Kiruthika_Jayaseelan
Moderator
அத்தியாயம் 1
ஆயிற்று, சென்னை வந்து ஒரு வாரம் ஆகி இருந்தது.
சாந்தினி ஆதர்ஷின் சென்னை வீட்டிற்கு அருகில் தான் வீடு எடுத்து இருந்தாள்.
அவளுடன் அவளின் பிஏ தாராணியும் தங்கி இருந்தாள்.
அவளுக்கு ஆதர்ஷனை சமாளிப்பது ஒரு பக்க கடினமாக இருக்க, தாரணியின் தொன தொன பேச்சை சமாளிப்பது ஒரு பக்கம் கடினமாக இருந்தது.
யாழை விட பத்து மடங்கு பேசி கொண்டு இருந்தாள்.
"மேம் இன்னைக்கு மிஸ்டர் ஆதர்ஷ் கூட உங்களுக்கு மீட்டிங் இருக்கு", என்று அவள் சொல்லவும், சாந்தினியோ ஆழ்ந்த மூச்சை எடுத்தவள், "எத்தனை மணிக்கு?", என்று கேட்கவும், "ஈவினிங் நாலு மணிக்கு மேம்", என்று அவள் சொல்லவும், சரி என்று தலையசைத்து கொண்டாள்.
"மேம் உங்க கிட்ட ஒன்னு கேக்கணும்?", என்று அவள் தயங்கி நிற்க, "கேளு", என்றவளிடம், "உங்களுக்கும் ஆதர்ஷ் சார்க்கும் ஆகவே மாட்டேங்குது அப்புறம் எப்படி ஒண்ணா ஒர்க் பண்ண போறீங்க?", என்று அவள் கேட்கவும், அவளை பார்த்த சாந்தினி, "நீயே பார்த்து தெரிஞ்சிக்கோ", என்பதுடன் நிறுத்தி கொண்டாள்.
அவளும் எவ்வளவு சோதனைகளை தாங்குவாள்.
தளிரை காலிஃபோர்னியாவில் விட்டதே அவளுக்கு ஒரு பக்கம் தலை வலி தான். இதில் யாழை நினைக்கும் போது இன்னும் அவளின் மனம் பதறியது.
அவளின் வாழ்க்கை எதை நோக்கி போகிறது என்றே அவளுக்கு தெரியவில்லை.
தன்னலம் அற்றவள் அவள், இன்னும் என்னவெல்லாம் அவளின் வாழ்க்கையில் அவளும் தாங்குவாள்.
தைரியம் ஆனவள் தான், ஆளுமையானவள் தான், ஆனால் அவளுக்கென்று ஒரு கஷ்டம் என்று சொல்லி அழ கூட ஆளில்லாது போல் தோன்றியது.
இப்போதைக்கு அவளின் மனதிற்கு இருக்கும் ஒரே இதம் அவளின் குழந்தைகள் லக்ஷித் மற்றும் லயனிக்கா தான்.
மாலை நான்கு மணி அளவில், ஆதர்ஷின் சென்னை அலுவலகம் சென்று விட்டாள்.
அங்கே அர்னவ் இருக்கவும், "ஹாய் மேம்", என்று அவளை பார்த்து சொன்னவனை தான் சைட் அடித்து கொண்டு இருந்தாள் தாரணி.
"உங்க பாஸ் என்ன பன்றாரு?", என்று கேட்கவும், "பிரீ தான் மேம், உங்களுக்காக தான் வெயிட் பன்றாரு", என்று சொல்லவும், அவளும் அவனின் அறையின் கதவை தட்ட, "கம் இன்", என்கிற பதிலில் உள்ளே சென்றாள்.
அவளை பார்த்த ஆதர்ஷனின் கண்களில் அணல் பறந்தது.
சாந்தினி சாதாரணமாக தான் இருந்தாள்.
அவன் அவளை அமர கூட சொல்லவில்லை.
அப்படியே தான் அமர்ந்து இருந்தான்.
இதற்கெல்லாம் அசருபவள் அல்லவே சாந்தினி, அவளே நாற்காலியை இழுத்து போட்டு அமரவும், "நான் உங்கள உட்கார சொல்லலையே", என்று அவன் புருவம் உயர்த்தி கேட்கவும், "உங்களுக்கு தான் மரியாதைனா என்னன்னே தெரியாதே.. மரியாதை தெரியாதவங்க கிட்ட எப்படி அத எதிர் பார்க்க முடியும் மிஸ்டர் ஆதர்ஷராம்?", என்று அவளும் புருவம் உயர்த்தி வினவினாள்.
ஆதர்ஷின் இதழ்களில் கேலி புன்னகை.
"என்னால காசுக்காக குழந்தை பெத்துக்குறவளுக்குலாம் மரியாதை கொடுக்க முடியாது", என்றவனை பார்த்து, "நீங்க இப்போ வச்சிருக்கறவங்க கூட காசுக்காக நான் இதே வயத்துல சுமந்த பிள்ளைங்க தான்", என்று அவள் சொல்லவும், "என் பசங்கள பத்தி பேசாத", என்றவன் கைகளை மடக்கி, அவனின் கோவத்தை கட்டு படுத்தி கொண்டான்.
அவனுக்கு தான் அவளை பார்த்தாலே எரிகிறதே!
"ஒர்க் பத்தி பேசலாம்", என்றவன் அதற்கு பிறகு வேலை விடயமாக அவளிடம் பேச ஆரம்பித்து இருந்தான்.
இருவரும் வேலை என்று வந்து விட்டால், வேலையை பற்றி மட்டும் தான் பேசுவார்கள்.
பேசி முடிய, "இன்னைக்கு ஒரு கிளைன்ட் பார்ட்டி இருக்கு நீயும் வரணும்", என்று அவன் சொல்லவும், "நான் எதுக்கு?", என்று கேட்டவனிடம், "அவரும் இந்த ப்ராஜெக்ட்ல இன்வெஸ்ட் பன்றாரு... சோ நீயும் வந்தா பெட்டரா இருக்கும்", என்றவனை பார்த்து, "ஓகே.. என் பிஏவையும் கூட்டிட்டு வரலாமா?", என்று கேட்கவும், "ம்ம்", என்றவனுக்கு தலையசைத்து வெளியே சென்று விட்டாள்.
இதே சமயம், வெளியே அர்னவை தான் வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டு இருந்தாள் தாரணி.
அவனுக்கே ஒரு கட்டத்தில் பொறுமை போய் விட்டது.
"மிஸ் எதுக்கு இப்படி பார்த்துகிட்டு இருக்கீங்க?", என்க, "நீங்க எவளோ அழகா இருக்கீங்க அதான் பார்த்து கிட்டே இருக்கேன்", என்றவளை பார்த்து, "ரொம்ப வழியுது தொடச்சிக்கோ", என்று சொல்லவும், "உங்க ஷர்ட்ல தொடச்சிக்கவா?", என்று கேட்கவும், அவனுக்கு கடுப்பாகி விட்டது.
இதே சமயம் சாந்தினி வெளியே வரவும், பார்ட்டியின் விவரங்களை அர்னவ்விடம் பெற்று கொண்டு சாந்தினி சென்று விட்டாள்.
அர்னவ்வுக்கு, "பை", என்று கைசைகை செய்து தாராணியும் சென்று விட்டாள்.
அன்றைய நாள் மாலை, சாந்தினி மற்றும் தாரணி தயாராகி ஆதர்ஷ் சொன்ன இடத்திற்கு வந்து விட்டார்கள்.
புது இடம் என்பதால், உபர் உபயோக படுத்தி வந்து இருந்தார்கள்.
அவர்களை நோக்கி வந்து இருந்தான் அர்னவ்.
சூட் அணிந்து இருந்தான்.
சாந்தினியோ சிவப்பு நிற உடையில் அழகாக இருந்தாள்.
தாராணியோ அழகான பிங்க் நிற உடையில் இருக்க, "வெல்கம்", என்று அர்னவ் புன்னகைக்க, "தேங்க்ஸ் அர்னவ்", என்று சாந்தினி சொல்லவும்,
"யு லுக் பியூட்டிபுல் மேம்", என்று அவன் சினேகமாக சொல்லவும், "யு லுக் ஹண்ட்ஸம் டு", என்று அவன் முடித்து இருந்தாள்.
அதற்குள், "நான் எப்படி இருக்கேன்?", என்று வெளிப்படையாக கேட்டு இருந்தாள் தாரணி.
சாந்தினியோ அவளை பார்த்து முறைக்க, "மேம் உங்கள மட்டும் பியூடிபுள்ன்னு சொல்ராங்க அப்போ நான்?", என்று வெகுளியாக கேட்கவும், "நீ பார்க்க பார்பி டால் போல இருக்க", என்று ஆதர்ஷின் குரல் ஒலித்தது.
அவளோ புன்னகைத்து, "தேங்க யு சார்... நீங்களும் செம்மயா இருக்கீங்க சார்", என்று பற்கள் விரிய கூறினாள்.
ஆதர்ஷிற்கு அவளை பார்த்ததும் ஜானவியின் நினைவு தான். இதே போல் தானே அவளும் மனதில் பட்டதை பட்டென்று பேசி விடுவாள்.
"உள்ள போலாம்", என்று சொன்னவன், உள்ளே செல்ல, அவனை பின் தொடர்ந்து அவளும் செல்ல, சட்டென்று சாந்தினிக்கு பிள்ளைகளின் நினைவு.
"பசங்க எங்க?", என்று அவள் ஆதர்ஷனை பார்க்க, "கேர் டெக்கர் கிட்ட விட்டுட்டு வந்து இருக்கேன்... இவளோ நாள் நான் தான் பார்த்துக்கிட்டேன்... இப்போ வந்து அக்கறை மாறி நடிக்கிறா", என்று வெளிப்படையாகவே கூறினான்.
சாந்தினிக்கு அவமானமாக இருந்தது. அர்னவ் மற்றும் தாரணியின் முன் இப்படி பேசுகிறான்.
அர்னவிற்கும் கூட அவளை பார்க்க பாவமாக இருந்தது.
எதுவும் அவனாலும் பேச முடியாத நிலை.
தாராணிக்கு தான் மனம் பொறுக்கவில்லை.
"இப்படி எல்லாம் பேசாதீங்க சார்", என்று சொல்லி விட்டாள்.
ஆதர்ஷ் அதற்கு பிறகு அவளை கஷ்ட படுத்த விரும்பவில்லை.
அவனின் கிளேன்டிடம் சென்று, "ஹலோ சார், இவங்க தான் மிஸ் சாந்தினி", என்று அறிமுகம் செய்யவும், "ஹாய்", என்று அவரும் கை குலுக்கினார்.
"கௌஷிக் இந்த ப்ராஜெக்ட் பார்த்துப்பான் ஆதர்ஷ்", என்று சொல்லவும், அவனும் தலை அசைத்து கொண்டான்.
இதே சமயம் பார்ட்டி ஆரம்பம் ஆனது.
தாராணிக்கு இது எல்லாம் புதிது.
ஆ வென்று பார்த்து கொண்டு இருந்தாள்.
"பார்த்து கொசு போய்ட போது", என்று அர்னவ் சொல்லவும், வாயை மூடிக்கொண்டாள்.
அவளிடம் ஜூஸ் ஒன்றை நீட்டினான்.
அங்கே நவ நாகரிக ஆடைகள் அணிந்தும் பெண்கள் வந்து இருந்தார்கள்.
"என்ன இப்படி டிரஸ் பன்னிட்டு வராங்க?", என்று அர்னவ்வின் காதுகளில் வினவ, "இத விட மோசமா கூட வருவாங்க", என்று சொல்லி கொண்டு இருக்கும் போதே, ஒருவன் தாரணியிடம் வந்து இருந்தான்.
குடி போதையில் தள்ளாடி கொண்டு வந்தவனை பார்த்து, அவள் சற்று தள்ளி நிற்கவும், அவனோ மேலும் அவளை நெருங்க, அர்னவ் வந்து அவனின் முன்னால் நின்றான்.
"அவ கூட டான்ஸ் ஆடணும் பாஸ்", என்று சொல்லி முன்னேற போக, "சாரி அவ என்கூட வந்து இருக்கா", என்று சொல்லவும், அவன் சென்று விட்டான்.
அர்னாவின் கையை இறுக்கி பிடித்து இருந்தாள் தாரணி.
கொஞ்சம் பயம் வந்து விட்டது.
"இப்போ எதுக்கு கைய பிடிக்கிற?", என்று அவனின் கையை அவன் உருவ பார்க்க, "அவளோ ப்ளீஸ் பிடிச்சிக்கிறேனே", என்று கெஞ்சவும், அவனும் பெருமூச்சை விட்டு கொண்டு அமைதியாகி விட்டான்.
அவனின் கையை பிடித்தால் யாரும் அவளை சீண்ட மாட்டார்கள் என்கிற நினைப்பு அவளுக்கு.
"சாப்பிடலாமா?", என்று கேட்டவளை அழைத்து கொண்டு அவன் சாப்பிட என இருந்த தனி அறையை நோக்கி சென்று விட்டனர்.
அவர்கள் இருந்து இருந்தால், பின்னால் நடக்கும் அசம்பாவிதத்தை தடுத்து இருக்கலாமோ என்னவோ!
இங்கோ ஆதர்ஷ் அவனின் கைபேசியை பார்த்து கொண்டு அமர்ந்து இருக்க, சாந்தினியின் முன் ஒரு கிளாஸ் நீட்ட பட்டது.
"ஜூஸ்", என்று பேரர் சொல்லவும், அதை அவள் எடுத்து குடித்து விட, ஆதார்ஷோ அவனின் கைபேசியை தான் பார்த்து கொண்டு இருந்தான்.
இதே சமயம் அங்கே வந்தார் மிஸ்டர் ஷர்மா.
சாந்தினியின் பரம எதிரி என்று கூட சொல்லலாம், எத்தனையோ முறை அவளை படுக்கைக்கு அழைத்து இருக்கிறார். அவரும் கௌஷிக்கின் தந்தையும் நெருங்கிய நண்பர்கள்.
அவரும் இந்த பார்ட்டிக்கு வந்து இருக்க, சாந்தினியிடம் வந்தவர், "டான்ஸ் ஆடலாமா?", என்று கேட்க, அவள் பதிலை கூட எதிர் பார்க்க வில்லை.
இழுத்து சென்று விட்டார்.
ஆதர்ஷ் சாந்தினி சென்றதை பார்த்தான் தான். அவனுக்கு அவள் இருந்தால் என்ன, இல்லை என்றால் என்ன என்கிற மனநிலை.
உன்னை அறிமுக படுத்த அழைத்தேன், செய்து விட்டேன், இனி நீ என்னமோ செய்து கொள் என்கிற எண்ணம்.
இதே சமயம், சாந்தினிக்கு மயக்கம் வர ஆரம்பித்து இருந்தது. அந்த பெரெர் கொண்டு வந்த ஜூஸில் தான் போதை மாத்திரை கலந்து இருந்தானே அந்த கயவன்.
அவளை அவன் அழைத்து சென்று, ஆட ஆரம்பிக்க, சாந்தினியோ திமிர ஆரம்பித்தாள்.
அந்த கயவனின் கையில் அகப்பட்டு கொண்டாள் சாந்தினி.
அவனின் எண்ணம் இன்னும் கொடூரமாக இருந்தது.
சாந்தினி ஒரு முறை அவனை அனைவரின் முன்னிலையிலும் அறைந்து இருந்தாள்.
அதற்கு பழி தீர்ப்பதற்காக தான் காத்து கொண்டு இருந்தான்.
இன்று வாய்ப்பும் கிடைத்து விட்டது.
அவனின் புத்தியில் அவளை நிர்வாணமாக அனைவரின் முன்னால் ஆக்க வேண்டும் என்கிற எண்ணம் தான்.
அவனின் எண்ணத்திற்கு ஏற்றார் போல, அவன் அவளின் உடையில் இருக்கும் ஜிப்பை திறக்க, சாந்தினியோ அவனின் கையில் திமிறியவளால் அதற்கு மேல் முடியாமல் போக, அவளோ போதையின் பிடியிலும் கண்ணீர் மல்க நின்று கொண்டு இருந்தாள்.
இதே சமயம் அவளின் உடையும் அவிழ்ந்து இருந்தது. கூனி கூறுகி அமர்ந்து இருந்தாள் ஆதிக்கம் மிக்க சாந்தினி.