நீ என் காதல கண்மணி ்.
1
“என்னடா விஷ்வா 8 மணிக்கு இவ்வளவு இருட்டா இருக்குது. இந்த மாதிரி ஒரு ஊர்ல தான் உனக்கு பொண்ணு பார்க்கணுமா.”
நிதிஷ் விஷ்வாவின் உயிர் தோழன். சிறு வயதிலிருந்து ஒன்றாக படித்து ஒரே துறையில் வேலைக்கு சேர்ந்தவர்கள்.
“அப்பாவோட பிடிவாதம் இப்போ இங்க வந்து நிக்குது .நீ வேற ஏன்டா” என்று சொன்னபடியே..
“ ஒழுங்கா ரோட்டை பார்த்து வண்டியை ஓட்டு .
ஃபுல்லாவே இருட்டா இருக்கு. இதுல ஏதாவது விலங்குகள் மேல ஏத்திடாதே.”.
“ஆமா நீ சொல்றதும் சரிதான் இங்க மான் கூட்டம் யானை கூட்டம் எல்லாம் வரும்னு கேள்விப்பட்டு இருக்கிறேன்.
எதுக்கும் கொஞ்சம் ஜாக்கிரதையாக வண்டி ஓட்டுறேன்” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது சட்டென எதிர்புறத்தில் இருந்த சிறு சாலையில் இருந்து ஒரு பெண் ஓடி வருவது தெரிந்தது.
“ ப்ளீஸ் வண்டியை நிறுத்துங்க.. காப்பாத்துங்க ப்ளீஸ் .உதவி செய்யுங்க “என்று கையை காட்டி வண்டியை நிறுத்த சற்று யோசனையோடு வண்டியை ஸ்லோவ் செய்தவன் நண்பனின் முகத்தைப் பார்த்தான்.
“ என்னடா இது? யாரோ ஹெல்ப் கேட்டு வராங்க. என்ன பண்றது”.
“ இந்த ராத்திரி நேரத்தில் இப்படியே விட்டுட்டு போக முடியாது” என்று சொல்லவும்.. விஷ்வா நண்பனை பார்த்தபடியே வண்டியை நிறுத்த..
“என்னன்னு கேளு” என்று கூறினான்.
விஷ்வா கையில் இருந்த மொபைலுக்கு வந்திருந்த மெசேஜ்களை படித்துக் கொண்டு இருந்தான்.
அப்போது தந்தையிடம் இருந்து வந்த மெசேஜை பார்த்தான்.
“ இத பாருடா.. உனக்கு பேசியிருக்கிற பொண்ணு இந்த பொண்ணுதான்.
ஃபோட்டோவை நல்லா பார்த்துக்கோ.. நாளைக்கு காலையில நிச்சயம் இருக்குது கரெக்டா அங்க வந்து சேர்ந்திடணும் .
நம்ம எஸ்டேட்டில் தங்கி இருக்கிறோம். நேரா அங்க வந்திடு “என்று வந்திருக்க அடுத்ததாக இருந்த போட்டோவில் கிளிக் செய்யவும்…சரியாக எதிரில் என்ற பெண்ணின் முன்னாள் வண்டி நிற்கவும் சரியாக இருந்தது.
போட்டோவை ஒரு நிமிடம் பார்த்துவிட்டு எதிரில் பார்க்க இவனுக்கோ சற்று அதிர்ச்சி தான்.
எந்த பெண்ணை மணம் முடிக்க பேசியிருக்கிறார்களோ அந்த பெண்ணே எதிரில் நின்றிருந்தாள்.
கையில் சிறிய பேக்கோடு...
சற்று யோசனையோடு நண்பனின் முகத்தை பார்க்க.. அவனும் அவளை விசாரித்துக் கொண்டிருந்தான் .
“என்ன வேணும் ..யார் நீங்க.. எதுக்காக வண்டியை நிறுத்த சொன்னீங்க என்று கேட்க ..
“சாரி சார் ..எனக்கு ஒரு உதவி வேணும் .நான் ரெயில்வே ஸ்டேஷன் வரைக்கும் போகணும் என்னை கூட்டிட்டு போய் விட முடியுமா .ப்ளீஸ் ..ரொம்ப அவசரம் “என்று கூற ..
“யாருடா இது சரியான தத்தியா இருப்பா போல இருக்குது.” நண்பனிடம் திரும்பியவன் “ஊருக்குள்ள போற வண்டியை மறித்து திரும்ப ரயில்வே ஸ்டேஷன் வீடுன்னு சொல்றா.
ரொம்ப தெளிவான பொண்ணு தான் “என்று சிரிக்க..
“ கொஞ்சம் பேசாம இரு “என்று சொன்னவன் கையில் இருந்த மொபைலை அவனிடம் நீட்டினான்.
“ கொஞ்சம் இத பாரு “என்று சொல்ல..
மொபைல் பார்த்தவனுக்கு அப்படி ஒரு சிரிப்பு .”சரிதான் போ ..நாளைக்கு நிச்சயத்தை வச்சுக்கிட்டு விருப்பமே இல்லாமல் இந்த மாப்பிள்ளை பையன் ஊருக்கு வரான் .
அதே நேரத்துல அங்க பொண்ணு கல்யாணமே வேண்டாம்னு பேக்கோட புறப்பட்டுட்டா ..
நல்ல ஜோடி பொருத்தம் டா .இதைவிட பொருத்தம் எங்க தேடினாலும் கிடைக்காது.”
“ டேய் முதல்ல பேசாம இரு ..முதல்ல வண்டி ஓரமாக நிறுத்தி என்னன்னு கேளு “.
“என்னன்னு கேட்கிறது இரு. கேட்டு விசாரிச்சு சொல்றேன்”.
“ ஆமா நீ என்ன செய்ய போற..”
“ நான் என்ன செய்யறதா.. நான் என்ன செய்யணும். .
மாப்பிள்ளை வண்டியில் இருக்கிறேன்னு தெரிந்து மறுபடியும் அந்த பொண்ணு அந்த பக்கம் எங்கேயாவது ஓடிட்டா”.
“ டேய் வண்டியை நிறுத்துனதை பார்த்தால் தெரிஞ்ச மாதிரி எல்லாம் தெரியல .
எதுக்கும் நான் என்னை மறைச்ச மாதிரியே இருந்துக்கறேன். என்னன்னு டீடைல் விசாரி” என்று சொல்ல வண்டியை ஸ்லோ செய்து அவளுக்கு அருகில் நிறுத்தியவன்.
“ என்னம்மா என்ன பிரச்சனை” என்று கேட்க..
“நான் தான் சொன்னேனே ரயில்வே ஸ்டேஷன் வரைக்கும் என்ன கொண்டு போய் விடனும். நான் அவசரமா போகணும்”.
“ சரி ரயில்வே ஸ்டேஷன் போகணும் ..ஆனா நாங்க அவசரமா ஊருக்குள்ள போயிட்டு இருக்கறமே .”
“இத பாருங்க சார் நீங்க இன்னும் ஒன் ஹவர் கழிச்சு கூட இங்கே திரும்ப வந்துக்கலாம்.
எனக்கு ரொம்ப அர்ஜென்ட்.. என்னை கண்டு பிடிச்சிட்டாங்கன்னா என்னை இங்கிருந்து போக விட மாட்டாங்க”.
“ சரிமா எதுக்காக இங்கிருந்து கிளம்புற ..தெரிஞ்சுக்கலாமா ஏதாவது லவ் மேட்டரா.. ஏதாவது பையனை விரும்பறியா .அதனால அந்த பையன் பின்னாடி போவதற்காக அவசரமா கிளம்பி இருக்கிறயா? “
“என்ன சார் என்னை பாத்தா எப்படி இருக்குது . லிஃப்ட் கேட்டா உங்க இஷ்டத்துக்கு யோசிக்காமல் பேசுவீங்களா..
நீங்க சொன்னது கரெக்ட் தான். கல்யாணத்துக்கு நிச்சயம் பண்ண போறாங்க .எனக்கு அது பிடிக்கல.
அதனாலதான் கிளம்பி வரேன் ..அதுக்காக லவ் பண்றேன் .இப்படி எல்லாம் பேசாதீங்க.
நான் அந்த மாதிரி பொண்ணு எல்லாம் கிடையாது .”
“சரி அந்த மாதிரி பொண்ணு இல்ல ஆனா எந்த தைரியத்துல வர்ற வண்டியை இப்படி நிறுத்தற..
ஊருக்குள்ள வர்ற வண்டினா எல்லோரும் நல்லவங்களாவா இருப்பாங்க ..
கெட்டவங்க கூட இருப்பாங்க ஒருவேளை நாங்க தப்பான பசங்களா இருந்தா என்ன செய்வ..”
“ உங்க முகத்த பார்த்தாலே தெரியுது. அப்படி எல்லாம் தப்பு செய்ற மாதிரி தெரியல.
உங்களால உதவ முடியுமா இல்லையா .அத மட்டும் சொல்லுங்க “என்று சொல்ல யோசனையோடு அருகில் இருந்த நண்பனை பார்த்தான்.
அவன் இப்போது இறங்கி வந்திருந்தான்.
எதிரில் நின்றவளுக்கு சுத்தமாக அடையாளம் தெரியவில்லை .
இவன் தான் தன்னை பார்க்க வந்திருக்கிறான் என்பதும் தெரியவில்லை .
“இவர் யாரு உங்க பிரண்டா” என்று கேட்க..
” ஆமா இவனை எங்கேயாவது பார்த்த மாதிரி தெரியுதா .”
“அது எப்படி? இப்பதான் நீங்க ஊருக்குள்ள வரீங்க .
ரொம்ப புத்திசாலின்னு நினைச்சா இப்படி லூசுத்தனமா கேள்வி கேக்குறீங்க.”
“ சரியா போச்சு ..கொஞ்சம் முன்னாடி நீ லூசுன்ன.. இப்ப அவ உன்னை லூசுங்குறா” என்று வாய்க்குள் முனங்க..
“ பேசாம இருக்கறயா “என்றவன்..” இப்ப என்ன உன்னை ரயில்வே ஸ்டேஷன்ல கொண்டு போய் விடணும் .
அவ்வளவு தானே வா .கொண்டு போய் விடறேன்” என்று சொன்னபடியே வண்டியில் பின் இருக்கையில் அமர வைத்து வண்டியை திருப்ப ..
“ஆமா இவ்வளவு தூரம் வந்து உன்னை அழைச்சிட்டு போறோம் .இதனால் எங்களுக்கு ஏதாவது பிரச்சனை வந்திடுமா”.
“ அப்படியெல்லாம் எந்த பிரச்சனையும் வராது.
ஏன்னா நான் கைகாட்டி வண்டியை நிறுத்தும் போது இந்த ரோட்ல யாரும் இல்ல.
நான் சொன்னாதான் தெரியும்”
“ சரி தான் நாங்க தப்பானவங்களா இருந்தா என்ன பண்ணுவ ..”
“ஹலோ எனக்கும் சண்டை எல்லாம் தெரியும்.. கத்தி கூட கையில வச்சிருக்கேன் தெரியுமா “என்று சிறிய கத்தியை எடுத்து நீட்ட.. இருவருக்கும் வாய் கொள்ள முடியாத அளவிற்கு சிரிப்பு..
இருவருமே தன்னை மறந்து சிரிக்க ஆரம்பித்தனர்.
“ எதுக்காக சிரிக்கிறீங்க.. இந்த கத்தியை பார்த்து சிரிக்கிறீர்களா.. இதை வச்சு என்ன வேணாலும் செய்ய முடியும் தெரியுமா .”
“அப்படியா கொலை பண்ண முடியுமா “.
“ஏன் முடியாதா”.
“ இல்லையே..இத வச்சு எப்படி கொலை பண்ண முடியும் “.
“ இத பாருங்க தேவையில்லாதது எல்லாம் பேச வேண்டாம் .
நீங்க ரயில்வே ஸ்டேஷன் வரைக்கும் கூட விட வேண்டாம். பக்கத்துல பஸ் ஸ்டாப் இருக்குது .
அங்க கொண்டு போய் விட்டா கூட போதும். நான் ரயில்வே ஸ்டேஷனுக்கு வண்டி ஏறிக்குவேன் .”
“அதெல்லாம் ஒன்றும் வேண்டாம் ஹெல்ப் பண்றதுன்னு முடிவு பண்ணியாச்சு .
முழுசாவே செய்துகறோம் .எங்க போகணும்னு மட்டும் கரெக்டா சொல்லு .
அங்க கொண்டு போய் விடறேன் “என்று சொன்னபடியே வண்டியில் செலுத்த…
இவ்ளோ வாய்க்குள் முணுமுணுத்துக் கொண்டே வந்தாள்.
“ என்னமா வாய்க்குள்ள முணு முணுத்திக்கிட்டு வர்ற.. ஒரு வேளை உனக்கு பைத்தியம் ஏதாவது பிடிச்சிருக்கறதோ..
தெரியாம நாங்க தான் வண்டியில் ஏத்திட்டமோ “.
“சும்மா இருங்க சார் நான் பாட்டுக்கு பேக்ல கொஞ்சம் துணி அள்ளி போட்டுட்டு வந்துட்டேன் .
அங்கே என் அப்பா அம்மா எல்லாரும் என்னை தேடிக்கிட்டு இருப்பாங்க .
அதை பத்தி தான் யோசிச்சுகிட்டு இருக்கேன்.”
“ இப்ப என்ன ? ரெயில்வே ஸ்டேஷன் போகணுமா .இல்ல திரும்ப உன்னோட வீட்டுக்கு வண்டியை விடனுமா”.
“ அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். ரயில்வே ஸ்டேஷனுக்கு தான் போகணும்”.
“என்னமோ சொன்ன நிச்சயத்துக்கு பயந்து ஓடிக்கிட்டு இருக்கறேன்னு..
அதோட டீடைல் சொல்றியா..ரயில்வே ஸ்டேஷன் போற வரைக்கும் எங்களுக்கும் பொழுது போகணும்ல .”
“தாராளமா தெரிஞ்சுக்கலாம் எனக்கு இந்த போலீஸ்காரங்களே சுத்தமா ஆகாது”.
“ ஓ அப்படியா சரி அதுக்கு?”
“ ஆனா பாருங்க எனக்கு பார்த்திருக்கற மாப்பிள்ளை போலீஸ்ல தான் இருக்கிறாராம்.
சோ எனக்கு இந்த பையனை சுத்தமா பிடிக்கல .நானும் வீட்ல நிறைய சொல்லி பாத்துட்டேன்.
யாரும் கேட்கிற மாதிரி இல்ல”.
‘ ஆமா நீ என்ன படிச்சிருக்கற”. என்று விஷ்வா கேட்க..
“ நான் ப்ளஸ் டூ முடித்து இருக்கிறேன்.”
“ ஏன் அதுக்கு அப்புறம் படிக்கல..”
“ வந்து படிக்கும் போது ஒரு சின்ன இன்சிடென்ட் ஆயிடுச்சு அதுக்கு பிறகு எனக்கு படிக்க பிடிக்கலை .
நான் ஸ்கூலுக்கு போக மாட்டேன்னு சொல்லிட்டேன்..”
“ இல்லையே ஸ்கூல் முடிச்சிட்டியே.. அநேகமா நீ காலேஜ் தானே போயிருக்கணும் .”
“அதுதான்.. காலேஜுக்கு போக மாட்டேன்னு சொல்லிட்டேன் .அப்பாவும் சரி வீட்ல இருந்துட்டு போகட்டும்னு விட்டுட்டாங்க .”
“சரி உன் வீட்ல வேற யாரும் இல்லயா..நீ மட்டும் தானா”
“ இல்லையே எனக்கு ஒரு தங்கச்சி இருக்கிறா.. பேரு நித்யா.
இப்போ காலேஜ்ல படிச்சுக்கிட்டு இருக்கறா..”
“ நீ மட்டும் தான் தனியா பேசுவியா .. இல்ல உன் தங்கச்சியும் இப்படி தானா..”
“அவ நல்ல புத்திசாலி தனமா பேசுவா .”
“சரி அப்படி என்ன பேசினா..”
“ அவதான் சொன்னா நீ போலீஸ்காரனை பார்த்து பயந்து பயந்து ஓடுற ..
அப்பா உனக்கு போலீஸ் வேலையில இருக்குற பையனை மாப்பிள்ளையா கூட்டிட்டுட்டு வத்து இருக்கறாங்க .
அவர் பெரிய ஆபீஸர் ..இனி ஆபீஸர் அம்மாவை பாக்கணும்னா தனியா டைம் கேட்டு தான் வரணும் தெரியுமான்னு என்கிட்ட சொன்னா…
அதுக்கு பிறகு தான் புரிஞ்சுது.. ஓ.. எனக்கு தெரியாம இவங்க ஏதோ பெரிய வேலை செய்றாங்கன்னு ..
அதுதான் இந்த கல்யாணம் பிடிக்கலைன்னு எஸ்கேப் ஆகி வந்துட்டேன்.”
“ இதனால உன் அம்மா அப்பாவோட பேரு கெட்டுப்போகாதா .”
“அப்படி எல்லாம் கேட்டு போகாது .அவங்களுக்கு என்னை பத்தி நல்லா தெரியும் .
இன்னும் கொஞ்ச நாள் தேடுவாங்க பிறகு எப்படியும் நானே திரும்பி வந்துருவேன்.
உங்களுக்கு தெரியுமா.. இந்த கல்யாணம் இப்போதைக்கு நின்னுடும் .
இந்த பேச்சு வார்த்தையை நிறுத்திடுவாங்க.
அவ்வளவுதான் ..
எனக்கு அது தானே வேணும் பிறகு கொஞ்ச நாள் கழிச்சு திரும்ப வீட்டுக்கு போனா அவங்க கூப்பிட்டு வச்சிக்குவாங்க .
இப்போதைக்கு இந்த மாப்பிள்ளை பிரச்சனை முடிஞ்சா போதும்”.
“ புத்திசாலித்தனமா பேசுறதா நினைப்பா” என்று கேட்க..
“என்ன நீங்க? நான் பேசறது கரெக்ட் தானே .”
“பேசுவது கரெக்ட்டுன்னு சொல்ல மாட்டேன். லூசுத்தனமா தான் இருக்குது.
சரி ரயில்வே ஸ்டேஷனுக்கு போன பிறகு எங்க போறதா பிளான் .”
“அது எதுக்கு நான் உங்ககிட்ட சொல்லணும் .”
“யாராவது உறவுக்காரங்க வீட்டுக்கு போறியா இல்ல பிரண்ட்ங்க வீட்டுக்கு எங்கேயாவது போறியா”.
“ இதெல்லாம் தெரிஞ்சு நீங்க என்ன செய்யப் போறீங்க.”
“ நான் என்ன செய்யப் போறேன்.. ஒரு பொண்ணுக்கு லிப்ட் கொடுத்தேன் .
அந்த பொண்ணு பத்திரமா இருக்கிறாளா இல்லையான்னு தெரிஞ்சுக்க வேண்டாமா.
அந்த ஆர்வத்தில் கேட்கிறேன்”.
“ அது தான் எனக்கும் தெரியல சார் .எனக்கு பிரண்டுன்னு யாரும் கிடையாது.
அதே மாதிரி தான் உறவுக்காரங்களும் வெளியில யாரும் இல்ல.
என்ன செய்ய போறேன்னு தெரியல.. ஏதோ ஒரு தைரியத்துல வண்டி ஏறி கிளம்பி வந்துட்டேன் .
இப்பவும் கொஞ்சம் பயமா தான் இருக்குது .”
“அப்படின்னா வண்டியை ஊருக்கு திருப்பிடலாமா “.
“ஐயோ அதெல்லாம் முடியாது விடிஞ்சா அந்த போலீஸ்காரன் கூட எனக்கு நிச்சயம் பண்ணி முடிச்சிடுவாங்க.
அப்புறமா என்னால முடியாது. போலீஸ்காரனை பார்த்தாலே எனக்கு பயம் .
அவங்கள பார்த்தாலே அலர்ஜி யாருமே நல்லவங்க கிடையாது தெரியுமா .”
“இது என்ன ஒட்டு மொத்தமா இப்படி ஒரு வார்த்தை சொல்ற..”
“ உங்களுக்கு சொன்னா புரியாது சார் .நான் நிறைய பார்த்திருக்கிறேன் .
இந்த போலீஸ்காரங்க எந்த மாதிரி நடந்துக்குவாங்கன்னு..
நீங்க நியூஸ்ல எல்லாம் பாக்கறது இல்லையா ..
ரோட்ல போய் கிட்டு இருந்தா கூட சும்மா போறவங்கள கூட அடிப்பாங்க..
ஒரு நியூஸ்ல பார்த்தேன் அநியாயம் தெரியுமா..
ஒரு ரோட்டோரத்தில் ஒரு வயசான அம்மா இட்லி சுட்டு வித்துக்கிட்டு இருந்தாங்க.
சம்பந்தமே இல்லாம ஒரு போலீஸ்காரன் வந்து அந்த வண்டியை அடிச்சு நொறுக்கி அத்தனையையும் ரோட்டில் கொட்டி எவ்ளோ ஆச்சு தெரியுமா .
அந்த அம்மா பாவம் இல்ல.. இதெல்லாம் பார்க்கும் போது எவ்வளவு கோவம் வருது தெரியுமா .
அப்ப தான் முடிவு பண்ணினேன் இந்த போலீஸ்காரங்களை மட்டும் கல்யாணம் பண்ணிக்க கூடாதுன்னு ..”
“அவ்வளவுதானா இன்னும் வேற ஏதாவது இருக்கா “.
“இன்னுமா..
இருக்கே.. என் பிரண்டு ஒருத்தி பேரு செல்வி ரொம்ப இன்னோசென்ட் ..
அந்த பொண்ண ஒரு போலீஸ்காரன் காதலிச்சு ஏமாத்தி விட்டுட்டு போயிட்டான்.
கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொல்லிட்டான்.
கடைசில அந்த பொண்ணு என்ன பண்ணினா தெரியுமா?”
“ என்ன பண்ணினா ?”
“சூசைட் பண்ணிக்கிட்டா.. அதுக்கு பிறகு தான் இந்த போலீஸ்காரர்களே ஆகாதுன்னு முடிவுக்கு வந்தேன் .
யாருமே நல்லவங்க கிடையாது சார் .இந்த போலீஸ்காரங்க லஞ்சம் வாங்குவாங்க .
சட்டத்தை மீறி எல்லா வேலையும் செய்வாங்க. இப்படி நிறைய கேட்டு கேட்டு எனக்கு சலிச்சு போச்சு .
அதனாலதான் இந்த முடிவு..”
“ ஹப்பா நிறைய ஆராய்ச்சி பண்ணி இருப்ப போல இருக்குது .”
“அதனால தான் இப்படி எல்லாம் முடிவு பண்ணி இருக்கிறேன்..”
2
“என்ன நான் முடிவு பண்ணியது தப்பா “.
“ஐயோ தப்புன்னு யாராவது சொல்லுவாங்களா ..
எவ்வளவு புத்திசாலி நீ.. எவ்வளவு யோசிச்சு அழகா முடிவு பண்ணி இருக்குற..
கரெக்ட்டா நிச்சயத்துக்கு முந்தின நாள் வீட்டை விட்டு ஓடி வந்து இருக்கிற..
இதெல்லாம் திறமை தானே.. இந்த மாதிரி திறமை எல்லாம் எல்லாத்துக்கும் வந்துடாதே..” விஷ்வா அமைதியாக இருக்க நிதிஷ் கிண்டலாக கூறினான்.
“ நீங்க என்னை பாராட்டுறீங்களா இல்ல கிண்டல் பண்றீங்களா.. எனக்கு சந்தேகமா இருக்குது”.
“ சந்தேககம் எல்லாம் படாதம்மா.. உண்மையிலேயே பாராட்டத்தான் செஞ்சேன் .
சரி இப்போ அங்க போற கரெட்டு ..எங்க போய் தங்குவ ..ஏதாவது பிளான் இருக்கா..”
“ இந்த நிமிஷம் வரைக்கும் எதுவுமே இல்ல .என்கிட்ட கொஞ்சம் பணம் இருக்குது .
அதை வைத்து தான் ஏதாவது மேனேஜ் பண்ணனும் .”
“ஒரு பத்தாயிரம் இருக்குமா..”
“அத எதுக்கு நான் உங்ககிட்ட சொல்லணும் . என்ன ஏமாற்றி காசு பிடுங்க பாக்கறீங்களா..”
“ உனக்கு லிஃப்ட் கொடுத்துட்டு உன் காசு வேற பிடுங்குவாங்களா ..
எங்கள பார்த்தா திருட்டு பசங்க மாதிரியா இருக்குது .”
“அப்படி தெரியல ஆனாலும் சந்தேகம் வருதே .”
“சரி சரி எப்படியோ பத்திரமா இருந்தா சரி. இன்னமும் பத்து நிமிஷத்துல ரயில்வே ஸ்டேஷன் வந்துரும்.
இறக்கி விடறோம் கரெக்ட்டா டிரெயினை பிடிச்சு போயிடு.
எந்த ஊருக்கு போறதா இருக்கற.. பிளான் ஏதாவது இருக்குதா .”
“அதுதான் சொன்னேனே இந்த நிமிஷம் வரைக்கும் எதுவுமே இல்லன்னு .”
“வேணும்னா நான் உனக்கு உதவி செய்யட்டுமா” இப்பொழுது விஷ்வா குரல் கொடுக்க ..யோசனையோடு திரும்பி அவ,னின் முகத்தைப் பார்த்தாள்.
“ என்ன ஹெல்ப் பண்ணுவீங்க சொல்லுங்க கேட்கலாம் .ஓகே ஆகுற மாதிரி இருந்தா சரிதான்”.
“ எனக்கு கோயம்புத்தூர்குள்ள ஒரு நல்ல ஹாஸ்டல் தெரியும்.
நிறைய பணம் எல்லாம் வாங்க மாட்டாங்க ..மாசம் 6000 வாங்குவாங்க.
சாப்பாடு மூணு வேளை கொடுத்திடுவாங்க. நீ ஏதாவது தங்கி வேலை செய்றதா சொல்லிட்டு அங்க போய் தங்கிக்கலாம்.
பாதுகாப்பாகவும் இருக்கும்.. என்ன சொல்ற “.
“கேக்க நல்லாத்தான் இருக்குது ஆனா 6000 ரொம்ப அதிகமா தெரியலையா..
அந்த 6000 ரூபாய் வச்சு ஒரு மாசத்துக்கு நாங்க குடும்பமே சாப்பிடுவோம் தெரியுமா.”
“ சரி தான் இப்படி எல்லாம் கணக்கு பார்க்கிறவ வீட்டை விட்டு வெளியே வந்திருக்கக் கூடாது .
உனக்கு பாதுகாப்பான இடம் வேணுமா.. வேணாமா …அத மட்டும் சொல்லு .”
“ எனக்கு நெஜமா வேணும்.. சொல்லுங்க எந்த இடம்” என்று கேட்க..
“ உன்கிட்ட ஆண்ட்ராய்டு போன் இருக்குது தானே”.
“ இருக்குது இதோ” என்று எடுத்துக்காட்ட ..
“சரி அதுல லொகேஷன் செட் பண்ணி அட்ரஸ் எழுதி தரட்டுமா..
அங்க போய் சொல்லு.. உனக்கு ரூம் தருவாங்க .பத்திரமா இரு.
எவ்வளவு நாள் இருப்பியோ இருந்துக்கோ அதிகபட்சம் ஒரு 15 நாள் ஒரு மாசத்துக்குள்ள ரிட்டன் உன் வீட்டுக்கு வர்ற வழியை பாரு .
இந்த மாதிரி வெளியே சுத்திக்கிட்டு இருக்காத எல்லாரும் நல்லவங்களா இருக்க மாட்டாங்க.
பின்னாடி ஏதாவது பிரச்சனையை ஆயிடுச்சுனா கஷ்டம் “.
“புரியுது.. நீங்க சொல்றது கரெக்ட் தான் .நான் எடுத்த முடிவு தப்பு தான் .
ஆனா எனக்கு வேற வழி தெரியலையே ..
எனக்கு போலீஸ்காரன் வேண்டாம்னு தானே சொல்றேன் .
வேற யாரையாவது இழுத்துட்டு வந்து நிறுத்தி இருந்தால் யோசிக்காமல் சரின்னுதானே சொல்லி இருப்பேன்.
இதுவரைக்கும் அப்பாவோட பேச்ச நான் தட்டினது எல்லாம் இல்லை தெரியுமா .”
“அதனாலதான் பெருசா அப்பாவுக்கு ஆப்பு வச்சிட்ட போல இருக்கு” என்று டிரைவிங் சீட்டில் இருந்த நிதீஷ் சொல்லி சிரிக்க ..
“சார் நீங்க பேசுறது எதுவுமே சரி இல்ல. ஆரம்பத்துல இருந்து ரொம்ப என்னை கிண்டல் பண்ற மாதிரி இருக்கு.
இன்னொரு முறை இது மாதிரி பேசாதீங்க.. இந்தாங்க சார் என்னோட போன்.. பாருங்க.. பாத்துட்டு எனக்கு சரியா அட்ரஸ் கொடுங்க ..
என்ன.. பக்கத்துல அந்த இடம் இருந்தா யோசிக்காமல் உங்களையே கொண்டு போய் என்னை அங்க விட்ருங்கன்னு சொல்லி இருப்பேன் .
இப்ப அதுக்கு தான் வழி இல்லையே ..”
“சரிதான் போனா போகட்டும்னு லிப்ட் கொடுத்தால் விட்டா எங்களையே கொண்டு விட சொல்லுவியா .
அதுக்கு எல்லாம் வேற ஆள பாருமா ..நாங்க திரும்பி ஊருக்குள்ள போயாகணும்.
எங்களுக்காக அங்க வெயிட் பண்ணிக்கிட்டு இருக்காங்க.”
“ஆமா இதைக் கேட்கவே மறந்துட்டேன் .
எங்க ஊருக்குள்ளதான போறீங்க.. யார் வீட்டுக்கு போறீங்க .
அதை நீங்க சொல்லவே இல்லையே ..”
“அதுவா நீ தான் சொன்ன இல்ல .நாளைக்கு நிச்சயம் பண்ண வர போறாங்கன்னு..
அந்த மாப்பிள்ளையோட பிரண்டுங்க நாங்க ரெண்டு பேரும் ..”
“அச்சச்சோ கடைசியில் உங்க வண்டியிலேயா உதவி கேட்டு வந்தேன்.
நீங்க மாப்பிள்ளைகிட்டயோ இல்ல எங்க வீட்டுலயோ யார்கிட்டயும் சொல்ல மாட்டீங்க தானே..
லிப்ட் கொடுத்து அனுப்பி வைக்கிறோம் ..இதுக்கு அப்புறமா சொல்லவா போறோம்.
உன்னை கொண்டு போயி ரயில்வே ஸ்டேஷன்ல விட்டுட்டு நாங்க எங்க வேலைய பாத்துட்டு கிளம்ப போறோம்.
இனி அந்த ஊருக்குள்ள எங்களுக்கு வேலை இல்லையே.
நாளைக்கு தான் நிச்சயம் நடக்காதே..
பொண்ணு இல்லங்குறப்போ எப்படி நடக்கும் .”
“அதுதானே ரொம்ப தேங்க்ஸ்.. யார்கிட்டயும் மறந்து கூட சொல்லிடாதீங்க .
எனக்கு இப்படி ஒரு உதவியை செஞ்சத ..நானும் உங்கள எல்லாம் மறக்கவே மாட்டேன் .
நிச்சயமாக உங்களுக்கு என்னைக்காவது உதவி தேவைப்பட்டால் நான் வந்து செஞ்சு தருவேன்.”
“ யாரு நீ !!செஞ்சு தருவ!! சரிதான் .அப்படி ஒரு நிலைமை எங்களுக்கு வராது .
இதோ வந்தாச்சு இறங்கிக்கோ.. பத்திரமா போ .இத பாரு நான் கொடுத்த அந்த ஹாஸ்டலுக்கு போ
ஹாஸ்டல் வார்டன் என்னோட ஃப்ரெண்டோட அம்மா தான் .
அவங்க உன்னை பத்திரமா பாத்துக்குவாங்க .
சீக்கிரமா வீட்டுக்கு கிளம்புற வழியை பாரு “என்று சொல்ல..
“ சரி சார் ரொம்ப நன்றி. இந்த உதவியை என்னைக்குமே நான் மறக்க மாட்டேன் .
டிரைவர் அண்ணா உங்களுக்கும்தான் “என்று சொல்ல ..
“யாரு நான் உனக்கு அண்ணனா ..பிச்சுடுவேன் ஒழுங்கா வழிய பார்த்து போற வழிய பாரு .”என்று சொன்னபடியே சிரிக்க.. வேகமாக உள்ளே ஓடினால் பவானி.
இவர்கள் வண்டியை திருப்புவதற்கு முன்பாகவே சில நொடிகளிலேயே பதறி அடித்து ஓடி வந்தாள்.
வேகமாக வண்டியில் முன்னாள் வந்து விழப்போவது போல் வந்து நின்றவளை பார்த்து சட்டென பிரேக்கை அழுத்தினான்.
“இப்ப என்ன ஆச்சு.. எதற்காக பதறி அடிச்சு ஓடி வர்ற..
யாராவது சொந்தக்காரங்களை பார்த்துட்டியா..”
விஷ்வா திரும்பி ரயில்வே ஸ்டேஷனை பார்த்தபடி கேட்க..
“ஆமா எதிர்ல ஒரு பொண்ணு வந்தா.அவ என்னோட தங்கச்சி போல இருக்கு .
ஆப்போசிட்ல வந்துகிட்டு இருக்கறா…நான் பார்த்து பயந்து ஓடி வந்துட்டேன் .”
“பயந்து ஓடி வந்துட்டியா உன் தங்கச்சின்னா உனக்கு அத்தனை பயமா “.
‘அப்படி இல்லை மறுபடியும் வழக்கம் போல அந்த மாப்பிள்ளைக்கு என்னை நிச்சயம் பண்ணி கொடுத்துடுவாங்களே..
அதனாலதான் பயந்து ஓடி வந்துட்டேன் “.
“சரி இப்ப என்ன செய்யணும்”.
“ எனக்கு தெரியல” என்று சொன்னவள் வேக வேகமாக கதவை திறந்து மறுபடியும் வண்டிக்குள் வந்து அமர்ந்து கொண்டாள்.
“ஏய்.. என்ன உள்ள வந்து
உட்காருற.. நாங்க போக வேண்டாமா” என்று வேகமாக நிதீஷ் கேட்டான்.
“நீ கொஞ்சம் பேசாம இருடா. இப்ப என்ன செய்யணும் சொல்லு “என்று கேட்க..
“ எனக்கு தெரியலையே.. ஏதாவது ஐடியா கொடுங்க “என்று தலையை குனிந்து கொண்டாள்.
சற்று நேரத்தில் எல்லாம் இவள் சொன்ன இவளுடைய தங்கை கடந்து போக…
இவனுக்கு காட்டினாள்..இப்போதைய பெண்கள் போல ஒரு ஜீன்ஸ் மேலே ஒரு டீசர்ட் தலையில் ஒரு குல்லா என முற்றிலும் வேறு தோற்றத்தில் இருந்தாள்.
“என்ன உன்னோட தங்கச்சி உன்னை மாதிரி இல்லையா.. அப்படியே ஆப்போசிட்டா இருக்கறா..
நீ குடும்பப்பாங்க சேலை கட்டி இருக்கற.. உன்னோட தங்கச்சி அப்படியே ஆப்போசிட்டா இருக்கா..”
“ அவ டவுன்ல படிக்கிறால்ல அப்போ அது மாதிரி தானே இருக்கணும் .
ரொம்ப தைரியசாலி தெரியுமா”.
“ உன்னை விடவா “என்று விஷ்வா கேட்க..
“ஏன் கேட்கறீங்க”.
“ பின்ன இல்லையா.. வீட்டை விட்டு ஓடி வரணும்னா எந்த அளவுக்கு தைரியம் வேணும்.
நீ ஓடி வந்திருக்கறயே.. உன்னை விடவும் தங்கச்சி தைரியசாலின்னு சொன்னா நான் ஒத்துக்க மாட்டேன் “என்று சொல்லும்போதே..
“ இப்ப நான் என்ன செய்யறது எங்க போகணும் ..எனக்கு ஏதாவது வழி சொல்லுங்களேன்” என்று இவர்களிடமே கேட்டாள்.
“உனக்கு நிறைய தைரியம் தான்..ஆனா இந்த அளவுக்கு இருக்க கூடாது.
வேற யார்கிட்டயாவது மாட்டி இருந்தால் இன்றைக்கு உன் நிலைமையே வேற மாதிரி ஆகி இருக்கும் .
சரியான இடத்துக்கு வந்ததால் தப்பிச்ச” மனதிற்குள் சொல்லிக் கொண்டவன் .
“இரு ஒரு நிமிஷம் .. நான் ஒரு போன் பண்ணிட்டு வந்த பிறகு உன்னை எங்க கொண்டு போய் விடறதுன்னு யோசிக்கிறேன்” என்று விஷ்வா இறங்கி வெளியே நகர்ந்தான்.
3
போனை எடுத்தவன் அழைத்தது தன்னுடைய தாய் தந்தைக்கு தான் .
“என்னமா என்ன செஞ்சுகிட்டு இருக்கீங்க .”
“நாளைக்கு நிச்சயத்துக்கு போகனும் இல்லையா .பூ தட்டுன்னு எல்லாத்தையுமே அரேஞ்ச் பண்ணிக்கிட்டு இருக்கோம் .
11 தட்டு ரெடி பண்ணி இருக்கிறோம் .ஊருக்குள்ள இருக்குற முக்கியமான சொந்தக்காரர்கள் எல்லாம் வர சொல்லியாச்சு .”
“சரிதான் அதுக்கு அங்கே பொண்ணு இருக்கணும்”.
“ என்னடா சொல்ற ..”
“அந்த பொண்ணுக்கு இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்ல போல இருக்குது .
வீட்டை விட்டு வெளியே வந்துட்டா ..”
“அச்சச்சோ அப்படியா ..அந்த பொண்ணுக்கு உலகமே தெரியாதுடா..
என்னடா இப்படி குண்ட தூக்கி போடற ..அந்த பொண்ணோட பேச்சு ,சிரிப்பு அத்தனையுமே வெள்ளந்திதனமாக இருக்கும். அதனால தான் உனக்கு பேசி முடிவு பண்ணினோம் “.
“இப்ப என்ன பண்ணலாம் சொல்லுங்க “.
“நீ சொல்றது எனக்கு புரியலடா”.
“ அந்த பொண்ணு இப்போ என் பக்கத்துல தான் இருக்கறா.. என் வண்டில இருக்கறா..
அந்த பொண்ணு மனசுல யாரோ போலீஸ்காரங்க தப்பானவங்கன்னு சொல்லி வச்சிருப்பாங்க போல இருக்கு.
அந்த பொண்ணு ரொம்ப பயத்தோட இருக்கறா..
நீங்களே பார்த்து கல்யாணம் பண்ணி வச்சா கூட இந்த கல்யாணம் நாளைக்கு கஷ்டம் தான் .”
“என்னடா இது ..அதிகபட்சம் அரை மணி நேரம் பேசி இருப்பியா..
அதுக்குள்ள இப்படி ஒரு முடிவு சொல்லுவியா .அந்த பொண்ணு கிட்ட பேசும் போது தெரியலையா .
அந்த பொண்ணு எவ்வளவு வெள்ளந்திதனமாக இருக்கிறான்னு”.
“அதெல்லாம் கரெக்ட் மா.. அந்த ஒரு காரணத்தை வைத்து கல்யாணம் பண்ணிக்க முடியுமா .
நான் இருக்கிற வேலைக்கு புத்திசாலித்தனம் வேணும் .
நாளைக்கு இவள் பின்னாடியே இவளுக்கு பாதுகாப்பு கொடுத்துட்டு என்னால சுத்திக்கிட்டு இருக்க முடியாது புரிஞ்சுதா .”
“அப்படி இல்லடா .நீ எதுக்காக பாதுகாப்பு கொடுத்து சுத்த போற ..
உனக்கு எப்படியும் குவாட்டர்ஸ்ல வீடு தர போறாங்க. அங்க தான நீ இருப்ப ..
இவ வீட்ல பத்திரமா இருக்க போறா.. இந்த மாதிரி பேசுறத நிப்பாட்டு விஷ்வா
எனக்கு அந்த பொண்ண ரொம்ப பிடிச்சிருக்கு. கல்யாணம்னு ஒன்னு பண்ணினா அந்த பொண்ண தான் நீ பண்ணிக்கணும் .”
“ஏன் மா இப்படி பிடிவாதம் பண்றிங்க .சரி இப்ப நான் அந்த பொண்ண என்ன பண்றது”.
“ எனக்கு புரியல .”
“எங்க போறதுன்னு தெரியாம என் வண்டியில் தான் உட்கார்ந்து இருக்கிறா..
ஆண்டியோட ஹாஸ்டல் அட்ரஸ் கொடுத்தேன் .ஆனா இப்ப அங்கயும் போற மாதிரி தெரியல .
வேற எங்கேயாவது அழைச்சிட்டு போங்கன்னு வந்து நிக்குறா ..”
“ஒன்னு செய்யேன் ..பேசாமல் நம்ம எஸ்டேட்டிற்கு அழைச்சிட்டு போடா “.
“ஹலோ என்ன விளையாடுறீங்களா. வயசு பொண்ண கூட்டிட்டு போயி நான் என்ன செய்யறது.”
“ நீ ஏன்டா அப்படி யோசிக்கிற .வீட்டில வேலைக்கு ஆள் வேண்டும் என்று சொல்லி அந்த பொண்ண கூட்டிட்டு போ.
உன்ன பத்தி பக்கத்திலிருந்து பார்த்து புரிஞ்சுகிட்டான்னா உன் மேல வச்சிருக்கற அந்த நம்பிக்கை மாறிடாது.
போலீஸ்காரன்னா நல்லவன்னு அவ மனசுக்குள்ள வரும் தானே .
அப்புறமா கல்யாணம் பண்ணிக்கலாம்”.
‘ சரிதான் அந்த பொண்ணோட அப்பா ,அம்மா கிட்ட என்ன சொல்லுவீங்க .”
“இத பாருடா உங்க அப்பாவோட பிரண்டு தான் அந்த பொண்ணோட அப்பா..
சொன்னா புரிஞ்சுக்கவார்.. நாளைக்கு நிச்சயம் வேண்டாம் இன்னொரு நாள் வச்சுக்கலாம்.
அது மட்டும் இல்ல..
பொண்ணு இந்த மாதிரி வீட்டை விட்டு வெளியே கிளம்பி போயிட்டாங்கறது இந்நேரத்துக்கு அவங்களுக்கும் தெரிஞ்சிருக்கும் .
நிச்சயமா இங்க கூப்பிட்டு என்னன்னு சொல்வாங்க .
அப்ப நாங்க சொல்லி புரிய வச்சிக்கிறோம்.
இல்லன்னா நீயே கூப்பிட்டு வேணும்னாலும் சொல்லிடு.
பொண்ணை பத்தின பயம் வேணாம் அவ பத்திரமாக இருக்கிறான்னு.
நான் பார்த்துக்கிறேன் இன்னொரு நாள் நிச்சயம் பண்ணிக்கலாம்னு சொல்லிடு புரிஞ்சுதா .”
“இப்ப அடுத்ததா அங்க நான் போன் பண்ணி பதில் சொல்லணும் .அதுதானே .”
“ஏன் சொல்ல மாட்டியா ..நீ போலீஸ்காரன் தானே.. எவ்வளவு அழகா போட்டு வாங்குவ .
அது மாதிரி ஏதாவது பேசி சமாதானம் சொல்லு..
எனக்கு அந்த பொண்ணு வேணும். அவ்வளவுதான் “.
“சரி சரி விடுங்க . ஃபோன்னை வைங்க .நான் பாத்துக்கறேன்” என்று சொன்னவன் அடுத்ததாக பவானியில் தந்தைக்கு அழைக்க..
ஏற்கனவே மகளை காணவில்லை என அரக்க பறக்க தேடிக் கொண்டிருந்தவர் சற்று பதட்டத்தோடு தான் போனை அட்டென் செய்தது .
“யார் பேசுறீங்க “.
“நான் தான் விஷ்வா அங்கிள் ..எப்படி இருக்கீங்க .நல்லா இருக்கீங்களா”.
“ தம்பி “சொல்லும் போதே குரல் கமர இவனுக்கு புரிந்தது .
“உங்க பொண்ணு அங்கே இருக்க மாட்டா தானே..
உங்க பொண்ணு ஊர விட்டு வெளியே போறதுக்கு ஹெல்ப் கேட்டது என்கிட்ட தான் .
உங்க பொண்ணு கிட்ட என்னோட போட்டோவை நீங்க காட்டலையா ..”
“இல்ல தம்பி போட்டோ கொடுத்தேன் .அவ பார்க்கலை போல இருக்கு .”
“சரி சரி பொண்ண பத்தின கவலை வேண்டாம். நாளைக்கு நிச்சயம் வேண்டாம் .
உங்க சொந்தக்காரங்க கிட்ட எல்லாம் சொல்லிடுங்க.
இன்னொரு நாள் நல்ல நாளா பார்த்து வச்சுக்கலாம்னு..
பொண்ணு பத்திரமா என்கிட்ட தான் இருக்கிறா..
என்ன பத்தி புரிய வைத்து விட்டு நானே உங்ககிட்ட அழைச்சிட்டு வரேன்.
அதுக்கு பிறகு நிச்சயம் பண்ணிக்கலாம் .சரியா “.
“தம்பி இது சரி வருமா ..இதெல்லாம் தப்பு இல்லையா. இது மாதிரி நான் யோசிச்சது கூட கிடையாது.
கல்யாணத்துக்கு முன்னாடி ஒரு பையன் கூட எப்படி அனுப்பி வைக்க முடியும் .”
“நீங்க ஏன் அங்கிள் இப்படி எல்லாம் யோசிக்கிறீங்க .நான் இப்போ எஸ்டேட்டுக்கு தான் போறேன் .
அங்க அம்மாவுமே வந்துடுவாங்க .அம்மாவுக்கு துணையா இருக்கட்டும்.
கொஞ்சம் பழகி பார்க்கட்டும் .நிச்சயமா உங்க பொண்ணு என்னை தேர்ந்தெடுப்பா.
இந்த பையன தான் கல்யாணம் பண்ணுவேன்னு சொல்லுவா..
அப்ப நீங்க பார்த்து முடிவு பண்ணுங்க சரியா .இப்போதைக்கு உங்க பொண்ணப்பத்தி யாராவது கேட்டா..
சொந்தக்காரங்க வீட்டுக்கு போய் இருக்கிறான்னு ஏதாவது சொல்லி சமாளிங்க .
என்ன அங்கிள் நான் சொல்றது கேக்குதா.. என்னைக்குனாலும் அம்மா விருப்பப்பட்டது உங்க பொண்ண தான் .
தனக்கு மருமகளா வரணும்னு ஆசைப்பட்டது உங்க பொண்ணை தான்..
அதனால அவங்களோட ஆசையை நிச்சயமா நான் நிறைவேற்றி வைப்பேன்.
கவலை இல்லாமல் நிம்மதியா அடுத்த வேலையை கவனிங்க” சொல்லிவிட்டு போனை வைத்தவன்.
வேகமாக அருகே வந்து வழக்கம் போல தன்னுடைய இருக்கையில் அமர்ந்தான்.
“என்ன சார் நீங்க பேசி முடிச்சிட்டு வந்தாச்சா. நான் நல்லா யோசிச்சு பார்த்தேன்.
என்னை அந்த ஹாஸ்டல்ல கொண்டு போய் விட்டுடுங்க”.
“ அதைவிட பெஸ்டான ஐடியா என்கிட்ட இருக்குது .கேக்குறியா ..கேட்க தயார்னா சொல்லு .சொல்றேன் “என்று விஷ்வா கூற..
“ என்ன சொல்லுங்க கேட்கலாம்” என்று வேகமாக கேட்டாள்.
“என்னோட வீட்ல வேலைக்கு ஒரு ஆள் தேவை இருக்குது.. பயப்படாத என்னோட வீடுன்னா நான் மட்டும் இல்ல .
என்னோட வீட்ல எல்லாரும் இருப்பாங்க. அம்மா, அப்பா இன்னமும் கொஞ்சம் வேலைக்கு ஆட்கள் எல்லாருமே இருப்பாங்க.
நீ அங்க வேலை செய்யறையா.. உனக்கு சம்மதமா.. சம்மதம்னா நேரா அழைச்சிட்டு போறேன் பயப்பட வேண்டாம்.”
“ம்.. ஐடியா நல்லாத்தான் இருக்குது ஆனா இது சரி வருமா தெரியலையே..
ஒருவேளை நீங்க தப்பானவரா இருந்தா “.
“சரிதான் தப்பானவனா இருந்தா நம்பி மறுபடியும் இதே வண்டியில் ஏறி இருப்பியா..
பயப்படாதம்மா ..நீ எங்க வேலை செய்ய போறேங்கிறது உங்ககிட்ட சொல்றோம் .
போற இடத்தோட அட்ரஸ் கூட தெளிவா சொல்லிடறோம் .”
“சரி அப்படின்னா ஓகே தான்.
எனக்கு என்ன வேலை தருவீங்க “.
“உனக்கு என்ன வேலை தெரியும் .அத முதலில் சொல்”.
“நான் ரொம்ப நல்லா சமைப்பேன் .விதவிதமா என்ன குடுத்தாலும் சமைப்பேன் .
அப்புறமா இந்த ஆர்ட் அண்ட் கிராப்ட் எல்லாம் ரொம்ப நல்லா வரும் .
துணி தைக்க தெரியும் அப்புறமா தோட்டத்தை ரொம்ப அழகா பராமரிப்பேன்..
மொத்தத்துல வீட்டை ரொம்ப சத்தமா வச்சுக்குவேன் .”
“ஆக வீட்டு வேலை எல்லாம் பர்ஃபெக்ட்டா செய்வ அது தானே ..”
“ஆமாம்”.
“ அப்படின்னா சரி என்னோட அம்மாவுக்கு உதவியா நீ இருப்பியாம் .
என் அம்மா கிட்ட பேசறியா” என்று சொன்னவன் தாயாருக்கு போனில் அழைத்து..” அம்மா நான் சொன்னேன் இல்லையா .
வீட்டு வேலைக்கு ஒரு பொண்ணு அழைச்சிட்டு வரேன்னு .
அந்த பொண்ணு கிட்ட பேசுறீங்களா” என்று சொல்ல..
“ டேய் என்னடா நடக்குது அங்க..
என் மருமகளை பார்த்தா வீட்டு வேலை செய்ற மாதிரியா இருக்குது .
வீட்ல பத்துக்கு மேல வேலைக்காரங்க இருக்காங்க.
நீ என் மருமகளை வேலைக்காரி ,வீட்டு வேலை செய்யறவ சொல்லி வைக்கற” என கோபமாக கோபித்துக் கொள்ள ..
“அம்மா கோச்சுக்காதீங்க .இப்ப அந்த வேலை தான வீட்ல காலியா இருக்குது “என்று சொன்னபடியே ..இவளிடம் நீட்ட.. வாங்கி “ஹலோ நான் பவானி பேசுறேன்” என்று தயங்கி பேச..
“எப்படிமா இருக்கிற.. நல்லா இருக்கிறயா.. பயப்படாம வா. இப்பதான் என் பையன் சொன்னான் .
உனக்கு ஏத்த வேலை என் வீட்ல இருக்குது “என்று சொல்ல “சரிமா வரேன் “என்றாள்.
1
“என்னடா விஷ்வா 8 மணிக்கு இவ்வளவு இருட்டா இருக்குது. இந்த மாதிரி ஒரு ஊர்ல தான் உனக்கு பொண்ணு பார்க்கணுமா.”
நிதிஷ் விஷ்வாவின் உயிர் தோழன். சிறு வயதிலிருந்து ஒன்றாக படித்து ஒரே துறையில் வேலைக்கு சேர்ந்தவர்கள்.
“அப்பாவோட பிடிவாதம் இப்போ இங்க வந்து நிக்குது .நீ வேற ஏன்டா” என்று சொன்னபடியே..
“ ஒழுங்கா ரோட்டை பார்த்து வண்டியை ஓட்டு .
ஃபுல்லாவே இருட்டா இருக்கு. இதுல ஏதாவது விலங்குகள் மேல ஏத்திடாதே.”.
“ஆமா நீ சொல்றதும் சரிதான் இங்க மான் கூட்டம் யானை கூட்டம் எல்லாம் வரும்னு கேள்விப்பட்டு இருக்கிறேன்.
எதுக்கும் கொஞ்சம் ஜாக்கிரதையாக வண்டி ஓட்டுறேன்” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது சட்டென எதிர்புறத்தில் இருந்த சிறு சாலையில் இருந்து ஒரு பெண் ஓடி வருவது தெரிந்தது.
“ ப்ளீஸ் வண்டியை நிறுத்துங்க.. காப்பாத்துங்க ப்ளீஸ் .உதவி செய்யுங்க “என்று கையை காட்டி வண்டியை நிறுத்த சற்று யோசனையோடு வண்டியை ஸ்லோவ் செய்தவன் நண்பனின் முகத்தைப் பார்த்தான்.
“ என்னடா இது? யாரோ ஹெல்ப் கேட்டு வராங்க. என்ன பண்றது”.
“ இந்த ராத்திரி நேரத்தில் இப்படியே விட்டுட்டு போக முடியாது” என்று சொல்லவும்.. விஷ்வா நண்பனை பார்த்தபடியே வண்டியை நிறுத்த..
“என்னன்னு கேளு” என்று கூறினான்.
விஷ்வா கையில் இருந்த மொபைலுக்கு வந்திருந்த மெசேஜ்களை படித்துக் கொண்டு இருந்தான்.
அப்போது தந்தையிடம் இருந்து வந்த மெசேஜை பார்த்தான்.
“ இத பாருடா.. உனக்கு பேசியிருக்கிற பொண்ணு இந்த பொண்ணுதான்.
ஃபோட்டோவை நல்லா பார்த்துக்கோ.. நாளைக்கு காலையில நிச்சயம் இருக்குது கரெக்டா அங்க வந்து சேர்ந்திடணும் .
நம்ம எஸ்டேட்டில் தங்கி இருக்கிறோம். நேரா அங்க வந்திடு “என்று வந்திருக்க அடுத்ததாக இருந்த போட்டோவில் கிளிக் செய்யவும்…சரியாக எதிரில் என்ற பெண்ணின் முன்னாள் வண்டி நிற்கவும் சரியாக இருந்தது.
போட்டோவை ஒரு நிமிடம் பார்த்துவிட்டு எதிரில் பார்க்க இவனுக்கோ சற்று அதிர்ச்சி தான்.
எந்த பெண்ணை மணம் முடிக்க பேசியிருக்கிறார்களோ அந்த பெண்ணே எதிரில் நின்றிருந்தாள்.
கையில் சிறிய பேக்கோடு...
சற்று யோசனையோடு நண்பனின் முகத்தை பார்க்க.. அவனும் அவளை விசாரித்துக் கொண்டிருந்தான் .
“என்ன வேணும் ..யார் நீங்க.. எதுக்காக வண்டியை நிறுத்த சொன்னீங்க என்று கேட்க ..
“சாரி சார் ..எனக்கு ஒரு உதவி வேணும் .நான் ரெயில்வே ஸ்டேஷன் வரைக்கும் போகணும் என்னை கூட்டிட்டு போய் விட முடியுமா .ப்ளீஸ் ..ரொம்ப அவசரம் “என்று கூற ..
“யாருடா இது சரியான தத்தியா இருப்பா போல இருக்குது.” நண்பனிடம் திரும்பியவன் “ஊருக்குள்ள போற வண்டியை மறித்து திரும்ப ரயில்வே ஸ்டேஷன் வீடுன்னு சொல்றா.
ரொம்ப தெளிவான பொண்ணு தான் “என்று சிரிக்க..
“ கொஞ்சம் பேசாம இரு “என்று சொன்னவன் கையில் இருந்த மொபைலை அவனிடம் நீட்டினான்.
“ கொஞ்சம் இத பாரு “என்று சொல்ல..
மொபைல் பார்த்தவனுக்கு அப்படி ஒரு சிரிப்பு .”சரிதான் போ ..நாளைக்கு நிச்சயத்தை வச்சுக்கிட்டு விருப்பமே இல்லாமல் இந்த மாப்பிள்ளை பையன் ஊருக்கு வரான் .
அதே நேரத்துல அங்க பொண்ணு கல்யாணமே வேண்டாம்னு பேக்கோட புறப்பட்டுட்டா ..
நல்ல ஜோடி பொருத்தம் டா .இதைவிட பொருத்தம் எங்க தேடினாலும் கிடைக்காது.”
“ டேய் முதல்ல பேசாம இரு ..முதல்ல வண்டி ஓரமாக நிறுத்தி என்னன்னு கேளு “.
“என்னன்னு கேட்கிறது இரு. கேட்டு விசாரிச்சு சொல்றேன்”.
“ ஆமா நீ என்ன செய்ய போற..”
“ நான் என்ன செய்யறதா.. நான் என்ன செய்யணும். .
மாப்பிள்ளை வண்டியில் இருக்கிறேன்னு தெரிந்து மறுபடியும் அந்த பொண்ணு அந்த பக்கம் எங்கேயாவது ஓடிட்டா”.
“ டேய் வண்டியை நிறுத்துனதை பார்த்தால் தெரிஞ்ச மாதிரி எல்லாம் தெரியல .
எதுக்கும் நான் என்னை மறைச்ச மாதிரியே இருந்துக்கறேன். என்னன்னு டீடைல் விசாரி” என்று சொல்ல வண்டியை ஸ்லோ செய்து அவளுக்கு அருகில் நிறுத்தியவன்.
“ என்னம்மா என்ன பிரச்சனை” என்று கேட்க..
“நான் தான் சொன்னேனே ரயில்வே ஸ்டேஷன் வரைக்கும் என்ன கொண்டு போய் விடனும். நான் அவசரமா போகணும்”.
“ சரி ரயில்வே ஸ்டேஷன் போகணும் ..ஆனா நாங்க அவசரமா ஊருக்குள்ள போயிட்டு இருக்கறமே .”
“இத பாருங்க சார் நீங்க இன்னும் ஒன் ஹவர் கழிச்சு கூட இங்கே திரும்ப வந்துக்கலாம்.
எனக்கு ரொம்ப அர்ஜென்ட்.. என்னை கண்டு பிடிச்சிட்டாங்கன்னா என்னை இங்கிருந்து போக விட மாட்டாங்க”.
“ சரிமா எதுக்காக இங்கிருந்து கிளம்புற ..தெரிஞ்சுக்கலாமா ஏதாவது லவ் மேட்டரா.. ஏதாவது பையனை விரும்பறியா .அதனால அந்த பையன் பின்னாடி போவதற்காக அவசரமா கிளம்பி இருக்கிறயா? “
“என்ன சார் என்னை பாத்தா எப்படி இருக்குது . லிஃப்ட் கேட்டா உங்க இஷ்டத்துக்கு யோசிக்காமல் பேசுவீங்களா..
நீங்க சொன்னது கரெக்ட் தான். கல்யாணத்துக்கு நிச்சயம் பண்ண போறாங்க .எனக்கு அது பிடிக்கல.
அதனாலதான் கிளம்பி வரேன் ..அதுக்காக லவ் பண்றேன் .இப்படி எல்லாம் பேசாதீங்க.
நான் அந்த மாதிரி பொண்ணு எல்லாம் கிடையாது .”
“சரி அந்த மாதிரி பொண்ணு இல்ல ஆனா எந்த தைரியத்துல வர்ற வண்டியை இப்படி நிறுத்தற..
ஊருக்குள்ள வர்ற வண்டினா எல்லோரும் நல்லவங்களாவா இருப்பாங்க ..
கெட்டவங்க கூட இருப்பாங்க ஒருவேளை நாங்க தப்பான பசங்களா இருந்தா என்ன செய்வ..”
“ உங்க முகத்த பார்த்தாலே தெரியுது. அப்படி எல்லாம் தப்பு செய்ற மாதிரி தெரியல.
உங்களால உதவ முடியுமா இல்லையா .அத மட்டும் சொல்லுங்க “என்று சொல்ல யோசனையோடு அருகில் இருந்த நண்பனை பார்த்தான்.
அவன் இப்போது இறங்கி வந்திருந்தான்.
எதிரில் நின்றவளுக்கு சுத்தமாக அடையாளம் தெரியவில்லை .
இவன் தான் தன்னை பார்க்க வந்திருக்கிறான் என்பதும் தெரியவில்லை .
“இவர் யாரு உங்க பிரண்டா” என்று கேட்க..
” ஆமா இவனை எங்கேயாவது பார்த்த மாதிரி தெரியுதா .”
“அது எப்படி? இப்பதான் நீங்க ஊருக்குள்ள வரீங்க .
ரொம்ப புத்திசாலின்னு நினைச்சா இப்படி லூசுத்தனமா கேள்வி கேக்குறீங்க.”
“ சரியா போச்சு ..கொஞ்சம் முன்னாடி நீ லூசுன்ன.. இப்ப அவ உன்னை லூசுங்குறா” என்று வாய்க்குள் முனங்க..
“ பேசாம இருக்கறயா “என்றவன்..” இப்ப என்ன உன்னை ரயில்வே ஸ்டேஷன்ல கொண்டு போய் விடணும் .
அவ்வளவு தானே வா .கொண்டு போய் விடறேன்” என்று சொன்னபடியே வண்டியில் பின் இருக்கையில் அமர வைத்து வண்டியை திருப்ப ..
“ஆமா இவ்வளவு தூரம் வந்து உன்னை அழைச்சிட்டு போறோம் .இதனால் எங்களுக்கு ஏதாவது பிரச்சனை வந்திடுமா”.
“ அப்படியெல்லாம் எந்த பிரச்சனையும் வராது.
ஏன்னா நான் கைகாட்டி வண்டியை நிறுத்தும் போது இந்த ரோட்ல யாரும் இல்ல.
நான் சொன்னாதான் தெரியும்”
“ சரி தான் நாங்க தப்பானவங்களா இருந்தா என்ன பண்ணுவ ..”
“ஹலோ எனக்கும் சண்டை எல்லாம் தெரியும்.. கத்தி கூட கையில வச்சிருக்கேன் தெரியுமா “என்று சிறிய கத்தியை எடுத்து நீட்ட.. இருவருக்கும் வாய் கொள்ள முடியாத அளவிற்கு சிரிப்பு..
இருவருமே தன்னை மறந்து சிரிக்க ஆரம்பித்தனர்.
“ எதுக்காக சிரிக்கிறீங்க.. இந்த கத்தியை பார்த்து சிரிக்கிறீர்களா.. இதை வச்சு என்ன வேணாலும் செய்ய முடியும் தெரியுமா .”
“அப்படியா கொலை பண்ண முடியுமா “.
“ஏன் முடியாதா”.
“ இல்லையே..இத வச்சு எப்படி கொலை பண்ண முடியும் “.
“ இத பாருங்க தேவையில்லாதது எல்லாம் பேச வேண்டாம் .
நீங்க ரயில்வே ஸ்டேஷன் வரைக்கும் கூட விட வேண்டாம். பக்கத்துல பஸ் ஸ்டாப் இருக்குது .
அங்க கொண்டு போய் விட்டா கூட போதும். நான் ரயில்வே ஸ்டேஷனுக்கு வண்டி ஏறிக்குவேன் .”
“அதெல்லாம் ஒன்றும் வேண்டாம் ஹெல்ப் பண்றதுன்னு முடிவு பண்ணியாச்சு .
முழுசாவே செய்துகறோம் .எங்க போகணும்னு மட்டும் கரெக்டா சொல்லு .
அங்க கொண்டு போய் விடறேன் “என்று சொன்னபடியே வண்டியில் செலுத்த…
இவ்ளோ வாய்க்குள் முணுமுணுத்துக் கொண்டே வந்தாள்.
“ என்னமா வாய்க்குள்ள முணு முணுத்திக்கிட்டு வர்ற.. ஒரு வேளை உனக்கு பைத்தியம் ஏதாவது பிடிச்சிருக்கறதோ..
தெரியாம நாங்க தான் வண்டியில் ஏத்திட்டமோ “.
“சும்மா இருங்க சார் நான் பாட்டுக்கு பேக்ல கொஞ்சம் துணி அள்ளி போட்டுட்டு வந்துட்டேன் .
அங்கே என் அப்பா அம்மா எல்லாரும் என்னை தேடிக்கிட்டு இருப்பாங்க .
அதை பத்தி தான் யோசிச்சுகிட்டு இருக்கேன்.”
“ இப்ப என்ன ? ரெயில்வே ஸ்டேஷன் போகணுமா .இல்ல திரும்ப உன்னோட வீட்டுக்கு வண்டியை விடனுமா”.
“ அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். ரயில்வே ஸ்டேஷனுக்கு தான் போகணும்”.
“என்னமோ சொன்ன நிச்சயத்துக்கு பயந்து ஓடிக்கிட்டு இருக்கறேன்னு..
அதோட டீடைல் சொல்றியா..ரயில்வே ஸ்டேஷன் போற வரைக்கும் எங்களுக்கும் பொழுது போகணும்ல .”
“தாராளமா தெரிஞ்சுக்கலாம் எனக்கு இந்த போலீஸ்காரங்களே சுத்தமா ஆகாது”.
“ ஓ அப்படியா சரி அதுக்கு?”
“ ஆனா பாருங்க எனக்கு பார்த்திருக்கற மாப்பிள்ளை போலீஸ்ல தான் இருக்கிறாராம்.
சோ எனக்கு இந்த பையனை சுத்தமா பிடிக்கல .நானும் வீட்ல நிறைய சொல்லி பாத்துட்டேன்.
யாரும் கேட்கிற மாதிரி இல்ல”.
‘ ஆமா நீ என்ன படிச்சிருக்கற”. என்று விஷ்வா கேட்க..
“ நான் ப்ளஸ் டூ முடித்து இருக்கிறேன்.”
“ ஏன் அதுக்கு அப்புறம் படிக்கல..”
“ வந்து படிக்கும் போது ஒரு சின்ன இன்சிடென்ட் ஆயிடுச்சு அதுக்கு பிறகு எனக்கு படிக்க பிடிக்கலை .
நான் ஸ்கூலுக்கு போக மாட்டேன்னு சொல்லிட்டேன்..”
“ இல்லையே ஸ்கூல் முடிச்சிட்டியே.. அநேகமா நீ காலேஜ் தானே போயிருக்கணும் .”
“அதுதான்.. காலேஜுக்கு போக மாட்டேன்னு சொல்லிட்டேன் .அப்பாவும் சரி வீட்ல இருந்துட்டு போகட்டும்னு விட்டுட்டாங்க .”
“சரி உன் வீட்ல வேற யாரும் இல்லயா..நீ மட்டும் தானா”
“ இல்லையே எனக்கு ஒரு தங்கச்சி இருக்கிறா.. பேரு நித்யா.
இப்போ காலேஜ்ல படிச்சுக்கிட்டு இருக்கறா..”
“ நீ மட்டும் தான் தனியா பேசுவியா .. இல்ல உன் தங்கச்சியும் இப்படி தானா..”
“அவ நல்ல புத்திசாலி தனமா பேசுவா .”
“சரி அப்படி என்ன பேசினா..”
“ அவதான் சொன்னா நீ போலீஸ்காரனை பார்த்து பயந்து பயந்து ஓடுற ..
அப்பா உனக்கு போலீஸ் வேலையில இருக்குற பையனை மாப்பிள்ளையா கூட்டிட்டுட்டு வத்து இருக்கறாங்க .
அவர் பெரிய ஆபீஸர் ..இனி ஆபீஸர் அம்மாவை பாக்கணும்னா தனியா டைம் கேட்டு தான் வரணும் தெரியுமான்னு என்கிட்ட சொன்னா…
அதுக்கு பிறகு தான் புரிஞ்சுது.. ஓ.. எனக்கு தெரியாம இவங்க ஏதோ பெரிய வேலை செய்றாங்கன்னு ..
அதுதான் இந்த கல்யாணம் பிடிக்கலைன்னு எஸ்கேப் ஆகி வந்துட்டேன்.”
“ இதனால உன் அம்மா அப்பாவோட பேரு கெட்டுப்போகாதா .”
“அப்படி எல்லாம் கேட்டு போகாது .அவங்களுக்கு என்னை பத்தி நல்லா தெரியும் .
இன்னும் கொஞ்ச நாள் தேடுவாங்க பிறகு எப்படியும் நானே திரும்பி வந்துருவேன்.
உங்களுக்கு தெரியுமா.. இந்த கல்யாணம் இப்போதைக்கு நின்னுடும் .
இந்த பேச்சு வார்த்தையை நிறுத்திடுவாங்க.
அவ்வளவுதான் ..
எனக்கு அது தானே வேணும் பிறகு கொஞ்ச நாள் கழிச்சு திரும்ப வீட்டுக்கு போனா அவங்க கூப்பிட்டு வச்சிக்குவாங்க .
இப்போதைக்கு இந்த மாப்பிள்ளை பிரச்சனை முடிஞ்சா போதும்”.
“ புத்திசாலித்தனமா பேசுறதா நினைப்பா” என்று கேட்க..
“என்ன நீங்க? நான் பேசறது கரெக்ட் தானே .”
“பேசுவது கரெக்ட்டுன்னு சொல்ல மாட்டேன். லூசுத்தனமா தான் இருக்குது.
சரி ரயில்வே ஸ்டேஷனுக்கு போன பிறகு எங்க போறதா பிளான் .”
“அது எதுக்கு நான் உங்ககிட்ட சொல்லணும் .”
“யாராவது உறவுக்காரங்க வீட்டுக்கு போறியா இல்ல பிரண்ட்ங்க வீட்டுக்கு எங்கேயாவது போறியா”.
“ இதெல்லாம் தெரிஞ்சு நீங்க என்ன செய்யப் போறீங்க.”
“ நான் என்ன செய்யப் போறேன்.. ஒரு பொண்ணுக்கு லிப்ட் கொடுத்தேன் .
அந்த பொண்ணு பத்திரமா இருக்கிறாளா இல்லையான்னு தெரிஞ்சுக்க வேண்டாமா.
அந்த ஆர்வத்தில் கேட்கிறேன்”.
“ அது தான் எனக்கும் தெரியல சார் .எனக்கு பிரண்டுன்னு யாரும் கிடையாது.
அதே மாதிரி தான் உறவுக்காரங்களும் வெளியில யாரும் இல்ல.
என்ன செய்ய போறேன்னு தெரியல.. ஏதோ ஒரு தைரியத்துல வண்டி ஏறி கிளம்பி வந்துட்டேன் .
இப்பவும் கொஞ்சம் பயமா தான் இருக்குது .”
“அப்படின்னா வண்டியை ஊருக்கு திருப்பிடலாமா “.
“ஐயோ அதெல்லாம் முடியாது விடிஞ்சா அந்த போலீஸ்காரன் கூட எனக்கு நிச்சயம் பண்ணி முடிச்சிடுவாங்க.
அப்புறமா என்னால முடியாது. போலீஸ்காரனை பார்த்தாலே எனக்கு பயம் .
அவங்கள பார்த்தாலே அலர்ஜி யாருமே நல்லவங்க கிடையாது தெரியுமா .”
“இது என்ன ஒட்டு மொத்தமா இப்படி ஒரு வார்த்தை சொல்ற..”
“ உங்களுக்கு சொன்னா புரியாது சார் .நான் நிறைய பார்த்திருக்கிறேன் .
இந்த போலீஸ்காரங்க எந்த மாதிரி நடந்துக்குவாங்கன்னு..
நீங்க நியூஸ்ல எல்லாம் பாக்கறது இல்லையா ..
ரோட்ல போய் கிட்டு இருந்தா கூட சும்மா போறவங்கள கூட அடிப்பாங்க..
ஒரு நியூஸ்ல பார்த்தேன் அநியாயம் தெரியுமா..
ஒரு ரோட்டோரத்தில் ஒரு வயசான அம்மா இட்லி சுட்டு வித்துக்கிட்டு இருந்தாங்க.
சம்பந்தமே இல்லாம ஒரு போலீஸ்காரன் வந்து அந்த வண்டியை அடிச்சு நொறுக்கி அத்தனையையும் ரோட்டில் கொட்டி எவ்ளோ ஆச்சு தெரியுமா .
அந்த அம்மா பாவம் இல்ல.. இதெல்லாம் பார்க்கும் போது எவ்வளவு கோவம் வருது தெரியுமா .
அப்ப தான் முடிவு பண்ணினேன் இந்த போலீஸ்காரங்களை மட்டும் கல்யாணம் பண்ணிக்க கூடாதுன்னு ..”
“அவ்வளவுதானா இன்னும் வேற ஏதாவது இருக்கா “.
“இன்னுமா..
இருக்கே.. என் பிரண்டு ஒருத்தி பேரு செல்வி ரொம்ப இன்னோசென்ட் ..
அந்த பொண்ண ஒரு போலீஸ்காரன் காதலிச்சு ஏமாத்தி விட்டுட்டு போயிட்டான்.
கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொல்லிட்டான்.
கடைசில அந்த பொண்ணு என்ன பண்ணினா தெரியுமா?”
“ என்ன பண்ணினா ?”
“சூசைட் பண்ணிக்கிட்டா.. அதுக்கு பிறகு தான் இந்த போலீஸ்காரர்களே ஆகாதுன்னு முடிவுக்கு வந்தேன் .
யாருமே நல்லவங்க கிடையாது சார் .இந்த போலீஸ்காரங்க லஞ்சம் வாங்குவாங்க .
சட்டத்தை மீறி எல்லா வேலையும் செய்வாங்க. இப்படி நிறைய கேட்டு கேட்டு எனக்கு சலிச்சு போச்சு .
அதனாலதான் இந்த முடிவு..”
“ ஹப்பா நிறைய ஆராய்ச்சி பண்ணி இருப்ப போல இருக்குது .”
“அதனால தான் இப்படி எல்லாம் முடிவு பண்ணி இருக்கிறேன்..”
2
“என்ன நான் முடிவு பண்ணியது தப்பா “.
“ஐயோ தப்புன்னு யாராவது சொல்லுவாங்களா ..
எவ்வளவு புத்திசாலி நீ.. எவ்வளவு யோசிச்சு அழகா முடிவு பண்ணி இருக்குற..
கரெக்ட்டா நிச்சயத்துக்கு முந்தின நாள் வீட்டை விட்டு ஓடி வந்து இருக்கிற..
இதெல்லாம் திறமை தானே.. இந்த மாதிரி திறமை எல்லாம் எல்லாத்துக்கும் வந்துடாதே..” விஷ்வா அமைதியாக இருக்க நிதிஷ் கிண்டலாக கூறினான்.
“ நீங்க என்னை பாராட்டுறீங்களா இல்ல கிண்டல் பண்றீங்களா.. எனக்கு சந்தேகமா இருக்குது”.
“ சந்தேககம் எல்லாம் படாதம்மா.. உண்மையிலேயே பாராட்டத்தான் செஞ்சேன் .
சரி இப்போ அங்க போற கரெட்டு ..எங்க போய் தங்குவ ..ஏதாவது பிளான் இருக்கா..”
“ இந்த நிமிஷம் வரைக்கும் எதுவுமே இல்ல .என்கிட்ட கொஞ்சம் பணம் இருக்குது .
அதை வைத்து தான் ஏதாவது மேனேஜ் பண்ணனும் .”
“ஒரு பத்தாயிரம் இருக்குமா..”
“அத எதுக்கு நான் உங்ககிட்ட சொல்லணும் . என்ன ஏமாற்றி காசு பிடுங்க பாக்கறீங்களா..”
“ உனக்கு லிஃப்ட் கொடுத்துட்டு உன் காசு வேற பிடுங்குவாங்களா ..
எங்கள பார்த்தா திருட்டு பசங்க மாதிரியா இருக்குது .”
“அப்படி தெரியல ஆனாலும் சந்தேகம் வருதே .”
“சரி சரி எப்படியோ பத்திரமா இருந்தா சரி. இன்னமும் பத்து நிமிஷத்துல ரயில்வே ஸ்டேஷன் வந்துரும்.
இறக்கி விடறோம் கரெக்ட்டா டிரெயினை பிடிச்சு போயிடு.
எந்த ஊருக்கு போறதா இருக்கற.. பிளான் ஏதாவது இருக்குதா .”
“அதுதான் சொன்னேனே இந்த நிமிஷம் வரைக்கும் எதுவுமே இல்லன்னு .”
“வேணும்னா நான் உனக்கு உதவி செய்யட்டுமா” இப்பொழுது விஷ்வா குரல் கொடுக்க ..யோசனையோடு திரும்பி அவ,னின் முகத்தைப் பார்த்தாள்.
“ என்ன ஹெல்ப் பண்ணுவீங்க சொல்லுங்க கேட்கலாம் .ஓகே ஆகுற மாதிரி இருந்தா சரிதான்”.
“ எனக்கு கோயம்புத்தூர்குள்ள ஒரு நல்ல ஹாஸ்டல் தெரியும்.
நிறைய பணம் எல்லாம் வாங்க மாட்டாங்க ..மாசம் 6000 வாங்குவாங்க.
சாப்பாடு மூணு வேளை கொடுத்திடுவாங்க. நீ ஏதாவது தங்கி வேலை செய்றதா சொல்லிட்டு அங்க போய் தங்கிக்கலாம்.
பாதுகாப்பாகவும் இருக்கும்.. என்ன சொல்ற “.
“கேக்க நல்லாத்தான் இருக்குது ஆனா 6000 ரொம்ப அதிகமா தெரியலையா..
அந்த 6000 ரூபாய் வச்சு ஒரு மாசத்துக்கு நாங்க குடும்பமே சாப்பிடுவோம் தெரியுமா.”
“ சரி தான் இப்படி எல்லாம் கணக்கு பார்க்கிறவ வீட்டை விட்டு வெளியே வந்திருக்கக் கூடாது .
உனக்கு பாதுகாப்பான இடம் வேணுமா.. வேணாமா …அத மட்டும் சொல்லு .”
“ எனக்கு நெஜமா வேணும்.. சொல்லுங்க எந்த இடம்” என்று கேட்க..
“ உன்கிட்ட ஆண்ட்ராய்டு போன் இருக்குது தானே”.
“ இருக்குது இதோ” என்று எடுத்துக்காட்ட ..
“சரி அதுல லொகேஷன் செட் பண்ணி அட்ரஸ் எழுதி தரட்டுமா..
அங்க போய் சொல்லு.. உனக்கு ரூம் தருவாங்க .பத்திரமா இரு.
எவ்வளவு நாள் இருப்பியோ இருந்துக்கோ அதிகபட்சம் ஒரு 15 நாள் ஒரு மாசத்துக்குள்ள ரிட்டன் உன் வீட்டுக்கு வர்ற வழியை பாரு .
இந்த மாதிரி வெளியே சுத்திக்கிட்டு இருக்காத எல்லாரும் நல்லவங்களா இருக்க மாட்டாங்க.
பின்னாடி ஏதாவது பிரச்சனையை ஆயிடுச்சுனா கஷ்டம் “.
“புரியுது.. நீங்க சொல்றது கரெக்ட் தான் .நான் எடுத்த முடிவு தப்பு தான் .
ஆனா எனக்கு வேற வழி தெரியலையே ..
எனக்கு போலீஸ்காரன் வேண்டாம்னு தானே சொல்றேன் .
வேற யாரையாவது இழுத்துட்டு வந்து நிறுத்தி இருந்தால் யோசிக்காமல் சரின்னுதானே சொல்லி இருப்பேன்.
இதுவரைக்கும் அப்பாவோட பேச்ச நான் தட்டினது எல்லாம் இல்லை தெரியுமா .”
“அதனாலதான் பெருசா அப்பாவுக்கு ஆப்பு வச்சிட்ட போல இருக்கு” என்று டிரைவிங் சீட்டில் இருந்த நிதீஷ் சொல்லி சிரிக்க ..
“சார் நீங்க பேசுறது எதுவுமே சரி இல்ல. ஆரம்பத்துல இருந்து ரொம்ப என்னை கிண்டல் பண்ற மாதிரி இருக்கு.
இன்னொரு முறை இது மாதிரி பேசாதீங்க.. இந்தாங்க சார் என்னோட போன்.. பாருங்க.. பாத்துட்டு எனக்கு சரியா அட்ரஸ் கொடுங்க ..
என்ன.. பக்கத்துல அந்த இடம் இருந்தா யோசிக்காமல் உங்களையே கொண்டு போய் என்னை அங்க விட்ருங்கன்னு சொல்லி இருப்பேன் .
இப்ப அதுக்கு தான் வழி இல்லையே ..”
“சரிதான் போனா போகட்டும்னு லிப்ட் கொடுத்தால் விட்டா எங்களையே கொண்டு விட சொல்லுவியா .
அதுக்கு எல்லாம் வேற ஆள பாருமா ..நாங்க திரும்பி ஊருக்குள்ள போயாகணும்.
எங்களுக்காக அங்க வெயிட் பண்ணிக்கிட்டு இருக்காங்க.”
“ஆமா இதைக் கேட்கவே மறந்துட்டேன் .
எங்க ஊருக்குள்ளதான போறீங்க.. யார் வீட்டுக்கு போறீங்க .
அதை நீங்க சொல்லவே இல்லையே ..”
“அதுவா நீ தான் சொன்ன இல்ல .நாளைக்கு நிச்சயம் பண்ண வர போறாங்கன்னு..
அந்த மாப்பிள்ளையோட பிரண்டுங்க நாங்க ரெண்டு பேரும் ..”
“அச்சச்சோ கடைசியில் உங்க வண்டியிலேயா உதவி கேட்டு வந்தேன்.
நீங்க மாப்பிள்ளைகிட்டயோ இல்ல எங்க வீட்டுலயோ யார்கிட்டயும் சொல்ல மாட்டீங்க தானே..
லிப்ட் கொடுத்து அனுப்பி வைக்கிறோம் ..இதுக்கு அப்புறமா சொல்லவா போறோம்.
உன்னை கொண்டு போயி ரயில்வே ஸ்டேஷன்ல விட்டுட்டு நாங்க எங்க வேலைய பாத்துட்டு கிளம்ப போறோம்.
இனி அந்த ஊருக்குள்ள எங்களுக்கு வேலை இல்லையே.
நாளைக்கு தான் நிச்சயம் நடக்காதே..
பொண்ணு இல்லங்குறப்போ எப்படி நடக்கும் .”
“அதுதானே ரொம்ப தேங்க்ஸ்.. யார்கிட்டயும் மறந்து கூட சொல்லிடாதீங்க .
எனக்கு இப்படி ஒரு உதவியை செஞ்சத ..நானும் உங்கள எல்லாம் மறக்கவே மாட்டேன் .
நிச்சயமாக உங்களுக்கு என்னைக்காவது உதவி தேவைப்பட்டால் நான் வந்து செஞ்சு தருவேன்.”
“ யாரு நீ !!செஞ்சு தருவ!! சரிதான் .அப்படி ஒரு நிலைமை எங்களுக்கு வராது .
இதோ வந்தாச்சு இறங்கிக்கோ.. பத்திரமா போ .இத பாரு நான் கொடுத்த அந்த ஹாஸ்டலுக்கு போ
ஹாஸ்டல் வார்டன் என்னோட ஃப்ரெண்டோட அம்மா தான் .
அவங்க உன்னை பத்திரமா பாத்துக்குவாங்க .
சீக்கிரமா வீட்டுக்கு கிளம்புற வழியை பாரு “என்று சொல்ல..
“ சரி சார் ரொம்ப நன்றி. இந்த உதவியை என்னைக்குமே நான் மறக்க மாட்டேன் .
டிரைவர் அண்ணா உங்களுக்கும்தான் “என்று சொல்ல ..
“யாரு நான் உனக்கு அண்ணனா ..பிச்சுடுவேன் ஒழுங்கா வழிய பார்த்து போற வழிய பாரு .”என்று சொன்னபடியே சிரிக்க.. வேகமாக உள்ளே ஓடினால் பவானி.
இவர்கள் வண்டியை திருப்புவதற்கு முன்பாகவே சில நொடிகளிலேயே பதறி அடித்து ஓடி வந்தாள்.
வேகமாக வண்டியில் முன்னாள் வந்து விழப்போவது போல் வந்து நின்றவளை பார்த்து சட்டென பிரேக்கை அழுத்தினான்.
“இப்ப என்ன ஆச்சு.. எதற்காக பதறி அடிச்சு ஓடி வர்ற..
யாராவது சொந்தக்காரங்களை பார்த்துட்டியா..”
விஷ்வா திரும்பி ரயில்வே ஸ்டேஷனை பார்த்தபடி கேட்க..
“ஆமா எதிர்ல ஒரு பொண்ணு வந்தா.அவ என்னோட தங்கச்சி போல இருக்கு .
ஆப்போசிட்ல வந்துகிட்டு இருக்கறா…நான் பார்த்து பயந்து ஓடி வந்துட்டேன் .”
“பயந்து ஓடி வந்துட்டியா உன் தங்கச்சின்னா உனக்கு அத்தனை பயமா “.
‘அப்படி இல்லை மறுபடியும் வழக்கம் போல அந்த மாப்பிள்ளைக்கு என்னை நிச்சயம் பண்ணி கொடுத்துடுவாங்களே..
அதனாலதான் பயந்து ஓடி வந்துட்டேன் “.
“சரி இப்ப என்ன செய்யணும்”.
“ எனக்கு தெரியல” என்று சொன்னவள் வேக வேகமாக கதவை திறந்து மறுபடியும் வண்டிக்குள் வந்து அமர்ந்து கொண்டாள்.
“ஏய்.. என்ன உள்ள வந்து
உட்காருற.. நாங்க போக வேண்டாமா” என்று வேகமாக நிதீஷ் கேட்டான்.
“நீ கொஞ்சம் பேசாம இருடா. இப்ப என்ன செய்யணும் சொல்லு “என்று கேட்க..
“ எனக்கு தெரியலையே.. ஏதாவது ஐடியா கொடுங்க “என்று தலையை குனிந்து கொண்டாள்.
சற்று நேரத்தில் எல்லாம் இவள் சொன்ன இவளுடைய தங்கை கடந்து போக…
இவனுக்கு காட்டினாள்..இப்போதைய பெண்கள் போல ஒரு ஜீன்ஸ் மேலே ஒரு டீசர்ட் தலையில் ஒரு குல்லா என முற்றிலும் வேறு தோற்றத்தில் இருந்தாள்.
“என்ன உன்னோட தங்கச்சி உன்னை மாதிரி இல்லையா.. அப்படியே ஆப்போசிட்டா இருக்கறா..
நீ குடும்பப்பாங்க சேலை கட்டி இருக்கற.. உன்னோட தங்கச்சி அப்படியே ஆப்போசிட்டா இருக்கா..”
“ அவ டவுன்ல படிக்கிறால்ல அப்போ அது மாதிரி தானே இருக்கணும் .
ரொம்ப தைரியசாலி தெரியுமா”.
“ உன்னை விடவா “என்று விஷ்வா கேட்க..
“ஏன் கேட்கறீங்க”.
“ பின்ன இல்லையா.. வீட்டை விட்டு ஓடி வரணும்னா எந்த அளவுக்கு தைரியம் வேணும்.
நீ ஓடி வந்திருக்கறயே.. உன்னை விடவும் தங்கச்சி தைரியசாலின்னு சொன்னா நான் ஒத்துக்க மாட்டேன் “என்று சொல்லும்போதே..
“ இப்ப நான் என்ன செய்யறது எங்க போகணும் ..எனக்கு ஏதாவது வழி சொல்லுங்களேன்” என்று இவர்களிடமே கேட்டாள்.
“உனக்கு நிறைய தைரியம் தான்..ஆனா இந்த அளவுக்கு இருக்க கூடாது.
வேற யார்கிட்டயாவது மாட்டி இருந்தால் இன்றைக்கு உன் நிலைமையே வேற மாதிரி ஆகி இருக்கும் .
சரியான இடத்துக்கு வந்ததால் தப்பிச்ச” மனதிற்குள் சொல்லிக் கொண்டவன் .
“இரு ஒரு நிமிஷம் .. நான் ஒரு போன் பண்ணிட்டு வந்த பிறகு உன்னை எங்க கொண்டு போய் விடறதுன்னு யோசிக்கிறேன்” என்று விஷ்வா இறங்கி வெளியே நகர்ந்தான்.
3
போனை எடுத்தவன் அழைத்தது தன்னுடைய தாய் தந்தைக்கு தான் .
“என்னமா என்ன செஞ்சுகிட்டு இருக்கீங்க .”
“நாளைக்கு நிச்சயத்துக்கு போகனும் இல்லையா .பூ தட்டுன்னு எல்லாத்தையுமே அரேஞ்ச் பண்ணிக்கிட்டு இருக்கோம் .
11 தட்டு ரெடி பண்ணி இருக்கிறோம் .ஊருக்குள்ள இருக்குற முக்கியமான சொந்தக்காரர்கள் எல்லாம் வர சொல்லியாச்சு .”
“சரிதான் அதுக்கு அங்கே பொண்ணு இருக்கணும்”.
“ என்னடா சொல்ற ..”
“அந்த பொண்ணுக்கு இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்ல போல இருக்குது .
வீட்டை விட்டு வெளியே வந்துட்டா ..”
“அச்சச்சோ அப்படியா ..அந்த பொண்ணுக்கு உலகமே தெரியாதுடா..
என்னடா இப்படி குண்ட தூக்கி போடற ..அந்த பொண்ணோட பேச்சு ,சிரிப்பு அத்தனையுமே வெள்ளந்திதனமாக இருக்கும். அதனால தான் உனக்கு பேசி முடிவு பண்ணினோம் “.
“இப்ப என்ன பண்ணலாம் சொல்லுங்க “.
“நீ சொல்றது எனக்கு புரியலடா”.
“ அந்த பொண்ணு இப்போ என் பக்கத்துல தான் இருக்கறா.. என் வண்டில இருக்கறா..
அந்த பொண்ணு மனசுல யாரோ போலீஸ்காரங்க தப்பானவங்கன்னு சொல்லி வச்சிருப்பாங்க போல இருக்கு.
அந்த பொண்ணு ரொம்ப பயத்தோட இருக்கறா..
நீங்களே பார்த்து கல்யாணம் பண்ணி வச்சா கூட இந்த கல்யாணம் நாளைக்கு கஷ்டம் தான் .”
“என்னடா இது ..அதிகபட்சம் அரை மணி நேரம் பேசி இருப்பியா..
அதுக்குள்ள இப்படி ஒரு முடிவு சொல்லுவியா .அந்த பொண்ணு கிட்ட பேசும் போது தெரியலையா .
அந்த பொண்ணு எவ்வளவு வெள்ளந்திதனமாக இருக்கிறான்னு”.
“அதெல்லாம் கரெக்ட் மா.. அந்த ஒரு காரணத்தை வைத்து கல்யாணம் பண்ணிக்க முடியுமா .
நான் இருக்கிற வேலைக்கு புத்திசாலித்தனம் வேணும் .
நாளைக்கு இவள் பின்னாடியே இவளுக்கு பாதுகாப்பு கொடுத்துட்டு என்னால சுத்திக்கிட்டு இருக்க முடியாது புரிஞ்சுதா .”
“அப்படி இல்லடா .நீ எதுக்காக பாதுகாப்பு கொடுத்து சுத்த போற ..
உனக்கு எப்படியும் குவாட்டர்ஸ்ல வீடு தர போறாங்க. அங்க தான நீ இருப்ப ..
இவ வீட்ல பத்திரமா இருக்க போறா.. இந்த மாதிரி பேசுறத நிப்பாட்டு விஷ்வா
எனக்கு அந்த பொண்ண ரொம்ப பிடிச்சிருக்கு. கல்யாணம்னு ஒன்னு பண்ணினா அந்த பொண்ண தான் நீ பண்ணிக்கணும் .”
“ஏன் மா இப்படி பிடிவாதம் பண்றிங்க .சரி இப்ப நான் அந்த பொண்ண என்ன பண்றது”.
“ எனக்கு புரியல .”
“எங்க போறதுன்னு தெரியாம என் வண்டியில் தான் உட்கார்ந்து இருக்கிறா..
ஆண்டியோட ஹாஸ்டல் அட்ரஸ் கொடுத்தேன் .ஆனா இப்ப அங்கயும் போற மாதிரி தெரியல .
வேற எங்கேயாவது அழைச்சிட்டு போங்கன்னு வந்து நிக்குறா ..”
“ஒன்னு செய்யேன் ..பேசாமல் நம்ம எஸ்டேட்டிற்கு அழைச்சிட்டு போடா “.
“ஹலோ என்ன விளையாடுறீங்களா. வயசு பொண்ண கூட்டிட்டு போயி நான் என்ன செய்யறது.”
“ நீ ஏன்டா அப்படி யோசிக்கிற .வீட்டில வேலைக்கு ஆள் வேண்டும் என்று சொல்லி அந்த பொண்ண கூட்டிட்டு போ.
உன்ன பத்தி பக்கத்திலிருந்து பார்த்து புரிஞ்சுகிட்டான்னா உன் மேல வச்சிருக்கற அந்த நம்பிக்கை மாறிடாது.
போலீஸ்காரன்னா நல்லவன்னு அவ மனசுக்குள்ள வரும் தானே .
அப்புறமா கல்யாணம் பண்ணிக்கலாம்”.
‘ சரிதான் அந்த பொண்ணோட அப்பா ,அம்மா கிட்ட என்ன சொல்லுவீங்க .”
“இத பாருடா உங்க அப்பாவோட பிரண்டு தான் அந்த பொண்ணோட அப்பா..
சொன்னா புரிஞ்சுக்கவார்.. நாளைக்கு நிச்சயம் வேண்டாம் இன்னொரு நாள் வச்சுக்கலாம்.
அது மட்டும் இல்ல..
பொண்ணு இந்த மாதிரி வீட்டை விட்டு வெளியே கிளம்பி போயிட்டாங்கறது இந்நேரத்துக்கு அவங்களுக்கும் தெரிஞ்சிருக்கும் .
நிச்சயமா இங்க கூப்பிட்டு என்னன்னு சொல்வாங்க .
அப்ப நாங்க சொல்லி புரிய வச்சிக்கிறோம்.
இல்லன்னா நீயே கூப்பிட்டு வேணும்னாலும் சொல்லிடு.
பொண்ணை பத்தின பயம் வேணாம் அவ பத்திரமாக இருக்கிறான்னு.
நான் பார்த்துக்கிறேன் இன்னொரு நாள் நிச்சயம் பண்ணிக்கலாம்னு சொல்லிடு புரிஞ்சுதா .”
“இப்ப அடுத்ததா அங்க நான் போன் பண்ணி பதில் சொல்லணும் .அதுதானே .”
“ஏன் சொல்ல மாட்டியா ..நீ போலீஸ்காரன் தானே.. எவ்வளவு அழகா போட்டு வாங்குவ .
அது மாதிரி ஏதாவது பேசி சமாதானம் சொல்லு..
எனக்கு அந்த பொண்ணு வேணும். அவ்வளவுதான் “.
“சரி சரி விடுங்க . ஃபோன்னை வைங்க .நான் பாத்துக்கறேன்” என்று சொன்னவன் அடுத்ததாக பவானியில் தந்தைக்கு அழைக்க..
ஏற்கனவே மகளை காணவில்லை என அரக்க பறக்க தேடிக் கொண்டிருந்தவர் சற்று பதட்டத்தோடு தான் போனை அட்டென் செய்தது .
“யார் பேசுறீங்க “.
“நான் தான் விஷ்வா அங்கிள் ..எப்படி இருக்கீங்க .நல்லா இருக்கீங்களா”.
“ தம்பி “சொல்லும் போதே குரல் கமர இவனுக்கு புரிந்தது .
“உங்க பொண்ணு அங்கே இருக்க மாட்டா தானே..
உங்க பொண்ணு ஊர விட்டு வெளியே போறதுக்கு ஹெல்ப் கேட்டது என்கிட்ட தான் .
உங்க பொண்ணு கிட்ட என்னோட போட்டோவை நீங்க காட்டலையா ..”
“இல்ல தம்பி போட்டோ கொடுத்தேன் .அவ பார்க்கலை போல இருக்கு .”
“சரி சரி பொண்ண பத்தின கவலை வேண்டாம். நாளைக்கு நிச்சயம் வேண்டாம் .
உங்க சொந்தக்காரங்க கிட்ட எல்லாம் சொல்லிடுங்க.
இன்னொரு நாள் நல்ல நாளா பார்த்து வச்சுக்கலாம்னு..
பொண்ணு பத்திரமா என்கிட்ட தான் இருக்கிறா..
என்ன பத்தி புரிய வைத்து விட்டு நானே உங்ககிட்ட அழைச்சிட்டு வரேன்.
அதுக்கு பிறகு நிச்சயம் பண்ணிக்கலாம் .சரியா “.
“தம்பி இது சரி வருமா ..இதெல்லாம் தப்பு இல்லையா. இது மாதிரி நான் யோசிச்சது கூட கிடையாது.
கல்யாணத்துக்கு முன்னாடி ஒரு பையன் கூட எப்படி அனுப்பி வைக்க முடியும் .”
“நீங்க ஏன் அங்கிள் இப்படி எல்லாம் யோசிக்கிறீங்க .நான் இப்போ எஸ்டேட்டுக்கு தான் போறேன் .
அங்க அம்மாவுமே வந்துடுவாங்க .அம்மாவுக்கு துணையா இருக்கட்டும்.
கொஞ்சம் பழகி பார்க்கட்டும் .நிச்சயமா உங்க பொண்ணு என்னை தேர்ந்தெடுப்பா.
இந்த பையன தான் கல்யாணம் பண்ணுவேன்னு சொல்லுவா..
அப்ப நீங்க பார்த்து முடிவு பண்ணுங்க சரியா .இப்போதைக்கு உங்க பொண்ணப்பத்தி யாராவது கேட்டா..
சொந்தக்காரங்க வீட்டுக்கு போய் இருக்கிறான்னு ஏதாவது சொல்லி சமாளிங்க .
என்ன அங்கிள் நான் சொல்றது கேக்குதா.. என்னைக்குனாலும் அம்மா விருப்பப்பட்டது உங்க பொண்ண தான் .
தனக்கு மருமகளா வரணும்னு ஆசைப்பட்டது உங்க பொண்ணை தான்..
அதனால அவங்களோட ஆசையை நிச்சயமா நான் நிறைவேற்றி வைப்பேன்.
கவலை இல்லாமல் நிம்மதியா அடுத்த வேலையை கவனிங்க” சொல்லிவிட்டு போனை வைத்தவன்.
வேகமாக அருகே வந்து வழக்கம் போல தன்னுடைய இருக்கையில் அமர்ந்தான்.
“என்ன சார் நீங்க பேசி முடிச்சிட்டு வந்தாச்சா. நான் நல்லா யோசிச்சு பார்த்தேன்.
என்னை அந்த ஹாஸ்டல்ல கொண்டு போய் விட்டுடுங்க”.
“ அதைவிட பெஸ்டான ஐடியா என்கிட்ட இருக்குது .கேக்குறியா ..கேட்க தயார்னா சொல்லு .சொல்றேன் “என்று விஷ்வா கூற..
“ என்ன சொல்லுங்க கேட்கலாம்” என்று வேகமாக கேட்டாள்.
“என்னோட வீட்ல வேலைக்கு ஒரு ஆள் தேவை இருக்குது.. பயப்படாத என்னோட வீடுன்னா நான் மட்டும் இல்ல .
என்னோட வீட்ல எல்லாரும் இருப்பாங்க. அம்மா, அப்பா இன்னமும் கொஞ்சம் வேலைக்கு ஆட்கள் எல்லாருமே இருப்பாங்க.
நீ அங்க வேலை செய்யறையா.. உனக்கு சம்மதமா.. சம்மதம்னா நேரா அழைச்சிட்டு போறேன் பயப்பட வேண்டாம்.”
“ம்.. ஐடியா நல்லாத்தான் இருக்குது ஆனா இது சரி வருமா தெரியலையே..
ஒருவேளை நீங்க தப்பானவரா இருந்தா “.
“சரிதான் தப்பானவனா இருந்தா நம்பி மறுபடியும் இதே வண்டியில் ஏறி இருப்பியா..
பயப்படாதம்மா ..நீ எங்க வேலை செய்ய போறேங்கிறது உங்ககிட்ட சொல்றோம் .
போற இடத்தோட அட்ரஸ் கூட தெளிவா சொல்லிடறோம் .”
“சரி அப்படின்னா ஓகே தான்.
எனக்கு என்ன வேலை தருவீங்க “.
“உனக்கு என்ன வேலை தெரியும் .அத முதலில் சொல்”.
“நான் ரொம்ப நல்லா சமைப்பேன் .விதவிதமா என்ன குடுத்தாலும் சமைப்பேன் .
அப்புறமா இந்த ஆர்ட் அண்ட் கிராப்ட் எல்லாம் ரொம்ப நல்லா வரும் .
துணி தைக்க தெரியும் அப்புறமா தோட்டத்தை ரொம்ப அழகா பராமரிப்பேன்..
மொத்தத்துல வீட்டை ரொம்ப சத்தமா வச்சுக்குவேன் .”
“ஆக வீட்டு வேலை எல்லாம் பர்ஃபெக்ட்டா செய்வ அது தானே ..”
“ஆமாம்”.
“ அப்படின்னா சரி என்னோட அம்மாவுக்கு உதவியா நீ இருப்பியாம் .
என் அம்மா கிட்ட பேசறியா” என்று சொன்னவன் தாயாருக்கு போனில் அழைத்து..” அம்மா நான் சொன்னேன் இல்லையா .
வீட்டு வேலைக்கு ஒரு பொண்ணு அழைச்சிட்டு வரேன்னு .
அந்த பொண்ணு கிட்ட பேசுறீங்களா” என்று சொல்ல..
“ டேய் என்னடா நடக்குது அங்க..
என் மருமகளை பார்த்தா வீட்டு வேலை செய்ற மாதிரியா இருக்குது .
வீட்ல பத்துக்கு மேல வேலைக்காரங்க இருக்காங்க.
நீ என் மருமகளை வேலைக்காரி ,வீட்டு வேலை செய்யறவ சொல்லி வைக்கற” என கோபமாக கோபித்துக் கொள்ள ..
“அம்மா கோச்சுக்காதீங்க .இப்ப அந்த வேலை தான வீட்ல காலியா இருக்குது “என்று சொன்னபடியே ..இவளிடம் நீட்ட.. வாங்கி “ஹலோ நான் பவானி பேசுறேன்” என்று தயங்கி பேச..
“எப்படிமா இருக்கிற.. நல்லா இருக்கிறயா.. பயப்படாம வா. இப்பதான் என் பையன் சொன்னான் .
உனக்கு ஏத்த வேலை என் வீட்ல இருக்குது “என்று சொல்ல “சரிமா வரேன் “என்றாள்.