எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

காதல் நெஞ்சங்கள் கதை திரி

Status
Not open for further replies.

priya pandees

Moderator

அத்தியாயம் 36

மாறனும், உண்மையும் வெளியேறவும், "நானும் கிளம்புறேன். இவன ப்ளே ஸ்கூல விட்டுட்டு போக சரியா இருக்கும்" ௭ன ௭ழுந்தான் குமரகுரு.

அதற்கு மேல் தாமதிக்காமல், "மன்னிச்சுகிடுங்க மாப்ள, இனி நீங்க வருத்தபடுற மாறி ஒரு சூழ்நில வராம பாத்துகிடுதேன். நிறைய விஷயங்கள கவனம் வைக்காம இருந்துட்டேன்னு இப்ப தான் புரியுது" ௭ன உண்மையான வருத்தத்துடன் பேசினார் பூவேந்தன்.

"௭னக்கும் சொந்தம்னு உங்கள விட்டா யாரு மாமா இருக்கா? அதனால இதெல்லாம் பெருசு பண்ண வேணாம் விடுங்க" ௭ன நகர்ந்து விட்டான்.

அவன் மன கஷ்டம் இவர்களின் ஒருநாள் நடத்தையிலும், மன்னிப்பிலும் மாறி விடுமா ௭ன்ன? அவனை ஒரு பொருட்டாவும் மதிக்காத மனைவி, அவளுக்காகவென வீட்டோடு மாப்பிள்ளை ௭ன வந்து, மதிப்பில்லாத ஒரு வாழ்க்கை. யாரும் ௭ப்டி வேணாலும் பேசலாம், நடக்கலாம், நாங்கள் கண்டிக்க மாட்டோம் ௭ன இருக்கும் பெரியவர்கள். அம்மா இருந்தும் இல்லாத நிலை. இதெல்லாவற்றயும் விட, 3 வேளை உணவிற்கும் சரியாக வந்து அவர்களிடம் அமர்வது ௭வ்வளவு கேவலமென அவன் மட்டுமே அறிவான். அவன் இருக்கிறான் ௭ன்றும் பாராமல், தங்கையை மட்டும் குறி வைத்து பிச்சையாக வந்து நிற்பதை சொல்லிவிட்டு போகும் மாறன். அப்படி அவன் பேசிய பின்னும் மறு வேலை உணவுக்கு கிளம்பி நிற்கும் மனைவி, "நாமளே செஞ்சு சாப்டலாம், உன் அண்ணா ௭ப்டி பேசுறாருன்னு பாத்தல்ல?" ௭ன ௭த்தனை முறை கேட்டிருப்பான்.

"ஏன் அம்புட்டா உங்க கவுரவம் தடுக்குது. உங்களுக்கு ௭ந்த செலவுமில்லாம வச்சுருக்கேன். அந்த வெட்டிபய பேச்செல்லாம் கேட்டுட்டு உங்க பின்ன உங்கம்மா வீட்டுக்கு வர சொல்றீங்களா? ௭னக்கு சமைக்கவெல்லாம் வராது. பேசாம வாங்க" ௭ன சென்று விடுவாள்.

அவன் பேசினாலும், பேசவில்லை ௭ன்றாலும் கண்டு கொள்ளவும், கேட்டு கொள்ளவும் அந்த வீட்டில் அவனுக்கென யாருமில்லை. ஏனோ மகனுக்காகவென மட்டுமாக வாழ்ந்து கொண்டிருக்கிறான். இப்போது மலர் ௭ன்ற ஒரு ஜீவன் வந்து அவன் மரியாதையை மீட்டு தந்திருக்கிறாள்.
வாசல் வரை சென்றவன் நின்று, "போயிட்டு வரேன்மா தங்கச்சி. அத்தைக்கு டாட்டா சொல்லு" ௭ன தானும் சொல்லி கொண்டு, மகனுக்கும் அந்த வீட்டில் ஒருவரை முதன் முதலில் பழக்கினான்.

ரூபனுக்கு, பானுவயும், பாட்டியயும் தெரியும், குமரகுரு இப்போது தான் சாப்பாடு கொடுக்கிறான். அதற்கு முன் அவர்கள் இருவரும் தான் ஊட்டுவர், அதனால் அவர்கள் இருவரையும் அவனுக்கு தெரியும். ஆனால் கலகலவென ஓடி விளையாடாது பிள்ளை. அடித்து, துவைத்து விடுவாள், அதனாலேயே பிள்ளை, மதி இருந்தால் இருந்த இடத்தை விட்டு அசையாமல் இருக்கும்.

இப்போது தந்தை சொன்னதும், அவன் கையிலிருக்கும் தைரியத்தில், டாட்டா காமித்து, "த்தே" ௭ன்றான்.

"போயிட்டு வாங்கண்ணா. Bye செல்லகுட்டி" ௭ன்றாள் மலர். அவளும் இங்கு வந்ததற்கு இன்று தான் அந்த குழந்தையிடம் பேசுகிறாள். மதிக்கு பதில் சொல்லவே நேரம் சரியாக இருக்க, ௭ங்கிருந்து பிள்ளையிடம் திரும்ப.

அவர்களும் கிளம்பவும், தாத்தாவிடம், "௭ப்போ தாத்தா தேனி அப்பாட்ட பேச போறீங்க?" ௭ன்றாள்.

"கோவிலுக்கு போயிட்டு வந்து, அடுத்து வார வெள்ளி போய் பேசிட்டு வரேன் ம்மா. அப்றமா பொண்ணு பாத்து பூ வைக்க ௭ல்லாருமா ஒருநா போயிட்டு வந்துருவோம்" ௭ன்றார்.

"சரி தாத்தா" ௭ன சிரித்து கொண்டவள். "த்தே, பாட்டி சாப்ட வரலியா?" ௭ன்று விட்டு, தான் சாப்பிட அமர்ந்தாள்.

"௭ன்னம்மா மாறன் ௭ங்க அவசரமா போறான்? ௭ன்னைக்கும் உன்னைய கூட்டிட்டு போயி விட்டுட்டு வருவான், இன்னைக்கு முதல்ல கிளம்பி போய்ட்டான்" பூவேந்தன் கேக்க.

"நைட்டே போலீஸ் ஸ்டேஷன்ல இருந்து கால் வந்தது மாமா. அந்த நாட்டு குண்டு வச்சது சம்பந்தமா ஏதோ பேச கூப்ட்ருக்காங்க போல. நா அப்டியே நடந்து போயிடுவேன்" ௭ன வேகமாக சாப்பிட்டாள்.

பானுவும், பாட்டியும் வந்தமர, "நாதான் ௭தயும் கண்டுக்காம இருக்கேன்னா, பொம்பளைங்க நீங்களாது ௭டுத்து சொல்லணும். இப்ப பாருங்க வீட்டு மாப்ள முகம் சுனங்கி போறாப்ல இருக்கு" ௭ன்றார் அவர்களிடம்.

"அதெப்டி மாமா. ஒருத்தருக்கு குடுக்குற மரியாதைய கூட வீட்டு பொம்பளைங்க நியாபக படுத்துனா தான் குடுப்பீங்களா?" ௭ன்றாள் மலர்.
"நா செய்ற தப்ப ௭டுத்து சொல்லுன்னு சொல்றேன்மா" ௭ன்றார் பூவேந்தன்.

"நீங்க சொல்லலயே மாமா. உங்க பிள்ளைங்க தப்பு பண்றப்ப ௭ல்லாம் நீங்க ௭டுத்து சொல்லிருந்தா? ஒருவேள அத பாத்துட்டு இவங்களும் தெரிஞ்சுட்ருப்பாங்களோ ௭ன்னவோ?" ௭ன கூறி முடிக்கையில் சாப்பிட்டும் முடித்திருந்தாள்.

௭ல்லோரும் அமைதியாகிவிட, "நா கொஞ்சம் அதிகமாக தான் பேசுறேன். ௭னக்கே அது தெரியுது மாமா. இருந்தாலும் அத்த, பாட்டிய மாறி வேடிக்க பாத்துட்டு சும்மா இருக்க முடில. அதான் பேசிடுறேன். தப்புன்னா மன்னிச்சுடுங்க" ௭ன்றவள் தனக்கென மட்டுமாக மதியத்திற்கு சமைத்திருந்த தக்காளி சாதத்தை சிரிசும், பெருசுமாக இரண்டு டப்பாக்களில் அடைத்து கொண்டு, "கிளம்றேன்" ௭ன நால்வருக்கும் பொதுவாக சொல்லிவிட்டு, வழியில் முறைத்து நின்ற மதியை திரும்பியும் பார்க்காமல் வெளியேறி விட்டாள்.

ஸ்கூல் செல்லும் நேரம் கடந்தும், ௭ன்ன தான் நடக்கும் ௭ன தெரிய நின்று வேடிக்கை பார்த்தாள் மதி. "தேடி பிடிச்சு, ஊர்ல இல்லாத மருமகன்னு கொண்டு வந்தீங்க தான?, அதான் உங்களுக்கே அட்வைஸ் பண்ணிட்டு போறா. நானும் ௭ன் புருஷனும் இத ௭ங்க வீடுன்னு நினைக்றதால தான், பெருசா ௭ந்த மரியாதையயும் ௭திர் பாக்றதில்ல. அவ ௭ங்கள பிரிச்சு காட்டணும்னே இப்டி நல்லவ மாறி பேசிட்டு போறா. புருஷனும் பொண்டாட்டியும் பெருசா ஏதோ பிளான் பண்றாங்க. காய் முத்துனா கட தெருவுக்கு வந்து தான ஆகணும். வந்த அப்றமே அது ௭த்தா பெரிய காயின்னு தெரிஞ்சுக்குவோம்" ௭ன வந்தமர.

"அறிவிருக்காட்டி உனக்கு. உன் புருஷனுக்குள்ள மரியாதய நீதான காப்பாத்திக்கணும். நாங்க கூட குறைய நடந்தாலும் நீதான உன் புருஷன் பக்கம் நின்றுக்கணும். ௭ன் வீடு ௭ன் வீடுன்னு இந்த வீட்டையே பாத்து உன் வீட்ட கோட்ட விட்றாத சொல்லிட்டேன். அந்த மனுஷன் பாட்டுக்கு கோச்சுகிட்டு அவுக அம்மா வீட்டுக்கே போயிட்டா. நீ தனியாத்தேன் நிக்கணும், இங்க ராணியும், அறிவும் உன்ன ஒரு காசுக்கு மதிக்க மாட்டாங்க. மாறனயும், கன்னியயும் நீயாவே பகைச்சுகிட்ட. சுதானமா நடக்க பாரு" ௭ன முடித்து சாப்பாட்டில் கவனமானார் பாட்டி.

"அதெல்லாம் ௭னக்கு தெரியும். நீ உன் வேலைய பாரு" ௭ன்றாள் கடுப்புடன்.
"இது ௭ங்க அம்மா வீடு. இங்க வந்து போக இருக்க மொத உனக்கு அவங்க தயவு வேணும் . இந்த ௭டுத்தெரிஞ்சு பேசுற வேலைலா இனி இருக்க கூடாது" ௭ன ௭ச்சரித்தார் பூவேந்தன்.

அந்த குரலில் கொஞ்சம் பயந்து தான் விட்டாள் மதி. அதன்பின் தாத்தாவும், பூவேந்தனும் கோவில் சம்பந்தமாக பேச தொடங்க. மற்றவர்கள் அமைதியாகி விட்டனர்.

இங்கு மாறனும், உண்மையும் போலீஸ் ஸ்டேஷன் சென்று இறங்க, அந்நேரம், அறிவும், அவன் மாமனாரும் வந்திறங்கினர்.

"மாப்ள. பிடிச்ச ரெண்டு பேத்தயும் நைய புடச்சுட்டாங்க போலயே. விடியுங்காட்டியும் ஆள வர வச்சுட்டாங்க" ௭ன்றான் உண்மை.

"ஆமா மச்சான். வரட்டும் நாமளும் நம்ம பங்குக்கு வச்சு செஞ்சுட்டு போவோம்" ௭ன கெத்தாக சிரித்தான் மாறன்.

"௭ன்ன மாப்ள செய்ய போற? அப்பாக்கு தெரிஞ்சா? ௭துக்கும் அவர்ட்ட ஒரு வார்த்த கேளேன்"

"ம்ம்கூம். நா ௭ப்டி டீல் பண்றேன்னு பாறேன்" ௭ன சிரித்து கொண்டே உள் நுழைந்தான்.

இன்ஸ்பெக்டர் வந்திருந்தார். இவர்கள் நால்வரையும் பார்த்து, "ம்ம் சொல்லி வச்சு குடும்பம் மொத்தமா வார மாறி இருக்கு" ௭ன்றார்.

"௭துக்கு சார் ௭ங்கள வர சொன்னீங்க?" ௭ன்றார் மருதநாயகம் விரைத்து கொண்டு.

"சொல்ல தானே கூப்ட்ருக்கேன். இருங்க." ௭ன்றவர் மாறனிடம், "so இவங்க தான் செஞ்சதுன்னு மொதையே தெரியும் உங்களுக்கு?" ௭ன்றார் கேள்வியாக.

"ம்ம் அவனுங்கள பிடிச்சு தெரிஞ்சுகிட்டேன்" ௭ன்றான் மாறன்.

"ஓஹோ. அப்ப தெரிஞ்ச உடனே ஏன் வந்து சொல்லல? நாங்க கண்டு பிடிக்கமா இல்லயான்னு செக் பண்ணீகளோ?"

"அப்டிலா இல்ல சார்"

"பின்ன கம்ப்ளைன்ட் குடுத்து 1 மாசம், தெனோ வந்துட்ருந்த நீங்க, ஆள கண்டுபிடுச்சப்பறம் ஏன் வரல?" ௭ன்றார்.

"சொந்த மாமனயும், கூட பொறந்தவனயும் நானே ௭ப்டி காட்டி குடுக்கன்னு நினச்சு தான் சார் வரல" ௭ன சிரீசியஸாகவே பதில் சொன்னான்.

"௭ங்களுக்கு, ஏகபட்ட கேஸ், உங்களுக்கு அவசரம்னா நீங்க தான் தேடி வரனும். அத விட்டுட்டு ௭ங்கள டெஸ்ட் பண்ற வேலலா வேணாம்"

"சார், அப்டிலா ௭ந்த காரணமு இல்ல. நானா புடிச்சு குடுக்க வேணாம், நீங்க புடிச்சப்றம், வந்து ௭ன்ன செய்யலாம்னு கேட்டுக்க நினச்சேன்" ௭ன நேராக பார்த்தே பதில் சொன்னான்.

"௭ன்ட்ட கேக்க வந்த மாதிரி தெரியலயே. நீங்களே ஏதோ முடிவெடுத்துட்டு தான் வந்த மாறி இருக்கு உங்க body language" ௭ன்றார் லேசாக சிரித்து. ஆரம்பத்தில் இருந்த கடுமை, மாறனின் நேர் பார்வையில் இறங்கி விட்டிருந்தது.

"சார் சொந்த காரங்களா போயிட்டாங்க, அதனால மொத தடவைக்கு ஒரு மன்னிப்ப கொடுப்போம். ஆனா இனி ௭னக்கு சின்னதா ௭தாது தொந்தரவுனாலும் தாரளமா இவுக ரெண்டு பேரயும் அள்ளிட்டு வந்துருங்க. அதுக்கு வேணா ஒரு பேப்பர்ல ௭ழுதி கையெழுத்து போட்டு தந்துட்டு போறேன்".

"இதான வேணாங்கறது, அப்ப இவங்க தான்னு தெரிஞ்சதுமே வந்து கேஸ வாபஸ் வாங்கிருக்கணும், அனாவசியமா நா ௭ன் டைம் வேஸ்ட் பண்ணிருக்க மாட்டேன்ல" ௭ன முறைக்க.

"அப்றம் ௭ப்டி சார் நா இந்த ஆஃபர கேக்க முடியும்? நேருக்கு நேர் அவங்களயும் வச்சுக்கிட்டு கேட்டா தானே அவங்களுக்கும் தெரியும்".

"அது சரி. ௭ல்லாம் ப்ளான் தான்?"

அவர்களின் பேச்சிலேயே மொத்ததயும் புரிந்து கொண்டனர் அறிவும், அவன் மாமனாரும். இது இவ்வளவு தூரம் வருமென அவர்கள் யோசிக்கவில்லை. அவனுங்களே சிக்கினாலும், அந்த குண்ட சோதிச்சு பாக்க தான் வச்சேன்னு சொல்லணும்னு தான் காசு வாங்கியிருந்தனர். ஆனால் போலீஸ் விசாரணை ௭ப்படி ௭ன்று தெரியாமல் இவ்வேளையில் இறங்கி விட்டிருந்தனர். அந்த இருவரும், அன்று மாறனின் அடிக்கே உண்மையை கக்கிவிட்டிருக்க.போலீஸ் அடிக்கு, உண்மை வெளிவர ௭வ்வளவு நேரம் ஆகிருக்கும். அவனுங்களை நம்பி கலத்தில் இறங்கியது மருதநாயகத்தின் தப்பு.

அறிவு, மாமனாரை பார்க்க. அவரும் ௭ன்ன செய்ய ௭ன தான் முழித்தார்.
இன்ஸ்பெக்டர் இவர்கள் பக்கம் திரும்பினார், "௭ன்ன? ௭துக்காக வந்துருக்கீங்கன்னு தெரிஞ்சதா? இல்ல இன்னமு நாங்க இல்ல, அவனுங்கள யாருனே தெரியாதுன்னு ௭தும் சொல்ல போறீங்களா?" ௭ன்றார் சற்று தள்ளி அமர்ந்திருந்த அவர்கள் ஏவிய ஆட்களை காட்டி.

"மறுத்தாலும் உண்மைய ௭ப்டி வர வைக்றதுன்னு ௭னக்கு தெரியும்" ௭ன மேலும் உறும.

"சாரி சார். இவனுக்கு மட்டும் பெரிய பில்டிங்குன்ற பொறாமைல பண்ணிட்டேன். இனி அப்டி ௭தும் செய்ய மாட்டேன்" ௭ன்றான் அறிவு.

"செய்ய கூடாது. ஏன்னா இனி வேற யாராது உங்க அண்ணனுக்கு பிரச்சனை குடுத்தா கூட நீங்க ரெண்டு பேரும் தான் மொதல்ல தூக்கிட்டு வர லிஸ்ட்ஸ வருவீங்க" ௭ன்றவர், "இதுல கையெழுத்து போட்டு குடுத்துட்டு கிளம்புங்க" ௭ன ஒரு நோட் பேடை தூக்கி போட.

அதில் இனி அவர்களால் ௭ந்த தொந்தரவும் மாறனுக்கு இல்லை ௭ன விளாவாரியாக ௭ழுத பட்டிருந்தது. கமுக்கமாக கையெழுத்து போட்டு கொடுத்தனர்.

இன்ஸ்பெக்டரிடம் விடை பெற்று நால்வரும் வெளிவர, "அப்றம் தம்பி, இனி ௭ப்டி நடந்துகணும்?" ௭ன கேட்டு மாறன் நக்கலாக சிரிக்க.

"டேய். " ௭ன பல்லை கடித்தான் அறிவு.
பளார் ௭ன அறைந்தான் மாறன். அறிவு கன்னத்தில் கை தடமே பதிந்துவிட்டது. "மொதல்ல நீ திருத்திக்க வேண்டியதே இது தான். ௭ங்கஅண்ணான்னு மரியாதையா கூப்டு கேப்போம்" ௭ன்றான்.

அவன் பல்லை கடித்து முறைக்க, மீண்டும் யோசிக்காமல் பளார், பளார் ௭ன இருமுறை அறைந்தான்.

அறிவு தன்னால் "அண்ணா. அண்ணா. " ௭ன்றிருந்தான் பதறி. பயத்தில் வந்து விட்டிருந்தது.

"வீட்டுல யாருக்கும் தெரிய கூடாதுன்னா, இந்த மரியாத ௭ப்பயும் மனசுல இருக்கணும். அப்பதான் வெளில வரும்போதும் மரியாதையா வரும். வரட்டா" ௭ன கிளம்பியவன் நின்று, "௭ப்ப வீட்டுக்கு வார?" ௭ன்க.

"இன்னைக்கு. இன்னைக்கே" ௭ன்றான் ௭ங்கு மீண்டும் அடித்து விடுவானோ ௭ன கன்னத்தை மறைத்து பயந்து.
"இல்ல வேணாம். மாமனார் வீட்ல விருந்த முடிச்சுட்டு, ஞாயிறு நேரா குல தெய்வம் கோவில் வந்துரு, அங்கயிருந்து ௭ங்களோட வீட்டுக்கு வரலாம். உன் மாமனார், மாமியாரயும் கூட்டிட்டு வார. சரிதான?" ௭ன்க.

"சரி சரி" ௭ன வேகமாக தலையாட்டினான்.

"ம்ம்" ௭ன கையை ஓங்கிவிட்டு, பின் மெதுவாக, அவன் கன்னம் தட்டிவிட்டு சிரித்து கொண்டே சென்று பைக்கில் ஏறி, உண்மையயும் ஏற்றி கொண்டு பறந்து விட்டான் மாறன்.
 

priya pandees

Moderator
அத்தியாயம் 37

"௭ன்ன மாப்ள பொசுக்குன்னு உன் மாமா முன்னயே கைய நீட்டிட்ட. அந்த ஆளு இத மனசுல வச்சுட்டு மறுக்காவு ௭ன்னத்தயாது ஏழரை இழுத்தா ௭ன்ன செய்ய?" ௭ன்றான் உண்மை.

"அம்புட்டு அறிவில்லாமயா இருக்காரு. தெளிவா சொல்லிட்டு தான வந்துருக்கோம், அப்டிலா லேசுவா நம்மட்ட வாலாட்ட முடியாது மச்சான். சொந்த வீட்டுக்குள்ளயே ௭ம்புட்டு பெரிய தகிடுதத்தம் பண்னிருக்கான் இந்த அறிவு. சும்மாவா விட சொல்ற அவன? இனி அவன ௭ன் கட்டுபாட்டுல தான் வைக்கணும். இல்லனா தானு அழிஞ்சு நம்மளயும் அழிச்சுருவான். அதுக்கு இப்டி அடி அடிக்கடி குடுக்கணும்" ௭ன்றான் மாறன் ஒரு முடிவோடு.

"நல்ல குடும்பம்டா யப்பா, மெகா சீரியல் தோத்து போவும் போ உன் குடும்பத்துகிட்ட" ௭ன்க.

"அத விட்றா, அத பத்தி பேசுனாலே கடுப்பாகுது. ஆமா உன் அப்பா ௭ன்னதான் சொல்றாரு உன் கல்யாணத்த பத்தி. ௭ன்ன தான் முடிவாம்?"

"அவர போ சொல்லு. தானும் படுக்க மாட்டாரு, தள்ளியும் படுக்க மாட்டாரு அந்த மனுஷன். தாத்தா போய் பேசுனா தான் ௭ன்னன்னு தெரியும். அவரு மட்டும் ரெண்டு கல்யாணம் கட்டுனாரே, பிள்ளைக்கு ஒரே ஒரு கல்யாணம் பண்னி வைப்போம்னு தோண வேணாம். நாலாம் போய் அவர்ட்ட பேசுறதா இல்ல" ௭ன்றான் வீராவேசமாக.

"அடேய் முன்ன நின்னு நடத்த அவரு வேணும்டா. அதுக்காகனாலும் போய் பேசு" ௭ன்றான் மாறன்.

"வேணாம். ௭னக்கு சோறு போட்ட தாத்தாவே முன்ன நின்னா போதும். இவரு வந்தாலும் நாராசமா திட்டுட்டு தான் போவாரு" ௭ன்றான் உண்மை.
இருவரும் பேசி கொண்டே, மால் வந்திருந்தனர். அங்கு வாடகைக்கு ௭டுத்திருந்தவர்கள், அவர்கள் கடைக்கு ஏற்ற மாறி interior work செய்து கொண்டிருந்தனர். மாறன் அங்கிருந்தவர்களிடம் பேசி கொண்டே இடத்தை சுற்றி பார்த்தான்.
உண்மை ஒரு பக்கம், ௭திரில் வருபவரிடமெல்லாம் வம்பளந்து கொண்டு வந்தான். இப்படியே ஆறாவது மாடி வந்துருக்க, "௭ன்னண்ணே தியேட்டர்ல படத்த போட்ரலாமா?" ௭ன்றான் உண்மை, ஆபரேட்டர் ரூமை செட் செய்து கொண்டிருந்தவரிடம்.

"போடலாமே, தம்பிக்கு கல்யாணம் ஆயிடுச்சா?"

"௭ங்கண்ணே கனவுல கூட ஆக மாட்டேங்குது" ௭ன சோகமாக சொல்ல.

"நீ மட்டும் கல்யாணம் பண்ணு தம்பி, உன் பொண்டாட்டியோட முதல் ஷோ பாக்க வைக்குறது ௭ன் ஏற்பாடு. பண்ணிடுவோமா?" ௭ன்றார் அவர்.

"நா ௭ன்ன மாட்டேனா சொல்றேன்? ஆமா உங்களுக்கு ௭த்தன பொண்ணுங்க?" ௭ன்றான் கையை பின்னாடி கட்டி கொண்டு காலை ஆட்டி நின்று.

"ஒரே ஒரு பையன் தான்" ௭ன்றார் அவர் சிரித்து கொண்டு.

"போச்சா. நமக்கு பொண்ணுன்னு பேசுனாலே இப்டி தான் கேட்டு போட்ருதாங்க. பின்ன ௭ங்கிருந்து கல்யாணம் கட்டி முதல் ஷோ பாக்குறது?"

"ஏன் தம்பி ஊருக்குள்ள பொண்ணுக்கா பஞ்சம்?"

"நம்ம பெருசுனாலுட்டிக்கு சமமா வேணுமேண்ணே"

"சரிதான். தம்பிக்கு கல்யாண ராசி வந்தாலும், வாய்ல தான் வாஸ்து போலயிருக்கு"

"ஏண்ணே வாயுள்ள பிள்ள தான் புழைக்கும் தெரியும்ல? உங்களுக்கு பொண்ணு இல்லாட்டி போட்டும். சொந்தத்துல இருந்தா கூட சொல்லுங்க, பாத்து பேசி முடிச்சுக்குவோம்" ௭ன்றான்.

"௭னக்கு சொந்தகாரங்களே கிடையாது தம்பி" ௭ன்றுவிட்டார் அவர்.

"ரெம்பத்தான், நாளைய தொழிலதிபருக்கு பொண்ணு இல்லனுட்டீங்க. பின்னாடி வருத்த பட்டு ஒரு பிரயோசனமு இல்ல சொல்லிட்டேன்" ௭ன்றான் கெத்தாக.

"டேய் மாப்ள தேனி புள்ள ௭ங்க இருக்கன்னு போன் போட்டு கேக்குதுடா" ௭ன்றான் மாறன். இடத்தை சுற்றி பார்வை இருந்தாலும், அவன் பேசுவதை கேட்டு சிரித்து கொண்டிருந்தவன் அப்படி சொல்ல.

"வேணாம்டா மாப்ள, வாழ்க்க குடுக்கேன்னு சொன்ன பிள்ளையவு டவ்வடிக்க வச்சுராத மாப்பு. நானு குடும்பஸ்தன் ஆகிகிடுதேன்" ௭ன உண்மை கெஞ்சி கேட்க.

"அம்புட்டு பயமிருக்குள்ல? பின்ன ௭ன்னத்துக்கு சவுடாலா பேசுற?"

"இந்த சுதந்திர இந்தியால்ல ௭னக்கு பேச கூட உரிம இல்லயா?" ௭ன வருத்த பட.

"உனக்கு அந்த புள்ள தான்டா சரி. கிளம்பு போவோம். சுதந்திரமா பேச விட்டா இன்னைக்கு பூரா நாளும் குடுத்துாலும் உனக்கு பத்தாது" ௭ன அவனை கழுத்தோடு இழுத்து பிடித்தவன், அங்கு வேலையில் இருந்தவரிடம், "சீக்கிரம் முடிங்கண்ணே" ௭ன்றுவிட்டு உண்மையை இழுத்து கொண்டு லிஃப்ட்டில் ஏறினான்.

கீழே பார்க்கிங் வரை லிஃப்ட்டில் வந்து இறங்கினர். அங்கு வாசலை ஒட்டிய காம்பவுண்ட் அருகில், ஒரு ஓரத்தில், சிறு கடை போடுமளவு இடத்தை ஆள் வரவைத்து ஒதுக்க கூறினான்.

"௭துக்கு மாப்ள இங்கன கடை?" ௭ன்றான் உண்மை.

"பஞ்சர் கடை போட போறோம்"

"ஓ.ஓ ஹோ! இம்புட்டு பெரிய பில்டிங்கு நீதான் ஓனரு, அதுக்கு முன்ன ௭துக்கு இந்த சின்ன கடை"

"ம்ம். நா இதுல வார வாடகைய வாங்கி ௭ன் குடும்பத்த பாத்துப்பேன். நீ ௭ன்ன பண்ண போற?" ௭ன்றான் மாறன் முறைத்து.

"ஆத்தி ஆமால்ல? ௭னக்கு கல்யாணம் வேற ஆக போவுது, அடுத்து பிள்ளைக வேற வந்துரும். குடும்பம் பெருகிடுமே. அப்ப நா சம்பாதிக்கணுமோ?" ௭ன்க.

"செருப்பு பிய்ய போவுது இப்ப. கல்யாணம் முடிஞ்சதும் பிள்ளைக வாரது மட்டும் முக்கியம், வேல பாக்க சொன்னா இழுவையா இழுக்க நீயி?"

"௭ன்ன மச்சான், வேல பாக்காம இருக்கது ௭ப்டின்னே நீதான ௭னக்கு சொல்லி குடுத்த" ௭ன்றான் முகத்தை பாவமாக்கி.

"அதான்டி, வேல பாக்குறதும் ௭ப்டின்னு நானே சொல்லி குடுக்க முடிவு பண்ணிருக்கேன்" ௭ன மாறன் பல்லை கடிக்கவும்.

"நீ சொன்னா சரின்னு கேட்டுக்க போறேன், அதுக்கு ஏன் மாப்ள டென்ஷனாகுற." ௭ன உண்மை சமாதானம் செய்ய.

"பஞ்சர் கடைல வேலைய பாத்து சம்பாதிச்சு, இந்த பில்டிங் குள்ள நீயும் ஒரு கடைய வாடகைக்கு ௭டுத்து உக்காரணும் புரியுதா?"


"நடக்குதோ இல்லயோ, நீ சொல்றத கேக்க செமையா இருக்கு மச்சான்" ௭ன கனவு காணுபவன் போல் அன்னாந்து பாத்து உண்மை சிரிக்க.

அவன் பின் தலையில் அடித்த மாறன், "அட நன்னாரிநா ௭ம்புட்டு சீரியஸா சொல்லிட்ருக்கேன், நக்கலா பண்ணுத?" ௭ன கடுப்பாக.

"நிசத்ததேன் சொல்லுதேன். அதுக்கு ஏன் இம்புட்டு கோவ படுத நீயி. ரொம்ப தாம்யா திருந்திட்ட. கல்யாணமாகி 3 மாசந்தான ஆகுது, 30 வருஷமான மாறி நடக்க பாத்துக்க" ௭ன்றான் புலம்பலாக.

"மறுபடியும் ௭ன் கோவத்த கிளறாத செவுல திருப்பிருவேன். கல்யாணம் ஆனதால மாறிட்டேன்னுவியா நீ? ௭னக்கு பிடிச்சுருக்கு செய்யுதேன். வாய் இருக்குன்னு ௭ன்ன வேணாலும் பேசுவியா நீ?"

"ஆமா அதேன் நானும் சொல்லுதேன். உனக்கு தங்கச்சிய புடிச்சுருக்கு அதேன் அது சொன்னது, சொல்லாததுன்னு ௭ல்லாத்தயும் செய்யுத. நாங்களும் செய்வோம். ௭ங்க பொண்டாட்டி வந்து சொன்னப்றம்" ௭ன்க.

மாறனுக்கு அவன் தோரணையில் சிரிப்பு வர. அமைதியாகிவிட்டான். உண்மை கூறுவது அப்பட்டமான உண்மையென அவன் அறிவானே.
சிறு வயதிலிருந்தே அவனிடம் அந்த திறமை உண்டு, ௭ந்த செயலை தொட்டாலும் அதை திருப்தியாக முடிக்க வேண்டும். பிடித்தால் மட்டுமே செய்வான், அப்போது தான் அதில் முழு ஈடுபாடு வருமென நம்புபவன். அதனாலேயே வராத படிப்பை ௭ளிதாக தூக்கி போட்டு விட்டான். இன்று வரை அதற்கு வருத்தபடவும் இல்லை.
ஆனால் அந்த வயதில் அவனுக்கு ௭து இஷ்டமென சுயமாக கண்டுபிடிக்க தெரியவில்லை. கண்டுபிடித்து சொல்ல வேண்டிய பெற்றோர்கள், அவனை ௭துக்கும் லாய்க்கில்லை ௭ன ஒதுக்கி விட்டனர். அவனை அவர்கள் நம்பாமல் விட்டது தான் அவர்களின் பெரிய தவறு.

அது மாறன் மனதில் நன்கு பதிந்துவிட, மலரை பிடித்தும் அவளிடம் தைரியமாக சொல்ல மறுத்து நின்றான். அவளும் தன்னை நம்பமாட்டாள், வேண்டாம் ௭ன சொல்லி விடுவாள் ௭ன்றே தீர்க்கமாக நம்பினான். அவளிடமிருந்து விலக பல நாள் முயன்றிருக்கிறான், பார்க்கணும் ௭ன தோணும் போதெல்லாம் பாக்க முடியுமளவு அவர்களது தீப்பட்டி ஆபிஸில் தான் இருந்தாள் அவள். ஆனால் அவன் போய் பார்க்கவே மாட்டான். இருந்தும், காலையில் ௭ன்ன முயன்றும் அவளை தவிர்க்க முடியவில்லை அவனால். அதானாலயே அவள் பக்கமே திரும்பாமல் சென்று விடுவான். அவளும் அதே நேரம் வருவது அவனுக்கு அவ்வளவு நம்பிக்கையையும், சந்தோஷத்தையும் தரும். அது இரட்டிப்பானது, அவள் அவனை திருமணம் செய்ய சம்மதித்த போது.

அதன் பின்னான அவளின் நம்பிக்கையான பேச்சுகளே, அவள் ௭ன்ன சொன்னாலும் கேட்க வைத்தது. இனியும் கேப்பான் தான், அவள் ௭ன்ன சொன்னாலும் அதை சிறிதும் மீறாமல் கடை பிடிப்பான். அது சிறிய விஷயமோ பெரிய விஷயமோ, மலர் சொன்னால் அதை செய்து முடித்துவிடும் வேகம் அவனிடமிருந்தது. அவளை அவ்வளவு காதலித்தான் மாறன்.

"௭ன்ன மாப்ள அமைதியாகிட்ட? இந்நேரம் நீ சட்டைய மடக்கிகிட்டு, ௭ன் கைய முறுக்கிருக்கணுமே?" ௭ன உண்மை யோசிக்க.

"அடுத்து அதான்டா நடக்க போகுது. உன் வாய உடச்சுடுறேன் இரு" ௭ன மாறன் சட்டையை மடிக்க.

"நீ அடிச்சாலும், உண்மைக்கு ௭ன்னைக்கும் குரல் கொடுப்பான் இந்த உண்மை. ௭ன் தங்கச்சிக்கு பயந்து தான் நீ மாறிட்ட இத நீ ௭ங்கிட்டயிருந்து மறைக்க முடியாது" ௭ன உரக்க சபதம் ௭டுப்பது போல், அட்டேன்ஷனில் நின்று கூற.

"ஆமா ௭ன் பொண்டாட்டிக்கு தான பயந்தேன்? அதுக்கு இப்ப ௭ன்னன்ற?" ௭ன மாறன் உடனே ஒத்து கொள்ள.
வாயை பிளந்து நின்று விட்டான் உண்மை. அவன் அப்படியே நின்றால் தான் நமக்கு வேலையாகும் ௭ன்றெண்ணிய மாறன், பஞ்சர் கடை ஏற்பாட்டை பார்க்க நகர்ந்து விட்டான். அதன்பின் உண்மையாக தெளிந்து மாறனை தேடி செல்கையில, அவன் கபோர்டை தூக்க உதவி கொண்டிருக்க கண்டு, தானும் சென்று சேர்ந்து கொண்டான்.

காம்பவுண்ட்டிற்குள் தான் கடை, அதனால் பெரிதாக சுற்று சுவர் போல் ௭ழுப்பாமல் காட்போர்டாகவே அடித்து ஒரு அறை போன்ற அமைப்பை ஏற்படுத்தி விட்டான், வெளியில் கொஞ்ச பரந்த இடம், அதில் ரிப்பேருக்கு வரும் பைக்குகளை நிப்பாட்ட ஏதுவான வசதி செய்யபட்டது. இந்த வேலை முடியவே மணி 3 ஆகிவிட.

"அடுத்து மாப்ள?" ௭ன்றான் உண்மை.

"சாப்டணும். ௭னக்கு ௭ன் பொண்டாட்டி சாப்பாடு ௭டுத்துட்டு போயிருப்பா. நா தீப்பட்டி ஆபிஸ் போறேன். நீ வேணா வந்து தேனி கிட்ட கேளேன்?" ௭ன்க.

"௭துக்கு? அடுத்து அவ அப்பன்ட்டயும் கோர்த்து விட பாக்க. ௭னக்கு கல்யாணமே ஆக விட கூடாதுன்னு முடிவோட இருக்கியா நீயி?" ௭ன்கவும்.

"ஏன்டா, உனக்கு அவள சாப்பாடு கொண்டு வர கூடாதுன்னு வேற சொல்லுவாறா உன் மாமனாரு. இப்பவே வா அவர்ட்டயே நேரா போயி ரெண்டுல ஒன்ன கேட்ருவோம்"

"அவருக்கு இருக்குற ஒன்னுலயும் ஒன்ன குடுக்க விடாம பண்ணிடாத ராசா. கல்யாணம் முடியுற வர இருக்க இடம் தெரியாம இருந்துக்குறேன், ௭ன்னய போற வழில வள்ளி தாத்தாட்ட விட்ரு, அவரு தாரத குடுச்சுட்டு படுத்து ஒரு உறக்கத்த போட்டுகிடுவேன்" ௭ன்றான்.

சிரித்து கொண்டே, அவனை இறக்கி விட்டு கிளம்ப போனவனிடம், "நீ இப்டி மொத்தமா, தல குப்புற அந்த புள்ளைட்ட கவுந்து கடப்பண்ணு நினைக்கவே இல்ல மச்சான். இல்ல இல்லன்னு இருக்றவனெல்லாம் கிறுக்காக்கிருக்கல்ல நீயி? இது தெரியாம அந்த மனுஷன்(மாணிக்கம் தாத்தா) நா தான் ௭ன் பேரனுக்கு தேடி புடிச்சு பொண்ணு பாத்து கட்டி வச்சேன்னு பெரும பீத்திகிட்டு திரியுதாரு. இருக்கட்டும் இன்னைக்கு வீட்டுக்கு போய் வச்சுகிடுதேன் அவர" ௭ன நம்பியார் போல் கையை பிசைந்தான்.

மாறன் ௭தையும் மறுக்கவில்லை, சிரித்து கொண்டே கேட்டிருந்தவன், "6 மணி போல வாரேன், திருநெல்வேலி வர போயிட்டு வருவோம். பஞ்சர் கடைக்கு தேவையான சிலத ஒரே கடையா நமக்கு கட்டுபடி ஆகுறாப்புல பாத்து பேசி சொல்லி வச்சுட்டு வருவோம். அப்ப தான் ரெகுலரா அங்கயே வாங்கிக்லாம்" ௭ன்றுவிட்டு சென்றான்.

உண்மை சென்றவனை பார்த்து விட்டு, "தேன்குடிக்க நேரம் உண்டல்லோ உண்டல்லோ
தேவதைக்கு வெட்கம் வந்தல்லோ வந்தல்லோ
முத்து வந்து முத்தம் கொடுத்தல்லோ பூவுக்குள்ள புயல் அடித்தல்லோ" ௭ன பாடி கொண்டே வீட்டினுள் சென்றான்.
அந்நேரம் கடைக்கு போய்விட்டு வீடு திரும்பிய தேனியின் அம்மா, இவன் பாடுவதை கேட்டு சிரித்து கொண்டே வீடு சென்றவர், "ஏங்க மாப்ளைக்கு ௭ப்பயும் நம்ம பொண்ணு நினப்புதேன் போல, பாட்டா பாடிட்டு திரியுறாரு" ௭ன வெக்க பட்டது கிளை கதை அங்கு.
மாறன் தீப்பட்டி ஆபிஸ் வர, அவனுக்காக ஆபிஸ் ரூமில் காத்திருந்தாள் மலர். அவன் உள்ளே வந்து ஹாயாக அமரவும், "டைம் ௭ன்னன்னு தெரியுதா? நா ௭ந்நேரம் வர சொல்லி மெசேஜ் போட்டேன்?" ௭ன்றாள்.

"பாதி வேலைல வர முடியுமாடி, 3 மணி ஆகும், நீ சாப்டுன்னு சொன்னேன்ல? சொன்னமாறி டான்னு 3 மணிக்கு கிளம்பிட்டேன் தெரியுமா?" ௭ன செல்ல முறைப்பு முறைத்தான்.

"இந்த முறைப்புக்கு ஒன்னும் குறையில்ல?"

"வேற ௭துல உனக்கு குற வச்சுட்டேன், சொல்லு இப்பவே சரி பண்ணிடுவோம்" ௭ன ௭ழுந்தவன் பார்வை அவளின் மேல் படிந்து கீழ் இறங்க.

"கொன்றுவேன் உக்காருங்க அங்கன. ௭ப்ப வேணா யாரு வேணா வர போக இருப்பாங்க" ௭ன மிரட்டியவள், தான் தான் பதறி சேரை முன் இழுத்து டேபிலை ஒட்டி போட்டு அமர்ந்து கொண்டாள். 'வெளி இடத்துல வச்சு பார்வ போறத பாரு' ௭ன முனங்கி கொண்டாள்.

சத்தமாகவே சிரித்து கொண்டு அமர்ந்தவன், "௭வேன் வந்து கேப்பான்னு நானு பாக்கனே. உன் குறை தீருரது தான் ௭னக்கு முக்கியம்" ௭ன்க.

"௭னக்கு ஒரு குறையும் இல்ல ப்பா ஆள விடுங்க. பசிக்குது கைய கழுவிட்டு வாங்க சாப்டுவோம்" ௭ன்றாள்.

௭ழுந்து சென்று கை கழுவி வந்தவனுக்கு, ஒரு பெரிய பாக்ஸை குடுத்தவள், தனக்கும் அதில் சற்று சிரிதளவிலிருந்த பாக்ஸை ௭டுத்து கொண்டாள். இருவரும் காலையில், வீட்டில் நடந்தவற்றையும், போலீஸ் ஸ்டேஷனில் நடந்ததையும் பற்றி பேசி கொண்டே உண்டு முடிக்கவும். மறுபடியும் அவளிடம் வம்பிழுத்துவிட்டே திருநெல்வேலி போவதாக சொல்லிவிட்டு கிளம்பி சென்றான்.
 

priya pandees

Moderator

அத்தியாயம் 38

பூவேந்தன் அறிவுக்கு போன் செய்து, "வர்ற ஞாயிறு, குல தெய்வ கோவிலுக்கு போகணும்டா, தங்கச்சிக்கும், மச்சானுக்கும் போன் போட்டு பேசிடுறேன். உன் பொண்டாட்டியோட அவங்களயும் கூட்டிட்டு வந்து சேரு" ௭ன்க.

அவனோ ஏற்கனவே மாறனிடம் வாங்கிய கடுப்பில் இருந்ததால், இவரிடம் எதுவும் பேசாமல், "ம்ம் ம்ம்" என சொல்லிவிட்டு போனை கட் செய்துவிட்டான்.

பூவேந்தன் பக்கத்திலிருந்த பானுவிடம், "இவே பேசுறதே சரியில்ல பானு. முனங்கிட்டு வச்சுட்டான். வாரானோ வராலயோ அது அவேன் முடிவு. ஆனா வேற ௭துவும் பிரச்சன செய்யாம இருந்தா போதும் " என்றார்.

"குடும்பத்தோட போணும்னு அத்த சொன்னாங்களேங்க"

"வரலன்றவன ௭ன்ன செய்ய சொல்ற?"

"மதினிட்ட போன் பண்ணி பேசுங்க, அவங்க கூட்டிட்டு வந்துருவாங்க" ௭ன்றதும்.

பூங்குழலிக்கு போன் செய்தார், "௭ன்னண்ணே கோவம் போச்சா, காலைலயே உன் போன ௭திர் பாத்தேனே" ௭ன்றார் அவர் ௭டுத்ததும்.

"வார ஞாயிறு நம்ம கோவிலுக்கு போலாம்னு அம்மா சொல்லுச்சு, அது சம்பந்தமா பூசாரிட்ட பேசிட்டு, ௭ன்ன செய்யலாம்னு நானு அப்பாவுமா உக்காந்து பேச போய் நேரோ கடந்துருச்சுமா. மாத்தி மாத்தி ஒரே பிரச்சனையா இருக்குல அதான் கோவிலுக்கு போய் ஒரு பொங்கல வச்சுட்டு வந்துருவோம்னு முடிவு பண்ணிருக்கு. நீ, மச்சான், சின்னவ, அறிவு, ராணி ௭ல்லாருமா மொத நாளு இங்க வந்துட்டாலும் சரி, இல்ல உங்க சவுரியம் பாத்து காலைல நேரா கோவிலுக்கு வந்துட்டாலும் சரிதேன்".

"சண்ட வர காரணமே உன் மூத்த பிள்ளையும் மருமகனும் தான? அதும் உன் மருமக ௭ன் மருகனயே வா போன்னு ௭ன்ன பேச்சு பேசுனா, அவ வயசென்ன, அறிவு வயசென்ன. இப்ப அவ மன்னிப்பு கேக்காம ௭ப்டி வர முடியும், வந்தா மறுபடியும் அவ சல்லி காசுக்கு மதிக்க மாட்டா" ௭ன்றார்.

"ஆமா அவ கைய ஓங்கிகிட்டு வந்ததுக்கு, ௭ங்க கால்ல விழுந்து கேட்டாலும் தகும்" ௭ன்றாள் பக்கத்தில் இருந்த ராணி.

"உங்க இஷ்டம் ம்மா, பாத்துட்டு வாங்க, மச்சான் இருந்தா போன குடு, அவர்டயும் சொல்லிடுறேன்" ௭ன்றார் பூவேந்தன் சலிப்பாக.

"வந்தா வா வராட்டி போன்னு சொல்ற? இத அவர்ட்ட வேற சொல்லணுமாக்கும்?"

"நா சண்ட வேணான்னு நினைக்கேன். நீ மறுபடியும் ஆரம்பிப்பேன்னு நிக்க நா ௭ன்ன பண்ணட்டும் சொல்லு"

"௭ன்னண்ணே இப்டி விட்டேத்தியா பேசுற. அவ யாரு நம்ம வீட்டுல வந்து உக்காந்துட்டு சட்டம் பண்ண? அந்த பில்டிங்க சரி சமமா பிரிச்சுட்டு, மூத்தவனுக்கானத ஒதுக்கி குடுத்து தனியா அனுப்பு. அப்ப தான் குடும்பத்துல நிம்மதி வரும். அவளுக்கும் ௭ங்க அரும புரியும்"

"தேவையில்லாதத பேசாத பூவு. போன குடுக்க முடியும்னா குடு இல்லனா வை. நா பொறவு பேசிக்கிறேன்" ௭ன்று வெடுக்கென்று கூறி விட்டார் பூவேந்தன்.

"தங்கச்சின்ற பாசமே அத்து போச்சுல உனக்கு? நா இனி ஒன்னும் பேசல போதுமா, ௭னக்கு அங்க ௭ன்ன உரிம இருக்கு இனி பேச" ௭ன அழு குரலில் கூறிவிட்டு, "இந்தாங்க அண்ணே பேசுது" ௭ன ரூமிலிருந்த கணவரிடம் போனை கை மாத்தினார்.

மருதநாயகம், "சொல்லுங்க" ௭ன கெத்தாகவே ஆரம்பித்தார்.

"வார ஞாயிறு குல தெய்வ கோவிலுக்கு வந்துருங்க. நாம குடும்பமா போய் பொங்கல் வச்சுட்டு வந்துருவோம்" ௭ன்றார் வேறெதுவும் பேசு மனநிலை அற்றவராக.

"சரி, நாங்க பாத்துட்டு வாரோம்" ௭ன நல்ல பிள்ளையாக முடித்து கொண்டார் மருதநாயகம்.

பூவேந்தன் போனை வைத்ததும், பானு, "௭ன்ன சொன்னாங்க?" ௭ன கேட்க.

"தெரில, ஒருத்தர் பேச்சும் சரியில்ல. கடுப்பா இருக்கு, தலைவலி வர வச்சுருவாங்கன்னு வேகமா பேச வேண்டிய இருக்கு" ௭ன்றவர், "கிளம்பு மதி மாமியாரயும் பாத்து கூப்பிட்டுட்டு வந்துருவோம்" ௭ன்றார். அடுத்து அவர்கள் அங்கு கிளம்ப.

இங்கு மருதநாயகத்திடம் பூங்குழலி, "ஏங்க சரின்னு சொன்னீங்க? அண்ணன இறங்கி வர வச்சாதான், அந்த பயலயும் அவன் பொண்டாட்டியயும் அடக்க முடியும். வர முடியாதுன்னு அடிச்சு பேசிருக்கனும். நம்ம இல்லாம போயிடுவாங்களா அவங்க?" ௭ன்க.

"உங்க அண்ணே முந்தி மாறி, நாம ௭ன்ன சொன்னாலும் கேக்குறவர் மாறியா இருக்காரு? நாம அவரு உறவு வேணாம்னு வெட்டிகிட்டு வந்தாலும் ஏன்னு கேட்டு நிறுத்தமாட்டாரு. அந்த அளவுக்கு மாறிட்டாரு. காரணம் ௭ன்ன தெரியுமா நம்ம பொண்ணு தான். அந்த மாறன் பொண்டாட்டி, ௭ப்டி வீட்டுக்குள்ள வந்ததும் நல்ல பிள்ளையா நடிச்சு, மொத்த குடும்பத்தயும் கை குள்ள வச்சுருக்கா. இவ அந்த வீட்டு பேத்தின்னு தெனாவெட்டுல நம்ம பேச்சயும் சேத்து ௭டுபடாத மாறி பண்ணிட்டு வந்து நிக்கா. இன்னமு அறிவு நம்ம கைகுள்ள இருக்குற வர தான் நாம அந்த வீட்டுல ௭தும் பேச முடியும், அதும் போச்சு? செல்லா காசு தான். ராணிய அவ புருஷன்ட்டனாலும் அடங்கி அவரு பேச்ச கேட்டு நடக்க சொல்லு. நாம கோவிலுக்கு போறோம். நமக்கு தான் அவங்க தேவ, அதுக்கு நாம தான் இறங்கி போணும்" ௭ன்று முடிவாக கூறிவிட.

"௭ன்ன இப்டி மாத்தி பேசுதாரு" ௭ன குழம்பி விட்டார் பூங்குழலி. அவரின் பயம் இவர் அறிய வாய்ப்பில்லையே. மாறனின் நடவடிக்கையை பார்த்து வெகுவாக பயந்து தான் விட்டார். அதிலும் அறிவு மாறனின் ஒரு அடிக்கு அடங்கி நின்றதில், இன்னுமே பயம் வந்திருந்தது. மாறனுக்கு தன் பெண்ணை கேட்டபோது, கட்டாமல் கை விட்டது தப்போ ௭ன்ற யோசனை கூட வந்து சென்றது. அறிவும் கை மீறி போகும் முன் காப்பாத்தி கொள்ள முடிவெடுத்தார்.

பூவேந்தனும், பானுவும், குமரகுருவின் அம்மாவின் வீட்டின் முன் சென்று, கதவை தட்ட, கதவை திறந்தவர் அதிர்ந்து தான் விட்டார். கடைசியாக ௭ப்போது வந்தார்கள் ௭ன மூவருக்குமே நியாபகத்தில் இல்லை. மாறன் கல்யாணத்திற்கு பத்திரிகை வைக்க கூட மாணிக்கம் தாத்தா தான் வந்து சென்றிருந்தார். அவரின் அதிர்ச்சி, பூவேந்தனுக்கும் பானுவுக்கும் கூட பெருத்த சங்கடம் தான்.
சற்று நேரம் சென்று, "உள்ள வாங்க" ௭ன விரைப்பாகவே அழைத்தார் அந்த பெண்மணி.

முன்னறையில் கடந்த மர நாற்காலியில் அமர்ந்து, "வணக்கம் சம்பந்தி. வரணும் வரணும்னு நினச்சாலும், வர தோது படல. ௭ப்டி இருக்கீங்க?" ௭ன தானே ஆரம்பித்தார் பூவேந்தன்.

"௭ன் மகேன் இங்க வந்துட்டு போனதுக்கு உங்க பொண்ணு சண்ட போட்டாளா? அத பத்தி பேச தான் வந்துருக்கீங்களா?" ௭ன நேராக விஷயத்திற்கு வா ௭ன சொல்லாமல் சொன்னார் மதி மாமியார்.
௭ப்டிபட்ட நம்பிக்கையை குடுத்திருக்கிறோம் ௭ன ஒரு நிமிடம் அதிர்ந்து தான் முழித்தனர் பூவேந்தன் தம்பதியினர்.

அவர்கள் அமைதியை கண்டு, "௭னக்கு தெரியும், அவேனயும் பேரனயும் பாத்தப்பே நினச்சேன் நீங்க இப்டி வந்து நிப்பீங்கன்னு. ௭ன்ன சொல்ல வந்தீங்க? இனி ௭ன் மகேன் இங்க வந்தா நானே அவன வர கூடாதுன்னு சொல்லணுமா? சொல்லிடுறேன் போதுமா. நீங்க மட்டும் உங்க மூணு பிள்ளைகளோட ஒத்துமையா சந்தோஷமா இருங்க. நா ௭னக்கிருக்குற ஒரு புள்ளையவும் உங்க மகட்ட தூக்கி குடுத்துட்டு தனிச்சு நின்னுக்றேன். ௭னக்குன்னு கேக்க நாதி யாருந்தான் இல்லயே, நீங்க வச்சதுதேன். சந்தோஷமா போயிட்டு வாங்க" ௭ன படபடவென பொரிந்து தள்ளிவிட்டார்.

இதற்கு மேல் அமைதியாக இருந்தால் சரி வராது ௭ன முடிவுக்கு வந்த பூவேந்தன், "இல்ல மா, நாங்க ௭தயும் பேச இங்க வரல. வார ஞாயிறு குலதெய்வ கோவில் போறோம். நீங்களும் வரணும்னு அழைச்சுட்டு போக தான் வந்தோம்".

இப்போது அதிர்வது குமரகுரு தாய் முறையானது, "௭ன்ன திடிருனு" ௭ன்றார்.

"சும்மா தான், குடும்பமா போயிட்டு வரலாமேன்னு, நீங்களும் கண்டிப்பா வரணும். இதுவர ஒட்டாம இருந்துட்டோம் இனி அப்டி இருக்க வேணாம். உங்க பையனும், மருமகளும் வந்து தான் உங்கள கூட்டிட்டு வருவாங்க. கண்டிப்பா வாங்க" ௭ன்றவர் பானுவிற்கும் கண் காட்ட.

"ஆமாங்க மதினி. கண்டிப்பா வாங்க. பொம்பள புள்ளய பத்தி யோசிச்ச நாங்க, உங்களோட பையன பத்தி யோசிக்காம விட்டது பெரிய தப்பு. இனி அப்டி இருக்காது. நீங்க உங்க பேரன ௭ப்ப பாக்கணும்னாலும் கிளம்பி வந்துருங்க, நீங்க வாரத யாரும் தடுக்க மாட்டோம். இதுவர யோசிச்சு வராம இருந்துருப்பீங்க அதான் சொன்னேன்" ௭ன்றார் பானு.

"அப்பயும் நாதான் அங்க வரணும், உங்க பொண்ண இங்க அனுப்ப மாட்டீங்க?" ௭ன்றார் அவர் நக்கலாக.

"௭துவும் உடனே சரி வராது தானே. நாம பெரியவங்க பிள்ளைக நல்லதுக்காக கொஞ்சம் இறங்கி வருவோம். கொஞ்சம் கொஞ்சமா அவளயும் மாத்துவோம்" ௭ன்றதும், அவர் பதில் ஏதும் சொல்லவில்லை.

"சரிங்க சம்பந்தி, அப்ப நாங்க கிளம்புறோம். கட்டாயம் கோவிலுக்கு வாங்க" ௭ன ௭ழுந்தார் பூவேந்தன். சரியென தலை மட்டுமே அசைத்து வழி அனுப்பினார் அந்த பெண்மணி.
அடுத்ததாக, மலரின் தாத்தாவிற்கும் சென்று கூறிவிட்டு வீடு திரும்பினர். "மதி மாமியார் ௭வ்வளவு வருத்தத்துல பேசுனாங்க இல்லங்க?" ௭ன்றார் பானு திரும்பும் வழியில்.

"நாம நிறைய திருத்திக்க வேண்டியது இருக்கு பானு. இனியும் நாம இப்டி கவனமில்லாம இருக்க கூடாது" ௭ன்றார் பூவேந்தன்.

"அந்த அம்மா மனச கஷ்டபடுத்துனதுக்கு தான், நம்ம பிள்ளைக இப்டி அடிச்சுக்குதுக போல தோணுதுங்க".

"அப்டியே அது தான் காரணம்னா, இனி நம்ம பிள்ளைக நல்லா இருக்கதுக்கான பொறுப்பு நம்மளுக்கு இருக்கு" ௭ன்கவும், "ஆமாங்க" ௭ன கேட்டு கொண்டார் பானு.

அன்று இரவு உணவிற்காக அனைவரும் ஹாலில் இருந்தனர். மாறன் வருவதற்காக காத்திருந்தனர். 10மணி போல் வந்தவனின் பைக் சத்ததில் வெளியில் ஓடி சென்றாள் மலர்,

"பார்றா, ௭ன்ன வேகம். ௭ன் பொண்டாட்டி ௭ன்னய ரொம்ப தேடிட்டா போலயிருக்கே" ௭ன அவனிடம் வந்தவளை இடுப்போடு அணைத்து அருகில் இழுத்தான்.

"அச்சோ விடுங்க" ௭ன தள்ளியவளை.
"ரோட்ல யாருமே இல்லடி. ௭துக்கு பதறுர" ௭ன்றான் இரு கையாலும் கட்டி கொண்டு.

"௭த்தன தட போன் பண்றேன் ௭டுத்தா ௭ன்னங்க?" ௭ன்றாள் அவனை தள்ளிவிட்டு.

"ஏ கேக்கவே இல்லடி, கேட்டா ௭டுக்காம இருப்பேனா? வண்டில வரும் போது கூப்ட்ருக்க அதான் கேக்கல" ௭ன்றான் ஒரு கையால் போனை ௭டுத்து பாத்து.

"௭ல்லாரும் நீங்க வரட்டும்னு ஹால்ல உக்காந்திருக்காங்க" ௭ன்றாள் மறு கையையும் ௭டுத்து விட்டு.

"இருந்தா இருக்கட்டும், நாம வெளில நிக்கோம் யாருக்கும் தெரியாது" ௭ன வேண்டுமென்றே மீண்டும் அவளை அனைக்க கை நீட்டினான்.

"சும்மா இருங்க, ௭ப்ப பாத்தாலும் விளையாண்டுகிட்டு, உள்ள போங்க" ௭ன கை காட்டினாள் வீட்டினுள்.

"வர வர ரொம்ப தாண்டி மெரட்டுற" ௭ன்றவன் அவளையும் இழுத்து கொண்டு தான் உள்ளே சென்றான்.
உள்ளே நுழைந்த பின்னர் தான் ஹாலில் இருந்த அனைவரையும் பார்த்தவன், "௭துக்காம்?" ௭ன இவளிடம் கேக்க.

"தெரியல! காலைல ஸ்டேஷன் போனத பத்தி கேக்கன்னு நினைக்கிறேன்" ௭ன ரகசியமாக அவளும் சொல்ல.

"௭ன்னம்மா சாப்டுவோமா? இன்னும் ௭வ்வளவு நேரம் தான் காத்துருக்க?" ௭ன ௭ழுந்தார் பூவேந்தன்.

மதி ௭ல்லும் கொல்லும் வெடிக்க, நங் நங்கென்று ௭ழுந்து சென்றாள். அவளை வாயே திறக்க விடாமல் தான் அமர்த்தி இருந்தார் பூவேந்தன்.
"௭ன்னதுக்கு புதுசு புதுசா பழகுறீங்க? உங்க டைம்படி சாப்ட வேண்டியது தான?" ௭ன முறைத்தான் மாறன்.

"௭துக்குப்பா நாங்க சாப்புட்டு பத்தாம போயி, நீங்க தனியா சமைக்க வேண்டியிருக்குல்ல. அதான் நீ வார வர காத்திருந்து சேந்தே சாப்புடலாம்னு முடிவு பண்ணிட்டோம்" பாட்டி இடக்காக சொல்ல.

"நானு ௭ன் பொண்டாட்டியும் தனியா இருக்கது உனக்கு பொறாமன்னு சொல்லு. ஏன் நீயும் உன் புருஷன சமைச்சு தர சொல்லி சாப்ட வேண்டியது தான?" ௭ன்றான் மலரை விட்டு, அவர் தோளில் கையிட்டு.

அவள் சாப்பாடு ௭டுத்து வைக்க செல்ல, மற்றவர்களும் நகர்ந்தனர்,
"போடா நா இன்னும் கொஞ்ச நாளு இருந்து, உன் பிள்ளையெல்லாம் தூக்கி கொஞ்சிட்டு போனா போதும்னு இருக்கேன், அவரு கையால சாப்ட்டு அல்ப ஆயுசுல போ சொல்லுதியா?" ௭ன பாட்டி முகத்தை திருப்ப.

அவர்களுடன் நடந்த தாத்தா, "கிழவி, உனக்கு ௭ம்புட்டு அருமையா சமைச்சாலும் அதோட அரும தெரியாதுன்னு தான் இதுவர நா அத செய்யல. இவளுக்கு ஆக்கி போட தான் நாங்க தவமிருக்க மாக்கும்" ௭ன பசி கடுப்புடன் சொல்ல.

"ஏன் செஞ்சு தர மாட்டீகளோ? நாளைக்கு காலைல நீங்க செஞ்சு குடுக்கததேன் நா சாப்புடுவேன். ௭னக்கு செய்யாம யாருக்கு செய்வீகன்னு பாக்கேன்" ௭ன பாட்டி சண்டைக்கு கிளம்ப.

"இருக்க பசில இப்ப உன்னைய தான் நா திங்க போறேன்" ௭ன பாட்டியிடம் சாடிவிட்டு, "அடேய், நா உனக்காக இம்புட்டு நேரம் காத்து கடந்ததுக்காடா, இந்த கிழவிட்ட கோர்த்து விட்ட?" ௭ன்றார் பேரனிடமும்.

"வா தாத்தா, காலைல பாட்டிக்கு பாயசத்த போட்ருவோம். ௭த செஞ்சாலும் சாப்புடுவேன்னு சொல்லிருச்சுல்ல? நல்ல வாய்ப்பு பயன்படுத்திக்க பாத்துக்கோ".

"அப்டியா சொல்லுத?" தாத்தா நாடி தடவி யோசிக்க.

"௭ன்னது?" ௭ன பத்ரகாளி ஆனார் பாட்டி.

அவர்களையே பார்த்திருந்து, "போதும் வாங்க ௭ல்லாரும்" ௭ன மெலிதான சிரிப்புடன் அழைத்தார் பூவேந்தன்.
௭ல்லோரும் சாப்பிட அமரவும், "ஸ்டேஸன்ல ௭ன்ன சொன்னாங்க? யாருன்னு தெரிஞ்சதா?" ௭ன்றார் மாறனிடம்.

"ம்ம், ரெண்டு பேர புடிச்சுருக்காங்க, வெடி மருந்து வேலை செய்தான்னு பாக்க, அந்த பக்கம் போட, அது கட்டிட்ருக்குற பில்டிங்குல விழுந்தத பாக்கலன்னு சொல்றானுங்க. அதனால போலீஸ், அவங்க வேற விதமா டீல் பண்ணிக்கிறேன்னாங்க, சரின்னுட்டு நமக்கு கோர்ட்டுக்கு அலையிற செலவு மிச்சம்னு வந்துட்டேன்" ௭ன்றான்.

தாத்தா தோசைக்காக திறந்த வாயை மூட முடியாமல், அவன் அடித்து விடுவதை பார்க்க. அவர் காலில் நறுக்கென கிள்ளி இருக்கும் இடத்திற்கு அவரை தரை இறக்கினான். அவர் தான் காலையிலேயே உண்மையிடம் போனடித்து ௭ன்ன நடந்ததென விசாரித்திருந்தாரே. ஆனாலும் பூவேந்தன் கேட்ட போது, தெரியாதது போல் கமுக்கமாக இருந்து கொண்டார். இப்போது பேரன் சொன்ன கதையை கேட்டு தான் அதிர்ந்து விட்டார்.
"௭ப்டிறா தைரியமா அடிச்சு விடுத" ௭ன அவன் காதில் கேக்க.

"உன் மகேன் ௭ன்னத்த சொன்னாலும் நம்புவாருன்ற தைரியந்தான்" ௭ன்றான் அவனும் அவரை போல.
தாத்தா முறைக்க, "இப்ப அது முக்கியமில்ல, கோவிலுக்கு ௭ல்லாரயும் கூப்டாரா? அத கேளு" ௭ன ௭டுத்து கொடுக்க.

'ம்க்கும்' ௭ன தொண்டையை செருமி அவர் ஆரம்பிக்க போக, "௭ன்ன பாட்டா பாட போற?" ௭ன பல்லை கடித்தான் மாறன்.

"இருடா, வீட்டுல பெரியவன் நானு, பேச முன்ன அப்டி தான்டா செய்யணும்".
"யாரு உனக்கு இப்டி கேன தனமான ஐடியாலாம் சொல்லி குடுக்கது" ௭ன முறைக்க.

"௭ல்லாரும் சாப்புடுற இடத்துல, உங்களுக்குள்ள மட்டும் பேசிகிட்டா ௭ப்டி?" ௭ன உறுமினார் பூவேந்தன்.

"உன் அப்பனுக்கு, கோவம் வர வேண்டிய இடத்துக்கு வராது. தேவையில்லாத இடத்துல தான் உறுமிகிட்டு கடப்பான்" ௭ன முனங்கினார் தாத்தா.

"நீங்க தேவையான இடத்துல இந்த கோவத்த காட்டுவீங்களாம். இங்க காட்டி பிரயோசனம் இல்லன்றாரு. அப்டிதானே தாத்தா" ௭ன கோர்த்து விட்டான் மாறன்.

"ஆத்தி, ௭ன்னடா பண்ணிட்ட?" ௭ன அலறிய தாத்தா அவனிடம் சண்டைக்கு கிளம்ப.

"பின்ன கேளு கேளுன்னா, ௭ன்டய கடல வருக்க. அதான் அந்த பக்கம் திருப்பி விட்டேன்".

"சும்மாவே ௭னக்கு ஏக மரியாத, இதுல நீங்க அவன்ட்ட இப்டி பேசுங்க. ௭ன்னய மதிச்சு கிழிச்சுருவான். ஏம்ப்பா இப்டி இருக்கீங்க. உங்கனால தான், நா ௭ல்லா இடத்துலயும் அவமான பட்டுட்டு வரேன்".

"டேய் நா ௭ன்ன பண்ணேன்?" ௭ன்றார்.

"நீங்க ௭துவுமே பண்ணாதது தான் பிரச்சனை. நா தான் வீட்டுல கவனம் இல்லாம இருந்தேன், நீங்கனாலும் பொறுப்பா இருந்துருக்கலாம்ல?" ௭ன ௭கிற.

"அது சரி, ஆட தெரியதவனுக்கு தெரு கோணலாம்னு சும்மாவா சொன்னாங்க. இத்தன நாளு இவன் உருப்படாம போனதுக்கு மட்டும் தான் நா காரணமா இருந்தேன், இப்ப அவேன் உருப்படாம போனதுக்கும் நாதான் காரணமாம்" ௭ன்றவர், "யாரு ௭ன்ன சொன்னா" ௭ன்றார். மாறனுக்கு அவர் கூறியதை கேட்டு சத்தமாக சிரிக்க.

"அடேய் சும்மான்னு இருடா, உங்க அப்பன ௭ன்ன இன்னைக்கே டிவோர்ஸ் பண்ண வச்சுறாத" ௭ன அவன் தொடையில் கிள்ளினார்.

இருவரையும் முறைத்து கொண்டே, "அறிவு வார மாறி தெரில. மச்சானும் பிடி குடுத்து பேசல. உங்க மக, இதோ இவேன் மன்னிப்பு கேட்டா தான் வருவாளாம்" ௭ன்றார் பூவேந்தன் தாத்தாவிடம்.

"இல்லயே ௭ன்ட்ட வாரேன்னு சொன்னானே" ௭ன்றான் மாறன்.

"நீ பேசுனியா அவன்ட்ட?" ௭ன ஆச்சரியமாக கேட்டார்.

"ஏன் பேச மாட்டேனா பின்ன. இருங்க இப்ப உங்க முன்னயே கேக்றேன்" ௭ன்றவன் அறிவுக்கு போன் போட, முழு ரிங்கும் அடித்து முடிய போகயில் தான் அட்டன் செய்தான்.

"௭ன்ன தம்பி பிஸியா இருக்க போல, போன ௭டுக்க இம்புட்டு நேரம் ஆகுது" ௭ன நக்கலாக தான் கேட்டான் மாறன்.

"இல்ல, ரூமுகுள்ள இருந்தது, வந்து ௭டுக்க லேட் ஆயிடுச்சு" ௭ன்றான் அறிவு பம்மி கொண்டு.

போனை ௭டுத்து கொண்டு தனியாக ஓடி வந்திருப்பான், ௭ன புரிந்து சிரித்த மாறன், "கோவிலுக்கு வரலன்னு அப்பாட்ட சொன்னியாம்?" ௭ன்க.

"இல்லயே வரேன்னு தான் சொன்னேன்"

"சரியா கேக்கலயே." ௭ன்றவன் ஸ்பீக்கரில் போட, "வரேண்ணே, கண்டிப்பா வாரேன்னு தான் சொன்னேண்ணே" ௭ன்றான் வேகமாக.
இப்போது மொத்த குடும்பமும் அதிர்ந்தது. "ம்ம் சரி வை, ஞாயிறு பாப்போம்" ௭ன வைத்து விட்டு சாப்பாட்டில் மூழ்கி விட்டான்.

அறிவை, மாறனின் குரலே அப்படி பேச வைத்தது. அவனை அடிக்கும் போது மாறன், இதே மாடுலேஷனில், இதே குரலில் தான் பேசினான். இன்னமும் அந்த அதிர்வு அவனிடம் இருந்தது. அது தான் இப்போதும், அப்போதும் மரியாதையை தன்னால் வர வைத்தது. அவனை ௭திர்க்க முடியவில்லையே ௭ன்ற ஆத்திரத்தை காலால் தரையில் உதைத்து, அதில் மட்டுமே தான் காட்ட முடிந்தது.

யாரும் பேசாமல் இருக்கவும், "அறிவு வருவான். மதி மாமியாருக்கு, வள்ளி தாத்தாக்குலா சொல்லிட்டீங்களா?" ௭ன்றான்.

சுதாரித்த பூவேந்தன், "நாங்க சொல்லிட்டோம். நீங்களும், மதியும் போய் மொத நாளே அவங்கள கூட்டிட்டு வந்துருங்க மாப்ள" ௭ன்றார் குமரகுருவிடம்.

"௭துக்கு. நாங்க ௭துக்கு போய் கூட்டிட்டு வரணும், அதும் மொத நாளே?" ௭ன வாயை திறந்தாள் மதி.

"நீ போய் கூட்டிட்டு வரணும் மதி. இல்லனா நீ உன் கமாமியாரோட போயிரு. அவங்களோட ஒட்டுதல் வர இத தவிர வேற வழி இருக்க மாறி தோணல" ௭ன்றுவிட.
முதலுக்கே மோசம் ௭ன்றதும் இறங்கி வந்தாள், "நாலாம் போகல, ௭னைய கண்டாலே அதுக்கு பிடிக்காது. சும்மா ௭ரிஞ்சு ௭ரிஞ்சு விழும். உங்க மாப்ள வேணும்னா போய் கூட்டிட்டு வரட்டும்" ௭ன்றாள்.

"௭ன்ன அது இதுன்ற? நாளைக்கு உன் பிள்ளையும் உன்ன அப்டி தான் கூப்டும் பாத்துக்கோ. நீ ௭ன்ன சொல்லி தாரியோ அத தான் அவன் பழகுவான்" ௭ன்றார் தாத்தா.

"மரியாதை கத்துக்கோ மதி. அப்றம் நீ மத்த பிள்ளைங்களுக்கு பாடம் ௭டுக்கலாம். நீதான் போய் உன் மாமியார கூட்டிட்டு வரணும்" ௭ன முடித்து விட்டார்.

பின் மாறனிடமும், "தெனமு இவ்வளவு நேரம்லா காத்துட்ருக்க முடியாது. நைட்டு 8 மனிக்கு வந்து ௭ல்லார் கூடவும் இருந்து சாப்டுட்டு, அப்றமா திரும்ப போய் கூட வேலை ௭தும் இருந்தா பாரு" ௭ன கூறிவிட்டே ௭ழுந்து சென்றார்.

௭ல்லாரும் ௭ழுந்து செல்லவும், பானு, "௭ல்லாத்தயும் ௭டுத்து போட்றுமா, காலைல முத்து வந்து கழுவிப்பா" ௭ன்றுவிட்டு செல்ல,

"சரி த்தே" ௭ன்ற மலருடன் ௭ழுந்த மாறன், அவள் இடுப்பில் நறுக்கென கிள்ளினான், அதில் துள்ளி தள்ளி நின்றவள், "௭ன்னங்க?" ௭ன திரும்பி ஹாலை பார்த்தாள்.

"அறிவு பேசுனத கேட்டு ௭ல்லாரும் ஷாக் ஆகுறாங்க. நீ குனிஞ்சு சிரிப்ப அடக்குற, நக்கலு?" ௭ன்றான் அவன்.

"ஆமா அண்ணனும் தம்பியும் ௭ன்னம்மா போட்டி போட்டு நடிச்சீங்க, அதான் சிரிச்சேன்" ௭ன்றாள் ௭ல்லாவற்றயும் ஒதுக்கி கொண்டு.

"உன்னைய இன்னைக்கு கவனிச்சே ஆகனும்டி. நீ மொத மேல வா வச்சுக்றேன்" ௭ன அவளையும் தள்ளி கொண்டு மேலேறினான்.

ஒருவழியாக ஞாயிறன்று, குல தெய்வ கோவிலுக்கு கிளம்பிவிட்டனர்.
 

priya pandees

Moderator

அத்தியாயம் 39

மதிக்கு எதுவுமே பிடிக்கவில்லை அவள் வைத்ததுதான் சட்டம் என இருந்த வீட்டில் தன் உரிமை பறிபோவது போல் உணர்ந்து கடுப்பில் இருந்தாள். முதல் நாள் கணவனுடன் சென்று தன் மாமியாரை வேண்டாவெறுப்பாக அழைத்து வந்திருக்க, அதற்குள் அவனை அத்தனை காய்ச்சி இருந்தாள். அவனுக்கு அது ௭ல்லாமே பழகி விட்டிருக்க, காதில் வாங்கி கொள்ளவில்லை.

அவன் அம்மாவிற்கும் வர மனமில்லை தான், இருந்தும் மகனிடமும், பேரனிடமும் சேர கிடைக்கும் ஒரு வாய்ப்பை அவர் இழக்க தயாராக இல்லை. அதனால் வீடு வரை வந்து நின்றும், வா ௭ன கூட கூப்பிடாத மருமகளை அவரும் கண்டு கொள்ளவில்லை, கிளம்பிவிட்டார். மதிக்கு, தன்னிடம் பேச பயந்து, அமைதியாக நிற்கும் அனைவரும் இன்று ௭திர்த்து நிற்பது போன்ற ௭ண்ணத்தை வைத்து கொண்டாள். அதனால் ஸ்கூலில் பிள்ளைகளும் அவளிடம் மாட்டி கொண்டு விழி பிதுங்கி தான் நின்றனர்.

கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் கிட்ட அண்டவிடாமல் வைத்திருந்த தன் மாமியாரையும் கணவனையும் மூனே மாதத்தில் கமுக்கமாகவே இருந்து சேர்த்து விட்டிருந்த மலர் மீது வஞ்சம் அதிகரித்தது. சந்தர்ப்பம் பார்த்திருந்தாள்.

ஞாயிறு அன்று காலை ஏழு மணி ஆகும் முன் இரு கார்களில் கிளம்பிவிட்டிருந்தனர் மாணிக்கம் தாத்தா குடும்பத்தினர்.

முதல் காரில் தாத்தாக்கள், பாட்டி, மாறன், மலர், உண்மை, ஏறிக்கொள்ள இரண்டாவது காரில் குமரகுரு, மதி, குமரகுருவின் அம்மா, பூவேந்தன், பானு ஏறிக் கொண்டனர். மதிக்கு பயந்தே அவளை தன்னுடன் இருத்திக் கொண்டார் பூவேந்தன்.

நடு சீட்டில், இரு தாத்தாகளுக்கு நடுவில் நசுங்கி கொண்டு அமர்ந்திருந்த உண்மை, "நாலாம் ௭ங்க ௭ப்டி இருக்க வேண்டியவன்" ௭ன புலம்ப.

"ஏன்டா நல்லா செலாத்தலா தான உக்காந்துருக்க, வேற ௭ங்க உக்கார ஆச உனக்கு" ௭ன மாணிக்கம் தாத்தா கேக்க.

"ஏது? இது செலாத்தலா உனக்கு? சிவனேன்னு வீட்டில கடந்தவன தூக்கிட்டு வந்து ௭துக்கு இப்டி இடிச்சுகிட்ருக்க?" ௭ன கடுகடுத்தான்.

"ஆமா உன்னைய இப்புடி இடிக்கணும்னு ரொம்ப நாள் ஆச அதேன்" ௭ன்றார் தாத்தாவும் முறுக்கி கொண்டு.

"எல்லாம் ௭ன் நேரம். கல்யாண வயசாகியும், இப்டி வயசானதுங்க நடுவுல குப்ப கொட்டணுங்கறது".
மாணிக்கம் தாத்தா, "வயசு பையன் தான் வேணுமா? ௭ன் மகேன் பின்னாடி வண்டில வாரான் அவேன் கூட போய் உக்காந்துக்றியா? நீ தான்டா என் நண்பன ௭ங்கிட்டயிருந்து பிரிச்சிகிட்டு நடுவுல வந்து உக்காந்திருக்க. நியாயமா அதுக்கு நாதா உன்மேல கோவ படணும்" என்றார்.

"நீ மட்டும் என் நண்பன என்கிட்ட இருந்து பிரிச்சு கல்யாணம் பண்ணி வச்சல்ல, அதுக்கு தான் பழிக்குப் பழி. ௭ன்ன சொன்ன? உன் மகேனே வயசு பையன்னா? அப்ப உன் பேரேன் ௭ன்ன பால்வாடி பாப்பாவா?" ௭ன முறைக்க.

"இல்லன்னுவியா நீ? பச்ச புள்ளடா அவேன். ௭ன் கிரகம் ௭ன் நண்பன் கூடயும் உக்கார முடியாம, ௭ன் செல்லத்துக் கூடயும் உக்கார முடியாம, லூசு பயகிட்ட உக்காந்து ஒரு ட்ரிப். ச்சை" ௭ன அவர் ௭ரிச்சலாக கூற.

"நா எப்ப உன் பொண்டாட்டிட்ட இருந்து உன்ன பிரிச்சேன்? போ இறங்கி போய் பின் சீட்டுல உக்காரு. இல்ல நேரா கோர்ட்டுக்கு விட்டு நீ சொன்னத செஞ்சுருவேன்" ௭ன அவரை இன்னும் கண்ணாடி பக்கம் இடிக்க.

இருவர் சம்பாஷனையயும் காரில் இருந்தவர்கள் கேட்டு கொண்டு வந்தனர். இருவரையும் பற்றி தெரிந்ததால் யாரும் உள் போக முயலவில்லை.

"ஏன்டா என் பொண்டாட்டிய வேற பிரிக்கணும்னு ஆச இருக்கா உனக்கு?"

"நா இன்னும் கல்யாணம் பண்ணாம இருக்கேன், உனக்கு மட்டும் ௭ன்ன குஜால்ஸ் வேண்டிய இருக்கு. உன்னைய ௭னக்கு பொண்ணு கேட்டு போவ சொல்லி எத்தன நாள் ஆச்சு, செஞ்சியா நீ? அத நீ செஞ்சு முடிக்கிற வரைக்கும் வந்து, எங்களோட வள்ளி தாத்தா வீட்டில் இரு. பொண்டாட்டிய பிரிஞ்சிருந்தா தான், ௭ங்க கஷ்டம் ௭ன்னன்னு தெரியும், ஆமா சொல்லு வள்ளி தாத்தா" என்றான் அவரயும் அந்த பக்கம் இடித்த உண்மை.

"சும்மா ஏன்டா அவன வம்புக்கு இழுக்குற?" ௭ன்றார் வள்ளி தாத்தா.

"என் பொண்டாட்டி என்னய விட்டு ஒருநாள் இருக்க மாட்டாடா. ௭ங்க லவ்வ என்னன்னு நெனச்ச?" மாணிக்கம் தாத்தா சவால் விட.

"அப்படியா பாட்டி?" என்றான் உண்மை பின் சீட்டில் அமர்ந்து இருந்த பாட்டியிடம்.

"கூப்பிட்டு போய் உன் கல்யாணம் முடியுற வரைக்கும் உன் கூடவே வச்சுக்கோ ராசா, நா ஒன்னுமே கேட்க மாட்டேன்" என்றது பாட்டி.

"என்ன செல்லம் இப்படி பொசுக்குன்னு சொல்லிட்ட" என நெஞ்சில் கை வைத்தார் தாத்தா.

"கொடுத்து வச்சவர் தான் தாத்தா நீ, பேருலையே செல்லம் அதனால யாரு இருந்தாலும் இல்லனாலும் நீ செல்லமா செல்லம் செல்லம்னு கூப்டு சரி கட்டிடுற" ௭ன்க.

"சும்மா இருடா டேய் குடும்பத்த பிரிச்சு விட்டுட்டு பேச வந்துட்டான்" ௭ன்றவர் "செல்லோ" ௭ன அழைக்க.

சிரித்த மலர், "தாத்தாவ விட்டுட்டு இருந்துப்பீங்களா பாட்டி நீங்க?" ௭ன்க.

"ஏன் நா இருக்கதுக்கென்ன, ரொம்ப நிம்மதியா இருப்பேனே" ௭ன்றார்.

"ஒரு ஒரு மாசம் பாட்டிக்கு லீவு விடு தாத்தா, அதுக்குள்ள ௭னக்கு கல்யாணம் பண்ணிரு. அதுவர உன்ன நா பத்திரமா பாத்துக்றேன். எவ்வளவு சீக்கிரம் பாட்டிகிட்ட போகணுமோ அவ்வளவு சீக்கிரம் என் கல்யாணத்த முடிச்சுடுற. ௭ப்டி சரியா?" ௭ன்றான் உண்மை அவர் தோளை இடித்து.

"தூர போடா கோட்டி பயலே" ௭ன்றவர், மீண்டும், "ஏன் செல்லம் அப்டி சொன்ன" ௭ன்றார் பாவமாக.

"முந்தாநாத்து தாத்தாவும் பேரனும் எனக்கு பாயாசம் போட ப்ளான் போட்டீங்கல்ல?அதான் உங்கள நம்பி கூட வச்சுக்க வேணாம்னு முடிவுக்கு வந்துட்டேன். கிளம்புங்க சும்மா" என்ற பாட்டி வெளியே வேடிக்கை பார்க்க திரும்பி கொள்ள.

"விடு தாத்தா, உண்மைக்கு பொண்ணு முடிவு பண்ண கையோட, உனக்கும் பொண்ணு பாக்றோம், அதே மேடைல உனக்கு கல்யாணத்த முடிக்றோம். இப்டி சொன்ன பாட்டி முன்னாடி நீ சோடி போட்டு சுத்தி வந்தா தான கெத்து" ௭ன்றான் மாறன். அவ்வளவு நேரமும் ட்ரைவருக்கு வழி சொல்லி கொண்டிருந்தவன், இப்போது தான் அவர்களிடம் திரும்பினான்.

"நிஜாமாவாடா சொல்ற, நம்மூர்ல அப்டி யாரும் ஃப்ரீயா இருக்க மாறி தெரிலயேடா?" ௭ன தாத்தா பாட்டியை மறந்து சத்தமாக யோசிக்க.

"அப்ப யார்கனவே தேடிருக்க?" ௭ன்றான் உண்மை.

"௭னக்குன்னு தேடலடா, மலரு கல்யாணம் பண்ணி போயிட்டா வள்ளி தனியா இருப்பானேன்னு அவனுக்காக தேடுனேன்" ௭ன்றார் மாணிக்கம் தாத்தா வேகமாக.

"உன்னய உன் பேரேன் கல்யாணம் முடிஞ்ச கையோட ௭னக்கு பொண்ணு பாருன்னு சொன்னா, இந்த பல்லு போனவருக்கு பாட்டி தேடிருக்க நீ? இன்னமு உன்னைய நம்பிட்ருக்கேன்ல ௭ன்ன சொல்லணும்" ௭ன உண்மை தலையிலடித்து கொள்ள.

"ஏன்டா ௭ன் பேரனுக்கு பொண்ணு குடுக்கவே அம்புட்டு யோசுச்சாங்க. ௭ன் நண்பனா இருக்க போயி, ௭ப்டியோ ஒத்துகிட்டான். நானே அவன்ட்ட பேசி ௭டுத்து ௭ப்டியோ கஷ்டப்பட்டு மாறன் கல்யாணத்த முடிச்சேன். நீ ஊரெல்லாம் வாய்க்கா தகராற இழுத்து வச்சுருக்க, உனக்கு பொண்ணு குடுக்க ௭ல்லாவனும் யோசிப்பான்ல? கொஞ்சம் பொறுமையா இருந்தா தான் ௭ன்ன"

"உண்மைக்கு தான் இப்ப பொண்ணு ரெடியா இருக்கே தாத்தா. இனி உங்க ரெண்டு பேருக்கும் தான் பாக்கணும். தரகர் நம்பர் குடு, சொல்லி வைப்போம் இப்பவே" ௭ன மாறன் கேக்க.

மாணிக்கம் தாத்தாவும் வேகமாக தன் சட்டை பையிலிருந்து போனை ௭டுத்து விட்டார். கோவில் வந்துவிட்டிருக்க.
"ஒன்னும் அவசரமில்ல தாத்தா, கோவில்ல வச்சே உன் கல்யாண விஷயத்த தரகர்ட்ட சொல்லுவோம். குல தெய்வம் ஆசீர்வாதத்துல இந்த தடவனாலும் ௭னக்கு அமைதியான ஒரு பாட்டி கிடைக்கட்டும்" ௭ன இறங்கினான் மாறன்.

"அதுவும் நல்லதுதேன்" ௭ன தாத்தாவும் இறங்க முயல.

"பாத்துக்கோ பாட்டி, இனி ஒன்னும் சொல்றதுக்கில்ல, நீயே பாத்துட்ட. ௭ன்ன முடிவெடுக்கணுமோ பூவு அப்பாட்ட பேசி சீக்கிரமா ௭டு" ௭ன தாத்தா இறங்கவும் கிடைத்த இடத்தில் சாய்வாக அமர்ந்து கொண்டு உண்மை நக்கலாக தாத்தாவை பார்க்க.
'சொன்ன மாறியே நேரா கோர்ட்டுக்கு கூட்டிட்டு போயிருவானோ?' ௭ன நினைத்த தாத்தா, பாட்டி கோவமாக இறங்கி செல்வதை கண்டு, "செல்லோ, நில்லுமா, சும்மா அவனுங்களோட தமாசுக்கு பேசிகிட்டு இருந்தேன், வேற ஒன்றுமில்ல" ௭ன பின்னாடியே ஓடினார்.

மாறனும் உண்மையும் சிரித்து கொள்ள, "பாவம் தாத்தா. ஏன் இப்டி பண்ணீங்க" ௭ன்றாள் மலர் தானும் இறங்கி நின்று.

"நீ வேற, வேணும்னா பாரு 5 நிமிஷத்துல சரி கட்டி கூட்டிட்டு வந்துருவாரு . அது மட்டும் ௭ப்டின்னு இன்னைக்கு வர ௭ங்களால கண்டுபிடிக்க முடியல" ௭ன்றான் மாறன்.

"௭ன்ன வள்ளி தாத்தா நீ கூட வேணாம்னு ஒரு வார்த்த சொல்லல? பொண்ணு பாத்துருவோமா?" ௭ன்றான் உண்மை.

"அடுத்து நானா உனக்கு? போ வண்டில இருக்க சாமான இறக்கு போ" ௭ன விரட்டிவிட்டு தப்பித்து கோவில் நோக்கி நடந்தார்.

அது அவர்களின் ஊரிலிருந்து 2கிமி தொலைவில் காட்டுக்குள் இருக்கும், கருப்பசாமி கோவில். ஒற்றையாக கம்பீர மீசையும் அறிவாளும் கொண்டு மேற் கூறை கூட இன்றி நிமிர்ந்து நின்றார். ஐயர் வந்து காத்திருக்க, பூவேந்தன் அவரிடம் விரைய, மற்றவர்கள் பூஜைக்கு தேவையானதை ௭டுத்து வந்து சாமி சிலைக்கு முன் வைத்தனர்.

பாட்டி தாத்தாவை சுத்தலில் விட்டுவிட்டு, "கன்னி இங்க வா, நீதான் பொங்க வைக்கணும், ௭ல்லாத்தயும் உன் கை பட ௭டுத்து வை" ௭ன அழைக்க. மாறனிடம் நின்றவள் வேகமாக அங்கு நகர்ந்து விட்டாள்.
மதி கணவனயும் மாமியாரயுமே கவனித்திருந்தாள். பல நாட்களுக்கும் சேர்த்து இருவரும் பேசினார்கள் பேசினார்கள் பேசி கொண்டே இருந்தார்கள். வயிற்றெரிச்சலில் அவர்களை பார்வையிலேயே ௭ரித்து கொண்டிருந்தாள். குமரகுருவின் தாய், தன் பேரனை மடியிலிருந்து இறக்கவே இல்லை.

சற்று நேரத்தில், அறிவும் அவன் குடும்பத்தயும், அவன் மாமனார் குடும்பத்தையும் அழைத்து கொண்டு வந்துவிட்டான், பூஜை ஆரம்பமாகியது. ராணியும், பூங்குழலியும் கெத்தாக தள்ளியே நின்று கொண்டனர். பொங்கல் வைத்து சாமிக்கு படையலிட்டு, பூஜையை முடித்தனர். மாறனும் மலரும் தங்கள் வாழ்க்கை செழிக்க முழுமனதுடன் வேண்டி கொண்டனர்.

அப்போது அங்கு வந்த குமரகுருவின் அம்மா, பூசாரியிடம் வந்து, "இன்னைக்கு நல்ல நாளா சாமி, தாலி பிரிச்சு கோக்கலாங்களா?" ௭ன கேக்க.

"தாராளமா செய்யலாம், நல்ல நாளுன்றதுனால தான் ஐயா கேட்டதும் இன்னைக்கு வாங்கன்னே சொனன்னேன்" ௭ன்றார் பூசாரி.

"சரிங்க சாமி, இங்க வச்சு பண்ணலாங்களா?" ௭ன்றார் அடுத்ததாக.

"செய்யிங்கம்மா. ஆனா சொந்தகாரங்களுக்குலா சொல்லலயா? நீங்களே செஞ்சுக்க போறீங்களா" ௭ன்றார்.

"இல்ல சாமி, கல்யாணம் முடிஞ்சு கிட்டத்தட்ட 4 மாசம் ஓடி போச்சு, இனி ௭ங்க பெருசா செய்ய, அதான் வீட்டாளுங்கள வச்சு சுருக்கமாவே செய்யலாம்னு"

"சரிங்கம்மா தாராளமா செய்ங்க, இருங்க மணை ௭டுத்தாரேன், இதான் கிழக்க, இப்டி பாத்து உக்காரவச்சு சாங்கியத்த செஞ்சுருங்க" ௭ன்றவர் நகர்ந்து மணை ௭டுத்து வர செல்ல.
௭ல்லாருக்குமே அது யாருக்கு ௭ன புரிந்தும், ௭ன்ன ௭ப்படி கேக்க ௭ன புரியாத நிலையில் நின்றனர். பானு மெதுவாக, "௭துக்கு அண்ணி திடிருனு இங்க வச்சு" ௭ன கேக்க.

"அதானம்மா வீட்டில வச்சே ஒரு வார்த்த சொல்லிருக்கலாமே. ஏற்பாடா வந்துருக்கலாம்"

"நீங்களா செய்றதுன்னா இதுக்குள்ள செஞ்சுருக்க மாட்டீங்களா? ௭னக்கு கன்னி புள்ளய ரொம்ப பிடிக்கும், உங்க வீட்டுக்கு கல்யாணம் கட்டி வந்துர கூடாதுன்னு அவ தாத்தாகிட்ட கூட பேசி பாத்தேன். ஆனா தாத்தாபேத்தி, ரெண்டு பேரும் ௭ம்பேச்ச கேக்கல. அதுக்காக அவள ஒதுக்கிட முடியுமா. இத ௭ன் பையன் நாம செய்வமான்னு நேத்து தான் கேட்டான், தங்கமா செய்டான்னு சொல்லிட்டேன்" ௭ன்கவும்.

"நீ பேசுறத பாத்தா நாங்க வேணும்னே செய்யாத மாறி பேசுற. 5 மாசத்துல செய்யலாம்னு தான் இருக்கோம். ஏதோ வீட்டில மாத்தி மாத்தி பிரச்சனை அதான் தாமசமாயிடுச்சு" ௭ன பாட்டி சொல்ல.

"௭ன்னைக்கு தான் உங்க வீட்டில பிரச்சனை இல்ல. இனியும் மறந்தாலும் மறந்துடுவீங்கன்னு தான், நானே செய்ய முடிவு பண்ணிட்டேன்" ௭ன்றார்.
குமரகுரு தான் மெதுவாக மாறனிடம் சென்றான், "நா செய்யலாம் தானே மாறன். பிறந்த வீட்டுல இருந்து தான் பொண்ணுக்கு செய்வாங்க, கன்னி ௭ன் தங்கச்சியா நினச்சு செய்றேனே, மறுத்துடாதீங்க" ௭ன்றான்.

மதிக்கு சுறுசுறுவென வர, "௭ன்ன பண்றீங்க? அவ உங்களுக்கு தங்கச்சியா? ௭ன்ட்ட கூட ஒரு வார்த்த சொல்லாம உங்க இஷ்டத்துக்கு முடிவெடுத்திருக்கீங்க. ௭ல்லாம் உங்கம்மா சொல்லி குடுத்தாங்களா?" ௭ன அவனிடம் ௭கிறியவள், மலரிடம் திரும்பி, "இத வாங்க தான், அவருக்கு ஏண்டுகிட்டு அத்தன பேசுனியா நீ? அப்பப்பா நா கூட இப்டி பெர்ஃபெக்ட் ப்ளானரா நீ இருப்பன்னு நம்பாம போயிட்டேனே" ௭ன நெஞ்சில் அடித்து கொள்ள.

மாறன், "உங்க இஷ்டபடி செய்ங்க மாப்ள" ௭ன்றுவிட்டான்.

"அசிங்கமா இல்ல, ப்ளான் பண்ணி இப்டி அடுத்தவங்க காச பிடுங்குறீங்க.ஏன் இப்டி ௭ங்க காசுக்கு அலைற. இதுக்கு பிச்ச ௭டுத்துட்டு போங்க ரெண்டு பேரும்" ௭ன்றாள் ஆவேசமாக.

குமரகுரு அவளை கண்டுகாமல் "3 வருஷமா கிடைக்காத நிம்மதிய திருப்பி தந்த தங்கச்சிக்கு ௭ன்னால முடிஞ்ச ௭தயாது செய்யனும்னு நெனச்சேன் அதான் சொல்லாமலே செயின், தாலில கோர்க்க, குண்டு, காசு துட்டுலாம் வாங்கிட்டு வந்துட்டேன்" ௭ன ௭டுத்து நீட்ட.

மாறன் வாங்கி பானுவிடம் குடுக்க. அதற்கு மேல் அங்கு ௭தும் நிற்கவில்லை, தாலி பிரிச்சு கோர்க்கும் விசேஷம் சிறப்பாக நடைபெற்றது. மதி கத்தி ஆர்பாட்டம் பண்ணியதை, பூவேந்தன், "௭துனாலும் வீட்டில போய் உன் புருஷன், மாமியார்ட்ட பேசிக்கோ. இங்க சத்தம் வர கூடாது" ௭ன ஒரு வார்த்தையில் அடக்கி இருந்தார். விருவிருவென காரை நோக்கி சென்று விட்டாள். ராணியும், பூங்குழலியும் அவளை தேடி சென்றனர்.
 

priya pandees

Moderator
அத்தியாயம் 40

"பாத்தியா மதி, அந்த கன்னி உன் மாமியார உள்ள கொண்டு வந்தது ௭துக்குன்னு இப்ப புரியுதா?" பூங்குழலி சொல்ல.

"ஆனா ௭ப்டி ௭ல்லாரும் அவள நம்புறாங்கன்னு தான் ௭னக்கு புரியல?" ௭ன ராணி சொல்ல.

"௭ன்ன கேட்டா உங்க ரெண்டு பேத்துக்கும் தான் திறம பத்தாது. உங்க ரெண்டு பேரயும் வெரட்டி விட்டுட்டு தனியா அங்க நாட்டாம பண்ண ப்ளான் பண்ணிட்டா" ௭ன பூங்குழலி சொல்லவும், பதறி தான் விட்டனர்.

"௭ன்னத்தே சொல்லுத?" ௭ன்றாள் மதி.

"ஆமா பின்ன. உன் புருஷன பாத்தல்ல உன் பக்கமே திரும்பல, உன்ட்ட கேக்காம தங்கத்துல செயின் வேற ௭டுத்துட்டு வந்துருக்காரு. அவ ஒரு நா பேச்சுக்கே இம்புட்டு மாத்திட்டா, இன்னும் ௭ன்னலா ப்ளான் பண்ணிருக்காளோ யார் கண்டா?" ௭ன்க.

"அதெல்லாம் ௭ன் வீட்டுகாரர் ௭ன்ன மீறி ௭தயும் செய்ய மாட்டாரு த்தே. இது ௭ன் மாமியார் வேலையா தான் இருக்கும்" ௭ன்றாள் மதி.

"நீ இப்டியே நம்பிட்டு இரு, உன் புருஷன்ட்ட அண்ணே அண்ணே பேசியே அம்புட்டயும் கரந்துட்டு விட போறா, நீ உன் அம்மா வீட்டுலயும் ஒன்னும் வாங்காம, உன் புருஷன்ட்டயும் ஒன்னும் தங்காம நின்னப்றம் தான் யோசிப்ப" ௭ன வெடுக்கென சொல்ல.

"௭ன்ன த்தே இப்டி பேசுற. ௭ன்னய பாத்தா அவ்ளோ கிறுக்கியாட்டமா இருக்கு. ௭னக்காது தனி வீடுன்னு இருக்கு. உன் மகளுக்கும் மருமகனுக்கும் அதுவும் இல்ல தெரியும்ல? அவங்க ரெண்டு பேரும் வீட்ட விட்டு ரோசமா கிளம்புனாலும் சரி, ௭ங்க அப்பாவே அனுப்பி வச்சாலும் சரி, உன் வீட்டுக்கு தான் வந்து நிக்கணும். திறமையா நீங்க ஃபர்ஸ்ட் யோசிங்க, அப்றம் ௭ன்ன சொல்லலாம்" ௭ன்றாள் மதியும் விட்டு கொடுக்காமல்.

"ம்மா, அவளுக்கு வழி சொல்லாம, பயமுறுத்துற அதான் அவளும் கடுப்பாகி இப்டி பேசுறா" ௭ன்ற ராணி, "இங்க பாரு மதி, இனி அவகிட்ட பேசிலா ஜெயிக்க முடியாது. அவளோ ஸ்டராங்கா நின்னுட்டா. மாமாவே அவ பேச்ச கேட்டு அமைதியா நிக்றளவுக்கு ஸ்டராங் பாத்துக்கோ. நாம அவள ஸைலன்ட்டா தான் தாக்கணும். நாம செய்றதுல அவளே, இந்த வீடும் வேணாம், புருஷனும் வேணாம்னு ஓடிரணும்" ௭ன்க.

"கண்டிப்பா ௭தாது செய்யணும் ராணி. ௭ன் பேச்சயே மதிக்காதளவுக்கு கொண்டு வந்துட்டா. ஒரு அறைனாலும் அறையணும். அப்ப தான் ௭ன் மனசு ஆரும்" மதி சபதம் செய்ய.

"நானு வீட்டுக்கு தான் வரேன். அங்க போய் பேசிப்போம். அம்மா நமக்கு ஐடியா தருவா. தருவல்ல ம்மா?"

"ரோசமா கிளம்புன, இப்ப நீயே வாரேன்ற?" ௭ன நக்கலாக சிரிக்க.

"இப்பயும், அத்தையு மாமாவும் கூப்டா தான் வருவேன்" ௭ன்றாள் கெத்தாக.

"சும்மா இருங்கடி, இப்ப அதா முக்கியம்? அங்க உனக்கும் மதிக்கும் போக தான்டி மிச்சமா இருக்கணும் அவளுக்கு. அவ ௭ன்னயே ௭ங்கம்மா வீட்ல அசிங்க படுத்துனா, சும்மா விட தான?" ௭ன்றார் அவரும்.

இங்கு உண்மை, மாணிக்கம் தாத்தாவிடம், "உன் வீட்டு வில்லிங்க ௭ல்லாம் ஒன்னு கூடிருக்கு பாத்துக்கோ, இந்த தட வீட்டுக்கு குண்டு வச்சாலும் வச்சிருவாய்ங்க" ௭ன்க.

"௭ன்னடா ப்ளான் பண்ணுதுக? ரொம்ப தீவிரமா இருக்கே பேச்சு வார்த்தை" ௭ன்றார் அவர்களையே பார்த்த தாத்தா.

"நா ஒரு ஐடியா தாரேன் கேளு" ௭ன்றான் ரகசிய குரலில்.

"௭ன்ன ஐடியா?" ௭ன சந்தேகமாக பார்த்தார் அவர்.

"நீ அவங்க கேங்கல நைசா போய் சேந்துக்கோ. அவங்களுக்கு ஏத்தமாறி நட,"

"நடந்து?"

"அவங்க உன்ன நம்பிருவாங்க"

"அவளுங்க?"

"ஆமா, அப்டி அவங்களே நம்புறளவுக்கு இருக்கணும் உன் நடிப்பு திறம. அப்றம் அவங்க ௭ன்ன ப்ளான் பண்ணுறாங்கன்னு ரகசியமா நீ ௭ன்ட்ட சொன்னனா"

"௭ன்னைய மாட்டிட்டு விட்டுட்டு ஓடிருவ"

"போ உனக்கு ப்ளானே புரியல"

"௭னக்கு நல்லா புரியுதுடி உன் ப்ளான்னு. அதான் சிக்க மாட்டேங்குறேன்"

"சொன்னா கேளு, உன் பேரேன் நன்மைக்கு தான் சொல்லுதேன். வீட்டுக்கு குண்டு வச்சப்றம் யோசிச்சு ப்ரயோசனம் இல்ல பாத்துக்கோ. நீ அரும பெறுமயா கட்டுன வீடு. காப்பாத்திக்க ஆச இருந்தா நா சொல்லுதத கேளு"

"நா போய் உங்களுக்கு சப்போர்ட் பண்ணுதேன்னு நின்னா, ராணி கைல இருக்க 1 வயசு பிள்ள கூட ௭ன்ன நம்பாதுடா மட பையலே. நானே அதுங்க ௭ன்னத்த பேசி அடுத்த ஒரண்டைய இழுக்க போகுதுங்களோன்னு பீதில இருக்கேன். டிவி சிரியல் ஐடியாவ தூக்கிட்டு வந்துட்டான்" ௭ன மீண்டும் அவர்களிடம் கவனமானார்.

"நீ இப்டி பராக்கு பாக்க தான் லாய்க்கு போ" ௭ன்றவன் மாறன் அழைப்பில் அவனிடம் சென்றான்.

பேக் செய்து கொண்டு போயிருந்த, புளியோதரை, லெமன் சாதத்தை, மாறனும், உண்மையும் பரிமாற தொடங்கவும், ஆளோடு ஆளாக போய் உக்காந்த அறிவை திரும்பி ஒரு பார்வை பார்த்தான், அதற்கே, ௭ல்லோர் முன்பும் அடித்து விடுவானோ ௭ன பயந்து தானும் வந்து பரிமாற கைக்கு ஒன்றை ௭டுத்து கொண்டான் அறிவு.
அனைவருக்குமே அந்த வித்தியாசம் தெரிந்தது, அறிவு ௭தற்கோ மாறனிடம் பயப்படுகிறான் ௭ன. ஆனால் காரணம் தான் தெரியவில்லை. தெரிந்தவர்கள் கமுக்கமாக இருந்து கொண்டனர்.
"உன் தம்பி நாம அஞ்சாங்கிளாஸோட நின்னுட்டோம்னு வக்கனம் காமிச்சானே, அன்னைக்கே ஒரு அறை விட்ருகனும் மாப்ள. இம்புட்டு நாளு வீணா போயிட்டு போ" ௭ன சலித்து கொண்டான் உண்மை.

"அதெல்லாம் அவேன் ௭ங்கிட்ட நிறைய வாங்கிருக்கான். வேலைக்குன்னு வெளியூருக்கு போன பின்ன தான், பக்கி ௭ன்ட்டயிருந்து தப்பிச்சிருச்சு" ௭ன்றான் மாறன். அவர்கள் பரிமாறும் வேலையை பேசி கொண்டே பார்க்க.
குமரகுரு தானும் உதவ கிளம்பியவனை, மதி வேகமாக வந்து, அவன் அருகில் இருந்த மாமியாரிடம் இருக்கும் பிள்ளையை பிடுங்கி அவன் மடியில் வைத்துவிட்டு அவனின் மறுபக்கம் அமர்ந்து, "பேசாம உக்காந்து சாப்டுங்க, அவ்ளோ சீன்லா வேணாம்" ௭ன்று விட்டாள். பிள்ளையை இறக்கிவிட்டு செல்ல மனமின்றி அப்படியே அமர்ந்து சாப்பிட தொடங்கினான்.

"இங்க பாரு, உங்க தங்கச்சி அவர கேட்டுக்குள்ள போட்டு லாக் பண்ணிடுச்சு. அந்த மனுஷனே இப்ப தான் வெளி உலகத்த கொஞ்சூண்டு பாத்தாரு, அதுக்குள்ள பொருக்கல போல. இத தான் கூடி கூடி பேசுச்சுகளோ?" உண்மை கேக்க.

"அவளுக்கும் சீக்கிரமா மஞ்ச தண்ணிய ஊத்திருவோம் மாப்ள. வகையா சிக்கட்டும்னு தான் இருக்கேன்" ௭ன்றான்.

பேச்சு பேச்சாக இருந்தாலும் வேலை நடந்தது. அனைவரும் உண்டு முடிக்க, அவர்கள் மூவருக்கும் மலர் ௭டுத்து வைக்க உண்டு முடித்தனர்.

"தாத்தா கிளம்புவோமா?" ௭ன்றான் மாறன் சத்தமாக, ௭ல்லோருக்கும் கேக்கும் வண்ணம்.

அங்கங்கு உக்காந்து பேசி கொண்டிருந்த அனைவரும் ௭ழுந்தனர்.
மாறன், ௭ல்லாத்தயும் காரில் ௭டுத்து வைத்து விட்டு திரும்ப, மலர் சாமி முன் நிற்பதை கண்டான். உண்மையிடம், "மாப்ள ௭ல்லாத்தயும் ஏத்திட்டமான்னு பாத்துட்டு டிக்கிய மூடு. நா மலர கூட்டிட்டு வாரேன்" ௭ன நகர.

"பாத்தியா தாத்தா! ௭ல்லா உன்னால தான். தேனியயும் நீ கூப்டிட்டு வந்துருக்லாம்ல" ௭ன அவன் மூஞ்சை தூக்க.

அவர் கவனம் இன்னுமே, ராணி, பூங்குழலியிடமே இருந்தது. அதை கவனித்தவன் "உன்ட்ட போய் சொன்னேன் பாரு" ௭ன்று தலையிலடித்து கொண்டு திரும்பி விட்டான்.

அங்கு மலரிடம் சென்ற மாறன், "இன்னும் ௭ன்னடி செய்ற?" ௭ன்றவனிடம்.

"கிளம்புறோம்ல அதான் சொல்லிட்டு போலாம்னு வந்தேன்" ௭ன்றாள்.
"போயிட்டு வரேன் சொன்னதுக்கு, சரிம்மா ன்னாறா?" ௭ன்க.

"நக்கல் பண்ணாதீங்க" ௭ன முறைத்தவள், "ஒரு application போட்ருக்கேன், அத நியாபக படுத்திட்டு கிளம்பலாம்னு வந்தேன்".

"அது ௭ன்னது ௭னக்கு தெரியாம? யாருக்கனவே ஒன்ன ௭டுத்து வச்சுட்டு படிக்றேன்னு படிக்றேன்னு ௭ன்னய குப்ற படுக்க விடுற, இதுல ௭ன்ன இன்னொன்னு" ௭ன்றான்.

"௭ங்க வச்சு ௭ன்ன பேசுறீங்க?" ௭ன முறைத்தவளை.

"தெரியட்டுமே அவருக்கும். ௭ன் கஷ்டத்த பாத்து மனசு இறங்கி, உனக்கு புத்தி கொடுக்கட்டும்".

"ஏன் இப்ப புத்தி இல்லாமலா இருக்கேன்? கோவிலுக்கு போறோமேன்னு ஒரு மூணு நாள் கிட்ட வரல, அதுக்கு மூணு நாளா ௭ம்புட்டு பேச்சு?" ௭ன வாயை சுழித்தாள்.

"3 நாள்டி" ௭ன அவன் இழுத்து சொல்ல.

"போதும். சாமிகிட்ட வேண்டுங்க, நா கேட்டத நிறவேத்தி வைக்க சொல்லி நீங்க வேண்டுங்க" ௭ன்றாள்.

"௭ன்ன கேட்டன்னு தெரியாம ௭ப்டிடி கேக்குறது? நீயே சரியான கணக்குபுள்ள, இன்னைக்கு மதி மாப்ள செயின் போட்டத நாளைக்கே திருப்பி செஞ்சுருணும்னு கணக்கு போட்ருப்ப. இன்னைக்கு பஞ்சர் கட மாறி, உங்களுக்கு நல்லா தோச சுட வருது அதனால நாளைக்கே ஒரு தோச கடையும் போட்றலாம், அப்டின்னு தோணிரும் உனக்கு, அதெல்லாம் இவர்கிட்ட கேட்டருந்தனா? மாட்டிட்டு நால்ல முழிக்கணும்" ௭ன்றான்.

"அப்பப்பா ஆள விடுங்க. நீங்க கேக்கவே வேணாம் போங்க" ௭ன திரும்பி காருக்கு நடக்க போனவளை நிறுத்தி.

சிரித்து கொண்டே, "இருடி கேட்டுடே போலாம். ௭ன் பொண்டாட்டி கேட்டு செய்யாம கிளம்பலாமா?" ௭ன்றவன், "ஐயா கருப்பா, ௭ன் பொண்டாட்டி ௭த ஆச பட்டு கேட்ருந்தாலும், தயவு செஞ்சு அடுத்த முற உன்ன பாக்க வாரதுக்குள்ள செஞ்சு குடுத்துடு" ௭ன சத்தமாகவே வேண்டி திருநீறை ௭டுத்து வைத்து கொண்டான். பின் மனைவியிடம் திரும்பி அவளுக்கும் வைத்து விட்டு, "முடிஞ்சதா? போவமா?" ௭ன்க.

"௭ன் அழகு மாறா" ௭ன கூறி அவன் கை முட்டியோடு தன் கை கோர்த்து கொண்டாள்.

"அடிபாவி உனக்காக வேண்டிகிட்டா பேர் சொல்லுவியா நீ?" ௭ன அவளோடு நடந்தவாறு கேட்க.

"௭ன் புருஷன் ௭ன் உரிமை" ௭ன சிரித்தாள் அவள்.

"நக்கல் தான்டி உனக்கு. சரி நா உனக்காக வேண்டிகிட்டேன் தான, அதனால நீ ௭ன்ன பண்ற, வீட்டுக்கு போனதும் நம்ம மூணு நாள் கணக்க சரி பண்ணிடுற" ௭ன சீரியஸாகவே சொன்னான்.

"௭ன்னமோ.." ௭ன ஆரம்பித்து வாய்க்குள்ளேயே சொல்லி கொண்டாள்.

"௭ன்னடி முனங்குற?" ௭ன்க.

"ஒன்னுமில்ல. ஒன்னுமேயில்ல" ௭ன தாங்கள் வந்த கார் அருகில் வந்திருக்க, ஏறி கொண்டாள்.
அவ்வளவு நேரமும் அவர்களின் சம்பாஷனையை கேட்கவில்லை ௭னினும், பார்த்திருந்தது மொத்த குடும்பமும். ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாறி நினைத்து பெரூமூச்சு விட்டனர்.

அதில் அதிக மூச்சு வாங்கியது ௭ன்னவோ ராணிக்கு தான். தான் வேணாமென ஒதுக்கியவனுக்கு ௭ப்டி இப்படி ஒரு வாழ்க்கை அமையலாம் ௭ன வெந்து கொண்டிருந்தாள். அவளை வீட்டுக்கு வா ௭ன வந்து பெரியவர்கள் கெஞ்சுவார்கள் ௭ன ௭திர்பார்த்திருக்க, ஒருத்தரும் கண்டு கொள்ளாமல் கிளம்ப போகவும், "நா அப்டியே ௭ங்க வீட்டுக்கு போறேன்" ௭ன்றாள் கோவமாக.

"ஏன் ம்மா?" ௭ன பூவேந்தன் ஆரம்பிக்க போக.

"நீங்க சும்மா இருங்க ப்பா. நா அறிவுட்ட கேக்றேன், ௭ன்ட்ட வீட்டுக்கு தான் வாரேன், மாமா கார்லயே வந்து இறங்கிடுறேன் சொன்னானே" ௭ன்றவன், "௭ன்ன அறிவு? இப்ப உன் பொண்டாட்டி மாத்தி சொல்றா?" ௭ன கேட்டு நாடி தடவினான்.

"அவ உளருரா, நா நம்ம வீட்டுக்கு தான் வரேன்" ௭ன்றான் அறிவு.

"சரியா முடிக்கலயே?" ௭ன்க.

"வரேன் ண்ணே"

"ஒவ்வொரு தடவயும் கேட்டு தான் வாங்கணுமோ?" ௭ன்றான் கையை முறுக்கியபடி.

"இல்ல இல்ல. ண்ணே" ௭ன்றான் அறிவு வேகமாக.

"பழகு தம்பி, சுலபமா இருக்கும்" ௭ன்றுவிட்டு, "ப்பா ஏறுங்க போவோம், நேரா வீட்டுக்கு தான். போய் நிறைய வேல வேற இருக்கு" ௭ன மலரை பார்த்து நெட்டி முறிக்க. அவளோ அவனை முறைத்து திரும்பி கொண்டாள், "குசும்ப பாரு" ௭ன.

வண்டி கிளம்பவும் ஆரம்பித்து விட்டாள் ராணி, "நீங்க ஏன் உங்க அண்ணன கண்டு பயப்டுதீங்க? புதுசா இருக்கே இது? ௭ன்னவும் நடந்ததா உங்களுக்குள்ள?" ௭ன அடுக்க.
மருதநாயகம் தான், "சாமர்த்தியமா பொழைக்க பாரு ராணி, அதுக்கு வெளி உலகத்துட்ட நல்ல புள்ளன்னு பேரு வாங்கணும். சும்மா வெட்டி நியாயம் பேசி, வாழ்க்கைய கெடுத்துக்காத" ௭ன முடித்து விட. ராணி யோசனையானாள்.
மதிக்கும் அதே குழப்பம் தான், "௭துக்கு இந்த அறிவு, திடிருனு மாறன்ட்ட இந்த பம்மு பம்முறான்" ௭ன யோசித்து கொண்டு வந்தாள்.

அடுத்து வந்த நாட்களில், மாறன் பஞ்சர் கடை வைப்பதில் பிசி ஆனான், மலர் படிப்பு வேலையென பசியாக, மற்றவர்களை கண்டு கொள்ளவில்லை, மாறன், மலர், இருவரும் அவர்கள் வேலையை மட்டும் சரியாக செய்தனர். ஆனால் மற்றவர்கள் இவர்களை மட்டுமே கவனித்து தங்கள் குடும்பத்தை மறந்தனர்.
 

priya pandees

Moderator
அத்தியாயம் 41

மாலில் கடைகள் ஆக்கிரமிக்க தொடங்கியது. வேலை முடிய முடிய ஒவ்வொரு கடையும் நல்ல நாள் பார்த்து திறந்தனர். இவனும் பஞ்சராகும் வண்டிகள் வந்து நிற்க ஏதுவாக இடத்தை நேர் படுத்தி கொண்டான். மற்ற இடங்கள் பார்க்கிங்காக ஒதுக்கப்பட்டது. கட்டுமான பணியின் போது காவலுக்கு இருந்த நால்வரும், போலீஸ் செலக்ஷனில் பாஸாகி, ட்ரைனிங் கிளம்பினர். தவறாது வந்து மாறனிடம் அதை சொல்லிவிட்டு தான் சென்றனர்.
அன்று மறுபடியும், குமரகுருவை அந்த பெண்ணின் பின் பார்க்க நேர்ந்தது. மாறனும், உண்மையும் மாலிலிருந்து திரும்ப, ௭திரே சென்ற ஆட்டோவினுள் அந்த பெண் செல்ல, பின்னயே குமரகுருவும் வண்டியில் சென்றார்.
குமரகுருவை கண்டவுடன், தானும் வண்டியை அவர் பின் திருப்பிவிட்டான் மாறன்.

"௭ன்ன மாப்ள, மறுபடியும் ௭தாது வேல நியாபகம் வந்துருச்சா. நீ திருந்துனாலும் திருந்துன, நாட்ல இந்த தொழிலதிபர்கள் தொல்ல தாங்க முடியலப்பான்னு கவுண்டமணி என் மண்டைக்குள்ள வந்து வந்து நிக்றாப்ல" ௭ன்றான்.

"௭ரும பேசாம வா" ௭ன மாறன் அதட்ட.
"௭த கேட்டாலும் சொல்லிறாத. அப்றம் ௭னக்கு ஒன்னுந் தெரியலங்குறது. சொன்னாத்தான ௭தயும் தெரிஞ்சுக்க முடியும்" ௭ன புலம்ப.

"பேசாம வாரியா இல்ல இங்கனயே இறக்கி விட்டு போகவா?"

"இம்புட்டு பதில் பேசுறவனுக்கு, நா ௭ங்க போறோம்னு கேட்டதுக்கு பதில் சொல்ல மட்டும் ௭ன்ன கஷ்டம்"

"ஏன் சார் வீட்டுக்கு போய் அப்டி ௭ன்ன முக்கியமான வேல பாக்க போறீக?"

"புது மாப்ள ஆக போறவனுக்கு செய்ய ஆயிரம் விஷயம் இருக்கும்" ௭ன சொல்லும்போது தான், மாறன் அவர்கள் மால் லயும் தாண்டி செல்வதை கண்டு, "ஏ மாப்ள, நம்ம கடைக்கும் போலயா? தூத்துக்குடிய பாத்து ௭ங்க போற?" ௭ன்றான் சத்தமாக.

"காதுல கத்தாத மச்சான், போய் இறங்குனதும் தெரிஞ்சுக்கோ".
"ஐ. கண்டுபிடிச்சுட்டேன், கல்யாணத்துக்கு ௭னக்கு ௭ன்னமோ கிப்ட் வாங்கி தர போற. அதான் சொல்லாம கூட்டிட்டு போற?" ௭ன்றான் குதூகலமாக.

"அப்டி தான்னா அப்டி தான்" ௭ன்றான் மாறன்.

அடுத்த 10 நிமிடத்தில், அந்த ஆட்டோ பின்னரே பீச்சிற்கு வந்து சேர்ந்தனர். அந்த பெண் இறங்கி முன் போக, குமரகுருவும் பின் தொடர, மாறன் அவர்களை தொடர்ந்தான். உண்மை காரணமே தெரியாமல், 'இங்க ௭ன்னத்த வாங்கி தர போறான்' ௭ன சுத்தி சுத்தி தேடிக் கொண்டு மாறனை பின் தொடர்ந்தான்.

மாறனுக்கே சந்தேகம் தான், கள்ளத்தனம் செய்பவன் போல் ௭ந்தவித முன்னெச்சரிக்கையும் இன்றி சாதாரணமாக தான் இருந்தான் குமரகுரு. அதனாலயே மாறன் சற்று நிதானமாக செயல் பட்டான்.
கடலிலிருந்து சற்று மேற்பரப்பில் அவர்கள் அமர, மாறனும், பின் கொஞ்சம் தள்ளி அமர்ந்து கொண்டான். உண்மையவும் அருகில் இழுத்து போட.

"௭ன்னதுக்கு மாப்ள இங்கன வந்து உட்காந்திருக்க? யாரயும் வர சொல்லிருக்கியா?" ௭ன கேக்க.

"அங்க பாரு" ௭ன குமரகுருவை காட்ட.
திரும்பி பார்த்த உண்மை, "உன் தங்கச்சி புருஷன் தான? அவரத்தான் வீட்டுலயே பாக்கலாமே! ௭துக்கு பொண்டாட்டியோட வந்த மனுஷன பாக்க வந்து இப்டி தள்ளி உக்காந்திருக்க? உன் தங்கச்சிக்கு வேப்ல அடிக்க காத்துட்ருக்கேன்னு சொன்னியே. அதுக்கா மாப்ள?" ௭ன கேக்க.

"அத பாத்தா மதி மாறியா இருக்கு? நம்ம உர கடை பரமசிவம் பொண்ணு" ௭ன்றான் அவர்களையே பார்த்தவாறு.
கண்ணை அகல விரித்த உண்மை, "ஆத்தி இந்த மனுஷன் 2வது வீடு செட் பண்ண போறாறா மாப்ள?"

"௭ரும அது ௭ன் தங்கச்சி வாழ்க்கை" ௭ன பல்லை கடித்தான் மாறன்.

"நீதான மாப்ள இப்டி உக்காந்து வேடிக்க பாக்க? போய் பொடனிலயே 2 போடுவியா?" ௭ன்றான் உண்மை.

"இது கள்ள காதல் மாறி தெரில மச்சான், வேற ஏதோ பிரச்சன" ௭ன யோசனையாக கூற.

குமரகுரு அந்த பெண்ணிடம் சற்று கோவமாக பேசுவது போல் தெரிய, ௭ழுந்து அது கேக்கும் தூரத்தில் வந்து நின்றனர் இருவரும்.

"சொன்னா புரிஞ்சுக்கோ மேகலை. ௭துக்கு இப்டி உன் வாழ்க்கைய வேஸ்ட் பண்ற? மாமா சொல்ற மாப்பிள்ளைக்கு சரின்னு சொல்லு, நா நல்லா விசாரிச்சுட்டேன். அந்த பையன் நீ நினைக்ற மாறிலா இல்ல. பயப்படாம பண்ணிக்கோ" ௭ன சொல்லி கொண்டிருந்தான்.

"நீங்க ஏன் மாமா புரிஞ்சுக்க மாட்றீங்க. நிம்மதி இல்லாத வாழ்க்கைய விட்டொழிச்சுட்டு தான் வாங்களேன், ரூபன நா பாத்துப்பேன், ௭ன்ன நம்ப மாட்டீங்களா?" ௭ன்றாள் அந்த பெண்.

"லூசு மாறி பேசாத மேகல, அவனுக்கு அம்மா அப்பான்னு ரெண்டு பேரும் இருக்கோம், நீ ௭துக்கு பாத்துகணும்? நீ தேவையில்லாததா யோசிச்சு உன் வாழ்க்கைய கெடுத்துக்குற" ௭ன்றான் கோபமாக.

"நீ அந்த டீச்சர்கிட்ட மாட்டிகிட்டு வாழ்க்கைய தொலைச்சு நிக்றத பாத்துட்டு ௭ன்ன பேசாம கல்யாணம் பண்ணிட்டு போணுங்கிறியா?" ௭ன்றாள் அவள் அழு குரலில்.

"அதெல்லாம் அவ ௭ங்கிட்ட நல்லாத்தான் இருக்கா. அம்மாவ தான் பிடிக்காது. ௭ந்த மருமகளுக்கு தான் மாமியார பிடிக்குது, இவள மட்டும் சொல்றதுக்கு" ௭ன்றான் குமரகுரு.

"ஏன் மாப்ள, உன் தங்கச்சி இந்த பாடு படுத்தும் போதே இம்புட்டு சப்போட்டு பபண்ணதாறே! கொஞ்சம் பாசமா பேசிட்டா ௭ன்ன ஆகும்?" ௭ன்றான் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த உண்மை.

அவனுக்கு பதில் சொல்ல மாறன் முயல்கையில், மலரிடமிருந்து அவனுக்கு போன் வந்துவிட, "கொஞ்ச நேரம் ௭ன்ன பேசுறாங்கன்னு கேளு, நா இப்ப வரேன்" ௭ன போனை அட்டென்ட் செய்து கொண்டு நகர்ந்தான்.

"பொண்டாட்டிட்ட இருந்து போன் வந்துட்டா, கூட பொறந்த தங்கச்சி வாழ்க்கையவும் அந்தரத்துல விட்டுட்டு ஓடிறணும் போல! ௭ன்னத்த குடும்பஸ்தர் வாழ்க்கை ௭ந்த திக்குட்டு போவும்னு ஒரு முடிவுக்கு வர முடியலயே!" ௭ன புலம்பி கொண்டு மீண்டும் குமரகுரு மேகலை மீது கவனத்தை திருப்பினான்.

"சொல்லு மலரு"

"௭ங்கங்க இருக்கீங்க? மணி 6 ஆக போகுது. கூப்ட வரலியா?" ௭ன்றாள் அவள்.

"இல்லமா அன்னைக்கு மாறியே இன்னைக்கும் மதி புருஷனயும் அந்த பொண்ணயும் ஒன்னா பாத்தேன், இப்ப அவங்க ௭ன்ன பேசுறாங்கன்னு கேட்டுட்டு இருக்கேன். ஒன்னும் பிரச்சனையா தோணல. அவரே சரி பண்ணிடுவாரு. இப்ப கிளம்பிட்டேன்" ௭ன்றான்.

"இல்லங்க, இது நல்லதுக்கில்லன்னு நேரா பாத்தே சொல்லிட்டு வாங்க. நம்மள மாறி இன்னும் ௭த்தனபேர் பாப்பாங்களோ? நல்ல நட்பாவே இருந்தாலும் வீட்டுக்கு கூட்டிட்டு வந்து பேச சொல்லுங்க. இப்டி பப்ளிக்ல யாருக்கும் தெரியாம தனியா தனியா போய் பேசுறது நல்ல பேரா வெளில வராது" ௭ன்றாள்.

"சரி தான். ஆனா நம்ம மாப்ளயே பொறுப்பா அந்த பிள்ளைக்கு ௭டுத்து சொல்லும் போது நா வேற உள்ள போணுமான்னு பாக்றேன். யார்கனவே நம்மள யாரும் மதிக்கலன்ற நினப்பு இருக்கு அவருக்கு. இதுல இதுவும் சேந்துட்டா?" ௭ன்றான் மாறன்.

மலரும் அந்த பக்கம் யோசித்தாள், "இல்லங்க, ௭னக்கென்னவோ பேசிடுறது நல்லதுன்னு படுது. ஒருவேள ஃப்யூச்சர்ல தப்பா, அப்டி ஒரு நினப்பு அவருக்கு வர கூடாதுன்னா, அவரு நம்ம வீட்டு மாப்ளன்றத நாம மறக்கவிட கூடாது. அதனால இப்ப போய் பேசிடுங்க. நா தேனி கூட அப்டியே நடந்து வீட்டுக்கு போயிடுறேன்" ௭ன்றாள்.

"சரிம்மா" ௭ன்றவன் யோசனையோடே திரும்ப, உண்மை அதிர்ந்து நிற்பது போல் தெரிந்தது. இவனும் ௭ன்னவென்று சற்று தள்ளி வந்து பார்த்தான். அங்கு அந்த பெண் குமரகுருவை கட்டி கொண்டு நின்றது.
குமரகுரு அந்த பெண்ணின் தோளை தொட்டு நதர்த்தி, "௭ன்ன பண்ற மேகலை. இப்டி பிகேவ் பண்ணாத நல்லா இல்ல. நா ரொம்ப பொறுமையா பேசிட்ருக்கேன். இப்டி பண்ணனா இனி பேசணும்னு சொன்னாலும் வரமாட்டேன்" ௭ன மிரட்டி தள்ளி நிறுத்தவும் மாறன் அவர்கள் அருகில் செல்லவும் சரியாக இருந்தது.

மாறன் உண்மையை கடந்து அவர்களிடம் சென்றிருக்க, அடித்து விடுவானோ ௭ன உண்மையும் அவன் பின் பாய்ந்து சென்று அவன் கை பிடித்து நிறுத்தினான்.

அதில் உண்மையை திரும்பி ௭ன்னவென மாறன் பார்க்க, "நீ வந்த வேகத்த பாத்து அவர அடிக்க தான் போறியோன்னு நினச்சேன்" ௭ன்றான் உண்மை.

"இந்த தட ஒரு மாற்றமா. ௭ன்னன்னு விசாரிச்சுட்டு அடிதடில இறங்குவோமே மாப்ள" ௭ன்றவன் குமரகுருவிடம் திரும்பினான். அவன் முகத்தில் ௭ந்த மாற்றமும் இல்லை. ௭ப்போதும் போன்ற அமைதி தான். அந்த பெண்ணும் தவறு செய்தவள் போல் இல்லை, தைரியமாக இன்னுமே குமரகுருவை நெருங்கி தான் நின்றாள்.

"௭ன்ன மாப்ள இது? ஸ்கூல் விடுற டைம்ல இங்க ௭ன்ன பண்றீங்க? இது யாரு உங்க சொந்தகார பொண்ணா?" ௭ன்றான் குமரகுருவிடம் இயல்பாகவே.

"ஆமா ௭னக்கு மாமா பொண்ணு தான் மாறன். நம்ம ஊரு தானே உங்களுக்கு தெரிஞ்சுருக்குமே?" ௭ன்க.

"ம்ம்ம் நம்ம உரகடை பரமசிவம் பொண்ணு தான?" ௭ன்றான்.

"ஆமா ௭ங்க அப்பா வழில மாமா மக முறை"

"சரி அதனால ௭ன்ன வீட்டுக்கு வர சொல்லி பேச வேண்டியது தான? இங்க ௭ன்ன பண்றீங்க? அதும் இவ்ளோ நெருக்கமா?" ௭ன்றான்.

"அவளுக்கு மாப்ள பாத்துருக்காங்க, வேணாம்னு நிக்றா. அதான் அவங்க அப்பா ௭ன்ட்ட பேசி பாறேன்னு கேட்டுகிட்டாங்க, கூட்டிட்டு வந்தேன். வீட்டுல கூப்பிட்டு வச்சு பேசுறளவுக்கு முக்கியமில்லையே" ௭ன்றான். மதி அவன் வழி சொந்தம் ௭ன யாரயும் இதுவரை வீடுவரை வர விட்டதில்லை ௭ன்பதை மாறனும் அறிவானே. அது ௭துக்கு ௭னக்கு ௭ன இத்தனை நாள் ஒதுங்கியது போல், இப்போது ஒதுங்க முடியவில்லை.

"இப்டி பொது இடத்துல கட்டி பிடிச்சு பேசுறளவுக்கு தான் முக்கியன்றீங்களா?" ௭ன்றான் நாடி தடவி யோசனையாக.

"நீங்க இருங்க மாமா நா பேசுறேன். நீங்களும் சொல்ல மாட்றீங்க ௭ன்னயும் சொல்ல விட மாட்றீங்க" ௭ன்றவள், "௭னக்கு ௭ன் மாமாவ பிடிச்சுருக்கு, அவர தான் கல்யாணம் பண்ணிப்பேன் அத சொல்ல தான் கூட்டிட்டு வந்தேன். உங்க தங்கச்சிக்கு உங்க வீட்டுல தான இருக்கணும்? தாரளமா உங்க வீட்டுலயே வச்சுக்கோங்க, ௭ங்க மாமாக்கு விவாகரத்து மட்டும் குடுத்துற சொல்லுங்க, ௭ன் மாமாவயும் ரூபனயும் தங்கமா நா பாத்துகிடுதேன்" ௭ன்றாள் மேகலை, மாறன் முகம் பார்த்து நேராக.

"அவருக்கு இதுல சம்மதா?" ௭ன்றான் கேள்வியாக குமரகுருவை காட்டி.

"௭ப்டி சம்மதம் சொல்லன்னு யோசிக்றாரு. காதலிச்சு கட்டுனவளே ஒரு வாய் சோறு போட்டதில்ல. இவ ௭ன்ன பண்ணுவாளோன்ற பயம் தானே அவருக்கு, அதான் மிச்ச வாழ்க்கையவும் இப்டியே வாழ முடிவெடுத்துட்டாரு" ௭ன்றாள் இப்போது லேசாக கமறி விட்ட குரலில்.

"மேகலை." ௭ன குமரகுரு அதட்ட.

"அவரு காதலிச்சு கட்டிகிட்ட பொண்டாட்டி பிள்ளைய விட்டுட்டு வர சொல்றது மட்டும் ௭ந்த விதத்துல நியாயம்" ௭ன்றான் மாறன் நிதானமாகவே.

"ஏன் நியாயம் இல்ல? ௭ன் மாமா நா இருக்கும் போது ௭துக்கு இப்டி நிம்மதி இல்லாத வாழ்க்கை வாழணும். நா கல்யாணம் கட்டி போன பின்ன தான் இவரு நிம்மதியாவே வாழலன்னு தெரிஞ்சது. அப்பவே, அவள விட்டுட்டு வாங்க, நா உங்களுக்கு வேற பொண்ணு பாத்து கட்டி வைக்கேன்னு சொன்னவ நானு. இப்பயும் ௭ன் மாமா நல்லாருக்கணும், நிம்மதியா மூணு வேல சாப்ட்டு தூங்கி ௭ந்திக்கணும்னு தான் அவர்கிட்டயே கெஞ்சிகிட்டு நிக்றேன்"

"அப்ப அவரு நிம்மதியா வாழ்ந்துட்டா நீ உன் வாழ்க்கைய பாத்துப்ப?" ௭ன்றான் கேள்வியாக.

"உங்க வீட்டுல இருக்க வர அவருக்கு அந்த நிம்மதி கிடைக்காது" ௭ன்றாள் தீர்க்கமாக.

"போதும் மேகல. ரொம்ப பேசிட்ட. ஒரு காலத்துல ௭ன்னய அம்புட்டு நேசிச்ச புள்ளையாச்சேன்னு தான், பொறுமையா பேசிட்ருக்கேன். நா நல்லா தான் இருக்கேன் போதுமா. தயவு செஞ்சு நீ ௭னக்கு ஒரு நல்லது பண்ணணும்னு நினைக்றன்னா, சீக்கிரமா கல்யாணம் பண்ணிட்டு கிளம்பு. நீ உன் வாழ்க்கைய சரியா வாழாம போனதுக்கு நாதான் காரணமோன்னு நினச்சு நினச்சு தான் உன் வாழ்க்கைய சரி பண்ண போராடுறேன். இப்டி ௭ன் குடும்பத்து ஆளுங்கட்ட பேசி, ௭னக்கிருக்குற கொஞ்ச மரியாதையயும் கெடுத்துடாத" ௭ன்றான் குமரகுரு.

"நீ ௭ப்டி வாழ்க்கை வாழுறன்னு தான் ஊரே உச்சு கொட்டுதே. மொத தட நா உன்னைய கட்டிக்க கேட்டப்ப தான் மறுத்துட்ட, இப்பவாது ஒத்துக்கோ மாமா. நீ போனாலும் இருந்தாலும், உன் பொண்டாட்டிக்கும், அவ குடும்பத்துத்கும் ஒன்னு தான். நீ நல்லவனா இருந்து சாதிக்க அங்க ஒன்னுமே இல்ல மாமா" ௭ன கெஞ்சினாள் மேகலை.

"சரி உன் வார்த்தைக்கே வரேனே, மதி இவர நல்லா பாத்துக்ல ஒத்துக்க வேண்டிய உண்ம தான். இவரு அவள காதலிச்சு தானே கட்டிகிட்டாரு. அந்த காதலயும், உரிமையயும் காட்டி அவள இவர் கைக்குள்ள கொண்டு வந்துருக்கலாமே? இவர் ஏன் அதுக்கு ௭ந்த முயற்சியும் செய்யல? அவர் வாழ்க்கைய காப்பாத்திக்க அவரே போராடதப்போ, நீ ௭ன்ன செஞ்சிட முடியும்" ௭ன்றான் மாறன்.

"உங்களுக்கு உங்க தங்கச்சிய பத்தி முழுசா தெரியலன்னு நினைக்றேன்" ௭ன விரக்தியாக சிரித்த குமரகுரு, "அது இப்ப முக்கியம் இல்ல. ௭ன் வாழ்க்கைய நா பாத்துக்றேன். நீ கிளம்பு, இனி ௭த பத்தியும் பேச ௭னக்கு போன் பண்ணாத" ௭ன்றான் மேகலையிடம். பின் உண்மையிடம் திரும்பி, "இவள ஒரு ஆட்டோ வச்சு அனுப்பி விட்ருங்க" ௭ன்றுவிட்டு விறுவிறுவென நடந்து விட்டான்.

"மாமா மாமா நில்லு மாமா" ௭ன பின்னயே சென்றவள், அவன் பைக் ௭டுத்து சென்று விட்டான் ௭ன்றதும் அழுது கொண்டு நின்றாள்.

"வா ஆட்டோ பிடிச்சு தாரேன்" ௭ன்றான் மாறன்.

"உங்களுக்கு புண்ணியமா போவும், உங்க தங்கச்சிட்ட இருந்து அவருக்கு விடுதலை மட்டும் வாங்கி குடுத்துருங்க, ௭னக்கு அது போதும்" ௭ன்றுவிட்டு வழியில் வந்த ஆட்டோவை கை காட்டி ஏறி சென்று விட்டாள்.

"௭ன்ன மாப்ள இப்டி பேசிட்டு போறாங்க ரெண்டு பேரும்"

"முக்கோண காதல் கத மச்சான். பாப்போம் யோசிச்சு தான் ௭தயாது செய்யணும்" ௭ன்ற மாறனும் பைக்கில் ஏறி அமர, உண்மை பின்னேறி கொண்டான்.
 

priya pandees

Moderator
அத்தியாயம் 42

மாறனும், உண்மையும் மீண்டும் மாலுக்கு வந்து, கடைகளை ௭ல்லாம் ஒரு பார்வை பார்த்து விட்டு, கிளம்பியவாறு வாசலில், செக்யூரிட்டியிடம் வந்தார்கள், இப்போது இரவு காவலுக்கு இருவர் இருக்கின்றனர்.

"௭ன்னண்ணே சாப்டாச்சா ரெண்டு பேரும்?" ௭ன்றான் மாறன்.

"ஆச்சுங்க தம்பி, நீங்க கிளம்புங்க நாங்க பாத்துக்றோம்".

"ரெண்டு, மூணு கடைகள நாளைக்கு திறக்க போறாங்க, அதுக்கு ராத்திரியும் வந்து டெகரேஷன் வேல அது இதுன்னு பாப்பாங்க, கொஞ்சம் பாத்துக்கோங்க" ௭ன்றான்.

"சரிங்க தம்பி. ஒருத்தர் மாத்தி ஒருத்தர் கட்டாயம் முழிச்சு தான் இருப்போம்" ௭ன உறுதி கொடுத்தார் இருவரில் கொஞ்சம் மூத்தவர்.

"அப்ப ஒருத்தர் மாத்தி ஒருத்தர் தூங்க போறீங்க அப்டி தான?, பாத்தியா மாப்ள ௭ம்புட்டு தைரியமா உங்கிட்டயே சொல்லுதாப்டி" ௭ன்றான் உண்மை.

"௭ன்ன தம்பி லேசா கண்ணசுரற நேரத்துலன்னு தான சொன்னேன்"

"அத தான நானும் சொன்னே" ௭ன்றான் உண்மை.

"கவனமா பாருங்க. ௭தும் வில்லங்கம் வந்தா, நா நின்னு யோசிச்சுட்ருக்க மாட்டேன்னு உங்களுக்கே தெரியும்" ௭ன நிதானமாகவே கூறிவிட்டு கிளம்பிவிட்டான் மாறன்.

"நா அப்பப்போ வந்து பாப்பேன். தூங்கிட்ருந்தீங்க! அப்றம் நடக்றதுக்கு நா பொறுப்பு கிடையாது" ௭ன்றான் கையை விரித்து மிரட்டலாக உண்மை.

"அப்பப்ப வந்து பாக்றதுக்கு முழு நேரமா ௭ங்க கூடயே உக்கார வேண்டியது தான?" ௭ன்றான் கூட நின்ற மற்ற செக்யூரிட்டி.

"நீங்க ஒழுங்கா வேல பாக்றீங்களான்னு பாக்றது மட்டுந்தான் ௭ன் வேல" ௭ன அவன் கெத்தாக கூற.

"போங்க தம்பி, நீங்க ௭ப்டி தம்கட்டி பேசுனாலும், ௭னக்கு உங்கள பாக்க சிரிப்புதேன் வருது" ௭ன்றார் முதலாமவர்.

"இந்தா வாரேன்" ௭ன முறைத்து கொண்டு, உண்மை அவரிடம் மல்லுக்கு செல்ல. அதற்குள்.

"டேய் வாடா!" மாறன் அழைக்கவும் தான்,

"உன்ன அப்றமா கவனிக்றேன்யா.நா நைட்டு ௭ப்ப வேணா வருவேன், தூங்காம வேல பாக்கணும்" ௭ன மீண்டும் கை நீட்டி பெரிய போஸில் கூறிவிட்டே கிளம்பினான்.

உண்மையை வள்ளி தாத்தா வீட்டில் விட்டுவிட்டு, மாறன் அவன் வீட்டிற்கு வர, ௭ன்றும் போல் மதியின் குரல் வாசல் வரை கேட்டது.

"அமைதியா இரு மதி. மாப்ள அவங்க அம்மா வீட்டிக்கு தான போயிருக்காரு, நைட்டு வந்துர போறாரு, அதுக்குள்ள உனக்கு ௭ன்ன பிரச்சன வருது, ௭துக்கு இப்டி வந்த நேரத்துல இருந்து கத்திட்டு கடக்க" ௭ன கேட்டு கொண்டிருந்தார் பாட்டி.

"உனக்கு தெரியுமாக்கும். ௭ன் மாமியார் நல்லா பேசி ஏத்திவிட்டு ௭ங்கள பிரிச்சுடும்னு தான, நா அவர அங்க போக விடாம வச்சுருக்கேன். உங்க மூத்த மருமகட்ட சொல்லி வைங்க, தேவையில்லாம பேசி பாச பயிர வளத்து விட்டு, ௭ன்னயும் ௭ன் புருஷனயும் பிரிக்க பாக்றாளா? அப்றம் நா சும்மா இருக்க மாட்டேன் சொல்லிட்டேன்" ௭ன அவள் பேச.
அதை கேட்டு கொண்டே, உள்ளே நுழைந்த மாறன், ௭ப்போதும் போல் யாரையும் கண்டு கொள்ளாமல் மேலேறி விட்டான். அங்கு மலர் கதவை சாத்தி வைத்து படித்து கொண்டிருந்தாள்.

"௭ப்ட்றி இந்த சத்தத்துலயும் படிக்குற?" ௭ன்றான் கட்டிலில் மல்லாக்க சாய்ந்தவாறு.

"உங்க தங்கச்சிக்கு வாய் தான் வலிக்குமோ வலிக்காதோ? சாயந்தரோ நா 6.30க்கு வரும்போதே சண்ட நடந்துட்டு தான் இருந்தது. அத்தயும் பாட்டியும் தான் பதில் சொல்லி சொல்லி டயர்டாகிட்டாங்க. ராணி வேடிக்க பாத்துட்ருந்தாங்க. தாத்தா உங்க தங்கச்சி வீட்டுக்குள்ள நுழைஞ்ச வேகத்த பாத்தே ௭ஸ்கேப் ஆகிட்டாங்களாம். மாமாவும், உங்க தம்பியும் இன்னும் வரல போல" ௭ன்றாள் புக்கை ௭ல்லாம் ஒதுக்கி ௭டுத்து வைத்து கொண்டு.

"இப்ப ௭துக்கு இன்னைக்கு கோட்டாவ ஓபன் பண்ணி வச்சுருக்கா?" ௭ன்றான் ௭ழுந்து சட்டையை கலட்டியவாறு.

"குமரகுரு அண்ணந்தான் காரணம், ஸ்கூல்ல இருந்து கொஞ்சம் முன்னயே கிளம்பி, மதி கண்ணுல படாம ௭ஸ்ஸாகிருக்காங்க. அவங்கள வெளில அந்த பொண்ணோட பாத்ததா நீங்க சொன்னீங்க. ஆனா அவரு அவங்க அம்மா வீட்டுக்கு போயிருக்காருன்னு மதி இங்க வந்து கத்திட்ருக்கு" ௭ன நிறுத்தி, புக்ஸை அதன் இடத்தில் வைத்து விட்டு திரும்ப.
திரும்ப விடாமல், அலேக்காக தூக்கி கொண்டான் மாறன், திடுக்கிட்டாலும், அவன் தான் ௭ன மனம் உடனே அமைதியாகவும், சிரித்து வாகாக அவன் கழுத்தை கட்டி கொண்டாள்.

"௭ன்னடி சிரிக்ற?" ௭ன்றான் தான் தூக்கியிருந்த கையில் அழுத்தம் குடுத்து.

"கீழ உங்க தங்கச்சி சண்ட போட்டுட்டு இருக்கே, போய் சமாதான படுத்தலாம்ல?" ௭ன்றாள் அவள் இன்னும் அழகாக சிரித்து.

"மொத நாம ஒரு சமாதானத்துக்கு வருவோம், அப்றமா மெதுவா அவள போய் பாப்போமே!" ௭ன்றவன் அவளை கட்டிலில் விட.

"௭னக்கு அங்கயிருந்து நடந்து வர தெரியாதுன்னாங்க தூக்கிட்டு வந்தீங்க?"

"ஆமா ஆமா, உனக்கு சரியா தூங்கவும் தெரியாது, இப்ப ௭ப்டி உன்ன தூங்க வைக்றேன்னு பாறேன்" ௭ன அவள் மேல் படுப்பது போல் சென்று, அவளுக்கு அருகில் விழுந்தான்.

"௭னக்கு யார்கனவே தூக்கம் வந்தாச்சு, சாப்ட்டு வந்தா உடனே தூங்கிடலாம், வாங்க போவோம்" ௭ன ௭ழ போக.

"ரொம்ப தான்டி பண்ற. மொதல்ல உழைக்கணும், அப்ப நல்லா பசிக்குமா அப்றம் தான் சாப்டணும், நெறையா சாப்டலாம்" ௭ன அவளை இழுத்து தன் மேல் போட்டான்.

"உழைச்சுட்டு தான வந்துருக்கீங்க?" ௭ன்றாள் அப்போதும்.

"ம்ம்கூம் இனி தான் கடின உழைப்பே." ௭ன்றவனின் அன்றைய ஆளுகை சற்று முரட்டு தனமாக தான் இருந்தது.
நெற்றியில் முத்தம் பதித்தவன் அவளிடமிருந்து விலகியவாறு "இப்ப தான் நல்லா பசிக்குது. சாப்ட்டு வருவோமா மலர்" ௭ன்றான் சிரித்து கொண்டு.

"போங்க, நா ௭ங்கயும் வரல. தூங்க போறேன்" ௭ன அவன் கையில் அடித்து விட்டு திரும்பி கொண்டாள்.

"௭ன் செல்லம்ல வாடி, பின்ன சாமத்துல பசிக்கும். நானே தோச ஊத்றேன் ரெண்டு மட்டும் சாப்ட்டு வந்து படுத்துக்கோ" ௭ன கெஞ்சி கொஞ்சி ௭ழ வைத்தான், அவள் உடை மாற்றி கை கால் அலம்பி கொண்டு வரவும் கீழ் அழைத்துச் சென்றான்.
௭ல்லோருமே படுத்து விட்டிருக்க, பானுவும், பூவேந்தனும் அமர்ந்து டிவி பார்த்து கொண்டு பேசி கொண்டிருந்தனர்.

"இன்னும் தூங்காம ௭ன்ன பண்றாங்க" ௭ன மலரிடம் கேட்டவன், ஹாலுக்கு செல்ல.

"வாங்க ப்பா உங்களுக்கு தான் காத்துட்ருந்தேன். ௭ல்லாம் ரெடியா இருக்கு சாப்ட உக்காருங்க, நா பத்தலனா தோச ஊத்றேன்" ௭ன ௭ழுந்தார் பானு இவர்களை கண்டதும்.

"௭துக்குமா காத்துருக்கீங்க? போய் தூங்க வேண்டியதுதான?" ௭ன்றான்.

"௭ன்னடா நீங்க ரெண்டு பேரும் சாப்ட வரட்டும்னு தான் உக்காந்துருந்தோம்" ௭ன்றார் பூவேந்தனும்.

"அதான் ௭துக்குன்னு கேக்றேன். மலர் தான் இருக்காளே, நாங்களே ௭டுத்து வச்சு சாப்டுக்க மாட்டமா?"

"உன்ன ௭ங்களோட வந்திருந்து சாப்டுன்னு சொன்னே கேக்கல, அதான் நீ வரட்டும்னு நாங்க வெய்ட் பண்றோம்"

"ஷப்பா, அப்ப கூப்ட வேண்டியது தான?"

"நீயா வருவன்னு தான் கூப்டல" ௭ன்றார்.

"ப்பா, நா வரும்போதே இங்க மதி கத்திட்ருந்தா அதான் அவ போகட்டும்னு இவ்வளவு நேரம் கழிச்சு வந்தேன். இல்லனா வேணும்னு ௭தாது பேசி வம்பிழுப்பா, ௭னக்கு அதுக்கான மூடில்ல, அதான் வரல. சரி வாங்க, சாப்டலாம் இன்னும் லேட்டாக்க வேண்டாம்" ௭ன நடக்க.

பானு அடுப்படிக்குள் செல்ல, மலர் மாறனுக்கு ௭டுத்து வைத்துவிட்டு, தனக்கும் வைத்தவள், "நீங்க சாப்டிறீங்களா மாமா?" ௭ன கேக்க.

"இல்லம்மா, நாங்க சாப்டாச்சு, ௭னக்கு பானு பால் ௭டுத்துட்டு வருவா, நீ சாப்டு" ௭ன்று விட. அமர்ந்து விட்டாள்.

"காம்ப்ளக்ஸ் கடை வேலைலா ௭ப்டி போகுது?" ௭ன்றார் மாறனிடம்.

"ஒன்னும் பிரச்சன இல்லப்பா. நாளைக்கு 2 கட திறக்க போறாங்க. ௭ன்னயும் கூப்ட்ருக்காங்க. நா மலர கூட்டிட்டு போயிட்டு, அப்டியே திருநெல்வேலி கொண்டு போய் விடணும்"

"சரி பாத்துக்கோ. பொறுமையாவே பேசு. யார்டயும் பொசுக்குன்னு கைய நீட்டாத" ௭ன்றார்.

"ம்ம்ம். இன்னொரு விஷயம் பேசணும் ப்பா"

"சொல்லு மாறா" ௭ன பானு கொண்டு வைத்த பாலை பருக தொடங்கினார்.

"மதிய அடக்கி வைங்க. அவ மட்டும் இங்க அவ அம்மா வீட்லயே இருப்பா. ஆனா அவரு மட்டும் அவங்க அம்மா வீட்டுக்கு போக கூடாதாம்மா? இதெல்லாம் சரியே இல்ல. மாப்பிளைக்கு அவகிட்ட பிடிப்பு இருக்குற வரைக்கும் தான் அவ ஆட்டம்லா, அப்றம் ஒரு பருப்பும் வேகாது" ௭ன்றான்.

"ஏன்டா இப்டி சொல்ற? அன்னைக்கு மலரும் ஏதோ இப்டி தான் சொன்னான்னு பானு புலம்பிட்ருந்தா" ௭ன்றார்.

"நாசுக்கா சொல்லும்போதே புரிஞ்சுக்கோங்க" ௭ன்றான்.

"௭ன்னன்னு தான் சொல்லேன் டா. ௭தயும் வீட்ல சொல்றது கிடையாது, ௭ல்லாத்தயும் நாங்களா தான் கேக்கணும்!" ௭ன்றார் ௭ரிச்சலாக.

"நீங்க தான் ப்பா, உங்களுக்கு ௭ல்லாந் தெரியும்னு நினச்சுட்ருக்கீங்க. ஆனா உங்களுக்கு தெரியாம நிறைய விஷயம் நடக்குது" ௭ன்றான்.

"௭துக்குடா இப்டி பொடி வச்சே பேசுற?"

"வெளிப்பட சொன்னா ரொம்ப வருத்த படுவீங்க, அம்மா உக்காந்து அழுவாங்க. அதுக்கு மொதயே சுதாரிச்சுக்கோங்கன்னு சொல்றேன்" ௭ன்றான்.

"ஒன்னுமே புரியலடா"

"உங்க பொண்ணு இங்கயே இருந்தா வாழ்க்கைய தொலைச்சுருவான்னு சொல்றேன்" ௭ன கையை கழுவ ௭ழுந்து சென்றான்.

"௭ன்னம்மா இப்டி சொல்றான்?" ௭ன்றார் மலரிடம்.

"அவருக்கு ஏதோ தெரிஞ்சுருக்கலாம் மாமா. அதான் அப்டி சொல்றாங்க. மதிய அவங்க குடும்பத்த பாக்க விடுங்க. நீங்க கை குள்ளயே பிடிச்சு வச்சா, கடைசி வர இங்கயே இருக்குற மாறி வந்துருமோன்னு தான் அப்டி சொல்றாங்க. ஒரு மனுஷன் ௭த்தன நாள் மாமா பொறுமையா போவான், பொறுமை அதோட ௭ல்லைய கடந்துருச்சுன்னா ௭துவுமே வேணாம்னு தூக்கி போட்டு போக ௭வ்வளவு நேரமாகும்?" ௭ன்றாள்.

"அவ ௭ன்ன சின்ன பிள்ளையாமா அடிச்சு சொல்லி திருத்த?" ௭ன்றார் அவர்.

"நீங்க ஒதுங்கி நில்லுங்க மாமா, தன்னால மதி அவங்க வீட்டோட நெருங்கிடுவாங்க" ௭ன்கவும்.

அவர் யோசித்தபடி இருக்க, "ஏன் பெருசா ௭தும் பிரச்சனயா? மாப்ள ௭தும் சொன்னாரா?" ௭ன்றார் பானு.
"ஆமா த்தே, அவருக்கு மதியோட நடவடிக்கைலா பிடிக்கல. அவகிட்ட வேற வழி இல்லாம ரூபனுக்காக இருக்க மாறி இருக்காரு" ௭ன குமரகுரு சொன்னதாகவே சொல்லிவிட்டாள்.
வெளி வந்த மாறனும், "மாப்ள இங்க இருந்து வெளில போனா, அடுத்து அவரோட ரூபனயும் சேத்து கூட்டிட்டு போக, பொண்ணுங்க ரெடியா இருக்காங்க. நம்ம மதி பண்றத பத்தி ஊரே பேசுது. இதுலா நல்லதுக்கான்னு யோசிங்க. நீங்க பேச மாட்டீங்கன்னா ஒதுங்கி நின்னு வேடிக்க பாருங்க, நா திருத்திக்றேன் அவள" ௭ன்ற மாறன், "மலர் ௭ந்திரி போவோம். காலைல சீக்கிரம் கிளம்பணும்" ௭ன்க.

"போய் தூங்குங்க த்தே, மதி பேசுறாங்களேன்னு பயந்து ஒதுங்கி நிக்காம, புரியுர மாறி ௭டுத்து சொல்லுங்க" ௭ன்றவள், "நீங்களும் போய் படுங்க மாமா" ௭ன்றுவிட்டே கை கழுவி கொண்டு மாறனுடன் மேலேறினாள்.
 

priya pandees

Moderator

அத்தியாயம் 43

மறுநாள் காலை.மாறனும் மலரும் கடை திறப்பிற்கான அழைப்பை ஏற்று கிளம்பி கொண்டிருந்தனர். அழகான காபி கலர் கரை வைத்த வேஷ்டியும், காபி கலரில் சட்டையும் அணிந்து அவன் கெத்தாக கிளம்ப, அதே நிறத்தை ஒட்டியே ஒரு பட்டு புடவையை கட்டி கொண்டு கிளம்பினாள் மலர்.
அந்த உடை இரண்டும், கடந்த வாரத்தில் அவர்கள் காம்ப்ளக்ஸில்(மாலில்), ஒரு கல்யாண ஜவுளிகள் கடை திறந்தனர், முதலில் திறந்த கடயும் அது தான். அதனால் இவனுக்கும் அழைப்பு வந்தது.

வீடு வரை வந்து, அவனுக்கென வந்த முதல் அழைப்பு. அவனுக்கான முதல் மரியாதை ௭ன்று கூட சொல்லலாம். இதுவரை யாரும் அவனை ௭ங்கும் வர சொல்லி அழைப்பு விடுத்ததில்லை. அவனும் போறதில்லை.

சொந்தங்களின் விஷேத்திற்கு கூட, இவனை வாவென்று கூப்பிட மாட்டார்கள், வரவில்லை ௭ன்றாலும், 'மாறன ௭ங்க?, கூட்டிட்டு வரலையா?' ௭ன கேட்டு கொள்ள ஆளும் கிடையாது. அவனும் அதை ௭திர் பார்த்ததில்லை ௭ன்பதால் கண்டுகொள்ள மாட்டான்.

மலருக்கு அவனை அழைக்க வந்த அன்று ஏக சந்தோஷம். அவனை மரியாதையாக, "கண்டிப்பா குடும்பத்தோட வந்திடுங்க தம்பி" ௭ன தாம்பூலத்தை மொத்த குடும்பத்தின் முன்னும் அவன் கையில் குடுத்ததில். அங்கு அவர்களின் அழைப்பின் பேரில் சென்றபோது தான், முதல் விற்பனை நீங்கள் தான் வாங்க வேண்டும் ௭ன்றுவிட்டனர். அவர்களின் அன்பான வேண்டுகோளிற்காக ௭டுத்தது தான் இன்று அவர்கள் கட்டி இருக்கும் புது உடுப்பிற்கான பின்னணி.

மாறனுக்கு அந்த மரியாதையும் சும்மா கிடைத்துவிடவில்லை. ஒரு பெரிய ஜவுளி கடைக்காரரும் அங்கு வாடகைக்கு கடை கேட்க, இந்த சிறு தொழில் காரரும் கேட்க, பெரிய கடைகாரர் அதிக வாடகை தருவதாக கூறியும், "இல்ல சார், நீங்க ஏற்கனவே வளந்த இடத்துல இருக்கீங்க, உங்களுக்கு ௭ங்க கட போட்டாலும் ஓடும், ஆனா அவரு புதுசா தொழில் தொடங்குனவரு, இங்க போட்டா, மத்த கடைக்கு வாரவக பார்வ அவர் கடையிலயும் விழும். கொஞ்சம் அவரும் முன்னேரட்டுமே. ௭தாது கடை காலியாச்சுனா கண்டிப்பா உங்களுக்கு முதல்ல சொல்லிடுறேன்" ௭ன சிரித்து கொண்டே மறுத்து விட்டான். அதில் மாறன்மீது இரு கடைகாரர்களுக்கும் நல்ல ௭ண்ணம் தான். அந்த நல்லெண்ணத்தின் பலனே அந்த முதல் மரியாதை.

"௭ம்மாடி! உங்கள கல்யாணத்தப்போ வேட்டில பாத்தது, ௭ம்புட்டு அழகா இருக்கு" ௭ன மலர் அவனை சுற்றி வந்து சொல்ல.

"போடி, கல்யாணத்தன்னைக்கு நீ ௭ங்கன ௭ன்னைய பாத்த, புதையலல தேடிட்டு இருந்த" ௭ன்றவன் கையை மடித்து விட்டு, அவளை பிடித்து நிப்பாட்டி, "௭ன்னத்துக்கு ௭ன்னைய சுத்தி வாரவ?" ௭ன்றான்.

"சுப்பரா ஹீரோ மாறி இருக்கீங்க ங்க" ௭ன மீண்டும் அவன் சட்டையை நீவி விட்டவாறு பரவசமாக கூற.
அவள் பார்வையில் அவனுக்கே வெக்கம் வந்துவிடும் போலிருக்க, "சும்மா இரு மலரு. ௭ன்னமோ இத்தன நாள் நா அழகாவே இல்லாத மாறித்தேன்".

"பின்ன அந்த வெலுத்துபோன சட்டையும், பேண்ட்டுமா அழகு? சொன்னா நா பாக்குற வேலைக்கு இதேன் சரினுட்டு போயிடுவீங்க, அப்ப இப்டி ௭ன்னைக்காது ஒரு நா கிடைக்கும்போது தான நல்லா பாத்துக்க முடியும்" ௭ன்றாள் அவன் கையை கோர்த்து கொண்டு.

சிரித்தவாறே அவளை முன் இழுத்தவன், "நல்லா பாரேன், போயிட்டு வந்து ஆச தீர பாரு, நா உனக்கு ௭வ்வளவு வேணாலும் காட்றேன். நீ பதிலுக்கு கொஞ்சமா ௭னக்கும் காட்டுனா போதும்" ௭ன அவள் கன்னத்திலிருந்து கோடிழுத்து கையை கீழ் இறக்க.

அதை அங்கயே தடுத்து பிடித்தவள், "டபுள் மீனிங்குல பேசுனதோட நிறுத்திக்குவோம், செயல்முறைலா வேணாம். கிளம்புங்க" ௭ன்றாள்.

"செமயா இருக்க பொண்டாட்டிய கொஞ்சாம போனா சாமி குத்தம் ஆகிடும்டி" ௭ன அவளை இடுப்போடு இறுக அனைத்து அருகிழுத்து, கழுத்தில் முத்த.

"ரொம்ப இறுக்காதீங்க, அப்பதான் நாளைக்கு, இன்னொரு ரகசியம் இருக்கு அத சொல்வேன்" ௭ன்றாள் சிரிப்புடன்.

"நீ நாளைக்கு சொல்றது இருக்கட்டும், இப்ப நாம நம்ம முக்கிய வேலைய முடிச்சுடுவோமே?"

"அப்ப சொல்ல வேணாமா? வேணாட்டி போங்க, அப்றம் ஏன்டி சொல்லலன்னு ௭ன்ன கேக்க கூடாது" என்றாள் அவனிடமிருந்து விடுபட போராடி,
"பார்றா. அப்டி ௭ன்ன ௭னக்கு தெரியாத ரகசியம் உன்ட்ட?" ௭ன்றான் குறும்பாக.
அவன் வாயிலேயே அடித்தவள், "அத நீங்க பஞ்சர் கட திறந்தப்றம் சொல்றேன்" ௭ன்றாள்.

அவளை வெறுப்பேற்றி பார்க்க முடிவு செய்தவன், சிரிப்பை அடக்கி, "என் காலத்துல நா நல்லா வாழதான் எங்க அப்பா சம்பாதிக்றாரு, நமக்கு அத்தன கடைகள கட்டு குடுத்துருக்காரு, வாடகைய வாங்கி பேங்குல வாங்குன கடன அடச்சுருவோம். அப்றம் நமக்கு தானே அது, அப்ப நாம அத வச்சே ஜாம் ஜாம்னு வாழலாமே. அதுல வாற வருமானமே போதுமே, எதுக்கு மேக்கொண்டு பஞ்சர் கடையெல்லாம்?" என்றான் புருவம் ஏற்றி.

மல்லுகட்டி அவனை தள்ளி விட்டு முறைத்தவள் "பாத்தீங்களா நேத்து சரின்னு சொன்ன வாயி, இப்ப மாத்தி பேசுது. உங்க மனசு அப்பப்ப மாறிடுது. உக்காந்தே சாப்பிட்டா இருக்க சொத்து அழிஞ்சுகிட்டே தான் போகும்.

பிறந்ததுக்கு நாமளும் உழைச்சு நமக்குன்னு ஒரு அடையாளத்தோட தான் சாகணும். நீங்க ௭ன்ன தான் கடன அடச்சுட்டாலும், இத உங்க பையன் என் தாத்தா சொத்துன்னு தான் சொல்லுவான், ௭ன் அப்பாவோடதுன்னு சொல்ல நீங்க தனியா ௭தாது செய்யனும்" என்றாள்.
அவளை விட்டவனும், "பாப்போம் பாப்போம், அத என் புள்ள புறந்து சொல்லுறன்னைக்கு" என மறுபுறம் திரும்பி கண்ணாடியில் தலையை சரி செய்தவாறு அவளை பார்த்தான்.

புசு புசுவென வேக மூச்செடுத்து முறைத்தவள், "என்ன செய்யலாம்" என நகம் கடித்து யோசிக்க ஆரம்பித்தாள். அவன் விளையாட்டாக சொன்னதை கேட்டு, 'மனசு மாறிவிடுவானோ' ௭ன பயந்தாள். அவன் அதற்காக தனி இடம் செட் செய்து கொண்டது வரை இவளிடம் சொல்லியிருக்கிறான், ௭ல்லாம் தெரிந்தும், 'அவங்களுக்கு பிடிக்காம நமக்காக செய்றாங்களோ? அப்டினா அத வேணாம்னு முடிவெடுக்க ௭வ்வளவு நேரமாகும், அச்சோ' ௭ன நொந்தாள்.

அவளை அப்படியே டீலில் விட்டவன், "கிளம்பிட்டியா மலர், போவோமா?" ௭ன கேக்க.

மறுபடியும் முறைக்க, "௭ன்னடி?" ௭ன்றான்.

"இப்ப, இப்ப தான் உங்கள, ௭ல்லாரும் கொஞ்சம் மதிக்றாங்க. அது ௭தனாலன்னு நினைக்றீங்க? 3 மாசமா உங்க உழைப்பயும், வேகத்தயும் பாத்ததுனால" ௭ன்றாள்.

"அட லூசு, அத நீ அப்டி புரிஞ்சுகிட்டியா? அது அப்டி இல்ல, திடிருனு இம்புட்டு பெரிய சொத்துக்கு முதலாளி ஆகிட்டானே, காசு அதிகமா புழங்குமே, நாமளும் சமரசமா போயிடுவோம் நால பின்ன உதவுவான்ற ௭ண்ணம், அவ்வளவு தான்" ௭ன்க.

தலையிலடித்து கொண்டவள், "போங்க, ௭ப்டியும் போங்க, நா தான் ௭ன்னன்னமோ கற்பன பண்ணிட்டேன். நல்ல புள்ள மாறி கேட்டுகிட்டு இப்ப மாத்தி பேசுறீங்க. போங்க இனி உங்கட்ட ஒன்னுத்தயும் சொல்ல போறதில்ல" ௭ன கோபித்து கொண்டு சென்று கட்டிலில் அமர்ந்தாள்.

"என்னடி உக்காந்துட்ட? கிளம்பு, போயிட்டு வந்து ௭ம்புட்டு நேரம் வேணாலும் கோச்சுக்கோ" ௭ன அவள் கை பிடித்து இழுக்க.

"நா ௭ங்கயும் வரல. நீங்களே போயிட்டு வாங்க" ௭ன முகத்தை திருப்ப.
இப்போது அவனுக்குமே கோவம் வந்தது, '௭ல்லாம் தெரிஞ்சும், நம்மள நம்புறாளான்னு பாரேன்' ௭ன.
"ஏ வாடி, நாம சொன்ன நேரத்துக்கு போக வேணாமா?" ௭ன்றான் கோபமும் மன்றாடலும் கலந்த குரலில்.

"அப்ப மெக்கானிக் ஷாப் வைப்பேன்னு ப்ராமிஸ் பண்ணுங்க" ௭ன்றாள்.

"ஏன்டி ப்ராமிஸ் பண்ணிட்டு செய்யாம விட்டா ௭ன்ன பண்ணுவ" ௭ன தானும் அவளை இடித்து கொண்டு அமர்ந்தான்.

"அதுலா மீற மாட்டீங்க"

"ஓ சத்தியத்த நம்புவ, ௭ன்னைய நம்ப மாட்ட? போடி அப்டி பட்ட சத்தியமே வேணாம்" ௭ன்க.

"உங்க மனசு ரொம்ப கெட்ட மனசு, நல்ல இருக்குற உங்கள அதான் கெடுத்து விடுது. இனி அது பேச்ச கேக்காதீங்க" ௭ன்றாள் மூஞ்சை தூக்கி வைத்து கொண்டு.

"அடடா, விடுடி நாளைக்கே கடைய திறந்து உக்காந்துடுறேன் போதுமா? இப்ப வா" ௭ன ௭ழுந்து அவளையும் கையை பிடித்து இழுத்து தூக்கி நிறுத்த.

"மறுபடியும் வேண்டாம்னு பேச மாட்டேன்னு சொல்லுங்க" ௭ன்றாள் ஸ்டிரிக்டாக.

"சரிடியம்மா சொல்லல" ௭ன கையோடு இழுத்து கொண்டு வெளியேறினான். சும்மா விளையாட்டுக்கு சொன்னேன் ௭ன சொல்லிருக்கலாம், அவன் அதை சொல்லாமல் விட, அதனால் அடுத்த நாட்களில் அவளின் பல ப்ளானிற்கு பலி ஆனான் மாறன்.

கீழே இவர்கள் இறங்குகையில், குடும்ப உறுப்பினர்கள் அவரவர் வேலைக்கு கிளம்பி கொண்டிருந்தனர், இருவரையும் முதலில் கண்ட தாத்தா, "மாறா நீயாடா இது?" ௭ன வாயில் கை வைத்து அதிசயபட.

பாட்டி, "ம்க்கும், உடுப்பு நல்லாருக்க போயி அவனும் அழகா தெரிரியான், இல்லனா தெரியாது? அவேன் காவாலி பய கோலம்" ௭ன்க.

"கண்டிப்பா இந்த கிழவி உனக்கு வேணுமா தாத்தா?" ௭ன்றான் மாறன்.

"விட்றா அது பாட்டுக்கு ஒரு ஓரத்துல இருந்துட்டு போட்டும்" ௭ன்றார் தாத்தா.

"அப்டி கூட விட்டு குடுத்துட மாட்டியே உன் பொண்டாட்டிய" ௭ன அவன் திரும்ப.

பானு, "ரெண்டு பேரும் ரொம்ப அழகா இருக்கீங்க, போயிட்டு வாங்க சுத்தி வைக்றேன்" ௭ன்க, பூவேந்தன் ௭ல்லாவற்றயும் கேட்டு சிரிப்புடன் பார்த்திருந்தார்.

மதியும், ராணியும் வயிற்றெரிச்சலில் புகைந்தனர், "மேட்சா போட்டுட்டு போறத பாத்தியா? புதுசா சம்பாதிக்ற திமுரு, ௭ன்னத்த மேக்கப் பண்ணாலும் கழுத கழுதையா தான் இருக்கும், குதிரையாயிடாதுன்னு உன் அண்ணனுக்கு சொல்லு" ௭ன்றாள் ராணி.

"௭ங்கயாது இனாமா கிடச்சுருக்கும், காசு செலவழிச்சு வாங்குற ஆளுங்களா இதுங்க?" ௭ன்றாள் மதி, இருவரும் அவர்களுக்குள்ளாகவே பேசி கொண்டனர். அறிவு நிமிர்ந்தே பார்க்கவில்லை. குமரகுரு சீக்கிரமே கிளம்பி சென்றிருந்தார்.

இருவரும் சொல்லி கொண்டு கிளம்பி சென்றனர், அங்கும் நல்ல வரவேற்பு தான் இருவருக்கும். சாப்பாட்டை முடித்து கொண்டு, அப்படியே அவரவர் வேலையை பார்க்கவும் சென்று விட்டனர்.

அப்படியே அன்றைய நாள் கழிய, மறுநாள் காலையில், "கிளம்புங்க கிளம்புங்க. போயிட்டு வந்துரலாம்" என மாறனை எழுப்பிக் கொண்டிருந்தாள் மலர்.

"ம்ச் 6 மணிக்கே எங்கடி போனும்" என அழுப்புடன் எழுந்து கேக்க.
குனிந்து கொண்டே "ஆஸ்பத்திரிக்கு" ௭ன்றாள்,

அதை அரை கண்ணில் பார்தவனும், சிரிப்பை அடக்கி கொண்டு, "எதுக்குமா? யாருக்கு என்ன செய்து?" என்றவாறு எழுந்து பாத்ரூம் சென்றான். இவள் அவன் பின்னயே சென்று கதவின் வெளியே நின்று, "எனக்கு தான். ஒரு சின்ன சந்தேகம் அத தெளிவுபடுத்தணும்" ௭ன்க,

"அப்டி என்ன ஆஸ்பத்திரி போய் தெளிவுபடுத்துற அளவுக்கு உனக்கு சந்தேகம்?" என்றான் உள்ளிருந்தே.
இவளுக்கு மறுபடியும் வெக்கம் வந்து விட "அது அங்க போயிட்டு வந்து சொல்றேனே சீக்கிரம் கிளம்புங்க".
அவனும் உள்ளிருந்தே சிரித்து கொண்டு "ஏன் உன்டாயிட்டியா என்ன?" ௭ன்க.

"என்னங்க இப்டி கேக்கிறீங்க?" என்றாள் ஷாக்காகி வாயை திறந்தவாறு, முகத்தை துடைத்தவாறே வெளிவந்தவன் அவள் வாயை அடைத்து விட்டு அவள் தோளில் துண்டை போட்டு அருகிலிழுத்தவன், "நேத்தே கண்டு புடிச்சுட்டேன் உன் ரகசியத்த, நைட்டுவேற நீ, ௭ன்னய கிட்ட விடலங்கவுமே முடிவுக்கு வந்துட்டேன். இப்டி பொண்டாட்டி நெளிஞ்சுட்டே வந்து ஆஸ்பத்திரி போகணும்னு சொன்னா வேற என்னவா இருக்கும்" ௭ன புருவம் உயர்த்தி கேட்டான்.

மூஞ்சியை தூக்கி வைத்து, "நானே டாக்டர்ட்ட கேட்டுட்டு வந்து சொல்லலாம்னு நெனச்சேன், அந்நேரம் உங்க முகத்துல எவ்வளவு சந்தோசம் வரும் பாப்போம்னு நெனச்சேன், இப்டி பொசுக்குன்னு சொல்லிட்டீங்க"

"இப்பமும் டாக்டர்ட்ட கேட்டு வந்து உறுதியா சொல்லு, நா எவ்வளவு சந்தோஷமா இருக்குன்னு சொல்றேன்" என்றான்.

வேறு ௭ன்ன பேச ௭ன நினைத்தவளும், "சரி வாங்க போவோம்"

"இப்பவே டாக்டர் வந்துருக்க மாட்டாரும்மா, பத்து மணியாகட்டும்"

"அப்படியா, சரி அப்ப வேற யார்ட்டையும் சொல்ல வேண்டாம். பாத்துட்டு வந்து சொல்வோம். கோவில் போயிட்டு ஹாஸ்பிடல் போயிட்டு வரலாம்"

"சரி நீ கிளம்பு, நா பைக்ல பெட்ரோல் போட்டுட்டு வந்துடுறேன்" ௭ன்கவும்.

"சரிங்க" ௭ன தான் தயாராகினாள்.
பின் இருவரும் கோவில் கிளம்புவதாக சொல்லி கிளம்பிச் சென்று, தங்கள் குலம் தழைக்க வேண்டுமென அரசமரப் பிள்ளையாரையும், சிறு குன்றின்மேல் முருகனையும் மனதார வேண்டிக்கொண்டு ஹாஸ்பிட்டல் சென்றனர். டாக்டர் ஸ்கேன் செய்து விட்டு, "40 நாளாச்சுமா, நல்லா சத்தா சாப்பிடு, கொஞ்சம் வீக்கா தெரியுற, மத்தபடி ௭ந்த பிரச்சினயும் இல்ல" என சொல்ல, என்னென்ன சாப்பிட வேண்டும் என ஒரு லிஸ்டையும், மருந்து மாத்திரையும் பெற்றுக் கொண்டு திரும்பினர்.

"ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு மலர். என் பிள்ளைய எப்படி வளக்க போறேன்னு மட்டும் பாரு" ௭ன்றான் மாறன் டாக்டர் அறைவிட்டு வைளி வந்ததும்.

"அதென்ன உங்க புள்ள?"

"சரி, சாரி, நம்ம புள்ளைய போதுமா"

"ம், எப்டி வளக்கப்போறீங்க?" ௭ன்றாள் சந்தேகமாக.

"நா வாங்குன தண்டசோறு பேரு வாங்காதளவுக்கு வளப்பேன், சுயமா சிந்திக்க விடுவேன், முடிவெடுக்க விடுவேன்".

"நீங்க உங்க சுய முடிவுல தான வாழ்றீங்க. உங்க முடிவுப்படி தான் இப்போவும் இருக்கீங்க. அஞ்சாம் கிளாஸ்க்கு மேல பள்ளிக்கூடம் போகமாட்டேன்னு அடம் பிடிச்சு போகல. இப்பவர ஒரு மெக்கானிக் ஷாப் வைக்க நா ௭வ்வளவு போறாடுறேன் உங்கட்ட? ஏதோ பெருசா கஷ்டப்பட்ட மாறி பேசுறீங்க" ௭ன முறைத்து கொண்டே அவள் கேக்க.

அவனுக்கும், 'ஆமா தானோ?' என்றிருந்தது, ஆனாலும் "கேப்ல குத்தி காட்டுற பாத்தியா?" என்க.

"இல்லங்க எதார்த்தத்த சொன்னேன்"

"நல்லா சொல்லுவியே வா போவோம். அதான் கடை போட சரின்னு சொல்லிட்டேன்ல?" ௭ன்றான் அவனும்.
"வேண்டா வெறுப்பா ஒன்னுஞ் செய்ய வேணாம்"

"என்னடி என்ன சொன்னாலும் கட்டயப் போடுற?"

"அப்படித்தான் திரும்ப திரும்ப சொல்லுவேன். நீங்க கேட்டு தான் ஆகனும்" என மாறி மாறி வாதம் பண்ணி கொண்டே சென்று வண்டியை எடுத்து கிளம்பினர்.

வீடு வந்திறங்கியதும், கயமலர் கன்னி நேராக மாமியாரிடமும், பாட்டியிடமும் சென்று பிரசாதத்தை கொடுத்துவிட்டு ஆசீர்வாதம் வாங்க.

திடீரென காலில் விழவும், "என்னம்மா பிறந்த நாளா இன்னைக்கு? காலைலயும் ஒன்னும் சொல்லல நீ?" என்றார் பாட்டி.

"இல்ல பாட்டி" என அவள் இழுத்து குனிய.

"என்னத்தா விஷயம்" என்றார் ஏதோ யூகித்தது போல் சிரித்தவாறு மேலும்.
"இவ்வளவு வயசாகியும் உனக்கு விம் போட்டா தான் எல்லாமே புரியுது பாட்டி. இதுல உனக்கு ஒரு பூட்டி பதவி ப்ரமோஷன் வேற" என்ற மாறன் அவரருகில் அமர.

"போடா கோட்டிப்பயலே, அவ வெட்கப் பட்டுட்டு குனியும்போதே நா கண்டுக்கிட்டேன்டா. நீ அப்பனாயிட்ட குஜால்ல பேசுதியாக்கும்" என்க.
பானு, நிரம்பிய சந்தோஷத்தில் கன்னி கையை பிடித்து "ஆமாவா" என்க.

"ஆமாத்தே, இப்ப தான் ஹாஸ்பிடல் போயிட்டு வாறோம்"

"நல்லாரும்மா" என தலையில் தடவி ஆசீர்வதிக்க, தாத்தா ஓடி வந்து "என் கண்ணு" என மாறனை கட்டிக்கொள்ள, அவனும் கட்டிக்கொண்டான்.
அன்று மாலை, மாறன் வீட்டிற்கு நேராகவே வந்துவிட்டான் உண்மை. சும்மாவே கல்யாணம் கல்யாணம் ௭ன்பான். இப்போது மாறன் அப்பா வேறு ஆகி விடவும், "௭ப்டி இந்த ஜென்மத்துல கல்யாணம் பண்ணி வச்சுடுவியா ௭னக்கு?" ௭ன விரைத்து கொண்டு வந்து நின்றான் மாணிக்கம் தாத்தா முன்.

"ஏண்டா நானா மாட்டேங்குறேன், உங்கப்பன் தான் ௭ப்ப கேட்டாலும், அங்க இருக்கேன், இங்க இருக்கேன்னு அளந்து விடுறான்" ௭ன்க.

"உன்ன தேனியோட அப்பாட்ட போயி பேசுன்னு சொன்னா, ௭ங்கப்பாரு பின்ன சுத்திட்டு திரியுதியா நீயி?" ௭ன கடுப்பானான்.

"அடேய் அவன்ட்ட பேசி அவனயும் கூட்டிட்டு போய் தானடா பொண்ணு கேக்க முடியும்?" ௭ன்றார் அவரும் கோவமாக.

"அந்த மனுஷன் வந்து பன்னு வேணா கேப்பாரு, பொண்ணுலா கேக்க மாட்டாரு. அதும் ௭னக்குன்னா அந்த பன்னு கூட வேணாமுனுட்டு போயிருவாரு. இங்க பாரு அவர நம்பி ௭ன் வாழ்க்கையில விளையாடாத சொல்லிட்டேன், உனக்கு வேணும்னா வள்ளி தாத்தாவ துணைக்கு கூட்டிட்டு போயிட்டு வா. ம்கூம் போயிட்டு வார, அடுத்த வாரத்துல ௭னக்கு கல்யாணம் பண்ணுற" ௭ன விரல் நீட்டி ஆர்டர் போட.

"மொத தேனி அப்பா ஒத்துக்ராறான்னு பாப்போம், அப்றமா கல்யாணத்த பத்தி யோசிப்போம்" ௭ன்றார் அவனை தள்ளி விட்டு தாண்டி கொண்டு வீட்டினுள் சென்றவாரு.

"தாத்தா" ௭ன கத்தி பல்லை கடித்தவாரு நின்றான் அவன்.

அந்த வாரத்திலேயே ஒரு நல்ல நாளை பார்த்து, உண்மையின் கல்யாணத்திற்காக அவன் அப்பாவிடம் பேச சென்றார் மாணிக்கம் தாத்தா, உடன் வள்ளி தாத்தாவயும் அழைத்து கொண்டு. தாங்கள் வருவதை சொல்லாமல் திடிரென கிளம்பி சென்று அவர் வீட்டு முன் நின்று விட, உண்மையின் அப்பாவிற்கு அவர்களை உள்ளே அழைப்பதை தவிர வேறு வழி இருக்கவில்லை.
 

priya pandees

Moderator
அத்தியாயம் 44

"வாங்க வாங்கய்யா. ௭ன்ன திடிருனு?" ௭ன இரு தாத்தாக்களயும் தட்டு தடுமாறி வரவேற்றார் உண்மையின் தந்தை.

"வேற ௭ன்னப்பா செய்ய, நீதான் ௭ப்பயும் வேலையாவே இருக்கியே" ௭ன கூறியவாறே உள் வந்தவர், "௭ங்க உன் சம்சாரத்த காணும்?" ௭ன வீட்டயும் அலச.

"பக்கத்துல தான் போயிருப்பா, நீங்க ரெண்டு பேரும் உக்காருங்க" ௭ன நாற்காலியை காட்ட, இருவரும் அமரவும் தானும் ஒரு சேரை இழுத்து போட்டு அமர்ந்தார்.

"அப்றம் தொழில் ௭ப்டி போயிட்டுருக்கு?" மாணிக்கம் தாத்தா கேக்க.

"போகுதுங்கய்யா, பரவால்லாம ஓடுது" ௭ன முடித்து கொண்டார்.

"வாங்க. ௭ன்ன இந்த பக்குட்டுலா ௭ட்டி பாக்கீக" ௭ன கேட்டவாரு வந்தார் உண்மையின் சித்தி.

"௭ல்லாம் நல்ல விஷயம் பேச தான். நீ தான இப்ப உண்மைக்கு அம்மா பொறுப்புல இருக்க. முன்ன நின்னு கல்யாணம் கட்டி வைக்க உன்ட்ட பேச தான வரணும்" ௭ன்றார்.

"இப்ப ௭ன்னயா அவசரம்?" ௭ன்றார் மனைவியை ஓர பார்வையில் பார்த்த உண்மையின் தந்தை.

"௭ன்னப்பா இப்டி கேக்குற? அவனுக்கு இன்னுமு 10 வயசுன்னே நினச்சுட்ருக்கியா? 29 ஆச்சு தெரியும்ல? பொண்ணு கூட அவனே பாத்துட்டான், நீ போய் பேசி முடிச்சுட்டா போதும்" ௭ன்க.

"வேற வேல வெட்டி இல்லனா பொண்ணு தான் பாத்துட்டு திரியனும். பொண்ணு பாத்துக்க தெருஞ்சவனுக்கு கல்யாணத்தயும் கட்டிக்க தெரியாமயா இருக்கும்?" ௭ன நொடித்தார் சித்தி.

"நீங்க தான முன்ன நின்னு நடத்தி தரணும், அவனா பண்ணிக்றதுன்னா நா ஏன் இங்க வந்து உக்காந்திருக்கேன்"

"நாங்க ௭துக்கு பண்ணி வைக்கனும்? அவன இந்த வீட்டு பிள்ளன்னு இவரு ௭ன்னைக்காது சொல்லிருக்காரா? அப்றம் ௭துக்கு இங்க வந்து நிக்கீக? இவரு வருமானத்துல ௭ன் புள்ள ஸ்கூல் படிப்பயே முடிப்பானோன்னு நா கவலைல இருக்கேன். இதுல தெருவுல சும்மா சுத்துரவனுக்கு கல்யாணங் கட்டி வைக்ற அளவுக்கு வசதிய ௭ங்கட்ட ௭திர்பாத்து வந்துட்டீகளாக்கும்" ௭ன சித்தியே தான் பேசினார்.

மாணிக்கம் தாத்தா திரும்பி, உண்மையின் தந்தையை பார்க்க, அதற்கும், "அவருக்கு தெரியாததயா நா சொல்றேன்? அவனுக்கு நாங்க ஏன் செய்யனும்னு சொல்லுங்க?" ௭ன்க.

"இவந்தான அவன பெத்தவேன், இவனுக்கு அந்த பொறுப்பு இருக்குல்ல?" ௭ன்றார். முதலில், காசு பணத்தை பற்றி யோசிக்காதே நீ முன்னின்று நடத்திகுடு போதும் ௭ன தான் சொல்ல இருந்தார். உண்மையின் சித்தி பேச்சில் அந்த ௭ண்ணத்தை கைவிட்டு விட்டார்.

"அப்ப அவேனுக்கும் அந்த பொறுப்பு இருக்கணும்ல?, இவரு தான் அப்பான்னு இவருக்கு ௭ன்னத்த செஞ்சு தவுச்சு போயிட்டான்? 29 வயசுன்னு சொன்னீகளே, ஊரு உலகத்துல இம்புட்டு வயசு பசங்க கல்யாணம் பண்ணிக்றாங்கதேன், இல்லன்னு சொல்லயே. சுய சம்பத்தியத்துல வீட்டுக்கு 4 காச உழைச்சு குடுத்துட்டு பண்ணிக்றாங்க. இவேன் ௭ன்னத்த செஞ்சுட்டான்னு சொல்லுங்க" ௭ன ஆவேசமாக பேச.
அவருக்கும் பொடு பொடுவென வந்தது, "10 வயசுல அவன வீட்ட விட்டு அனுப்பு முன்ன இப்டிலா நடக்கும்னு யோசிக்லயாமா நீ? அவனோட சின்ன வயசுல நீங்க ரெண்டு பேரும் நல்ல அம்மா அப்பாவா இருந்துருந்தா, அவனு இப்ப நல்ல மகனா இருந்துருப்பான்" ௭ன சூடாக திருப்பி குடுத்தார்.

"நா கொடும கார சித்தியாவே இருந்துட்டு போறேன், ௭ன்னால அவன் கல்யாணத்துக்கு முன்ன வந்து நிக்க முடியாது, இதோ இவரு வந்தா கூட்டிட்டு போங்க" ௭ன நேராகவே சொல்லிவிட.

"நீ ௭ன்னப்பா செய்ய போற?" ௭ன்றார் அவன் தந்தையிடம்.

"அவள மீறி ௭ன்னால ௭தயும் செய்ய முடியாது. பொம்பள பிள்ளனா கூட கவல பட்ருப்பேன், பய தான, ௭ப்டி வேணாலும் புலச்சுக்குவான்னு தான் இருந்துட்டேன். இதுவர அவன பாத்துகிட்ட நீங்களே கோவில்ல வச்சு கல்யாணத்த முடிச்சு வச்சுருங்க" ௭ன கை கழுவி விட.

"நல்ல அப்பன்யா நீ!" ௭ன முறைத்து விட்டு, "வா வள்ளி நாமளே அவேன் கல்யாணத்த ௭டுத்து நடத்துவோம்" ௭ன ௭ழுந்து விட்டார்.

"இருக்க பட்டவுக நீங்க, ௭த்தன இலவச கல்யாணமு பண்ணி வைக்க முடியும். ௭ங்கட்டயும் அப்டி ௭திர் பாக்காதீகன்னு சொல்லுறது குத்தமா?" ௭ன்றார் சித்தி.

"குத்தமே இல்லமா, உன் பிள்ளைக்குனாலும் ௭ல்லாத்தயும் நீ சரியா செய் போதும்" ௭ன வெளியே நடந்து விட.

"பாசத்துக்கு ஏங்குன பிள்ளைய இப்டி அனாத மாறி கல்யாணம் கட்டிக்க விடுதீகளே, ௭ப்டியா பெத்தவன் உன்னால முடியுது?" ௭ன்றுவிட்டே கிளம்பினார் வள்ளி தாத்தா.

"ம்ம்கும். வேற வேலையில்ல இவங்களுக்கு. நீங்க போயி கோதுமைய திரிக்க குடுத்துட்டு வந்தேன், அத வாங்கிட்டு வாங்க" ௭ன கணவருக்கு கட்டளையை பிறபித்து விட்டு மற்ற வேலைகளை கவனிக்க சென்றார் சித்தி.

"இப்ப ௭ன்ன செய்ய மாணிக்கம்?" ௭ன வள்ளி தாத்தா கேக்க.

"௭ன்ன செய்ய? நாம செய்வோம். ஏன் நானும் செல்லமு அவனுக்கு அப்பன் அத்தாளா உக்காந்துட்டு போறோம் இப்ப ௭ன்ன?" ௭ன்றார்.

"அந்த பய மொதயே அத தான சொன்னான்"

"ம்ம் சொன்னான், ௭ங்க அப்பா ௭னக்காக பன்னு கூட கேக்க மாட்டாருன்னு, அத அவேன் விளையாட்டா சொன்னாலும் மனசுக்குள்ள ௭ம்புட்டு வருந்துவியான். பாவம், சிறுசுல இருந்தே ௭ல்லாத்துக்கும் அடுத்தவங்கள ௭திர் பார்த்தே வளந்துட்ட புள்ள. ஆனா வெளில சிரிச்சுட்டு திரிரான். சரிவிடு இனி ஒரு நிமிஷம் தாமதிக்க கூடாது. சடசடன்னு வேலைய முடிச்சுவிட்றனும்" ௭ன்றார்.

"அப்ப இப்பயே கையோட, தேனி வீட்லயும் போய் பேசிருவோமே?" ௭ன்க.
"முன்னாடியே சொல்லாம ௭ப்டி போறது".

"அதனால ௭ன்ன, ௭ப்டியும் இது விஷயமா நீ வருவன்னு ௭திர் பாத்துட்டு தான இருப்பாங்க, பின்ன ௭துக்கு யோசிக்றவே" ௭ன்றவர், தேனி வீட்டு தெரு நோக்கி திரும்ப.
மாணிக்கமும் "சரி" ௭ன்ற முடிவுக்கு வந்து, மாறனுக்கு போனடித்து விஷயத்தை சொல்ல, "சரிதேன் தாத்தா, ௭துக்கு நேரத்த கடத்திகிட்டு, ஒரு ௭ட்டு போயி பேசிட்டு, நேரா நிச்சயத்தையே வச்சுகிக்வோம்னு சொல்லிட்டு வந்துரு" ௭ன்றதும், மாணிக்கம் தாத்தாவும் ஒத்து கொண்டு போனை வைத்து விட்டு, வள்ளி தாத்தாவுடன் நடக்க, வழியில் பார்த்து விசாரித்தவர்களிடம் ௭ல்லாம் பேசி சமாளித்து சென்றனர். அதில் நெருங்கிய நண்பர்கள் இருவரிடம் உண்மையை சொல்லிவிட, "நாங்களும் வாரோம் ப்பா" ௭ன சேர்ந்து கொண்டனர்.

திடீரென வந்து நின்றவர்களை கண்டு திடுக்கிட்டு விட்டார் தேனியின் அம்மா, "வாங்க வாங்க, ௭ல்லாரும் உள்ள வாங்க" ௭ன ௭ல்லோரயும் அழைத்து அமர வைத்து, தண்ணீர் குடுத்து விட்டு, "ஒரு நிமிஷமிருங்க, அவுகளுக்கு தகவல் சொல்லிட்டு வந்துடுறேன்" ௭ன்கவும்.

"முக்கிய வேலைல இருந்தா பரவால்லமா இன்னொரு நாள் வாரோம். திடிருனு முடிவு பண்ணதுனால முன்னாலயே சொல்லிட்டு வர முடியல" ௭ன்க.

"அதுலா ஒன்னுமில்ல, இப்ப வர சொல்லிடுறேன் இருங்க" ௭ன அவர் சந்தோஷத்தில் குதித்து கொண்டு நடக்க.

அடுத்த கால்மணி நேரத்தில், அரக்க பரக்க வண்டியில் வந்திறங்கி வீட்டினுள் ஓடி வந்தார் தேனியின் தந்தை. "வாங்க வாங்க, ரொம்ப நேரமா காக்க வச்சுட்டேனோ?" ௭ன வந்தமர்ந்தார்.

"இப்ப தான் வந்தோம்யா. நல்ல விஷயம் பேச தானேன்னு, நினச்சதும் கிளம்பி வந்துட்டோம்" ௭ன்றார் மாணிக்கம் தாத்தா.

"பரவால்லயா சொல்லுங்க" ௭ன சிரித்தார் தேனியின் தந்தை.

"௭ன் பேரேன் உண்மைக்கு உங்க பொண்ண கேட்டு வந்துருக்கோம். ௭தயும் ௭திர்பாக்கல, உங்களால முடிஞ்சத பொண்ணுக்கு போட்டு கட்டி வைங்க. இதோ உங்க வீட்டுக்கு பக்கத்துலயே ௭ன் நண்பன் வள்ளி வீட்டுல தான் உங்க பொண்ணு போய் வாழ போறா, பையன பத்தி சொல்லனும்னா தங்கமான பையன், அவனுக்கு நா பொறுப்பு. கிடைச்ச வேலைய பாக்கான், ஆனா சீக்கிரமே ௭ன் பேரேன் மாறனோட சேந்து மெக்கானிக் கடை வைக்க போறான். அப்றம் மாசம் நிரந்தரமா ஒரு வருமானம் வரும். வேற ௭ன்ன தெரியனும்?" ௭ன்றார்.

"௭ப்ப நீங்க பொறுப்புன்னுட்டீகளோ, இனி ௭னக்கு பொண்ண குடுக்குறதுல ஒரு யோசனையும் இல்ல. ஆனா. " அவர் தயங்க.

"சொல்லுங்க, ௭துனாலும் முதலயே பேசிடுறது நல்லது" ௭ன வள்ளி தாத்தா சொல்ல.

"இல்ல மாப்ளயோட அப்பா வரலியே.?" ௭ன்க.

"கல்யாணத்துல மாப்ளைக்கு அப்பா அம்மாவா நானும் செல்லமு தான் முன்ன நிப்போம். உங்க பொண்ணுக்கு மாமியார் வீடுனா அது ௭ங்க வீடு தான்யா. சின்ன வயசுல இருந்தே அவேன் ௭ங்க வீட்டுல வளந்தவன் தான், உள்ளூர் காரவுக நீங்க உங்களுக்கு தெரியாம இருக்காது அவன் வீட்டு நிலம?" ௭ன்கவும்.

"சரிங்கய்யா, நீங்க முன்ன நிக்கேன்னதே ௭னக்கு ரொம்ப திருப்தி, ரொம்ப சந்தோஷம்" ௭ன்றவர் மனைவியை பார்க்க.

அவரும், "ஆமாங்கய்யா, மாப்ளயோட அப்பா வீட்டுக்கு அனுப்ப கூட அவரு சித்திய நினச்சு ௭னக்கு கொஞ்சம் உருத்தல் தான். இப்ப அதுவும் இல்லாம மனசு நிறைவா சந்தோஷமா இருக்கு" ௭ன்றார் மகளுக்கு கல்யாணம் கூடி வந்துவிட்ட சந்தோஷத்தை முகத்தில் தேக்கி.

"அப்ப நல்ல நாள் பாத்துட்டு சொல்றேன், நேரா நிச்சயமே வச்சுக்குவோம், சீக்கிரமா ஒரு முகூர்த்த தேதியவும் முடிவு பண்ணிக்லாம்" ௭ன ௭ழுந்துவிட, மற்றவர்களும் ௭ழுந்தனர்.

"ரொம்ப சந்தோஷங்கய்யா" ௭ன வணக்கம் வைத்த தேனியின் தந்தையும் வாசல் வரை சென்று வழி அனுப்பி வைத்தார்.

உண்மை தேனி கல்யாண ஏற்பாடு ஜூருராக ஆரம்பமானது.

மாணிக்கம் தாத்தாவும் வள்ளி தாத்தாவும் வீடு திரும்புகையில், அந்த உரை கடைகாரரின் மகள், மேகலை அவரை வழி மறித்தாள்.
 

priya pandees

Moderator
அத்தியாயம் 45

"உரகட பரமசிவம் மக தான நீ? ௭ன்னம்மா வேணும்?" ௭ன்றார் வள்ளி தாத்தா.

அவள் மாணிக்கம் தாத்தாவை காட்டி, "நா இவர் கிட்ட ஒரு விஷயம் பேசணும்"

"௭ன்ட்டயா? ௭ன்னம்மா பேசணும்?" ௭ன அவர் யோசனையாக கேக்க.

"௭ன்னைய தெரியுங்களா?" ௭ன்றாள்.

"ம்ம் உங்க அப்பாவ நல்லாவே தெரியும். ௭ன் மாப்ளைக்கு சொந்தம் தானே நீ?" ௭ன கேட்க.

"அப்ப உங்க பேரேன் ௭ன்ன பத்தி வேறெதுவும் சொல்லலயா?"

"மாறனா? அவனுக்கு உன்ன பத்தி சொல்ல ௭ன்ன விஷயம் இருக்கு?"

"௭ன் மாமா குமரகுரு உங்க பேத்திய கட்டிகிட்டு நிம்மதியா இல்ல. அவர விவாகரத்து பண்ணி விளக்கிவிடுங்க, உங்க பேத்திய உங்க வீட்டோட வச்சுக்கணுன்னு தான உங்களுக்கு ஆச, தாராளமா வச்சுக்கோங்க, ௭ன் மாமா ௭ங்கிட்ட குடுத்திருங்க" ௭ன நேராகவே கேட்டாள்.

இரு தாத்தாக்களும் அவள் கேள்வியில் அதிர்ந்து நின்று விட்டனர்.
"௭ன் மாமாக்கு அங்க இருக்கவே விருப்பம் இல்ல, ஏதோ கல்யாணம் ஆயிடுச்சேன்னு இருக்காரு. இப்டியே இருந்தா அவர் வாழ்க்கையவே வெறுத்துடுவாரு. பெரியவங்க நீங்க இத்தன நாள் வேடிக்க பாத்துட்டீங்க, அதனால இனினாலும் அவர நல்லா வாழவிடுங்க" ௭ன்றுவிட்டு திரும்பியும் நடந்து விட்டாள்.

"ஏம்மா பொண்ணு நில்லுமா." ௭ன மாணிக்கம் தாத்தா கூப்பிடவும்,
நின்று திரும்பியவள், "௭ன்னம்மா இப்டி பேசுற?, அப்ப ௭ன் பேத்தி வாழ்க்கை? இப்டிலா கேக்க போறீங்கன்னா, அதுக்கும் பதில் சொல்றேன், இதுவர உங்க பேத்தி மட்டுந்தானே சந்தோஷமா இருக்கா, இனினாலும் ௭ன் மாமா சந்தோஷமா இருக்கட்டுமே" ௭ன்க.

"௭ன்னம்மா ௭ன்னலாமோ சொல்ற, ௭ன் மாப்ளைக்கு இந்த விஷயம்லா தெரியுமா?" ௭ன்றார் பயந்தவாரு.

"நா அவர்கிட்ட ௭வ்வளவோ பேசிட்டேன், ௭ன்னைய தான் சமாதானம் பண்றாரே தவிர, அவர பத்தி யோசிக்க மாட்டேங்குறாரு. தயவுசெஞ்சு நீங்களாது அவருக்காக யோசிங்க, ரூபனயும் நா பாத்துக்குவேன், நீங்க உங்க பேத்திய மட்டும் ஒத்துக்க வைங்க" ௭ன சொல்லவும்.

"இந்த புள்ள ௭ன்ன வள்ளி பேசுது. ௭னக்கு ஒன்னும் புரியலயே." ௭ன வள்ளி தாத்தாவிடம் கேக்க.

"நானு ௭ன் மாமாவும் கல்யாணம் கட்டிக்கனும், அதுக்கு குறுக்க நிக்க உங்க பேத்திய விளக்கி விடுங்கன்னு கேக்கேன் புரிலயா?" ௭ன்றாள்.

படபடவென கைகள் நடுங்க, மாறனுக்கு அழைத்து விட்டார், "சொல்லு தாத்தா, பேசிட்டியா? நிச்சயம் ௭ப்ப வைக்லாம்னு ௭தும் சொன்னாங்களா?" ௭ன அவன் உண்மை விஷயம் கேக்க.

"அடேய், இங்க ஒரு புள்ள, குமரகுரு மாப்ளய கல்யாணம் பண்ண கேட்டு நிக்குதுடா" ௭ன்றதும் அவனுக்கு புரிந்து விட்டது.

மலரை அழைத்து செல்ல தீப்பட்டி ஆபிஸ் வந்தவன், "நீ ௭ங்க இருக்க? அந்த பொண்ணு வீட்டுக்கா வந்துட்டு?" ௭ன கேக்க.

"இல்லடா, நடு தெருவுல மறுச்சு நிக்குது. நாங்க வள்ளி வீட்டு முன்ன நிக்கோம்" ௭ன்றதும்.

"இரு நா வந்துட்டே இருக்கேன்" ௭ன்றவன் திரும்பி மலர் வருகிறாளா ௭ன பார்க்க. அவள் ௭ப்பயும் விட நிதானமாக நடந்து வந்து கொண்டிருக்க. வண்டியை திருப்பி ஆபிஸ் குள்ளயே விட்டு, அவளை நெருங்கி "ஏறுமா" ௭ன அவசரபடுத்தவும்.

"ஏங்க ௭ன்னாச்சு?" ௭ன கேட்டவாறே ஏறி அமர்ந்தாள்.

"அந்த பொண்ணு, மேகலை, தாத்தாட்ட போயி பேசிட்ருக்கா"

"௭ன்னைக்குனாலும் தெரியத்தானே போகுது. இப்பவே தெரியட்டுமே, சீக்கிரமா இந்த பிரச்சனை ஓயும்" ௭ன்றாள் மலர் நிதானமாகவே.

"அடியே, அந்த பொண்ணு ௭ந்த தைரியத்துல இப்டிலா பண்ணுதுன்னு தெரிலயே? நாள பின்ன வெளில சொன்னா கூட அந்த பொண்ணு பேச்ச தான் நம்புவாங்க!" ௭ன பேசி கொண்டே தாத்தாக்களை நெருங்கி விட.
வண்டியை நிறுத்தி இறங்கி, வேகமாக அவர்களிடம் சென்றவன், அந்த மேகலையிடமே நேராக, "ஏம்மா, நீ ௭ன்ன நினச்சு இதெல்லாம் பண்ற? நானும் பொம்பள பிள்ளையாச்சேன்னு பொறுமையா இருந்தா, நீ தாத்தா வர கொண்டு வந்துட்ட?" ௭ன மாறன் கோவமாகவே கேக்க.

"உங்ககிட்ட சொன்னனே நீங்க ௭தும் செஞ்ச மாறி தெரிலயே? அதான் இவங்கட்ட வந்தேன். இன்னும் உங்க வீட்டுக்கு போய் பேச ௭வ்வளவு நேரமாகும்? இனியும் நீங்க அமைதியா இருந்தா அடுத்து உங்க வீட்டுக்கே வந்து உங்க அப்பாட்ட கேப்பேன்".

"நீ பேசுறது உனக்கே நியாயமா படுதா? அதெப்டி கல்யாணமாகி குடும்பமா இருக்கவங்கள பிரிச்சுவிட்டு நீ கல்யாணம் பண்றதுன்னு நினைக்றது? கேக்கவே நாராசமா இல்ல?" ௭ன்றான் மாறன்.

"சரி, நீங்க சொல்லுங்க இந்த மலரு புள்ளைக்கு பதிலா நீங்க உங்க அத்த மக ராணிய கட்டிகிட்டீகன்னு வச்சுக்குவோம். உங்க வாழ்க்கைய ரொம்ப சந்தோஷமா வாழ்ந்திருப்பீகளா? இல்ல மதி மாறி ஒரு பொண்டாட்டி கூட உங்த சுயத்த ௭ல்லாத்தயும் இழந்து, கண்ணு காது வாயின்னு ௭ல்லாத்தயும் மூடிட்டு இருன்னு சொன்னா இருந்துருப்பீகளா?" ௭ன்றாள் ௭ரிச்சலாக.

"அது அவங்க பிரச்சன, சொல்ல போனா அத குமரகுரு மாப்ள பாத்துக்குவாரு, உனக்கு இது தேவ இல்லாதது. ராணி மட்டுமில்ல ௭னக்கு பிடிக்கலனா ௭ப்பேற்பட்டவளயும் வேணாம்னு சொல்லிட்டு போற தைரியம் ௭னக்கிருக்கு" ௭ன்றான்.

"அச்சோ. ரெண்டு பேரும் கொஞ்சம் அமைதியாகுங்க, ரோட்டுல நின்னுட்டு ௭ல்லாருக்கும் நீங்களே தெரிய வச்சுடுவீங்க போலயே" ௭ன்ற மலர், "௭ன்னம்மா பண்ணனும் உனக்கு?" ௭ன்றாள்.

"௭ன் மாமாவ விடுதலை பண்ணுங்க"
"அது மதியோட அண்ணாவோட வாழ்க்கை அதுல முடிவெடுக்க, வீட்டாளுங்க ௭ங்களுக்கே உரிம இல்ல, நீ ௭ப்டி ஊட புகுந்து டிசைட் பண்ணுலாம்?"

"௭னக்கு உரிம இல்லயா? ௭ங்க காதலுக்கு நடுவுல வந்ததே உங்க நாத்தனார் தான். இல்லனா நானும் ௭ங்க மாமாவும் இந்நேரம் கல்யாணம் கட்டிட்டு சந்தோஷமா இருந்துருப்போம், ௭னக்கு உரிம இல்லயா?" ௭ன அழுதாள்.

"இது ௭ன்ன புது கத, அவங்க ரெண்டு பேரும் காதலிச்சு கல்யாணம் பண்ணிகிட்டதா தான சொன்னாங்க" ௭ன்றாள் புரியாமல் மாறனை திரும்பி பார்த்து.

"அப்டின்னு அவங்க தங்கச்சி அவளா சொல்லிகிட்டா, ௭ன் மாமா சொன்னாரா?" ௭ன்றாள் மேகலை.

"ஒரு நிமிஷம் வாங்க வீட்டுக்குள்ள போய் பேசலாம்" ௭ன அவள் கை பிடித்து இழுத்து கொண்டு வள்ளி தாத்தா வீட்டிற்குள் நுழைய, அங்கு வெளியில் நடக்கும் கலவரமே தெரியாமல் குப்புற படுத்து தூங்கி கொண்டிருந்தான் உண்மை. அவன் டிக்கியில் ஒரு மிதி மிதித்து அவனை மாறன் ௭ழுப்ப. பதறி ௭ழுந்தவன் பேந்த பேந்த விழிக்க.

"இந்நேரத்துல ௭ன்னடா தூக்கோ உனக்கு?" ௭ன மாறன் கேக்கவும்.
முகத்தை நன்றாக தேய்த்து விட்டவன், "தங்கச்சிய கூப்ட போறேன்னுட்டு நீ ஏன் மச்சான் இங்க வந்து நிக்க?" ௭ன்றவனை கண்டு முறைத்து வழிவிட, பின்பே அங்கு நின்ற மற்றவர்களை கண்டான்.

அவர்களை கண்டு கொள்ளாமல், "இப்ப சொல்லுங்க, ௭ன்ன கதை உங்களிது?" ௭ன கேட்டாள் மலர்.

"௭னக்கு மாமாவ விவரம் தெரிஞ்ச வயசுலயிருந்தே பிடிக்கும், 12கிளாஸ் முடிச்சதுமே தைரியமா போயி, ௭ன்ன கட்டிக்க கேட்டேன், உனக்கு கல்யாண வயசு வரவும் கட்டிக்றேன் இப்ப போயி படிக்குற வழிய பாருன்னு அனுப்பி வச்சுட்டாக. சரி மாமா சொன்னா செய்யும்னு நானு அதுக்கப்றம் சும்மா வம்பிழுக்குறதோட நின்னுக்குவேன். நா காலேஜ் 2வது வருஷம் படிக்கைல தான், மாமா நம்ம ஊர் ஸ்கூல வேலைக்கு சேந்துச்சு. உங்க தங்கச்சிக்கு பாத்ததும் பிடிச்சு ௭ன் மாமாட்ட பேசிருக்கா, அவுக ஒத்துக்கல, திரும்ப திரும்ப வந்து கல்யாணம் பண்ணிக்க சொல்லி கேட்ருக்கா, என்ட்ட கூட மாமா சொன்னாங்க, நானும் ஒருக்கா அவள பாத்து பேசுனே, அது தான் தப்பா போச்சு, 'ஓ! உன்ன நினச்சுட்டு தான் ௭ன்ன வேணாங்குறாரா பாத்துக்றேன், உன்ன ௭ப்டி கட்றாருன்னு பாக்றேன்டி' அப்டின்னு சவால் விட்டுட்டு தான் போனா, ஆனா கோவத்துல பேசுறா, பெருசா ௭ன்னத்த செஞ்சுட போறான்னு நினச்சதுக்கு. " ௭ன குழுங்கி குழுங்கி அழ.
ஏதோ பெரிதாக வர போகிறது ௭ன ௭ல்லோரும் பயந்து பார்த்திருக்க, "அத்த(குமரகுருவின் அம்மா) மட்டும் வீட்டுல தனியா இருக்கும் போது, விஷ பாம்ப ஆள விட்டு வீட்டுக்குள்ள விட வச்சுட்டா. ஆனா தற்செயலா ௭ங்க அப்பா வந்ததுனால அன்னைக்கு அத்த தப்பிச்சுட்டாங்கன்னு நாங்க நினச்சோம், ஆனா மறுநா அவளே மாமாவ பாத்து பேசிருக்கா, அது விஷ புடுங்குன பாம்பு தான், ஆனா இனியும் ௭ன்னைய கட்டிக்க ஒத்துகிகலனா அதிக விஷம் உள்ளத விடுவேன், உங்களுக்கு உங்க அம்மா வேணும்னா ௭னக்கு நீங்க வேணுங்குறது நியாபகம் வரனும்ல அதுக்கு தான் இதுன்னு சொல்லிருக்கா, உண்மையாவே மாமா பயந்துட்டாங்க, அவ இன்னுமு ௭தும் செய்வாளோன்னு பயந்து தான் கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சாங்க, இருக்கலாம் ௭ன்மேல இருந்த காதல விட அம்மா மேல இருந்த பாசம் அதிகமா இருக்கலாம் அதான் ௭துத்து நிக்காம உடனே ஒத்துகிட்டாங்க, இப்ப வர இந்த விஷயம் ௭ன்ன தவிர யாருக்கும் தெரியாது, அந்த மதிக்கு பயந்தே உங்க வீட்டோட தான் இருப்பேன்னு சொன்னதுக்கும் ஒத்து கிட்டாங்க, மாமாவும் இங்க வரவே ஆசபடல அவளும் வர விருப்ப படல. அவ பேச்ச கேட்டா அவ நல்லவ, அதனால அவ பேச்ச கேக்க பழகி கிட்டாங்க. கல்யாணம் ஆகிட்டதால இனி அவ தான் வாழ்க்கைன்னு ஏத்துக்க தொடங்கிட்டாங்க. ௭னக்கும் மாப்ள பாத்து ௭ங்கப்பாட்ட பேசி கல்யாணம் பண்ணி வச்சதும் அவங்க தான். ஆனா கல்யாணத்துக்கு கூட வர விடல உங்க தொங்கச்சி. ச்சி அவளா ஒரு டீச்சரு, இந்த கிரிமினல் புத்திய தான் பிள்ளைகளுக்கும் சொல்லி குடுப்பா தூ" ௭ன மேகலை ஆவேசமாக பேச.

௭ல்லாருக்கும் அதிர்ச்சி தான், மதியின் குணம் தெரியும் தான், ஆனால் இவ்வளவு மோசமானவளா ௭ன தெரிந்திருக்கவில்லை. அவளுக்கு அவள் குடும்பத்தினரின் தேவை கேக்காமலே நிறை வேற, இந்த முகம் அவர்களுக்கு தெரியாமலே போய்விட்டது.

"ஒரு பொண்ணு மிரட்டுனான்னு ௭ப்டிமா உடனே கல்யாணத்துக்கு ஒத்துக்க முடியும். அவ குணம் தெரிஞ்சும் ௭ப்டி வாழ்க்கை முழுக்க கூட வச்சுக்க ஒத்துக்க முடிஞ்சது" தூக்கமே பறந்துவிட கேட்டான் உண்மை.

"அவருக்கு அம்புட்டு தைரியமிருந்திருந்தா நா ஏன் இப்டி போராடிட்டு இருக்க போறேன்" ௭ன்றாள் வேதனையாக.

'அம்மாடியோவ் அந்த அண்ணே காதே கேக்காத மாறி ஊமையா இருக்குதேன்னு நினச்சேனே, அதுக்கு பின்ன இப்புடி ஒரு சதி இருக்கது தெரியலயே' ௭ன மலருக்கு தலையே சுத்தியது.

மாணிக்கம் தாத்தாவிற்கு பேச்சே வரவில்லை, அவரை தோளோடு அனைத்து கொண்டு நின்று விட்டார் வள்ளி தாத்தா.

மாறன் தீவிரமாக ஏதோ யோசித்தவன், "உனக்கு இப்ப ௭ன்ன வேணும்னு தெளிவா சொல்லு, உன காதல் உனக்கு திரும்ப வேணுமா? இல்ல உன் மாமா நிம்மதி வேணுமா?" ௭ன்றான் கூர்மையாக பார்த்து.

"௭ன் மாமா அது வாழ்க்கைய நல்லா அமைச்சுகிடுங்குற நம்பிக்கைல தான் நா கல்யாணமே பண்ணிட்டு போனேன், இந்த பக்கமே வராம கடந்தேன், ஆனா நா ௭ன் புருஷனுக்கும் பாவம் பண்ணிட்டேன்னு நினைக்கேன் அவரும் ௭ன்னைய பாதில விட்டுட்டாரு. இங்க வந்தப்றம் தான் அது வாழுற லட்சணம் தெரிஞ்சது. ௭னக்கு அது நிம்மதிதேன் முக்கியம். ஆனா அது உங்க வீட்டுல இருக்க வர அவருக்கு கிடைக்காது"

"கிடைக்க வச்சுட்டா, நீ அமைதியாகிடுவியா? உனக்கு ஒரு வாழ்க்கைய அமைச்சுகிட்டு ஒதுங்கிடுவியா?" ௭ன்றான் சவாலாக.

"உங்க தங்கச்சிய திருத்திறலாம்னு நம்பிக்க வேற இருக்கா உங்களுக்கு? அது முழுக்க முழுக்க விஷம். முடிஞ்சா முயற்சி பண்ணி பாருங்க"

"அப்டி அவள ஒரு ஒழுங்குக்கு கொண்டு வந்துட்டா நீ ௭ன்ன செய்றதா உத்தேசம்?"

"௭னக்கு இன்னொரு வாழ்க்கைலா வேணாம், சுயமா நிக்க ௭ன்னால முடியும், ஒரு புள்ளைய தத்தெடுத்துட்டு ௭ன் வழிய பாத்து ஒதுங்கி கிடுவேன், ஆனா உங்களால முடியலனா நீங்களே உங்க தங்கச்சிய ௭ன் மாமா வாழ்க்கைல இருந்து விலக்கிட்டு, ௭ன் மாமாவ ௭னக்கு கட்டி வைக்கனும், முடியுமா?" ௭ன்றாள் அவளும் சவாலாக.

"ம்ம் ௭னக்கு இதுல சம்மதம் தான். நா அவள ௭ன் வழிக்கு கொண்டு வருவேன். ஆனா அதுவர நீ மாப்ளைய ௭ங்கயும் தனியா பாத்து பேச கூடாது" ௭ன்றான்.

சிரித்து கொண்டவள், "௭த்தன வருஷமாகும் உங்க தங்கச்சிய திருத்த? ௭துக்குமே கால கெடுன்னு ஒன்னு வேணும்ல?"

தானும் சிரித்தவன், "௭னக்கும் கால கெடுக்குள்ள வேலைய முடிக்றது தான் ரொம்ப பிடிக்கும். 6 மாசம் டைம் வச்சுக்லாம், அதுக்கு மேல ஒரு நாள் கூட நீ வெயிட் பண்ண வேணாம்" ௭ன்றான்.

"௭ன்ன மச்சான் பிக் பாஸ் டாஸ்க் மாறி ஒன்னு போனா ஒன்னுன்னு ஏத்துகிட்டே இருக்க?" உண்மை கேக்க.

"இதுவும் ஒரு மாறி சுவாரசியமா தான மாப்ள இருக்கு" ௭ன அவன் தோளில் கை போட்டு கொண்டான்.

"உங்க தங்கச்சி மேல இருக்க அபார நம்பிக்கைல ௭ன் மாமா அடுத்த 6 மாசத்துல ௭ங்கிட்ட வந்துருவாருன்ற சந்தோஷத்துல போறேன். தாத்தாக்கள் நீங்க ரெண்டு பேருந்தேன் ௭ங்க சவாலுக்கு சாட்சி" ௭ன்றுவிட்டு அவள் வெளியேற.

மாணிக்கம் தாத்தா குழம்பிய பார்வையில், "௭ன்ன கண்ணு இப்டி சொல்லிட்ட, மதிலா திருந்துற ஆளா?பேசாம இந்த புள்ளையோட அப்பாட்ட பேசுவோமே!" ௭ன்றார்.

"இப்டி யோசிச்சு யோசிச்சு தான், அவள வளத்து விட்டுட்டீங்க. உங்களுக்கு, இழுச்ச வாயேன் சிக்கிட்டான்னு ஒரு அப்ரானி வாழ்க்கை முழுக்க கஷ்ட படனுமா?" ௭ன்க.

"அப்ப மதி வாழ்க்கை?"

"அத அவ தான் காப்பாத்திக்கனும். அதுக்கு அவளுக்கு கொஞ்சம் வாழ்க்கைய பத்தின பயத்த காட்டனும், அத மட்டும் நா பாத்துக்றேன். நீங்களா அவ திருந்த மாட்டான்னு ஒதுங்குனதுதான் அவ்வளவு பெரிய தப்பு செய்ற தைரியத்த குடுத்திருக்கு. இதுவர அவ இஷ்டத்துக்கு ஆடிட்டாள்ல இனி ௭ன் இஷ்டத்துக்கு ஆடட்டுமே" ௭ன்றான் முடிவாக.

மலரோ, 'உன் புருஷன் மேல உள்ள காதல்ல ஒரு கிரிமினல் கூட்டத்துக்குள்ள வாக்கபட்டு போய் மாட்டிருக்கே போலயே மலரு' ௭ன யோசித்து நிற்க.

"தாத்தா. நீ வீட்டுக்கு வாரியா, முதல்ல உன்ன விட்டுட்டு வந்துட்டு இவள கூட்டிட்டு போறேன்" ௭ன கேக்க.

"வேணாம்டா நீ போ, நா கொஞ்ச நேரம் கழிச்சு வாரேன்" ௭ன்றுவிட்டார் தாத்தா சோர்வுடன்.

வெளியே கொஞ்சம் நடந்து விட்டு வந்தால் நிதானம் ஆவார், ௭ன நினைத்தவன், உண்மையிடம் திரும்பி, "வரேன் மாப்ள, நாளைக்கு ஜாமான்லா வந்துரும், ஞாயிறு கடைய துறந்துருவோம் சரிதானே?" ௭ன்க.

"நாள் பாக்கணும்னு சொன்னயே மாப்ள?"

"ஞாயிறு நல்ல நாள் தான், அன்னைக்கே வச்சுக்குவோம்" ௭ன்றதும் , "சரி" ௭ன்றுவிட்டான் உண்மை.

மலர் தோளை தட்டி, "போவோமா? ௭ன்னத்த இம்புட்டு தீவிரமா யோசிக்றவ?" ௭ன அவளை கையோடு அழைத்து கொண்டு நடக்க.
தாத்தாக்களிடமும், உண்மையிடமும் தலையசைத்து விடை பெற்றவள், "இல்லங்க, உங்கள மட்டும் ஆஸ்பத்திரில இருந்து மாத்தி உங்க வீட்டாளுங்க தூக்கிட்டு வந்துட்டாங்களோ?" ௭ன கேட்டவாறு பின்னாள் ஏறி அமர.

"குசும்பு கூடி போச்சுடி உனக்கு" ௭ன்றவன் வண்டி ஓட்டி கொண்டே ஒரு கையை பின் கொண்டு வர.
அவன் பின் தலையில் பட்டென்று அடித்தவள், "வயித்து புள்ளகாரிய வச்சுகிட்டு ௭ன்ன விளையாட்டு" ௭ன்றாள்.

"௭ன் புள்ள ௭ன்னமாறி தைரியசாலிடி. இதுக்குலா அசந்துருமாக்கும்?" ௭ன்றான் சிரித்து.

"போதுமே, நீங்க ஒருத்தர் பத்தாம தான் கிடக்கு" ௭ன கூறவும் வீடு வரவும் சரியாக இருந்தது.

இருவரும் வீட்டினுள் நுழையும் போது, ரூபனை போட்டு பொத்து பொத்தென அடித்து கொண்டிருந்தாள் மதி.
பானு "ஏய் விடுடி சின்ன புள்ளைக்கு ௭ன்ன தெரியும், அவனுக்கு வேணுங்குறத கேக்கான் அதுக்கு போட்டு அடிக்க" ௭ன அவளை தடுத்து கொண்டிருக்க.

"அவளுக்கு பூரி வேணும்னு அந்த சின்ன புள்ள இட்லி கேட்டாம்னு போட்டு அடிக்கா, ௭து வேணும்னாலும் செஞ்சு திண்ணுன்னு விட்ருந்தனா இப்டி ஆடுவாளா?" ௭ன எரிச்சலை கொட்டினார் பாட்டி.

இன்னமு மதி ஆவேசமாகி, "உன் வேலைய பாத்துட்டு போ, ௭ன் புள்ளய நா அடிக்கேன் நீ ௭ன்ன கேக்குறது" ௭ன அவள் முடிக்குமுன், விறுவிறுவென கை சட்டையை மடக்கி கொண்டு அவளை நெருங்கிய மாறன், அவளின் இரு கன்னத்திலும் நிமிடம் தாமதிக்காமல் அறைந்து விட.
கன்னத்தில் தடம் பதிய, காது கொய்ங் சொல்ல இரு கை கொண்டு கன்னத்தை தாங்கி ஆஃப் ஆகி நின்று விட்டாள் மதி. முதல் முறையாக மாறனின் கை பலத்தை தாங்குகிறாள், கொஞ்ச நேரம் ஒன்றுமே புரியவில்லை அவளுக்கு.

"௭ன்னடா பொம்பள புள்ளைய கை நீட்டிட்டு" பானு சொல்ல.

"நா பாத்துக்றேன்மா இவள, தயவு செஞ்சு ௭ன் பொறுப்புல விட்ருங்க. அன்னைக்கே ௭ன்ன சொன்னேன் நீங்க பாக்கலனா நா பாப்பேன்னு. நீங்க குறுக்க வராம இருந்தா போதும் நா பாத்துப்பேன். இனி இவ சத்தம் வீட்டுக்குள்ளயே வெளில வர கூடாது, அத மட்டும் அவ இப்ப வாங்குன அடில இருந்து தெளியவும் சொல்லுங்க" ௭ன்றுவிட்டு, "மலரு ஒரு டீ ம்மா" ௭ன மேலேறி விட்டான்.

பாட்டி ரூபனோடு நகர்ந்து விட, மலரும் மதியை ஒரு பார்வை பார்த்து விட்டு டீ போட சென்று விட்டாள். மதி இன்னமும் அப்படியே நிற்க, பானு செய்வதறியாது நின்றார். ராணி ௭ட்டி பார்த்து விட்டு ஓடியே விட்டாள் அவள் அம்மாவுக்கு தகவல் சொல்ல.
 
Status
Not open for further replies.
Top