அத்தியாயம் 3
“தேவனாம்பட்டினம் எதுக்கு தம்பி”என தங்கம்மாள் கேட்க,
“அங்க தான அன்னம் போறதா சொன்னா அவ பிரண்ட் வீட்டுக்கு, போங்க நான் பின்னாடி வரேன்”என கூற அவர்களும் முன்னே செல்ல இவனும் வண்டியை எடுத்து கொண்டு புறப்பட்டான்…
சிறிது நேரத்தில் தேவனாம்பட்டினம் மீனவர் குடியிருப்பு பகுதிக்கு வந்தனர்…
அங்கே அறிவழகியின் வீட்டு வாசலுக்கு சென்றனர்…
தங்கம்மாள் மூடியிருந்த கதவை தட்ட அறிவழகி வந்து கதவை திறந்தாள்…
இவர்களை பார்த்தவுன் தங்கத்தை கட்டிக்கொண்டு ஓவென கதறி அழுதாள்…
“அத்தை அன்னம் எங்கத்த எங்கம்மா என்ன வெளிலயே விட மாட்டேங்குது அன்னம் வந்துட்டாலா அவள கண்டுபிடுச்சிட்டிங்களா” என அழுதுகொண்டே கேள்விகளை அடுக்கினாள்…
ஏற்னவே துக்கத்தில் இருந்த தங்கம் இவள் அழுகையில் இன்னும் துக்கமடைந்தார்…
“உன் வாய தொறந்தா அன்னம் எங்க இருக்கானு தெரிஞ்சிடும்” என பிரபு அறிவழகியை நோக்கி கூற அனைவரும் ஒரு நிமிடம் அதிர்ச்சியாகினர்…
“அண்ணா நான் என்ன சொல்லனும்,
அன்னைக்கு அவ என்ன பாக்க வரேன்னு சொல்லிட்டு தான் வந்திருக்கா ஆனா அவ என்ன பாக்கவே வரலையே” என அழுது கொண்டே அறிவழகி கூற,
“உன்கிட்ட நான் கதை கேட்கல அறிவு உண்மைய கேட்டேன்” என அழுத்தி கேட்க,
இவனின் கேள்வியில் உள்ள காட்டம் தாங்க முடியாமல் தலையில் அடித்து கொண்டு அழ ஆரம்பித்தாள்…
“அவ இங்க வரன்னு சொன்னது கூட அத்தை சொல்லி தான் எனக்கு தெரியும் அவ ஏன் வந்தா எதுக்கு வந்தா எதுமே எனக்கு தெரியாது”என அழுது கொண்டே கூறும் போது அங்கு சாந்தி வந்துவிட்டாள்…
“ஏய் எல்லாம் கிளம்புங்க உன் மவ எவனையோ இழுத்துட்டு போய் இருப்பா இரண்டு நாள் கழிச்சு கழத்துல தாலிய தொங்கப்போட்டுட்டு வருவா போய் பாரு போ,
இங்க வந்து என் மவள விசாரணை நடத்திட்டு இருக்காங்க,
ஏய் உள்ள போடி இவங்க கேள்வி கேக்கறாங்களாம் இவ பதில் சொல்றாலாம்”என அறிவை தள்ள அறிவு அழுது கொண்டே உள்ளே சென்று விட்டாள்….
“ம்மா நான் ஒரு வக்கீல் அன்னம் அறிவோட குளோஸ் பிரண்ட்,
அவ காணாம போன அன்னைக்கு இவள பாக்க வரதா தான சொல்லிட்டு வந்திருக்கா அப்போ அறிவ விசாரிச்சா தான தெரியும்” என பிரபு சாந்தியிடம் கூற,
“நீ யாரா வேணா இரு என் மவ எந்த பதிலும் சொல்ல மாட்டா ஏற்கனவே அந்த சிறுக்கி தொலைஞ்சத நினைச்சு சோறு தண்ணி இல்லாம் படுத்து கிடக்குது மூதேவி இதுல இது வேறயா,
அப்படி நீ வக்கீலு உனக்கு பதில் சொல்லனும்னா போய் ஸ்டேஷன்ஷ பேப்பர் வாங்கினு வா போ”என விரட்டினாள்…
“சாந்தி என் அன்னத்த பத்தி சின்னதா எதாவது தகவல் தெரிஞ்சாலும் கொஞ்சம் சொல்லுங்கம்மா, அப்றம் என் மவ எவன் கூடயோ ஓடி போற அளவுக்கெல்லாம் நான் அவள வளத்து வைக்கல” என கண்ணீர் மல்க அவளிடம் கைக்கூப்பி நின்றும் கனியாத சாந்தி மீன் கூடையை தூக்கி கொண்டு கடற்கரை நோக்கி சென்றாள்…
என்ன செய்வதென புரியாமல் நின்ற தங்கத்தையும் அழகப்பனையும் அழைத்து கொண்டு பிரபு திருப்பாதிரிபுலியூர் காவல் நிலையம் வந்தான்…
“ஹலோ சார் ஐ அம் அட்வகேட் பிரபு,
அட்வகேட் ரவிச்சந்திரன் கிட்ட அசிட்டெண்ட்டா ஒர்க் பன்றேன்”என இன்ஸ்பெக்டரிடம் பரஸ்பரம் செய்து கொண்டான்…
“ஹலோ சார் சொல்லுங்க என்ன விஷயம்” என இன்ஸ்பெக்டர் கேட்க,
“இவங்க எங்க பண்ணைல வேல செய்யறவங்க இவங்க பொண்ண காணோம்னு கம்பிளைண்ட் குடுத்து இன்னையோட மூனு நாள் ஆகுது ஆனா எந்த இன்பர்மேஷனும் இப்போ வரை கிடைக்கல”என கூறினான்…
“சார் நானே கூப்பிடலாம்னு தான் இருந்தேன்,
இவங்க பொண்ணு அவ பிரண்ட் வீட்டுக்கு போறதா சொல்லுச்சுனு இவங்க சொல்றாங்க ஆனா அந்த பக்கம் இருக்கற கேமராவ எல்லாம் செக் பன்னதுல அந்த பொண்ணு அந்த சைடு போனதுக்கு உண்டான எந்த அடையாளமும் இல்ல,
சோ பொண்ணு அங்க போகல வேற எங்கயோ போய் இருக்கு,
வயசு வேற அப்படி, பருவ வயசு காதல் கீதல் ஏதாவது இருக்கானு விசாரிக்கனும்”என கூற தங்கம் “என்புள்ள அப்படிபட்ட பொண்ணு இல்லைங்கய்யா”என கைகூப்பி அழுதாள்….
“ம்மா உங்கபொண்ணு உங்க வீட்ல நல்ல பொண்ணா இருந்தா எல்லா இடத்துலயும் அப்படியே இருக்கனும்னு எந்த அவசியமும் இல்லம்மா,
அதுவும் இந்த காலத்துல இந்த நாசமா போன போன் வந்து எல்லாம் பிஞ்சுலயே பழுத்து போய் கிடக்கதுங்க,
ஒரு நாளைக்கு எத்தனை கேஸ் இந்த மாதிரி பாக்கறோம்,
ஸ்கூல் எல்லாம் நாளைக்கு தான் ஓபன் ஆகும் அதனால நாளைக்கு போய் தான் ஸ்கூல்ல விசாரிக்க முடியும்,
பொங்கல் சமயத்துல ஒவ்வொருத்தர் வீட்லயும் போலீஸ் போய் நிக்க முடியாதுனு உங்களுக்கே தெரியும் அட்வகேட் சார்” என இன்ஸ்பெக்டர் கூறினார்….
“அண்ணா அக்காவ வீட்டுக்கு கூட்டிட்டு போங்க நான் போய் ரவிச்சந்திரன் சார பாத்துட்டு வரேன்” என அவர்ளை அனுப்பி விட்டு அவனும் வண்டியில் புறப்பட்டான்….
வக்கீல் ரவிச்சந்திரனின் வீடு திருவந்திபுரம் கோவில் அருகில் தான்….
போகும் வழியில் அன்னத்தின் நினைவுகள் அவன் முன் நிழலாடின…
“எதுக்கு அன்னம் வாரவாரம் திருவந்திபுரம் போற அவ்ளோ பக்தியா” என பிரபு கிண்டலாக கேட்க,
”அண்ணா அங்க மலை மேல இருக்க பெருமாள கும்பிட்டா நல்லா படிப்பு வருமாம், அதனால தான் வாரந்தவறாம அங்க போறேன்” என கண்களை உருட்டி உருட்டி பேசினாள்..
“நல்லா படிக்தறது உன் கைல தானடா இருக்கு நீ நல்லா கவனமா படிச்சாவே நல்ல மார்க் வருமே”
“வரும் தான் ஆனா கடவுளோட ஆசிர்வாதமும் கொஞ்சம் வேணும்தானே”
“அப்போ நம்ம ஐயனாரப்பனையும் விழுந்து விழுந்து கும்பிடற அதான் அந்த மலை மேல இருக்கற பெருமாள் தான் உனக்கு படிப்ப தராரே”
“நம்ம ஐயனாரப்பன் என்னோட அப்பா மாதிரி, எனக்கும் அப்பா அம்மாக்கும் தம்பிக்கும் பாதுகாப்பா இருக்க சொல்லி கும்பிடுவேன்”என்றாள்…
“ஆஹா ஒவ்வொரு சாமிக்கும் ஒவ்வொரு காரணம் வச்சிருப்ப போல”எனக் கூறி சிரித்தான்…
“ஆமா அண்ணா நல்லா படிக்கனும் படிச்சு வேளாண் துறையில பெரிசா சாதிக்கனும்,
தம்பியையும் நல்லா படிக்க வைக்கனும், அப்பா அம்மாவ வீட்ல உட்கார வச்சி ஜம்முனு பாத்துக்கனும்”என கண்கள் மின்ன கூறியவளை பார்த்து சந்தோஷமாக சிரித்தான்…
“கண்டிப்பா நீ சாதிப்ப அன்னம் அது உன்னோட ஆசையில்ல உன்னோட இலட்சியம் அதனால கண்டிப்பா நீ அதை அடைஞ்சிடுவ”என கூறியதை நினைத்து பார்க்கையில் கண்களில் இருந்து சில துளி காற்றோடு கலந்தது வண்டியின் வேகத்தில்….
“டேய் வந்துட்டிங்களா இல்லையா என்னடா செய்யறிங்க இன்னும்,
அந்த புள்ளைக்கு எத்தனை மயக்க ஊசி போடறது அனுபவிக்கறதுக்கு முன்னாடியே போய் சேந்துட்டா அத்தனையும் தண்டமா போய்டும்”என ஒருவன் போனில் யாரிடமோ கத்தி கொண்டிருந்தான்…
“இதோ அவ்ளோதான் மச்சி பாண்டிச்சேரிக்குள்ள என்ட்ரி ஆகிட்டோம் இன்னும் கொஞ்ச நேரத்துல அங்க இருப்போம் பாப்பாவ ரெடி பன்னி வை”என எதிர்முனையில் கேட்க போனை ஆஃப் செய்துவிட்டு உள்ளே வந்தான்…..
உள்ளே வந்து மின்விளக்கை போட்டவன் முன்னால் சுவற்றின் ஓரமாய் மருந்தின் வீரியத்தில் கண்களை திறக்க முடியாமல் அன்னம் விழுந்து கிடந்தாள்….
“ஏய் யாரங்க”என கத்த ஒரு நடுத்தர வயது பெண்மணி பயத்துடன் வந்து நின்றாள்…
“இந்த புள்ளைய பாத்ரூமுக்கு கூட்டிட்டு போய் நல்லா குளிக்க வச்சு உள்ள ரூம்ல படுக்க வை வெறும் போர்வைய மட்டும் போத்தி விடு போதும்”என மிரட்டும் தோணியில் கூற அப்பெண்மணியும் பயத்துடன் அன்னத்தை மெல்ல கைப்பிடித்து தூக்கி கழிவறைக்கு அழைத்து சென்றாள்….
அன்னத்தை குளிப்பாட்டி கொண்டு வந்து அவன் கூறியபடி அறையில் கொண்டு படுக்கவைத்து வெள்ளை நிற பெட்சீட்டை கழுத்து வரை போர்த்தி விட்டு அன்னத்தின் நிலையை எண்ணி பெருமூச்சை விட்டு வெளியே சென்றுவிட்டாள்….
அந்த பெரிய கட்டிடத்தின் வாசலில் இருந்த காரில் இருந்து மூன்று ஆண்கள் இறங்கினர்…
“டேய் மச்சி சொன்னது போலவே வந்துட்டோம் பாத்தியா” என அதில் ஒருவன் கூற,
“கிழிச்சிங்க காலைல வாங்கடானா ஆடிகிட்டு மதியமா வந்திருக்காங்க, வேலைய முடிச்சிட்டு நைட் எல்லாம் இவள டிஸ்போஸ் பன்னிடனும் நியாபகம் இருக்குள்ள” என என காட்டமாக பேச,
“அதெல்லாம் பன்னிடலாம் மச்சி முதல்ல பட்சி எங்க கண்ணுல காட்டு,
என்னா அழகா இருப்பா, இந்த நாளுக்காக தான் நான் ஏங்கி போய் கிடந்தேன்” என ஒருவன் கேட்க மூவரும் அவனை அடக்கி உள்ளே அழைத்து சென்றனர்….
“டேய் பாப்பா இந்த ரூம்ல தான் இருக்கு, சும்மா பாத்துட்டு மட்டும் வாங்க சரக்க அடிச்சிட்டு அப்பறம் நம்ம வேலைய பாப்போம்” என ஏற்கனவே இங்கிருந்தவன் புதிதாக வந்த மூவரிடமும் கூறிவிட்டு சென்றான்…
மூவரும் மெல்ல கதவை திறக்க ஊசி மயக்கத்தில் மெல்லிய முனகலையும் அசைவையும் கொடுத்து தன் சுயநினைவை இழந்து அந்த போர்வைக்குள் உடலை மறைத்து படுத்திருந்தாள்…
“டேய் அப்பறம் சரக்கடிக்கலாம் டா நான் போய் முத என் வேலைய முடிச்சிடறேன் அச்சோ அங்க பாரேன் பாத்த உடனே உணர்ச்சி பொங்கற மாதிரி எப்படி படுக்க வச்சிருக்கான்னு” என ஒருவன் எகிற மீதி இருவரும் இவனை வைத்துக்கொண்டு இம்சை என இழுத்து சென்று விட்டனர்…..
“மாமா தம்பி காலைல போச்சு பெரிய வக்கீல பாக்கறேன்னு இன்னமும் எந்த தகவலும் இல்ல எனக்கு நேரம் அதிகமாக அதிகமாக பயம் ஏறிட்டே போகுது”என விரக்தியாக கூறிய தங்கத்திற்க்கு என்ன ஆறுதல் சொல்வது என தெரியாமல் அழகப்பன் உடன் அமர்ந்திருந்தான்….
“இத்தனை பெரிய பண்டிகைல இப்படி இருப்போம்னு ஒரு நாளும் நெனச்சிருப்போமா,
பண்டிகைனால தேட முடியாதாம் ஒருத்தங்க வூட்ல போய் நிக்க முடியாதாம் காரணம் சொல்றானுவ,
இதுவே இந்த ஊர் பெரிய மனுஷங்க வீட்ல எதாவது வந்துட்டாலும் இப்படித்தான் சாக்கு சொல்லினு நிப்பானுவளா
எல்லா இடத்துலயும் உள்ளவனுக்கு ஒரு நியாயம் இல்லாதவனுக்கு ஒரு நியாயம் தான் தங்கம்,
நம்ம பிரபு தம்பிக்கு அன்னத்து மேல கொள்ள பிரியம் இப்போதைக்கு என்னோட நம்பிக்கை அவரு மட்டும் தான்,
இதுக்கு மேல அந்த ஐயனாரப்பன் தான் துணை நிக்கனும்”என விரக்தியின் உச்சத்தில் பேசிய அழகப்பனின் வார்த்தைகள் தங்கத்தின் காதுகளுக்கு செல்ல முடியாத நிலையில் பித்து பிடித்து அமர்ந்து இருந்தாள்…..
அடுத்த நாள் காலை கதிரவன் மெல்ல அவன் ஒளியை தானமாக தர இருள் எனும் பசி விலக தங்கம் மெல்ல எழுந்து வெளியே சென்றாள்….
“அக்கா தங்கம்மா க்கா”என பக்கத்து வீட்டில் இருக்கும் ஒருவன் கத்திக்கொண்டே வந்தான்….
“என்னாச்சு அண்ணா ஏன் இப்படி பதட்டமா ஓடிவரிங்க”
“அழகப்பன்னா இல்லையா”
“இருக்காரு என்னாச்சு சொல்லுங்க”
இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே அழகப்பன் எழுந்து வெளியே வந்தான்…
“அண்ணா சீக்கிரம் வாங்களேன் கன்னிகோயில் பாலத்துக்கிட்ட கிட்ட நம்ம அன்னத்த யாரோ போட்டுட்டு போயிட்டாங்களாம் இன்ஸ்பெக்டர் வந்திருக்காரு வெளில நிக்கறாங்க ஜீப்ல கொஞ்சம் வாங்களேன்”என பதறியபடி கூற இருவரும் அதிர்ந்து சிலை போல நின்றனர்…