எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

9 வான்மழை அமிழ்தம் நீ!

priya pandees

Moderator
அத்தியாயம் 9

மருத்துவர்கள் அன்றும் சிலருக்கு சிகிச்சை அளித்து கொண்டிருந்தாலும், கவனம் அறிக்கையை எதிர்பார்த்தே இருந்தது. மற்றவர்களுக்கு அவர்கள் மருத்துவமனை தலைமையிடமிருந்து வரவேண்டிய அறிக்கை, இனியும் இங்கு தொடரவேண்டுமா இல்லை இன்றுடன் கேம்ப்பை முடித்து கொண்டு கிளம்ப வேண்டுமா என்ற குழப்பத்தில் அந்த அறிக்கையை எதிர்பார்த்திருந்தனர்.

யாஷ் அவன் மனைவியின் மருத்துவ அறிக்கையை எதிர்பார்த்து காத்திருந்தான். என்ன வந்தாலும் குணப்படுத்திவிடும் முனைப்புடன் தான் அதை எதிர்பார்த்திருந்தான்.

அறிக்கைகள் வந்து சேர மாலை ஆகிவிட்டிருந்தது. மருத்துவர்களுக்கு சென்ற வேலையை முழுமையாக முடித்து விட்டு தான் வரவேண்டும் என்று உத்தரவாக வந்திருந்தது. எவ்வளவு நாள் எடுத்தாலும் நூற்றைம்பது கிராம மக்களுக்கும் முறையே பரிசோதனை முடித்து தான் திரும்ப வேண்டும் என வந்துவிட, மருத்துவர்கள் அடுத்து என்ன செய்யலாம் என்ற யோசனையில் இறங்கினர்.

வருணியின் மருத்துவ அறிக்கையில் தீவிர கவனமாக இருந்தான் யாஷ். அதனால் மற்ற மருத்துவர்கள் அவர்களே இடமாற்றம் செய்ய வேண்டியவைகளை க்ளாடியனுக்கு எடுத்துரைத்து கொண்டிருந்தனர். அவர்கள் அடுத்து தங்க வேண்டிய இடம், மருத்துவ பரிசோதனை கூடத்தையும் மொத்தமாக மாற்ற வேண்டிய கட்டாயம் என அவர்கள் கலந்தாலோசிக்க வேலைகள் நிறைய இருந்தன.

யாஷ் அவர்கள் மருத்துவ குழுவிடமிருந்து சற்று தள்ளி ஒரு மரத்தடியில் கிடந்த கல்லில் அமர்ந்திருந்தான்.

"என்ன வந்துருக்கு மாமா?" என அவனருகிலேயே அவன் முகத்தை ஆராய்ந்து கொண்டு அமர்ந்திருந்தாள் வருணி.

"இட்ஸ் லைக் ஹெர்னியாடி. குடல்ல புண் மாதிரி கட்டி அல்லது சதை வளந்துருக்கு. அன்னைக்கு வயித்துல ஸ்கேன்ல தெரியல, மேபி லேப்ரோஸ்கோபி பண்ணா எந்த இடத்துல இருக்குன்னு தெரிஞ்சுக்கலாம். பட் கண்டிப்பா ஆப்ரேட் பண்ணணும்" பார்வையை அறிக்கையிலிருந்து விளக்காமலே கூறிக்கொண்டிருந்தான்.

"மை குட்நெஸ்" என அதிர்ந்து எழுந்து நின்றவள், "மாமா! அப்ப சாகுறளவுக்கு பெரிய நோய் இல்ல?" என அதிர்ச்சி விலகாமலே கேட்க, அப்போது தான் நிமிர்ந்து நன்கு முறைத்து பார்த்தான் யாஷ்.

"ஜீஸஸ்‌. நா இப்ப என்ன பண்ணுவேன். இத யார்டையாவது சொல்லி பார்ட்டி பண்ணணுமே? மாமா வா வா ஜலக்ரிடை பண்ணுவோம். நா செம ஹேப்பியா இருக்கேன். பட்ட பகலா இருக்கே வெளில தெரியுமோ? வா மாமா" என அவனை சுற்றி வந்து கையை காலை உதறி அவனை இழுத்து எழும்பி நிற்க வைத்து அப்படியே பாய்ந்து கழுத்தோடு கட்டிக்கொண்டவளுக்கு, கண்ணை கரித்து கொண்டு அழுகையும் வந்தது.

"டேய் யாஷ் நா சாக மாட்டேன்டா" என நிமிர்ந்து அவன் முகமெல்லாம் முத்தமிட்டு, ஆவேசமாக அவன் இதழோடு ஒன்றிக் கொள்ள, யாஷ் நிதானமாகவே இருந்தான். அவளின் மனபோராட்டத்தை அவனால் புரிந்து கொள்ள முடிந்தது. அன்றும் இப்படி தானே பரிதவித்தாள் என பார்த்திருந்தான்.

ஒருகையிலிருந்த மருத்துவ அறிக்கையோடு அவளை தானும் இறுக்கி அணைத்து கொண்டவன், "ரிலாக்ஸ் வருணி. எதுவுமே இல்லன்னு ரிப்போர்ட் வரல, டிசிஎஸ் இருக்குன்னு ரிப்போர்ட் வந்துருக்குடி. இன்கேஸ் நீ இப்பவும் இத என்னன்னு பாக்க விடாமலே வச்சுருந்தனா இன்னும் சிவியராகி மொத்த இன்டெஸ்டைன்னும் காலி ஆகிருக்கும். அப்றம் பவெல் இல்லாத மிருகம் மாதிரி உயிர் வாழ முடியுமா உன்னால? நீ லேசா முடிச்சுருக்குறத அல்ரெடி ரிஸ்காக்கி வச்சுருக்க, இப்ப உள்ள புண்ணு எந்தளவுக்கு இருக்குன்னு தெரியலடி" என்றவன் அவளை கட்டி பிடித்திருந்தாலும் முதுகில் அடி போட்டுக் கொண்டே தான் பேசிக் கொண்டிருந்தான்.

நிமிர்ந்து அவன் முகம் பார்த்து, கன்னம் பிடித்து கொஞ்சி சிரித்தவள், "ஒன் இயரா தான் சிம்பட்மஸ் இருக்கு, சோ பெருசா எதுவும் இருக்காது. அண்ட் இங்க வந்தும் இத்தன நாள்ல எனக்கு எதுவும் வரல பாத்த தானே? சோ லேசா தான் இருக்கும் சரியாகிடும். நா ஹண்ட்ரட் இயர்ஸ் வாழ போறேனே!" என அவன் கழுத்தை கட்டிக்கொண்டு கொண்டு அழுது, சிரித்து, குதித்து என அவனை ஒருவழி ஆக்கினாள்.

பிஸ்மத்துடன் பேசி நின்ற அனைவரும் கூட இவர்களை திரும்பி பார்த்தனர், அவள் எதற்கோ சந்தோஷமாக இருக்கிறாள் என புரிந்து, சிரித்தவாறே, "இஸ் ஷீ ஓகே?" என்றார் இருந்த இடத்தில் இருந்தே சத்தமாக பிஸ்மத் யாஷிடம்.

"டாக்டர் பிஸ்மத்!" என யாஷை விட்டுவிட்டு அவரிடம் ஓடிவந்த வருணி, அவர் கையை பிடித்து தானும் சுற்றி அவரையும் சுற்ற வைத்து, ஆர்பாட்டம் தான் செய்தாள். அவர் புரியாமல் சிரித்தாலும் அவளுடைய சந்தோஷத்தில் இணைந்து கொண்டார்.

"என்னாச்சு?" என யாஷிடம் கேட்ட மற்றவர்களிடம்,

அவள் சந்தோஷத்தை பார்த்து தானும் உள்ளாற மகிழ்ந்த யாஷ், "ஏதோ பயங்கர நோய்னு எங்க எல்லாரையும் ஒரு வருஷமா படுத்திட்டா. அது என்னன்னு கூட செக் பண்ணமாட்டேன்னு அடம். இங்க வந்ததுல அறிவு வந்து செக் பண்ண ஒத்துகிட்டா, அதோட ரிப்போர்ட்" என்றான் கையிலிருந்ததை காண்பித்து.

"ஓ! நா நினைச்சேன், வருணி ப்ரெக்னன்ட் சோ நீங்க ஸ்கேன், ப்ளட் டெஸ்ட்டுலாம் பண்றீங்கன்னு. இப்பவும் அதோட டெஸ்ட் பாஸிட்டிவ்னு அவ என்ஜாய் பண்றா போலன்னு" ஜெனிலியா இவ்வாறு சொல்லவும்,

"அடுத்த ஸ்கேன் அதுக்கா தான் இருக்கும்" என்றான் யாஷ், மற்றவர்கள் சிரிக்க,

"ஒரு டாக்டரா இருந்துட்டு அவ ஹெல்த்த அவளே சரியா பாத்துக்க மாட்டாளாமா?" என்றாள் ஜெனிலியா.

"இப்ப எல்லாம் நார்மல்னு வந்துட்டா?" என ஒருவர் கேட்க,

"டாக்டர் பிஸ்மத்ட்ட ஒருக்க காட்டணும். அவர் தான் எக்ஸாக்டா என்னன்னு சொல்லணும்" என்றான். அதிலேயே மற்றவர்கள் புரிந்து கொண்டனர்.

டாக்டர் பிஸ்மத் ஒரு 'கேஸ்ட்ரோஎன்டாலஜிஸ்ட்' குடல், இரைப்பை, உணவுக்குழாய் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு சிகிச்சை அளிக்க கூடியவர்.

வருணி, ஒரு நிலையில் இல்லாமல் துள்ளிக்கொண்டு தான் திரிந்தாள். கிட்டத்தட்ட ஓராண்டு கவலையை இறக்கி வைத்துவிட்ட நிம்மதியில் கால் தரையில் நில்லாமல் சுற்றி வந்தாள்.

அவள் ஆர்ப்பாட்டத்தில் மற்றவர்களும் அயர்வு நீங்கி புத்துணர்ச்சி பெற்றனர் என்றே சொல்லலாம். அன்று இவர்கள் அங்கிருந்து கிளம்புவதால் அந்த இருப்பத்தைந்து கிராம மக்களும் கூட ஒன்றிணைந்து இவர்களுக்கென்று இரவு உணவு விருந்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

"நா நல்ல மூட்ல இருக்கேன். இவனுங்கட்ட விருந்துன்னு போனா அந்த நல்ல மூட வந்த தடம் தெரியாம காணாம ஆக்கிடுவாங்க மாமா. சோ நா வரல, நீயும் போகாத நாம தனியா இங்கேயே என்ஜாய் பண்ணலாம்" என கண்கள் இரண்டையும் அவள் சிமிட்டி சிமிட்டி பேசியதில், யாஷுக்கு அப்படியொரு சிரிப்புதான். குளித்து கிளம்ப பாக்ஸரோடு நின்றவனை தான் உசுப்பேற்றிக் கொண்டு நின்றாள்.

"நீ இன்னைக்கு நா எதுவும் டிமாண்ட் பண்ணாமலே அள்ளி குடுப்பன்னு தெரியும். இருந்தாலும் இப்ப நாம போலாம். எல்லாரும் போகும் போது நம்ம மட்டும் வரலன்னு சொன்னா எனக்கு மட்டும் தெரிஞ்சது இங்க இருக்க அத்தன பேருக்கும் தெரிஞ்சுடும். அப்றம் நம்மள செக்ஸ்வல் அடிக்ட்ஸ்னு ஈசியா சொல்லிடுவானுங்க"

"சொன்னா சொல்லிட்டு போட்டும் மாமா" என அவன் முகத்தை நெருங்கி, இடுப்பைக் கட்டிக்கொண்டு சினுங்கியவளின் உதட்டை பிடித்திழுத்து தன்னோடு பொறுத்திக் கொண்டான்.

அவனும் பயந்து கொண்டு தானே இருந்தான், அவள் இல்லாமல் ஒரு நாளையும் தான் அவனால் கடத்திவிட முடியுமா என்ன? அவள் ஒருத்தி உடன் வேண்டும் என்றுதானே மொத்த மாணவர்களையும் உடனிழுத்துக் கொண்டு வந்துருக்கிறான். இப்போதும் உள்ளுக்குள் பயம் இருக்கிறது. ஆனால் முதலில் கண்ணுக்கு எதிரே இருக்கும் எதிரியே தெரியாத நிலைக்கு இன்று அது என்ன என்றும் தெரியும் குணப்படுத்தவும் முடியும் என்ற நம்பிக்கையில் வந்த ஆசுவாச முத்தம். ஆள்முத்தமாக அது நீடித்து அடுத்த கட்டத்திற்கு அது நீண்டு கொண்டிருக்க, சுதாரித்தான் யாஷ். மயக்க நிலையில் இருந்தவள் கழுத்தில் அவன் கடித்து வைத்ததில், "மாமா!" என அவனை தள்ளிவிட,

"போய் ட்ரெஸ் சேன்ஜ் பண்ணிட்டு வாடி. இப்ப எப்படியும் தேடி வருவானுங்க டிஸ்டர்பன்ஸோட எதுவும் வேணாம் எனக்கு" என்றவன் நீருக்குள் குதித்து விட்டான்.

"உன்ன பாத்துக்றேன்டா. பாதில விட்டுட்டு போறல்ல? மறுபடியும் கொஞ்சிட்டு வா முடிச்சுவிட்டுறேன்" என வெளியே நின்று இவள் கத்த,

"நான் முடிச்சா என்ன நீ முடிச்சா என்ன? சொர்க்கம் தானடி ரெண்டுமே?" என்றவன் நீரில் மிதந்து சிரிக்க,

"போடா பன்னிமாடு" என முறைத்து விட்டு திரும்பி நடந்தாலும், அவன் பதிலில் சிரிப்பு பீறிட்டு தான் வரபார்த்தது. தெரிந்தால் இன்னும் கலாய்ப்பான் என்பதால் விறுவிறுவென நடந்துவிட்டாள்.

அங்கு மரவீட்டில் பெண்கள் அனைவரும் கிளம்பி கொண்டிருக்க, இவளும் அவர்களுடன் இணைந்து கொண்டாள்.

"விருந்துக்கு போணும்னு என்ன டீல்ல விட்டல்ல உன்ன என் பின்னயே ஜொல்லு விட விடல நா ஆரோன் மக இல்லடா மாமா" என்றவள் அவள் பெட்டியில் அலசி ஆராய்ந்தாள். அவள் எடுத்து வைத்தவரை அனைத்துமே மருத்துவப் பணிக்கு ஏற்ற உடைகள் மட்டுமே, ஒன்றிரண்டு வெளி நிகழ்ச்சிகளுக்கு ஏற்ற கூடுதல் வகை சுடிதார் ரகங்கள் எடுத்து வைத்திருந்தாள் அவ்வளவே.

"நானே பாத்து பாத்து தான் எடுத்து வச்சேன் அதுல ஒரு பெட்டியவே வீட்டுல விட்டுட்டான் அந்த கடங்காரன். இப்ப எல்லாம் வெஸ்ட்ர்ன் கேஸுவல் வியரா இருக்கு, இதுல எத போட்டாலும் மயங்க மாட்டானே!" என்றவள் அனைத்தையும் எடுத்து வெளியில் போட்டிருக்க, அடுத்திருந்த ஜிப் வைத்து பத்திரபடுத்தும் பொருட்களை வைக்கும் பகுதியை திறந்தாள், அது தான் அவள் மாத்திரைகள் எடுத்து வைத்த பகுதி, உள்ளே அழகாக மடித்து வைக்கப்பட்டிருந்தது இரண்டு உடைகள், பிரத்யேகமாக தேனிலவிற்கென உடுத்தபடும் குட்டி இரவு உடை ஒன்றும், 'நெட்டட்' டாப்பும் ஷார்ட்ஸுமாக மற்றொரு குட்டி உடையும் இருக்க கண்டு அதிர்ந்து, அதை எடுத்து விட்டு உள்ளே வரை கையை விட்டு தேடிப்பார்த்தாள் அவள் உட்கொள்ளும் மாத்திரைகள் எதுவுமே அங்கு இல்லை.

"அடப்பாவி மாமா. நாம ஒன்னும் ஹனிமூன் ட்ரிப் போகல, மெடிக்கல் கேம்ப் போறோம், அங்க நா டாக்டரா தான் இருப்பேன் நீ ஸ்டூடண்ட்டா தான் இருக்கணும்னு என்னலாம் பேசுன? ஃப்ராடு! உன் ஜலக்ரிடைலயே நா சுதாரிச்சுருக்கணும்டா. அவன் மட்டுமே பாக்கறதுக்குனே தேடித் தேடி வாங்கிருக்கான். ஸ்டே பண்ண ரூம் கிடைச்சுருந்தா இந்த ட்ரஸயும் எனக்கு மாட்டி பாத்திருப்பான். கிடைக்கல பாவம்" என பல்லை கடித்தவள், இரண்டு கையிலும் அந்த உடைகளை வைத்து திருப்பி திருப்பி பார்த்திருக்க,

அருகில் சிலரும் தன்னையே பார்ப்பது அப்போது தான் புரிய திரும்பி பார்த்தாள், அவள் தனியாக புலம்பிக் கொண்டிருந்ததை தான் அங்கிருந்த பெண்கள் பார்த்து கொண்டிருந்தனர்.

"நைட் டின்னருக்கு ரெடி ஆகிடுவியா நீ?" என கேட்டாள் அவள் மாணவ நண்பர்களுள் ஒருத்தி.

"ஃபைவ் மினிட்ஸ்ல ரெடி ஆகிடுறேன் பாரு" என்றுவிட்டு, அப்படியே அனைத்தையும் பெட்டிக்குள் திரும்ப அமுக்கிவிட்டு, இருப்பதில் அகப்பட்ட அழகான ஒரு உடையுடன் எழுந்து கொண்டாள்.

கொஞ்சம் இருட்டாக இருந்த இடத்திற்கு சென்று உடை மாற்றிக் கொள்வது தான் அங்கு சென்றதிலிருந்தே அவர்கள் கடைப்பிடிப்பது. வருணியும் விளக்கொளி எட்டாத இடம் சென்று நின்று, அந்த கையில்லாத கருப்பு டாப்பையும், கிளிப் பச்சை நிறத்தில் வெள்ளை பூக்கள் போட்ட நீண்ட குடைபோன்ற அமைப்பு கொண்ட ஸ்கர்ட்டையும் அணிந்து கொண்டு ஐந்து நிமிடங்களில் வெளியேவும் வந்திருந்தாள். தெரிந்த வெளிச்சத்தில் முடிந்தளவு அவள் அழகை மேம்படுத்திக் கொண்டு, சுருட்டை முடியை மொத்தமாக ஒரு போனிடெயிலினுள் அடக்கிக் கொண்டு கிளம்பி விட்டாள்.

அவர்கள் குடிலின் கீழேயே விருந்திற்கு அனைத்து ஏற்பாடும் நடந்து கொண்டிருந்தது. ஆண்கள் அங்கு முன்னரே கூடியிருந்தனர், பெண் மருத்துவர்கள் தான் தாமதமாக சென்று இணைந்து கொண்டனர். காட்டுவாசி மக்களும், ஆண்களும் பெண்களுமாக கூட்டமாக கூடியிருந்தனர், அவர்களின் தலைவர் வரும்வரை அந்த இடமே கலகலப்பாக இருந்தது.

யாஷ் பார்வை எப்போதும் போல் மனைவியை தான் சுற்றி வந்தது, ஒரு மேசையில் சாய்ந்து நின்றவன் அவள் வேண்டுமென்றே இவனை கண்டுக்காமல் அங்குமிங்கும் அழைவது தெரிந்தும் அவள் பின்னரே பார்வையை தொடரவிட்டுக் கொண்டிருந்தான். அவள் எப்படி இருந்தாலும் அவனுக்கு கிறுக்கு பிடிக்குமளவிற்கு அழகாக தான் தெரிவாள், இதுபோன்ற சிறப்பு உடைகளில் இன்னும் பிடித்தம் அதிகம் பெற்று பித்து பிடித்துவிடும்.

அவர்கள் தலைவர் வரவும் விருந்து ஆரம்பமாகியது, "நாம கிளம்புறதுல அதிக சந்தோஷப்பட்டு தான் இந்த டின்னர் பார்ட்டியே குடுக்குறாருன்னு நினைக்கிறேன்" வருணி சொல்ல, மெல்ல சிரித்து கொண்டனர் மருத்துவர்கள்.

இந்த மருத்துவர்களால் அங்கு நன்மை அடைந்தவர்களும் இருக்கின்றனர், அவர்கள் நிச்சயம் இனி எந்த ஆங்கில மருத்துவத்தோடு மருத்துவர்கள் வந்தாலும் ஏற்று கொள்வர், இந்த தலைவர் போன்ற சிலர் மட்டுமே ஏற்கவே மாட்டோம் என அந்த பிடியில் உறுதியாக நிற்க கூடும். முக்கியமாக பெண்கள் நிச்சயம் ஏற்றுக் கொள்வர், வலியில்லாத வாழ்க்கையை தானே அனைவரும் வேண்டுவது!

வருணி முதல் நாள் கண்ட மூன்று பெண்களையும் தன்னுடனே இருக்குமாறு பார்த்துக் கொண்டாள். அவர்களிடம் செய்கை முறையில் பேசிக் கொண்டே இருந்தாள்.

அவர்கள் கொடுத்த உணவு விருந்து, உப்பு உறைப்பும் குறைவாக இருந்தாலும் ருசியாக இருந்தது. எதிலுமே செயற்கை பூச்சு இல்லாத உணவு வகைகள் அதன் ருசியே தனியாக தான் இருந்தது.

"உங்களோட மருத்துவமும் எங்களோட மருத்துவமும் ஒன்று கிடையாது தான். இரண்டும் ஒன்றுக்கு ஒன்று சலச்சதில்லை தான் ஆனாலும் எங்களால் முடியாத சிகிச்சைகள் என்றிருப்பதை நீங்கள் சுலபமாக செய்கிறீர்கள் அதை நாங்கள் ஏற்றுக்கொள்ள தான் வேண்டும். வந்ததற்கும் எங்களுக்கு சிறப்பான பல மருத்துவத்தை செய்ததற்கும் எனது நன்றிகள்" என அவர்கள் மொழியில் தலைவர் பேச ஜனோமி ஆங்கிலத்தில் இவர்களுக்கு எடுத்துரைத்தான்.

உணவு நேரம் முடிந்ததும், "காலைல அடுத்த ஏரியா கிளம்பணும் க்ளாடியன். அங்க எல்லாம் ஷிஃப்ட் பண்ணணும். அங்க இதே மாதிரி எல்லா ஏற்பாடும் பண்ணணும்? எல்லாம் ஒரே நாள்ல பண்ணிடுங்க ப்ளீஸ். நாங்க எவ்வளவு சீக்கிரம் முடிக்குறோமோ அவ்வளவு சீக்கிரம் எங்க ப்ளேஸுக்கு ரிட்டர்ன் போக முடியும்" என்றான் யாஷ்.

"முதல்ல என்ன பண்ணணும்னு தெரியாதனால தான் எல்லாமே தாமதமாச்சு டாக்டர். இந்த முறை இப்படித்தான்னு தெரியும், அதனால நாளைக்கு அங்க போனதும் எல்லாம் ரெடி பண்ணி தந்துடுறோம்" என க்ளாடியன் சொல்ல,

"இந்த மூணு பேரையும் நாம கூட்டிட்டு போவோமா?" என்றாள் தன்னருகே நின்ற பெண்களையும் சேர்த்து தோளில் கையிட்டவாறு,

"இவங்க எதுக்கு?" என்றான் ஜனோமி.

"இந்த பொண்ணுங்க அங்க வந்தா அங்கிருக்குற மத்த பொண்ணுங்களுக்கு எங்க ட்ரீட்மெண்ட்ட ஈசியா சொல்லிடுவாங்க. இல்லனா இங்க நடந்த போராட்டம் அங்கையும் நடக்கும்"

"அவளுக்கு இப்பதான் குழந்தை பிறந்துருக்கு" என்றான் முந்தைய வாரம் குழந்தை பெற்ற பெண்ணை காண்பித்து.

"அதனால என்ன? எங்களால பாத்துக்க முடியும்" என்றாள் வருணி.

"தலைவர் ஒத்துப்பாரான்னு தெரியலையே?"

"இந்த பொண்ணு க்ளாடியன் வைஃப், அவரோட தான் வரப்போறா, அந்த பொண்ணு இப்பதான் குழந்தை பெத்துருக்கா, சோ ஹஸ்பண்ட் விட்டு தள்ளி இருக்கலாம் தப்பில்ல. இந்த பொண்ணு சின்ன பொண்ணு தானே? இவளோட அம்மாட்ட மட்டும் கேட்டா போதாதா?"

"பேசி பார்க்கறேன்"

"கண்டிப்பா நா கூட்டிட்டு போகணும். நாட்டுக்குள்ள கூட்டிட்டு போக கேட்கல, இதே காட்டுக்குள்ள உங்க சொந்தங்கள் வீட்டு பக்கம் கூட்டிட்டு போக தானே கேட்கிறேன்"

"எதுக்கு அவங்க?" என கேட்ட மற்ற மருத்துவர்களுக்கும், "கேர்ள்ஸ் அங்கையும் இவங்கள மாதிரி தான் கஷ்டப்பட்டுட்டு இருப்பாங்க. மறுபடி மறுபடி நாம எக்ஸ்பிளைன் பண்ணிட்டே இருக்க முடியாது. இவங்க அத நமக்கு ஈசியாக்குவாங்க" என்றுவிட, அவர்களும் ஏற்றுக் கொண்டனர்.

"காலைல மூணு பேர் வீட்லையும் பேசிட்டு கூட்டிட்டு போகலாம்" என சொல்லிச் சென்றனர் க்ளாடியனும் ஜனோமியும்.
 

priya pandees

Moderator
அனைவரும் அவரவர் மரவீட்டிற்கு தூங்கச் சென்றபின், யாஷும் வருணியை கடத்திக் கொண்டு அவர்கள் இருப்பிடம் வந்துவிட்டான்.

"வேணும்னே பண்ணுவியாடி நீ? எங்கிட்ட வான்னு எத்தனை டைம் கூப்பிட்டேன்?" என்றான் தூக்கி கொண்டு வரும்போதே,

"நீதான கூட இருந்தவள விரட்டி‌ விட்ட?" அவன் முறைக்க, அவளும் முறைத்தாள்.

"நா தூங்க போறேன் நீ இப்படியே நின்னு முறைச்சுக்கிட்டே இரு" என்றவள் அவனை தள்ளிவிட்டு ஏறி அந்த மர ஊஞ்சலில் படுத்துவிட்டாள்.

"ஹே நில்லுடி!" என பின்னரே வந்தவன், "வருணி நீ நாளைக்கு கிளம்பு. நம்ம ஹாஸ்பிடல் போ. போய் செக்கப் பண்ணி ட்ரீட்மெண்ட் ஸ்டார்ட் பண்ணு. நான்சி அத்த இல்லனா அம்மா யாரையாவது வர சொல்லிடு. நா வர்ற‌வர அவங்க உனக்கு ஹெல்ப்பா இருப்பாங்க" என்றான் அமைதியாக.

"என்ன உளர்ற நீ?" என்றாள் புரியாமல்.

"உளருறேனா? லூசு! ஏற்கனவே ஒரு வருஷமா, உள்ளையே வியாதிய சேர்த்து வச்சுருக்கது பத்தாதா இன்னும் சேர்த்துக்க போறியா?"

"நீ ட்ரீட்மெண்ட் பாக்காம எங்கையோ போன்ற? என்ன நெனப்புல சொல்ற நீ?"

"இங்க நா பொறுப்பேத்துட்டு தான் உங்க பதினெட்டு பேரையும் கூட்டிட்டு வந்தேன். இப்ப அவங்கள இங்க விட்டுட்டும் என்னால உன் கூட வர முடியாது உனக்கே ரூல்ஸ் தெரியும். சேம் அவங்கள கிளப்பிட்டும் போ முடியாது. இங்க உள்ளவங்கள சமாளிக்க நம்ம ஸ்ட்ரென்த் இவ்வளவாது வேணும். டாக்டர் மாதிரி யோசி வரு"

"டேய் நீயும் நானும் ஏன்டா போகணும்? இங்கேயே ட்ரீட்மெண்ட் பாரேன் எனக்கு?"

"வருணி! இவங்க தான் அங்க வர மாட்டேங்குறாங்கன்னு இருக்குறத வச்சு ஏதோ ட்ரீட்மெண்ட் பாத்துட்ருக்கோம். உனக்கு எதுக்கு அப்படி பாக்கணும். ஒழுங்கா ஊருக்கு கிளம்பி போய் ஹெல்த்த சரி பண்ணுற வேலைய பாரு. நா வர்றப்ப இன்டெஸ்டைன் லிவர் எல்லாம் ஃப்ரஷா இருக்கணும். நாம அடுத்த ப்ராசஸ்ல இறங்கணும். என் செல்லம்ல" என அவள் மீதே அந்த ஊஞ்சலினுள் விழுந்து, கழுத்தடியில் முகம் புதைத்து தன்னுடைய அழுத்தத்தை அவளுக்கு கடத்த முயன்றான்.

"நீ இங்க வந்து பார்த்த இந்த ஒரு மாச வேலைக்கே அங்க நாம அடுத்த கட்டம் போயிருப்போம். எங்கடா என் மாத்திரை எல்லாம்?" என அவன் முகத்தை நீக்கிவிட்டு அவன் கன்னத்தில் இரண்டு அடி வைத்தாள்.

"அன்டர் வாட்டர்ல தான் பண்ணிருக்கோம் சோ பேபி ஃபார்ம் ஆகிருக்க சான்ஸ் இல்ல"

"உன் ப்ளான் தான் என்ன? எதுக்கு டேப்லெட் எடுக்காம வந்த? எதுக்கு ஈசியா ப்ரெக்னன்ட் ஆக கூடாதுன்னு தண்ணில எல்லாம் பண்ண?"

"என்ன பிரச்சினைன்னு தெரியாம நீ பாட்டுக்கு உன் இஷ்டத்துக்கு எல்லா டேப்லெட்டும் எடுப்பியா? அதுலா எவ்வளவு ஸ்டெரிலைஸ்டு டேப்லெட்ஸ்னு தெரிஞ்சும் ரெகுலரா எடுக்குற நீ? அதான் தூக்கி போட்டு வந்தேன்"

"ஏன் இங்க அந்த மருந்தே எனக்கு கிடைக்காதோ?"

"உன்ன கொன்னுருவேன். நீ நாளைக்கு ஊருக்கு கிளம்பு"

"உன்னால என்ன மோப்பம் பிடிக்காம தூங்க முடியாது. அதனால ரிஸ்குலாம் எடுக்காத. இங்கேயே ட்ரீட்மெண்ட் பண்ணு"

"படுத்தாதடி வருணி" என அவன் எழும்ப முயல, இழுத்து மேலேயே போட்டுக் கொண்டாள்.

மறுநாள் காலையில், அங்கிருந்து கிளம்பிவிட்டனர். மறுபடியும் முதுகில் பேக்பேக்கை சுமந்து கொண்டு நடக்க துவங்கினர். கூடவே அந்த மூன்று பெண்களும், க்ளாடியன் ஜனோமியோடு அவர்களை சார்ந்த சில ஆண்களும் வந்தனர். முகாமில் வைக்கப்பட்டிருந்த மருத்துவ சாதனங்கள் எல்லாம் அவர்கள் தான் தூக்கிக் கொண்டு வந்தனர்.

வருணி, அந்த மூன்று பெண்களுடன் பேசியவாறு வர, அருகில் க்ளாடியனும் அவர்களை கவனித்து கொண்டு வந்தான்.

அவனை கண்டுவிட்டு, "ஏன் க்ளாடியன் அங்கேயும் இங்க இருந்த மாதிரி ஆறெல்லாம் இருக்குமா?" என கேட்டாள்.

"ஆறாயிரம் கிலோமீட்டர் நீளமுள்ள ஆறு டாக்டர் அது. எங்களோட நூத்தம்பது கிராமமும் அத ஒட்டி தான் குடியிருக்கோம். வாழ்வாதாரத்துக்கு தண்ணி தானே முதல் தேவை?" என்றான் அவன்.

"கரெக்ட் தான்" என வேறு வேறு கேள்விகள், பதில்கள் என அவர்கள் பயணம் தொடர,

"உங்களுக்கு என்ன பிரச்சினை டாக்டர்?" என்றான் அவனாகவே மெதுவாக, முந்தைய தினம் அவனும் தானே அவள் அலப்பறையை பார்த்துக் கொண்டு நின்றான்.

"ஹெர்னியாவாம்!"

"அப்படினா?"

"குடல்ல வர்ற ஒரு சதை வளர்ச்சி, ஒரு கட்டி. இதுமாதிரி குடல் சார்ந்த ஏதோ பிரச்சினைன்னு வச்சுக்குலாம்"

"ஓ! அது சரியாகிடுச்சா? அதான் நேத்து அவ்வளவு சந்தோஷ பட்டீங்களா?"

"நேத்து தான் அந்த நோய்‌ இருக்குன்னே கண்டு புடிச்சுருக்காரு என் டாக்டர் புருஷர்"

"அதுக்கா சந்தோஷப்பட்டீங்க?" என்றான் முகத்தை அஷ்டகோனாலாக வைத்துக் கொண்டு.

"நா ஏதோ பெரிய டிசீஸ்னு நினைச்சு பயந்துட்ருந்தேன் இது பரவால்லன்னு தோணுச்சு சோ அந்த ஹேப்பி எனக்கு"

"குடல் சார்ந்த புண்ணு ஆர, நாங்க சாப்பிடுற மருந்து சொன்னா நீங்க சாப்பிடுவீங்களா?" என்றான் அவன்.

"டெஸ்ட் பண்றீங்களா க்ளாடியன். நாங்க உங்களுக்கு கொடுக்குற மருந்து எல்லாம் ரிசர்ச் பண்ணி கவர்ன்மென்ட்டும் பல டாக்டர்ஸும் அங்கிகரிச்ச மருந்துகள். அது உங்களுக்கு எந்த கெடுதலும் பண்ணாது‌. நீங்க இங்க நீங்களா சாப்பிடுறது அப்படி கிடையாது"

"அத நா தப்பு சொல்ல டாக்டர். நான் சொல்றது இயற்கை அதுல மனுஷனோட எந்த கைவித்தையும் இல்லாம, அப்படியே சாப்பிட போற இலைகள் தான். இதுக்கு எந்த கவர்ன்மென்ட்டும் எந்த டாக்டர்ஸும் அங்கிகாரம் செய்ய தேவையில்லை. அதை சாப்பிட நீங்க இந்த காட்டுமிராண்டிய நம்ப வேணாம். இந்த இயற்கைய நம்பினா போதும்"

"உங்கள காட்டுமிராண்டின்னு சொன்னதுக்கு ரிவென்ச்சா க்ளாடியன்?" என சிரித்தாள்.

"சரி விடுங்க சாப்பிட வேணாம். எங்க மருந்துக்கு அடிப்படை நம்பிக்கை அதில்லாம சாப்பிட்டா அது வேலையே செய்யாது" என்றுவிட்டான்.

அவளுக்கு இந்த வாக்கியத்தை எங்கோ கேட்டதுபோல் இருந்தது. "இல்ல ஏதோ ட்ரை பண்ண நினைக்கிறீங்க. நா அத ஸ்டாப் பண்ண நினைக்கல. என்ன இலைன்னு எடுத்துட்டு வாங்க" என ஒத்துக்கொண்டாள், அவனும் அமைதியாகி விட்டான்.

"வருணி?" என அவ்வளவு நேரமும் அவர்கள் பேச்சை ஆராய்ந்து கொண்டு வந்த யாஷ் அழைக்க,

"சேலஞ்ச் பண்றான் மாமா! எப்டி விட முடியும்? நீங்க குடுக்குற மருந்த நாங்க சாப்பிட்டோம்ல அப்ப நாங்க குடுக்குறத நீங்க சாப்பிடுவீங்களான்னு சவால் விடுற மாதிரி கேட்கும்போது அக்ஷப்ட் பண்ணிக்கணும்ல?"

"அந்த டெலிவரி கேஸ் பாத்தல்ல? அவங்க ட்ரிட்மெண்ட் எப்படின்னு தெரியும்ல? நா இதுக்குலாம் அலோவ் பண்ண மாட்டேன். விளையாட்டா இருக்கா உனக்கு?" என அதட்டினான்.

"அவங்க ஆபரேஷனுக்குலாம் நானும் ஒத்துக்க மாட்டேன். ஆனா உனக்கு ஞாபகம் இருக்கா? நம்ம ரோசி பாட்டி(ஆரோனின் அம்மா) ஒரு நர்ஸ் அவங்க காய்ச்சல்னு சொன்னதும் பேராசிட்டமால் தூக்கி குடுக்காம, ஓம துளசி, மிளகு இலைகள் சாரு, வெத்தலை சாருன்னு தான் நமக்கு ஃபர்ஸ்ட் குடுப்பாங்க. கேட்டா குற்றால மலை அங்க அவ்வளவு மூலிகை மருத்துவம் உண்டுன்னு கதை நிறைய சொல்லுவாங்க. நாம அத கண்டுகிட்டது இல்லன்னே வச்சுக்கோ. இப்ப அதுக்கு ஒரு லைவ் சான்ஸ். இவங்களுக்கும் புரிய வைக்க ஒரு ரூட் கிடைச்சுருக்குள்ள?"

"உன்ன கிளம்ப சொன்னா கிளம்பி போய் ட்ரீட்மெண்ட் பண்ணாம இங்க இருந்து பிலாஷபி பேசிட்ருக்க. நீ சான்ஸ் எடுக்க இது உடம்பா இல்ல எதும் சப்ஜெக்ட்டுன்னு நினைச்சுட்ருக்கியா?" என திட்டிக்கொண்டிருக்கையிலேயே, க்ளாடியன் மீண்டும் அவர்களிடம் வந்தான்.

அவன் அவர்கள் நடந்த வழியிலேயே நான்கு இலைகளை பறித்து கொண்டு தந்தான். உண்மையிலேயே அவன் உள்ளே எந்த எண்ணமும் இன்றி அவளுக்கு சரியாக வேண்டும் அதும் தங்கள் மருந்தால் ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் மட்டுமே அதை கொடுத்தான்.

"இது புதினா, இது வெந்தைய இலை, இது ஆலிவ் இலை, இது முலாம் பழம். இதெல்லாம் இங்க சும்மா சுத்தி வந்தாலே கண்ணுல படும். மூணு வேளையும் சும்மா ஒரு ஒரு இலையை பறிச்சு மென்னு சாப்பிடுங்க. குடல்ல என்ன பிரச்சினையா இருந்தாலும் சரியாகிடும்" என நீட்டினான்.

"நிஜமாவா?"

"நாங்க இதான் சாப்பிடுவோம்"

"ஓகே வெட்ஸ் கிவ் எ ட்ரை" என அதை சாப்பிட்டும் பார்த்தாள். இலை தான் என்பதால் மட்டுமே யாஷும் அதை தடுக்கவில்லை.

அடுத்த நான்கு மணிநேர நடையில் ஒரு கிராமத்தை வந்து சேர்ந்தனர். அங்கேயே மதிய உணவை முடித்து கொண்டு, கொஞ்சம் ஓய்வெடுத்துக் கொண்டு மீண்டும் நடை பயணம். அடுத்த இரண்டு மணிநேரத்தில் ஒரு கிராமம் வந்தது.

"இது தான் இங்க சுத்தி இருக்குற இருப்பத்தைந்து கிராமங்களுக்கும் நடுப்பகுதி. இங்க முகாம் போட்டா வர்ற தொலைவு அவங்களுக்கு சமமானதா இருக்கும்" என ஜனோமி சொல்லவும், மருத்துவர்கள் சரியென்றுவிட்டனர்.

அதுவும் மரவீடுகள் நிறைந்த கிராமமாகவே இருந்தது. இவர்களை விசித்திரமாக தான் பார்த்து ஒதுங்கி சென்றனர் அங்குள்ள மக்கள். ஒரு பக்கம் முழுவதும் மூங்கில் மரங்கள் ஆங்காங்கே இடம் விட்டு நின்றதால் இடை இடையே குடில் அமைத்து அங்கேயே தங்கி கொள்ள முடிவெடுத்தனர்.

வருணியோடு வந்த அந்த மூன்று பெண்களும், "நாங்க அவங்கட்ட பேசிடுறோம்!" என வருணிக்கு சைகையில் சொல்லி அங்கிருந்த மக்களோடு பேச சென்றுவிட, மருத்துவர்கள் 'டென்ட்' அமைப்பதில் கவனமாகினர்.

மறுநாள் காலையிலேயே மருத்துவர்கள் அவர்கள் வழக்கத்தை தொடங்கியிருந்தனர், அங்கிருந்தவர்களுக்கு அவர்களை சார்ந்த மக்கள் இவர்களுடன் வந்திருந்தது தான் அவர்கள் நம்பிக்கைக்கும் முதல் காரணம். அதனால் அங்குள்ள மக்களுக்கான பரிசோதனை எந்தவித தொந்தரவும் இல்லாமல் ஆரம்பமானது.

"வருணிக்கு ட்ரீட்மெண்ட் எப்படி ஸ்டார்ட் பண்ணலாம் டாக்டர்?" யாஷ் பிஸ்மத்திடம் கேட்டான்.

"நாம இங்க இருந்து கிளம்ப எப்படியும் டூ, த்ரி மந்தஸ் ஆகிடும் யாஷ். அதுக்குள்ள நாம ஆப்ரேஷன்னு இறங்கிட்டு ரிஸ்க் எடுக்க வேணாம். நாம இவங்களுக்கு பண்ணுற மாதிரி ஆர்த்தோ ஆப்பரேஷன் கிடையாது இது. கிட்டத்தட்ட எயிட், நைன் ஹவர்ஸ் எடுத்துடும். இங்க இருக்க வெளிச்சத்துல நாம எதையும் பண்ண முடியாது ப்ளஸ் ஸ்கிரினிங், ஸ்கேனிங் மெஷின்ஸ் எல்லாம் பேட்டரி அத நம்பி நிச்சயமா இறங்க முடியாது. சோ இங்க இருக்கிற வர நாம டேப்லெட்ஸ் மட்டும் ஃபாலோ பண்ணுவோம். அவ பாடி கன்டிஷன ஸ்டேபிள் பண்ணி ரெடியா வச்சுப்போம் ரிட்டர்ன் ஆனதும் ஆப்ரேட் பண்ணிக்கலாம். எப்ப இருந்து வருணிக்கு இந்த டிசிஸ் சிம்டம்ஸ் இருக்கு?" என கேட்டார்.

"இங்க வந்ததுல இருந்து அவகிட்ட எந்த சிம்டமஸும் தெரியல. பட் லாஸ்ட் ஒன் இயரா இருக்கு டாக்டர்"

"ஒன் இயர் வெரி லாங் பீரீயட் தான். பெயின் கில்லரா எடுத்துக்கிட்டாங்களா?"

"ஆமா டாக்டர் அவ இஷ்டம்போல டேப்லெட்ஸ் எடுத்துட்ருந்துருக்கா"

"ஆக்சுவலி, இங்க வந்த இந்த ஒன் மந்த்தும் நாம சாப்பிடறது கெமிக்கல்ஸ் இல்லாத, ஸ்பைஸி ஐட்டம்ஸ் கலக்காத ஃப்ரஷ் ஃபுட்ஸ் புரியுதா. ஈசி டைஜஸன் ஃபுட்ஸ். அதனால அவளுக்கு வலி, வாமிட், மோஷன் இஷ்யூஸ் போல எதுவும் வந்திருக்காது. இனியும் அதே ஃபாலோ பண்ணிக்கலாம். எப்படியும் நாம அங்க கிளம்பி போனாலும் உடனே ஆப்ரேட் பண்ண மாட்டோமே யாஷ். ஹெல்த் கன்டிஷன் ஸ்டடி பண்ணி ரெடி பண்ண ஒன் மந்த் எடுப்போமே அத இங்க இருந்து எடுக்குறோம் அவ்வளவு தான். பாத்துக்கலாம்" என அவர் சொல்லவும், ஆமோதித்து கேட்டுக் கொண்டான் யாஷ்.

யாஷ் கவலை அவளின் மேல் இருக்க, அங்கு அவளோ அந்த மூன்று பெண்களுடன் அவர்கள் தோழிகளாக இணைந்த நான்கு பெண்களையும் சேர்த்து அமர்த்திக் கொண்டு கல்வி கற்றுக் கொடுக்கும் வேலையில் இறங்கியிருந்தாள்.
 

Saranyakumar

Active member
வருணிக்கு என்ன பிரச்சினை என்று கண்டுபிடிச்சுட்டான் யாஷ்
 
Top