எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

அசுரனோ! அதிகனோ! - கதைத்திரி

Status
Not open for further replies.

NNO7

Moderator
ஹாய் டியர்ஸ். வேறு வேலையில் மாட்டிக்கொண்டு, அடுத்தக் கதை எழுத ரொம்ப காலதாமதம் ஆகிவிட்டது. இதோ மீண்டும் ஒரு ஆண்ட்டி ஹீரோ கதையுடன் வந்துவிட்டேன்.

இந்தக்கதையில் வரும் கதாப்பாத்திரங்கள், கதைக்கரு, வசனம் அனைத்தும் என் சொந்த கற்பனையே! யாருடையை மனதையும் நோகடிக்க எழுதப்படவில்லை
 

NNO7

Moderator
அசுரனோ! அதிகனோ!

அத்தியாயம் – 1

“ச்சீ... நீயும் ஒரு பெண்ணா? அபி உன்னோட சொந்த தங்கச்சி. கொஞ்சமும் மனிதாபிமானம் இல்லாமல் நடந்துக்குற” என்று சொல்லிக்கொண்டே தன் கையின் மணிக்கட்டைப் பற்றி இருந்த வனரோஜாவின் கைகளை வெடுக்கென்று எடுத்துவிட்ட அஜய், மணமேடையில் இருந்து எழுந்து, தன் கழுத்தில் கிடந்த மாலையை விசிறி எறிந்துவிட்டு, தன் முன்னே நின்று இருந்த அபியை அணைத்துக்கொண்டவன், “நீ கவலைப் படாத அபி உனக்கு ஒன்னும் ஆகாது” என்று கூற, அவனை அணைத்திருந்த அபியின் இதழோ, வனரோஜாவைப் பார்த்து ஏளனமாக விரிந்து கொண்டது.

மணமேடையில் சர்வ அலங்காரத்துடன், கண்களில் இருந்து வழியும் கண்ணீரைக் கூடத் துடைக்காமல், தன் ஆருயுர்க் காதலனை வெறித்தபடி நின்றிருந்தாள் வனரோஜா. அவளால் தன் கண்முன்னால், நடப்பவற்றை நம்ப முடியவில்லை.

அஜயின் நெஞ்சில் சாய்ந்திருந்த அபியோ, “என்னைக் கைவிட மாட்டேன்னு சொல்லிட்டு, இப்ப என் அக்கா கழுத்துல தாலி கட்ட தயாராகிட்டீங்க. எப்படி அஜய் உங்களால் இப்படி ஒரு காரியத்த செய்ய முடிஞ்சது” என்று கேட்டுக் கதறினாள்.

கூடி இருந்த உறவினர்கள் அனைவரும், “இங்க என்ன நடக்குது” என்று தங்களுக்குள் கிசுகிசுத்துக் கொள்ள, இப்போது வனரோஜாவின் பார்வை நேராக தன் தந்தையை நோக்கிச் சென்றது.

அவரது முகத்திலும் அதிர்ச்சி தான். இருந்தும் நடப்பதை தடுத்து நிறுத்தாமல் தன் கையைப் பிசைந்து கொண்டு நின்று இருந்தார்.

அப்போது உறவினர்கள் மத்தியில் இருந்து ஓடி வந்த வனரோசாவின் தாயோ, அஜயிடம் சென்று, “உங்கக் காலில் வேண்டுமானாலும் விழறேன் தம்பி, தயவு செஞ்சி என்னோட பொண்ணு அபியைக் கல்யாணம் பண்ணிக்கோங்க” என்று கூறி அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி அளித்தார்.

இதை எல்லாம் பார்த்து அதிர்ச்சியில் இருந்து விடுபட்ட வனரோஜாவோ, மணமேடையில் இருந்து எழுந்து, “அம்மா, நீங்க என்ன பேசுறீங்க?” என்று அதிர்ச்சியான குரலில் கேட்க, “நீ சும்மா இருடி” என்று ஒரு அதட்டல் மட்டும் போட்டவர், திரும்பவும் அஜயை நோக்கித் தன் பார்வையைத் திருப்பினார்.

“தம்பி என் பொண்ணுக்கு மூளையில் கட்டி இருக்குன்னு டாக்டர் சொல்லிட்டாங்க தம்பி. உங்களைக் கல்யாணம் பண்றது தான் அவளோட விருப்பம். அவள் உயிர் எப்பவேணாலும் போகலாம்..” என்று அவர் சொல்லும் போதே, “ஆண்ட்டி, அப்படி எல்லாம் பேசாதீங்க, நம்ம அபிக்கு ஒன்னும் ஆகாது” என்று இடையில் பேசிய அஜய், அவன் கையில் இருந்த தாலியை அபியின் கழுத்தில் கட்டினான்.

வனரோஜா ஒரு நிலையிலையே இல்லை. தன் தந்தையிடம் சென்றவள், “இங்க என்ன தான் நடக்குது அப்பா. அஜய் எதுக்காக இப்படி பண்றாரு?” என்று கேட்டுக் கதற, அவரோ மிகவும் சாவகாசமான குரலில், “உன் தங்கச்சிக்கு உடம்பு சரியில்லம்மா. நீ எதுவும் குழப்பம் உண்டாக்கமா இரு” என்று சர்வசாதரணமாக கூறினார்.

“என்னப்பா பேசுறீங்க? நான் குழப்பம் உண்டாக்குறேனா! இன்னைக்கு நடக்க இருந்தது என்னோட கல்யாணம் அப்பா. அஜய் என்னைத் தான் காதலிக்குறாரு” என்று வனரோஜா சொல்லி முடிக்க, அஜய்யோ, அபியின் கழுத்தில் மூன்று முடிச்சியிட்டு நிமிரவும் சரியாக இருந்தது.

அதற்கு மேல் அங்கு நிற்க வனரோஜாவிற்கு மிகவும் அவமானமாக இருந்தது. மண்டபத்தை விட்டு வேகமாக வெளியேறி, தன் ஸ்கூட்டி பெப்பைக் கிளப்பிக்கொண்டு மின்னல் வேகத்தில் வெளியேறினாள், அந்த அழகு பதுமை.

சிறுவயதில் இருந்தே பெற்றோர்களால் புறக்கணிக்கப்பட்டு, தனக்கென புது அடையாளத்தை தேர்ந்தெடுத்து, புதிய பாதையை தானே அமைத்து அதில் பயணித்துக் கொண்டிருப்பவள் தான், நம் கதையின் நாயகி வனரோஜா. ஐந்தரை அடி உயரத்தில் கோதுமை நிறத்தில், மீன் போன்ற கண்கள் உடையவளின் கண்களில் இருந்து கண்ணீர் வலிந்து கொண்டே இருந்தது.

அஜயின் சட்டையைப் பிடித்து, நறுக்கென்று நான்கு வார்த்தைகள் கேட்டு விடத் துடித்த மனதினை கடிவாளமிட்டு கூட்டி வந்தாலும், அவள் மனதில் இருந்த ரணம் ஆறவே இல்லை.

‘இரண்டு வருடக்காதலை எப்படி மறந்தான்’ என்று வனரோஜாவின் மனதில் மாறிமாறி ஒரே கேள்வி தான் எழுந்து கொண்டே இருந்தது.

சிறுவயதில் இருந்தே வனரோஜா எதை வைத்திருந்தாலும், அதைத் தன்னுடையது ஆக்கியே தீருவாள் அபி. அபி எந்த ஒரு தவறை செய்தாலும், அது வனரோஜாவின் தலையில் வந்து தான் விழும்.

வனரோஜாவின் தந்தை ராம் மிகப்பெரிய செல்வந்தர். கட்டுமானத்தொழிலில் கொடி கட்டிப்பறப்பவர். அவருக்கும் அவரது மனைவி மதுவுக்கும் மிகவும் செல்லமான மகள் தான் அபி. அபி கேட்டு எதையும் மறுப்பதில்லை அவளது பெற்றோர். அது வனரோஜாவின் பொருட்களாக இருந்தாலும் சரி.

சிறுவயதில் இருந்து அனைத்தையும் தன் தங்கை அபிக்காக விட்டுக்கொடுத்தவள், இப்போது காதலனையும் தன்னை மீறி விட்டு தான் கொடுத்துவிட்டாள் வனரோஜா.

பன்னிரெண்டாம் வகுப்பில் முதல் மதிப்பெண் எடுத்த வனரோஜவுக்கு, மெரிட்டில் மருத்துவம் படிக்க சீட் கிடைக்க, அனைத்தையும் மறந்து, விடுதியில் சென்று படித்தாள். அந்த ஐந்து வருடமும், அவள் வாழ்நாளில் பொற்காலம் என்றே கூறலாம். ஐந்து வருடம் எம்பிபிஎஸ் படிப்பில் கோல்ட் மெடல் வாங்கி, அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவாராகி, தனது மேல் படிப்பையும் தொடர்ந்து கொண்டிருந்தாள் இருபத்தி ஆறு வயதான வனரோஜா.

அப்போது அவளுக்கு அறிமுகம் ஆனவன் தான் அஜய். அவளைப் போலவே அவனும் பயிற்சி மருத்துவன். அஜய் தான் தன் காதலை முதன் முதலாக வனரோஜாவிடம் சொன்னவன். பெரியதாக அவனை மறுப்பதற்குக் காரணம் இல்லாததால், அவனது காதலுக்கு சம்மதமும் தெரிவித்தவள், தனக்காக அன்பு செய்ய ஒரு ஜீவன் வந்துவிட்டதாகவே கருதினாள். பாவம் அப்போது அவளுக்குத் தெரியவில்லை, இவன் தனக்கு அன்பைத் தரவரவில்லை மாறாக ஏற்கனவே அதிக துக்கத்தில் இருக்கும், தனக்கு மேலும் துக்கத்தைத் தரவே வந்துள்ளான் என்று.

*****

“அம்மா அபி எங்க இருக்கா?” என்று வீட்டிற்கு வந்த தன் அன்னை மதுவிடம் கேட்டாள் வனரோஜா. மனதில் ஆயிரத்திற்கும் மேலாக பாரம் இருந்தாலும், இன்று, தன் கேள்விகளுக்கு எல்லாம் விடை கிடைத்தே ஆகவேண்டும் என்ற முடிவில் இருந்தாள்.

“அவளுக்கு என்ன? அவள் எங்க போனாலும் ராணி மாதிரி இருப்பா” என்று சொன்னவர் அருகில் வந்த தன் கணவரையும் துணைக்கு அழைத்து, அப்படித்தானேங்க” என்றார்.

மிட்சர் சாப்பிடுவதற்கே, பிறந்தவர் போல் இருப்பவர் தான் ராம். அவரும் தன் மனைவியின் பேச்சிற்கு தன் தலையை ஆட்டிக்கொண்டார்.

“அபி மட்டும் தான் ராணி மாதிரி இருப்பாளா? நான் இருக்கமாட்டேனா?” என்று முதன்முதலாக தைரியம் வந்தவளாக தன் பேச்சை ஆரம்பித்தாள் வனரோஜா.

அதில் திணறிப்போன ராம், “நீயும் ராணி மாதிரி இருப்பம்மா. இதை நினைச்சு நீ கவலைப் படாத உனக்கானவன் கூடிய சீக்கிரம் வருவான். அபிக்கு வேற உடம்பு சரியில்ல” என்றார்.

அதற்கு அசட்டாக சிரிப்பை சிந்தியவள், தன் கையில் இருந்த கோப்பை தூக்கிக் காட்டி, “இது அபியோட ரிப்போர்ட் தான் அப்பா. அவளுக்கு பிரைன் டியூமர்லாம் ஒன்னும் இல்ல. அவளுக்கு வந்தது வெறும் சைனஸ் தலைவலி தான்” என்றுக் கூறியதும், “உனக்கு என்னத் தெரியும்?” என்று கத்தினார், அவளின் தாய் மது. ராமோ தன் இருகைகளையும் பிசைந்து கொண்டிருந்தார்.

“நானும் டாக்டர் தான் அம்மா. அதுவும் இல்லாம இந்த ரிப்போர்ட்டைப் பத்தி அஜய்க்கும் நல்லாவே தெரியும். அபி என்னோட தங்கச்சிங்குறதுனால, அதிகம் உரிமை எடுத்துப் பழகுறாருன்னு நினைச்சேன். ஆனா ரெண்டு பெரும் சேர்ந்து எனக்கு துரோகம் செய்வாங்கன்னு நானும் எதிர்பார்க்கல” என்று சொல்ல மதுவிற்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

ராமோ திணறியபடி, “நான் வேணா அஜய் மாப்பிள்ளைக் கிட்ட இதைப்பத்தி பேசுறேன்ம்மா” என்றார்.

“ஒன்னும் தேவை இல்லப்பா. நீங்களும், அம்மாவும் பேசுறதைப் பார்த்தா, இது அஜய்க்கு மட்டுமில்லாம உங்க ரெண்டு பேருக்குமே தெரியும்னு தான் நான் நினைக்குறேன். சொல்லுங்க அப்பா, நீங்க எல்லாரும் சேர்ந்து நாடகம் நடத்தி அதுல என்னை மட்டும் ஜோக்கர் ஆக்கிட்டீங்க தானே! என்னை நிஜமாவே நீங்க தான் பெத்தீங்களா?” என்று கேட்டவள் கண்கள் இரண்டும் கலங்கிப்போய், அதில் இருந்து நீர் எப்போது வேண்டுமானலும் கீழே விழலாம் என்ற நிலையில் இருந்தது.

இப்போது அவள் முன்னே வந்து நின்ற மதுவோ, “என்னடி புள்ளபூச்சுக்கு கொடுக்கு முளச்சிடுச்சோ. அதிகமா பேசுற? ஆமா நாங்க உன்னைப் பெத்தவங்க கிடையாது...” என்று சொல்லும் போதே, “மது...” என்று இடையிட்டார் ராம், ஆனால் மதுவோ, “நீங்க சும்மா இருங்க... இன்னும் எத்தனை நாளைக்குத் தான், இந்த தண்டத்துக்கு சோறு போடுறது?. விட்டா நம்ம சொத்தில் பங்கு கேட்க வந்திடுவா” என்றார் காரசாரமான குரலில்.

வனரோஜாவிற்கு, தன் செவியால் கேட்டவற்றை நம்பமுடியாமல் தலைசுற்ற ஆரம்பித்தது. மூளை சொன்ன விஷயத்தை அவளது இதயம் நம்ப மறுத்தது. அவள் ஒரு நிலையிலையே இல்லை.

“இங்கப்பாருடி, உன்னோட அப்பனும் ஆத்தாளும், காசுக்காக உன்ன எங்கக்கிட்ட வித்துட்டு போயிட்டாங்க. நீ ஒரு பிச்சைக்காரியோட பொண்ணு...” என்று சொல்லும் போதே, ராமின் முகம் எல்லாம் வியர்க்க ஆரம்பித்தது.

“மது நீ சும்மா இரு” என்று எப்போதும் மனைவிக்கு அடங்கி நடக்கும் கணவர், முதன்முதலாக மதுவைப் பார்த்து சத்தம் போட்டார்.

பின் வனரோஜாவைப் பார்த்தவர், “இங்கப்பாரும்மா, நாங்க உன்னோட அப்பா அம்மா கிடையாது தான். உன்னை உன்னப் பெத்தவங்கக்கிட்ட இருந்து பிரிச்சது தப்பு தான்...” என்று சொல்லும் போதே, இடையிட்ட மது, “இவள்கிட்ட என்ன பேச்சு, நம்ம அபி பிறந்தப்பவே, இந்தக் கழுதைய பத்திவிட்டுருக்கனும். பாவப்பட்டு சோறு போட்டதுக்கு, நம்ம பொண்ணுக்கே போட்டியா வந்து நிக்குது” என்று நாக்கில் நரம்பில்லாமல், மொத்த பழியையும் வனரோஜாவின் மீது போட்டார்.

இப்போது தான் அதிர்ச்சியில் இருந்து சிறிது மீண்ட வனரோஜாவோ, “நான் எங்க அம்மா...” என்று சொன்னவள், சிறிது நிறுத்தி தன்னை திருத்திக்கொண்டு, “நான் எங்க மேடம் உங்க பொண்ணுக்கு போட்டியா வந்தேன்? அஜய் காதலிச்சது என்னைத் தான். அவருக்கு அம்மா அப்பா இல்லைன்னு தெரிஞ்சதும், அவருக்கு நான் எல்லாமுமா இருக்கணும்னு நினைச்சேன். இடையில் வந்தது உங்கப்பொண்ணு தான். நான் அஜய் சட்டையைப் பிடிச்சிக் கேட்டு இருக்கலாம். ஆனா அதில் கொஞ்சமும் எனக்கு விருப்பம் இல்ல. எனக்குக் காதல் பிச்சை வேண்டாம்” என்று சொன்னவள் அந்த இடத்திலையே வெடித்து அழுதாள்.

******

“தமிழ்நாட்டில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில் தான் வனரோஜா மேடம் வேலை பார்க்குறாங்க சார்” என்று தனக்கு தகவல் சொன்னவனை திரும்பிப் பார்த்தவன், உதட்டை ஒரு பக்கமாக வளைத்து சிரித்தபடி, “அப்ப, அந்த வனரோஜா உயிரோடத் தான் இருக்காளா! இனி அவள் இருக்கமாட்டா... ஏன்னா எனக்குப் பொண்டாட்டி ஆகப்போறாளே!” என்று இகழ்ச்சியாக சிரித்தான் அந்த ஆறடி மனிதன்.

அவன் சிரிப்பை கேட்டதற்கே, அருகில் நின்றவனுக்கு கதிகலங்கிவிட்டது. என்னென்றால், ஐந்தாறு ஆண்டுகள் அவன் கூடவே நிழல் போல் இருப்பவனுக்கு, இந்த சிரிப்பு அழிவைக் குறிப்பதாகவே இருந்தது.

தனது இருக்கையில் இருந்து எழுந்த அந்த ஆடவன், “நம்ம ஜெட்டை தயார் பண்ணு” என்று சொன்னவன், தன் கையில் இருந்த வனரோஜாவின் புகைப்படத்தைப் பார்த்துவிட்டு, தன் குளீர் கண்ணாடியை மிகவும் ஸ்டைலாக அணிந்துவிட்டு, வனரோஜாவை நோக்கிய தன் பயணத்தை ஆரம்பித்தான் நிலவன்.

ஆம் அவன் பெயர் நிலவன். லண்டனில் மிகப்பெரிய சாம்ராஜ்யத்தைக் கட்டி ஆளும் முப்பத்தி இரண்டு வயதான ஆணழகன். வனரோஜாவை நோக்கிய அவனது பயணம் நிச்சயம் நல்லதற்கு அல்ல. ஏற்கனவே சதியால் சின்னாபின்னமாகிப் போன வனரோஜாவின் வாழ்வில், இனி நிலவன் என்னவெல்லாம் செய்யப்போகின்றானோ! பெரும் சூறாவளியில் இருந்து வெளிவந்த வனரோஜா, மிகப்பெரிய அசுரனான நிலவன் என்ற சுனாமியில் மாட்டிக்கொள்ளப்போவது என்னவோ உறுதி.

(கதைப் பிடித்திருந்தால் மறக்காமல் லைக்ஸ் மற்றும் கமென்ட்ஸ் செய்யுங்கள் பிரெண்ட்ஸ்)


 

NNO7

Moderator
அத்தியாயம் – 2

அந்த சென்னை மாநகரத்தில் கதிரவன் பல்லைக் காட்டிக்கொண்டு, தன் ஒளிகளை அதிகமாக வழங்கிக் கொண்டு இருந்தான்.

நேற்று இரவு முழுவதும் அழுது கொண்டே இருந்த வனரோஜா. மறுநாள் தன் கடமையை உணர்ந்து வேகமாகக் கிளம்பி, கண்களில் தோன்றிய கருவளையத்தோடு, தனது ஸ்கூட்டியில் முக்கியமான பொருட்களை எல்லாம் பூட்டி வைத்துவிட்டு மருத்துவமனைக்குச் சென்றாள்.

மருத்துவனை வாசலில் அவள் காலடி எடுத்து வைக்கும் போதே, அவளைப் பிடித்துக் கொண்ட, அவளின் நண்பி சந்தியா, “நேத்து நடந்தது எல்லாம் காட்டுத்தீப் போல ஹாஸ்பிடல் முழுவதுக்கும் பரவியிருச்சி ரோஜா” என்று பதற்றத்துடன் சொன்னாள்.

“அதுக்கு நீ ஏன் ஏதோ மாதிரி இருக்க சந்து?. சரி நேத்து ஓபன் ஹார்ட் சர்ஜரிக்கு அசிஸ்ட் பண்ணப் போனீயே என்னாச்சு? எல்லாம் ஓகே தானே?. நம்ம டீன் என்ன சொன்னாரு” என்று நேத்து நடந்த நிகழ்வின் தாக்கம் சிறிதும் இல்லாமல், அனைத்தையும் சாதாரணமாக மனதிற்குள் பூட்டிவைத்துவிட்டு, தனது நோயாளிகள் மட்டுமே இப்போதைக்கு முக்கியம் என்பது போல் பேசினாள் வனரோஜா.

அது தான் வனரோஜா. வீட்டில் கவலை எவ்வளவு தான் குவிந்துக் கிடந்தாலும், மருத்துவமனைக்கு வந்தவுடன், எதையும் எதிர்பாராமல் சேவை மனப்பான்மையில் நோயாளிகளை கவனிப்பாள்.

அவள் பதிலில் அதிர்ச்சியான சந்தியா, “என்னடி ரோஜா பேசுற? எதுவுமே நடக்காத மாதிரி சாதாரணமா இருக்க. இங்க என்ன பேசிக்கிறாங்கன்னு தெரியுமா? அந்த அஜய் சந்தர்ப்பவாதின்னு நான் சொல்லும் போது எல்லாம் நீ நம்பவே இல்ல. இங்க என்ன சொல்லி வச்சிருக்கான்னு தெரியுமா? அவனும் உன் தொங்கச்சி அபியும் ரொம்ப நாளா காதலிச்சாங்கலாம், அவங்க ரெண்டு பேருக்கு நடுவுல தான் நீ வந்தியாம். ஆனா உண்மைக்காதல் என்னைக்கும் தோற்க்காதாம். அதான் அவங்க ரெண்டு பேரும் சேர்ந்துட்டாங்களாம். இதை எல்லாம் கேட்டு எனக்கு அவ்வளவு ஆத்திரம் வருது” என்று தன் கோபத்தைக் கொட்டினாள் சந்தியா.

அதற்கு வெற்று சிரிப்பை சிந்திய வனரோஜா, “சூப்பரா ப்ளான் பண்ணி, நேத்துக் கல்யாணத்துல ரெண்டு பேரும் நல்லா நடிச்சாங்க. ஆனா இங்க வந்து வேற மாதிரி சொல்லி இருக்கார் அஜய்” என்றாள்.

“சீ... அஜய்யாம் அஜய். இன்னும் அவனுக்கு எதுக்காக நீ மரியாதை கொடுக்குற? சரியான பிராட் அவன். அவன் வந்தா, அவன் சட்டையைப் பிடிச்சி நறுக்குன்னு நாலு வார்த்தை கேட்காம நான் விடப்போறது இல்ல...” என்று வீர ஆவேசமாக பேசினாள் சந்தியா.

“விடு சந்து. ஊரில் நடக்காததா எனக்கு மட்டும் நடந்துச்சு?” என்றாள் வனரோஜா.

“ஆமாம் உன்னோட அம்மா அப்பா அந்த அபியை எப்படி சும்மா விட்டாங்க? இந்த அஜயைக் கூட விடு. உன்னோட சொந்த தங்கச்சிக்கு இப்படி பண்றதுக்கு எப்படி மனசு வந்துச்சு?” என்று அவள் அடுக்கிக்கொண்டே செல்ல, வனரோஜாவின் வாயில் இருந்து வந்த வார்த்தைகளைக் கேட்டு, அவள் அதிர்ச்சியின் உச்சிக்கே சென்றாள்.

“அபிக்கூட சேர்ந்து ப்ளான் போட்டதே அவங்க தான. அவங்களுக்குப் பிறந்த பொண்ணு நான் இல்லையாம். பேச வேண்டியதை எல்லாம் நேத்தே பேசி முடிச்சிட்டாங்க. இனி நான் வெளியத்தான் தங்கணும். இன்னைக்கு டீன் கிட்டக் கேட்டு நைட் டியூட்டி வாங்கலாம்னு இருக்கேன். அப்ப தான் நாளைக்குக் காலையில் ஏதாவது ஹாஸ்டல் தேடுறதுக்கு வசதியா இருக்கும்” என்று தன் கழுத்தை தடவிக்கொண்டே, சந்தியாவைத் தாண்டி உள்ளே சென்றாள்.

அங்கே வனரோஜாவைப் பார்த்த, செவிலியர்கள் தங்களுக்குள் கிசுகிசுத்துக் கொள்ள எதையும் காதில் போட்டுக்கொள்ளாமல், தன் வேலையினைப் பார்க்க ஆரம்பித்தாள்.

*****

“சிவா, என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க? எத்தனை தடவை உங்களுக்கு போன் பண்றது? எதுக்காக கட் பண்றீங்க?” என்று அதிகக் குரல் எடுத்து அலைபேசியில் கத்த ஆரம்பித்தாள் நிலா.

அந்தபக்கம் பேசிய சிவாவோ, எரிச்சலுடன், “இப்ப உனக்கு என்னடி வேணும்? எதுக்காக மனுசன சாவடிக்குற? நான் முக்கியமான மீட்டிங்ல இருக்கேன். நீ முதல்ல போனை வை” என்று எரிந்து விழுந்தான் மெதுவான குரலில்.

அவனுக்கு அருகே இருந்த இருக்கையில் அமர்ந்திருந்த அவனது தாய் பரணியோ, அவனைப் பார்த்து முறைக்க, பதற்றத்துடன் அலைப்பேசி அணைப்பை அணைத்து வைத்தவன், பரணியைப் பார்த்து, “பிரண்ட்டுமா” என்றான்.

அதற்கு எந்த ஒரு பாவனையையும் தன் முகத்தில் காட்டாத பரணியோ, நேர்பார்வையுடன், “அது எனக்கு தேவை இல்லாதது. இந்த நிறுவனத்துல அதிகம் பங்கு வச்சிருக்குற முறையில், ஒரு பங்குதாரரா கேட்குறேன், நம்ம நிறுவனத்தோடா ஷேர்ஸ் ஒரு வாரமா லாஸ்ல போகுது அதுக்கு நிறுவனத்தின் சிஇஓவா, நீங்க எந்த முயற்சி எடுத்து இருக்கீங்க மிஸ்டர் சிவா” என்றார் ஆளுமையான குரலில்.

அந்தக் குளீருட்டப்பட்ட, பளபளக்கும் கண்ணாடி அறையில் இருந்த மற்ற பங்குதாரர்களும் சிவாவின் முகத்தைத் தான் பார்த்துக் கொண்டிருந்தனர்.

சிவாவிற்குத் தான் மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கியது. ஐம்பத்து ஐந்து வயதைக் கடந்திருந்த பெண்மணி தான் பரணி. இன்னும் இளமை மாறாமல் சிக்கென்ற தோற்றத்தில், குரலில் ஆளுமை தெறிக்க அமர்ந்திருந்தார்.

சிவா எதுவும் பேசாமல் போகவே, தன் இருக்கையில் இருந்து எழுந்தவர், “கங்கா நிறுவனம் என்னோட பொறுப்பு. ஷேர்ஸ் சரிவில் இருந்து மீள நான் நடவடிக்கை எடுக்குறேன்” என்று அங்கே அமர்ந்திருந்த வெள்ளைக்காரர்களிடம் ஆங்கிலத்தில் கூறிவிட்டு, வேகமாக அந்த அறையை விட்டு வெளியேறினார்.

அதுவரை சிவாவின் மீது நம்பிக்கை இல்லாது இருந்த அந்த உறுப்பினர்களும், பரணி சொன்னதைக் கேட்டு, தெளிந்த மனநிலையில் அந்த இடத்தை விட்டுச் சென்றனர்.

பரணி சொன்னால், அது சரியாக இருக்கும் என்பது, அவர்களின் நம்பிக்கை. கங்கா நிறுவனம், லண்டனில் உள்ள மிகப்பெரிய மருந்து தயாரிப்பு நிறுவனம். அது போக கங்கா மருத்துவமனைக்கு லண்டனில் பல கிளைகள் உள்ளது.

அந்த மொத்த சாம்ராஜ்யத்தைக் கட்டி ஆண்டவர் தான் பரணி. ஐந்து வருடங்களுக்கு முன்னர் அவரது தந்தை இறந்துவிடவே, அதில் ஒடிந்து போனவர், தன் பொறுப்பு அனைத்தையும் தன் மகன் சிவாவிற்குத் தந்தார். இப்போது தனது மகனின் போக்கு சரியில்லாததைக் கண்டு, தானே முன் வந்து பொறுப்பை ஏற்கிறார்.

மீட்டிங் நடக்கும் இடத்தில் இருந்து பரணி வெளியே சென்றதும், மற்றவர்களும் சென்றுவிட, மேஜையில் தன் தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்தான் சிவா.

இப்போது மறுபடியும், அவளது காதலியான நிலாவிடம் இருந்து அவனுக்கு அழைப்பு வந்தது. ‘ஏற்கனவே கோபத்தில் கத்தியவள், இப்போது மட்டும் தான் அழைப்பை எடுக்காவிட்டால் அவ்வளவு தான்’ என்ற நினைப்போடு, இணைப்பை எடுத்து தன் காதில் வைத்தவன், “நிலாக்குட்டி, கோபமா இருக்கீங்களா? பக்கத்துல உன் மாமியார் ஹிட்லர் வேற முறைச்சி முறைச்சிப் பார்க்குறாங்க...” என்று அவளைப் பேச விடாமல், இவனே பேசிக்கொண்டே சென்றான்.

“அதுக்காக, ஒரு மெசேஜ் கூடவா பண்ணக்கூடாது?” என்று இப்போது இறங்கி வந்தாள் நிலா.

“நிறுவனத்துல மிகப்பெரிய பிரச்சனை நிலா. அதுல வேற நான் கொஞ்சம் அப்செட்” என்றான் உள்ளே சென்ற குரலில்.

“ஹா... ஹா... உங்க அப்செட்க்குக் காரணம் என்னோட அண்ணா தானே!” என்று சரியாகக் காரணத்தைக் கண்டுபிடித்தாள் நிலா.

அவள் பேச்சைக் கேட்டு எரிச்சல் அடைந்தவன், “நமக்குள்ள பேசும் போது, பேச்சில் உன்னோட அண்ணன் வரகூடாதுன்னு, நான் எத்தனை தடவை சொல்லி இருக்கேன்” என்றான்.

“என்னமோ போங்க சிவா. ஆனா ஒன்னு தொழிலில் லாபம் நஷ்டம் எல்லாம் சாதாரணம் தான். இதுக்காக எதுக்கு உங்க அம்மா இப்படி பண்றாங்கன்னு தெரியல. ஒரு வேல அவங்க நிறுவனம் என் அண்ணன் நிறுவனத்துக்கிட்ட தோத்துப் போயிடும்னு பயமாக்கூட இருக்கலாம்” என்று சொல்லிவிட்டு சிரித்தாள் நிலா.

இங்கே சிவாவிற்குக் கோபம் ஏற, “என்னை எரிச்சல் படுத்துறதுக்குத் தான், மாறிமாறி போன் பண்ணிக்கிட்டு இருந்தியா?” என்று கத்தினான்.

“ம்ச்... போங்க சிவா. ஒரு நல்ல விஷயத்தை சொல்லத் தான் உங்களுக்குப் போன் பண்ணேன். நீங்க என்னன்னா என்னை திட்டுறீங்க?” என்று முகத்தை சுருக்கினாள் நிலா.

அதில் அதிர்ச்சி அடைந்த சிவா, “எது.. நல்ல விஷயமா? பேபி நீ பிரேக்னன்ட்டுன்னு மட்டும் சொல்லிடாத, உன்னோட மாமியார் என்னைக் கொன்னேபுடும்” என்றான் பயக்குரலில்.

“ச்சீ... உங்க நினைப்பு இருக்கே... நான் அதை சொல்லல..” என்று சொன்னதும் பெருமூச்சு விட்டவன், “பின்ன வேற என்ன?” என்றான்

“கேம்டன், நியூஹாம் இன்னும் பல இடத்துல இருக்குற ஏக்கர் கணக்குல இருக்குற எல்லா சொத்தும் நம்ம கைக்கு வரப்போகுது. இனி கங்கா நிறுவனத்துல இருக்குற, அந்த ஆள் இல்லாத ஷேர்ஸ்சும் உங்களுக்கே உங்களுக்குன்னு கிடைக்கப்போகுது” என்று ஆரவாரம் பொங்க கூறிக்கொண்டே சென்றாள் நிலா.

அதில் அவனது புருவம் சுருங்க, “என்ன பேசுற நிலா” என்று இப்போது காட்டமான குரலில் கேட்டான் சிவா.

“நிஜத்தைத் தான் பேசுறேன் சிவா. அண்ணா எல்லா ஏற்பாட்டையும் செஞ்சிட்டார். அவர் இப்ப இந்தியாவுக்குப் போயிட்டார்” என்று ஆனந்தமாகக் கூறிக்கொண்டே சென்றாள் அவனது குரலில் இருந்த வேறுபாட்டை உணராமல்.

சிவாவின் மனதில் எதுவோ சொல்லமுடியாத உணர்ச்சி, “அப்ப... அப்ப... என்னோட தங்கச்சி?” என்று அவன் திணறியபடி கேட்க.

“ஆமாம் சிவா. அந்தப்பொண்ணு கிடைச்சிட்டா” என்று சொன்னவளின் நினைப்பு எல்லாம் சொத்து, இனி தங்களது கைக்கு வரப்போகின்றது என்பதில் தான் இருந்தது.

ஆனால் அதற்கு நேரெதிரான மனநிலையில் இருந்தான் சிவா. அவன் மனது, தன் தங்கை எப்படி இருப்பாள், இப்போது என்ன செய்கின்றாள் என்பதிலையே சுற்றி வர, நிலாவின் பேராசை மிகுந்த பேச்சை அவன் கண்டுகொள்ளவில்லை. இப்போது கண்டுகொண்டிருந்தால் பின்னால் வரப்போகும் பேராபத்தில் இருந்து அவனது தங்கையைக் காத்திருப்பானோ என்னவோ.

“என்.. என் தங்கச்சி ரோஜா, இந்தியாவில் எந்த இடத்துல இருக்கா? அவள் நல்லாத் தானே இருக்கா?” என்று அவசர அவசரமாக தன் கேள்விகளை அடுக்கினான்.

தங்கையாகவே இருந்தாலும், தன்னை விடுத்து வேறு ஒரு பெண்ணின் நலத்தை தெரிந்து கொள்ள சிவா முனைந்தது நிலாவிற்கு எரிச்சலைத் தர, “ம்... அதெல்லாம் நல்லாத்தான் இருப்பா... அதுவும் இல்லாம அவள் பெயர் ஒன்னும் ரோஜா இல்ல. அவளோட முழுப்பெயர் வனரோஜாவாம். இனி நீங்களும் முழுப்பெயர் சொல்லியே கூப்பிடுங்க” என்றாள் கண்டிப்பான குரலில்.

ஆனால் அது எங்கே அவன் காதில் விழுந்தது. அவன் மனது வேறு ஒன்றை யோசிக்க ஆரம்பித்தது.

அதன் முடிவாக, அவன் நிலாவிடம், “உன்னோட அண்ணன் எதுக்காக என் தங்கச்சியைத் தேடி போயிருக்கான்?” என்றான் குரலில் ஒருவித அழுத்தத்தைக் கூட்டி.

அவளோ சிரித்துக்கொண்டே, “வேற எதுக்கு, அவளைக் கல்யாணம் பண்ணி சொத்தை எல்லாம் வாங்குறதுக்குத் தான்” என்று அவள் சொல்லி முடிக்க, இங்கு சிவாவின் முகம் பாறை போல் இறுகி, மனதில் தோன்றிய அதிகப்படியான கோபத்தால், அவன் கை, அலைபேசியை அழுத்தமாக பற்றியது.

(கதைப் பிடித்திருந்தால் லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ் செய்யுங்கள் பிரண்ட்ஸ்)
 

NNO7

Moderator
அத்தியாயம் – 3

நீண்டு விரிந்திருந்த அந்தக்கடற்கரையில், தன் காலில் அலைகள் வந்து மோதுவதைப் பார்த்துக் கொண்டிருந்தாள் வனரோஜா.

தனக்கு எதுவும் வேண்டாமென்று விட்டு வந்தாலும், அவள் மனதில் பாரம் இருக்கவே செய்தது. இதுவரை தனது தாய் தந்தை என்று நினைத்து வாழ்ந்து வந்த உறவுகள் நேற்று இரவு சொன்னதை எல்லாம், அவள் மனது அசைபோட்டுக் கொண்டிருந்தது.

கண்கள் இரண்டும் ரத்த சிவப்பாக மாறி, “என்னோட அப்பா அம்மா யாருன்னு சொல்லுங்க” என்று மதுவின் முன்னால் மண்டியிட்டுக் கேட்டாள் வனரோஜா.

அதற்கு திமிர் பார்வை பார்த்த மது, “அதான் சொன்னேனே உன்னோட அம்மா ஒரு பிச்சைக்காரின்னு. காசுக்காக பெத்த பொண்ணை, வித்துட்டுப் போனவள் மேல, உனக்கு புதுசா பாசம் பொங்குதோ!” என்றார் ஏளனமாக.

தன் கண்களில் இருந்து வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டவள், “அவங்க யாரா இருந்தாலும் என்னோட அம்மா. நீங்க சொல்றதை என்னால நம்பவும் முடியாது” என்றாள்.

இப்போது முன் வந்த ராமோ, “எங்களுக்கு ரொம்ப நாளா குழந்தை இல்லம்மா. அதான் உனக்கு ரெண்டு வயசா இருக்கும் போது உன்னை நாங்க தத்து எடுத்தோம். எங்களுக்கு உடனே அபியும் பிறந்துட்டா” என்றார்.

அவரை நம்பமாட்டாத பார்வை பார்த்தவள், “ஓ... அதனால தான் என்னை வேலைக்காரியா வச்சி இருந்தீங்களா?” என்று அவர்கள் சொன்ன கசந்த வார்த்தைகளை ஜீரணிக்க முடியாமல் கேட்டாள்.

இப்போது அவள் கேட்ட வார்த்தைகளில் ராமிற்கு கோபம் வர, “நாங்க உன்னை வேலைக்காரி போலவா நடத்துனோம். உன்னை படிக்க வச்சி டாக்டர் ஆக்கி இருக்கேன். நீ என்ன இப்படி ஒரு வார்த்தையைப் பேசிட்ட” என்று கடிந்து கொண்டார்.

அதற்கு வெற்று சிரிப்பை சிந்தியவள், “நான் உங்கப் பொண்ணு மாதிரி, காசு கட்டிப் படிக்கலையே. அரசு பள்ளியில் ஆங்கில வழிக்கல்வியில தான் படிச்சேன். எனக்கு மெரிட்ல சீட் கிடைச்சது. ஹாஸ்டல் பீசுக்குக் கூட, அம்மாக்குத் தெரியாமத் தான் எனக்குப் பணம் கொடுப்பீங்க. அப்ப எல்லாம் எனக்குத் தெரியல. நீங்க எனக்குப் பாவப்பட்டு போட்டது சாப்பாடு ஒன்னு தான். அந்த நன்றி விசுவாசத்துக்காகத் தான் நான் சும்மாப்போறேன்” என்று சொல்ல மதுவுக்கு ஆத்திரம் அதிகமானது.

“நாயக் குளிப்பாட்டி நடுவீட்ல வச்சாலும், அது தன்னோட புத்தியைத் தான் காட்டுமாம். அது மாதிரி தான் நீயும் இருக்க. என்னத்த பெருசா படிச்சிக் கிழிச்சி டாக்டர் ஆகிட்ட? நான் மனசு வைக்கலைன்னா உனக்கு எதுவும் கிடைச்சி இருக்காது. நான் மெரிட்ல படிச்சேன்னு பெருசா பீத்திக்கிற, நான் மட்டும் உன்னைப் படிக்க விடலைன்னா என்ன பண்ணி இருப்ப?” என்று ஆவேசமாகக் கத்தினார்.

அதற்கு எதுவும் பேசாமல், “நீங்க சொல்றதும் சரி தான். என்னைப் படிக்க விட்டதுக்கு ரொம்ப நன்றி” என்று இகழ்ச்சியாகக் கையெடுத்துக் கும்பிட்டவள், “என்னோட அம்மா அப்பா யாருன்னு சொல்லுங்க” என்றாள் இறுதியாக.

ராம் எதுவோ சொல்லத் தன் வாயைத் திறப்பதற்குள் முந்திக்கொண்ட மது, “அதெல்லாம் எங்களுக்குத் தெரியாது. ஒரு ரயில்வே ஸ்டேஷன்ல வச்சித்தான் உன்னை நாங்க வாங்குனோம்” என்று சொன்னதோடு நிறுத்திக் கொண்டார்.

அந்த நிமிடமே, ‘தன்னைக் காத்துக்கொள்ள தான் மட்டுமே இருக்கின்றோம். எனக்கு யாரிடமிருந்தும் காதல் வேண்டாம். என்னைக் காதலிக்க நான் இருக்கின்றேன்’ என்று தனக்குள் நினைத்துக் கொண்டாள் வனரோஜா.

அந்த இரவே அவள் அந்த வீட்டை விட்டு வெளியேறவும் செய்தவள். பக்கத்தில் இருந்த பார்க்கில் சென்று அமர்ந்து கொண்டாள். அது பணக்கார்கள் மட்டுமே வசிக்கும் ஏரியா என்பதனால் பாதுகாப்பு பலமாகத் தான் இருந்தது.

அவள் சென்றதும் மதுவைப் பார்த்த ராம், “அவளோட அப்பா அம்மா யாருன்னாவது சொல்லி இருக்கலாமே மது. அதுவும் இல்லாம அவ்வளவு பெரிய கோடீஸ்வரியைப் போய் பிச்சைக்காரின்னு சொல்லிட்ட” என்றார்.

“ம்க்கும்... இப்ப என்னை என்ன செய்யணும்னு சொல்றீங்க? நான் சொன்னதுல என்ன தப்பு இருக்கு?. நீங்க சத்தியம் அது இதுன்னு பேசுனதுனால தான், இவ்வளவு நாள் இவளைக் கூடவே வச்சிறுக்குற மாதிரி ஆகிடுச்சி. இப்போதாவது ஆண்டவன் உங்கக்கண்ணைத் திறந்தானே” என்று சொன்னவர்,

சிறிது நிறுத்திவிட்டு, “நம்ம பொண்ணுக்கு மருத்துவ சீட் கிடைக்கல. கோடி கோடியா கொடுத்து சீட் வாங்கி இருக்கோம். அப்படி இருந்தும் நம்மப் பொண்ணு அரியர்ஸ் பேப்பரை முடிக்கல. இதுல இந்த வனரோஜா மட்டும் பிஜி நீட்லையும் பாஸாகி, அதையும் முடிச்சிட்டு, இதுக்கும் மேல இருக்குற மேல் படிப்பை படிக்குறாளாம்... இதுல இதுக்கும் மேல இவள் சுபயோக வாழ்வு வாழனும்மா? என் வயிதெரிச்சலைக் கொட்டிக்காதீங்க. நம்ம மாப்பிள்ளைக்கு ஹாஸ்பிடல் கட்டிக்கொடுக்கும் வேலையைப் பாருங்க” என்று ராமை ஒரு அரட்டுப் போட்டுவிட்டு உள்ளே சென்றார்.

நடந்ததை எல்லாம் நினைத்துப் பார்த்த வனரோஜாவின் கண்களில் இருந்து கண்ணீர் கசிந்தது. அதைத் துடைத்துக் கொண்டவள், அப்போது தான் தன் அருகில் வந்த சந்தியாவை நிமிர்ந்து பார்த்தாள்.

அவள் அருகில் வந்த சந்தியாவோ, “நேத்து நான், உன் கல்யாணத்துக்கு கண்டிப்பா வந்திருக்கணும் ரோஜா. நான் இருந்திருந்தா அந்த அஜயையும், அபியையும் சும்மா விட்டிருக்க மாட்டேன்” என்றாள் ஆதங்கமாக.

“விடுடி. நானும் அந்த அஜய்யும் கட்டிப்பிடிச்சு ஒன்னும் பழகல. அவன் என்கிட்ட லவ்வ சொன்னான். நானும் அவன் நல்லவன்னு நினைச்சு ஓகே சொல்லிட்டேன். நாங்க வெளியக்கூட எங்கும் போனது இல்ல. நானும் அவனும் ஒன்னா சேர்ந்து எடுத்தது ஒரே ஒரு செல்பி தான். அதையும் நான் எப்போதோ டெலீட் பண்ணிட்டேன்” என்றாள் சாதாரணக் குரலில்.

“அவனுக்காக நீ கொடுத்த கிப்ட் எல்லாம் திரும்பி உன் கைக்கு வந்துச்சா?” என்று சந்தியா கேட்க, “இல்லை” என்று தன் தலையை ஆட்டினாள்.

தன் கையை அடித்துக்கொண்டு, “நினைச்சேன். அவன் இதுவரை அவன் காசுல உனக்காக எதுவும் வாங்கித் தந்தது இல்ல. அவன் உன்னைப் பணத்துக்காகத் தான் லவ் பண்ணி இருக்கான். அவன் அபியைக் கல்யாணம் பண்ணினதுக் கூட அதுக்காகத் தான். இந்த அபியும் உன் மேல் உள்ளப் பொறாமையில் இப்படி ஒரு கேவலமான வேலையைப் பார்த்து இருக்கா. நான் நிச்சயம் சொல்றேன் ரோஜா, இதுங்க ரெண்டும் கண்டிப்பா நல்லாவே இருக்காதுங்க” என்று சாபமாய் வந்தது சந்தியாவின் வார்த்தைகள்.

“சும்மா இரு சந்து அப்படி எல்லாம் பேசாத. அவங்க பண்ண வேலைக்கு காலம் அவங்களுக்குப் பதில் சொல்லும்னு நினைச்சிட்டு நான் ஒதுங்கிட்டேன்” என்றவள் பேச்சில் பிசிறு தட்டவில்லை.

“சரி நேத்து நைட்டு இவ்வளவு பேசுன உன்னோட போலியான அம்மா அப்பா, எதுக்காக இவ்வளவு நாள் உன்னைக் கூடவே வச்சி இருந்தாங்களாம். அவங்க பொண்ணு அபி பிறந்தப்பவே, உன்னை ஏதாவது ஆசிரமத்துல சேர்த்து இருக்கலாமே, நீயும் உன் வாழ்க்கையை நல்லா வாழ்ந்து இருப்ப” என்றாள் சந்தியா.

அதற்கு வெற்றுச் சிரிப்பை சிந்திய வனரோஜா, “வீட்டப் பெருக்குற வேல, சமைக்குற வேலைன்னு சின்ன வயசுல இருந்து எல்லா வேலையையும் நான்தான் பார்த்தேன். கையில நெருப்பு சூடு போட்டாக்கூட, அவங்க என்னை கண்டுக்கமாட்டாங்க. அந்த வலியோட நான் தான் சமைக்கணும். இப்ப நான் வேலைக்கு வேற வர்றதுனால என்னோட தேவை அவங்களுக்கு இல்லை போல” என்று பொய்யாக சிரித்தாள்.

சந்தியாவிடம் பதில் இல்லை. அவள் மனது பிசைந்தது. தொடர்ந்து பேசிய வனரோஜா, “நான் ஒரு தத்தி தான் சந்து, அவங்க அப்படி செஞ்சதுக்கான காரணமே எனக்கு நேத்து தான் தெரிஞ்சது. நாம என்ன பண்ணா அம்மாவுக்குப் பிடிக்கும்னு, பார்த்துப் பார்த்து பண்ணி ஏமாந்து தான் போவேன். எனக்கு அப்ப தெரியல, நான் எதில் முதல் இடம் வந்தாலும், என்னோட அம்மாக்குப் பிடிக்காது, மாறாக அவங்களுக்கு என் மேல கோபம் தான் அதிகமாகும்னு..” என்று அவள் சொல்லும் போதே, சந்தியாவின் கண்கள் இரண்டும் கலங்கித்தான் போனது.

அப்போது சந்தியாவின் அலைப்பேசி அடிக்க, அதை எடுத்துப் பேசிவிட்டு வைத்தவள், வனரோஜாவிடம், “அந்த அஜய்யால ரொம்பத் தான் பிரச்சனை” என்றாள்.

வனரோஜாவோ, என்னவென்று கேட்க, “நாளைக்கு நடக்குற மெடிக்கல் கேம்புக்கு, இந்த அஜய் வராததுனால, என்னைப்போக சொல்றாரு டீன். இப்பவே கிளம்பணுமாம்” என்றாள் வாட்டமான முகத்துடன்.

“ஹேய், சந்து இது நல்ல சான்ஸ்டி. கண்டிப்பா போயிட்டு வா. ஜாலியா இருக்கும். முன்ன ஒருக்க போகும் போது நீ வரல, அதனாலத் தான் டீன் உன்னைப் போக சொல்றாருன்னு நினைக்குறேன்” என்று வருத்தங்கள் மொத்தத்தையும், கடலில் விட்டவளாக மகிழ்ச்சிப் பொங்கக் கூறினாள்.

“ம்ச்.. அதில்லடி. உன்னை இந்த நிலையில் விட்டுட்டு நான் மட்டும் எப்படி போறது? அதான்” என்றாள் சந்தியா.

“சந்து... நான் என்ன சின்னக் குழந்தையா? நீ ஜாலியா என்ஜாய் பண்ணு சரியா” என்றாள் அவள் கன்னத்தைப் பிடித்து ஆட்டியபடி.

“ஐயோ விடு பக்கி வலிக்குது. சரிவா, போற வழியுல உன்னை உன் ஹாஸ்டலில் விட்டுட்டுப் போறேன்” என்றவள், “இன்னைக்கு உனக்கு நைட் டியூட்டி தானே பார்த்து பத்திரமா இருக்கணும் ரோஜா” என்று அவள் சொல்ல, “ஐயோ, மறுபடியும் நீ ஆரம்பிக்காத தாயே!” என்று அவளை இழுத்துக் கொண்டு சென்றாள் வனரோஜா.

*****

கழுத்தை ஆட்டி நெட்டி முறித்த வனரோஜா, ‘காலையில் இருந்து, சந்துவும் நானும் ஹாஸ்டல் தேடியே அலுத்துப் போயிட்டோம். எமர்ஜென்சி கேஸ் எதுவும் வந்துரக்கூடாதுடா ஆண்டவா’ என்று அவள் மருத்துவமனையில், உள்ள தன் மேஜையில் அமர்ந்து யோசிக்கும் போதே, ஆர்ப்பாட்டமாக அந்த மருத்துவமனைக்குள் நுழைந்தான் நம் கதையின் நாயகன் நிலவன்.

வனரோஜா ஜெனரல் வார்ட்டில் நடந்து வர அவளுக்கு முன்னால் வந்து நின்ற நிலவன், தன் கையை அவளுக்கு முன்னால் நீட்டி, “ஹாய், நான் நிலவன். நிலா கெமிக்கல் கார்பரேஷனோட ஓனர்” என்றதும், வனரோஜாவின், கண்ணில், ‘இருந்துட்டுப்போ’ என்பதொரு பார்வைத் தெரிய, நிலவனின் விழிகள் அனலைக் கக்கியது.

ஆறடி உயரத்தில் முறுக்கேறிய உடலோடு, முன்முப்பதுகளில் இருக்கும் ஆணழகனைக் கண்டு மயங்காத பெண்களே இல்லை எனலாம்.

அதில் நிலவனுக்கு தன் அழகின் மேல் ஒரு கர்வம் இருந்தது. இப்போது அது அடிபட்டுப் போக, அவளை நோக்கியத் தன் கைகளை இறக்கினான்.

பணத்தின் செழுமையால் பார்க்க பளபளவென்று இருக்கும், தன் முன்னே நின்ற ஆடவனைப் பார்த்தவள், அவனை வெறும் கல்லையும் மண்ணையும் பார்ப்பதைப் போல பார்த்து வைத்துவிட்டு, “பக்கத்துக் கட்டிடத்துல தான் டீன் இருப்பாரு சார். மருந்து மாத்திரையைப் பத்தி எல்லாம் அவர்கிட்டப் போய் பேசிக்கோங்க...” என்று சொல்லிவிட்டு அவனைத் தாண்டி செல்லப்போனவளின் இடது கையைப்பிடித்து, நிலவன் கோபத்தோடு இழுக்க, கால் இடறி, அவனது மார்பில் மோதி நின்றாள் பெண்ணவள்.












 

NNO7

Moderator
அத்தியாயம் – 4

வனரோஜா தன் மீது விழுந்ததும், நிலவனின் முகம் அஷ்டகோணலாய் மாறியது.

காலையில் இருந்து வெயிலில் அலைந்து திரிந்து, சோர்ந்து போய், எந்த ஒரு முகப்பூச்சும் இல்லாமல், வியர்வையில் நனைந்து போய் இருந்த வனரோஜாவோ, அவனில் இருந்து எழுந்து நேராக நின்றவள், அவனது அஷ்டகோணலான முகத்தைப் பார்த்துவிட்டு, “நீங்க தான் என் கையைப் பிடிச்சி இழுத்தீங்க... இது ஹாஸ்பிடல்... பிரச்சனை வேண்டாம்னு பார்க்குறேன்” என்று சொல்லிவிட்டு செல்லப்போவளின் முன்பு கையை நீட்டியவன், குனிந்து அவளது ஐடிக்கார்டைப் பார்த்துவிட்டு, அவளைப் பார்த்தவன், திமிரான குரலில், “எந்த வனத்துக்கு நீ ரோஜான்னு சொல்லு? என்றான்.

அவனது பார்வைக்கு எதிர்பார்வை பார்த்தவள், தன் அருகில் இருந்த செவிலிப்பெண்ணைப் பார்த்து, “நர்ஸ், இந்த சார் மனநல டாக்டர் பேசண்ட்ன்னு நினைக்குறேன். பாவம் வழி தவறி வந்துட்டாங்கப் போல, நீங்க இவரை அவங்கக்கிட்டப் போய் விட்டுடுறீங்களா?” என்று தனிந்தக் குரலில் கேட்டாள்.

அந்த செவிலிப்பெண்ணும், கொஞ்சம் தள்ளி நின்று நிலவனின் பேச்சை எல்லாம் கேட்டுக்கொண்டு தான் இருந்தாள். பணத்தின் செழுமையால் பார்க்க ஆணழகனாகவும், யாரும் நேருக்கு நேராக பார்த்துப் பேச அச்சம் கொள்ளும் தோற்றத்தில் இருந்தவனைப் பார்த்து அந்தப் பெண் சிறிது பயத்துடன், “உங்களுக்கு யாரை சார் பார்க்கணும்?” என்று கேட்டாள்.

ஆனால் நிலவனோ கிஞ்சித்துக்கும் அவளைக் கண்டுகொள்ளாமல், வனரோஜாவைத் தான் வெறித்துக் கொண்டிருந்தான்.

‘இதற்கு மேல் தனக்கு இங்கு எந்த வேலையும் இல்லை’ என்ற நினைப்பில், வனரோஜா அங்கிருந்து நகன்றாள்.

செல்லும் வனரோஜாவின் முதுகை வெறித்தவன், ‘உன்ன நாளைக்குப் பார்த்துக்குறேன். நான் யாருன்னு நீ கூடிய சீக்கிரம் தெரிஞ்சிப்ப’ என்ற நினைப்போடு அங்கிருந்து வெளியேறினான்.

இந்தியாவில் காலடி எடுத்து வைத்ததுமே, வனரோஜாவைக் காண இங்கே வந்துவிட்டான் நிலவன். நிலவனை எதிர்த்து யாரும் எதுவும் பேசிவிட முடியாது. அப்படிப்பட்ட நிலவனுக்கு, வனரோஜாவின் பேச்சு உள்ளுக்குள் நெருப்பு ஜீவாலையை உருவாக்கி இருந்தாலும், அவன் முதன் முதலாக பொறுமை காத்தான். ஆம் மீனைத் தூண்டிலில் சிக்க வைக்கத்தான் இந்தப் பொறுமை.

இதனைப் பற்றி எதுவும் அறியாத வனரோஜா, ‘எனக்கு நேரமே சரியில்லை போல, ஒரு பணக்கார பைத்தியத்துக்கிட்ட மாட்டிக்கிட்டேன்’ என்ற நினைப்போடு தன் வேலைகளைப் பார்க்க ஆரம்பித்தாள்.

இங்கே, அலைபேசியில் நிலாவின் பேச்சைக் கேட்ட சிவாவுக்கு நிலவனின் மேல் ஆத்திரமாக வந்தது.

“என்ன பேசுறன்னு தெரிஞ்சித் தான் பேசுறியா நிலா. ரோஜா யாரோ இல்ல, என்னோட சொந்தத் தங்கச்சி” என்று கோபமாகக் கத்தினான்.

அதில் கொஞ்சம் பயந்த நிலா, சிறிது இடைவேளைவிட்டு, “எதுக்காக இவ்வளவு கோபம் உங்களுக்கு வருது சிவா. உங்க தங்கச்சிக்கு எதுவும் ஆகாது. சொத்தை மட்டும் தான் எழுதி வாங்கப்போறோம் வேற ஒன்னுமே இல்ல” என்று தணிந்த குரலில், அவனுக்குப் புரிய வைக்க முயற்சி செய்தாள்.

ஆனால் அவளின் பேச்சைக் கேட்டு, அவனுக்குக் கோபம் தான் பல்கிப் பெருகியது.

“அவளுக்கு சொந்தமான சொத்தை எழுதி வாங்கப்போறியா? யார் சொத்தை யார் வாங்கப்போறது?” என்று அவன் மேலும் கத்த, இந்தப்பக்கம் நிலாவின் பொறுமை பறந்தது, “என்ன சொன்னீங்க அவளுக்கு சொந்தமான சொத்தா? சொத்து அவள் பெயரில் இருந்தா, அது அவளுக்கு சொந்தமாகிடுமா? யார் வீட்டு சொத்தை யார் சொந்தம் கொண்டாடுறதுன்னு ஒரு விவஸ்த்தை வேண்டாம். கேவலம் ஒரு அண்டங்கஞ்சியோட பொண்ணு...” என்று அவள் சொல்லிக் கொண்டே போக,

“போதும் நிறுத்து” என்று கண்கள் முழுவதும் ரத்த சிவப்பாகி அவன் கர்ஜிக்க, அதில் அமைதியான நிலாவிற்கு, அப்போது தான் தன் வார்த்தையின் வீரியம் புரிய ஆரம்பித்தது.

“நீ யாரை அண்டங்கஞ்சின்னு சொல்றன்னு தெரியுதா? நானும் அவரோட பையன் தான்” என்று உதடு துடிக்கப்பேசினான்.

அவன் கோபத்தில் இறங்கி வந்தவள், “மன்னிச்சிடுங்க சிவா. உங்களுக்கும் அவரைப் பிடிக்காதுன்னு நினைச்சு அப்படி சொல்லிட்டேன். நான் ரோஜாவை அப்படி சொல்லி இருக்கக்கூடாது” என்று அவசரமாக மன்னிப்பை வேண்டினாள்.

அதில் மனதிறங்கி, “வார்த்தைகளைப் பார்த்துப் பேசு நிலா” என்றவன் வனரோஜாவைப் பற்றிய நலனில் தன் திசையைத் திருப்பியவனாக, “உன் அண்ணன் இந்தியா போறது வேஸ்ட் தான். என்னோட தங்கச்சிக்கு இந்த நேரத்துல கல்யாணம் முடிஞ்சி இருக்கும்” என்று என்ன பேசுகின்றோம் என்று தெரியாமல் பேசிவிட்டு, தெரிந்ததும் உள்ளுக்குள் தன்னைத் தானே கடிந்து கொண்டான்.

அவனது பேச்சில், தன் புருவத்தை சுறுக்கியவள், “என்ன சொல்றீங்க? அதெப்படி கல்யாணம் ஆச்சுன்னு நீங்க சொல்லலாம்? எதையாவது பேசாதீங்க. உங்கத்தங்கச்சி யாரு எங்க எப்படி இருப்பான்னு கூட உங்களுக்குத் தெரியாது” என்றாள் சிடுசிடுவென்றக் குரலில்.

அதில் அமைதி அடைந்தவன், “ஆமாம் எனக்குத் தெரியாது தான். ஆனா இந்தியாவில் வேகமாக கல்யாணம் பண்ணிடுவாங்களே அதான். நா.. நான் சும்மாத் தான் சொன்னேன். நான் பிறகு பேசுறேன்” என்று திக்கித்திணறி சொல்லிவிட்டு, தன் இணைப்பைத் துண்டித்தவன், அடுத்து அழைத்தது என்னவோ, இந்தியாவில் இருக்கும் தன் ஆட்களுக்குத் தான்.

அவர்கள் அழைப்பை எடுத்தும், “எல்லாம் ஒழுங்காத் தானே போகுது?” என்று கேட்டான் சிவா.

அந்தப்பக்கம் பேசியவன், “எல்லாம் ஓகே தான் சார். மேடம் இப்பக்கூட ஆஸ்பத்திரில தான் இருக்காங்க” என்றான் அவன் எச்சிலை விழுங்கியபடி.

‘நேத்து தான் கல்யாணம் ஆச்சு. அதுக்குள்ள டியூட்டிக்கு வந்துட்டாளா! எப்பத்தான் இந்தப் பொண்ணு ரெஸ்ட் எடுக்குமோ’ என்று தன் தங்கையை இனிமையாக தன் மனதிற்குள் நினைத்துக் கொண்டவன், எதிர்பக்கம் பேசியவனிடம், “அவளை யாரும் நெருங்காம பார்த்துக்கோ. இனி தான் நீ அலெர்ட்டா இருக்கணும். என் தங்கச்சி மாப்பிள்ளை அஜய்க்கும் நீங்க தான் பாதுகாப்பு கொடுக்கணும்” என்று அவன் சொல்ல,

இவனுக்கோ வியர்த்து வழிந்தது. “அது சார் நேத்து ராத்திரி தான் எங்களுக்கு விஷயமே தெரிஞ்சது. உங்களுக்கு போன் பண்ணியும் நீங்க போனை எடுக்கல” என்று சொல்லித் தன் தலையைச் சொறிந்தான்.

அவன் இழுப்பதைப் பார்த்து சிவாவும் எரிச்சலாக, “என்னன்னு சொல்லித் தான் தொலை” என்று கத்தினான்.

“மேடம் கல்யாணம் நின்னு போச்சாம் சார்” என்று சொல்லி நிறுத்தினான்.

“புரியல! என்ன சொன்ன?” என்று தன் காதுகளில் கேட்டதை நம்ப முடியாமல் திரும்பவும் கேட்டான் சிவா.

அவனோ அதே வாக்கியத்தைத் திரும்பவும் கூற, சிவாவின் ரத்த அழுத்தம் ஏகத்திற்கும் எகிறியது.

“அந்த அஜய் ரொம்ப நல்லவன், எந்த வித தப்பும் அவன் மேல இல்லைன்னு நீ தானே சொன்ன?” என்று அவன் வார்த்தைகள் சூடாக வந்துவிழுந்தது.

“நான் சொன்னது உண்மை தான் சார். அந்த அஜய் நல்லவன் தான். ஆனா எங்களால வீட்டுக்குள்ள எல்லாம் போய் பார்க்க முடியாதே! அதான் அந்தப் பையன் மேடமோட தங்கச்சி கழுத்துல தாலி கட்டிட்டான் போல” என்று சொன்னதைக் கேட்டு, பாடாரென்று இருக்கையில் இருந்து எழுந்தவன், மேலும் விவரங்களை அவனிடமிருந்து கேட்டுவிட்டு, நிலவனை எப்படி தடுத்து நிறுத்துவது என்று யோசிக்க ஆரம்பித்தான்.

இந்தப்பக்கம் பேசியவனோ, “நான் இப்ப என்ன பண்ணட்டும் சார்” என்று கேட்க, “நான் இந்தியா வரும் வரைக்கும், மேடமை சுத்தி எப்போதும் உங்க ஆட்கள் இருக்கணும்” என்றான் கண்டிப்பான குரலில்.

“கண்டிப்பா சார். இப்போதும் அப்படித் தான் இருக்கோம்” என்றான் அவன்.

அதில் பல்லைக் கடித்தவன், “நீங்க பாதுகாப்புக்கு இருக்குற லட்சணம் நீ சொல்லும் போதே தெரியுது. நீங்க என்ன செய்வீங்கன்னு தெரியாது ஹாஸ்பிட்டலுக்கு உள்ள போய் மேடம்க்கு பாதுகாப்புக் கொடுக்கணும்” என்று சொல்லிவிட்டு வைத்தவன், வேகமாக தன் அன்னையைக் காண சென்றான்.

பரணியோ தன் அறையில் அமர்ந்து கோப்புகளைப் பார்த்துக் கொண்டிருந்தார், அவரிடம் அவசரமாக சென்ற சிவா, “அம்மா, ரொம்பப்பெரிய பிரச்சனை நடந்து போச்சு. நாம ரோஜாவை நம்ம வீட்டுக்குக்கே கூட்டிட்டு வந்திடுவோம் அம்மா” என்றான் பதற்றம் மிகுந்தக் குரலில்.

தன் ஒரே மகளின் பெயர் சிவாவின் வாயில் இருந்து வந்ததும், அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு, திரும்பவும், தன் கண்ணைக் கோப்பில் பதித்தவர், “ரோஜாவா அது யாருப்பா?” என்று கேட்டார் பரணி.

“ஐயோ அம்மா, விஷயம் என்னன்னு தெரியாம விளையாடாதீங்க. உங்கப் பொண்ணு ரோஜா ரொம்பப் பெரிய ஆபத்துல இருக்கா” என்றான் அவசரமாக.

ஆனால் அதில் துளி பொட்டும் கலங்காத பரணி, “என்னோட பொண்ணா? அப்படி யாரும் எனக்கு இல்லையே சிவா. தேவை இல்லாம இங்க நின்னு பேசிக்கிட்டு இருக்காம, நம்ம நிறுவனத்தை முன்னேத்துறதுக்கு உண்டான வழியைப் பாரு” என்று கடிந்து கொண்டார்.

“அம்மா உங்களுக்கும் அப்பாக்கும் நடந்த பிரச்சனையை பெருசு படுத்துற நேரம் இல்ல இது. ரோஜா சின்னப் பொண்ணா இருக்கும் போதே அப்பா இறந்துட்டார்” என்று அவன் சொன்னதைக் கேட்டு, கோப்புகளை வாசித்துக் கொண்டிருந்த பரணியின் கண்கள் ஒரே இடத்திலையே நிலைபெற்று நின்றது.

எல்லாம் சில கணங்கள் மட்டும் தான். ஆளுமை மிகுந்த பரணி, எந்த வித உணர்ச்சியையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல், தன்னை சமநிலைப் படுத்தியவர், “அதுக்கு நான் என்ன பண்ண? தேவை இல்லாததை பேசாத. ரோஜாக்கும் நமக்கும் எந்த வித சம்பந்தமும் இல்ல. இதெல்லாம் எந்த காலத்திலையோ முடிஞ்சிப் போன உறவு. என்கிட்ட வந்து ஷேர்ஸ் கேட்டா அதைக் கொடுக்க வேண்டியது மட்டும் தான் என்னோட கடமை. வேற ஒன்னுமே இல்ல” என்று விட்டு அமைதியானார்.

பரணியை நம்பமாட்டாதப் பார்வை பார்த்தவன், “உங்களுக்கு யார் மேல தான் அக்கறை இருந்துருக்கு? நிறுவனம் தான் முக்கியம்னு நினைக்குற நீங்க எதுக்காக காதலிச்சு கல்யாணம் பண்ணி பிள்ளையும் பெத்துக்கிட்டீங்க? கூடவே இருக்குற என்கிட்டக் கூட பாசமா ரெண்டு வார்த்தை நீங்க பேசுனது கிடையாது. இதுல எங்கையோ இருக்குற பொண்ணு மேல உங்களுக்கு பாசம் இருக்கும்னு நான் எதிர்பார்க்குறது என்னோட தப்பு தான்” என்று வார்த்தைகளை சிதறவிட்டான் சிவா.

அது எதுவும் தன் காதில் விழாததுப் போல, இரும்பில் அடித்த இதயம் போல் அமர்ந்திருந்தார் பரணி.

அதில் பொறுமையை இழந்தவன், “நான் இந்தியா போறேன்” என்றான் அறிவிப்பாக.

“அப்ப ஷேர்ஸ் சம்பந்தமா நீயே அந்தப்பொண்ணுக் கிட்டப் பேசிடு” என்று அசராமல் பேசினார் பரணி.

“அம்மா! அந்தப்பொண்ணு உங்க பொண்ணும்மா. அதெப்படிம்மா உங்களுக்கு துளி கூடவா பாசம் இருக்காது?. அப்பா இறந்ததும் அவள் எவ்வளவு கஷ்டப்பட்டாள்ன்னு தெரியுமா? எனக்கே ரோஜாவைப் பத்தி ரெண்டு மாசத்துக்கு முன்னாடி தான் தெரியும்” என்று சிவா சொல்ல,

“நான் அப்பவே உன்னை வெளிய போக சொல்லிட்டேன் சிவா. நீ இந்தியா போ, எங்க வேணாலும் போ, ஆனா இன்னும் ரெண்டு நாள்ல நம்ம பங்கு விலை உயரணும். இல்லைன்னா உன்னோட பதவி பறிக்கப்படும். ஒரு சிஇஓவா உன்னோட வேலையை சரியா செய்வன்னு நம்புறேன்” என்று வேலையைப் பற்றி மட்டுமே பேசிக்கொண்டு இருந்தவரைப் பார்த்து, முதன் முதலாக தன் குரலை உயர்த்திப் பேச ஆரம்பித்தான் சிவா.

“நீங்க கொடுக்குற இந்த சிஇஓ பதவியே எனக்கு வேண்டாம்” என்று கோபத்தோடு சொல்லிவிட்டு, தன் சொந்த ஜெட்டில் இந்தியா கிளம்பினான் சிவா.


 

NNO7

Moderator
அத்தியாயம் – 5

“இப்ப உங்க பல்ஸ் ரேட் எல்லாம் நார்மலா இருக்கு. இன்னைக்கே உங்களை டிஸ்சார்ஜ் பண்ணிடலாம்” என்று அந்த வயது முதிர்ந்த பெண்ணிடம் சிரித்த முகத்துடன் கூறிக்கொண்டிருந்தாள் வனரோஜா.

அப்போது அங்கே வந்த செவிலிப்பெண் ஒருத்தி, “டாக்டர், உங்கள டீன் கூப்பிடுறார்” என்றாள்.

தன் காதில் மாட்டி இருந்த செதேஸ்கோப்பை எடுத்துத் தன் கழுத்தில் மாட்டியவள், “என்னை எதுக்கு கூப்பிட்டார்?” என்று கேட்டுக்கொண்டே தன் கைக்கடிகாரத்தைப் பார்த்தவள், “எனக்கு டியூட்டி முடிஞ்சதே” என்று சொல்ல.

“எனக்குத் தெரியல டாக்டர். நேத்து நைட் ஒரு மருந்து கம்பெனிகாரர் வந்தாரே, அவர் தான் உங்களைப் பத்தி டீன் கிட்ட ஏதாவது போட்டுக் கொடுத்துட்டாரோ” என்று அவள் ஆச்சரியக் குரலில் கேட்க.

அதற்கு தன் உதட்டைச் சுழித்தவள், “என்னோட வேலையை நான் சரியா பாக்குறேன் சிஸ்டர். மருந்து தயாரிக்குறவங்கக் கூட பேசுறது எல்லாம் என்னோட வேலை இல்ல” என்று சொல்லிவிட்டு டீனைப் பார்க்க சென்றாள் வனரோஜா.

அந்த மருத்துவமனை டீனின் அறைக்கதவை தட்டி விட்டு சென்றவள், “சார் கூப்பிட்டு இருந்தீங்காளா?” என்று கேட்க.

“ஆமாம் டாக்டர் வனரோஜா” என்றவர், எடுத்ததுமே, “உங்களுக்கு இனி இந்த ஹாஸ்பிடலில் வேலை இல்ல. நீங்களே ரிலீவ் ஆகுற ப்ராசஸ்ச பார்த்துக்கோங்க” என்று குண்டைத் தூக்கி அவள் தலையில் போட்டார்.

அவர் சொன்ன அதிர்ச்சியில் இருந்து மீண்டவள் முன்பு, ஒரு நிமிடம் நிலவன் வந்து சென்றான், ‘ஒருவேள இதுக்கு அவன் தான் காரணமோ’ என்று நினைத்தவள், “என்ன சார் சொல்றீங்க. எதுவும் சொல்லாம, திடுதிப்புன்னு” என்று அவள் தடுமாறினாள்.

“நீங்க இங்க வெறும் ப்ராக்டீஸ் டாக்டர் தான் மிஸ் வனரோஜா” என்றார் அவர்.

“ஆனா டாக்டர்... இது அரசு மருத்துவமனை. என்னை எப்படி நீங்க வெளியேத்த முடியும்” என்று அவள் பதற்றத்துடன் கேட்க, “அதான் நான் சொன்னேனேம்மா நீங்க இங்க பயிற்சி மருத்துவர். பயிற்சி மருத்துவர்களை எல்லாம் குறைக்க சொல்லி எங்களுக்கு சர்குலர் வந்துருக்கு” என்றார் அவர்.

அடுத்து என்னவென்று வனரோஜா யோசிப்பதற்குள், அங்கே வந்த, இதுநாள் வரைக்கும் தன் உடன் பிறந்த சகோதரி என்று நினைத்து வந்த அபியோ, அங்கே நின்று இருந்த டீனிடம், “எல்லாம் ஓகே தானே அங்கிள்” என்றாள்.

அவள் கழுத்தில் தொங்கிக்கொண்டு இருந்த தாலியைப் பார்த்த வனரோஜாவுக்கு, நேற்று முன் தினம் நடந்த கோர சம்பவம் நிழல் ஆடியது.

அதுவரை தன் முகத்தை கடுகடுவென்று வைத்திருந்த டீனோ, அபியைப் பார்த்ததும் முகம் மலர்ந்தவராக, “வாம்மா அபி, அப்பா நல்லா இருக்காரா?” என்று கேட்டார்.

வனரோஜாவை ஒரு பார்வை பார்த்துவிட்டு, டீனிடம், “நல்லா இருக்காரு அங்கில். புதுசா கட்டப்போற ஹாஸ்பிடல் சம்பந்தமா அப்பா தான் உங்களைப் பார்த்துட்டு வர சொல்லி இருக்காரு” என்றாள் அவள்.

“இதுக்கெல்லாம் நீ வரணுமாம்மா சொன்னா நானே வந்திருப்பேனே. உங்க அப்பா கூட பார்ட்னர் ஆகுறதுல எனக்கு ரொம்ப சந்தோசம்மா” என்று அவரோ வளைந்து குலைந்து பேசினார்.

அவர்கள் பேச்சிலையே இதற்குக்காரணம் அபியின் தந்தை தான் என்பதனை உணர்ந்தவள், ஒரு கசந்த புன்னகையுடன் அங்கிருந்து வெளியேறினாள்.

திருமணத்தன்று எப்படி வெளியேறினாளோ, அதே போலவே வெளியேறினாள். தன் உரிமைக்காகப் போராட அவள் மனதில் சக்தி இல்லையா! இல்லை ஒரு துறவி போல அனைத்தையும் கடந்துவிட்டாளா என்பது தெரியவில்லை.

மருத்துவமனையில் இருந்து வெளியேறியவள், அங்கிருந்த கல் இருக்கையில் அமர்ந்து, தன் தோழி சந்தியாவிற்கு அலைப்பேசி மூலம் அழைத்தாள். ஆனால் அழைப்பு தான் செல்லவில்லை.

அதில் மிகவும் பயந்து தான் போய்விட்டாள் வனரோஜா. கையில் இருந்த தொகையை வைத்து ஹாஸ்டலில் சேர்ந்துவிட்ட வனரோஜாவின் வங்கிக்கணக்கில் மிக சொற்பப்பணம் மட்டுமே இருந்தது. பயிற்சி மருத்துவருக்கு சம்பளமும் மிகக்குறைவு தான்.

ஒரு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக இருக்கும் போதே, அங்கிருந்து வெளியேறி வேறு மருத்துவமனையில் சேருவது கொஞ்சம் சிரமம் தான். அதை நினைத்துப் பார்த்தவளுக்குத் தன் கண்களில் இருந்து நீர் பெருகியது.

குனிந்தபடியே அதனை துடைத்துக் கொண்டவள், தன் முன்னே நிழல் ஆடுவதைக் கண்டு நிமிர்ந்து பார்த்தாள்.

ஆறடி உயரத்தில், உதட்டை ஒரு பக்கமாக வளைத்து சிரித்தபடி நின்றிருந்தான் நிலவன்.

அவனைப் பார்த்ததும், ‘இவன் நிஜமாவே நிலா மெடிகல்ஸ்சோடா ஓனரா! இவன் எதுக்காக என்னையே சுத்தி வரான்’ என்ற நினைப்போடு, எழுந்து நின்றவள், என்னவென்பது போல் அவனைப் பார்த்தாள்.

அதற்கு அவனோ, “நேத்தே நான் யாருன்னு உனக்கு சொன்னதா நியாபகம்” என்று இப்போதும் தன் திமிரை விடாமல் பேசினான்.

‘இருக்குற பிரச்சனையில் இவன் வேற’ என்று உள்ளுக்குள் எரிச்சலாக நினைத்தாலும், வெளியே தன்மையாகவே பேசினாள், “உங்களுக்கு என்ன தான் வேணும் சார்?” என்றாள்.

“என்னை நீ கல்யாணம் பண்ணிக்கணும்” என்றான் ஒரே வாக்கியமாக.

அதில் சட்டென்று அதிர்ந்தவள், “என்ன? இப்ப என்ன சொன்னீங்க?” என்று தன் காதில் தான் எதுவோ தவறாக விழுந்துவிட்டதாக எண்ணி அவள் திரும்பவும் கேட்டாள்.

அதில் பல்லைக்கடித்தவன், “என்னைக் கல்யாணம் பண்ணிக்கோன்னு சொல்றேன்” என்று அனுமதியாகக் கூட அவன் கேட்கவில்லை.

அதனைக் கேட்டவுடன் வனரோஜாவின் ஆத்திரம் எல்லையைக் கடக்க, உடற்பயிற்சியின் உபயத்தால், முறுக்கேறி கல் போல் இருந்த அவனது நெஞ்சில் கைவைத்துத் தள்ளியவள், “யாருங்க நீங்க பொறுக்கி மாதிரி பேசுறீங்க. ஒரு பொண்ணு தனியா இருந்தாலே இது தான் பிரச்சனை” என்று அவள் பாட்டுக்கு அவனை திட்டிவிட்டு, அங்கிருந்து வேகமாக சென்றாள்.

அவன் அவ்வாறு சொன்ன பிறகு, ஒரு நிமிடம் கூட அங்கே நிற்க அவளுக்குப் பிடிக்கவில்லை.

நிலவனுக்கு இது முதல் தோல்வி என்று தான் சொல்லமுடியும். அவனது முகம் எல்லாம் பாறைப்போல் இறுகிப் போய் இருக்க. அவன் அருகே வேகவேகமாக வந்த அவனது உதவியாளர், “அடுத்து நாம என்ன சார் பண்ணபோறோம். வனரோஜாக்கூட நீங்க பேசுறதுக்கு நான் ஏற்பாடு பண்ணவா” என்றான் கண்களில் தோன்றிய பயத்தோடு.

அவனைப் பார்த்து முறைத்தவன், “யாரும் இல்லாம நடுத்தெருவுல அனாதையா நிக்குறான்னு நீ தான சொன்ன” என்று தன் கோபத்தைக் கட்டுப்படுத்தி, மெதுவாகக் கேட்டான்.

அதற்கு தன் எச்சிலை ஒரு இடறு விழுங்கியவன், “ஆமாம் சார். அது உண்மை தான். நீங்க சொன்ன மாதிரியே தான் செஞ்சி, அவங்களுக்கு இப்ப வேலை கூட இல்லாம ஆக்கிட்டோம்” என்றான்.

“பிறகு எதுக்காக அவள் இன்னும் திமிரோட இருக்கா?” என்று வார்த்தைகளைப் பற்களுக்குள் கடித்தபடி கேட்டான்.

“சார் திடுதிப்புன்னு, ஒரு பொண்ணு முன்னாடி நின்னு கல்யாணம் பண்ண சொன்னா. இப்படி தான் சார் பேசுவாங்க” என்று அவனும் பயந்தக்குரலில் கூறினான்.

அதற்கு சிரித்தவன், “இவளை எப்படி சரிகட்டணும்னு எனக்குத் தெரியும். நீ நான் சொன்னதை மட்டும் செய்” என்று சொல்லி அவனுக்கு சில வேலைகளைக் கொடுத்து அனுப்பினான்.

****

ஒய்யாரமாக தன் காலின் மீது காலைப் போட்டபடி அமர்ந்திருந்த நிலவனைப் பார்த்தவள், “நீங்க சொல்றது எல்லாம் நிஜம் தானா?” என்று நம்பமாட்டாமல் திரும்பவும் கேட்டாள் வனரோஜா.

அதற்கு அவன் அவளை ஒரு பார்வை பார்க்க, உடனே அவள், “இல்ல என்னால நீங்க சொல்றதை நம்ப முடியல. நீங்க என்னோட நிலைமையை யூஸ் பண்ணப்பார்க்குறீங்க. இத்தனை வருஷமா என்னைத் தேடாதவங்க, எதுக்காக இப்போ என்னைத் தேடி வந்தீங்க” என்றாள் கண்களில் கண்ணீருடன்.

அதற்கு தன் நெற்றியை நீவிவிட்டவன், “நான் தான் சொல்றேனே, உன்னை கண்டுபிடிக்க இத்தனை வருஷம் ஆகிடுச்சு” என்றவன், இப்போது கோபத்தோடு, “யாருமே என்னை இந்த அளவுக்கு எரிச்சல் படுத்தினது இல்ல. உன் பின்னாடியே சுத்தணும்னு எனக்கு எந்த தலையெழுத்தும் கிடையாது புரியுதா” என்றான் முகத்தைக் கடுகடுவென்று வைத்துக்கொண்டு.

சிறிது நேரத்திற்கு முன்பு, மருத்துவமனை வாசலில் அவனைத் திட்டிவிட்டு ஹாஸ்டல் வந்தவள், நிலா கெமிக்கல் கார்பரேஷன் என்று கூகிளைத் தட்ட வரிசையாக வந்து நின்றது என்னவோ, நிலவனின் புகைப்படம் தான். தொடர்ந்து அந்த நிறுவனம் வாங்கிய விருதை எல்லாம் பார்த்தவள், ‘இதெல்லாம் நிஜம் தானா!’ என்று தனக்குள் கேட்டுக் கொண்டாள்.

மெடிக்கல் துறை சார்ந்து இருக்கும் வனரோஜாவுக்கு, அந்த நிறுவனத்தைப் பற்றி தெரிந்து தான் இருந்தது. அதன் நிருவனரைப் பார்க்கத் தான் கூகிளைத் தட்டினாள்.

‘இந்த நிலவன் எதுக்காக என்னைப் பார்த்து அப்படி ஒரு கேள்வியைக் கேட்கணும்’ என்று அவள் நினைக்கும் போதே, தெரியாத நம்பரில் இருந்து அவளது அலைபேசிக்கு அழைப்பு வந்தது. நிலவனின் உதவியாளர் தான் பேசினான். அவளிடம் ஒரு மிகப்பெரிய ரெஸ்ட்டாரண்ட் பெயரைச் சொல்லி, அங்கு அவளை வரக்கூறினான்.

அவனிடம் பேசிவிட்டு வைத்தவள், அவ்வளவு பெரிய தொழில் ஜாம்பவான் எதற்காக தன்னையே சுத்தி வரவேண்டும் என்ற காரணத்தைத் தெரிந்து கொள்ள, அவன் சொன்ன இடத்திற்கு சென்றவள், அங்கே நிலவனால் சொல்லப்பட்ட செய்தியைக் கேட்டு அதிர்ந்தாள்.

பின் அவள் கண்களில் இருந்து வழிந்த கண்ணீரைப் பார்த்தவன், “இங்கப்பாரு வனரோஜா, உன்னோட அம்மா யாருன்னு எனக்குத் தெரியும். நான் சொல்றதை நீ கேட்டா உன்னை அவங்களிடம் கூட்டிட்டுப்போவேன்” என்று சொல்லி நிறுத்த.

தன் கண்ணீரை துடைத்துக் கொண்டவள், “என்னை முதல்ல அவங்கக்கிட்ட கூட்டிட்டுப் போங்க” என்று குரலில் நடுக்கத்துடன் அவள் கூற, தன் உதட்டைக் கடித்துவிட்டு, “சரி ஆனா, நான் சொன்னதை நீ கேட்கணும்” என்று அவன் கூறியதும், தன் தலையை ஆட்டிக்கொண்டாள் வனரோஜா.

தன் வாழ்வில் அனைத்தையும் இழந்து நின்ற வனரோஜா, சிறிதும் பயம் இல்லாமல் ஒரு ஆடவனோடு செல்லத் தயாரானாள்.

நிலவன், என்னதான் நிலா கெமிக்கல் கார்பரேஷன் ஓனராக இருந்தாலும், அவன் தன்னை கடத்தி வித்துவிடுவானோ அல்லது வேறு எதுவும் செய்துவிடுவானோ என்ற பயம் எல்லாம் ஒரு மூலையில் கிடந்தாலும், தன் அம்மாவிற்கு தெரிந்தவன் என்ற காரணத்தால் மட்டுமே, அவனுடன் செல்லத்தயாரானாள் வனரோஜா.

முன்பு, தன் பெற்றோரைப் பற்றி அபியின் தாய் மது சொன்னதை அவள் நம்பவில்லை. தன்னைப் பெற்று எடுத்த, அந்த முகம் தெரியாத தாயை உடனே பார்க்க, அவளது மனது அடித்துக் கொண்டது.

நிலவனின் மகிழுந்தில் ஏறி அமர்ந்தவள், “என்னோட அம்மா எப்படி இருக்காங்க? அவங்கப் பெயர் என்ன?” என்று அவனிடம் கேள்விகளை அடுக்கிக்கொண்டே சென்றாள்.

சிறியதாக ஒரு பார்வை பார்த்தவன், “அவங்களைப் பார்க்கத் தானே போறோம் கொஞ்சம் அமைதியா வா” என்றதும் தன் வாயை அவள் மூடிக்கொண்டாலும், தன் கைகள் இரண்டையும் கோர்த்துக் கொண்டு, சிறுமகிழ்ச்சியுடன் வந்தாள் வனரோஜா.

ஆனால் அதெல்லாம் நிலவன் அவளது தாயைக் காட்டும் வரை தான். ஒரு கல்லறை அருகே மகிழுந்தை நிறுத்திவிட்டு, “இவங்க தான் உன்னோட அம்மா, பக்கத்துக் கல்லறையில இருக்குறது தான் உன்னோட அப்பா. ரெண்டு பேரும் பத்து வருஷத்துக்கு முன்னாடியே செத்துப்போயிட்டாங்க” என்று சொல்லி அவளுக்கு அதிக மன அழுத்தத்தைத் தந்து விட்டு தள்ளி நின்றான் நிலவன்.
 

NNO7

Moderator
அத்தியாயம் – 6

தன் பெற்றோரின் கல்லறை முன்பு மண்டியிட்டு அழும் வனரோஜாவைப் பார்த்து, சிரிப்பு தான் வந்தது நிலவனுக்கு. கொஞ்சமும் மனிதநேயம் இல்லாமல் தான் அவன் நின்று கொண்டிருந்தான்.

இந்தியாவில் காலடி எடுத்து வைக்கும் முன்னே, அவன் வனரோஜாவைப் பற்றிய அனைத்து விஷயங்களையும் அறிந்து தான் இருந்தான். அப்படி இருந்தும், நிலவனுக்கு அவள் மேல் பாவம் எல்லாம் ஒன்றும் வரவில்லை. அந்த அளவுக்கு கல் நெஞ்சம் மிகுந்தவன், குறிக்கோள் எல்லாம், தான் வந்த விஷயத்தை அடைவதில் தான் இருந்தது.

ஒரு மரத்தின் அடியே சென்று நின்று கொண்டவன், தன் உதவியாளனை அழைத்து, “நான் சொன்ன ஏற்பாட்டை எல்லாம் பார்த்துட்டியா” என்றான் தன் டேப்லட்டில் பார்வையைப் பதித்தபடி.

அவனோ பவ்யமாக, “பண்ணிட்டேன் சார். ஆனா...” என்று சொல்லி இழுத்தான், தூரத்தில் மண்டியிட்டு அழுது கொண்டிருப்பவளைப் பார்த்து

பின், நிலவனின் பார்வைக் கண்டுப் பதறியவன், “அதில்ல சார், வனரோஜா மேடம்கிட்ட நாம உண்மையை சொல்லிடலாமே. அவங்களைப் பார்த்தா நல்லவங்க மாதிரி தான் தெரியுது. நமக்கு வேலையும் சுலபமா முடிஞ்சிடும்” என்று தூரத்தில் அழுதுகொண்டவளைப் பார்த்தபடி கூறினான்.

அதற்குப் பல்லைக் கடித்த நிலவன், ஆங்கிலக் கெட்டவார்த்தையை சொல்லியபடி, “ஒன்னும் இல்லாம ரோட்ல இருக்குறவக்கிட்ட, பல பில்லியன் டாலர் சொத்துகள் அவள் பெயரில் இருக்குதுன்னு சொன்னா எப்படி சும்மா இருப்பா... வேலையைப் பாரு போ..” எனக்கடிந்து விழுந்துவிட்டு,

இப்போது, வனரோஜாவின் அருகே வந்தான் நிலவன்.

“உங்க அம்மாவப் பார்க்கணும்னு சொன்னியே, பார்த்துட்ட தானே!. இப்ப நான் சொல்றதைக் கேட்குறியா?” என்று அவன் பேச.

தன் வாயைத் திறக்காமல், தலையை மட்டும் ஆட்டிக்கொண்டாள்.

உடனே அவள் கையைப் பிடித்து, அவளை எழுப்பிவிட்டவன், தன் மகிழுந்தில் அவளுடன் ஏறினான்.

வனரோஜா இன்னும் தன் அழுகையை நிறுத்தவில்லை. அதில் முகத்தை சுழித்தவன், “எப்பவோ செத்தவங்களுக்காக எதுக்காக இப்ப நீ கண்ணைக்கசக்குற?” என்றான்.

தன் கன்னத்தில் வழிந்த கண்ணீரை துடைத்தவள், “இந்த உலகத்துலையே எனக்கு உரிமைப்பட்டவங்க, இவங்க மட்டும் தான். கடவுள் ஏன் தான் எங்க அம்மா, அப்பாவ என் கண்ணுல காட்டாம இப்படி பண்ணானோ தெரியல” என்றாள் விசும்பியபடி.

தன் கையில் இருந்த கோப்பை அவள் மடியில் தூக்கிப்போட்டவன், “இதைப் படிச்சுப்பாரு” என்றான்.

அந்தக் கோப்பில் நிலா ஹாஸ்பிடல் என்று எழுதி இருந்தது. அதனைப் படித்தவள், அவனைப் பார்த்து, “புரியல.. இதை எதுக்காக நீங்க என்கிட்ட கொடுக்குறீங்க?” என்று கேட்டாள்.

“நிலா ஹாஸ்பிடல் என்னோடது தான். ஆனா மல்டி ஸ்பெசாலிட்டி கிடையாது. எந்த வித பெரிய கருவிகளும் இல்லாத சாதாரண மருத்துவமனை தான் அது. லண்டன்ல ரிச்மண்ட் பக்கத்துல இருக்குற கிராமத்து மக்களுக்கு இதை விட்டா வேற மருத்துவமனையும் கிடையாது.

உயிர்காக்கும் கருவி இல்லாததுனால, பல மக்களோட உயிர் இதுனால போகுது “ என்று சொல்லி நிறுத்தினான்.

அவன் விஷயத்தைக் கூறி முடிப்பதற்குள் முந்திக்கொண்டு, “ஆனா நான் எமர்ஜென்சி டாக்டர் கிடையாதே! நான் கார்டியாலஜிஸ்ட். அதுல டிஎம் பண்ணிட்டு, பயிற்சி மருத்துவரா இருந்துக்கிட்டே கார்டியோடோராசிக் அறுவை சிகிச்சைக்குப் படிச்சிக்கிட்டு இருக்கேன்” என்று அவன் மருத்துவருக்கு ஆள் எடுப்பதாக நினைத்துக் கொண்டு பேசினாள் வனரோஜா.

“கொஞ்சம் பேசுறத நிறுத்துறியா!” என்று பெருமூச்சி விட்டவன், “கேளு, உன்னோட தாத்தாவும் என்னோட தாத்தாவும் நண்பர்கள். சின்ன வயசுலையே நம்ம ரெண்டு பேருக்கும் கல்யாணம் பேசிட்டாங்க. அப்ப தான் இந்தியா டூர் வந்தப்ப நீ காணாம போயிட்ட, இப்ப உன்னைக் கல்யணம் பண்ணாத் தான், என் தாத்தாவோட சொத்து எனக்கு வரும். மருத்துவமனையையும் நல்ல நிலைமைக்குக் கொண்டு வர முடியும். இதனால பலபேரோட உயிரும் காப்பற்றப்படும்” என்று நீளமாக, அவளுக்குப் புரிய வைக்கும் நோக்கில் பேசினான்.

அவன் சொன்னதை எல்லாம் உள்வாங்கியவள், “நிலா கெமிக்கல் கார்பரேஷன் ஓனருக்கு மருத்துவமனைக் கட்ட வசதி இல்லைன்னு சொன்னா நம்புற மாதிரி இல்ல” என்றாள் வனரோஜா.

அவள் பேச்சில், உள்ளுக்குள் தன் பல்லை நரநரவென்று கடித்தவன், தன் கோபத்தைக் கட்டுப்படுத்தியபடி, “மருத்துவமனை கட்ட எனக்கு வசதி இல்லைன்னு நான் உன்கிட்ட சொல்லவே இல்லையே. நான் சொல்றது மிகப்பெரிய நவீன கருவிகள் கொண்ட மருத்துவமனை. அதுமட்டும் இல்லாம, மருத்துவ வசதி இல்லாத இந்திய கிராமத்திலும் நான் மருத்துவமனை கொண்டுவரப்போறேன். கல்யாணம் ஆனா தான், என் தாத்தா சொத்து எனக்குக் கிடைக்கும். அதுவும் உன்னை” என்றான். கொஞ்சம் மெய்யும், மீதி எல்லாம் பொய்யும் கலந்தபடி பேசினான் நிலவன்

அவன் சொல்லவரும் விஷயம் இப்போது தான் வனரோஜாவுக்கு புரிபட ஆரம்பித்தது.

“அதுக்கு இப்ப என்ன சொல்லவரீங்க? உங்களுக்கு வரப்போற சொத்துக்கு நான் எதுக்கு உங்களைக் கல்யாணம் பண்ணனும்? முதல்ல நீங்க யாரு? முன்னப்பின்ன தெரியாத உங்களை நான் எப்படி கல்யாணம் பண்ணிக்கமுடியும்?” என்று உதடு துடிக்கக் கேட்டாள்.

தன் காதில் சுண்டுவிரலைவிட்டு ஆட்டியவன், “எதுக்காக இப்படி கத்துற? என்னை பாக்குறியே” என்று தன் இரண்டு கைகளையும் நீட்டியவன், “நான் எப்படி இருக்கேன், நீ எப்படி இருக்க... எனக்கு மட்டும் உன்னைக் கல்யாணம் பண்றதுல விருப்பம் இருக்குன்னு நீ நினைக்குறியா?” என்றான் எகத்தாளமான குரலில்.

அதற்கு அவளிடம பேச்சு இல்லை. ஒரு கணம் அமைதிக்குப் பின், “இங்கப்பாரு வனரோஜா, உன்னோட நிலைமையும் எனக்கு நல்லாவே தெரியுது. உனக்கும் ரெண்டு நாளைக்கு முன்னாடி தான் பிரேக்அப் ஆகியிருக்கு. குடும்பமும் இல்ல, வேலையும் இல்ல. எனக்கும் கேர்ள்பிரண்ட் இருக்கா. சோ நாம ஏன் இரண்டு வருடத்திற்கு மட்டும் இந்த கான்ட்ராக்ட் திருமணத்தப் பண்ணிக்கக்கூடாது? உனக்கு நான் பெரிய தொகையா செட்டில் பண்ணிடுறேன்” என்று நான் விளையாடும் விளையாட்டிற்கு விளையாட வா என்பது போல் அழைத்தான் அவளை.

அதில் அவள் கண்கள் அதிர்ச்சியில் விரிந்தது, “என்ன பேசுறீங்க? இது என்ன நாடகம்? கேட்குறதுக்கே அசிங்கமா இருக்கு” என்றாள் முகத்தை வேறு பக்கம் திருப்பியபடி.

“இந்த மாதிரி கல்யாணம் பண்றது தான் இப்ப சீனால ட்ரேண்டிங். சிங்கிளா இருக்குறவங்களை எல்லாம் கல்யாணம் பண்ண சொல்லி அவங்க அரசாங்கம் போர்ஸ் பண்ணுது. உடனே எல்லாரும் கான்ட்ராக்ட் கல்யாணம் தான் பண்ணிக்கிறாங்க. இந்த மெய்நிகர் உலகத்துல எதுக்காக இன்னும் திருமணத்தை புனிதமா பார்க்குற?” என்று எதிலும் நம்பிக்கை இல்லாமல் கை தேர்ந்த வியாபாரி போலவே பேசினான்.

வனரோஜாவும் யோசித்தாள், அவன் சொன்னது போலவே தனக்கென்று ஒன்றும் இல்லை. இனி வேலை தேடுவதும் சிரமம் என்று நினைத்தாள். ஐந்து வருடங்கள் மருத்துவப்படிப்பைப் படித்துவிட்டால் அனைத்தும் கிடைத்துவிடும் என்பது உண்மையல்ல. அதனைத் தொடர்ந்து மூன்று வருடங்கள் மேல் படிப்பை முடித்துபின்னும், பயிற்சியில் இருந்தே இன்னும் படித்துக்கொண்டே தான் இருக்கின்றாள் வனரோஜா.

மருத்துவத்திற்கே தன் வாழ்வை அர்பணித்துவிட்டவளுக்கு அது ஒரு சுமையாகவும் தெரியவில்லை.

அவள் யோசிப்பதைப் பார்த்தவன், “இரண்டு வருடம் நீ லண்டனில் தான் இருக்கணும். உனக்குன்னு தனியா ரூம் ப்ரைவசி எல்லாமே கிடைக்கும். ஒரு வருடம் முடிந்ததும், உனக்கு நான் பத்து கோடி ரூபாய் செட்டில் பண்ணிடுவேன். அடுத்த வருடம் முடியும் போது...” என்று அவன் சொல்லிக்கொண்டு இருக்கும் போதே, வனரோஜாவிற்கு கோபம் வர ஆரம்பித்துவிட்டது, “எனக்கு உங்கப்பணம் எல்லாம் தேவை இல்ல” என்று எரிச்சலுடன் சொல்லிவிட்டாள்.

பின் சிறு அமைதிக்குப் பின், “உங்களுக்கு சொத்து வேணும், ஆனா எனக்கு வேலை வேணும். உங்க மருத்துவமனையில் நான் பயிற்சி மருத்துவரா தொடர்வதுக்கு நீங்க சரின்னு சொன்னீங்கன்னா, எனக்கு சம்மதம் தான்” என்று ஒரு நாள் கூட யோசிப்பதற்குக் கால அவகாசம் கேட்காமல், அவள் தன் முடிவை அறிவித்தாள்.

இதற்கு முன் இருந்த வனரோஜாவாக அவள் இருந்திருந்தால், அவனுடன் பேசவே அவள் ஒத்துக்கொண்டிருக்க மாட்டாள் தான். ஆனால் இப்போது அவளின் குறிக்கோள் எல்லாம் தன் கல்வி முடியவேண்டும் என்பதில் தான் இருந்தது.

‘மீன் தூண்டிலில் தானாக சிக்கிவிட்டது’ என்று நினைத்த நிலவன், தன் உதட்டை ஒரு பக்கமாக வளைத்து சிரித்து வைத்தான்.

*****

தன் ஜெட்டில் பொறுமை இல்லாமல் தலையைப் பிடித்தபடி அமர்ந்திருந்த சிவா, தன் உதவியாளரைப் பார்த்து, “எதுக்காக போன் போக மாட்டேங்குது” என்று கத்தினான்.

‘இவன் தெரிந்து தான் கேட்கின்றானா’ என்பது போல் அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு, “நாம ஜெட்ல இருக்கோம் சார். டவர் கிடைக்காது” என்றான் அவனது உதவியாளன் ராஜ்.

“அந்த நிலவன் இந்நேரம் ரோஜாவ பார்த்து இருப்பானா?” என்று படபடப்பான குரலில் சிவா கேட்க.

‘பார்த்து இருப்பானாவா! அவன் இந்நேரம், அந்தப்பொண்ணைக் கல்யாணமே பண்ணிருப்பான்’ என்று நினைத்த ராஜ், அதனை அப்படியே அவனிடம் கூறாமல், “பார்த்து இருந்தாலும், கல்யாணம் பண்றதுக்கு அந்தப்பொண்ணு சம்மதிக்கணுமே சார்” என்றான்.

“என் ரோஜா சம்மதிக்க மாட்டாள் தான். இவன் கட்டாயப்படுத்தி அவளைக் கடத்திட்டு போயிட்டா என்ன பண்றது” என்று பதறினான் சிவா.

“சார் என்ன தான் உங்களுக்கு நிலவன் சாரைப் பிடிக்கலைனாலும் அவர் பக்கா ஜென்டில்மேன் சார். அவர் கட்டாயப்படுத்தி எதுவும் செய்யமாட்டார். நல்லா திட்டம் போட்டு சாதுரியமா தன் காரியத்தை சாதிப்பாரு” என்று அவனைப் பற்றி விலாவரியாக அறிந்திருந்த ராஜ் கூறினான்.

அதற்கு ஒரு கணம் அமைதியான சிவா, “அது தான் என் பயமே. ரோஜா, அம்மா மாதிரி இல்ல. அவள் என்னை மாதிரியே பலவீனமான இதயம் கொண்டவளா இருக்காள். அவள் மனநிலையும் துரோகிகளை நினைச்சு ரொம்ப வருத்தத்தில் இருக்கும். அதை இந்த நிலவன் நாடகம் ஆடி தனக்கு சாதகமா மாத்திக்காம இருக்கணும்” என்று அவனிடம் சொல்வது போல் தனக்கும் சேர்த்தே சொல்லிக் கொண்டான் சிவா.

சிவா சரியாக இந்தியாவில் வந்து தரையிறங்கியதும், அவனுக்கு அலைபேசி மூலம் அழைப்புவிடுத்தாள் நிலா.

நிலாவின் அழைப்பை எடுத்தவன், “நான் அவசர வேலையில் இருக்கேன் நிலா. நான் உன்னை பிறகு கூப்பிடுறேன்” என்று அவன் சொல்லிக்கொண்டு இருக்கும் போதே, சிரிக்க ஆரம்பித்த நிலா, “இறுதியா இந்தியாவுக்கே போயிட்டீங்கப் போல...” என்றாள்.

அவள் சிரிப்பில் எரிச்சல் அடைந்தவன், “உனக்கு என்னடி பிரச்சனை? இப்ப எதுக்காக போன் பண்ண?” என்றான் முகத்தைக் கடுகடுவென்று வைத்துக் கொண்டு.

“கல்யாணத்தை நிப்பாட்டுறதுக்குத் தான், அங்க நீங்க போயிருக்குறதா தகவல் வந்துச்சு...” என்றாள் நக்கலாக.

“ஆமாம் அதுக்காகத் தான் வந்துருக்கேன்? இப்ப என்ன அதுக்கு? உன் அண்ணன் நினைக்குறது எதுவுமே நடக்காது” என்று சொல்லிக்கொண்டே தன் அருகே வந்து நின்ற மகிழுந்தில் ஏறி அமர்ந்தான் சிவா.

அதற்கும் சிரித்தவள், “வழக்கம் போல, என் அண்ணன் கிட்ட நீங்க தோத்துப்போயிட்டீங்க சிவா. அந்த வனரோஜாவுக்கும் என் அண்ணன் நிலவனுக்கும் கல்யாணம் ஆகிடுச்சி. இப்ப தான் அவர்கிட்ட நான் பேசுனேன்” என்றாள் நிலா.

சிவாவின் மனதில் ஆயிரம் எரிமலைகள் ஒன்றாக சேர்ந்து வெடித்தாலும், இப்போது கோபம் கொள்ளும் நேரம் இல்லை என்பதனை உணர்ந்து, “கல்யாணம் பண்ணிட்டா மட்டும் சொத்து கிடைச்சிடுமா? அதுல என்னவெல்லாம் எழுதி இருக்குன்னு எனக்கும் நல்லாவே தெரியும் நிலா. வனரோஜாவுக்கு கல்யாணமாகி குழந்தை பிறந்தாத் தான் சொத்து. அந்தக் குழந்தை நிச்சயம் உன் அண்ணனுக்குப் பிறக்குறதா இருக்காது. அப்படி நடக்கவும் நான் விட மாட்டேன்” என்று ரோஷத்துடன் சொல்லி நிலாவின் மனத்தினை அதிரவைத்தான் சிவா.
 

NNO7

Moderator
அத்தியாயம் – 7

சிவாவின் பேச்சில் கோபம் அடைந்த நிலா, “சும்மா வாய்க்கு வந்ததை பேசாதீங்க” என்று கத்தினாள்.

“நீ என்னவேணாலும் நினைத்துக்கொள் நிலா. ஆனா உன்னோட அண்ணன் நினைச்சது எதுவுமே நடக்காது. அதுக்கு உன் அண்ணனோட காதலியும் ஒத்துக்கமாட்டாள்” என்றான் இந்தப்பக்கம் பேசிய சிவா.

சிவாவின் மகிழுந்து புயல் வேகத்தில் சென்று கொண்டிருந்தது. வனரோஜாவின் நலனை தெரிந்துகொள்வதில் தீவிரமாக இருந்த சிவாவிற்கோ, நிலாவின் பேச்சு எரிச்சலைத் தர, “கல்யாணம் ஆனால் மட்டும், எதுவும் பண்ணிடலாம்னு நீயும் உன் அண்ணனும் தப்பு கணக்குப் போடாதீங்க” என்று அவன் சொல்லி தனது அலைப்பேசி இணைப்பை ரத்து செய்துவிட்டு, தன் தங்கையைப் பார்த்துக்கொள்ள ஏற்பாடு செய்திருந்த ஆட்களை தொடர்புகொண்டான். ஆனால் அவர்களுக்கு அலைப்பேசி அழைப்பு மட்டும் செல்லவே இல்லை.

அவன் திரும்பத் திரும்ப முயற்சி செய்து தோற்றுப்போக, சிவாவிற்கு பதற்றமும், கோபமும் அதிகமாகியது.

இங்கே சிவா பேசிவிட்டு வைத்ததும், தன் அலைபேசியைப் பார்த்துக் கொண்டே இருந்த நிலா, “என்னையவே அவாய்ட் பண்ணி, திட்ட வேற செய்யுறீங்களா சிவா... இதுக்கு நீங்க நல்லா என்கிட்ட அனுபவிக்கத் தான் போறீங்க... சின்ன வயசுல இருந்து என்னைப் பார்த்துட்டு இருக்கீங்க... என்னை விட இப்ப முளைச்ச தங்கச்சி பெருசா போயிட்டாளா... பார்த்துக்குறேன், எப்படி இருந்தாலும், அவள் இங்க தானே வந்து ஆகணும்” என்று முகம் தெரியாத வனரோஜாவின் மீது வெறுப்பை வளர்த்துக்கொண்டாள் நிலா.

அவளுக்குத் தன் அண்ணன் நிலவன் மேல் பெரிதும் நம்பிக்கை இருந்தது, அவன் சொன்னதைச் செய்துவிடுவான் என்று.

*****

“நீ சொன்னது எல்லாம் எனக்கு ஓகே தான். நிலா ஹாஸ்பிடல்ல உன் பயிற்சியை நீ தொடரலாம். ஆனா அதுக்கு முன்னாடி, உன் மனசுல நல்ல ஏத்திக்கோ, வெறும் இரண்டு வருஷம் கான்ட்ராட் மட்டும் தான் நமக்குள்ள இருக்கும்.

என் மேலையோ, என் சொத்து மேலையோ ஆசை உனக்கு வரக்கூடாது..” என்று அவன் சொல்லும் போதே முகத்தை சுழித்த வனரோஜா, “எனக்கு அதுல எல்லாம் கொஞ்சமும் ஆர்வம் இல்ல மிஸ்டர். ஏன் நீங்க அம்பானிக்கே மகனா இருந்தாலும், உங்க காசு சொத்து இதெல்லாம் பத்தி ஐ டோன்ட் கேர்” என்றாள் அழுத்தம் திருத்தமான குரலில்.

அதற்கு தன் உதட்டை ஒருபக்கமாக வளைத்து சிரித்த நிலவன், “நானும் இது மாதிரி பேசுற, நிறையா பொண்ணுங்களைப் பார்த்துருக்கேன்... எனிவே, மனசு ஒரு குரங்குன்னு பெரியவங்க சும்மா சொல்லலையே!” என்று சொல்லிக்கொண்டே, தன் கையில் இருந்தக் கோப்பை அவள் முன்னே இருந்த டீப்பாயில் எடுத்துப்போட்டவன், “நல்லா படிச்சுப் பார்த்து கையெழுத்துப்போடு” என்றான்.

வனரோஜா அதனைத் தன் கையில் எடுத்துப் படித்துப் பார்த்தாள். அதில் அவன் சொன்னது போலவே இரண்டு வருடங்கள் பிரிந்துவிடுவேன், சொத்து எதுவும் கேட்கமாட்டேன் என்பது போல எழுதி இருந்தது. அதில் கையெழுத்துப் போடுவதற்கு முன், நிமிர்ந்து தன் முன்னால் அமர்ந்திருந்த நிலவனைப் பார்த்தவள், “எனக்கு சிலபல கண்டிஷன்ஸ் இருக்கு. அதெல்லாம் என்னன்னு கேட்காம, நீங்களாவே ஏன் பத்திரத்த ரெடி பண்ணீங்க?” என்றாள் துடுக்கான குரலில்.

அதற்கு நிலவனோ, மிகவும் கூலாக, “உனக்குத் தேவை படிப்பு மற்றும் வேலை அதைத் தவிர, நீ வேண்டாம்னு சொன்னாலும், உனக்கு தேவையான தொகையை நான் கொடுக்கத்தான் போறேன். இதுக்கு மேல உனக்கு என்ன வேணும்?” என்றான் திமிரான குரலில்.

அதற்கு அவனை நேர்கொண்டப் பார்வை பார்த்தவள், “பாதுகாப்பு வேணும். இப்ப எப்படி நான் உங்கக்கூட வரப்போறேனோ.. அதே மாதிரி தான், இரண்டு வருஷம் கழிச்சும் நான் இங்க வரணும்” என்றாள்.

அதற்கு அவளைப் புரியாதப் பார்வை பார்த்தவனுக்கு, அவளின் தமிழ் சரியாகப் புரியவில்லை.

“இல்ல புரியல” என்றான் அவன் இரண்டு வார்த்தைகளில்.

“நீங்க சொன்னதைத் தான் நானும் திரும்ப சொல்றேன். உங்களுக்கு என் மேல் எந்த ஆர்வமும் வரக்கூடாது. என் பக்கத்துல நீங்க நெருங்கக்கூடாது..” என்று அவள் சொல்லிக்கொண்டு இருக்கும் போதே, முகத்தை சுழித்தவன், “போதும் நிறுத்து, நான் தான் சொன்னேனே! எனக்குக் காதலி இருக்கா. அப்படி இருக்கும் போது போயும் போயும் உன்னை...” என்று தன் ஆள்காட்டி விரலை அவள் முன் நீட்டியபடி பேசியவன், பின் தன் கையை மடக்கிக்கொண்டு, “என்னை டென்ஷன் ஆக்காத கையெழுத்துப் போடு” என்றான் அரட்டல் குரலில்.

“இல்லை” என்று மறுப்பாக தன் தலையை ஆட்டியவள், “என்னால இதுல கையெழுத்துப்போட முடியாது. என்னதான் நீங்க வாய் வார்த்தையா சொன்னாலும், நான் தீண்டத்தகாதவன்னு சொல்லி முகத்தை அசுகையா வச்சாலும், எனக்கு நம்பிக்கை வர்றதுக்கு, நீங்க பத்திரத்தில் நான் சொன்னதை நீங்க சேர்க்கணும்” என்றாள் கறாரான குரலில்.

முதன்முதலாக அவள் முன்னால் விழித்து நின்றவன், ‘நேரம் சென்று கொண்டே இருக்கின்றது. இப்போது ஆகவேண்டியக் காரியங்களைப் பார்க்கலாம், பின்னால் வருவதைப் பின்னால் பார்த்துக்கொள்ளலாம்’ என்ற நினைப்போடு, தன் உதவியாளனை அழைத்து வனரோஜா சொல்லியபடியே பத்திரத்தை தயாரிக்கக் கூறினான்.

பின், “நீ சொன்ன மாதிரியே பண்ணிடலாம்” என்றான் வனரோஜாவிடம்.

வனரோஜாவோ, “எனக்கு இன்னொரு சந்தேகமும் இருக்கு சார்” என்றதும், “சொல்” என்பது போல அவன் தன் தலையை ஆட்ட, “வழக்கமா ஒன் இயர்க்கு மட்டும் தானே திருமணத்துக்கு கான்ராக்ட் போடுவாங்க... நீங்க எதுக்காக ரெண்டு வருஷம் போட்டு இருக்கீங்க?” என்று கேட்டாள்.

அது குழந்தை பிறப்பதற்கு உண்டான கால அவகாசம் என்று அப்படியே அவனால் அவளிடம் சொல்லவா முடியும்! அதனால், “டாகுமென்ட்ஸ் எல்லாத்தையும் சேர்த்து சொத்து என் கைக்கு வர அவ்வளவு நாள் ஆகிடும். அதுக்கு ஒரு வருஷம் போதாது” என்று தன் வாய்க்கு வந்ததைச் சொல்லி சமாளித்தான்.

வனரோஜா எந்தக் கேள்விக் கேட்டாலும், அதற்கு நிலவனிடம் பதில் தயாராகத் தான் இருந்தது. தொழிலில் சாதுரியமாகப் பேசி, அதில் வெற்றி பெறுபவனுக்கு, வனரோஜாவை நம்ப வைப்பது எல்லாம் சுலபமாகத் தான் இருந்தது.

முதன்முதலாக அவளைப் பார்க்கும் போது, தன் அழகில் மயங்கிவிடுவாள் என்று தப்புக்கணக்குப் போட்டவன், பின் அவளை எவ்வாறு தன் வசப்படுத்துவது என்று நன்றாக உள்ளுணர்ந்து செயல்பட்டான்.

இதில் வனரோஜாவுக்குத் தெரியாத மிகப்பெரிய ரகசியம் ஒன்றும் இருந்தது. வனரோஜாவுடன் சேர்ந்து குழந்தை பெற்றால் மட்டுமே நிலவனுக்கு சொத்து கையில் கிடைக்கும். அதற்காக அவன் என்ன செய்யப்போகின்றான்? அவன் நினைப்பு தான் என்ன? தன் காதலிக்கு இதுநாள் வரையிலும் உண்மையாக இருந்த நிலவன், ஐவிஎப் மூலம் வனரோஜாவை செயற்கை முறையில் கருத்தரிக்க செய்யப்போகின்றானா என்பதனை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

****

இங்கே தன் டிடெக்டிவைத் தேடி வந்த சிவாவோ, அவனது சட்டையைப் பிடித்து சண்டை போட்டுக்கொண்டிருக்க, அங்கே எப்போதோ சட்டப்பூர்வமாக நிலவனுக்கு மனைவி ஆகியிருந்தாள் வனரோஜா.

“சார் என் ஆட்களை என்னாலையே ட்ராக் பண்ணமுடியல” என்று பதறினான் அவன்

அங்கே ஓடி வந்த சிவாவின் பிஏ ராஜ், “சார் விடுங்க சார்” என்று கூறிக்கொண்டே, சிவாவை தடுத்து நிறுத்தியவன், “நிலவன் சார் ஆட்கள், நம்ம ஆட்களை எல்லாம் அவங்க கட்டுப்பாட்டில் வச்சிருக்காங்க சார். நாம தாமதிக்குற ஒவ்வொரு நிமிஷமும் மேடமுக்கு தான் ஆபத்து சார்” என்று அவன் சொல்லும் போதே, சிவாவிற்கு பைத்தியம் பிடித்துவிட்டது போலானது.

தன் தலைமுடியை அழுத்தமாக கோதியவனின் கண்கள் இரண்டும் கோபத்தில் சிவந்து தான் போனது.

“நிலவன் ஆட்களை ட்ராக் பண்ணு” என்றான் சிவா ராஜிடம்.

“எங்களால முடியல சார். நிலவன் சார், அவர் சொந்த ஜெட்டில் தான் இந்தியா வந்துருக்காரு. அவர் ஜெட் பக்கத்துல போய் நின்னா மட்டும் தான் அவங்களை நாம பிடிக்க முடியும். இதுல வேற வழி ஏதாவது இருக்கான்னு எனக்குத் தெரியலை சார்” என்று சொல்லிவிட்டு தலைக் குனிந்தான் ராஜ்.

“அந்த பொறுக்கி வர்ற வரைக்கும் நான் அவன் ஜெட் பக்கத்துல காவல் காக்கணுமா?. ஏதாவது பண்ணு... நம்ம பவரை யூஸ் பண்ணி மந்திரியைப் பிடி” என்று காட்டுகத்தலாக கத்தினான் சிவா.

அவன் சொன்னதற்கு மண்டையை ஆட்டிய ராஜ், ‘ரோஜா மேடம் கிடைச்சதுமே, இவர் அவங்களைப் பார்க்க வந்திருந்தா இந்தப் பிரச்சனையே வந்து இருக்காது’ என்று நினைத்துக் கொண்டே அவன் சொன்னதை செயல்படுத்த ஆரம்பித்தான்.

அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று பதற்றத்துடன் இருந்த சிவாவைப் பார்த்த டிடெக்டிவ், “ரெண்டு மாசத்துக்கு முன்னவே நீங்க வந்து இருக்கலாம் சார்” என்று ராஜ் நினைத்ததையே அவரும் சொன்னார் மெதுவான குரலில்.

அவ்வளவு பெரிய பதவியில் இருக்கும் சிவாவின் கண்கள் இரண்டும் கலங்கி, சட்டை எல்லாம் கசங்கிப் போய் பார்க்கவே பரிதாபமான நிலையில் இருந்தான்.

ஆனால் அவன் அவரிடம் எதுவும் சொல்லிக்கொள்ளாமல், உணர்வற்ற நிலையில் மெதுவாக நடந்து வெளியே சென்றான், அவன் அருகே ஓடி வந்த ராஜ், “நீங்க சொன்னதை எல்லாம் செஞ்சிட்டேன் சார். மனம் தளராதீங்க... தங்கச்சி கிடைச்சிடுவாங்க” என்றான் சிவாவின் தோள்களை தாங்கிக்கொண்டபடி.

ராஜைப் பார்த்தவன், “தங்கச்சி தான் முக்கியம்னு நான் நினைச்சி இருந்தா, என்னோட தங்கச்சி இன்னைக்கு என்னோட இருந்திருப்பா தானே ராஜ்” என்றான்.

ராஜ் எதுவும் பேசவில்லை. தொடர்ந்து பேசிய சிவா, “என் அம்மா மாதிரியே நானும் என் நிறுவனம் தான் முக்கியம்னு இருந்துட்டேன்” என்றான் வருத்தமான குரலில்.

“அப்படி எல்லாம் ஒன்னும் இல்லை சார். உங்களால் அங்கிருந்து வேலைகளை விட்டு வரவும் முடிஞ்சிருக்காது. இப்ப ஒன்னும் கெட்டுப் போகல. நீங்க கொஞ்சம் அமைதியா இருங்க. எல்லாம் நல்லா படியா நடக்கும்” என்று ஆறுதல் வார்த்தைகளைக் கூறினான் ராஜ்.

அதற்கு வெற்று சிரிப்பு ஒன்றை சிந்திய சிவா, “நிலவன் யாருன்னு உனக்கு நல்லா தெரிஞ்சும், என்னை நீ அமைதியா இருக்க சொல்ற பார்த்தியா!” என்றான்.

ராஜுக்கு நிலவனைப் பற்றி நன்றாகவே தெரியத்தான் செய்யும். இருந்தும் அவன் சிவாவின் நிலைமையை அறிந்து, அவனுக்கு ஆறுதலாக இருந்தான்.

“ஆனா சார், அப்படியே கல்யாணம் ஆகியிருந்தாலும், நாம ரோஜா மேடம்கிட்ட சொல்லி புரிய வைக்கலாம். நிலவனைப் பத்தி தெரிஞ்சா அவங்களே அவர் கூட போகமாட்டாங்க” என்றான் ராஜ்.

இங்க சிவாவும், அவனது ஆட்களும் வனரோஜாவை தீவிரமாக தேடிக்கொண்டு இருக்க, திருமணத்தைப் பதிவு செய்தக் கையோடு, வனரோஜாவைக் கூட்டிக்கொண்டு, தன் ஹெலிகாப்டர் மூலம் கேரளாவில் உள்ள தனித்தீவிற்கு சென்றிருந்தான் நிலவன்.
 

NNO7

Moderator
அத்தியாயம் – 8

ஹெலிகாப்டரில் இருந்து, ஜன்னல் வழியே கீழே பார்த்த வனரோஜா, தன் அருகே இருந்த நிலவனைப் பார்ப்பதும் வெளியே பார்பதுமாய் வந்தவள், தன் மனதில் இருந்த சந்தேகத்தை ஒரு வழியாக கேட்டாள்.

“நாம இதுலையே லண்டன் போறோமா? ஹாஸ்பிடலில் தான் என்னோட சான்றிதழ் இருக்கு. நான் இன்னும் அங்க இருந்து ரிலிவ் ஆகல” என்று ஏறியப்பிறகு அவனிடம் கூறிக்கொண்டிருந்தாள் சத்தமான குரலில்.

ஹெலிகாப்டர் சத்தத்தில் அவள் கத்தியது நிலவனுக்குப் புரியாமல் போக, அவளைப் பார்த்து, “எதுக்குக் கத்துற” என்று இவன் கத்த ஆரம்பித்தான்.

உயரத்தில் பறந்து கொண்டிருக்கும் போது, வனரோஜாவால், நிலவனிடம் பேச முடியவில்லை.

முதன் முதலாக ஹெலிகாப்டரில் பயணிக்கின்றாள் வனரோஜா. ஆனால் கீழே தெரிந்த அழகை அவளால் ரசிக்கமுடியவில்லை. தனது தாய் மற்றும் தந்தை இப்போது உயிரோடு இல்லை என்பதே அவளுக்குப் பேரிடியாக இருக்க, இதில் நிலவனிடம் கேட்க அவளுக்கு ஆயிரம் சந்தேகங்கள் இருந்தது.

ஹெலிகாப்டர் கடல் சார்ந்த இடத்தில் சென்று நிற்க, அதனைப் பார்த்ததுமே தெரிந்தது, அது தீவு என்று.

அதிலிருந்து இறங்கியதும், அவர்களை அழைத்துச் செல்ல மகிழுந்து தயார் நிலையில் இருந்தது.

மகிழுந்தில் ஏறியதுமே, “இங்க எதுக்காக என்னைக் கூட்டிட்டு வந்திருக்கீங்க? இது என்ன இடம்? நாம லண்டனுக்குத் தானே போறோம்னு சொன்னீங்க!” என்று அடுக்கடுக்காக கேள்வி அம்புகளை அவனை நோக்கி செலுத்தினாள் வனரோஜா.

அலைபேசியில் தன் பார்வையை பதித்து இருந்தவன், அவள் கேள்விகளில், ஒரு கணம் அவளைப் பார்த்துவிட்டு, திரும்பவும் தன் அலைபேசியைப் பார்த்தவன், “லண்டன் போறதுக்கு உனக்கு விசா இருக்குதா?” என்றான்.

அப்போது தான் அதனை உணர்ந்தவள், பின் நிமிர்ந்து அமர்ந்துவிட்டு, “அதுக்காக எதுக்கு இங்க கூட்டிட்டு வந்துருக்கீங்க?” என்றாள்.

“எனக்கு இங்க வேலை இருக்குது. இந்தத் தீவுல தான் ஒரு மாசம் இருக்கப்போறோம். இங்க இருக்கும் வரைக்கும் நீ என் கட்டுப்பாட்டில் தான் இருக்கணும். அதுக்குப் பிறகு விசா கிடைச்சதும், நீ லண்டன் போய் படி, வேலையைப் பாரு என்னவேணாலும் பண்ணு” என்று சொல்லி அவள் கேள்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தான்.

வனரோஜாவின் மனதில் ஏதோ சொல்லமுடியாத உறுத்தல் இருந்து கொண்டே தான் இருந்தது. இருந்தும், வாழ்க்கை இழுக்கும் இழுப்புக்கு சென்று கொண்டிருந்தாள், தன் வாழ்க்கையை இழுக்கும் கயிறு நிலவன் தான் என்பதனை அறியாமல்.

******

“என்னாச்சி இன்னுமா ஒன்னும் பண்ண முடியல” என்று கோபத்துடன் தன் ஆட்களைக் கத்திக் கொண்டு இருந்தான் சிவா.

“யாருக்கும் தெரியாம அரசாங்க உதவியுடன் தான் சார் தேடுனோம். ஆனா அவங்க எங்க போனாங்கன்னு எந்த ஒரு துப்பும் கிடைக்கல. அதனால் அவங்க நிச்சயம் ஏதாவது கடல் பகுதியில், கப்பல்ல தான் போயிக்கிட்டு இருக்கணும்” என்றான் ராஜ்.

பொதுவாக திருட்டுத்தனமாக கப்பலில் தப்பி செல்லும் கைதிகளைக் கூட பிடிக்க முடியாது. ஆனால் நிலவன் வனரோஜாவை அழைத்துச் சென்று இருப்பது என்னவோ ஒரு தீவிற்கு. அதனால் தான் அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.

சிவாவிற்கு அடுத்து என்ன செய்யவேண்டும் என்பதே தெரியவில்லை. மூளை மழுங்கியது போல் ஆனது அவனுக்கு. இருந்தும் அந்த நேரத்தில் உதவி வேண்டி தன் தாயைத் தான் அழைத்தது அவனது உள்ளம்.

ஆனால் பரணிக்கு ராஜ் பலமுறை அழைத்தும் அவர் அழைப்பை ஏற்கவில்லை.

“பரணி மேடம், மீட்டிங்ல இருப்பாங்க சார். அதனால தான் போனை எடுக்கல. இப்ப நாம என்ன செய்யுறது சார்” என்று சிவாவிடம் கேட்டான் ராஜ்.

தன் தலையைப் பிடித்துக் கொண்ட சிவா, திடீரென்று யோசனைக் கொண்டவனாக வேகமாக, நிலாவின் எண்ணிற்கு அழைத்தான்.

நீண்ட நேரம் கழித்து அழைப்பு முடியும் தருவாயில், அவன் அழைப்பை எடுத்துத் தன் காதில் வைத்தவள், “என்கிட்ட அந்த பேச்சு பேசுனீங்க திரும்பவும் எதுக்காக என்னைக் கூப்பிடுறீங்க” என்று முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டபடி கேட்டாள் நிலா.

தன் கோபத்தைக் கட்டுப்படுத்தி, தன் கண்களை அழுத்தமாக மூடித்திறந்தவன், “இப்ப உன் அண்ணன் எங்க இருக்கான். என் தங்கச்சியை எங்கையோ கடத்திட்டு போயிட்டான்” என்று கத்தினான்.

“இதுக்குத் தான் போன் பண்ணீங்களாக்கும்” என்று உதட்டை சுழித்தவள், “ஷேர் மார்கெட்ல தான் உங்களால என் அண்ணனை தோற்கடிக்க முடியல. இப்ப சாதாரண விஷயத்தில் கூட என் அண்ணன் கூட உங்களால மொத முடியல பார்த்தீங்களா. என்கிட்ட வந்து கத்துறீங்க” என்று சொல்லி சிரித்தவள், சிவாவை எவ்வளவு கேவலப்படுத்த முடியுமோ, அந்த அளவுக்கு மட்டம் தட்டிப் பேசினாள்.

அவள் பேசப்பேச, சிவாவின் கோபம் எல்லையைக் கடந்து கொண்டே தான் சென்றது. இருந்தும் அவளிடம் விஷயத்தை வாங்க பொறுமையை இழுத்துப் பிடித்து, “இங்கப்பாரு நிலா, உனக்கு உன் அண்ணன் எப்படியோ அப்படித் தான் என்னோட தங்கச்சி எனக்கு முக்கியம். என்ன தான் நாங்க சேர்ந்து வளரலைனாலும், சின்ன வயசுல கைக்குழந்தையா, என் கையில வாங்குன என் தங்கச்சி மேல நான் உயிரே வச்சிருக்கேன். நான் அவளை உடனே பார்க்கணும். தயவு செஞ்சி அவள் எங்க இருக்கான்னு எனக்கு சொல்லு” என்றான் கண்ணீர் மல்க.

இவ்வளவு நாள், தான் காதலித்த உயிர்க்காதலனின் குரல் அவள் நெஞ்சை பிசைய வைக்க, “என்னை மன்னிச்சிடுங்க சிவா. என் அண்ணன் எங்க இருக்கார்ன்னு எனக்குத் தெரியல. அவருக்குக் கால் போகமாட்டேங்குது. ரோஜாவைக் கல்யாணம் பண்ணி லண்டன் தான் கூட்டிட்டு வருவார்னு நினைச்சேன். ஆனா அவரைத் தொடர்புகொள்ளமுடியல” என்றாள்.

அதில் சிவாவிற்கு ஜிவ்வென்று ஏற, “ஏய், இங்கப்பாரு இப்ப மட்டும் நீ உன் அண்ணன் இருக்குற இடத்தை சொல்லல. உனக்கும் எனக்கும் நடுவுல எதுவுமே இல்ல” என்று யோசிக்காமல் வார்த்தைகளை விட்டான் சிவா.

அதில் அதிர்ந்த நிலா, “என்ன பேசுறோம்னு தெரியாம எதையாவது பேசாதீங்க சிவா. நான் முதல்லையே சொல்லிட்டேன், அண்ணன் எங்க இருக்காருன்னு எனக்கு சத்தியமா தெரியாது” என்று அவள் கண்டிப்பான குரலில் கூற,

தன் தலையைக் கோபத்தோடு மேலும் கீழும் ஆட்டியவன், “சரி. பிரேக் அப் பண்ணிக்கலாம்” என்று சாதரணமாக சொல்லிவிட்டு, தன் பத்து வருடக்காதலுக்கு முற்றுப்புள்ளி வைத்தான், சர்வ சாதரணமாக.

அதில் நிலாவிற்கு கோபம் வர அலைபேசியைத் தூக்கி எறிந்தவள், “சிவா...” என்று கத்திவிட்டு, அப்படியே மயங்கிச் சரிந்தாள்.

சிவாவின் அருகே இருந்த ராஜோ, “என்ன சார் இப்படி பேசிட்டீங்க. இப்ப கோபப்பட வேண்டிய நேரம் இல்லை சார்” என்றான் அவனது தோள்களை ஆதரவாகப் பற்றியபடி.

மூச்சை இழுத்து வெளியே விட்டவன், “அந்த சொத்து பத்திரத்துல என்ன இருக்குன்னு விவரமா பார்த்தியா நீ” என்று ராஜிடம் கேட்டான் சிவா.

“ஆமாம் சார். அன்னைக்கே உங்கக்கிட்ட சொன்னேனே. இதுக்காக நான் ரொம்ப கஷ்டப்பட்டேன் சார்” என்று சொல்லிக் கொண்டே தன் அலைபேசியை எடுத்த ராஜ், “இது தான் சார் அது” என்று அந்த உயில் பத்திரத்தை தான் புகைப்படம் எடுத்ததைக் காட்டினான்.

“வேண்டாம் ராஜ் அதைப் படிக்க வேண்டாம். அதுல இருக்குற ரோஜா சம்பந்தப்பட்டதை மட்டும் சொல்லு” என்றான் சிவா.

அலைபேசியை தன் முகத்திற்கு நேராக தூக்கிப்பிடித்த ராஜ், “சொத்து, பரணியின் ஒரே பொண்ணு வனரோஜாவுக்கு நிலவனுடன் கல்யாணம் ஆகி குழந்தைப் பிறந்தவுடன், அது வனரோஜா மற்றும் நிலவனின் கைக்குக் கிடைக்கும்னு இருக்கு சார். அதுவும் நிலவன் சார் வனரோஜாவைத் தான் கல்யாணம் பண்ணனும் அப்படி இல்லாத பட்சத்தில் மொத்த சொத்தும், வனரோஜாவுக்கு வேறு ஒருவருடன் குழந்தை பிறக்கும் பட்சத்தில், அந்த சொத்து மொத்தமும் வனரோஜா கைக்குக் கிடைக்கும்” என்று அதில் உள்ளதைப் படித்தவன், “வனரோஜா மேடம் பெயரில் இருக்குறதை அப்படியே நிலவன் சார் பெயரில் மாத்துற மாதிரி, அவர் எப்போதோ வனரோஜா மேடம் கிட்ட கையெழுத்து வாங்கி இருப்பார் சார். ஆனா குழந்தை பிறந்தாத் தான் சொத்துன்னு ரோஜா மேடம்க்கு தெரியாதா இருக்கும். அதுவும் இல்லாம நிலவன் சாருக்கு பத்திரத்துல எப்படி கோல்மால் பண்ணனும்னு நல்லாவே தெரியும். ரோஜா மேடமால் வக்கீல் இல்லாம தனியா படிச்சுப் பார்த்து புரிஞ்சிக்க முடியாது” என்று கூறி முடித்தான் ராஜ்.

“குழந்தை பிறக்குறதுக்கு செயற்கை கருத்தரிப்பு ஐவிஎப் இப்படி ஏதாவது யோசிப்பானா அவன்... ஆனா இதுக்கு எல்லாம் ரோஜா சம்மதிக்கமாட்டாளே! பிறகு எந்த நம்பிக்கையில் அவன் இப்படி எல்லாம் செய்யுறான். ஒருவேள என் தங்கச்சியை செயற்கை கருத்தரிப்புக்குக் கட்டாயப்படுத்துனா என்ன பண்றது” என்று புலம்ப ஆரம்பித்தான் சிவா.

இப்படி எல்லாம் யோசித்த சிவா மறந்தும், தவறாக எதுவும் யோசிக்கவில்லை. ஏனென்றால் நிலவனைப் பற்றி அவனுக்கு நன்றாகவே தெரியும். என்ன தான் பல பெண்கள் தன் மீது வந்து விழுந்து பழகிய போதும், அவர்களை எல்லாம் எட்டித் தள்ளி நிறுத்தியவன், வனரோஜாவை எதுவும் பலவந்தப்படுத்தப் போவது இல்லை. இதில் பரணியையும் அவர் குடும்பத்தையும் கண்டாலே நிலவனுக்கு ஆகாது. இவர்களைப் பார்க்கும் இடத்தில் எல்லாம், ஏதோ அசிங்கத்தைக் கண்டதைப் போல முகத்தை சுழிப்பான் நிலவன். இருந்தும் சிவாவின் மனதில் சிறிய பயம் இருக்கத் தான் செய்தது வனரோஜாவின் நலத்தினை நினைத்து.

“அதுக்குள்ள நாம கண்டுபிடிச்சிடலாம் சார். ஆனா நிலவன் சாரைப் பத்தி என்கிட்ட இன்னொரு ரகசியமும் இருக்கு” என்று சொல்லித் தன் தலையைச் சொறிந்தான் ராஜ்.

சிவா அவனைப் பார்க்க, அவனோ, “அது சார். இது வேற மேட்டர் சார். நிலவன் சாரோட பெர்சனல்..” என்று அதனை எப்படி சொல்வதென்று இழுத்தான் ராஜ்.

“டேய், தலைக்கு மேல வெள்ளம் போயிடுச்சி... என்னன்னு சொல்லித்தொலை” என்று கத்தினான் சிவா.

அதில் சுதாரித்தவன், “எல்லாரும் நினைக்குற மாதிரி நிலவன் சார்க்கு காதலின்னு யாரும் இல்ல சார். அது மட்டும் இல்லாம அவர்...” என்று தயங்கித் தயங்கி, “அவருக்குக் குழந்தையே பிறக்காது சார்” என்று விஷயத்தைப் போட்டு உடைத்தான்.

அதில் தன் கண்களை விரித்த சிவா, “என்ன சொல்ற? காதலி இருக்குன்னு பொய் சொல்றானா? அப்ப அவனுக்கு பசங்கலையா பிடிக்கும்? டேய் அப்ப அவன் கேயா?” என்று அதிர்ச்சியாகி கேட்டான்.

“அது என்னவோ தெரியல சார். ஆனா அவர் மோசமானவர் கிடையாது. அவர் கம்பெனி பத்தி ரகசியமா தேடும் போது தான், அவருக்குக் குழந்தையே பிறக்காதுன்னு ஒரு கோப்பைப் பார்த்து எனக்குத் தெரிஞ்சது” என்றான் ராஜ்.

அதில் சிவாவின் மனபாரம் சற்று நீங்க, இப்போது தான் அவனால் மூச்சு விடவே முடிந்தது, அவனால் தன் தங்கையைப் பலவந்தப்படுத்த முடியாது என்பதனை நினைத்து.

ராஜின் தோள்களில் தன் கையைப் போட்டவன், “நீ என்ன பண்ற, ரோஜா யாரைக் கல்யாணம் பண்ணாலும், அவளுக்குக் குழந்தை பிறந்ததும், நானே அவளிடம் அவனுக்கு உரிமையான சொத்தை வாங்கித் தரேன்னு, நான் சொன்னதா சொல்லி, அவனுக்கு மெயில் பண்ணு. அப்படியே நான் அவன் கூட பேசவும் ஏற்பாடு பண்ணு” என்றான்.

“ஆனா இதை எப்படி நிலவன் சார் நம்புவாரு? நீங்களும் உங்க தங்கச்சியும் இதுக்கு சரின்னு சொல்றீங்க அது மாதிரி ரோஜா மேடமைக் கல்யாணம் செய்யுறவரும் சரின்னு சொல்லணுமே! இதை நிலவன் சாரும் யோசிப்பார் இல்லையா!” என்று தன் சந்தேகத்தைக் கூறினான்.

அதில் எரிச்சல் அடைந்தவன், “இந்த நிலவன் ஒரு பைத்தியம்ன்னா அவன் தாத்தன் அதுக்கும் மேல பைத்தியமா இருக்கான். என்னோட தாத்தாக்கும் அறிவு இல்ல. ரோஜாவுக்குப் பிறக்கும் குழந்தை அவங்க வீட்டு வாரிசா தான் இருக்கணும்னு நினைச்சு தான் இப்படி லூசுத்தனமா உயில் எழுதி வச்சிருக்கார்” என்று தனக்குள் திட்டிக்கொண்டவன்,

“நான் அவன் கூட பேசுறேன். நீ ஆகவேண்டியதைப் பாரு” என்றான்.

“சரி” என்ற ராஜ், “ஆனா நிலவனோட தாத்தா எதுக்காக இப்படி பண்ணாரு சார்” என்று தன் சந்தேகத்தைக் கேட்டான்.

“அவர் சம்பாதிச்ச சொத்துல என் அம்மாவுக்கும், என் தாத்தாவுக்கும் பங்கு இருக்கு. அதைத் தான் அவர் இப்படி ஒரு வலை செஞ்சி மாட்டிவச்சிருக்காரு. அது ஒரு பெரிய கதை. சரி நீ ஆகா வேண்டிய வேலையைப்பாரு” என்று சொல்லி ராஜை அனுப்பி வைத்தான்.

‘நிலவனுடன் நான் பேசினால் அனைத்தும் சுபமாக முடிந்துவிடும். என் தங்கையும் என்னிடம் வந்துவிடுவாள்’ என்று தன்னுள் நினைத்துக்கொண்டிருந்த சிவாவிற்கு நிலவன் வனரோஜாவுடன் தீவில் என்ன செய்துகொண்டிருக்கின்றான் என்பது எங்கே தெரியப்போகிறது.

ஆம் இங்கே, தீவில் தன் படுக்கை அறையில், ஆழமாக, வனரோஜாவின் இதழில் தன் இதழைப் பொருத்தி சுவைத்துக் கொண்டிருந்தான் நிலவன். அவனுக்குச் சற்றும் குறைவில்லாமல் அவனது கழுத்தைப் பிடித்துத் தன்னுள் இழுத்து அவனுள் புதைந்து போய்க்கொண்டிருந்தாள் வனரோஜா. (இது கனவாகக் கூட இருக்கலாம்.... ஏமாந்தால் கம்பெனி பொறுப்பாகாது)
 

NNO7

Moderator
அத்தியாயம் – 9

யாரும் இல்லாத அந்த தனித்தீவில், ஒரு சின்ன பங்களா கம்பீரமாக நின்று கொண்டிருந்தது. அதனைச் சுற்றி பேரீச்சை மரங்களும் அதன் ஊடே தென்னை மரங்களும், அழகாக கையசைத்து பார்ப்பவரை வரவேற்பது போல் இருந்தது.

நிலவனின் மகிழுந்து அந்த பங்களாவினுள் சென்று நின்றது. அந்த வீட்டைப் பார்த்துக் கொண்டே மகிழுந்தில் இருந்து இறங்கிய வனரோஜா, “ஒரு மாசமும் வெட்டியா இங்க இருந்து நான் என்ன பண்றது? நான் என் ஹாஸ்டலுக்கே திரும்பப் போறேன். விசா வந்ததும் லண்டன் வரேன். இப்போவே என்னைக் கொண்டு போய் விடுங்க” என்று அடம்பிடிக்க ஆரம்பித்தாள்.

அதில் தன் கண்களை உருட்டி அவளை முறைத்த நிலவன், “கான்ட்ராக்ட்ல என்ன இருந்ததுன்னு நீ மறந்து போயிட்டியா? நீ என்னோட மனைவி என்னோட தான் நீ இருக்கணும். மத்தபடி உன்னோட தனிமையில் நான் தலையிடமாட்டேன். ஆனா நீ இங்க இருந்து போகணும்னு நினைச்சா இப்பவே பத்து கோடி ரூபாயை எடுத்து வச்சிடு” என்றான் ஆங்காரமான குரலில்.

அவன் குரலின் பேதத்தில் பயந்து போன வனரோஜா, “ஐயோ நான் அப்படி சொல்லலைங்க. இங்க எப்படி வேலை செய்யாம, இப்படி ஒரே இடத்துல ஒரு மாசம் இருக்குறது! அதுக்குத் தான் சொன்னேன்” என்றாள் வெளிறிப்போன முகத்துடன்.

தன் முன்னால் இருந்த அந்த சிறிய பங்களாவை, அவளிடம் காட்டி, “இங்க வேலைக்காரங்க யாரும் கிடையாது” என்று சொல்லிவிட்டு உள்ளே நுழைந்தான்.

அவன் சொன்னதன் அர்த்தம் அப்போது தான் அவளுக்குப் புரிய, “என்ன? இப்ப என்ன சொல்ல வரீங்க? நான் என் படிப்புக்கு தகுந்த வேலையைத் தான் பார்ப்பேன்” என்று மூச்சு வாங்கக் கத்திக் கொண்டே அவனின் பின்னால் ஓடினாள் வனரோஜா.

நடுக்கூடத்திற்கு சென்று நின்றவன், பின்னால் திரும்பி பார்ப்பதற்குள், அவனது முதுகில் மோதிய வனரோஜா கீழே விழப்போக, அவளின் இடையை வளைத்துப் பிடித்துக் கொண்டான் நிலவன்.

அந்த கணத்தில் இருவரின் கண்களும் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டன. எல்லாம் நொடிப் பொழுது மட்டும் தான். அதில் இருந்து வேகமாக மீண்ட நிலவன், கோபப்பார்வையுடன், “ஒழுங்கா நடக்கக்கூட உனக்குத் தெரியாதா?” என்று கத்தினான்.

அவனில் இருந்து தள்ளி நின்றவள், “மன்னிச்சிடுங்க. என்னோட தப்பு தான். ஆனா அதுக்காக உங்க அடிமை மாதிரி என்னை நடத்தாதீங்க” என்றாள் கண்டிப்பான குரலில்.

அதற்கு எதுவும் பேசாதவன், தன் காற்சட்டைப் பையில் இருந்து, கிட்டத்தட்ட பத்து சவரன் எடை கொண்ட பொன் தாலியை எடுத்து, வனரோஜா என்னவென்று சுதாரிப்பதற்குள் அதனை அவள் கழுத்தில் அணிந்தான்.

தன் கழுத்தில் நிலவன், எதை அணிவிக்கின்றான், என்று வேகமாக தன் கழுத்தை அவள் தடவ, அது சங்கிலி என்று அறிந்ததும், தன் நெஞ்சில் தொங்கிய மாங்கல்யத்தை கையில் எடுத்தவள், அதிர்ந்த குரலில், “என்னது இது” என்று நிலவனைப் பார்த்துக் கேட்டாள்.

“நம்ம அக்ரீமென்ட் முடியுற வரைக்கும் இது உன் கழுத்தில் தான் இருக்கணும். என்ன தான் டாக்குமென்ட்ஸ்ல திருமண பந்தத்தில் நாம ரெண்டு பேரும் இணைந்து இருந்தாலும், என் தாத்தா சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு இது தெரியணும். அதுக்காகத் தான் இது” என்றான் அவள் கழுத்தில் தொங்கிக்கொண்டு இருந்த தாலியைக் காட்டி.

“ஆனா இதெல்லாம் போட்டு எனக்குப் பழக்கம் இல்லை. இவ்வளவு பெரிய செயின் போட்டுக்கிட்டு, என்னால என் வேலையைப் பார்க்க முடியாது” என்றாள் வனரோஜா.

“ரெண்டு வருஷம் எனக்கு மனைவியா இருக்கேன்னு ஒத்துக்கிட்டு கையெழுத்துப் போட்டு இருக்க... இதைப் போட்டா தான் கல்யாணம் ஆன பொண்ணு மாதிரி தெரிவ” என்றான் தன் மணிக்கட்டில் கட்டியிருந்த கைக்கடிகாரத்தைக் கழட்டியபடி.

அவன் நின்ற தோரணையும், அவன் அதனைக் கழட்டிய விதத்தையும் பார்த்து, ‘இவன் அழகன் தான்’ என்று வனரோஜாவின் மனது உள்ளுக்குள் சொல்லிக் கொண்டது.

இப்போது அவளைத் திரும்பிப் பார்த்த நிலவன், “என்ன பேச்சக் காணோம்?” என்றான்.

அதில் பதறியவள், “ஆங்... இல்ல கொஞ்சம் சின்ன செயினா இருந்தா நல்லா இருக்கும்” என்றாள் தன் கைகளைப் பிசைந்தபடி.

தன் ஒரு புருவத்தை மட்டும் உயர்த்தி அவளைப் பார்த்தவன், “சிறுசா வேணுமா? அப்ப பத்து கோடியை இப்பவே எடுத்து வை...” என்று சொல்லும் போதே, “இல்ல இல்ல... அப்படி இருந்தா நல்லா இருக்கும்னு சொன்னேன் வேற ஒன்னும் இல்ல” என்றவள், அருகில் இருந்த அறையைக் காட்டி, “நான் இந்த ரூம்ல தங்கிக்கவா?” என்று அவனிடம் அனுமதி வேண்டினாள்.

அவனது தலை மெதுவாக ஆட, வேகமாக அதில் புகுந்து, கதவை அடைத்தாள்.

பின் அந்த அறையின் கதவில் சாய்ந்து நிம்மதி பெருமூச்சு விட்டவள், ‘இந்த இடத்தைப் பார்க்கவே பயமா இருக்கு. இவன் ஒரு வேளை பேசுற மாதிரி பேசி என்னைக் கடத்தி தான் கூட்டிட்டு வந்துட்டானோ’ என்று நெஞ்சைப் பிடித்தபடி யோசித்தாள்.

ஒரு வேகத்தில் தான், அவன் சொன்னதற்கு எல்லாம் சம்மதித்து இங்கே வந்தாள். ஆனால் அவளின் அலைப்பாயும் மனதோ, இப்போது வேறு மாதிரி யோசிக்க ஆரம்பித்தது.

‘அச்சோ! நான் தப்பு பண்ணிட்டேனோ! சந்தியாக்கிட்ட இதைப் பத்தி பேசலாம்’ என்று நினைத்தபடி, தன் தோழிக்கு அலைப்பேசி மூலம் அழைப்பு விடுத்தாள்.

ஆனால் அந்த அழைப்பு தான் செல்லவே இல்லை. அவள் இருக்கும் இடத்தில் சரியாக டவரும் கிடைக்கவில்லை.

வெறும் 2ஜி மட்டும் தான் காட்டியது அவளின் அலைபேசி. அதில் வாட்ஸ்அப்பை எடுத்து, சந்தியாவிற்கு செய்தி அனுப்பிவைத்தாள் வனரோஜா.

ஐந்து நிமிடங்களுக்குப் பிறகே செய்தி சென்றுவிட்டதாக, ஒரு டிக் காட்டியது. சந்தியா இருப்பதும் டவர் வசதி இல்லாத ஒரு குக்கிராமத்தில். அதனால் இவள் அனுப்பிய செய்தியை அவள் பார்க்கவில்லை.

பின் என்ன செய்வது என்று, தன் உடைமைகளை அலமாரியில் எடுத்து வைத்தபடி யோசனை செய்தவள், நிலவனின் பேச்சில் ஏதாவது தென்படுகிறதா என்று பார்ப்போம் என்ற எண்ணத்தோடு, வெளியே சென்றாள்.

வனரோஜா வரும் போதே தன் உடைமைகளுடன் தான் வந்தாள். ஆனால் மருத்துவமனையில் இருந்து அவள் முறையாக வெளியேறி தன் சான்றிதழ்கள் எதையும் பெறவில்லை. அதற்கான ஏற்பாட்டை எல்லாம், தான் பார்த்துக்கொள்வதாக அவளுக்கு உறுதியளித்து இருந்தான் நிலவன்.

அந்த வீட்டின் நடுக்கூடத்திற்கு அருகிலையே ஒரு கண்ணாடி தடுப்பு போல் அமைத்திருந்தது. அதற்குப் பின்னால் சிறிய அளவில் நீச்சல் குளம் இருந்தது.

அதன் அருகிலையே இருக்கைகள் இருக்க, அங்கே தான், சாய்ந்த வாக்கில் தன் கண்களை மூடி அமர்ந்திருந்தான் நிலவன்.

வனரோஜாவின் காலடி சத்தத்தைக் கேட்டு, தன் கண்களைத் திறக்காமலையே, “எதுக்காக என்னைத் தேடி வந்துருக்க?” என்றான்.

“இங்க டவர் சரியா கிடைக்க மாட்டேங்குது. என் தோழிக்கிட்ட நான் பேசணும்” என்றாள் அவன் அருகே இருந்த இருக்கையில் அமர்ந்தபடி.

“எனக்கும் தான் லண்டனுக்கு கால் பண்ணவேண்டியது இருக்கு. முக்கியமான மீட்டிங் எல்லாத்தையும் விட்டுட்டு இங்க உட்காந்துட்டு இருக்கேன். உனக்கும் என்னை மாதிரியே அவசர மீட்டிங் இருக்கா?” என்று அவள் கேள்விக்கு பதில் அளிக்காமல், அவள் பேச்சை திசை திருப்ப வேண்டி எதையோ பேசினான்.

அதற்கு மறுப்பாக தன் தலையை ஆட்டியவள், “இந்த இடத்துல உங்களுக்கு அப்படி என்ன வேலை இருக்கு” என்ற வனரோஜாவின் கேள்வியில் தன் கண்களைத் திறந்தவன், “இந்தத் தீவை சுத்தி நிறையா கிராமங்கள் இருக்கு. இந்த இடத்துல, நான் கட்டப்போற ஹாஸ்பிடல் எல்லாத்தும் மையப்புள்ளியா இருக்கும். இந்த வீடு என் அப்பா கட்டினது தான். அடிக்கடி இங்க தான் வருவேன். யாருமே இல்லாத இந்த இடத்தின் தனிமை எனக்கு ரொம்பவே பிடிக்கும்” என்று எதற்காக இதனை இவளிடம் சொல்கின்றோம் என்று தெரியாமலையே சொல்லிக்கொண்டு இருந்தான்.

அவன் பேச்சில் உண்மை தெரிந்தாலும், அந்த வீட்டில் அவனுடன் உண்டான தனிமை அவளைப் பயம் கொள்ள வைக்க, “ஆனா எனக்கு இங்க இருக்க சுத்தமா பிடிக்கலை சார்” என்றாள் வனரோஜா.

அதற்கு முகத்தை சுழித்தவன், “மறுபடியும் முதல்ல இருந்து ஆரம்பிக்காத வனரோஜா. உன்கிட்ட சொல்லவேண்டியதை எல்லாம் நான் சொல்லிட்டேன்” என்றான் கண்டிப்பான குரலில்.

“ஆனா சார்...” என்று அவள் இழுக்க, “போடுற வேஷத்துக்கு தகுந்த மாதிரி முதல்ல நடிக்கக் கத்துக்கோ” என்றவன் ஒரு கணம் நிறுத்தி, “என்னை சார்ன்னு கூப்பிடாத, நிலவன்னு சொல்லியே கூப்பிடு” என்றான் கறாரான குரலில்.

‘ஆமாம் ஆமாம் சார்ன்னு கூப்பிட்டா பார்க்குறவங்களுக்கு நான் உங்களுக்கு இரண்டு வருஷத்துக்கு மட்டும் மனைவியா வேலை பார்க்க வந்துருக்கேன்னு தெரிஞ்சிடுமே’ என்று தன் மனதினுள் மட்டும் நினைத்துக் கொண்டாள்.

“சரி இது எந்த இடம்? இது தமிழ்நாடு தானா?” என்று அவனிடம் பேச்சை வளர்த்தாள்.

இப்போது தன் இருக்கையில் இருந்து நன்றாக நிமிர்ந்து அமர்ந்தவன், “நீ எதுக்காக இப்படி சுத்தி வளைச்சி கேட்க்குறன்னு எனக்கு நல்லாவே தெரியுது. கவலைப்படாத உன்னைக் கடத்தி, என்னால ஊறுகாய் கூட போட முடியாது. நான் கதைகளில் வரும் மாபியாவும் கிடையாது. உனக்காக மட்டும் தான் நான் இங்க வந்து உட்காந்துக்கிட்டு இருக்கேன்” என்று சொல்லி நிறுத்தினான்.

அதில் அவள் புருவம் முடிச்சிட, “எனக்காகவா? உங்களுக்குத் தானே சொத்து வேணும். இப்ப எனக்காகன்னு சொல்றீங்க?” என்றாள் கண்கள் இடுங்கியபடி.

“உன் உயிருக்கு தான் ஆபத்து இருக்கு எனக்கு இல்ல” என்று சொல்லி அவளைக் குழப்பினான்.

அதில் வனரோஜாவின் நினைப்பு சென்றது என்னவோ அவளின் வளர்ப்பு பெற்றோர்கள் மீது தான்.

தன் நினைப்பு செல்லும் திசையை உணர்ந்தவள், ‘இல்ல இல்ல.. அவங்க அந்த அளவுக்கு மோசமா போகமாட்டாங்க’ என்று தன் மனதிற்குள் நினைத்தவள், அவனிடம், “என் உயிருக்கு அப்படி என்ன ஆபத்து வரப்போகுது” என்றாள் புரியாத குரலில்.

“உன் அம்மா அப்பா உயிரோட இல்லை தான். ஆனா உனக்கு அண்ணன்னு ஒருத்தன் உயிரோட தான் இருக்கான்” என்று அவன் சொல்லும் போதே, முகம் தெரியாத அண்ணனை நினைத்து அவள் கண்களில் நீர் சுரக்க ஆரம்பித்தது.

அது தந்த அதிர்வில் வேகமாக இருக்கையில் இருந்து எழுந்தவள், நிலவனுக்கு முன்னால் தரையில் அமர்ந்து, “என்ன சொல்றீங்க? இதை எதுக்கு என்கிட்ட அப்பவே சொல்லலா? நான் இப்பவே அவரைப் பார்க்கணும். என்னை அவர்கிட்ட கூட்டிட்டுப் போங்க” என்று சொல்லி சிறுகுழந்தை போல் கண்ணைக் கசக்க ஆரம்பித்தாள்.

அதில் தன் நெற்றியை நீவிவிட்டவன் “இதுக்குத் தான் உன்கிட்ட நான் சொல்லலை” என்ற பதிலில் கலவரம் அடைந்தவள், தன் அண்ணனுக்கு ஏதோ ஆகிவிட்டது போல என்ற பதற்றத்தில், “ப்ளீஸ் அவருக்கு என்ன சீக்கிரம் சொல்லுங்க” என்று அவனை அவசரப்படுத்தினாள்.

“அவனுக்கு என்ன? அவன் நல்லாத் தான் இருக்கான். உன்னைத் தான் தேடிக்கிட்டு இருக்கான். உன்னைக் கொலை பண்றதுக்கு” என்று மீண்டும் தன் வார்த்தைகள் என்னும் தூண்டிலை வீசினான்.












 

NNO7

Moderator
அத்தியாயம் – 10

நிலவன் சொன்ன வார்த்தைகளைக் கேட்டு பேச்சற்று தான் போனாள் வனரோஜா.

தொடந்து பேசிய நிலவன், “நான் செய்றதை எல்லாம் பார்க்கும் போது, நான் உன் கண்களுக்கு வில்லன் போலத் தான் தெரிவேன். உண்மையை சொல்லப்போனா, நான் உன்னைப் பாதுகாக்கத் தான் இங்க கூட்டிட்டு வந்துருக்கேன். எனக்கும் இங்க சில வேலை இருக்கு. அவன் உன்னைத் தேடி இந்தியாவுக்கே வந்துட்டான். நீ என்கூட இருக்குறது மட்டும் தான் உனக்குப் பாதுகாப்பு” என்று மிகவும் கைதேர்ந்த நடிகன் போலவே பேசி அவளை நம்பவும் வைத்தான்.

ஏற்கனவே, அவளைச் சுற்றி பலர், அவளை நம்ப வைத்து ஏமாற்றி இருக்க, தன்னைப் பெற்று எடுத்தவர்களைப் பற்றி நிலவனுக்குத் தெரிந்து இருந்ததால், அவனையும் நம்பத்தான் செய்தாள். ஆனால் இதெல்லாம் பொய் என்று அறியும் போது அவள் மனம் தான் என்ன பாடுபடப் போகின்றதோ!

“ஆனா ஏன்? அவர் யாருன்னே எனக்குத் தெரியாது. அப்படி இருக்க, அவர் ஏன் என்னைக் கொலை செய்ய நினைக்கணும்?” என்று கண்களைத் துடைத்தபடிக் கேட்டாள் வனரோஜா.

“உன்னோட அம்மா அப்பாவுக்கு கொஞ்சம் சொத்து இருக்கு. அது எல்லாமே தன்னோட கைக்கு வரணும்னு அவன் நினைக்குறான். நீ உயிரோட இருக்குறது அவனுக்கு இடைஞ்சலா இருக்குது போல. ஆனா நல்ல வேளை அவனுக்கு முன்னாடி நான் உன்னைக் கண்டுபிடிச்சிட்டேன்” என்றான் அவள் மேல் அக்கறையாக இருப்பது போல்.

நிலவன் இது போல் எல்லாம் யாரிடமும் அவர்கள் நலன் வேண்டி பேசியது இல்லை. இப்போது அவன் பேசுவது கூட நடிப்பு தான். அவன் இந்த உலகத்தில் அக்கறை கொள்ளும் ஒரே நபர், அவனது தங்கை நிலா மட்டும் தான். இப்போது, காரியம் ஆகவேண்டி வனரோஜாவின் முன் நன்றாக நடித்தான்.

தன் உடன்பிறந்த அண்ணனைப் பற்றி நிலவன் சொன்னதை நம்பாதவள், “இல்ல... நீங்க சொல்றதை என்னால நம்ப முடியாது. என்னோட அண்ணனை நான் பார்க்கணும்” என்று மறுபடியும் முன்பு சொன்னவற்றையே கூறிக்கொண்டிருந்தாள்.

இவள் இது போல் எல்லாம் பேசுவாள் என்று நினைத்து இருந்த நிலவனோ, “பைத்தியம் மாதிரி பேசாத. அவன் சாதாரண ஆள் கிடையாது. லண்டன்ல கடத்தல் தொழில் பண்ணிக்கிட்டு இருக்கான். நான் உன்னை உன் ஹாஸ்பிடலில் பார்த்த அன்னைக்குத் தான், அவனோட ஆட்கள் உன்னைப் பாலோ பண்ணிக்கிட்டு இருந்தாங்க. இதுக்கும் மேல உன்னைத் தனியாவிட்டா ஆபத்துன்னு நினைச்சு தான், உன்னை நான் அங்கிருந்து இங்க அழைத்து வந்தேன்” என்றான் அவன்.

ஆனால் இது எதையும் காதில் வாங்காமல் தன் பிடியில் நின்ற வனரோஜா, “எனக்கு அந்த சொத்து எல்லாம் தேவை இல்லைன்னு நான் அவருக்குப் புரிய வைக்குறேன். நீங்க சொல்றதுக்கு முன்னாடி வரைக்குமே எனக்கு இப்படி ஒரு அண்ணன் இருக்காருன்னு தெரியாது. ஆனா நீங்க சொன்ன இந்த நிமிஷமே, அவரைப் பார்க்கணும்னு என் மனசு சொல்லுது. ஏதோ ஒரு சொல்ல முடியாத மகிழ்ச்சியா வேற இருக்கு. நான் பேசுனா அண்ணன் நிச்சயம் கேட்பாருன்னு நம்புறேன். என்னை எப்படியாவது அவர் கூட பேசவையுங்க” என்றாள் கண் கலங்கியபடி.

தன் தலையை அழுந்த கோதிவிட்டு அவளைப் பார்த்தவன், “நான் சொல்றது உன் மரமண்டைக்கு ஏறுச்சா இல்லையா! அவன் சாதாரண மனுஷன் கிடையாது, கொஞ்சமும் யோசிக்காம மனிதர்களை சுட்டுத்தள்ளிட்டு போய்க்கிட்டே இருப்பான். அவன்கிட்ட உன் செண்டிமெண்ட் எல்லாம் வேலை செய்யாது” என்றவன் தன் இரண்டு விரலைக் காட்டி, “ரெண்டு வருஷம் உன்னை பாதுகாப்பா பார்த்துக்க வேண்டியது என் பொறுப்பு. அதனால அண்ணனப் பார்க்கணும் நோண்ணனப் பார்க்கணும்னு என் உயிரை வாங்காத. நீ நம்ம ஹாஸ்பிடல்ல தான் வோர்க் பண்ணப்போற, அதனால உன் பாதுகாப்புக்கு எந்த வித பிரச்சனையும் இல்ல. என்னை மீறி அவனால் உன்னை நெருங்க முடியாது” என்றான்.

அதற்கு அமைதியாக இருந்தவள், மெதுவாக தன் வாயைத் திறந்து, “ரெண்டு வருஷத்துக்குப் பிறகு என்னோட உயிர்போனா பரவாயில்லையா?” என்றாள் உள்ளே போனக்குரலில்.

“இல்லை தான்” என்று தன் தோள்களைக் குலுக்கி அசால்ட்டாகக் கூறினான்.

அதில் அவள் முகம் வாடுவதைப் பார்த்து, வேகமாக, “எதுக்காக இப்ப முகத்தை இப்படி வச்சிருக்க? எனக்குக் கூட தான் பாதுகாப்பு இல்ல. எனக்கு தொழிலில் எதிரிகள் ஜாஸ்தி தான். அதுக்காக என்னை யாராவது பாதுகாக்கணும்னு நான் என்னைக்குமே நினைச்சது இல்ல. கிட்டத்தட்ட உன்னை மாதிரி தான் நானும் எனக்கும் அம்மா அப்பா கிடையாது” என்றான் அவளுக்குப் புரியவைக்கும் நோக்கில்.

தன் தலையை ஆட்டியவள், “எனக்குப் புரியுது. இவ்வளவு பட்டும் எனக்கு புத்தி வரல. எனக்காக யாராவது வரமாட்டங்கலான்னு மனம் யோசிக்குது. ஆனா இன்னொரு தடவை காதலில் நிச்சயம் விழமாட்டேன்” என்றாள் வனரோஜா.

“இப்படி நினைக்குறது ஒன்னும் தப்பு இல்லை வனரோஜா. ஆனா அப்படிப்பட்ட நல்லவங்க உலகத்துல ரொம்ப கம்மி. சரி நீ இப்படி எல்லாம் யோசிக்குறதுனால நான் உனக்கு ஒரு ஐடியா சொல்றேன், நீ ஏன் ஐவிஎப் மூலம் ஒரு குழந்தை பெத்துக்கக்கூடாது?” என்று சாமார்த்தியமாக பேசி, தன் அடுத்தக் காயை நகற்றினான்.

அவனது தாக்குதலில் இருந்து, வனரோஜா சாமர்த்தியமாக தப்பிப்பாளா? அல்லது அதில் சிக்கி சின்னாபின்னமாகப் போகின்றாளா?

“ச்சீ... என்ன பேசுறீங்க? என் வாழ்க்கையில் நான் சாதிக்க வேண்டியது இன்னும் நிறையா இருக்கு” என்று சொல்லிவிட்டு, அங்கிருந்து எழுந்து செல்லப்பார்த்தவளின் கையைப்பிடித்து, “நான் பேசிக்கிட்டு இருக்கும் போதே, எங்கப்போற? இது மாதிரி மரியாதை குறைவா நடந்துக்கிட்டா எனக்குப் பிடிக்காது” என்று அவளைக் கட்டாயப்படுத்தி, தன் அருகில் அமர்ந்திக்கொண்டான்.

ஒரு நபர் அமரும் அந்த இருக்கையில் நிலவனுக்கு அருகே, கிட்டத்தட்ட அவன் மீது மொத்தமாக சாய்ந்தபடி அமர்ந்திருந்த வனரோஜாவுக்கு ஏதோ போல் இருக்க, பதற்றத்துடன், “நான் அங்க உட்கார்ந்துக்கிட்டா?” என்று, பக்கத்தில் இருக்கும் இருக்கையைக் காட்டி சின்னக் குரலில் கேட்டாள்.

அவள் இதுநாள் வரையிலும், எந்த ஒரு ஆண்மகனிடமும் இவ்வளவு நெருக்கமாக அமர்ந்தது இல்லை.

“அதெல்லாம் வேண்டாம் இங்கயே உட்கார்ந்து எனக்கு பதில் சொல்லு” என்று சொன்னவன் அவள் கையை விடவே இல்லை.

“அதான்... சொல்லிட்டேனே!” என்றாள் திக்கித்திணறியக் குரலில்.

“சரி. ஆனா உனக்குன்னு ஒரு குழந்தை இருக்குறது நல்லது தான். லண்டன்ல நம்ம ஹாஸ்பிடலுக்கு நிறையா ஸ்பெர்ம் டோனர்ஸ் கூட வருவாங்க. உனக்கு ஓகேன்னா என்கிட்ட சொல்லு. நம்ம ஹாஸ்பிடல்ல அதுக்கான வசதி எல்லாம் இருக்கு” என்று அவன் சொல்லிக் கொண்டு இருக்கும் போதே, தன்னையும் அறியாமல், அவன் உதட்டின் மீது கைவைத்தவள், “இல்ல வேண்டாம்” என்று சொல்லிவிட்டு தான், தன் செயலை உணர்ந்து, அவனது உதட்டில் இருந்த தன் கையைத் தன்னுள் இழுத்துக் கொண்டு தலையைக் குனிந்து கொண்டவள், “மன்னிச்சிடுங்க... என்கிட்ட இது மாதிரி பேசாதீங்க” என்று சொல்லி அந்த வாக்கியங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பார்த்தாள்.

ஆனால் நிலவன் அதனை விட வேண்டுமே. இதனை நிறைவேற்றத்தானே, அவன் இங்கு வரவே செய்து இருக்கான்.

“நீ டாக்டர் தானே! உன்னோட துறையில் இதெல்லாம் சாதாரணம் தானே! பின்ன எதுக்காக பிற்போக்குவாதிகள் மாதிரி பேசுற?” என்றான் நிலவன்.

“எனக்குத் தெரியும் நிலவன். ஆனா நீங்க நினைக்குற மாதிரி அது சின்ன ப்ராசஸ் கிடையாது” என்று அவனுக்குப் புரியவைக்க நினைத்தாள்.

“லண்டன்ல அது போல் எல்லாம் எதுவும் கிடையாது. நீ இப்பவே ட்ரீட்மெண்ட் எடுக்க ஆரம்பிச்சா, இந்த கான்ட்ராக்ட் முடியுறதுக்குள்ள உனக்கு பேபி வந்திடும், பிறகு நீ அதைக் கூட்டிட்டு இந்தியா போயிடலாம். நானும் உனக்கு செட்டில் பண்ணிடுவேன். நல்லா யோசி உனக்குன்னு ஒரு உறவு வேண்டாமா?” என்று அவளைக் குழப்ப ஆரம்பித்தான்.

ஆனால் வனரோஜா தன் முடிவில் உறுதியாக இருந்தாள். “குழந்தையைப் பத்தி நான் எதுவும் யோசிக்கல. நான் ஒரு மருத்துவர். ஒரு குழந்தைக்கு தாய் மட்டும் இல்ல தந்தையும் நிச்சயம் வேணும். என் ஒருத்தி சுயநலத்திற்காக, இது போல் பண்ணா அது குழந்தைக்கும் நல்லது இல்ல. உங்க அக்கறைக்கு ரொம்ப நன்றி நிலவன்” என்று முகத்தில் அடித்தது போல் கூறிவிட்டு, வேகமாக அங்கிருந்து சென்றாள் வனரோஜா.

செல்லும் வனரோஜாவின் முதுகைப் பார்த்துக் கொண்டிருந்த நிலவன், ‘என்னைத் தாண்டி நீ எங்க போயிடப்போற? நீயே உன் வாயால் ஐவிஎப் ட்ரீட்மென்ட் எடுக்கணும்னு என்கிட்ட வந்து கேட்ப... அந்த நிலைமையை உனக்கு நான் உருவாக்கித் தருவேன்’ என்று தன் மனதினுள் வன்மமாய் நினைத்துக் கொண்டான் நிலவன்.

இதுநாள் வரைக்குமே, தான் நினைத்ததை எல்லாம் நடத்திக்கொண்டு தான் வருகின்றான் நிலவன். வனரோஜாவின் விஷயத்திலும் அது தான் நடந்து கொண்டிருந்தது. இனிமேலும் அது நடக்குமா? தான் நினைத்ததை எல்லாம் நடத்திக்காட்ட, நிலவன் ஒன்னும் கடவுளோ! அல்லது கதைகளில் வரும், எவராலும் தோற்கடிக்க முடியாத கதாநாயகனோ அல்லவே!

*****

“எனக்கு ஒன்னும் தேவை இல்லைன்னு சொல்லிட்டு, சார் தான் இங்க இருந்து போயிட்டீங்களே! இப்ப நீங்க சிஇஓ கிடையாது மிஸ்டர் சிவா” என்று மரியாதையான அழைப்பில் நக்கல் தொணித்தக் குரலில் தன் மகனிடம் அலைபேசி வாயிலாக உரையாடிக்கொண்டு இருந்தார் பரணி.

உடனே சுற்றி வளைக்காமல் நேரடியாக விஷயத்திற்கு வந்த சிவா, “அம்மா, நம்ம ரோஜாவ, அந்த நிலவன் எங்கையோ கடத்திட்டு போயிட்டான்ம்மா” என்றான் பொழிவிழந்த குரலில்.

அதில் பரணியின் கண்கள் அதிர்ச்சியில் விரிய, “என்ன பேசுற நீ? நிலவன் எதுக்காக அந்த மாதிரி செய்யணும்? நான் ரோஜாவை இங்க கூட்டிட்டு வரணும்னு நீ ஏதாவது நாடகம் போடுறியா சிவா? என்றார் கோபம் கலந்த குரலில்.

அதில் தன் பல்லைக் கடித்தவன், “ஆமாம் எனக்கு இது தான் வேலை பாருங்க... அந்தக் கிழவன் அதான் அந்த நிலவனோட தாத்தன் சொத்துல ஏதோ எழுதி வச்சிருக்கான்..” என்று சொல்லும் போதே, “பெரியவங்களை எப்படி பேசணும்னு நான் உனக்கு சொல்லித்தரலையா சிவா” என்றார் கண்டிப்புடன்.

“அம்மா, அதெல்லாம் இப்ப தேவையில்லாதது... ஏதாவது பண்ணுங்க. ரோஜா நிலவன் கஸ்டடியில் இருக்கா” என்று அவன் இந்தப்பக்கம் கத்த, பரணியின் மனது பிசையத் துவங்கியது.

இந்தியா செல்வதற்கு முன்னால் சிவா, இவரிடம் சொல்லிச்சென்ற வார்த்தைகள் அவரின் முன்னால் வந்து நிற்க, தன் நெஞ்சைப் பிடித்தவர், ‘அவரும் உயிரோட இல்ல... வயசு பொண்ணு காணாமப் போனா, அவர் குடும்பத்துல இருக்குறவங்க இனி அவளை வாழவே விட மாட்டாங்களே!’ என்று பதைபதைத்தது அவர் உள்ளம்.

தன் கணவர் இறந்து இருந்தாலும், அவரின் குடும்பத்தினர், தன் மகளை நன்றாகவே பார்த்துக்கொள்வர் என்று நினைத்துக் கொண்டு தான் இரண்டு நாட்களாக தன் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தார் பரணி. அனால் இப்போது சிவாவின் பேச்சில், “நான் உடனே இந்தியா வரேன் சிவா” என்று சொல்லி அழைப்பை துண்டித்தவர், பல வருடங்கள் கழித்து, எங்கே இனி தன் காலடித் தடம் படவே கூடாது என்று நினைத்தாரோ, அங்கேயே தன் மகளைக் காக்கச் சென்றார்.






 

NNO7

Moderator
அத்தியாயம் – 11

நான்கு நாட்களுக்குப் பின்...

“இல்ல எனக்குப் புரியல. எதுக்காக நாம இப்படி ஓடி ஒழியணும்? என் அண்ணன் கிட்ட நான் பேசுறேன்னு சொன்னாலும் நீங்க கேட்க மாட்டேங்குறீங்க” என்று நிலவனிடம் அலுத்துக் கொண்டாள் வனரோஜா.

அந்த மாலை நேர தென்றல் காற்றில், வனரோஜாவின் சிகை அவளது கண்ணுக்குள் செல்ல, அதனை அவள் காதுக்குப் பின்னால் ஒதுக்கிவிட்டவன், “நான் சொல்றதைக் கேளு, இந்த எண்ணத்தைக் கைவிட்டுடு” என்று நிலவன் சொல்ல, அவன் கண்களில் தோன்றிய காந்தத்தால் கவரப்பட்டு, தன்னையும் மீறி தன் தலையை ஆட்டிக் கொண்டாள் வனரோஜா.

அந்த ரிசார்ட்டின் பின்னால் இருந்த பள்ளத்தாக்கைத் தான், ஒரு மரபெஞ்சில் அமர்ந்து இருவரும் ரசித்துக் கொண்டிருந்தனர். பரணியும் தன்னைத் தேடி இந்தியா வந்ததாக நிலவனுக்குத் தகவல் கிடைக்க, உடனே அந்தத் தீவில் இருந்து, வனரோஜாவை அழைத்துக் கொண்டு, வயநாட்டிற்கு சென்றான்.

நிலவனோ இயற்க்கை அழகை ரசித்துக்கொண்டிருக்க, தன் இடப்பக்கம் திரும்பி அவனது முகத்தைப் பார்த்த வனரோஜா, “என் விஷயத்தில் எதிலும் தலையீட மாட்டேன்னு சொல்லி தான் அக்ரீமென்ட் போட்டீங்க... ஆனா இப்ப...” என்று சொல்லி இழுத்தாள்.

அவள் பக்கம் திரும்பியவன், “இப்ப என்ன? இப்போதும் அப்படி தான் உனக்கும் எனக்கும் எந்த வித உறவும் உருவாகக்கூடாது. அதை உன் மண்டையில் நல்லா ஏத்திக்கோ” என்று சொல்லி முகத்தை உர்ரென்று வைத்துக் கொண்டான்.

“ம்ச்... நானும் அந்த அர்த்தத்துல கேட்கல. என்னோட அண்ணனை நான் பார்க்குறதும் பார்க்காததும் என்னோட தனிப்பட்ட விருப்பம். அதில் நீங்க தலையுடுறது எனக்குப் பிடிக்கல” என்றாள் வேகமாக.

“இதைப் பத்தி ஏற்கனவே நாம பேசிட்டதா எனக்கு நியாபகம்” என்றான் அவளை உறுத்து விழித்தபடி.

“எதுக்காக இப்படி பண்றீங்க மிஸ்டர் நிலவன்? சப்போஸ் நான் செத்துப்போயிட்டா, சொத்து உங்க கைக்குக் கிடைக்காதுன்னு பயப்படுறீங்களா!” என்றாள் எரிச்சல் மிகுந்த குரலில்.

“அப்படி தான்னு வச்சிக்கோ... இப்ப என்ன அதுக்கு?” என்றான் திமிரான குரலில்.

“அக்ரீமென்ட்ல என் அண்ணனைப் பார்க்கக்கூடாதுன்னு எதுவும் எழுதல. அதனால நான் அவரைப் பார்க்கத் தான் போறேன்” என்று அவனுக்கு சிறிதும் சளைத்தவள் இல்லை என்பது போல் பேசினாள்.

“நான் சொல்லாம, அவன் யாருன்னு உனக்குத் தெரியப்போறது இல்ல. நான் உன்கிட்ட சொல்லப்போறதும் இல்ல” என்றான் எங்கோ வெறித்துப பார்த்தபடி.

“ஆனா ஒன்னு மட்டும் உண்மை நிலவன், நீங்க சொல்றதை எல்லாம் என்னைக் கேட்க வைக்குறீங்க. நானும் அதுக்கு தலையை ஆட்டுறேன்” என்றாள் அவனிடம்.

“அதெல்லாம் விடு. நான் சொன்ன செயற்கை கருத்தரிப்புமுறை பற்றி யோசிச்சியா? இன்னும் எத்தனை நாளைக்குத் தான் தனியா இருக்கப்போற?” என்று நான்கு நாட்களுக்கு முன் தீவியில் வைத்துப் பேசிய பேச்சுக்களை திரும்பவும் இழுத்தான்.

தன் கைகளைக் கட்டிக்கொண்டு, அவன் முகத்திற்கு நேராக பார்த்தவள், “கல்யாணம் ஆனா தானே சொத்துன்னு சொன்னீங்க? இல்ல குழந்தை பிறந்தா தான் சொத்து உங்களுக்குக் கிடக்கணும்னு இருக்கா?” என்று விளையாட்டாக தான் கேட்டாள்.

அது தானே உண்மையும் கூட, ஆனால் இந்தக் கேள்வியில் அதிர்ந்த நிலவன், கோபத்தில் பேச ஆரம்பித்தான்.

“உன் நலனுக்காக மட்டும் தான் சொன்னேன். உன் எதிர்காலத்தைப் பத்தி நான் யோசிச்சது என்னோட முட்டாள் தனம் தான். நீ எக்கேடோ கெட்டுப்போனா எனக்கு என்ன?” என்று கத்தியபடி, இருக்கையில் இருந்து எழுந்தவன், தன் கைகள் இரண்டையும் தேய்த்துக் கொண்டு, “ரொம்ப குளிருது உள்ள வா. பிறகு உனக்கு இதனால காய்ச்சல் வந்தாலும் நான் தான் பார்க்கணும்” என்று அவளிடம் எரிந்து விழுந்துவிட்டு உள்ளே சென்றான்.

‘சும்மா கேட்டதுக்கு எதுக்கு இவ்வளவு கோபம்’ என்று தனக்குள் கேட்டுக்கொண்டே உள்ளே சென்றவள், தன் அறைக்குள் சென்று திரும்பவும், தன் தோழி சந்தியாவிற்கு தொடர்பு கொண்டாள்.

அவள் கெட்ட நேரமோ அல்லது நிலவனின் நல்ல நேரமோ, அவளுக்கு அழைப்பு செல்லவே இல்லை. ஆனால் கடவுள் வேறு ஒரு ரூபத்தில் அவளுக்கு உதவினார்.

வழக்கம் போல் வாட்ஸ்அப்பில் சந்தியாவிற்கு செய்தி அனுப்பலாம் என்ற நினைப்போடு, அவள் வாட்ஸ்அப் செல்ல, அங்கே சந்தியாவிடம் இருந்து அவளுக்குப் பதில் செய்தி வந்திருந்தது.

அது தந்த மகிழ்ச்சியோடு, அதனைத் திறந்து பார்த்தவள், அவள் சொன்ன செய்தியைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தாள்.

அதில், “ரோஜா இப்ப நான் சொல்றதைக் கேட்டு டென்ஷன் ஆகாத. அந்த நிலவன் நல்லவன் இல்லைடி. எப்படியாவது அங்க இருந்து தப்பிச்சிரு. நீ யாரும் இல்லாத அனாதை எல்லாம் கிடையாது. உனக்குன்னு குடும்பம் இருக்கு. அவங்க உன்னைத் தான் தேடிக்கிட்டு இருக்காங்க” என்று எழுதி இருந்தது.

அதில் எழுதப்பட்டிருந்த செய்தியை நான்கு ஐந்து தடவைகளுக்கு மேல் தன் கைகள் நடுங்க மாறிமாறிப் படித்தாள் வனரோஜா.

அவள் மனதிலோ பெரும் புயல் அடித்துக் கொண்டே இருந்தது. அவ்வளவு பெரிய படிப்பு எல்லாம் படித்து என்ன பயன்? இப்படி வந்து ஏமாந்துவிட்டோமே என்று கதறியது அவளது மனது.

அவள் தன் நெஞ்சில் கைவைத்து, மூச்சு திணறிய நிலையில் நிற்க, தன் குடும்பம் தன்னைத் தேடுகிறது என்ற செய்தி எல்லாம் பின்னால் தான் போனது.

அவளுக்குப் பின்னால் தான், தன் கைகளைக் கட்டிக் கொண்டு நின்றிருந்தான் நிலவன்.

அவள் அலைபேசியில் இருந்த செய்தியையும் பார்த்துவிட்டான்.

ஆனால் அவன் மனது எல்லாம் எந்த வித கலவரமும் கொள்ளவில்லை மிகவும் சாதாரணமாக, “என்னாச்சி வனரோஜா பேயைப் பார்த்த மாதிரி நிற்குற?” என்றான் தன் கைகளை இருபுறமும் உள்ள காற்சட்டைப் பையில் விட்டபடி.

அதில் அவளது பயம் தொண்டைக்குழியில் வந்து நின்றது. அரண்டுபோன முகத்துடன் நிலவனைப் பார்த்தவள், வேகமாக தன் அலைபேசியை முதுகுக்குப் பின்னால் ஒழிக்க முயன்றாள்.

பின், அவளின் கையைப் பிடித்து இழுத்து, அவளின் அலைபேசியை பறித்தவன், “உன் அண்ணன் எந்த எல்லைக்கும் போவான்னு நான் தான் சொன்னேனே! இப்ப உன் ப்ரண்ட்டையும் மிரட்டுறான் போல. ஆனா நீ என்னை நம்புற தானே” என்று கேட்டுக்கொண்டே, தன் வலது கையால் அவளது கன்னத்தைத் தடவினான்.

அவள் கண்ணில் இருந்து கண்ணீர் வழிய ஆரம்பித்தது. அதையும் துடைக்க அவன் கையை எடுக்க, உடனே அதனைச் செய்ய விடாமல், அவனது கையைப் பிடித்தவள், “நமக்குள்ள எதுவும் கிடையாதுன்னு அடிக்கடி சொல்லிக்கிட்டே தான் இருக்கீங்க. இதெல்லாம் பண்ணி, உங்க மேல என்னைக் காதலில் விழ திட்டம் செய்யாதீங்க” என்றாள் மெதுவான குரலில்.

அதற்கு உதட்டை ஒரு பக்கமாக வளைத்து சிரித்தவன், “எனக்கு அதெல்லாம் தேவை இல்ல. உனக்கும் தேவை இல்லைன்னு சொல்லி தான் அக்ரீமென்ட்ல கையெழுத்துப் போட்டு இருக்க” என்றான்.

தன் கண்ணீரை துடைத்தவள், “என்கிட்ட உண்மையை மட்டும் சொல்லுங்க. பொய் மேல பொய் சொல்லி, உங்களால மனிதர்களைப் பார்த்தாலே நான் வெறுக்கும் நிலைக்கு என்னைக் கொண்டு வந்து நிறுத்தாதீங்க” என்றாள் கண்ணீர் மல்க.

இதுக்கும் மேல் நடிக்க வேண்டாம் என்று முடிவெடுத்த நிலவன், “உன்னைக் கல்யாணம் பண்ணா தான் எனக்கு சொத்து வரும் அது தான் உண்மை. மத்தபடி வேற ஒன்னும் இல்ல. அதோட இன்னொன்னு நீ ஐவிஎப் மூலம் குழந்தையும் கட்டாயம் பெத்துக்கணும். அப்படி சொல்லித்தான் அக்ரீமென்ட்ல நீ கையெழுத்து போட்டு இருக்க. ஆனா உனக்கு இஷ்டம்னா குழந்தைய நீயே வச்சிக்கோ, எனக்கு வேண்டாம். அப்படி உனக்கு தேவை இல்லாத பட்சத்தில் அதை ஹோம்ல விட்டுடலாம்” என்று சொல்லி அவளை அதிர்ச்ச்சியில் ஆழ்த்தினான்.

கொஞ்சம் கூட மனிதத்தன்மை இல்லாமல் தான் இருந்தது அவனது பேச்சு. அவனது குறிக்கோள் எல்லாம் சொத்து ஒன்றை மட்டுமே சுத்தி வந்தது.

தான் நன்றாக ஏமாற்றப்பட்டிருக்கிறோம் என்பதனை முழுவதுமாக அப்போது தான் உணர்ந்த வனரோஜா, “ஆனா... ஆனா அதில் அப்படி எல்லாம் எதுவும் எழுதலையே!” என்று பதறினாள்.

அதற்கு சிரித்தவன், “இந்திய அரசாங்கத்திற்கு மருந்து சப்ளை பண்றதே நான் தான். இங்க பத்திர ஆபிஸ்ல உன் கையெழுத்தை வச்சி எனக்குத் தகுந்த மாதிரி மாத்திக்கிட்டேன்” என்றான் வன்மமாக.

தன் அழுகையைக் கட்டுப்படுத்தியபடி, “பத்து கோடி ரூபாயைக் கொடுத்தா மட்டும் தான், நான் இங்க இருந்து போக முடியுமா?” என்றாள்.

அவளுக்குக் கோபம் வரத்தான் செய்தது. ஆனால் அதனை நிலவனிடம் காட்டவேண்டிய தருணம் இதுவல்ல என்பது அவள் எண்ணம். ஏனென்றால், தெரியாத இடத்தில் அவனுடன் தனியே வசிக்கின்றாள். இவனைக் கோப்பப்படுத்தி அவன் தன்னை கொலை செய்துவிட்டால் என்ன செய்வது? அதற்காகவே பொறுமை காத்தாள்.

தன் கையை மார்பின் குறுக்கே கட்டிக்கொண்டு அவளைப் பார்த்தவன், “பத்து கோடி உன்கிட்ட இருக்குதா?” என்றான் ஏளனக்குரலில்.

“இல்லை “ என்று தன் தலையை ஆட்டியவள், “ஆனா நான் கோர்ட்டுக்குப் போவேன்” என்றாள் கொஞ்சம் தைரியத்தை இழுத்துப் பிடித்தபடி.

“இந்த கேஸ் கண்டிப்பா பத்து வருஷம் இழுக்கும். அதுக்குள்ள நம்ம அக்ரீமென்ட் எப்பவோ முடிஞ்சும் போயிருக்கும். எனிவே, நீ பத்து கோடியை எடுத்து வச்சாலும், என்னோட ஹாஸ்பிடல்ல தான் நீ ரெண்டு வருஷத்துக்கு வேலை பார்த்து ஆகணும். ஏன்னா அதுக்கான ஏற்பாட்டை நான் பண்ணிட்டேன். நீ என்ன பண்ணாலும், இந்த வேலையை விட்டு நீ போக முடியாது. அது லண்டன் சட்டப்படி அமைஞ்சு இருக்கு” என்று சொல்லிவிட்டு அவளைப் பார்த்தான்.

இப்போது குரலில் கடினத்தைக் கூட்டி, “என் அண்ணன் தான் என்னைத் தேடுறாருன்னு நினைக்குறேன். நான் அவரைப் பார்க்கணும்” என்றாள் வனரோஜா.

“எதுக்கு? நீ பட்டக்கடனை அவன் அடைப்பான்னு நினைக்குறியா? அவனே ஒரு செல்லாக் காசு தான், உன்னை மாதிரியே! ரெண்டு செல்லாக்காசும் சேர்ந்து அப்படி என்னத்த பண்ணப் போறீங்க? பத்து கோடியை எடுத்து வச்சிட்டு நீ எங்கனாலும் போகலாம்” என்று மிகவும் தரக்குறைவாக பேசினான்.

வனரோஜா சூழ்நிலை கருதி அமைதியாக இருந்தாலும், அவளால் கோபத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

இருவருக்குள்ளும் வார்த்தைகள் காரசாரமாக நடந்து கொண்டிருக்க, தன்னையும் அறியாமல் வனரோஜா பேசிய பேச்சால், எரிமலைக் குழம்பாய் வெடித்து சிதறிய நிலவன், “என்னை பேசுற நீ ரொம்ப யோக்கியமானவளா?” என்று சொல்லி ஒரு கணம் நிறுத்தியவன், தன் உதட்டை சுழித்து, “முதல் தடவை பார்க்கும் போது, கைப்படாத ரோஜா மாதிரி அந்த நடிப்பு நடிச்சிட்டு, அடுத்த ரெண்டு நாள்லையே எப்படிடி என்கூட ஒன் நைட் ஸ்டாண்ட் இருந்த!” என்று கேட்டு, அவளை சிலையாக்கினான்.


 

NNO7

Moderator
அத்தியாயம் – 12

‘என்னை என் குடும்பம் தேடுறதா சந்தியா சொன்னாளே!’ என்று நினைத்தவள், “என்னோட அம்மா அப்பா... என்னோட அம்மா அப்பான்னு சொல்லி ஒரு கல்லறையைக் காமிச்சதும் பொய்யா?” என்று ஆக்ரோஷத்துடன் நிலவனின் கையைப் பிடித்து ஆட்டினாள் வனரோஜா.

அதில் சிறிதும் வருத்தம் இல்லாமல், தன் மேல் இருந்த அவளது கையை வெடுக்கென்று எடுத்துவிட்டவன், “அது என்னோட அம்மா அப்பா. அது அவங்களோட கல்லறை. ஆனா உன்னோட அம்மா இருந்தும் இல்லாதது மாதிரி தான்” என்று சொல்லி அவளைக் குழப்பினான்.

தொடர்ந்து பேசியவன், “என்னாச்சி நான் சொல்றது புரியலையா? அவங்களை நீ பார்க்கும் போது உனக்கே தெரியவரும்” என்று சொல்லி தன் தோள்களைக் குலுக்கிக் கொண்டான்.

அவன் வாயால் சொன்ன செய்தியை செவியால் கேட்டவள், வேறு எதையும் காதில் வாங்காமல், அவன் சொன்ன, ‘உன்னோட அம்மா’ என்பதனைப் பிடித்துக் கொண்டு, “நல்லா இருக்குறவங்களை செத்து போயிட்டாங்கன்னு சொல்ல உங்களுக்கு எப்படி மனசு வந்தது? உங்க அம்மா அப்பா உயிரோட இருந்திருந்து, நான் இப்படி பேசி இருந்தா உங்களுக்கு எப்படி இருந்திருக்கும்” என்று அவள் கேட்கும் போது, அவன் எதுவும் பேசவில்லை.

அவள் எந்த அளவுக்குப் போகின்றாள் என்று பார்ப்போம் என்பது போல் தான் நிலவன் பார்த்துக் கொண்டிருந்தான்.

அவன் அமைதியைப் பார்த்தவள், “உங்களுக்கு எங்க அதெல்லாம் தெரியப்போகுது. பெத்தவங்க சொத்து வேணும். வேறு எதைப் பத்தியும் கவலைக் கிடையாது அப்படி தானே!” என்று அவள் சொல்ல, அப்போதும் அவன் அமைதியைத் தான் கடைபிடித்தான். ஆனால் தன் பெற்றோரைப் பற்றிப் பேசியதால், தன் உணர்வுகளை அரும்பாடுபட்டு அடக்கி வைத்திருந்தான்.

அதில் இன்னும் தைரியம் வரப்பெற்றவளாக, “உங்க அம்மா நல்ல வேளை உயிரோட இல்ல. அப்படி மட்டும் இருந்திருந்தா, இந்த மாதிரி மிருகமா தன் பையன் வளர்ந்து நிற்குறதைப் பார்த்து, அவங்களே தன்னோட உயிரை விட்டு இருப்பாங்க” என்று எதுவும் யோசிக்காமல் பேசிவிட்டாள்.

நிலவனின் கோபமும் கரையைக் கடந்தது. அவன் கத்தவில்லை, அவளை அடிக்கவில்லை, கோபம் கொள்ளவில்லை, ஆனால வனரோஜாவை மிகவும் தரம் தாழ்த்திப் பேச வேண்டும் என்ற நினைப்போடு பேச ஆரம்பித்தான்.

“என்னை பேசுற நீ ரொம்ப யோக்கியமானவளா?” என்று சொல்லி ஒரு கணம் நிறுத்தியவன், தன் உதட்டை சுழித்து, “முதல் தடவை பார்க்கும் போது, கைப்படாத ரோஜா மாதிரி அந்த நடிப்பு நடிச்சிட்டு, அடுத்த ரெண்டு நாள்லையே எப்படிடி என்கூட ஒன் நைட் ஸ்டாண்ட் இருந்த?” என்று நெருப்பை அள்ளி அவள் மீது கொட்டினான் நிலவன்.

நிலவனின் இந்த பேச்சில் அப்படியே நின்றுவிட்டாள் வனரோஜா, அவன் சொல்ல சொல்ல மூன்று நாட்களுக்கு முன்னால் இரவு நடந்ததை தான் சுற்றி வந்து பிசைந்தது அவளின் மனது.

ஆனால் படாரென்று, அந்த நினைப்பை ஒதுக்கி வைத்தவள், அவன் முன்னால் நிற்க முடியாமல் தலைக்குனிந்தாள்.

அவள் நாடியைப் பிடித்துத் தன்னை நோக்கி, அவளது முகத்தை நிமிர்த்தியவன், “என்னாச்சி அசிங்கமா இருக்கா? இதெல்லாம் பேசக்கூடாதுன்னு தான் நானும் நினைச்சேன். ஆனா என்னை நீ பேச வைக்குற” என்றான் பல்லைக்கடித்தபடி.

அனைத்தையும் பேசிவிட்டு, தன் மூச்சை இழுத்து வெளிவிட்டவன், “சரி. எல்லாம் ரெடி பண்ணிட்டேன் லண்டன் போகுறதுக்கு ரெடியாகு. ட்ரீட்மென்ட்க்கும் சேர்த்து தான்” என்று சொல்லிவிட்டு, அவள் அலைபேசியையும் பக்கத்தில் இருந்த மேஜையில் வைத்துவிட்டு, வெளியே சென்றான் நிலவன்.

அவன் சென்றதும், தரையில் அமர்ந்து வெடித்து அழுதாள் வனரோஜா. எவ்வளவு நேரம் அப்படியே அமர்ந்திருந்தாளோ தெரியவில்லை.

ஆனால் காலையில் அவள் கண் விழித்துப் பார்க்கும் போது, அவள் முன்னே தான் நின்று கொண்டிருந்தான், அவளின் ஒரே சொந்த அண்ணன் சிவா.

அவள் கண்ணைக் கசக்கிவிட்டுப் பார்க்க, அவளது கையைப் பிடித்தவன், “உனக்கு ஒன்னும் இல்லையே ரோஜா” என்று கேட்டுவிட்டு பதறிய நெஞ்சத்தோடு, அவளைத் தலைமுதல் கால் வரை ஆராய்ந்தவன், அவளின் தலையைத் தடவி, “அவன் உன்னை எதுவும் கொடுமை படுத்தல தானே!” என்றவன் குரலில் பரிதவிப்பு இருந்தது.

அவன் பேச்சில், இவன் தான் தன் அண்ணன் என்பதனை புரிந்து கொண்டவள், “அண்ணா?” என்று கேட்க, தன் தலையை, “ஆம்” என்று ஆட்டியவன், வனரோஜாவின் தலையை அன்பொழுக தன் நெஞ்சில் சாய்த்துக்கொண்டான்.

சில நிமிடங்கள் நடந்த இருவரின் பாசபோராட்டம் ஒரு வழியாக முடிவுக்கு வந்தது.

“இங்க இருந்து நாம போகலாம் ரோஜா” என்று அவள் கையைப் பிடித்து மெதுவாக எழுப்பினான்.

“ஆனா நிலவன்...” என்று அவள் கேட்க, “கோபம் மூச்சிகளை விட்டவன், “அவனை நான் பார்த்துக்குறேன்” என்று அவன் சொல்லும் போதே, வனரோஜாவின் கண்களில் இருந்து சூடாக கண்ணீர் வெளியேறியது.

சிவாவின் தோளில் சாய்ந்து கொண்டவள், “இதெல்லாம் நிஜம் தானே! நிலவனை மாதிரி நீயும் என்னை ஏமாத்தலையே!” என்று கமறிப்போனக் குரலில் கேட்டாள்.

அதில் மிகவும் சிவாவின் மனம் வலித்தது. இருந்தும் தன் தங்கையின் நிலை அவ்வாறு கேட்க வைத்தது என்பதனை உணர்ந்தவன், “இந்த உலகத்துல, எனக்கு நீ மட்டும் தான் முக்கியம் ரோஜா. உன்னை நான் எத்தனை நாளா தேடிக்கிட்டு இருந்தேன் தெரியுமா?” என்றவன் கண்களில் இருந்தும் கண்ணீர் வழிந்தது.

“மன்னிச்சிடு அண்ணா. என்னோட நிலைமையும் அந்த மாதிரி தான் இருக்கு” என்று சொல்லும் போதே, அங்கே வந்த ராஜ், “நிலவன் சார், அவர் சொந்த ஜெட்டில் எப்பவோ லாஸ் ஏஞ்சல்ஸ் போயிட்டாரு சார்” என்றான்.

அதில் சிவாவின் முகத்தைப் பார்த்த வனரோஜா, “ஆனா நிலவன் எப்படி என்னை சும்மா விட்டாரு?” என்றாள் அதிர்வுடன்.

“ம்ச்... அவனுக்கு எதுக்கு நீ மரியாதை கொடுக்குற?” என்றவன், “லாஸ் ஏஞ்சல்ஸ்ல அவன் நிறுவனம் பெரிய பிரச்சனைல இருக்கு” என்றவன் குரலில் ஒரு வித மகிழ்ச்சி. ஆனால் இதை செய்தது என்னவோ பரணி தான்.

“ஆனா, அவர் என்னை சும்மா விடமாட்டாரு அண்ணா. நான் ரொம்பப் பெரிய பிரச்சனையில் இருக்கேன்” என்று அவள் சொல்ல, “புரியது ரோஜா உன்னோட நண்பி எல்லாத்தையும் என்கிட்ட சொல்லி, நீ அனுப்புன செய்தியையும் காட்டுனாங்க. அதில் உன் போனை ட்ராக் பண்ணி தான் உன்னைக் கண்டுபிடிச்சோம். கடல் பகுதியில் இருந்திருந்தா என்னால உன்னைக் கண்டுபிடிச்சிருக்க முடியாது” என்றான் சிவா.

“ஆனா பத்து கோடிக்கு எங்க போக?” என்றாள் அவள் பயத்துடன்.

அதற்கு சிரித்தவன், “அதெல்லாம் ஒரு தொகையே இல்ல. பார்த்துக்கிடலாம் இங்க இருந்து முதல்ல போவோம் வா” என்று அவளைக் கூட்டிக்கொண்டு வெளியே சென்றான்.

அங்கே அவனது மகிழுந்து தயாராக இருந்தது. அதில் ஏறி அமர்ந்ததும், “அம்மா அப்பா எல்லாம் எங்க இருக்காங்க” என்று அவள் கேட்கும் போது, அவனுள் சிறு அமைதி.

அவள் திரும்பவும் அதனைப் பற்றிக் கேட்க, “அம்மாவைப் பார்க்கத் தான் போறோம். அப்பா எங்க இருக்காருன்னு எனக்குத் தெரியாது ரோஜா” என்பதுடன் முடித்துக்கொண்டான்.

“என்ன சொல்ற நீ?”

“அம்மாவுக்கும் அப்பாவுக்கும், நீ பிறந்ததுமே விவாகரத்து ஆகிடுச்சு. ப்ளீஸ் இதுக்கு மேல என்கிட்ட எதுவும் கேட்காத. நேரம் வரும் போது நானே உன்கிட்ட சொல்றேன்” என்று சிவா சொன்னதும், தன் தலையை ஆட்டிக்கொண்டாள் வனரோஜா.

துரோகத்திற்கு மேல் துரோகத்தால் ஏமாந்த வனரோஜாவுக்கு சிவாவின் மேல் சந்தேகம் தான் வந்திருக்க வேண்டும். ஆனால் தன் சாயலில் தன்னைப் போலவே இருந்த சிவாவைப் பார்த்து, வனரோஜாவின் மனம் கசிந்து தான் போனது.

இருந்தும் அவனிடம் இதனைப் பற்றி கேட்கத் தான் செய்தாள். அவன் கண்ணில் இருந்து வழிந்த கண்ணீரே அதற்குப் பதில் சொல்லியது

அவளின் மடியில் இருந்த கையைப் பற்றிய சிவா, “அம்மா தான், உன்னைக் கண்டு பிடிச்சாங்க. அவங்களைப் பார்க்கும் போது, அவங்க எதாவது பேசுனா நீ அதைப் பெருசா எடுத்துக்காத” என்றான் மெதுவாக.

“என் அண்ணா? அம்மாவுக்கு என்னைப் பிடிக்காதா?” என்றாள் கலங்கிய குரலில்.

“ஹேய் அப்படி இல்ல ரோஜா. விவாகரத்து வாங்கினதும், நான் அம்மாக்கிட்டயும், நீ அப்பாக்கிட்டையும் இருந்தோம், உன்னைக் கண்டுபிடிக்க நான் தேடும் போது தான், நீ அப்பாக்கூட இல்லைங்கற விஷயமே எனக்குத் தெரிய வந்தது. அப்பா எங்கன்னு எனக்குத் தெரியாது. அம்மாவும் அப்பாவைப் பார்க்க விரும்பல” என்றவன் அவர் இறந்த விஷயத்தை, ரோஜாவின் நலம் கருதி மறைத்தான்.

அவன் சொன்னதைக் கேட்டு, விஷயத்தை ஓரளவு புரிந்து கொண்டவள், “ஆனா என்ன ஆனாலும் என்கூட நீ இருப்ப தானே!” என்றாள்.

அவள் கையில் அழுத்தத்தைக் கூட்டி, “யாருக்காகவும் என் தங்கச்சியை நான் விட்டுக்கொடுக்க மாட்டேன் ரோஜா... எனக்கு நீ மட்டும் தன் முக்கியம். உன்னை எதிர்க்கும் எதுவுமே எனக்கு வேண்டாம்” என்றான் உருக்கமான குரலில், அப்போது அவனது மனக்கண்ணில் முன்னால் வந்து நின்றாள் நிலா.

உடனே தன் கண்களை அழுத்தமாக மூடிக்கொண்டுத் திறந்தவன், தன் தங்கையின் தலையைத் தடவினான்.

வயநாட்டில் உள்ள ஒரு ரெசிடென்ட்டில் தான் இருந்தார் பரணி.

கால் மேல் கால் போட்டு, ராணித் தோரணையில் அமர்ந்திருந்தவரின் முன்னால் தான் ரோஜாவும், சிவாவும் அமர்ந்திருந்தனர்.

ரோஜாவைப் பார்த்ததும், அவர், “மகளே! உயிரே!” என்றெல்லாம் கூறி கட்டிக்கொள்ளவில்லை. மாறாக, தான் சிறுவயதில் இருந்ததைப் போலவே இருக்கும் ரோஜாவை கீழிருந்து மேலாக பார்த்தவர் கண்களில், ஒரு வித பிரகாசம் மின்னி மறைந்தது என்னவோ ஒரு கணம் மட்டுமே!

தன் மகனிடம் பார்வையைத் திருப்பியவர், “இன்னும் என்ன பண்ணனும் சார் உங்களுக்கு? நீங்க சொன்னதை எல்லாம் செஞ்சிட்டேனே!” என்றவரின் பேச்சில், சிவா எதனால் அப்போது அப்படித் தன்னிடம் கூறினான் என்பதனை உணர்ந்தவளுக்கு இதயம் கனத்தது.

இருந்தும், அவர் கண்ணில் தோன்றிய பிரகாசம் அவளுள் சிறு மகிழ்ச்சியை தத்து எடுக்கத் தான் செய்தது. ஆனால் அவரின் அடுத்த வாக்கியங்களை எல்லாம் அவள் கேட்கும் வரை மட்டுமே!

ரோஜாவிடம் எதுவும் பேசாமல் சிவாவிடம் மட்டுமே பேசிவர், “நான் சொன்னதை எல்லாம் சொல்லிட்டு, இந்தப் பெண்ணை அவள் வளர்ப்பு அம்மா அப்பாக்கிட்டக் கொண்டு போய் விட்டுடு” என்று பல ஆண்டுகள் கழித்துப் பார்க்கும் தான் பெற்ற மகவின் மீது சிறு பாசம் கூட இல்லாமல் பேசினார் பரணி.

அதுவரை பரணியை பிரம்மிப்பாகவும், இதற்கு முன் எங்கோ பார்த்தது போல் இருந்த பரணியை, எங்கே பார்த்தோம் என்றும் யோசித்துக் கொண்டிருந்த ரோஜாவுக்கு, அவர் பாசம் இல்லாத பேச்சு வருத்தத்தைத் தந்தது.

******

இங்கே தன் ஜெட்டில் அமர்ந்திருந்த நிலவன், “உன் தங்கச்சியை என்கிட்ட இருந்து, காப்பாத்திட்டதா நினைக்குறியா சிவா? ஆனா எப்படி இருந்தாலும் அவள் என்னிடம் தானே வந்தாகணும்” என்று தனக்குள் சொல்லியபடி, நிலா ஹாஸ்பிடல்ஸ் டாக்டர் பயோ டேட்டாவில் இருந்த நிலாவின் பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தைப் பார்த்து வன்மமாய் புன்னகை புரிந்தான்.
 

NNO7

Moderator
அத்தியாயம் – 13

பரணியின் பேச்சுக்களை எல்லாம் கேட்டு, வனரோஜா தான், உணர்ச்சியின் பிடியில் தன் தலையைத் தாழ்த்திக் கொண்டு அமைதியாக இருந்தாள்.

ஆனால் சிவாவிற்கோ, தன் தாயின் பேச்சில் எரிச்சல் தான் வந்தது.

“ரோஜா எங்கயும் போகமாட்டாள். அவள் நம்ம கூட தான் வருவாள்” என்றான் சத்தத்தைக் கூட்டியபடி.

“அவளோட வீட்டில் அவளைத் தேட மாட்டாங்களா?” என்று கேட்க, இப்போது தான் தன் தலையை நிமிர்ந்து பார்த்து, பதில் பேச ஆரம்பித்தாள் வனரோஜோ, “இல்ல நான் பார்த்துப்பேன். நான் இங்க இருந்து போறேன்” என்று சொல்லி இருக்கையில் இருந்து எழுந்தவளின் கையைப் பிடித்துத் திரும்பவும் அதில் அமரவைத்த சிவா, “எங்க போற?” என்று அவளிடம் கேட்டுவிட்டு, தன் அன்னையைப் பார்த்தவன், “நீங்க இப்ப என்னம்மா நினைச்சிகிட்டு இருக்கீங்க? இங்க என்ன நடக்குதுன்னே தெரியாம, எதையாவது பேசாதீங்க” என்றவன் ஒரு கணம் நிறுத்தி, “ரோஜாக்கு யாரும் இல்ல” என்றான் சின்ன குரலில்.

அநேகமாக இதனைக் கேட்கும் போது, பரணி பதறி தான் இருக்கவேண்டும். ஆனால் அதற்கு மாறாக, “அதுக்கு என்ன? யாரும் இல்லைன்னா, நான் கூட்டிட்டு போகணுமா?” என்று கொஞ்சமும் பாசம் இல்லாத குரலில் ஆவேசமாக கேட்டார்.

அப்போது தான், ‘உனக்கு அம்மா இருந்தும் இல்லாதது மாதிரி தான்’ என்று நிலவன் எந்த அர்த்தத்தில் அவ்வாறு சொன்னான் என்பதே வனரோஜாவிற்குப் புரிந்தது.

அவர் பேச்சில் மிகவும் காயம் பட்டுத்தான் போனாள். ஆனால் சிவா அமைதியாக இல்லை. எனக்கு இருக்கும் உரிமை ரோஜாவுக்கும் இருக்கு தானே! பின்ன ஏன் இப்படி எல்லாம் பேசுறீங்க அம்மா” என்றான் தாளமாட்டாத குரலில்.

பரணி பேசுவதற்குள் முந்திக்கொண்ட, வனரோஜா, “அண்ணா, எனக்கு எங்கயும் வர விருப்பம் இல்ல. என்னைக் கூட்டிட்டுப் போக சொல்லி நான் பிச்சையும் கேட்கல” என்றாள் அழுத்தம் நிறைந்த குரலில்.

அவளின் பேச்சுக்கு எதுவும் பேசாத பரணி, ரோஜாவைத் தான் பார்த்துக் கொண்டிருந்தார். அவர் பார்வையில் இருந்து எதையும் கண்டுபிடிக்கமுடியவில்லை. அவர் என்ன நினைக்கின்றார் என்பது அவருக்கு மட்டுமே வெளிச்சம்.

ஆனால் சிவாவோ, வனரோஜாவின் பேச்சில், “நீயும் ஏன் ரோஜா இப்படி பேசுற. உன்னைக் கண்டுபிடிக்க நான் எவ்வளவு கஷ்டப்பட்டேன் தெரியுமா! நீ இந்த மாதிரி பேசுறது எனக்கு ரொம்பவே வலிக்குது” என்று சொல்லிவிட்டு, தன் அன்னையைப் பார்த்தவன், “உங்களுக்கு பொண்ணு வேண்டாம் பையன் மட்டும் வேணுமா?” என்றான் ஒரு மாதிரியான குரலில்.

அதற்குக் கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாத பரணி, “எனக்கு பையன் வேணும்னும் நான் சொல்லவே இல்லையே!” என்றார்.

“அப்ப எதுக்குகாக எங்களை பெத்துக்கிட்டீங்க” என்று கோபத்துடன் கத்தினான் சிவா. அதற்கும் சிறுசலனம் கூட இல்லாமல் தான் அமர்ந்து இருந்தார் பரணி.

“அண்ணா” என்று அவன் கையைப் பிடித்துப் பேசாதே என்று தன் தலையை ஆட்டி சைகை செய்தவள், “நான் அப்படி என்ன செஞ்சிட்டேன்னு உங்களுக்கு என் மேல் இவ்வளவு வெறுப்பு?” என்றாள் உள்ளே போனக்குரலில்.

அதற்கும் அவர் தன் வாயைத் திறக்கவில்லை.

தன் முகத்தை சுழித்த சிவா, “அவங்க எதுவும் பேசமாட்டாங்க ரோஜா. எப்போதும் இவங்க இப்படித்தான். சின்ன வயசுல இருந்து இப்ப வரைக்கும் கூட, இவங்க என்கிட்ட பாசமா ஒரு வார்த்தைக் கூட பேசுனதே இல்ல...” என்று அவன் சொல்லிக்கொண்டு இருக்கும் போதே, பரணியின் பிஏ, அவர் காதில் வந்து எதுவோ சொல்ல,

தன் இருக்கையில் இருந்து எழுந்தவர், “கங்கா நிறுவனத்துல உனக்கு வெறும் ஷேர்ஸ் மட்டும் தான் இருக்கு. நீ எப்போ இந்தியா வந்தியோ அப்பவே உன் வேலையும் போயிடுச்சு” என்று சிவாவிடம் சொன்னவர், வனரோஜாவைப் பார்த்து, “நிலா ஹாஸ்பிடல்ல ரெண்டு வருஷத்துக்கு வேலை பார்க்குறதா கையெழுத்துப் போட்டு இருக்க நீ. இதுல என்னால ஒன்னுமே செய்ய முடியாது. சட்டப்படி இப்ப நீ நிலவனின் மனைவி தான்” என்று சொல்லிவிட்டு திரும்பவும் சிவாவை பார்த்தவர், “நிலவன் கூட பிரச்சனை எதுவும் பண்ணவேண்டாம்” என்று சொல்லிவிட்டு மடமடவென்று அந்த இடத்தைக் காலி செய்தார்.

சிவாவோ அதிர்ச்சியில் உறைந்து போய் இருக்க, பரணி சொன்னதில் பதறிய ரோஜா, “என்ன அண்ணா, அம்மா இப்படி பேசிட்டுப் போறாங்க... அந்த நிலவன் கூட தான் நான் கண்டிப்பா இருந்தே ஆகணுமா?” என்றாள் பதைபதைக்கும் நெஞ்சோடு.

“ம்ச்.. இப்ப நீ எதுக்காக பயப்படுற? அப்படி எல்லாம் நடக்க நான் விடமாட்டேன். ஆனா டிவர்ஸ் ரெண்டு வருஷம் கழிச்சு தான் கிடைக்கும். ஆனா ரோஜா...” என்றவன் ஒரு கணம் நிறுத்தி, “நீ கண்டிப்பா பயிற்சி மருத்துவரா அவன் மருத்துவமனையில் வேலை பார்த்து தான் ஆகணும்” என்றான் சிவா.

“ஆனா எனக்கு லண்டன் போறதுக்கு விருப்பம் இல்லையே அண்ணா” என்றாள் குரலில் கவலையை தேக்கி வைத்தபடி.

“நான் இருக்கும் போது நீ எதற்கும் பயப்பட வேண்டிய அவசியம் இல்ல ரோஜா. நீ ரெண்டு வருஷம் அவன் ஹாஸ்பிடலில் வேலை செய்யலைன்னா, உன் மேல கேஸ் பைல் ஆகும்” என்று விவரமாக சொல்லி அவளுக்குப் புரியவைத்தான்.

“சரி அப்ப எனக்கு அங்க ஒரு ஹாஸ்டல் பாரு” என்க.

“எதுக்கு ஹாஸ்டல்? நம்ம வீடு இருக்கும் போது” என்றான் தன் ஒரு புருவத்தை மட்டும் உயர்த்தியபடி.

“நீ புரிஞ்சி தான் பேசுறியா? இப்ப தானே உன்னோட அம்மா சொல்லிட்டுப் போறாங்க” என்றாள் வேறு பக்கம் தன் தலையைத் திருப்பியபடி.

“ம்ச்... நம்ம அம்மான்னு சொல்லு” என்றவன், அவள் பதில் பேசாமல் நிற்பதைப் பார்த்து, “இங்கப்பாரு ரோஜா, அவங்க என்னையும் தான் வேண்டாம்னு சொல்லிட்டுப் போறாங்க. அதுக்காக அவங்க நம்ம அம்மா இல்லைன்னு ஆகிடுமா?” என்றான் சிவா.

என்ன தான் தன் தாயின் முன் அவர் மனம் நோகும்படி பேசிவிட்டாலும், சிறு வயதில் இருந்து இப்போது வரைக்கும் அவன் கண் முன்னால் பரணி பட்ட அழுகைகள், கஷ்டங்கள் எல்லாத்தையும் பார்த்தவன். பரணிக்குப் பின்னால் இன்னும் ஏதோ சொல்லப்படாத காரணம் உள்ளது என்னும் எண்ணமே அவன் பேச்சின் மூலம் தெரிந்தது.

அதற்கு ரோஜாவோ, “இவங்க தான் என்னைப் பெத்த அம்மான்னு நீ சொல்லித் தான் தெரியும். அதுக்காக என்னைப் பார்த்ததும் பாசத்தைப் பொழியணும்னு நான் கேட்கல. எனக்கு அதில் விருப்பமும் இல்ல. ஆனா என் மனசு கஷ்டப்படும் படி பேசாமையாவது இருந்திருக்கலாம்” என்றாள் கலங்கிய குரலில்.

“ஹேய், இப்ப எதுக்கு நீ கண்ணைக் கசக்குற? நான் தான் சொன்னேனே அவங்க எப்போதும் இப்படித் தான். பிறக்கும் போதே இளவரசியா இருந்தவங்க, அவங்க வாழ்க்கையில் அதிகமான கஷ்டங்களை அனுபவிச்சிட்டாங்க. உனக்கு ஒரு ஆபத்துன்னு தெரிஞ்சதும், அங்க கிடக்குறது எல்லாம் போட்டுட்டு உடனே இங்க வந்துட்டாங்கத் தெரியுமா!” என்றான் சிவா.

அப்போது தான் அதனை நினைத்துப் பார்த்த ரோஜா, ‘சரி அவங்களுக்கு என்ன பிரச்சனையோ!’ என்று ஒதுக்கி வைக்க முடியவில்லை என்றாலும், கடினப்பட்டு, பரணியின் நினைப்பை ஒதுக்கி வைத்தவள், “சரி. ஆனா எனக்கு வீட்டுக்கு வர்றதுக்கு விருப்பம் இல்ல அண்ணா. என்னைப் பார்த்தா அவங்களுக்கும் சங்கடம், எனக்கும் சங்கடம்” என்று அவனுக்குப் புரியவைக்க முயன்றாள்.

“சரி. அப்ப கங்கா பேலஸ் போகவேண்டாம். நான் புதுசா வாங்கின வீட்டுக்கு என்னோட வருவியா?” என்று கேட்டதும், ரோஜாவிற்கு மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது.

இதுவரை அவளின் நலனுக்காகப் பார்க்கும் ஒரே ஜீவன் அவள் தோழி சந்தியா மட்டும் தான். ஆனால் இப்போது சிவாவும் அதில் சேர்ந்து கொள்ள, பெண்ணவளுக்கு அவ்வளவு ஆனந்தமாக இருந்தது. வேகமாக தன் தலையை ஆட்டியவள், “உன்கூட கண்டிப்பா வரேன் அண்ணா. ஆனா எனக்கு விசா கிடைக்கலையே!” என்றாள் கொஞ்சம் சோகமாக.

இப்போது வரை கூட லண்டன் செல்லக்கூடாது என்று நினைத்தவள், சிவாவின் அன்பினால் அதற்கு சம்மதித்தவள், விசா கிடைக்கவில்லை என்று வருத்தமும் கொண்டாள்.

“அதெல்லாம் பிரச்சனை இல்ல. நம்ம அம்மா இதுக்கும் ஏற்பாடு பண்ணிட்டு தான் போயிருப்பாங்க. அவங்களுக்கு இங்க இருக்கும் செல்வாக்கு அப்படி. உனக்கு லண்டன்ல எந்த ஒரு குறையும் வராது. அந்த நிலவன் தான் கொஞ்சம் குடைச்சல் கொடுப்பான். இருந்தாலும் நன் பார்த்துப்பேன்” என்று கூறினான்.

உடனே வேகமாக “அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்ல அண்ணா” என்று அவள் சாதாரணமாக கூற, ‘உனக்கு பிரச்சனை இல்லைனாலும், நிலவன் பிரச்னையை ஏற்படுத்தி தருவானே!’ என்று மனதினுள் நினைத்தவன், நிலவனின் தாத்தா எழுதிய உயிலை முழுவதுமாக ரோஜாவிடம் கூறினான்.

அதனைக் கேட்டவள், ‘அப்ப இதனால தான் செயற்கை கருத்தரிப்பைப் பத்தி என்கிட்ட பேசுனாரா. குழந்தை பிறந்தாத் தான் சொத்து கிடைக்குமா!’ என்று தன்னுள் நினைத்தவள், சிவாவைப் பார்த்து, “எனக்கு எந்தவித சொத்தும் வேண்டாம். என் பெயருக்கு வரும் சொத்தையும் நான் அவருக்கே கொடுத்துடுறேன். என்னை தொந்தரவு பண்ணாம அவர் இருந்தா மட்டும் போதும்” என்றாள் ரோஜா.

“அது பெரிய ப்ராசஸ் ரோஜா. அவன் ஐவிஎப் ட்ரீட்மெண்ட் பத்தி உன்கிட்ட ஏதாவது சொன்னானா?” என்று சிவா கேட்டதும், “ஆம்” என்று இவள் தலையை ஆட்டா, “நினைச்சேன்... அவன் இப்படி தான் செய்வான்னு எனக்கு நல்லாவே தெரியும். அவன் உன்னை தொந்தரவு செய்யாம நான் பார்த்துக்குறேன். நாம லண்டன் போகலாம்” என்றான் தன் தங்கையின் தோள்களைப் பற்றியபடி.

ஒரு மாதத்திற்குப் பின்,

வனரோஜா காலையில் தன் படுக்கையில் இருந்து எழுந்திருக்கும் போதே, அவளுக்கு ஒரே தலை சுத்தலாக இருந்தது.

அவள் லண்டன் வந்து கிட்டத்தட்ட ஒரு மாதங்கள் ஆகிவிட்டது. இங்கே வந்ததில் இருந்து நிலவனைக் காணாமல் மருத்துவமனையில் அவள் வேலை நன்றாகத் தான் செல்கிறது. மாலை நேரம் வீட்டிற்கு வந்ததும் சிவாவுடன் கழிக்கும் பொழுதால் அவள் மனம் மகிழ்ச்சியைத் தான் கொண்டிருந்தது.

இத்தனை வருடங்கள் வாங்காத பொருளை எல்லாம், ஒரே மாதத்தில் தன் தங்கைக்கு வாங்கிக் குவித்த வண்ணம் இருந்தான் சிவா. எல்லாம் நன்றாகத் தான் சென்று கொண்டிருக்கின்றது என்று வனரோஜா நினைக்கும் நேரத்தில் தான் இப்படி ஒரு இக்கட்டான நிலையில் வந்து மாட்டிக்கொண்டாள்.

மருத்துவமனைக்குக் கிளம்புவதற்குள் இத்தோடு மூன்று முறைக்கும் மேல் வாந்தி எடுத்துவிட்டாள்.

ஆளுயரக் கண்ணாடியில் தன்னைத் தானேப் பார்த்தவள், அப்போது தான் தன் மாதவிட்டாய் நாட்கள் தள்ளிப்போய் இருப்பதை உணர்ந்து, அதிர்ச்சியில் தன் கண்களை விரித்தாள்.

அவள் கை நடுக்கத்துடன் அவளது வயிற்றைப் பற்றியது. தலை சுத்தல் வேறு அதிகமாக, இடப்பக்கம் இருந்த மேஜையை இறுக்கமாக பற்றிக்கொண்டாள்.

“நான் ஒரு இம்போடேன்ட்” என்று, அன்று நிலவன் சொன்ன வார்த்தைகள் தான் அவள் காதில் திரும்பத் திரும்ப ஒலித்துக் கொண்டே இருந்தது.
 

NNO7

Moderator
அத்தியாயம் – 14

தானும் ஒரு மருத்துவர் என்பதனால், எதையும் உறுதி செய்யமலையே, தன் வயிற்றில் வளர்வது குழந்தை தான் என்று நம்பிய வனரோஜா, ‘எப்படி எப்படியோ பேசி என்னை நல்லா எமாத்திட்டீங்களே நிலவன்’ என்று கண்ணீர் வடித்தாள்.

அவளின் இன்னொரு மனமோ, ‘பின் ஐவிஎப் செயற்கைமுறை கருத்தரிப்பை நிலவன் பேசக் காரணம் என்ன?’ என்று எடுத்துரைத்தது.

அதில், “நான் ஒரு இம்போடேன்ட்” என்று அவன் கூறிய வார்த்தைகள் வேறு அவள் காதில் மாறிமாறி கேட்டுக்கொண்டு இருக்க, தன் கண்ணில் வழிந்தக் கண்ணீரைத் துடைத்தவள், “அப்ப உங்களுக்குத் தெரிஞ்சி நீங்க இம்போடேன்ட் தானே நிலவன்?. அதாவது உங்களால ஒரு குழந்தைக்கு தந்தையாக முடியாது அப்படித்தானே!” என்று கண்ணாடியைப் பார்த்துப் பேசியவள், இப்போது சிரிக்க ஆரம்பித்தாள்.

அப்படி சிரிக்கும் வனரோஜா தன் குணத்தில் இருந்து மாறுபட்டுத் தான் தெரிந்தாள். அவளும் மனுஷி தானே அவளுக்குள் இருக்கும் சொல்லப்படாத காயங்களும், வெளிவரும் நேரம் வரத்தானே செய்யும்.

அப்போது சரியாக சிவா, அவளின் அறையின் கதைவைத் தட்டி, “என்னாச்சி ரோஜா, உனக்கு உடம்பு சரியில்லையா? இன்னைக்குக் காலையில், நீ ஜாக்கிங் கூட வரல” என்று வெளியில் இருந்து கேட்க, வேகமாக தன் முகத்தைத் துடைத்துக் கொண்டவள், “இல்ல அண்ணா, நீ கீழப்போ, நான் இதோ வந்துடுறேன்” என்று சொல்லி வேகமாக கிளம்ப ஆரம்பித்தாள்.

சிவா தன் மகிழுந்தை இயக்க, அவன் அருகில் அமர்ந்து ஜன்னல் வழியே வேடிக்கைப் பார்த்தபடி வந்தாள் வனரோஜா.

எப்போதும் எதையாவது பேசிக்கொண்டே வரும் தன் தங்கை இன்று அமைதியாக, வருவதைப் பார்த்து, “என்னாச்சி ரோஜா, அந்த நிலவன் திரும்பி வந்துட்டானா?” என்றான் பல்லைக் கடித்துக் கொண்டு.

“ஐயோ, அதெல்லாம் இல்லை அண்ணா. அப்படியும் அவர் வந்தால் எனக்கு என்ன? என்னை சுத்தி தான் எப்போதும் உன்னோட பாடிகார்ட்ஸ் வேற இருக்காங்களே!” என்றாள் சிரித்தபடி.

“இந்தியாவில் இருக்கும் போது, என்னால உனக்கு சரியா பாதுகாப்புக் கொடுக்க முடியல. ஆனா இங்க அப்படி இல்ல. அந்த நிலவனின் நிழல் கூட உன் மேல படாது” என்று நம்பிக்கை அளித்தான்.

அதற்கு சிரித்தவள், “நான் போறதே அவரோட மருத்துவமனைக்கு தான் அண்ணா” என்றாள்.

“இருந்தாலும் அவனால் உனக்குத் தொந்தரவு தரமுடியாது நான் இருக்குற வரைக்கும்” என்றவனின் குரல் சற்று உள்ளே சென்றது.

“நிலவனுக்கும் உனக்கும் அப்படி என்ன தான் பிரச்சனை?” என்று வனரோஜா கேட்க, “நம்ம குடும்பத்துக்கும் அவன் குடும்பத்துக்கும் எப்போதும் பிரச்சனை தான். நம்ம தாத்தாவையும், அவனோட தாத்தாவையும் தவிர. அவனுக்கு நம்ம குடும்பத்தில் யாரைப் பார்த்தாலும் ஆகாது. ஏதோ தீண்டத்தகாதவங்கள பார்த்த மாதிரி முகத்தை சுழிப்பான் ” என்று மகிழுந்தை லாவகமாக செலுத்தியபடி கூறிக்கொண்டிருந்தான் சிவா.

சில கண அமைதிக்குப் பின்னர் மெதுவாக தன் வாயைத் திறந்த வனரோஜா, “நிலவன் எதுக்காக ஐவிஎப் பத்தி என்கிட்ட பேசணும்?” என்று எதுவும் அறியாதவள் போல் சிவாவிடம் கேட்டு வைத்தாள்.

சாலையைப் பார்த்தபடி வண்டியை ஓட்டிக் கொண்டிருந்த சிவாவோ, ரோஜாவின் புறம் திரும்பி பார்த்துவிட்டு, திரும்பவும் சாலையைப் பார்த்தவன், “நான் தான் சொன்னேனே ரோஜா, உனக்குக் குழந்தை பிறந்தாத் தான் சொத்து கிடைக்கும். உன்னை ஏமாத்திக் கல்யாணம் பண்ண மாதிரி, இதையும் பண்ண முடியாது பாரு. அதுக்குத் தான் இப்படி ஒரு திட்டத்தைத் தீட்டி இருக்கிறான் அந்த ராஸ்கல்..” என்று தன் பல்லைக் கடித்தபடி நிலவனைத் திட்டித் தீர்த்தான்.

“ஏன் அண்ணா, அந்த நிலவனுக்கு காதலி இருக்காமே!” என்றாள் ரோஜா.

அதற்கு தன் முகத்தை சுழித்தவன், “அப்படின்னு அவன் உன்கிட்ட சொன்னானா” என்று வினாவினான்.

“ஆம்” என்று தன் தலையை ஆட்டியவள், “கல்யாணம் ஆனாலும் உனக்கும் எனக்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது. ஏன்னா எனக்கு காதலி இருக்கான்னு நிலவனே சொன்னாரு” என்று அவள் சொல்லும் போதே சிரிக்க ஆரம்பித்தான் சிவா.

ரோஜா புரியாமல் சிவாவைப் பார்க்க, தன் சிரிப்பை நிறுத்தியவன், “அவனுக்குக் காதலி இருக்கான்னு சொல்றதே மிகப்பெரிய பொய் தான். அவனோட கதை வெளிய தெரிஞ்சிடக்கூடாதுன்னு தான், இந்தக் கதையை எல்லாம் சொல்றான்” என்க.

“எதுக்காக தேவை இல்லாமல் காதலி இருக்கான்னு பொய் சொல்லணும்?” என்று தனக்கு நிலவனைப் பற்றி தெரியவேண்டும், என்ற நோக்கில் சிவாவிடம் பேசினாள்.

“ஏன்னா அவன் ஒரு கே. அவனுக்குப் பொண்ணுங்களைப் பிடிக்காது” என்று அவன் சொல்லும் போதே அதிர்ந்தவளின் மனது, அன்று படுக்கையில், அவளின் இதழில் நிலவன் வன்மையாக தன் இதழைப் பொருத்தியது தான் அவள் முன்னால் வந்து படம் போட்டுக்காட்டி மறைந்தது.

சிவாவின் வார்த்தைகளில் தன் நெஞ்சில் கைவைத்தவள், “ச்சீ... நீ என்ன பேசுற அண்ணா?” என்று கத்தியே விட்டாள்.

இந்தியாவில் வளர்ந்ததால், ரோஜா இவ்வாறு பேசுகின்றாள் போல என்று நினைத்த சிவா, “இதுல என்ன அசிங்கம் இருக்கு ரோஜா. அது அவனோட காதல். இதில் நாம கருத்து சொல்லக்கூடாது...” என்று சொல்லிக்கொண்டே, தன் சிரிப்பை அடக்கமாட்டாமல் சிரித்தவன், “இருந்தாலும் அந்த நிலவனை நாம பேசுறது தப்பு இல்லை தான். அவன் ஒரு கேன்னு தெரிஞ்சதும் எனக்கு அவ்வளவு சிரிப்பு வந்தது. எப்போதுமே கெத்தாவே அலைவான். நம்மளைப் பார்த்தா ஏதோ புழுவைப் பார்க்குற மாதிரி ஒரு லுக்கு விடுவான் பாரு... எனக்கெல்லாம் அவ்வளவு ஆத்திரம் வரும்” என்று பேசிக்கொண்டே சென்றான் சிவா.

சிவா சொன்னதைக் கேட்டு ஜீரணிக்க முடியாத ரோஜா, “அப்படி எல்லாம் எதுவும் இருக்காது அண்ணா..” என்று அவள் சொல்லும் போதே, “அதெல்லாம் உண்மை தான் ரோஜா” என்றவன் தன் சிரிப்பைக் கைவிட்டவனாக இப்போது மெதுவான குரலில், “நிலவனால அப்பா ஆக முடியாது இது எனக்கு நல்லாவே தெரியும். அவன் ட்ரீட்மெண்ட் பத்தின பைலைக் கூட நான் பார்த்தேன்” என்று உறுதியாகக் கூறினான் சிவா.

உடனே தன் வயிற்றைத் தடவிய ரோஜா, ‘என்னை வச்சி நல்லாவே கேம் விளையாடிட்டீங்க நிலவன், இனி நான் விளையாடும் கேமைத் தான் நீங்க பார்க்கப் போறீங்க’ என்று முதன் முதலாக தன் குணத்திற்கு அப்பாலாக நினைத்துக் கொண்டாள்.

அமைதியான மற்றும் பொறுமையான குணம் கொண்டவள் தான் நம் நாயகி வனரோஜா, ஆனால் இந்த சமுகத்தில் அவள் சந்தித்த துரோகங்கள் மற்றும் அவமானங்களால், அவளின் மனது மிகவும் காயம்பட்டுத்தான் போனது, அதில் இருந்து வெளிவர முடியாமல் தவித்தாலும், தன்னைத் தானே இரும்பு இதயம் கொண்டவளாக செதுக்கிக் கொண்டாள்.

“ஏன் அண்ணா, நம்ம ஷேர்ஸ் கீழ இறங்குனதுக்குக் காரணமே அந்த நிலவன் தான்னு சொல்ற! பின்ன ஏன் அவரை எதுவுமே நீ பண்ணல?” என்றாள் ரோஜா.

“அவன் என்ன பண்ணாலும், தொழிலில் அவனை எதிர்த்து எதுவும் பண்ணகூடாதுன்னு நம்ம தாத்தா சொல்லிட்டாரு. அதை அம்மாவும் கேட்டுக்கிட்டு, என்னையும் எதுவும் செய்யவிடுறது இல்ல...” என்று விரிவாக தொழிலில் நடக்கும் போட்டிகளை சொன்னவன், தன் தாய் பரணியை எதிர்த்து எதுவுமே செய்யமுடியாது என்பதனையும் கூறினான்.

அதனைக் கேட்டுக்கொண்டவள், “தொழிலில் தானே எதுவும் பண்ணக்கூடாதுன்னு சொல்லி இருக்காங்க. நாம நிலவனோட பெர்சனல் லைப் பத்தி வெளிய கொண்டு வரலாம்” என்றாள் யோசனையாக.

அதிர்ச்சியுடன் தன் தங்கையைப் பார்த்தவன், “ரைட்டு நீ ஏதோ ப்ளான் பண்ணிட்ட. ஆனா அவன் கேன்னு எல்லாருக்கும் தெரியவர்றதுனால, ஷேர்ஸ்ல பெருசா எந்த பாதிப்பும் வரப்போறது இல்ல” என்றவனிடம், “ஆனா அந்த நிலவனின் தூக்கம் இதனால, கெட்டுத் தானே போகும்” என்றாள் தன் உதட்டை ஒரு பக்கமாக வளைத்தபடி.

ரோஜாவின் பேச்சில், நிலா எப்போதும் தன் அண்ணன் நிலவனைக் கூறி தன்னை கேலி செய்தது எல்லாம் சிவாவின் நியாபகத்திற்கு வர, நிலவனை ஏதாவது செய்யவேண்டும் என்று ரோஜாவைப் போலவே யோசித்தான்.

இருவரது மனநிலையில் ஒரே நிலையில் இருக்க, அதை உடன்பிறப்புகள் இருவரும் உடனே செயல்படுத்தினர்.

அடுத்த நாளே, நிலவன் லண்டன் வந்து தரையிறங்கும் போது, அவனைப் பற்றிய செய்தி தான் பிரபல பத்திரிகையில் தொழிலில் சம்பந்த முதல் பக்கத்தில் வெளியாகி இருந்தது.

காலையிலையே அண்ணன் தங்கை இருவரும் தங்களுக்குள் பேசி சிரித்தபடி இருந்தனர். சிவாவிற்கு அந்த நேரத்தில் நிலாவின் நினைப்பு தான் வந்தது. அவளுடன் கடைசியாக பேசி ஒரு மாதமும் அதனுடன் ஒரு வாரமும் சென்றுவிட்டது.

‘என்னவோ உன் அண்ணன் தான் பெரிய ஆணழகன்னு பேசுவியே நிலா... இப்ப எப்படி பேசுவ’ என்று நினைத்துக் கொண்டவன், தன் தங்கையிடம், “இன்னைக்கு நீ ஹாஸ்பிடல் போக வேண்டாம். நம்ம நிறுவனத்துல ஷேர் ஹோல்டர்ஸ் மீட்டிங் இருக்கு. நாம அங்க போகணும்” என்றான்.

“ம்ச்.. நான் அங்கெல்லாம் வரல. என்னோட ஷேர்ஸ்சை உனக்குக் கொடுக்குறேன்னு சொன்னா நீயும் கேட்க மாட்டேங்குற” என்று குறைபட்டுக் கொண்டாள் ரோஜா.

“அதெல்லாம் வேண்டாம்னு சொல்லக்கூடாது ரோஜா. இது வெறும் காசு பணம் சம்பந்தப்பட்ட சமாச்சாரம் கிடையாது, இது நம்ம உரிமை சம்பந்தப்பட்டது” என்று ஏதேதோ பேசி ரோஜாவை சம்மதிக்க வைத்தவன் அவளுடன் கங்கா நிறுவனம் சென்றான்.

சீட்டுக்கட்டுப் போல் ஒன்றன் மேல் ஒன்றாக சதுர வடிவ கண்ணாடிப்பெட்டியை அடுக்கி வைத்தது போல் இருந்தது அந்த நிறுவனம். மிகப்பெரிய கோட்டைச் சுவரின் மேல், கங்கா நிறுவனம் என்ற பெயரைத் தாங்கிய லோகோ இடம் பெற்று இருந்தது. அனைத்தையும் பார்த்துக் கொண்டே வந்தவள், “இவ்வளவு பெரிய நிறுவனமா?” என்றாள் சிவாவிடம்.

“இது மெயின் பிரான்ச் ரோஜா. இன்னும் நம்மக்கிட்ட, மருந்து செய்யும் லேப் ஐம்பதுக்கும் மேற்பட்ட இடத்துல இருக்கு. இதுல நம்ம கங்கா ஹாஸ்பிடலும் சேரும். ரெண்டு வருஷம் கழிச்சு நம்ம ஹாஸ்பிடல் பொறுப்பையும் நீ தான் பார்க்கணும்” என்று பேசிக்கொண்டே செல்ல, “உன்னைத் திருத்த முடியாது” என்று தன் தலையை ஆட்டிக்கொண்டாள் வனரோஜா.

சரியாக இருவரும் கங்கா நிறுவனத்திற்குள் காலடி எடுத்து வைக்கும் போதே, சிவாவிடம் ஓடி வந்த ராஜ், “சார், பரணி மேடம் உங்களை அவசரமா அவங்க ரூம்க்கு வர சொன்னாங்க” என்றான்.

தன் மணிக்கட்டில் உள்ள கடிகாரத்தைப் பார்த்தவன், “இப்ப எதுக்கு? மீட்டிங் ஆரம்பிக்கப்போதே!” என்றான் சிவா.

“அவங்க தான் உங்களைக் கையோட கூட்டிட்டு வர சொன்னங்க சார்” என்று அவன் அவசரப்படுத்த, அதற்கு மறுத்துப் பேசப்போன சிவாவின் கையைப் பிடித்த ரோஜா, “ஏதாவது முக்கியமான விஷயமா இருக்கும் நீ போயிட்டு வா அண்ணா” என்றதும், “சரி” என்றவன் அங்கே இருந்த சோபாவைக் கைக்காட்டி, நீ இங்க இரு. நான் வந்ததும் சேர்ந்து போகலாம்” என்று சொல்லிவிட்டு அவன் சென்றான்.

ரோஜாவும் சோபாவை நோக்கி நகரும் போது, அவள் முழங்கையைப் பிடித்து இழுத்தான் நிலவன்.

அதில் நிலை தடுமாறிய ரோஜா, நிலவனின் நெஞ்சில் மோதி நின்றாள். பல நாட்கள் கழித்து நிலவனைக் காணும் பெண்ணவளின் முகம் பயத்தைத் தத்தெடுக்க, அவள் உதவிக்கு யாரேனும் தென்படுகின்றனரா, என்று கண்களை சுழற்றிப் பார்த்தாள். அந்த ப்ளோரில் மீட்டிங் ஆரம்பிக்க சில நிமிடங்கள் மட்டுமே இருந்ததால், அந்த இடத்தில், இவர்களைத் தவிர வேறு யாரும் இல்லை.

அவள் சுதாரிப்பதற்குள், அவள் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு, ஒரு அறைக்குள் சென்று கதவை அடைத்தான்.

பயத்தில் சுவற்றை ஒற்றி நின்றவளின் இருபுறமும் தன் கைகளை வைத்த நிலவன், குனிந்து அவள் முகத்திற்கு நேராக தன் முகத்தை வைத்தவன், “நான் கே இல்லைன்னு உன் அண்ணனுக்குத் தான் தெரியாது... உனக்குமா தெரியாது?” என்று சத்தம் இல்லாமல் அழுத்தமாக கேட்டு வைத்தான்.
















 
Status
Not open for further replies.
Top