை பார்க்காமல் அவர்களால் இருக்கவே முடியாது...



ஆப்பரேஷன் தியேட்டருக்கு செல்லும் வழியில் கிரஷ் இல்லாததை கண்டு அன்னையிடம்"மா அவர் எங்க"என கேட்க,



"ஒரு மருந்து வாங்கிட்டு வர போய் இருக்காரு டா நீ உள்ள போ அவர் வந்துடுவாரு" என கூற,



மறுத்த தென்றல் "இல்ல மா நான் அவர பாக்காம ஆப்பரேஷன் தியேட்டருக்கு போக மாட்டேன்" என கண்கள் கலங்க கூறி கொண்டிருக்கும் போதே கிரிஷ் வேக வேகமாக வந்தான்....



வந்தவன் தன்னவள் முன் மண்டியிட்டு அமர்ந்து அவளின் ஊசி போட்டிருக்கும் பிஞ்சு கைகளில் முத்தமிட்டு "உனக்கு ஒன்னும் ஆகாது தைரியமா உள்ள போ நான் இங்கயே தான் இருப்பேன்" என அவள் நெற்றியல் ஆழமாக ஒரு முத்தத்தை பதித்து அனுப்பி வைத்தான்....



உள்ளே சென்று சரியாக இருபது நிமிடத்தில் குழந்தை அழும் சத்தம் கேட்க மூவரின் முகத்திலும் அப்படியொரு ஆனந்தம்...



கிரிஷ்ஷின் கண்கள் மகிழ்ச்சியில் நிறைந்து இருந்தது....



சிறிது நேரத்தில் தென்றலை ரூமிற்கு மாற்ற அனைவரும் அறைக்கு முன் வந்தனர்...



"அவங்கள ரொம்ப தொந்தரவு பன்ன வேணாம், குழந்தைக்கு சரியா டைம்க்கு பால் குடுக்க வைங்க" என சில பல அறிவுரைகளை கூறி கொண்டிருக்கும் போது இன்னொரு செவிலியர் ஒர சிறிய வெள்ளை நிற டவலில் குழந்தையை அழகாக சுற்றி கொண்டு வந்தார்....



"இந்தாங்க சார் உங்களுக்கு பொண்ணு பொறந்திருக்கு" என கூறி அந்த சிறு புன்னகை ததும்பிய தேவதையை அவன் கையில் நீட்டினார்...



அவனுக்கு ஏதோ உலகில் உள்ள மொத்த சந்தோசத்தையும் அள்ளி அவன் கைகளில் அளிப்பது போல் இருந்தது....



மெதுவாக கைகளை நீட்டி தன் தேவதையை பெற்றுக்கொண்டவன் கண்களில் ஆனந்த கண்ணீர் பெருக அப்படியே தன்னவளை சந்திக்க அறைக்குள் நுழைந்தான்...



மருந்தின் வீரியத்திலும் அறுவைசிகிச்சை செய்த வலியிலும் கலைந்த ஓவியமாய் இருந்த அவளை பார்க்கும் போது மனதுக்கு வலித்தாலும் குழந்தையை பார்த்தாள் அவள் வலியும் சற்று குறையும் என எண்ணி குழந்தையை சித்தராவிடம் கொடுத்து விட்டு தென்றல் அருகில் அமர்ந்தவன் அவள் நெற்றியில் பாசமான ஒரு முத்திரையை பதித்த உடன் அவள் மெல்ல கண் திறந்தாள்..



குழந்தையை அவளிடம் காட்டி "நம்ம பாப்பா அம்மு" என அவன் கூற மகிழ்ச்சியில் இவள் கண்களுக்குள்ளும் வேர்க்கத்தான் செய்தது....



குட்டி தேவதை அனைவருக்கும் மகிழ்ச்சியை தந்தாள்...



ஒரு வாரம் கழித்து தென்றலையும் குழந்தையையும் வீட்டிற்க்கு அழைத்து சென்றனர்....



குழந்தைக்கு பெயர் வைக்கம் விசேசம் சிறப்பாக நடைபெற,



இனிமையான தேவதைக்கு ""இனியா""" என பெயர் சூட்டினர்.....



வருடங்கள் இரண்டு உருண்டோடியது...



தென்றலின் படிப்பும் கூடவே முடிந்து....



"ஏங்க பாப்பாக்கு ரெண்டு வயசாச்சி என்னோட படிப்பும் முடிஞ்சிருச்சி பாப்பாவ அம்மாகிட்ட விட்டுட்டு வேலைக்கு போக வா"என கேட்க,



"இன்னும் ஒரு வருஷம் போகட்டுமே மா அப்பறம் போலாம்" என கூற கோபமாக முகத்தை திருப்பியவளைப் பாரத்து "சரி சரி தேடு நல்ல வேலையா பக்கத்துல இருக்கற மாதிரி தேடு பார்ப்போம்" என்றான்....



"ரொம்ப தேங்க்ஸ்க " என சந்தோசத்தில் குதித்தவள் அப்படியே மயங்கி சரிந்தாள்....



ஹாஸ்பிட்டல் சென்றவுடன் டாக்டர்
பரிசோதித்து விட்டு "வாழ்த்துகள் கிரிஷ் எல்லா சந்தோசமான விஷயம் தான் உங்க வொய்ப் கன்சீவா இருக்காங்க" என்றதும்,,,,



தென்றலுக்கு அவள் தோழி சொல்லியது நினைவிற்கு வந்து போனது.....



வருவாள்.....
 
Status
Not open for further replies.
Top