இதய கூட்டில் காதல் பிறக்கிறதே.
1
லேசான தூறலாக ஆரம்பித்து மழை வலுக்க ஆரம்பித்தது.
மொத்த பேருமே வீட்டுக்குள்ளே தான் குழுமி இருந்தனர்.
யாரிடமும் ஒரு பேச்சு வார்த்தை கூட இல்லை .
மிக மிக அமைதி நிலவியது. எல்லோர் மனதிலும் ஒருவித இறுக்கம் இருக்க.. அதைவிட இறுக்கத்தில் இருந்தான் ஜெகன்.
மாடியறையில் கோபமாக அமர்ந்திருந்தான்.
கண்கள் சிவந்து இருந்தது. யார் வந்து பேசினாலும் அடித்து துவம்சம் செய்யும் மனநிலையில் அமர்ந்திருந்தான்.
யாருமே அவனுக்கு அருகே செல்ல பயந்தனர் .
இங்கே கீழையும் நிறைய வேலைகள் பாக்கி இருந்தது.
இவன் வந்து இறங்கி செய்ய சொன்னால் மட்டுமே அடுத்த கட்ட வேலையை தொடர்வார்கள் என்கின்ற நிலையில் இருந்தது .
இவனோ அதிகாலையில் வந்தவன் .இதோ 10 மணி ஆகி இருக்கிறது .
அதே இறுக்கத்தோடு மாடியறையில் உழன்று கொண்டிருந்தான்.
சற்று நேரம் கழித்து அவனுடைய தாத்தா பழனி அந்த அறைக்குள் பிரவேசித்தார்.
“ இன்னும் எத்தனை நேரம் இப்படியே இங்க முறைச்சிக்கிட்டு இருக்க போற.. ஜெகன் கீழ வந்து அடுத்த கட்ட வேலையை பார்க்கணும் இல்லையா .”
“எப்படி தாத்தா.. எப்படி இது பாசிபிள். அவருக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்குது.
பிரச்சனை எங்க தான் இல்ல.. ஒன்னுமில்லாத ஒரு சின்ன விஷயத்துக்காக இப்படி வாழ்க்கையை முடிச்சுக்குவாரா..
எனக்கு அவரை பார்க்கும் போது அவ்வளவு கோபம் வருது.
நம்மகிட்ட என்ன இல்ல .எதுக்காக இப்படி ஒரு அவசர முடிவு”.
“ டேய் நடந்து முடிஞ்சிருச்சு .இனி அத பத்தி பேசி பிரயோஜனம் இல்லை .
அடுத்து நடக்க போறத பாக்கணும். நீ கீழ வந்தா தான் அடுத்து என்ன செய்யணுமோ அதை செய்வாங்க .”
“முடியாது தாத்தா .நிச்சயமா அந்த மனுஷனோட முகத்தை என்னால பார்க்க முடியாது.”
“ டேய் அங்க ஹால்ல படுக்க வைத்திருக்கிறது உன்னோட அப்பா டா .
இறந்தவருக்கு கடமையை செய்யணும் இல்லையா .”
“இப்ப இவர் எதுல குறைச்சு போயிட்டாரு ..நம்ம கிட்ட என்ன இல்லன்னு.. ஏன் இப்படி ஒரு முடிவு எடுத்தார் .”
“என்ன சொல்றதுன்னு எனக்கு தெரியல .தொழில்ல கொஞ்ச நாளா நஷ்டம் தான். எனக்கு நல்லா தெரியும் .
ஆனா அதெல்லாம் பெரிய விஷயமே இல்ல .நம்மகிட்ட இருக்கிறத அவங்களுக்கு கொடுத்துட்டு ரிலாக்ஸா இருடான்னு நிறைய முறை சொல்லிக்கொண்டு இருந்தேன்..
எதையுமே உன்னோட அப்பா கேட்கல. அவர் கொடுத்த பக்கம் எந்த பணமும் திரும்ப கிடைக்கலை.
வாங்குனவங்க எல்லாருமே ஏமாத்திட்டாங்க .அதுவே ஒரு மாதிரியான அழுத்தம் ஆயிடுச்சு .
நான் தான் போன முறையே உனக்கு போன் பண்ணி சொன்னேன்ல ..
உன்னோட அப்பாவோட நிலைமை சரியில்ல .நீ கொஞ்சம் அவசரமா இங்க வரணும்னு “.
“தாத்தா புரியுது தாத்தா . உடனே எப்படி வர முடியும் .நான் சொல்லிட்டு தானே இருந்தேன்.
இதோ பைனல் இயர் போய்க்கிட்டு இருக்கு . ஏற்கனவே கவனிக்கிற பிசினஸ் ஒரு பக்கம்..அது முடிக்கவும் உடனே வந்துருவேன்னு சொன்னேன். யூ எஸ் என்ன பக்கத்துலயா இருக்குது..தாத்தா ..”
“சரிடா சரி அதுக்காக இப்படியே இங்க இருந்தா ஆச்சுதா.. கீழ வா. உன் அப்பா முகத்தை கடைசியா பாரு .அழுகை வந்தா அழுதிடு .
இதுக்கு மேல என்ன சொல்றது. உனக்கு அப்பான்னா எனக்கு பையன் .
என்னாலையும் ஏத்துக்க முடியல .நேத்துல இருந்து உடைந்து போய் தான் இருக்கிறேன் .
இங்க இப்போ உனக்கு ஆறுதல் சொல்றதா.. இல்ல இறந்தவனை சந்தோஷமா அனுப்பி வைக்கிறதான்னே தெரியல “.
“எப்படி தாத்தா உயிரை விட்டுட்டு அவரால சந்தோஷமா போய் விட முடியுமா .
நம்மள பத்தி கொஞ்சம் யோசிச்சு பார்த்தாரா.. நான் பல டைம் சொன்னேனே ..
யாருக்கு வேணும்னாலும் கொடுங்க ஆனா ஸ்ட்ரீட்டா திருப்பி வாங்க முடியும்னா மட்டும் கொடுங்கன்னு கேட்டேன் .
ஆனா எதையுமே செய்யல” என்று சொன்னவன் .சட்டென்று வேறு ஒரு நம்பருக்கு அழைப்பு விடுத்தான் .
“ஆபீஸ்ல என்ன செஞ்சுகிட்டு இருக்கீங்க .என்ன கேட்டேன் உங்ககிட்ட..
யார் யாருக்கு அப்பா கடன் கொடுத்தார் என்று பார்த்து.. ஏதாவது டாக்குமெண்ட் இருந்தா உடனே இங்க கொண்டு வர சொல்லி இருக்கிறேன்.
சொல்லி நேரம் என்ன ஆச்சு .கிட்டத்தட்ட நான் இங்க வந்து மூணு மணி நேரம் தாண்டியாச்சு.
இது வரைக்கும் எந்த ரெஸ்பான்ஸ்சும் இல்ல. என்ன தான் செஞ்சுகிட்டு இருக்கீங்க “.
“ டேய் ஏன்டா ஏன் இப்படி எல்லாம் செஞ்சுகிட்டு இருக்கிற.. இந்த நேரம் ..
இதெல்லாம் தெரியணுமா”.
“ நிச்சயமா தெரியனும் தாத்தா.. இன்றைக்கு அப்பா இல்ல அதுக்கு காரணம் ..அவர் கொடுத்த பணத்தை எல்லாத்தையுமே ஏமாத்தி இருக்காங்க.
யார் யார் ஏமாத்தி வாங்கினாங்கன்னு பார்த்து நான் அவங்க கிட்ட பணத்தை வசூல் பண்ணி ஆகணும்.
என் அப்பாவுக்கு நியாயம் கிடைக்கணும் .நான் சும்மா விடமாட்டேன் .
என்ன காசு பணம்னா சும்மாவா.. சும்மா தூக்கி கொடுத்துடுவாங்கன்னு நினைச்சாங்களா ..
இன்னைக்கு அப்பா இல்ல. அதுக்கான தண்டனையை கொடுத்தவர்கள் எல்லாருமே அனுபவிக்கணும் .
யாரையும் நான் சும்மா விட போறதில்லை .அவர்களே கொண்டு வந்து கொடுத்துட்டா பிரச்சனை இல்ல .
அதே நேரத்துல கொடுக்கலைன்னா மேற்கொண்டு என்ன செய்யணுமோ அதை நான் செய்வேன் .”
“டேய் இத்தனை கோவம்.. இத்தனை ஆக்ரோஷம் தேவையில்லை ஜெகன்.
கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகு”.
“ முடியாது தாத்தா, இன்றைக்கு மொத்த டாக்குமெண்ட்டையும் பார்த்து எடுத்து வச்சுட்டு தான் கீழே வருவேன்.
அது எவ்வளவு நேரம் ஆனாலும் சரி” என்றவன் .மறுபடியும் அழைத்தான்.” சார் எல்லாத்தையும் கலெக்ட் பண்ணிட்டேன்.
இதோ வந்துகிட்டே இருக்கிறேன் . இன்னும் ஒரு அரை மணி நேரத்துல வந்துருவேன் .”
“நேரா மாடிக்கு வாங்க அதுக்கு பிறகு மத்த காரியங்களை பார்ப்பீர்களாம்” என்று சொன்னவன். மறுபடியும் அங்கிருந்து இருக்கையில் அமர்ந்திருந்தான் .
கண்கள் சிவந்து இருந்தது. சொல்ல முடியாத வேதனை மனதில் இருக்க.. அந்த இருக்கும் முகத்தில் அப்படியே பிரதிபலித்தது .
இந்த சமயம் அவனது முகத்தை பார்ப்பவர்கள் யாராக இருந்தாலுமே சற்று பயப்படுவர்.
அந்த அளவிற்கு கோபத்தில் முகம் சிவந்து கண்கள் அனலாக தகிக்க.. ஒரு இடத்தில் அமர முடியாமல் உழன்று கொண்டு இருந்தான்.
அறைக்குள் அடைப்பட்ட புலியை போல அவனின் ஒவ்வொரு செய்கைகளையுமே பார்த்தவருக்கு பயம். உண்மையில் மனதில் தொற்றிக் கொண்டது.
தந்தையின் உதவியாளர் மொத்த பைல்களையும் தூக்கிக் கொண்டு வந்திருந்தார்.
கிட்டத்தட்ட 100க்கும் மேற்பட்ட பையில்கள் கையில் தூக்க முடியாமல் தூக்கிக்கொண்டு வர ..அதை பார்க்கமுமே இவனுக்குள் இன்னமும் கோபம் சுழற்றி அடித்தது .
“என்ன மனுசன் இந்த ஆளு.. யாரு என்ன கேட்டாலும் அப்படியே எடுத்து நீட்டிடுவாரா..
மொத்த சொத்தையும் இழந்துட்டு வாழ்வதற்கு வழியே இல்லாத மாதிரி உயிரை விட்டுட்டு என்ன சொல்றது..” என தலையை உதறிக்கொண்டான்.
இவனுடைய தந்தை நந்தகுமார் கிட்டத்தட்ட 50 வயது நெருங்கி இருந்தவர் .
தாயார் சிறுவயதிலேயே இறந்திருக்க இவனை ஆரம்பத்தில் இருந்து செல்லமாக நல்ல நண்பனை போல் வளர்த்தவர் .
படிப்பிற்காக என்று வெளிநாடு செல்ல.. எந்த மறுப்பும் செல்லாமல் அனுப்பி வைத்தவர்.
தாத்தா பழனி இவர்களோடு இல்லை
கிராமத்திலேயே பிறந்து வளர்ந்ததினால் அங்கிருந்து அவருக்கு வர மனம் இல்லை.
கிராமத்து வீட்டிலேயே தங்கி கொண்டார் . மகனையும் பேரனையும் அவ்வப்போது வந்து பார்த்துவிட்டு செல்வதோடு சரி .
வருடத்திற்கு ஒருமுறை ஜெகனை அழைத்து தன்னோடு வைத்துக் கொள்வார் .
மகனின் மேலும் பேரனின் மேலும் நிறையவே பாசம் இருந்தது .ஆனால் ஏனோ இந்த நாகரீக சிட்டி வாழ்க்கை அவருக்கு பிடிக்கவில்லை.
அதனாலேயே இங்கே வந்து தங்குவதை தவிர்த்து வந்திருந்தார் .
ஒருவேளை நந்தகுமாரோடு வந்து தங்கி இருந்தால் இன்றைக்கு இப்படிப்பட்ட ஒரு இறப்பு நிகழ்ந்து இருக்காது. என்று மனம் கேள்வி கேட்க..
அவரும் கண்கள் கலங்கியபடி தான் அமர்ந்திருந்தது.
யாரிடம் என்ன சொல்வது எப்படி சமாளிப்பது எதுவுமே புரியவில்லை.
கொண்டு வந்த பைல்களை வேகமாக எடுத்து புரட்டிப் பார்த்தான்.
நந்தகுமாரை ஒரு வகையில் பாராட்டியே ஆக வேண்டும் .
கொடுத்திருந்த ஒவ்வொரு பணத்திற்குமே சரியாக டாக்குமெண்ட் போட்டு வாங்கி வைத்திருந்தார் .
பணம்தான் திருப்பி வரவில்லையே தவிர டாக்குமெண்டில் எந்தவித குழப்பமும் இல்லாமல் தெளிவாக இருந்தது .
சிலது எல்லாம் சட்டப்படி ரெஜிஸ்டரும் செய்து வைத்திருந்தார் .
பார்த்தவுடன் முகம் லேசான புன்னகை தொற்றியது .
“என்னடா இத்தனை பிரச்சனையிலெயும் சிரிக்கிற” என்று பேரனை கேட்க ..
“அப்பா ஏமாந்தவர் தான் ஆனால் ஒரு விஷயத்துல கொஞ்சம் தெளிவா இருந்திருக்கிறார் .
யார் யாருக்கு என்ன கொடுத்திருக்கிறார்களோ சரியான டாகுமெண்ட்ட கரெக்டா வெச்சி இருக்கிறார் .
அந்த வகையில் பாராட்டலாம்.அதுக்காக அவர் செஞ்சது சரின்னு சொல்ல மாட்டேன்.
இந்த நிமிஷம் கூட அவரோட முகத்தை பார்க்க எனக்கு துளி கூட விருப்பம் இல்லை.
வாழ்க்கையில ஜெயிச்சவங்களை தலைக்கு மேல வச்சு கொண்டாடலாம் .ஆனால் தோற்றவர்களை பார்க்கவே கூடாதுன்னு நினைக்கிறவன்..
அப்படி நினைக்கிற எனக்கு இப்படி ஒரு சூழ்நிலை வரும்னு நான் நெனச்சு பாக்கல.”
“அப்படியெல்லாம் பேசக்கூடாது ஜெகன் .அவன் உன்னோட அப்பா .”
“ இல்லன்னு சொல்லலை தாத்தா .ஆனா இப்படி ஒரு காரியம் பண்ணுவாங்கன்னு நான் நினைச்சு கூட பாக்கலை” என்று சொன்னவன் மொத்த பைல்களையும் எடுத்து அங்கே இருந்த டிராவில் வைத்து பூட்டினான்.
சாவியை எடுத்து வைத்தவன் “சரி தாத்தா கீழே வாங்க மேற்கொண்டு ஆக வேண்டியதை பார்க்கலாம் .
முடிவு எடுக்கிறது சுலபம்தான் ஆனால் அதை ஏத்துக்கிற பக்குவம் எனக்கு இல்ல.
அடுத்தடுத்து வேலை நடக்கட்டும் .நான் அவரோட முகத்தை பார்க்க மாட்டேன் தாத்தா .
நான் வாசல்ல வெயிட் பண்றேன் .என்ன செய்யணுமோ உங்க பையனுக்கு செய்ய வேண்டிய சாங்கியங்களை செஞ்சு முடிங்க .
பெத்த அப்பா என்கிற முறையில் தோள்ல சுமந்து எடுத்துட்டு வரேன் “என்று சொல்லிவிட்டு கோபத்தோடு கீழே இறங்கினான் ஜெகன்.
பேரனின் மனநிலை இவருக்கு நன்றாக தெரிந்தது.
அவன் கோபப்படுவதும் சரிதானே ..
அதிலும் அப்பாவும் மகனும் நண்பர்கள் போல தான் பழகியது.
மகனிடம் இதுதான் பிரச்சனை இதற்கு ஏதாவது தீர்வு கிடைக்குமா என்று கேட்டிருந்தால் கூட அவன் மொ
த்தத்தையும் விட்டுவிட்டு இங்கு வந்து இருப்பான்.
தந்தைமின் பிரச்சனைகளை சமாளித்து இருப்பான் .
இப்படி மொத்தமாக உயிரை விடுவது என்பது தவறு தானே..மனதிற்குள் நினைந்தபடியே சற்று சோர்வாக கீழே இறங்கினார் பழனி.
1
லேசான தூறலாக ஆரம்பித்து மழை வலுக்க ஆரம்பித்தது.
மொத்த பேருமே வீட்டுக்குள்ளே தான் குழுமி இருந்தனர்.
யாரிடமும் ஒரு பேச்சு வார்த்தை கூட இல்லை .
மிக மிக அமைதி நிலவியது. எல்லோர் மனதிலும் ஒருவித இறுக்கம் இருக்க.. அதைவிட இறுக்கத்தில் இருந்தான் ஜெகன்.
மாடியறையில் கோபமாக அமர்ந்திருந்தான்.
கண்கள் சிவந்து இருந்தது. யார் வந்து பேசினாலும் அடித்து துவம்சம் செய்யும் மனநிலையில் அமர்ந்திருந்தான்.
யாருமே அவனுக்கு அருகே செல்ல பயந்தனர் .
இங்கே கீழையும் நிறைய வேலைகள் பாக்கி இருந்தது.
இவன் வந்து இறங்கி செய்ய சொன்னால் மட்டுமே அடுத்த கட்ட வேலையை தொடர்வார்கள் என்கின்ற நிலையில் இருந்தது .
இவனோ அதிகாலையில் வந்தவன் .இதோ 10 மணி ஆகி இருக்கிறது .
அதே இறுக்கத்தோடு மாடியறையில் உழன்று கொண்டிருந்தான்.
சற்று நேரம் கழித்து அவனுடைய தாத்தா பழனி அந்த அறைக்குள் பிரவேசித்தார்.
“ இன்னும் எத்தனை நேரம் இப்படியே இங்க முறைச்சிக்கிட்டு இருக்க போற.. ஜெகன் கீழ வந்து அடுத்த கட்ட வேலையை பார்க்கணும் இல்லையா .”
“எப்படி தாத்தா.. எப்படி இது பாசிபிள். அவருக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்குது.
பிரச்சனை எங்க தான் இல்ல.. ஒன்னுமில்லாத ஒரு சின்ன விஷயத்துக்காக இப்படி வாழ்க்கையை முடிச்சுக்குவாரா..
எனக்கு அவரை பார்க்கும் போது அவ்வளவு கோபம் வருது.
நம்மகிட்ட என்ன இல்ல .எதுக்காக இப்படி ஒரு அவசர முடிவு”.
“ டேய் நடந்து முடிஞ்சிருச்சு .இனி அத பத்தி பேசி பிரயோஜனம் இல்லை .
அடுத்து நடக்க போறத பாக்கணும். நீ கீழ வந்தா தான் அடுத்து என்ன செய்யணுமோ அதை செய்வாங்க .”
“முடியாது தாத்தா .நிச்சயமா அந்த மனுஷனோட முகத்தை என்னால பார்க்க முடியாது.”
“ டேய் அங்க ஹால்ல படுக்க வைத்திருக்கிறது உன்னோட அப்பா டா .
இறந்தவருக்கு கடமையை செய்யணும் இல்லையா .”
“இப்ப இவர் எதுல குறைச்சு போயிட்டாரு ..நம்ம கிட்ட என்ன இல்லன்னு.. ஏன் இப்படி ஒரு முடிவு எடுத்தார் .”
“என்ன சொல்றதுன்னு எனக்கு தெரியல .தொழில்ல கொஞ்ச நாளா நஷ்டம் தான். எனக்கு நல்லா தெரியும் .
ஆனா அதெல்லாம் பெரிய விஷயமே இல்ல .நம்மகிட்ட இருக்கிறத அவங்களுக்கு கொடுத்துட்டு ரிலாக்ஸா இருடான்னு நிறைய முறை சொல்லிக்கொண்டு இருந்தேன்..
எதையுமே உன்னோட அப்பா கேட்கல. அவர் கொடுத்த பக்கம் எந்த பணமும் திரும்ப கிடைக்கலை.
வாங்குனவங்க எல்லாருமே ஏமாத்திட்டாங்க .அதுவே ஒரு மாதிரியான அழுத்தம் ஆயிடுச்சு .
நான் தான் போன முறையே உனக்கு போன் பண்ணி சொன்னேன்ல ..
உன்னோட அப்பாவோட நிலைமை சரியில்ல .நீ கொஞ்சம் அவசரமா இங்க வரணும்னு “.
“தாத்தா புரியுது தாத்தா . உடனே எப்படி வர முடியும் .நான் சொல்லிட்டு தானே இருந்தேன்.
இதோ பைனல் இயர் போய்க்கிட்டு இருக்கு . ஏற்கனவே கவனிக்கிற பிசினஸ் ஒரு பக்கம்..அது முடிக்கவும் உடனே வந்துருவேன்னு சொன்னேன். யூ எஸ் என்ன பக்கத்துலயா இருக்குது..தாத்தா ..”
“சரிடா சரி அதுக்காக இப்படியே இங்க இருந்தா ஆச்சுதா.. கீழ வா. உன் அப்பா முகத்தை கடைசியா பாரு .அழுகை வந்தா அழுதிடு .
இதுக்கு மேல என்ன சொல்றது. உனக்கு அப்பான்னா எனக்கு பையன் .
என்னாலையும் ஏத்துக்க முடியல .நேத்துல இருந்து உடைந்து போய் தான் இருக்கிறேன் .
இங்க இப்போ உனக்கு ஆறுதல் சொல்றதா.. இல்ல இறந்தவனை சந்தோஷமா அனுப்பி வைக்கிறதான்னே தெரியல “.
“எப்படி தாத்தா உயிரை விட்டுட்டு அவரால சந்தோஷமா போய் விட முடியுமா .
நம்மள பத்தி கொஞ்சம் யோசிச்சு பார்த்தாரா.. நான் பல டைம் சொன்னேனே ..
யாருக்கு வேணும்னாலும் கொடுங்க ஆனா ஸ்ட்ரீட்டா திருப்பி வாங்க முடியும்னா மட்டும் கொடுங்கன்னு கேட்டேன் .
ஆனா எதையுமே செய்யல” என்று சொன்னவன் .சட்டென்று வேறு ஒரு நம்பருக்கு அழைப்பு விடுத்தான் .
“ஆபீஸ்ல என்ன செஞ்சுகிட்டு இருக்கீங்க .என்ன கேட்டேன் உங்ககிட்ட..
யார் யாருக்கு அப்பா கடன் கொடுத்தார் என்று பார்த்து.. ஏதாவது டாக்குமெண்ட் இருந்தா உடனே இங்க கொண்டு வர சொல்லி இருக்கிறேன்.
சொல்லி நேரம் என்ன ஆச்சு .கிட்டத்தட்ட நான் இங்க வந்து மூணு மணி நேரம் தாண்டியாச்சு.
இது வரைக்கும் எந்த ரெஸ்பான்ஸ்சும் இல்ல. என்ன தான் செஞ்சுகிட்டு இருக்கீங்க “.
“ டேய் ஏன்டா ஏன் இப்படி எல்லாம் செஞ்சுகிட்டு இருக்கிற.. இந்த நேரம் ..
இதெல்லாம் தெரியணுமா”.
“ நிச்சயமா தெரியனும் தாத்தா.. இன்றைக்கு அப்பா இல்ல அதுக்கு காரணம் ..அவர் கொடுத்த பணத்தை எல்லாத்தையுமே ஏமாத்தி இருக்காங்க.
யார் யார் ஏமாத்தி வாங்கினாங்கன்னு பார்த்து நான் அவங்க கிட்ட பணத்தை வசூல் பண்ணி ஆகணும்.
என் அப்பாவுக்கு நியாயம் கிடைக்கணும் .நான் சும்மா விடமாட்டேன் .
என்ன காசு பணம்னா சும்மாவா.. சும்மா தூக்கி கொடுத்துடுவாங்கன்னு நினைச்சாங்களா ..
இன்னைக்கு அப்பா இல்ல. அதுக்கான தண்டனையை கொடுத்தவர்கள் எல்லாருமே அனுபவிக்கணும் .
யாரையும் நான் சும்மா விட போறதில்லை .அவர்களே கொண்டு வந்து கொடுத்துட்டா பிரச்சனை இல்ல .
அதே நேரத்துல கொடுக்கலைன்னா மேற்கொண்டு என்ன செய்யணுமோ அதை நான் செய்வேன் .”
“டேய் இத்தனை கோவம்.. இத்தனை ஆக்ரோஷம் தேவையில்லை ஜெகன்.
கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகு”.
“ முடியாது தாத்தா, இன்றைக்கு மொத்த டாக்குமெண்ட்டையும் பார்த்து எடுத்து வச்சுட்டு தான் கீழே வருவேன்.
அது எவ்வளவு நேரம் ஆனாலும் சரி” என்றவன் .மறுபடியும் அழைத்தான்.” சார் எல்லாத்தையும் கலெக்ட் பண்ணிட்டேன்.
இதோ வந்துகிட்டே இருக்கிறேன் . இன்னும் ஒரு அரை மணி நேரத்துல வந்துருவேன் .”
“நேரா மாடிக்கு வாங்க அதுக்கு பிறகு மத்த காரியங்களை பார்ப்பீர்களாம்” என்று சொன்னவன். மறுபடியும் அங்கிருந்து இருக்கையில் அமர்ந்திருந்தான் .
கண்கள் சிவந்து இருந்தது. சொல்ல முடியாத வேதனை மனதில் இருக்க.. அந்த இருக்கும் முகத்தில் அப்படியே பிரதிபலித்தது .
இந்த சமயம் அவனது முகத்தை பார்ப்பவர்கள் யாராக இருந்தாலுமே சற்று பயப்படுவர்.
அந்த அளவிற்கு கோபத்தில் முகம் சிவந்து கண்கள் அனலாக தகிக்க.. ஒரு இடத்தில் அமர முடியாமல் உழன்று கொண்டு இருந்தான்.
அறைக்குள் அடைப்பட்ட புலியை போல அவனின் ஒவ்வொரு செய்கைகளையுமே பார்த்தவருக்கு பயம். உண்மையில் மனதில் தொற்றிக் கொண்டது.
தந்தையின் உதவியாளர் மொத்த பைல்களையும் தூக்கிக் கொண்டு வந்திருந்தார்.
கிட்டத்தட்ட 100க்கும் மேற்பட்ட பையில்கள் கையில் தூக்க முடியாமல் தூக்கிக்கொண்டு வர ..அதை பார்க்கமுமே இவனுக்குள் இன்னமும் கோபம் சுழற்றி அடித்தது .
“என்ன மனுசன் இந்த ஆளு.. யாரு என்ன கேட்டாலும் அப்படியே எடுத்து நீட்டிடுவாரா..
மொத்த சொத்தையும் இழந்துட்டு வாழ்வதற்கு வழியே இல்லாத மாதிரி உயிரை விட்டுட்டு என்ன சொல்றது..” என தலையை உதறிக்கொண்டான்.
இவனுடைய தந்தை நந்தகுமார் கிட்டத்தட்ட 50 வயது நெருங்கி இருந்தவர் .
தாயார் சிறுவயதிலேயே இறந்திருக்க இவனை ஆரம்பத்தில் இருந்து செல்லமாக நல்ல நண்பனை போல் வளர்த்தவர் .
படிப்பிற்காக என்று வெளிநாடு செல்ல.. எந்த மறுப்பும் செல்லாமல் அனுப்பி வைத்தவர்.
தாத்தா பழனி இவர்களோடு இல்லை
கிராமத்திலேயே பிறந்து வளர்ந்ததினால் அங்கிருந்து அவருக்கு வர மனம் இல்லை.
கிராமத்து வீட்டிலேயே தங்கி கொண்டார் . மகனையும் பேரனையும் அவ்வப்போது வந்து பார்த்துவிட்டு செல்வதோடு சரி .
வருடத்திற்கு ஒருமுறை ஜெகனை அழைத்து தன்னோடு வைத்துக் கொள்வார் .
மகனின் மேலும் பேரனின் மேலும் நிறையவே பாசம் இருந்தது .ஆனால் ஏனோ இந்த நாகரீக சிட்டி வாழ்க்கை அவருக்கு பிடிக்கவில்லை.
அதனாலேயே இங்கே வந்து தங்குவதை தவிர்த்து வந்திருந்தார் .
ஒருவேளை நந்தகுமாரோடு வந்து தங்கி இருந்தால் இன்றைக்கு இப்படிப்பட்ட ஒரு இறப்பு நிகழ்ந்து இருக்காது. என்று மனம் கேள்வி கேட்க..
அவரும் கண்கள் கலங்கியபடி தான் அமர்ந்திருந்தது.
யாரிடம் என்ன சொல்வது எப்படி சமாளிப்பது எதுவுமே புரியவில்லை.
கொண்டு வந்த பைல்களை வேகமாக எடுத்து புரட்டிப் பார்த்தான்.
நந்தகுமாரை ஒரு வகையில் பாராட்டியே ஆக வேண்டும் .
கொடுத்திருந்த ஒவ்வொரு பணத்திற்குமே சரியாக டாக்குமெண்ட் போட்டு வாங்கி வைத்திருந்தார் .
பணம்தான் திருப்பி வரவில்லையே தவிர டாக்குமெண்டில் எந்தவித குழப்பமும் இல்லாமல் தெளிவாக இருந்தது .
சிலது எல்லாம் சட்டப்படி ரெஜிஸ்டரும் செய்து வைத்திருந்தார் .
பார்த்தவுடன் முகம் லேசான புன்னகை தொற்றியது .
“என்னடா இத்தனை பிரச்சனையிலெயும் சிரிக்கிற” என்று பேரனை கேட்க ..
“அப்பா ஏமாந்தவர் தான் ஆனால் ஒரு விஷயத்துல கொஞ்சம் தெளிவா இருந்திருக்கிறார் .
யார் யாருக்கு என்ன கொடுத்திருக்கிறார்களோ சரியான டாகுமெண்ட்ட கரெக்டா வெச்சி இருக்கிறார் .
அந்த வகையில் பாராட்டலாம்.அதுக்காக அவர் செஞ்சது சரின்னு சொல்ல மாட்டேன்.
இந்த நிமிஷம் கூட அவரோட முகத்தை பார்க்க எனக்கு துளி கூட விருப்பம் இல்லை.
வாழ்க்கையில ஜெயிச்சவங்களை தலைக்கு மேல வச்சு கொண்டாடலாம் .ஆனால் தோற்றவர்களை பார்க்கவே கூடாதுன்னு நினைக்கிறவன்..
அப்படி நினைக்கிற எனக்கு இப்படி ஒரு சூழ்நிலை வரும்னு நான் நெனச்சு பாக்கல.”
“அப்படியெல்லாம் பேசக்கூடாது ஜெகன் .அவன் உன்னோட அப்பா .”
“ இல்லன்னு சொல்லலை தாத்தா .ஆனா இப்படி ஒரு காரியம் பண்ணுவாங்கன்னு நான் நினைச்சு கூட பாக்கலை” என்று சொன்னவன் மொத்த பைல்களையும் எடுத்து அங்கே இருந்த டிராவில் வைத்து பூட்டினான்.
சாவியை எடுத்து வைத்தவன் “சரி தாத்தா கீழே வாங்க மேற்கொண்டு ஆக வேண்டியதை பார்க்கலாம் .
முடிவு எடுக்கிறது சுலபம்தான் ஆனால் அதை ஏத்துக்கிற பக்குவம் எனக்கு இல்ல.
அடுத்தடுத்து வேலை நடக்கட்டும் .நான் அவரோட முகத்தை பார்க்க மாட்டேன் தாத்தா .
நான் வாசல்ல வெயிட் பண்றேன் .என்ன செய்யணுமோ உங்க பையனுக்கு செய்ய வேண்டிய சாங்கியங்களை செஞ்சு முடிங்க .
பெத்த அப்பா என்கிற முறையில் தோள்ல சுமந்து எடுத்துட்டு வரேன் “என்று சொல்லிவிட்டு கோபத்தோடு கீழே இறங்கினான் ஜெகன்.
பேரனின் மனநிலை இவருக்கு நன்றாக தெரிந்தது.
அவன் கோபப்படுவதும் சரிதானே ..
அதிலும் அப்பாவும் மகனும் நண்பர்கள் போல தான் பழகியது.
மகனிடம் இதுதான் பிரச்சனை இதற்கு ஏதாவது தீர்வு கிடைக்குமா என்று கேட்டிருந்தால் கூட அவன் மொ
த்தத்தையும் விட்டுவிட்டு இங்கு வந்து இருப்பான்.
தந்தைமின் பிரச்சனைகளை சமாளித்து இருப்பான் .
இப்படி மொத்தமாக உயிரை விடுவது என்பது தவறு தானே..மனதிற்குள் நினைந்தபடியே சற்று சோர்வாக கீழே இறங்கினார் பழனி.