தீபாகோவிந்த்
Moderator
அத்தியாயம் - 1
மாரிக்காலத்தின் முன் இரவு. சூரியன் தன் வேலையை முடிக்க முனைந்து கொண்டிருந்தான். எனினும் குளுமை தன் வேலையை ஆரம்பித்து விட்டிருந்தது.
ஏற்கனவே பெய்த மழையில் குளித்த மரங்கள், தங்கள் இளமையைப் பசுமையாகப் பறை சாற்றிக் கொண்டிருக்க, தென்றல் காதலனுக்குத் தள்ளி நிற்க மனமில்லை போலும், உலர்த்தி விடுகிறேன் என்ற சாக்கில், இயற்கை காதலியவளை, தீண்டி, சீண்டி உறவாடிக் கொண்டிருந்தான். சிலிர்த்துப் போனவள், நீர்த்துளிகளாய் சிதறி, மயிர் கூச்செறிந்தாள்.
அங்கே! கார் மேகங்கள், இப்போது தரை இறங்குவோமா? அல்லது இன்னும் சற்று நேரம் கழித்தா? என அங்கும் இங்குமாக அலைந்தபடி இருந்தன. மீண்டும் ஒரு முறை நீர் தெளிப்பதா? இல்லை... ஊற்றுவதா? எனக் கலந்து, கலைந்து ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தன.
நிழற்குடையின் கீழ் நின்றிருந்தாள், அவள். உயிர் பெற்று வந்த ரவிவர்மனின் சகுந்தலை என! ஓவியப் பெண்ணவளின் கருநிறக் கூந்தல், இருள் நதியாய்! இடைதாண்டி பாய்ந்திருக்க, இருள் நதியில் மிதக்கும் பொன் நிலவென, ஒளி சிந்தும் முகத்துடன், வான்பெற்ற இளநீலத்தைத் தான் பெற்று, அதில் வெண் புள்ளிகள் யாவும் நாங்களும் நட்சத்திரமென மினுக்கிக் கொள்ளும் வண்ணம் இருந்த அந்த வான் நீலத்தில், வெண் சிறு கல் பதித்த அந்த நீலச் சிற்றாடை அணிந்து நின்றவள், வானை உடுக்குமோ, வெண்நிலவு? எனும் ஐயத்திற்கு விடையாக நின்றாள், அந்தப் பெண்ணிலவு!
'அவள்...' என்கிறேனே... ‘நிலவுக்குப் பெயர் எதற்கு?’ 'மதி, சந்திரன் ... ' எனப் பல பெயரிருக்க, அவை வேண்டாம், அவள் பெயரான "ஆராத்தியா"வை, தன் பெயராக மாற்ற, கவிகளிடம் பெளர்ணமி இரவுகளில் கோரிக்கை வைக்கிறான், மதியவன் தன்மதி இழந்து. கவிகள் அவன் கோரிக்கையை ஏற்காததால் தானோ என்னவோ, தண்ணொளி இழந்து தேய்கிறான்.
மதியவன் மயங்கிய அத்திருமுகம், அப்போது சற்றே கலங்கி இருந்ததை, விழியோர பளபளப்பு காட்டித் தர முனைந்தாலும், கண்ணீர் முத்துக்கள் திரளாமல் திரண்டாலும், சிதறாமல் கவனித்துக் கொண்டாள், பாவையவள்!
அங்கிருந்த அனைத்து கண்களும் ஆராத்தியாவை நோக்கி நிற்க, அவர்களின் நோக்கம் அவளானாலும், அவளது நோக்கம் அவர்கள் மேல் திரும்பவில்லை.
காளையர் பலர் ஆராத்தியா எனும் ஆராதனைக்குரிய பெண்ணவளின் கண்ணொளி தன் மீது பட ஏங்கி நிற்க, அவளோ யாரையும் நிமிர்ந்து பார்க்க வில்லை.
சற்று நேரத்திற்கு ஒரு முறை, தன் கை கடிகாரத்தையும், அலை பேசியையும் பார்த்த வண்ணம் இருந்தாள்.
இனியும் காத்திருந்தால், வருணபகவானின் கோபத்திற்கு ஆளாகி விடுவோம் என அஞ்சிய மேகங்கள், ஆலோசனையை விடுத்துத் தங்கள் வேலையைத் துவங்குவதற்கான ஆயத்தங்களில் இறங்கி விட்டிருந்தன.
ஆராவின் அருகில் வந்து நின்றது, அடர் வனங்களில் காணும் கருஞ்சிறுத்தையின் பளபளப்பையும் வேகத்தையும் தன்னில் கொண்ட, அந்த ஜாக்குவார் எனும் வகை வாகனம். அதிலிருந்து இறங்கியவன், அவளது பையை வாங்கிப் பின்னே வைத்து விட்டு வந்தான். அவள் ஏற, கதவை திறந்து வைத்துக் காத்திருந்து, பின் கதவடைத்து முன்பக்கம் சென்று, தானும் ஏறி ஒட்டிச் சென்றான்.
புதிதாக வாங்கிய அலைபேசியில், அழகான எதையாவது என மரங்கள், வானம், சுற்றுபுறம், சுய படம், கண்ணில் கண்டதை எல்லாம் நிழலாக்கிக் கொண்டிருந்த அவன் கண்ணில் விழுந்த ஆராத்தியாவை, விட அவனுக்கு மனமில்லை. ஏனெனில் அவன் அப்படி ஒரு சவால் ஏற்றிருந்தான்.
கடந்த மூன்று ஆண்டுகளாக, கல்லூரியில் சேர்ந்த நாள் முதல் அனைவரின் கனவுகளிலும் நினைவுகளிலும் நிறைந்திருப்பவள் ஆராத்தியா. அமைதியானவள். யாரிடமும் தேவையின்றிப் பேசுவதில்லை. தான் உண்டு தன் வேலை உண்டு என இருப்பவள். எந்தத் தேவையற்ற விஷயத்திற்கும் போவதில்லை. பின்னால் சுற்றுபவர்களைப் பார்வையிலேயே எட்டி நிற்க வைத்து விடுவாள்.
அவளை யாரும் நெருங்க முயன்றதில்லை. முடிந்ததும் இல்லை. பின் எங்கே பேச, பழக? எனவே, பலருக்கு அவள் கனவே. இன்று கடைசி தேர்வு முடிந்து, அனைவரும் விடை பெற்றுச் செல்லும் நாள் என்பதால், ஆராவை செல்பி எனும் சுயமிக்கு அழைக்க, அவள் மறுத்து விட்டாள். இதுவே, குமார் அவளைப் பின்தொடர காரணமாயிற்று.
எந்த விஷயம் பற்றி நமக்குத் தெரியவில்லையோ... மறைக்கப் படுகிறதோ... அதைப் பற்றி நமது ஆர்வம் பெருகிவிடும். அந்த நிலையில், சரி தவறு என்பதைத் தாண்டி விடுகிறது மனம்.
காலையில் கல்லூரிக்கு வந்த குமார், தான், புது அலைபேசி வாங்கியதைக் காட்டி மகிழ, அவனைச் சீண்டிய அவனது நண்பர்கள்,
"டேய்! எல்லாரும் தான் போன் வைச்சிருக்கோம். போஸ்ட் போடறோம்."
"ஆமா டா"
"நம்ம ராஜேஷுக்கு எவ்வளவு லைக்ஸ் நேத்திக்கு மட்டும், ஏன் தெரியும்ல?"
மற்றோருவன், "ஆமா, செம வீடியோடா அது"
"என்னா த்ரில்"
"ஆமா, சூப்பர் டா! மச்சி!" என ராஜேஷை சில நிமிட ஹீரோவாக்க, அதற்கு அந்த முட்டாள் செய்த காரியம் நெஞ்சைப் பதற வைக்கும்.
‘ஆம், வேகமாகச் செல்லும் மின்சார ரயில் கிளம்பி சற்று வேகமெடுத்ததும், ஒடி சென்று ஏறியது மட்டுமன்றி, வெளியே சன்னல் கம்பியை பிடித்தபடி அவன் தொங்கிக் கொண்டும், மின்சாரக் கம்பங்களை தொட்ட படியும், முடி கோதியும், நகர்ந்தும் சாகசம் என சாவுக்கு அருகில் செல்லும் வேலையைச் செய்து பதிவிட்டு, சில நூறு லைக்ஸ் வாங்கியிருக்க.’
இந்தச் சில ‘லைக்ஸ்’காகவும், இந்த நண்பர்களின் சில நிமிட நாயகன் பதவிக்கும் ஆசைப்பட்டு, அதிர்ஷ்டத்தால் பிழைத்த அந்த முட்டாள், இவனைப் பார்த்துச் சிரிக்க, சிலிர்த்த குமாரோ…
"நானும் அது மாதிரி எடுத்து, நாளைக்குப் போடறேன் பாருடா!"
"அது யாருக்கு வேணும்?"
"அதான், ராஜேஷ் ஏற்கனவே போட்டுட்டானே!"
"என்ன செய்யலாம்?" என்பதாய் கண்களைச் சுழற்ற, அதில் விழுந்தாள், படம் எடுக்க மறுத்து ஒதுங்கிய, ஆராத்தியா!
"டேய்! இவள எடுத்துப் போடுறா?" என குமார் கண் சென்ற பாதையைக் கண்ட ராஜேஷ் கூற,
அதை அப்படியே போடுவதில் என்ன தில், நல்ல வித்தியாசமான நிமிடத்திற்குக் காத்திருந்து பின் தொடர்ந்தான்.
ஆராத்தியாவை படம் எடுத்து பதிவேற்றி சாதனையாளனாக முடிவு செய்த குமார், அவளை வெகுநேரமாகப் பின் தொடர்கிறான், அவள் அறியாமல்.
இப்போதும் அவள் நின்றிருந்த நிழற்குடைக்கு எதிர்புறம், சற்று ஒதுக்கமாக நின்று, அனைத்தையும் படமாக்கிக் கொண்டிருந்தவன், ஆராவின் கண்களில் படவில்லை.
விதி மறைத்ததோ? இல்லை…
வினை மறந்ததோ? விளைவிக்கப் போவது என்னவோ?
படம் எடுத்தவன் அறியவில்லையோ? இல்லை, அவனுக்கு அறிவில்லை. ஒருவரை படம் எடுக்க, அவரது அனுமதி பெற வேண்டும் எனும் உணர்வற்றவன், அந்தக் குமார். இவனை விடத் தரம் இறங்கிய மக்களும் இச்சமூகத்தில் மலிந்து கிடக்கின்றனர்.
தங்கள் விருப்பம் போல், விருப்பமற்ற பெண்களை, அவர்களது அங்கங்களைத் தவறாக எடுத்து, இஷ்டம் போல் பதிவு செய்கின்றனர். மாடலிங் எனும் தொழிற்துறையிலேயே மாடலாக வருபவர்களை, அவர்கள் விருப்பமின்றிப் படம் எடுப்பதும், அவர்களுடைய உடல் பாகங்களைத் தவறாகச் சித்தரிப்பதும் குற்றம்.
இயற்கையின் தனிப்பட்ட எழில்களையும், விலங்குகளையும் அவற்றுக்கு உரியவர் அனுமதி இன்றி படம் எடுப்பது, தண்டனைக்கு உரியது. எனில்… உயிரும் மனமும், தனிப்பட்ட விருப்பு வெறுப்பு உள்ள ஒரு பெண்ணை, அனுமதியும் பெறாது, அவளும் அறியாது படம் எடுக்க, அவள் அவன் வளர்க்கும் தாவரமோ, செல்லப் பிராணியோ அல்ல, உயிருள்ள உணர்வுள்ள பெண்.
அந்த உணர்வின்றி..., ஆராத்தியா சற்று படபடப்புடன் இருந்ததையும், அவள் கண்களின் பளபளப்பையும், பதிவு செய்தான், அவன்.
அந்த முன் இரவு, பின்னிரவு போல், மழைக் காலமானதால் இருண்டிருந்தது.
ஆராத்தியா மட்டும் அந்த காரில், கறுப்பு நிற சொகுசு வாகனத்தில் ஒருவன் கதவு திறக்க புன்னகையுடன் ஏறுவதையும், அந்த நெடியவன் இவள் தோள் பிடித்து உள்ளே அமர்த்துவதையும், குனிந்து சீட் பெல்ட் போடுவதையும்… அவளது உடைமைகளை வாங்கி உள்ளே வைத்ததையும், தன் மனதின் வக்கிர கற்பனைகளின் சாயம் பூசி, இஷ்டம் போல் கதை புணைந்து, அதை பதிவேற்றினான். தன் பெருமையை பறையறைந்து அறிவிக்க எண்ணி...!
கயல் கொண்ட விழியின்
வீச்சலையில் தத்தளிக்கிறேன்!
இமையெனும் கரை கொண்டு நீ மூட
முழ்கினேன், முத்தெடுக்க!
மூச்சடக்கத் தேவையில்லை
உன்னில் வீழ்ந்து விட்ட
நாளிகை முதல் மூச்செடுக்கவில்லை
சுவாசப் பைகள்...!
வாழ்ந்திருக்க விழைகிறேன்
கடல் வாழ்வனவாக...!
என் திரைகடல் திரவியம் நீ
காத்திருக்கிறேன்…!
என் காத்திருப்புகளின் பலன்
உன் வார்த்தைகளில்…!
அத்தியாயம் - 2
இளம் பச்சையும் நீலமுமாய் அமைதியாய் சிறு அலைகளுடன் தூரத்தில் தெரிந்த கடல் அனுப்பிய குளிர் காற்றில், கழுத்தில் புரண்ட அந்தப் பொன் வண்ணக் கூந்தல் காற்றில் அசைந்தாட, மார்பில் ஆரத்தையும், கை கங்கணங்களையும், அதன் மஞ்சள் ஒளி பட்டு மின்ன வைத்தான், கதிரவன். கால்சராய் அணிந்திருந்த அவன் பாதங்கள் சேனத்தின் மீது பதிந்திருந்தன.
செம்மண்ணின் நிறத்தை உடலிலும், கால்களின் ஆரம்பத்தில் கரிசல் மண்ணின் நிறத்தையும் கொண்டு, தன் வாலினை இலேசாக அசைத்து நின்ற புரவியின் மீது அமர்திருந்தவனின் பார்வை, சிறிதும் அசையவில்லை.
மலை முகட்டிலிருந்து தன் கழுகுக் கண்களால் கடலும் வானும் இணைவதையும், அதிலிருந்து எழும் மேகப் பொதிகள் வானெங்கும் நிறைவதையும், மேலெழுந்த வெண்பொதிகள் கதிரவனின் தூரிகை பட்டு, பொன்வண்ணமாய் மின்ன... கடலுக்கும் அவன் நின்றிருந்த மலைக்கும் இடையே, விரிந்த இலையுதிர் காட்டுமரங்களின் பின் பகுதி, மஞ்சள் நிறமெனவும் முற்பாதி பச்சையைத் தேக்கி வைத்திருப்பதையும் கண்டனவோ அக்கண்கள். அதில் எந்த உணர்வுமில்லை. எதையும் பிரதிபலிக்கவும் இல்லை அவன் முகம். அது இறுகி இருந்தது.
அவன் தாங்கிய மார்பு கவசங்கள் அவன் நிலையின் உயர்வினைக் காட்டும். அவன் கை வாள், பிரத்தியேகமாக... அரிதான உலோகங்கள் கொண்டு அவனுக்கென உருவாக்கப்பட்டது. அது உறைக்குள் இருந்தாலும், கைப்பிடியும் உறையும் அதன் மதிப்பையும், அதை இடையில் அணிந்திருப்பவன் உயரத்தையும் சொல்லும்.
அவன் போருக்கு என்றே படைக்கப்பட்டவன். பிறந்தவுடன் தாயின் முகமறியும் முன் பிரிக்கப்பட்டு, அழுகையை மறந்து, ஓநாய்களுடன் காட்டில் உயிர் ஜீவிக்கும் முறையறிந்து, தன்னைக் காத்து, பயிற்சியில் எதிர்க்கும் எவனையும் எரித்து, கசையடிகளில் வலி மறந்து, அன்பு தொலைத்து, உறவுகளைத் துறந்து, போரிடும் முறை கற்றவன்.
"போர் எனில் வெற்றி!" அதைத் தவிர வேறு அறியா வீரன் அவன்.
தன் புரவியை வானுயர்ந்த அந்த மலை முகட்டிலிருந்தும் கீழே இறக்கி, நெடிதுயர்ந்த மரங்களடர்ந்த வனம் வழியே, நிதானமாக அப்புரவியைச் செலுத்திக் கொண்டிருந்தான்.
அவன் உணர் புலன்கள் கூர் பெற, சுற்றும் பார்த்துக் கொண்டு சென்றவன் முன், வின்னிலிருந்து இறங்கியது போலத் தோன்றினான், அவ்வரக்கன்.
குதிரையிலிருந்து மேலெழும்பி, அரக்கனை வாள் கொண்டு தாக்கி இருந்தான். அவ்வரக்கனே திடீரெனத் தோன்றியிருக்க, அப்புரவி வீரன், அவனையும் விட வேகமாகச் செயல்பட்டுத் தாக்க, இதை எதிர் பாராத அரக்கன், தாக்கப்பட்ட வேகத்தில் “ஆ…” என மல்லாந்து விமுந்தான்.
கீழே விழுந்ததில் ஆத்திரம் மிக “ஆ......” என அலறியபடி மீண்டும் தாக்க ஓடி வர, புரவி வீரனோ சற்றே நகர, இப்போது கீழே வீழ வேண்டிய அரக்கன், முயன்று தன்னை நிலைநிறுத்த, மரத்தைப் பற்றினான்.
இப்போது கண்கள் ஆத்திரத்தில் செந்தணலெனமாற, அம்மரத்தை வேருடன் பிடுங்கி இவன் மீது வீச…, அதில் தப்பி ஒதுங்கி அருகில் இருந்த பாலத்தின் மீதேறி நின்றிருந்தான், புரவியோன்.
அரக்கன் தன் ஆத்திரம் எல்லையைக் கடக்க... தன் நிலை மறந்து, தன் ஆயுதத்தால் புரவி வீரனை தாக்க முற்பட்டான். காலம் தாழ்த்தாது, தன் வாளில் நெருப்பின் சக்தியேற்றி, தானும் நெருப்புச் சூறாவளியென மேலெழும்பி, அரக்கனை துண்டுகளென மாற்றியிருந்தான் அப்புரவி வீரன்.
சொய்ங்… எனும் ஓசையில், அவ்வரக்கனின் உடல் மறைய, "YOU WON" என ஒளிர்ந்தது, புரவி வீரன் அருகில்.
தனக்கு இன்று இணைய விளையாட்டில் அளிக்கப்பட்ட பணியை முடித்து எழுந்தான், அவன். கணினித் திரையை அணைத்து விட்டு, மின் இணைப்பை நிறுத்தியவன், மீண்டும் நாற்காலியை சரியாக அதனிடத்தில் வைத்தவன், திரும்ப அனைத்தையும் சரி செய்தவன், அவன் அறைக்கதவை திறந்து வரவும், அன்னை அலர்மேல் மங்கை அழைக்கவும் சரியாக இருந்தது.
அதீந்திரன், தமிழகத்திற்கும் யவனத்திற்கும் உள்ள தொடர்பினைக் கூறும் நடமாடும் ஆதாரம் அவன். வெண்கலச் சிலைகளில் கிரேக்க சிற்பிகள் வடித்த காளை பருவ ஆண் உயிர் பெற்று வந்தது போல் இருந்தான்.
(காளை பருவம் என்பது 24 முதல் 36 வயது வரையான ஆண்களைக் குறிக்கும் ஆண்களின் ஏழு நிலை பருவங்களில் ஒன்றாகும். இதைக் காதற் பருவம் என்றும் கூறுவர்)
ஏதேனும் ஒரு யவன இளவரசியும், சோழ அரசனும் இவனின் முன்னோராக இருக்க வேண்டும், என கட்டியம் கூறும், அவனின் இளம்பச்சை நிறக் கண்களும், முறுக்கேறிய உடலும், தினவெடுத்த தோள்களும், காணும் எவரையும் சுயம் இழக்கச் செய்யும் வனப்பினைப் பெற்றவன். வீட்டில் இருப்பதால், இலகுவான ஆடையான அடர் ஆலிவ் பச்சை நிற டீ சர்ட், கருமை நிற சார்ட்ஸ் எனும் அரைக்காற் சட்டையும் அணிந்திருந்தான்.
"அதீப் வாடா…! உன்னைக் கூப்பிடத்தான் வந்தேன். நீயே வந்துட்ட" என்ற தாய்க்கு பதில் கூறாமல் கீழே இறங்கி வந்தவன்,
"செந்தில் அண்ணன் இப்ப வந்துடுவாருல்ல?" எனும் கேள்வியைக் கேட்டபடி, தன் தட்டையும், குவளையில் தண்ணீரையும் நிரப்பிக் கொண்டு, தான் வழக்கமாக அமரும் உணவு மேசையின் இடது புற கடைசி நாற்காலியில் அமர்ந்தான். ரகுநந்தன், அலர் மேல் மங்கை தம்பதியரின் இரண்டாவது மகன், அதீந்திரன்.
மூத்தவன், அதீப்பைவிட ஏழு வயது பெரியவன் புருஷோத்தமன், அவன் மனைவி வைஜெயந்தி! இவர்களின் மகன் ஐந்து வயது அத்வைவ், கூட்டுக் குடும்பமாக வசிக்கின்றனர்.
அப்பா, அண்ணன் இருவரும் குடும்பத் தொழில்களை பார்த்துக் கொள்ள….
அதீப், கணினி விளையாட்டின் மேல் ஆர்வம் கொண்டதால், ஒரு கேம் டெவலப்பராகி இருந்தான். தன் நண்பர்களுடன் இணைந்து X Y எனும் பெயரில், புதிதாக ஒரு கம்பெனியை ஆரம்பித்து, ஆன்லைன் கேம் ஒன்றை உருவாக்கி வருகிறான்.
மங்கை, அவன் தனக்கு பதில் கூறாவிட்டாலும், உணவு மேசையில் அமர்ந்திருப்பதைக் கண்டவர், அதீப்பிற்கு இட்டிலியை வைத்தவாறே…
"இப்ப சாப்பிட்டுட்டு கிளம்பினா சரியா இருக்கும். கிளம்புடா!" என்றார்.
அவனோ, "செந்தில் வருவாரா?" என மீண்டும் அதே கேள்வியைக் கேட்க.
"அவரப் பத்தி இப்ப என்னடா கவலை? யாரோ ஒருத்தர், யாரா இருந்தா என்ன? நீ சாப்பிட்டுக் கிளம்பு!"
“தோசை”
“இப்ப நேரம் இல்லை. இன்னிக்கு ஒரு நாள் மட்டும் அட்ஜஸ்ட் பண்ணிக்கடா" என்றார்.
கையைத் தட்டிலிருந்து எடுத்தவன், திரும்பி அமர்ந்து கொண்டு, “எனக்கு வேண்டாம்!" எனவும், அவன் அருகில் வந்து முடியைக் கோதியவர்,
"டேய் கோபப்படாதப்பா, அம்மா பாவம்ல. அவசரமா கிளம்பறதால இன்னிக்கு மட்டும் சாப்பிடு. நாளைக்கு தக்காளி சட்னி பண்ணித் தரேன்."
"தோசை" என, திரும்பக் கூறிய அவனைப் பார்த்ததும், இனி அவனிடம் பேசிப் பிரயோஜனம் இல்லை எனப் புரிய, தோசைக்குக் கல்லைக் காய வைத்தவர்,
"இந்தத் தோசைல அப்படி என்னதான் இருக்கோ, இதைத் தவிர ஒன்னும் பிடிக்க மாட்டிக்குது. மத்த நாளைக்குப் பரவாயில்லை. இது மாதிரி அவசரத்துக்குக் கூடவா…!" எனப் புலம்பியபடி மாவை குளிர்பதனப் பெட்டியில் இருந்து எடுக்க, பின்னால் வந்து நின்றவன், அவள் கையில் இருந்து மாவுப் பாத்திரத்தை வாங்கிக் கொண்டான்.
"நீங்க போங்க!" என்றவன், தானே அழகாகத் தோசையை ஊற்றிக் கொள்ள, மனம் தாங்காமல்…
"கொடு! நான் ஊத்தி தந்துட்டுப் போறேன்." எனக் கரண்டியை வாங்க முயல,
"நோ நீட் மாம்!" என்றவன், தனது வேலைகளில் கவனமாகிட, அலர்மேல் மங்கை தனது வேலையை கவனிக்கச் சென்றார்.
தனக்கான தோசைகளை வார்த்து எடுத்துக் கொண்டு, தனது இடத்தில் அமர்ந்து கொண்டவன், ஜன்னலின் வழியே வெளியே பார்த்துக் கொண்டு, சாப்பிட்டுக் கொண்டிருக்க,
மங்கை "டேய், அதீப்... நேரமாயிடுச்சி கிளம்புடா!" என்றார் பத்தாவது முறையாக.
"சரிம்மா!" என்றவன் நிதானமாகச் சாப்பிட்டு நேரத்திற்குக் கிளம்பினான்.
விவரனைகளின் விவரிப்புகளுக்கு அப்பாற்பட்டவன்
உன் கற்பனைகளின் காட்சிப்படுத்துலுக்குக் கட்டுபடுவேனோ?
காட்சிகள் என்பன யாவையோ?
காணப்படுவனவோ? இல்லை…
காட்டப்படுவனவோ?
யாவும் நீயே!
காணப்படுவன, காட்டப்படுவன, எவையும்
உனையே காட்சிப்படுத்துதல் கண்டனையோ?
மாரிக்காலத்தின் முன் இரவு. சூரியன் தன் வேலையை முடிக்க முனைந்து கொண்டிருந்தான். எனினும் குளுமை தன் வேலையை ஆரம்பித்து விட்டிருந்தது.
ஏற்கனவே பெய்த மழையில் குளித்த மரங்கள், தங்கள் இளமையைப் பசுமையாகப் பறை சாற்றிக் கொண்டிருக்க, தென்றல் காதலனுக்குத் தள்ளி நிற்க மனமில்லை போலும், உலர்த்தி விடுகிறேன் என்ற சாக்கில், இயற்கை காதலியவளை, தீண்டி, சீண்டி உறவாடிக் கொண்டிருந்தான். சிலிர்த்துப் போனவள், நீர்த்துளிகளாய் சிதறி, மயிர் கூச்செறிந்தாள்.
அங்கே! கார் மேகங்கள், இப்போது தரை இறங்குவோமா? அல்லது இன்னும் சற்று நேரம் கழித்தா? என அங்கும் இங்குமாக அலைந்தபடி இருந்தன. மீண்டும் ஒரு முறை நீர் தெளிப்பதா? இல்லை... ஊற்றுவதா? எனக் கலந்து, கலைந்து ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தன.
நிழற்குடையின் கீழ் நின்றிருந்தாள், அவள். உயிர் பெற்று வந்த ரவிவர்மனின் சகுந்தலை என! ஓவியப் பெண்ணவளின் கருநிறக் கூந்தல், இருள் நதியாய்! இடைதாண்டி பாய்ந்திருக்க, இருள் நதியில் மிதக்கும் பொன் நிலவென, ஒளி சிந்தும் முகத்துடன், வான்பெற்ற இளநீலத்தைத் தான் பெற்று, அதில் வெண் புள்ளிகள் யாவும் நாங்களும் நட்சத்திரமென மினுக்கிக் கொள்ளும் வண்ணம் இருந்த அந்த வான் நீலத்தில், வெண் சிறு கல் பதித்த அந்த நீலச் சிற்றாடை அணிந்து நின்றவள், வானை உடுக்குமோ, வெண்நிலவு? எனும் ஐயத்திற்கு விடையாக நின்றாள், அந்தப் பெண்ணிலவு!
'அவள்...' என்கிறேனே... ‘நிலவுக்குப் பெயர் எதற்கு?’ 'மதி, சந்திரன் ... ' எனப் பல பெயரிருக்க, அவை வேண்டாம், அவள் பெயரான "ஆராத்தியா"வை, தன் பெயராக மாற்ற, கவிகளிடம் பெளர்ணமி இரவுகளில் கோரிக்கை வைக்கிறான், மதியவன் தன்மதி இழந்து. கவிகள் அவன் கோரிக்கையை ஏற்காததால் தானோ என்னவோ, தண்ணொளி இழந்து தேய்கிறான்.
மதியவன் மயங்கிய அத்திருமுகம், அப்போது சற்றே கலங்கி இருந்ததை, விழியோர பளபளப்பு காட்டித் தர முனைந்தாலும், கண்ணீர் முத்துக்கள் திரளாமல் திரண்டாலும், சிதறாமல் கவனித்துக் கொண்டாள், பாவையவள்!
அங்கிருந்த அனைத்து கண்களும் ஆராத்தியாவை நோக்கி நிற்க, அவர்களின் நோக்கம் அவளானாலும், அவளது நோக்கம் அவர்கள் மேல் திரும்பவில்லை.
காளையர் பலர் ஆராத்தியா எனும் ஆராதனைக்குரிய பெண்ணவளின் கண்ணொளி தன் மீது பட ஏங்கி நிற்க, அவளோ யாரையும் நிமிர்ந்து பார்க்க வில்லை.
சற்று நேரத்திற்கு ஒரு முறை, தன் கை கடிகாரத்தையும், அலை பேசியையும் பார்த்த வண்ணம் இருந்தாள்.
இனியும் காத்திருந்தால், வருணபகவானின் கோபத்திற்கு ஆளாகி விடுவோம் என அஞ்சிய மேகங்கள், ஆலோசனையை விடுத்துத் தங்கள் வேலையைத் துவங்குவதற்கான ஆயத்தங்களில் இறங்கி விட்டிருந்தன.
ஆராவின் அருகில் வந்து நின்றது, அடர் வனங்களில் காணும் கருஞ்சிறுத்தையின் பளபளப்பையும் வேகத்தையும் தன்னில் கொண்ட, அந்த ஜாக்குவார் எனும் வகை வாகனம். அதிலிருந்து இறங்கியவன், அவளது பையை வாங்கிப் பின்னே வைத்து விட்டு வந்தான். அவள் ஏற, கதவை திறந்து வைத்துக் காத்திருந்து, பின் கதவடைத்து முன்பக்கம் சென்று, தானும் ஏறி ஒட்டிச் சென்றான்.
புதிதாக வாங்கிய அலைபேசியில், அழகான எதையாவது என மரங்கள், வானம், சுற்றுபுறம், சுய படம், கண்ணில் கண்டதை எல்லாம் நிழலாக்கிக் கொண்டிருந்த அவன் கண்ணில் விழுந்த ஆராத்தியாவை, விட அவனுக்கு மனமில்லை. ஏனெனில் அவன் அப்படி ஒரு சவால் ஏற்றிருந்தான்.
கடந்த மூன்று ஆண்டுகளாக, கல்லூரியில் சேர்ந்த நாள் முதல் அனைவரின் கனவுகளிலும் நினைவுகளிலும் நிறைந்திருப்பவள் ஆராத்தியா. அமைதியானவள். யாரிடமும் தேவையின்றிப் பேசுவதில்லை. தான் உண்டு தன் வேலை உண்டு என இருப்பவள். எந்தத் தேவையற்ற விஷயத்திற்கும் போவதில்லை. பின்னால் சுற்றுபவர்களைப் பார்வையிலேயே எட்டி நிற்க வைத்து விடுவாள்.
அவளை யாரும் நெருங்க முயன்றதில்லை. முடிந்ததும் இல்லை. பின் எங்கே பேச, பழக? எனவே, பலருக்கு அவள் கனவே. இன்று கடைசி தேர்வு முடிந்து, அனைவரும் விடை பெற்றுச் செல்லும் நாள் என்பதால், ஆராவை செல்பி எனும் சுயமிக்கு அழைக்க, அவள் மறுத்து விட்டாள். இதுவே, குமார் அவளைப் பின்தொடர காரணமாயிற்று.
எந்த விஷயம் பற்றி நமக்குத் தெரியவில்லையோ... மறைக்கப் படுகிறதோ... அதைப் பற்றி நமது ஆர்வம் பெருகிவிடும். அந்த நிலையில், சரி தவறு என்பதைத் தாண்டி விடுகிறது மனம்.
காலையில் கல்லூரிக்கு வந்த குமார், தான், புது அலைபேசி வாங்கியதைக் காட்டி மகிழ, அவனைச் சீண்டிய அவனது நண்பர்கள்,
"டேய்! எல்லாரும் தான் போன் வைச்சிருக்கோம். போஸ்ட் போடறோம்."
"ஆமா டா"
"நம்ம ராஜேஷுக்கு எவ்வளவு லைக்ஸ் நேத்திக்கு மட்டும், ஏன் தெரியும்ல?"
மற்றோருவன், "ஆமா, செம வீடியோடா அது"
"என்னா த்ரில்"
"ஆமா, சூப்பர் டா! மச்சி!" என ராஜேஷை சில நிமிட ஹீரோவாக்க, அதற்கு அந்த முட்டாள் செய்த காரியம் நெஞ்சைப் பதற வைக்கும்.
‘ஆம், வேகமாகச் செல்லும் மின்சார ரயில் கிளம்பி சற்று வேகமெடுத்ததும், ஒடி சென்று ஏறியது மட்டுமன்றி, வெளியே சன்னல் கம்பியை பிடித்தபடி அவன் தொங்கிக் கொண்டும், மின்சாரக் கம்பங்களை தொட்ட படியும், முடி கோதியும், நகர்ந்தும் சாகசம் என சாவுக்கு அருகில் செல்லும் வேலையைச் செய்து பதிவிட்டு, சில நூறு லைக்ஸ் வாங்கியிருக்க.’
இந்தச் சில ‘லைக்ஸ்’காகவும், இந்த நண்பர்களின் சில நிமிட நாயகன் பதவிக்கும் ஆசைப்பட்டு, அதிர்ஷ்டத்தால் பிழைத்த அந்த முட்டாள், இவனைப் பார்த்துச் சிரிக்க, சிலிர்த்த குமாரோ…
"நானும் அது மாதிரி எடுத்து, நாளைக்குப் போடறேன் பாருடா!"
"அது யாருக்கு வேணும்?"
"அதான், ராஜேஷ் ஏற்கனவே போட்டுட்டானே!"
"என்ன செய்யலாம்?" என்பதாய் கண்களைச் சுழற்ற, அதில் விழுந்தாள், படம் எடுக்க மறுத்து ஒதுங்கிய, ஆராத்தியா!
"டேய்! இவள எடுத்துப் போடுறா?" என குமார் கண் சென்ற பாதையைக் கண்ட ராஜேஷ் கூற,
அதை அப்படியே போடுவதில் என்ன தில், நல்ல வித்தியாசமான நிமிடத்திற்குக் காத்திருந்து பின் தொடர்ந்தான்.
ஆராத்தியாவை படம் எடுத்து பதிவேற்றி சாதனையாளனாக முடிவு செய்த குமார், அவளை வெகுநேரமாகப் பின் தொடர்கிறான், அவள் அறியாமல்.
இப்போதும் அவள் நின்றிருந்த நிழற்குடைக்கு எதிர்புறம், சற்று ஒதுக்கமாக நின்று, அனைத்தையும் படமாக்கிக் கொண்டிருந்தவன், ஆராவின் கண்களில் படவில்லை.
விதி மறைத்ததோ? இல்லை…
வினை மறந்ததோ? விளைவிக்கப் போவது என்னவோ?
படம் எடுத்தவன் அறியவில்லையோ? இல்லை, அவனுக்கு அறிவில்லை. ஒருவரை படம் எடுக்க, அவரது அனுமதி பெற வேண்டும் எனும் உணர்வற்றவன், அந்தக் குமார். இவனை விடத் தரம் இறங்கிய மக்களும் இச்சமூகத்தில் மலிந்து கிடக்கின்றனர்.
தங்கள் விருப்பம் போல், விருப்பமற்ற பெண்களை, அவர்களது அங்கங்களைத் தவறாக எடுத்து, இஷ்டம் போல் பதிவு செய்கின்றனர். மாடலிங் எனும் தொழிற்துறையிலேயே மாடலாக வருபவர்களை, அவர்கள் விருப்பமின்றிப் படம் எடுப்பதும், அவர்களுடைய உடல் பாகங்களைத் தவறாகச் சித்தரிப்பதும் குற்றம்.
இயற்கையின் தனிப்பட்ட எழில்களையும், விலங்குகளையும் அவற்றுக்கு உரியவர் அனுமதி இன்றி படம் எடுப்பது, தண்டனைக்கு உரியது. எனில்… உயிரும் மனமும், தனிப்பட்ட விருப்பு வெறுப்பு உள்ள ஒரு பெண்ணை, அனுமதியும் பெறாது, அவளும் அறியாது படம் எடுக்க, அவள் அவன் வளர்க்கும் தாவரமோ, செல்லப் பிராணியோ அல்ல, உயிருள்ள உணர்வுள்ள பெண்.
அந்த உணர்வின்றி..., ஆராத்தியா சற்று படபடப்புடன் இருந்ததையும், அவள் கண்களின் பளபளப்பையும், பதிவு செய்தான், அவன்.
அந்த முன் இரவு, பின்னிரவு போல், மழைக் காலமானதால் இருண்டிருந்தது.
ஆராத்தியா மட்டும் அந்த காரில், கறுப்பு நிற சொகுசு வாகனத்தில் ஒருவன் கதவு திறக்க புன்னகையுடன் ஏறுவதையும், அந்த நெடியவன் இவள் தோள் பிடித்து உள்ளே அமர்த்துவதையும், குனிந்து சீட் பெல்ட் போடுவதையும்… அவளது உடைமைகளை வாங்கி உள்ளே வைத்ததையும், தன் மனதின் வக்கிர கற்பனைகளின் சாயம் பூசி, இஷ்டம் போல் கதை புணைந்து, அதை பதிவேற்றினான். தன் பெருமையை பறையறைந்து அறிவிக்க எண்ணி...!
கயல் கொண்ட விழியின்
வீச்சலையில் தத்தளிக்கிறேன்!
இமையெனும் கரை கொண்டு நீ மூட
முழ்கினேன், முத்தெடுக்க!
மூச்சடக்கத் தேவையில்லை
உன்னில் வீழ்ந்து விட்ட
நாளிகை முதல் மூச்செடுக்கவில்லை
சுவாசப் பைகள்...!
வாழ்ந்திருக்க விழைகிறேன்
கடல் வாழ்வனவாக...!
என் திரைகடல் திரவியம் நீ
காத்திருக்கிறேன்…!
என் காத்திருப்புகளின் பலன்
உன் வார்த்தைகளில்…!
அத்தியாயம் - 2
இளம் பச்சையும் நீலமுமாய் அமைதியாய் சிறு அலைகளுடன் தூரத்தில் தெரிந்த கடல் அனுப்பிய குளிர் காற்றில், கழுத்தில் புரண்ட அந்தப் பொன் வண்ணக் கூந்தல் காற்றில் அசைந்தாட, மார்பில் ஆரத்தையும், கை கங்கணங்களையும், அதன் மஞ்சள் ஒளி பட்டு மின்ன வைத்தான், கதிரவன். கால்சராய் அணிந்திருந்த அவன் பாதங்கள் சேனத்தின் மீது பதிந்திருந்தன.
செம்மண்ணின் நிறத்தை உடலிலும், கால்களின் ஆரம்பத்தில் கரிசல் மண்ணின் நிறத்தையும் கொண்டு, தன் வாலினை இலேசாக அசைத்து நின்ற புரவியின் மீது அமர்திருந்தவனின் பார்வை, சிறிதும் அசையவில்லை.
மலை முகட்டிலிருந்து தன் கழுகுக் கண்களால் கடலும் வானும் இணைவதையும், அதிலிருந்து எழும் மேகப் பொதிகள் வானெங்கும் நிறைவதையும், மேலெழுந்த வெண்பொதிகள் கதிரவனின் தூரிகை பட்டு, பொன்வண்ணமாய் மின்ன... கடலுக்கும் அவன் நின்றிருந்த மலைக்கும் இடையே, விரிந்த இலையுதிர் காட்டுமரங்களின் பின் பகுதி, மஞ்சள் நிறமெனவும் முற்பாதி பச்சையைத் தேக்கி வைத்திருப்பதையும் கண்டனவோ அக்கண்கள். அதில் எந்த உணர்வுமில்லை. எதையும் பிரதிபலிக்கவும் இல்லை அவன் முகம். அது இறுகி இருந்தது.
அவன் தாங்கிய மார்பு கவசங்கள் அவன் நிலையின் உயர்வினைக் காட்டும். அவன் கை வாள், பிரத்தியேகமாக... அரிதான உலோகங்கள் கொண்டு அவனுக்கென உருவாக்கப்பட்டது. அது உறைக்குள் இருந்தாலும், கைப்பிடியும் உறையும் அதன் மதிப்பையும், அதை இடையில் அணிந்திருப்பவன் உயரத்தையும் சொல்லும்.
அவன் போருக்கு என்றே படைக்கப்பட்டவன். பிறந்தவுடன் தாயின் முகமறியும் முன் பிரிக்கப்பட்டு, அழுகையை மறந்து, ஓநாய்களுடன் காட்டில் உயிர் ஜீவிக்கும் முறையறிந்து, தன்னைக் காத்து, பயிற்சியில் எதிர்க்கும் எவனையும் எரித்து, கசையடிகளில் வலி மறந்து, அன்பு தொலைத்து, உறவுகளைத் துறந்து, போரிடும் முறை கற்றவன்.
"போர் எனில் வெற்றி!" அதைத் தவிர வேறு அறியா வீரன் அவன்.
தன் புரவியை வானுயர்ந்த அந்த மலை முகட்டிலிருந்தும் கீழே இறக்கி, நெடிதுயர்ந்த மரங்களடர்ந்த வனம் வழியே, நிதானமாக அப்புரவியைச் செலுத்திக் கொண்டிருந்தான்.
அவன் உணர் புலன்கள் கூர் பெற, சுற்றும் பார்த்துக் கொண்டு சென்றவன் முன், வின்னிலிருந்து இறங்கியது போலத் தோன்றினான், அவ்வரக்கன்.
குதிரையிலிருந்து மேலெழும்பி, அரக்கனை வாள் கொண்டு தாக்கி இருந்தான். அவ்வரக்கனே திடீரெனத் தோன்றியிருக்க, அப்புரவி வீரன், அவனையும் விட வேகமாகச் செயல்பட்டுத் தாக்க, இதை எதிர் பாராத அரக்கன், தாக்கப்பட்ட வேகத்தில் “ஆ…” என மல்லாந்து விமுந்தான்.
கீழே விழுந்ததில் ஆத்திரம் மிக “ஆ......” என அலறியபடி மீண்டும் தாக்க ஓடி வர, புரவி வீரனோ சற்றே நகர, இப்போது கீழே வீழ வேண்டிய அரக்கன், முயன்று தன்னை நிலைநிறுத்த, மரத்தைப் பற்றினான்.
இப்போது கண்கள் ஆத்திரத்தில் செந்தணலெனமாற, அம்மரத்தை வேருடன் பிடுங்கி இவன் மீது வீச…, அதில் தப்பி ஒதுங்கி அருகில் இருந்த பாலத்தின் மீதேறி நின்றிருந்தான், புரவியோன்.
அரக்கன் தன் ஆத்திரம் எல்லையைக் கடக்க... தன் நிலை மறந்து, தன் ஆயுதத்தால் புரவி வீரனை தாக்க முற்பட்டான். காலம் தாழ்த்தாது, தன் வாளில் நெருப்பின் சக்தியேற்றி, தானும் நெருப்புச் சூறாவளியென மேலெழும்பி, அரக்கனை துண்டுகளென மாற்றியிருந்தான் அப்புரவி வீரன்.
சொய்ங்… எனும் ஓசையில், அவ்வரக்கனின் உடல் மறைய, "YOU WON" என ஒளிர்ந்தது, புரவி வீரன் அருகில்.
தனக்கு இன்று இணைய விளையாட்டில் அளிக்கப்பட்ட பணியை முடித்து எழுந்தான், அவன். கணினித் திரையை அணைத்து விட்டு, மின் இணைப்பை நிறுத்தியவன், மீண்டும் நாற்காலியை சரியாக அதனிடத்தில் வைத்தவன், திரும்ப அனைத்தையும் சரி செய்தவன், அவன் அறைக்கதவை திறந்து வரவும், அன்னை அலர்மேல் மங்கை அழைக்கவும் சரியாக இருந்தது.
அதீந்திரன், தமிழகத்திற்கும் யவனத்திற்கும் உள்ள தொடர்பினைக் கூறும் நடமாடும் ஆதாரம் அவன். வெண்கலச் சிலைகளில் கிரேக்க சிற்பிகள் வடித்த காளை பருவ ஆண் உயிர் பெற்று வந்தது போல் இருந்தான்.
(காளை பருவம் என்பது 24 முதல் 36 வயது வரையான ஆண்களைக் குறிக்கும் ஆண்களின் ஏழு நிலை பருவங்களில் ஒன்றாகும். இதைக் காதற் பருவம் என்றும் கூறுவர்)
ஏதேனும் ஒரு யவன இளவரசியும், சோழ அரசனும் இவனின் முன்னோராக இருக்க வேண்டும், என கட்டியம் கூறும், அவனின் இளம்பச்சை நிறக் கண்களும், முறுக்கேறிய உடலும், தினவெடுத்த தோள்களும், காணும் எவரையும் சுயம் இழக்கச் செய்யும் வனப்பினைப் பெற்றவன். வீட்டில் இருப்பதால், இலகுவான ஆடையான அடர் ஆலிவ் பச்சை நிற டீ சர்ட், கருமை நிற சார்ட்ஸ் எனும் அரைக்காற் சட்டையும் அணிந்திருந்தான்.
"அதீப் வாடா…! உன்னைக் கூப்பிடத்தான் வந்தேன். நீயே வந்துட்ட" என்ற தாய்க்கு பதில் கூறாமல் கீழே இறங்கி வந்தவன்,
"செந்தில் அண்ணன் இப்ப வந்துடுவாருல்ல?" எனும் கேள்வியைக் கேட்டபடி, தன் தட்டையும், குவளையில் தண்ணீரையும் நிரப்பிக் கொண்டு, தான் வழக்கமாக அமரும் உணவு மேசையின் இடது புற கடைசி நாற்காலியில் அமர்ந்தான். ரகுநந்தன், அலர் மேல் மங்கை தம்பதியரின் இரண்டாவது மகன், அதீந்திரன்.
மூத்தவன், அதீப்பைவிட ஏழு வயது பெரியவன் புருஷோத்தமன், அவன் மனைவி வைஜெயந்தி! இவர்களின் மகன் ஐந்து வயது அத்வைவ், கூட்டுக் குடும்பமாக வசிக்கின்றனர்.
அப்பா, அண்ணன் இருவரும் குடும்பத் தொழில்களை பார்த்துக் கொள்ள….
அதீப், கணினி விளையாட்டின் மேல் ஆர்வம் கொண்டதால், ஒரு கேம் டெவலப்பராகி இருந்தான். தன் நண்பர்களுடன் இணைந்து X Y எனும் பெயரில், புதிதாக ஒரு கம்பெனியை ஆரம்பித்து, ஆன்லைன் கேம் ஒன்றை உருவாக்கி வருகிறான்.
மங்கை, அவன் தனக்கு பதில் கூறாவிட்டாலும், உணவு மேசையில் அமர்ந்திருப்பதைக் கண்டவர், அதீப்பிற்கு இட்டிலியை வைத்தவாறே…
"இப்ப சாப்பிட்டுட்டு கிளம்பினா சரியா இருக்கும். கிளம்புடா!" என்றார்.
அவனோ, "செந்தில் வருவாரா?" என மீண்டும் அதே கேள்வியைக் கேட்க.
"அவரப் பத்தி இப்ப என்னடா கவலை? யாரோ ஒருத்தர், யாரா இருந்தா என்ன? நீ சாப்பிட்டுக் கிளம்பு!"
“தோசை”
“இப்ப நேரம் இல்லை. இன்னிக்கு ஒரு நாள் மட்டும் அட்ஜஸ்ட் பண்ணிக்கடா" என்றார்.
கையைத் தட்டிலிருந்து எடுத்தவன், திரும்பி அமர்ந்து கொண்டு, “எனக்கு வேண்டாம்!" எனவும், அவன் அருகில் வந்து முடியைக் கோதியவர்,
"டேய் கோபப்படாதப்பா, அம்மா பாவம்ல. அவசரமா கிளம்பறதால இன்னிக்கு மட்டும் சாப்பிடு. நாளைக்கு தக்காளி சட்னி பண்ணித் தரேன்."
"தோசை" என, திரும்பக் கூறிய அவனைப் பார்த்ததும், இனி அவனிடம் பேசிப் பிரயோஜனம் இல்லை எனப் புரிய, தோசைக்குக் கல்லைக் காய வைத்தவர்,
"இந்தத் தோசைல அப்படி என்னதான் இருக்கோ, இதைத் தவிர ஒன்னும் பிடிக்க மாட்டிக்குது. மத்த நாளைக்குப் பரவாயில்லை. இது மாதிரி அவசரத்துக்குக் கூடவா…!" எனப் புலம்பியபடி மாவை குளிர்பதனப் பெட்டியில் இருந்து எடுக்க, பின்னால் வந்து நின்றவன், அவள் கையில் இருந்து மாவுப் பாத்திரத்தை வாங்கிக் கொண்டான்.
"நீங்க போங்க!" என்றவன், தானே அழகாகத் தோசையை ஊற்றிக் கொள்ள, மனம் தாங்காமல்…
"கொடு! நான் ஊத்தி தந்துட்டுப் போறேன்." எனக் கரண்டியை வாங்க முயல,
"நோ நீட் மாம்!" என்றவன், தனது வேலைகளில் கவனமாகிட, அலர்மேல் மங்கை தனது வேலையை கவனிக்கச் சென்றார்.
தனக்கான தோசைகளை வார்த்து எடுத்துக் கொண்டு, தனது இடத்தில் அமர்ந்து கொண்டவன், ஜன்னலின் வழியே வெளியே பார்த்துக் கொண்டு, சாப்பிட்டுக் கொண்டிருக்க,
மங்கை "டேய், அதீப்... நேரமாயிடுச்சி கிளம்புடா!" என்றார் பத்தாவது முறையாக.
"சரிம்மா!" என்றவன் நிதானமாகச் சாப்பிட்டு நேரத்திற்குக் கிளம்பினான்.
விவரனைகளின் விவரிப்புகளுக்கு அப்பாற்பட்டவன்
உன் கற்பனைகளின் காட்சிப்படுத்துலுக்குக் கட்டுபடுவேனோ?
காட்சிகள் என்பன யாவையோ?
காணப்படுவனவோ? இல்லை…
காட்டப்படுவனவோ?
யாவும் நீயே!
காணப்படுவன, காட்டப்படுவன, எவையும்
உனையே காட்சிப்படுத்துதல் கண்டனையோ?
Last edited: