எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

உயிராய் உணர்வாய்!

அத்தியாயம் 1



"மனசோ இப்போ தத்தியடிக்குது

மாமன் நடைக்கு மத்தளம் டும் டும்"



என்கிற பாடல் ஒலித்து கொண்டு இருந்தது.



"போதும்.. போதும் டி எத்தனை தடவை இதே பாட்ட போட்டு எங்க காது ஜவ்வை கிழிப்பை?" என்று ஆதி கத்த, "ஹலோ, இதெல்லாம் வெடிங் ஜிட்டர்ஸ்... அவசர குடுக்க மாதிரி கல்யாணம் பண்ண உங்களுக்கு எங்க இருந்து இதெல்லாம் தெரிய போகுது" என்று ஜானவி அவனுக்கு பதில் பேச, "ஆமா மா, நாங்க அவசர குடுக்கை தான்... மேடம் ரொம்ப ஸ்லோ...பாவம் அந்த பயம் அர்ஜுன் சான்ஸ் கிடைக்கும் போதெல்லாம் அவன் வாய கடிச்சி வச்சிருக்க நீ" என்று சிவம் சொல்லவும், "அப்படி சொல்லு டா என் செல்ல குட்டி" என்று சொல்லி ஆதி அவனின் கன்னத்தில் முத்தம் கொடுத்தான்.



சிவமோ அவனை பார்த்து, "டேய் லூசு பையலே! எத்தனை தடவை சொல்லுறது எனக்கு கிஸ் கொடுக்காதே! இதை பார்த்துட்டு ஸ்ருஷ்டி வேற, உங்க மேல எனக்கு டவுட்டா இருக்குன்னு சொல்லுறா டா" என்று சொல்ல, ஆருஷோ, "டவுட்டே வேணாம், நீயும் அவனும் ஒண்ணுக்குள்ள ஒன்னுன்னு சொல்லு" என்றதும் அவனின் மேல் அருகில் இருந்த பந்தை அடித்து இருந்தான் சிவம்.



"இந்த சடங்கெல்லாம் தேவையா?" என்று கேட்டுக்கொண்டே ஆதர்ஷ் வந்து அமர, "இத அப்படியே போய் நம்ப தாய்குலத்துக்கிட்ட கேளு பார்ப்போம்" என்று ஆருஷ் சொன்னதும், ஆதர்ஷ் வாயை தான் மூடிக்கொண்டான்.



பேச முடியாது, பேசினால் அதற்கும் வாங்கி கட்டி கொள்வான்.



"இப்போல்லாம் நம்ப ஆது அடங்கிட்டான்" என்கிற சிவமாய் பார்த்து, "சாந்தினி அடக்கிட்டான்னு சொல்லு" என்று ஆதி சொல்லவும், இருவரும் ஹைபை கொடுத்து கொண்டனர்.



"சிவுவ ரொம்ப மிஸ் பண்றேன்" என்று ஆருஷ் சொல்ல, "அப்போ வா போய் பார்த்துட்டு வரலாம்" என்று ஆதி முதல் நபராக எழுந்து கொள்ள, "யாழ் வீட்டுக்கு போனா காலை உடைச்சி கைல கொடுத்துருவேன் பார்த்துக்கோ" என்று வித்யா சொல்லவும், எழுந்தவன் அப்படியே அமர்ந்து விட்டான்.



யாழின் பண்ணை வீட்டில் தான் மும்பை மக்கள் அனைவரும் இருந்தார்கள். ஆனால் அவர்களின் துணை அனைவரும் தான் யாழின் வீட்டிலே இருந்து கொண்டார்கள்.



தாலி சார்த்த வேண்டும் என்று கொற்றவை அவர்கள் மூவருக்கும் வேண்டுதல் வைத்து இருக்க, அது வரை இவர்கள் பிரிந்து இருக்கட்டும் என்று பெரியவர்கள் சொல்லி விட்டார்கள்.



முழுதாக இருபத்தி மணி நான்கு நேரம் அவர்களின் துணை இல்லாமல் இருந்ததற்கு தான் இந்த அக்கப்போர் நடக்கிறது.



"ஏன் டா இப்படி அலையிற?" என்று சிவம் கேட்க, "யாரு நான் அலையிறேனா? இந்த ஆது நேத்து என்ன பன்னானு தெரியுமா?" என்று ஆதி ஏதோ சொல்ல துவங்க, "என்ன பண்ணான்?" என்று சிவம் ஆர்வமாக கேட்க, ஆருஷும் நெருங்கி வர, "டேய் ஆதி" என்று ஆதர்ஷ் ஆரம்பிக்கும் போதே, "இவன் சாந்தினியை நைட் வர சொல்லி, வைக்கோல் குவிச்சு இருக்கே, அந்த இடத்துக்கு கூட்டிட்டு போனான் டா" என்று போட்டு கொடுக்க, "டேய் நீங்க நினைக்கிற மாதிரி எல்லாம் ஒன்னும் இல்ல டா... ஒரு டிஸ்கஷன்" என்று அவன் பிடரியை வருடி கொண்டே சொல்ல, "அது என்ன காலையில பண்ண முடியாத டிஸ்கஷன், நைட் தான் பண்ணி ஆகணுமா?" என்று ஆருஷ் புருவம் உயர்த்தி கேட்க, ஆதர்ஷனோ அவர்களை பார்த்து, "இங்க பாருங்க டா நான் வைக்கோல்க்கு இல்ல வியட்நாமுக்கு கூட கூட்டிட்டு போவேன். என் பொண்டாட்டி.. எனக்கு சாமர்த்தியம் இருக்கு.. உங்களுக்கு இருந்தா நீங்களும் கூட்டிட்டு போங்க... வந்துட்டானுங்க" என்று அவன் சொல்லி முடிக்கும் போதே உள்ளே வந்தான் வெற்றி.



"வாங்க மாப்பிள்ளை" என்று வாய் நிறைய கொற்றவை அழைக்கவும், "ஹை மாமா" என்று ஜானவியும் துள்ளி குதித்து கொண்டு அவனின் அருகில் செல்ல, அவனும் புன்னகையுடன் அவர்களிடம் பேச துவங்கினான்.



"எப்படி இருக்கீங்க அத்தை?" என்று அவன் கேட்க, "இத கேட்க தான் வந்தியா டா?" என்கிற ஆதர்ஷனை பார்த்து, "இல்ல உன்னை தான் விருந்துக்கு கூப்பிட வந்தேன்" என்றான்.



ஆதர்ஷின் கண்கள் விரிந்தன.



"ம்ம்.. உன்னை தான்... உனக்கு தான் இப்போ புதுசா கல்யாணாம் நடந்து இருக்கு..இவனுங்க எல்லாருக்கும் தான் கல்யாணம் ஆகி குட்டியோட இருக்காங்களே" என்று அவன் முடிக்கும் முதல், "டேய் நாங்க குட்டியோட இருக்கும் அவன் அஞ்சு வயசு புள்ளைங்களோட இருக்கான்" என்கிற ஆதியை பார்த்து, "ஆனா இப்போ தானே கல்யாணம் பண்ணான்" என்று முடித்து இருந்தான்.



"ஆது ஒரு சரித்திரம் படைச்சிட்ட டா நீ! குழந்தை, காதல், கல்யாணம்" என்று சிவம் சொல்ல, "குழந்தை முதல் கல்யாணம் வரை" என்று ஆருஷ் சொல்லவும், வெற்றியும் சிரித்து விட்டான்.



"உனக்கு குளுகுளுனு இருக்குமே" என்று வெற்றியை பார்த்து ஆதர்ஷ் சொல்லவும், "மாமா விருந்துல என்ன எல்லாம் இருக்கும்?" என்று சாப்பாட்டை பற்றி ஜானவி கேட்க, "உன்ன அர்ஜுன் சோத்து மூட்டைன்னு சொல்றதுல தப்பே இல்ல டி" என்று ஆதி சொல்ல, "அப்பா" என்று அவள் கத்த, நால்வரும் அங்கிருந்து ஓடிவிட்டனர்.



நேற்று தான் நால்வரும் ஜானவி சாப்பிடும் போது, நாலு அண்ணாக்களும் அவளை வைத்து செய்ய, அவள் அப்பா என்று அழைத்தவுடன், ருத்ரன் அவர்கள் நால்வரையும் வெளுத்து வாங்கி விட்டார்.



மீண்டும் அவரிடம் திட்டுவாங்க அவர்கள் விரும்பவில்லை.



அவளின் தலையில் கொட்டிய கொற்றவை தான், "என்ன டி உங்க அப்பாவை வச்சி மிரட்டுறியா?" என்று கேட்க, "இங்க பாருங்க நீங்க ரொம்ப உங்க பசங்களுக்கு சப்போர்ட் பண்றீங்க" என்று சொல்லிவிட்டு, "பை மாமா" என்று வெற்றியை பார்த்து சொல்லி சென்று விட்டாள்.



"எல்லாரும் மதியம் வந்திருங்க அத்தை" என்று அவன் சொல்லவும், "எப்படி பா எல்லாமே தனியா சம்மந்தி செய்வாங்க? நாங்களும் வரோம்" என்று வைஷ்ணவி சொல்ல, "இல்ல அத்தை அம்மா கூட தான் அன்னம் அத்தை, சித்தி, தளிர், ஸ்ருஷ்டி, அழகு, மது, சாந்தினி இருக்காங்களே சமாளிச்சிக்குவாங்க" என்றவனை பார்த்து, "அதெல்லாம் பரவால்ல நாங்களும் வரோம் மாப்பிள்ளை" என்றவர்கள் ஒரு மணி நேரம் கழித்து வெற்றியின் வீட்டையும் அடைந்து விட்டார்கள்.



வீடே ஜெஜெ என்று இருந்தது.



"தாத்தா தாத்தா எனக்கு பஞ்சு மிட்டாய் வேணும். தாத்தா தாத்தா எனக்கு நுங்கு வேணும்" என்று ஒரு பக்கம் லக்ஷிதும் மறுபக்கம் லயனிக்காவும் சிதம்பரத்தின் பின்னால் சுற்றி கொண்டு இருந்தனர்.



"இப்போ நுங்கு சாப்பிடுங்க.. சாயங்காலம் பஞ்சுமிட்டாய் சாப்பிடலாம்" என்றவர் அவர்களுக்கு நுங்கு ஊட்ட, அப்போது தான் உள்ளே நுழைந்தார்கள் அனைவரும்.



"அப்பா" என்று ஆதியிடம் லயனிக்கா ஓட, தளிர் வெளியே வரவும், "ப்பா ப்பா" என்று சிவுவும் ஆதியிடம் தான் சென்றாள்.



"அது என்ன டா நீயும் உன் அப்பா மாதிரியே எல்லா பொண்ணுங்களை உன் பக்கம் இழுத்து வச்சி இருக்க?" என்று விஷ்ணு கேட்க, ,"டாலேண்ட் டாடி" என்று சொன்னவன் ஒரு பக்கம் சிவுவையும் மறுபக்கம் லயாவையும் தூக்கி கொண்டான்.



ஷ்ரேயசுடன் வந்த ஸ்ருஷ்டியிடம் இருந்து அவனை வாங்கிய ஆதர்ஷ், "நான் இவனை வச்சிக்குறேன். டேய் குட்டி பையா" என்றதும் அவனும் சிரித்தான்.



"எல்லாரும் வெங்காயம் வெட்டுங்க" என்று அழகு ஆண்களுக்கு கொடுத்து விட்டு செல்ல, அவர்களும் ஒருவரை ஒருவர் பார்த்து விட்டு, வெங்கையாம் வெட்ட ஆரம்பித்தனர்.



அனைத்தையும் வெட்டி முடித்த பிறகு சிரித்து நேரம் காற்று வாங்க, பால்கனியில் நின்று இருந்தார்கள்.



ஆதர்ஷ், ஆருஷ் மற்றும் ஆதி தான் பேசி கொண்டு இருந்தார்கள்.



அங்கு வந்த தளிரோ, "மாமா உங்களுக்கு மீன் குழம்பு வேணுமா? இல்ல சிக்கன் குழம்பு வேணுமா?", என்று கேட்க, அவள் ஆதர்ஷனை தானே மாமா என்று கேட்பாள்.



"மீன் குழம்பு தான் மா", என்றவன் சொல்ல, அவளும், "சரிங்க மாமா", என்று சொல்லி சென்று விட்டாள்.



"டேய்! அது என்ன உன்ன மட்டும் வந்து கேட்டுட்டு போறா? நாங்க எல்லாம் கண்ணுக்கு தெரியலையா?", என்று ஆதி கேட்கவும், அங்கே வந்தாள் யாழ்.



"மாமா உங்களுக்கு சுறா புட்டு வேணுமா? இல்ல முட்டை வறுவல் வேணுமா?", என்று அவள் கேட்க, "நீ எதுக்கு மா மேல வந்த? இப்போ தானே குழந்தை பிறந்து இரண்டு மாசம் ஆகுது.. எனக்கு எதுவா இருந்தாலும் ஓகே.. நீ போய் ரெஸ்ட் எடு", என்று சொல்லவும், யாழ் செல்ல போக, "ஹே நில்லு டி.. ஏன் டி... அவன் பக்கத்துல நாங்க இரண்டு பேரு இவளோ பெரிய சைஸ்ல நின்னுகிட்டு இருக்கோம்.. நானும் பார்க்குறேன்.. வரவ எல்லாம் அவனுக்கு என்ன வேணும்னு கேக்குறீங்க.. என்னையும் இவனையும் பார்த்தா எப்படி டி தெரியுது?", என்று ஆதி அவளிடம் கேட்க, "ம்கூம்.. உங்க இரண்டு பேருக்கும் சோறு போடுறதே அதிகம்", என்று சொல்லிவிட்டு கழுத்தை நொடித்து கொண்டு சென்று விட்டாள்.



ஆருஷ் ஆதியை முறைக்க, " எனக்கு நியாயம் கேட்க சொல்லி நான் கேட்டேனா டா? உன் பொண்டாட்டி உன்ன அசிங்க படுத்துனது இல்லாம என்னையும் சேர்த்து செஞ்சிட்டு போறா", என்றவனை பார்த்து ஆதர்ஷ் தான் சிரித்து கொண்டு இருந்தான்.



"இதெல்லாம் என்ன ஓர வஞ்சனை?" என்று ஆதி கத்தி கொண்டு இருக்கும் போதே, "அவன் தானே புது மாப்பிள்ளை" என்று வெற்றியும் வர, "அவன் புது மாப்பிள்ளையா? அவனுக்கு அஞ்சு வயசுல பிள்ளை இருக்கு டா... ஏன் டா எங்களை சோதிக்குறிங்க?" என்று ஆதி கேட்டுக்கொண்டே வரவும், அனைவருக்கும் உணவு பரிமாற்ற பட்டது.



உண்மையை சொல்ல வேண்டும் என்றால், ஆதர்ஷுக்கு மட்டும் அல்ல, ஆதி, ஆருஷ் மற்றும் சிவமிற்கும் பிடித்த அனைத்து உணவுகளையும் அவர்கள் செய்து தான் இருந்தார்கள்.



ஆதிக்கு மிகவும் பிடித்த மட்டன் குழம்பு வேறு இருக்க, அவனோ அதை ருசித்து கொண்டே, "அட அட அட.. இதை யாரு செஞ்சாங்களோ அவங்களுக்கு தங்கத்துல வளையல் செஞ்சி போடணும்" என்று அவன் சொல்ல, பெண்கள் அனைவரும் சிரித்து விட்டனர்.



"ஏன் சிரிக்கிறீங்க?" என்றவனை பார்த்து, அவர்கள் யார் அதை செய்தது என்று சொல்ல, அவனின் கண்கள் விரிந்தன.
 

அத்தியாயம் 2



"தங்கத்துல வளையல் வேணாம், தங்கக்காப்பு போடுங்க ஆதி... எங்க அண்ணாக்கு" என்று மாறனின் அருகில் இருந்து யாழ் சொல்ல, ஆதியின் கண்கள் விரிந்தன.



"இந்த மலைமாடுவா இத சமைச்சது?" என்று அவன் மாறனை பார்த்து வினவ, "யாரு டா மலைமாடு? நீயும் உன் அண்ணங்களும் தான் பார்க்க தேவாங்கு மாதிரி இருக்கீங்க" என்று மாறன் கத்த, "மாறா" என்று காத்தியாயனி குரல் எழுப்ப, "அம்மா ப்ளீஸ், இந்த மருமகனுக்கு மரியாதையை கொடு, மாங்காய் கொடுன்னுலாம் சொல்லாதீங்க" என்று அவன் பற்களை கடித்து கொண்டு பேச, "மாங்காய் நீ எனக்கு கொடுக்க வேண்டாம் மச்சான், நான் உன் தங்கச்சிக்கு கொடுக்குறேன்" என்று அவன் கண் அடிக்க, "இவனை தான் உனக்கு பிடிச்சிருக்கா? உனக்கு வேற நல்ல மாப்பிள்ளையா நான் பார்க்குறேன் டி" என்று யாழை பார்த்து அவன் சொல்லவும், யாழோ பாவமாக முகத்தை வைத்து கொள்ள, "டேய் மலைமாடு, என் பொண்டாட்டிக்கு நீ மாப்பிள்ளை பாக்கறியா, நீ செஞ்ச மட்டன் மேல சாத்தியமா சொல்றேன் டா, இதுக்கெல்லாம் சேர்த்து என் அழகு தங்கச்சி உன்ன பழி வாங்குவா" என்று ஆதி அழகுவை பார்க்க, அவளோ, "நீங்க ஒன்னும் கவலை படாதீங்க அண்ணா, இந்த மாறனை வச்சி செய்றேன்" என்று அவனுடன் சேர்ந்து கொண்டாள்.



ஆதர்ஷும் ஆருஷும் ஆதியை தான் முறைத்து கொண்டு இருந்தார்கள்.



"நீங்க ஏன் டா என்ன முறைக்குறிங்க?" என்று அவன் மட்டனை உரிந்து கொண்டே கேட்க, அவர்களோ, "நீ வாய திறந்த நாங்களே உன்ன இங்க புதைச்சிருவோம். கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி உன் பொண்டாட்டி என்னை திட்டுறா... இப்போ என்னடானா உன் மச்சான் எங்களை தேவாங்குனு சொல்றான். எல்லாம் உன்னால தான் டா" என்று ஆருஷ் சொல்ல, "இல்லனா மட்டும் என்ன லியனார்டோ டி காப்ரியோன்னு நினைப்பா?" என்று அவனது இலையில் சாதம் பாரிமாறிக்கொண்டே தளிர் கேட்க, ஆதி சிரித்து விட்டான்.



"எனக்கு வில்லன் வெளிய வேணாம் டி.. நீ ஒருத்தி போதும்" என்று சொன்னவன் சாப்பிட துவங்க, "இந்த பைத்தியக்கார கும்பல் கிட்ட வந்து நான் மாட்டிகிட்டு படுற பாடு இருக்கே ஐயோ ஐயோ ஐயோ" என்று சிவம் வாய்விட்டே புலம்பினான்.



"ஆமா சிவம் நான் கூட கேட்கணும்னு நினைச்சேன், எப்படி இந்த மூணு குரங்கு கிட்டையும் நீ மாட்டுன?" என்று சாந்தினி அவனை பார்த்து கேட்கவும், "ஹே யாரு டி குரங்கு? அந்த குரங்குக்கு தான் நீங்க வாக்கு பட்டு இருக்கீங்க" என்று ஆதர்ஷ் கத்தவும், "இதுக்கு பேரு தான் குரங்கு கைல பூ மாலை" என்று முடித்து என்னவோ ஜானவி தான்.



"ஹே, நீ எங்க தங்கச்சி டி நினைவு இருக்கா?" என்று ஆருஷ் கத்த, "குரங்குக்கு தானே குரங்கை பத்தி தெரியும்" என்று அர்ஜுன் சொல்ல, "அர்ஜுன், நான் உங்க ஆளுக்கு சப்போர்ட் பண்ணா, நீ என்னையவே வச்சி செய்ற" என்று அவள் பேசும்போதே, அவளுக்கு இரும்பல் வர, மாறன் தான் அவளுக்கு தண்ணீர் எடுத்து வந்து கொடுத்தான்.



அவளோ அவனிடம் இருந்து தண்ணீர் வாங்கி பருகியவள், வெற்றியை பார்த்து, "மாமா நீங்க எனக்கு துரோகம் பண்ணிட்டீங்க" என்று சொல்லவும், வெற்றியின் கண்கள் விரிந்தன.



"நான் என்னமா உனக்கு துரோகம் பண்ணேன்?" என்றவனை பார்த்து, "பின்ன என்னை கடத்த ஏன் இந்த முசுடுவை அனுப்புனீங்க! மாறன் மாமாவை அனுப்பி இருக்கலாம்ல... நான் மாறன் மாமாவை கரெக்ட் பண்ணி இந்நேரம் பிள்ளையே பெத்து இருப்பேன்" என்று அவள் சொல்லி முடிக்கவும், இரும்புவது மாறனின் முறை ஆனது.



"ஹலோ, எக்சிகியூஸ் மீ! அது என் ஆளு" என்று அழகு அவளின் முன் வந்து நிற்க, "இருக்கட்டும், நான் சைட் அடிச்சிக்குறேன். நீயும் வேணா என் ஆள சைட் அடிச்சிக்கோ. நம்ப சிஸ்டேர்ஸ் தானே முறைப்படி ஆவோம்" என்று ஜானவி பேச, அங்கு சுற்றி இருந்த அனைவர்க்கும் அய்யோடா என்று ஆனது.



அவளின் வாயை பொத்திய அர்ஜுனோ, "போதும் டி முடியல.. எல்லாரும் பாவம். நீ பேசுறத எல்லாம் கேட்க தெம்பு இல்ல... நீ வா உனக்கு நான் சாப்பாடு போடுறேன். அப்போ தான் உன் வாய் மூடும்" என்றவன் வலுக்கட்டாயமாக அவளை இழுத்து கொண்டு சென்று சாப்பிடவும் வைத்து விட்டான்.



அனைவரும் பின் சாப்பிட்டு முடிய, "நாங்க சாப்பிடணும்" என்று பெண்கள் சாப்பிட அமர்ந்து விட்டார்கள்.



வெற்றி, மாறன், அர்ஜுன் அப்போது தான் சாப்பிட அமர, ஆதியும் ஆதர்ஷனும் அவர்கள் அனைவருக்கும் பரிமாறுவதாக சொல்லிவிட்டார்கள்.



ஜானவியும் அகல்யாவும் இருந்து கொள்ள, லக்ஷித் லயனிக்கா விளையாட சென்று விட்டார்கள்.



சிவயாழினி மற்றும் ஸ்ரேயஸை ஆருஷ் பார்த்து கொள்வதாக சொல்லி விட்டான்.



தன் தத்தி தத்தி நடக்கும் மகளை ரசித்து கொண்டிருந்தான் ஆருஷ். அழகு தேவதை அவள். அவனின் இளவரசி. அவனின் உத்தரத்தில் உதித்த சிவயாழினி அவள்!



அருகில் சிவமின் மகனும் விளையாடிக்கொண்டு இருந்தான். ஒரு வயது பிள்ளைகள் தான்.



அவர்களையே அவன் பார்த்து கொண்டிருக்க, "போதும் டா கண்ணு வெளிய வந்திற போகுது", என்று அவனின் அருகே வந்தான் சிவம்.



அவனை முறைத்தவன், "என் பொண்ணு... நான் பாக்குறேன்", என்று சொல்லும் போதே, "அதுக்குன்னு நீயே கண்ணு வச்சிருவ போலயே", என்று சொல்லிக்கொண்டே அவிரனும் அவர்கள் அருகில் வந்தான்.



"என்னடா கல்யாண மாப்பிளை ஒரே குஷியோ?", என்று அவனின் தோளில் கைபோட்டிருந்தான் சிவம்.



"என்னத்த குஷி என் வயசுதான் உங்க ரெண்டு பேருக்கும் உங்களுக்கு ஒரு வயசுல குழந்தைங்க இருக்கு நான் இன்னும் கன்னியே கழியல டா", என்று பெருமூச்சு விட்டு கொண்டு சொல்ல, "கன்னி கழியர்த்துக்கு எதுக்கு டா கல்யாணம் ஆகணும்?", என்று கேட்டு கண் சிமிட்டினான் ஆருஷ்.



"டேய் நான் என்ன உங்கள மாறியா? என் மாமாக்கு தெரிஞ்சிது மதுவை கண்ல கூட காட்ட மாட்டாரு அப்பறோம்", என்று சொல்லும்போதே, "டேய் என் பொண்ண என்ன டா பண்ற?", என்று சொல்லிக்கொண்டே சிவமின் மகன் ஷ்ரேயஸின் அருகில் சென்று இருந்தான் ஆருஷ்.



"டேய் எதுக்கு டா கத்துற?", என்று கேட்டுக்கொண்டே சிவமும் அவன் அருகில் செல்ல, "உன் மகன் என் பொண்ண கிஸ் பன்றான்", என்று சொல்லவும், "ச்ச ஒரு வயசு பையன் கூட கிஸ் பன்றான் எனக்கே அவமானமா இருக்கு", என்று நெற்றியை நீவி கொண்டான் அவிரன்.



சிவமோ, "டேய் ஒரு வயசு குழந்தைக்கு என்ன டா தெரியும்?", என்று கேட்க, "நீ தான் ட்ரைனிங் குடுக்குற, என் பொண்டாட்டி என்னடானா என் பிரென்ட் என் பிரென்ட்னு உருகுறா, இப்போ என் பொண்ண உன் மகன் மயக்க பாக்குறான். அப்பனும் மகனும் சேர்ந்து என் வாழ்க்கைல கும்மி அடிக்க பாக்குறீங்க", என்று சொல்லிக்கொண்டே சிவயாழினியை தூக்க, "ரே ரே", என்று அவள் அழ ஆரம்பித்து விட்டாள்.



ஷ்ரேயஸ் என்ன நினைத்தானோ, ஆருஷின் காலை அவன் நறுக்கென்று கடிக்க, "ஆஹ்ஹ்ஹ்", என்று அவன் அலறலில், ஸ்ரேயஸை தூக்கி இருந்தான் சிவம்.



"டேய் இப்படி எல்லாம் கடிக்க கூடாது அப்படியே அவங்க அம்மா மாறி பன்றான்", என்று அவன் நொடித்து கொள்ள, "டேய் நீயும் நிறைய கடி வாங்கிற்க போல", என்று அவிரன் கேட்க, "வெளிய சொன்னா வெட்க கேடு, கடி மட்டும் இல்ல…. அடிப்பா டா அதுவும் கைல எது கிடைச்சாலும் அதுலயே", என்று அவன் சொல்லவும், "மச்சான் பாவம் டா நீ", என்று அவன் சொல்லும் போதே மேலும் அழுதாள் சிவயாழினி.



"என்ன செல்லம்", என்று ஆருஷ் கொஞ்சவும், "பப்பா ரே", என்று ஸ்ரேயஸை காட்ட, ஷ்ரேயஸும் சிவமின் கைகளில் திமிறினான்.



"சி சி", என்று அவன் அவளிடம் செல்ல முற்பட, "பாரு டா உன் புள்ளய இப்பவே மயக்க பாக்குறான்", என்று மீதும் ஆருஷ் சண்டைக்கு நிற்க, சிவமோ, "டேய் மகனே கொஞ்சம் அமைதியா இரு டா உன் மாமனார் அப்படி போனதும் அவன் பொண்ண கரெக்ட் பண்ணிரலாம்", என்று சொன்னானே பார்க்கலாம்.



"அடிங்க", என்று ஆருஷ் அருகில் இருந்த கட்டையை எடுக்க, அப்பாவும் மகனும் பறந்து விட்டனர்.



அங்கே சிரித்து கொண்டு நின்று இருந்தான் அவிரன்.



"சிவுவ இப்படி கொடு", என்று சொல்லிக்கொண்டே அவனிடம் இருந்து அவளை வாங்கியவன், "என் தங்கத்தோட நான் கொஞ்சம் நேரம் விளையாடறேன்", என்று சொல்லி அவளுடன் அவன் விளையாட ஆரம்பித்து விட்டான்.



"நீ இவளை வச்சிக்கோ... நான் போய் கொஞ்சம் நடந்துட்டு வரேன்" என்று சொல்லிவிட்டு சென்று இருந்தான் ஆருஷ்.



சிவயாழினியுடன் மொட்டை மாடியில் நின்று கொண்டு இருந்தான் அவிரன். அப்போது ஸ்ரேயஸை தூக்கி கொண்டு அவனின் அருகில் வந்தான் சிவம்.



"என்ன டா மாப்பிளை ஒரே குஷி போல?", என்று சிவம் கேட்கவும், அவனுக்கு வெட்க புன்னகை சிந்தினான் அவிரன்.



"வெட்கம்லாம் படர டா முடியல", என்று அவன் சொல்லிக்கொண்டு இருக்கும் போதே, சிவமிடம் இருந்து அவிரனிடம் தாவ முயன்றான் ஷ்ரேயஸ்.



உடனே சிவமின் கையில் இருந்த ஸ்ரேயஸையும் அவனின் கைகளில் ஏந்தினான் அவிரன்.



"டேய் உங்கிட்ட ஏதோ மாஜிக் இருக்கு டா அதான் இரண்டு குழந்தையும் உன்கிட்ட மட்டும் சமத்தா இருகாங்க", என்று சொல்லவும் அவன் முத்து பற்கள் தெரிய சிரித்தான்.



"எப்படியோ மதியோட கல்யாணம் நடக்க போகுது", என்று சிவம் சொல்லவும், "எல்லா புகழும் நம்ப மாதர் சங்க தலைவி சாந்தினிக்கே அவ மட்டும் பேசலனா", என்று அவிரன் முடிக்கும் முதலே, "நீ சந்நியாசியை ஆகியிருக்க வேண்டியது தான்" என்று முடித்து இருந்தான் சிவம்.



அப்போதே இரு குழந்தைகளும் அவிரனுக்கு இருபக்கமும் முத்தங்கள் கொடுத்தனர்.



சிவம் இதை அப்படியே புகைப்படமாக எடுத்து இருந்தான்.



அவர்கள் பேசிவிட்டு கீழே வர, இங்கோ, "நாளைக்கு காலைல தாலி சாத்தானும்" என்று சொல்லி கொண்டு இருந்தார் கொற்றவை.



"அதெல்லாம் சாத்தலாம் அதுக்கு முன்னாடி இன்னைக்கு பாட்டுக்கு பாட்டுக்கு அண்ட் டான்ஸ்லாம் வைக்கலாம்" என்று ஜானவி சொல்ல, "அது தான் அடுத்த வாரம் உங்க கல்யாணம்க்கு இருக்கே" என்று சிவம் சொல்லவும், "எங்க கல்யாணம் ஓகே, உங்க கல்யாணம் அப்போ நடக்கல தானே, அதனால இன்னைக்கு நைட் இருக்கும். ரெடியா இருங்க" என்று அவள் சொன்னதும், அங்கே அமர்ந்து இருந்த வெற்றியின் ஒரு உறவுக்கார பெண்ணோ வெளியே சென்று இருந்தாள்.



அதற்கு பிறகு அனைவரும் நாளைய சடங்குகளை பற்றி பேச ஆரம்பித்து இருந்தார்கள்.



அவி சிவுவை தளிரிடம் கொடுக்க, அவனை பார்த்து, "வீர் எங்க?" என்றவள் கேட்க, "அவன் வெளிய நடக்க போனான்" என்றதும், அவளும் சிவயாழினியை தூக்கி கொண்டு சென்றாள்.



வெளியே சென்றவள் கண்ட காட்சியில் அவளின் கண்கள் அணல் பறந்தது.
 
Last edited:

அத்தியாயம் 3



ஆருஷிடம் பேசி கொண்டிருந்தாள் அந்த இளம் யுவதி!



"டாக்டர் சார் நீங்க ரொம்ப ரொம்ப அழகா இருக்கீங்க... ஹார்ட் டாக்டர் நீங்களே நிறைய பேரோட ஹார்ட்ட உடைச்சா எப்படி? என் கூட வந்து இன்னைக்கு டான்ஸ் ஆடுங்களேன்", என்று அவள் கெஞ்சவும், "ஹே நான் இன்னைக்கு டான்ஸ் ஆடவே போறது இல்ல.. நீ வேணா போய் ஆதி கிட்ட கேளு! எப்படியா இருந்தாலும் யாழ் இப்போ ஆட முடியாது", என்றான்.



"எனக்கு அவரு கூட ஆட வேண்டாம் உங்க கூட தான் ஆடணும்", என்று அவள் ஒத்த காலில் நிற்க, "சரி ஆடலாம்", என்று அவளிடம் சொல்லவும், அவளோ அவனை அங்கேயே பற்ற போக, ஆருஷின் முதுகில் வறட்டி ஒன்று வந்து அடித்தது.



அவனோ, "யாரு டா அது நம்பள அடிக்கறது?", என்று திரும்பி பார்க்க, அங்கே அவனை முறைத்து கொண்டு நின்று இருந்தது என்னவோ அவனின் தர்ம பத்தினி தளிர்மதி தான்.



நேராக அவனிடம் வந்தவள், சிவயாழினியை அவனிடம் திணித்து, அந்த பெண்ணை பார்த்து, "இங்க பாரு என் புருஷன் என் கூட தான் ஆடுவார். அதுக்கு மேல ஆடணும் பாடணும்னு வந்த... சீவிடுவேன்", என்று அவள் மிரட்டவும், சிட்டென பறந்து விட்டாள் அந்த பெண்.



"ஐயோ போச்சு வச்சி செய்ய போறா", என்று அவன் நினைத்து கொண்டு இருக்கும் போதே, அவன் பக்கம் திரும்பி இருந்தாள் தளிர்.



"என்ன என்னை விட்டுட்டு வேற பொண்ணு பின்னாடி போறிங்களா டாக்டர் சார்?" என்று அவள் பத்ர காளியை போல் கேட்க, அவனோ தலையை உலுக்கி கொண்டு, அவனின் குழந்தையை ஒருமுறை பார்த்து அவள் புறம் திரும்பி, "இதுக்கு மேல எப்படி வேற பொண்ணு பின்னாடி போக முடியும்?" என்று கேட்கவும், "ஓஹ் அப்போ குழந்தை இல்லனா சார் வேற பொண்ண பார்த்துட்டு போயிருப்பிங்க அப்படி தானே" என்று அவளும் இடுப்பில் கையை வைத்து கொண்டு மூக்கில் புகை வராத குறையாக கேட்டாள்.



அவனுக்கோ அவளை இப்படி பார்க்க கொஞ்சம் சிரிப்பாக தான் இருந்தது.



அவனும் அவளை நெருங்கி, "குழந்தை கொடுத்ததே உன் கூட எப்பவும் இருக்கனும் தான் டி" என்றவனின் குரலில் மோகம் கலந்து இருந்தது.



அவளின் கன்னங்கள் சட்டென நாணத்தில் சிவந்து விட்டது.



"என்ன பேச்சு பேசுறீங்க?" என்றவள் நகர போக, அவளின் கையை பிடித்து இழுத்தவன், ஒரு கையில் அவனின் மகளையும் மற்றொரு கையில் அவனின் மதியையும் பிடித்து இருந்தான்.



"அதான் உண்மை... நீ என்ன வேணா நினைச்சிக்கோ... குழந்தை வந்ததாலே உன் கூட இல்ல... உன் கூட இருக்கணும்னு தான் குழந்தையே கொடுத்தேன். ஏன் டி நானே டாக்டர் உன்கூட ப்ரொடெக்ஷன் எதுவும் யூஸ் பண்ணாம வேற இருந்தேன். நீ பில்ஸ் எடுக்கலன்னு எனக்கு தெரியும். வேணும்னு தான் ப்ரெக்னென்ட் ஆக்குனேன். உன்னையும் விட முடியல... என் தம்பியையும் மறக்க முடியல... அதான் கொஞ்சம் லூசு மாதிரி பிஹேவ் பண்ணிட்டேன்" என்றவனின் குரல் இறுதியில் தழுதழுத்தது.



அவன் செய்ததை எல்லாம் இப்போது நினைத்து பார்த்தால் அவனுக்கே அவனின் மீது ஆத்திரமாக வந்தது. எத்தனை அநியாயங்கள் அவளுக்கு இழைத்து இருக்கிறான். அவளை மூன்று மாதங்கள் காதலில் மூழ்க வைத்தவன், அடுத்த மூன்று மாதங்கள் நரகத்தையும் காட்டி தான் இருந்தான்.



பின்பு அவனை ஆறுமாதங்கள் அவர்கள் வைத்து செய்தது தனி கதை தான்.



அவளோ அவனின் கன்னத்தை பற்றி, "இப்போ ஏன் அதெல்லாம் யோசிக்கிறீங்க? நானே மறந்துட்டேன்" என்றவள் முடிக்கும் போதே, அவளின் கையை பற்றி அவன் முத்தம் பதிக்க, அவர்களது மகளோ தளிரின் கையை தட்டி தான் விட்டு இருந்தாள்.



"உங்க பொண்ணுக்கு எப்பவும் என் மேல பொறாமை" என்று அவள் சிவுவின் கன்னத்தை கிள்ள போக, அவளின் கையை பிடித்த ஆருஷ் தான், "என் முன்னாடி என் பொண்ண கிள்ளலாம் முடியாது" என்றதும், சிவு ஆருஷின் கழுத்தில் சாய்ந்து கொண்டாள்.



பின்பு அவர்களும் வந்து விட, அன்று மாலை ஆடல் பாடல் என்று ஆட்டம் தான்.



"உங்க சங்கீத்க்கு வேணா ப்ராக்ஸ்டிஸ்லாம் பண்ணி ஆடுறோம் இப்போ எங்களை விட்டுடு ஜானவி" என்று சாந்தினி சொல்லி விட, "அண்ணி அப்போ நீங்க கமலி கமலி ஆடணும். கத்ரீனா கைப் மாதிரி செம்மயா ஆடணும்" என்று சொல்லவும், "ஏன் மா, நான் உனக்கு என்ன பாவம் பண்ணேன்?" என்று சாந்தினி கேட்க, "நீங்க மட்டும் இல்ல, தளிர் அண்ணி அப்புறம் யாழ் அண்ணி சேர்ந்து ஆடட்டும்" என்று சொல்ல, தளிர் மற்றும் யாழின் கண்களும் விரிந்தன.



"நாங்களா?" என்று தளிரும் யாழும் ஒருவரை ஒருவர் பார்த்து கொள்ள, "ஜாமுன் இவ நம்ப எல்லாரையும் வச்சி ஜாம் போடமா விட மாட்டா போல டி" என்று தளிர் யாழை பார்த்து சொல்ல, "ஆமா ரசகுல்லா.. நம்ப எல்லாரையும் வச்சி காமெடி பண்ணிக்கிட்டு இருக்கா" என்று இருவரும் பேசிக்கொண்டனர்.



"சரி நீ என்ன பாட்டுக்கு ஆடுவ?" என்று வெற்றி அவளை பார்த்து கேட்கவும், "அவளும் அர்ஜுனும் “உன்னை பார்த்த பிறகு தான் என் சோதனை காலம்”, திருடா திருடி படத்துல வருமே அந்த பாட்டுக்கு ஆடட்டும்... கரக்ட்டா இருக்கும்" என்று ஆதி சொல்ல, "அண்ணா" என்று ஜானவி கத்த, "அம்மா இவளுக்கு கழுதை பாலு கொடுத்தீங்களா? எப்ப பாரு கத்திகிட்டே இருக்கா?" என்று கொற்றவையை பார்த்து கேட்கவும், அவரோ சலிப்பாக தலையசைத்து கொண்டார்.



"சரி சரி எல்லாரும் போய் தூங்குங்க நாளைக்கு கோவில் போகணும்" என்று வித்யா சொல்ல, அனைவரும் சென்று உறங்கி விட்டனர்.



அடுத்த நாள் விடிய, அனைவரும் தயாராகி கொண்டு கோவிலையும் அடைந்து விட்டார்கள்.



சிவமையும் கொற்றவை விடவில்லை.



"நீயும் எங்களுக்கு ஒன்னு தான் நீயும் மறுதாலி கட்டு" என்று சொல்லவும், அவனுக்கும் வேறு வழி இல்லை.



"நான் தான் சாந்தினி அண்ணிக்கு மூணாவது முடிச்சி போடுவேன்" என்று ஜானவி சொல்ல, "அவன் மறுதாலி தான் டி கட்ட போறான்" என்று சொன்ன கொற்றவையை பார்த்து, "சோ வாட்..இவங்க யாரு கல்யாணத்துக்கும் நாங்க மூணாவது முடிச்சி போடல.. சோ நான் இப்போ போடுவேன்" என்று அவள் சொல்ல, "அவ போடட்டும் விடுங்க" என்று ஆதர்ஷ் சொல்ல, "அப்போ நான் தான் ஆதி அண்ணாக்கு போடுவேன்" என்று அகல்யாவும் ஒற்றை காலில் நின்றாள்.



"நான் வேணா ஆருஷ் அண்ணாக்கு போடவா? அவி அண்ணாக்கு நான் போட முடியாது... அவரு கல்யாணம் அப்போ தான் நானும் மேடையில இருப்பேனே" என்று அழகு ஆசையாக கேட்கவும், "நீயே போடு" என்று ஆருஷ் சொல்லவும், அவளுக்கு அத்தனை மகிழ்ச்சி.



சிவமை பார்த்து மது தான், "அண்ணா நான் உங்களுக்காக உங்க பொண்டாட்டிக்கு மூணாவது முடிச்சி போடுறேன்" என்று சொல்ல, "அப்போ நான் தான் உனக்கு மூணாவது முடிச்சி போடுவேன் சரியா?" என்று ஸ்ருஷ்டியும் ஆசையாக கேட்டாள்.



அவளுக்கு என்று யாரும் இல்லையே!



"கண்டிப்பா நீ தான் போடணும் ஸ்ருஷ்டி. அழகு கூட இருக்க மாட்டா தானே" என்று அவி சொல்லவும், மூன்றாவது முடிச்சி போடுவதற்காகவே நால்வரும் போய் பின்னால் நின்று கொண்டனர்.



ஆதர்ஷ், ஆருஷ், ஆதி, சிவம் நால்வரும் மறுதாலி கட்டவும், முன்பிருந்த தாலியை உண்டியலில் போட்டு விட்டனர்.



அத்துடன் விடவில்லை. பால் பழம் உட்பட அனைத்து சடங்குகளும் நடந்தன. எதையெல்லாம் அந்த நால்வரும் செய்யவில்லையே அனைத்தையும் அவர்கள் செய்ய வைத்தார்கள்.



"நாலு பேருக்கும் குழந்தையே இருக்கு இப்போ தான் பாலும் பழமும் கொடுக்குறாங்க" என்று மாறன் சொல்ல, "உனக்கு ஸ்டொமக் பர்னிங்னு எனக்கு தெரியும் மச்சான்" என்று ஆதி சொல்ல, "உன்ன பார்த்து எனக்கு ஸ்டொமக் பர்னிங்கா? இதெல்லாம் கேட்கணும்னு என் தலையெழுத்து" என்றவன் அங்கிருந்து நகர்ந்து விட்டான்.



அன்றைய நாள் அப்படியே கழிந்தது. இன்னும் கொஞ்ச நாள் தான் மற்றவர்களின் திருமணத்திற்கு வேறு இருந்தது. அதற்கும் அவர்கள் தயாராக வேண்டும்.



எல்லா சடங்குகளும் முடிந்து உள்ளே வந்து அறையை மூடி இருந்தான் ஆருஷ்.



உள்ளே வந்ததும் அவன் கண்கள் தேடியது என்னவோ அவனின் குட்டி இளவரசியை தான். அப்போது தான் அவனின் கண்கள் ட்ரெஸ்ஸிங் டேபிளில் பட, அங்கே தளிர் அவளின் அணிகலன்களை கழட்டி வைத்து கொண்டு இருந்தாள்.



"சிவு எங்க?", என்றவுடன், "அத்தை கூட தூங்க போறா", என்று வந்தது அவளின் பதில்.



அவனுக்கோ அதிர்ச்சி. இப்படி எல்லாம் சிவயாழினியை அவள் இன்று வரை அனுப்பி வைத்ததே இல்லை.



"எதுக்கு அவங்க கூட? நான் போய் கூட்டிட்டு வரேன்", என்று செல்ல போனவனை, “அவ அப்பவே தூங்கிட்டா... அத்தை மாமா கூட இந்நேரம் தூங்கி இருப்பாங்க.. எதுக்கு டிஸ்டர்ப் பண்றீங்க?", என்று கேட்கவும், அவனின் மனதோ, "இவ ஒருத்தி நிலைமை புரிஞ்சிக்காம... எனக்கு கொம்பு சீவி விடுறா", என்று நினைத்து கொண்டான்.



"சரி அப்போ நான் போய் மாறன் கூட படுத்துக்குறேன்", என்று நகர போகவும், அவனின் கையை இறுக பற்றி இருந்தது அவளின் கரம்.



அவனோ திரும்பி பார்க்க, பத்ர காளியை போல் தலை விரி கோலமாய் நின்று இருந்தாள் தளிர்.



அவனோ தலையை உலுக்கி கொண்டு, "என்ன டி?", என்று கேட்கவும், "யோவ்! உனக்கு கொஞ்சமாச்சு அறிவு இருக்கா? குழந்தையை கொடுத்துட்டு நான் உனக்காக இங்க இருந்தா நீ மாறன் கூட போய் தூங்குறேன், மாசிலாமணி கூட போய் தூங்குறேன்னு சொல்லிக்கிட்டு இருக்க... உனக்கு ஏதாச்சு பிரச்சனையா? ஒரு கம்ப்ளீட் மெடிக்கல் செக் அப் வேணா எடுத்தரலாமா? எனக்கென்னவோ...", என்று அவள் அடுத்த வார்த்தைகள் முடித்து என்னவோ அவனின் இதழ்களுக்குள் தான்.



முடியாத முத்தமாய் தொடர்ந்தது.



"வீர்" என்று அவள் அவனை மூச்சு விட நகர்த்தவும் தான் இருவரும் பிரிந்தனர். அவள் அணிந்து இருந்த சேலை முந்தானை நெகிழ்ந்து கீழே கிடந்தது. அவள் அன்று அணிந்து இருந்தது வேறு லோ வி கட் பிளவுஸ்.



அவனின் கண்களுக்கு அவள் விருந்தாகி கொண்டு இருந்தாள்.



அவளோ அவளின் முந்தியை எடுத்து மேலே போட போக, அவளின் கையை பற்றியவன், "எதுக்கு இப்போ போடுற, எல்லாமே திருப்பி கழட்டனும் தானே" என்று சொல்லவும் அவளுக்கு மூச்சே அடைத்து விட்டது.



அவளும் அவனுக்காக தயாராக தான் இருந்தாள். ஆனாலும் அவனின் பேச்சில் வந்த ஒரு கூச்சத்தை அவளால் தவிர்க்க முடியவில்லை.



"ரிமூவ் இட்... நான் இன்னும் டூ மினிட்ஸ்ல வரேன்" என்று சொன்னவன், இரண்டு நிமிடங்களில் வரவும், அவளோ வெள்ளை நிற இரவு உடையில் இருந்தாள்.



அவன் உள்ளே வர, "என்ன இது?" என்று கையில் எடுத்து வந்ததை பார்க்க, அவனின் கையில் இருந்தது என்னவோ ஐஸ் கிரீம் டப்பா தான்.



"அன்னைக்கு ஐஸ் கிரீம் எதுக்கு எல்லாம் யூஸ் பண்ணுவாங்கனு கேட்டேன் நினைவு இருக்கா?" என்று சொன்னதும், அவளும் ஆமோதிப்பாக தலையசைக்க, "இன்னைக்கு சொல்லி தரேன்" என்றவன் ஐஸ் கிரீம் தப்பவை திறந்தான், முதலில் ஒரு தேக்கரண்டியில் ஐஸ் கிரீமை எடுத்து அவன் சுவைக்க, "இப்படி பார்க்க வச்சி சாப்பிடுறது தான் அந்த சொல்லி தர விஷயமா?" என்று அவள் சொல்லி முடிக்கும் போதே அவளின் கழுத்தை பற்றியவன், அவன் சுவைத்து கொண்டிருந்த பனிக்கூழை அவளுக்கு பகிர்ந்து கொடுத்து இருந்தான்.



அவளின் கண்கள் முதலில் விரிய, பின்பு தாமாக மூடிக்கொண்டது.



வீர் அவனின் மதியின் உடலில் வீணையாக மீட்டிக்கொண்டு இருந்தான்.



அவளின் உடைகளை கலைந்தது கூட அவளுக்கு தெரியவில்லை. அவளை மொத்தமாக வசியம் தான் செய்து விட்டான் அந்த வசியக்காரன்.



பின்பு கொஞ்சமாக தேக்கரண்டியில் பனிக்கூழை வைத்தவன், அவளின் கழுத்தில் நேரடியாக அதை தடவவும், அவளின் மேனி மொத்தமும் சிலிர்த்து அடங்கியது.



அவளின் உடலில் குளுமையை பரப்பி சூட்டை அதிகரித்து கொண்டு இருந்தான் ஆருஷ்.



அந்த பனிக்கூழை வைத்து அவளுக்கு பாடம் நடத்தி முடிக்கும் சமயம் இருவரும் ஆதிவாசி நிலையில் தான் இருந்தனர்.



"எப்படி இருக்கு?" என்று அவன் கேட்கவும் அவள் இந்த உலகத்தில் இருந்தால் தானே! அவளை தான் மொத்தமாக காமனவன் உலகத்திற்கு கூட்டி சென்று இருந்தானே ஆருஷ்.



"எப்படி இருக்கு டி?" என்று அவன் மீண்டும் கேட்கவும் தான், அவளுக்கு சுயநினைவே வந்தது.



அவனின் கண்களில் பார்த்தவளுக்கு வெட்கம் பிடிங்கி தின்றது.



"இப்போ புரிஞ்சிதா?" என்று அவன் ஆசானாக கேட்க, அவளும் மாணவியாக தலையாட்டினாள்.



"அடுத்த பாடத்துக்கு போவோமா?" என்று கேட்கவும், "இன்னும் இருக்கா?" என்று கேட்க, அவனும், "இனி தான் மெயின் பாடம், இதெல்லாம் சப்ப்ளிமெண்ட்ரி" என்று சொன்னவன், அவளுக்கு கொஞ்சம் கொஞ்சமாக கற்று தர, அவளின் முனங்கல்களும், முத்தங்களும், பற்தடங்களும், நகக்கீறல்களுமே அவளுக்கு எவ்வளவு ஆழமாகவும் அழகாகவும் ஆருஷ் பாடத்தை நடத்தி இருந்தான் என்பதற்கு சான்றாக ஆகியது.



பல நாள் கழித்து ஒன்றாக இருவரும் படுத்து இருக்க, அவனின் வெற்று மார்பில் படுத்து இருந்தவளிடம், "பாடம் எல்லாம் புரிஞ்சிதா பிலாஸம்?" என்று கேட்கவும், அவளோ பதில் அளிக்க முடியாமல் அவனின் நெஞ்சில் கடிக்க, "திரும்பவும் உனக்கு லேசன் எடுக்க ஆரம்பிச்சிருவேன் டி நான்" என்று அவன் சொல்லவும், "நீங்க ரொம்ப மோசம்" என்றதும், "ஹலோ நான் மோசமா? நீ என்னோட..." என்று அவன் ஆரம்பிக்கும் போதே அவனின் வாயை பொத்தியவள், "வேண்டாம் போதும்" என்று கண்களாலேயே இறைஞ்ச, "ஏதோ டெஸ்ட் எடுக்கணும்னு சொன்னியே" என்றவனை பார்த்து, "அதெல்லாம் தேவையே இல்ல... எப்படி உங்கள கண்ட்ரோல் பண்ணனும்னு தான் டேப்லெட் வாங்கணும்" என்றவள் சொல்ல சிரித்து விட்டான்.



அவளோ அவனின் கன்னம் பற்றி, "சாரி" என்று சொல்ல, அவனின் புருவங்கள் சுருங்கின.



"ரொம்ப நாள் எனக்காக தான் இவளோ கண்ட்ரோலா இருந்திங்கல? யு வான்டெட் மீ! பட் ஸ்டில்.." என்றவளின் ஒவ்வொரு விரல்களுக்கும் முத்தம் கொடுத்தவன், "ஸ்டில் இட் டசன்ட் மாட்டர். இது வெறும் ஒரு பார்ட் ஆப் லைப் தான். உன்ன ரொம்ப மிஸ் பண்ணேன். நீ என்கூட என் நெஞ்சுல சாஞ்சிட்டு தூங்கணும்னு நிறைய ஆசை பட்டேன். இதோட ஒரு பக்கம் நீ இன்னொரு பக்கம் என் பொண்ணுன்னு நிம்மதியா தூங்குவேன்" என்றதும் அவனின் உச்சந்தலையில் அவள் முத்தம் வழங்க, பல நாள் கழித்து அவனின் மதியுடன் உறங்கி இருந்தான் ஆருஷ் வீர்.



மதியிழந்து அவன் செய்த செயலை திருத்தி எழுதி அவனின் உணர்வுகளால் அவனின் என்றும் உயிரானவளை மீண்டும் வென்று விட்டான். மொத்தமாக வென்று விட்டான்.

அவனின் உயிரோடும் உணர்வோடும் கலந்தவள் அவள்! இனி என்றும் உறவாய், உணர்வாய், உயிராய் வருவாள்! அவனோடு அவனின் வாழ்நாள் முழுவதும் வருவாள்.



அடுத்த நாள் காலை அவர்கள் எழுந்து வந்து சாப்பிட அமர, சிவு அழவும், அவளுக்கு பாலை ஆற்றி கொண்டு வந்தாள் தளிர்.



"ஏன் மா எப்பவும் நீ தானே பால் கொடுப்ப? இன்னைக்கு என்ன ஆச்சு?" என்று கொற்றவை கேட்டதும், "அது..அது... வந்து அத்தை..." என்று அவள் திணற, "அம்மா அதான் சிவுக்கு ஒரு வயசு ஆக போகுதுல... நம்ப அவளுக்கு செமி சொலிடாவும் கொடுக்குறோம் அப்புறம் என்ன? கொஞ்சம் கொஞ்சமா அவ பால் குடி மறக்கலாம். ஒன்னும் தப்பு இல்ல" என்று ஆருஷ் சொல்ல, அவனை முறைத்து கொண்டு இருந்தாள் தளிர்.



சிவயாழினிக்கு பாலை புகட்ட கொற்றவை சென்று விட, ஆருஷின் தட்டில் இரண்டு இட்லியை தட்டே உடையும் வண்ணம் வைத்து இருந்தாள் தளிர்.



"என்ன டி?" என்று அவன் கேட்க, "எல்லாம் உங்களால தான். நான் தான் வேணாம்னு சொன்னேன்ல" என்றவள் சொல்ல, "ஹலோ நான் என்ன பண்றது? டெஸ்ட் நல்லா இருந்துது" என்றதும், "உங்கள.." என்றவள் அவனின் வாயில் ஒரு பச்சை மிளகாயை திணிக்க, அவனோ அதை வெளியே துப்பியவன், "எனக்கு இது வேணாம், காலைல நீ கொடுத்தது தான் வேணும்" என்று லஜ்ஜையே இன்றி பேச, அவளுக்கோ வெட்கம் பிடிங்கி தின்றது.



"சிவம் எங்க?" என்று ஆதர்ஷ் வந்து கேட்கவும், இங்கோ சிவமின் அறையில் சிவமை அடி வெளுத்து கொண்டு இருந்தாள் ஸ்ருஷ்டி.
 
Last edited:

அத்தியாயம் 4



"எல்லாம் உங்களால தான். எத்தனை தடவை சொன்னேன். கேட்டீங்களா?" என்று கேட்டு கேட்டு அவனை அடித்து கொண்டு இருக்க, "ஸ்ருஷ்டி டென்சன் ஆகாத டி" என்று அவன் சொல்ல, "சாவடிச்சிருவேன். எல்லாத்துக்கும் காரணம் நீ தான் டா" என்று அவள் சொல்ல, "ஹலோ நான் மட்டும் இல்ல... நீயும் தானே கம்பெனி கொடுத்த... அப்பவே சொன்னேன் வேணாம் டி... நிறுத்திக்குவோம்னு" என்று அவன் பேசவும், அவளோ, "ஆமா சொன்னேன், நீங்க என்ன சொன்னிங்க எனக்கு டேப்லெட் வாங்கிட்டு வந்து கொடுக்குறேனு சொன்னிங்களா இல்லையா?" என்று அவள் கேட்க, அவளோ குரலை செருமிக்கொண்டு, "மறந்துட்டேன்" என்று பிடரியை வருடி கொண்டான்.



அவளோ அப்படியே தொப்பென்று கட்டிலில் அமர்ந்தாள்.



"பார்த்து டி" என்று சிவம் அருகில் வர, "ஐயோ இப்போ எல்லாரும் என்ன சொல்லுவாங்க... மூணு வருஷம் போகட்டும்னு நினைச்சேன்" என்று அவள் இதழ்களை பிதுக்கி சொல்லவும், அவனோ, அவளின் இதழில் இதழ் பிரித்து விலகியவன், "அதெல்லாம் ஒன்னும் சொல்ல மாட்டாங்க.. நான் பார்த்துக்கறேன் வா" என்றவன் ஸ்ரேயஸையும் தூக்கி கொண்டு வெளியே வந்தான்.



சிவம் வருவதை பார்த்ததும், "என்ன டா உனக்கு தான் நேத்து பர்ஸ்ட் நைட் போல" என்று ஆதி கிண்டலாக கேட்க, "ம்கூம் அதெல்லாம் நடந்து அடுத்த ப்ராடெக்ட் வர போகுது" என்று சிவம் சொல்லவும், அவர்களின் கண்கள் விரிந்தன.



ஆதி, ஆதர்ஷ் மற்றும் ஆருஷ் ஸ்ருஷ்டியை பார்க்க, அவள் ஓடியே விட்டாள்.



"என்ன டா சொல்ற? என்ன சொல்ற?" என்று ஆதர்ஷ் கூட விவேக் மாடுலேஷனில் பேசவும், "நான் மறுபடியும் அப்பாவாகிட்டேன் டா" என்று அவன் சொன்னதும், இது அங்கே வந்து கொண்டு இருந்த ருத்ரன், விக்ரமன், விஷ்ணு மற்றும் சேகரன் காதிலும் விழுந்தது.



சிவம் அப்படியே திரும்பவும் அவர்களை பார்த்தவன் அப்படியே ஸ்தம்பித்து நிற்க, "நல்லா இரு டா" என்று சொல்லி அனைவரும் நகர்ந்து விட்டனர்.



"உன்ன விட உன் பையன் திறமையா இருக்கான் டா" என்று சேகரனை பார்த்து விஷ்ணு சொல்லவும், "ஆமா அது என்னவோ உண்மை தான். கல்யாணத்துக்கு முன்னாடி குழந்தை, இப்போ மறுதாலி கட்டின அடுத்த நாள் ப்ரெக்னென்சி. சரித்திரம் தான்" என்று சேகரன் சொல்லவும், "விடு டா... ஷ்ரேயஸ்க்கு தம்பி இல்ல தங்கச்சி இருப்பாங்கல... பாவம் சிவம் தனியாவே இருந்தான்" என்று ருத்ரன் சொல்ல, "அதுவோம் சரி தான்... ஆனா எனக்கு என்னவோ ஷ்ரேயஸ் அவன் தம்பி தங்கச்சியோட இருக்கறத விட, அவன் பிரண்ட் கூட தான் இருப்பான்னு தோணுது" என்று விக்ரமன் சொல்லும் போதே, "சி சி" என்று ஷ்ரேயஸ் சிவயாழினியுடன் விளையாடிக்கொண்டு இருந்தான்.



சிவம் மற்றும் ஸ்ருஷ்டியின் விடயம் அனைவருக்கும் தெரிவிக்க பட்டது.



அவி தான் சிவமை வைத்து செய்தான்.



"இவன் வயசு தான் எனக்கும். இவன் ரெண்டாவதே ரிலீஸ் பன்றான். நான் இன்னும் ஒண்ணுத்துக்கு கூட விதை விதைக்கல" என்று பொருமிக்கொண்டு இருக்க, வெற்றியோ, "விடு அவனுக்கு திறமை இருக்கு.. நமக்கு இல்ல" என்று சொல்ல, "எனக்கு ரொம்ப அவமானமா இருக்கு டா" என்று அவி தலையில் கை வைத்து கொண்டான்.



இதே சமயம், ஆருஷை கண்களாலேயே அழைத்தாள் தளிர்.



அவனோ புருவம் சுருக்கி பார்த்து அவளிடம் செல்ல, அவளிடம் அவன் நெருங்கி வந்ததும், "எனக்கு குழந்தை வேணும்" என்று அவள் சொல்லி இருந்தாள்.



"என்ன டி ஏதோ சாக்கலேட் வேணும்னு சொல்ற மாதிரி சொல்ற" என்கிற ஆருஷை பார்த்து, "அதெல்லாம் எனக்கு தெரியாது, நானும் ஸ்ருஷ்டியும் ஒண்ணா தானே ப்ரெக்னென்ட்டா இருந்தோம்...இப்போ அவ இரண்டாவது கன்ஸீவா ஆகிட்டா, எனக்கும் இன்னொரு பேபி வேணும்" என்று அவள் உதட்டை பிதுக்கி கொண்டு கூறவும், "சிவுக்கு இன்னும் ஒரு வயசு முழுசா கூட முடியல" என்றவன் சொல்ல, அதற்கெல்லாம் மசியவேயில்லை அவன் தர்மபத்தினி.



"எனக்கு பேபி வேணும்" என்று அவள் அங்கேயே வந்து நிற்க, "நேத்து செப் டே வா?" என்று கேட்க, அவளும் நாட்கணக்கை பார்த்து, "இல்ல இந்த ஒரு வாரம் செப் இல்ல" என்று சொல்லவும், "அப்போ இந்த ஒரு வாரம் பிராசஸ் பண்ணலாம்" என்று அவன் கண்களை சிமிட்ட, அவளுக்கோ வெட்கம் தான், "தினமும் ஐஸ் கிரீம் தானா அப்போ?" என்று அவள் கேட்க, அவனோ இதழ்களை கடித்து சிரிப்பை அடக்கி கொண்டு, "நாட் நேசசரி! இன்னைக்கு சாக்லேட் வச்சி சொல்லி தரேன்" என்று கண்சிமிட்டி அவன் சொல்லவும், அவளுக்கோ உடல் மொத்தமும் சிலிர்த்தது.



"டாக்டர் டீச்சர் ஆகிட்டீங்க" என்றவளை பார்த்து, "நீயும் வேணா எனக்கு சொல்லி கொடு மா... ஐ டோன்ட் மைண்ட்" என்றவனிடம், "ரொம்ப தான்" என்று அவனின் கன்னத்தை பிடித்து கிள்ளி சென்று விட்டாள்.



இதை அனைத்தையும் ஆண் மகன்கள் பார்த்து கொண்டு இருக்கிறார்கள் என்று மறந்து விட்டான் ஆருஷ்.



அவன் திரும்பியவுடன், "கன்னத்தை எல்லாம் பிடிச்சி கிள்ளுறா" என்று ஆதி சொல்ல, "அவனும் சிறுகுழந்தை தானே" என்று சிவம் சொல்ல, "குழந்தை பண்ண வேலை தானே! நேத்து நைட் ஐஸ் கிரீம் டப்பா எடுத்துட்டு அவரு ரூம்க்கு போனாரு" என்று அர்ஜுன் சொல்லவும், ஆருஷின் கண்கள் விரிந்தன.



"நேத்து சிவுவ கூட உங்க கூட தூங்க வைக்கலையாமே" என்று வெற்றி அடுத்து சொல்லவும், "ஆருஷ் அப்போ நேத்து..." என்று ஆதி நிறுத்த, "டேய் ஒன்னும் இல்ல டா" என்று அவனும் அவனின் பிடரியை பின்னால் கோதிக்கொண்டு வந்து அமர, "ஆமா ஒன்னும் இல்ல, அன்னைக்கு சிவம் கிட்ட கேட்ட டவுட்க்கு சார் நேத்து தளிர் கிட்ட விளக்கம் கொடுத்து இருப்பாரு" என்று ஆதர்ஷ் சொல்லவும், அனைவரும் சத்தமாக சிரித்து விட்டனர்.



"டேய் போதும் டா என்ன விட்ருங்க... இவன் தான் இன்னைக்கு டார்கெட்" என்று சிவமை அவன் கை காட்டவும், "எல்லாரும் டார்கெட் தான்" என்று ஆதி சொல்ல, "மாறன் எங்க?" என்று வெற்றி கேட்கும் போதே அங்கு வந்தான் மாறன்.



ஆதியின் கண்கள் கூர்மையாகின.



"இரு அடுத்த பலி ஆடு வருது" என்று ஆதி சொல்ல, "ஏன் அவன் என்ன பண்ணான்?" என்று வெற்றி கேட்கும் போதே, "உன் தம்பி ஒன்னும் அவளோ நல்லவன் இல்ல, அவனோட சட்டைல பாரு, ஒரு பக்கம் குங்குமம் இருக்கு" என்று சொல்ல, "கோவிலுக்கு போய்ட்டு வந்து இருப்பான்" என்று அர்ஜுன் சொல்ல, "டேய் டேய்.. இவளோலாம் ஜலரா தட்டாதீங்க... இன்னொரு பக்கம் பாரு லிப்ஸ்டிக் மார்க்" என்று ஆதி சொல்ல, அவனும் அங்கே வர சரியாக இருந்தது.



"என்ன மச்சான் இதெல்லாம்?" என்று அவன் லிப்ஸ்டிக் மார்க்கை சுட்டி காட்டி கேட்கவும், மாறனுக்கோ எதுவும் பேசவும் முடியவில்லை.



"சொல்லுங்க நீங்க தான் தைரியமான ஆளாச்சே" என்று ஆதி அவனை மீண்டும் சீண்ட, "என்ன டா இப்போ உனக்கு? ஆமா நான் அழகுவ கிஸ் பண்ணிட்டு தான் வந்தேன் இப்போ என்ன?" என்று கேட்கவும், அனைவரின் கண்களும் விரிந்தன.



"எனக்கு நியாயம் கேளுங்க டா யாரவது! இவன் மட்டும் என் தங்கச்சிய கிஸ் பண்ணுவானாம்... ஆனா இவன் தங்கச்சி கிட்ட போனாலே என்னை முறைக்கிறான்" என்று அவி குழந்தை போல குற்ற பத்திரிகை வாசிக்க, "நாங்க உனக்காக நியாயம் கேட்குறோம் டா அவி" என்று ஆருஷ் சொல்ல, "ஏன் டா அவனை மட்டும் மது கிட்ட போக விடமாட்டேங்குற?" என்று மாறனை பார்த்து சிவம் கேட்க, "அவனுக்கு திறமை இல்ல" என்று மாறன் சொல்ல, இதே சமயம் அங்கு வந்தாள் மது.



"மோர்" என்று அனைவருக்கும் அவள் நீட்ட, அவளின் கையில் இருந்து ஆதர்ஷ் அதை வாங்கவும், அவி யோசிக்கவே இல்லை, மாறன் அவனை சீண்டி வேறு விட்டு இருக்க, அவளை மின்னல் வேகத்தில் நெருங்கியவன், அவளின் கழுத்தை பற்றி, அவளின் இதழில் இதழ் பதித்து இருந்தான்.



மதுவின் கண்கள் விரிந்தன.



"டேய் ச்சை.." என்று ஆண்மகன்கள் அனைவரும் திரும்பி கொள்ள வேண்டியதாக போய் விட்டது.



"எல்லாத்துக்கும் காரணம் இந்த ஆதி தான்" என்று ஆருஷ் பற்களை கடித்து கொண்டு கூற, "டேய் இந்த மலை மாடு தான் டா காரணம். என்ன சொல்ற நீ?" என்று மாறனை பார்க்க, அவி மதுவின் இதழ்களை விடுவிக்க, அவள் திக் பிரம்மை பிடித்தவள் போல நின்று இருந்தாள்.



"மது" என்கிற அவியின் குரலில் மீண்டும் அவர்கள் திரும்ப, ஆருஷ் மதுவை பார்த்து, "பாவம் பிள்ளை பயந்துருச்சு போல" என்று கேலி செய்ய, வெற்றியோ இவர்களை எல்லாம் வைத்து கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் விழித்து கொண்டு தான் இருந்தான்.



"மது" என்று மீண்டும் அவி அவளின் தோளை உலுக்க, அவளும் சுயநினைவுக்கு வந்தவள், அவியின் கன்னத்தில் முத்தம் பதித்து வெட்கப்பட்டு ஓடிவிட்டாள்.



"சாதிச்சிட்ட அவி.. கல்யாணத்துக்கு முன்ன ஒரு கிஸ் வாங்கிட்ட" என்று சிவம் கைதட்ட, அனைவரும் கைதட்டினார்கள்.



மாறனோ, "இப்ப கூட நான் இவனை சீண்டி விட்டதுனால தான் இதை கூட பண்ணான். இல்லனா கடைசி வரைக்கும் இவன் தான் சாமியார்" என்று சொல்லவும், "ஆமா அவன் சாமியார், நீ போலி சாமியார்" என்று ஆதி சொல்லவும், வெற்றியை பார்த்து, "இவனுக்கு நீ யாழை கொடுத்து இருக்க கூடாது" என்று சொல்ல, "அவனை தவிர நல்ல மாப்பிள்ளை நமக்கு கிடைக்க மாட்டாங்க" என்று சொல்லி முடிக்கவும், "ஆதி" என்று யாழ் அழைத்ததும், "தோ வரேன் நிலா" என்றவன் சென்று விட்டான்.



"பாரு பொண்டாட்டி கூப்பிட்டதும் எப்படி ஓடுறானு" என்று ஆதர்ஷ் சொல்லி சிரிக்க, "ஊருக்கே அரசனா இருந்தாலும் வீட்டுக்கு தொடப்பக்கட்டை தான்" என்று சிவம் சொல்ல, "உண்மை உண்மை" என்று அனைவரும் ஆமோதித்தனர்.



அன்று மாலை ஆதர்ஷ் அவனின் அறைக்குள் வர, சாந்தினி ஜன்னல் அருகே நின்று எதையோ யோசித்து கொண்டு இருந்தாள்.



ஓரளவுக்கு என்னவென்று அவனுக்கும் தெரியும்.



அவளின் அருகில் அவன் செல்ல, சாந்தினியின் கண்கள் கலங்கி இருந்தது.



சாந்தினியின் கவலையை துடைப்பானா ஆதர்ஷ்?
 

அத்தியாயம் 5



ஆதர்ஷ் சாந்தினியின் அருகில் வந்து, "என்ன உன்னால இந்த ப்ரெக்னென்சிலாம் பீல் பண்ண முடியலன்னு பீல் பண்ணிக்கிட்டு இருக்கியா?" என்று கேட்கவும், அவளோ கண்களை துடைத்து கொண்டு, "ஆமா... அதுக்கு நான் கொடுத்து வைக்கலன்னு நினைக்கிறன்" என்று அவள் சொல்லிவிட்டு திரும்ப, அவனோ, அவளின் கையை பிடித்தவன், அவளின் இடையோடு சேர்த்து அவளையும் இழுத்தான்.



"எனக்கு கொடுத்து வச்சிருக்கு.. நீ ப்ரெக்னென்ட் ஆகி, பிள்ளை எல்லாம் திருப்பி பிறந்து, நான் தனியாலாம் இதுக்கு மேல படுக்க முடியாது மா" என்று அவன் வெளிப்படையாக சொல்லவும், அவளோ, "அதுலயே இருங்க" என்றவளின் கோவத்தில் நாணமும் கலந்து இருந்தது.



"எனக்கு இத சொல்ல ஒன்னும் அசிங்கமா இல்ல.. எஸ் ஐ டிசையர் யு எ லாட்... எனக்கும் ஆசை இருக்கு தான் நீ ப்ரெக்னென்ட்டா இருக்கறத திருப்பி பார்க்கணும்னு.. ஆனா ப்ரெக்னென்ட் ஆர் நாட் டஸன்ட் மேட்டர். நமக்கு லயனிக்கா லக்ஷித் இருக்காங்க.... அப்படி இல்லனாலும் நான் உன் பின்னாடி தான் வந்து இருப்பேன் சாந்தினி. ஐ லவ் யு போர் யு... நாட் போர் பேபீஸ்... நீ என்ன பிள்ளை பேக்குற மெஷினா? நான் இருவர் நமக்கு இருவர்.. கடவுள் நமக்கு ஒரே அட்டெம்ப்ட்ல அதையும் கொடுத்துட்டாரு அப்புறம் என்ன?" என்றவனை பார்த்து, "எனக்காக தானே இப்படி எல்லாம் பேசுறீங்க" என்று கேட்கவும், அவளின் நெற்றியோடு நெற்றி முட்டி, "நமக்காக பேசுறேன். நம்ப ஹப்பின்ஸ்க்காக தான் பேசுறேன்" என்றவன் மெதுவாக அவளின் இதழ்களை சிறை செய்தான்.



அது ஒன்றும் அவசரமான முத்தம் இல்லை, அதிரடியான முத்தமும் இல்லை, ஆழமான, அழுத்தமான, ஆத்மார்த்தமான முத்தம் அது. அவளின் ஆவியை தீண்டி சென்றது அந்த முத்தம்.



அவளை அவன் எவ்வளவு தேடுகின்றான் என்று அவளின் இதழ்களை பற்களால் மெலிய கடி கடித்து உணர்த்தி இருந்தான் ஆதர்ஷ்.



இருவரும் பிரிய, "ஸ்டாப் திங்கிங் டூ மச். ரொம்ப யோசிக்காத" என்று அவன் சொல்லும் போதே, லக்ஷிதும் லயனிக்காவும் வர, "மம்மி டாடி.. சிவம் அங்கிள்க்கு இன்னொரு பேபி வர போகுதாம்" என்று அவர்கள் ஆர்வமாக சொல்ல, சாந்தினிக்கு ஒரு நெருடல், "உங்களுக்கு தம்பி தங்கச்சி வேணாமா?" என்று ஆதர்ஷ் கேட்க, "அதான்
சிவு, ஆதவன், நிலவன் இருக்காங்களே.. எங்க தம்பி தங்கச்சி" என்று லயனிக்கா சொல்லவும், "ஆமா அவங்க தான் இருக்காங்களே.. நாங்க தான் பிக் பிரதர், சிஸ்டர்" என்று லக்ஷித் சொல்லவும், சாந்தினியின் இதழ்கள் தாராளமாக விரிந்தன.



"இது போதுமா? நீ இவளோ யோசிக்காத... ஆதவன் நிலவனும் நம்ப கூட தான் செந்தளிர் இல்லத்துல இருப்பாங்க... சிவுவ தளிர் எப்போ வேணா அங்க கூட்டிகிட்டு வர போறா.. அவங்க என்னைக்கும் அப்படி எல்லாம் பீல் பண்ண மாட்டாங்க" என்றதும் அவளுக்கும் நிலமை புரிந்தது.



எல்லாமே அவளின் பிள்ளைகள் தானே!



ஆதர்ஷ் சாந்தினிக்கு தேவையான தெளிவை கொடுத்து இருந்தான். அவளின் சரிபாதி அவன், அவளின் மகிழ்ச்சி, துக்கம் என்று அனைத்தையும் பகிர்ந்து கொள்பவன் அவன்!



ஆதர்ஷனின் காதல் தன்னலமற்றது. அவன் காமத்திற்காக காதலிக்கவில்லை, அவளின் அழகுக்காக காதலிக்கவில்லை, பணத்திற்க்காக, புகழிற்க்காக என்று என்று இது எதற்காகவும் காதலிக்க வில்லை.



அவளுக்காக, அவளின் தைரியத்திற்காகவும், குணத்திற்க்காகவும் மட்டுமே காதலித்தான். குழந்தை இல்லை என்று அவள் வருந்தினாலும், இருக்கும் குழந்தைகள் அனைத்தும் உன்னுடையது என்று அவளுக்கு உணர்தியும் இருந்தான். அப்படி தானே அவனின் பெற்றோர்கள் அவனை வளர்த்தும் இருந்தார்கள்.



"உங்கள கொற்றவை அத்தை ரொம்ப நல்லா வளர்த்து இருக்காங்க" என்று சாந்தினி கூற, "நீயும் அதே மாதிரி எல்லா பசங்களையும் வளர்க்கணும்" என்று அவனின் கையில் கை வைக்க, "அக்கா" என்று உள்ளே வந்தாள் யாழ்.



"சாரி தப்பான டைம்க்கு வந்துட்டேனா?" என்று அவர்களை பார்த்து அவள் கேட்க, "அதெல்லாம் இல்ல.." என்று ஆதர்ஷ் நகர்ந்து கொண்டான்.



"ஹே மூன் எங்க பேபீஸ்" என்று லயு கேட்க, "அவங்க ரூம்ல தூங்குறாங்க... நீ ரூம் உள்ள போயிராத.. நீ போனாலே உன் வாசனையை வச்சே அவனுங்க எழுந்துக்குறாங்க" என்று அவள் ஒற்றை விரலை நீட்டி சொல்ல, "சரி தான் போ மூன்" என்று அவளின் இடுப்பை இடித்து விட்டு, லயு ஓடிவிட்டாள்.



"சேட்டை சேட்டை... இவளுக்கு நாலு போடு போடணும்" என்று சொல்ல, "நீயே போடலாம்" என்று சாந்தினி சொல்ல, "ம்கூம் எங்க இருந்து, அவ மேல கைய வைக்க போனாலே இந்த ஆதிக்கு மூக்கு வேர்த்திருது. உடனே சண்டைக்கு வந்துடுறான். ஆதர்ஷ் மாமா கூட எதுவும் வாய திறக்கறது இல்ல. இந்த ஆதி தான் ரொம்ப பன்றான்" என்று சொல்லிக்கொண்டே, "ஹான் சொல்ல வந்ததை மறந்துட்டேன். நாளைக்கு ஏதோ குல தெய்வம் கோவிலுக்கு போகணுமாம். எல்லாருக்கும் புடவை எடுக்க அம்மா இன்னைக்கு ஆள வர சொல்லிருக்காங்க. அப்படியே கல்யாணத்துக்கும் எடுத்துக்க சொன்னாங்க. இதை சொல்ல தான் வந்தேன் அக்கா" என்றவள் செல்ல போக, அவளின் கையை பிடித்தவள், "ரொம்ப தேங்க்ஸ்" என்று சொல்லி இருந்தாள்.



"எதுக்கு?" என்று அவள் புருவம் உயர்த்தி கேட்க, "நீ தானே இந்த விருந்து ஐடியாலாம் கொடுத்தது" என்று சொல்ல, "நான் மட்டும் இல்ல, வெற்றி அண்ணாவும், மாறன் அண்ணாவும் சேர்ந்து தான் கொடுத்தாங்க.. ஆதர்ஷ் மாமா, ஆருஷ், ஆதி யாருக்குமே ப்ரொபேர்ரா விருந்து கொடுக்கலன்னு சொல்லிக்கிட்டு இருந்தாங்க அம்மா. அவங்களுக்கு தளிரும் நீங்களும் கூட அவங்க பொண்ணு மாதிரி தானே!" என்றதும், அவளை அணைத்து தான் இருந்தாள் யாழ்.



"எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல! உன்னால தான் இவளோ உறவுகள் எனக்கு கிடைச்சுதே! வெற்றி அண்ணா இல்லனா தளிர் வாழ்க்கை இவளோ அழகா மாறி இருக்காது. ஏன் ஆதர்ஷ் கூட எனக்கு கிடைச்சி இருக்க மாட்டாரு... நீ தான் எல்லாத்துக்கும் காரணம்" என்றவள் சொல்ல, "நீங்க இல்லனா நானே உயிரோட இருந்து இருக்க மாட்டேன் அக்கா.. என்னால தானே உங்களால இன்னொரு பேபி கன்சீவ் ஆக முடியல.. எனக்கு எப்பவும் அந்த கிளிட்டி இருந்துட்டே தான் இருக்கும்" என்றவள் அழவும், அவளின் கண்ணீரை துடைத்த சாந்தினி, "எதுக்கு அழற? உன் பசங்களும் என்ன மம்மின்னு தானே கூப்பிடுவாங்க" என்று அவள் சொல்லவும், "டவுட்டே வேணாம். எனக்கு என்னவோ அந்த இரண்டு வாண்டும் உங்க பின்னாடி தான் வாலு பிடிச்சிக்கிட்டு சுத்த போகுது பாருங்க" என்றவளை பார்த்து, "நான் உங்க பின்னாடி வாலு மாதிரி சுத்துறேனே அந்த மாதிரியா அம்மா?" என்று லக்ஷித் கேட்க, "நீ தான் என் செல்லம்" என்றவள் அவனை அழைத்து கொண்டு, சாந்தினியையும் அழைத்து கொண்டு சென்று விட்டாள்.



புடவை கடையையே வந்து இறக்கி இருந்தார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.



"ஊருக்கே புடவை எடுக்க போறிங்களா என்ன?" என்று வாயில் கையை வைத்து விட்டார் அன்னம்.



"இல்லமா எல்லாருக்கும் எடுக்கணும்ல" என்று விக்ரமன் அவரை பார்த்து சொல்லவும், "அதுக்குன்னு இவளோவா?" என்றவரை பார்த்து, "நீங்களும் வாங்க" என்று இழுத்து கொண்டு சென்றார் வைஷ்ணவி.



அனைவரும் ஒன்றாக அமர்ந்து இருந்தார்கள்.



"எனக்கு ஹெவியாலாம் வேணாம். சிம்பிளா எடுங்க" என்று யாழ் சொல்ல, ஆதித்யனின் கண்களில் பட்டது அந்த வெயிட்லெஸ் புடவை.



அழகாக மிதமான வேலைப்பாடுகள் கொண்டு, நீல வண்ண நிறத்தில் இருந்ததை எடுத்தவன், "இத பாரு" என்று சொல்ல, அவளும் எடுத்து பார்க்க, "அழகா இருக்கு ஆதி" என்றதும், "ஆதியை பார்த்து கத்துக்கோங்க... எப்படி அவரோட பொண்டாட்டிக்காக புடவை செலக்ட் பண்ராருனு" என்று தளிர் சொல்லவும், "உன் புருஷன் உனக்கு புடவை செலக்ட் பண்ணனும்னு டிரெக்டா சொல்ல வேண்டியது தானே" என்று ஆதர்ஷ் சொல்ல, ஆருஷ் அவளுக்காக ஒரு புடவை எடுத்து கொடுத்தான்.



ஆதர்ஷ் எடுப்பதற்கு முன்பே சாந்தினி எடுத்து விட்டாள். அவளின் சுதந்திரத்தில் அவன் தலையிடுவதில்லை. அவளுக்கு வேண்டும் என்றால் அவளே அவனின் உதவியை நாடுவாள் என்று அவனுக்கு தெரியும்.



அழகுவிற்கு என்ன புடவை எடுப்பது என்றே தெரியவில்லை.



மாறன் தான், "இந்த கலர் ட்ரை பண்ணு" என்று வெளிர் பச்சை நிறத்தில் ஒரு புடவை எடுக்க, அது அவளுக்கு அழகாக இருந்தது.



அகல்யாவிற்கு பிடித்த பீச் நிறத்தில் அவள் ஒரு புடவையை எடுத்து கொள்ள, "நாளைக்கு புடவை தான் கட்டணுமா? நான் வேணா ஒரு சுடிதார் போட்டுக்கவா?" என்று ஜானவி பாவமாக பார்க்க, கொற்றவையோ, "உன்ன ஜல்லி கரண்டியாலேயே அடிப்பேன் பார்த்துக்கோ" என்று அவளை பேசவும், அர்ஜுன் தான், "அத்தை கோவிலுக்கு தான, அவ சுடிதார் போட்டுக்கட்டுமே" என்றதும், கொற்றவை அதற்கு மேல் பேசவில்லை.



"உங்க பொண்ணு மாப்பிள்ளையை கூட மயக்கி வச்சிருக்கா" என்று ருத்ரனின் காதுகளில் அவர் பேசவும், "நீயும் என்ன மயக்கி தானே வச்சிருக்க, உன் பொண்ணு உன்ன மாதிரி இருக்கா" என்றதும் கொற்றவையின் கன்னங்கள் தான் சிவந்து விட்டன.



ஸ்ருஷ்டி, மது, தாரணி, வர்ஷினி என்று அனைவரும் அவர்களுக்கான புடவையை எடுத்து கொண்டனர்.



பின்பு அனைவரும் பண்ணை வீட்டிற்கும் சென்று விட்டனர்.



அடுத்த நாளும் விடிந்தது.



குல தெய்வம் கோவிலுக்கு செல்ல அனைவரும் ஆயத்தமாகி கொண்டு இருந்தனர். அனைவரும் கிளம்பும் சமயம், "ஐயோ விடுங்க! விடுங்க எனக்கு கூச்சமா இருக்கு", என்கிற கொற்றவையின் குரல் அவரின் அறையில் இருந்து வந்து கொண்டு இருந்தது.



இது அந்த வழியாக கடந்து வந்த விஷ்ணு, வித்யா, விக்ரமன் மற்றும் வைஷ்ணவியின் காதுகளையும் அடைந்தது.



"பகல்லயே அதுவும் கோவில் போகும் போது கூடவா டா இப்படி எல்லாம் செய்வான்?", என்று யோசனையாக விஷ்ணு வினவ, "டேய் அறிவு கெட்டவனே! ஒரு பிசினஸ் மேன் மாறியா டா பேசுற?", என்று அவரின் தோளில் அடிக்க, "என்ன டா பண்றீங்க?", என்கிற சேகரின் குரலில் திடுக்கிட்டு திரும்பினர்.



"ஐயோ வேண்டாம் விடுங்க", என்று மீண்டும் கொற்றவை சினுங்க, "என்ன டா நடக்குது?", என்ற சேகரை பார்த்து, 'பேரன் பேத்தி எல்லாம் எடுத்தாச்சு இப்போ போய் இவன் புள்ள பெக்குற பிராசஸ் பன்றான் டா", என்கிற விஷ்ணுவை தள்ளி விட்டு, கதவை தட்ட, "கம் இன்", என்று ருத்ரனும், "உள்ள வராதீங்க", என்று கொற்றவையும் சொன்னதை கேட்டவர்கள், கதவை திறந்ததும், பெண்களுக்கோ வெக்கம் வந்து விட, ஆண்களோ அதிர்ந்து நின்றனர்.
 
Last edited:

அத்தியாயம் 6



கொற்றவையை அமர வைத்து, கொலுசு போட்டு விட்டு கொண்டு இருந்தார்.



"டேய் உன் தொல்லை தாங்கல டா" என்று விஷ்ணு சொல்ல, ருத்ரனோ, "என் பொண்டாட்டிக்கு நான் கொலுசு போடுறது ஒரு குத்தமா? ஏன் மா வித்யா அவன் உனக்கு கொலுசு போட்டு விட மாட்டானா?" என்றவரிடம், "ம்கூம் உங்க தம்பிக்கு கொசுவம் மடிப்பு கூட எடுக்க தெரியாது. இதுல கொலுசு வேற போட்டு விடுறாரா? நீங்க வேணா அவருக்கு டுஷன் எடுத்து அனுப்புங்க" என்று சொன்னவர் விஷ்ணுவை முறைத்து கொண்டு சென்று விட்டார்.



விஷ்ணுவோ, "நீ எனக்கு வில்லன் டா" என்றவரும் சென்று விட, விக்ரமனை பார்த்து வைஷ்ணவியோ, "நீங்க எல்லாம் என்ன லவ் மேரேஜ் பண்ணீங்க? அங்க பாருங்க மாமா கொற்றவையை தாங்கு தாங்குன்னு தாங்குறார்" என்றதும், "வேணும்னா சொல்லு நானும் உன்ன தூக்கிட்டு தாங்குறேன்" என்று கண் அடிக்க, "ம்கூம் இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல.. பேச்சு தான்" என்று உதட்டை சுழித்து கொண்டு சென்று விட்டார்.



சேகரனோ, "டேய் போதும் டா.. நீ எங்க எல்லாருக்கும் டிவோர்ஸ் வாங்கி கொடுத்துட்டு தான் விடுவ போல" என்றதும், "நான் என் பொண்டாட்டிக்கு பண்றேன். இதுல என்ன இருக்கு?" என்று கேட்க, அதற்கு மேல் அங்கு இருக்க முடியாது என்று அறிந்து கொண்டு சென்று விட்டார்கள்.



பின்பு அனைவரும் கோவிலுக்கு சென்று விட்டு வந்த உடன், யாழ் தான், "நான் அத்தைங்க கூடவே இருந்துக்குறேன் மா" என்று சொல்லவும், "ஏன் டி, அங்க இருக்க என்ன உனக்கு?" என்று காத்யாயனி கேட்க, "இல்ல மா அங்க அத்தைங்க இருப்பாங்க. எனக்கு சிவு, ஷ்ரேயஸ், லக்ஷித், லயனிக்கா கூட இருக்க ஆசையா இருக்கு" என்றதும், அதற்கு மேல் அவர் எதுவும் சொல்லவில்லை.



"நாங்க லக்ஷித் லயனிக்காவை எங்க கூட கூட்டிகிட்டு போறோம்" என்று சிதம்பரம் சொல்ல, "இல்ல எதுக்கு" என்று சாந்தினி சொல்லும் போதே, "அங்க போர் அடிக்கும். அதான் நீங்க நாலு பிள்ளைங்க வச்சி இருக்கீங்க தானே" என்று மாறன் சொல்லவும், லயனிக்காவும், "ஆமா நான் மாறன் மாமா கூட இருக்குறேன்" என்று சொல்லிவிட, சரி என்று அனைவரும் சென்று விட்டார்கள்.



சாந்தினி தான் அடுத்து திருமணத்திற்கு தேவையான எல்லாவற்றையும் எழுதி கொண்டு இருந்தாள்.



அனைவரும் ஒன்றாக அமர்ந்து இருந்தார்கள்.



கொற்றவைக்கோ வாந்தி வருவது போல் இருந்தது.



அவர் கழிப்பறைக்கு சென்று வாந்தி எடுத்து விட்டு வர, அவரால் நிற்க கூட முடியவில்லை.



சாந்தினியோ கைத்தாங்கலாக அவரை கூட்டி கொண்டு வந்தவள், "அத்தை என்ன ஆச்சு?" என்று பதட்டமாக கேட்டு இருந்தாள்.



யாழோ, குழந்தையுடன் வந்து, "அத்தை என்ன ஆச்சு?" என்று அவளும் கேட்க, "தெரியல மா... ஒரே வாந்தி, மயக்கம் வேற" என்று அவர் சொல்லிக்கொண்டு இருக்கும் போதே, ஆதி, ஆதர்ஷ், ஆருஷ், ருத்ரன், விக்ரமன் மற்றும் விஷ்ணுவும் உள்ளே வந்தார்கள்.



அனைவரும் கொற்றவையை சுற்றி இருக்க, "ஏன் எல்லாரும் அம்மாவையே சுத்தி நிக்குறீங்க?" என்று ஆதர்ஷ் கேட்கவும், "அத்தைக்கு மயக்கமா இருக்கு, வாந்தி வேற எடுத்துட்டு இப்போ தான் வந்தாங்க" என்று தளிர் சொல்லி முடிக்கவும், "டேய் ருத்து... பேரன் பேத்தி எடுத்த பிறகு என்னை இப்படி டாடி ஆக்கிட்டியே டா" என்று விஷ்ணு சொல்லவும், "என்ன டா உளறுற?" என்ற ருத்ரனை பார்த்து, "அப்பா நீங்க மறுபடியும் அம்மாவை மசக்கையாக்கி இருக்கீங்கன்னு டாடி சொல்லறாரு" என்று ஆதி சொல்லவும், ருத்ரனோ கொற்றவையை சட்டென திரும்பி பார்க்க, அவரோ வேகமாக இல்லை என்று தலையசைத்து இருந்தார்.



இதே சமயம் விஷ்ணுவோ, "வித்யா நீயும் வா டி நம்மளும் ஆதர்ஷ்க்கும் அகல்யாக்கும் இன்னொரு தம்பி இல்ல தங்கச்சி ட்ரை பண்லாம்" என்று அவர் சொல்லி முடிக்கும் முதல், பாலாடை ஒன்று அவரின் தலையை பதம் பார்த்து இருந்தது.



"எந்த வயசுல என்ன பேச்சு இது?" என்று வித்யா கேட்க, "ஹே எனக்கும் அவனுக்கும் ஒரே வயசு தான் டி.. அப்புறம் என்ன?" என்று விஷ்ணு சொல்ல, "கிட்ட வந்திங்க கால உடைச்சிருவேன்" என்று அவர் கத்தவும், "புட் பாய்சனா இருக்கும்" என்று ஆருஷ் சொல்ல, "இப்போ அம்மா கன்சீவ்வா இருந்தா என்ன? என் அப்பாக்கு தெம்பு இருக்கு கொடுக்குறார்" என்று ஜானவி சொல்ல, கொற்றவையோ அந்த நிலையிலும் அவளின் தலையில் கொட்டி, "போ போய் ரசம் வைக்க தளிர் கிட்ட கத்துக்கோ, வாய் வாய்" என்று திட்டவும், "அப்பா பாருங்க" என்று ருத்ரனை அவளுக்கு சாதகமாக பேச அழைக்கவும், அவரோ வாயை மூடி கொண்டு தான் இருந்தார்.



"இப்போல்லாம் அப்பா அவரோட பொண்ணுங்களுக்கு சப்போர்ட் பண்றது இல்லையே" என்று ஆதர்ஷ் புருவம் உயர்த்தி கேட்க, "அம்மா என்ன பண்ணீங்க? மினிஸ்டர் இப்படி போட்டி பாம்பு போல அடங்கிட்டார்" என்று ஆதியும் கேட்க, "நான் ஒன்னும் பண்ணல வித்யா பண்ற டெக்னீக் தான். உங்க அப்பாவை கெஸ்ட் ரூம் அனுப்பிருவேன்னு சொல்லி இருக்கேன்" என்றதும், "இது நல்ல ஐடியாவா இருக்கே!" என்று அனைத்து பெண்களும் கூறினார்கள்.



"எல்லா புகழும் வித்யாக்கு தான்" என்று கொற்றவை கூற, "ஆண் பாவம் பொல்லாதது டி.. உனக்கு இருக்கு" என்று விஷ்ணு சொல்லிவிட்டு சென்றார்.



அன்றைய நாள் மாலை அழகு தான் வந்து இருந்தாள்.



"வா மா" என்று வைஷ்ணவி அழைக்கவும், "வைஷு மா இந்தாங்க அம்மா உங்க எல்லாருக்கும் கேசரி கொடுத்து விட்டாங்க" என்று அவள் கொடுக்க, அங்கு வந்த ஆதியோ, "அழகு உனக்கு அந்த மாறன் தான் வேணுமா மா?" என்று கேட்க, "என்ன அண்ணா பண்றது? என் நேரம் அவன் கிட்ட நான் விழுந்துட்டேன்" என்று அவள் சொல்லி கொண்டு இருக்கும் போதே, "ஹே என்ன இவளோ சலிச்சிக்குற? என் அண்ணாவை கட்டிக்க நீ கொடுத்து வச்சிருக்கணும்" என்று யாழ் சண்டைக்கு வர, "ஹலோ, நீங்க தான் ஆதி அண்ணாவை கட்டிக்க கொடுத்து வச்சிருக்கணும். உங்க குடும்பத்துக்கே வாழ்க்கை கொடுத்த தியாக செம்மல் நாங்க எல்லாரும்" என்று அவள் சொல்லவும், "அப்படி என்ன தியாகம் பண்ணி கிழிச்சிட்டாங்க உங்க நொண்ணன் எல்லாம்?" என்று தளிரும் வந்து நின்றாள்.



"என்ன பண்ணல? சிவுவ என்ன நீங்களா பார்த்துக்குரிங்க? அண்ணா தானே பார்த்துகிறார். எனக்கு தெரியும். பாவம் எல்லா அண்ணாங்களையும் கொடுமை பண்றீங்க நீங்க" என்று சொல்ல, "திமிர பார்த்தியா இவளுக்கு, நம்ப இவ அண்ணா எல்லாரையும் கொடுமை பண்றோமாம்" என்று யாழ் பேசவும், "உண்மைய சொல்றா டி என் தங்கச்சி... நீங்க எல்லாரும் எங்களை கொடுமை தான் பண்றீங்க.. ஏதோ நாங்களா இருக்கவே உங்க கூட குடும்பம் நடத்துறோம்... வேற யாரவது இருந்தா.." என்று அவன் ஆரம்பிக்கும் போதே, "வேற யாரவது இருந்தா, இவங்க மொத்த குடும்பத்தையும் தூக்கி பைத்தியக்கார ஹாஸ்பிடல்ல போட்டு இருப்பாங்க மா" என்று முடித்து இருந்தார் வித்யா.



சிரித்து விட்டனர் தளிரும் யாழும்!



"மம்மி" என்று ஆதி பற்களை கடித்து கொண்டு அழைக்க, "என்ன டா உண்மை தான் தெரியுமா? உங்கள எல்லாம் பெத்துக்கு நாலு எருமைகளை பெத்து இருந்தா எங்களுக்கு நாலு வேலை செஞ்சி இருக்கும். உங்கள பெத்துட்டு எப்போ எதை பண்ணுவிங்கனே தெரியமா நாங்க தான் சுத்திகிட்டு இருக்கோம். ஏதோ நீங்க பண்ண புண்ணியம் உங்களுக்கு உருப்படியா பொண்டாட்டிங்க அமஞ்சி இருக்காங்க... நீங்களாவது பரவால்ல... ஒருத்தி இன்னைக்கு ரசம் வைக்குறேனு ஒன்னு வச்சாலே.... அர்ஜுன்க்கு என்ன சொல்றதுன்னே தெரியல... பாவம்.. அந்த பையன் வாழ்க்கை இப்படி போய் சீரழிய போகுதேன்னு நானே யோசிச்சிகிட்டு இருக்கேன்" என்றவரை பார்த்து, "இங்க பாருங்க அர்ஜுன் ஜானவி வேற, நான்லாம் நல்லவன் தான்" என்று ஆதி அவனுக்காக பேசி கொண்டு இருந்தான்.



"ஆமா ஆமா நல்லவன் தான் தினமும் ராத்திரி திருட்டு தனமா வந்து பொண்டாட்டிய பாக்குற" என்று வித்யா சொல்லவும், மீண்டும் சிரித்தனர் தளிர் மற்றும் யாழ்.



"விடுங்க அண்ணா... நமக்கு தெரியும் நம்ப யாருன்னு..." என்றவளை பார்த்து, "ஆமா ஆமா உங்க அண்ணா எல்லாம் நம்பர் ஒன் பைத்தியம், நீங்க நம்பர் டூ" என்று தளிர் பேச, அதற்கு மேல் இங்கு இருந்தால் அவளின் மானம் போய்விடும் என்று அழகு சிட்டாக பறந்து விட்டாள்.



அடுத்த நாள் காலையில், "கொஞ்சம் நடந்துட்டு வரலாமே" என்று அனைவரும் நினைத்து அப்படியே யாழின் ஊரில் நடக்க ஆர்மபித்தார்கள்.



அவர்களுக்கு தென்பட்டது மாறன் சிலம்பம் பயிற்சி செய்யும் கூடம்.



"அது மாறன் தான?" என்று ஆதர்ஷ் கேட்க, "ஆமா மாமா அது அண்ணா சிலம்பம் பயிற்சி செய்ற இடம் தான்" என்றதும் அவர்கள் அனைவரும் அங்கே சென்றார்கள்.



அன்று அனைவரும் அங்கே தான் வந்து இருந்தார்கள்.



மும்பை மக்களையும் பார்க்க, "வாங்க" என்று வெற்றி அவர்களையும் வரவேற்றான்.



அங்கு வந்ததும் தளிர், யாழ் மற்றும் சாந்தினி அந்த பக்கம் போய் விட, "நம்ப என்ன தான் நல்லா வச்சிக்கிட்டு இருந்தாலும் அவளுங்க புத்திய காட்டிடறாளுங்க டா" என்று ஆருஷ் சொல்ல, "இத சத்தமா சொல்லேன்" என்று ஆதி சொல்லவும், "ஏன் இல்ல ஏன்னு கேட்குறேன்" என்று நிறுத்தி கொண்டார்கள்.



"என்ன சிலம்பம் சுத்த தெரியுமா?" என்று மது கேட்கவும், "ஓரளவு தெரியும் மா" என்று ஆதி சொல்ல, "அப்போ மும்பை வர்சஸ் தமிழ் மக்கள் தான்" என்று வெற்றி சொல்லிக்கொண்டு இருக்கும் போதே, மாறன் வந்தான்.



மாறனோ அவனின் சிலம்பத்தை எடுத்து கொண்டு நின்று இருந்தான்.



"என்ன மும்பை மக்களே அப்படியே நிக்குறீங்க, யாராச்சு சிலம்பத்தை எடுங்க", என்று சாந்தினி கூறவும், சிவம், ஆதி, ஆதர்ஷ், ஆருஷ் என்று நால்வராலும் எடுக்க முடியவில்லை.



அவர்களுக்கு குங்பு கராத்தே என்றால் வந்து இருப்பார்கள், சிலம்பம் என்றால் கொஞ்சம் கடினம் தான்.



"நான் வரலாமா?", என்று கேட்டுக்கொண்டு அந்த சிலம்பத்தை எடுத்தார் ருத்ரன்.



"வாவ் மாமா நீங்களா?", என்று யாழ் கேட்க, "ஆமா நான் தான் உன் அண்ணனை இன்னைக்கு தோக்கடிச்சி காட்றேன்", என்றதும், "இன்னைக்கும் வரைக்கும் எங்க மாறன் தோத்ததே இல்ல", என்று. வெற்றி சொல்ல, "இன்னைக்கு வரைக்கும் எங்க ருத்ரனும் தோத்ததே இல்ல", என்று சொல்லி இருந்தார் விஷ்ணு.



மாறனும் ருத்ரனும் எதிர் எதிரே நிற்க, சிலம்பத்தை இருவருமே தூக்கினர்.



"போடுறா பிஜிஎம்", என்று சிவம் கத்த, அங்கு ஒலிபெருக்கியில் "சாந்து பொட்டு

ஒரு சந்தன பொட்டு", என்கிற பாடல் ஒலித்தது.



இருவரின் சிலம்பமும் முட்டி கொண்டது.
 

அத்தியாயம் 7



மாறனும் ருத்ரனும் மோத, இருதரப்பினரும் விசில் அடித்து கொண்டாடினார்கள்.



ஒரு பக்கம் ஆதி, ஆதர்ஷ், ஆருஷ், சிவம் ருத்ரனுக்காக கத்த, மறுபக்கம் அர்ஜுன், வெற்றி, அவி, மாறனுக்காக கத்தி கொண்டு இருந்தனர்.



யாழும், "அண்ணா தோத்துறாதீங்க" என்று குரல் கொடுக்க, ஜானவியோ, "அப்பா கண்டிப்பா ஜெயிக்கணும்" என்று உத்தரவு பிறப்பித்து கொண்டு இருந்தாள்.



நேரம் கடந்ததே தவிர இருவரில் யார் வெல்வார்கள் என்று சொல்லவே முடியவில்லை.



"இரண்டு பேருமே ஒருத்தருக்கு ஒருத்தர் சளச்சவங்களே இல்ல" என்று யாழ் சொல்லவும், "ஆனா இந்த வயசுலயும் மாமா மாஸ் காட்டுறார்" என்று தளிர் சொல்ல, "வயசானாலும் அவரோட ஸ்டைல் குறையவே இல்ல" என்று சாந்தினி சொல்ல, "நீங்கலாம் இவளோ நேரம் மாறனுக்கு தான் கை தட்டிக்கிட்டு இருந்திங்க நினைவு இருக்கா?" என்று அவி கேட்க, "நாங்க இல்லனு சொல்லலையே" என்று மூவரும் ஒரே போல் கூறினார்கள்.



ஒரு கட்டத்தில் மாறனும் ருத்ரனுமே நிறுத்தி விட்டார்கள்.



"டை தான்" என்று ஆதி சொல்ல, மாறன் யோசிக்கவே இல்லை, ருத்ரனின் காலில் விழுந்து விட்டான்.



காத்தியாயனி சிதம்பரத்திற்கே ஆச்சர்யம். மாறன் ஒருவரின் காலில் விழுகிறானா?



ருத்ரனோ அவனின் தோளை பிடித்து எழுப்பி விட்டு, "ரொம்ப திறமைசாலி நீ யங் மென்" என்று அவர் சொல்லவும், "நீங்க தான் ரொம்ப திறமைசாலி. இந்த வயசுலயும் எப்படி இவளோ பிட்டா இருக்கீங்க? சான்ஸ் லெஸ்" என்றதும், "அவரு யாரோட அப்பா?" என்று ஆதி வந்து நிற்க, "அதனால தான் இன்னும் ஆச்சர்யமா இருக்கு. உன் அப்பா எப்படி இவளோ திறமைசாலின்னு" என்று அவனை முறைத்து கொண்டே கூற, ருத்ரனோ, "ஹே என் மகன் ஒன்னும் அவளோ மோசம் இல்ல.. உன் தங்கச்சிய எப்படி தாங்குறான் தெரியுமா? ஏதோ ஒரு தடவை ஒரு தப்பு பண்ணிட்டான். அதுக்கு இன்னும் நீ அவனை இப்படி பாக்குறது எந்த விதத்துல நியாயம்?" என்றதும், அவனும் அவரை பார்த்து, "உங்க மகனை பார்த்தா முறைக்க தான் தோணுது. பட் அவன் ஒன்னும் கெட்டவன் எல்லாம் இல்லனு எனக்கு தெரியும். இல்லனா உங்க பையன் கை கால உடைச்சி போட்டு இருப்பேன்" என்றான்.



ருத்ரனோ புன்முறுவலுடன், "உனக்கு தைரியம் ஜாஸ்தி தான். என் முன்னாடியே என் பையன் கைய கால உடைச்சி போட்டுருவேன்னு சொல்ற" என்றவர் மாறனிடம் இன்னும் சிறிது நேரம் பேசிவிட்டு சென்று விட்டார்.



அன்று காலை உணர்விற்காக காத்தியாயனி தான் அனைவரையும் அவர்கள் வீட்டிற்கு அழைத்து இருந்தார்.



அனைவருக்கும் உணவு பரிமாறிக்கொண்டு இருக்கவும், லக்ஷித் லயனிக்கா தான் வந்து இருந்தார்கள்.



"எந்த சேட்டையும் பண்ணல தானே?" என்று சாந்தினி கேட்க, திரு திருவென்று விழித்தாள் லயனிக்கா.



"என்ன பண்ண லயு?" என்று ஆதர்ஷ் கேட்கவும், "அது டாடி..." என்று அவள் உதட்டை பிதுக்கி ஆரம்பிக்கும் போதே, "அம்மா.. யாரு அது என்னோட போட்டோல வரஞ்சி வச்சது?" என்று யாழின் குரலில் அவளின் குண்டு கண்களை உருட்டினாள் லயு.



ஆதர்ஷ் மற்றும் சாந்தினி ஒருவரை ஒருவர் பார்க்க, அந்த புகைப்படத்துடன் யாழ் வர, ஆதியோ அவளின் கையில் இருந்த புகைப்படத்தை வாங்கி பார்த்தான்.



அவனுக்கு சிரிப்பு தாங்க முடியவில்லை.



அவளை ஒரு ராக்ஷஸி போல, இரண்டு பற்கள், தலையின் மேலே இரண்டு கொம்பு என்று வரைந்து வைத்து இருந்தாள் அந்த ஐந்து வயது இளவரசி.



ஆதியோ வயிற்றை பிடித்து சிரித்து கொண்டு, "நான் உன்ன எப்படி வர்ணிச்சனோ அப்படியே லயு வரைஞ்சி வச்சி இருக்கா" என்று சொல்லவும், அருகில் இருந்த பூஞ்சாடியை எடுத்து அவள் அடிக்க துரத்த, அவனோ அடிவாங்காமல் ஓடினான்.



ஒருகட்டத்தில் அவளுக்கு தான் மூச்சு வாங்க ஆரம்பித்து விட்டது.



பிள்ளை பிறந்து இரண்டு மாதங்கள் தானே ஆகிறது. அது ஒரு பக்கம் அவளை படுத்தி எடுக்க, சோர்ந்து அவள் நின்று விடவும், ஆதியோ அவளை பின்னால் பார்த்தவன், "ஹே என்ன டி ஆச்சு?" என்று அவன் சென்று அவளை தாங்கி பிடிக்க, அவளோ அப்படியே அமர்ந்து விட்டாள்.



அவளுக்கு தண்ணீர் எடுத்து கொண்டு வந்தது என்னவோ லயனிக்கா தான்.



ஆதியையும் லயுவையும் பார்த்து, "என்ன இப்படி எல்லாம் பண்ணி நல்லவங்க மாதிரி வேஷம் போடுறிங்களா?" என்று அவள் கேட்கவும், அவர்களோ இல்லை என்று வேகமாக ஒரே போல் தலையாட்ட, "இந்த மாதிரி நீ பண்ணிக்கிட்டு இருந்தா, என்ன மன்னர்ஸ் சிவு, ஸ்ரே, ஆதவன், நிலவனுக்கு சொல்லி கொடுப்ப?" என்று யாழ் லயுவை பார்த்து கேட்க, அவளோ தலைகவிழுந்து நின்றாள்.



"அவளை இல்ல உங்கள சொல்லணும்" என்று ஆதிக்கும் திட்டு விழுந்தது.



"சாரி மூன்" என்றவள் சொல்லவும், "என்னவோ போ" என்று சொல்லி யாழ் அவளது அறைக்குள் நுழைந்து கொண்டாள்.



பின்பு அனைவரும் கலகலப்பாக பேசி கொண்டு இருந்தார்கள்.



யாழ் மட்டும் தான் அறையில் இருந்தாள். இதை பார்த்த ஆதி அங்கிருந்து நழுவி அவனின் மனையாளை பார்க்க சென்றான்.



யாருக்கும் தெரியாமல் பூனை போல உள்ளே நுழைந்தான் ஆதித்யன்.



யாழோ அவனை பார்த்தவள், "ஏன் இப்படி திருடன் மாறி வரீங்க?", என்று கேட்கவும், "ஷ்ஷ் கத்தாதே டி! அப்புறம் உன்னோட கார்ட்ஸ் வந்திற போறாங்க... என்னவோ சான்ஸ் கிடைச்சா உன் மேல நான் பாஞ்சிருவேன்னு நினைச்சுகிட்டு இருக்காங்க", என்று பற்களை கடித்து கொண்டு பேசினான்.



அவளோ சிரிப்பை அடக்கி கொண்டு, "அதானே உண்மை.. சான்ஸ் கிடைச்சா என்ன திரும்பி லோட் பண்ணி இருப்பிங்க", என்று அவளும் பாவமாக முகத்தை வைத்து கொண்டு கூறவும், "அடிப்பாவி! இப்போ உண்மையாவே பாயுறேன்", என்று அவளின் கன்னத்தை பிடித்து இதழை நெருங்க அவனின் இரண்டே மாதங்கள் ஆன இரண்டு மகன்களும் அழ ஆரம்பித்து விட்டனர்.



யாழ் சிரிக்க ஆரம்பித்து விட, சோர்ந்து அமர்ந்து விட்டான் ஆதித்யன்.



குழந்தைகள் அழும் சத்தத்தை கேட்டவுடன், வித்யா மற்றும் வைஷ்ணவி உள்ளே வர, அங்கே ஆதியை பார்த்தவர்கள், "உன்ன எத்தனை தடவ சொல்லிருக்கோம்! அவ கிட்ட வராதன்னு" என்று வித்யா அவனின் காதை பிடிக்க, அவனும், "ஐயோ மம்மி, என் பொண்டாட்டிய நான் பார்க்க வந்தது ஒரு குத்தமா?" என்று அவன் அவரிடம் இருந்து விடுபட்டு கொண்டே கேட்க, "நீ பார்க்க மட்டும் செய்ய மாட்டியே" என்று வைஷ்ணவி சொல்ல, "என் மேல உங்களுக்கு கொஞ்சம் கூட நம்பிக்கை இல்லையா?" என்று அவன் கேட்கவும், இருவரும் ஒரே போல், "இல்ல டா" என்று சொல்லவும், அவனோ காலை உதைத்து விட்டு சென்று விட்டான்.



இங்கோ தாரணியில் கை பிடித்து நடந்து கொண்டு இருந்தான் அர்னவ்.



அவளும் அவனின் தோளில் சாய்ந்து கொண்டே நடக்க, எதிரில் வர்ஷினியும் வருணும் வந்து கொண்டு இருந்தார்கள்.



அவர்களை பார்த்ததும், "வாங்க நம்ப இங்க இருந்து போகலாம்" என்று அர்னவ்வை பிடித்து தாரணி இழுக்க, "ஏன் டி?" என்று கேட்டவனிடம், "அவளுக்கும் எனக்கும் சுத்தமா ஆகாது" என்று அவள் சொல்லும் போதே அவர்கள் இருவரும் இவர்களை நெருங்கி விட்டு இருந்தார்கள்.



"எப்படி இருக்க தாரணி?" என்று வர்ஷினி கேட்க, "இருக்கேன் இருக்கேன்" என்று தாரணி வேண்டா வெறுப்பாக தான் பதில் அளித்தாள்.



அதற்கு காரணம் வர்ஷினிக்கும் தெரியும்.



"ஹே தாரு! காலேஜ் டேஸ்ல ஏதோ சும்மா உன்ன டீஸ் பண்ணனும்னு தான் வெறுப்பேத்துவேன். அதெல்லாம் இன்னும் நினைவு வச்சிக்கிட்டு ஏன் இப்படி பிஹேவ் பண்ற! உன்ன எனக்கு அப்பவே எவளோ பிடிக்கும் தெரியுமா? உங்கிட்ட தானே லெக்ச்சர் நோட்ஸ் கேட்பேன், ஏன் லன்ச் கூட ஒண்ணா தானே சாப்பிடுவோம்" என்ற வர்ஷினியை பார்த்து, "அது நான் நல்லா படிப்பேன்னு கேட்ப, லன்ச் உனக்கு கம்பெனி இல்லனனு சாப்பிடுவ" என்றதும், "நான் யாரு கிட்ட வேணா நோட்ஸ் கேட்டு இருக்கலாம், லன்ச் யாரு கூட வேணா உட்காந்து சாப்பிட்டு இருக்கலாம். ஆனா உன்ன மட்டும் ஏன் சூஸ் பண்ணேன் சொல்லு" என்ற வர்ஷினியை பார்த்து யோசித்து கொண்டு இருந்தாள் தாரணி.



அவள் சொல்வது உண்மை தான். அவளிடம் மட்டும் தான் இத்தனை உரிமையாக வந்து அவள் இன்று வரை கேட்டு இருக்கிறாள்.



"உன்ன ஹர்ட் பண்ணிருந்தா சாரி தாரணி" என்று வர்ஷினி கைகூப்ப போக, அவளோ, "சரி சரி விடு... இதோட நம்ப பிரண்ட்ஸ் ஓகே வா?" என்று இயல்பாக மாறிவிட்டாள்.



தாரணி எப்போதும் அப்படி தானே! குழந்தை மனம் கொண்டவள் அவள்.



பின்பு வர்ஷினி அவர் தந்தை செய்த விடயங்களை எல்லாம் சொல்ல, தாரணியோ, "உங்க அப்பாக்கு ரொம்ப தான் ஜாதி மேல பற்று.. நீ விடு.. அதான் உனக்கு வருண் அண்ணா இருக்காருல... நாங்க எல்லாம் இருக்கோம்" என்று பேசி வர்ஷினியுடன் நன்றாகவே ஒட்டிக்கொண்டாள்.



மாலை நேரம் அனைவரும் தேநீர் அருந்தி கொண்டு இருக்க, லக்ஷித் தான், "இது யாரோட பேட்?" என்று வந்து கேட்க, "அது வெற்றி அண்ணா பேட் லக்ஷித்" என்று யாழ் சொல்லவும், "வாவ் மாமா நீங்க கிரிக்கெட் ஆடுவீங்களா?" என்று அவன் கண்கள் விரித்து கேட்க, வெற்றியோ அவனை தூக்கிக்கொண்டு, "ஆடுவேன் டா செல்லமே!" என்றதும், "அவன் தான் கேப்டன்" என்று அர்ஜுன் சொல்ல, "எங்க டாடி கூட கேப்டன் தான்" என்று லயு வந்து ஆதர்ஷ் பக்கம் நின்றாள்.



"அர்ஜுன் அண்ணா ஆள் ரவுண்டர் தெரியுமா?" என்று யாழ் சொல்ல, "உன் புருஷன் கூட ஆள் ரவுண்டர் தான் மா" என்று சிவம் சொல்லி இருந்தான்.



"அவி அண்ணா தான் கீப்பர்" என்று அழகு சொல்ல, "எங்க சைட் சிவம்" என்று ஆதி கூறி இருந்தான்.



"மும்பை வர்சஸ் தமிழ் மக்கள் மேட்ச் வச்சிக்கலாமா?" என்று தளிர் சொல்ல, "நல்ல ஐடியா.. எங்களுக்கும் மும்பை மக்களை தோற்கடிக்க ஆசை தான்" என்று மாறன் சொல்ல, "ஹலோ எங்க முன்னாடி நிற்க கூட முடியாது நீங்க" என்று ஆருஷ் சொல்ல, "பார்க்கலாமா?" என்று வெற்றி கேட்க, "பார்க்கலாமே" என்று ஆதர்ஷ் முடித்து இருந்தான்.



"ஆனா இன்னும் பீப்பிள் வேணுமே" என்று சாந்தினி சொல்ல, "நான் என் பிரண்ட் பேமிலிய வர சொல்றேன்" என்று ஆதி சொல்ல, "எங்க லண்டன்ல இருந்தா?" என்று மாறன் கேட்க, "இல்ல சென்னைல இருந்து... என் கூட அவனும் லண்டன்ல படிச்சான். வேதாந்தம் குரூப்ஸ் சிஇஓ விக்ரம சத்திரியன்" என்று அவன் சொல்ல, "விக்ரமா? ரொம்ப ஸ்மார்ட், ஹண்ட்ஸம், பிரில்லியண்ட் கூட" என்று சாந்தினி சொல்ல, "அவங்க பேமிலில கூட நிறைய ப்ரோப்லேம்ஸ்ல? ரிஸ்ன்ட்டா தான் அவங்க அம்மா அப்பா கூட சேர்ந்தாங்க" என்று அகல்யா சொல்ல, "ஐயோ விஜய சாணக்கியனும் வருவாரா? எவளோ அழகு தெரியுமா அவர்?" என்று ஜானவி கனவு உலகில் பறக்க, "அவனுக்கு கல்யாணம் ஆகிருச்சு டி" என்று ஆதி அவளிடம் சொல்ல, "சைட் அடிக்கிறது தப்பா?" என்று அவளும் உதட்டை சுழித்து கொண்டாள்.



அடுத்து ஆதி யோசிக்கவே இல்லை. அழைத்து என்னவோ விக்ரமிற்கு தான்.



உயிரும் உறவும் குடும்பத்துடன் சத்திரியன் மற்றும் சாணக்கியரின் சேர்க்கை எத்தையாக கலகலப்புகளை கொண்டு வருமோ?
 

அத்தியாயம் 8



விக்ரமை அழைத்து இருந்தான் ஆதி.



"டேய் மச்சான் எப்படி டா இருக்க?", என்றவுடன், "நான் நல்லா இருக்கேன் டா நல்லவனே! இங்கிலாந்திலேயே செட்டில் ஆகிட்டன்னு நினைச்சேன். ஆனா அப்புறம் பார்த்தா இந்தியா வந்துட்ட! கல்யாணம் கூட பண்ணிட்டியாமே! இந்த பிரண்ட்ட மறந்துட்டியோன்னு நினைச்சேன்", என்று விக்ரம் நக்கலாக பேசவும், "மன்னிச்சிக்கோ டா... வேணும்னா கால்ல விழறேன்! நீ கூட ரொம்ப ஷேமமா இருக்க போல?", என்று அதே நக்கல் தொனியில் கேட்டு இருந்தான்.



"எனக்கு என்ன டா பிரச்சனை? என்ன சுத்தி இருக்குற பைத்தியக்கார கும்பல்லால தான் பிரச்சனை", என்கவும், ஆதி சத்தமாக சிரித்து விட்டான்.



"சரி சரி... நீயும் உன் பைத்தியக்கார கும்பலும் கிளம்பி சீக்கிரம் நான் சொல்ற ஊருக்கு வாங்க சரியா?", என்றவனிடம், "எதுக்கு?", என்று கேட்டவனிடம், "இட் இஸ் கோயிங் டு பி மும்பை வெர்சஸ் தமிழ் பாய்ஸ்", என்கவும், "நான் வந்து தமிழ் பாய்ஸ்க்கு சப்போர்ட் பண்ணனுமா அப்போ?", என்று கேட்டவனிடம் , "டேய் நீ எனக்கு சப்போர்ட் பண்ணனும் டா", என்றான் ஆதி.



"நோ நோ.. நான் வரேன்.. தமிழ் பாய்ஸ்க்கு சப்போர்ட் பண்றேன். சென்னை சூப்பர் கிங்ஸ் பேன் டா நான்.. வந்ததும் மீதி பேரு கிட்ட வேணா கேட்டு பார்த்துக்கோ .. நான் வைக்குறேன்", என்று வைத்து விட்டான் சத்திரியன்.



"நானே என் தலைல மண்ணை வாரி போட்டுகிட்டேன்" என்று ஆதி புலம்ப, "என்ன டா சொன்னான் உன் பிரண்ட்?" என்று கேட்க ஆதர்ஷிடம், "ஹான், அவன் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகனாம், அதனால அவன் தமிழ் பாய்ஸ் கூட ஆடுவானாம்" என்று ஆதி வெறுப்பாக கூறவும், "விடு அவங்க எல்லாரும் வரட்டும். யாரு எல்லாம் தமிழ் பாய்ஸ் கூட ஆடுறாங்க, யாரெல்லாம் மும்பை பாய்ஸ் கூட ஆடுவாங்கனு பார்த்துக்கலாம்" என்று ஆதர்ஷ் சொல்ல, "வின் பண்ண போறது எங்க டீம் தான்" என்று ஜானவி சொல்ல, "அப்படி சொல்லு ஜானு" என்ற சிவமை பார்த்து, "அண்ணா நான் நம்ப டீம்ன்னு சொன்னது தமிழ் பாய்ஸ் டீம்" என்றவுடன் ஆதி, ஆதர்ஷ், ஆருஷ் மற்றும் சிவமின் கண்கள் தான் விரிந்தன.



"இன்னும் கல்யாணமே ஆகல அதுக்குள்ள இப்படி கட்சி மாறிட்டியே" என்று ஆருஷ் சொல்ல, "அண்ணா இது அர்ஜுன்க்காக இல்ல, மாறன் மாமாக்காக" என்று அவள் மாறனை சைட் அடித்து கொண்டே சொல்ல, அர்ஜுன் கண்டு கொள்ள வில்லை. ஆனால் அழகுவிற்கு தான் கோவமாக வந்தது.



"அண்ணா நான் உங்களுக்கு சப்போர்ட் பண்றேன்" என்று அவள் ஆதியின் அருகில் வந்து நிற்க, அவர்களுக்கு அத்தனை மகிழ்ச்சி.



"நான் எங்க அண்ணாக்கு தான் சப்போர்ட் பண்ணுவேன்" என்கிற யாழை பார்த்து, "நீ எங்களுக்கு சப்போர்ட் பண்ணா தான் அதிசயம்" என்றான் ஆதி.



அகல்யாவோ, "நான் மும்பை டீம் தான் ப்பா" என்று சொல்ல, தளிர், "எனக்கு தமிழ் டீம்க்கு சப்போர்ட் பண்ண தான் மனசு சொல்லுது.. ஆனாலும் பாவம், நான் மும்பை டீம் கூட இருந்துக்குறேன்" என்று சொல்ல, "அடிப்பாவி ரசகுல்லா, இவனுங்களுக்கு சப்போர்ட் பண்றியா?" என்று உதட்டை சுழித்தாள் யாழ்.



"நான் தமிழ் பாய்ஸ்க்கு தான் சப்போர்ட்" என்று சாந்தினி சொல்லவும், "அப்படி போடு! மாதர் சங்க தலைவியே எங்க பக்கம் தான். இதுக்கு பிறகு என்ன கவலை?" என்று அவி சொல்லவும், "நானும் மும்பை மக்கள் பக்கம் தான்" என்று குதித்து கொண்டு வந்தாள் தாரணி.



"அர்னவ் எப்படியா இருந்தாலும் மும்பை டீம்க்காக தான் ஆடுவான்" என்று ஆருஷ் சொல்லவும், "சாரி நான் இந்த தடவை தமிழ் பாய்ஸ்க்காக ஆட போறேன்" என்றவுடன், வருண் தான், "நான் மும்பை பாய்ஸ்க்காக ஆடுறேன்" என்று சொல்லி விட்டான்.



"எல்லாரும் மிக்ஸ் அண்ட் மேட்ச் ஆன மாதிரி இருக்கு" என்று அர்ஜுன் சொல்ல, "அதான் உன் ஜோடி உன் கூடவே இருக்கே!" என்று சிவம் சொல்ல, "அவ தானே! அங்க கொஞ்சம் பாருங்க" என்று அவன் சொல்லவும், ஜானவியோ எச்சில் ஒழுகாமல், மாறனை சைட் அடித்து கொண்டு இருந்தாள்.



"வாட் எ மசல்ஸ்" என்று அவள் சொல்லவும், அழகுவோ, அதற்கு மேல் பொறுக்காமல், அவளிடம் வந்து, "இங்க பாரு ஜானு, என் ஆள இப்படி பார்க்குற வேலை வச்சிக்காத" என்று ஒற்றை விரல் நீட்டி மிரட்ட, "ஏன் இப்படி டென்சன் ஆகற? எனக்கு சித்தார்த் மல்ஹோத்ரா பிடிக்கும், அவனை கூட தான் சைட் அடிப்பேன் அதுக்காக கியாரா அத்வானி என் கூட வந்து சண்டையா போடணும். அர்ஜுன் முன்னாடி தான் சைட் அடிக்குறேன். அவன் பொங்குறானா? அமைதியா தானே இருக்கான். நீ ஏன் இவளோ பொங்குற? உனக்கு உன் காதல் மேல நம்பிக்கை இல்லையா என்ன?" என்று அவள் வெளிப்படையாக கேட்கவும், அழகுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை.



ஜானவியின் விடயத்தில் என்று இல்லை எப்போதுமே அழகுக்கு சிறிது தயக்கம் இருந்தது என்னவோ உண்மை தான். அது அவளின் காதலின் மீது நம்பிக்கை இன்மையால் அல்ல, அவளின் அழகின் மீது இருக்கும் சிறு தாழ்வு மனப்பான்மையால் தான்.



மாறனின் கண்கள் அழகில் தான் படிந்து இருந்தது.



அழகு ஒன்றும் பேசவில்லை. அங்கிருந்து நகர்ந்து சென்று விட்டாள்.



அனைவரின் கண்களும் இப்போது மாறனில் தான் படிந்தது.



அவனோ குரலை செருமிக்கொண்டு, "நான் என்னனு பார்க்குறேன்" என்று சொல்லி அழகுவின் பின்னால் சென்று விட்டான்.



அடுத்து ஜானுவின் காதை திருகி இருந்தான் ஆதி.



"ஆஹ்... வலிக்குது அண்ணா" என்று அவள் கத்த, "நல்லா வலிக்கட்டும். ஏன் டி இப்படி அழகுவ ஹர்ட் பண்ற?" என்கிற ஆதியை பார்த்து, "நான் எங்க ஹர்ட் பண்ணேன்? உண்மையா சொல்றேன், அவளுக்கு அவ மேல ஒரு தாழ்வுமனப்பான்மை அதான் அவளுக்கு பொறாமை" என்று அவள் சொல்ல, "அர்ஜுன் நீ ஏன் இன்னொரு பொண்ண கல்யாணம் பண்ணிக்க கூடாது. இந்த பொண்ணு எப்படி இருக்கான்னு பாரு" என்று ஆதர்ஷ் காட்ட, அர்ஜுன் அவனின் கைப்பேசியை வாங்க போகவும், அதை பிடுங்கியவள், "சாவடிச்சிருவேன்" என்று அர்ஜுனை மிரட்ட, "அப்போ உனக்கும் தாழ்வுமனப்பான்மையா?" என்கிற அர்ஜுனை பார்த்து, "எனக்கு உன் மேல போஸ்சஸிவ்" என்று உண்மையை ஒப்புக்கொண்டாள்.



அர்ஜுனோ சலிப்பாக தலையாட்டி கொள்ள, இங்கு அழகுவை தேடி வந்து இருந்தான் மாறன்.



அவளோ அங்கே நின்று வானத்தை வெறித்து பார்த்து கொண்டிருக்க, "அங்க என்ன தெரியுது?" என்றவனின் குரலில் அவள் அங்கிருந்து நகர்ந்து செல்ல எத்தனிக்க, அவனோ அவளின் கையை பிடித்தவன், "என்ன டி உனக்கு பிரச்சனை?" என்று கேட்க, "ஒன்னும் இல்ல" என்று சுரத்தையே இல்லாமல் சொல்ல, அவளின் தாடையை பற்றியவன், "என்ன இப்போ?" என்று கேட்க, "என்ன விட ஜானவி அழகா இருக்கா தானே! ஜானவி மட்டும் இல்ல, நீங்க வெளிநாட்டுக்கு போய் படிக்கும் போது அங்கையும் நிறைய அழகான பொண்ணுங்கள பார்த்து இருப்பீங்க தானே! நான்லாம் ஒண்ணுமே இல்ல" என்றவளின் கண்களில் கண்ணீர் தேங்கி இருந்தது.



"ஆமா உன்ன விட ஜானவி கலர் அதிகமா இருக்கா.. ஆனா அவளை விட வெள்ளையா பொண்ணுங்கள நான் ஜெர்மனில பார்த்து இருக்கேன். அதுனால என்ன?" என்று அவன் கைகளை கட்டி கொண்டு கேட்க, "எனக்கு என்ன பார்க்கும் போது அழகாவே இல்ல மாமா" என்றவள் தலைகவிழ்ந்து சொல்ல, "சரி அழகுனா என்ன?" என்று கேட்கவும் சட்டென அவனை நிமிர்ந்து பார்த்தாள்.



"சொல்லு.. அழகுனா என்ன? எனக்கு தெரிஞ்சி என் வாழ்க்கைல நான் பார்த்த அழகனா பொண்ணு என் அம்மா தான். அதுக்கு அடுத்து யாழும் மதுவும், இப்போ நீ... இங்க பாரு அழகுக்கும் கலருக்கும் நிறைய வித்யாசம் இருக்கு... அப்படி பார்த்தா யாழ் ஆதியை எடுத்துக்கோ..ஆதி எவளோ கலர்ரா இருக்கான். ஆனா யாழ் மாநிறம் தான். ஆனா அவ பின்னாடியே குட்டி போட்ட பூனை மாதிரி சுத்தல.. கலர் வேற, அழகு வேற, என்ன பொறுத்தவரைக்கும், என்னை எப்பவுமே மனசுல சுமக்குற நீ தான் அழகா தெரியுற, ஜானவி சும்மா உன்ன வெறுப்பேத்துறா... நீ உன்னை நம்பு... உன்ன யாரும் அழகுன்னு சொல்லணும்னு அவசியம் இல்ல.. நீயே அழகு மயில் தானே! அப்புறம் என்ன டி? கல்யாணம் முடியட்டும். என்னோட ஸ்டார்ட் அப் அக்கவுண்ட்ஸ் எல்லாம் நீ தான் பார்க்க போற... இப்படியே இந்த ஊர்ல வெட்டியா இருக்கறதுனால தான் உனக்கு இப்படி எல்லாம் தோணுது. வேலை பாரு, நாலு பேரு கிட்ட பேசு, பழகு, அப்போ தான் மூளை வேலை செய்யும்" என்று அவளின் தலையில் செல்லமாக தட்டவும், அவளும் புன்னகைத்தாள்.



அவளின் கண்களில் இன்று மாறன் உயர்ந்து நின்றான். எப்போதும் அவனிடம் மாமன் மகன் என்கிற உரிமை இருக்கும், அது காதலாகவும் மலர்ந்து இருந்தது. ஆனால் இன்று மாறனின் மேல் அவளுக்கு தனி மரியாதையே வந்து இருந்தது.



அவனின் சிந்தனைகள், முற்போக்குத்தனம் என்று அனைத்தையும் நேசிக்க துவங்கி இருந்தாள்.



"இன்னும் என்ன யோசிக்கிற?" என்றவனிடம், எதுவும் இல்லை என்று தலையசைத்து, அவனை இறுக அணைத்து இருந்தாள் அழகு.



அவனும் அவளை அவனின் நெஞ்சில் சுமக்க துவங்கி இருந்தான்.



இவை அனைத்தையும் பார்த்த ஆருஷ், ஆதி, ஆதர்ஷ், வெற்றி, அவி மற்றும் சிவமின் கண்களில் ஒரு நிம்மதி புன்னகை.



சிவம் இதை படம் எடுக்க, "எதுக்கு டா போட்டோ எடுக்குற?" என்று வெற்றி கேட்க, "யூஸ் ஆகும்" என்றவன் அதை அவனின் கைப்பேசியில் வைத்து கொண்டான்.



அடுத்த நாள் விடிய, அவர்களது உயர் ரக காரில் வந்து இறங்கி இருந்தது வேதாந்தமின் குடும்பம்.



அவர்களை வரவேற்க தயாராக இருந்தனர் ருத்ரனின் குடும்பம்.
 

அத்தியாயம் 9



"வாங்க மிஸ்டர் வேதாந்தம்" என்று ருத்ரன் சொல்ல, "மினிஸ்டர் சார், இந்த மிஸ்டர்லாம் வேண்டாமே" என்றவர் சொல்ல, விஷ்ணுவோ, "டேய் வேது! எப்படி டா இருக்க?" என்று கேட்டுக்கொண்டே அவரை கட்டி தழுவினார்.



விஷ்ணுவும் வேதாந்தமும் தொழில் முறை நண்பர்கள் கூட!



அவர்களை தொடர்ந்து விக்ரம், வாகினி, விஜய் மற்றும் வர்ஷா அவரவர் துணையுடன் இறங்கினார்கள்.



ஆதி விக்ரமை பார்த்ததும், "விக்கி" என்று சொல்லிக்கொண்டே அருகில் செல்ல, அவனும் வந்து அவனை அணைத்து கொண்டான்.



"எப்படி இருக்க டா லண்டனின் அழகனே" என்று விக்ரம் கேட்க, "நான் நல்லா இருக்கேன் டா" என்று ஆதி சொல்லும் போதே, "அது என்ன லண்டனின் அழகனே" என்று ஆதியின் பின்னே யாழும் வந்தாள்.



"உனக்கு தெரியாதா மா? அவன் பின்னாடி தான் லண்டன்ல இருக்க பாதி பொண்ணுங்க சுத்துனாங்க... அது மட்டும் இல்ல, சார் எப்போ டிஸ்கொதேக் போனாலும் அவருக்கு கிடைக்குற வரவேற்பு இருக்கே" என்று ராகமாய் விக்ரம் இழுக்க, யாழோ ஆதியை முறைக்க துவங்கினாள்.



"டேய் டேய்.. உன்ன கூப்டதுக்கு உன்னால என்ன பண்ண முடியுமோ பண்ற டா... எங்க உன் வைப்?" என்று அவன் கேட்கும் போதே விக்ரமின் அருகில் அவர்களது மகன் விதார்த்தை தூக்கி கொண்டு வந்தாள் சான்வி.



"ஹாய்" என்றவள் சொல்லவும், "எப்படி மா இவன வச்சி சமாளிக்குற?" என்கிற ஆதிக்கு, "உங்கள நான் வச்சி சாமளிக்கலயா?" என்று யாழ் அவனுக்கு பதில் கொடுக்க, விக்ரமோ, "உனக்கு செம்ம வைப் டா" என்று சிரித்து விட்டான்.



அடுத்து ஒரு பக்கம் விஜயுடன் இறங்கினாள் மைத்திரி. மாதமாக வேறு இருக்கிறாள்.



"ஏன் மா மாசமா இருக்கும் போது இப்படி ட்ராவல் பண்ணி வர?" என்று கொற்றவை கேட்க, "நல்லா கேளுங்க ஆண்ட்டி! எவளோ சொன்னாலும், நான் வருவேன், எனக்கு ஆசையா இருக்குனு ஒரே அடம் பண்ணி வந்துட்டா.." என்று விஜய் அவளை முறைக்கவும், அவளோ பாவமாக முகத்தை வைத்து கொண்டாள்.



"சரி சரி விடு ப்பா.. நீ வா மா" என்று வித்யா அவளை உள்ளே அழைத்து சென்று விட்டார்.



வாகினியின் அருகில் வந்தாள் சாந்தினி.



"நீங்க டாக்டர் வாகினி தானே? உங்கள பத்தி ரிஸ்ன்ட்டா ஒரு ஆர்டிகள் படிச்சேன். தனியா ஒரு ஹாஸ்பிடல்ல கட்டி ஆளுரிங்க! ரியலி யு ஆர் கிரேட்!" என்ற சாந்தினியை பார்த்து, "நான் ஒன்னும் கிரேட் இல்ல சாந்தினி! என் அப்பா என் கூட இருந்தாரு, என் ஹஸ்பேண்ட் சப்போர்ட், என் இரண்டு தம்பிங்களையும் மீறி என் கிட்ட கூட யாரும் வர முடியாது. அதுவும் என் தங்கச்சி அவளோ போஸஸசிவ், என் மச்சினன் இருக்கானே காட் அவனுக்கு என் மேல சின்ன கீறல் பட்டா கூட அவங்க அண்ணாவையே திட்டிருவான். இவளோ பேரு என்ன சுத்தி இருந்தாங்க... ஆனா இப்படி யாருமே இல்லமா தனியா உங்க கம்பெனியை உருவாக்கி சமாளிக்கிற நீங்க தான் கிரேட். உங்களோட ஆர்ட்டிகளும் நான் படிச்சிருக்கேன். எவளோ போல்ட் ஸ்டேட்மென்ட் நீங்க கொடுத்தது, "பெண்களுக்கு நீங்க உதவ வேணாம், அவங்கள முடக்கமா இருந்தா போதும்" இது தான் உண்மை. நமக்கு யாரும் உதவலாம் வேணாம். வி ஆர் கேப்பபில்" என்று வாகினியும் சாந்தினிக்கு புகழாரம் சூட்டினாள்.



"இப்போ ரிசன்ட்டா இன்னொரு ஆர்டிகள் படிச்சேன். அவங்க கூட என்ன ரொம்ப இம்ப்ரஸ் பண்ணிட்டாங்க" என்று சாந்தினி சொல்ல, "அந்த ஆகாயபுரி ஸ்கூல் பிரின்சிபல் இன்டெர்வியூ தானே?" என்று வாகினி கேட்கவும், அவளும் ஆமோதிப்பாக தலையசைத்தாள்.



"ஆமா... அவங்க இன்டெர்வியூ ரொம்ப இன்ஸ்பைரிங்கா இருந்தது... அவங்க முழு கதையும் அடுத்த வாரம் புக்கா ரிலீஸ் பண்ண போறாங்களாம். கண்டிப்பா படிக்கணும்" என்று சாந்தினி சொல்ல, "ம்ம் நானும் வாங்கணும்னு இருக்கேன், அதோட டைட்டில் கூட..." என்று வாகினி யோசிக்க, "குமரகம்" என்று முடித்து இருந்தான் பார்த்தீவ்.



"ஹாய் கலெக்டர் சார்" என்று சாந்தினி சொல்ல, "ஹலோ நைஸ் டு மீட் யு" என்று பார்த்தீவ் சொல்ல, இருவரும் அறிமுகமாகி கொண்டார்கள்.



விஜயிடம் வந்தான் ஆருஷ்.



"ஹாய்! நீங்க தானே விஜய சாணக்கியன். உங்க அக்கா கூட சேர்ந்து ஒரு ஹாஸ்பிடல் ப்ரோடக்ட் கொண்டு வந்து இருக்கீங்க. தட் இஸ் ரியலி குட். உண்மையாவே அப்போர்ட்டபிள் கூட! இந்த மாதிரி பிஸ்னஸ் மென் பாக்குறது எல்லாம் அபூர்வம் தான்" என்று ஆருஷ் சொல்ல, "நோ நோ அப்படி எல்லாம் இல்ல, நீங்க தான் ஒரு ஹாஸ்பிடல் கட்டிக்கிட்டு இருக்கீங்க ரைட்! உங்க பிரண்ட் கூட சேர்ந்து..." என்று விஜய் துவங்கும் போதே, "பிரண்ட்ஸ் இல்ல எதிக்கல் எனிமிஸ்" என்று வந்து அமர்ந்தான் சிவம்.



அவர்கள் இருவரையும் அவன் பார்த்து விட்டு, "எனிமிசா? அப்புறம் எப்படி பார்ட்னரா இருப்பீங்க?" என்று கேட்க, "இவன் பொண்டாட்டி தான் என் பெஸ்ட் பிரண்ட்" என்று சிவம் சொல்ல, ஆருஷோ, "அவன் பொண்டாட்டி என் பெஸ்ட் பிரண்ட்" என்று சொல்ல, 'சரி தான் நம்பள மாதிரி தான் போல இவங்களும். எனிமிஸ் எனிமிஸ்னு கூடவே எல்லாத்துக்கும் இருப்பாங்க போல' என்று மனதில் நினைத்து கொண்டான் விஜய்.



பிரணவ்விடம் வந்தான் மாறன்.



"நீங்க தானே ஏசிபி பிரணவ்" என்று மாறன் கேட்டுக்கொண்டே அவனின் முன் மோர் கொடுக்க, "நீங்களாவது என்ன ஏசிபின்னு ஒத்துக்குறீங்களே! என் பொண்டாட்டி என்ன குக்கா தான் ட்ரீட் பண்ரா" என்று சொல்லும் போதே, வர்ஷா, "பிரணவ் இங்க பாருங்க உங்க பொண்ணு ஆய் போய்ட்டா வந்து டைப்பர் செஞ் பண்ணுங்க" என்று கத்தினாள்.



மாறன் சிரிக்க, "பாஸ், கல்யாணம் ஆகி குழந்தை வந்தா நீங்களும் இதை எல்லாம் பண்ணனும்" என்று சொல்லி அங்கிருந்து நகர்ந்து விட்டான்.



விக்ரமிற்கு வெற்றி தான் மோர் கொண்டு வந்து கொடுத்தான்.



"நீங்க தான் வெற்றி வேந்தன் ரைட்? ஆர்கானிக் காய்கறி பழங்கள்லாம் நீங்க தானே எக்ஸ்போர்ட் அண்ட் இம்போர்ட் பண்றீங்க?" என்று விக்ரம் அவனை பார்த்து கேட்க, "ம்ம்... நீங்க ஆதியோட பிரண்ட்ன்னு தெரியும். ஆனா இதுலலாம் இன்டெரெஸ்ட் இருக்கா?" என்று வெற்றி கேட்க, "ஒரு இன்வெஸ்ட்மென்ட் பன்னலாம்னு இருக்கேன்" என்று சொன்னவன் அப்படியே, "நான் தமிழ் பாய்ஸ் கூட தான் கிரிக்கெட் ஆடலாம்னு இருக்கேன்" என்றதும், "கேள்வி பட்டேன். வாங்க மத்தவங்கள இன்ட்ரோ பண்றேன்" என்று அவனை அழைத்து கொண்டு சென்றான்.



ராகவ் தனியாக நிற்க, "இந்தாங்க பாஸ்" என்று அவனின் முன் மோர் குவளையை நீட்டி இருந்தான் அவி.



"ஹாய்" என்று இருவரும் கை குலுக்கி பேச ஆரம்பித்து இருந்தார்கள்.



இதே சமயம் கலாவதியிடம் பேசி கொண்டு இருந்தார்கள் வைஷ்ணவி, வித்யா மற்றும் கொற்றவை.



"ஒரு பொண்ணுக்கு இவளோ முன்கோபம் இருக்க கூடாது இதுக்கு நான் தான் சிறந்த எடுத்துக்காட்டு" என்று கலாவதி நடந்த அனைத்தையும் சொல்லி இருந்தார்.



ஏனோ அவர்கள் மூவரையும் பார்த்த பின்பு இத்தனை நாட்கள் அவர் மனதில் அழுத்தி கொண்டு இருந்த விடயங்களை போட்டு உடைத்து விட தான் மனம் அவருக்கு பரபரத்தது.



மனது இப்போது லேசானது போன்ற உணர்வு.



கொற்றவையோ, "நீங்க மட்டும் இல்ல நானுமே, என் முன்கோபத்துனால தான் என் வாழ்க்கையை தொலைச்சிட்டேன்" என்று அவரின் கையை பிடித்து ஆறுதல் கூற, "ஆனா இப்போ நீங்க இரண்டு பேரும் தான் நல்லா ரோமன்ஸ் பண்ணிக்கிட்டு இருக்கீங்க" என்று வைஷ்ணவி சொல்லவும், "ஆமா, அத விட இவங்கள பாரு... சண்டை சண்டைன்னு நாலு புள்ள பெத்து வச்சிருக்காங்க... இன்னும் சண்டை இல்லமா இருந்து இருந்தா..." என்று வித்யா கலாவை சீண்ட, அவருக்கோ வெட்கம் வந்து விட்டது.



மறுபக்கமோ, "அவனுக்குலாம் இவளோ ஈஸியா சாவு கொடுத்து இருக்க கூடாது" என்று ஆதர்ஷ் சொல்ல, "அவனே சூசைட் பண்ணிகிட்டான். அதனால ஒன்னும் பண்ண முடியல..." என்று விஜய் சொல்லவும், "ரொம்ப பாவம் தான் நீங்க...." என்று அர்ஜுன் சொல்ல, "இதுவும் கடந்து போகும்" என்று விக்ரம் சொல்லி இருந்தான்.



"ஆனா உங்க பாண்டிங் ரொம்ப நல்லா இருக்கு" என்று அர்ஜுன் சொல்ல, "எனக்கு உங்க எல்லாரோட பாண்டிங் ரொம்ப பிடிச்சி இருக்கு" என்று பார்த்தீவ் அவர்களை பார்த்து சொல்லி இருந்தான்.



இதே நேரம், "எப்படி தான் நீங்க எல்லாம் மாசமா இருந்திங்களோ?" என்று கேட்டுக்கொண்டே களைப்பாக அமர்ந்தாள் மைத்திரி.



"என்ன எத்தனை தடவை கலாய்ச்சி இருப்ப" என்று வர்ஷா அவளை பார்க்க, "தப்பு தான் மா" என்று மைத்திரி சொல்லவும், "ஒரு ஒருத்தருக்கு ஒவ்வொரு மாதிரி... எனக்கு நிறைய க்ராவிங்ஸ் இருந்துது... பாவம் வீர் ராத்திரி மீன் குழம்பு எல்லாம் செஞ்சி எடுத்துட்டு வந்து கொடுத்தார்" என்று தளிர் சொல்ல, வர்ஷாவோ, "நானும் பிரணவ் கிட்ட நடுராத்திரி பிரியாணி எல்லாம் கேட்டு இருக்கேன்" என்று சொல்லவும், "பாவம் டி ம்மா உங்க புருஷங்க எல்லாம்" என்று சொல்லி இருந்தாள் வாகினி.



"அக்கா நீங்க சொல்லுங்க, எப்படி இரண்டு பசங்கள சமாளிக்கிறீங்க?" என்று ஸ்ருஷ்டி கேட்க, "அவங்க எங்க சமாளிக்கிறாங்க! ஆத்விக் ஸ்கூல்க்கு போறான். ஆதித்திரிய அத்தை இல்ல மாமா இல்லனா என் அப்பா பார்த்துக்குறார்" என்று சான்வி சொல்ல, "உங்க வீட்லயே ஒரு குழந்தை இருக்கே" என்று சாந்தினி சொல்ல, "இவ அப்பாக்கு பெண் பிள்ளைகள் தான் பிடிக்குமாம்" என்று வாகினி கூற, "அது என்ன எல்லா ஆம்பளைங்களுக்கு பெண் பிள்ளைகள் பிடிக்குது" என்று கேட்ட ஜானவியிடம், "அது தான் உலக நியதி" என்று வர்ஷா முடித்து இருந்தாள்.



அடுத்து அனைவரும் ஒன்றாக உண்டார்கள்.



நிறைய பேசினார்கள்.



ஒருவருக்கு ஒருவர் சலித்தவர்களே இல்லை. இங்கே ஜானவி, அழகு என்றால் அங்கே வர்ஷா அவர்களுக்கு சளைக்காமல் பேசினாள்.



"சரி சரி டீம் சொல்லுங்க. யாரு யாரு கூட ஆட போறீங்க?" என்று அகல்யா ஆர்வமாக கேட்கவும், ஆதர்ஷ் மற்றும் வெற்றி ஒருவரை ஒருவர் பார்த்து கொள்ள, விக்ரம் மற்றும் விஜயும் ஒருவரை பார்த்து கொண்டார்கள்.



"நான் தமிழ் பாய்ஸ் வெற்றி கூட" என்று சத்திரியன் வெற்றியுடன் கை கோர்க்க, "நான் மும்பை டீம்" என்று சாணக்கியன் ஆதர்ஷுடன் சேர்ந்து கொண்டான்.



இன்னும் யார் யார் எந்த அணியில் சேருவார்களோ?
 
Top