எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

கண்ணுக்குள்ளே கரைந்த நிலவு-கதைதிரி

Status
Not open for further replies.

NNK-74

Member
வணக்கம் தோழமைகளே!

நம் வாழ்வின் சின்ன சின்ன தருணங்களை இரசிப்பது போல் இவர்கள் வாழ்க்கையின் தருணங்களை காண்போம்
 

NNK-74

Member
கண்ணுக்குள்ளே கரைந்த நிலவு

அத்தியாயம் -1


காத்திருந்த தாரைகள் கொஞ்சம் இளைப்பாறுவதற்கு இமைகள் இரண்டையும் மூடி திறக்கும் நொடிதனில் தூரத்தில் பதினைந்து நிமிட காத்திருப்பிற்கு பலனாக மனிதர்களை மொத்தமாக விழுங்கிக் கொண்டு கொஞ்சம் ஒருபக்க சாய்ந்தபடி தள்ளாத்தோடு வந்து நின்றது அவள் செல்ல வேண்டிய பேருந்து.



பேருந்தைக் கண்டதும் கொஞ்சம் சுறுசுறுப்பு உடம்பில் ஒட்டிக் கொள்ள மனமோ இவ்வளவு கூட்டத்தில் செல்ல வேண்டுமே! என்று சலித்துக் கொண்டாலும் நீண்ட பெரூமூச்சு விட்டு அதை எல்லாம் தலையில் ஏற்காது பேருந்தில் ஏறினாள்.



கூட்ட நெரிசலில் சாமானிய மக்களோடு தன்னையும் இணைத்துக் கொண்டாள்.உள்ளே கொஞ்சம் நிற்பதற்கு இடம் இருக்க பேருந்தில் சரியாக நிற்பதற்கு கைப்பிடியை கொஞ்சம் எக்கிப் பிடித்துக் கொண்டிருந்தாள்.



தன்னை சுற்றி ஒரு பார்வையை படர விட எப்பொழுதும் போல் பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளின் பேச்சும் சிரிப்பு சத்தமும்,தன்னைப் போல் வேலைக்கு அவசரமாகச் செல்வதற்காக ஒருவித பதற்றத்தோடும் உரையாடியபடி என்று அந்த பேருந்து எல்லாவிதமான மக்களையும் தன்னுள்ளே அடக்கியபடி சென்றுக் கொண்டிருந்தது.


இது தினமும் நடக்கும் வாடிக்கையான நிகழ்வு தான் என்றாலும் தினமும் புதுப்புது மனிதர்களை சந்திக்கும் இடமானதால் ஜன்னலின் வழியே தன் பார்வையை செலுத்தி அவள் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது….



தன் பெயரைச் சொல்லி அழைப்பை கேட்டு சுற்றும் முற்றும் பார்த்தாள்.அங்கே அவளைப் பார்த்து ஒரு கை நேசமாக கையசைக்க அந்த கூட்டத்திற்கு நடுவே யார் தன்னை அடையாளம் கண்டுக் கொள்வது என்று நெற்றியை யோசனையாக லேசாக சுருக்கிக் கொண்டு பார்த்தாள்.



அப்பொழுது அந்த கையசைத்தவர் அந்த கூட்டத்திலிருந்து தன்னை விடுவித்துப் போராடியபடி இவளை பார்த்து சிநேகமாக புன்னகைத்தபடி “ஹாய் நிரல்யா” என்றதும்


இவளும் அவர் யாரென்று கண்டுக் கொண்டாள்.உடனே இவளும் புன்னகைத்தவாறே “சுமதி அக்கா… எப்படி இருக்கீங்க? நல்லா இருக்கீங்களா?” என்றாள் நட்போடு…


“ம்ம்… நல்லா இருக்கேன் அது சரி என்ன இன்னைக்கு வடபழனில ஷீட்டிங்கா”


“ஆமாம் அக்கா ஸ்டூடியோக்குத் தான் போய்ட்டு இருக்கேன் நீங்களும் அங்கே தான் போய்ட்டு இருக்கீங்களா?”


“ஆமாம் உன்னைப் பார்த்ததும் தான் நீயும் அங்கே தான் போறேன்னு நினைச்சேன்” என்றதும்



நிரல்யாவும் அமைதியாக எதிரே நின்ற அக்காவை ஒரு பார்வை பார்த்தாள்.நல்ல நிறம்,உயரமும் கூடத் தான் இவளை விட உடலை நன்றாக பேணிப் பாதுகாப்பதால் அதுவும் கச்சிதமாக இருந்தது.தனியாக உடைக்கும் அலங்காரத்திற்கும் வேறு கவனம் செலுத்தி இருக்கிறார் என்று அவரைப் பார்த்தவுடனே தெரிந்தது.



அவர் தன்னை விட வயது பெரியவர் என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள் அவ்வளவு இளமையாக இருந்தார்.அவர் இருக்கும் துறையில் அப்படித் தான் இருக்க வேண்டும் என்று நினைத்தாலும் மனமோ அவரோடு தன்னை ஒப்பிட்டு பார்த்தாள்.



தன்னை தானே ஒருமுறை பரிசோதித்து பார்க்க குனிந்து பார்த்தாள்.கருப்பு என்று சொல்லி விட முடியாது கொஞ்சம் நிறமும்,குள்ளமாகவும் உடம்பு பூசினாற் போல் இருந்தது.


உடைக்கு எல்லாம் கவனம் செலுத்துவதற்கு அவளுக்கு நேரமும் இல்லை, முக்கியமாக பணமும் இல்லை.குடும்பத்தில் உள்ள சிக்கல்களைத் தீர்ப்பதிலேயே செலவாகிறது.இதில் எங்கே தன்னை கவனித்துக் கொள்வதற்காக செலவழிப்பது? என்று யோசனையில் ஆழ்ந்திருக்கும் போது பக்கத்தில் இருந்த அந்த பெண்மணி “நிரல்யா நான் உன்கிட்ட தான் பேசிட்டு இருக்கேன் நீ என்ன

யோசனையில் இருக்கே” என்றார்.



“ஒன்னுமில்லை அக்கா நீ சொல்லுங்க”



“நிரல்யா இன்னும் அந்த யாமினிகிட்ட தான் வேலை பார்க்கிறியா?”


ஆமாம் என்று தலையசைத்தாள்.அவள் இப்படி பதில் சொன்னதும் “ப்பா… உனக்கு ரொம்ப பொறுமை இருக்கு அதனாலத் தான் அவளோடு இன்னும் ஓட்ட முடியுது,வேற யாராவது இருந்திருந்தால் எப்பவோ அவளுக்கு டாட்டா காட்டி இருப்பாங்க” என்றார் இவளைப் பார்த்து கரிசனையோடு….



ஆனால் நிரல்யாவோ “அப்படி எல்லாம் மேடத்தைப் பற்றி சொல்லாதீங்க அவங்ககிட்ட அசிஸ்டன்ட்டா வேலை பார்க்க நிறைய பேர் ரெடியா இருக்காங்க என்னை இவ்வளவு திறமையா வேலைப் பார்க்க வைக்கிறதே அவங்க கொடுத்த பயிற்சி தான் காரணம்” என்றாள்.



“ம்ம்… சரிதான் எப்பவுமே விட்டுக் கொடுக்காமல் பேசுவியே அதே போல் இப்பவும் சொல்றே எப்படியோ இன்னைக்கு எனக்கு கச்சிதமாக மேக்கப் போட்டு விடு சரியா” என்றார் கண்ணை சிமிட்டுக் கொண்டே….



இவளும் சிரித்துக்கொண்டே சரியென்று தலையசைத்தாள்.இவர்கள் இப்படி பேசிக்கொண்டே வந்ததில் இறங்குவதற்கான இடம் வரவும் இருவரும் பேருந்தில் இருந்து இறங்கினார்கள்.



வடபழனியில் உள்ள ஏவிஎம் ஸ்டூடியோவை நோக்கி இருவரும் நடக்க ஆரம்பிக்கும் போது நிரல்யா “அக்கா வாசலுக்குப் போனதும் எதுவும் பேச முடியாது நான் வேகமா உள்ளே போயிடுவேன்” என்றாள்.



அதற்கு அவரும் “ம்ம்… தெரியும் நீ போ நிரல்யா” என்றார்.



நிரல்யா தன் கைக்கடிகாரத்தை ஒருநொடி பார்த்தாள்.அவள் படப்பிடிப்பு தளத்தில் இருக்க வேண்டிய நேரத்திற்கு இன்னும் பத்து நிமிடங்கள் தான் இருந்தது.



உடனே தனது நடையை ஓட்டமும் நடையுமாக தன் கைப்பையை தூக்கிக் கொண்டு வேகமாகச் சென்றாள்.அவள் செல்வதையே அந்த சுமதி பார்த்துக் கொண்டிருந்தார்.



‘இவளுடைய வயதில் உள்ள பெண்பிள்ளைகள் எல்லாம் எவ்வளவு அழகா டிரெஸ் போட்டு மேக்கப் போட்டு சுத்தி இருக்கிறவங்களை தன்னை ஒரு பார்வை பார்க்க வைக்கிறாங்க இதுக்கும் நிரல்யா மேக்கப் ஆர்ட்டிஸ் அதுக்கும் அவளுக்கும் சம்பந்தமே இல்லாத மாதிரி இருக்கிறாளோ? குடும்பத்துக்காக தன்னையே வருத்திக் கொள்கிறாள்’ என்று அவளை பார்த்து பெருமூச்சு விட்டப்படி அவரும் நடையை தொடர்ந்தார்.



நிரல்யா வேகமாக ஓடிக் கொண்டிருக்கும் பொழுது ஸ்டூடியோவில் உள்ளே நுழைவதற்காக ஒரு விலையுயர்ந்த கார் வரவும் இவளும் போய் லேசாக இடித்துக் கொள்ள உள்ளே இருப்பவர் யாரென்று பார்க்காமல் நிரல்யா கையை நீட்டி “சாரி சாரி என் தப்பு தான்” என்று வாயாலும் சைகையால் சொல்லி வேகமாக கடந்து சென்று விட்டாள்.



பின்னால் இருக்கையில் அமர்ந்திருந்த அவனோ தன் டிரைவரிடம் “என்னாச்சு திடீர்னு சடன் பிரேக் போட்டுட்டீங்க” என்றான் தன் கையில் இருந்த கைப்பேசியைப் பார்த்தபடி…



“சார் ஒரு பொண்ணு அவசரமா ஓடி வந்ததுல தெரியாம நம்ம கார் மேல இடிச்சுட்டாங்க அதான் பிரேக் போட்டேன் சார்” என்றதும் தன் கூர்மையான விழிகளை ஒருமுறை நிமிர்ந்து மூடியிருந்த ஜன்னல் வழியே பார்த்தான்.


“சார் அந்தப் பொண்ணு நிற்காமல் சொல்லிட்டு போயிட்டாங்க”


அவனோ அதிர்ச்சி அடைவது போல் தன் ஒற்றை புருவத்தை லேசாக தூக்கி “இதென்ன அதிசயமா இருக்கு பொண்ணுங்க எப்பவும் சாரி கேட்கமாட்டாங்களே! தப்பே செஞ்சாலும் நம்மளைத் தானே மன்னிப்பு கேட்க வைப்பாங்க” என்றான் கேலியான முறையில்….



உடனே அவனுடைய டிரைவரும் “சார் நீங்க சொல்றதும் உண்மை தான் இந்தப் பொண்ணுக்கு ஏதோ அவசரம்னு நினைக்கிறேன் அதான் வேகமாக போயிட்டாங்க போல” என்றான்.



அதற்கு அவனும் தான் பெண்களைப் பற்றி நினைத்தது சரிதான் என்று தலையசைத்து விட்டு “சீக்கிரம் போங்க ஷீட்டிங்கு டைம் ஆயிடுச்சு” என்றான் திரையுலகின் நம்பிக்கை நட்சத்திரமாக மின்னத் தொடங்கி இருக்கும் சைத்ரன்.


நிரல்யா வேகமாக ஸ்டூடியோவிற்கு பின்புறமாக உள்ள வழியில் சென்று அவள் செல்ல வேண்டிய ஒப்பனை அறைக்கு மூச்சிறைக்க போய் நின்றாள்.



அவள் வந்து நின்ற நிலைமையைப் பார்த்துக் கொண்டிருந்தாள் அவள்.கொஞ்சம் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டவள் வழிந்த வேர்வையை தன் கைக்குட்டையால் துடைத்துக் கொண்டிருக்கும் போது அவளுக்கு அருகில் வந்து “மேம் ஏன் உன்னை மாதிரி ஆளை எல்லாம் இன்னும் வேலைக்கு வைச்சு இருக்காங்கன்னே தெரியலை நீ இருக்கிற கோலத்துல யாராவது பார்த்தால் மேக்கப் ஆர்ட்டிஸ்ட் சொன்னால் நம்பவே மாட்டாங்க உன் கூட வேலைப் பார்க்கிறது எனக்கு தான் எல்லாவிதத்திலும் கஷ்டமா இருக்கு” என்று இகழ்ச்சியாக சொன்னாள்.



தன் பக்கத்தில் இருந்த தீபாவை ஒரு பார்வை பார்த்தவள் “திறமைக்கும் ஆளுக்கும் சம்பந்தமில்லைன்னு நான் நினைக்கிறேன்” என்றாள் தைரியமாக…



உடனே தீபா “ஓ… நான் சொன்னதுக்கு பதில் பேசுறியா? ஆனால் நீ சொல்றது தப்பு நிரல்யா ஏன்னா நம்ம வேலை அழகா இல்லாதவங்களையும் அழகா மாத்துறது இதுல நாமும் அப்படித் தான் இருக்கனும்” என்றாள்.



இவள் கேட்பதற்கெல்லாம் பதில் சொல்லத் தேவையில்லை என்று எண்ணியவள் தன் வேலையைப் பார்க்கத் துவங்கினாள்.



ஒப்பனை செய்வதற்கான எல்லா பொருட்களையும் எடுத்து அலங்கார மேசையில் நின்று அடுக்கிக் கொண்டிருந்தாள்.அப்பொழுது படத்தின் நாயகி இந்திரா உள்ளே வந்தாள்.அவளுடன் மேனஜரும் வந்திருந்தான்.



அவளைக் கண்டதும் தீபா உட்காருவதற்கு ஒரு நாற்காலியை எடுத்துப் போட்டாள்.அவளிடம் இந்திரா “யாமினி மேம் வரலையா?”



“மேம் இப்போ வந்துடுவாங்க,அதுக்குள்ளே பேஸிக்ஸ் மேக்அப் ஸ்டார்ட் செய்யலாமா மேம்?” என்றாள்.



இங்கே நிரல்யா எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டிருப்பதைக் கவனித்த இந்திரா “இந்தப் பொண்ணா எனக்கு போடப் போறாங்க,நான் யாமினி மேம் வர்ற வரைக்கும் வெயிட் பண்றேன்” என்றாள் முகத்தை சுழித்துக் கொண்டே….



உடனே தீபா வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு “மேம் உங்களுக்கு மேக்அப் போட இவ தகுதியானவளே கிடையாது,அவ ஜீனியர் ஆர்ட்டிஸ்ட்க்கு தான் மேக்அப் போடுவா நான் தான் ஸ்டார் அப் செய்வேன் அதுக்குள்ளே மேம் வந்து ஜாயின் பண்ணுவாங்க நிரல்யா உங்களுக்கு பெடிகியூர்,மெனிகியூர் அவ பார்த்துப்பா அப்புறம் கால்ல போடுற மேக்அப் மேம் வந்து சொன்ன பிறகு ஆரம்பிப்பாள்” என்று விளக்கமாக நிரல்யாவின் தகுதியை பிரித்துச் சொன்னாள்.



உடனே இந்திரா யோசனையோடு “நான் ஏற்கனவே பேடிகியூர் செய்துட்டேனே இப்போ திரும்ப எதுக்கு செய்யனும்?”



“மேம் நீங்க ஏற்கனவே செய்து இருந்தாலும் இன்னைக்கு நீங்களும் ஹீரோவும் சந்திக்கிற சீன் வருது அதனால உங்க பாதத்திலிருந்து காட்டுவாங்க அதனால ஸ்பெஷல் கேர் பண்ணச் சொல்லி இருக்காங்க”என்று இந்திராவிற்கு விளக்கம் அளித்தாள் தீபா.



ஆனால் நிரல்யா இது எதையும் கண்டுக் கொள்ளாமல் கடமையே கண் கண்ட தெய்வம் என்று தன் வேலையை தொடர்ந்துக் கொண்டிருந்தாள்.இது இப்பொழுது தான் முதன்முதலாக நடக்கும் விஷயமாக இருந்தால் பரவாயில்லை அவள் வேலைக்கு வந்ததிலிருந்தே இந்த மாதிரி நிறைய பார்த்து விட்டாள் அதனால் இந்த விஷயம் எல்லாம் அவளை பெரிதாக பாதித்தது இல்லை.



அதிலும் இந்த தீபா வந்து ஒருவருடம் தான் ஆகிறது.ஆனால் நிரல்யாவோ இந்தத் துறையில் இவளை விட இரண்டு வருடம் சீனியர்.ஆனால் அவள் படித்த படிப்பிற்கும் இவள் படித்த படிப்பு தான் இப்பொழுது பெரிய வித்தியாசமாக இருக்கிறது.


நிரல்யா ஒப்பனை கலைஞராகுவதற்கு ஒருவருடம் கூட முழுதாக படிக்கவில்லை.ஆனால் தீபா மூன்று வருடம் படித்து இளங்கலை பட்டம் வாங்கி இருக்கிறாள்.அதனால் அவளுக்கு கொஞ்சம் மதிப்பு அதிகம்.



அதனால் நிரல்யா இந்த ஒப்பனை துறையில் இன்னும் நிறைய நுணுக்கங்களை கத்துக் கொண்டிருக்கிறாள்.அதனால் யார் சொன்னாலும் எதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல் தன் வேலையில் மட்டும் கவனமாக இருந்தாள்.



இந்த துறைக்கு வந்த புதிதில் இவர்களை விட யாமினி அவளை அந்தப் பாடுபடுத்தி இருக்கிறாள் அதனால் நிரல்யாவை எதையும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.


தன் வேலைகளை முடித்து விட்டு திரும்பிய நிரல்யா “வணக்கம் மேம் பெடிகியூர்

ஆரம்பிக்கட்டுமா” என்றாள் மெதுவாக…


உடனே இந்திரா “முதல்ல தீபா நீங்க உன் வேலையை ஆரம்பிங்க அடுத்து இவங்க ஆரம்பிக்கட்டும்” என்றாள்.


உடனே தீபா நிரல்யாவிடம் “நீ போய் ஜீனியர் ஆர்ட்டிஸ்ட்டுக்கு மேக்அப் ஆரம்பி நான் மேம்க்கு எப்போ ஸ்டார்ட் பண்ணனுமோ கால் செய்றேன்” என்றாள்.



இவளும் சரியென்று தலையசைத்து விட்டு வெளியே வந்தாள்.அப்பொழுது இந்திரா தீபாவிடம் “இப்போ தான் ரிலாக்ஸா இருக்கு நல்ல வேலை அவளை வெளியே அனுப்பிட்டே அவளும் அவ டிரெஸிங் சென்ஸ்ம் பார்த்தாலே இரிடேட்டா இருக்கு ஆனால் தீபா யூ லுக் பியூட்டி” என்றாள் சிரித்துக் கொண்டே…



உடனே தீபாவும் “இதைத் தான் மேம் நானும் அவகிட்ட சொன்னேன் ஆனால் நிரல்யா தான் ஏத்துக்கவே இல்லை” என்று அவளும் சொல்லிச் சிரித்தாள்.


இவர்கள் பேசியது எல்லாம் நிரல்யாவின் காதில் விழத் தான் செய்தது.மனது வலித்தாலும் அதை எல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் சிரித்த முகத்துடன் இளைய கலைஞர்களுக்கு உள்ள அறைக்குச் சென்றாள்.

(தொடரும்)
மறக்காமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதிவிடுங்கள் மக்களே
 
Last edited:

NNK-74

Member
கண்ணுக்குள்ளே கரைந்த நிலவு அத்தியாயம் -2


இளைய கலைஞர்கள் இருக்கும் அறைக்குள் நுழையவும் அங்கே ஏற்கனவே இரண்டுபேர் ஒப்பனையை ஆரம்பித்து இருந்தனர்.



இவளைப் பார்த்ததும் அங்கிருந்த இருவரும் “வாங்க அக்கா உங்களுக்காகத் தான் வெயிட்டிங் இங்கே பாருங்க இவங்க ரெண்டுபேரும் நாங்க மேக்கப் போட்டது சரியில்லைனு சொல்றாங்க” என்று ஒப்பனை போட்டு பாதியில் நிறுத்தி வைத்திருந்த இருவரைக் காட்டினர்.



நிரல்யா சிரித்துக் கொண்டே “ஏன் எப்போ பார்த்தாலும் இரண்டு பேரும் இப்படியே செய்றீங்க? உங்களையும் சேர்த்து இன்னும் இருப்பதைந்து பேருக்கு மேக்கப் போடனும் உமாக்கும் கீதாவிற்கும் ஒத்துழைப்பு கொடுங்க” என்று அங்கிருந்த இரண்டு பேரிடம் கடிந்துக் கொண்டாலும் கைகள் அதன் வேலையை சரியாக முகத்திற்கு ஒப்பனையை செய்துக் கொண்டிருந்தாள்.



உடனே அதில் ஒருத்தி “நிரல்யா இன்னைக்கு டான்ஸ் இருக்கும்மா ரிகல்சல் பார்க்கும் போது ரொம்ப வேர்க்கும் நீ மட்டும் கடைசியா பினிசிங் டச்அப் கொடுத்திட்டா மேக்கப் கலையாமல் இருக்கும் அதுக்காகத் தான்,நாங்க என்ன ஹீரோயினா ஒரே டச்அப் பண்ணுறதுக்கு மாஸ்டர் மேக்கப் போட்டாலும் திட்டுவாரு,கலைஞ்சாலும் அதே பாராட்டு தான்” என்று சிரித்துக் கொண்டே சொன்னார்.



உடனே நிரல்யா “ம்ம்…” என்று தலையாட்டி கண்ணை சிமிட்டி சிரித்தாள்.இந்த படப்பிடிப்பு தளத்தில் அவளையும் ஒரு கலைஞராக மதிக்கும் ஆட்கள் இவர்களும் இவளுக்கு கீழ் இருக்கும் இந்தஇரண்டு பேர்தான்.



அப்பொழுது சுமதி அக்கா உடையை மாற்றிக் கொண்டு உள்ளே வந்தார். “நிரல்யா சீக்கிரம் இங்கே வா எனக்கு படத்துல பத்து நிமிஷம் சீன் இருக்காம் டைரக்டர் சார் சொன்னாங்க ஹீரோ சாரோட ப்ரெண்டோட அம்மாவா வரேன்” என்றார் முகம் முழுவதும் மகிழ்ச்சியோடு…



நிரல்யா சிரித்துக் கொண்டே சுமதியின் கைகளைப் பிடித்துக் கொண்டு “வாழ்த்துக்கள் அக்கா உங்களோட நீண்ட நாள் கனவு நிஜமாகி இருக்கு போல” என்று ஆரத்தழுவிக் கொண்டாள்.


“ஆமாம் நிரல்யா ஏற்கனவே சொன்னவங்க வரலையாம் டைரக்டர் சார் இன்னைக்கே சீன் முடிச்சாகும்னு சொல்லிட்டாங்க அதனால மாஸ்டரோட சிபாரிசுல இந்த சான்ஸ் கிடைச்சு இருக்கு” என்றார்.


“ம்ம்… ஓகே ஓகே… கூடிய சீக்கிரம் நாம எல்லோரும் சுமதி அக்காவை வெள்ளித்திரையில் பார்க்கப் போறோம் அப்படியே அக்காக்கு முக்கியமான கேரக்டர் வாய்ப்பெல்லாம் கிடைக்கனும்” என்று மனதார வாழ்த்தினாள்.


சுமதி அக்காக்கு ஒரே முகம் முழுக்க புன்னகையில் நிரம்பி இருந்தது.நிரல்யா “அக்கா முதல்ல உங்களுக்கு பக்கவா மேக்கப் போட்டு விடுறேன் அப்புறம் பாருங்க நீங்களே அசந்து போய்டுவீங்க” என்று தனது வேலையை ஆரம்பித்தாள்.


இங்கே நடப்பதை எல்லாம் கைகள் இரண்டையும் குறுக்கே கட்டியபடி நாற்பது வயது மதிக்கத்தபடி அமைதியாக அறையின் வாயிலில் நின்று யாமினி பார்த்துக் கொண்டிருந்தார்.எதார்த்தமாக நிரல்யா திரும்பிப் பார்க்கவும் அங்கே யாமினி நிற்பதைக் கண்டு பதறினாலும் வெளிக்காட்டாமல் “மேம் வாங்க மேம்” என்றதும் நிரல்யாவைப் பார்த்து முறைத்துக் கொண்டு “வேலையைத் தவிர மற்ற வேலை எல்லாம் சரியா பார்க்குறியோ?” என்றார் கோபமுகமாக…



நிரல்யா பதறியபடி நிற்க… உமாவும் கீதாவும் விட்டால் அழும் நிலையில் நின்றிருந்தனர்.அவர் நடக்கும் பாணியே யாமினி இப்போது என்ன மனநிலைமையில் இருக்கிறார் என்று சொல்லி விடுவாள் அவள்.



தன் கண்ணாடியை சரி செய்தபடி அங்கே இருப்பவர்களின் ஒப்பனைகளை ஒரு பார்வை பார்த்தபடி குறுக்காய் நடந்தவர் நிரல்யா கடைசியாக ஒப்பனை செய்தவரை பார்த்து “நிரல்யா நீ தான் இவங்களுக்கு மேக்கப் போட்டியா?”


“ஆமாம் மேம்”



“எல்லாம் சரிதான் ஆனால் பினிஷிங் ஸ்பேரே பண்ணு அப்போத் தான் இவங்க மேக்கப் அவங்க ஸ்கினோட டச் ஆகும்” என்றார்.



உடனே நிரல்யா யாமினி சொன்னதை செய்தவுடன் நிரல்யாவைப் பார்த்து “இந்த மாதிரி சின்னச் சின்ன தப்பை நீ செய்றதுனாலத் தான் இன்னும் ஹீரோ,ஹீரோயின்ஸ் மேக்கப் போட வாய்ப்பு உனக்கு நான் தர்றதில்லை புரியுதா? இனிமேல் கவனமாக இரு உமா,கீதா நீங்க ரெண்டுபேரும் இங்கே உள்ளவங்களை பார்த்துக்கோங்க நிரல்யா இன்னும் பதினைந்து நிமிஷத்துல உள்ளே வா நிறைய வொர்க் இருக்கு” என்று சொல்லி அங்கிருந்து சென்று விட்டார்.நிரல்யா தலையை கவிழ்ந்தபடி அமைதியாக நின்றாள்.


அவர் போனதும் தான் அங்கிருந்தவர்களுக்கு சீராக மூச்சு வந்தது.படப்பிடிப்பு தளத்தில் யாமினியைப் பார்த்தால் எல்லோருக்கும் ஒருவித பயம் கலந்த மரியாதை உண்டு.



யாமினி ஒரு படத்திற்காக ஒப்பனை கலைஞராக வேலை செய்கிறார் என்றார் அதில் நேர்த்தியும் புதுமையும் கலந்து

இருக்கும்.அதே போல் மற்றவர்களுக்கும் அதில் திருப்தி பலமடங்காக இருக்கும்.


அதனால் அவருக்கு திரையுலகில் செல்வாக்கு அதிகம்.நிரல்யா சுமதிக்கு வேகமாக ஒப்பனை செய்யத் துவங்கினாள்.



சுமதி நிரல்யாவிடம் “நிரல்யா எனக்கு ஒரு சின்ன ஹெல்ப் செய்வியா?’’


இவளும் “ம்ம்… சொல்லுங்க”


“என்னோட சீன் ஷீட்டிங் எடுக்கும் போது என்கூட வந்து எனக்கு ஒரு சப்போர்ட்டா நிற்கனும்” என்றாள்.


இவளும் ஒப்பனை வேகமாக முடிக்கும் ஆர்வத்தில் சரியென்று சொல்லி விட்டாள்.இப்பொழுது யாமினி அறைக்கு செல்ல வேண்டும் என்பதே அவளுக்கு எண்ணமாக இருந்தது.


இவள் ஒப்புக்கொண்டதை எண்ணி இன்னும் மகிழ்ச்சியடைந்தார் சுமதி.நிரல்யா எல்லாவற்றையும் முடித்து விட்டு அங்கிருந்து செல்வதற்கு முன் சுமதி “நிரல்யா மறக்காமல் வந்துடு” என்றதும் “அக்கா எதுக்கும் நீங்க கிளம்பிறதுக்கு முன்னாடி எனக்கு ஒரு கால் பண்ணுங்க நான் வந்துடுறேன்” என்று பொறுமையாக நின்று பதில் சொல்லாமல் பேசிக்கொண்டே சென்று விட்டாள்.


இவள் இந்திரா இருக்கும் அறைக்குள் நுழைந்ததும் தீபா நிரல்யாவைப் பார்த்து முறைத்தாள்.இவளோ புரியாமல் அவளைப் பார்த்து விட்டு யாமினி அருகில் போய் நிற்கவும் யாமினி “நிரல்யா இந்திராவிற்கு இன்னைக்கு ஹேர்ஸ்டைலும் பினிஷிங் டச் அப் கொடு” என்றார்.



இந்திராவின் கண்ணில் காஜல் இட்டுக் கொண்டே சொல்ல…

இதைக் கேட்ட நிரல்யா அப்படியே ஒருநொடி ஆடிப்போய் விட்டாள்.தன் காதில் விழுந்தது சரியானாதா? என்று யோசித்துக் கொண்டிருக்கும் பொழுதே…


யாமினி “என்ன இப்படி நின்னு வேடிக்கை பார்க்க போறியா?” என்றதும் நிரல்யா தனது வேலையை பார்க்கத் துவங்கினாள்.


தீபாவால் தன் கண்களை தன்னாலேயே நம்ப முடியவில்லை.

நிரல்யாவிடம் இவ்வளவு பெரிய பொறுப்பை கொடுப்பார் என்று கனவிலும் தீபா நினைக்கவில்லை.இந்திராவும் அமைதியாக இருந்தாள்.யாமினி முன்னால் எதுவும் பேச முடியாது.


அதோடு முதல் படம் சரியாக ஓடவில்லை.இரண்டாவது படவாய்ப்பிற்காக மிகுந்த சிரமப்பட்டு சில சிபாரிசுகள் மூலம் சைத்ரனோடு நடிக்க வாய்ப்பு வந்து இருக்கிறது.அதை இந்த மாதிரி சின்ன விஷயங்களில் கவனம் செலுத்தி தன் வாய்ப்பை கெடுத்துக் கொள்ள விருப்பம் இல்லை.எப்படியோ தனக்கு இந்த படம் ஹிட் அடித்தால் போதும் என்ற நிலைமையில் இருந்தாள்.



யாமினி இந்திராவிற்கு எதிரே இருந்த இருக்கையில் அமர்ந்துக் கொண்டவர் நிரல்யா செய்யும் ஒப்பனைகளை கவனித்துக் கொண்டார்.மேற்கொண்டு சில ஆலோசனைகளைச் சொல்லிக் கொண்டிருந்தார்.


நிரல்யா எந்தவிதமான பதற்றமும் இல்லாமல் சாதாரணமாகத் தான் இந்திராவிற்கு ஒப்பனை செய்துக் கொண்டிருந்தாள்.அவள் ஒரு நாளைக்கு ஐம்பது பேருக்கு மேல் நாள் முழுக்க ஒப்பனை செய்து இருக்கிறாள் அந்த ஒரு பயிற்சி அவளை வேகமாக செயல்பட வைத்தது.



நிரல்யா ஒப்பனையை முடிக்கும் தருவாயில் யாமினி தீபாவிடம் “இந்திராவோடு ஷீட்டிங்க்கு நீ போ வேற எதாவது கரெக்ஷன்ஸ் பண்ணனும்னு டைரக்டர் சார் சொன்னால் செய்துடு” என்றாள்.


இதைக் கேட்டதும் தீபாவிற்கு மகிழ்ச்சி திரும்ப வந்து ஒட்டிக் கொண்டது.யாமினி மேடம் தன்னை இன்னும் மறக்கவில்லை என்று புரிந்துக் கொண்டாள்.நிரல்யா முழுதாக வேலையை முடித்ததும் இந்திரா தன்னை கண்ணாடியில் பார்க்க ஒருநொடி அப்படியே அசந்து போய் விட்டாள்.



அப்படியே தன்னை அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்ற பெண்ணாகவே மாற்றி இருந்தாள் நிரல்யா.அதை நிரல்யாவிடம் சொல்லி பாராட்ட நினைத்தாலும் அவளுக்கு மனம் வரவில்லை.அதனால் யாமினியிடம் சென்று “மேம் நீங்க என்னை அப்படியே வேற ஆள் மாதிரி மாத்திட்டீங்க சூப்பர்” என்று அவருடைய கையைப் பிடித்து வாழ்த்தி விட்டுச் சென்றாள்.



யாமினி நிரல்யாவிடம் “எல்லாத்தையும் க்ளீன் பண்ணி வைச்சிடு நான் கொஞ்ச நேரம் வெளியே போய்ட்டு வந்திடுறேன் அதுக்குள்ளே வேற யாருக்காவது மேக்கப் போடுற வேலை இருந்தால் நான் கால் செய்றேன்” என்று அவரும் அங்கிருந்து சென்று விட நிரல்யா மட்டும் தனியாக நின்று எல்லாவற்றையும் ஒதுக்கிக் கொண்டிருந்தாள்.நேரம் சென்றுக் கொண்டிருந்தது.



அப்பொழுது நிரல்யாவின் கைப்பேசி அழைத்தது.அழைப்பை எடுத்து பேச மறுமுனையில் சுமதி தான் அழைத்திருந்தார்.


“ஹலோ நிரல்யா சீக்கிரமா ஷீட்டிங் ஸ்பாட்டுக்கு வா இப்போ என்னோட சீன் தான் எடுக்க போறாங்க” என்றதும் தான் நிரல்யாவிற்கு சுமதி அக்கா அழைத்திருந்தது நினைவுக்கு வந்தது.


அவளோ இதுவரை படப்பிடிப்பை எல்லாம் நேரில் பார்த்தது கிடையாது.அவளுடைய வேலைகள் எல்லாம் ஒப்பனை அறையிலேயே தான் இருக்கும் அல்லது இன்னொரு படப்பிடிப்பு தளத்தில் ஒப்பனை செய்ய யாமினி அனுப்பி விடுவார்.அதனால் அவளால் ஒரு இடத்தில் நிலையாக இருக்க முடியாது.ஒப்பனை முடிந்ததும் அங்கிருந்து உடனே சென்று விடுவாள்.அப்படியே அவளாக பார்க்க நினைத்தாலும் யாமினி வேறு வேலைகள் எப்பொழுதும் வைத்து இருப்பார்.



அதனால் சுமதி அக்கா வரச் சொல்லவும் அவள் மனதில் ஒரு பதற்றம் வந்து ஒட்டிக் கொண்டது.உடனே சுமதியிடம் “அக்கா இதுவரைக்கும் நான் இந்த மாதிரி ஷீட்டிங் பார்த்தது இல்லை எனக்கு ஒரு மாதிரி பயமா இருக்கு நான் வரலை” என்றாள்.


உடனே சுமதி “என்ன நிரல்யா திடீர்னு வர மாட்டேன்னு சொல்றே? நான் முதல்லயே சொன்னேன் அப்போ வரேன்னு சொன்னே இப்போ என்ன மாத்தி பேசுற?அதோடு நீ இந்த மாதிரி சினிமா பீல்டுல இருந்துட்டு ஷீட்டிங் பார்த்தது இல்லைன்னு சொன்னால் யாரும் நம்ப மாட்டாங்க ப்ளீஸ் எனக்காக வந்திடு”



உடனே நிரல்யா “அக்கா அப்போ மேம் வரச் சொன்னாங்களா அதான் வேகமாக கவனிக்காமல் போயிட்டேன், நீங்க எதும் தப்பா நினைக்காதீங்க” என்று காரணம் சொன்னாள்.


ஆனால் சுமதி கொஞ்சம் கோபமாக “நிரல்யா நீ வரேன்னு சொன்னதால் தான் நான் வேற யாரையும் துணைக்கு அழைக்கலை நீ வரலைன்னா இனிமேல் உன் கூட பேச மாட்டேன் உனக்கு விருப்பம் இருந்தால் இந்த பில்டிங்க்கு வா” என்று அழைப்பை துண்டித்து விட்டு அவர் இருக்கும் கட்டிடத்தின் புகைப்படத்தை குறுஞ்செய்தி அனுப்பி விட்டார்.



சுமதி அக்கா இப்படி பேசியது நிரல்யாவிற்கு வருத்தமாக இருந்தது.அதனால் மனதில் கொஞ்சம் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு செல்லலாம் என்று முடிவெடுத்தவள் அவளது வேலையை வேகமாக முடித்துக் கொண்டு அந்த இடத்திற்கு சென்றாள்.



சுமதி வரச் சொன்ன நேரத்தை விட கொஞ்சம் தாமதமாகச் சென்றாள்.அவள் ஏற்கனவே இருந்த இடத்தில் இருக்கும் இடத்திலிருந்து இரண்டு கட்டிடங்கள் தள்ளி அந்த கட்டிடத்தினை கண்டுபிடித்து உள்ளே செல்லவும் அங்கே காவலாளி யாரும் இல்லாததால் நேராக பெரிய கதவை திறந்துக் கொண்டு உள்ளே சென்றாள்.முதலில் கொஞ்சம் இருட்டாக இருந்தது.



அதை மெதுவாக கடந்து உள்ளே செல்லவும் மூன்று ஒளிப்படக்கருவி சுற்றியிருக்க கையில் சில விளக்குகளை பிடித்தபடி சிலரும் இன்னும் சிலரோ கையில் சில உபகரணங்களை வைத்துக் கொண்டு நின்றனர். அந்த விளக்குகளின் வெளிச்சத்திற்கு மத்தியில் சுமதி அக்காவும் அவருக்கு அருகில் யாரென்று பார்த்தால் தற்போதைய பெண்களின் கனவு நாயகனாக இருக்கும் சைத்ரன்.அவனுடைய படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கா வந்திருக்கிறோம் என்று ஆச்சரியமாகப் பார்த்தவள் சைத்ரனையே பார்த்தாள் இல்லை இல்லை சைட் அடித்தாள் என்று வேண்டுமானால் சொல்லலாம்.



இதுவரை அவனை படத்தில் தான் பார்த்து இருக்கிறாள்.இன்று தான் முதன்முதலாக சைத்ரனை நேரில் பார்க்கிறாள்.ஆறடி உயரம் கட்டுக்கோப்பான உடல்,சிவந்த நிறம்,வசீகரிக்கும் பார்வை,நெற்றியை மறைக்கும் கேசம் என நாயகர்களுக்கான அத்தனை தகுதியோடு நின்றான்.



அவனையே ஒருநிமிடம் அசையாமல் பார்த்துக் கொண்டிருந்தவள் பக்கத்தில் சுமதி அக்கா நின்றிருப்பதை மூளை அவளுக்கு நினைவுப்படுத்த சட்டென்று அவள் எதற்காக வந்தாளோ? அது நினைவுக்கு வந்தது.அவர்கள் இருவருக்கும் அருகில் இன்னும் இரண்டு பேர் நின்றிருந்தனர்.



சுமதி அக்கா தனது இரண்டு வார்த்தை வசனங்களை பேசி முடிக்கவும் நிரல்யா ஆர்வமிகுதியால் இரண்டு கைககளையும் சத்தமாக தட்டி “அக்கா சூப்பர் செமையாக பேசுனீங்க” என்று பாராட்டி சத்தமாகச் சொல்லவும் அங்கிருந்த அனைவரும் அவளை திரும்பி பார்த்தனர்.ஏன் சைத்ரனும் கூட அவளைத் தான் பார்த்தான்.



அதுவரை ஒளிப்படக்கருவியில் கவனம் செலுத்திக் கொண்டிருந்த டைரக்டர் இலக்கியன் இவள் சத்தமிட்டதைக் கேட்டு கோபத்தோடு “யாரு அது ஷீட் போய்ட்டு இருக்கும் போது கத்துனது?” என்றதும் எல்லோரும் அவளையே பார்க்கவும் நிரல்யா பயத்தில் ஆடிப்போய் நின்றாள்.



தன் இருப்பிடத்தில் இருந்து எழுந்தவன் கையில் வைத்திருந்த பொருளை தூக்கி வீசியபடி நேராக நிரல்யா அருகில் வந்தவன் “ஹே நாசன்ஸ் யாரு நீ?யாரு உன்னை உள்ளே விட்டது?” என்று கத்தவும் சுமதி அக்கா வேகமாக இருவருக்கும் அருகில் ஓடி வந்தாள்.




சைத்ரனோ மனதினுள் ‘யாரோ நம்மளோட தீவிர பேன்னு நினைச்சா அவ என்னடான்னா அக்கா சூப்பர்னா கத்தினாள்’ என்ற யோசனையோடு என்னவென்று தெரிய அவனும் இவர்களுக்கு அருகில் வந்தான்.


மக்களே உங்கள் கருத்துக்களை இங்கே பதிவிடுங்கள்
 

NNK-74

Member
கண்ணுக்குள்ள கரைந்த நிலவு அத்தியாயம் -3


இலக்கியன் கோபத்தோடு நிரல்யா அருகில் வந்தான்.நடந்ததை கவனித்து சுமதி அருகில் வந்து “சார் சார் நான் தான் வரச் சொன்னேன்” என்றாள்.


உடனே இலக்கியன் “என்ன சுமதி நீங்க? சீன் நல்லா போயிட்டு இருக்கும் போது இப்படி செய்தால் அடுத்து திரும்ப எடுக்கனும்கிறது உங்களுக்கு தெரியாதா?” என்றான் அதே கோபத்தோடு…



உடனே சுமதி “சார் அது இவ இதுவரைக்கும் ஷீட்டிங் வந்தது இல்லை அதான் தெரியலை சார் மன்னிச்சிடுங்க இனிமேல் இந்த மாதிரி செய்யமாட்டாள்” என்று கெஞ்சினார்.


இங்கே நடப்பதை சைத்ரனும் சுற்றியிருந்தவர்களும் அருகில் நின்று பார்த்தனர்.உடனே சைத்ரன் “இலக்கியன் நடந்ததை விடுங்க நாம அடுத்த டேக் போகலாம்” என்றான்.அப்பொழுதாவது இந்தப் பொண்ணு இவனைப் பார்த்து ஒரு ஆச்சரியமோ அல்லது கைப்பேசியில் சுயபடம் எடுப்பதற்காக தன்னருகில் வருவாள் என்று நினைத்தால் அவளோ அவனை இதுவரை பார்த்ததே இல்லை ஏன் இங்கே ஒருவன் நிற்கிறான் என்பதை காட்டிக் கொள்ளதது போல் நின்றுக் கொண்டிருந்தாள்.



நிரல்யா இலக்கியன் அருகில் போய் “சாரி சார் தெரியாமல் பண்ணிட்டேன்” என்றாள் முகத்தை பாவமாய் வைத்துக் கொண்டு…



எல்லோரும் சொன்னதால் இலக்கியனும் சரி என்பது போல் தலையாட்டினான்.இங்கே சைத்ரனுக்கோ ஒருவித கோபம் கலந்த பொறாமை தொற்றிக் கொண்டது.இவளுக்காக நான் பரிந்துக் கொண்டு பேசினால் அவளோ அவனிடம் போய் மன்னிப்பு கேட்கிறாள் என்று நினைத்து அவளைப் பார்த்து முறைத்துக் கொண்டிருந்தான்.அங்கே சைத்ரனின் தோழனும் உதவியாளனுமாகிய அமுதன் வந்தான்.



நிரல்யா ஒருவித பதற்றத்தோடு சைத்ரனை நிமிர்ந்து பார்த்தால் அவனோ அவளையேப் பார்ப்பதைக் கண்டவள் தலையை குனிந்துக் கொண்டாள்.


சைத்ரன் அருகில் வந்து “என்ன நடக்குது இங்கே? ஒரே கலவரமா இருக்கு” என்றதும் அவன் நடந்ததை முழுமையாகச் சொன்னான்.



நிரல்யாவோ மனதினுள் ‘பக்கத்தில் போய் ஒரு தாங்ஸ் சொல்லலாம்னு பார்த்தால் இப்படி முறைக்கிறாங்க நாம இப்படி செய்ததில் கோபமாக இருக்காங்களோ?’ என்று இவள் இப்படி நினைத்துக் கொண்டாள்.



மறுபடியும் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டது. இப்பொழுது நிரல்யா ஓரமாக நின்று எப்படி படப்பிடிப்பு எடுக்கிறார்கள் என்று பார்த்துக் கொண்டிருந்தாள்.அதில் அவர்கள் பேச வேண்டிய வசனங்கள் பேசி முடித்ததும் இலக்கியன் “டேக் ஓகே” என்றதும் எல்லோரும் கொஞ்சம் தங்களை ஆசுவாசப்படுத்திக் கொண்டார்கள்.



சுமதி அக்கா நிரல்யா அருகில் வந்ததும் “நிரல்யா வந்த கொஞ்ச நேரத்தில என்னையே கலங்கடிக்க வைச்சுட்டே”



உடனே நிரல்யா “அக்கா இப்படி ஏடாகூடமாக நடக்கும்னு நான் எதிர்பார்க்கலை சாரி அக்கா” என்றாள்.



சுமதி “சரி விடு எப்படியோ சைத்ரன் தம்பி ஹெல்ப் பண்ணதால் சரியா போச்சு” என்றார்.உடனே ஆமாம் என்பது போல் தலையசைத்தாள்.அப்பொழுது இவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருப்பதை இலக்கியனும்,சைத்ரனும் அவர்கள் இருப்பிடத்தில் இருந்து கவனித்துக் கொண்டு இருந்தனர்.



சுமதியை கவனித்த நிரல்யா “அக்கா இங்கே முகத்தை காட்டுங்க கொஞ்சம் மேக்கப் சரி பண்ணி விடுறேன்” என்று தன் பையில் இருந்த அழகு சாதனைப் பொருட்களை வைத்து சுமதி அக்காவிற்கு டச்அப் செய்துக் கொண்டிருந்தாள்.



இதைப் பார்த்த இலக்கியன் நிரல்யாவைப் பார்த்து மனதினுள் ‘பெரிய மேக்கப் ஆர்ட்டிஸ்ட்னு நினைப்பு என்னமா சீன் போட்டுட்டு இருக்கு இந்தப் பொண்ணு’ என்று இவன் நினைத்துக் கொண்டிருக்க…


சைத்ரன் அருகில் வந்த மணி “பெரிய ஹீரோ நீயே டச்அப் பண்ணாமல் அமைதியா இருக்கே இவங்க இரண்டுபேரும் பண்ற அலப்பறைய பாரு இருந்தாலும் இந்தப் பொண்ணுக்கு இவ்வளவு திமிரு ஆகாது பார்த்துக்கடா” என்றான்.



உடனே பெருந்தன்மையாய் “சரி விடு விடு இந்த மாதிரி சின்ன விஷயத்தை எல்லாம் நாம கண்டுக்கவே கூடாது மணி” என்று வார்த்தை இப்படி வந்துக் கொண்டாலும் கண்களோ அவர்களையேப் பார்த்தபடி கையில் வசனங்கள் அடங்கிய காகிதத்தை வைத்து பார்த்தவாறே அங்கே நடப்பவை எல்லாவற்றையும் நோட்டம் விட்டுக் கொண்டிருந்தான்.



அவனருகில் அவனுடைய உதவியாளரும் நண்பனுமாகிய மணி “இதெல்லாம் ஓவரு நானும் அப்பொழுதே பார்க்கிறேன் இந்த பொண்ணு ஹீரோ,ஹீரோயினை விட சைடு கேரக்டருக்கு இவ்வளவு அலப்பறையா? நான் போய் கேட்கப்போறேன்” என்றான்.


உடனே சைத்ரன் தன் நண்பனை பார்த்து கண்ணைக் காட்டினான் அமைதியாக இருக்க வேண்டும் என்பதற்காக…


இலக்கியன் சுமதி அக்காவைப் பார்த்து சிரித்துக் கொண்டே “என்னாச்சு சுமதி அக்கா மேக்கப் பலமா இருக்கு போல” என்று கிண்டலாகக் கேட்டான்.



உடனே சுமதி இலக்கியனிடம் “நிரல்யா நல்லா மேக்கப் போடுவாள் சார் அதான் சும்மா டச்அப் பண்ணச் சொன்னேன்” என்றார்.


அடுத்து சின்ன இடைவேளைக்கான நேரம் முடிந்ததும் அடுத்த காட்சி படமாக்கப்பட்டுக் கொண்டிருந்தது.அப்பொழுது இந்திராவும் தீபாவும் அங்கே வந்துக் கொண்டிருந்தார்கள்.



அவர்கள் இருவரையும் இங்கே பார்க்கவும் நிரல்யா ஓரமாக ஒதுங்கி நின்றுக் கொண்டிருந்தாள்.தீபா இப்பொழுது நிரல்யாவை பார்த்தால் எதாவது தேவையில்லாமல் பேசுவாள் அதனால் தனக்கு அவமானமாக இருக்கும் என்று அவளே நகர்ந்து தள்ளி நின்றுக் கொண்டிருந்தாள்.



இலக்கியன் இந்திராவைக் கண்டதும் “என்ன இந்திரா கொஞ்சம் சேஞ்ச் பண்ண சொன்னால் அப்படியே வந்து இருக்கீங்க” என்று கடிந்துக் கொண்டான்.



உடனே இந்திரா “சார் தீபா நீங்க சொன்ன மாதிரி தான் சேஞ்ச் பண்ணி இருக்கிறாங்க” என்றாள்.



இலக்கியன் சற்று கோபத்தோடு “யாமினி மேம் கிட்ட பேசிக்கிறேன் கேரக்டருக்கு நான் எதிர்பார்த்த மாதிரி மாற்றமே இல்லையே முதல்ல வந்த காஸ்டியூம்க்கு அந்த மேக்கப் பக்காவா இருந்துச்சு ஆனால் இப்போ அப்படி இல்லை” என்றவன் கைப்பேசி எடுத்து யாமினியிடம் நடந்த விவரத்தை பேசினான்.


யாமினி இலக்கியனிடம் “என்னோட அசிஸ்டன்ட் ஒருத்தி இருக்கா அவளை அனுப்பி வைக்கிறேன் அவங்க நீங்க எதிர்பார்க்கிற சேஞ்ச் செய்வாள்” என்றார்.



உடனே இலக்கியன் “மேம் ஏற்கனவே ஒருத்தவங்க இருக்காங்கல்ல” என்றதும்



“அவளை விட இப்போ

வர்றவங்க எக்ஸ்பிரியன்ஸ் அதிகம் அதனால நீங்க எதிர்பார்க்கிற மாதிரி செய்வாங்க” என்றதும் இலக்கியனும் இதற்கு ஒத்துக் கொண்டான்.



உடனே நிரல்யாவின் கைப்பேசி அழைத்தது.அதில் யாமினியின் பெயர் திரையில் தெரியவும் மிக பவ்வியமாக “ஹலோ” என்றதும்



மறுமுனையில் யாமினி “நிரல்யா நான் சொல்ற இடத்துக்கு உடனே கிளம்பு அங்கே இந்திராவிற்கு போய் மேக்கப் போட போங்க” என்றாள்.




நிரல்யா பதற்றத்தில் வியர்வை வழிந்தது.அதனால் அமைதியாக இருந்தாள்.உடனே மறுமுனையில் தொடர்பில் இருந்த யாமினி “நிரல்யா சீக்கிரம் பதில் சொல்லு இல்லைன்னா நான் தான் இப்போ உடனே வந்தாகனும்” என்றார்.



அவர் அப்படி சொன்னதும் இன்னும் பதறியவள் “மேம் நான் அந்த ஷீட்டிங் ஸ்பாட்டுல தான் இருக்கேன் சுமதி அக்காக்கு ஹெல்ப்புக்காக வந்தேன்” என்றாள்.



“சரி அப்போ டைம் வேஸ்ட் பண்ணாமல் உடனே வேலையை பாரு” என்றார்.இந்த விஷயத்தை தீபாவிற்கும் இந்திராவிற்கும் ஒரு குறுஞ்செய்தி அனுப்பி விட்டார்.



இதைப் பார்த்து தீபாவிற்கு பொறாமையாக இருந்தது.’இன்றைக்கு ஏன் எதுவும் எனக்கு சாதகமாக நடக்கலை’ என்று யோசித்துக் கொண்டிருக்கும் பொழுது…



அதுவரை ஓரமாக ஒதுங்கி நின்றவள் மெதுவாக இவர்களை நோக்கி வந்தாள்.தீபா மனதினுள் ‘யாமினி மேம் உன்னை நம்பி அனுப்புற வேலைக்கு நீ என்ன அப்படி வொர்க் பண்ணுறேன்னு நான் பார்க்கிறேன்'என்று கொஞ்சம் தெனாவட்டாக இருந்தாள்.



இந்திரா அருகில் போகவும் தீபா நிரல்யாவிடம் “இலக்கியன் சார்கிட்டப் போய் என்ன செய்யனும்னு விவரமாக கேளு” என்றாள்.



இப்பொழுது நிரல்யா இலக்கியன் அருகில் சென்று “சார்” என்றதும்

அவனோ அவளை பேசவிடாமல் “எதுக்கு இப்போ தொல்லை செய்ற? என்ன திரும்பவும் சாரி கேட்க வந்து இருக்கியா?” என்றதும்


“இல்லை சார்”


“அப்போ வேற என்ன விஷயம்?சீக்கிரமா சொல்லு”



“அது யாமினி மேம் என்னை இங்கே வரச் சொன்னாங்க இந்திரா மேம்க்கு என்னென்ன கரெக்ஷன் செய்யனும்னு சொல்லுங்க சார்” என்றார்.


அவள் சொன்னதைக் கேட்டு அதிர்ச்சியோடு இலக்கியன் அவளை நம்பாமல் தன் கைப்பேசியை எடுத்து பார்க்க அதில் யாமினி நிரல்யாவின் புகைப்படத்தை அனுப்பி அதில் பெயரையும் சேர்த்து அவனுக்கு தெரிந்துக் கொள்வதற்காக அனுப்பி இருந்தார்.


உடனே அவளை மேலிருந்து கீழ் வரை ஆச்சரியமாக பார்த்தவன் “உங்களை இதை வரைக்கும் யாமினி மேம்மோட நான் பார்த்தது இல்லை”என்று தன் சந்தேகத்தை அவளிடம் கேட்டான்.



நிரல்யா அதற்கும் எந்தவிதமான உணர்ச்சியையும் காட்டாமல் “சார் மேம் என்னை ஜீனியர் ஆர்டிஸ்ட்களுக்கான மேக்கப் பொறுப்பை என்கிட்ட தந்துடுவாங்க அதனால என்னோட வேலை முக்கால்வாசி அங்கே தான் இருக்கும்” என்றாள்.



அவள் சொல்வதை எல்லாம் வைத்து பார்த்தால் இலக்கியனுக்கு நம்பிக்கை இல்லை.ஆனால் தற்பொழுது வேறு வழியில்லாததால் எடுக்கப் போகும் பாடலுக்கான செட்அப்பை காட்டி அதற்கு ஏற்றாவாறு இந்திராவின் ஒப்பனையை மாற்றச் சொன்னான்.



எல்லாவற்றையும் பொறுமையாக கேட்டவள் “ஓகே சார் நீங்க சொன்ன மாதிரி மாத்தி விடுறேன்” என்றதும் “அதிகமான டைம் எடுக்காதீங்க ஏற்கனவே எங்க டீம்க்கு தாமதமாகி விட்டது”என்றான்.


“இல்லை சார் ரொம்ப நேரம் ஆகாது” என்று நேராக இந்திரா அருகில் சென்று அவளை தன்னோடு அந்த கட்டிடத்தின் அருகில் உள்ள ஒப்பனை அறைக்கு அழைத்துச் சென்றாள்.



இலக்கியனும் நிரல்யாவும் என்ன பேசிக் கொள்கிறார்கள் என்பதை அறிய மணியும் அருகினில் போய் நின்றுக் கொண்டான்.நடந்ததை நேராக சைத்ரனிடம் சொன்னான்.அவனும் நம்ப முடியாமல் “என்ன மணி சொல்ற அந்த பொண்ணு யாமினி மேம்மோட அசிஸ்டென்ட்டா நான் இந்தப் பொண்ணை இதுவரைக்கும் ஷீட்டிங் ஸ்பாட்டுல பார்த்ததே இல்லை ” என்று அவளையே உற்றுப் பார்த்தான்.


அப்பொழுது அவளுடைய தாடையின் ஓரமாக இருந்த மச்சத்தைக் கவனித்தவன் ‘இது அவளாக இருக்குமோ?’ என்று நினைத்தவன் ‘இருக்காது இந்நேரம் அவ பார்க்க நல்லா இருப்பாள்’ என்று தன்னையே சமாதானம் செய்துக் கொண்டான்.



நிரல்யா சொன்ன மாதிரி குறுகிய காலம் அரைமணி நேரத்தில் இலக்கியன் சொன்ன மாதிரி ஒப்பனையும் உடையில் சில திருத்தங்களையும் மாற்றி அந்த கதாபாத்திரமாகவே மாற்றிக் கொண்டு வந்தாள்.



அவளின் ஒப்பனை திறமையைப் பார்த்து அங்கிருந்த அனைவரும் அசந்து போயினர்.இலக்கியன் நிரல்யாவின் திறமையைக் கண்டு ஒருநொடி ஆச்சரியமடைந்தான்.


இந்திராவோ ‘தனக்கு இந்த கதாபாத்திரம் எவ்வளவு பொருந்தி இருக்கிறதைப் பார்த்து எல்லோரும் பாராட்டப் போகிறார்கள்’ என்று நினைத்துக் கொண்டு வந்தாள்.


ஆனால் இலக்கியன் இந்திராவைக் கண்டதும் நிரல்யாவின் அருகில் சென்றவன் “சூப்பர் நான் எதிர்பார்த்த மாதிரியே நீங்க என்னுடைய ஹீரோயினைக் கொண்டு வந்துட்டீங்க தாங்ஸ் என்னோட கனவை அப்படியே நிஜத்தில் கொண்டு வந்து இருக்கீங்க சான்ஸே இல்லை” என்று அவளின் கையைப் பிடித்துக் கொண்டு பாராட்டினான்.



நிரல்யாவிற்கு ஒருவித தயக்கம்,மகிழ்ச்சி,படபடப்பு என்று எல்லா உணர்ச்சிகளும் சேர்ந்து ததும்ப நின்றாள்.அவளுக்கு இத்தனை பேர் முன்னிலையில் எல்லாம் பாராட்டு என்பது கிடைத்ததே இல்லை.இது ஒரு புதுவித அனுபவமாக இருந்தது.


இலக்கயனிடமிருந்து தன் கையை எடுத்துக் கொண்டவள் “ரொம்ப தாங்ஸ் சார்” என்றாள்.


இங்கு நடப்பவை எல்லாம் பார்த்து தீபாவிற்கு கோபமும் வஞ்சகமும் சேர்ந்து வந்தது என்றால் இந்திராவிற்கு எரிச்சலாக வந்தது.’நிரல்யாவின் மேக்கப் திறமையை விட தன்னுடைய அழகிற்கு அது எத்தனை பொருத்தமாக இருக்கிறது என்று தானே இந்த இலக்கியன் பாராட்ட வேண்டும் அதை விட்டுட்டு இவள் ஏதோ சாதித்த மாதிரி பேசுகிறான்’ என்று இதற்கும் நிரல்யாவின் மீது தான் ஆத்திரம் வந்தது இந்திராவிற்கு.



ஒவ்வொருவரும் ஒவ்வொரு சூழ்நிலையில் இருக்க சைத்ரனோ நிரல்யாவை அப்படியே தன்னால் முடிந்த மட்டும் கண்களாலேயே அவளை கவனித்துக் கொண்டிருந்தான்.



அவனுக்கு தனக்குத் தெரிந்த அவளாக இருக்குமோ? அதற்கான அடையாளங்கள் எதாவது தென்படுகிறதா? என்று ஆராய்ச்சி செய்துக் கொண்டிருந்தான்.அதனால் அங்கே நடப்பவைக்கு எந்த பதிலும் சொல்லாமல் அமைதியாக இருந்தான்.



சைத்ரனைப் பார்த்த மணி “நீ வேற லெவல் அந்த ஹீரோங்கிற கெத்தை அப்படியே மெயின்டெயின் பண்ணுற பாரு சூப்பர்” என்று நிரல்யாவிடம் பேசாமல் இருப்பதை நினைத்து அவன் பேசினான்.


அடுத்து படப்பிடிப்பிற்கான வேலைகள் தொடங்க ஆரம்பித்தன.இதில் சைத்ரனும் இந்திராவும் இணைந்து நடிக்க வேண்டிய பாடல் காட்சி படமாக்கப்பட்டது.



ஒவ்வொரு இடைவேளையின் போது நிரல்யா இந்திராவின் ஒப்பனையை சரிசெய்ய அருகில் சென்றால் அவளோ இவள் மீதிருந்த கோபத்தினால் அதற்கு சரியான ஒத்துழைப்பு கொடுக்காமல் அவளைப் போட்டு பாடாய்படுத்திக் கொண்டிருந்தாள்.அவளோடு சேர்ந்து தீபாவும் இது சரியில்லை அதை ஒழுங்காக பாரு என்று குறைச் சொல்லிக் கொண்டு இருந்தாள்.



இதை எல்லாம் சகித்துக் கொண்டு தன் வேலையைத் தொடர்ந்தாள் நிரல்யா.


சைத்ரனோடு நடிக்கும் பொழுது இந்திரா அவனிடம் நெருக்கம் காட்டினாள்.இது திரைப்படப் பாடலுக்காகத் தான் என்று நினைத்து சைத்ரன் தன் நடிப்பை தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கும் பொழுது இந்திரா அவனருகில் வந்து அமர்ந்து “சைத்ரன் இன்னைக்கு நாம ரெண்டுபேரும் வெளியே எங்கேயாவது போகாலாமா?” என்றாள்.



சைத்ரனோ முகத்தை விருப்பமில்லாமல் வைத்துக் கொண்டு “எனக்கு வெளியே முக்கியமான வேலை இருக்கு” என்றவன் இலக்கியனிடம் “என்னோட சீன்ஸ் முடிஞ்சிடுச்சுல்ல நான் கிளம்புகிறேன்” என்றான்.



இந்திரா எதுவும் பதில் சொல்லாமல் “கூடிய சீக்கிரம் எனக்கு சாதகமான பதிலை உன்னையே சொல்ல வைக்கிறேன் பாரு”என்று தனக்குள்ளே சொல்லியபடி செல்லும் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.


சைத்ரன் தன் வாகனத்தில் ஏறுவதற்காக செல்லும் பொழுது அவனுடைய கைப்பேசியை அங்கேயே வைத்து விட்டுச் செல்வதை கவனித்த நிரல்யா அதை எடுத்துக் கொண்டு அவனருகில் சென்று “சார் உங்க போனை வைச்சுட்டு போறீங்க” என்று அவனிடம் கொடுக்கும் பொழுது தன் தயக்கத்தை விடுத்து “சார் ரொம்ப தாங்ஸ் இவ்வளவு லேட்டா சொல்லுறேன்னு தப்பா நினைக்காதீங்க நீங்க பெரிய ஸ்டார் உங்ககிட்ட வந்து பேச தயக்கமாக இருந்தது அதனாலத் தான் வந்து சொல்லலை மன்னிச்சிடுங்க” என்றாள்.


நிரல்யா சொன்னதற்கு சிறு தலையசைப்பை பதிலாக தந்து விட்டு அங்கிருந்து சென்று விட்டான் சைத்ரன்.


நிரல்யாவிற்கு இதுவெல்லாம் புதிது அல்ல.பெரிய பொறுப்பில் இருப்பவர்களின் செயல்பாடு தான் என்று அமைதியாக இருந்தாள்.


மணி சைத்ரனிடம் “அந்தப் பொண்ணே வந்து பேசுது நீ ஏன் எதுவும் பேசிக்கலை” சைத்ரனோ ஆழ்ந்த யோசனையோடு தலையில் கைவைத்தப்படி “மணி வீட்டுக்கு சீக்கிரமா போ இப்போ எதுவும் நான் எதுவும் பேசுற நிலைமையில் இல்லை” என்றதும் மணி தன் வாயை மூடிக் கொண்டான்.



அன்றைய நாளிற்கான படப்பிடிப்பு முடிந்து எல்லோரும் படப்பிடிப்பு தளத்தில் இருந்து சென்று விட்டனர்.நிரல்யா தன் வேலையை முடித்து விட்டு பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தாள்.


தங்கள் கருத்துக்களை இங்கே பதிவிடுங்கள்
 

NNK-74

Member
கண்ணுக்குள்ளே கரைந்த நிலவு

அத்தியாயம் -4


நிரல்யா பேருந்து நிலையத்தில் நின்றுக் கொண்டிருக்கும் பொழுது அவளுடைய கைப்பேசி அழைத்தது.யாரென்று பார்த்தால் அவளுடைய அம்மா தான் அழைத்திருந்தார்.



அழைப்பை எடுத்தவள் “ஹலோ” என்றதும் மறுமுனையில் அவளுடைய அம்மா சரஸ்வதி பேசினார்.


“ஹலோ நிரல்யா என்னம்மா நல்லா இருக்கியா? வேலை முடிஞ்சு வீட்டுக்கு போயிட்டியாம்மா” என்று அக்கறையாகக் கேட்டார்.


“இல்லைம்மா இப்போத் தான் பஸ் ஸ்டாப்புல இருக்கேன் இன்னும் பஸ் வரலை”



சரஸ்வதி “அப்படியா! ஒழுங்கா சாப்பிடுறியாம்மா”


அதற்கு “ம்ம்…” என்று பதிலளித்தாள்.உடனே சரஸ்வதி “என்னம்மா இன்னைக்கு ஆபிஸ்ல வேலை ஜாஸ்தியோ?குரலே சரியில்லை ரொம்ப களைப்பா இருக்கா?”


“ஆமாம் அம்மா இன்னைக்கு வேலை அதிகம் தான்” என்றாள்.


“சரிம்மா உடம்பை நல்லா பார்த்துக்கோ கண்ணு லீவு கேட்டு ஊருக்கு வந்து கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு போம்மா” என்றார் அக்கறையாய்…


நிரல்யாவோ யோசனையோடு “இப்போ லீவு கிடைக்குமான்னு தெரியலை இன்னும் ரெண்டு மாசம் ஆகும்னு நினைக்கிறேன்” என்று இவளே பொய் சொன்னாள்.



“அப்படியா! சரிம்மா எங்களுக்காக உன் உடம்பை கெடுத்துக்காதே நல்ல கவனமாக பார்த்துக்கோம்மா” என்றார்.



“சரிம்மா அப்பா என்ன பண்ணுறாங்க?”


“அப்பா என்ன தூங்குறாங்க”


“சரி விக்ரமும்,லட்சுமியும் நல்லா இருக்காங்களா?”


“ரெண்டுபேரும் இப்போ தான் வீட்டுக்கு வந்தாங்க”என்றதும்


“சரிம்மா பஸ் வந்துடுச்சு நான் அப்புறமா பேசுறேன்” என்று கைப்பேசியை வைத்து விட்டாள்.அவள் செல்ல வேண்டிய பேருந்து வர அதில் தன்னையும் சேர்த்து இணைத்துக் கொண்டாள்.



பேருந்து தன் பயணத்தை தொடர நிரல்யாவின் மனமோ தன் அம்மாவிடம் பொய் பேசியதை நினைத்து அதில் பயணித்தது.



இந்த மாதிரி அவள் பொய் பேசத் தொடங்கி இதோடு மூன்று வருடங்களுக்கு மேல் ஆகி விட்டது.நீண்ட பெருமூச்சு விட்டவள் 'என்னைக்கு இந்த விஷயம் வீட்டுக்கு தெரிய வருதோ அன்னைக்கு என்னவெல்லாம் நடக்க போகிறதோ?’ என்று எண்ணியபடி தன் வாழ்க்கையைப் பற்றி நினைத்து கவலைப்பட்டாள் நிரல்யா.


அவள் இறங்க வேண்டிய நிறுத்தம் வந்ததும் இறங்கியவள் ஒரு பத்து நிமிட பயணத்திற்கு பிறகு அந்த அடுக்குமாடி குடியிருப்புக்குள் மூன்றாவது தளத்தில் இருந்த இரண்டு அறைக் கொண்ட வீட்டில் களைப்பாக இருக்க கதவை திறந்துக் கொண்டு உள்ளே செல்லவும் தேநீரின் மணம் அவளை உள்ளே வரவேற்றது.



கதவை திறந்ததும் வந்த தேநீரின் மணத்தை கண்களை மூடி நுகர்ந்தவாறே “ம்ம்… என்ன வாசனை? நீ டீ போட்டால் தான் இந்த வீடே மணக்குது” என்று பெருமையாக பேசிக் கொண்டே நேராக சமையலறையில் உள்ளே வந்தாள்.



அங்கே இவளுக்காக முகம் முழுவதும் புன்னகையோடு அவளை அன்போடு பார்க்கும் தன் தோழி அஸ்வதி அங்கே நின்றுக் கொண்டிருந்தாள்.அவளைக் கண்டதும் “ம்ம்… மோப்பம் பிடிச்சது போதும் போய் ப்ரெஷ் ஆகிட்டு வா ஒன்னா சேர்ந்து டீ குடிக்கலாம்”என்றாள்.


நிரல்யா “வெறும் டீ மட்டும் தானா? தொட்டுக் கொள்ள ஒன்னும் இல்லையா?” என்றாள் கவலை தோய்ந்த முகத்தோடு…


“ம்ம்… வடையும் சட்னியும் வாங்கி இருக்கேன் என்ன தான் இப்படி சைடிஷ் கேட்கிறியோ தெரியலை சரி சரி உடனே முகத்தை பாவமா வைச்சுகிறது சீக்கிரமா வா இல்லைன்னா சூடு ஆறிடும்” என்று அவசரப்படுத்தினாள் அஸ்வதி.


இவளும் சந்தோஷமாய் “ஓகே ஓகே” என்று சிறுபிள்ளை போல் தலையாட்டிக் கொண்டு சென்றாள்.


அஸ்வதி மகிழ்ச்சியாக செல்லும் தன் தோழியைப் பார்த்தாள்.’எத்தனை கவலைகளை மனதில் தேக்கி வைத்து இருக்கிறாள் இந்த சின்னச் சின்ன விஷயங்களில் தான் அவளின் சந்தோஷம் இருக்கு என்பதை எல்லாம் புரிந்துக் கொள்ள அவளுக்கான ஒருவன் சீக்கிரம் கிடைக்க வேண்டும்’ என்று மனதார கடவுளிடம் வேண்டுதல் வைத்தாள்.



நிரல்யா சொன்னது போலவே அடுத்த பத்து நிமிடத்தில் உடை மாற்றிக் கொண்டு வந்து இருவரும் எப்பொழுதும் உட்காரும் அந்த வீட்டின் பால்கனியில் வந்தமர்ந்தனர்.


நிரல்யா ஒரு கையால் வடையையும் இன்னொரு கையால் தேநீரையும் கையில் ஏந்தியபடி இதுஒரு வாய் தேநீர் ஒரு மடக்கு என்று நிம்மதியாய் பருகிக் கொண்டிருந்தாள்.அதோடு சட்னியையும் தொட்டு வடையை சாப்பிட்டுக் கொண்டே “என்ன வாசனையா இருக்கு தெரு முனையில் இருக்கிற கடையில தானே வாங்கினே?”


ஆமாம் என்று தலையசைத்தவாறே அவளின் இந்த சிறுபிள்ளைத்தனமான சாப்பிடும் பழக்கத்தைப் பார்த்து சிரித்துக் கொண்டே அஸ்வதி “எங்கிருந்து இந்த மாதிரி பழக்கம் எல்லா கத்துகிறேன்னு தெரியலை இப்படித் தான் வெளியே போனால் சாப்பிடுவியா?”


“ப்ச்… இல்லைப்பா வெளியே போனால் சாப்பிடவே நேரம் இல்லை இதுல எங்கே இரசித்து ருசித்து சாப்பிட? இந்தப் பழக்கம் எப்படி வந்துச்சுன்னு தெரியலை யாரோ இப்படி சாப்பிடுவாங்கன்னு நியாபகம் இருக்கு ஆனால் யாருன்னு தெரியலை” என்று திரும்பவும் அதே வேலையைத் தொடர்ந்தாள்.


“இதென்ன இருக்கு ஆனா இல்லை அந்த மாதிரி பேசுற?”


“ஐயோஓஓ… தெரியலை சாமி விட்டுடு என்னை நிம்மதியா டீ குடிக்க விடு” என்று நிரல்யா தேநீர் குடித்து முடித்ததும் அப்படி அந்த சாய்வு நாற்காலியில் விழிகளை மூடி சாய்ந்துக் கொண்டாள்.



“நிரல்யா அம்மா போன் போட்டு இருந்தாங்க” என்றதும் பதறியபடி நிமிர்ந்து உட்கார்ந்தவள் “என்ன அம்மா எப்போ ஊருக்கு வர்றாங்களாம்?” என்றதும்


அஸ்வினி “ப்ச்… எங்க அம்மா இல்லை உன்னோட அம்மா” என்றதும் திரும்பவும் சாய்ந்து படுத்துக் கொண்டாள்.


“இன்னும் எத்தனை நாளைக்கு இந்த மாதிரி பொய் சொல்லிட்டு இருக்கப் போற”



நிரல்யாவிடம் பதில் இல்லை.அமைதியாக இருந்தாள்.


அஸ்வதி “உன்கிட்ட தான் கேட்கிறேன் பதில் சொல்லு”


அஸ்வதியைப் பார்த்து “என்ன பதில் சொல்லனும்னு நினைக்கிறே? இப்போ உண்மையை சொன்னால் தேவையில்லாமல் பிரச்சினை வரும் அஸ்வதி அதோடு இப்போத் தான் குடும்பத்துல கொஞ்சம் பிரச்சினை இல்லாமல் நிம்மதியா போகுது” என்றாள்.


“எல்லாம் சரி தான் உன் வாழ்க்கையை எப்போ பார்க்கப்போற?”


அஸ்வதி இப்படிக் கேட்கவும் நிரல்யா அவளை வித்தியாசமாக பார்த்தாள்.அவள் தன்னை பார்க்கும் பார்வையில் வித்தியாசத்தை உணர்ந்தவள் “எதுக்குடி இப்போ ஏதோ அரிய வகை மிருகத்தை பார்க்கிற மாதிரி பார்க்குறே” என்றதும்


வந்த சிரிப்பை அடக்கியபடி “என் கண்ணு அழகுல மயங்கி விழுந்துட்டேன் அதான் அப்படி பார்க்குறேன்” என்று திருஷ்டி சுற்றி விட்டாள் நிரல்யா.



அவளின் செய்கையைப் பார்த்து சிரித்துக் கொண்டே “போதும்டி நீ ஓட்டுனது நான் சீரியஸா பேசிட்டு இருக்கேன் ஒழுங்கா கேட்கிறியா இல்லையா?”


“என்னடி சொல்ற? சீரியஸா இருக்கியா? உன்னைப் பார்த்தால் அப்படி ஒன்னும் தெரியலையே” என்றாள் கவலையோடு…


“ஷ்ப்பா… மிடில மிடில நிறுத்து உன் மொக்கை காமெடியை நிறுத்துடி தாங்க முடியல” என்று இருவரும் சிரித்துக் கொண்டு இருந்தனர்.


நிரல்யா அஸ்வதியிடம் மட்டும் தான் இப்படி நெருக்கமாக வெளிப்படையாக பழகுவாள்.



இருவரும் பள்ளிப் பருவத்திலிருந்தே தோழிகள்.அதனால் இரண்டு பேரும் தங்களுக்குள் எதையும் மறைக்காமல் வெளிப்படையாக பேசுவார்கள்.


அஸ்வதி “அம்மா போன் போட்டு நீ எப்படி இருக்கேன்னு விசாரிச்சாங்க உன் வேலை எப்படி போய்ட்டு இருக்குன்னு விசாரிச்சாங்க நிரல்யா.உன்கூட சேர்ந்து நானும் பொய் சொல்றேன்னு ரொம்ப வருத்தமாக இருக்கு”


நிரல்யா “கூடிய சீக்கிரம் உண்மையை சொல்லலாம் தான் இருக்கேன்” என்றதும்



அஸ்வதி “பொய் சொல்லாதே நிரல்யா.மூன்று வருஷத்துக்கு முன்னாடி இப்படித் தான் ஊர்ல படிப்பை முடிச்சுட்டு அதுக்கான வேலைக்கு போறேன்னு சொல்லி இங்கே சென்னைக்கு வந்தே ஆனால் சினிமால மேக்கப் போட போயிட்டே” என்றாள் கவலையோடு…



“அஸ்வதி சும்மா நான் வேணும்னு செஞ்ச மாதிரி சொல்லாதே! எத்தனை இடத்துல வேலைக்காக முயற்சி பண்ணேன் எங்கேயும் கிடைக்கலை அதோடு அப்பாக்கும் பக்கவாதம் வந்ததுல குடும்பமே கஷ்டத்துல இருந்துச்சு அதனாலத் தான் படித்த படிப்புக்கு வேலை கிடைக்கலை எனக்கு பிடிச்ச மேக்கப் வேலைக்கு போனேன் அதனால் தான் அந்த முடிவை எடுக்க வேண்டியதாக போச்சு” என்று தன் நிலைமையைச் சொன்னாள்.


“ம்ம்… சரி உன் நிலைமையினால இந்த முடிவை எடுத்தே அப்போ ஏன் அம்மாகிட்ட உண்மையைச் சொல்லலை?”


“ப்ச்… எல்லாம் தெரிஞ்சும் ஏன் இப்படி கேள்வி கேட்கிறேன்னு தெரியலை அஸ்வதி நான் சினிமாவுல வேலைக்குப் போறேன்னு சொன்னால் அம்மா குடும்ப கெளரவம் தான் முக்கியம்னு நினைச்சு என்னை அனுப்ப மாட்டாங்க அதான் சொல்லலை அதோடு யாமினி மேம் நான் சிரமத்துல இருக்கும் போது நான் பணம் கேட்கும் போதெல்லாம் தந்தாங்க அதனாலத் தான் விக்ரம் காலேஜ் முடிக்க போறான்,லட்சுமி +2 படிக்கிறாள்.உண்மையைச் சொன்னால் இரண்டுபேரும் படிக்க முடியாமல் போயிருக்கும் அஸ்வதி

அப்போ அப்பா என்னோட கடமையை மட்டும் முடிச்ச மாதிரி இருக்காதா? அதனால இது தப்பில்லை” என்று தன் பக்க நியாயத்தை சொல்லி விட்டு கோபத்தோடு நேராக தன் அறையில் போய் படுத்துக் கொண்டாள்.



அஸ்வதி ஒரு வேகத்தில் எல்லாம் தெரிந்தும் தோழியிடம் இப்படி கேட்டாள்.ஏனென்றால் காலையில் கைப்பேசியில் பேசிய அஸ்வதியின் தாய் அவளை திருமணம் செய்துக் கொள்ள வற்புறுத்தியிருக்கிறார்.



அஸ்வதியும் நிரல்யாவிற்காகத் தான் தன் திருமணத்தையே தள்ளிப் போட்டு இருக்கிறாள்.


அஸ்வதியும் நிரல்யாவும் சொந்த ஊரான திருச்சியில் கல்லூரிப் படிப்பை முடித்ததும் அஸ்வதி மேற்படிப்பிற்காக சென்னைக்கு வந்தாள்.ஆனால் நிரல்யா மேற்படிப்பு படிக்காமல் அவளுடைய தந்தை பக்கவாதத்தால் வீட்டில் முடங்கிப் போனார்.ஏற்கனவே கடன் வாங்கி இருக்க மருத்துவச் செலவிற்காகவும் கடன் வாங்கினர்.



இதனால் கடன் தொல்லை,வீட்டுச் செலவு,மருத்துவ செலவு என்று பணத்தின் தேவை அதிகமாக இருப்பதால் நிரல்யா சென்னையில் வேலைக்கு வந்தாள்.அதோடு தங்குவதற்கு ஹாஸ்டலில் இடம் பார்த்தாள்.அங்கே சரியாக வாடகை கொடுக்காமல் திணறிக் கொண்டு இருக்கும் போது ஒருநாள் வழியில் எதிர்பாராத விதமாக சந்தித்து பேசும் பொழுது தான் அஸ்வதியின் கட்டாயத்தினாலும் எல்லாவற்றையும் மனம் திறநதுச் சொன்னாள்.கைப்பேசியில் உரையாடும் பொழுது ஒருதடவைக் கூட தன்னுடைய நிலைமையைப் பற்றி சொல்லவில்லை.நேரில் நிரல்யா இருந்த தோற்றத்தில் தான் கண்டுபிடித்தாள் அஸ்வதி.



நேரம் காலம் பார்க்காமல் வேலைப் பார்த்ததும்,சரியான தூக்கம்,சாப்பாடு இல்லாமல் கஷ்டப்படுவதை உணர்ந்தவள்

உடனே தனது அன்னையிடம் சொல்லி சென்னையில் அவளுடைய தூரத்து உறவினரிடம் பேசி இந்த வீட்டை ஒத்திகைக்கு எடுத்து நான் தனியாக இருக்கிறேன் என்னுடன் வந்து தங்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தி தன்னோடு வைத்து இருக்கிறாள் அஸ்வதி.



இதில் இவளும் திருமணம் செய்து போய் விட்டால் நிரல்யா தன்னைப் பற்றி கவலைப்படாமல் உடல்நிலையையும் சரியாக கவனிக்காமல் இருப்பாள்.இதைப் பற்றி எல்லாம் யோசித்த அவளின் தாய் சரஸ்வதியும் அஸ்வதியிடம் எப்படியாவது நிரல்யாவிடம் திருமணத்தைப் பற்றி பேசி அவளிடம் சம்மதம் வாங்கிக் கொடு என்று வேறு இவளிடம் இந்தப் பொறுப்பை கொடுத்து இருக்கிறார் இதை எல்லாம் கவனத்தில் கொண்டு அவளை விரும்பும் ஒருவனையாவது பார்க்கலாம் என்றால் வேலை விட்டால் வீடு வீட்டை விட்டால் தூக்கம் என்று இருப்பவளை எப்படி மாற்ற போகிறாளோ? என்று கவலையோடு திரும்பவும் நிரல்யாவைப் பார்க்க போனாள் அஸ்வதி.


அங்கே தன் அறையில் போர்வையை முழுவதும் போர்த்திக் கொண்டு படுத்து இருப்பவளைக் கண்டவள் அவளருகில் போய் அமர்ந்துக் கொண்டு “நிரல்யா என்ன என் மேல கோபமா இருக்கியா?”



அவளிடம் பதிலில்லை.”ப்ச்… உன்கிட்ட தான் பேசுறேன் ஆமாம் இல்லைன்னு தலையவாது ஆட்டுடி”



உடனே நிரல்யா “ஹேய் நான் ஆடு,மாடு இல்லை நீ சொன்னதும் தலையை ஆட்டுறதுக்கு”



அஸ்வதி சிரித்துக் கொண்டு “என்ன திடீர்னு ஆடு,மாடு எல்லாம் உன்கூட கம்பேர் பண்ணுற நீ செல்ல நாய்க்குட்டி தெரியுமா? அழகா வாலைத் தான் ஆட்டனும்” என்றதும்



“என்னது நாய்க்குட்டியா? எவ்வளவு தைரியம் இருந்தால் என்னை நாய்னு சொல்லுவே” என்று போர்வையை விலக்கிக் கொண்டு அஸ்வதியை கிச்சுகிச்சு மூட்டினாள்.



அவளோ சிரித்துக் கொண்டே “அடியேய் நாய்க்குட்டி தானே சொன்னேன் குரங்கு குட்டினு சொல்லலையே” என்று இவளும் நிரல்யாவை கிச்சுகிச்சு மூட்டினாள்.



இருவரும் ஒருவரையொருவர் கிச்சுகிச்சு மூட்டி விளையாடி ஓய்ந்து போய் அப்படியே அந்த மெத்தையிலே சாய்ந்தனர்.நண்பர்கள் இருவரின் கோபமும் இதுவரைக்கு தான் செல்லும்.

அஸ்வதி நிரல்யாவைப் பார்த்து “நம்ம ரெண்டுபேரும் எப்பவும் இப்படியே இருக்கனும்டி” என்றதற்கு நிரல்யாவும் “கண்டிப்பா” என்றாள்.


அப்பொழுது தான் நிரல்யா அன்றைக்கு படப்பிடிப்பு தளத்தில் நடந்ததை சொல்ல ஆரம்பித்தாள்.


உங்களின் கருத்துக்களை இங்கே பதிவிடுங்கள்.
 

Attachments

  • FB_IMG_17058176759384020.jpg
    FB_IMG_17058176759384020.jpg
    358.6 KB · Views: 0

NNK-74

Member
கண்ணுக்குள்ளே கரைந்த நிலவு அத்தியாயம் -5

பொதுவாக இருவரும் தாங்கள் வேலை செய்யும் இடங்களில் நடப்பதை பகிர்ந்துக் கொள்வார்கள்.


அப்படித் தான் நிரல்யாவும் படப்பிடிப்பு தளத்தில் நடந்த விஷயங்களை எல்லாவற்றையும் சொன்னாள்.அதை முழுவதுமாக கேட்ட அஸ்வதி “ம்ம்… யாமினி உனக்கு இவ்வளவு பெரிய வாய்ப்பு தந்தது பெரிய விஷயம்டி”



“அது எனக்கும் தெரியும் ஆனால் வேற எதாவது பிரச்சினை வருமோன்னு கவலையா இருக்கு”





அஸ்வதி “எப்படி இருந்தாலும் அங்கே இருக்கிற தீபா என்னவோ ஏற்கனவே உன்னை சும்மா விட்ட மாதிரி பேசுற தேவையில்லாததை யோசிக்காதே கூடிய சீக்கிரம் இந்தத் துறையில் உன்னோட பெயரையும் பதிக்கப் போறேன்னு சொல்லு” என்றாள் நம்பிக்கையோடு…



அஸ்வதி இப்படி ஆதரவாக பேசினாலும் நிரல்யாவிற்கு ஒருவித கலக்கமாகவே இருந்தது.இன்றைக்கு நடந்த விஷயத்தை மனதில் வைத்து தன்னை எப்படி பழி தீர்க்கப் போகிறாளோ? என்று யோசித்தாள்.


அவளது ஆழமான யோசனையைக் கவனித்த அஸ்வதி “ப்ச்… பியூச்சர்ல நடக்கப் போறதை நினைச்ச கவலைப்படுறதை விட்டுட்டு இப்போ இருக்கிற தருணத்தை நினைச்சு சந்தோஷ இரு” என்றவள்


“எங்க கம்பெனியை வெளியே இருக்கிற ஒரு புது கம்பெனி வாங்கப் போகுதுனு சொல்றாங்க அப்படி இருந்தால் அங்கே புது வேலைவாய்ப்பு வரும்னு நினைக்கிறேன் அப்படின்னா இங்கே ஒத்து வரலைன்னா அங்கே வந்து சேர்ந்திடு” என்றாள்.


அஸ்வதி சொன்னதையும் யோசித்தவள் “எக்ஸ்பிரியன்ஸ் இல்லாத எனக்கு சம்பளம் குறைவாக இருக்குமே சரி பார்க்கலாம்” என்றாள்.


“என்ன எல்லாம் அக்கவுண்ட் சம்பந்தப்பட்டது தானே சி ல நேரம் எனக்கே ஹெல்ப் பண்ணி இருக்கல்ல அப்புறம் என்ன?”



சரி என்பது போல் தலையாட்டினாள் நிரல்யா.அஸ்வதியோ மனதினுள் ‘எப்படியோ இங்கேயாவது நல்ல ஒரு பையனா பார்த்து நிரல்யாக்கு செட் பண்ணிட வேண்டியது தான் இந்த சினிமாக்காரங்களை நம்பவே முடியாது அதனால இது தான் நல்ல வழி அப்போத் தான் எனக்கு நிம்மதியா இருக்கும்’ என்று யோசிக்கிறேன் என்று முகத்தில் பாவனையைக் காட்டி புன்னகைத்துக் கொண்டாள்.



அவளின் முக பாவனைகளையே பார்த்துக் கொண்டிருந்த நிரல்யா “என்னாடி என்னை வைச்சு எதாவது ப்ளான் கீளீன் பண்ணலையே” என்றதும் சற்று பதறியபடி…


“என் செல்லம்ல நீ, உன்னை வைச்சு என்ன ப்ளான் பண்ண போறேன்னு சொல்லு?” என்று சிரித்துக் கொண்டே ஏதோ சமாளித்தாள் அஸ்வதி.


ஆனால் நிரல்யா அவளை நம்ப முடியாமல் பார்த்தவள் “நீ கோபமா பேசினால் கூட நான் நம்புவேன்டி ஆனால் சிரிச்சிட்டே சொல்ற பத்தியா? அங்கே தான் எனக்கு டவுட்டா” என்று அஸ்வதியை சந்தேகப் பார்வை பார்த்தாள்.


அப்பொழுது அஸ்வதியின் கைப்பேசி அழைக்க இதுதான் நல்ல வாய்ப்பு என்று எழுந்து ஓடி விட்டாள்.அவள் செல்வதைப் பார்த்த நிரல்யா மனதினுள் 'ஏதோ ஒன்னு மறைக்கிறன்னு தெரியுது என்னன்னு சீக்கிரமா கண்டுபிடிக்கிறேன்’ என்று நினைத்துக் கொண்டாள்.



தன் வீட்டிற்கு வந்த சைத்ரன் அவனுடைய அன்றாட வேலைகளில் ஈடுபட்டான்.அப்படியாவது தேவையில்லாத எண்ணங்களை கொஞ்சம் சிந்திக்காமல் இருக்கலாம் என்று நினைத்தான்.



இரண்டு படுக்கையறைக் கொண்ட அந்த நவீன அடுக்குமாடிக் குடியிருப்பில் தனியாக வசித்து வந்தான் சைத்ரன்.அவனுக்கு தன் குடும்பத்தோடு இருக்க வேண்டும் என்று விருப்பம் தான்.

பெங்களூரில் தான் அவனுடைய குடும்பம் இருக்கிறது.ஆனால் இந்த கலைத்துறையில் அவன் நுழைந்த பிறகு மாதத்தில் பாதி நாட்கள் வெளியூரிலும் மற்ற நாட்களில் டப்பிங் வேலைக்காக சென்னையிலும் சென்றது.அதனால் இங்கேயே சொந்தமாக தனக்கு ஒரு வீட்டை வாங்கினான் சைத்ரன்.அதில் தனியாக இருக்கிறான்.படப்பிடிப்பு இல்லாத நாட்களில் பெங்களூருக்கு சென்று வருவான்.



அவனோடு உடன்பிறந்தவளாக தங்கை மட்டும் இருக்கிறாள்.அவனுடைய அப்பா தொழிலதிபராக இருக்கிறார்.வீட்டில் தனிமையில் இருப்பதால் அவனுக்கு நிரல்யாவின் முகம் நினைவில் வந்து போனது.



அதுவும் அந்த மச்சம் இந்த இடத்தில் சரியாக அவளுக்குத் தானே இருக்கும்.ஆனால் இவள் அவளாக இருக்குமோ? இருக்க வாய்ப்பில்லை இந்நேரம் அவள் எதாவது ஒரு நிறுவனத்தில் வேலைப் பார்த்துக் கொண்டு இருக்க வேண்டும்.இப்படி இங்கே கஷ்டப்பட வேண்டிய தேவை இருந்திருக்க வாய்ப்பில்லை என்று உறுதியாக நம்பினான் சைத்ரன்.அதோடு அவள் பெயரும் இப்படி வராதே! என்று பலவாறு யோசித்து அப்படியே தூங்கிப் போனான்.


மறுநாள்…


படப்பிடிப்பு தளத்தில் உள்ள ஒப்பனை அறையில் எப்பொழுதும் போல் நிரல்யா தன் வேலைகளை ஆரம்பிக்கும் முன்பே அங்கு வந்த தீபா “நிரல்யா ஏதோ ஒரு தடவை ஹீரோயினுக்கு மேக்கப் போட்டுட்டோம்னு எப்பவும் செய்ற உன் வேலையை செய்யாமல் இருந்திடாதே!” என்றாள்.



அதற்கும் இவள் சரியென்பது போல் தலையாட்டினாள்.அவளைப் பொறுத்தவரை யாமினி மேம் வந்து தன்னை பாராட்டுவார் என்று நம்பிக்கையோடு காத்திருந்தாள்.

ஆனால் யாமினி வரவில்லை.



மாறாக கொஞ்சம் காலதாமதமாக வந்தவர் நிரல்யாவைப் போட்டு பாடாய் படுத்திக் கொண்டு இருந்தார்.”எதையும் சரியாக செய்யமாட்டியா?” “கொஞ்சம் நல்லா இருக்குன்னு சொன்னால் போதுமே தலைக்கணம் வந்துடும்”



இவள் எதாவது பதில் பேசினால் “ஒரு தடவை வாய்ப்புக் கொடுத்தால் எனக்கே ஐடியா சொல்ற அளவுக்கு வளர்ந்திட்டியா?” என்பன போன்ற நிறைய வசைவு மொழிகளைக் கேட்டவளுக்கு தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.இதில் தீபா வேறு இளக்காரமாக பார்த்து சிரித்துக் கொண்டிருந்தாள்.



கொஞ்சம் இடைவேளை நேரத்திற்கான நேரம் வரவும் யாமினி தன் அறைக்குள் சென்றிருக்கும் போது நிரல்யா அருகில் வந்த தீபா “இப்போதாவது உன்னோட லெவல் என்னன்னு புரிஞ்சுதா? நீ என்னத் தான் மேல போகும்னு நினைச்சாலும் உன் தகுதி இதுதான் அதைத் தான் யாமினி மேம் சொல்லிக் காட்டுறாங்க இனிமேல் அதுக்கு ஏற்ற மாதிரி நடந்துக்கோ புரியுதா” என்றதும் நிரல்யாவிற்கு தாங்கவே முடியவில்லை.




இத்தனை நாட்களாக அவளுடைய திறமையைப் பற்றித் தான் குறை பேசினாள் தீபா.ஆனால் இன்றைக்கு அவளுடைய தகுதியைப் பற்றி பேசியதும் நிரல்யாவால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.விழிகளில் கண்ணீர் அப்படியே தேங்கி நின்றுக் கொண்டது.


நெஞ்சம் முழுவதும் தீபாவின் வாயிலிருந்து வந்த கடுஞ்சொல்லால் கணத்து அழுத்தியது.இதற்கு மேல் இங்கிருந்தால் தனது பலவீனமான இந்த அழுகையை தகுதியில்லாத இவளிடம் காட்டிக் கொள்ள விரும்பாதவள் அந்த இடத்திலிருந்து வெளியே வந்து ஒரு ஓரமாக மரத்தின் பின்னால் அழுதுக் கொண்டிருந்தாள்.



சைத்ரன் இந்திராவோடு படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் பொழுது அங்கே இந்திராவின் தாயான பூங்கொடி அங்கே வந்தார்.வந்தவர் நேராக சைகையால் சைத்ரனைப் பார்த்துக் கொண்டே வந்தமர்ந்தவர் “சைத்ரா எப்படி இருக்க?” என்றதும்


“ம்ம்… நல்லா இருக்கேன் ஆன்ட்டி அங்கிள் நல்லா இருக்காங்களா?”


“நல்லா இருக்காங்க சைத்ரா அம்மாகிட்ட நேற்று கூட போன்ல பேசினேன்” என்றதும் சைத்ரன் முகமே மாறிப் போனது.



சைத்ரனின் தாயும் இந்திராவின் தாயும் நண்பிகள்.அதனால் தான் இவனுடைய படத்தில் இந்திரா தன்னுடன் நடிப்பதற்கு அம்மாவிற்காக சிபாரிசு செய்தான்.பூங்கொடி வந்தால் எப்பொழுதும் வருங்காலத்தில் இந்திராவை சைத்ரன் திருமணம் செய்துக் கொள்ள போகிறான் என்று பேச்சை ஆரம்பித்து விடுவார்.



இன்றைக்கு பூங்கொடி படப்பிடிப்பு தளத்திற்கு வருவார் என்று முன்னரே தெரிந்து இருந்தால் அவன் வந்தே இருக்க மாட்டான்.


அதே போல் சைத்ரனின் அம்மாவை பற்றிய பேச்சை ஆரம்பித்தார்.இலக்கியனிடமும் அங்கிருந்த முக்கியமான சிலரிடம் தனது பேச்சை ஆரம்பித்தார்.



என்றைக்கும் அவனுடைய விருப்பத்தை அவர் கேட்டதே இல்லை.அதுபோல் தான் இப்பொழுது இந்திராவுடன் நடிப்பதற்கும் அவனுக்கு விருப்பம் இல்லை.இருந்தாலும் கதையை முதலில் கேட்டு இலக்கியனிடம் படத்தில் நடிப்பதாக ஒத்துக் கொண்டான்.அதற்கு பிறகு இந்திரா சேர்ந்ததால் ஒன்றும் மறுப்பு சொல்லாமல் அமைதியாக இருந்தான்.


அங்கிருந்தவர்களும் சைத்ரனிடம் இதைப் பற்றி எந்த பதிலையும் கேட்காமல் பூங்கொடி சொல்வதை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்தனர்.அதோடு சைத்ரனின் தாயார் தனலட்சுமி அவருடைய முடிவில் பிடிவாதமாக இருப்பார்.இதை எல்லாம் யோசித்தபடியே இருக்க இங்கே பேச்சு அதிகமாக ஆரம்பித்தது.



அவனுடைய வாழ்க்கையைப் பற்றி அவர்கள் பேசியதைக் கேட்டு இவனுக்கு கோபமாக வந்தது.இதை எல்லாம் தற்போது முகத்தில் காட்டினால் தேவையில்லாத பிரச்சினையும்,தன்னைப் பற்றிய கிசுகிசுப்பு வரும் என்று அமைதியாக இருந்தான்.



எல்லாவற்றிருக்கும் புன்னகையே பதிலாக தந்தவன் எங்கேயாவது தனிமையில் கொஞ்ச நேரம் நிற்கலாம் என்றெண்ணி தன்னைச் சுற்றிப் பார்க்க எங்கும் மனிதர்களின் தலைகளே நிரம்பி இருக்க அங்கே வெளியே செல்வதற்கான வழி தெரிந்தது.



அதற்கு மேல் அங்கே இருக்க முடியாமல் அங்கிருந்தவர்களிடம் “ஒரு நிமிடம் வந்துடுறேன்” என்று கையில் இருந்த கைப்பேசியை எடுத்து காதில் வைத்துக் கொண்டு ஏதோ முக்கியமான அழைப்பை பேசுவது போல் அந்த இடத்திலிருந்து வெளியேறி வேகமாக நடந்து நேராக ஒரு கட்டிடத்தின் பின்னால் இருந்த மரங்கள் அதிகமாக இருக்கும் இடத்தில் போய் நின்றுக் கொண்டான்.



அதுவரை அவன் அடக்கியிருந்த கோபம் முகம் முழுவதும் பரவியிருந்தது.கண்களை மூடி தன் கேசத்தை கைகளால் அழுந்த அழுத்தி பிடித்தான்.


மனதினுள் ‘ஏன் இப்படி எனக்கு பிடிக்காத விஷயத்தை பேசுறாங்கன்னு தெரியலை என்னால இன்னும் வெளிப்படைய இருக்க முடியலையே’ என்று தன்னைப் பற்றி நொந்துக் கொண்டு இருக்கும் போது….



அப்பொழுது யாரோ தனக்கு அருகில் மிகுந்த வேதனையில் அழும் சத்தம் கேட்டது.அதைக் கேட்டவன் ஒருநொடி அப்படியே அமைதியாக நின்றான்.தன் கோபத்தை சட்டென்று மறந்து அந்த அழுகையின் சத்தம் இவனுடைய மனதின் உள்ளே நுழைந்து லேசாக பிசைந்தது.



உடனே அங்கிருப்பவரின் நிலைமையைப் பற்றி எண்ணியவன் ‘தன்னுடைய கண்ணீர் யாருக்கும் தெரியக் கூடாது என்று தானே இவ்வளவு ஒதுக்குப்புறமாக வந்து அதுவும் இவ்வளவு சத்தமாக அழுகிறார்’என்று புரிந்துக் கொண்டான்.




அழுகையின் சத்தம் இன்னும் கொஞ்சம் அதிகமாக கேட்டது.எதாவது பேசலாம் என்று சத்தம் வந்த திசையை நோக்கி மெதுவாக அடியை எடுத்து வைத்தவன் ஒரு பத்தடி தள்ளியிருந்த பெரிய மரத்திற்கு பின்னால் ஒரு பெண் கீழே அமர்ந்து தன் தலையை முட்டிற்கு மேல் கவிழ்த்துக் கொண்டு குலுங்கியும் தேம்பியும் அழுதுக் கொண்டிருந்தாள்.



பெரிய மரத்திற்கு இன்னொரு பக்கம் நின்றவன் தன் பாக்கெட்டில் இருந்த கைக்குட்டையை எடுத்து அந்தப் பெண்ணை பார்க்காதவாறு திரும்பி நின்றுக் கொண்டு “ப்ளீஸ் அழாதீங்க இந்தாங்க கண்ணீரை துடைங்க” என்று மெதுவாக தன்மையாகச் சொன்னான்.


முதலில் அது அவளுக்கு கேட்கவில்லை.அவன் திரும்பவும் லேசாக கைக்குட்டையால் தோள்களைத் தட்டி “அழாதீங்க ப்ளீஸ் எல்லாம் சரியாயிடும் கவலைப்படாதீங்க” என்று அவளுக்கு இன்னும் முகத்திற்கு அருகில் தன் ஆறடி உயரத்திற்கு ஏற்ப இருந்த நீண்ட கையால் கொடுத்தான்.



அதுவரை கண்களை மூடி இருட்டில் அமர்ந்திருந்தவளின் முன்னே ஏதோ ஒரு சிறு கீற்றுப் போல் அந்த கைக்குட்டை அவளுக்கு அருகில் வந்தது.


அவள் அப்படியே அதையே பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது “நீங்க யாருன்னு நான் பார்க்கலை ப்ளீஸ் அழுகையை நிறுத்தி இந்த கைக்குட்டையை வாங்கி கண்ணீரை துடைங்க” என்றான்.



‘இனிமேல் தனக்கு யாரும் துணையாக இருக்கப் போவதில்லை’ என்று அவமானத்தால் எண்ணி நிலைக்குனிந்து இருந்தவளுக்கு யாரென்றே தெரியாதவனின் அக்கறை முதன்முதலாக புதிதாக இருந்தது.


மெதுவாக தன் கைநீட்டி அந்த வெள்ளைநிற கைக்குட்டையை வாங்கிக் கொண்டாள்.



அவள் வாங்கியதும் தன் கையை விலகிக் கொண்டவன் “ப்ளீஸ் இனிமேல் இப்படி கேவி அழாதீங்க பொண்ணுங்க எப்பவும் அழக் கூடாது தைரியமா எதையும் சமாளிக்கத் தெரியனும் எந்த நேரத்திலும் பிரச்சினைப் பார்த்து பயந்து ஓடாமல் தைரியமா எதிர்த்து நில்லுங்க,பெண்களோட கண்ணீர் விலைமதிக்க முடியாதது அப்படின்னு எங்கம்மா சொல்லுவாங்க அதை ஞாபகம் வைச்சுக்கோங்க அந்த விலைமதிக்க முடியாத பொக்கிஷத்தை தேவையில்லாத விஷயத்துக்காகவும்,தேவையில்லாதவர்களுக்காகவும் சிந்த விடாதீங்க” என்றான்.



அவன் சொன்ன வார்த்தைகள் ஏனோ ஒருநிமிடம் அப்படியே அவளை அதிர்ச்சி அடையச் செய்தது.இந்த வார்த்தைகள் எங்கேயோ கேட்டது போல் இருக்கிறதே என்று கண்ணீரை துடைத்துக் கொண்டு திரும்பிப் பார்த்தாள் அங்கே யாரும் இல்லை தூரத்தில் ஒருவர் அந்த இடத்திலிருந்து கடந்து செல்வதற்கான லேசான உருவமே தெரிந்தது.



மிகுந்த யோசனையோடு அந்த கைக்குட்டையை தன் முகத்தில் அருகில் கொண்டு செல்லும் போது அதன் வாசம் அவளுக்கு ரொம்ப பிடித்த மிகவும் பழக்கமான ரோஜா இதழின் வாசம் அவளை ஒருநொடி அப்படியே மெய்மறக்க வைத்தது.



இருவிழிகளை மூடி வாசனையை நுகர்ந்தவள் அவளையும் அறியாமல் மனம் லேசாகத் தொடங்கியது.


யாரென்றே தெரியாத ஒருவரின் நம்பிக்கையான வார்த்தைகள் அவளைக் கொஞ்சம் நம்பிக்கையைத் தந்தது.


கையில் இருந்த கைக்குட்டையை பார்த்தவள் “இது யாருன்னு தெரிஞ்சுட்டு அவங்ககிட்ட இந்த பொருளைக் கொடுத்து நன்றி சொல்லனும்” என்று சொல்லி விட்டு கையில் அந்த கைக்குட்டையை இறுக்கப் பற்றிக் கொண்டு நடந்தாள்.


சைத்ரனுக்கும் ஏதோ மனம் கொஞ்சம் இலேசாகிப் போய் இருந்தது.வீணாக பெருமைப் பேசிக் கொண்டிருக்கும் இந்த கூட்டத்தில் இருப்பதை விட யாரென்று தெரியாத ஒருவரை ஆறுதலோடு ஊக்கப்படுத்தி பேசியதை எண்ணி மகிழ்ந்தான்.


திரும்பவும் படப்பிடிப்பு தளத்திற்கு வந்த சைத்ரன் ‘இன்னைக்கு ஏன் நிரல்யா வரலை?’’ என்று நினைத்து தன்னைச் சுற்றி தேடியவன் ‘திரும்ப வந்தால் அவகிட்ட நமக்கு ஏற்பட்டு இருக்கிற சந்தேகத்தை கேட்கலாமா?’ என்று அவளைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தான்.



இலக்கியன் யாமினியை நேரில் சந்தித்து பேசச் சென்றிருந்தான்.அதனால் அவருடைய தனி அறையில் சந்தித்தான்.


முதலில் பொதுவான படத்திற்கு சம்பந்தமான விஷயங்களை பேசிவிட்டு நேரடியாக “யாமினி மேம் ஏன் இன்னைக்கு நிரல்யாவை மேக்கப் போட அனுப்பலை?” என்றதும்



அவனை மேலிருந்து கீழாக ஒரு பார்வை பார்த்தவர் “இதுக்காகத் தான் இன்னைக்கு என்னை நேர்ல சந்திக்க வந்தீங்களா?” என்றாள்.



அவனிடம் பதிலில்லை.இருந்தாலும் சமாளிப்பதற்காக “அ…து நிரல்யாவோட மேக்கப் நல்லா இருந்துச்சு மேம் அதுவும் உங்க சாயல் அப்படியே இருந்தது.அதோட நல்லா கிரிடியேட்டிவிட்டியாகவும் இருந்துச்சு அவங்க உங்க மேற்பார்வையின் கீழ் வொர்க் பண்ண நல்லா இருக்கும்னு நினைக்கிறேன் ஏன்னா எனக்கு என்னோட படம் வெற்றி பெறனும் அதுல எந்தவொரு சின்ன குறையும் இருக்கக் கூடாதுன்னு நான் நினைக்கிறேன் அதனால நிரல்யாவை அனுப்புங்க” என்றான்.


அவனை ஆழ்ந்து ஒரு பார்வை பார்த்தவர் “இலக்கியன் சார் நான் எதையும் வெளிப்படையாக பேசுவேன் அதே மாதிரி இதுவும் நிரல்யா எனக்கு பொண்ணு மாதிரி இல்லை பொண்ணே தான் என்னோட இந்த மேக்கப் கலை உலகத்தில் அவ தான் என்னுடைய அடுத்த வாரிசு அதை எல்லாம் இன்னும் நான் அவகிட்ட சொன்னதும் இல்லை ஏன் அந்த மாதிரி மரியாதையா அவளை நடத்துனது கூட கிடையாது.ஏன்னா நிரல்யா வாழ்க்கையில் நிறைய அனுபவங்களை தெரிஞ்சுக்கனும் அதுக்காகத் தான் என் பார்வையிலே வைச்சு அவளுக்கான பரீட்சையை நான் கொடுத்துட்டு இருக்கேன்.முதல் தடவை அவளை பார்க்கும் போது இந்த சினிமாத் துறையில் நான் முதன் முதலாக வரும்போது எப்படி இருந்தேனோ அதுபோல என்னையே அப்படியே நான் பார்த்தேன்.அவளுடைய திறமையும் அப்படித் தான் இருந்தது.அதனால எந்த சூழ்நிலையிலும் அவளை மாறாத குணமா பக்குவப்படுத்துனேன்”




“இதுவரைக்கும் தனியாக அவளை

எங்கேயும் எதுக்கும் அனுப்பினது இல்லை.ஆனால் இது அவ திறமைக்கான வாய்ப்பு இதை நான் தடுக்க எனக்கு மனசு இல்லை.அதனால நீங்க கேட்டதற்காக இந்த முடிவை எடுக்கிறேன் ஆனால் ஒரு சின்ன கண்டிஷன் அதுக்கு ஓகேன்னா நான் அனுப்புறேன்” என்றார்.



அதைக் கேட்டவன் யோசனையோடு “என்ன கண்டிஷன் சொல்லுங்க நான் செய்றேன்?” என்றான்.



அவனைப் பார்த்தபடியே “கூடிய சீக்கிரம் அடுத்த ஷீட்டிங் வெளி ஊர்லயும்,வெளிநாடுல தானே இருக்கும் எங்கே இருந்தாலும் சரி தான் அவ பாதுகாப்பு எனக்கு முக்கியம் ஏன்னா அவ ரொம்ப வெகுளி இங்கே நிறைய பேர் இந்த மாதிரி பொண்ணுங்களை ஈஸியா பேசி ஏமாத்திடுவாங்க அதனால அவளை இந்த மாதிரி ஆட்கள்கிட்ட இருந்து பாதுகாக்க வேண்டியது உங்க பொறுப்பு நான் யாரையும் நம்ப மாட்டேன் ஏற்கனவே நம்ம ரெண்டுபேரும் ஒன்னா வொர்க் பண்ணி இருக்கோம் அதனால நீங்க எப்படி பட்டவங்கன்னு எனக்கு தெரியும் அந்த நம்பிக்கையில் தான் உங்ககிட்ட கேட்கிறேன் அதோடு சில நேரங்களில் நிரல்யாகிட்ட நீங்க சொன்னால் புரிஞ்சுப்பா இந்த வேலைக்கு வருவதற்கு முன்னால நானும் அவகிட்ட பேசி வைச்சிடுறேன்” என்றார்.



யாமினி பேசியதை எல்லாம் கேட்டு இலக்கியனுக்கு வியப்பாக இருந்தது.தன்னிடம் வேலை செய்யும் ஒரு பெண்ணிற்காக இவ்வளவு ஆதரவாக யோசிக்கவும்,அவளுடைய நலனில் அக்கறை கொள்ளும் குணத்தை நினைத்து வியந்தவன் யாமினி மேம் ஒருத்தருக்காக இந்தளவு யோசிக்கும் நிச்சயம் நிரல்யா அதுக்கு ஏற்ற பெண்ணாகத் தான் இருப்பாள் என்று முடிவெடுத்தவன் அவளை பற்றி நினைக்க ஒருநொடி அவனுக்கும் புதியதாக இருந்தது.



எல்லாவற்றையும் ஒருநிமிடத்தில் சிந்தித்தவன் “சரிங்க மேம் நீங்க சொன்ன எல்லா விஷயத்தையும் நான் பார்த்துக்கிறேன்.இந்த படம் முடியிற வரைக்கும் இனிமேல் நிரல்யா என்னோட பொறுப்பு” என்று நம்பிக்கை வாக்கு கொடுத்தான் இலக்கியன்.



இங்கே நடப்பது எதுவும் தெரியாமல் நிரல்யா தன்னைப் பற்றி சிந்திக்கவும் தனக்காக யாருமில்லை என்றும் தனிமை தான் தனக்கு என்றும் நிரந்தரமாக இருக்கப் போகிறது என்று அவள் நினைத்துக் கொண்டு ஒப்பனை அறைக்கு உள்ளே வந்தாள்.

உங்களின் மேலான கருத்துக்களை இங்கே பதிவிடுங்கள் தோழமைகளே


 

Attachments

  • eiR8CAP94045.jpg
    eiR8CAP94045.jpg
    227.5 KB · Views: 1

NNK-74

Member
கண்ணுக்குள்ளே கரைந்த நிலவு அத்தியாயம் -6


நிரல்யா உள்ளே நுழையும் போது யாரோ இருப்பது போல் தெரிந்தது. இவளோ யாரென்று அறியும் ஆர்வம் இல்லாமல் நேராக செல்லலாம் என்று நினைக்கும் போது “நிரல்யா” என்று இவளுடைய பெயரை அழைக்கும் சத்தம் கேட்டு திரும்பிப் பார்த்தாள்.அங்கே இலக்கியன் நின்றுக் கொண்டிருந்தான்.



அவனை இவள் பார்த்ததும் “நிரல்யா உங்கள பார்க்கணும் தான் வந்தேன்”என்றான்.


“என்ன விஷயம் சார் சொல்லுங்க?”


“இன்னைக்கு ஏன் நீங்க ஷீட்டிங் ஸ்பாட்டுக்கு வரல?”என்று கேள்வி கேட்டான்.


அவன் கேட்ட கேள்வியில் புரியாமல் பார்த்தவள் “என்ன சொல்றீங்க சார்?யாமினி மேம் சொன்னாங்கன்னு நேற்று வந்தேன் அவ்வளவுதான் மத்தபடி மேம் எனக்கு எங்கே வேலை இருக்குன்னு சொல்றாங்களோ அங்கதான் நான் இருப்பேன் அதனால என்கிட்ட தேவையில்லாத கேள்வியை கேட்காமல் மேம் கிட்ட போய் எந்த சந்தேகம் என்றாலும் கேளுங்க” என்று தன்னுடைய பதிலை அளித்தாள்.



அவளுடைய பதிலில் ஈர்க்கப்பட்டவன் சிரித்துக் கொண்டே… “யாமினி மேம் உங்கள கூப்பிட்டாங்க” என்றான்.


அவனை வித்தியாசமாக பார்த்தவள் “சார் என்ன சொல்லவறீங்கன்னு தெளிவா சொல்லுங்க? முதல்ல ஏன் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வரலன்னு கேட்டீங்க? அடுத்து யாமினி மேம் கூப்பிடுறாங்கன்னு சொல்றீங்க எனக்கு புரியலை”என்றாள்.



“ஓகே ஓகே சும்மா தான் கேள்வி கேட்டேன் மேம் அழைச்சாங்கன்னு தான் சொல்ல வந்தேன் வாங்க” என்றான்.


அவன் பின்னாலேயே இவளும் சென்றாள்.இலக்கியனுக்கு அவளுடைய பதில் திருப்திகரமாக இருந்தது.இதே நிலைமையில் வேறு யாராக இருந்தாலும் வந்த வாய்ப்பிற்காக பொய் சொல்லி இருப்பார்கள்.ஆனால் நிரல்யா நேர்மையாக பேசியது அவனுக்கு பிடித்து இருந்தது.



யாமினியின் அறைக்கு உள்ளே சென்றதும் அங்கே யாமினியுடன் தீபா,உமா,கீதாவும் மற்ற ஜீனியர் மேக்கப் ஆர்ட்டிஸ்களும் நின்றுக் கொண்டிருந்தனர்.தீபாவைப் பார்த்ததும் நிரல்யாவின் முகம் மாறிப்போனது.’அடுத்து என்ன பிரச்சினையை கொண்டு வந்து இருக்கிறாளோ?’என்ற யோசனையில் நின்றாள்.



அப்பொழுது யாமினி நிரல்யாவை முன்னால் அழைத்தார்.அவர் அப்படி அழைத்ததும் இவளுக்கு நெருடலாக இருந்தது. கொஞ்சம் தயங்கியபடி அருகில் சென்றதும் “சொல்லுங்க மேம்” என்றாள்.



யாமினி மேம் சிரித்துக் கொண்டே “இனிமேல் இலக்கியனோட படத்தில் நிரல்யா தான் மெயின் மேக்கப் ஆர்ட்டிஸ்ட் அவளுடைய மேற்பார்வையில் தான் இனிமேல் எல்லாம் நடக்கும் மற்ற ப்ராஸஸ் என்னன்னு உங்க எல்லோருக்கும்தெரியும்னு நினைக்கிறேன் அதோடு நிரல்யா இடத்தில் தீபா வேலைப் பார்க்கனும்” என்றதும் எல்லோரின் முகமும் அப்படியே ஆச்சரியத்தில் மாறிப் போனது.நிரல்யா நடப்பது எல்லாம் கனவா? அல்லது நினைவா? என்ற நிலைமையில் இருந்தாள்.



நிரல்யாவிற்கு கிடைத்த இந்த வாய்ப்பினை பொறுத்துக் கொள்ள முடியாத தீபா யாரைப் பற்றியும் சிந்திக்காமல் “மேம் என்னது இது? நிரல்யாவை விட திறமை அதிகமாக இருக்கிற எனக்கு இந்த வாய்ப்பை கொடுக்காமல் எதுவுமே தெரியாத இவளுக்கு கொடுக்கிறீங்க?” என்று ஆத்திரமும் கோபமாகக் கேட்டாள்.


தீபாவை இதுவரை மிகவும் நல்லவளாக நினைத்திருந்த யாமினிக்கு அவளின் இந்த செய்கை பெரிய அதிர்ச்சியை உண்டாக்கியது.அதோடு அவளைப் பற்றி தெரிந்துக் கொள்ள இதுவும் ஒரு வாய்ப்பாக அமைந்தது.உடனே அதே கோபத்தோடு யாமினி “எனக்குத் தெரியும் யாரை எங்கே அனுப்பனும்? நீ சொல்லி நான் கேட்கனும்னு அவசியம் கிடையாது.அதோடு இது இலக்கியன் சாரோட தனிப்பட்ட விருப்பம் அதனால நிரல்யாவிற்கு தானாக வந்த வாய்ப்பைத் தான் அவளுக்கு கொடுத்து இருக்கேன்.நாளைக்கு உனக்கோ அல்லது மற்றவங்களுக்கும் இதே மாதிரி ஒரு வாய்ப்பு வந்தால் அவங்களை நான் அனுப்புவேன்.ஏன்னா என்கிட்ட தொழிலை கத்துக்கிறவங்க மேன்மேலும் உயரத் தான் நான் விரும்புவேன் தவிர கீழே போக நினைக்க மாட்டேன்” என்றார் கண்டிப்போடு….



ஆனால் தீபாவால் இதை தாங்கிக் கொள்ள முடியவில்லை.பொறுக்க முடியாமல் “மேம் என்ன இருந்தாலும் நீங்க எங்க எல்லோர் கிட்டயும் ஒரு ஒபினியன் கேட்டு இருக்கலாம்” என்றதும் தான் தாமதம்…



யாமினி தீராத கோபத்தோடு “வாயை மூடு தீபா இங்கே நான் என்ன முடிவெடுக்கனும்னு நீ சொல்லனுமா? எவ்வளவு தைரியம்? நான் சொல்ற படி உனக்கு இங்கே வேலை பார்க்கனும்னு இஷ்டம் இருந்தால் பாரு இல்லைன்னா வேறு இடத்துக்கு போ ஆனால் என்னை கேள்விக் கேட்கிற வேலை எல்லாம் வைச்சுக்காதே புரியுதா?” என்றதும்



நிரல்யா “மேம் எதுக்கு தேவையில்லாத பிரச்சினை? தீபாக்கே இந்த வாய்ப்பை கொடுங்க” என்றுச் சொல்லவும் தான் தாமதம்



தீபா இன்னும் கோபத்தோடு “ரொம்ப நல்லவ மாதிரி நடிக்காதே!நீ விட்டுக் கொடுத்து ஒன்னும் எனக்கு தர தேவையில்லை என்னோட திறமையினால் நானே இந்த மாதிரி வாய்ப்பை நிறைய வாங்கிக் கொள்ள தெரியும் அதை நிரூபிச்சு காட்டுறேன் பாரு ” என்று சொல்லி விட்டு யாமினியைப் பார்த்து “இனிமேல் இங்கே நான் வேலைச் செய்ய மாட்டேன்” என்று அவர் கொடுத்திருந்த அடையாள அட்டையை எடுத்து கழற்றி யாமினி கையில் கொடுத்து விட்டுச் சென்றவள் “இனி நீயா நானான்னு பார்த்துடலாம்” என்று நிரல்யாவைப் பார்த்து முறைத்து விட்டு சொல்லி வேகமாக சென்று விட்டாள்.



அங்கிருந்த எல்லோருக்கும் ஒரே அதிர்ச்சியாக இருந்தது.இலக்கியன் உட்பட…

தீபா எந்தளவுக்கு கெட்டவளாக இருந்திருந்தால் நிரல்யாவிற்கு வந்த இந்த ஒரு வாய்ப்பைக் கூட தாங்கிக் கொள்ள முடியாமல் சண்டை போட்டு வெளியே போய் இருப்பாள்.அதோடு இது நாள் வரை இவளுக்கு எந்தளவுக்கு பிரச்சினையை கொடுத்து இருப்பாள் என்று நிலைமையை ஓரளவு புரிந்துக் கொண்டபடி நிரல்யாவை பார்த்தான்.



தீபா பேசிவிட்டுச் சென்ற அதிர்ச்சியை விட இவளை பழிவாங்குவதற்கு அவள் இவளிடம் காட்டிய அந்த வெறுப்பு என்று எல்லாம் நினைத்து ஒருவித அச்சம்,கோபம்,இயலாமை என எல்லா உணர்வுகளும் கலந்த கலவையில் அதை வெளிப்படுத்த தெரியாமல் விழிகளில் கண்ணீரை தேக்கியபடி நின்றிருந்தாள்.



அவளின் நிலைமையைப் புரிந்துக் கொண்ட யாமினி முதுகில் லேசாக ஆதரவாக தட்டிக் கொடுத்தவர் நிரல்யாவிடம் “இதை எல்லாம் பெரிசா யோசிக்காதே” என்றார் ஆதரவோடு….



இலக்கியன் நிரல்யாவை ஊக்கப்படுத்தும் எண்ணத்தில் அவளிடம் “நடந்ததை எல்லாம் விட்டுத் தள்ளுங்க நிரல்யா எது நடந்தாலும் அது நல்லதுக்கு தான் என்ற மனநிலைமைக்கு வாங்க அதோடு இந்த மாதிரி ஆட்கள் எல்லாம் நம்மோடு இருந்து பிரச்சினை பண்ணிட்டு அதை எப்படி சரி செய்யுறதுன்னு யோசித்து நேரத்தை வீணாக்கிறதுக்கு வேண்டிய நிலைமை இல்லைன்னு நிம்மதி ஆகுங்க எனிவே ஆல் த பெஸ்ட் அண்டு காங்கிராட்ஸ்” என்று ஆதரவாக பேசி தன் கையை நீட்ட நிரல்யா தயக்கத்தோடு அவனோடு கரம் கோர்த்தாள்.



இலக்கியன் பதிலுக்கு சிரித்துக் கொண்டே “நாளையிலிருந்து நாம ரெண்டுபேரும் ஒன்னா வொர்க் பண்ண போறோம் ரெடியா இருங்க” என்றான்.அதற்கு அவளும் சம்மதம் என்பது போல் தலையாட்டினாள்.



அங்கே நடப்பதை எல்லாம் ஓரமாக நின்றுக் கொண்டு சைத்ரனும் பார்த்துக் கொண்டிருந்தான்.படப்பிடிப்பு தளத்தில் இலக்கியனை எங்கே என விசாரித்தான்.அங்கிருந்த அவனுடைய உதவியாளர்கள் யாமினியைப் பார்க்க சென்றிருப்பதாக தெரிவித்தனர்.அவனைப் பார்ப்பதோடு நிரல்யாவிடமும் பேச வாய்ப்பு கிடைத்தால் பேசி விட வேண்டியது தான் என்ற முடிவோடு வந்திருக்க நடப்பதை எல்லாம் பார்த்து அப்படியே நின்றான் சைத்ரன்.



இலக்கியனின் கரத்தை நிரல்யா பிடிக்கும் பொழுது ஒருவிதமான கோபம் அவனுள் எழுந்தது.அதனால் கையை இறுக்க மூடிக் கொண்டவன் எதற்கு? ஏன்?என்ற காரணங்களை அறியாதவன் வேகமாக அவ்விடத்தை விட்டுச் சென்றான்.



தன்னுடைய இடத்தில் அமர்ந்துக் கொண்டவனுக்கோ மனதினுள் ஆயிரம் கேள்விகள் யாரென்றே தெரியாத ஒருத்தி மீது ஏற்பட்டுள்ள இந்த காரணம் தெரியாத உணர்வுக்கு இதோடு முற்றுப்புள்ளி வைக்க விரும்பி அவளைப் பற்றி யோசிப்பதை நிறுத்த எண்ணினான்.



யாமினி இலக்கியன் சொன்னதை நினைத்து மனதை ஆறுதல் படுத்திக் கொண்டார்.அதோடு அவருடன் வேலைப் பார்த்த நிறைய பேர் இந்த மாதிரி அவருடைய முதுகில் குத்திச் செல்வது வழக்கம் தான் அதனால் தீபாவின் செயல்கள் அவருக்கு பழக்கமான ஒன்று.


ஆனால் நிரல்யாவிற்கு ஒன்றுமே புரியவில்லை.சிறிது நேரத்தில் நினைக்காத விஷயங்கள் எல்லாம் நடந்து விட்டது.அதைப் பற்றி நினைத்துக் கொண்டு அவள் ஓரத்தில் சோகமாக அமர்ந்திருப்பதைக் கண்ட உமாவும் கீதாவும் நிரல்யா அருகில் வந்து அமர்ந்தனர்.


உமா “அக்கா” என்று அழைத்தாள்.


நிரல்யா நிமிர்ந்துப் பார்த்தாள்.அவளின் மேல் கையை வைத்தபடி கீதா “அக்கா நடந்த இந்த விஷயம் உங்களுக்கு ஒரு பக்கம் சந்தோஷம்,இன்னொரு பக்கம் கவலையை கொடுத்து இருக்கும் அதனால அதைப் பற்றி எல்லாம் கவலைப் படாதீங்க எப்படியோ உங்க திறமைக்கான வாய்ப்பு கிடைச்சிருக்கு அதன் மூலமா எப்படி முன்னேறப் போறோம்னு மட்டும் யோசிங்க சரியா? உங்க கூட நாங்க எப்பவுமே துணையா இருப்போம் அப்போத் தான் நாளைக்கு எங்க அக்கா மாதிரி நாங்களும் பெரிய நிலைமைக்கு வர முடியும் நான் சொல்றது சரிதானே உமா” என்றதும்


உமா “ஆமாம் அக்கா இனிமேல் நாம ஒரே கேங்காக இருந்து எல்லாத்தையும் சாதிக்கலாம்” என்று ஆரத் தழுவிக் கொண்டனர்.



அவர்களின் இருவரின் பேச்சும் நிரல்யாவை நம்பிக்கைக் கொள்ள வைத்தது.அவர்கள் சென்றதும் அவள் கையில் இருந்த அந்த கைக்குட்டையை எடுத்து பார்த்தவள் மனதினுள் ‘நீங்க யாருன்னு எனக்கு தெரியலை ஆனால் நீங்க சொன்ன வார்த்தைகள் எல்லாம் என் வாழ்க்கையில் நல்லதாகவே நடக்க ஆரம்பிடுச்சு கூடிய சீக்கிரம் நீங்க யாருன்னு கண்டுபிடிச்சு உங்ககிட்ட நன்றியோடு எல்லா விஷயங்களையும் சொல்லி நான் மனம் விட்டு பேசனும்’ என்றாள் அந்த கைக்குட்டையை தன் இதயத்தின் அருகே கொண்டு சென்றபடி…


வீட்டிற்கு வந்த நிரல்யாவின் முகம் மாறிப் போய் இருப்பதைக் கவனித்த அஸ்வதி “என்னாச்சு? ஏன் இன்னைக்கு ஒரு மாதிரி இருக்கே? முகமே சரியில்லை எதாவது பிரச்சினையா?” என்று அடுக்கடுக்காக கேள்வி கேட்டாள்.



நிரல்யா “அஸ்வதி இன்னைக்கு என் வாழ்க்கையில் என்ன நடந்துச்சுன்னே எனக்கு தெரியலை” என்று நடந்த எல்லா விஷயங்களையும் சொன்னாள். ஆனால் அந்த கைக்குட்டை விஷயத்தை மட்டும் சொல்லவில்லை.


எல்லாவற்றையும் கேட்ட அஸ்வதி முகம் முழுவதும் புன்னகையோடு “அப்படிப் போடு அட்றா சக்கை என்னடி இது? இன்னைக்கு சனி பகவான் உன்னை விட்டு ஒரு நூறு அடி எகிறி குதிச்சு அந்தப்பக்கமா போயிட்டாரு போல நல்லது தான் நடந்து இருக்கு எப்படியோ இலக்கியன் சார் பெயருக்கு ஏத்தமாதிரி ரொம்ப நல்லவரு அதுசரி இங்கே ஏதோ ஒன்னுமிஸ் ஆகுதே?”



இவளோ பதற்றமாய் “என்ன மிஸ் ஆகுது”



“இல்லை எதுக்கு நீ வெளியே போன? அங்கே என்ன நடந்துச்சு?”


“அ…து தீபா பேசுனதை நினைச்சு ரொம்ப கவலையாகிட்டேன் அதான் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகலாம்னு வெளியே போனேன்”


“அதாவது பிள்ளை பீல் பண்ண போயிருக்கு இதெல்லாம் ஒரு பீலிங்கா?” என்று முகத்தை சுறுக்கிக் கொண்டாள் அஸ்வதி.


உடனே நிரல்யா “ஹேய் என்ன இருந்தாலும் என் பீலிங்ஸ இப்படி அசிங்கப்படுத்தாதேடி”


“மூஞ்சைப் பாரு அவங்க பேசினாளாங்களாம் இவங்க போய் கவலைப் பட்டாங்களாம் அப்பவே மூஞ்சில ரெண்டு அப்பு அப்பி என்னைப் பத்தி பேச உனக்கு என்ன தகுதி இருக்குன்னு கேட்டு இருந்தால் நீயும் என் ப்ரெண்ட்டுன்னு பெருமையா சொல்லி இருப்பேன் அதை விட்டுட்டு பேசுறதைப் பாரு” என்றாள்.


உடனே நிரல்யா முகத்தை திருப்பிக் கொண்டு அமர்ந்திருக்க…


அதை பார்த்த அஸ்வதி “சரி சரி விடு உனக்கு வராத விஷயத்தைப் பற்றி பேசுறது தப்பு அதுசரி இன்னைக்கு உனக்கு கிடைச்சி இருக்கிற புரோமோஷனுக்காக சந்தோஷமா நாம அதை இப்போ கொண்டாடப்போறோம்” என்று அவளையும் இழுத்துக் கொண்டு வெளியே சென்றாள் அஸ்வதி.



கடற்கரைக்குச் சென்று ஆட்டம் போட்டு அங்கே இருக்கிற ராட்டினங்களில் ஏறி குழந்தைகளோடு குதூகலித்து மகிழ்ச்சியாக தங்கள் நேரத்தை கழித்தனர் தோழிகள் இருவரும்.



அடுத்து நிரல்யாவை ஒரு துணிக்கடைக்கு அழைத்துச் சென்றாள்.அங்கே சென்றதும் நிரல்யா “யாருக்கு துணி வாங்கப் போற?”


“உனக்குத் தான்”



“எனக்கா? வேண்டாம் அஸ்வதி ஏற்கனவே நீ எனக்குன்னு நிறைய செஞ்சுட்டே வேண்டாம்” என்றாள் கண்டிப்போடு…



அவள் அப்படிச் சொன்னால் விட்டுவிடுவாளா என்ன? நிரல்யாவை சம்மதிக்க வைக்க அஸ்வதிக்கு தெரியாதா?


“நிரல்யா உன்னோட ப்ரோமஷனுக்காக என்னுடைய கிப்ட்”என்றாள்.


“அதெல்லாம் வேண்டாம்”


“ஓ அப்படியா! அப்போ எனக்கு வாங்கிக் கொடுத்தியே இந்த வாட்ச் இனிமேல் எனக்கும் வேண்டாம் அதோட ப்ரெண்ட்ஷிப் டேக்கு ஒரேமாதிரி வாங்கி கொடுத்தல்ல செயின் அதையும் கழற்றி தரேன் வாங்கிக்கோ” என்று வேகமாக கழற்றப் போனாள்.



“ப்ச் உடனே கோபப்படுற அஸ்வதி இதெல்லாம் சரியில்லை நான் வாங்கிக்கிறேன் ஆனால் ஒரு டிரெஸ் போதும்” என்றாள்.



அஸ்வதியோ சிரித்துக் கொண்டே மனதினுள் 'எத்தனை நாளாக உன்னோட டிரெஸ்ஸிங் ஸ்டைல் மாத்தனும்னு எத்தனை வருஷமா நினைச்சுட்டு இருக்கேன் அதுக்கு இது தான் சரியான வாய்ப்பு அதனால இன்னைக்கு உன்னை ஒருவழி பண்ணாமல் விட மாட்டேன்’ என்று கொஞ்சம் நவீன உடைகளாக பார்த்தாள்.



அதை கவனித்த நிரல்யா “அஸ்வதி இந்த மாதிரி டிரெஸ் எல்லாம் பார்க்காதே! நான் என்ன உன்னை மாதிரி ஒல்லியா,அழகாவா இருக்கேன் நானே கொஞ்சம் குண்டு தான் எனக்கு இந்த மாதிரி டிரெஸ் போட்டால் நல்லா இருக்காது நீ சுடிதார் மட்டும் பாரு” என்றாள்.


அவளைப் பார்த்து முறைத்த அஸ்வதி “முதல்ல நாம அழகாக இல்லைல்னு அப்படிங்கிற எண்ணத்தை ஒழிச்சுக்கட்டு நிரல்யா உன் குணம் யாருக்கும் வராது அதுல எப்பவும் நீ பெரியவள் தான் சரியா? நான் உனக்கு அழகா இருக்கிற டிரெஸ் தான் எடுத்து தருவேன்னு நம்புறேல அப்போ அமைதியா இரு” என்று அவள் பதில் பேசாதவாறு வாயை அடைத்து விட்டு துணிகளை பார்க்க ஆரம்பித்தாள்.



அதில் பெண்களுக்கான சமீபத்திய ஆடைகளான குர்தா செட்,எளிமையான லெஹாங்கா,சல்வார் கமிஸ்,பலாஸ்ஸோ உடைகள்,பட்டியலா சூட்,ஹராரா சூட்,ஸ்கார்ட் என்று விதவிதமான வகையிலும் ஒவ்வொரு உடையையும் வாங்கி போட்டும் பார்க்கச் சொன்னாள்.



நிரல்யாவிற்கு எல்லா உடைகளும் கச்சிதமாக இருந்தது.இருந்தாலும் நிரல்யாவிற்கு ஒரு மாதிரியாக இருந்தது.அதனால் அஸ்வதியிடம் “மேக்கப் போட போற எனக்கு இந்த டிரெஸ் எல்லாம் ரொம்ப ஓவரா இருக்குது எனக்கு எப்பவும் போல சுடிதார் போதும் அதுதான் எனக்கு ஏற்றதாக இருக்கும்” என்றாள்.


ஆனால் அவள் சொன்னதை எல்லாம் அஸ்வதி காதில் வாங்கிக் கொள்ளாமல் தன் வேலையில் கவனமாக இருந்தாள்.எல்லா வகையிலும் ஒரு செட் துணியோடு அவளுக்கு ஏற்ற நிறத்தில் எடுத்து அதற்கான பில்லையும் அவளே செலுத்தினாள்.



இதை எல்லாம் பார்த்த நிரல்யா “அஸ்வதி தேவையில்லாத செலவு பண்ணிட்டு இருக்கே எதுக்கு இப்படி சிரமப்படுறே?”


“யார் சொன்னா தேவையில்லாத செலவு இதுல ஒரு டிரெஸ் தான் என்னோட செலவு மற்றது எல்லாம் நீ எனக்கு தர வேண்டிய கடன் கொஞ்சம் கொஞ்சமா பணத்தை கொடுத்து சரி செய்துக்கலாம்” என்றாள்.



நிரல்யா அதிர்ச்சியோடு “ஹேய் என்ன இப்படி சொல்லுறே? ஏற்கனவே வர்ற சம்பளம் வீட்டு செலவுக்கே சரியா இருக்கு எனக்கு இதெல்லாம் வேண்டாம் எல்லாத்தையும் திரும்ப கொடுத்திடு”என்றாள்.


“திரும்ப கொடுத்தால் காசு கிடைக்காது வேற துணி வேணும்னா எடுக்கலாம் அவ்ளோதான் பண்ண முடியும்.இனிமேல் சாலரி கூடும் அதுல கழிச்சுக்கலாம் இப்போ எனக்கு பயங்கரமா பசிக்குது வா சாப்பிட போகலாம்” என்று தற்போது அந்த பேச்சை நிறுத்தி வைத்தாள்.


நிரல்யா முகத்தை திருப்பிக் கொண்டு அமர்ந்திருக்க அஸ்வதி அவளை கடுப்பேற்றும் விதமாக நிரல்யாவிற்கு பிடித்த உணவுவகைகளையே ஆர்டர் செய்து அவள் முன்னே வைத்தாள்.



உணவின் வாசனை வேறு நாசியில் துளைத்து இவளை இழுக்க போட்ட ஆட்டத்திற்கு பசியை வேறு ஏற்படுத்தி வயிற்றில் ஏதோ ஒரு உருளைப் பந்து வேறு ஓடிக் கொண்டிருந்தது.அதை எல்லாம் கண்டுக் கொள்ளும் நிலைமையில் இல்லை.


இதை கவனித்த அஸ்வதி உடனே முன்னால் இருந்த காடை பிரியாணியை எடுத்து தன் கையில் ஒரு கவளம் அள்ளியவள் “ஹேய் நிரல் உனக்கு பிடிச்ச ருசியான காடை பிரியாணி இப்போ என் வாயிலே வந்து தஞ்சம் புகுந்துக் கொள்ள போகுது”என்று அவள் முகத்திற்கு அருகே கொண்டுச் சென்று தன் வாயில் போட்டவள் கண்களை மூடியபடி “ம்ம்… என்னா டேஸ்ட்டு உனக்கு வேண்டாமா? இஈஈ…” என்று அவளை கலாய்க்கும் பொருட்டு சிரித்தவள் அடுத்து பட்டர் நாணோடு பன்னீர் பட்டர் மசாலாவை தொட்டு “ஐயோ…. இந்த காம்பினேஷனுக்கு ஈடு இணையே இல்லை” என்று இம்முறை நிரல்யாவின் வாய்க்கு அருகில் கொண்டு போனவள் எதையோ யோசிப்பது போல் பாவனை செய்தவள் “நிரல் இன்னைக்கு உனக்கு சாப்பாட்டை விட உன் கோபம் தான் நியாயமானது,அதனால நான் இன்னைக்கு முன்னாடி இருக்கிற என் செல்லங்களை எடுத்து நான் சாப்பிடுவேன் நீ அதை பார்த்து ரசிக்கனுமாம் ஓகே” என்று சாப்பிட சுட்ட ரொட்டித் துண்டை அவள் வாயில் வைக்கப் போகும் நேரம் நிரல்யா அஸ்வதியின் கையைப் பிடித்து அந்த நாணை அவளின் கையாலேயே தன் வாயில் போட்டுக் கொண்டாள்.நடந்த இந்த திடீர் நிகழ்வில் ஏமாந்து போன அஸ்வதி முகத்தை சோகமாக வைத்துக் கொள்ள நிரல்யா திரும்ப அவளுக்கு ஊட்டி விட்டாள்.



இப்படியே நண்பர்கள் இருவரும் கொண்டாடி விட்டு தங்கள் வீட்டில் தஞ்சம் புகுந்துக் கொண்டனர்.


உங்கள் கருத்துக்களை இங்கே பதிவிடுங்கள் தோழமைகளே
 

Attachments

  • eiX8J4O29899.jpg
    eiX8J4O29899.jpg
    245.6 KB · Views: 0

NNK-74

Member
கண்ணுக்குள்ளே கரைந்த நிலவு

அத்தியாயம் -7


மறுநாள் நிரல்யா படப்பிடிப்பு தளத்திற்கு செல்வதற்காக தயாராகிக் கொண்டிருக்க அஸ்வதி வந்து நிரல்யாவைப் பார்த்தாள்.அவளோ எப்போதும் அணியும் பழைய சுடிதார் துணியை அணிந்திருந்தாள்.அதைப் பார்த்து அஸ்வதி “என்ன நிரல்யா இந்த டிரெஸ் போட்டு இருக்கே? நான் வாங்கிக் கொடுத்தது போடலையா?”


“இல்லை புது டிரெஸ் போட்டுட்டு பஸ்ஸில போனால் அது பழசு ஆகிடும்”



“இருக்கட்டும் இருந்தாலும் நான் வாங்கிக் கொடுத்த டிரெஸ்ஸை போட்டுட்டு போ”



“வேண்டாம் நாளைக்கு பார்த்துக்கலாம்”



“இல்லை இன்னைக்கு போடு நானே உன்னை ஸ்பாட்டுல டிராப் பண்றேன் சீக்கிரம் கிளம்பு”அஸ்வதியின் கட்டாயத்தினால் எடுத்திருந்த துணிகளில் ஒன்றை எடுத்து அதை அணிந்துக் கொண்டு வந்தாள்.


அவள் அணிந்து வந்திருந்ததை பார்த்தவள் நிரல்யாவிடம் “ஹேர் ஸ்டைலை மாத்துடி எப்போ பார்த்தாலும் அதே ஒத்த ஜடை தான் உன்னைப் பார்த்தால் யாருமே மேக்கப் ஆரட்டிஸ்ட்டுனு ஒத்துக்க மாட்டாங்க இத்தனை நாளாக ஒரு ரூம்குள்ளேயே வேலையை ஓடிட்டு இருந்தே இப்போ அப்படி இல்லை அதனால கொஞ்சம் உன்னையும் நல்லா கவனிச்சுக்கோ நிரல்” என்று

அஸ்வதியின் கண்டிப்பால் எப்பொழுதும் இருப்பதை விட கொஞ்சம் தன்னை உடைக்கு ஏற்ற மாதிரி மாற்றிக் கொண்டு அவளுடன் கிளம்பினாள்.


இருந்தாலும் எதையும் சட்டென்று ஒத்துக் கொள்ளாத நிரல்யா அஸ்வதியிடம் “அஸ்வதி எதுக்கு இந்த தேவையில்லாத அலச்சல்”



“அலச்சல் எல்லாம் இல்லை அப்படியே சைத்ரனையும் பார்த்து ஒரு செல்பி எடுக்கலாம் தான் வரேன்”


நிரல்யா அஸ்வதியை மேலும் கீழுமாக பார்த்தவள் “எப்போ நீ அவரோட பேன்ஸ்ஸாக மாறுனே?”


“இந்த மாதிரி செலிபிரிட்டியோட போட்டோ எடுத்து அதை மாத்தவங்க கிட்ட காட்டும் போது கெத்தாக இருக்கும் ”என்றதும் இருவருமாக படப்பிடிப்பு நடக்கும் வடபழனியில் உள்ள ஏ.விம் ஸ்டுடியோவிற்குச் சென்றனர்.



போகும் வழியிலே அஸ்வதியின் கைப்பேசி அழைக்க நிரல்யாவை இறக்கி விட்டு பேசினாள் அஸ்வதி.அலுவலகத்தில் இருந்து உடனடியாக அழைப்பு வந்திருந்தது.அதனால் அஸ்வதி உடனே செல்ல வேண்டிய நிர்பந்தம் வர அவளை மட்டும் இறங்கி விட்டு அஸ்வதி கிளம்பி விட்டாள்.



ஏ.விம் ஸ்டுடியோவின் வாசலில் நின்றவளுக்கு ஒரு தயக்கமாக இருந்தது.என்றைக்கும் இல்லாமல் இன்று தன்னை கொஞ்சம் மாற்றிச் செல்ல அவளுக்கு ஒருவித தயக்கத்தை கொடுக்க யோசனையோடு அங்கே நின்றிருந்தாள்.



அப்பொழுது அங்கே அவளுக்கு அருகே உள்ளே ஒரு கார் செல்ல வரும் பொழுது காரினுள்ளே இருந்த சைத்ரன் காரின் கண்ணாடி வழியே பார்த்தான்.அங்கே நிரல்யாவை பார்த்து ஒருநொடி பார்வையை விலக்காமல் பார்த்தவன் மனதினுள் ‘ஆளே மாறிப் போய் இருக்கிறாள் ஏன் உள்ளே போகாமல் இங்கே நிற்கிறா? என்னன்னு கேட்கலாமா?’ என்று அவன் யோசித்துக் கொண்டிருக்கும் அதே நேரம் பின்னால் வந்த இலக்கியன் காரிலிருந்து இறங்கி சிரித்துக் கொண்டே நிரல்யா அருகில் வந்தான்.


அதை பார்த்தவன் 'ஓ இவனுக்காகத் தான் வெயிட்டிங்கா?’என்று நினைத்தவன் 'தான் போய் அங்கே நின்றால் எதற்காக வந்தேன்னு யோசிக்கத் தோணும் எப்படி இருந்தாலும் ஷீட்டிங் ஸ்பாட்டுக்கு தானே வருவாள் பார்த்துக்கலாம்’ என்றெண்ணி அவர்களை இருவரையும் பார்த்துக் கொண்டே சென்றான்.



இலக்கியன் சிரித்துக் கொண்டே நிரல்யாவிடம் வந்தவன் “ஹாய் நிரல்யா என்ன உள்ளே போகாமல் இங்கே நிற்கிறீங்க?” என்றதும் அவளோ தயங்கிக் கொண்டிருந்தாள்.



“அ…து நான்” என்று சொல்லி முடிக்கும் முன்பே அவனோ “இன்னைக்கு ரொம்ப அழகா இருக்கீங்க நிரல் உங்க மாற்றம் நல்லா இருக்கு” என்றவன் வேறு எதுவும் பேசாமல் “வாங்க உள்ளே போகலாம்” என்று அவளை தன்னோடு அழைத்துச் சென்றான்.



இவள் ஒப்பனை அறைக்குள்ளே நுழைய இந்திராவிற்கான ஆரம்ப

ஒப்பனைகள் ஆரம்பிக்கப்பட்டு இருந்தது.நிரல்யா வந்ததை கவனித்த இந்திரா மனதினுள் ‘பெரிய அழகின்னு நினைப்பு ஒரு மேக்கப் ஆர்டிஸ்ட்டுக்கு இவ்வளவு திமிரு தேவையில்லை இவளை ஹெட்டாக போட்டதும் அவளும் அவ டிரெஸ்ஸையும் பாரு ஏதோ பூசணிக்காய்க்கு டிரெஸ் போட்ட மாதிரி இருக்கு’ என்று நினைத்து நிரல்யாவை பார்த்து கேலியாகச் சிரித்தவள் ஒரு நிமிடம் உண்மையை உணராமல் போய் விட்டாள்.



யார் எப்படி அழகா இருந்தாலும் அழகாக இல்லாவிட்டாலும் அவர்களை மக்களின் முன்னால் அழகாகவும்,அந்த கதாபாத்திரமாகவே மாற்றும் திறமை இவர்களுக்கு உண்டு என்பதும் அதனால் இவர்களும் தங்களை மாற்றிக் கொள்ளலாம் என்ற இந்த உண்மையை ஏனோ இவ்வகையான மக்கள் மறந்து போகிறார்கள்.ஒரு கை ஓசையை விட பல கைகள் ஒன்றாக இணைந்து தட்டும்போது வருகின்ற ஓசை பெரிதாக இருக்கும் அதைப் போல் இவர்களைப் போன்ற எல்லோருடைய உழைப்பு தான் தன்னை வெள்ளிதிரையில் பெரிய நட்சத்திரமாக மின்ன வைக்கிறது என்று அறியாமல் போனாள்.



மனிதர்களுடைய திறமையை பார்க்காமல் அவர்களை தங்களின் தேவைக்கு பயன்படுத்தி விட்டு தூக்கி எறியும் இவர்களுக்கு எந்நாளும் மனிதர்களின் உண்மையான அன்பும் பண்பும் தெரிவதில்லை.


சிரித்துக் கொண்டிருந்த இந்திராவைப் பார்த்து நிரல்யா “மேம் பேலன்ஸ் மேக்கப் நானே போட்டு விடவா?”



அவளோ அதே ஏளனப் பார்வை பார்த்தவள் “இப்போ நீங்க இருக்கிற பொஷிஷனுக்கு உங்களால இந்த வேலையை பண்ண முடியுமா? அதான் எனக்கு சந்தேகமா இருக்கு ஒழுங்கா வேலைப் பார்த்துட்டு ஒருத்தியையும் துரத்தி விட்டாச்சு” என்று தேவையில்லாத விஷயங்களைப் பற்றி பேசினாள்.



இந்திராவின் பேச்சை காதுக் கொடுத்து கேட்காமல் கீதாவிடம் மேற்கொண்டு செய்ய வேண்டியவை என்னவென்று சொல்லி விட்டு சைத்ரன் இருக்கும் கேரவனுக்கு சென்றாள்.



அங்கே இவள் வருவதைக் கண்டவன் முகத்தில் தோன்றிய புன்னகையை மறைத்துக் கொண்டான்.சைத்ரனுக்கு முடி ஒப்பனை கலைஞர் நின்று தலைமுடியை வாரிக் கொண்டிருக்க… சைத்ரனிடம் “குட்மார்னிங் சார்” என்று புன்னகை முகமாகச் சொன்னாள்.



அவனும் தலையசைத்தான்.அப்பொழுது தலைமுடியை வாரிக் கொண்டிருந்தவருக்கு யாமினியிடம் அழைப்பு வந்தது.கைப்பேசியில் பேசியவரிடம் இவருடன் வேறு யாரு உடன் இருக்கிறார் என்று விசாரிக்க அவரோ நிரல்யாவைச் சொன்னார்.அவளிடம் சைத்ரனின் சிகை அலங்காரத்தை கவனித்துக் கொள்ள சொல்லி அவரை உடனே வரச் சொன்னார்.



அந்த நபர் நிரல்யா மற்றும் சைத்ரனிடம் விவரத்தை சொல்லி பொறுப்பைக் கொடுத்து விட்டுச் செல்ல நிரல்யா சிகை அலங்காரத்தை ஆரம்பித்தாள்.



அப்பொழுது தன் கையிலிருந்த கைப்பேசியை எடுத்து சைத்ரனின் அருகில் இருந்த மேசை மீது வைத்து விட்டு இவள் தன் வேலையைத் தொடர்ந்தாள்.



எதிரே இருந்த கண்ணாடியில் அவளின் உருவத்தைப் பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு அவளின் ஒவ்வொரு அசைவுகளும் ஏனோ நெருக்கமாக பழகிய ஒருவரின் நினைவுகளைத் தந்து போனது.


கோலிக் குண்டு கருவிழி இரண்டையும் விரித்துக் கொண்டு அங்கும் இங்கும் பார்த்துக் கொண்டு செய்வதைப் பார்க்க இவனுக்கு ஏற்கனவே நடந்த நிகழ்வு சட்டென்று நினைவில் வந்து போக… அவனின் இதழ்கள் மெல்லிய புன்னகை ஒன்றை அவனையும் அறியாமல் சிந்தியது.



சிகை அலங்காரத்தை முடித்து விட்டு சைத்ரனுக்கு பொருத்தமாக இருக்கிறதா? என்று அவனது முகத்தை கண்ணாடியில் பார்க்கும் பொழுது அவன் புன்னகைக்கவும் சரியாக இருந்தது.அவனது அந்த புன்னகையைக் கண்டவள் சிரித்துக் கொண்டே “சார் நீங்க சிரிக்கும் போது ரொம்ப அழகா இருக்கீங்க இன்னைக்கு தான் இவ்வளவு கிட்டே பார்க்கிறேன் ” என்றாள் சாதாரணமாக…



நிரல்யாவைப் பொறுத்தவரை அவளுடைய இந்த துறையில் யார் அழகாக இருந்தாலும் அதை நேரிடையாக சொல்லி விடுவாள்.அப்படி அவள் சொல்ல சைத்ரனுக்குத் தான் கொஞ்சம் ஒருவித தயக்கத்தோடு கூடிய வெட்கம் சட்டென்று வந்து போனது.



அவனுடன் நடித்தவர்களும், ரசிகர்களும் என்று எத்தனையோ பேர் இந்த மாதிரி சொல்லி இருக்கிறார்கள் அப்பொழுது எல்லாம் பெரிதாக எண்ணாதவனுக்கு இன்று வெட்கத்தை வரவழைத்தது.



அவனின் இந்த திடீர் செய்கையை கவனித்த நிரல்யா “சார் நான் சொன்னதும் நீங்க வெட்கப்படுறீங்களா என்ன?” என்று சிரித்துக் கொண்டே கேட்டாள்.அவள் இப்படி நேரிடையாக அதுவும் சகஜமாக பேசுவது அவனுக்கு தான் தயக்கமாக இருந்தது.யாரிடமும் அவன் இப்படி பேசியது இல்லை கேட்ட கேள்விக்கு மட்டும் தான் பதிலளித்து பழக்கம் அதற்கும் விருப்பம் இருந்தால் தான் வரும்.இல்லையென்றால் அமைதியாக இருந்து விடுவான்.


உடனே சைத்ரன் தலையைக் குனிந்துக் கொண்டே “ப்ச் அப்படி எல்லாம் ஒன்னுமில்லை” என்றான்.



நிரல்யா சிரித்துக் கொண்டே “ஓகே மறைக்கிறீங்க இருக்கட்டும் முகத்துக்கு மேக்கப் ஸ்டார் பண்ணட்டுமா?” என்றாள்.


அவனோ “ஏன் அந்த அண்ணா வரலையா?” சைத்ரன் தன்னை விட பெரிய வயதில் உள்ளவர்களை அக்கா,அண்ணா என்று அழைப்பது வழக்கம்.



நிரல்யா சிரித்துக் கொண்டே “ஏன் அந்த அண்ணா வந்தால் தான் மேக்கப் போடுவீங்களா? நான் போட்டால் ஒத்துக்க மாட்டீங்களா?”அவனிடம் வம்பு பேசினாள் நிரல்யா.



நிரல்யா இவ்வளவு பேசுவாள் என்று அவனுக்கு இன்றைக்குத் தான் தெரியும்.இந்த ஓரிரு நாட்களில் அமைதியாகத் தான் பார்த்திருக்கிறான்.ஆனால் இன்றையிலிருந்து அவளின் இந்த மாற்றம் கொஞ்சம் அவனையும் இன்னும் அவளுள் இழுக்கப் பார்த்தது.


உடனே சைத்ரன் “அப்படி எல்லாம் ஒன்னும் இல்லை நீங்க உங்க வேலையை ஆரம்பிங்க” என்றதும் தன் வேலையைப் பார்க்கத் துவங்கினாள்.



அன்றைய நாளும் அதற்கு அடுத்த ஒருவாரமும் இப்படியே நிரல்யாவின் வேலையில் எந்தவித தொந்தரவும் எல்லாம் சரியாக நடந்தது.அஸ்வதியின் கட்டாயத்தினால் தன்னையும் கொஞ்சம் கவனிக்கத் துவங்கினாள்.தற்போது அவளுடைய வேலையில் எந்தவித அழுத்தமும் இல்லாததால் முகம் முழுக்க புன்னகையோடு வலம் வந்தாள் நிரல்யா.



அவளோடு உடன் பணிபுரியும் மற்றவர்களுக்கும் நிரல்யாவின் இந்த மாற்றம் பிடித்து இருந்தது.அதோடு அவள் எல்லோரையும் தன் அன்பினாலும்,பொறுமையாலும் எவரையும் தன் வசப்படுத்தினாள்.அப்படித் தான் கொஞ்சம் கொஞ்சமாக இலக்கியனும் நிரல்யாவிடம் நெருங்கி தன்னை ஒரு நண்பனாக்கிக் கொண்டான்.



ஆனால் சைத்ரனிடம் அவளின் விளையாட்டுப் பேச்சும் சிரிப்போடும் தன் வேலையைத் தொடர்ந்தாள்.இதனால் படப்பிடிப்பு தளத்திற்கு வந்தால் நேரம் போவதே தெரியாமல் போனது.



ஒருநாள் நிரல்யா தன்னுடைய கைப்பையை திறந்து அதிலிருந்து ஒரு பொருளை எடுக்கும் போது சைத்ரன் அன்றைக்கு கொடுத்த அந்த கைக்குட்டையைப் பார்த்தான்.அதை நிரல்யா பத்திரமாக எடுத்து உள்ளே வைத்தாள்.



அதைப் பார்த்ததும் மனதினுள் 'என்னோட கைக்குட்டை எப்படி நிரல்யாகிட்ட இருக்கு’ என்று நினைக்கும் பொழுது அவனுக்கு அன்றைக்கு ஸ்டூடியோ பின்னால் நடந்தது நினைவுக்கு வந்தது.அவள் அந்த கைக்குட்டையை பத்திரம் படுத்தும் விதத்திலேயே புரிந்துக் கொண்டவன் 'அப்போ நான் அன்னைக்கு பேசுனது எல்லாமே நிரல்யாகிட்ட தானா?’என்று இவன் அதிர்ச்சியாக யோசித்துக் கொண்டிருந்தான்.ஆனால் நிரல்யாவிடம் நேராகச் சென்று எதையும் கேட்கவில்லை.



அதே போல் அவனுக்கும் ஒரு யோசனை.’இந்த கைக்குட்டையை இவ்வளவு பத்திரமாக வைத்திருப்பவள் இது யாருடையது என்று ஏன் தேடவில்லை? என்று நினைத்தவன் சட்டென்று நினைவுக்கு வர அதே நேர இடைவேளை வந்தவுடன் மெதுவாக எந்தவிதமான சத்தமும் எழுப்பாமல் அமைதியாக அன்று இருவரும் சந்தித்து பேசிய அந்த கட்டிடத்தின் பின்புறம் சென்றான்.



அங்கே நிரல்யா அதே மரத்திற்கு பின்னால் திரும்பி நின்றுக் கொண்டு யாரென்றே தெரியாத இவனுக்காக காத்துக் கொண்டிருந்தாள்.அதைப் பார்த்ததும் அவன் நெஞ்சில் அப்படி ஒரு சொல்லமுடியாத ஆனந்தம்.



அன்றைக்கு பேசிய அந்த ஒருசில வார்த்தைகளுக்காக பத்து நாட்களுக்கு மேலாக காத்திருப்பவளைக் கண்டு ஒரு கணம் அசந்துப் போனான்.சரியாக அதே பதினைந்து நிமிடங்கள் காத்திருந்து பின்னர் யாராவது வருகிறார்களா? என்று சுற்றும் முற்றும் தன் விழிகளாலே தேடியதைக் கண்டுக் கொண்டவனோ சட்டென்று தன்னை மறைத்துக் கொண்டான்.



இப்பொழுதும் இங்கே யாரும் வரவில்லை என்ற ஏமாற்றம் அவள் முகம் முழுக்க பரவியிருந்தது.அதோடு நிரல்யா மனதினுள் ‘தினமும் நான் இங்கே வரேன் ஆனால் அன்றைக்கு வந்தவங்க திரும்ப ஏன் இங்கே வரவே இல்லை? இந்த இடத்துல என்னைத் தவிர வேறு யாரும் வரலை ஒருவேளை வெளிவேலையிலிருந்து வந்தவங்களாக இருக்குமோ? என்று யோசித்தாலும் அதைப் பற்றிய ஒரு துரும்பு அளவிற்குக் கூட யார் அது? ஒன்றும் தெரியவில்லை இன்னும் இரண்டு நாள் கழிச்சு வெளியூர்ல ஷீட்டிங் இருக்கு அதுக்குள்ளே பார்க்கலாம்னு நினைச்சேன் இன்றைக்கும் ஏமாற்றம் தான்’ என்று தன்னை தானே சமாதானம் செய்துக் கொண்டு அங்கிருந்து சென்று விட்டாள்.



இவனும் எதுவும் தெரியாதது போல் தன் இடத்தில் அமர்ந்தவன் நிரல்யா வந்தவுடன் “நிரல்யா எங்கே போனீங்க? அடுத்து முதல்ல என்னோட சீன் தான் இருக்கு டச்அப் பண்ணதான் தேடினேன்” என்று காரணத்தையும் சொல்லி கேட்டான்.



அவளோ யோசனையோடு “நா..நான் அப்படியே ஒரு ரவுண்ட்ஸ் போயிட்டேன் டான்ஸ் ஆடுறவங்களுக்குள்ள மேக்கப் செக்அப்புக்காக போயிருந்தேன்” என்று பதற்றத்தோடு பொய் சொன்னாள்.அவள் பொய் சொல்லுகிறாள் என்பதை அவளிடமே கேட்டு உறுதிபடுத்திக் கொண்டான்.



இலக்கியன் படப்பிடிப்பு தளத்தில் இருந்த முக்கியமானவர்கள் என எல்லோரையும் ஒன்றாக அழைத்து “இன்னும் இரண்டு நாள்ல நாம அந்தமான் போகப் போறோம் எல்லோரும் உங்க பேக்கிங் எல்லாம் ரெடி செய்து சரியா வைங்க” என்று ஒருமுறை நினைவுப்படுத்தினான்.


இலக்கியன் நிரல்யாவிடம் “உங்களையும் சேர்த்து தான்” என்றதற்கு அவளும் சிரித்துக் கொண்டே சரி என்பது போல் தலையசைத்தாள்.இவர்களின் இந்த நெருக்கமான உரையாடல் சைத்ரனுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.நிரல்யாவிடம் தன்னுடன் இன்னும் நெருங்கி பழக வைக்க வேண்டும் என்று முடிவெடுத்திருந்தான்.



ஆனால் மறுநாள் அவனுக்கு ஒரு அதிர்ச்சியான சம்பவம் நிகழ்வதற்காக காலம் காத்திருந்தது.


(தொடரும்)

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவிடுங்கள்

 
Last edited:

NNK-74

Member
கண்ணுக்குள்ளே கரைந்த நிலவு

அத்தியாயம் -8



நிரல்யா அஸ்வதியிடம் சண்டையிட்டுக் கொண்டிருந்தாள்.நிரல்யா “இப்போ நீ என்கூட வரமாட்டேன்னு சொல்றியா?”


அஸ்வதி “ஆமாம் இப்போ எதுக்கு உன்னோடு வரச் சொல்லுற?”


“ப்ச் எத்தனை தடவை சொல்லுறது எனக்கு தனியா போக ஒரு மாதிரி பயமா இருக்குது”


“ஏன் உன்கூட வரவங்க எல்லாம் மனிஷங்களாக உனக்கு தெரியலையா?”


“ப்ளீஸ்டி துணைக்கு வாயேன் நீயும் நல்ல ஒரு டிரிப்பா வெளியே போகனும்னு சொன்னேல்ல அதுக்காக வா” என்றாள் கெஞ்சலோடு…


அஸ்வதி “நிரல்யா இதே மாதிரி இனிமேல் அடிக்கடி வெளியூர் போக வேண்டிய சூழ்நிலை வரும் அப்போ எல்லாம் நானும் துணைக்கு வர முடியுமா சொல்லு?”



அவள் கேட்பதும் நியாயமாகப் பட்டது.“இந்த ஒருதடவை மட்டும் வா அடுத்த முறை உன்னை அழைக்க மாட்டேன் ஏன்னா இது முதன் முதலாக போறேன்ல அதனால் தான்” என்று தன் பக்க நிலையை எடுத்துச் சொன்னாள்.



“சரி ஆபிஸ்ல லீவு கேட்டு பார்க்கிறேன் அதோட நான் உன்னோடு வர மாட்டேன் நீ போய் மறுநாள் வரேன் சரியா?” என்றாள்.


“நீ எப்படி தனியா வருவே? அம்மாக்கு தெரிஞ்சால் ஏதும் சொல்ல மாட்டிங்களா?”



“நான் அதை சமாளிச்சுக்கிறேன் ரொம்ப யோசிக்காதே! நீ போறதை மட்டும் கவனமாக இரு” என்றாள்.



அவளும் சரியென்று தலையசைத்து விட்டாள்.நிரல்யா அம்மாவிடம் இதைப் பற்றி சொல்லலாம் என்று அம்மாவின் கைப்பேசி எண்ணிற்கு அழைக்க மறுமுனையில் பேசுவதற்காக ஆள் இல்லாமல் அழைப்பு முழுவதுமாக அழைத்து நின்று போனது.



தற்போது படப்பிடிப்பு தளத்திற்கு செல்ல இருப்பதால் உடனே சென்று விட்டாள்.எப்பொழுதும் போல தன்னுடைய வேலைகளை ஆரம்பித்தாள் நிரல்யா.


தன்னுடைய கைப்பேசியை எடுத்து சைத்ரன் அருகில் இருந்த மேசையில் வைத்தவள் அவனுக்கு சிகை அலங்காரம் செய்யத் தொடங்கினாள்.


அப்பொழுது நிரல்யாவின் கைப்பேசி அழைத்தது.அதுவரை தன் கைப்பேசியில் மூழ்கி இருந்தவன் சட்டென்று வந்த சத்தத்தில் நிமிர்ந்து பார்த்தவன் அந்த கைப்பேசியில் இருந்த புகைப்படத்தைப் பார்த்து ஒருநொடி அப்படியே அதிர்ச்சியடைந்தான்.



அந்த கைப்பேசியில் ஒரு பெண்ணொருவர் நான்கைந்து வயதில் உள்ள ஒரு பெண் குழந்தையை இறுக்கி அணைத்தபடி நின்றிருப்பதைக் கண்டவனின் உள்ளம் அப்படியே வேகமாக துடித்தது.சொல்லமுடியாத ஆனந்தத்தில் திளைத்த மனமோ ‘நான் அவளை கண்டுபிடிச்சுட்டேனா’ என்று யோசிக்கும் போது நிரல்யா கைப்பேசியை எடுத்தவள் “ப்ச் போனை சைலண்ட்டுல போட மறந்துட்டேன்” என்று தலையில் லேசாக அடித்துக் கொண்டவள் அழைப்பை எடுத்து “அம்மா நான் வேலைக்கு வந்துட்டேன் அப்புறமா பேசுறேன்” என்று தன் அம்மாவிடம் பேசிக் கொண்டிருக்க… சைத்ரன் அதிர்ச்சி விலகாத பார்வையில் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான்.


சரஸ்வதி “நிரல்யா உன்கிட்ட முக்கியமான விஷயம் ஒன்னு பேசனும்”


“எல்லாம் அப்புறமாக பேசலாம் திரும்ப நானே கூப்பிடுறேன்” என்று அழைப்பை துண்டித்தவள் சைத்ரனைப் பார்க்க அவனோ அவளையேப் பார்த்துக் கொண்டிருந்தான்.



“சார் சாரி சார் போனை சைலண்ட்ல போட மறந்துட்டேன் சாரி” என்று அவனிடம் மன்னிப்பு கேட்டாள்.



அவனோ திணறியபடி…“அ…அது அந்த போட்டோல இருக்கிறது யாரு?” என்று பதற்றத்தில் தெரிந்துக் கொள்ளும் ஆவலில் கேட்டான்.


அவளோ “எதுக்கு சார் உங்களுக்கு தேவையில்லாத இந்த விஷயமெல்லாம்?”


“அதெல்லாம் ஒன்னுமில்லை நீங்க சொல்லுங்க” என்றதும்



“அது என்னோட அம்மா தான் கால் பண்ணாங்க”


“அந்த போட்டோல இருப்பது யாரு?” என்றான் இன்னும் ஆவலோடு…


“என்னோட அம்மா தான்”என்ற பதிலைக் கேட்டவனுக்கு பழைய நினைவுகள் சட்டென்று வந்து ஆக்கிரமித்தது.முகம் முழுவதும் சொல்லாமுடியாத மகிழ்ச்சி ஏற்பட்டது.



“நான் அவங்களை கேட்கலை அந்த குழந்தையைத் தான் கேட்டேன் அந்த குழந்தை நீ தானே நிரல்யா தன்வி” என்று புன்னகைத்துக் கொண்டே கேட்டான்.



சைத்ரன் அவளுடைய பெயரை முழுதாகச் சொல்லிக் கேட்டதும் அப்படியே அதிர்ச்சியில் நின்றாள்.எதுவும் பேசமால் இருக்க…



எழுந்து அவள் புறமாகத் திரும்பி அருகே நின்றவன் “சொல்லு தன்வி நான் சொன்னது சரி தானே? என்னை யாருன்னு தெரியலையா?” ஏக்கமாகக் கேட்டான்.


அவளோ இன்னும் புரியாமல் அவனைப் பார்த்தவள் “சார் என்னோட பேர் எப்படி உங்களுக்கு தெரியும்? இங்கே இதுவரைக்கும் யார்கிட்டயும் நான் சொன்னதே இல்லை”என்றாள்.



“எனக்கு தெரியும் தன்வி அந்த பெயருல நானும் உன் அப்பாவும் தானே அப்படி கூப்பிடுவோம்”

என்று சட்டென்று இன்னும் அருகில் வந்தவன் “என்னாலேயே உன்னை கண்டுபிடிக்க முடியலை தன்வி ஆனால் என் மனசு அது நீ தான்னு என்கிட்ட சொல்லிட்டே இருந்துச்சு நான் தான் புரிஞ்சுக்கலை” என்று அவள் பட்டுக் கன்னம் தொடப் போனான்.



சட்டென்று விலகிக் கொண்டவள் நடப்பது புரியாமல் விழிகள் விரிய அவனைப் பார்த்தவள் “உங்களுக்கு எப்படி இதெல்லாம் தெரியும்?ஏதாவது ப்ராங் பண்ணிறீங்களா சார்” என்று கொஞ்சம் பயத்தோடு கேட்டாள்.



சட்டென்று அவள் கைகளைப் பிடித்து தன் பக்கம் இழுத்தவன் “தன்வி ஏன் இப்படி என் மேல சந்தேகப்படுறே?நான் எவ்வளவு சந்தோஷமா பேசிட்டு இருக்கேன் நீ என்னடான்னா என் மேல சந்தேகப்படுற? என்னை யாருன்னு தெரியலையா? நான் தான் ஆதித் என்னை தெரியலையா?நாம ரெண்டுபேரும் ஒன்னா பழகியது எல்லாம் மறந்திட்டியா? என்று

அவன் விழிகளில் அப்படி ஒரு அன்பை தேக்கி வைத்துக் கேட்டான்.


அவன் சொன்னதால் கொஞ்சம் யோசிக்க ஆரம்பித்தவள் “யாரு நீங்க? உங்களை இதுக்கு முன்னாலே பார்த்த ஞாபகமே இல்லையே” என்று அவள் அழுத்தமாக யோசிக்கவும் தலை பயங்கரமாக வலித்தது.

இருந்தாலும் கொஞ்சம் பழைய நினைவுகளை நினைத்துப் பார்க்க வலி தாங்க முடியாமல் தலையில் கை வைத்தவள் அப்படியே விழிகள் சொருக மயங்கிப் போனாள்.


சட்டென்று சரிந்தவளை தன் இருகரங்களால் ஏந்திக் கொண்டவன் ஒன்றும் புரியாமல் அவளை நெருக்கமாகப் பார்த்தவன் நிரல்யாவை நாற்காலியில் உட்கார வைத்தான்.


அப்பொழுது அங்கே ஏதேச்சையாக வந்த இலக்கியன் நிரல்யா மயங்கி இருப்பதை பார்த்தவன் பதறியபடி ஓடி வந்தான்.


“நிரல் நிரல்யா என்னாச்சு?” என்று அவளருகே வந்தவன் சைத்ரனிடம் “என்னாச்சு நிரல்யா மயக்கமா இருக்காங்க?” என்றுக் கேட்க…



சைத்ரன் தயக்கத்தோடு “தெரியலை திடீர்னு இருந்தாலே மயக்கம் போட்டு விழுந்துட்டாங்க அதோட இங்கே உட்கார வைச்சு இருக்கேன்” என்றான்.தன்னுடைய தனிப்பட்ட அதுவும் தன்வி சம்பந்தப்பட்ட எல்லா விஷயங்களையும் மற்றவர்களிடம் சொல்ல அவனுக்கு பிடிக்கவில்லை.அதனால் இலக்கியனிடம் பொய் சொன்னான்.



இலக்கியன் நிரல்யாவின் கன்னங்களை மெதுவாக தட்டியவன் “நிரல்யா கண்ணைத் திறங்க என்னாச்சு?” என்று கேட்டான்.அவளிடம் எந்த பதிலும் இல்லை.உடனே அருகில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து அவளுடைய முகத்தில் தண்ணீரை தெளித்தான்.



தண்ணீர் முகத்தில் பட்டதும் லேசாக அசைந்தவள் திரும்பவும் அப்படியே மயக்கத்தில் இருந்தாள்.

உடனே அவளை தூக்குவதற்காக இலக்கியன் அருகில் செல்ல சைத்ரன் “இலக்கியன் இருங்க நானும் வரேன் நீங்க மட்டும் தூக்க வேண்டாம்” என்றான்.


“சைத்ரன் சார் வேண்டாம் எதுக்கு உங்களுக்கு தேவையில்லாத சிரமம்?”


“அப்படி எல்லாம் ஒன்னுமில்லை நான் என்னோட டிரைவர்கிட்ட காரை எடுத்துட்டு வரச் சொல்றேன் பக்கத்துல இருக்கிற ஹாஸ்பிட்டல்ல போய் த.. நிரல்யாவை காட்டாலாமா?” என்றான்.


இலக்கியனுக்கும் அது தான் சரியென்று பட்டது.அதனால் முதலில் சைத்ரன் கைப்பேசியில் டிரைவரிடம பேசி தன்னுடைய காரை கொண்டு வரச் சொன்னான்.இதற்கிடையில் யாமினியிடம் நிரல்யாவின் நிலைமைச் சொல்லப்பட்டது.அவரும் வெளியே சென்றிருப்பதால் தானும் அங்கே மருத்துவமனைக்கு வருவதாகச் சொன்னார்.நிரல்யாவின் கைப்பேசியை எடுத்து தன்னோடு வைத்துக் கொண்டான்.


கார் வந்ததும் இலக்கியன் நிரல்யாவை தூக்குவதற்கு செல்வதற்கு முன்பாக சைத்ரன் அவளை தூக்கினான்.இலக்கியனுக்கு ஒன்னும் புரியவில்லை.சைத்ரனின் இந்த திடீர் அக்கறை எதனால்? என்று மனம் கேள்வி கேட்ட கேள்விக்கு ஒதுக்கி விட்டு சைத்ரனோடு சென்றான்.



அதற்கிடையில் நிரல்யாவின் விஷயம் படப்பிடிப்பு தளத்தில் எல்லோருக்கும் தெரிந்தது.சைத்ரன் பின்னால் அமர்ந்து நிரல்யாவை படுக்க வைத்து தலையை தன் மடியின் மீது வைத்தான்.இலக்கியனுக்கு இதெல்லாம் பார்த்து ஆச்சரியமாக இருந்தது.



அருகில் இலக்கியன் இருப்பதால் சைத்ரன் தன் முகபாவனையை மாற்றிக் கொள்ளாமல் எப்பொழுதும் போல் இருந்தான்.

ஆனால் மனம் முழுவதும் தன்வியைப் பற்றியே கவலைப்பட்டுக் கொண்டிருந்தது.அவளுடைய கண்கள் மூடியிருந்தாலும் தன் கைகளால் அவளை அணைத்தபடியே அமர்ந்திருந்தான்.




சந்தித்த பத்து நாட்களில் இருவருக்குள்ளும் அப்படி ஒரு நெருக்கமா? என்று இலக்கியன் மட்டுமல்ல அந்த படப்பிடிப்பு தளத்தில் உள்ளே அனைவருமே பேசினார்கள்.இந்திராவிற்கும் தகவல் தெரிந்தது ஆனால் நேரில் எதையும் பார்க்கவில்லை.பல வருடங்களாக பழகிய தன்னிடமே அவன் நல்ல முறையில் பழகியது இல்லை ஆனால் யாரென்று தெரியாத ஒருத்திக்கு இவ்வளவு மெனக்கெடுகிறான் என்பது தான் அவளால் நம்ப முடியவில்லை.எதுவாக இருந்தாலும் நேரில் கேட்டு விட வேண்டும் என்பதில் முடிவாக இருந்தாள்.



நிரல்யாவை மருத்துவமனையில் சேர்த்து அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்த மருத்துவர் அவளை சோதனைச் செய்தார்.உடம்பை சரியாக கவனித்துக் கொள்ளாமல் இருந்ததினால் ஏற்பட்ட பலகீனத்தால் மயக்கம் வந்திருப்பதாக மருத்துவர் தெரிவித்தார்.அதனால் உடனே குளுக்கோஸ் ஏற்றப்பட்டது.



சைத்ரனுக்கு அது மட்டும் தான் பிரச்சினை என்று அவனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.அதனால் தனக்கு தெரிந்த மருத்துவரிடம் தனியாக நிரல்யாவின் நிலைமையைப் பற்றி விசாரிக்க முடிவெடுத்தான்.



இலக்கியன் சைத்ரனிடம் “சைத்ரன் சார் நீங்க கிளம்புங்க நான் பார்த்துக்கிறேன் இதுவரைக்கும் நீங்க உதவி செய்ததே பெரிய விஷயம் தாங்ஸ்” என்றான்.



அவனோ “இல்லை நிரல்யா கண்ணை முழிச்ச உடனே பார்த்துட்டு போறேன்” என்றான்.



“வேண்டாம் சார் தேவையில்லாத பிரச்சினை வரும் அதனால் தான் சொல்றேன் புரிஞ்சுக்கோங்க ஏற்கனவே உங்களோடு வந்ததால் யூனிட்ல என்ன பேசுறாங்கன்னு தெரியலை இப்போ யாராவது போட்டோ எடுத்தால் இன்னும் வேற மாதிரி போகும் இதுல நிரல்யா தான் மாட்டிக்குவா”என்றான்.



ஆனால் சைத்ரன் முடிவோடு ‘இனிமேல் யார் என்னச் சொன்னாலும் எனக்கு அதைப் பற்றியெல்லாம் கவலையில்லை தன்வி எனக்கானவள் எத்தனை நாளாக தேடிக் கொண்டிருந்தவள் இப்போ எனக்காக இருப்பவளை மட்டும் தான் நான் நினைக்கனும்’ என்று அவனுள்ளே நினைத்துக் கொண்டிருக்கும் போது….


இலக்கியன் “சார் ப்ளீஸ் உங்களைச் சுற்றி பாருங்க” என்றான்.



இப்பொழுதே சுற்றியிருப்பவர்கள் ஓரளவு அவன் யாரென்று தெரிந்துக் கொள்ள ஆரம்பிக்கவும் அதைச் சுற்றிக் காட்டியதை புரிந்துக் கொண்டவன் “ம்ம்…. சரி நான் நிரல்யாவைப் பார்த்துட்டு போறேன்” என்று உள்ளே சென்றவன் ஐந்து நிமிடத்தில் வெளியே வந்தவன் இலக்கியனிடம் நிரல்யாவின் கைப்பேசியைக் கொடுத்து “இது நிரல்யாவோட போன் அவங்க முழிச்சதும் கொடுத்துடுங்க அப்புறம் என்னுடைய அசிஸ்டன்ட் வந்து மற்றவை எல்லாம் பார்த்துக்குவான்” என்று சொல்லி விட்டு கூட்டம் சேருவதற்கு முன்பே அங்கிருந்து வேகமாகச் சென்றான்.


அடுத்த அரைமணி நேரத்தில் யாமினி இலக்கியனிடம் கேட்டு மருத்துவமனைக்கு வரவும் நிரல்யா கண் விழிக்கவும் சரியாக இருந்தது.



மெதுவாக கண்களை திறந்தவள் தலையில் கை வைக்கவும் கையில் ஏறிக் கொண்டிருந்த குளுக்கோஸ் ஏற்றுவதற்காக போடப்பட்டிருந்த நரம்பு ஊசியால் கை வின்னென்று வலித்தது.



அதனால் தன்னைச் சுற்றி ஒருமுறை பார்வையை சுழல விட்டவள் தான் எங்கே இருக்கிறோம்? என்று புரியும் பொழுது யாமினியும் இலக்கியனும் உள்ளே வந்தார்கள்.


அவள் கண்விழித்ததை பார்த்ததும் யாமினியும்,இலக்கியனும் அருகில் வந்தார்கள்.யாமினி “எப்படிம்மா இருக்கே? உடம்புக்கு எதாவது செய்யுதா?” என்றார் அக்கறையோடு…



“ம்ம்… பரவாயில்லை” என்று எழுந்துக் கொள்ள முயற்சிக்க இலக்கியன் வந்து அவளை உட்கார வைக்க உதவினான்.அவள் கொஞ்சம் சாய்ந்து உட்கார்ந்ததும் யாமினி “என்னாச்சு நிரல்யா? ன் திடீர்னு மயக்கம் போட்டு விழுந்துட்டே? அங்கே நீயும் சைத்ரனும் தானே இருந்தீங்க? சைத்ரன் எதாவது?” என்று அவர் கேட்க வரும் பொழுது…


“இல்லை நீங்க நினைக்கிற மாதிரி எதுவும் இல்லை மேம் பொதுவா பேசிட்டு இருக்கும் போது ரொம்ப தலை வலிச்சது அது தான் நினைவு இருக்கு அப்புறம் இப்போ தான் கண்விழித்தேன்” என்றாள்.



அதைக் கேட்ட இலக்கியன் “எதாவது பிரச்சினை என்றால் எங்ககிட்ட தயங்காமல் சொல்லுங்க நிரல்யா எதுவும் மறைக்காதீங்க!”



“இல்லை சார் நான் சொல்றது உண்மை தான்” என்றாள்.



இலக்கியன் “எது எப்படியோ? இனிமேலாவது உங்க உடல்நிலை நல்லா கவனிச்சுக்கோங்க நிரல்யா டிரிப்ஸ் முடிஞ்சதும் டாக்டரை பார்த்துட்டு நானே கொண்டு போய் வீட்ல விடுறேன்” என்றான்.



“இல்லை வேண்டாம் சார் உங்களுக்கு எதுக்கு தேவையில்லாத சிரமம் என்னோட ப்ரெண்டை வரச் சொல்லுறேன் அவ என்னோடு துணையா இருப்பாள் ” என்றதும்

இலக்கியனும் சரியென்று ஒத்துக் கொண்டான்.


“சைத்ரன் சார் எங்கே?” என்றாள்.இலக்கியன் நடந்ததைச் சொன்னான்.அவளும் அமைதியாக இருக்க அவன் கொடுத்த கைப்பேசியை இவளிடம் கொடுத்தான்.அதையும் சைத்ரன் தந்ததாகச் சொன்னான்.உடனே அஸ்வதியை கைப்பேசியில் அழைத்து அவளிடம் பக்கத்தில் இருவரும் இருப்பதால் வேலையில் மயங்கி விட்டதாக பொய்யான நடந்ததைச் சொல்லி அவளை வரச் சொன்னான்.


இலக்கியன் “நிரல்யா நாளைக்கு நீங்க ஷீட்டிங் ஸ்பாட்டுக்கு வர வேண்டாம் சின்னச் சின்ன சீன்ஸ் தான் எடுக்க வேண்டி இருக்கு அதை நாங்க பார்த்துக்கிறோம் நீங்க நல்லா ரெஸ்ட் எடுங்க இனிமேல் ஏர்போட்டுல சந்திக்கலாம்” என்றான்.அதற்கு யாமினியும் ஒத்துக் கொண்டார்.



அடுத்த அரைமணி நேரத்தில் அஸ்வதி அங்கே வந்தாள்.அவளுக்கு அடுத்து சைத்ரனின் உதவியாளன் மணியும் வந்தான்.


அஸ்வதி நேராக வந்து நிரல்யாவைக் கட்டிக் கொண்டவள் “என்னாச்சு நிரல்யா”


“எல்லாம் அப்புறமா பேசிக்கலாம்” என்றவள் யாமினியையும் இலக்கியனையும் அஸ்வதிக்கு அறிமுகப்படுத்தி வைத்தாள்.



மணி வந்து இலக்கியனிடம் தனியாக “சார் பில் எல்லாம் சைத்ரன் சாரை பார்த்துப்பாங்க அப்புறம் நிரல்யா மேடத்தை நானே கொண்டு போய் வீட்ல டிராப் பண்றேன்” என்றான்.



அவன் அப்படி சொன்னதும் இலக்கியனால் மறுப்பு பேச முடியவில்லை.சரியென்று ஒத்துக் கொண்டான்.



அஸ்வதியிடம் அவர்களும் இவளிடம் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டனர்.குளுக்கோஸ் ஏற்றுவது முடியும் தருவாயில் இருந்ததால் இலக்கியன் நிரல்யாவிடம் “நானும் மணியோடு வந்து உங்களை டிராப் பண்ணிடுறேன்” என்றான்.



யாமினி அதற்கு சரியென்று சொல்ல நிரல்யாவும் அஸ்வதியும் வேறு வழியில்லாமல் ஒத்துக் கொண்டனர்.யாமினி அங்கிருந்து செல்லவும் இருவரும் மருத்துவரை பார்க்கச் சென்றனர்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவிடுங்கள்

 

NNK-74

Member
கண்ணுக்குள்ளே கரைந்த நிலவு அத்தியாயம் -9


மருத்துவரிடம் நிரல்யா “டாக்டர் எனக்கு பழைய விஷயங்களை ஞாபகப்படுத்தி பார்க்கும் போது ரொம்ப தலை வலிக்குது” என்றாள்.


ஒரு நிமிடம் யோசித்தவர் “நான் சில மருந்துகளை எழுதி தரேன் அதை சாப்பிடுங்க திரும்ப கொஞ்சம் நினைவுப் படுத்தி பாருங்க அப்பவும் தலை வலிச்சதுன்னா ஒரு ஸ்கேன் எடுத்து பார்த்துடலாம் அப்புறம் உங்க உடம்பு ரொம்ப பலகீனமாக இருக்கு அதனால சில வைட்டமின் மருந்தும் தரேன் அதையும் சேர்த்து சாப்பிடுங்க உடம்பை கவனிச்சுக்கோங்க” என்று சில அறிவுரைகளையும் வழங்கினார்.



எல்லாவற்றையும் கேட்டு இருவரும் வெளியே வந்தனர்.அவர்களுக்காக இலக்கியனும் காத்திருந்து வந்ததும் மூவருமாக மணியுடன் காரில் சென்றனர்.



அஸ்வதி “சார் இதுக்கு முன்னாடி ஒரு படம் எடுத்து ஹிட் ஆச்சே நீங்க தானே அந்த டைரக்டர்?” என்று தன் சந்தேகத்தை பற்றிக் கேட்டு தெரிந்துக் கொண்டாள் அஸ்வதி.


அவனும் ஆமாம் என்று தலையசைத்தான்.உடனே அஸ்வதி அதிலுள்ள சில காட்சிகளைச் சொல்லி இந்த சீன் சூப்பரா இருந்துச்சு என்று அவனிடம் கேள்வி மேல் கேள்வி கேட்டு தொந்தரவு செய்துக் கொண்டே இருந்தாள்.



இலகக்கியனும் அவள் கேட்பது சிலவற்றிருக்கு பதிலளித்தும் தலையசைத்தும் வந்தான்.கடைசியில் நிரல்யா தான் கண்ணைக் காட்டி சைகையால் அஸ்வதியின் வாயை மூட வைத்தாள்.


அஸ்வதி மற்றும் நிரல்யாவின் வீடு வர இருவரும் சொல்லி விட்டு காரிலிருந்து இறங்கினார்கள்.அவர்களோடு இலக்கியனும் இறங்கி வாங்கிய மருந்துகள் பையை எடுத்து அதோடு சில பழவகைகளையும் வாங்கியிருக்க அதையும் எடுத்து நிரல்யாவிடம் கொடுத்தான்.


“நிரல் உங்க உடம்பை நல்லா கவனிச்சுகோங்க நாம ஏர்போட்டுல சந்திக்கலாம் உங்க நம்பர் தருவீங்களா?” என்று கேட்டான் தயக்கத்தோடு…



அவளோ எதைப் பற்றியும் யோசிக்காமல் தன்னுடைய கைப்பேசி எண்ணை இலக்கியனுக்கு கொடுத்தாள்.அதை வாங்கியதும் அவன் முகத்தில் அப்படி ஒரு புன்னகை.



நடப்பதை எல்லாம் ஓரமாக நின்றிருந்த ஒரு காரிலிருந்து ஒருவன் கோபத்தோடு பார்த்துக் கொண்டிருந்தான். இலக்கியன் “நிரல் நீங்க போய் ரெஸ்ட் எடுங்க நான் அப்புறமா கால் பண்றேன்” என்று அஸ்வதியிடம் “நிரலை நல்லா கவனிச்சுகோங்க எதாவது ஒரு அர்ஜண்ட்டுனா எனக்கு போன் பண்ணுங்க நிரல்யா போன்ல என் நம்பர் இருக்கு நான் மெஸேஜ் அனுப்பி இருக்கேன் சேவ் பண்ணிக்கோங்க” என்று அவ்வளவு அக்கறையாக பேசினான்.



அவன் அக்கறையாக பேசும் பொழுதெல்லாம் அஸ்வதியைப் பார்த்து கண்களை உருட்டி ‘'போ வேற லெவல்” என்று சைகையால் சொல்லி சிரித்தாள்.


இவர்கள் இருவரும் உள்ளே சென்ற பிறகு தான் இலக்கியன் அங்கிருந்துச் சென்றான்.


நிரல்யாவின் கைகளைப் பிடித்தவள் நேராக அவர்கள் இருவரும் பேசும் பால்கனியின் பக்கம் போய் உட்கார்ந்தனர்.


அஸ்வதி “என்ன நடந்துச்சுன்னு ஒழுங்கா சொல்லு நிரல்யா? ஏன் மயக்கம் போட்டு விழுந்தே?” என்று அடுத்தடுத்து கேள்வி கேட்டாள்.


நிரல்யா நடந்த எல்லாவற்றையும் சொன்னாள். நடந்ததை எல்லாம் கேட்டு அஸ்வதி யோசனையில் மூழ்கியிருந்தாள்.ஆனால் தன்னுடைய கவலையை தோழி தெரிந்துக் கொள்ள விரும்பாதவள் முகத்தை எப்போதும் போல் வைத்திருந்தாள்.அப்பொழுது நிரல்யாவின் கைப்பேசி அழைத்தது.



நிரல்யா யாரென்று பார்க்க அதில் ஆதித் சைத்ரனின் பெயரோடு அவனின் புகைப்படம் தெரிய இவள் அதிர்ச்சியோடு பார்த்தாள்.


அதைப் பார்த்த அஸ்வதி “என்னாச்சு நிரல் உன் போனையே இப்படி ஷாக்காகி பார்க்கிறே?”


“இங்கே பாருடி” என்று அவள் சைத்ரனின் அழைப்பைக் காட்ட…


அஸ்வதியோ தன் வாயில் கை வைத்து அடித்துக் கொண்டே “ஐயோ… ஐயோ…என்ன நடக்குது இங்கே? ஒரு பெரிய ஹீரோ கால் பண்ணுற அளவுக்கு பழக்கம் இருக்கு ஆனால் இந்த ப்ரெண்ட்டுகிட்ட சொல்ல ஒரு வார்த்தை தோணலை அவ்வளவு தான் நம்ம பழகியது எல்லாம் பொய்யா? சொல்லு நிரல் சொல்லு” என்று இவள் வசனம் பேசிக் கொண்டிருக்க அங்கே அழைப்பு நின்றுப் போனது.



தலையில் கைவைத்துக் கொண்ட நிரல்யா “ஹய்யோ… இந்த லூசுகிட்ட ஒன்னு சொல்லி புரிய வைக்கிறதுக்குள்ளே எனக்கு வயசாகிடும் போல” என்று கவலையோடு சொன்னாள்.


அதைப் பார்த்த அஸ்வதி சிரித்துக் கொண்டே “உனக்கு வயசு ஆனால் எனக்கும் வயசாகாடும் இது கூட தெரியலை” என்று இவள் வாயடித்துக் கொண்டிருக்க…


நிரல்யா “அஸ்வதி முதல்ல இதை எப்படி நான் சமாளிக்கிறதுன்னு பதில் சொல்லு” என்றாள்.


இவளோ முகத்தை கொஞ்சம் சீரியஸாக வைத்துக் கொண்டு “உன் போன்ல இவரோட நம்பர் எப்படி வந்துச்சுன்னு எனக்கு தெரியலைன்னு மட்டும் சொல்லாதே! நிரல்” என்றதற்கு



நிரல்யா “நீ சொன்னாலும் சொல்லைனாலும் அதான்டி உண்மை.சைத்ரன் சாரோட நம்பர் எப்படி என் போன்ல வந்துச்சுன்னு எனக்கே தெரியலை” என்று இவள் பேசிக் கொண்டிருக்கும் பொழுதே திரும்பவும் கைப்பேசி அழைத்தது.



ஓரளவு நிலைமையைப் புரிந்துக் கொண்ட அஸ்வதி உடனே “கால் அட்டன் பண்ணி பேசு அப்போத் தான் என்னன்னு தெரிஞ்சிக்க முடியும் நிரல் போனை ஸ்பீக்கர்ல போடு” என்று இவள் கொஞ்சம் தைரியம் கொடுக்க இவளும் குழப்பத்தோடு அழைப்பை எடுத்து காதில் வைத்து


“ஹலோ”



“ஹலோ தன்வி ஆதித் பேசுறேன்”


அவன் அப்படி சொன்னதும் அஸ்வதி புரியாமல் நிரல்யாவைப் பார்த்தாள்.



இவளோ தலையசைத்துக் கொண்டு “சொல்லுங்க சைத்ரன் சார்”



“தன்வி நீ எப்படி இருக்கேன்னு கேட்டு உன்னை நேர்ல பார்க்கலாம்னு உன் ப்ளாட் முன்னால நிற்கிறேன் நீ இருக்கிற வீட்டோட நம்பர் சொன்னால் நான் உள்ளே வர முடியும்” என்று இருவருக்கும் அடுத்த அதிர்ச்சியைக் கொடுத்தான்.



நிரல்யா அஸ்வதியைப் பார்க்க அவளோ பேசு என்பது போல் சைகைச் செய்ய… “சார் எதுக்கு உங்களுக்கு தேவையில்லாத சிரமம்? போன்ல விசாரிச்சு இருக்கலாமே!” என்றதற்கு



அவனோ அவசரமாய் “தன்வி ரொம்ப நேரம் என்னால இங்கே நிற்க முடியாது ஏன்னு உனக்கு காரணம் சொல்லனுமா? உன் டோர் நம்பர் சொல்லு” என்றதும் பக்கத்தில் இருந்த அஸ்வதி “டோர் நம்பர் 313 மூணாவது மாடி” என்றதும் அழைப்பு துண்டிக்கப்பட்டது.


நிரல்யா அஸ்வதியைப் பார்த்து முறைத்துக் கொண்டிருந்தாள்.


“இப்போ எதுக்கு நம்பர் சொன்னே?”



“இதென்ன அநியாயமா இருக்கு நீ எப்படி இருந்தாலும் சொல்லி இருப்பே அதைத் தானே நான் சொன்னேன்” என்றாள்.


“இல்லை அஸ்வதி எனக்கு பயமா இருக்கு”



“பயப்பட என்ன இருக்கு? உன் கூட துணைக்கு நான் இருக்கேன் இன்னைக்கு உனக்கும் சைத்ரனுக்கும் உள்ள விஷயத்தைப் போட்டு குழப்பிட்டு இருக்கிறதுக்கு நாம நேர்லேயே கேட்டு தெரிஞ்சுக்கலாம்”என்று கொஞ்சம் ஆதரவோடு பேசினாள்.



அவள் பேசியதை எல்லாம் கேட்டு கொஞ்சம் தைரியத்தை வரவழைத்துக் கொண்டாள்.வீட்டின் அழைப்புமணி அழைக்கும் சத்தம் கேட்து.நிரல்யா மெதுவாக சென்று கதவை திறக்க… வாசலில் தலையில் தொப்பி முகத்தில் முகமூடி என்று ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு சைத்ரன் நின்றுக் கொண்டிருந்தான்.



இவளுக்கு ஓரளவு அடையாளம் தெரியவும் அவனைப் பார்த்து “உள்ளே வாங்க” என்றாள்.


அஸ்வதியும் அருகில் நின்றுக் கொண்டிருந்தாள்.அவன் உள்ளே வந்ததும் கதவை தாழிட்டுக் கொள்ள சைத்ரன் தனது தொப்பி,மாஸ்க் எல்லாவற்றையும் கழற்றினான்.இதுவரை நடப்பது அவ்வளவாக நம்பாமலும் விளையாட்டாக எண்ணியிருந்த அஸ்வதி ஆறடி உயரத்தில் முகத்தில் வழிந்த கேசத்தோடு சிவந்த நிறம்,அழகான விழிகள்,கட்டுக்கோப்பான உடலோடு நிற்கும் அந்த அழகனை பார்த்து கண்ணிமைக்காமல் ஒருநொடி அப்படியே அதிர்ச்சியில் நின்றாள்.



தன் கண்களையே நம்ப முடியாமல் பார்த்துக் கொண்டிருக்க… நிரல்யா “உக்காருங்க சார்” என்று அங்கிருந்த இருக்கையைக் காட்டினாள்.வந்திருந்த இடத்தைச் சுற்றி ஒருமுறை பார்வையை சுழல விட்டவன் அவள் கொடுத்த இருக்கையில் அமர்ந்தான்.



பக்கத்தில் அவனை கண்ணிமைக்காமல் ஆச்சரியத்தோடு பார்த்துக் கொண்டிருந்த அஸ்வதியை நிரல்யா பிடித்துக் கொண்டு “சார் இவ என்னோட ப்ரெண்ட் அஸ்வதி” என்றாள்.



அவள் அப்படி பிடித்ததும் கொஞ்சம் நினைவுக்கு வந்தவள் நிரல்யாவிடம் “ஹேய் கொஞ்சம் என்னை கிள்ளி விடு நடக்கிறதை எல்லாம் பார்த்தால் எனக்கு கனவா? நினைவான்னு ஒரே குழப்பமா இருக்கு உண்மையிலேயே நம்ம வீட்டுக்கு எவ்ளோ பெரிய ஸ்டார் சைத்ரன் சார் வந்திருக்காங்க” என்று அவனை புகழ்ந்துக் கொண்டிருந்தாள்.



இதைப் பார்த்து சைத்ரன் சிரித்துக் கொண்டிருந்தான்.நிரல்யாவிற்கு எங்கேயாவது போய் முட்டிக் கொள்ளலாம் என்பது போல் இருந்தது.இங்கே நடப்பது என்ன? இவளோ நடந்துக் கொள்வது பற்றி நினைத்துக் கொண்டவள் கொஞ்சம் தன்னை தைரியப்படுத்திக் கொண்டு “சார்” என்றதும்…


சட்டென்று “ப்ச்… தன்வி என்னை சார்னு சொல்லாதே ஆதித் சொல்லி கூப்பிடு நீ இப்படி சார்னு சொல்லும் போது நம்ம ரெண்டுபேருக்குள்ளும் ரொம்ப டிஸ்டன்ஸ் இருக்கிற மாதிரி இருக்கு” என்றான்.



அவன் பேசியதைக் கேட்டுக் கொண்டிருந்த அஸ்வதி “சார் உங்க குரலை கேட்டுட்டே இருக்கலாம் போல அவ்வளவு இனிமையா இருக்கு” என்று அவனை இரசித்துக் கொண்டிருந்தாள்.


நிரல்யா அஸ்வதி சிறிது நேரம் முன்பு பேசியதை நினைத்துப் பார்த்தவள் “ஐயோ… என்னச் சொல்றதுன்னே தெரியலை” என்று இவள் புலம்பிக் கொண்டிருக்க…


சைத்ரன் “தன்வி இங்கே உட்காரு ஏன் நிற்கிறே? உனக்கே உடம்பு சரியில்லை இப்படி வா” என்று தன் பக்க இருக்கையை காட்டினான்.



“இருக்கட்டும் சார் இப்போ எதுக்காக இங்கே வந்து இருக்கீங்க?”


“தன்வி முதல்ல உட்காரு ப்ளீஸ் என்னை இப்படி செய்து சங்கடப்படுத்தாதே! உன்னை நினைச்சு எனக்கு ரொம்ப கவலையா இருக்கு உடம்பு சரியில்லை தானே அதனால உட்கார்ந்து பேசலாம்” என்றான் அக்கறையாய்…


அவனின் இந்த அக்கறையான கவனிப்பில் ஒருநொடி அவளே ஆடிப் போனாள் என்றால் அஸ்வதி “சார் சொல்றங்கல்ல கேட்க மாட்டியா? இப்படி வா” என்று அவனுக்கு இருக்கையில் எதிர்புறமாக அமர்ந்தனர் இருவரும்.



அஸ்வதியின் கைகளை இறுக்கமாக பற்றிக் கொண்டாள் நிரல்யா.யாரென்று தெரியாத ஒருவனின் இந்த திடீர் அக்கறையும் அன்பும் அவளின் மனதை அசைத்துப் பார்த்தாலும் நம்புவதற்கு அவள் மனம் ஒப்பவில்லை.



பெண்ணின் மனம் எப்பொழுதும் எதையும் சந்தேகித்துப் பார்க்கும்

குணம் கொண்டது.அதிலும்

சிறுவயதில் இருந்தே நிறைய அனுபவங்கள் அவளை பக்குவப்படுத்தி இருந்தது.

அதனால் தன்னைவிட எல்லாவிதத்திலும் மேலாக இருக்கும் ஒருவனின் திடீரென்று கனிவான அணுகுமுறை பெண்ணவளை இன்னும் அதிகமாக யோசித்தது.



அதே நிலைமையில் பாதிக்கு வந்து விட்டாள் அஸ்வதி.சைத்ரனைப் பார்த்த அதிர்ச்சி இருந்தாலும் தன் தோழியிடம் அவன் நடந்துக் கொள்ளும் முறையில் அவளால் பொய்யாக நினைக்க முடியவில்லை.இருந்தாலும் நடிகனாக இருப்பதால் அதிலும் தேர்ச்சி பெற்றவன் தானே என்ற எண்ணமே இருந்தது.எதுவாக இருந்தாலும் நடந்ததை ஓரளவு தெரிந்துக் கொண்டு முடிந்தவரை உண்மையை கண்டறிய நினைத்தாள் அவள்.


ஒருசில நிமிடங்கள் அங்கே அமைதியே எல்லோரையும்

ஆக்கிரமித்து இருந்ததது.

முதலில் அஸ்வதியே

ஆரம்பித்தாள்.


“சார் என்ன நடந்துச்சு? இப்போ என்ன நடக்குதுனு நீங்க கொஞ்சம் விளக்கமா சொன்னால் நல்லா இருக்கும்.எல்லாத்தையும் எல்லோருமே உடனே நம்ப மாட்டாங்க” என்றாள் நிதர்சனத்தை.



நீண்ட பெருமூச்சு விட்டவன் முதலில் “தன்வி உன்னோட போன்ல நான் தான் நம்பர் சேவ் பண்ணேன் நீ மயக்கத்தில் இருக்கும் போது உன்னோட பிங்கர் பிரிண்ட் மூலமா போனோட லாக் ஒப்பன் பண்ணி என்னோட நம்பர் சேவ் பண்ணிட்டு உன்னோட நம்பரை நான் தெரிஞ்சுக்கிட்டேன் சாரி உன்னை தப்பா யூஸ் பண்ணனும் அப்படிங்கிறதால இல்லை. நீ எப்படி இருக்கேன்னு தெரிஞ்சக்கத் தான் உன் நம்பரை அனுமதி இல்லாமல் வாங்கி இருக்கேன் என்னை மன்னிச்சிடு” என்று நடந்த முதல் உண்மையைச் சொன்னான்.


இதைச் சொன்னதும் நிரல்யாவும்,அஸ்வதியும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.


இருவருரையும் அவனது அசிஸ்டன்ட் மணி மருத்துவமனையில் இருந்து அழைத்து வீட்டிற்கு வரும் பொழுதே சைத்ரன் பின்னால் இவர்களை தொடர்ந்து வந்து நிரல்யா இருக்கும் இடத்தை கண்டுக் கொண்டான்.இலக்கியன் பேசிக் கொண்டதையும் தூரத்தில் இருந்து கவனித்ததையும் சொன்னான்.


“இலக்கியன் கேட்ட உடனே நீ உன்னோட மொபைல் நம்பர் கொடுத்தே ஆனால் நான் கேட்டால் தருவியான்னு எனக்கு யோசனையாகவே இருந்துச்சு அந்தளவுக்கு என் மேல நம்பிக்கை இருக்குமான்னு என்னை நானே ஒரு கேள்வியை வைச்சேன்.எதுவாக இருந்தாலும் நேர்லே பேசிக்கலாம் தான் வந்தேன்” என்று அதற்கும் தன் பக்க காரணத்தை சொன்னான்.



அஸ்வதி “இப்போ நீங்க நடந்துகிட்டது எல்லாம் ஓகே ஆனால் இவ்வளவு நாளா நிரல்யாவைப் பற்றி எதுவும் தெரிஞ்சுக்க முயற்சிக்காமல் திடீர்னு போன்ல இருந்த போட்டோ வைச்சு எப்படி நீங்க பேசலாம்?” என்று அஸ்வதி நிரல்யா மனதில் இருந்த கேள்வியை அவளே கேட்டாள்.



“அதைப் பற்றி இன்னைக்கே பேசிட்டு போகலாம் தான் நேர்ல வந்தேன்” என்று தன்னிடம் உள்ள கைப்பேசியை எடுத்து அதில் ஒரு புகைப்படத்தை இருவரிடமும் காட்டினான்.



அந்தப் புகைப்படத்தில் நிரல்யாவிற்கு ஒரு ஏழு வயதாக இருக்கும் போது சிறுமியாகவும் அருகில் ஒரு பன்னிரெண்டு வயதில் ஒரு பையனும் அவர்கள் இருவரையும் பிடித்தவாறு ஒரு பெண்மணியும் நின்றுக் கொண்டிருந்தார்.அதைப் பார்த்து இருவரும் அப்படியே அதிர்ச்சியில் நின்றனர்.


இந்த புகைப்படத்தை எப்பொழுது எடுத்தார்கள் என்று தனக்கே தெரியவில்லையே என்ற நிலைமையில் இருந்தாள் நிரல்யா.

(தொடரும்)

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவிடுங்கள்
 

NNK-74

Member
கண்ணுக்குள்ளே கரைந்த நிலவு

அத்தியாயம் -10


அஸ்வதி சைத்ரன் காட்டிய புகைப்படத்தைப் பார்த்து அதில் இருந்த சிறுவனை சுட்டிக் காட்டி “இந்த போட்டோல இருக்கிறது நீங்க தானா?” என்றாள்.



“ஆமாம் நான்தான்.இது என்னோட அம்மா” என்றான் உணர்ச்சி ததும்ப குரலில்…



நிரல்யா ஒருவித குழப்பத்திலேயே அஸ்வதியிடம் “அஸ்வதி இந்த போட்டோ எப்போ எடுத்தோம்னு எனக்கு சரியா நினைவு இல்லை நீயும் நானும் சின்ன வயசில இருந்தே ப்ரெண்ட்ஸ் தானே அப்போ இந்த போட்டோ எப்போ எடுத்தோம்னு உனக்கு தெரியுமா?” என்று கேட்டாள் ஆவலோடு….



அஸ்வதி யோசனையோடு “தெரியாது”என்பது போல் தலையை ஆட்டியவள் “நீயும் நானும் பத்து வயசில் இருந்து தான் ப்ரெண்ட்ஸ் ஆனோம் அதுக்கு முன்னாடி தான் இந்த போட்டோ எடுத்து இருக்கனும்” என்று சரியாகச் சொன்னாள்.



நிரல்யா இதைப் பற்றி யோசித்து திரும்பவும் முடியாத நிலைக்கு வந்து விடக்கூடாதே! என்று பயத்தில் இருந்தாள்.அவளது நிலையைப் புரிந்துக் கொண்ட சைத்ரன் “தன்வி இதையெல்லாம் உன்கிட்ட சொல்லி உன்னை கஷ்டப்படுத்த நான் விரும்பலை என்னை யாரோ தெரியாதவன் வந்து நம்மை ஏமாத்துறான்னு நினைக்கக் கூடாதுல்ல அதனால் தான் இந்த போட்டோ எனக்கு ஓரு ஆதாரமா இருந்துச்சு அதை உன்கிட்ட காட்ட வந்தேன்,இந்த கன்னத்தில் ஓரமாக இருந்த மச்சத்தை வைச்சுத் தான் உன்னை கண்டுபிடிச்சேன்” என்றான்.



உடனே அஸ்வதி “எல்லாம் சரிதான் சார் ஆனால் இத்தனை வருஷமா அவளை தேடாமல் திடீர்னு முன்னால் வந்ததும் இப்படி பேசுறீங்க?”



“நீங்க நினைக்கிறது தப்பு நான் தேடலைன்னு யார் சொன்னாங்க? என்னால முடிஞ்ச வரைக்குமே நான் முயற்சி பண்ணிட்டு தான் இருந்தேனே தவிர அதை நான் விடலை.ஏன்னா என்னுடைய அம்மாக்காக நான் தன்வியை தேடுனேன்”



நிரல்யாவிற்கு சைத்ரன் பேசப்பேச ஏதோ தலையில் திரும்பவும் வலிக்கத் தொடங்கியது.அஸ்வதியின் மேல் கை வைத்தவள் அழுத்தமாக பிடிக்கவும் அஸ்வதி நிரல்யாவைப் பார்த்தாள்.அவளின் நிலைமையை அவள் புரிந்துக் கொள்ளும் முன்பாக சைத்ரன் “இதுவரைக்கும் நாம பேசுனது போதும் தன்வி என்னால உன்னை கஷ்டப்படுத்திக்காதே!” என்று சொன்னவன் மனதினுள் ‘எதனால உனக்கு இந்த நிலைமைன்னு தெரியும் அன்னைக்கு நடந்த ஒரு சின்ன ஆக்ஸிடென்ட் உன் வாழ்க்கை மட்டுமல்ல அது என் வாழ்க்கையையும் திருப்பி போட்டுச்சு’ என்ற நினைத்து அமைதியாக இருந்தான்.



நிரல்யா கொஞ்சம் அமைதியானதும் “நான் கிளம்புறேன் நீ ரெஸ்ட் எடு தன்வி இப்போக் கூட இந்த போட்டோ அவசரமா வந்து உன்கிட்ட காட்ட வேண்டிய அவசியம் நான் யாரோ இல்லை உன்னை சின்ன வயசிலிருந்து நல்லா தெரிஞ்ச ஒரு நண்பன் அப்படிங்கிற எண்ணத்தோடு என்னை பாரு அது மட்டும் தான் எனக்கு வேணும் பழைய நினைவுகள் உனக்கு கஷ்டத்தை தரும்னா அது வேண்டாம் கூடிய சீக்கிரம் நாம நல்ல முறையில் சந்திக்கலாம்னு நினைக்கிறேன்”என்று எழுந்துக் கொண்டான்.



வாசலில் போய் நின்றுக் கொள்ள அஸ்வதி கதவருகே வந்தாள்.அவளிடம் தன்னுடைய சந்திப்பு அட்டையை நிரல்யாவிற்கு தெரியாமல் அவளிடம் கொடுத்து ‘'போன் செய்ங்க” என்பது போல் சைகை செய்து விட்டு சென்றான்.அஸ்வதியும் சரியென்பது போல் தலையசைத்தாள்.



அவன் சென்றதும் நிரல்யா அஸ்வதியிடம் “சைத்ரன் சார் என்னவெல்லாம் சொல்லுறாரு எனக்கு ஒன்னுமே புரியலை” என்றாள்.



அஸ்வதி அவளருகே வந்து “நிரல் தேவையில்லாததை யோசிக்காமல் நல்லா படுத்து தூங்கு நான் சாப்பாடு ரெடியானதும் உன்னை எழுப்பி விடுறேன் ” என்று நேராக அவளை அவளுடைய அறையில் படுக்க வைத்து விட்டு தன்னுடைய அறைக்கு வந்தாள்.


சிறிதுநேரமாக சைத்ரன் கொடுத்த சந்திப்பு அட்டையை ஆழ்ந்த யோசனையோடு பார்த்துக் கொண்டிருந்தாள்.யாருமே எதிர்பார்க்காதே நேரத்தில் சட்டென்று வந்தவனைப் பற்றியும் அவனது அக்கறை உண்மைதானா? என்று சிந்தித்தாள்.


இவ்வளவு பெரிய புகழ்,பணம் என எல்லாவிதமான திறமையும்,வசதியும் இருந்து அவன் எதுவும் இல்லாத நிரல்யாவிடம் பேச நினைப்பதில் எந்தவொரு உள் நோக்கமும் இருக்க வாய்ப்பில்லை.ஆனால் இது நட்பாக மட்டும் இருக்கப் போவதில்லை.சைத்ரனுக்கு நிரல்யாவை பிடித்திருக்கிறதோ? என்று இன்னொரு பக்கமும் யோசித்தாள்.அதனால் தான் அவளை விடாமல் தேடிக் கொண்டிருக்கிறான் என்று அவளும் ஓரளவு புரிந்துக் கொண்டாள்.



உடனே இதைப்பற்றிய உண்மை நிலையினை அறிய சரஸ்வதி அம்மாவிடம் பேசி தெரிந்துக் கொள்ள முடிவெடுத்தாள்.அதனால் நிரவ்யாவின் அறையை எட்டிப் பார்த்தாள்.அங்கே மருத்துவமனையில் எடுத்திருந்த மருந்தின் காரணமாக அவள் தன்னையும் அறியாமல் அசந்து போய் தூங்கிக் கொண்டிருந்தாள்.



உடனே அவளுடைய அறைக்கதவை மெதுவாக சாத்தி விட்டு முதலில் சைத்ரனுக்கு குறுஞ்செய்தி அனுப்பினாள்.



“நான் அஸ்வதி எனக்கு நீங்க காட்டிய அந்த போட்டோவை என்னுடைய நம்பருக்கு அனுப்புங்க நான் அதை பற்றி சரஸ்வதி அம்மாவிடம் பேச வேண்டியது நிறைய இருக்கு அதற்குப் பிறகு தான் உங்ககிட்ட நான் பேச முடியும்” என்று அனுப்பினாள்.


அவனோ எந்தவிதமான கேள்வியும் கேட்காமல் அந்த புகைப்படத்தை அனுப்பி வைக்கிறேன் என்றவன் “தன்வி என்னச் செய்றா?” என்று அவளைப் பற்றி மட்டும் விசாரித்தான்.



உடனே அஸ்வதி “அவள் தூங்கிட்டு இருக்கிறாள்” என்று பதிலுக்கு அனுப்பினாள்.



“அவளை பத்திரமா பார்த்துங்கோங்க” என்று குறுஞ்செய்தியை பதிலுக்கு அனுப்பி வைத்து விட்டு அடுத்து அந்த புகைப்படத்தையும் சேர்த்து அஸ்வதிக்கு அனுப்பினான்.



அஸ்வதியோ மனதினுள் ‘பார்டா இவ்வளவு நாளா இவர் சொல்லியா நான் பார்த்துகிட்டேன் நிரலை என்னோட ப்ரெண்ட் அவளை பார்த்துக்க எனக்கு தெரியும் திடீர்னு வந்துட்டு அக்கறையைப் பாரு’ என்று இவள் நினைத்துக் கொண்டாள்.



அடுத்து சரஸ்வதி அம்மாவிற்கு கைப்பேசியில் அழைத்து அவரிடம் அவரையும் வீட்டில் உள்ள மற்றவர்களையும் பற்றியும் நலம் விசாரித்தாள்.


“அம்மா உங்ககிட்ட ஒரு விஷயம் கேட்கனும் உங்களுக்கு போட்டோ ஒன்னு அனுப்பி இருக்கேன் அதைப் பற்றி எனக்கு எல்லாத்தையும் சொல்லுங்க” என்று சைத்ரன் அனுப்பிய புகைப்படத்தை சரஸ்வதிக்கு அனுப்பி வைத்தாள்.



அதைப் பார்த்து விட்டு சிரித்துக் கொண்டே சரஸ்வதி திரும்ப அஸ்வதியிடம் பேசினார்.


“ஹலோ”


“சொல்லுங்க அம்மா அந்த போட்டோல இருக்கிறது” என்று இவள் முடிக்கும் முன்பே சரஸ்வதி ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சியோடு…


“அஸ்வதி உனக்கு எப்படி இந்த போட்டோ கிடைச்சது? இதுல சின்னப் பொண்ணா இருக்கிறது நிரல்யா தான்” என்றார்.


“அப்போ பக்கத்தில் இருக்கிறது யாரு?”



சிறிது யோசித்தவர் “அது… அது பேரு சரியாக நியாபகம் இல்லைம்மா” என்றவர் ஆழமாக யோசித்தவர் “அவன் பெயர் ஆதித் ஆனால் அவங்க அம்மாவை எனக்கு இன்னும் நினைவு இருக்கு பத்மா பக்கத்தில் இருப்பது அவங்க பையன் தான் அவங்களை நான் எப்படி மறப்பேன் எனக்கு எவ்ளோ பெரிய உதவி பண்ணாங்கன்னு தெரியுமா?” என்றார்.



“என்ன நடந்துச்சுன்னு சொல்லுங்க அம்மா ஏன்னா இந்த போட்டோவ கொடுத்தது யாருன்னா இந்த போட்டோல இருக்கிறவங்க வந்து நேர்ல கொடுத்தாங்க அவங்க பழைய விஷயங்களைப் பற்றி பேசும் போது நிரல்யாவிற்கு ரொம்ப தலை வலிக்கிறது” என்று நடந்த எல்லா விஷயங்களையும் சரஸ்வதியிடம் சொன்னாள் அஸ்வதி.ஆனால் அந்தச் சிறுவன் தான் இப்பொழுது உள்ள சைத்ரன் என்பதை சொல்லவில்லை.



நடந்ததை எல்லாம் பொறுமையாகக் கேட்டவர் “அஸ்வதி நிரல்யாவோட பிரச்சினை சரியாயிடுச்சு தான் நான் நினைச்சேன் ஆனால் அது இப்படி இவ்வளவு பெரிய பிரச்சினையா வந்து நிற்கும்னு நான் நினைக்கலை” என்றார் கவலையோடு…


அஸ்வதி பதற்றத்தோடு “நிரல்யாக்கு என்னாச்சு அம்மா”



சரஸ்வதி “இது நிரல்யாவோட சின்ன வயசுல நடந்தது.நாங்க திருச்சிக்கு வர்றதுக்கு முன்னாடி என்னோட அம்மா ஊரான கும்பக்கோணத்துல தான் இருந்தோம்.அங்கே பக்கத்தில் பத்மாவோட அம்மா இருந்தாங்க,அவங்க அம்மா வீட்டுக்கு பத்மா அடிக்கடி வந்துட்டு போவாங்க இதன் மூலமா ஒரு மூணு,நாலு வருஷம் எங்களுக்குள்ள நல்லா பழக்கமாயிடுச்சு பத்மாவோட ஒரே பையன் தான் ஆதித்.அவளுக்கு பெண்குழந்தைன்னா ரொம்ப பிடிக்கும் அதனால நிரல்யாவை நல்லா பார்த்துப்பாங்க”



“ஆதித்தும் நிரல்யாவும் நல்ல நண்பர்களாக இருந்தாங்க நிரல்யா அடிக்கடி அவங்க வீட்டுக்கு போவாள்.பத்மாவோட கணவர் வெளியூர் வேலைக்கு போயிட்டாங்க அதனால பத்மா இங்கேயே இருக்க ஆரம்பிச்சாங்க பத்மாவோட அம்மாவும் இறந்து போக… அவங்க தனியாக இருந்தாங்க ஆனால் சுற்றி தெரிந்தவங்க இருந்ததினால பாதுகாப்பா இருக்கும்னு இங்கேயே இருக்க ஆரம்பிச்சாங்க கொஞ்ச நாளுக்கு அப்புறம் பத்மாவும் நாங்களும் ஒன்ன ஊர்திருவிழாக்கு போகலாம்னு முடிவு செய்து போனோம்.



எல்லோரும் ரொம்ப சந்தோஷமாக கிளம்பி போனோம்.அப்படி போய் இருக்கும் போது பத்மாவோட பொறுப்பில் தான் நிரல்யா இருந்தாள்.வழியில நடந்துட்டு இருக்கும் போது ஆதித்தும் அவளும் விளையாடிட்டு வந்து இருந்தாங்க திடீர்னு யாருமே எதிர்பார்க்காத நேரத்துல நிரல்யா ரோட்டுக்கு நடுவுல வந்துட்டா அந்த நேரம் ஒரு சின்ன லாரி வரவும் பத்மா கொஞ்சம் கூட யோசிக்காமல் வேகமா ஓடிப் போய் நிரல்யாவை தள்ளி விட்டுட்டா அந்த லாரி வேகமாக வந்ததுனால சடன் பிரேக் போட்டும் பத்மாவோட கால் டையர்ல பட்டு அடிப்பட்டு போச்சு நிரல்யாவை அவ வேகமாக தள்ளி விட்டது அவளுக்கு தலையில் அடிப்பட்டு ஒரே இரத்தம்.நாங்க என்னன்னு யோசிக்கிறதுக்குள்ளே என்னவெல்லாமோ நடந்து போச்சு உடனே பத்மாவையும்,நிரல்யாவையும் ஆஸ்பிட்டல்ல சேர்த்தோம் பாவம் ஆதித் அவன் ரொம்ப துடிச்சு போயிட்டான் இரண்டு பேரையும் பார்த்து ஒரே அழுகை.நிரல்யா ரொம்ப சின்னப் பொண்ணு நடந்த அதிர்ச்சியாலும் தலையில் அடிப்பட்டு இருந்ததாலும் சில நாட்கள் மயக்கத்தில் வைத்து டிரீட்மென்ட் பண்ணாங்க எல்லாம் சரியாயிடுச்சுன்னு நாங்க நினைச்சோம் அது தான் இல்லை நிரல்யாவுக்கு நிறைய விஷயங்கள் மறந்து போச்சு பத்மாவோட நிலைமையும் கஷ்டமா இருந்துச்சு நடக்க முடியாமல் படுக்கையில் சில மாதம் கழிக்க வேண்டியதாக இருந்தது.அதனால அவங்களுக்கும் அவங்க கணவருக்கும் ஒரே பிரச்சினை எங்களால் அவங்க வாழ்க்கையில் பிரச்சினை.அதுக்காக அவங்க நான் அப்படியே விடலை தன்னோட உயிரைக் கூட பொருட்படுத்தாமல் நிரல்யாவை காப்பாதினாங்க அதனால அவங்க உடல்நிலை தேறி வரும் வரைக்கும் நானே கவனிச்சுகிட்டேன்.



ஆனால் நிரல்யாவோட நிலைமை தான் ரொம்ப மோசமாக இருந்தது.அவளுக்கு அப்பா,அம்மா,தம்பியைத் தவிர வேற யாரையும் தெரியலை நிறைய டாக்டர்ஸை போய் பார்த்தோம் எல்லோரும் சின்னப் பொண்ணாக இருக்கிறதுனால மருந்து கொடுத்து சரி பண்ணலாம்னு நம்பிக்கை

கொடுத்தாங்க அதை நம்பி தான் நாங்களும் மருத்துவம் பார்த்துட்டு இருந்தோம் ஆறு மாசம் கடந்த நிலையில் பத்மா சரியாகிட்டாங்க நிரல்யாவும் கொஞ்சம் கொஞ்சமாக சரியாக ஆரம்பிச்சுது அதனால அவ முழுசா நல்லா ஆகிட்டாள்னு நாங்க நினைத்தோம். நிரல்யாவோட அப்பாக்கு திருச்சில வேலைக்கான மாற்றம் கிடைக்கவும் நாங்க இங்கே வந்துட்டோம் பத்மாவை அடிக்கடி போய் பார்க்க முடியலை சில மாதங்கள் கழிச்சு நாங்க பத்மாவைப் பார்க்கலாம்னு கும்பக்கோணம் போனோம் அங்கே பார்த்தால் அவங்க இல்லை பக்கத்தில் விசாரிச்சோம் பத்மாவோட கணவன் தன்னோடு வெளியூருக்கு அழைச்சு போயிட்டதாக சொன்னாங்க அவகிட்ட போன் நம்பரும் வாங்கலை அதனால எங்களால அவங்களை கண்டுபிடிக்க முடியலை திரும்ப ரெண்டு தடவை போய் அந்த வீட்ல பார்த்தோம் ஆனால் பத்மா வரவே இல்ல.



அப்போ முடிந்த உறவு இப்போ திடீர்னு அவங்க மகன் வந்து பார்த்தாங்கன்னு சொல்லுறே எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு அஸ்வதி ஆனால் நிரல்யாவிற்கு நடந்ததை நினைச்சு ரொம்ப பயமா இருக்கு” என்றார்.


உடனே அஸ்வதி “கவலைப்படாதீங்க அம்மா இப்போத் தான் எல்லா நோய்க்கும் மருந்து இருக்கே அதே மாதிரி நிரல்யாவோட பிரச்சினைக்கும் வழி இருக்கும் அதனால இதைப் பற்றி கவலைப்படாதீங்க அப்புறம் இதைப் பற்றி நிரல்யாகிட்ட பேச வேண்டாம் நான் டாக்டர்கிட்டே பேசின பிறகு என்னன்னு பார்க்கலாம்” என்றாள்.அவரும் சரியென்று சொன்னார்.



அஸ்வதி சரஸ்வதி அம்மா சொன்ன எல்லாவற்றையும் கேட்டவள் திரும்பவும் யோசனைக்குச் சென்றாள்.எதுவாக இருந்தாலும் நடப்பது அனைத்தும் நிரல்யாவிற்கு நல்லதாக இருக்க வேண்டும் என்பதே அஸ்வதியின் எண்ணமாக இருந்தது.



இப்படியே யோசித்து இருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை அஸ்வதிக்கு.தூங்கி எழுந்த நிரல் நேராக அஸ்வதியைப் பார்க்க வந்தாள்.பால்கனியில் யோசனையோடு அமர்ந்திருப்பவளை பார்த்ததும் ஓரளவு புரிந்துக் கொண்ட நிரல்யா மெதுவாக அவள் அருகினில் வந்து தோள் மீது கையை வைத்தாள்.


யாரென்று திரும்பிப் பார்த்தவள் அங்கே நின்ற நிரல்யாவைப் பார்த்து “என்ன உடனே தூங்கி எழுந்திட்டே?”


“நான் தூங்கி இரண்டு மணிநேரத்துக்கு மேலேயும் ஆயிடுச்சு என்ன என்னைப் பற்றி யோசிச்சுட்டு இருக்கியா?” என்று சிரித்துக் கொண்டே கேட்டாள்.


அஸ்வதி வேகமாக இல்லை என்பது போல் தலையசைக்கவும் நிரல்யா “எனக்குத் தெரியும் என்ன நடந்து இருக்கும் அம்மாக்கு போன் போட்டு நடந்ததை கேட்டு இருப்பே அது தானே” என்றாள் சாதாரணமாய்…



அஸ்வதி நிரல்யாவைப் பார்த்தாள்?.”இப்போ எதுவும் சொல்ல விருப்பம் இல்லைன்னா பரவாயில்லை அஸ்வதி நீ என்கூட இருக்கிற வரைக்கும் எனக்கு எதைப் பத்தியும் கவலையும் இல்லை அதனால எப்போ சொல்லனும்னு தோணுதோ அப்போ சொல்லு முக்கியமான விஷயம் இப்போ என்னன்னா என் வயிறு பயங்கரமா கத்துது பசியில அதுக்கு முதல்ல வழியைப் பாரு” என்றாள்.அவள் சொன்ன பிறகு தான் தான் சமைக்கிறேன் என்று சொன்னது நினைவுக்கு வர அவளைப் பார்த்து “சாரிபா சுத்தமா மறந்துப் போச்சு” என்றாள்.



நிரலோ சிரித்துக் கொண்டே “சரி விடு எதுக்காக இந்த சாரி எல்லாம் நான் தோசை சுடுறேன் நீ காரச்சட்னி வை ஒரே நேரத்துல ஆளுக்கொரு வேலைப் பார்க்கும் போது சீக்கிரம் முடிஞ்சிடும் இல்லையா?”



“ம்ம்… வா போகலாம்” என்று தங்கள் வேலைகளைப் பார்த்தனர்.தோசையை சாப்பிட்டுக் கொண்டே நிரல் அஸ்வதியிடம் “ஆபிஸ்ல லீவ் கேட்டியா என்னாச்சு?”



“ம்ம்… பதில் சொல்றேன்னு சொல்லி இருக்காங்க கிடைச்சிடும் தான் நினைக்கிறேன் நீ முதல்ல போ நான் கண்டிப்பா வருவேன் ஏன்னா இரண்டு,மூணு நாள்ல சனிக்கிழமை வர்றதுனால மறுநாள் லீவு வருதுல்ல அதை வைச்சு எடுத்துடலாம்னு நினைக்கிறேன்”என்றாள்.



நிரல்யா “ஹேய் மறுநாள் வரேன்னு சொல்லிட்டு இப்போ ரெண்டுநாள் ஆகும்னு சொல்லுறே?”



“நிரல் புரிஞ்சுக்கோ ப்ராஜெக்ட் வொர்க் போயிட்டு இருக்கு அதை அப்படியே பாதியிலேயே விட்டுட்டு வர முடியாது உனக்காகத் தான் அதை சீக்கிரம் முடிச்சிட்டு வரேன்னு சொல்றேன்” என்று தன் நிலைமையைச் சொல்லவும் புரிந்துக் கொண்டாள்.



அதுவரை மனதில் நினைத்துக் கொண்டிருப்பதை எப்படி நிரல்யாவிடம் சொல்வது? என்று யோசித்துக் கொண்டே அவளைப் பார்த்தாள் அஸ்வதி.அவளின் மனநிலைமையை ஓரளவு புரிந்துக் கொண்டவள் நிரல் “எதாவது சொல்லனும்னு இருக்கியா?”


வேகமாக இல்லை என்பது தலையசைத்தவள் அடுத்த நொடியே ஆமாம் என்று தலையசைத்தாள்.


“என்ன விஷயம் சொல்லு?”



“நிரல் சைத்ரனை” என்று நிறுத்தி அவளுடைய முகத்தைப் பார்த்தாள்.அவளை நேராக பார்த்தவள் சொல்லு என்பது போல் தலையசைக்க…



“என்ன அஸ்வதி இப்படி சொல்லுறாளேன்னு நினைக்காதே! சைத்ரன் சாரை பார்த்தால் எனக்கு நல்ல டைப்பாகத் தெரியுது அதுவும் அவர் பொய் சொல்லலை நீ அவரை நம்பு நிரல் சில விஷயங்கள் நடக்குறது நமக்கானதாக கூட இருக்கலாம் இல்லையா?அது நம்ம வாழ்க்கையை மாற்றலாம் இல்லையா? சில அன்பும் ஆதரவும் எல்லோர்கிட்டயும் கிடைக்கிறது இல்லை அது நமக்கானவங்ககிட்ட மட்டும் தான் கிடைக்கும் அந்த அன்பு இந்த உலகத்தை இன்னொரு கோணத்தில் இரசிக்க வைக்கும் வாழும் நாட்களையும் இன்னும ஏங்க வைக்கும் அந்த அன்புக்காக இங்கே பல பேர் ஏங்கி தவிக்கிறாங்க ஆனால் அந்த உண்மையான அன்பு நிச்சயம் உனக்கு கிடைக்கும்” என்றாள்.



நிரல்யா புரியாமல் அஸ்வதியைப் பார்த்தாள்.“அஸ்வதி நீ என்னச் சொல்ல வர்றேன்னு எனக்கு புரியலை சைத்ரன் சாரைப் பற்றி சொன்னே அதுக்கு அப்புறம் ஒன்னும் புரியலை” என்றாள்.


“அது எப்போ புரியனுமோ அப்போ புரிந்தால் போதும் இப்போ நீ போற டிரீப்பிக்கான நாம டிரெஸ்ஸெல்லாம் எடுத்து வைக்கலாம்” என்று எல்லாத்தையும் அடுக்கி வைக்கத் தொடங்கினர்.



அந்த வேலையை முடித்ததும் நிரல்யா தன்னுடைய அம்மாவிடம் கைப்பேசியில் பேசினாள்.முதலில் வீட்டில் உள்ளவர்களை நலம் விசாரித்து விட்டு


“அம்மா ஒரு முக்கியமான விஷயம் சொல்லனும்.நீங்க ஏதோ சொல்லனும்னு சொன்னீங்களே?”


“ம்ம்… முதல்ல நீ சொல்லும்மா”


“அம்மா வொர்க் விஷயமா நாளைக்கு மறுநாள் அந்தமான் போறோம்”


அவருக்கு அது அதிர்ச்சியாக இருந்தாலும் வெளியூரில் போய் சம்பாதிப்பதே இஷ்டம் இல்லாமல் இருக்க சூழ்நிலையால் அமைதியாக இருப்பதால் இதில் வேலை விஷயமாக செல்ல வேண்டியதாக என்று சொல்லும் போது மறுப்பு சொல்ல வேண்டாம் என்று நினைத்தவர் “அப்படியா நிரல் முதல் தடவை வெளியூர் போறே போய்ட்டு பத்திரமா வாம்மா உன்னை நல்லா கவனிச்சுக்கோ சரியா யாரையும் தெரியாமல் அவங்களோட போய் பேசவோ போகவோ செய்யாதே!” என்று சிறு குழந்தைக்கு சொல்வது போல் சொன்னார்.



தன்னுடைய அம்மா சொன்னதைக் கேட்டு சிரித்தவள் “தெரியும் அம்மா நான் பார்த்து இருந்துக்கிறேன்.அப்புறம் அம்மா நீங்க சொல்ல வந்த விஷயத்தை சொல்லுங்க” என்றாள்.


அவரோ தயங்கியவாறே “விக்ரமோட படிப்பு இந்த மாசத்தோட முடியப்போகுதுல்ல அடுத்து வேலைக்கு போகலாம்னு சென்னைக்கு வரப் போறதாகச் சொன்னான்” என்றதும் நிரல்யாவிற்கு பதற்றமும் கோபமும் ஒருசேர வந்தது.



“இப்போ என்ன அவசரம்? அவனை மேற்க்கொண்டு படிக்கத் தானே சொன்னேன் இப்போல்லாம் ஒரு டிகிரி முடிச்சா அவ்வளவா மதிப்பே கிடையாதும்மா அதுக்குத் தான் சொல்றேன் அவனை படிக்கச் சொல்லுங்க” என்றாள்.தம்பியின் மீது அக்கறையோடு அவன் சென்னைக்கு வந்தால் அவளுடைய உண்மை தெரிந்து விடக்கூடாது என்பது தான் முக்கியமாக இருந்தது.அதனால் அங்கேயே இருப்பதற்கு அவள் போராடினாள்.



அவரோ “நானும் பேசிட்டேன் நிரல் சொன்னால் கேட்க மாட்டேங்கிறான் சென்னையில் படிச்சிட்டே பார்ட் டைம்ல வேலைப் பார்க்க போறேன்னு பிடிவாதமாக இருக்கிறான் உன்னை இன்னும் கஷ்டப்படுத்த வேண்டாம்னு சொல்றான்” என்றார்.



உடனே நிரல்யா “ஓ… சார் பெரிய ஆளாகிட்டாங்க அதனால என் பேச்சை எல்லாம் கேட்க மாட்டாங்களா? எப்போ அவன் முடிவு எடுத்துட்டானோ அப்புறம் நான் பேச என்ன இருக்கு? அவன் விருப்பப்படி செய்யட்டும் ஆனால் ந இங்கே என்னோடு தங்கவோ வேற எந்த உதவியும் நான் செய்ய மாட்டேன்” என்றாள் கோபத்தோடு…


சரஸ்வதி பொறுமையாக…”நிரல் ஏன் உடனே இப்படி பேசுறே? அவன் உன்னை நினைச்சு தான் கவலைப்படுறான் புரிஞ்சுக்கோம்மா அதுக்காக அவன் யாருன்னே தெரியாத மாதிரி பேசாதே! நீங்க ரெண்டு பொம்பளை பிள்ளைங்களோடு அவன் தங்க மாட்டான் அவனோடு படிச்ச பிரெண்ட்ஸ் மூலமா ஹாஸ்டல்லை தங்கிப்பான் உன்னை தொந்தரவு பண்ணமாட்டான் நிரல் அதுக்காக இப்படியே நீயும் குடும்பத்துக்காக உழைச்சிட்டே இருக்க முடியாதுல்ல உனக்குன்னு வாழ்க்கை இருக்கு நிரல் அதைப் பற்றி இனிமேல் யோசிம்மா” என்று மேற்கொண்டு அவளிடம் பேசினாள் சண்டைப் போடுவாள் என்றெண்ணியவர் பிறகு பேசுவதாக அழைப்பை துண்டித்தார் சரஸ்வதி.



எப்படியோ விக்ரம் சென்னைக்கு வருவதை நிரல்யாவின் காதில் போட்டு விட்டு சம்மதம் வாங்கி விட்டாச்சு என்ற நிம்மதியில் சரஸ்வதியும் இனிமேல் எப்படி விக்ரம் கண்ணில் இருந்து தன் வேலையை மறைப்பது என்ற யோசனையில் நிரல்யா கவலையில் இருந்தாள்.அஸ்வதியிடம் நடந்ததைச் சொல்ல அவளோ முதலில் அந்தமானுக்கு செல்வதைப் பற்றி மட்டும் யோசி பிறகு மற்ற விஷயங்களை நினைத்து கவலைப்படலாம் என்று தற்போது அதற்கு ஒரு தற்காலிக தீர்வை கொடுத்தாள்.


மறுநாள் இலக்கியன் நிரல்யாவிடம் கைப்பேசியில் பேசி அவளுடைய உடல்நிலையைப் பற்றி தெரிந்துக் கொண்டான்.ஆனால் சைத்ரன் அஸ்வதியிடம் கேட்டு தெரிந்துக் கொண்டான்.


அந்தமான் செல்வதற்காக நிரல்யா விமான நிலையத்திற்கு செல்வதற்காக தயாராகிக் கொண்டிருந்தாள்.அப்பொழுது நிரல்யா அருகில் வந்த அஸ்வதி ஒரு பெட்டியை கொடுத்தாள்.


நிரல்யா ஆச்சரியத்தோடு “என்னது இது”



அவளோ சிரித்துக் கொண்டு “சின்னதா ஒரு சர்ப்ரைஸ் திறந்து பாரு”



நிரல்யா திறந்து பார்க்க அதில் ஒரு குதிகால் செருப்பு ஒன்று இருந்தது.அதைப் பார்த்து “வாவ் சூப்பரா இருக்குடி எனக்கா?”


“ம்ம்… உனக்குத் தான் நல்லா இருக்குல்ல இன்னைக்கு இதை ஏர்போர்ட்டுக்கு இதை போட்டுட்டு போ”


அவளோ அதிர்ச்சியாகி “என்ன?விளையாடுறியா அஸ்வதி இந்த மாதிரி செப்பல் எல்லாம் போட்டதே இல்லை எனக்கு நடக்க தெரியாது அதுவும் இது ரொம்ப காஸ்ட்லியா இருக்கு”



“இருக்கட்டும் வெளியூர் போற அங்கே இதோ இந்த பழைய செருப்பை போட்டுட்டு போவியா? ப்ளைட்ல போற டிசன்ட்டா போ” என்று அவளைக் கட்டாயப்படுத்தி வீட்டில் இரண்டு முறை நடக்க பயிற்சிக் கொடுத்து அந்த செருப்பை போட்டு விட்டு விமான நிலையத்திற்கு செல்வதற்கு வண்டியில் ஏற்றி விட்டவள் “பார்த்து பத்திரமா இருடி பாய்” என்று கையசைத்து வழியனுப்பியவள் ’இதற்கு பிறகு அவளே சமாளிக்கட்டும்’ என்று இரகசிய புன்னகை ஒன்றை சிந்தினாள்.


நிரல்யாவோ மனதினுள் ‘இந்த செருப்பை போட்டுட்டு எத்தனை தடவை கீழே விழுந்து வாரப்போறேனோ!’'என்று நினைத்து பெருமூச்சு விட்டாள்.


உங்கள் கருத்துக்களை இங்கே பதிவிடுங்கள்
 

NNK-74

Member
கண்ணுக்குள்ளே கரைந்த நிலவு அத்தியாயம் -11



நிரல்யா விமான நிலையத்தில் போய் நின்றாள்.அங்கே இலக்கியனும்,சைத்ரன் மட்டும் வரவில்லை.மற்றவர்கள் உடன் வேலை செய்யும் அனைவரும் அங்கே வந்திருந்தனர்.அதோடு நடன கலைஞர்கள் ஒரு ஐந்து பேர் வந்திருந்தனர்.எல்லோருக்கும் சேர்த்து இவள் ஒருத்தி தான் ஒப்பனை செய்ய வேண்டும்.நல்ல வேலை சிகை அலங்காரத்திற்கு உடன் ஆட்களை அனுப்பி இருந்தார்கள்.



இதை எல்லாம் யோசித்து நின்றவளுக்கு சட்டென்று

இந்த குதிகால் செருப்பு புதியது என்பதால் கணுக்கால் பக்கம் இறுக்கமாக இருப்பதால் அந்த இடம் லேசாக வலிக்க ஆரம்பித்தது.இந்திரா நாளை அந்தமான் வருவதாக தெரிவித்திருந்தாள்.திடீரென்று உடல்நிலை சரியில்லாததால் வர முடியவில்லை.



எல்லோரும் உள்ளே செல்வதற்கான நேரம் வரவும் இலக்கியன் அப்போது சரியாக வந்தான்.வந்தவன் எல்லோரையும் சுற்றி ஒரு பார்வை பார்த்து விட்டு நிரல்யாவைப் பார்த்து சிநேகமாய் ஒரு புன்னகை ஒன்றை பதிலாய் தந்தான்.



எல்லோரும் உள்ளே செல்வதற்கு நடந்துக் கொண்டிருக்க… புது செருப்பினால் நிரல்யா மெதுவாக நடந்தாள்.அவர்கள் எல்லாம் வேகமாக கடந்து போக இவளும் பின்னாலேயே வேகத்தை கூட்டிய படி நடக்க ஆரம்பித்தாள்.



நிரல்யா எதிர்பார்க்காத நேரத்தில் சட்டென்று செருப்பு வழுக்கி விட நிலைத்தடுமாறி கீழே விழப் போனாள்.அவளோ பயத்தில் கண்களை மூட தரையில் விழாமல் அவளை ஒரு கரம் தாங்கிப் பிடித்திருக்க இன்னொரு கையோ அவளின் கரங்களோடு கோர்த்து பிடித்து இருந்தது.



நிரல்யா மெதுவாய் கண்களை திறக்க முகமூடி அணிந்திருந்த ஒருவனைக் கண்டதும் பயத்தோடு அவனைப் பார்த்தாள்.மெதுவாக தன் முகமூடி விலக்க சைத்ரன் தான் தரையில் விழப்போனவளை தாங்கிப் பிடித்திருந்தான்.



இருவரின் விழிகளும் நெருக்கமாய் சந்தித்துக் கொண்டன.இருவரும் இவ்வளவு ஆழமாய் சந்தித்துக் கொண்டது இல்லை.எல்லோரும் முன்னால் சென்றுக் கொண்டிருப்பதால் யாரும் பார்க்கவில்லை.



சட்டென்று தன்னை சுதாரித்துக் கொண்டு எழுந்து ஒழுங்காக நின்றவள் அவனை தயங்கிப் பார்த்தபடி “ரொம்ப தாங்ஸ் விழுந்துட்டேனோ பயந்துட்டேன்”என்றாள்.



அவனோ நிரல்யாவைப் பார்த்தபடி… “பார்த்து கவனமாக போங்க” என்றவன் அவளுடைய பெட்டியையும் சேர்த்து தள்ளிக் கொண்டு போக… நிரல்யா பதறியவாறே “சார் வேண்டாம் சார் எதுக்கு உங்களுக்கு தேவையில்லாத சிரமம்” என்றாள்.



அவனோ அவளைப் பார்த்து “அதெல்லாம் ஒன்னுமில்லை வாங்க போகலாம் பொறுமையா போகலாம் உங்களோட நானும் மெதுவாக வரேன்” என்றான்.



அவள் திரும்ப தடுத்தும் அவன் கேட்காமல் போக சைத்ரனே நிரல்யாவின் பெட்டியையும் சேர்த்தே தள்ளிக் கொண்டு வந்தான்.


ஏதேச்சையாக பின்னால் திரும்பி பார்த்த இலக்கியன் நிரல்யா சைத்ரனோடு வருவதைப் பார்த்தான்.அதோடு அவளுடைய பெட்டியையும் அவனே இழுத்துக் கொண்டு வருவதையும் பார்த்தவன் சுற்றி எல்லோரும் இருப்பதால் அமைதியாக இருந்தான்.



கடைசியாக எல்லோரும் ஒன்றாக நிற்கும் பொழுது சைத்ரனின் இந்த செயலை மற்றவர்களும் கண்டுக் கொண்டனர்.ஆனால் யாரும் அதை கண்டும் காணாமல் நின்றனர்.நிரல்யா ஒழுங்காக நடக்க முடியாமல் தடுமாறி நடப்பதை சைத்ரன் கவனித்தான்.



விமான நிலைய சோதனை செயல்முறை எல்லாம் முடிந்ததும் மெதுவாக நிரல்யா சைத்ரனிடம் இருந்து தனியாக வந்தவள் விமானத்தில் எல்லோரும் அவரவர் இடத்தில் போய் அமர்ந்தனர்.நிரல்யாவின் இருக்கையில் ஏற்கனவே இரண்டு பேர் அமர்ந்திருக்க மத்தியில் அவளுடைய இடத்தில் ஒருவர் வந்து மூவரும் ஒன்றாக வந்திருப்பதால் அவளிடம் இருக்கையைக் கேட்டனர்.



அதனை ஒப்புக் கொண்டவள் அவருடைய இருக்கை எண்ணைக் கேட்டுக் கொண்டாள்.அந்த இருக்கை எண் இருக்குமிடத்தில் போய் பார்த்தால் அங்கே இலக்கியனும் சைத்ரனும் அமர்ந்திருக்க நடுவினில் இவளுடைய இருக்கை இருந்தது.



அதைப் பார்த்த நிரல்யா தயக்கமும் யோசனையாக நின்றாள்.அவளைப் பார்த்த இலக்கியன் நிரல்யாவிடம் “என்னாச்சு நிரல்யா எதாவது பிரச்சினையா? உங்க சீட்ல போய் உட்காருங்க” என்றான்.


நிரல்யா நடந்த விவரங்களைச் சொன்னதும் இலக்கியன் “ம்ம்… சரி வாங்க இங்கே உட்காருங்க” என்று அவனுடைய இருக்கையை காண்பித்தான்.நடப்பதை எல்லாம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த சைத்ரன் மெதுவாக “இலக்கியன் சார் அவங்க இங்கேயே உட்காரட்டுமே எனக்கு இதுல எந்த ஆப்ஜக்சனும் இல்லை” என்றான்.



உடனே இலக்கியனும் வேறுவழியில்லாமல் ஒத்துக் கொண்டான்.நிரல்யா இருவருக்கும் நடுவில் அமர்ந்தாள்.

விமானம் மெதுவாக மேலே செல்லும் போது நிரல்யாவிற்கு ஒருவிதமான பயமும்,படபடப்பும் தொற்றிக் கொண்டது.முதல் தடவை விமானத்தில் செல்வதால் கண்களை இறுக்க மூடிக் கொண்டாள்.



இருக்கையின் கைப்பிடியைப் பிடிக்காமல் இருவரின் கையையும் ஒவ்வொரு பக்கமாக பிடித்தவள் பயத்தில் அப்படியே விரல்களின் நகங்கள் அவர்களின் தோலில் அழுத்திப் படுவது போல் இறுக்கிப் பிடித்தாள்.சட்டென்று நிரல்யாவுடைய இந்த திடீரென உருவான தாக்குதலில் இருவரும் செய்வதறியாது திகைத்தனர்.



இலக்கியனும் சைத்ரனும் வலியில் கத்த நிரல்யாவோ பயத்தில் அலறினாள்.சுற்றியிருந்த மொத்த பயணிகளும் இவர்கள் மூவரையும் பார்த்தனர்.விமானப் பணிப்பெண் வந்து இவர்களுக்கு அருகில் வந்து “ எனி இஷ்யூ சார்?” என்றதும் சத்தம் கேட்டு கண்களை திறந்தவள் தான் செய்திருந்த வேலையைப் பார்த்து அதிர்ச்சியானவள் பதறியபடி “ஐயோ சாரி சார்” என்று இரண்டு பேரையும் பார்த்து மாறி மாறிச் சொன்னாள்.இருவரும் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தனர்.



சுற்றியிருந்த அனைவரும் இவர்களை பார்த்து விட்டார்கள் என்பதை அறிந்து அமைதியாகி இருந்தார்கள்.பின்னால் இருந்த இலக்கியனின் உதவியாளன் “சார் என்னாச்சு? ஏன் மூணு பேரும் அப்படி கத்துனீங்க?” என்று கேட்டான்.



அவனோ அவனைப் பார்த்து முறைத்துக் கொண்டு “படத்துல ஒரு சீன் இப்படி வைக்கலாமான்னு யோசிச்சு டிரையல் செய்து பார்த்தேன்” என்று தன் மானத்தைக் காத்துக் கொள்ள பொய் சொன்னான்.



அவன் பதிலைக் கேட்ட உதவியாளனும் “சார் வேற லெவல் நீங்க உங்க உழைப்போட அர்ப்பணிப்பிற்கு அளவே இல்லை” என்று புகழ்ந்து தள்ள… இலக்கியனுக்கோ தலையில் அடித்துக் கொள்ளலாம் என்பது போல் இருந்தது.



“சரி போதும் விடுங்க” என்று நிரல்யாவைப் பார்த்தான்.அவளோ தன் தலையை நிமிர்ந்து பார்த்தால் தானே இவள் இருவரையும் பார்க்க வேண்டி வரும் என்று தலையை குனிந்துக் கொண்டாள்.



இலக்கியனின் உதவியாளன் சைத்ரனைப் பார்த்து “சார் உங்க கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லை” என்றதும் சைத்ரன் ஒரு புன்னகையை மட்டும் பதிலாக தந்துவிட்டு அமைதியானான்.



நிரல்யாவை சைத்ரன் பார்க்க ஏதோ தவறு செய்தவளைப் போல் தலைக்குனிந்து திருதிருவென்று முழித்துக் கொண்டிருந்தாள்.அவளை அப்படிப் பார்த்ததும் சிறுவயதில் எதாவது தவறு செய்து விட்டால் இப்படித் தான் பயத்தில் தலையைக் குனிந்துக் கொண்டு நிற்கும் சிறுவயது தன்வி நினைவில் வந்து போனாள் சைத்ரனுக்கு அதைப் பார்த்து அவனுக்கு சிரிப்பு வந்தது.



சைத்ரன் அவளைப் பார்த்து சிரிப்பதைக் கண்டு கவலையோடு வெட்கப்பட்டவள் கையில் இருந்த கைக்குட்டையை எடுத்து முகத்தில் போட்டுக் கொண்டாள்.


அவளது சிறுபிள்ளைத் தனமான செயலைப் பார்த்து இருவரும் மாறி மாறி சிரித்துக் கொண்டனர்.ஆகாயத்தில் விமானம் பறந்துக் கொண்டிருக்க… கைக்குட்டையால் முகத்தை மூடி இருந்தவள் சிறிது நேரம் சென்றும் அப்படியே அசையாமல் இருப்பதை சைத்ரன் மெதுவாக அவள் கைக்குட்டையை விலக்கிப் பார்க்க அசந்து தூங்கிக் கொண்டிருந்தாள்.



அதைப் பார்த்தவனோ மனதினுள் ‘சும்மா விளையாட்டுக்கு பண்றாங்க பார்த்தால் நிஜமாகவே தூங்கிட்டா’ என்று யோசனையோடு பார்க்க அவன் பார்ப்பதை பார்த்த இலக்கியன் என்ன என்பது போல் சைகையால் கேட்க அவனோ தூங்குகிறாள் என்று சைகையால் சொல்ல புன்னகை ஒன்றை பதிலாகத் தந்தான்.



சைத்ரன் கொண்டு வந்திருந்த புத்தகத்தை எடுத்து அதில் மூழ்கியிருக்கும் போது திடீரென்று அவன் கைவளைவில் கைகோர்த்து தோளில் சாய்வதைப் பார்க்க நிரல்யா தான் தூக்கத்தில் அவனைப் பிடித்து தோள்மீது சாய்ந்துக் கொண்டு தூங்கினாள்.



பக்கத்தில் இருந்த இலக்கியன் சைத்ரனைப் பார்க்க அவனும் அவனைத் தான் பார்த்தான்.இந்த இரண்டு மணிநேர விமான பயணத்தில் நிரல்யாவின் தொல்லை பெரிதாக இருந்தது.



இலக்கியன் நிரல்யாவை எழுப்ப வர சைத்ரன் “வேண்டாம்” என்று சொல்லி விட்டான்.இலக்கியனால் சைத்ரன் செயலைப் பார்த்து நம்பமுடியவில்லை.அவன் யார் மீதும் கருணையாக நடந்துக் கொண்டு பார்க்கவில்லை.அதனால் அவன் நிரல்யாவிடம் நடந்துக் கொள்வது இவனுக்கு புதியதாக இருந்தது.



ஒரு பதினைந்து நிமிடத்திற்கு பிறகு மெதுவாக விசும்பி கண்ணை திறந்த நிரல்யா யார் மீதோ வாகாக சாய்ந்திருப்பதை உணர்ந்து நிமிர்ந்துப் பார்க்க… சைத்ரன் அவளையே பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டவள் ஒரு அசட்டு சிரிப்பை பதிலாக தந்து விட்டு “சாரி ஏதோ தூக்கத்துல தெரியாம சாஞ்சிட்டேன்” என்றாள்.



அதற்கு சைத்ரன் முறைப்பது போல் முகத்தைக் காட்ட கையை வைத்து ஒரு புறமாக முகத்தை மறைத்து அப்படியே திரும்பி பார்த்தாள்.இலக்கியன் அவளைப் பார்த்து முறைத்துக் கொண்டிருப்பதை கண்டவள் இன்னொரு கையால் அவன் பக்கமாக உள்ள முகத்தை மூடியவள் இருவரையும் பார்க்காதவாறு “ஏதோ டையர்டுல சின்னபிள்ளை தெரியாம தூங்கிட்டேன் அதுக்கு போய் இப்படி முறைக்கிறீங்க சாரி” என்று அப்படியே உட்கார்ந்திருந்தாள்.இருவரும் அவள் அறியாமல் சிரித்துக் கொண்டனர்.




இரண்டு மணிநேர பயணநேரம் முடியவும் விமானம் தரையிறங்குவதற்கான அழைப்பு விடுக்கப்பட்டது.உடனே இருவரும் இருக்கையின் பெல்ட்டை சரிசெய்து விட்டு கைகளை மார்பின் குறுக்கே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கட்டிக் கொண்டு இருந்தனர்.அதைப் பார்த்த நிரல்யா பார்த்தும் பார்க்காதது போல் பாவனை செய்துக் கொண்டாள்.



நிரல்யா திரும்பவும் அதே பயத்தோடு கண்களை மூடும் போது அவளின் கரங்களோடு அணைப்பாய் கரம் சேர்ந்த நொடிதனை கண்களை திறக்க இம்முறை சைத்ரன் அவளின் கையை தன் கையோடு கோர்த்துக் கொண்டான் ஆதரவோடு… இதை சற்றும் எதிர்பாராத நிரல்யா ஆச்சரியத்தோடு அவனை பார்த்தாள்.அதற்கும் புன்னகை ஒன்றை பதிலாக தந்தான்.இந்த நிகழ்வில் விமானம் தரையிறங்கும் தருணத்தை மறந்தாள் பெண்ணவள்.




விமான நிலையத்திலிருந்து வெளியே நடந்து வர ஆரம்பித்தார்கள்.நிரல்யா கொஞ்சம் பொறுமையாக நடக்க ஆரம்பித்தாள்.இலக்கியனிடம் சைத்ரன் முன்னரே நிரல்யாவை தன்னோடு அழைத்து வருவதாகச் சொல்லி இருந்தான்.அதனால் மற்றவர்கள் அனைவரும் முன்னால் வேகமாகச் சென்றனர்.



நிரல்யா அவர்களை பின்தொடர்ந்து வேகமாக செல்ல முயற்சிக்க சைத்ரன் நிரல்யாவிடம் “தன்வி வெயிட் பண்ணு நீ ரொம்ப அவசரமாக போக வேண்டாம் நீ என் கூட கார்ல வா அவங்க எல்லோரும் வேன்ல போய்டுவாங்க” என்றான்.



நிரல்யா யோசனையோடு “சார் சாரி சார் ஏற்கனவே உங்களை நான் தொல்லை பண்ணிட்டு இருக்கேன் இப்போ இது வேற எதுக்கு தேவையில்லாமல்?” என்றவளிடம்



சைத்ரன் “போன இரண்டு மணிநேரத்தில உடனே ஷீட்டிங் ஆரம்பிச்சிடும் முதல்ல என்னோட மேக்கப் முடிச்சிட்டு போய் மற்றவங்களுடையது பாரு அதுக்காகத் தான் என்னோட வரச் சொன்னேன்” என்றான்.



நிரல்யாவால் மேற்கொண்டு பதில்ல பேச முடியாமல் அவனோடு சென்றாள்.காரில் அவள் முதலில் ஏறிக் கொண்டாள்.பின்னால் இருந்த அவனை அங்கே காணவில்லை.சிறிது நேரத்தில் திரும்பி வந்தவன் கையில் ஒரு பையோடு வந்தான்.



வந்தவன் காரில் இருந்த நிரல்யாவை “தன்வி கொஞ்சம் வெளியே வா” என்றதும் இவளும் புரியாமல் காரிலிருந்து இறங்கினாள்.நிரல்யா கொஞ்சம் தள்ளி பக்கத்தில் இருந்த ஒரு இருக்கையில் அமர வைத்தான்.அவளோ புரியாமல் அவனைப் பார்த்தாள்.



அவளுக்கு அருகில் வந்து குனிந்து காலை மடக்கி உட்கார்ந்தவன் அவளுடைய கணுக்காலைத் தொடப் போக… நிரல்யா பதறியபடி “சார் என்ன பண்ணுறீங்க” என்றாள் தயங்கியபடி…



நிமிர்ந்து அவளைப் பார்த்தவன் “உன் காலை காட்டு” என்றதற்கு அவளோ “சார் ப்ளீஸ் எந்திரிங்க யாராவது பார்த்தால் தப்பாக நினைக்க போறாங்க” என்றாள்.



அவனோ சிரித்துக் கொண்டே “இப்போ உன்னோட காலை காட்டலைன்னா நான் எழுந்திருக்கவே மாட்டேன்” என்றான்.



வேறு வழியில்லாமல் இவளும் காலைக் காட்ட அவள் போட்டிருந்த குதிகால் செருப்பை கழற்ற நிரல்யாவிற்கு ஒன்னுமே புரியவில்லை.சட்டென்று ஒருவனின் இந்த அக்கறையான தொடுதல் அவளை ஒன்றுமே யோசிக்க விடவில்லை.



அந்த செருப்பை கழற்றி பின்னால் இறுக்கி காயம் பட்டிருந்த இடத்தில் ஒரு மருந்தை எடுத்து தடவினான்.அதைப் பார்த்த நிரல்யா பதறியபடி “சார் இதை நீங்க என்கிட்ட கொடுத்து இருந்தால் நானே போட்டிருப்பேனே” என்றதற்கு அவளைப் பார்த்து தன் வாயில் விரலை வைத்து “அமைதியாக இரு” என்று சைகையால் சொன்னவன் அந்த காயத்திற்கு மருந்திட்டு அதற்கு மேல் பசைநாடாவை ஒட்டியவன் கையில் வைத்திருந்த பையை திறந்து அதில் ஒரு காலணியை எடுத்து போட்டு விட்டான்.அதே போல் இன்னொரு காலிலும் போட்டு விட்டபடியே “சின்ன வயசுல உனக்கு ஷீ போட ரொம்ப பிடிக்கும் ஆனால் போடத் தெரியாது அதனால என்கிட்ட வந்து போட்டு கேட்பே எப்பவும் நான் தான் போட்டு விடுவேன்” என்றவன் அந்த குதிகால் செருப்பை எடுத்து அந்த பையில் வைத்து அவள் கையில் கொடுத்தான்.



“இனிமேல் இந்த மாதிரி செருப்பு போடாதீங்க தன்வி.உன் காலுல எப்படி காயப்பட்டு இருக்கு பாரு எப்பவும் உனக்கு எது சவுகரியமா இருக்கோ அதையே போடுங்க” என்றான்.



அவளோ எதுவும் பேச முடியாமல் அமைதியாக அவன் பின்னால் வந்தாள்.அவன் சொன்னது போலவே வாங்கியிருந்த காலணி அவளுக்கு அவ்வளவு வசதியாக இருந்தது.



காரின் முன் பக்கம் போய் அவள் அமர இருக்கும் நேரம் பின் பக்கம் கதவை திறந்தவன் “இங்கே வந்து உட்காருங்க”



அவள் யோசனையில் அவனைப் பார்க்க அவனோ அதை எல்லாம் பெரிது படுத்தாமல் “இப்போ நீங்க இங்கே வரலைன்னா நான் கார்ல ஏற மாட்டேன்” என்று பக்கத்தில் இருந்த இருக்கை பக்கம் அவன் திரும்ப ஏற்கனவே நடந்துக் கொண்டிருக்கும் நிலையில் எந்த உணர்ச்சியை காட்ட இவள் திணறிக் கொண்டிருக்கும் பொழுது அடம்பிடிப்பவனிடம் சமாதானத்தோடு இவளோ “சார் நான் இங்கேயே வரேன்” என்று அவன் அடம்பிடித்தலுக்கு ஒத்துக் கொண்டாள்.



ஒரே இருக்கையில் அமர்ந்திருந்தாலும் இருவரும் இடைவெளி விட்டு அமர்ந்திருக்க கார் தன் பயணத்தை தொடர்ந்தது.



இவளின் பார்வை வெளியே இருந்தது.அவனோ அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள அந்தமான் தீவினைக் கண்டாள்.


உங்கள் கருத்துக்களை இங்கே பதிவிடுங்கள்
 

admin

Administrator
Staff member

கண்ணுக்குள்ளே கரைந்த நிலவு அத்தியாயம் -12​

இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள இரு பெரும் தீவுகளான அந்தமான் தீவுகள் மற்றும் நிகோபார் தீவுகள் ஆகும்.இவை அந்தமான் கடலையும் இந்திய பெருங்கடலையும் இணைக்கின்றன. இப்பிரதேசத்தின் தலைநகரம் போர்ட் பிளேயர் என்னும் அந்தமானில் உள்ள நகரம் ஆகும்.​

அந்தமான் நிக்கோபார் தீவுகளின் மொத்த எண்ணிக்கை 572 ஆகும்.இதில் மக்கள் குடியிருக்கும் தீவுகளின் எண்ணிக்கை 36 ஆகும்.இங்குள்ள தீவுகள் அரிய வகை கடல் உயிரினங்கள், தென்னை மரம் சூழ்ந்த கடற்கரைகள்,பவளப்பாறைகள், பசுமை காடுகள், அருவிகள் போன்றவற்றைக் கொண்டுள்ளன.​

தலைநகரத்திலிருந்து மற்றொரு தீவிற்கு செல்ல வேண்டுமென்றால் படகு அல்லது கப்பல் மூலமாகத் தான் மற்ற இடங்களுக்கு செல்ல முடியும்.அதனால் முதலில் எங்கே படப்பிடிப்பு நடக்கிறது என்று நிரல்யாவிற்கு தெரியாது.சைத்ரன் தான் அழைத்துச் செல்ல வேண்டும் இது எதுவும் தெரியாமல் அவனோடு பயணித்தாள் பெண்ணவள்.​

பார்வை என்னவோ காரின் கண்ணாடி ஓரம் இருந்தாலும் மனம் முழுவதும் இன்று அவளிடம் அவன் நடந்துக் கொண்டதே நினைத்துக் கொண்டிருந்தது.சைத்ரனோ அவளருகில் அமர்ந்திருந்தும் பேசாத பெண்ணவளை பெருமூச்சோடு பார்த்தான்.​

அவசரம் கொள்வதால் எந்த விடயமும் நடக்க போவதில்லை என்று மூளை உரைத்தாலும் மனமோ கொஞ்சம் முயற்சித்து தான் பாரேன் என்று அவனிடம் சண்டித்தனம் செய்தது.​

அவனது அம்மா சிறுவயதிலிருந்தே தன்வியைத் தான் நீ திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என்று சொல்லி சொல்லியே வளர்த்ததால் அவனது நெஞ்சிலும் அவளைப் பற்றிய ஆவல் மனம் முழுவதும் நிறைந்திருக்க இத்தனை வருடங்களாக தேடி இப்பொழுது கண்ணெதிரே அவள் இருந்தும் தன் அன்பை சிறிதளவேனும் காட்டமுடியவில்லையே என்ற ஆதங்கத்தில் இருந்தான்.​

சிறிதுநேர பயணத்திற்கு பிறகு இருவருவம் இறங்க வேண்டிய விடுதி வந்தது.இருவரும் இறங்கியதும் நிரல்யா அடுத்து என்னச் செய்வதென்று விழித்துக் கொண்டிருக்க…​

சைத்ரன் “என்கூட வந்துடுங்க நான் ப்ரெஷ் ஆனதும் மேக்கப் ஸ்டார் பண்ணிடலாம்” என்றான்.​

அவளோ யோசனையோடு அடுத்து சொல்ல வருவதற்குள் “உங்களோட மேக்கப் திங்ஸ் எல்லாம் இங்கே என்னோட ரூம்க்கு கொண்டு வரச் சொல்லிட்டேன்” என்றான்.​

அவன் அறையை திறந்து உள்ளே செல்ல இவளும் பின்னே சென்றாள்.இவனோடு உடன் வந்திருந்ததால் இவளுடைய பெட்டியும் சைத்ரனின் அறைக்கு வந்திருந்தது.​

அதை அவள் கவனித்தாலும் தற்சமயம் வேலை முக்கியமாக இருந்ததால் மேக்கப்பிற்கு தேவையான மற்ற பொருட்களை எடுத்து வைக்க ஆரம்பித்தாள்.​

சைத்ரன் குளியலறைக்குச் சென்று விட்டான்.இவள் அவன் போட வேண்டிய உடையையும் சேர்த்து எல்லாவற்றையும் எடுத்து வைக்கவும் சைத்ரன் வெளியே வரவும் சரியாக இருந்தது.​

ஈரத் தலையோடு உடை அணியாமல் மேலாடையோடு வந்தமர்ந்தான்.அதைப் பார்த்து இவள் அப்படியே நிற்க… சைத்ரன் “சீக்கிரம் மேக்கப் ஸ்டார் பண்ணுங்க”​

அவளோ தயங்கியபடி “சார் காஸ்ட்யூம் போட்டுட்டு மேக்கப் ஸ்டார்ட் பண்ணலாமா?”​

அவனோ வேண்டாம் என்பது போல் தலையசைக்க இவளுக்குத் தான் ஒருவித பதற்றமாகவே இருந்தது.முதன்முதலாக இந்த மாதிரி ஒரு ஆடவனுக்கு ஒப்பனை செய்யும் பதற்றத்தோடு இப்போது அவன் நடந்துக் கொள்ளும் முறையில் தொழில் முறையில் பார்க்க முடியாமல் தவித்தாள் அவள்.​

நிரல்யாவின் தயக்கத்தை தெரிந்துக் கொண்டாலும் அவனோ தனக்கும் அதற்கும் சம்பந்தமில்லை என்பது போல் தெரியாதது மாதிரி சைத்ரன் இருந்துக் கொண்டான்.​

வேறு வழியில்லாமல் ஒப்பனையை ஆரம்பித்தாள்.சைத்ரனோ கைப்பேசியை பார்த்தபடியே அமர்ந்திருக்க இவளுக்கு இது நல்ல வாய்ப்பாக அமைந்தது.ஒவ்வொன்றாக ஆரம்பித்து கடைசியில் எல்லாவற்றையும் முடித்து விட்டாள்.​

அடுத்து அவனுடைய உடையை போட உதவியவள் கண்ணில் லேசாக ஒப்பனை கலைந்திருக்க அதை கவனித்தவள் அதை சரிசெய்யும் பொருட்டு நேராக விழிகள் இரண்டும் மோதிக் கொண்டன.அதுவரை அவனை நேராக பார்ப்பதையே தவிர்த்த மாதிரியே தன் வேலையை தொடர்ந்திருக்க இப்போதோ அவனும் அவளை ஆழமாக பார்த்தான்.​

விழிகள் இரண்டும் சந்தித்துக் கொள்ள அங்கே வார்த்தைகள் இல்லா ஒரு உணர்வு போராட்டம் நடக்கத் துவங்கியிருந்த நேரம் சட்டென்று சைத்ரனின் கைப்பேசி அழைப்பின் சத்தத்தைக் கொடுக்க இருவரும் ஒருநொடி சுதாகரித்து விழிகளை விலகிச் செல்ல சைத்ரன் தன் கைப்பேசியை எடுத்து தொடுதிரையில் தெரிந்த இலக்கியனின் எண்ணைப் பார்த்து எடுத்தவன்​

“ஹலோ” என்றதும்​

மறுமுனையில் இலக்கியன் “ஹலோ சார் மேக்கப் முடிஞ்சிடுச்சா?”​

“ஆமாம் சார் எல்லாம் முடிஞ்சிடுச்சு”​

“ஓகே உடனே கிளம்பி வாங்க என்னோட அசிஸ்டன்ட் கீழே வெயிட் பண்றாங்க அவங்களே உங்களை கூடிட்டு வந்துடுவாங்க நிரல்யாகிட்ட மேக்கப் கிட் அப்படியே எடுத்துட்டு வரச் சொல்லுங்க இங்கே மேக்கப் போட வேண்டி இருக்கு” என்று ஒருதடவை நினைவுபடுத்தி விட்டான்.​

நிரல்யாவிடம் இலக்கியன் சொன்னதைச் சொன்னான்.இருவரும் வேகமாக படப்பிடிப்பு நடக்கும் தளத்திற்கு செல்ல தயாராகினர்.முதலில் காரில் பயணம் செய்த மூவரும் பின்னர் படகில் சவாரி செய்து ஹேவ்லாக் தீவிற்குச் சென்றனர்.​

அங்கிருந்து காலாபதர் கடற்கரைக்குச் சென்றனர்.நீலநிறக் கடலுக்கு அருகில் பெரிய கருப்பு பாறைகளுடன் கூடிய வெள்ளை நிற பட்டு மணலின் நீண்ட நீளமாக அமைந்துள்ளது.அந்த இடத்தைப் பார்த்து நிரல்யாவிற்கு கண்களே புதுவிதமான குளிர்ச்சியைக் கொண்டது.​

அந்த மணலில் நடக்கும் போது ஏதோ தரையில் நடக்காமல் பாதங்கள் மென்மையை உணர்ந்தன.இயற்கையின் அழகில் தன்னை மறந்து அவள் இரசித்துக் கொண்டிருக்கும் பொழுது இலக்கியன் அருகில் வருவதற்கு முன் சைத்ரன் வந்து “தன்வி இன்னொரு நாள் தனியா வந்து இந்த இயற்கை அன்னையின் அழகை இரசிப்போமா?” என்று கண்கள் முழுக்க காதலோடும் குரலில் ஒரு இனிமையோடு கேட்க அவளோ சட்டென்று திரும்பி பார்த்தாள்.​

அவனோ அதே இனிமையோடு “தன்வி உன் கடமை அழைக்குது பாருங்க” என்றதும் இலக்கியன் நிரல்யா அருகில் வந்து “நிரல் சீக்கிரம் பேக் டான்ஸ்ர்ஸ்க்கு மேக்கப் ஆரம்பிங்க” என்றான்.அவளோ தற்போதுள்ள நிலைமை அறிந்து சைத்ரனை ஒரு பார்வை பார்க்க அப்பொழுதும் அவன் புன்னகை முகத்தோடு அவளைப் பார்த்தான்.​

பருவ நேரத்தில் சற்று கூட்டமாக இருக்கும்.அதனால் தெற்கு பகுதியில் கொஞ்சம் தள்ளி ஒதுக்குப்புறமான கடற்கரை. கண்ணாடி போன்ற கடலின் நீரும்,நீந்துவதற்கு போதுமான ஆழமும் கொண்டுள்ளன.அதனால் அலைகளால் பாதிப்பு வராது.ஆனால் சில பாறைகள் மற்றும் பவளப் பாறைகள் உள்ளன.எனவே தண்ணீருக்குள் செல்லும் பொழுது கவனமாக இருக்க வேண்டும்.​

அந்த இடத்தில் படப்பிடிப்பு வேலைகள் மும்மூரமாக நடந்தது.நிரல்யாவால் இரண்டு நிமிடம் உட்காருவதற்கு கூட நேரமில்லாமல் சென்றது.வெயில் அதிகமாக இருந்ததால் ஒப்பனைக்கு டச்அப் செய்ய வேண்டி இருந்தது.​

நேரம் வேகமாக கடந்தது.மாலை நேரம் நெருங்கும் வேளையில் வானம் முழுவதும் கருத்து படபடவென்று சாரலடித்து மழைபெய்யத் துவங்கியது.எல்லோரும் ஓடிச் சென்று அவர்களது பொருப்பில் உள்ள பொருட்களை எல்லாம் பத்திரப்படுத்தி அங்கே நிற்கும் மரங்களில் ஒதுங்கி நின்றனர்.​

கடைசியாக நிரல்யா சைத்ரனுக்கு ஒப்பனை செய்துக் கொண்டிருந்ததால் அவனோடு ஒன்றாக நின்றாள்.என்ன தான் ஒதுங்கி நின்றாலும் மரத்தில் ஓரமாக நிற்பதால் எல்லோரும் நனையத் துவங்கினர்.மழையின் வேகமும் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்தது.அதனால் இதற்கு மேல் படப்பிடிப்பு மேற்க்கொண்டு எடுக்க முடியாது என்று நிலைமையைப் புரிந்தவன் அங்குள்ளவர்களிடம் “ஓகே இதுக்கு மேல வெயிட் பண்ணால் சரியாக வராது அதனால பேக்கப்” என்றதும் எல்லோர் முகத்திலும் அப்படி ஒரு மகிழ்ச்சி.​

இன்றைக்கு நேரம் முன்னதாகவே சென்று அறையில் ஓய்வெடுக்கலாம் என்று எல்லோரும் நினைத்தார்கள்.​

அதனால் அங்கிருந்து செல்வதற்கான ஏற்பாடுகள் மும்மூரமாக நடந்தது.பொதுவாக வெளியூர் படப்பிடிப்பு நடத்துவதாக இருந்தால் நேரம் காலம் பார்க்காமல் எடுப்பார்கள்.அதனால் எப்பொழுது ஓய்வு கிடைக்கும் என்றே சொல்ல முடியாது.ஆனால் இன்றைக்கு வானிலை சரியாக இல்லாததால் படப்பிடிப்பு நடக்கவில்லை.​

நிரல்யா இந்தமாதிரி நிலைமையில் முதன்முறையாக மாட்டிக் கொண்டாள்.ஏற்கனவே மிகுந்த வேலையோடு இப்பொழுது மழையில் நனையவும் அவளுக்கு லேசாக உடல் நடுங்க ஆரம்பித்தது.அது வெளியில் தெரியாமல் இருப்பதற்காக சூட்டிற்காக இரண்டு கைகளையும் ஒன்றாக தேய்த்து சூடு காட்டியபடியே நின்றாள்.​

அருகில் நின்ற சைத்ரன் “குளிருதா தன்வி?” என்றதற்கு “இல்லை” என்று தலையசைத்தாள்.​

உடனே சுற்றி இருப்பவர்களை பற்றி எல்லாம் யோசிக்காமல் அவனிடம் இருந்த உடைக்கு மேல் அணியும் கோர்ட்டை எடுத்து அவளுக்கு மேல் போட்டு விட்டான்.​

இதை சற்றும் எதிர்பார்க்காத நிரல்யா “எனக்கு இதெல்லாம் வேண்டாம் சார்” என்று அதை கழற்ற போனாள்.​

அவனோ அதற்கு மறுப்பாய் “உனக்கு குளிருதுல்ல போட்டுக்க இன்னும் ரூம்க்கு போக எவ்வளவு நேரம் ஆகும்னு தெரியலை அதோடு நீ இந்த கோர்ட்டை கழற்றினால் நான் திரும்ப போட்டு விடுவேன் அப்புறம் எல்லோரும் நம்மளைத் தான் பார்ப்பாங்க” என்று மெதுவாக அவளிடம் கிசுகிசுத்தான்.​

அவர்கள் இருவரும் பேசிக் கொள்வதும்,நடந்துக் கொள்ளும் முறையில் அங்கு இருப்பவர்களுக்குள்ளே பேசுப் பொருளானது.இதை இலக்கியனும் கவனித்தான்.​

நிரல்யா சைத்ரனின் கட்டாயத்தினால் அவன் சொன்னதற்கு இவளும் தலையசைத்தாள்.எல்லோரும் அவரவருக்கு ஏற்பாடு செய்திருந்த அறைக்குச் சென்றனர்.​

நிரல்யா மட்டும் வரவேற்பறையில் தன் அறையை பற்றி விசாரித்துக் கொண்டிருந்தாள்.எல்லோரையும் அவரவர் அறைக்கு அனுப்பி விட்டு அங்கே இலக்கியனும் வந்தான்.இவள் தனியாக நிற்பதைப் பார்த்து “நிரல் எதுக்காக இங்கே இருக்கீங்க?”​

அவளோ “சார் எனக்கு ரூம் புக் பண்ணலைன்னு சொல்றாங்க” என்றான்.​

இலக்கியனோ குழப்பத்தோடு “என்ன உங்களுக்கு ரூம் புக் பண்ணலைன்னா சொல்றாங்க” என்று அங்கிருந்தவரிடம் விசாரித்தான்.அவரும் அப்படியே சொல்ல உடனே தனது உதவியாளனை அழைத்தான்.​

இலக்கியனும் உதவியாளனும் பேசிய பிறகு தான் சைத்ரனின் உடைமைகளோடு நிரல்யாவின் உடைமைகளும் சேர்ந்து சென்றிருந்ததால் உதவியாளனுக்கு அறைகளை போடுவதில் குழப்பம் வந்துள்ளது என்று தெரிய வந்தது.உடனே இலக்கியன் அங்கிருந்த வரவேற்பாளரிடம் இன்னொரு தனிஅறையை கேட்டான்.​

அவரோ தற்சமய்ம் விடுதிகள் முழுவதும் வாடிக்கையாளர்கள் இருப்பதாகச் சொன்னார்.மேலும் நாளை தான் அறைகள் எதாவது காலியாக வாய்ப்பிருப்பதாகச் சொன்னார்.அதைக் கேட்டு இலக்கியன் என்னச் செய்வதென்று தெரியாமல் விழித்தான்.வேறுயாராவது உடன் அறையை பகிரலாம் என்று பார்த்தால் எல்லோருக்கும் சரியான பகிர்தலோடு தான் அறை ஒதுக்கப்பட்டுள்ளது.இதில் எல்லோருடனும் அறையை நிரல்யாவிற்கு கொடுக்க முடியாது.​

இங்கே வந்திருந்த நாலைந்து பெண்களோடு கொடுக்கலாம் என்றால் எல்லோரும் இப்பொழுது தான் இவனோடு பணி செய்கிறார்கள்.அதோடு அந்த பெண்கள் எல்லோரும் ஏற்கனவே இந்த மாதிரி தேவையில்லாத பிரச்சினைகளில் தங்களை எல்லாம் சேர்க்கக் கூடாது என்று முன்னரே சொல்லி இருந்ததால் என்னச் செய்வதென்று யோசனையில் இருக்கும் போது தன்னுடைய உடைமைகளை எடுக்க இன்னும் நிரல்யா வரவில்லையே என்றெண்ணி வெளியே வந்தான் சைத்ரன்.​

அங்கே மூவரும் நிற்பதைப் பார்த்துக் கொண்டே “நிரல் உங்க லக்கேஜ் எடுக்க வரலையா?” என்று அவளைப் பார்த்து கேட்டான்.​

நிரல்யா சொல்லவருவதற்குள் இலக்கியன் மெதுவாக நடந்த எல்லாவற்றையும் சொன்னான்.உடனே சற்றும் யோசிக்காமல் “நிரல் என்னோட அறையை நீங்க எடுத்து தங்கிக்கோங்க நான் இங்கே வெயிட் பண்ணுற ஹால்ல இருந்துக்கிறேன் நாளைக்கு தான் ரூம் கிடைச்சிடும்னு சொல்றாங்கல்ல அப்போ எனக்கு போட்டுக்கிறேன்” என்றான் சைத்ரன்.நிரல்யா என்னச் சொல்வதென்று தெரியாமல் நின்றாள்.​

அதைக் கேட்ட உதவியாளன் “சார் நான் பண்ண தப்புக்கு நீங்க ஏன் தண்டனை அனுபவிக்கனும்” என்றான்.​

இலக்கியன் சைத்ரன் “சார் மிட் நைட்ல புரோடியூசர் வரேன்னு சொல்லி இருக்காரு எக்ஸ்பென்சிவ் ரூம் இல்லைன்னு அதனால என்னோட ரூமையே நான் அவரோட ஷேர் பண்ணிக்கிறேன்னு சொல்லி இருக்கேன் இதுல என்னாலயும் ஒன்னும் பண்ண முடியலை இதுல நீங்க வெளியே இருக்கிறதை அவர் பார்த்துட்டா தேவையில்லாத பிரச்சினை வந்துடும் சார் அதுவும் இல்லாமல் யூனிட்ல இந்த விஷயம் லேசாக தெரிஞ்சாலும் பெரிய இஷ்யூ ஆயிடும் என்னோட பேரும் டேமேஜ் ஆகிடும்” என்று பதறினான் இலக்கியன்.​

நிரல்யாவிற்கு எல்லாமே புது அனுபவமாக இருக்க என்னச் செய்வதென்று யோசித்துக் கொண்டிருந்தாள்.உடனே சைத்ரன் “இலக்கியன் சார் நிரல்யாவிற்கு பிரச்சினை இல்லைன்னா என்னோட ரூம்ல தங்கட்டும் ஏன்னா அங்கே ரெண்டு ரூம் இருக்கு ஒன்னு பெட் ரூம் இன்னொன்னு கெஸ்ட் வந்தால் சந்திக்க ஒரு ரூம் முன்னாடி இருக்கு நான் வேணும்னா அங்கே தங்கிக்கிறேன்” என்றான்.​

இலக்கியனும் உதவியாளனும் நிரல்யாவை திரும்பி பார்த்தனர்.இப்போதுள்ள நிலைமைக்கு இந்த வழியை விட்டால் வேறு யோசனை இல்லை.வெளியே யார் இருந்தாலும் பிரச்சினை தான்.அதிலும் நிரல்யாவை வெளியே தனியாக விடுவதற்கு இலக்கியனுக்கு விருப்பமே இல்லை.அதனால் அவனே “நிரல் இன்னைக்கு ஒரு நைட் மட்டும் ப்ளீஸ் நாளைக்கு மார்னிங் உங்களுக்கு தனியா ரூம் எப்படியாவது ஷிப்ட் பண்ணிடுறேன்” என்று கெஞ்சினான்.​

வேறு வழியில்லாமல் நிரல்யாவும் ஒத்துக் கொண்டாள்.ஆனால் அவள் “கெஸ்ட் ரூம்ல நான் தங்கிக்கிறேன் சைத்ரன் சார் அறையில் இருக்கட்டும்” ,என்றாள்.​

நால்வரும் பேசி முடிவெடுத்து எல்லோரும் கலைந்து சென்றனர்.இலக்கியன் நிரல்யாவிடம் “எதாவது அவசரம்னா எனக்கு கால் பண்ணுங்க யோசிக்காதீங்க” என்றவன் சைத்ரனிடம் “சைத்ரன் சார் நிரல்யாவை பார்த்துக்கோங்க” என்று சொல்லி இருவரையும் சைத்ரன் அறையின் வாயிலில் விட்டுச் சென்றான்.​

சைத்ரன் நிரல்யாவிடம் “முதல்ல நீங்க போய் ப்ரஷ் ஆகிட்டு வேலை எல்லாம் முடிச்சிட்டு எனக்கு கால் த பண்ணுங்க அப்புறம் நான் வரேன் அதுவரைக்கும் காற்றோட்டமா ஒரு வாக் போயிட்டு வரேன்” என்று சொல்லி அறையின் சாவியை அவளிடம் கொடுத்து விட்டுச் சென்றான்.​

முதலில் அறையை பார்க்கவே அவளுக்கு ஆச்சியமாக இருந்தது.இந்த நவீன அறையை சுற்றிப் பார்த்தவள் நனைந்த உடையை மாற்றி வேறு உடைக்கு மாறினாள்.அடுத்து சைத்ரன் கொடுத்த மேலாடையை உலர்த்தப் போட்டாள்.அங்கிருந்த ஷோபாவில் உட்கார்ந்தாள்.​

யாரோ கதவை தட்டுவது போல் சத்தம் கேட்டது.உடனே கதவின் இடுக்கண் வழியே பார்க்க அங்கே சைத்ரன் நின்றுக் கொண்டிருந்தான்.அவனைப் பார்க்கவும் தான் அவன் சொல்லிச் சென்றது நினைவுக்கு வர உடனே கதவைத் திறந்தாள்.​

உள்ளே வந்த சைத்ரன் “எதாவது சாப்பிட கொண்டு வரச் சொல்லட்டுமா?” என்றுக் கேட்டான்.உடனே நிரல்யா சரியென்று தலையசைக்கவும் அப்போதைக்கு அங்கிருந்த உணவுகளில் ஒன்றை கொண்டுவரச் சொன்னான்.​

உணவு வந்ததும் சைத்ரன் நிரல்யாவிடம் “இரண்டு பேரும் ஒன்னாக சாப்பிடலாமா?”என்றதற்கு​

“ம்ம்…சரி வாங்க” என்று இருவரும் முன்னால் இருந்த மேசையை இழுத்துப் போட்டுக் கொண்டு ஒளிப்பரப்பாகிக் கொண்டிருந்த தொலைக்காட்சியில் படத்தைப் பார்த்தபடியே சாப்பிட்டு முடித்தனர்.​

சைத்ரன் படத்தைப் பார்த்துக் கொணௌடிருந்தான்.​

நிரல்யாவிற்கு அன்றைக்கான வேலைப் பளுவினால் உடல் அசதியில் கொட்டாவியாக வந்துக் கொண்டிருந்தது.சைத்ரன் உட்கார்ந்திருப்பதால் அவளும் தன்னை வலுக்கட்டாயப் படுத்தி உட்கார்ந்திருந்தாள்.​

அதைப் பார்த்த சைத்ரன் “தன்வி நான் தூங்கப் போறேன் நீங்க”​

“நானும் தான்” என்றதும் அவளுக்கு தலையணையும்,போர்வையையும் எடுத்துக் கொடுத்தான்.அதை வாங்கிக் கொண்டு அவளும் தன்னிடத்தில் போய் ஷோபாவில் படுத்துக் கொண்டாள்.சைத்ரன் தன் அறையை கதவை மூடிக் கொண்டு அவன் அறையில் படுத்தான்.ஆனால் தன்வி தூங்கி விட்டாளா? என்று ஒருமுறை வந்து பார்த்தவன் அவள் தூங்கி விட்டாள் என்பதை அறிந்து கதவை பாதியாக திறந்து வைத்து தூங்கினான்.​

சிறிது நேரமாக விழித்து இருந்தவன் அவனும் தூங்கிப் போனான்.சைத்ரன் நன்றாக தூங்கிக் கொண்டு இருக்கும் போது யாரோ முணங்குவது போல் சத்தம் கேட்டது.திடுக்கிட்டு கண் விழித்தவன் எழுந்து சுற்றும் முற்றும் பார்க்க நிரல்யாவின் பக்கம் சத்தம் வரவும் எழுந்துப் போய் அவளருகில் சென்றான்.​

அதிகமான குளிரால் அவள் நடுங்கிக் கொண்டிருந்தாள்.அதைப் பார்த்தவன் மெதுவாக நிரல்யாவிடம் “தன்வி என்னாச்சு ஏன் உடம்புக்கு முடியலையா?” என்றதற்கு விழிகளை மூடியபடியே ஆமாம் என்ற சிறு தலையசைப்பு மட்டும் வந்தது.​

நேராகச் சென்று அவனிடம் இருந்த போர்வையை எடுத்து போர்த்தும் பொழுது அவளுடைய உடலில் இவனின் கரம் பட்டதும் அனலாக கொதித்தது.உடனே நெற்றியைத் தொட்டுப் பார்க்க காய்ச்சல் அடிப்பது தெரிந்தது.​

உடனே வரவேற்பறையில் இருந்தவரிடம் தொலைபேசியில் பேசி ஒரு மருத்துவரை ஏற்பாடுச் செய்யச் சொன்னான்.உடனே வரவேற்பறையில் உள்ளவர் நள்ளிரவு நேரத்தில் மருத்துவர் வருவது சிரமம் அதனால் காலையில் வருவதாகச் சொன்னார்.​

என்னச் செய்வதென்று யோசித்தவன் அவசரத்திற்காக வைத்திருந்த பாராசித்தமோல் மருந்தை எடுத்து வந்து அவளிடம் கொடுக்கலாம் என்றால் அவளோ எழுந்திருக்க கூட முடியாமல் இருந்தாள்.​

உடனே தன்விக்கு அருகில் சென்றவன் அவள் தலையை எடுத்து தன் மடிமீது வைத்து அவள் வாயை திறக்கச் சொல்லி மாத்திரை போட்டு விட்டான்.அவளுக்கு ஷோபாவில் படுக்க வைக்க வாகாக இல்லாமல் இருக்க அவளை மெதுவாக தூங்கிக் கொண்டு வந்து தன் அறையில் உள்ள கட்டிலில் படுக்க வைத்தான்.நிரல்யாவிற்கு காய்ச்சலின் வீரியத்தினால் நடப்பது எல்லாம் ஏதோ கனவு போல் தெரிந்தது.​

மாத்திரை சாப்பிட்டு அரைமணி நேரம் ஆகியும் தன்வியின் உடல்சூடு குறையவே இல்லை.அதனால் தன் கைக்குட்டையை எடுத்து நீரில் நனைத்து பிழிந்து நெற்றியில் பத்து போட்டு விட்டான்.அவப் போது குளிரிலும் நடுங்குவதால் கைகளையும்,காலையும் தேய்த்து விட்டான்.​

இப்படியே அன்றைய இரவு கழிந்தது.கொஞ்சம் காய்ச்சலும்,சூடும்,குளிரும் மட்டுப்படவும் அசதியினால் உட்கார்ந்திருந்த படியே நிரல்யா அருகினில் அப்படியே சாய்ந்து படுத்தவன் தூங்கிப் போனான்.​

காய்ச்சலும் குறைந்ததாலும்,கொஞ்சம் ஓய்வுக் கிடைத்ததாலும் மெதுவாக விழிகளை திறந்தாள் பெண்ணவள்.வலியினால் சட்டென்று இருக்கும் நிலைமை புரியாமல் தவித்தவள் சுற்றும் முற்றும் பார்க்கவும் கொஞ்சம் நிதர்சனத்தை புரியவும் பதறியபடி அங்கும் இங்கும் பார்த்தவள் எழுந்துக் கொள்ள முயற்சிக்க அவளால் முடியவில்லை.​

யாரோ கைகளைப் பிடித்திருப்பதை அறிந்து பக்கத்தில் யாரோ படுத்திருப்பதை உணர்ந்து பார்த்தாள் சைத்ரன் உட்கார்ந்திருந்தபடியே மெத்தையில் தலை சாய்த்து இவளின் கரங்களை தன் கரங்களோடு பிணைத்து பிடித்து தூங்கிக் கொண்டிருந்தான்.​

அதுவே அவளுக்கு ஒரு அதிர்ச்சியைத் தர தலையில் ஏதோ இருப்பதை உணர்ந்து அந்த துணியை எடுத்துப் பார்க்க அது அவள் ஏற்கனவே பத்திரப்படுத்தி வைத்திருந்த கைக்குட்டையின் வடிவில் வேறு ஒரு நிறத்தில் இருந்தது.அதைப் பார்த்ததும் நிரல்யாவிற்கு ஓரளவு புரிந்தது இந்த கைக்குட்டைக்கு சொந்தக்காரன் சைத்ரன் தான் என்று.​

தன் மேல் போர்த்தியிருந்த அத்தனை போர்வை பக்கத்தில் தண்ணீர் வைத்திருந்த கிண்ணம் என எல்லாவற்றையும் பார்க்கவும் நேற்று கனவு போல் நடந்தது எல்லாம் உண்மையில் நடந்தது தானா? என்று அவள் யோசித்து உண்மையைப் புரிந்துக் கொண்டாள் நிரல்யா.​

அவனின் எதிர்பார்ப்பில்லா அன்பில் பெண்ணவளின் உள்ளம் அவனின் பக்கம் சாயத் துவங்கியது. இத்தனை நாட்களாக தேடிக் கொண்டிருந்தவன் பார்த்ததால் அவள் மகிழ்ச்சியில் திளைக்க எதிரேயிருந்த சைத்ரனையே பார்த்துக் கொண்டிருந்தாள் அவன் பிடித்திருந்த கரங்களை இன்னும் கொஞ்சம் அழுந்த பிடித்தபடியே….​

 

admin

Administrator
Staff member
 

NNK-74

Member
கண்ணுக்குள்ளே கரைந்த நிலவு அத்தியாயம் -13


நிரல்யா கண் விழித்து பார்த்துக் கொண்டிருக்கும் நேரம் யாரோ கதவை தட்டும் சத்தம் கேட்டது.அதுவரை அசந்து தூங்கிக் கொண்டிருந்தவன் சத்தம் கேட்டு எழுந்தான்.நிரல்யா விழித்து இருப்பதைப் பார்த்து “தன்வி கண் முழிச்சிட்டியா? உடம்பு இப்போ எப்படி இருக்கு?” என்று நெற்றியில் கை வைத்துப் பார்த்தவன் “ம்ம்… சூடு குறைஞ்சி இருக்கு. “ என்ற பொழுது திரும்பவும் கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்டு “இரு யாருன்னு பார்த்துட்டு வரேன்” என்றான்.



அவளோ கண்ணிமைக்காமல் அவனையேப் பார்த்தாள். சைத்ரன் கதவை திறக்க விடுதியின் பணிப்பெண் மருத்துவரோடு வந்திருந்தாள்.



சைத்ரன் உள்ளே அழைத்து நிரல்யாவை பரிசோதிக்கச் சொன்னான்.மருத்துவர் பரிசோதித்ததில் அவளுக்கு இன்னும் காய்ச்சல் இருப்பதோடு உடம்பு பலகீனமாக இருப்பதால் குளுக்கோஸ் ஏற்ற வேண்டும் என்று சொல்லி அதற்கான வேலைகளும் அடுத்து நடந்தது.வந்த பணிப்பெண் சைத்ரனை வெளியே அனுப்பி அவளுக்கு உதவி செய்து தன் காலைக் கடன்களை முடிக்க உதவினாள்.



அப்பொழுது இலக்கியனும் அவனது உதவியாளனும் உள்ளே வந்தனர்.சைத்ரனிடம் இலக்கியன் “என்னாச்சு சைத்ரன் சார் உங்க அறைக்கு டாக்டரை வரச் சொன்னீங்கன்னு கேள்விப் பட்டேன் அதான் என்னன்னு பார்த்துட்டு போகலாம்னு வந்தேன்” என்றான்.



சைத்ரன் நடந்த விவரங்கள் எல்லாவற்றையும் சொன்னான்.அதைக் கேட்டவன் நிரல்யாவைப் பார்க்க உள் அறைக்குச் செல்ல கதவை தட்டினான்.பணிப்பெண் கதவை திறந்து விட்டாள்.அவளுக்கு அதற்கான ஏற்பாடுகள் முடிந்து குளுக்கோஸ் ஏறிக் கொண்டிருந்தது.



நிரல்யா விழித்துக் கொண்டிருந்தாள்.கையில் அந்த கைக்குட்டையை இன்னும் வைத்திருந்தாள்.இலக்கியன் அருகில் அமர்ந்து “இப்போ எப்படி இருக்கு நிரல் நேத்து உங்களை நான் ரொம்ப கஷ்டப்படுத்திட்டேனா?” என்று அக்கறையாகக் கேட்டான்.



அவளோ “இல்லை” என்று தலையசைத்தாள்.இலக்கியன் நிரல்யாவைப் பார்த்து “ஏன் எதுவும் பேச மாட்டீங்கிறீங்க நிரல்”



அவள் பார்வை எல்லாம் அவன் மீது இருந்தது.மெதுவாக “சார் முதல் தடவை இந்த மாதிரி டிராவல் செய்து வெளியூர் வந்து இருக்கேன் அதான் உடம்புக்கு ஒத்துக்கலைன்னு நினைக்கிறேன் நீங்க நினைக்கிற மாதிரி எதுவும் இல்லை அதோட இது என்னோட வேலை தான் அதைத் தானே நான் செஞ்சேன்”



அவனோ மறுப்பாக “உங்களுக்கு ஹெல்ப்க்கு யாரையாவது நான் ஏற்பாடு செய்து இருக்கனும் அது என்னோட தப்பு தான் யாமினி மேம்க்கு இந்த விஷயம் தெரிஞ்சால் என் மேல ரொம்ப வருத்தப்படுவாங்க அதோட எனக்கு எப்பவும் உங்க மேல அக்கறை இருக்கு நிரல்” என்றான்.



இதைக் கேட்ட சைத்ரன் அதிர்ச்சியாக இலக்கியனைப் பார்த்தான்.மனதினுள்

‘என்னடா இது நான் ஒருத்தன் இங்கே இருக்கும் போது இவன் வேற ப்ராமான்ஸ் பண்றான் ஐயோ! இவ வேற அவனையே பார்க்கிறா’ என்று பொரிந்துக் கொண்டான்.



உடனே “இலக்கியன் சார் நிரல் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கட்டும் அப்புறம் பேசிக்கலாம்” என்று தற்போது ஒரு தடுப்பு போட்டான்.



உடனே இலக்கியனும் “சரி தான் நிரல் நீங்க ரெஸ்ட் எடுங்க இன்னைக்கு ஷீட்டிங் கேன்சல் ஏன்னா வெளியே ரொம்ப மழையா இருக்கு நாளைக்கு தான் திரும்ப ஷீட்டிங் அதனால நிரலை நான் பார்த்துக்கிறேன் சைத்ரன் சார் நீங்க வேணும்னா என் ரூம்ல போய் ரெஸ்ட் எடுங்க நைட்லாம் தூங்காமல் இருந்து இருக்கீங்க” என்றான்.



உடனே சைத்ரன் அவசரமாய் “இல்லை சார் நான் நல்லா ரெஸ்ட் எடுத்துட்டேன் நிரல் தூங்கவும் நானும் தூங்கிட்டேன் நீங்க நாளைக்குள்ள ஷீட்டிங் வொர்க் பார்க்கலாம்ல நான் ப்ரீ தான் நானே பார்த்துக்கிறேன்” என்றான்.



இலக்கியன் “இல்லை சைத்ரன் சார் எதுக்கு உங்களுக்கு தேவையில்லாத சிரமம் நேத்துல இருந்து நிரலை நீங்க தான் பார்த்துக்கிறீங்க” என்றான்.



இவனோ என்ன பதில் சொல்ல? என்று யோசித்தவன் “ஓகே இலக்கியன் சார் டிரிப்ஸ் ஏத்துனது முடிஞ்சதும் நான் டாக்டர்கிட்ட இன்பார்ம் பண்ணிட்டு போறேன்” என்றான்.



இலக்கியனும் சரியென்று ஒத்துக் கொண்டு அங்கிருந்து செல்வதற்கு முன் நிரல்யாவிடம் “உடம்பை ரொம்ப ஸ்டேயின் பண்ணிக்காதீங்கா நிரல் எப்பவும் எதாவது உதவின்னா என்னை கூப்பிட மறக்காதீங்க” என்று

சொல்லி விட்டுச் சென்றான்.



சைத்ரன் நிரல்யா அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்ந்தான்.நிரல்யா இவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் அதைப் பார்த்தவன் “என்னாச்சு தன்வி என்கிட்ட எதாவது சொல்லனுமா?”என்று நேரிடையாக அவனே கேட்டான்.



அதற்காக இவ்வளவு நேரம் காத்திருந்தவள் ஆமாம் என்று தலையசைத்து கையில் மறைத்து வைத்திருந்த கைக்குட்டையை எடுத்து அவனிடம் காட்டியவள் “இது உங்களது தானே” என்றதும் அவனுக்கும் அவள் எதற்காக கேட்கிறாள் என்று புரிந்துக் கொண்டவன் “ஆமாம்” என்று தலையசைத்தான்.



அவளுக்கோ சந்தோஷமாக இருந்தது.ஆனால் வெளிக்காட்டிக் கொள்ளாமல் “அன்னைக்கு பேசி உங்க கைக்குட்டையை கொடுத்தது” என்று அவள் முடிக்கும் முன்னே “ஆமாம் நான் தான் கொடுத்தேன் ஆனால் அங்கே நீ இருந்தேன்னு எனக்கு தெரியாது தன்வி கொஞ்ச நாள் கழிச்சு அதே இடத்துக்கு திரும்ப வரும் போது நீ வெயிட் பண்ணி நிற்கிறதைப் பார்த்து தெரிஞ்சுக்கிட்டேன்” என்றான்.



அவளோ ஆர்வமாய் “ஏன் என்கிட்ட உண்மையை சொல்லலை அன்னைக்கு பேசினது நீங்க தான் சொல்லி இருக்கலாமே?” தன் மனதில் உள்ள சந்தேகத்தைக் கேட்டாள்.


அவனோ விரக்தியாய் ஒரு புன்னகை சிந்தியவன் “தன்வி ஏற்கனவே நம்ம சின்ன வயசு விஷயங்களை சொன்னதே நீ நம்பலை இதுல இந்த விஷயத்தைப் பற்றி நானே சொல்லி என்னை இன்னும் நிரூபிக்க எனக்கு விருப்பம் இல்லை அதனால இதை பெரிதாக நினைக்கலை எப்போ உனக்கு உண்மை தெரியனுமோ அப்போ தெரிந்தால் போதும்னு அமைதியாக இருந்துட்டேன்”என்றான்.



அவன் சொன்னதை எல்லாம் கேட்டு அவளுக்கு ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது.'தன்னைப் பற்றியும் தனக்காகவும் ஒருவன் இவ்வளவு யோசிக்கிறானா!’ என்ற எண்ணம் தான் மனம் முழுக்க நிறைந்து இருந்தது.



அவளோ “சாரி ஆ…ஆதித் சார் நான் உங்களை இப்படி அழைச்சா தானே பிடிக்கும் எனக்கு பழசு இன்னும் ஞாபகம் வரலை தான் ஆனால் உங்க மேல நம்பிக்கை வந்திருக்கு என்னை மன்னிச்சிடுங்க யார்னு தெரியாத ஒருத்தியா இருந்தே ஆறுதலா பேசினீங்க இதுல உங்க மேல சந்தேகப்பட்டது தப்பு தான்” என்றாள்.



இதற்கு மேலும் தன் விருப்பத்தை தெரிவிக்காமல் நேரத்தைக் கடத்த அவன் என்ன முட்டாளா? அவனின் மனமோ சிறிதும் யோசிக்காமல் அவளிடம் இன்னும் கொஞ்சம் நெருங்கி அருகில் அமர்ந்தவன் சட்டென்று அவள் கையைப் பிடித்து “அன்றைக்கு நீ யாருன்னு தெரியாமத் தான் பேசினேன் அதே மாதிரி என்னன்னு விவரம் புரியாத வயதில் இருந்தே எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும் தன்வி அதைச் சொல்லத் தான் இத்தனை வருஷமா காத்திருந்து நீ யாருன்னு தெரிஞ்சதும் என் காதல் எனக்கு திரும்ப கிடைச்சிருச்சுன்னு நினைச்சேன் ஆனால் அது எனக்கானது இல்லையோன்னு நீ சொன்ன பதில்ல நான் கவலைப்பட்டேன் எது எப்படியோ என்னோட காதல் முப்பொழுதும் நீ தான் தன்வி” என்று அவள் அடுத்து என்ன?என்று யோசிக்கும் முன்னே தன் கரங்களால் பெண்ணவளின் இரு மென் கன்னங்களையும் பற்றிக் கொண்டவன் வறண்டு போய் இருந்த இதழ்களை தன் இதழ்களால் பற்றிக் கொண்டான்.



இதழ் மேல் இதழ் வைத்து ஆதிக்கம் செலுத்தாமல் தன்னவளின் இதழோடு இதழ் சேர்த்து தன் அன்பை பரிமாறிக் கொண்டான் மன்னவன்.


சட்டென்று நடந்த அதிர்ச்சி நிகழ்வில் விழிகளை விரித்து என்னவென்று யோசித்து சுயநினைவில் வந்தவளோ அவனை தன்னிடம் இருந்து வேகமாக விலக்கினாள்.



“என்ன பண்ணுறீங்க சைத்ரன்?”

கோபமாகக் கேட்டாள்.



அவனோ எந்தவிதமான பயமும் காட்டாமல் “என்னவளை எனக்கானவளாக மாத்திக்கிட்டேன் எனக்கு வேற வழி தெரியலை உன் பதிலையும் சீக்கிரம் சொல்லு ஏன் என்கூட பழக மாட்டியா? பழகிப் பாரு பிடிச்சி இருந்தால் நம்ம கல்யாணம் செய்து ஒன்றாக வாழலாம்” என்று அடுத்த அதிர்ச்சியையும் உடனே அவளுக்கு கொடுத்து விட்டு அங்கிருந்து வேகமாகச் செல்லும் முன்னே குளுக்கோஸின் அளவையும் அவன் கண்கள் மறக்காமல் அளவெடுத்துக் கொண்டதை எல்லாம் அவள் அறிந்துக் கொள்ள வாய்ப்பில்லை தான்.



இதயம் வேகமாக துடித்தது.மூச்சுக் காற்று விட்டு விட்டு வந்தது.அவனிடம் எதுவும் காட்டவில்லை என்றாலும் சட்டென்று ஒரு ஆடவனின் நெருக்கம் அவளை சொல்ல முடியாத உணர்ச்சியில் தள்ளி விட்டது.இனிமேல் அவன் முகத்தில் விழிக்கவே கூடாது என்று தனக்குள்ளே ஒரு முடிவெடுத்துக் கொண்டாள்.



ஆனால் எத்தனை நிமிடங்களுக்கு அது பொருந்தும் என்று கொஞ்சம் கூட யோசிக்கவில்லை அவள்.நேரம் வேகமாக சென்றது. அடுத்த அரைமணி நேரத்தில் வந்து நின்றான் மருத்துவரோடு…



அவர் வந்து குளுக்கோஸ் முடிந்து விட்டது என்பதால் கையில் போட்டிருந்த ஊசி எல்லாவற்றையும் எடுத்து நிரல்யாவையும் சைத்ரனையும் மாறிப் பார்த்தப்படி “இனிமேல் உடம்பை கவனிச்சுக்கோங்க ஹெல்த்தே இல்லாமல் இருக்கு நல்லா சாப்பிடுங்க” என்றதும் சைத்ரன் சிரித்துக் கொண்டே “அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன் டாக்டர்” என்றான்.




அவரோ சிரித்துக் கொண்டே “ஹீரோ சார் இவங்க உங்களோட சொந்தமா?” என்றதற்கு அவனோ சிரித்துக் கொண்டே “ஆமாம் சின்ன வயசிலிருந்து ப்ரெண்ட்ஸ்” என்றான்.



“அப்போ சரி இந்த மருந்தை எல்லாம் கரெக்ட் டைம்க்கு கொடுத்துடுங்க ரொம்ப ஸ்ட்ரைன் பண்ணிக்காதீங்க” என்று நிரலைப் பார்த்து சொல்லி விட்டு அவர் வாசலை நோக்கி நடக்க இவனும் பின்னே சென்றான்.



அதுவரை அவனை பார்க்காதது போல் தலை குனிந்து இருந்தவள் அவன் சென்றதும் திரும்பி வருகிறானா? என்று எட்டிப் பார்த்தாள்.அங்கே யாரும் இல்லை போனவன் அப்படியே வெளியே சென்று விட்டான் போல என்று நினைத்தவள் மனதினுள் ‘'இதுக்கு மேல இங்கே இருந்தோம் அவ்வளவு தான் உடனே எஸ்கேப் ஆயிட வேண்டியது தான்’ எனறு முடிவெடுத்தவள் இலக்கியனை கைப்பேசியில் அழைத்து “டைரக்டர் சார் என்னை வேற ரூம் சேஞ்ச் பண்ணுறீங்களா?” என்றதும்



அவனோ “டிரிப்ஸ் முடிஞ்சிடுச்சா? நீங்க இப்போ நார்மலாகத் தானே இருக்கீங்க?” என்று அக்கறையாய் விசாரித்தான்.



அவளோ அவசரமாக “எல்லாம் முடிஞ்சிடுச்சு நீங்க ரூம் மாத்தி கொடுத்தால் நான் மாத்திரையைப் போட்டு ரெஸ்ட் எடுப்பேன்” என்றாள்.



இலக்கியன் அவனுடைய உதவியாளனும் சேர்ந்து சைத்ரன் அறைக்கு அடுத்த அறையில் அவளை மாற்றி விட்டனர்.இதற்கிடையில் நிரல்யா சைத்ரனின் அறையில் இருந்தது அங்குள்ள எல்லோருக்கும் தெரிய வந்தது.இருவருக்கும் ஏதோ தவறான உறவு இருப்பதாக வதந்தியாக பேசப்பட்டது.



சைத்ரன் வருவதற்குள் தனக்கான அறைக்குள் அடைந்துக் கொண்டாள்.தூங்கப் போகிறேன் என்று இலக்கியனிடம் சொல்லி விட்டு விழித்துக் கொண்டே நடந்ததை எண்ணியபடி சைத்ரனை நினைத்துக் கொண்டிருந்தாள்.



தன் அறைக்கு திரும்ப வந்தவன் அங்கே நிரல்யாவும் அவளுடைய பொருட்களும் இல்லாததை கவனித்தான்.ஒரு பக்கம் மனமோ அவனிடம் ஒரு வார்த்தை சொல்லாமல் போய் விட்டாளே! என்று கவலைப்பட்டாலும் இன்னொரு பக்கம் நீ செய்த வேலைக்கு அவள் உன்னிடம் சொல்லி விட்டு செல்லவில்லையே குறை வேறா? என்று மாறி மாறி கேள்வி கேட்டது அவன் மனம்.



இப்படியே அன்றைய பொழுது கழிந்தது.நிரல்யா அஸ்வதியிடம் பேச முடியவில்லை.எல்லாவற்றையும் குறுஞ்செய்தியில் பேசிக் கொண்டார்கள்.அஸ்வதி அலுவலகத்தில் விடுமுறை கேட்டிருப்பதால் வேலைகளை முடித்து கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தாள்.சைத்ரன் அவளிடம் சொன்னக் காதலை மட்டும் அஸ்வதியிடம் சொல்ல வெட்கப்பட்டுச் சொல்லவில்லை.



மறுநாள் சைத்ரன் தன் அறையை விட்டு வெளியே வருவதற்கு முன்னே நிரல்யா மற்றவர்களுடன் படப்பிடிப்பு தளத்திற்கு சென்றிருந்தாள்.அவளுடன் பணிபுரிய அந்த ஊரில் உள்ள ஒரு ஒப்பனை கலைஞரையும் உதவிக்கு வைத்தான் இலக்கியன்.



அங்கே இந்திராவும் வந்திருந்தாள்.அவளுக்கு ஒப்பனை செய்துக் கொண்டிருந்தாள்.நிரல்யா மற்றும் சைத்ரனின் விஷயம் இவளின் காதிற்கும் அரசல் புரசலாக வந்தது.ஆனால் சைத்ரன் மேல் இருந்த நம்பிக்கையினால் அதை நம்ப மறுத்தாள்.



இருந்தாலும் என்ன நடக்கிறது? என்று அறிந்துக் கொள்ள எண்ணினாள்.படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு வந்தான் சைத்ரன்.



நிரல்யாவைப் பார்த்து அவளுக்கு அருகில் போய் அமர்ந்தான்.ஆனால் அவளோ அவனை கவனிக்காதது போல் இந்திராவிற்கு ஒப்பனை செய்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு உதவியாக வந்திருந்தவர் சைத்ரனுக்கு ஒப்பனையை ஆரம்பித்தார்.


கண்களை மூடி பேசாமல் அமர்ந்திருந்தவன் சிறிது நேரத்தில் விழிகளை திறந்து நிரல்யா பக்கம் திரும்பி “நிரல்யா பினிஷிங் டச்அப் செய்து விடுங்க” என்றான்.



இந்திராவிற்கு ஒப்பனை முடித்து விட்டதால் வேறு வழியில்லாமல் அவனருகில் வந்து மெதுவாக ஒப்பனையை ஆரம்பித்தாள்.அவன் விழிகள் இவளையே பார்த்துக் கொண்டிருந்தன.



அதை அவள் கவனித்தாலும் தெரியாதது போல் நடந்துக் கொண்டாலும் நெஞ்சம் படபடத்தது.ஆனால் கைகள் தன் வேலையை சரியாகச் செய்தன.எல்லாம் முடிந்ததும் “சார் முடிஞ்சிடுச்சு” என்றதும் அவளை ஆழ்ந்து ஓரப் பார்வை வீசியவன் மனதினுள்ளோ ‘என் காதலைத் தானே சொன்னேன் இதுல எந்த தப்பும் இல்லை கூடிய சீக்கிரம் புரிஞ்சுக்குவா இல்லை புரிய வைப்பேன்’ என்று நினைத்தபடியே எழுந்துச் சென்றான்.



இந்திராவிற்கும் சைத்ரனுக்கும் நடிக்க வேண்டியது காதல் காட்சியோடு கூடிய பாடல்களும் அதற்கான வசனங்களோடு இருவரும் நடித்துக் கொண்டிருக்க…. நிரல்யாவின் மனம் முழுவதும் நேற்று சைத்ரன் தன்னிடம் நடந்துக் கொண்டதையும் எண்ணிப் பார்த்துக் கொண்டிருந்தது.



இந்திராவுடன் அவன் நெருக்கமாக நடிப்பதைப் பார்த்து இவளுக்கு கோபமாக வந்தது.அதை பார்க்க முடியாமல் திரும்பி நின்றுக் கொண்டாள்.அதை யார் கவனித்தார்களோ இல்லையோ? பார்வை முழுவதும் அவள் மீது வைத்திருந்த சைத்ரன் அதைக் கண்டுக் கொண்டான்.



இதழில் தோன்றிய புன்னகையை மறைத்தவன் குறும்புப் பார்வையோடு இந்திராவுடன் காதல் காட்சிகளில் இன்னும் கொஞ்சம் நெருங்கி நடித்துக் கொண்டிருந்தான்.



எதற்கும் இன்னொரு முறை திரும்பி என்ன நடக்கிறதென்று பார்க்கலாம்? என்று எண்ணியவள் திரும்பிப் பார்த்தாள்.அங்கே இருவரும் முத்தம் தருவதற்காக நெருங்கி வந்துக் கொண்டிருந்தனர்.



இதைப் பார்த்ததும் நிரல் அதிர்ச்சியில் அப்படியே விட்டால் அழுது விடும் நிலையில் இருக்க இலக்கியன் “கட் கட்…. சூப்பர் சூப்பர் சார் செம ரொமான்ஸ் பின்னிடீங்க உங்க பார்வையிலே அப்படி காதலை காட்டினீங்க பாருங்க அங்கே இருக்கீங்க சார்” என்று கையைத் தட்டி உற்சாகப்படுத்தினான் இலக்கியன்.அவனோ சிரித்துக் கொண்டே “தாங்க்யூ சார்” என்று சொல்லி விட்டு நிரல்யாவைப் பார்த்தான்.



நடப்பதை எல்லாம் பார்த்து ‘சைத்ரன் தன்னோடும் இப்படித் தான் நடித்து இருப்பானோ?’ என்று அவள் யோசித்துக் கொண்டிருக்கும் பொழுதே விழிகளில் கண்ணீர் நிரம்பியிருக்க மெதுவாக அவள் அருகில் வந்தவன் துண்டு எடுப்பதைப் போல் குனிந்தவன் அவள் காதோரமாய் “இதே மாதிரி தானே உன்கிட்டயும் நான் நடிச்சேன்னு நினைக்காதே தன்வி, எதுல உண்மையான காதல் இருக்குன்னு கண்டுபிடிக்க தெரியாத பெண் நீ இல்லை” என்று அவளை அவன் பார்க்கும் பார்வையில் புரிந்துக் கொண்டாள்.சட்டென்ற தன் விழிகளில் தெரிந்த மாறுதலை அறிந்து அவளுக்கு சமாதானம் சொல்லும் தன்னவனின் அக்கறையை எண்ணி கண்ணீரை உள்ளிழுத்துக் கொண்டாள்.



சைத்ரன் தன் நாற்காலியில் உட்கார்ந்து அடுத்த காட்சிக்கான வசனங்களை பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது பக்கத்தில் வந்து அமர்ந்த இந்திரா சைத்ரனிடம் “சைத்ரன் ஷீட்டிங் முடிஞ்சதும் வெளியே எங்கேயாவது போய்ட்டு வரலாமா? கிளைமேட் நல்லா இருக்கு” என்றதும் அவனோ அவள் புறம் திரும்பாமல் “வேற ஒரு கமிட்மெண்ட் இருக்கு அதனால வர முடியாது” என்றான்.



இந்திராவால் அதற்கு மேல் அவனை கட்டாயப்படுத்த முடியவில்லை.அதனால் அமைதியாக சென்று விட்டாள்.படப்பிடிப்பு முடிந்து எல்லோரும் அவர்களுக்கான அறைக்குச் செல்லும் நேரம் நிரல்யாவும் தன் அறைக்கு வரும் பொழுது ஒரு கரம் வந்து அவளைப் பிடித்து இழுத்தது.



யாரென்று திரும்பிப் பார்த்தால் அங்கே சைத்ரன் தான் நின்றுக் கொண்டிருந்தான்.இவளோ சத்தம் இல்லாமல் மெதுவாக “இப்போ எதுக்காக என் கையைப் பிடிக்கிறீங்க?”



அவனோ “என்னோடு வா” என்று அவளுடைய சம்மதம் இல்லாமலேயே தன்னுடன் அழைத்துச் சென்றான்.நிரல்யா பதறியபடி “ப்ச் ஆதித் யாராவது பார்த்தால் நம்மை தப்பா நினைப்பாங்க”



“இருக்கட்டும் பார்த்தால் என்ன நான் உண்மையைச் சொல்லுவேன் நான் என் தன்வியை காதலிக்கிறேன்னு ” என்றான் காதலோடு…


அவனின் பதிலில் ஆடிப் போனவள் “என்னைப் பத்தி என்ன நினைப்பாங்க?” என்றாள் நாணலோடு….



“எதுவும் நினைக்க மாட்டாங்க தன்வி அப்படியே நினைச்சா என்ன காசா பணமா போகட்டும் இது உன்னோட லைவ் அதைப் பற்றி மட்டும் யோசி மற்றவங்க என்ன நினைப்பாங்கன்னு பார்க்க ஆரம்பித்தால் கடைசில ஒன்னும் இருக்காது” என்று பேசியபடி இவர்களின் பயணம் தொடர்ந்தது.



அங்கே நடந்துப் பார்வையிடக் கூடிய இடங்களை சுற்றிப்பார்த்தபடியே அவள் கேட்கமாலேயே அங்கே சாப்பிட எல்லாம் வாங்கி கொடுத்தான்.



அவளோ “எதுக்கு இப்போ இதெல்லாம் வாங்கி தர்றீங்க? வேண்டாம் ஆதித் சார்”



அவனோ அதற்கும் புன்னகை ஒன்றை சிந்தியபடி “நான் தானே சொன்னேன் நம்ம ரெண்டுபேரும் பழகிப் பார்க்கலாம்னு அதான் நமக்கான நேரத்தை ஒதுக்கினால் தானே என்னைப் பற்றியும் நீயும் உன்னைப் பத்தி நானும் பேசிப் புரிஞ்சுக்கலாம் அப்புறம் உன் முடிவை சொல்லு” என்றதும் இவளோ நம்ப முடியாமல் அவனைப் பார்த்தாள்.



உடனே பார்வையில் குறும்புத் தனத்தோடு “நோ டச்சிங் ரூல் தான் ஆனால் இதுக்கு மட்டும் தடையில்லை” என்று தன் கரங்களை தன்னவளின் கரங்களோடு கோர்த்துக் கொண்டான்.அவன் சொன்ன வார்த்தையின் படியே சரியாக நடந்துக் கொண்டான்.இந்த மாதிரி வெளியே தன்னை மட்டும் விரும்பும் ஒருவனோடு வருவது எல்லாம் நிரல்யாவிற்கு புதியதாக இருந்தது.அதோடு இவை எல்லாம் அவளுக்கு அழகான நினைவுகளைத் தந்தது.



இப்படியே பகலில் படப்பிடிப்பும் இரவில் இருவரும் யாருக்கும் தெரியாமல் ஊர் சுற்றிக் கொண்டிருந்தார்கள்.இரவு நேரமாக இருப்பதால் இலக்கியன் நிரல்யாவை அவன் தொந்தரவு செய்யவில்லை.அஸ்வதியிடம் திரும்ப கைப்பேசியில் பேச வாய்ப்பு கிடைத்தது.ஆனால் அவளால் சரியாக பேச முடியவில்லை.குறுஞ்செய்தியிலும் சைத்ரனும் நிரல்யாவும் பேசிக் கொண்டார்கள்.



சொந்த ஊரில் இருக்கும் அப்பாவிற்கு உடல்நிலை சரியில்லாததால் உடனிருந்து கவனிக்க ஐந்து நாட்கள் திருச்சி சென்று இருந்தாள் அஸ்வதி.அதற்குப் பிறகு தான் தன்னால் அந்தமான் வர முடியும் என்று முடிவோடு சொல்லி விட்டாள் அஸ்வதி.அதனால் தனிமையில் இல்லாமல் தன்னவனோடு அந்தமான் தீவினை இரவில் சுற்றிப் பார்த்தாள்.



நான்கு நாட்கள் கழித்து படப்பிடிப்பு சூரிய உதயத்திற்கு முன்பே ஆரம்பித்து விட்டது.அதனால் அன்று எல்லோருக்கும் நண்பகலிருந்து விடுமுறையைக் கொடுத்தான் இலக்கியன்.


அவன் அன்று அறிவிப்புக் கொடுத்ததும் சைத்ரன் நிரல்யாவின் கைப்பேசியில் குறுஞ்செய்தி ஒன்று அனுப்பினான்.



அவர்கள் எப்போதும் சந்திக்கும் விடுதியின் பின்பக்கம் உள்ள உணவகத்திற்கு வரச் சொன்னான் சைத்ரன்.இவளும் அவன் சொன்ன இடத்திற்குச் சென்றாள்.



அங்கே அவளுக்காக காத்திருந்தவன் நிரல்யா பார்த்ததும் “தன்வி இன்னைக்கு இந்த உலகத்தை விட்டு நாம இன்னொரு உலகத்தைப் போய் பார்க்கலாம்” என்றான்.


அவளோ புரியாமல் அவனைப் பார்த்து “என்னச் சொல்லுறீங்க?புரியலை” என்றாள்.


அவனோ புன்னகைத்துக் கொண்டே “என் மேல நம்பிக்கை இருக்குல்ல வா போகலாம்” என்று கையை நீட்ட அவளோ எதைப் பற்றியும் யோசிக்காமல் அவன் கரங்களோடு கோர்த்துக் கொண்டாள்.



இந்த ஒருவாரத்தில் அவனை வேறொருவராக அவளால் நினைத்துப் பார்க்க முடியவில்லை.

இருவருமாக அந்தமானில் இருக்கும் நார்த் பே பீச்சிற்கு சென்றனர்.நீர் விளையாட்டுக்கு சிறந்த இடமான இங்கே ஆசியாவிலேயே கடல் நடைப்பயிற்சிக்கு சிறந்த இடமாகும்.இந்த நடவடிக்கைக்கு நீச்சல் பற்றி தெரிந்து இருக்க வேண்டிய அவசியம் இல்லை கண்ணைடி ஹெல்மேட் கீழ் சுவாசிக்கலாம் இது பாதுகாப்பானது மற்றும் தொந்தரவு செய்யும் காற்று அழுத்தம் இல்லாததால் இது ஏதுவாக இருக்கும்.



நார்த் பே பீச்சில் கடலுக்கு அடியில் நடந்து இறுதியில் ஆக்டோபஸ் கார்டனை பார்வையிடலாம்.நீங்கள் இதுவரை பார்த்திராத கடல்வாழ் உயிரினங்கள் உங்களுக்காக அங்கே நீந்திக் கொண்டிருக்கும்.



அவன் கடலுக்கு அடியில் செல்ல வேண்டும் என்று சொன்னவுடன் அவளுக்கு பயம் தொற்றிக் கொண்டது.அவளை சமாதானம் செய்யத் துவங்கினான் சைத்ரன்.


“எனக்கு நீச்சல் தெரியாது ஆதித் சார் பயமா இருக்கு நான் வரலை” என்றாள் பயத்தோடு…



“உனக்கு தெரியலைன்னா என்ன? எனக்கு தெரியுமே நான் உன் கையை இதோ இப்படி கெட்டியா பிடிச்சுக்கிறேன்” என்று அழுந்த கரங்களை பிடித்துக் கொண்டான்.



அவன் கொடுத்த நம்பிக்கையில் இருவரும் ஒன்றாக கடலுக்கு அடியில் சென்று நடந்தனர்.முதலில் பயத்தினால் அவனையே பிடித்துக் கொண்டவள் கடலுக்கு அடியில் ஒரு அழகான உலகத்தைக் கண்டவள் அப்படியே தன்னையே மறந்தாள்.



நீலநிறக் கடலில் நீந்திச் செல்லும் வண்ணமயமான மீன்களும் இதுவரை பார்த்திராத அரிய வகை உயிரினங்கள் நீந்தும் அழகோடு கண்ணைக் கவரும் பவளப் பாறைகளும் அதன் மேல் ஒட்டியிருக்கும் உயிரினங்களைப் பார்த்து எல்லாமே அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது.



இந்த உலகத்தில் அழகான இன்னொரு உலகமும் இருப்பதை அவள் அறிந்துக் கொண்டாள்.அழகு மீன்களை தொடும் ஆர்வத்தில் முன்னால் நடந்துச் சென்று அதை அப்படியே தொட்டு இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.



இப்படியே நேரம் வேகமாக கடந்தது.எல்லாம் பார்த்து முடிந்து மேலே இருவரும் வந்து கடற்கரை மணலில் அமர்ந்திருந்தனர்.அங்கே எதுவும் பேச முடியாததால் இங்கே சைத்ரன் நிரல்யாவிடம் “எப்படி இருந்துச்சு தன்வி? உனக்கு பிடிச்சு இருக்கா?”



அவளோ அவனையேப் பார்த்து புன்னகைத்துக் கொண்டிருந்தாள்.


“என்ன அமைதியா இருக்கே பிடிக்கலையா?” என்றதும் சட்டென்று அவனே எதிர்பாராத நேரத்தில் அவனை அணைத்துக் கொண்டவள் “இந்த மாதிரி ஒரு உலகம் இருக்குன்னே எனக்கு தெரியாது எவ்வளவு அமைதியா அழகா இருந்துச்சு தெரியுமா? அந்த மீன்களைப் பார்க்கும் போதே நானும் இதே மாதிரி மீனாக இருந்திருந்தால் நல்லா இருக்கும்னு நினைச்சேன்” என்றாள்.



அவளின் அணைப்பு அவனுக்கு பதிலுரைத்தது.இருந்தாலும் அவளிடம் “அவ்வளவு தான் பிடிச்சு இருந்துச்சா?” ஏக்கமாய் கேட்டான்.



அவளோ நாணலோடு “இந்த உலகத்தை இன்னொரு வகையில் அழகா காட்டின உங்களையும் ரொம்ப பிடிச்சு இருந்தது ஆதித்” என்றாள்.


அவள் சொன்னதை நம்ப முடியாமல் தன்னவளின் நாடிப் பிடித்து உயர்த்தி தன் முகத்திற்கு அருகே கொண்டு வந்தவன் விழிகளாலே “உண்மையாகவா” என்றதற்கு இவளும் விழிகளாலே “ஆமாம்” என்பது போல் இமைகளை மூடித் திறக்கவும் மகிழ்ச்சியில் திளைத்தவன் தன்னவளின் இதழ்களை அழுந்தப் பற்றிக் கொண்டான்.



இம்முறை அவள் அவனை விலக்கி விடவில்லை.அவன் தந்த அன்புப் பரிசு முத்தத்தை முழுதாய் ஏற்றுக் கொண்டாள்.


உதட்டுல இருந்து சொன்னா


தன்னாலே மறந்திடும் நிமிசத்துல


இதயத்தில் இருந்து சொன்னா


போகாமல் நிலைச்சிடும் உதிரத்துல


அவ சொன்ன சொல்லே போதும்


அதுக்கு ஈடே இல்லை ஏதும் ஏதும்….



சைத்ரனைப் பற்றிய சிறுவயது நினைவு நிரல்யாவிற்கு வரவில்லை என்றாலும் இப்பொழுதுள்ள அவனை அவள் முழுதாக ஏற்றுக் கொண்டது.அவனுக்கும் நிறைவாக இருந்தது.அந்த கடற்கரையிலேயே தன் மார்பில் தன்னவளை அன்பாய் தலை சாய்த்தி வைத்திருந்து இருவரும் எதிரே இருந்த கடலைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.அங்கே ஒரு ஜோடிக் கண்கள் அவர்கள் இருவரையும் வெறிக்கப் பார்த்துக் கொண்டிருந்தது.



இருவரும் தங்களது அறைக்குள் சென்றனர்.அப்பொழுது சைத்ரனின் கைப்பேசி அழைக்க யாரென்று எடுத்துப் பார்க்க புது எண்ணாக இருந்தது. யாராக இருக்கும் பேசலாம் என்று அழைப்பை எடுத்தவன் “ஹலோ” என்றதும்


மறுமுனையில் சிரிப்பு சத்தத்தோடு

“ஹலோ ஆதித் சைத்ரன் ரொம்ப சந்தோஷமா இருக்க போல? என்னை இந்த நிலைமைக்கு தள்ளி விட்டுட்டு நீ மட்டும் நிம்மதியா இருக்க உன்னை விட்டுடுவேன்னு நினைச்சியோ?விட மாட்டேன் கூடிய சீக்கிரம் உன் நிம்மதி எல்லாத்தையும் இழக்கப் போற”என்றதும்


இவனோ “ஹலோ யாரு? யாரு?” என்று கேட்கவும் அழைப்பு துண்டிக்கப்பட்டது.


உங்கள் கருத்துக்களை இங்கே பதிவிடுங்கள்

https://www.narumugainovels.com/threads/10830/post-24708
 

NNK-74

Member
கண்ணுக்குள்ளே கரைந்த நிலவு அத்தியாயம் -14


சைத்ரன் அவனுக்கு வந்த அழைப்பின் எண்ணை திரும்ப முயற்சிக்க அது தொடர்பு எல்லைக்கு அப்பால் இருப்பதாக பதில் வந்தது.


யாராக இருக்கும் என்று யோசனையில் ஆழ்ந்தான்.ஆனால் அவனுக்கு பதிலே கிடைக்கவில்லை.இந்த விஷயத்தைப் பற்றி தனது உதவியாளனாகிய மணியிடம் கைப்பேசியின் எண்ணைக் கொடுத்து விசாரிக்கச் சொன்னான்.


மறுநாள் காலை…



அஸ்வதி இன்று அந்தமான் வருவதாக குறுஞ்செய்தி அனுப்பி இருந்தாள்.ஆனால் அவள் தங்கியிருக்கும் விடுதியினைப் பற்றி அஸ்வதியிடம் விவரங்களைச் சொன்னால் தான் அவள் சரியாக இங்கே வருவாள்.அதனால் அதைப் பற்றிய விவரங்களை கேட்டறிய சைத்ரனுக்கு குறுஞ்செய்தி அனுப்பினாள்.



அவனும் அவர்கள் இருக்கிற விடுதியின் விலாசத்தையும் அவளை அழைத்து வருவதற்காக ஒருத்தரை ஏற்பாடு செய்து அனுப்புவதாகச் சொன்னான்.



இவர்களுக்கு இன்று இன்னொரு தீவில் படப்பிடிப்பு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.அதனால் அஸ்வதி வரும் பொழுது யாரும் உடன் இருக்க முடியாத சூழ்நிலை.அதோடு நிரல்யாவுடன் அவளும் ஒரே அறையில் தங்குவதற்காக ஏற்பாடு செய்வதற்கு முன்னால் இலக்கியனிடம் அனுமதி கேட்க சைத்ரன் நிரல்யாவிடம் சொன்னான்.



அதனால் இலக்கியனை அவனுடைய அறையில் பார்த்து அவனிடம் அனுமதி கேட்கச் சென்றாள்.அங்கே இலக்கியனிடம் “சார் எனக்கு ஒரு ஹெல்ப் வேணும்”



அவனோ அவள் முகம் பாராமல் “ம்ம்…. சொல்லுங்க”



“சார் என் ப்ரெண்ட் அஸ்வதி இங்கே என்னோடு துணைக்கு அழைச்சி இருக்கேன் அவளும் என்னோடு ரூமை ஷேர் செய்துக் கொள்ளலாமா?” என்று அனுமதி கேட்டாள்.



அதற்கு அவனோ அமைதியாக இருந்தாள்.இவளோ இலக்கியனிடம் “சார் என்ன செய்ய?” என்றதும்


அவனோ கோபமாக… “எல்லாமே என்கிட்ட கேட்டு செய்ற மாதிரி இப்போ மட்டும் என்கிட்ட அனுமதி கேட்கிறீங்க?” என்றதும் அவளோ புரியாமல் “சார் நான் என்ன செய்தேன்னு என் மேல கோபப்படுறீங்க?” என்றாள்.


அவனோ “ஏன் நீங்க என்ன பண்ணுறீங்கன்னு உங்களுக்கு தெரியாதா? என்ன?’’என்றதும்


நிரல்யாவிற்கு திக்கென்று இருந்தது.சைத்ரனும் அவளும் பழகுவது தெரிந்து விட்டதோ? என்று பயந்தபடி “சார் எனக்கு புரியலை? விவரமா சொல்லுங்க”என்று கொஞ்சம் தைரியத்தை வரவழைத்துக் கேட்டாள்.



“நேத்து உங்களைப் பார்க்கலாம்னு

நீங்க தங்கியிருக்கிற அறைக்கு வந்தேன் ஆனால் அங்கே நீங்க இல்லை நிரல் எங்கே போய் இருந்தீங்க? யாரையும் தெரியாத இந்த ஊர்ல எங்கே போனீங்க? கால் பண்ணால் ரீச்சே ஆகலை”என்று இவன் அடுத்தடுத்த கேள்விகளைக் கேட்கவும் நிரல்யா என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் யோசித்துக் கொண்டிருக்கும் பொழுது அறைக் கதவின் வாசலில் இருந்து “நிரல் என்னோடு தான் இருந்தாள்” என்று பதில் வந்தது.



இருவரும் ஒரே நேரத்தில் திரும்பி பார்க்க அங்கே சைத்ரன் நின்றான்.இவளோ கண்களாலேயே வேண்டாம் என்பது போல் சைகைச் செய்தாள்.


இலக்கியனோ கோபத்தோடு அவன் புறம் திரும்பி “என்ன சைத்ரன் சார் நிரல்யா பத்தோடு பதினொன்றுன்னு நினைச்சீங்களோ?”



அவனோ இலக்கியன் அருகில் வந்து “நீங்க நினைக்கிற மாதிரி இல்லை சார் நானும் நிரல்யாவும் லவ் பண்றோம்” என்றான்.இதைக் கேட்டு இலக்கியன் அதிர்ச்சியோடு நிற்க அதே நிலையில் தான் நிரல்யாவும் இருந்தாள்.



சைத்ரன் உண்மையை இவ்வளவு சீக்கிரம் சொல்லுவான் என்று அவளும் நினைக்கவில்லை.சிறிது நேரம் அங்கே அமைதி நிலவி இருந்தது.இலக்கியன் நிரல்யா புறம் திரும்பி “நிரல் எதாவது கட்டாயத்தின் பேர்ல இவங்களை லவ் பண்ணுறதாக ஒத்துகிட்டியா? எதுவாக இருந்தாலும் என்கிட்ட சொல்லு” என்றதும் சைத்ரன் நிரல்யா அருகில் சென்று அவள் தோள் மீது கைப்போட்டபடி “சார் எனக்கு நிரலை சின்ன வயசில் இருந்து தெரியும் அதுவே எனக்கு இப்பத் தான் தெரிய வந்துச்சு இல்லைன்னா என்னோட நிரல் இவ்வளவு கஷ்டப்பட வேண்டியது இருக்காது” என்றான்.



அவளோ இலக்கியன் முன்னால் நிற்பதால் வளைந்து நெளிந்தபடி சைத்ரனின் கையை தன் மீதிருந்து எடுத்து விட்டாள்.ஆனால் அவனோ கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருந்தான்.



இலக்கியன் நம்ப முடியாமல் திரும்பவும் நிரல்யாவிடம் “சைத்ரன் சொல்றது எல்லாமே உண்மை தானா?”


அவளோ அவனைப் பார்த்து முறைத்துக் கொண்டு இலக்கியனிடம் “அவரு சொன்ன மாதிரி சின்ன வயசிலிருந்து நாங்க ப்ரெண்ட்ஸ் எல்லாம் எனக்கு சரியா நினைவு இல்லை சார் ஆனால் எனக்கு அவரை பிடிச்சிருக்கு” என்று ஒற்றை வார்த்தையில் தன் சம்மதத்தைச் சொன்னதும் இலக்கியனின் முகமே மாறிப் போனது.அவனுக்கும் நிரல்யாவைப் பிடித்து இருந்ததை அவனும் புரிந்து அதை சொல்லலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கும் பொழுது எல்லாமே இங்கே மாறிப் போய் இருந்தது.



தன் பக்க விருப்பங்களைச் சொல்ல அவனுக்கு வாய்ப்பே இல்லாமல் போனது.இருந்தாலும் அவன் மனம் அவளுக்கு நல்லது செய்யவே விரும்பியது.அதனால் அவளுடன் அஸ்வதி தங்குவதற்கு ஒத்துக் கொண்டான்.



இதைப் பற்றி ஒருமுறை யாமினி மேடமிடம் சொல்ல வேண்டும் என்று முடிவெடுத்துக் கொண்டான்.



படப்பிடிப்பு தளத்திற்கு எல்லோரும் சென்று இருந்தனர்.சைத்ரனும் நிரல்யாவும் யாருக்கும் தெரியாமல் சைகையிலும்,கண்களாலும் பேசிக் கொள்கிறோம் என்று இலக்கியனின் பார்வையில் அடிக்கடி மாட்டிக் கொண்டார்கள்.



யாருக்கும் தெரியாமல் நிரல்யாவின் கைகளைப் பிடிப்பது,ஒப்பனை செய்ய வரும் பொழுது விழிகளாலே அவளை காதல் பார்வை பார்க்கிறேன் என்று தொல்லை செய்துக் கொண்டிருந்தான் சைத்ரன்.



படப்பிடிப்பு பாதி நேரம் முடியும் தருவாயில் வந்தாள் அஸ்வதி.ஒரு வாரதத்திற்கு மேல் கழிந்து இருவரும் சந்தித்து கொள்வதால் நெருக்கமாக அணைத்துக் கொண்டனர்.நலம் விசாரிப்புக்கு பின்னே அஸ்வதி நிரல்யாவைப் பார்த்து “முதல் தடவை இந்த மாதிரி ஷீட்டிங் பார்க்கிறேன் தெரியுமா? அதை விட இந்த ஊரு இயற்கை அழகுல இன்னும் அப்படியே மெய் சிலிர்க்க வைக்குது” என்று தோழியுடன் சேர்ந்துப் பேசிக் கொண்டிருந்தாள்.



இதற்கிடையில் அங்கே இருந்த சைத்ரனைப் பார்த்து கையசைத்தவள் சைகையினால் “எல்லாம் ஓகே வா” என்றதற்கு அவனோ கட்டை விரலை உயர்த்தி கண்ணடித்துக் காட்டினான்.அதைப் பார்த்து அஸ்வதிக்கு சிரிப்பாக வந்தது.அவர்களுக்குள் இருந்த பிரச்சினை எல்லாம் சரியாகி விட்டதாக நினைத்துக் கொண்டாள்



ஆனால் சைத்ரனோ நிரல்யாவுடன் காதலும் சேர்ந்து கிடைத்து விட்டது என்ற அர்த்தத்தில் பதிலளித்தான்.


இலக்கியனைக் கண்டவள் நேராக அவனிடம் சென்று “ஹ…லோ சார் என்ன நல்லா இருக்கீங்களா?” என்று அவனிடம் பேசிக் கொண்டிருந்தாள்.அவனோ ஒற்றை வார்த்தையில் பதிலளித்துக் கொண்டிருந்தான்.



அதை எல்லாம் கண்டுக் கொள்ளாதவள் அவனிடம் பேசிக் கொண்டிருந்தாள்.அவன் தான் என்ன செய்வதென்று தெரியாமல் திணறிக் கொண்டிருந்தான்.அப்போது அங்கே வந்த நிரல்யா அவளை அவனிடமிருந்து கொஞ்சம் தள்ளி அழைத்து வந்து அஸ்வதியிடம் “ஹேய் ஏன் இலக்கியன் சாரை தொந்தரவு பண்ணுற? அப்புறம் கோபப்படப் போறாரு”


அவளோ அதை எல்லாம் கண்டுக் கொள்ளாமல் “கோபப்பட்டால் இன்னும் அழகா இருப்பார்னு நினைக்கிறேன்” என்றாள்.



நிரல்யா அவளை அதிர்ச்சியோடு பார்க்க… அஸ்வதி சிரித்துக் கொண்டே நிரலின் கையைப் பிடித்து “நிரல் எனக்கு இலக்கியனை ரொம்ப பிடிச்சிருக்குடி க்ரஷ் தான் பேசுவதற்கு வாய்ப்பு கொடு எல்லாம் கொஞ்ச நாள் பழகலாம் தானே ஒரு ப்ரெண்ஸ்ஸா இந்த படம் முடிஞ்சதும் நீயும் அவரை சந்திக்க முடியாது தானே அவரும் வேற ப்ராஜெக்ட்டுனு போய்டுவாங்க அதுக்கு தான் கேட்டேன்” என்றாள்.



அஸ்வதி சொன்னதைக் கேட்டு அவளும் புரிந்து ஒத்துக் கொண்டாள்.அதோடு இன்னும் சைத்ரனை அவள் விரும்புவதை சொல்லவில்லை.அதனால் இங்கே இருக்கப் போகும் நான்கைந்து நாட்களையும் எல்லோருடனும் சேர்ந்தே இருக்கலாம் என்று முடிவெடுத்தாள்.



அதைப் பற்றி சைத்ரனுக்கு குறுஞ்செய்தி அனுப்பினாள்.அவனோ அவளுடன் தனியாக இருக்க முடியவில்லையே என்று சோககீதம் பாடியவன் ஒத்துக் கொண்டான்.அஸ்வதியிடம் நம்முடைய காதலைப் பற்றி சொல்லவில்லை என்ற கூடுதல் தகவலையும் சொன்னாள்.



பகலில் படப்பிடிப்பும் இரவில் நிரல்யா இலக்கியன்,அஸ்வதி,சைத்ரன் என எல்லோரும் ஒன்றாக சாப்பிட வெளியே வந்தார்கள்.


அஸ்வதி இலக்கியனிடம் “உங்களுக்கு என்ன சாப்பிட பிடிக்கும் சார்? இதுவா? அதுவா?” என்று உணவு வகைகளைக் காட்டிக் கேட்டாள்.


உடனே இலக்கியன் “அஸ்வதி தேவையில்லாமல் எதுக்கு என்னோட பர்ஸ்னல் லைக்ஸ் பற்றி தெரிஞ்சுக்க விரும்புறீங்க?” என்றான் கொஞ்சம் கோபமாக…



அவளோ சிரித்துக் கொண்டே “எல்லாம் ஒரு பொது அறிவுக்காகத் தான் ஏன்னா நாளைக்கு உங்க படம் ஹிட் அடிச்சு டிரெண்டிங் ஆகிடுச்சுன்னு வைங்க அப்போ உங்களை பற்றி இன்டர்வியூ எடுக்க எல்லோரும் காத்திட்டு இருப்பாங்க அப்போ நீங்க பிஸி ஷெடியூல்ல இருப்பீங்க அப்போ நான் மீடியால சொல்லுவேன்ல இந்த படத்தோட மேக்கப் ஆர்ட்டிஸ்ஸோட ப்ரெண்ட் நானு நான் சார் இவ்ளோ க்ளோஸப்ல பார்த்தேன்” என்று கண்களின் மேல் இரு கைகளையும் கேமரா போல் செய்து காட்டி “இவ்வளவு போகஸ்ல பார்த்தேன் சாருக்கு என்ன பிடிக்கும்னு ஒரு லிஸ்ட்டே சொல்லலாம்ல அதனாலத் தான் கேட்டேன்” என்றாள்.



நிரல்யாவும் சைத்ரனும் வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டனர்.இலக்கியனுக்கு ஏன் தான் இவளிடம் கேள்வி கேட்டோமோ? என்று அவளை முறைத்தான்.ஆனால் அஸ்வதி அதைப் பற்றி எல்லாம் கவலை கொள்ளாமல் சாப்பாட்டில் கவனம் செலுத்தினாள்.



இலக்கியன் அமைதியாக இருப்பதைப் பார்த்து “சார் பசிக்கலையா? இதோ ரொட்டி நல்லா இருக்கு பாருங்க” என்று அவனுடைய தட்டில் உணவை உரிமையாக எடுத்து வைத்தாள்.அவளின் செய்கை ஒவ்வொன்றும் இலக்கியனை ஆச்சரியம் கொள்ள வைத்தது.



இந்திரா சைத்ரன் நிரல்யாவுடன் கொஞ்சம் நெருக்கமாக பழகுவதை உணர்ந்தவள் அவன் அவளுடன் சிரித்துப் பேசிய தருணங்களை எல்லாம் புகைப்படமாக எடுத்துக் கொண்டவள் அதை இருவரின் எண்ணிற்கு அனுப்பி வைத்தாள்.ஒரு நகலை சைத்ரனின் தாயான தனலட்சுமிக்கு அனுப்பி வைத்தாள் இந்திரா.



அந்த புகைப்படத்தைப் பார்த்த தனலட்சுமி கோபத்தில் இருந்தார்.இதைப் பற்றி உடனடியாக நேரில் சந்தித்து பேச வேண்டும் என முடிவெடுத்தவர் சைத்ரன் தன் படப்பிடிப்பு வேலைகளை முடித்து விட்டு தன்னை வந்துச் சந்திக்கமாறு அவனுக்கு குறுஞ்செய்தி அனுப்பி வைத்தார்.



அந்த குறுஞ்செய்தியைப் பார்த்தவன் அதைப் பெரிதாக எண்ணாமல் தன் கைப்பேசியை ஓரமாக வைத்தான்.திரும்பவும் நிரல்யாவுடனும்,அஸ்வதியுடனும் வம்பு பேசிக் கொண்டிருந்தான் சைத்ரன்.எத்தனையோ வருடங்களுக்கு பிறகு தனிமையை கொஞ்சம் தூரம் தள்ளி வைத்திருக்கிறான்.


மறுநாள் அஸ்வதியும் நிரல்யாவும் வெளியே செல்வதற்காக தயாராகிக் கொண்டிருந்தனர்.நிரல்யா தன்னை ஒப்பனை செய்வதில் தனிக் கவனம் செய்துக் கொண்டிருந்தாள்.அதை கவனித்த அஸ்வதி ஆச்சரியமாக அவளைப் பார்த்து “என்ன நடக்குது இங்கே? மேக்கப் எல்லாம் போடுற?” சந்தேகமாகக் கேட்டாள்.



நிரல்யா “அ…து வெளியூர் வந்து இருக்கோம்ல அதனாலத் தான்” என்று சமாளித்தாள்.



அஸ்வதி யோசனையோடு “இருந்தாலும் ஏதோ ஒன்னு சரியில்லையே சீக்கிரம் கண்டுபிடிக்கிறேன்” என்றாள் நிரல்யாவைப் பார்த்துக் கொண்டு…



அன்று அந்தமானில் அவர்களுக்கான கடைசி நாள். நால்வரும் ஒன்றாக நீண்ட தீவிற்குச் சென்றனர்.அந்தமானில் உள்ள ஒரு சிறிய தீவு அதன் அழகிய தன்மைக்கு பெயர் பெற்றது மற்றும் நன்கு பராமரிக்கப்பட்ட சூழலுடன் நவீனமயமாக்கப்பட்ட கிராமமாக இருக்கிறது.லாங் ஐலேண்டின் கடற்கரைகள் பசுமையான பசுமை மற்றும் புதிரான குகைகளால் மூடப்பட்டுள்ளன.நீச்சல் மற்றும் ஸ்நோர்கெல்லிங் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள மக்கள் குவியும் இடம்.



அங்கே ஒதுக்குபுறமாக நிரல்யாவும் அஸ்வதியும் கடலில் தங்களின் பாதங்களை நனைத்துக் கொண்டிருக்க சைத்ரனும் இலக்கியனும் நீச்சலடித்துக் கொண்டிருந்தார்கள்.



அஸ்வதி நிரல்யாவிடம் “ஹேய் நிரல் எங்கிட்ட எதாவது மறைக்கிறியா? ஏதோ பொய் சொல்லுறியோன்னு ஒரே எண்ணமாக இருக்கு”



அவளோ அவளைப் பார்த்து சிரித்துக் கொண்டு “ஆமாம்னு சொன்னா என்ன பண்ணுவே?” என்று வம்புக்கு இழுத்தாள்.



உடனே இவளோ பொய் கோபமாக “ஹோஓ… எங்கிட்ட மறைக்கிற அளவுக்கு தைரியம் வந்திடுச்சா”என்று நிரல்யா மீது தண்ணீரை எடுத்து தெளித்து விட்டாள்.உடனே நிரல் அஸ்வதி மீது தெளித்து விட்டாள்.இப்படியே இருவரும் ஓடிப்பிடித்து தண்ணீரில் விழுந்து தொப்பலாக கடலலையில் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.



அதற்கிடையில் நீச்சலடித்து கரையில் ஒதுங்கியவர்கள் இவர்கள் இருவரும் தங்களுக்கான தனி உலகில் மகிழ்ச்சியாய் விளையாடிக் கொண்டிருப்பதைப் பார்த்து ஆச்சரியப்பட்டார்கள்.



இந்த வயதிலும் எந்தவொரு எதிர்பார்ப்பு இல்லாத நட்பை அங்கே கண்டவர்கள் இருவரையும் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தார்கள்.


அப்பொழுது நிரல்யாவை அஸ்வதி துரத்திக் கொண்டு வர நிரல்யா இவர்கள் இருவரின் பக்கமாக ஓடி வந்தவள் கத்திக் கொண்டே “ஐயோ! இவகிட்ட இருந்து யாராவது என்னை காப்பாத்துங்களேன்” என்று சிரித்துக் கொண்டே ஓடி வந்தாள்.



அவளின் கையைப் பிடித்து சைத்ரன் “வா நான் உன்னை காப்பாத்துறேன்” என்று அவளை மறுபடியும் கடலின் பக்கமாக இழுத்துக் கொண்டு போக…



அஸ்வதி நிரல்யாவின் கையை எட்டிப் பிடித்தவள் அமைதியாக நின்றுக் கொண்டிருந்த இலக்கியனின் கரங்களைப் பிடித்தவள் “நிரலை தப்பிக்க விடாமல் இருக்க என்னைப் பிடிச்சு இழுங்க” என்று அவனைப் பிடித்து இழுத்தாள்.ஒருவரையொருவர் மாறி மாறி பிடித்து இழுக்க ஒன்றாக கடலலையில் மூழ்கி எழுந்து ஒருவரையொருவரின் கரங்களைப் பற்றிக் கொண்டு கரைக்கு வந்தனர்.இப்படியே அன்றைக்கான பொழுதை கழித்தனர்.


மறுநாள் விமானத்தில் நிரல்யாவும் அஸ்வதியும் ஒன்றாக உட்கார்ந்துக் கொண்டனர்.அதனால் நிரல்யாவின் பிடியில் இருந்து சைத்ரனும் இலக்கியனும் தப்பித்துக் கொள்ள அஸ்வதி நிரல்யாவின் நகக்கீறலில் அலறிக் கொண்டிருந்தாள்.இதைப் பார்த்த இலக்கியனும் சைத்ரனும் ஒருவொருக்கொருவர் ஹைபை செய்துக் கொண்டு சிரித்தனர்.



இலக்கியன் இதுவரை எடுத்த படங்களில் நடித்த கதாநாயகர்களை விட சைத்ரனும் அவனும் நல்ல நண்பர்களாக ஆனார்கள்.சைத்ரனோடு நிரல்யாவும் அஸ்வதியும் இலக்கியனுடன் நண்பர்கள் ஆனார்கள்.இந்த பயணம் நால்வருக்கும் ஒரு நல்ல பயண நினைவுகளைத் தந்தது.



நால்வரின் கைப்பேசியிலும் இவர்கள் எல்லோரும் ஒன்றாக ஊரைச் சுற்றி எடுத்த புகைப்படங்களும் அதில் இடம் பெற்று இருந்தன.



படத்திற்கான அடுத்தக்கட்ட வேலைகள் தொடர்ந்தன.டப்பிங்,எடிட்டிங் போன்றவை ஆரம்பித்தன.அதனால் இலக்கியனுக்கு வேலைகள் அதிகமாக இருந்தன.



சைத்ரன் மற்றும் நிரல்யாவின் காதல் யாருக்கும் தெரியாமல் கைப்பேசியிலும்,இரகசிய சந்திப்புகள் சைத்ரனின் காரிலும் இரண்டு மூன்று நாட்களுக்கு ஒருமுறை நடைப்பெற்றது.

சென்னைக்கு வந்து ஒரு வாரமாக ஆகியிருந்தது.



யாமினி நிரல்யாவை நேரில் சந்தித்து பேசினார்.சைத்ரனும் இவளும் காதலிப்பது இவருடைய காதிற்கும் சென்று இருந்தது.அதனால் நிரலை நேரில் கண்டவர் நிரல்யாவிடம் நேராக சைத்ரனோடு காதல் பற்றிக் கேட்டார்.அதற்கு என்ன பதில்சொல்வதென்று தெரியாமல் அமைதியாக இருந்தாள்.



அவரே தொடர்ந்தார்.“நிரல்யா உன் தனிப்பட்ட விஷயத்துல முடிவெடுக்க எனக்கு எந்த உரிமையும் இல்லை ஆனால் உன்னுடைய ஆசானாக என்னுடைய முதல் யோசனை காதலிக்கும் போது எல்லாமே நல்லா இருக்கும் ஆனால் அது உன் வாழ்க்கையோட சேர்ந்து வந்துச்சுன்னா எனக்கு ரொம்ப சந்தோஷம் நீ முதல் தடவை என்கிட்ட வேலை கேட்டு வரும் போது என்னை முதல் தடவை பார்த்த மாதிரியே இருந்தது.



ஆனால் நான் எல்லோரையும் நம்பி ஏமாந்தேன் நீயும் அந்த நிலைமைக்கு வந்து விடக் கூடாதுனு தான் இத்தனை நாளா என்னோடு வைச்சு இருந்தேன் ஆனால் அது சுயநலமாக எனக்கே தெரிய வரத் தான் உன்னை வெளியே காட்டுனேன் அதன் மூலமாக நீ முன்னேறனும் தவிர என்னை மாதிரி ஏமாந்துறாதே நிரல் இதை நீ அட்வைஸா நினைச்சாலும் சரி இல்லை உனக்கு நல்லதாக நினைச்சாலும் சரி எப்படியோ நீ நல்லா இருந்தால் போதும்” என்றார் நிறைவாக…



யாமினியின் கண்டிப்பில் இத்தனை அக்கறை இருக்கும் என்று அவளே நினைக்கவில்லை.யாமினியின் கையைப் பிடித்துக் கொண்டவள் “மேம் நீங்க சொல்லி அதுல வளர்ந்தவ நான் அதனால எப்பவும் ஏமாந்து போக மாட்டேன் அப்படியே ஏமற்ற நினைச்சாலும் நீங்க இதுவரைக்கும் சொல்லிக் கொடுத்து இருக்கிற அனுபவத்தின் மூலமா அதுல வெளியே வருவேன்” என்றான் நம்பிக்கையோடு….



நிரல்யா சொன்ன பதிலில் புன்னகை ஒன்றை பதிலாக தந்தவர் அவளின் தலையில் ஆசிர்வாதமாக கையை வைத்தவர் “இந்த மேக்கப் இன்டஸ்ரில உன்னோட திறமையை சீக்கிரம் வெளியே கொண்டு வா” என்று வாழ்த்தி விட்டுச் சென்றார்.நில்யாவிற்கு இந்த வாழ்க்கை நிறைய நல்ல மனிதர்களை தந்து இருக்கிறது என்று புரிந்துக் கொண்டாள்.





வாரத்தின் கடைசியில் சைத்ரன் தன் அம்மா தனலட்சுமியைக் காண ஊருக்குச் சென்றான்.



அங்கே இவனுடைய வருகைக்காக காத்திருந்தவர் முதலில் அவனை இன்முகத்தோடு வரவேற்று அவனுக்கு உணவை பரிமாறினார்.ஆனால் அதை எல்லாம் ஏற்றுக் கொள்ளும் நிலையில் சைத்ரன் இல்லை.



நால்வரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தார்கள்.சைத்ரனின் தந்தை இருக்கும் போது பேசினால் தான் அவன் அமைதியாக இருப்பான் என்று நினைத்தவர் மெதுவாக பேச்சை ஆரம்பித்தார்.



“சைத்ரன் அந்தமான் போனியா ஷீட்டிங் எல்லாம் முடிஞ்சிடுச்சா?”


அவனோ “ம்ம்…” என்று ஒற்றை பதிலைத் தந்தான்.



உடனே அவர் “படம் எப்போ ரிலீஸ் ஆகும்”



“ஒன்னரை மாசம் ஆகும்னு நினைக்கிறேன்”


“அப்போ இங்கே தான் இருக்கப் போறியாப்பா”



“இல்லை படத்தை புரோமோஷன் பண்ணனும் அதனால நிறைய இடங்களுக்கு போக வேண்டி இருக்கு நாளைக்கு நான் போய்டுவேன்” என்றான் பல்லைக் கடித்துக் கொண்டே….



தனலட்சுமியோ சைத்ரனின் அப்பாவை ஒரு பார்வை பார்த்து விட்டு “சைத்ரா நான் உனக்கு ஒரு பொண்ணு பார்த்து இருக்கேன்ல இப்போக் கூட உன் படத்துல நடிச்சு இருக்கால்ல இந்திரா படம் ரிலீஸ் ஆனதும் அவளோட கல்யாணம் பிக்ஸ் பண்ணிடவா?” என்று தந்திரமாகக் கேட்டார்.



மகனுக்கு திருமணம் என்றதும் நிமிர்ந்து பார்த்த சைத்ரனின் அப்பா தனலட்சுமியைப் பார்த்து சிரித்தார்.உடனே சைத்ரன் “எனக்கு இப்போ கல்யாணம் செய்துக்கொள்ற எண்ணம் இல்லை” என்றான்.



உடனே சைத்ரனின் அப்பா “சைத்ரன் அம்மாவும் இரண்டு வருஷமா உன்னை கல்யாணம் பண்ணச் சொல்லி கெஞ்சிறாங்க நீ என்னன்னா மதிக்கவே மாட்டேங்கிற இந்த முறை எந்தக் காரணமும் சொல்லாமல் கல்யாணம் பண்ற வழியைப் பாரு” என்றார்.



இங்கே நடக்கும் உரையாடல்களை எல்லாம் அருகில் அமர்ந்து அவனுடைய தங்கை பார்த்துக் கொண்டிருந்தவள் சைத்ரனை பாவமாகப் பார்த்தாள்.எப்போது சைத்ரன் வீட்டிற்கு வந்தாலும் தனது அம்மா ஏதாவது ஒன்றை பற்றி பேசி அண்ணனுக்கும் அப்பாவிற்கும் சண்டைப் போட வைப்பதே வேலையாக வைத்திருப்பார்.அதே போல் இன்றும் ஆரம்பித்ததை எண்ணி அவளும் கவலைக் கொண்டாள்.


சைத்ரன் அமைதியாக இருந்தான்.

அவன் அப்பாவோ “நான் பேசிட்டே இருக்கேன் நீ என்ன என்னையும் மதிக்க மாட்டியோ? என்ன இருந்தாலும் உனக்கு அவ புத்தி தானே வரும் அந்த விளங்காமல் போன பத்மா மாதிரியே இரு” என்று அவனுடைய அம்மாவைப் பற்றி கேவலமாகப் பேசினார்.



அதைக்கேட்டு பொறுக்க முடியாதவன் சாப்பாடு மேசையிலிருந்து எழுந்தவன் “யாரைப் பத்தி தப்பா பேசுறீங்க? நீங்க பண்ண தப்புக்கு எல்லாம் காரணம் எங்க அம்மாவா கிடைச்சாங்க வெளிநாட்டுக்கு வேலைக்கு போறேன்னு இதோ இவங்களை கல்யாணம் பண்ணி குழந்தையோட வந்தீங்க அன்னைக்கு என் அம்மா துவண்டு உட்கார்ந்தவங்க தான் கடைசில கவலைப்பட்டே செத்து போயிட்டாங்க இதோ இவள் உன் தங்கச்சி பத்திமா பார்த்துக்கோன்னு அம்மா சொன்னதுனாலத் தான் நான் இங்கே இருந்தேன் இல்லைன்னா நான் எப்பவோ வெளியே போய் இருப்பேன்” என்றான் கண்ணீரோடு….



அவரோ அதை எல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் “என்னோட தேவை இப்போ உனக்கு இல்லை நீ பெரிய நடிகன் ஆயிட்டேன்னு திமிருல பேசுறியா?’’ என்றதும்



“நான் உங்க பணத்துல படிக்கவோ இல்லை இந்த நடிகன்னு என்னோட அடையாளத்தை பெற முயற்சிக்கலை பாட்டி எனக்காக வைச்ச பணத்துல தான் நான் படிச்சேன் என் திறமையாலத் தான் நடிகனானேன்.நான் வெளியே தெரிய ஆரம்பித்த பிறகு தான் உங்க மகன்னு தெரிய வந்தது.அதைப் போல நான் கூடிய சீக்கிரம் கல்யாணம் பண்ணப் போறேன் இதோ இவங்க சொன்ன பொண்ணை இல்லை என் மனசுக்கு பிடித்தவளை” என்றான்.



உடனே இது தான் சரியான நேரம் என்று விளங்கிய தனலட்சுமி “இதோ அழகே இல்லாத டச்அப் பொண்ணு இவளையா கல்யாணம் பண்ணப்போற” என்று அவனும் நிரல்யாவும் ஒன்றாக அந்தமானில் இருந்த புகைப்படத்தைக் காட்டினார்.


அதைப் பார்த்து கோபமுற்ற அவனின் அப்பா “என்ன கண்றாவி இது? உனக்கும் அவளுக்கும் ஏணி வைச்சாலும் எட்டாது இந்தப் பொண்ணைப் போய் பிடிச்சு இருக்குன்னு சொல்ற? எவ்வளவு தைரியம் உனக்கு? என் ஸ்டேட்டஸ்க்கு இப்படி எல்லாம் செய்தே அவ்வளவுதான்” என்று மிரட்டினார்.



அவனோ அதை எல்லாம் பெரிதாக எண்ணாமல் “என்ன இப்போ என்னை வீட்டை விட்டு வெளியே போகச் சொல்லுவீங்க அதானே நானே போயிடுறேன் இனிமேல் உங்களுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என் அம்மாக்கும் எனக்கும் பிடிச்ச தன்வியைத் தான் நான் கல்யாணம் பண்ணுவேன் உங்களை மாதிரி ஏமாத்துற ஆள் நான் கிடையாது” என்றான்.



நடப்பதை எல்லாம் பாரத்த அவனின் தங்கை “அண்ணா ஏன் இப்படி யாருமே வேணாம்னு போறே?” என்று அழுதாள்.



தனலட்சுமி அவன் மீது பாசமாக இருக்கா விட்டாலும் அவரின் மகள் சைத்ரனின் மீது அன்பாக இருந்தாள்.அவள் குழந்தையாக இந்த வீட்டில் வந்ததிலிருந்து பத்மாவும் சைத்ரனும் பாசத்தை காட்டினார்கள்.ஆனால் பத்மா தன் வாழ்வைப் பற்றி கவலைப்பட்டு இவளுக்கு ஐந்து வயதாக இருக்கும் போது இறந்துப் போனார்.சைத்ரன் அப்பொழுது பதின்மவயதில் இருந்ததால் தனலட்சுமியை எப்படியோ சமாளித்து விட்டு இப்போது முன்னேறி இருக்கிறான்.



தங்கையின் கன்னத்தைப் பற்றிக் கொண்டவன் “நீ எப்போ பார்க்கனும்னு ஆசைப்பட்டாலும் சென்னைக்கு என்னோட வீட்டுக்கு வாம்மா இல்லைன்னா இங்கே வெளியே எங்கேயாவது நாம சந்திக்கலாம்” என்றான்.



தனலட்சுமி பொறுமையாக…. “சைத்ரன் இப்போ காதல் உன் கண்ணை மறைக்குது கூடிய சீக்கிரம் எது நிதர்சனமோ அப்போ எங்களை புரிஞ்சு நீ வருவே” என்றார் விஷமமாய்….



அவனோ மேலும் தேவையில்லாமல் பேசுவதை விட அங்கிருந்து செல்வதே நல்லது என்று வீட்டை விட்டு வெளியே சென்றான்.மனம் முழுவதும் ஏனோ ரணமாக இருக்க விமானம் ஏறுவதற்கு முன்பு நிரல்யாவிற்கு “உன்னை நேர்ல சந்திக்கனும் தன்வி எங்கே இருக்கே? உன் வீட்டுக்கு வரேன்” என்று குறுஞ்செய்தி அனுப்பினான்.



அவளும் அவன் அனுப்பிய குறுஞ்செய்தியைப் பார்த்தாள்.இன்று அஸ்வதிக்கு வேலைநேர மாற்றமாக இரவு பதினோறு மணிவரைக்கும் வேலை இருப்பதாகச் சொல்லி சென்றாள்.இப்பொழுது நேரம் மாலை நேரத்தை நெருங்குவதால் சைத்ரன் கேட்டதற்கு மறுப்பு சொல்லாமல் சரியென்று மட்டும் பதில் அனுப்பினாள்.



விமானப் பயணத்தை முடித்து விட்டு மணியிடமிருந்து தனது காரை வாங்கிக் கொண்டு நிரல்யாவின் இல்லத்திற்குச் சென்றான்.அங்கே அவனுக்காக காத்திருந்தவள் கதவை தட்டும் சத்தம் கேட்டு திறந்தாள்.


முகத்தை எல்லாம் மூடி தலையில் தொப்பி அணிந்து வேறு ஒருவனாக வந்து நிற்கும் தன்னவனை கண்டுக் கொண்டவள் உள்ளே அழைத்தாள்.



அவன் தன் உடைமைகளை எல்லாம் எடுத்து அங்கிருந்த மேசையில் வைத்தவன் சோர்ந்துப் போய் இருக்கையில் சாய்ந்தான்.



அவனின் சோர்வைக் கண்டவள் யோசனையோடு தன்னவனின் கரங்களை தன் கரங்களோடு கோர்த்துக் கொண்டவள் “என்னாச்சு ஆதித் என் முகமே சரியில்லை ஏன் ரொம்ப டயர்டா இருக்கீங்க” என்றாள்.



அவனிடம் பதிலில்லை.ஆனால் கண்கள் எல்லாம் சிவந்துப் போய் இருந்தது.பார்வையை எங்கோ செலுத்திக் கொண்டிருந்தான்.

நிரல்யா அதற்கு மேல் கேள்வி கேட்க விரும்பாமல் அமைதியாக இருந்தாள்.



அவள் அமைதியாக இருப்பதைப் பார்த்து “அஸ்வதி எப்போ வீட்டுக்கு வருவாள்?”



“இன்னைக்கு அவளுக்கு நைட் ஷிப்ட் அதனால வர்ற லேட்டாகும்” என்றாள்.



அவளைப் பார்த்தவன் “உன் மடி மேல கொஞ்ச நேரம் படுத்துக்கவா?” என்று அவளிடம் அனுமதி கேட்டான்.



நிரல்யா சம்மதம் சொல்லவும் அவளின் கரங்களைப் பிடித்துக் கொண்டே மடியின் மேல் தன் தலையை வைத்து படுத்தவன் “நிரல்யா நீ என்னோட அம்மா மாதிரி தெரியுமா? ஏன்னா எங்க அம்மாவும் என்கிட்ட எதாவது ஒரு கேள்வி கேட்டு நான் பதில் சொல்லலைன்னா அமைதியா இருப்பாங்க நானா சொல்ற வரைக்கும் வெயிட் பண்ணுவாங்க அதே குணம் தான் உனக்கும் நீயும் எங்க அம்மாகிட்ட வளர்ந்து இருக்கல்ல அதான் அவங்க பழக்கமும் உன்கிட்ட இருக்கு” என்று புன்னகைத்துக் கொண்டே சொன்னான்.



அவளோ அவன் சொன்ன விஷயங்களுக்கு எல்லாம் “ம்ம்…” என்று பதிலளித்தவாறே கேசத்தை வருடிக் கொண்டிருந்தாள்.


“தன்வி”


“ம்ம்…”


“இன்னைக்கு நான் எங்கே போறேன்னு உங்கிட்ட சொல்லாமல் போயிட்டேன் சாரி” என்றான்.



அதற்கும் அவள் “ம்ம்…” என்று பதிலளித்தாள்.அவனோ தன் பேச்சை தொடர்ந்தான்.


“இன்னைக்கு நான் எங்க வீட்டுக்கு போயிருந்தேன்” என்று தன் வாழ்க்கையைப் பற்றி எல்லாவற்றையும் அவளிடம் பகிர்ந்துக் கொண்டான்.



கடைசியாக அவன் சண்டைப் போட்டதையும் சொன்னான்.எல்லாவற்றையும் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தாள்.எதற்கும் அவள் பதில் சொல்லவில்லை.கடைசியாக நிரல்யாவிடம் “என்ன தன்வி நான் எல்லாத்தையும் உங்கிட்ட சொல்லிட்டேன் ஏன் எதுவும் பேச மாட்டேங்கிற?” என்று எழுந்து அவள் முகம் பார்க்க அமர்ந்தான்.


இப்போது அவளின் முகம் கவலையாக மாறிப் போய் இருந்தது.மெதுவாக அவனிடம் “ஆதித் நான் உங்ககிட்ட ஒன்னு சொல்லவா?”



“சொல்லு”



“உங்க அப்பா சொன்னது சரி தானே நான் உங்களுக்கு எந்த விதத்திலேயும் சரியான ஒரு ஜோடியா நான் இருப்பேன்னு எனக்குத் தோணலை ஏன்னா அழகும் அந்தஸ்தும் இங்கே ரொம்ப முக்கியம் ஆதித் லவ் பண்ணும் போது எல்லாம் சரியா நல்லா இருக்கும் ஆனால் கல்யாணம்னு வந்தால் நான் உங்ககூட எல்லா இடத்திலேயும் இருக்கனும் அதோடு உங்க வாழ்க்கை இங்கே எல்லோருக்கும் தெரியனும் அதனால நிறைய விமர்சனங்களை கடக்க வேண்டி வரும் அப்போ இதெல்லாம் ஒரு வாழ்க்கையானு நீங்க யோசிச்சீங்கன்னா அங்கேயே நம்ம வாழ்க்கை தொலைஞ்சு போயிடும் ஆதித்” என்றாள்.



நிரல்யா சொன்ன பதிலில் ஆடிப்போனவன் “என்ன தன்வி என்னை கழற்றி விடலாம்னு முடிவு பண்ணிட்டியா? அப்படி எல்லாம் நினைச்சே அவ்வளவுதான் என்னை விட்டு போய்டாதே! என் அம்மாக்கு அப்புறம் நான் நம்பிக்கை வைக்கிற ஒரே பர்சன்னா அது நீ மட்டும் தான் தன்வி ப்ளீஸ் இந்த மாதிரி யார் என்னச் சொன்னாலும் அதை எல்லாம் கேட்டு நீ கன்பியூஸ் ஆகக் கூடாதுன்னு தான் நான் உன்கிட்ட எதையும் மறைக்காமல் என் லைவ்ல நடந்த எல்லாத்தையும் சொன்னேன் எப்பவும் நீ தான் எனக்கு வேணும்” என்று அவளை தன் நெஞ்சோடு இறுக அணைத்துக் கொண்டான் சைத்ரன்.


சைத்ரனின் மனதிலுள்ளதை வெளிப்படையாகச் சொல்லி விட்டான்.ஆனால் நிரல்யாவிற்குத் தான் பயமாக இருந்தது.இதற்கு பிறகு என்ன பிரச்சினை எல்லாம் வருமோ? என்று யோசனையில் இருந்தவள் அவனிடம் இருந்து விலகி நேருக்கு நேராக பார்த்தவள் “ஆதித் நான் என்ன சொல்ல வரேன்னா” என்று அவள் பேசுவதற்கு முன் தன்னவளின் இதழ்களை தன் உதடுகளால் நிரப்பியவன் அழுந்த ஒரு முத்தத்தைப் பதித்தான்.



இந்த திடீர் முத்தத்தால் பதிலேதும் பேசாமல் தவிக்க அவனோ அவளிடம் ஆறுதல் தேடிக் கொண்டிருந்தான்.சிறிது இடைவேளையில் அவளை தன்னிடமிருந்து விலக்கியவன் நிரல்யாவின் முகத்தை தன் இரு கரங்களால் ஏந்தியபடி…. “தன்வி இனிமேல் நம்ம ரெண்டு பேரும் வார்த்தைக்கு கூட பிரிவுன்னு ஒன்னு வேண்டாம் ப்ளீஸ் நீ முதல்ல என்னை நம்பு உனக்காக நான் இருக்கேன் உன்னை இப்படியே என்கூடவே பார்த்துட்டு இருக்கனும் தான் என் ஆசை.சின்ன வயசில் வந்த என் தாயோட பிரிவும் தந்தையோட அக்கறையின்மையும் எனக்கு போதும்னு நினைக்கிறேன் இனிமேலாவது எனக்கான ஒரு குடும்பமும் வாழ்க்கையும் அழகிய தருணங்களையும் நீ கொடு சின்னச் சின்ன நினைவும் சிறு சண்டையும் உனக்கு நீ எனக்கு நான் அப்படின்னு தன்வி அது போதும் மற்ற விஷயங்களை எல்லாத்தையும் விட்டுவிடு” என்று அவளின் பதிலுக்காக அவன் காத்திருந்தான்.



அவள் இத்தனை நாட்களாக காத்திருந்த அந்த உண்மையான காதலை அவன் திகட்டாமல் தருவேன் என்று சொல்லி அவளின் சம்மதத்திற்காக காத்திருக்கும் தன் அன்பாளனை நிராகரிப்பதற்கு அவள் என்ன முட்டாளா? விழிகளாலே சம்மதம் தெரிவிக்க தன் புன்னகையை பதிலளித்தவன் தன்னவளின் நெற்றியில் நிறைவாய் தன் அன்பு முத்தத்தை பதித்தான்.


இது போதும் எனக்கு இது போதுமே…


வேறென்ன வேணும் நீ போதுமே…


பௌர்ணமி இரவு பனி விழும் காடு


ஒத்தையடிப் பாதை உன் கூட பொடி நடை…

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவிடுங்கள்

https://www.narumugainovels.com/threads/10830/post-24708
 

NNK-74

Member

கண்ணுக்குள்ளே கரைந்த நிலவு அத்தியாயம் -15


சைத்ரனின் நெஞ்சில் ஆறுதலாய் சாய்ந்து இருந்தவள் “காலைல இருந்து சாப்பிடலையா?” என்றுக் கேட்டாள்.



அவனோ ஆமாம் என்று தலையசைக்க “ஒரு பத்து நிமிஷம் இருங்க உங்களுக்கு சாப்பிட எதாவது செஞ்சு தரேன்” என்று அவள் எழுந்துக் கொள்ளும் பொழுது கைப்பிடித்து தடுத்தவன் “ஒரு நிமிஷம் தன்வி மனசு நிறைவாக இருக்கு பசியில்லை” என்றான்.



“என்ன ஆதித் நீங்க இப்படி பதில் சொல்லுறீங்க? அதெல்லாம் முடியாது சாப்பிட்டே ஆகனும்” என்றாள்.



அவனோ சிரித்துக் கொண்டே “நீ சாப்பிட்டியா?”


அவளோ பதில் சொல்லாமல் இருந்தாள்.“நான் பார்க்க வரேன்னு சொன்னதும் வேகமாக வேலையை முடிச்சு வீட்டுக்கு வந்துருப்பே அதானே” என்றதும் இவளோ ஆமாம் என்பது போல் தலையசைத்தாள்.



“இன்னைக்கு நான் உனக்கு சமைத்து தரேன் சாப்பிட்டு பாரு” என்றான்.


அவளோ ஆச்சரியமாய் “என்ன உங்களுக்கு சமைக்குத் தெரியுமா?பொய் சொல்லாதீங்க ஆதித் உங்க பிஸி ஷெடியூல்ல எங்கே நேரம் இருக்கு” என்று கிண்டலாகச் சிரித்தாள்.


அவனோ “என்னை ரொம்ப சாதாரணமா நினைச்சுட்டேல்ல தன்வி அதனால இன்னைக்கு என்னோட சமையல் தான்” என்று இவன் சமையலறைக்குள் நுழைந்தான்.


அவளோ அவன் பின்னாலேயே சென்றாள்.குளிர்சாதனப்பெட்டியில இருக்கும் காய்கறிகளை எடுத்து அவன் நறுக்கச் செல்ல நிரல்யாவோ “ஆதித் கையில எங்கேயாவது நறுக்கிக்க போறீங்க” என்று இவள் அதை வாங்க போக அவனோ அவளைப் பிடித்து சமையல் மேடையில் ஓரமாய் இருந்த காலி இடத்தில் அவளைத் தூக்கி உட்கார வைத்தவன் “இன்னைக்கு அமைதியா இங்கே உட்கார்ந்து வேடிக்கை மட்டும் தான் பார்க்கனும் சரியா?” என்று அன்பாக கட்டளையிட்டவன் தன் அடுத்தடுத்த வேலைகளைத் தொடர்ந்து செய்யத் துவங்கினான்.



நிரல்யாவோ கன்னத்தில் கை வைத்துக் கொண்டு அவனையேப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவனோ ஒவ்வொரு முறையும் அவளைப் பார்த்து புன்னகைத்துக் கொண்டே சமைத்துக் கொண்டிருந்தான்.



மனமெங்கும் மாய ஊஞ்சல்


உனதன்பில் ஆட ஆட


மழை பொங்கும் தூய மேகம்


உயிர் உள்ளே சாரல் போட


கோடையும் வாடையும்


பாத்திடா தாவரம்


வரம் நீ தந்தாய்


வான் பூக்குதே…



காய்கறி சாலட்டும்,பன்னீர் பரோட்டா, காய்கறி குருமா என்று மூன்று வகையான உணவுகளை சமைத்து அதை தட்டில் வைத்துக் கொண்டிருந்தான்.



கண்களை மூடி வாசனையை நுகர்ந்தபடியே “ஆதித் வாவ் இவ்வளவு வாசனையா சமைச்சு இருக்கீங்க சீக்கிரம் கொண்டு வாங்க” என்று பரபரத்தாள்.



அவனோ பொறுமையாக அவளருகில் கொண்டு வந்து திரும்ப தன் பக்கம் வைத்தவன் “எனக்கு ரொம்ப பசிக்குது நான் முதல்ல சாப்பிட போறேன்” என்றதும் அவளோ “நீங்க செய்றது ரொம்ப அநியாயம் தெரியுமா? எனக்காக சமைக்கிறேன்னு சொல்லிட்டு இப்போ நீங்க சாப்பிட போறேன்னு சொல்லுறீங்க” என்று பொய்யாக கோபித்துக் கொண்டாள்.




அவனோ சிரித்துக் கொண்டே சாப்பாட்டுத் தட்டை அருகில் கொண்டு வந்து அவனே அவளுக்கு ஊட்டி விட்டான்.அதை ரசித்து ருசித்து சாப்பிட்டவள் “ம்ம்… செம டேஸ்ட் சூப்பர் செமையா இருக்கு” என்று அவனைப் பாராட்டியவள் ஒரு கவளம் உணவை அவனுக்கும் எடுத்து ஊட்டி விட்டாள்.



இருவரும் மாறி மாறி தங்களுக்குள் ஊட்டிக் கொண்டிருக்கும் போதே சைத்ரன் நிரல்யாவிடம் “நான் செய்த சமையல் பிடிச்சு இருக்கா?”



“ம்ம்… ரொம்ப பிடிச்சு இருக்கு”



“அப்படியா! அப்போ எனக்கு ஒரு கிப்ட் கொடு” என்றான் விஷமமாய்…



அவளோ யோசனையோடு “கிப்ட்டா இப்போ என்கிட்ட கொடுக்க ஒன்னுமில்லையே நாளைக்கு நான் வாங்கித் தரேன்” என்றாள்.உடனே அவனோ மறுப்பாய் தலையசைத்து “எனக்கு இப்பவே வேணும்” என்று நெருங்கி வந்தான்.



அவளோ “இப்பவே கிப்ட் கொடுக்கனுமா?” என்று அவனைப் பார்த்தாள்.அவனின் பார்வை அவளின் இதழ்களில் நிலைத்து இருந்தது.உடனே நிரலோ சுதாரித்துக் கொண்டு “கிப்ட் தானே இதோ” என்று சைத்ரனின் கையைப் பிடித்து முத்தமிட்டாள்.



அவனோ கையை உதறி விட்டு “ம்ஹீம்… இங்கேப் போய் யார் கேட்டா?” என்று அவளின் இதழ்களின் அருகே நெருங்கவும் இவள் பயத்தில் கண்களை மூட அவன் தன் உதடுகளால் முத்தம் ஒன்றை வைத்தான்.



அவர்கள் இருவரும் அன்பு முத்தத்தில் திளைத்துக் கொண்டிருக்கும் பொழுது எப்பொழுதும் போல் கதவை திறந்து உள்ளே வந்த அஸ்வதி நேராக சமையலறைக்குள் வந்தாள்.அங்கே இருவரும் இருந்த நிலைமையை ஏதேச்சையாக கண்டவள் தன் கையால் கண்களை மூடி “ஆஆ…. ஐயோ… நான் பார்த்துட்டேன் பார்த்துட்டேனே” என்று கத்த இருவரும் பதறியபடி விலகி நின்றார்கள்.



அங்கே அஸ்வதியைப் பார்க்கவும் இருவரும் அதிர்ச்சியில் நின்றார்கள்.அஸ்வதி நேராக வரவேற்பறையில் போய் உட்காரவும் பின்னால் சைத்ரனும் நிரல்யாவும் தலையை குனிந்துக் கொண்டே வந்தார்கள்.



இருவரும் நின்றுக் கொண்டிருக்க… அஸ்வதி “உட்காருங்க” என்றதும் நிரல்யா அமரச் செல்ல “ஏய் உன்னை உட்காரச் சொல்லவே இல்லை நான் சைத்ரன் சாரைத் தான் உட்காரச் சொன்னான். சதிகாரி என்னை யாரோன்னு நினைச்சு எல்லாத்தையும் மறைச்சுட்டேல்ல” என்று முகத்தை திருப்பிக் கொண்டாள்.



நிரல் “அஸ்வதி என்ன நடந்துச்சுன்னா”என்று அவள் பேச வருவதற்குள் அஸ்வதி “இப்போ நீ அமைதியா இருக்கலைன்னா நான் இங்கிருந்து போய்டுவேன்” என்றதும் வாயை மூடிக் கொண்டாள் நிரல்யா.



“சைத்ரன் சார் சொல்லுங்க எத்தனை நாளா இந்த லவ்ஸ் கதை ஓடுது” என்றதும் அவன் நிரல்யாவைப் பார்த்தான்.



உடனே அஸ்வதி “அங்கே என்ன பார்வை இங்கே பதில் சொல்லுங்க” என்றதும் அவனோ தயங்கியவாறே “அந்தமான்க்கு போய் இருந்தோம்ல அப்பவே ஆரம்பிடுச்சு” என்றதும் நிரல்யாவை கோபமாக பார்த்தாள்.



“அஸ்வதி நான் தான் தன்விகிட்ட யார்கிட்டயும் சொல்ல வேண்டாம்னு சொன்னேன்” என்று தயங்கியபடி சொன்னான்.



அஸ்வதி சிரித்துக் கொண்டே “சார் முதல்ல ஹெல்ப் கேட்டது யார்க்கிட்டன்னு மறந்துட்டீங்கன்னு நினைக்கிறேன்” என்றதும் அவனோ அசடு வழிந்தது போல் சிரித்தான்.



நிரல்யா அவனைப் பார்த்து முறைத்துக் கொண்டு ‘எல்லாம் கூட்டுக் களவாணிங்க தானா?’ என்ற ரேஞ்சில் சைத்ரனைப் பார்த்தாள்.



அஸ்வதி நிரல்யாவைப் பார்க்காமல் “லவ் பண்ணுறது தான் பண்ணுறீங்க இனிமேல் கதவை உள்ளே சாதிட்டு இருங்க,இல்லைன்னா தேவையில்லாத டிஸ்டர்பன்ஸ் இருக்காதுல்ல அதுக்கு தான் சொன்னேன்” என்று தன்னை குறித்துச் சொல்லவும் நிரல்யா நேராக போய் அஸ்வதியைக் அணைத்துக் கொண்டாள்.



“ஹேய் சாரிடி உங்கிட்ட சொல்ல ஒரே கூச்சமா இருந்தது அதான் சொல்லலை லவ் பண்றோம்னு தெரிந்தால் என்னை நீ கிண்டல் பண்ணுவே அதான் மற்றபடி உன்னை ஒதுக்கிட்ட மாதிரி பேசாதே அஸ்வதி எனக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கு” என்றாள்.



அணைந்திருந்த தோழியின் முதுகில் வருடிவிட்டு “ஹேய் ஏன் இப்படி சீரியஸா பேசுற நான் சும்மா உன்னை கலாய்த்தேன்” என்றதும் தோழிகள் இருவரின் முகத்திலும் புன்னகை.



நடப்பதை எல்லாம் வேடிக்கைப் பார்த்தவன் புன்னகைத்தபடி “சரி இதுக்கு மேல நான் இங்கே இருந்தால் சரியாக இருக்காது நான் கிளம்புறேன் அப்புறம் அஸ்வதி உனக்கும் சேர்த்து தான் சமைச்சு இருக்கேன் சாப்பிடு” என்று அவன் எழுந்துக் கொண்டான்.



அஸ்வதி உடனே நிரல்யாவிடம் ‘'விஷயம் இந்தளவுக்கு போயிடுச்சா அப்போ சைத்ரன் சார் நீங்க சமைச்சுக் கொடுத்திட்டே இருங்க மேடம் சாப்பிட்டுட்டே இருப்பாங்க” என்றதும்


சைத்ரனோ “அதனால என்ன இருக்கு தன்வி என் வீட்டுக்கு வந்துட்டா அவளை நானே பார்த்துக்குவேன்” என்றான் காதலோடு….



அவன் சொன்னதைக் கேட்டு நிரலை விட அஸ்வதி மிகுந்த மகிழ்ச்சிக் கொண்டாள்.


நிரல்யாவிடம் அஸ்வதி “நிரல் சார் கூட கார் வரைக்கும் போய் வழியனுப்பிட்டு வா” என்று இருவரும் பேசுவதற்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தாள். நிரல்யா மறுத்தும் சைத்ரனோடு அனுப்பி வைத்தாள் அஸ்வதி.



இவர்கள் இருக்கும் அடுக்குமாடியிலிருந்து கொஞ்சம் தள்ளி ஒதுக்குபுறமாக தன்னுடைய வண்டியை நிறுத்தி இருந்தான்.அங்கே செல்வதற்காக இருவரும் மெதுவாக கரங்களைக் கோர்த்தபடி பேசியபடி நடந்தனர்.சைத்ரன் அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக முகத்தை முகமூடியால் மறைத்தபடி வந்தான்.



அப்பொழுது இவர்களுக்கு எதிர்புறத்தில் நிரல்யாவின் தம்பி விக்ரம் நடந்து வந்துக் கொண்டிருந்தான்.அவனைப் பார்த்ததும் அதிர்ச்சியடைந்தவள் 'இப்போ எதுக்காக இவன் இங்கே வர்றான்னு தெரியலையே என்னை ஆதித்தோட சேர்த்து பார்த்தான் எல்லாம் முடிஞ்சது’என்று பதறியவள் சைத்ரனின் கையைப் பிடித்து வேகமாக இழுத்தவள் “ஆதித் கொஞ்சம் குனிந்து இந்த கார்ப்பக்கமாக வாங்க”என்று அவனை எச்சரித்தாள்.



அவனோ புரியாமல் “என்னாச்சு தன்வி? ஏன் திடீர்னு இப்படி பண்ணச் சொல்ற?”



அவளோ மெதுவாக “ஆதித் அங்கே பாருங்க என் தம்பி வர்றான் அவன் மட்டும் இப்போ என்னை பார்த்தால் எல்லாம் முடிஞ்சுடும்” என்று பயந்தாள்.



“ஹேய் தன்வி ஏன் இப்படி பயப்படுற? என்னைக்கு இருந்தாலும் நம்ம காதல் பற்றி எல்லோருக்கும் தெரியத் தானே போகுது அப்புறம் ஏன் பயப்படுறே?”



“இல்லை ஆதித் இப்போ வேண்டாம் நான் நேரம் பார்த்து அம்மாகிட்ட பேசுறேன் இவனுக்கு மட்டும் தெரிஞ்சால் அவ்வளவு தான் எனக்கு மட்டும் அப்படி அட்வைஸ் பண்ணி சாவடிச்சே இப்போ நீ லவ் பண்ணா மட்டும் நியாயமான்னு என்னை கேள்வி கேட்டே சாவடிச்சுடுவான்” என்று சொல்லி ஓரமாக குனிந்துக் கொண்டே அவனைப் பார்த்தாள்.விக்ரமோ அவர்களை கடந்துச் சென்றான்.



அவன் கொஞ்சம் தள்ளிச் செல்லவும் நிமிர்ந்து சீராக மூச்சு விட்டவள் “ஷ்ப்பா நல்ல வேளை தப்பிச்சேன் விக்ரம் போய்ட்டான்” என்று இருவரும் கொஞ்சம் தள்ளியிருந்த சைத்ரனின் கார் பக்கம் வந்தனர்.


சைத்ரன் திரும்பி அவளை அணைத்துக் கொள்ள வரும் பொழுது அவர்களுக்கு பின்னால் கைகள் இரண்டையும் மார்பின் குறுக்கே கட்டியபடி அவர்களை முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தான் ஒருவன்.



சைத்ரன் அப்படியே நிற்பதைப் பார்த்து நிரல்யா திரும்பி பார்க்க அங்கே அவளுடைய உடன் பிறப்பு நின்றுக் கொண்டிருந்தான்.

அவனைப் பார்த்து இவள் அப்படியே அதிர்ச்சியில் நின்றாள்.



மெதுவாக முன்னே வந்த விக்ரம் “ஹோய் யார் நீங்க? என் அக்கா மேல கை வைக்குறீங்க” என்று மிரட்டியபடி சைத்ரன் அருகில் வந்தான்.



உடனே நிலைமையைப் புரிந்த நிரல்யா “விக்ரம் அவரு என்னோட ப்ரெண்ட்” என்றதும் அவனோ “பார்த்தா அப்படி ஒன்னும் தெரியலையே ரொம்ப உரிமையா பழகுறப்போல தெரியுது சார் பெரிய ஆளு போல நல்ல காஸ்ட்லியான கார் வைச்சு இருக்காங்க” என்று இன்னும் அவனருகில் வந்தவன் “ஏன் முகத்தை மூடி மறைக்கிறீங்க? யார்னு உங்க முகத்தை காட்டுங்க” என்றதும் சைத்ரன் தன் முகமூடியை விலக்கினான்.



எல்லோருக்கும் தெரிந்த முகமான வளரும் நடிகனான ஆதித் சைத்ரன் அங்கே நிற்பதைப் பார்த்து விக்ரம் ஒருநொடி அப்படியே அதிர்ச்சியில் நின்றவன் “சார் சார் நீங்களா? நான் நீங்கன்னு நினைக்கவே இல்லை” என்று தடுமாறினான்.



அவனருகில் மெதுவாக காதோரமாக “விக்ரம் ரொம்ப ஷாக் ஆகாதீங்க நான் உனக்கு மாமா முறை” என்றான் சிரித்துக் கொண்டே…



அவன் சொன்னதைக் கேட்டு நம்ப முடியாமல் ஆச்சரியத்தில் வாயைப் பிளந்தவன் அதிர்ச்சியில் தன் அக்காவைப் பார்த்தான்.அவளோ ஒன்றும் புரியாமல் சைத்ரனிடம் “ஆதித் அவன்கிட்ட என்ன சொன்னீங்க? ஏன் இப்படி நிற்கிறான்?” என்றாள்.



அவனோ புன்னகைத்துக் கொண்டே “உண்மையைச் சொன்னேன்” என்றான்.அதைக் கேட்டு அவளோ இன்னும் கோபமுற்றவாறு “விக்ரம் நீ இவங்க சொன்னதை எல்லாம் காதுல வாங்கிக்காதே! எதுக்கு இந்நேரம் வந்தே? அதைப் பற்றி பேசலாம்” என்றவள் சைத்ரனைப் பார்த்து “சார் நீங்க கிளம்புறீங்களா? உங்க வந்த வேலை முடிஞ்சிடுச்சுன்னு நினைக்கிறேன்” என்றாள் அவனைப் பார்த்து முறைத்துக் கொண்டு….



அதற்கெல்லாம் அசராமல் அவளைப் பார்த்து புன்னகைத்துக் கொண்டே “ஓகே பேபி நாளைக்கு பார்க்கலாம்” என்று கையசைத்தவன் “விக்ரம் கூடிய சீக்கிரம் நாம சந்தித்து பேசலாம்” என்று அவன் தோள்மீது ஆதரவாய் தட்டிச் சென்று காரினுள் ஏறிச் சென்றான்.



இவளோ அவனை மனதினுள் நினைத்து ‘எந்த விஷயத்தைப் பற்றி பேசாதேன்னு சொல்றேனோ அதைப் பற்றி தான் முதல்ல பேசவும் செயலாகவும் பண்றான் இவனை என்னைத் தான் செய்றதோ? தெரியலை’ என்று மனதினுள் புலம்பிக் கொண்டே தன் வீட்டை நோக்கி நடந்தாள்.



விக்ரமோ நடந்ததெல்லாம் கனவா? அல்லது நினைவா? என்று தன் கண்களை நம்ப முடியாமல் ஆச்சரியத்தோடு தன் அக்காவின் பின்னால் நடந்தான்.



நிரல்யா அங்கிருந்த இருக்கையில் பொத்தென்று விழுந்து கண்களை மூடி அமர்ந்திருந்தாள்.அவளுக்கு எதிர்புறத்தில் இருந்த இருக்கையில் விக்ரம் அமர்ந்திருந்தான்.சமையலறையில் இருந்து வெளியே வந்த அஸ்வதி கையில் தண்ணீர் டம்பளரோடு வந்தவள் அங்கே வந்திருந்த விக்ரமைப் பார்த்து “விக்ரம் எப்போ வந்தே?”

அவனிடம் பதிலில்லை.



நிரல்யா முகம் முழுவதும் இறுக்கமாக இருந்தது.இவனோ ஏதோ உலகத்தில் பார்க்காத ஒரு பொருளை பார்த்த அதிர்ச்சியில் இருந்தான்.



அஸ்வதி “நிரல்யா விக்ரம் எப்போ வந்தான்?” என்று ஏதோ மறைமுகமாக கேட்கிறேன் என்று சைகையால் கேட்டாள்.



உடனே விக்ரம் “அக்கா உங்களுக்கு நிரல்யா அக்காவைப் பத்தி தெரியுமா?” என்றதும் இவளோ என்ன என்பது போல் சைகையால் கேட்டாள்.அவனோ ஏதோ இரகசியம் சொல்வது போல் பெரிய ஸ்டார் இருக்காருல்ல சைத்ரன் சார் அவரை அக்கா லவ் பண்ணுறாங்க” என்றான்.



குடித்துக் கொண்டிருந்த தண்ணீரை முன்னால் கொப்பளித்து விட்டாள்.அவன் சொன்ன விஷயத்தை கேட்டதும் நிரல்யாவைப் பார்க்க அவளோ இது தான் விஷயம் என்ற நிலைமையில் அஸ்வதியைப் பார்த்தாள்.



விக்ரமோ “அக்கா நீங்க எப்படி ஷாக் ஆனீங்க அதே நிலைமையில் தான் நானும் இருக்கேன் என்னால இதை நம்பவே முடியலை நிரல்யா அக்கா எப்படி இப்படி இருக்காங்கன்னு என்னால நம்பவே முடியலை நீங்களும் அதே நிலைமையில் தானே இருக்கீங்க” என்று அவன் அப்பாவியாக கேட்க அதுவரை சிரிப்பை அடக்கி வைத்திருந்த அஸ்வதி சிரித்தாள்.



நிரல்யாவிடம் “ஹேய் உன் தம்பிக் கூட உன்னைப் பத்தி நல்லா புரிஞ்சு வைச்சு இருக்கான்டி நீயா இப்படி நடந்துக்கிறேன்னு” என்று சொல்லி சிரித்தாள்.



இருவரின் கிண்டலையும் பொறுத்துக் கொள்ளாதவள் விக்ரமிடம் “இப்போ எதுக்காக இங்கே வந்தே?”



“அக்கா நான் சென்னைக்கு வந்து பதினைந்து நாள் மேல ஆகுது நான் வரும் போது நீ ஊர்ல இல்லை அதான் இன்னைக்கு சீக்கிரமா வேலை முடியவும் பார்க்க வந்தேன்,அதெல்லாம் சரி அக்கா நீ இவரோடத் தான் அந்தமான் போனியா?” என்று தன் அடுத்தக்கட்ட சந்தேகத்தை கேட்டான்.



அவன் அப்படிக் கேட்டதும் நிரல்யாவிற்கு திக்கென்று இருந்தது.உடனே நிலைமையைப் புரிந்த அஸ்வதி “நிரல் வேலை விஷயமா வெளியே போய் இருந்தாள் இதோ அவளோடு நானும் இருக்கேன் பாரு” என்று அந்தமானில் எடுத்த புகைப்படத்தை சிலவற்றைக் காட்டினாள்.



அதை எல்லாம் பார்த்தவன் “அக்கா நீயும் சைத்ரன் சாரும் சந்திக்கக் கூட வாய்ப்பு இல்லையே அப்படி இருக்கும் போது எப்படி உங்ககுள்ளே பழக்கம் வந்துச்சு” என்று அடுத்த சந்தேகத்தைக் கேட்டான்.



நிரல்யா திருதிருவென்று விழிக்க ஆரம்பித்தாள்.சட்டென்று பொய் சொல்ல வராமல் அவள் திணறிக் கொண்டிருக்க அஸ்வதி விக்ரமிடம் “விக்ரம் சீக்கிரம் கிளம்பு லேட் நைட் ஆகுது பக்கத்தில் இருக்கிறவங்க யாராவது நீ இருக்கிறதைப் பார்த்தால் தேவையில்லாத பிரச்சினை வரும் மற்ற விஷயங்கள் எல்லாம் நாளைக்கு பேசலாம் இப்போ கிளம்பு” என்று அவனை கிளப்பி விட்டாள்.



நிரல்யா என்னசெய்வதென்று தெரியாமல் தலையில் கை வைத்து அமர்ந்துக் கொண்டிருந்தாள்.விக்ரம் சென்றதும் நிரல்யாவின் தோள் மீது கைவைத்தவள் “நிரல் கவலைப்படாதே! எல்லாம் நல்ல படியா முடியும்” என்று ஆறுதல் சொன்னாள்.



நிரல்யா அஸ்வதியைப் பார்த்து “நான் என்னச் செய்யப் போறேன்னு எனக்குத் தெரியலை அஸ்வதி ஆதித்தை எப்படி அம்மாகிட்ட நான் பழக்கம்னு சொல்லுவேன் ஆரம்பமே பொய்யாக இருக்கும் போது எந்தளவுக்கு என்னோட ஆசைகள் நிறைவேறப் போகுதுன்னு தெரியலை விக்ரம் எத்தனை கேள்வி கேட்டான் அப்போ அம்மாவைப் பத்தி நினைச்சுப் பாத்தாலே ரொம்ப யோசனையா இருக்கு ஆதித் கல்யாணத்தைப் பற்றி யோசிக்கிறாங்க” என்று அவன் சொன்ன விஷயங்கள் எல்லாவற்றையும் சொன்னாள்.



வீட்டிற்கு மூத்தவளாய் பிறந்த நிரல்யாவிற்கு சகோதரியாகவும்,தோழியாகவும்,யோசனை சொல்பவளாகவும் அஸ்வதி இருக்க அவளிடமே அனைத்தையும் கொட்டித் தீர்த்தாள்.தன் தாய் ஏற்கனவே நிறைய பிரச்சினைகளையும்,

கவலைகளையும் வைத்திருப்பவரிடம் மேற்கொண்டு தன் கவலைகளை கொட்ட மகளாக அவள் தயாராக இல்லை.



ஆறுதலாக தன் தோளின் மீது சாய்த்து வைத்திருந்த அஸ்வதி “நிரல் நான் சொன்னால் ஒன்னு கேட்பியா?”



“ம்ம்… சொல்லு”



“அம்மாகிட்ட எல்லாத்தையும் சொல்லு அம்மா நிச்சயம் உன்னை புரிஞ்சுப்பாங்க ஏன்னா ஏற்கனவே சைத்ரன் சாரைப் பற்றி நான் கேட்டப்போ அவங்க சின்ன வயசுல நடந்ததை எல்லாம் ஒன்னா ஒரே மாதிரி தான் சொன்னாங்க ஆனால் அது செலிபிரிடியா இருக்கிற சைத்ரன் சாருன்னு நான் சொல்லலை நீயும் நேர்ல போய் பேசு எல்லாத்துக்கும் நல்ல முடிவாக கிடைக்கும்” என்று நம்பிக்கை தந்தாள்.



அவள் சொன்னதைக் கேட்டு இவளோ பயத்தில் “அஸ்வதி என்கூட நீயும் வா ரெண்டுபேரும் ஊருக்கு போகலாம்” என்றாள்.



“இல்லை நான் வர மாட்டேன் நீ தனியா போ உன் பிரச்சினையை நீயே சரிபண்ணு நிரல் இத்தனை வருஷம் உன்னை நான் பார்த்துகிட்டேன் இனிமேல் சைத்ரன் சார் பார்த்துப்பாரு ஆனால் உன் மனசுல உள்ளதை எல்லாம் அப்படியே உனக்குள்ளே வைச்சே அழுத்தாதே சரியா அதை எல்லாம் வெளியே தள்ளிடு நிம்மதியா இருப்பே” என்றாள்.



அஸ்வதி தந்த நம்பிக்கையில் அவளும் தன் பெற்றோரைப் பார்க்க ஊருக்கு சென்றாள்.இதற்கு மேலும் உண்மையை மறைக்க அவளுக்கு விருப்பம் இல்லை.சைத்ரனிடம் சொல்லி விட்டு ஊருக்கு சென்றாள்.



ஓட்டு வீடாக இருந்த இல்லம் இப்பொழுது மாடி வீடாக மாறியிருந்தது.தான் அனுப்பிய ஒவ்வொரு ரூபாயையும் அம்மா வீணாக்காமல் சிக்கனமாக மாற்றி இருக்கிறார் என்று இந்த இரண்டு வருடத்தில் வீடு மாறிப்போய் இருப்பதில் விளங்கிக் கொண்டாள்.



தன் பெற்றோரைக் கண்டு நல விசாரிப்புக்கு பின்னே அவளுக்கு பிடித்த உணவுகளை சமைத்து பரிமாறினார் சரஸ்வதி.எல்லாவற்றையும் ஏதோ தயக்கத்தோடு ஏற்றுக் கொண்டாள்.



அவளுடைய தங்கை லட்சுமி வாய் ஓயாமல் பேசிக் கொண்டிருந்தாள்.எல்லாவற்றையும் கேட்டு சிரித்துக் கொண்டிருந்தாலும் மனம் எண்ணவோ சொல்ல வந்த விஷயத்தைப் பற்றியே எண்ணிக் கொண்டிருந்தது.மகளின் மனதில் உள்ளதை முகம் காட்டிக் கொடுக்க அவளின் அப்பாவோ கட்டிலில் படுத்தபடி மெதுவாக “தன்வி ஏன் முகமே சரியில்லை இங்கே வர பிடிக்கலையா என்ன?” என்று பேச்சில் தட்டுத் தடுமாறி ஆற்றாமையோடு கேட்டார்.



அவளோ வேகமாக “ஏன் அப்பா இப்படி பேசுறீங்க உங்க கூட இருக்கிறது எனக்கு சந்தோஷம் தான்” என்றாள் நிறைவாக…



உடனே சரஸ்வதி “அப்போ ஏன் உன் முகத்துல எப்பவும் ஊருக்கு வந்தால் இருக்கிற சந்தோஷமே இல்லாமல் ஏதோ யோசனையில் இருக்கு” என்றார்.



எச்சிலை மெதுவாக விழுங்கியவள் “அம்மா அப்பா உங்ககிட்ட முக்கியமான விஷயத்தைப் பற்றி சொல்லனும்” என்று நிறுத்தினாள்.



இருவரும் அவளையேப் பார்த்தனர்.கொஞ்சம் அமைதி அங்கே நிலவி இருந்தது.


அம்மா “சொல்ல வந்த விஷயத்தை முழுசா சொல்லி முடி நிரல் இப்படி அமைதியா இருந்தால் என்ன அர்த்தம்?” என்று கொஞ்சம் கோபத்தோடு கேட்டார்.


நிரல்யா இதற்கு மேல் மறைத்தால் சரி வராது என்று தான் ஒரு நிறுவனத்தில் வேலை செய்யவில்லை என்றும் சினிமாவில் ஒப்பனை கலைஞராக வேலை பார்ப்பது அங்கே சைத்ரனைக் கண்டது அவனை காதலிப்பது என்று எல்லாவற்றையும் அவர்கள் இருவரிடமும் மறைக்காமல் உண்மையைச் சொன்னாள்.


நிரல்யாவின் தந்தை என்ன சொல்வதென்று தெரியாமல் ஒருபுறமாக சாய்ந்தபடி அமர்ந்திருந்தார்.சரஸ்வதியின் முகத்தைப் பார்த்து நிரல்யாவால் ஒன்னும் கணிக்க முடியவில்லை.


அவர் முகம் எந்த உணர்ச்சியும் காட்டாமல் இருக்க வாய் போசாது விழிகள் முழுவதும் கண்ணீரை நிரப்பியபடி அது தானாக வழிந்தது.தன் அம்மாவை அப்படி பார்க்க நிரல்யாவால் முடியவில்லை.



வேகமாக அம்மாவின் அருகில் போய் நின்றவள் “அம்மா நான் செய்தது தப்புன்னா என்னை திட்டும்மா இல்லைன்னா ரெண்டு அடிகூட அடிச்சிடுங்கம்மா ஆனால் இப்படி எதுவும் சொல்லாமல் அழாதீங்கம்மா எனக்கு கஷ்டமா இருக்கு” என்று அவள் அம்மாவைத் தொடப் போகும் போது விலகி நின்றார் சரஸ்வதி.



அதைப் பார்த்து நிரல்யாவால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

“அம்மா ஏன்ம்மா நான் தொட்டால் உனக்கு பிடிக்காதாம்மா ஏன் இப்படி விலகிப் போறீங்க” என்று அழுதாள்.


சரஸ்வதி அமைதியாக இருந்தார்.தன் தந்தையின் அருகில் போய் அமர்ந்தவள் “ப்பா நீங்களாவது அம்மாகிட்ட பேசச் சொல்லுங்க ஏன் அமைதியாக இருக்காங்கன்னு சொல்லச் சொல்லுங்க” என்றாள்.



நடப்பதை எல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த லட்சுமிக்கு யாருக்காக பரிந்து பேசுவது என்ற நிலைமையில் இருந்தாள்.இத்தனை வருடங்களாக இந்த குடும்பத்திற்காக இருந்த அக்காவின் வாழ்க்கைக்காகவா? அல்லது அக்கா சொன்ன எல்லாவற்றையும் அப்படியே நம்பி ஏமாந்து போன அம்மாவைப் பற்றி நினைப்பதா? என்று அவளும் அழுதாள்.



நேரம் சென்றதே தவிர அங்கிருந்த நிலைமை மாறவில்லை.சரஸ்வதி எழுந்து அடுத்த வேளைக்கு சமைக்க சென்று விட்டார்.அப்பாவும் தன் இயலாமையை நினைத்து வருந்தி அப்படியே தூங்கிப் போனார்.


லட்சுமி அம்மாவிற்கு உதவி செய்ய எழுந்து சென்றாள்.நிரல்யா தனியாக இருந்தாள்.வந்த முதல்நாளே எல்லாம் மாறி விடாது என்று அவளுக்கு அப்பொழுது தான் புரிந்தது.



சைத்ரனுக்கு இருக்கும் நிலைமையை குறுஞ்செய்தி அனுப்பி இருந்தாள்.அவனோ “வெயிட் பண்ணு எல்லாம் மாறும் தன்வி பெத்தவங்க கோபம் சீக்கிரம் மறைஞ்சிடும்” என்று மட்டும் ஆறுதலாக பதில் அனுப்பினான்.



அவன் மேற்கொண்டு அவளை தொந்தரவு செய்யவில்லை.

அவளுடைய குடும்பத்தின் பதிலுக்காக காத்திருந்தான்.இந்த விஷயம் இருவருடைய காதல் மட்டுமல்லாது இத்தனை வருடங்களாக அவள் சொன்ன பொய்யும் அடங்கி இருப்பதால் நிலைமை சரியாக நேரம் ஆகும் என்று புரிந்து இருந்தான்.



அஸ்வதிக்கு சரஸ்வதி அம்மாவின் கோபத்தை பற்றி தெரியும் அதனால் நிரல்யா ஊருக்கு செல்வதற்கு முன்பாக தன் கைப்பேசி மூலமாக சரஸ்வதியிடம் பொதுவாக பேசியவள் கடைசியில் “நிரல்யா உங்ககிட்ட மனசு விட்டு பேசனும்னு வந்து இருக்கா ஆண்ட்டி அவள் சொல்றதை முழுசா கேட்டுட்டு உங்க முடிவை எடுங்க ப்ளீஸ் எனக்காக இதை மட்டும் செய்ங்க” என்று அவரிடம் முன்அனுமதி வாங்கி இருந்தாள் அதனால் நிலைமை கொஞ்சம் சரியாக இருக்கிறது.



அதோடு ஊருக்கு போய் எல்லாம் விஷயமும் சரியான பிறகு எனக்கு போன் பேசு அதுவரைக்கும் ரெண்டுபேரும் மெஸேஜ்ல பேசிக்கலாம்” என்று நிபந்தனை வேறு விதித்து இருந்தாள்.அப்பொழுது தான் நிரல்யா அங்கேயிருந்து நல்ல பதில் கிடைக்கும் வரை காத்திருப்பதோடு தன்னிடம் புலம்பாமல் சரஸ்வதி அம்மாவிடமே திரும்ப திரும்ப பேசி சம்மதத்தை வாங்கட்டும் என்று முன்யோசனையோடு அனுப்பி இருந்தாள்.



ஐந்து நாட்கள் சென்றுக் கொண்டிருக்க…

சரஸ்வதி நிரல்யாவிடம் முகம் கொடுத்து பேசவில்லை என்றாலும் அவளுக்கான எல்லாவற்றையும் பார்த்து பார்த்து கவனமாக செய்தார்.அவரின் இந்த கவனிப்பு தான் அவளை இன்னும் வேதனைப்படுத்தியது.



இந்த தடவை அம்மாவிடம் பேசி ஒரு முடிவுக்கு வர எண்ணியவள் இம்முறை சரஸ்வதி எங்கே போனாலும் அவர் பின்னாடியே சென்று “அம்மா உங்ககிட்ட நான் பேசனும்” என்று அவரை தொந்தரவு செய்துக் கொண்டிருந்தாள்.


இத்தனை நாட்களாக அவர் கொடுத்த உணவை வாங்காமல் இருந்தால் அம்மா வருந்துவார் என்று எண்ணி மறுக்காமல் வாங்கிக் கொண்டவள் இம்முறை சாப்பிடாமல் உண்ணாவிரதத்தை மேற்கொண்டாள்.



விடியற்காலையில் ஆரம்பித்த இந்த போராட்டம் இரவு ஏழுமணி நீடித்தது.சரஸ்வதியும் எவ்வளவோ லட்சுமியிடம் சொல்லி சாப்பிட வைக்க போராடினார்.ஆனால் எல்லாம் நிரல்யாவின் பிடிவாதத்தினால் வீணாகப் போனது.


கடைசியில் சோர்ந்து போய் படுத்து இருக்க அவளருகே வந்த சரஸ்வதி “எதுக்காக இங்கே வந்து சாப்பிடாமல் இருந்து என்னை வேதனைப்படுத்துறே நிரல் போ நீ இருக்கிற இடத்துக்கு போய் சந்தோஷமா இரு” என்று அழுதுக் கொண்டே சொன்னார்.



அதைக் கேட்ட நிரல் “அம்மா ஏன் என்னை யாரோன்னு நினைச்சு பேசுறீங்க?”



அவரிடம் பதிலில்லை.

“இத்தனை நாளா எனக்காக எல்லாம் பார்த்து பார்த்து செய்றீங்க ஆனால் பேச மட்டும் மாட்டுறீங்க எனக்கு எவ்வளவு கஷ்டமா இருக்கு தெரியுமா?” என்று அழுதாள்.



சரஸ்வதியோ விரக்தியாக “ஒரு நாலைந்து நாளுக்கு உன்னை நான் அவாய்ட் பண்றேன்னு நீ வருத்தப்படுற நிரல் ஆனால் அம்மாவும் அப்பாவும் நீ வேலைக்கு போன நாள்ல இருந்து அந்த நிலைமைல தான் இருக்கோம்னு உனக்குத் தெரியுமா?” என்று அவர் கேட்டதும் இவள் புரியாமல் பார்த்தாள்.



“என்னைக்கு வேலைக்கு போறேன்னு இந்த வீட்டைவிட்டு வெளியூர் போனியோ அன்றையிலிருந்து எப்போ எங்கேகிட்ட பேசுனாலும் கடன் அடைக்க எவ்வளவு பணம் வேணும்,அப்பா மருந்து செலவுக்கான பணம், இதோ இந்த வீட்டை சீரமைச்சுக்க பணம் இதைப் பற்றித் தான் அதிகமாக பேசி இருக்கே எப்போதாவது வீட்டுக்கு வந்தால் அம்மா எதாவது ஊருக்கு போகலாம் இல்லைன்னா எங்களுக்கு தேவையான பொருட்கள் வாங்க போறது இப்படி எங்கத் தேவையைப் பத்தி தான் யோசிச்சே ஒருநாளும் கூட நான் வேலைப் பார்க்கிற இடத்துல இந்த விஷயம் நடந்துச்சுன்னு மனசு விட்டு சொல்லலை வெறும் டிகிரி மட்டும் முடிச்சிட்டு உன்னால எப்படி இவ்வளவு பணம் கொடுக்கிற கம்பெனில நீ வேலைப் பார்க்கலை ஏதோ தினமும் சம்பளம் தர்ற வேலைக்கு போறேன்னு நாங்க புரிஞ்சுக்கிட்டோம் எங்கே எங்களுக்கு தெரிஞ்சால் நாங்க வருத்தப்படுவோம்னு மறைக்கிறேன்னு தெரியும் நாங்க ரெண்டுபேரும் உன்னை எங்களோட பெற்ற பிள்ளையாகத் தானே பார்த்தோமே தவிர இந்த குடும்பத்துக்காக சம்பாதிச்சு போடுற மிஷினாக நினைக்கலை இதைப் பற்றி எல்லாம் பேச முடியாமல் நாங்க எத்தனை நாள் உள்ளே அழுதிட்டு இருக்கோம்னு உனக்கு தெரியுமா?இதை எல்லாத்தையும் விட அஸ்வதி உன்னோடு இருக்கா அவ உன்னை பார்த்துப்பான்ற நம்பிக்கையில் தான் எங்களுக்கு தூக்கமே வரும் நிரல்யா உனக்குன்னு ஒரு வாழ்க்கையை நீ அமைக்கனும்னு நாங்க கடவுளிடம் வேண்டாத நாளில்லை எப்போ எங்ககிட்ட மனசு விட்டு பேசுவேன்னு நாங்க காத்திருந்து இதோ எல்லாம் முடிஞ்சு வந்து பேசுற இப்போ எப்படி நான் உன்னோட விருப்பத்துக்கு தடையா இருப்பேன் அதான் அமைதியாக இருந்துட்டேன்” என்று தன் பக்க நியாயத்தைச் சொன்னார் சரஸ்வதி.



ஐந்து நாட்களாக இருக்கும் நிராகரிப்பையே அவளால் தாங்கிக் கொள்ள முடியாமல் இருக்க இத்தனை வருடங்களாக தன்னுடைய நிராகரிப்பை அவங்களால் எப்படி தாங்க முடிந்ததோ? என்று தன் பெற்றோரின் நிலைமையில் இருந்து யோசித்தாள் நிரல்.



அது அவளுக்கு பெரிய வேதனையைத் தந்தது.பெற்றவர்கள் தங்கள் குழந்தையிடம் இருந்து அன்பை மட்டும் தான் எதிர்பார்ப்பார்கள் என்று புரிந்துக் கொண்டவள் அவரை கட்டியணைத்து சத்தமிட்டு அழுதாள்.



“அம்மா இத்தனை நாளா நீயும் அப்பாவும் வருத்தப்படக் கூடாதேன்னு தான் நான் எல்லாத்தையும் மறைச்சேனே தவிர உங்களை இப்படி வேதனை படுத்தும்னு எனக்கு தெரியாதும்மா என்னை மன்னிச்சிடுங்க” என்று சரஸ்வதியிடமும் தந்தையிடமும் மனதார மன்னிப்பு கேட்டாள்.



இதற்கு மேலும் மகளின் மீது கோபத்தை காட்டாமல் அவளிடம் இன்முகத்தோடு பேசினார்கள்.அதோடு எல்லா விவரங்களையும் சைத்ரனைப் பற்றியும் முழுதாகத் தெரிந்துக் கொள்ள தனது தோழியின் மகன் என்பதால் அவர்கள் இருவரின் திருமணத்திற்கும் சம்மதம் தெரிவித்தனர்.எப்படியாவது சைத்ரனிடம் பேசி இவர்களுடைய திருமணத்திலாவது அவனுடைய குடும்பத்தை வர வைக்க வேண்டும் என்று ஒரு அன்புக் கட்டளையும் விதித்தனர்.



சைத்ரனுக்கு பட வேலைகள் முடிந்ததும் சரஸ்வதியையும்,நிரல்யாவின் தந்தையையும் நேரில் சந்திப்பதாக கைப்பேசியில் அறிமுகமாகி பேசி சொன்னான்.விக்ரமும் தன் வருங்கால மாமாவை சந்தித்து பேசினான்.



இனிமேல் நிரல்யாவின் வாழ்க்கையில் மகிழ்ச்சி நிறைந்து இருக்கும் என அவளின் பெற்றவர்கள் நினைத்து இருக்க…

அஸ்வதி இலக்கியனின் நட்பு முதலில் குறுஞ்செய்தி ஆரம்பித்து இப்பொழுது நேரில் சந்தித்து பேசும் அளவிற்கு வளர்ந்து இருந்தது.



ஒருமாதம் கழிந்த நிலையில் சைத்ரன் நடித்த படம் திரையில் ஓடியது.அந்தப் படம் வெளியான ஒரு வாரத்தில் நல்ல வசூலைத் தந்தது.அந்த வெற்றியை கொண்டாடுவதற்காக சைத்ரன்,நிரல்யா,இலக்கியன்,அஸ்வதி நால்வரும் ஒரு விடுதியில் சாப்பிட்டு முடித்து வெளியே அவர்களின் காருக்காக காத்திருக்கும் போது சைத்ரனின் எண்ணிற்கு அதே எண்ணிலிருந்து திரும்பவும் அழைப்பு வந்தது.



இம்முறை தைரியமாக எடுத்தவன் “ஹலோ யாரு?”



“என்னை யாருன்னு தெரியலையா?” என்றுக் கேட்டான்.



சைத்ரன் யோசனையில் இருக்க “எப்படி உனக்கு என்னைப் பற்றி ஞாபகம் இருக்கும் வாய்ப்பில்லை தான் ஏன்னா நீ இந்த நிலைமைக்கு வர்றதுக்கு நானும் உன்கூட துணையாக இருந்தது எல்லாம் மறந்து போச்சுல்ல”


சட்டென்று நினைவு வந்தவனாக “சர்வேஷ் நீயா?”


“ஆமாம் நான் தான் ரெண்டுபேரும் ஒன்னாகத் தானே சினிமால வாய்ப்பு தேடினோம் ஆனால் உன்னை ஏத்துக்கிட்ட சினிமா என்னை ஏத்துக்கலைடா”


“சர்வேஷ் நீ பொறுமையா முயற்சி பண்ணி இருக்கலாம் தான் அவசரப்பட்டு போதைக்கு அடிமையாகிட்டே அந்த விஷயம் வெளியே தெரியவும் தான் உனக்கு வந்த வாய்ப்பும் வர்றாமல் போயிடுச்சே தவிர சினிமா காரணம் இல்லை” என்றான்.



“எது எப்படியோ உன் முகத்தை தானே எல்லோரும் விரும்பினாங்க என்னோட முகத்தை இல்லையே எது எப்படியோ சைத்ரா உன்னோட புதுப்பட வெற்றிக்காக என்னோட சின்ன கிப்ட் கொடுத்து விடுறேன் வாங்கிக்கோ” என்று கைப்பேசியின் அழைப்பை துண்டிக்கவும் சைத்ரன் என்னவென்று யோசிப்பதற்குள் ஒரு இருசக்கர வாகனம் ஒன்று வேகமாக வந்தது.அதில் பின்னாடி இருந்தவன் கையில் வைத்திருந்த கண்ணாடி பாட்டிலில் இருந்த திரவத்தை சைத்ரன் மேல் ஊற்ற வரவும் அவனருகில் கைக்கோர்த்து நின்றிருந்த நிரல்யா எதைப் பற்றியும் யோசிக்காமல் அவனை விலக்கிவிட அந்த திரவத்தில் பாதி நிரல்யாவின் பாதி முகத்தோடும் மீதி கீழேயும் சில சொட்டுகள் சைத்ரனின் கையிலும் விழுந்தது.


திரவம் விழுந்த அடுத்த நொடி நிரல்யா வலியில் ஆஆஆஆ….வென்று கத்தி முகத்தில் கைவைத்தபடி அப்படியே தரையில் சாய்ந்தாள். அஸ்வதியும் இலக்கியனும் என்னவென்று நிமிர்ந்து பார்ப்பதற்குள் கண்ணிமைக்கும் நொடிக்குள் அங்கே எல்லாம் நடந்து முடிந்து இருந்தது.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவிடுங்கள்
https://www.narumugainovels.com/posts/24708/bookmark
 

NNK-74

Member
கண்ணுக்குள்ளே கரைந்த நிலவு அத்தியாயம் -16 (இறுதி அத்தியாயம்)



நடந்த நிகழ்வின் அதிர்ச்சியில் அப்படியே சரிந்தவள் பின்னால் இருந்த கல்லில் மோதி அப்படியே மயங்கி சரிந்தாள்.


தலையின் பின்பகுதியிலிருந்து இரத்தம் ஒரு பக்கம் முகத்தில் உள்ள தோல் சுருங்க ஆரம்பிக்க அவளுடைய உடலோ வலியில் துடிக்க ஆரம்பித்தது.



நிரல்யாவிற்கு நடந்த நிகழ்வினில் அதிர்ச்சியான அஸ்வதி “நி…ரல்” என்று பிடிக்கப் போக கையில் இருந்த இரத்தத்தைப் பார்த்து அவள் ஒருபுறம் மயங்கி சரிந்தாள்.அருகில் இருந்தவர்கள் எல்லாம் கையில் வைத்திருந்த கைப்பேசியில் எல்லாவற்றையும் படமெடுத்து இருந்தனர்.



அடுத்து என்ன? என்று யோசிப்பதற்குள் விழிகள் முழுவதும் கண்ணீரை நிரப்பிக் கொண்டு தன்னவளை அவன் தூக்கிச் செல்ல இலக்கியன் உடனே மருத்துவமனைக்குச் செல்ல காரை ஓட்டினான்.



தலையில் அடிப்பட்டதற்கு ஒருபுறம் சிகிச்சை அளிக்க முகத்தில் பட்ட ஆசிட்டுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.அஸ்வதி அதிர்ச்சி மயக்கத்தில் கிடந்தாள்.இதற்கிடையில் இந்த விஷயம் வீடியோ மூலமாக தொலைக்காட்சி,செய்தி,சமூக வலைதளம் என்று எல்லாப் பக்கங்களிலும் பரவியது.



எல்லோரும் நிரல்யாவின் செயலில் அசந்து போயினர்.சைத்ரனின் கையில் பட்டிருந்த சில துளிகள் ஆசிட்டால் அவனுக்கு எரிச்சல் வர அதற்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது.



அப்பொழுது அதனுடைய வீரியத்தையும் வலியையும் புரிந்துக் கொண்டான்.இதை எப்படி தன்வி தாங்கப் போகிறாளோ? என்ற கலக்கம் அவனுள்ளே எழுந்தது.



அதற்கிடையில் காவல்துறை நடந்த ஆசிட் வீச்சைப் பற்றி விசாரிக்க வந்தது.சைத்ரனிடமும் இலக்கியனிடமும் அதற்கான விசாரானை நடைபெற சைத்ரன் நடந்த உண்மைகளைப் பற்றி எல்லாவற்றையும் சொன்னான்.அதனால் சர்வேஷ் மேல் வழக்கு பதிவு செய்து அவனை தேடும் படலம் ஆரம்பித்தது.



விஷயம் அறிந்து நிரல்யாவின் பெற்றோர்கள்,யாமினி,அவளுடன் வேலை செய்தவர்கள் என எல்லோரும் அங்கே வந்தனர்.கண்விழித்த அஸ்வதி அருகில் இருந்த இலக்கியனிடம் “நிரல் நிரல் எங்கே? அவளுக்கு என்னாச்சு? நடந்தது எல்லாம் கனவு தானே?” என்று அவள் பிதற்றிக் கொண்டிருக்க இலக்கியன் தான் அவளை தேற்றி நிரல்யாவிற்கு சிகிச்சை நடக்கும் அறைக்கு அழைத்துச் சென்றான்.



அவள் கிடக்கும் கோலத்தைப் பார்த்து இன்னும் அழுதாள் அஸ்வதி.சரஸ்வதி தலையில் அடித்து அழுதுக் கொண்டிருந்தார்.அவளின் தந்தையோ சக்கர நாற்காலியில் உட்கார்ந்தபடி அழுதுக் கொண்டிருந்தார்.அவளது குடும்பமே அவளை நினைத்து பரிதவித்து அழுதது.



நிரல்யாவின் பாதி முகத்தில் கண்ணிற்கு கீழே இருந்து கழுத்து வரை தோல் பகுதி எல்லாம் சிதைந்து போயின.நல்லவேளை அவளுடைய கண்களில் படவில்லை திரவம் கண்களில் தெளித்து இருந்தால் கண்ணே போய் இருக்கும் அபாயத்திலிருந்து தப்பித்தாள்.சைத்ரனுக்கு நடக்க வேண்டிய விபத்தை தான் நிரல்யா வாங்கிக் கொண்டாள் என்பதை அறிந்த அவனுடைய பெற்றோரும் நிரல்யாவின் அன்பினை உணர்ந்து அவளைப் பார்க்க வந்தனர்.


சைத்ரன் அருகில் வந்த அவனது அப்பா “சைத்ரன் என்னை மன்னிச்சிடுப்பா இந்தப் பொண்ணோட குணம் தெரியாமப் போச்சு உன்னையும் நான் ரொம்ப வேதனைப் படுத்தி பேசிட்டேன் உனக்கு இவ்வளவு பெரிய ஆபத்துக் கூட தெரியாமல் இருக்கேன்னு நினைச்சால் என்னை நினைச்சே எனக்கு அசிங்கமா இருக்கு இதுக்கு அப்புறம் உன்னோட விருப்பம் தான் எனக்கும்” என்றார்.



சைத்ரன் அப்பாவின் இந்த முடிவால் தனலட்சுமியால் ஒன்றும் சொல்ல முடியவில்லை.அதனால் அவர் அமைதியாக இருக்க வேண்டியதாக இருந்தது.எப்படி இருந்தாலும் அவன் அவர்களோடு ஒன்ற மாட்டான் என்பது தனலட்சுமி அறிந்த விஷயம்.அதனால் அவரும் சைத்ரனின் அப்பாவோடு இருந்தார்.



எல்லாவற்றையும் கேட்டவன் கடைசியில் ஒற்றை தலையசைப்பை மட்டும் பதிலாக தந்துவிட்டு சைத்ரன் யாரிடமும் எதுவும் பேசவில்லை.நாள் முழுவதும் அந்த மருத்துவமனையிலேயே கிடந்தான்.தன்னவளின் செய்கையில் அவன் அந்த நொடியே ஆடிப்போய் விட்டான்.அவனுக்கு எதுவும் ஆகக்கூடாது என்று தன்னைப் பற்றி யோசிக்காமல் அவள் செய்த விஷயத்தால் இன்னும் நொருங்கிப் போய் இருந்தான்.



அவன் யாரிடமும் எதுவும் பேசாமல் அமர்ந்திருந்தான்.அவனருகில் வந்த இலக்கியன் ஆதரவாய் தோள் மீது கைவைத்தவன் “சைத்ரன் கவலைப்படாதே நிரல்யாவிக்கு சரியாயிடும்” என்றதும் கவலை தோய்ந்த முகத்தோடு அவனைப் பார்த்தான்.



இலக்கியனுக்கு அவன் சொன்ன வார்த்தை எந்தளவுக்கு உண்மையாகும் என்று அவனுக்கே தெரியும் இருந்தாலும் ஆறுதலுக்காகச் சொன்னான்.இலக்கியன் நிரல்யா குடும்பத்திற்கு தேவையான எல்லா வசதிகளையும் செய்தான்.அஸ்வதி தான் தங்கியிருந்த வீட்டில் நிரல்யாவின் குடும்பத்தினரை தங்க வைத்தாள்.





பார்க்கும் இடங்களில் எல்லாம் அவளும் நிரல்யாவும் ஒன்றாக சந்தோஷமாக இருந்த நினைவுகள் எல்லாம் வந்து போயின.சரஸ்வதியோ முதலில் அவள் கண் விழித்தால் போதும் என்று நினைத்தவர் அடுத்து இனிமேல் நிரல்யாவுடைய வாழ்க்கை என்ன ஆகப் போகிறதோ? என்று நினைத்து பயந்தார்.



நிரல்யாவின் தலையில் அடி பட்டதற்கான பரிசோதனை செய்ததில் அவளுக்கு எந்த பிரச்சினையையும் இல்லை என்று வந்தது.ஆனால் முகத்தில் ஏற்பட்ட சிதைவை சரி செய்வது பெரிய விஷயமாக நினைத்தார்.



நடந்த அதிர்ச்சியான நிகழ்வோடு முகத்தில் ஏற்பட்ட காயத்தினால் வலி போன்ற காரணங்களால் இரண்டு நாட்கள் மயக்கத்தில் இருந்தவள் பின்னர் கண்விழித்தாள்.


மெதுவாக இமைகளை திறந்தவள் தான் இருக்கும் இடத்தை அறிய பார்வையை சுழல விட்டவள் ஓரளவு தன்னுடைய நிலைமையை உணர்ந்தாள்.



செவிலியர் வந்து சொல்லவும் எல்லோரும் அவளை பார்க்க வந்தனர்.சைத்ரன் மருந்து வாங்கச் சென்றிருந்தான்.அவள் இருக்கும் நிலைமையைப் பார்த்து எல்லோரும் அதிர்ச்சியில் இருந்தனர்.



நிரல்யாவின் முகத்தின் பாதியில் கட்டுப் போட்டு மறைத்து இருந்தனர்.அதனால் இன்னொரு முகமும் அழுத்தத்தினால் வீங்கிப் போய் இருந்தது.அவள் படுத்துக்கிடந்த அப்படியே பார்த்து நின்றனர்.அஸ்வதி ஓடிப்போய் நிரல்யாவின் கைகளைப் பற்றிக் கொண்டவள் “நிரல் நிரல் வலிக்குதா? ஏன் இப்படி செய்தே?கொஞ்சம் கூட யோசிக்க மாட்டியாடி இப்போ எப்படி முடியாமல் படுத்து இருக்கியே” என்று அழுதாள்.



நிரல்யா எதற்கும் பதில் சொல்லாமல் அமைதியாக எல்லோரையும் பார்த்துக் கொண்டிருந்தாள்.நிரல்யாவின் பெற்றோரும் உடன் பிறந்தவர்கள் எல்லோரும் அழுதனர்.


விஷயம் அறிந்து நிரல்யாவைப் பார்க்க வேகமாக வந்தான்.அவள் இருந்த அறையின் வாயிலில் வந்தவன் நின்று நீண்ட மூச்சு விட்டவன் மெதுவாக அவளைப் பார்த்தபடி நடந்தான்.



சைத்ரனைப் பார்க்கவும் எல்லோரும் அவளிடமிருந்து விலகிக் கொள்ள நிரல்யா இருக்கும் நிலைமையைப் பார்த்து கண்ணீர் விழிகள் முழுவதும் நிறைந்து இருந்தது.



மெதுவாக அவள் அருகில் வந்தவன் அவளின் கரங்களைப் பிடித்து தன் கன்னத்தில் வைத்து ஓவென்று குலுங்கி குலுங்கி அழுதான்.





அவன் அழுததைப் பார்த்து அஸ்வதி,நிரல்யாவின் குடும்பம் என எல்லோரும் அவனையே பார்த்தனர்.நிரல்யா எதுவும் பேசாமலேயே அவளுடைய விழிகளில் இருந்தும் கண்ணீர் வடிந்தது.



சைத்ரன் “கொஞ்சம் உன்னை பத்தியும் யோசிச்சு இருக்கலாம் நிரல் இப்போ பாரு என்னாலத் தான் இந்த நிலைமைல இருக்கிறேன்னு நினைக்கும் போது என்னாலத் தாங்க முடியல உனக்கு எதாவது ஆகியிருந்தால் நான் என்ன செய்வேன்னு யோசிச்சியா? ஏன் இப்படி நடந்துக்கிறே? எனக்கான விதியை நானே ஏத்து இருக்கனும்” என்று மீண்டும் அழுதான்.



அவளோ மெதுவாக “அழாதீங்க ஆதித் நீங்க ஏன் இவ்வளவு கவலைப்படுறீங்க? எனக்கு எதாவது ஆச்சுன்னா அன்பா பார்த்துக்கத் தான் நீங்க இருக்கிறீங்கன்ற தைரியம் இருக்கே எனக்கு அது போதும் அதுவே உங்களுக்கு எதாவது ஆச்சுன்னா அதை நினைச்சே நான் துவண்டு போய்டுவேன் அப்புறம் உங்களை யார் பார்த்துப்பாங்க” என்றாள் அப்பாவியாய்….



அவள் சொன்னதைக் கேட்டு அவனுக்கு இன்னும் அழுகை வரத்தான் செய்தது.ஆனால் நிரல்யாவின் கரங்கள் அவனுடைய கண்ணீரைத் துடைத்துக் கொண்டிருந்தது.



சரஸ்வதியும் நிரல்யாவின் அப்பாவும் நிறைவாய் அவர்களைப் பார்த்தனர்.அஸ்வதி நிம்மதியாக உணர்ந்தாள்.



நாட்கள் நகர்ந்துக் கொண்டிருந்தது.நிரல்யாவின் உடல்நிலை தேறியிருந்தது.அவளுடைய குடும்பமும்,தோழியும்,சைத்ரனும் அவளை நன்றாகப் பார்த்துக் கொண்டனர்.ஆனால் அவள் எழுந்து போய் தன்னுடைய முகத்தை இன்னும் கண்ணாடியில் பார்க்கவில்லை.அதற்கான வாய்ப்பும் அவர்கள் கொடுக்கவில்லை.



அஸ்வதி நிரல்யாவிற்கு மருந்து வாங்குவதற்காக சென்று இருக்க அறையிலிருந்து கொஞ்சம் வெளியே செல்லலாம் என்று நினைத்து முகத்தில் போடப்பட்டிருந்த கட்டு அவிழ்ந்து இருந்த நிலையில் நடந்தாள்.



அவளைப் பார்த்த எல்லோரும் ஒருவித அதிர்ச்சியோடு முகத்தை திருப்பிக் கொண்டனர்.இவளோ ஒன்றும் புரியாமல் நடக்க ஆரம்பித்தாள்.அப்பொழுது கொஞ்சம் தள்ளி வந்த இரு பெண்கள் அவளுடைய காதில் விழுமாறு “இந்த முகத்தை எல்லாம் வைச்சுட்டு எப்படி இவள் எல்லாம் வெளியே வர்ற? கொஞ்சம் கூட அறிவு வேண்டாம் பார்க்கிற நம்மளாலயே சகிக்க முடியலை இவளை எப்படித் தான் அவ வீட்ல உள்ளவங்க சகிச்சுகிறாங்களோ?” என்று அவளை பார்க்காதவாறு சென்றனர்.



நிரல்யா ஒன்றும் புரியாமல் மெதுவாக நடந்து அங்கே ஓரமாக இருந்த கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்தாள்.அது பாதி முகம் சிதைந்து போய் பார்ப்பதற்கே அருவருப்பாக இருந்தது.அவளைப் பார்க்கவே அவளுக்கே வெறுப்பாக இருந்தது.



மெதுவாக அந்த காயத்தை தொடப் போனாள் அது அவளுக்கு வெறுப்பை தந்தது.அங்கேயே நின்று சத்தம் போட்டு அழுதாள்.அப்பொழுது வந்த அஸ்வதி அவள் நிற்கும் நிலைமையைப் பார்த்து புரிந்துக் கொண்டவள் வேகமாக அவளருகே சென்று கையைப் பிடித்தவள் “நிரல் இப்போ எதுக்கு வெளியே வந்தே” என்றதும் அஸ்வதி பிடித்திருந்த கையை உதறித் தள்ளியவள் “தொடாதே!என்னை தொடாதே! என்னுடைய இந்த நிலைமை உனக்கும் வந்துடும் அஸ்வதி நீ பார்க்காதே! என்னை பார்க்காதே” என்று கைகள் நடுங்க தன் முகத்தை மூடிக் கொண்டு அவள் இருந்த அறையை நோக்கி ஓடியவள் உள்ளே தாழிட்டுக் கொண்டு அழுதாள்.



அஸ்வதி பின்னாலேயே சென்று கதவை தட்டினாள்.”நிரல் கதவை திற நீ நினைக்கிற மாதிரி இது யாருக்கும் பரவாது சீக்கிரம் சரி செய்யலாம் கதவை திற” என்றதற்கு “இல்லை நீ பொய் சொல்றே இத்தனை நாளா பார்க்க முடியாத இந்த கோர முகத்தை தான் சகிச்சுட்டு பார்த்தியா?” என்று திரும்பவும் தன் தலையை அழுந்த பிடித்தபடி அழுதாள்.



இவர்கள் சத்தமிட்டுக் கொண்ருப்பதால் மருத்துவமனையில் உள்ள செவிலியர்,மருத்துவர்கள் என எல்லோரும் வந்து விஷயம் அறிந்து அவள் கதவை திறக்கச் சொல்ல எல்லாம் தோல்வியில் முடிந்தது.கடைசியில் அஸ்வதி சைத்ரனை கைப்பேசியில் அழைத்து விவரத்தைச் சொன்னான்.




அதைக் கேட்டு அவனும் அங்கே விரைவாக வந்தான்.கடைசியில் மருத்துவமனை மனநல மருத்துவரை அழைத்து வந்தது.

அவர் வந்து நிரல்யாவிடம் கொஞ்சம் தன்மையாக பேசினார்.அதை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்தவள் பதிலேதும் பேசாமல் இருந்தாள்.



அங்கே வந்த சைத்ரன் “தன்வி கதவை திற நான் ஆதித் வந்து இருக்கேன் நான் சொன்னா நீ கேட்க மாட்டியா?” என்றதற்கு “முடியாது நீயும் என்கிட்ட பொய் சொன்னேல்ல நான் பார்க்கவே கோரமா இருக்கேன்னு நீங்க ஏன் சொல்லலை” என்று அழுதாள்.



அவனோ பொறுமையாக “தன்வி உன்னை எனக்கு சின்ன வயசில் இருந்து தெரியும் அப்போ அந்த சிறுவயதில் இந்த அழகெல்லாம் பத்தி எல்லாம் யோசிச்சு தான் நான் பழகுனேனா சொல்லு?” என்றதற்கு அவளோ “ஆமாம் எனக்கு தெரியும் நான் ஒருதடவை சேத்துல விழுந்துட்டு வந்தப்போ நீ தானே என் முகத்துல இருக்கிற அழுக்கை எல்லாம் துடைச்சு கழுவி விட்டு அம்மாகிட்ட சொல்லி என்னை காப்பாத்துன தானே” என்று சிறுபிள்ளையாகக் கேட்டாள்.



அவள் அப்படிக் கேட்டதும் சைத்ரனுக்கும் அஸ்வதிக்கும் ஆச்சரியமாக இருந்தது.நிரல்யாவிற்கு பழைய நினைவுகள் எல்லாம் திரும்பி வந்து இருக்கிறது என்று புரிந்துக் கொண்டனர்.


சைத்ரன் “அதே மாதிரி இப்போ உன் முகத்துல இருக்கிற காயத்தை நானே துடைச்சு விடுறேன் தன்வி கதவை திற” என்றதற்கு “உண்மையாவா சொல்றே நீ துடைச்சால் அது போய்டுமா?” என்றதற்கு ஆமாம் என்று பதிலளித்தான்.உடனே மெதுவாக கதவை திறந்தாள்.



இது தான் சரியான தருணம் என்று உள்ளே புகுந்தவன் குழப்பதோடு தலையை அழுந்தபிடித்தபடி அமர்ந்திருந்தவளை தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டவன் சிதைந்து இருந்த காயங்களின் மேல் மெதுவாக முத்தமிட்டவன் “நீ எப்படி இருந்தாலும் எனக்கு பிடிக்கும் தன்வி” என்று நெற்றியிலும் அழுந்த முத்திமிட்டான்.



ஏதோ தன் அழுத்தமெல்லாம் மொத்தமாய் தீர்ந்து போனதை உணர்ந்தவள் ஓவென்று சத்திமிட்டு அவனை கட்டிப்பிடித்தவாறே அழுதாள்.அவளுடைய நிலைமையைப் பார்த்து ஓரமாய் நின்று கொண்டிருந்த அஸ்வதியும் கண்ணீர் வடித்தாள்.



நிரல்யாவை சமாதானம் செய்து முதலில் மனநல மருத்துவரிடம் காட்டி அவளுக்கு கவுன்சிலிங் கொடுக்கப்பட்டது.இதற்கிடையில் காவல்துறை ஆசிட் வீச்சு பற்றி விசாரித்ததில் ஒளிந்து இருந்த சர்வேஷை பிடித்து விசாரித்ததில் சைத்ரன் மேல் இருந்த பொறாமையால் இப்படி செய்து இருக்க அவனுக்கு சைத்ரனைப் பற்றிய தகவலைத் தந்த இந்திராவைப் பற்றியும் சொன்னான்.



‘'தனக்கு கிடைக்காதவன் வேறு யாருடனும் நன்றாக இருக்கக் கூடாது’ என்ற எண்ணம் இந்திராவையும் தவறான வழியில் செல்ல வைக்க இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தது காவல்துறை.



நிரல்யா சிதைந்து போன முகத்தோடு இருந்து கஷ்டப்பட வேண்டாம் என நினைத்த சைத்ரன் அடுத்தக் கட்ட யோசனையாக அவளுக்கு முகமாற்று அறுவை சிகிச்சைக்காக அவளின் பெற்றோரின் சம்மதத்தோடு நிரல்யாவின் மனமாறுதலுக்காகவும் வெளிநாட்டிற்கு அழைத்துச் சென்றான்.



அங்கே நடந்த அறுவை சிகிச்சையில் நிரல்யாவின் முகம் முன்னால் இருந்ததை விட இப்பொழுது இன்னும் அழகாக மாறிப் போய் இருந்தது.ஆனால் ஒரு சிறு காயத்தின் தடம் லேசாக இருந்தது.அவள் வெளிநாட்டில் படிக்க விரும்பிய ஒப்பனை கலைஞருக்கான ஒருவருட படிப்பையும் அவன் படிக்க வைத்தான்.



ஒருவருடம் கடந்து இருக்க நிரல்யாவின் வாழ்க்கை இப்பொழுது முழுவதுமாக மாறி இருந்தது.அவளுடைய வாழ்க்கையில் நடந்த கோர நிகழ்வுகளைத் தாண்டி வந்ததே நிரல்யாவின் வெற்றியாக இருந்தது.பேஷன் துறையில் அவளுடைய ஒப்பனை பெரிய மாற்றத்தை தந்தது.



இப்பொழுது ஒப்பனை துறையில் இன்னும் மெருகேறி இருந்தாள் நிரல்யா.அவளிடம் முதலில் சவாலிட்ட தீபாவே இப்பொழுது இவளிடம் வந்து தன் சந்தேகங்களைக் கேட்டு தெரிந்துக் கொள்ளும் நிலைக்கு உயர்ந்து நிலைக்கு வந்திருந்தாள்.



இந்த ஒன்னரை வருடத்தில் எல்லாம் மாறிப்போய் இருந்தது.சைத்ரன் நடித்த இரண்டு படங்களும் மிகப்பெரிய வெற்றியைத் தந்தது.அதோடு நிரல்யாவோடு சேர்ந்த காதல் வாழ்க்கையினாலும் அவன் மக்களின் மனதிலும் இடம் பிடித்திருந்தான்.



சின்ன சின்ன காரணங்களுக்காக சண்டையிட்டு தன் காதலை இழக்கும் இந்த காலச் சந்ததியினர் மத்தியில் தன் காதலிக்கு என்ன நடந்தாலும் உற்ற தோழனாக இருந்து அவளுடன் இருந்து தன் காதலை திகட்டாமல் காட்டினான்.


அஸ்வதி நிரல்யாவிடம் “எப்போ வந்து எனக்கு வந்து மேக்கப் ஸ்டார்ட் பண்ணுவ நிரல் நேரமாகுது எல்லோரும் வந்துடப் போறாங்க” என்றதற்கு “இதோ வந்துட்டேன்” என்று அஸ்வதி இருந்த அறையின் கதவை திறந்தவள் கோபத்தோடு காத்திருந்தவளின் முகம் சந்தோஷத்தில் நிறைந்து இருப்பதைப் பார்த்து தன் தோழியை அன்பாக கட்டியணைத்தாள்.



அப்பொழுது இருவருக்கும் இடையில் அஸ்வதியின் மேடிட்ட வயிறு இடித்துக் கொள்ள நிரல் “சாரிடா கண்ணா என் ப்ரெண்டை பார்த்ததும் உன்னை அடிக்கடி நான் மறந்து போயிடுறேன்” என்று அஸ்வதியின் வயிற்றை தடவி விட்டவள் “சீக்கிரம் வெளியே வா நானும் நீயும் சேர்ந்து விளையாடலாம்” என்று பேசிக் கொண்டே ஏழுமாத கர்ப்பிணியாக இருக்கும் தன் தோழியின் வளைகாப்பு நிகழ்ச்சிற்காக எல்லாவற்றையும் பார்த்து கவனமாக அலங்கரித்துக் கொண்டாள்.



நிரல்யா சொன்னதைக் கேட்ட அஸ்வதி “ஓ… மேடம் இப்படியே சிங்கிளா இருந்தே நாளை கடத்திடலாம்னு நினைச்சுட்டு இருக்கீங்களா?”


உடனே நிரல் “நான் கமிட்டெட் எனக்கு ஆள் இருக்காங்க” என்றதற்கு அவளைத் தன் முகத்திற்கு நேராக பார்க்க வைத்தவள் “எப்போத் தான் உங்க ரெண்டுபேருடைய கல்யாண நாளை அறிவிக்கப் போறீங்க?” என்று கேட்டாள்.



அதற்கு நிரல்யா சிரித்துக் கொண்டே “நான் என்ன செய்யட்டும் அவருக்கு கால்ஷீட் கொடுக்கவே டைம் இல்லை சொல்றாங்க இதுல எங்கே கல்யாணத்தைப் பத்தி பேச நேரம் இருக்கு” என்று சொல்லி முடிப்பதற்குள் உள்ளே இலக்கியனும் சைத்ரனும் ஒன்றாக வந்தனர்.



சைத்ரன் வாயில் கைவைத்துக் கொண்டு “பொய் எல்லாம் பொய் கல்யாணத்தைப் பத்தி பேசினாலே இன்னும் கொஞ்ச நாளாகட்டும்னு சொல்லி தள்ளிப் போடுறதையே அவள் தான்” என்றான்.



உடனே அருகிலிருந்த இலக்கியன் “இப்போ என்ன உங்க திருமணத்திற்கான அறிவிப்பை இன்னைக்கு என் பொண்டாட்டியோட வளைகாப்பு அன்னைக்கே சொல்லிடலாம்” என்று அஸ்வதியின் தோள்மீது கைப் போட்டப்படி சொன்னான்.



அவன் சொல்லவும் உள்ளே அஸ்வதியைப் பார்க்க வந்தனர் சைத்ரனின் பெற்றோர்கள்.இலக்கியன் சொன்னதைக் கேட்டுக் கொண்டு வந்த சைத்ரனின் அப்பா “எதுவாக இருந்தாலும் பெரியவங்ககிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு செய்ங்கப்பா” என்றதற்கு சைத்ரன் “அப்பா ஏன் இப்படி சொல்லுறீங்க? என்னோட கல்யாணமே உங்க பொறுப்புல தானே நடக்கப் போகுது” என்றதற்கு அவர் முகம் முழுவதும் மகிழ்ச்சி நிறைந்து இருந்தது.


உடனே அஸ்வதி “நிரல்யா அப்போ இன்னைக்கே உன் கல்யாண செய்தி அறிவிக்க வேண்டியது தான்” என்றதற்கு மறுப்பேதும் சொல்லாமல் வெட்கத்தில் தலைகுனிந்து இருந்தாள்.



அடுத்து ஐந்து மாதங்களுக்கு பிறகு….



கையில் இரண்டு மாத குழந்தையை வைத்துக் கொண்டு பரபரப்பாக மற்றவர்களை வேலை ஏவிக் கொண்டிருந்தாள் அஸ்வதி.அப்பொழுது அங்கே வந்த இலக்கியன் அவளருகில் வந்து “அஸ்வதி ரொம்ப ஸ்டெயின் பண்ணாதேன்னு சொன்னா கேட்கிறியா பையனை இப்படிக் கொடு” என்று குழந்தையை தன் கையில் ஏந்திக் கொண்டவன்

அஸ்வதியை உட்காரச் சொல்லி அவன் அந்த வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தான்.



இன்றைக்கு நிரல்யாவிற்கும் சைத்ரனுக்கும் திருமணம் என்பதால் தான் அஸ்வதி மகிழ்ச்சியில் இப்படி தன் தோழியின் திருமணத்திற்காக நிறைவோடு வேலைப்பார்த்துக் கொண்டிருந்தாள்.



சிறிதுநேரத்தில் முகூர்த்த நேரம் ஆரம்பிக்க… முகம் கொள்ளா புன்னகையோடு வெண்மதி நிலவாக வந்தவள் அன்பாளனாக கரையும் தன்னவனைப் பார்த்துக் கொண்டே மணமேடையில் அவனருகே உட்கார ஆதித்தோ இன்னும் நெருங்கி அவளை இடித்துக் கொண்டே அவளைப் பார்த்து அதே மாறா புன்னகையோடு அமர்ந்தவன் பெற்றோர், உற்றோர்,நண்பர்கள் முன்னிலையில் ஆதித் சைத்ரன் தன் ஆருயிர் காதலியான நிரல்யா தன்வியின் வெண்சங்கு கழுத்தில் மங்கல நாணிட்டு என்றைக்கும் தன்னவளாக்கிக் கொண்டான்.

அவளோ தன்னவனின் மங்கால நாணை தன் நெஞ்சில் நிறைவாய் வாங்கிக் கொண்டாள்.



உடனே தன்னவளின் நெற்றியில் குங்குமம் திலகமிட்டு அந்த காயத்தின் அதே இடத்தில் அன்பாய் முத்தமிட்டான்.



இருமனங்கள் இணைய அங்கே வேறேதும் தடையாக இருக்க போவதுமில்லை.


இனி எல்லாம் வசந்தமே

முற்றும்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவிடுங்கள்
 
Status
Not open for further replies.
Top