எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

நேசத்தின் வாசம் மாறுமோ!_ கதை திரி

ஹாய்... தோழமைகளே

"நேசத்தின் வாசம் மாறுமோ" கதையின் அத்தியாயம் தொடர்ந்து வரும் மக்களே. நீங்களும் தொடர்ந்திருங்கள் 🥰
 
அத்தியாயம் : 1

செக்க சிவந்த வானம் செந்தாமரையாக மலர்ந்து வெண் தாமரையாக மாறும் நேரம் கீழ் வானில் உதித்த சூரிய கதிர்கள் அந்த கார் கண்ணாடியை துளைத்து கொண்டு அவன் முகத்தில் பட்டது. சிறு ஒளியாக இருந்து பெரும் வெளிச்சமாக உறுமாறிய கதிர்கள் அவனை எழும்பும் முயற்சியில் முனைப்பாக இருக்க, கையை நெற்றியில் பதித்து கண்களை மறைத்தபடி கார் சீட்டில் சாய்ந்து படுத்து இருந்தவனிடம் சிறு சலனமும் இல்லை. ஆனால் மனம் மட்டும் புயலில் சிக்கிய துரும்பேன தவித்து கொண்டிருந்தது.

அவன் ஜெயதீபன். எதற்கும் அலட்டி கொள்ளாத குணம் கொண்டவன். ஆனால் நினைத்ததை நடத்தி முடிக்கும் பிடிவாதம் அதிகம். ஊட்டியின் விரல் விட்டு எண்ண கூடிய பணக்காரர்களில் அவனும் ஒருவன். அவர்கள் கம்பேனி தேயிலை மற்றும் சாக்லேட் ஏற்றுமதியில் முதலிடத்தில் இருந்தும், பலகோடி சொத்து மதிப்பு இருந்தும், அவன் விரும்பியது சிறு தொழில் தான். அதையும் இரண்டு வருடத்திற்கு முன்பு தொடங்கி விட்டான்.

அது கொடுத்த மகிழ்ச்சியில் எப்போதும் புன்னகை முகமாய் வளம் வருவான். ஆனால் இன்று அவன் வாழ்வில் நடந்ததை நம்பவும் முடியாமல், ஏற்கவும் முடியாமல் தவித்து கொண்டிருந்தான். அவன் அம்மா இத்தனை பெரிய துரோகத்தை அவனுக்கு செய்வார் என்று ஜெயதீபன் சிறு துளி கூட யோசித்தது இல்லை.

துரோகம் என்பதை விட, இரு பெண்களின் பாவத்தை அவன் தலையில் சுமத்த முயன்றார் என்றே சொல்ல வேண்டும்.

அவரும் ஒரு பெண் தானே! ஒரு வளர்ந்த ஆண் மகனின் அன்னை. நல்லது, கெட்டது அறிந்தவர். அவரால் எப்படி இப்படி செய்ய முடிந்தது? என்ற கேள்வியை தாண்டி ஜெயதீபனால் வெளியே வர முடியவில்லை.

தன் அம்மாவா இப்படி?! என்ற கேள்வி அவனிடம் எத்தனை முறை எழுந்ததோ! கணக்கு இல்லை. ஆனால் உண்மை அவர் செய்ததை அவன் முகத்தில் அடித்து கூறி இருக்க, அதை ஏற்க தான் அவனால் முடியவில்லை.

எத்தனை மணி நேரம் இதே சிந்தனையுடன் அப்படியே அமர்ந்து இருந்தானோ! அவனின் போன் ஒளி எழுப்ப, சிறு எரிச்சலுடன் கண்களை திறந்தவன் அவன் எதிர்பார்த்த அழைப்பா என்று செல்போன் திறையை பார்த்தான்.

அதில் ஸ்வீட் மாம் என்ற பெயர் மின்னி மறைந்து கொண்டிருந்தது. அழைப்பு அவன் அம்மாவிடம் இருந்து என்றதும் அதீத கோபத்துடன் அதை வெறுத்து பார்த்தவன் அழைப்பை எடுத்தாமல் விட, அது சில நொடிகளில் ஓய்ந்து போனது.

செல்போனை வெறித்தபடி அமர்ந்து இருந்தவனுக்கு தவறிய அழைப்பு எழுபத்தி எட்டு என்று காட்டியது செல்போன். இன்னும் சில எண்களில் இருந்து பல தவறிய அழைப்பு வந்திருக்க, அதில் ஒருத்திக்கு மட்டும் அவன் பதில் சொல்லும் கடமை இருந்தது. ஆனால் இப்போது அவன் யாரிடமும் பேசும் நிலையில் இல்லை என்பதால் மீண்டும் பழைய நிலையிலேயே அமர்ந்து விட்டான்.

ஆனாலும் 'நீ அவளுக்கு பதில் சொல்லி தான் ஆக வேண்டும். எவ்வளவு சீக்கிரம் சொல்கிறாயோ அவ்வளவு நல்லது' என்று மூளை அறிவுறுத்த தீபன் மனம் அதை செய்யும் நிலையில் இல்லை.

மீண்டும் அவன் அம்மா செய்த துரோகமே மனதில் எழுந்து பேயாட்டம் போட, 'அவரால் எப்படி முடித்து?' என்ற எண்ணத்தை தான்டி ஜெயதீபனால் வெளி வர முடியவில்லை. ஏமாற்றம் தாங்காத அவன் மனம் இன்னும் தவித்து கொண்டே இருந்தது. அதுவும் பெற்ற அன்னை செய்த செயல் துளியும் ஏற்ப்புடையதாய் இல்லை.

கீழ் வானில் உதித்த சூரியன் உச்சிக்கு வரும் வரை ஜெயதீபனின் நிலை அதே நிலையிலேயே தொடர, அவன் எதிர்பார்த்த அழைப்பும் வந்தது.

அதில் இதயம் வெளியே வந்து குதித்து விடுவது போல் துடிக்க, அதை வெளிக்காட்டி கொள்ளாமல் இருக்க பெரிதும் முயன்றபடி அழைப்பை ஏற்றவன் "சொல்லுங்க சுரேஷ் கண்டு பிடிச்சிட்டிங்களா?" என்றான் தவிப்பும் ஆர்வமுமாய்.

அந்த பக்கம் என்ன சொல்ல பட்டதோ! "ம்.." கொட்டி கேட்டு கொண்டவன் "சரி இனிமேல் நான் பார்த்துக்குறேன். உங்க பேமண்ட் இன்னும் கொஞ்ச நேரத்துல உங்க அக்கவுண்டுக்கு வரும். அப்பறம் நான் சொன்னதையும் மறக்காம செஞ்சிடுங்க, எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம். நான் உங்க காலை எதிர் பார்ப்பேன்" என்று அழைப்பை துண்டித்த ஜெயதீபன்,

படபடத்த இதையத்தை சரி செய்ய வாய் வழி சில முறை காற்றை உள்ளிழுத்து ஊதினான். அப்படியும் அவன் மனம் சமன் பட மறுக்க, அடங்கா மனதுடன் வாட்ஸ் ஆப் சென்று சுரேஸ் எண்ணில் இருந்து வந்திருந்த போட்டோவை திறந்து பார்த்தான்.

அதில் ஒரு பெண் கையில் குழந்தையுடன் இருக்க. அந்த பெண்ணை ஆராய்ந்தது அவன் கண்கள்.

இளம் பச்சையும் வான கலரும் சேர்ந்த கலரில் காட்டன் புடவை கட்டி இருந்தாள். நன்றாக பூசிய உடல்வாகு. வட்ட முகம், சற்று சதை பற்றுடன் கொலு கொலுவென இருந்த கன்னங்களுக்கு இணையான பெரிய கண்கள், அடர் புருவம், ஆனால் இந்த காலத்து பெண்கள் போல் அதை திருந்த அவள் எந்த முயற்சியும் எடுத்திருக்கவில்லை. அதன் நடுவே சிறிய பொட்டு. அளவான நாசி, அதில் வெள்ளை கல் மூக்குத்தி மின்னி கொண்டிருக்க, முகத்தில் அளவான புன்னகை.

அவள் உடல் எடைக்கு ஏற்ப இடை இரண்டு மடிப்பாக இருக்க, அதை சிம்மாசனமாய் கொண்டு அமர்ந்து இருந்தான் அவள் மகன். அப்படியே முழுக்க அவன் அன்னையின் ஜாடை, உடல் வாகு மட்டும் தன்னை போலோ! என்று நினைத்த ஜெயதீபனின் பார்வை மீண்டும் அவன் மனைவியிடம் வந்தது.

ஆம்... மனைவி தான். நேற்றுவரை அப்படி ஒருத்தி இருக்கிறாள் என்று தெரியாமலேயே, இன்னோரு பெண்ணை திருமணம் செய்ய மண்டபம் வரை சென்றவன், கடைசி சில நிமிடங்களில் உண்மையை அறிந்து வெளியேறி இருந்தான்.

போட்டோவை விழி அசைக்காமல் பார்த்த ஜெயதீபன் 'இவள் தன் மனைவி' என்று தனக்கு தானே சில முறை சொல்லி மனதில் பதிந்து கொண்டான். அவன் கண்களுக்கு அவள் அழகு, அழகு இல்லை என்பதை எல்லாம் தாண்டி 'என் மனைவி' என்ற எண்ணம் தான் வந்தது.

மீண்டும் ஒரு முறை அவளை கவனித்து பார்த்தவன், கார் ரிவர் வியூ கண்ணாடியில் அவன் முகம் பார்த்தான்.

அகன்ற நெற்றி, அதில் வில்லாய் வளைந்த புருவம், கூர்மையான நாசி, ட்ரிம் செய்யப்பட்ட தாடி, அவளாய் வெட்டப்பட்ட மீசை, எனக்கு புன்னகையின் முகவரி தெரியும் என்று கூறும் இதழ்கள். ஜெல் வைத்து தூக்கி வாரிய தலைமுடி, ஜிம்மில் ஓர்க்கவுட் செய்து இறுகிய உடல், என பார்க்க ஹிந்தி பட ஹீரோ போல் இருந்தான்.

அதற்கு மேல் கண்ணாடியில் அவன் உருவம் தெரியாமல் போக குனிந்து தன்னை தானே பார்த்தான். நேற்று இன்னொரு பெண்ணுடன் திருமணத்திற்கு அணிந்திருந்த ஷெர்வாணி அவனை பார்த்து சிரித்தது.

"தீப் நாம சேம் கலர்ல ட்ரெஸ் எடுக்கலாம்" என்று ஹரிதா சொன்னது தெவையில்லாமல் நினைவு வர, நூல் அளவில் ஒரு பெண் வாழ்க்கையை கெடுக்காமல் விலகி இருக்கிறோம் என்று நினைத்தவனால் அவன் அன்னை மீதான கோபத்தை அடக்க முடியவில்லை.

எத்தனை பெரிய வேலை செய்து இருக்கிறார். எப்படி முடிந்தது? எத்தனை முறை இந்த கேள்வியை தனக்கு தானே கேட்டும் பதில் தான் கிடைக்கவில்லை ஜெயதீபனுக்கு. மாறாக கோபமும், ஆதங்கமும் தான் பெருகியது.

மீண்டும் குணிந்து தன்னை பார்த்தவன் அதற்கு மேல் அந்த உடையில் இருக்க விருப்பம் இல்லாதவனாய் அருகில் இருந்த கடைக்கு சென்று டீ சர்ட், ஷார்ட்ஸ்க்கு மாறியவன், அணிந்திருந்த உடையை ஒரு கவரில் போட்டு எடுத்து வந்து ரோட்டோரமாய் இருப்பவரிடம் கொடுத்து விட்டுதான் மீண்டும் காரில் ஏறினான்.

மீண்டும் அந்த போட்டோவை திறந்து அவன் மனைவியையும் அவனையும் பார்த்து கொண்டவன், ஜெல் வைத்திருந்த முடியை கலைத்து ஒரு பக்கமாய் அழுத்தி விட்டு மீண்டும் மனைவி மகனை பார்த்தான். இப்போது அவர்களுக்கு இணையாக அவனும் இருப்பதாய் தோன்றியது.

அந்த எண்ணத்துடனே மனைவி மகனை விழி எடுக்காமல் பார்த்தவன் அப்போது தான் மகன் சட்டையில் இருந்த ஐடி கார்டை கவனித்தான். பெயர் ஜெ. தேவேஷ் எல்கேஜி என்று இருக்க, அதுவரை இருந்த இறுக்கம் மறைந்து சிறு புன்னகை ஜெயதீபன் இதழ்களில்.

"சார் ஸ்கூல் போற அளவு வளர்ந்துட்டாரா? என் இன்ஷியல் தான் போட்டு இருங்கா, ஆனா என்னை பற்றி சொல்லி இருப்பாளா?" என்று நினைத்தவன் "இவ பெயர் என்ன? பச் அதை கேட்க மறந்துட்டோமே..!" என்று நினைத்த ஜெயதீபன் மீண்டும் சுரேஷிற்கு அழைத்தான்.

அவன் அழைப்பை ஏற்கும் வரை பொறுமை இல்லாமல் அமர்ந்து இருந்தவன் அவன் எடுத்ததும் "என் வைஃப் பெயர் என்ன சுரேஷ்" என்றான் .

அதில் அழைப்பில் இருந்தவன் ஒரு நொடி திகைத்து பிறகே பதில் சொல்ல,

"ம்... செந்தூர தேவி" என்று தனக்கு தானே உச்சரித்து பார்த்து கொண்டவன், எதிர் பக்கம் ஒருவன் அழைப்பில் இருப்பதே நினைவு இல்லாதவன் போல் அழைப்பை துண்டித்து விட்டு " ஜெயதீபன் செந்தூர தேவி" என்று சொல்லி பார்த்து கொண்டான்.

ஏனோ அவள் பெயரை அவனுக்கு பிடிக்காமல் போக, "பெயரை கூடவாடி மார்டனா வைக்க மாட்ட? பச்..." என்று சலித்து கொண்டான். அதே நேரம் உடனே அவர்களை பார்க்க வேண்டும் போலும் தோன்றியது. ஆனால் நினைத்ததும் சென்று விட முடியாத நிலைமை.

அப்படியே சென்றாலும் எப்படி போய் நிற்பது. நான் உன் கணவன் என்றா? இல்லை இதுவரை உன்னை யார் என்றே தெரியாது. நேற்று தான் நீ என் மனைவி என்று தெரிந்தது என்றா? அப்படி சென்று நின்றால் கேவலமாய் பார்த்து துரத்தி விட மாட்டாளா? அதுவா அவனுக்கு வேண்டும்? இல்லை.

அவன் தேவை இனிமேல் மிச்சம் இருக்கும் காலம் முழுவதும் அவளுடனான வாழ்க்கை. அதற்கு இந்த அவசரம் தேவை இல்லை. முதலில் அவள் மனநிலை புரிய வேண்டும். தன்னை ஏற்கும் எண்ணம் இருக்கிறதா? என்று தெரிய வேண்டும். அதை தெரியாமல் சென்று நிற்பது சரி வராது என்று நினைத்தான்.

மனைவி மகனிடம் செல்லவும் முடியாமல், அன்னையிடம் செல்லவும் பிடிக்காமல் மீண்டும் இடைநிலையில் வந்து நின்றது ஜெயதீபன் மனம்.

ஆம் மீண்டும் அவன் அன்னையிடம் செல்ல பிடிக்கவில்லை. எத்தனை பெரிய விஷயத்தை மறைத்து இருக்கிறார். அதிலும் செந்தூர தேவி அவன் வாழ்வில் வர அவரே முழு காரணமாய் இருந்து விட்டு, எப்படி இப்படி செய்ய முடியும்.ர? ஒரு பெண்ணின் குணங்களை அவள் கலரும், அழகும் உடல் அமைப்பும் தான் தீர்மானிக்குறதா? எப்படி இப்படி எல்லாம் சிந்திக்திறார்கள்? என்று கோபமாய் வந்தது ஜெயதீபனுக்கு.

அவள் எண்ணத்தை கலைத்தது மீண்டும் ஹரிதாவிடம் இருந்து வந்த அழைப்பு. அதற்கு மேலும் அவள் அழைப்பை கூட தன் வாழ்வில் நுழைக்க விரும்பாதவன் அழைப்பை ஏற்று "சொல்லுங்க ஹரிதா" என்றான் இறுகிய குரலில்.

ஜெயதீபனுடனான நிச்சயம் நின்றதற்கான காரணம் அவன் அன்னை மூலம் நேற்றே ஹரிதா அறிந்து இருந்தாள். ஆனாலும் ஜெயதீபனிடம் தனக்கான இடம் என்ன? என்று அறிய நினைத்தே அவனுக்கு பல முறை முயன்றவளுக்கு அவனின் மரியாதையான பேச்சே பதில் சொல்லி விட,

"நீங்க தான் தீபன் சொல்லலும். என்னை நீங்களும் உங்க அம்மாவும் எங்க நிப்பாட்டி இருக்கிங்கனு புரியுதா? எனக்கு என்ன பதில் சொல்ல போறிங்க தீபன்" என்றாள் ஹரிதா கோபமாய்.

"சாரி ஹரிதா. எனக்கு முன்னாடி நடந்த விஷயம் எதுவும் தெரியாது. தெரிஞ்சி இருந்தா இப்படி நடந்து இருக்காது. எனக்கு உங்களோட நிலமை புரியுது. ஆனா என்னால 'சாரியை' தவிர வேற ஒன்னும் சொல்ல முடியாது. அம் வெரி சாரி. ஆன்ட் இனிமேல் உங்க வாழ்க்கையில என்னோட பார்ட்னு எதுவும் இருக்காது" என்றான் தீபன் உறுதியுடன்.

"இவ்வளவு நாள் தெரியாதது நேற்று மட்டும் எப்படி தெரிஞ்சி தீபன்? என்ன அம்மாவும் பையனும் விளையாடுறிங்காளா? மண்டபம் வரை வந்து கல்யாணத்தை நிறுத்திட்டு சாரி கேட்டா முடிச்சி போச்சா?" என்றாள் ஹரிதா. ஜெயதீபன் பேச்சில் இன்னும் கோபம் கொண்டவளாய்.

"நிஜமாவே இந்த தப்புல என்னோட பங்கு எதுவும் இல்லை ஹரிதா. எனக்கு கல்யாணம் ஆகிட்டுனு தெரிஞ்ச பின்னாடியும் உன்னோட எப்படி அங்க இருக்க முடியும்? அது நான் என்னோட மனைவிக்கு செய்ற தூரோகம் இல்லையா?" என்ற ஜெயதீபன் அவளின் நியாயமான கோபம் புரிந்து பொறுமையாகவே கேட்டான்.

"இவ்வளவு நாள் அந்த மனைவி எங்க போனாங்க தேவ்? இப்போ வரை அவங்க யாருனே தெரியாது. சுய நினைவுல இருக்கும் போது பார்த்தே இருக்காத ஒரு பொண்ணுக்காக, பொம்மை கல்யாணம் மாதிரி நடந்த ஒரு கல்யாணத்துக்காக என்னை வேண்டாம்னு உதறிட்டு போவிங்களா தீபன்?" என்று ஷரிதா சூடாய் கேட்க

"பொம்மை கல்யாணமா? மைன்ட் யூவர் வேட்ஸ் ஷரிதா! கல்யாணத்துல என்ன பொம்மை கல்யாணம் ஹரிதா? என்னை பொறுத்த வரைக்கும் கல்யாணம்குறது இரு மனம் இணையுற புனிதம். அது என் வாழ்க்கையில ஒரு முறை நடந்துட்டு. அதுவும் என் அம்மா ஆசிர்வாதத்தோட. இதுக்கு மேல இன்னொரு பொண்ண என்னால ஏத்துக்க முடியாது. இதுவரைக்கும் வேணும்னா என் மனைவி பற்றி தெரியாம இருந்து இருக்கலாம்.... ஆனா... இப்போ இந்த நொடி அவளை தெரியும். எங்க இருக்கா என்ன பண்றாங்குறது வரை."

"அப்பறம் நீ சொன்ன பொம்மை கல்யாணத்துக்கு சாட்ச்சியா எனக்கு ஒரு பையன் இருக்கான். நான் ராமனா இருக்க நினைகவில்வை ஆனா ராவனனா இருந்துட கூடாதுனு நினைக்குறேன் ஹரிதா. ப்ளீஸ் இனிமேல் எனக்கு போன் கூட பண்ணாதிங்க" என்றவன் அவள் பேச அனுமதி கொடுக்காமல் அழைப்பை துண்டித்து இருந்தான்.

அதன் பிறகே மனதை அழுத்திய கனம் சற்றே குறைய, காரை ஸ்டார்ட் செய்து மனம் செல்லும் போக்கில் போக தொடங்கினான். பல இடங்கள் சுற்றி திரிந்து கடைசியாக தீபன் சென்று நின்றது அவனது கடையில் தான். அது ஒரு கைவினை பொருட்களின் கிஃப் ஷோ ரூம். தமிழகத்தில் உள்ள கிராமங்களில் இருந்து இயற்கை பொருட்கள் கொண்டு செய்யப்படும் பொருட்களின் விற்பனையகம். அந்த கடை அவன் பலநாள் கனவு. இன்று அவனின் விடாமுயற்ச்சியால் கம்பீரமாய் எழுந்து நின்றது தீபன் கிஃப்ட் ஷாப். என்னதான் அவர்களுக்கு பெரிய நிறுவனங்கள் இருந்தாலும் ஜெயதீபன் ஆசை இந்த கைவினை பொருட்கள் விற்பனையகம் தான் இதை பெரிய அளவில் கொண்டு சொல்ல வேண்டும் என்பதே அவன் கனவு. இங்கு

பருத்தியினால் ஆனா உடை, கால் மிதி, வாழை தடையில் செய்யும் பூ கூடை, ஃநைட் லேம்ப், அழகுற வடிவமைக்கப்பட்ட பீங்கான் குவளைகள், மண்ணால் செய்யப்பட அழகிய வேலைபாடு உடைய கைவினை பொருட்கள், மூங்கினால் செய்யப்பட வீணை, கிட்டார், புல்லாங்குழல், தண்ணீர் பாட்டில், காபி கோப்பை, என பலதரப்பட்ட பொருட்கள் அணிவகுத்து நின்றது.

இங்கு கிஃப்ட் மட்டும் இன்றி மூலிகை பொருட்களும் கிடைக்கும் தேன், ஆவாரம் பூ, கீழா நெல்லி, சித்தரத்தை, பனங்கருப்பட்டி இப்படி எல்லா வகை இயற்கை பொருட்களும் கிடைக்கும்.

எத்தனை மோசமான மனநிலையில் இருந்தாலும் இங்கே வந்ததும் ஜெயதீபனின் மனம் காற்றில் பறக்க தொடங்கி விடும். இன்றும் மனதின் வெறுமை சற்று சமன் பட, உள்ளே சென்றவனை புன்னகையுடன் தலை அசைத்து கடந்தனர் கடை சிப்பந்திகள். எல்லோரும் வெள்ளை நிற உடையில் சாந்தமாய் இருந்தனர்.

பதில் புன்னகையடனே தலை அசைத்து அவன் அறைக்கு சென்றவன், சொந்த பிரச்சினைகளை எல்லாம் ஒதுக்கி விட்டு வேலையை பார்க்க தொடங்கினான்.

ஒரு வாரம் முன்பு ஆர்டர் கொடுத்திருந்த கொம்பு தேன் இன்னும் வரமாமல் இருக்க, தேன் கொடுப்பவருக்கு அழைத்து பேசினான்.

பேசி முடித்து அடுத்த வேலையை பார்க்க சென்றவன், மனதில் மீண்டும் மனைவியின் முகம். அதை தொடர்ந்து சிறு தவிப்பும். இன்னும் நேரில் கூட பார்க்கவில்லை ஆனாலும் இந்த உணர்வு எப்படி எழுகிறது என்று ஜெயதீபனுக்கு புரியவில்லை. 'மனைவி என்ற வார்த்தைக்கு இவ்வளவு பவரா?' என்று கிண்டலாய் நினைத்தவன் கண்களை மூடி சீட்டில் தலை சாய்த்து அமர்ந்து விட்டான்.

ஆனால் மனதின் தவிப்பு அடங்குவதாய் இல்லை. ஏதோ ஒரு தவிப்பு வந்து அவனை தொற்றி கொள்ள மூடிய இமை உள்ளே அவன் மனைவி மகனின் நிழல் உருவங்கள் வந்து சென்றன.

தொடரும்....

 
அத்தியாயம்: 2

செந்தூரதேவியை பார்க்க வேண்டும் என்று தீபன் முடிவு செய்து ஒரு வாரம் ஓடி விட்டிருந்தது. ஆம் முடிவு மட்டுமே எடுக்க முடிந்தது அவனால். அதை செயல் படுத்த ஏதோ ஒன்று அவனை தடுக்க இன்று வரை மனைவியை பார்க்க செல்லவில்லை.

ஜெயதீபனின் வாழ்க்கை சுழற்சி கடந்த ஒரு வாரமாய் தலைகீழாய் மாறி இருந்தது. அம்மா, தம்பி, தங்கை, என அழகான ஒரு குடும்பத்தில் வாழ்ந்தவனுக்கு இன்றைய தனிமை வாழ்வு அத்தனை ருசிக்கவில்லை.

சில நேரம் சிறு பிள்ளை போல் அவன் அன்னையை தேடியது மனம் ஆனால் அவர் செய்த செயலை ஏற்க முடியவில்லை. அதிலும் செந்தூரதேவியை பற்றிய நினைவு அடிக்கடி தோன்றி கொண்டே இருந்தது.

அவளுடனே சேர்ந்து நான் என்னையே அறியாமல் இருந்த அந்த நிலமையிலும் ஏன் தன்னை திருமணம் செய்து கொண்டாள்! குழந்தை எப்படி? என்ற கேள்வியும் எழுந்து அவனை குழப்பத்தில் ஆழ்த்தியது.

அதே நேரம் அந்த நிலமையிலும் தன்னை திருமணம் செய்து தன் பிள்ளையை சுமந்தவளை ஆனந்தி ஏன் விலக்கி வைத்தார்! அப்படி என்ன நடந்து இருக்கும்? என பல கேள்விகள் அலை என எழுந்து அடங்கினாலும் அனந்தி செய்ததை மட்டும் ஜெயதீபனால் அவ்வளவு எளிதில் கடந்து விட முடியவில்லை.

இப்படி பலதை சிந்தித்து ஜெயதீபன் குழப்பத்தில் தவித்து கிடக்க, உறவினர்கள், தெரிந்தவர்கள் என்று பலரும் அவனுக்கு அழைத்து திருமணம் நின்றதிற்கான விபரம் கேட்டு கொடுமை செய்து வைத்தனர்.

சிலரை நிராகரித்தவன், சிலரிடம் கத்தி விட்டிருந்தான். அவனும் எத்தனை பேருக்கு தான் பதில் சொல்வான். அதிலும் வம்புக்கென வந்து கேட்பவரிடம் என்ன பதில் சொல்வது!

விஷயம் தெரிந்தும் ஒவ்வொருவரும் ஒரே கேள்வியை பல விதமாய் கேட்க நொந்து போய் விட்டான். பொதுவாகவே ஜெயதீபன் அத்தனை பொறுமை கிடையாது. சட்டென கோபம் வந்து விடும். கோபம் வந்து விட்டால் எதிரில் இருப்பவர் யார் என்றெல்லாம் ஆராய மாட்டான் பதில் கொடுத்து விட்டு தான் ஓய்வான்.

ஆனால் இந்த முறை அவன் மீது தவறு இருக்க, அனைவரிடமும் பனிந்து தான் போனான். அதுவே ஒருவகை இயலாமையை கொடுத்து ஜெயதீபனுக்கு.

இயலாமை கோபத்தை கொடுக்க, கடந்த மூன்று நாட்களாய் அதீத கோபம், எரிச்சல் என பார்ப்பவரிடம் எல்லாம் எரிந்து விழுந்து கொண்டிருந்தான்.

இப்போதும் கடை பணியாளர் ஒருவரிடம் கத்தி விட்டு, அவன் அறையில் வந்து அமர்ந்தவனின் கோபம் உச்சத்தில் இருந்தது. அதை இன்னும் அதிகரிக்கும் விதமாக அவன் போனின் அழைப்பு ஒலி கேட்க, அது கோபத்துடன் கூடிய சலிப்பை கொடுத்தது ஜெயதீபனுக்கு.

'தான் இப்போது இருக்கும் மனநிலையில் யாராக இருந்தாலும் திட்டி விடுவோம்' என நினைத்த தீபன் போனை சைலன்டில் போட போனவன்
போன் ஸ்கிரின் "பட்டு..' என ஒளிர்ந்த பெயரை பார்த்ததும் சிறிது நிதானித்தான்.

அதே நேரம் அதுவரை அவனிடம் இருந்த கோபமும் எரிச்சலும் சற்றே பின் செல்ல இதழில் சிறு மலரா புன்னகை ஒன்று வந்தமர்ந்தது.

இத்தனை நாள் அவன் எதிர்பார்த்த அழைப்பு இன்று வரவும் சின்ன சிரிப்புடன் அழைப்பை ஏற்றவன்
"சொல்லு... பட்டமா. இப்போ நீ ரொம்ப சந்தோஷமா இருப்பியே!" என்றான் குரலில் கடுமையை கொண்டு வந்து நக்கலாய்.

"என் சந்தோஷத்துக்கு என்னடா குறை? நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன். ஆனா... நீ தான் வெறிப்பிடிச்சு சுத்துறனு கேள்வி பட்டேன்! உண்மையா?" என்று பட்டு பாட்டியும் படு எகத்தாளமாய் கேட்க,

"பட்டம்மா...!" என்று கோபத்தில் பல்லை கடித்த ஜெயதீபன் "நான் உண்டு என் வேலை உண்டுனு நிம்மதியா இருந்தேன். அதுல கல்லை தூக்கி போட்டுட்டு நீ ஏன் பேச மாட்ட! நீ இதுவும் பேசுவ... இன்னமும் பேசுவ..." என்றான் கோபமாய்.

"டேய்... டேய்... நீ அனல்ல விழ இருந்த லிட்டில் பூச்சி டா. ஐயோ... பாவமே பையன் பொழச்சி போட்டும்னு என் பேத்தி போட்டோவை கண்ணுல காட்டுனேன். இல்லைனா இன்னேரம் நீ காணாம போய் இருப்ப டா" என்றார் பட்டம்மாளும் அவன் கோபத்தை சிறிதும் சட்டைசெய்யாமல்.

பட்டம்மாள் ஜெயதீபனின் தந்தை வழி பாட்டி. வயது எழுபது ஆகியும் இன்னும் திடமாகவே இருக்கிறார். மகனுக்கு அடுத்து பேரன்கள் தான். அதிலும் மூத்த பேரன் ஜெயதீபன் மேல் கூடுதல் பாசம் பட்டம்மாளுக்கு.

கணவனையும் ஒரே மகனையும் ஏமனின் கையில் கொடுத்தும். தனக்கும் தனிபட்ட வாழ்க்கை உண்டு என்ற சரியான புரிதலுடன் தனிமையிலும் திடமாய் வாழ்பவர். பேரன்கள் மட்டுமே ஒரே ஆறுதல்.

அதே போல் ஜெயதீபனும் இலகுவாய் பேசுவது பட்டம்மாளிடம் மட்டும் தான். மற்றவரிடம் எல்லாம் மகா அழுத்தம்.

"காப்பாத்தி விட்ட நீயே... என் வாழ்க்கைக்கும் வழி சொல்லு பட்டு. எனக்கு அடுத்து என்ன செய்யனு தெரியலை. உன் பேத்தி இருக்க இடம் தெரியும். போகனும்னு தோனுது ஆனாலும் ஏதோ ஒன்னு தடுக்குது. நான் என்ன செய்யட்டும்?" என்ற தீபன் கவலையுடன் கேட்க,

"தேவியை உனக்கு பிடிக்கலையா தீபா?" என்றார் பட்டம்மாள்.

"அப்படி சொல்லிட முடியாது பட்டு. ஆனா பிடிக்குதுனும் சொல்ல முடியலை..." என்றான் ஜெயதீபன் கலவையான மனநிலையில்.

"ஏன் டா?" என்று பட்டம்மாள் கேட்க,

"என்ன ஏன்? இதுவரை பார்த்தே இருக்காத ஒரு பொண்ணை கொண்டு வந்து இது தான் உன் பைஃனு சொன்னா... நான் என்ன செய்யட்டும்! ஓடி போய் கட்டி பிடிச்சு முத்தம் கொடுக்கவா?" என்று ஜெயதீபன் கடுப்புடன் கேட்க,

"குடேன் டா. பதிலுக்கு அவ என்ன தந்தாலும் வாங்கிக்க. அதுக்கு ஏன் என்கிட்ட பெர்மிஷன் கேக்குற!" என்றார் பட்டம்மாள் சிரிப்புடன்.

"பட்டு...." என மீண்டும் பல்லை கடித்த ஜெயதீபன் "நான் வாழ வழி தெரியாம முழிக்குறேன். உனக்கு என் கவலை கிண்டலா போச்சா!" என்ற ஜெயதீபன்
'மனுஷன் இருக்க நிலமை தெரியாம காமெடி பண்ணிகிட்டு'என்றான் முணுமுணுப்பாய்.

தேவி விஷயத்தில் என்ன செய்ய வேண்டும்? எப்படி செய்ய வேண்டும் என்று சுத்தமாய் எதுவும் புரியவில்லை தீபனுக்கு. போனில் அழைத்து பேசலாம் என்றால் கூட என்ன பேச? என்று அவன் தயங்கி தவித்து கொண்டிருக்க, ஹக்காம், கிஸ்சாம் என சலித்து கொண்டது அவன் மனம்.

"இதுல முழிக்குறதுக்கு என்னடா இருக்கு. தேவி உன் பொண்டாட்டி தேவேஷ் உன் மகன். அவங்களை போய் பார்க்க என்ன தடுக்குது உன்னை" என பட்டம்மாள் பாட்டி அதட்டல் விட,

"அதான்... தெரியலை பட்டு. அவங்களை போய் அழைச்சிட்டு வரனும்னு நினைக்குறேன். ஆனா ஒரு தயக்கம். எனக்கு அந்த பொண்ணை பிடிக்குமா? நான் அவளோட சேர்ந்து வாழ்ந்துடுவேனானு? யோசனையாக இருக்க. ஒரு வேலை என்னால அந்த பொண்ணோட சேர்ந்து வாழ முடியாம போய்... அந்த பொண்ணோட இப்போ இருக்குற நிம்மதியும் போய்ட்டா!" என்று ஜெயதீபன் வருத்தமான குரலில் கேட்க,

அவனின் வருத்தமே தீபன் இதை பற்றி அதிகமாக யோசித்து குழம்பி இருப்பது தெளிவாய் புரிந்தது பட்டம்மாவிற்கு. இல்லை என்றால் ஜெயதீபன் இப்படி எல்லாம் நீளமாய் பேசு ஆள் இல்லை. ரத்தின சுருக்கம் தான். தீபனை தெரிந்த பட்டம்மாவிற்கு இப்போது அவன் குழப்பமும் புரிய,

"செந்தூர தேவி டா. தேவினு சொல்லி பழகு. அது எந்த அந்த பொண்ணு. அவ உன் பொண்டாட்டி" என்றார் கண்டிப்புடன். மனைவி என்று பதிய வைத்தால் உரிமை தானாக வரும் என்ற எண்ணத்துடன்.

"நான் என்ன பேசுறேன். நீ என்ன சொல்ற பட்டு!" என்று ஜெயதீபன் எரிச்சல் பட,

"உரிமை முதல்ல எங்க இருந்து வருது தெரியுமா தீபா! நாம கூப்பிடுறதுல இருந்து தான். தேவினு சொல்லி பழகு தானா உரிமை வரும்" என்று பட்டம்மாள் சொல்ல,

யோசித்து பார்த்த ஜெயதீபனுக்கும் அதுவே சரியாக பட "சரி பட்டு. இப்போ நான் என்ன செய்யட்டும்" என்றான்.

"நீ தான் போய் அழைச்சிட்டு வரனும் தீபா. ஆனா தேவி உன் மகனுக்கா மட்டும் தான் உன்னோட வர வாய்ப்பு இருக்கு" என்றவர்

"தேவேஷ்க்கு உன்னை தேடாம அந்த நாள் ஓயாது" என்று விட்டார் பேச்சிவாக்கில்.

பட்டம்மாளின் குரல்லி இருந்த வாஞ்சையும் உரிமையும் ஜெயதீபனுக்கு உண்மையை உணர்ந்த "பட்டு... தேவி உன்னோட பேசுவாளா?" என்றான் அழுத்தமாய்.

"ஆமா... டா ஏன்?" என்ற பட்டமாளின் வார்தை அதுவரை அடங்கி இருந்த தீபனின் கோபத்தை உச்சத்தில் ஏற்றி விட்டது.

இதுவரை ஆனந்தி மட்டும் தேவியை பற்றி அவனிடம் மறைத்து ஏமாற்றி விட்டதாய் நினைத்திருந்தவனுக்கு இப்போது பட்டம்மாளும் அதையே செய்திருப்பது புரிந்தது.

இத்தனை நெருக்கமாய் உணவாக இருந்தும் பட்டம்மாள் உண்மையை மறைத்தது ஜெயதீபனுக்கு கடும் கோபத்தை கொடுத்தது.

அதே நேரம் தேவி பண்றிய உண்மையை அறிய செய்ததும் பட்டம்மாள் தான். உண்மையை மறைத்தவறே இப்போது ஏன் சொல்ல வேண்டும்? இடையில் என்ன நடந்திருக்கும்? என யோசித்த தீபன் "அப்போ நீயும் சேர்ந்து தான் எங்கிட்ட இருந்து உண்மையை மறஞ்சி இருக்க! அப்படிதானே!" என்றான் சீற்றத்துடன்.

"எதுக்கு டா இத்தனை கோபம். முதல்ல இந்த கோபத்தை குறைச்சிக்க, தேவியை பத்தி உங்கிட்ட மறச்சிவச்சி நான் என்னடா செய்ய போறேன்!" என பட்டம்மாள் பாட்டி பொறுமையாக கேட்க,

"அப்பறம் ஏன் இத்தனை நாள் உண்மையை சொல்லாம இருந்துட்டு கல்யாணத்து முந்தின நாள் மட்டும் சொன்ன!" என்றான் ஜெயதீபன் இன்னும் கோபம் குறையாதவனாய்.

" உனக்கு உண்மை தெரியாது. உண்மை தெரிஞ்ச உன் பொண்டாட்டி உங்கிட்ட உண்மையை சொல்ல வேண்டாம்னு சொல்லிட்டா. நீ இப்போ குழம்பி தவிக்குற இல்ல! அதே குழப்பம் தான் அவளுக்கும். 'உண்மை தெரிஞ்சி இரண்டு பேருக்கும் பிடிக்காம பிரிஞ்சி வாழுறதுக்கு.. இப்படியே இருந்துக்குறேன்னு சொல்லி உங்கிட்ட உண்மையை சொல்ல கூடாதுனு உன் மகன் மேல சத்தியம் வாங்கிட்டா. நான் என்னடா பண்ணட்டும்" என பட்டு பாட்டி வருத்தமான குரல்லி சொல்ல

"அப்பறம் இப்போ மட்டும் என்ன? அப்படியே இருக்க வேண்டியது தானே" என்றான் ஜெயதீபன் தீரா கோபத்துடன்.

அதில் சிறிதாய் புன்னகைத்த பாட்டி "உனக்கும் உன் பொண்டாட்டிக்கும் வேணும்னா ஒருத்தருக்கு ஒருத்தர் தேவை இல்லாம இருக்கலாம். ஆனா என் கொல்லு பேரனுக்கு அவன் அப்பா வேணுமாம். உனக்கு கல்யாணம் முடிவானது தெரிஞ்சதும் தேவி, தேவ் கிட்ட இனி உன்னை பற்றி பேச கூடாது, கேட்க கூடாதுனு சொல்லிட்டா."

"அவ்வளவு தான் உன் பையனுக்கு தான் உனக்கு மேல பிடிவாதம் இருக்கே உடனே உங்கிட்ட வரனும்னு. உன்னை பார்த்தா தான் சாப்பிடுவேன்னு அழுது அடம் பண்ணி உடம்புக்கு முடியாம போய்ட்டு."

"காய்ச்சல் தானே சரி ஆகிடும்னு நாங்க நினைக்க குழந்தை உன்னை பார்க்க முடியாம ரொம்ப ஏங்கிட்டான் போல பிள்ளைக்கு இழுப்பு வந்துட்டு. அப்பறம் நான் தான் தேவி கிட்ட பேசி புரிய வச்சேன். அப்பறம் தான் அவ உங்கிட்ட உண்மையை சொல்ல ஒத்துகிட்டா" என பட்டு பாட்டி சொல்ல,

கேட்ட ஜெயதீபனுக்கு ரத்தம் கொதித்து. தேவேஷ் தன் நினைப்பில் இந்தளவு ஏங்கி இருந்தும் தேவி தன்னிடம் இருந்து அவனை பிரித்து வைக்க நினைத்ததோடு இல்லாமல், அவளும் பிரிந்து செல்ல நினைத்தது தேவி மேலும் கோபத்தை கொடுத்தது ஜெயதீபனுக்கு.

அதிலும் என் வாழ்க்கையை யார் யாரோ முடிவு செய்து அவர்கள் நினைத்தப்படி ஆட்டி வைப்பதா! என கோதித்து போனவன் "பட்டு... இப்போ நான் சொல்றதை அபப்டியே போய் நீ உன் பேத்திட்ட சொல்ற" என அழுத்தம் திருத்தமாய் சொன்ன தீபன்

"நான் என் பையனை வளர்த்துக்குறேன். உன் பேத்தியை வேற கல்யாணம் பண்ணிக்க சொல்லு. நான் இப்பவே போய் என் மகனை கூப்பிட்டு வர போறேன்" என்றவன் பட்டம்மாள் சொல்ல வருவதை கேட்காமலேயே அழைப்பை துண்டித்து இருந்தான்.

தேவியின் செயல் தீரா கோபத்தை கொடுத்து ஜெயதீபனுக்கு. அவன் திருமணம் ஆனது தெரிந்ததும் நடக்க இருந்த கல்யாணத்தை நிறுத்தி இருக்க, இவளானால் பிரிந்து செல்ல நினைப்பாளா! அப்படி என்ன திமிர்! என நினைத்தவன் அதே கோபத்துடன் கிளம்பி திருப்பூர் சென்றான்.

ஜெயதீபன் செந்தூர தேவியை தேடி செல்ல, அவளோ மகனை அழைத்துக்கொணடு ஊட்டி வந்து கொண்டிருந்தாள்.

தேவேஷின் பள்ளியில் மூன்று முதல் ஒன்பதாய் வகுப்புவரை உள்ள குழந்தைகளுக்கு பள்ளியில் இருந்து டூர் ஏற்ப்பாடு செய்திருந்தனர். அதை பார்த்து ஆர்வம் கொண்ட குட்டி வாண்டு ஒன்று தங்களையும் டூர் அழைத்து செல்ல வேண்டும் என்று அழுது ஆர்ப்பாட்டம் செய்து விட்டது.

அவனை பார்த்து மற்ற குழந்தைகளும் டூர் போக வேண்டும் என்று அடம் செய்யவே, பள்ளியில் இருந்து அந்த குழந்தைகளின் பெற்றோரை அழைத்து அவர்கள் விருப்பங்களை தெரிந்து கொள்ள மீட்டிங் வைத்தனர்.

குழந்தைகள் ஆசையை பார்த்த அவர்கள் பெற்றவர்களும் டூர் போக சம்மதம் தெரிவித்தனர். ஆனால் எல்லோரும் ரொம்பவும் சின்ன குழந்தைகள் என்பதால் அவர்களை ஆசிரியர்கள் தனியாக சமாளிக்க முடியாது என்பதாலும் ஐந்து பெற்றோர் மட்டும் உடன் வர பள்ளி நிர்வாகம் சம்மதம் தெரிவித்தது.

அதில் பெற்றவர்கள் அனைவரும் கழந்து பேசி யார் ஐந்து பேர் செல்ல வேண்டும் ஒரு மனதாய் முடிவு செய்தனர். இதெல்லாம் முடிவான பிறகே 'எங்கே செல்வது?' என்று டீச்சர் குழந்தைகளிடமே கேட்க,

"மேம்... ஊட்டி போலாம். அங்க எங்க அப்பா இருக்காங்க" என்றிருந்தான் தேவேஷ்.

டீச்சரின் கேள்விக்கு என்ன பதில் சொல்ல என்று புரியாது விழித்த மற்ற குழந்தைகளுக்கு, தேவேஷ் சொன்ன பெயர் பிடித்து போக, அவர்களும் அங்கு தான் செல்ல வேண்டும் என்று கத்த அவர்கள் முடிவே இறுதி முடிவாக எடுத்து ஊட்டிக்கு கிளம்பி இருந்தனர்.

டூர் என்று முடிவான நாளில் இருந்தே ஜெயதீபனை சென்று பார்த்தே ஆக வேண்டும் என்று தேவேஷ் சொல்லி கொண்டே இருத்தான்.

செந்தூரதேவிக்கும் ஒரு கட்டத்திற்கு மேல் அவன் ஆசையை தடுக்க முடியாமல் அழைத்து செல்வதாய் கூறி இருந்தாள். ஆனால் முடிந்த வரை ஜெயதீபனை பார்ப்பதை தவிர்க்கும் முடிவில் தான் இருந்தாள்.

அந்த பள்ளி பேருந்து ஊட்டி மலைகளில் ஏற தொடங்கியது. சாலையின் இரு பக்கமும் ஓங்கி உயர்ந்த மரங்களும், பச்சை வண்ண ஆடை போர்த்திய மலைகளும் அதனை தழுவி தங்கள் தாபம் தீர்த்துக்கொள்ள முயலும் மேகக்கூட்டங்களும் என அந்த இயற்கை அழகை பார்க்க தெகிட்டவில்லை தான். ஆனால் தேவி தான் அதை ரசிக்கும் மனநிலையில் இல்லை.

குளிர் ஒரு பக்கம் உடலை ஊசியா துளைத்தது என்றால், ஐந்து வருடங்களுக்கு முன்பு ஆனந்தி பேசிய சொற்களின் நினைவு உள்ளத்தில் ஊசி இறக்கியது. நம்பிக்கை துரோகம் இத்தனை பெரிய வலியை கொடுக்கும் என்று அவள் அனுபவத்தில் உணர்ந்த நொடிகள்.

ஒருவரை நம்பி ஏமாந்து நின்றதும் அதன் பிறகு அவள் பட்ட கஷ்டமும் வலியும் சொல்லில் அடங்காதவை. ஒருவரின் நாக்குக்கு பாம்பு பல்லில் இருக்கும் விஷத்தை விட அதிக விஷம் உண்டும் என்று கடந்த நான்கு வருடத்தில் பல முறை தேவி உணர்ந்து விட்டாள்.

அந்த எண்ணம் வந்ததும் அவள் வாங்கிய பேச்சுக்கள் எல்லாம் இப்போது கேட்டது போல் காதில் எதிரொலிக்க, பஸ் சீட்டில் கண் மூடி அமர்ந்து இருந்த செந்தூர தேவியின் இமையோரம் கண்ணீரின் தடம்.

'வேண்டாம்...' என்று விலகி செல்ல நினைத்தும் விதி மகன் வடிவில் இணைத்து வைக்க நினைத்தது அத்தனை உவப்பானதாய் இல்லை தேவிக்கு.

கடந்த இந்த ஐந்து வருடத்தில் எத்தனை எத்தனையோ கஷ்டங்களை கடந்து விட்டாள். இனி இதையும் கடந்தாக வேண்டும் என நினைக்கும் போதே சலிப்பாகவும், வாழ்க்கை மீது வெறுப்பாகவும் இருந்தது தேவிக்கு.

"அம்மா... அங்க பாரேன் மேகம். இந்த மேகம் எங்க புக்ல இருக்கு. அப்பதம் இந்த மலையும் இருக்கு" என்ற தேவேஷ் மலைகளின் மேல் தவழ்ந்து சென்ற மேகங்களை காட்டி உற்ச்சாகமாய் சொல்ல,

மகன் அறியாமல் கண்களை துடைத்து கொண்ட தேவி "அப்படியா!! சரி. மேகத்துக்கு இங்கிலீஷ் ல என்ன வரும்?" என்ற தேவி குளிரில் நடுங்கியபடி கைகளை மார்பில் குறுக்கே கட்டி கொள்ள,

"க்ளோவ்ட்ஸ்..." என்றவன் "ம்மா குளிருதா?" என கேட்டு தேவி கன்னம் பற்ற,

"ரொம்ப... ஏன் உனக்கு குளிரலையா?" என்றாள் தேவி.

"ஆமா... எனக்கு குளிரல" என்ற தேவேஷ். "ம்மா... நான் அப்பா மாதிரி. என்ன மா?" என்று ஆர்வமாய் கேட்க,

"இருக்காலாம்" என்றாள் தேவி பட்டும் படாமல்.

"அம்மா...." என்று சினுங்கியபடி தேவி மீது சாய்ந்தவன் "நான் அப்பா மாதிரி தான்" என்றான் பிடிவாதமாய். அவள் பதிலில் திருப்தி இல்லாதவனாய்.

தேவேஷின் இந்த பிடிவாதம் தான் தேவிக்கும் அவன் ஜெயதீபனின் மறு குணம் என்று எப்போதும் உணர்த்தும். ஆனாலும் அதை சொல்லி மகனை ஊக்கப்படுத்த விருப்பாதவள் "அப்படி இல்லை தேவ். நீ வளர்ந்த பிறகு தான் நீ யார் மாதிரின்னு உனக்கு தெரியும். நீ வளர்ந்த பிறகு உன்னோட குணம் யார் மாதிரி இருக்குனு நீயே முடிவு பண்ணிக்க சரியா!" என்று தேவி பொறுமையாக கேட்க,

அந்த குட்டிக்கு என்ன புரிந்ததோ 'சரி' என்று தலையாட்டி வைத்தவன் மீண்டும். வேடிக்கை பார்க்க தொடங்கி விட்டான்.

புது இடம், அவன் தந்தையை பார்க்க போகும் உற்ச்சாகம், என தேவேஷிடம் புது புது கேள்விகள் முளைத்து கொண்டே இருக்க, தேவிக்கு அதன் பிறகு ஜெயதீபனை பற்றி யோசிக்க நேரம் இல்லாமல் போனது.

அதில் பயணம் முழுவதும் சற்று உற்ச்சாகத்துடனே செல்ல அவர்கள் ஊட்டி வந்து சேர்ந்த போது நேரம் மாலை ஐந்து மணியாக இருந்தது. மாலை நேர குளிர் தொடங்கி இருக்க அறை புக் செய்திருந்த ஹோட்டல் அருகில் உள்ள பார்க்கில் கொஞ்ச நேரம் குழைந்தைகளை விளையாட விட்டே அறைக்கு அழைத்து சென்றனர்.

"ம்மா... அப்பா பார்க்க எப்போ போறோம்? பட்டு பாட்டிக்கு போன் பண்ணி அப்பாவை வர சொல்லுவோமா?" என்று அறைக்கு வந்ததும் முதல் வேலையாக தேஷேஸ் போனை எடுத்து பட்டம்மாளுக்கு அழைக்க போக,

"முதல்ல டூரை முடிச்சிட்டு... இவங்களை எல்லாம் ஊருக்கு அனுப்பி வச்சிட்டு. அப்பறமா நாம பட்டு பாட்டி வீட்டுக்கு போலாம். இப்போ போய் குளி..." என்று சொல்லி, அவனிடம் இருந்து போனை வாங்கிய தேவி, தேவேஷையும் மற்ற குழந்தைகளையும் குளிக்க வைத்து, உடை மாற்றி, சாப்பிட அழைத்து சென்றாள்.

அடுத்த அடுத்த நாட்களும் கதை சொல்கிறேன் என்று அனைத்து குழைந்தைகளையும் உற்ச்சாகமாய் வைத்து கொண்டவள் தேவேஷ் ஜெயதீபனை தேடாத அளவு பார்த்து கொண்டாள்.

தொடரும்...
 
அத்தியாயம்: 3

செந்தூரதேவி ஊட்டி வந்து இன்றுடன் மூன்று நாட்கள் ஆகி விட்டது. இன்று திரும்பி திருப்பூர் செல்ல வேண்டும். ஆனால் கடந்த இரண்டு நாட்களாக தேவேஷ் அவள் தந்தையை தேடாத அளவு பார்த்துக் கொண்டவளாள் இன்று முடியவில்லை.

காலையில் விடிந்த நேரத்தில் இருந்தே 'அப்பாவை எப்போ பார்க்க போறோம்?' என்பது தான் அவனது பேச்சாகவே இருக்க தேவியால் பதில் சொல்ல முடியவில்லை.

சில முறை அவனை கண்டு கொள்ளாமலும் இருந்து பார்த்து விட்டாள் ஆனால் தேவேஷ் விடுவதாய் இல்லை. ஒரு கட்டத்திற்கு மேல் சலிப்படைந்தவள் சரி கூட்டிட்டு போறேன் என்று சமாதானமாய் சொல்லிவைத்தாள்.

ஆனால் தன் அப்பாவை பார்க்க தன் அம்மா அழைத்து செல்ல மாட்டாள் என்று அந்த சிறுவனுக்கு தோன்றியதோ என்னவோ! அவள் பதிலில் திருப்தியுறாதவனாய் "அம்மா... அப்பா பார்க்க எப்போ போறோம்?" என மீண்டும் கேட்டபடி தேவி பின்னோடு சுத்த,

"கூட்டிட்டு போறேன்னு தான் சொல்லிட்டேனே டா. அப்பறம் ஏன் இதையே கேட்டுட்டு இருக்க? போ... நீ போய் உன் ப்ரெண்ஷோட விளையாடு போ...." என்றாள் செந்தூரதேவி சிறு கண்டிப்புடன்.

"போறோம் சொன்ன. எப்போ போறோம்னு சொல்லலை ம்மா. நீ எப்போ போறோம் சொல்லு..." என்ற தேவேஷ் அதிலேயே பிடிவாதமாய் நிற்க,

"இப்படி பிடிவாதம் பிடிச்சா அப்பறம் நான் கூட்டிட்டு போக மாட்டேன் தேவ். நான் தான் டூர் முடிஞ்சதும் கூட்டிட்டு போறேன்னு சொன்னேனே அப்பறம் என்ன டா உனக்கு!" என்று அதட்டல் போட்ட தேவிக்கு, இப்போதே இவ்வளவு தெளிவாய் பேசும் மகனை பார்த்து உள்ளுக்குள் சற்றே மிரண்டு போனாள்.

"அப்போ இன்னைக்கு டூர் முடிஞ்சதும் போறோமா ம்மா?" என்ற தேவேஷ் மீண்டும் அதிலேயே நிற்க,

"உனக்கு என்னடா பிரச்சனை இப்போ" என்ற தேவி அடக்கப்பட்ட எரிச்சலுடன் மகனை முறைத்து வைக்க, தேவேஷிடம் கெஞ்சல் பார்வை.

காலையில் இருந்து இத்துடன் பத்து முறைக்கு மேல் கேட்டு விட்டான். தேவியும் அவனுக்கு பதில் சொல்லி சலித்து விட்டாள்.

மீண்டும் அதையே கேட்பவனை சிறிது எரிச்சல் எட்டி பார்க்க பார்த்த தேவி அவன் பார்த்த கெஞ்சல் பார்வையில் 'இதுக்கொன்னும் குறைச்சல் இல்லை' என்று சலித்து கொண்டாள்.

அதில் தேவேஷ் அவளை பார்த்து சிரிக்க, அதில் தேவியும் சற்று கோபம் தெளிந்தவள் "ஆமா... டூர் முடிஞ்சதும் உன் அப்பாவை பார்க்க கண்டிப்பா போறோம். எதுக்கு இத்தனை முறை கேட்குற தேவ்? அம்மா மேல உனக்கு நம்பிக்கை இல்லையா?" என்று தேவி கேட்க,

எதிரில் நின்ற அவள் மகனுக்கு நம்பிக்கை என் வார்த்தைக்கு அர்த்தம் புரியவில்லை. அவன் அகராதியில் அது அன்பாகி போக,

"அம்மா மேல தேவ்கு நிறைய அன்பு இருக்கே" என்றான் தேவி கழுத்தை கட்டி கொண்டு கொஞ்சலுடன்.

அதில் தேவியும் சிறு புன்னகையுடன் அவனை அணைத்துக்கொண்டாள்.

அவர்கள் ஊட்டி வந்து இரண்டு நாட்கள் ஆகி விட்டது. இன்று டூர் முடிந்து ஊர் செல்ல வேண்டும். குழந்தைகளை அழைத்துக்கொண்டு இரவில் பயணம் செய்வது ரிஸ்க் என்பதால் காலை பதினோரு மணிக்கெல்லாம் மதிய உணவை முடித்து கொண்டு ஊட்டியில் இருந்து கிளம்புவதாக முடிவு செய்திருந்தனர்.

ஊட்டியில் இருந்து கிளம்ப வேண்டும் என்று சொன்னதில் இருந்தே தேவேஷிடம் அதிக சந்தோஷம். அதன் வெளிப்பாடாய் 'எப்போ அப்பாவை பார்க்க போவோம்' என்று கேட்டு கொண்டே இருந்தவன், அவன் நண்பர்களிடம் அவன் அப்பாவை பார்க்க போவதாக சொல்லி மகிழ்ந்து கொண்டிருந்தான்.

அது அவனின் ஒவ்வொரு செயலிலும் வெளிப்பட நடை பழகிய கன்று குட்டியாக சுற்றி கொண்டிருந்தான்.

அதுவரை தேவேஷை ஜெயதீபனிடம் அழைத்து செல்ல வேண்டாம் என்ற முடிவில் இருந்த தேவிக்கு மகனின் இந்த சந்தோஷத்தை கலைக்க மனம் இல்லை.

அதே நேரம் ஜெயதீபனை சென்று பார்க்கவும் விருப்பம் இல்லை. என்ன தான் தேவேஷ்காக ஜெயதீபனிடம் உண்மையை சொல்லி அவன் திருமணத்தை நிறுத்தி இருந்தாலும் தேவியால் அவனிடம் எந்த வகை உரிமையை எதிர்பார்க்க முடியவில்லை.

எதிர்பார்க்கும் உரிமையும் தனக்கு இல்லை என்று தேவிக்கு தெரியும். அவர்கள் வாழ்க்கையில் நடந்த அனைத்தும் முழுக்க முழுக்க தேவியின் தவறாய் இருக்க ஜெயதீபனை குற்றம் சொல்லும் உரிமையும் செந்தூர தேவிக்கு இல்லை.

ஆனாலும் ஏன் என்றே தெரியாத ஒரு கோபம் மட்டும் ஒட்டுண்ணியாக தேவியின் மனதில் ஒட்டிக்கொண்டு அதற்கு ஜெயதீபனை காரணப்படுத்துகிறது.

அதனாலேயே தேவேஷை அழைத்து செல்லவா! வேண்டாமா! என இருவேறு மனநிலையில் தேவி தத்தளித்து கொண்டிருக்க, அவள் குழப்பத்தை களைவது போல் தேவேஷூம் பல முறை கேள்வியா கேட்டு தேவியையும் தெளிவு படுத்தி அவனும் தெளிவாகி இருந்தான்.

கண்டிப்பாக இன்று தன் அப்பாவை பார்ப்போம் என்ற நன்பிக்கையுடனே அவன் நண்பர்களுடன் சுற்றி வந்தான்.

அனைவரும் ரொம்பவும் சின்ன குழந்தைகள் என்பதால் போட்டிங், நீர்நிலை, பள்ளத்தாக்கு பகுதிக்கெல்லாம் குழந்தைகளை அழைத்து செல்லவில்லை. சைன்ஸ் சென்டர், பூங்கா, நர்சரி கார்டன், ஹோட்டல் என்று தான் அழைத்து சென்றனர்.

இன்றும் காலையில் சற்று நேரம் ஹோட்டல் அருகில் இருந்த ஒரு கார்டனுக்கு அழைத்து சென்றனர். அங்கிருந்த ஊஞ்சலில் குழந்தைகளை விளையாட விட்டு அவர்களை கவனித்து கொண்டனர்.

சற்று நேரம் சுறுசுறுப்பாய் விளையாடிய குழந்தைகள் ஒவ்வொருவராய் சோர்ந்து அமரவும், அவர்களை அழைத்துக்கொண்டு அருகில் இருந்த ஸ்வீட் ஷாப் அழைத்து சென்றனர்.

குழந்தைகள் அவர்கள் வீட்டிற்கு வாங்கி செல்ல குக்கீஸ் சாக்லேட் வகைகளை காட்டி யாருக்கு என்ன வேண்டும் என்று கேட்டு வாங்கி கொடுத்தனர்.

இனிமேல் மதிய உணவை முடித்துக்கொண்டு ஊருக்கு கிளம்ப வேண்டும் என்று தோன்றவுமே தேவியை சிறு படபடப்பு தொற்றி கொண்டது.

மனதில் இனம் புரியாத பயம் அதோடு சேர்ந்து சிறு வலியும் மனதை தாக்கியது.

ஜெயதீபனை பார்க்க வேண்டும் என்று நினைத்தாலே இந்த வலியும் பயமும் அவளிடம் இயல்பாகவே எழுந்து விடும்.

"அம்மா... அப்பா பார்க்க போகும் போது அப்பாக்கு சாக்லேட் வாங்கனும் தானே! அப்பாக்கு என்ன சாக்லேட் பிடிக்கும்?" என்று கேட்டபடி தேவேஷ் அவள் கையை பற்றவும் தான் நிகழ்வுக்கு வந்த தேவி,

அவனை புரியாத பார்வை பார்த்தவள் "என்ன தேவ்?" என்று கேட்க,

"அப்பாக்கு என்ன வாங்கனும் சொல்லு மா, சாக்லேட்டா இல்ல கேக்கா" என்றான் தேவேஷ் கண்ணாடியின் உள்ளே அழகுபட அடுக்கி வைத்திருந்த இனிப்பு வகைகளை பார்வையிட்ட படி.

"அப்பாக்கு சாக்லேட் பிடிக்காது தேவ். வேணும்னா குக்கீஸ், கேக் வாங்கிக்கோ" என்று தேவி சொல்ல,

"அப்படியா அப்போ அப்பாக்கு என்ன கேக் மா பிடிக்கு?" என்று தேவ் கேட்க,

"தெரியலை தேவ்" என்றாள் தேவி.

அதில் தேவேஷ் அவளை நிமிர்ந்து புரியாத பார்வை பார்க்க, தேவிக்கு என்ன பதில் சொல்லவென்று தெரியவில்லை.

செந்தூர தேவிக்கு ஜெயதீபனை தவிர அவனை பற்றி எதுவும் தெரியாது. ஆனந்தி தான் சில விசயங்களை பொதுவாக கூறி இருந்தாரே தவிற அவர்களுக்கு பகிர்வு என்று எதுவும் இல்லை.

தீபன் பகிரும் நிலையிலும் இருக்கவில்லை. அதிலும் அவள் அறிந்த ஜெயதீபன் வேறு. இப்போது இருக்கும் தீபன் வேறு. முன்னவனை பற்றி சில விசயங்கள் ஆனந்தி சொல்லியாவது தெரியும். ஆனால் இப்போது இருக்கும் தீபனை பற்றி சிறு துளி கூட தெரியாது.

அப்படி இருக்க அவனுக்கு என்ன பிடிக்கும் என்று எப்படி தெரியும். தேவி பதில் சொல்லாமல் நிற்க

"ம்மா......" என்றான் தேவ் சற்றே அழுத்தத்துடன்.

"ரெட் வெல்வேட் வாங்கு தேவ்" என்றாள் தேவி ஏதாவது சொல்லி ஆக வேண்டுமே என்ற நோக்கில்.

அதில் புன்னகையுடன் தலையாட்டிய தேவ் " இதுல எது மா அந்த கேக்?" என்று கேட்டபடி மீண்டும் ஸ்வீட் வகைகளை பார்வையிட போனவன் கண்ணில் பட்டான் ஜெயதீபன்.

அவனை அங்கே சற்று எதிர்பார்க்காதவனாய் இன்பமாய் குதுகளித்தவன் "ம்மா.... அப்பா" என்று வியப்பும் சந்தோஷமுமாய் கூறி

"அப்பா..." என கத்தியபடி ஓடி சென்று சற்று தள்ளி நின்று ஒருவருடன் பேசி கொண்டிருந்த ஜெயதீபன் காலை கட்டி கொண்டான்.

தேவேஷின் வரவை தீபனும் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அன்று பட்டம்மாளிடம் கோபமாய் பேசி விட்டு திருப்பூர் சென்ற ஜெயதீபனை தேவியின் பூட்டிய வீடே வரவேற்றது. பக்கத்தில் விசாரித்த போது அவர்கள் ஊருக்கு சென்றிருப்பதாக மட்டுமே தகவல் கிடைத்திருக்க, இரண்டு நாள் அங்கே காவல் இருந்து விட்டு இன்று காலை தான் ஊட்டி வந்திருந்தான்.

அவன் தொழில் கிஃப்ட் ஷாப் என்றாலும், அவன் அப்பா காலத்தில் இருந்தே சாக்லேட், குக்கீஸ், செய்வது தான் குடும்ப தொழில். ஊட்டியை தாண்டி வெளி நாடுகளுக்கும் இவர்கள் ப்ராடெக்ட் ஏற்றுமதி செய்ய படுகிறது.

அதே நேரம் பொது மக்களுக்கும் உற்பத்தி விலையில் விற்பனை செய்வதற்கு என்றே அவர்களுக்கு என்று சில கடைகளும் ஊட்டியில் இருக்கிறது. அதில் ஒன்றிற்கு தான் வந்திருந்தவன் தேவேஷை இங்க சற்றும் எதிர்பார்க்கவில்லை.

சிறியவனின் ஆர்ப்பாட்டத்தில் ஒரு நொடி தடுமாறி நின்றவன் மகனை பார்த்து உள்ளம் நெகிழ "ஹேய்... ஜூனியர்! நீ எங்க இங்க?" என்று கேட்டபடி மகனை தூக்கி கொண்டான்.

"அப்பா... பார்க்க வந்தேன்" என்ற தேவேஷ் தீபனின் கழுத்தைக் கட்டி கொள்ள,

"அப்படியா..." என கேட்ட தீபன் தேவேஷ் பள்ளி சீருடையில் இருப்பதை பார்த்து "அப்பாவை பார்க்க யூனிபார்ம்லயா வருவாங்க? சரி... நீ தனியாவ வந்த?" என்ற படி ஜெயதீபன் சுற்றிலும் பார்த்தான்.

"இல்லை... அம்மாவோட" என்று தேவேஷ் சொல்லவும், செந்தூரதேவி ஜெயதீபனின் பார்வை வட்டத்தில் படவும் சரியாக இருந்தது.

கணவன் மனைவி இருவரும் முதல் முறை நேருக்கு நேர் சந்திக்க சிறு தடுமாற்றம் இருவரிடமும்.

அதிலும் ஜெயதீபன் முதல் முறை தேவியை சந்திக்க, காதலாக இல்லை என்றாலும்.... அவள் முகத்தில் பார்வையை பதித்தவன் அவளை சற்றே ஊன்றி கவனித்தான்.

தேவி தன்னை இங்கே எதிர்பார்க்கவில்லை என அவளின் திகைப்பு சொல்ல சின்ன புன்னகை அவனிடம்.

தேவியை ஊன்றி கவனித்தவனின் கண்கள் கணவன் உரிமையை உரிமையுடன் எடுத்து அவளை ஆராய்ந்து பார்த்தவனுக்கு, அவள் உடையில் இருந்த நேர்த்தியை பார்த்து தேவியை போட்டோ எடுத்து அனுப்பியவனை தூக்கி போட்டு மிதிக்க தோன்றியது.

ஆம்... தேவி அத்தனை பாங்காய் சேலை கட்டி இருந்தாள். ஆனால் அவளை போட்டோ எடுத்தவன் தவறாக எடுக்கவே நேரம் பார்த்து காத்திருந்து எடுத்து இருப்பான் போலும். அதிலும் நேரில் இருக்கும் தேவிக்கும், ஜெயதீபன் போட்டோவில் பார்த்த தேவிக்கும் நிறைய மாற்றம்.

உடை மட்டும் இன்றி அவள் தோற்றமே வேறாக இருக்க, நேரில் அவளின் பின்பம் மிகவும் பிடித்து போனது ஜெயதீபனுக்கு.

அதில் அவன் கண்கள் அவளை ரசிக்கும் பணிக்கு செல்ல, தேவியோ தீபனை பார்த்து உறைந்து போய் நின்றாள். அவள் கண்களுக்கும் அவன் மட்டுமே தெரிந்தான்.

ஐந்து வருடங்கள் கடந்து, கொண்டவனை கண்ணில் பார்த்து தன்னிலை மறந்து நின்றிருந்தாள்.

கலைந்த தலையும், கசங்கிய உடையும் , மெலித்த உடலும், ஜீவனை இழந்த கண்களுமாய் பார்த்து பழகியவன் இன்று மடிப்பு கலையாத உடை, திடகாந்திரமான உடல், பார்வையில் தெளிவு என அழகனாய் நின்றவனை சிறுது வேதனையுடன் பார்த்து நின்றாள்.

அவனை இப்படி பார்க்க தானே தேவி அவள் வாழ்க்கையை அவன் கையில் கொடுத்தாள். அவன் இன்று நலமாகி விட்டாள் ஆனால் அவனுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்ற அவள் எண்ணம் மட்டும் கானல் நீராகி விட்டது. எத்தனையோ நாட்கள் தூரத்தில் இருந்தாவது அவனை பார்த்து விட வேண்டும் என்று தவித்தும் பார்க்க முடியாமல் துடித்து போன நாட்கள் நினைவில் வந்து இதையத்தை ரணமாய் கொல்ல கண்கள் குளம் கட்டியது செந்தூரதேவிக்கு.

அவள் முயற்சி தான் வீனாகி விட அவன் தேடி வருவான் என்று எத்தனை எத்தனையோ நாட்கள் ஏங்கி காத்திருந்த இரவுகள் இருளாகவே கடந்திருந்தது. ஆனால் அவன் மட்டும் வந்திருக்கவில்லை.

இன்றுவரை அந்த ஏக்கம் இதையத்தை துரு பிடித்த இறும்பாக அறித்து கொண்டிருக்க கடந்து சென்ற ஆண்டுகளில் அவள் அனுபவித்த வலிகளும் வேதனையும் பாலைவன சுடு மணலாய் பாதத்தில் கொதிப்பை கொடுக்க, நகர துடித்த மனத்தை அடக்கி அவனை பார்த்து நின்றாள்.

எத்தனை துளி கண்ணீர் தரையில் பட்டு தெரிந்ததோ அவளுக்கு ஆனால் தீபனை தவிர வேறு எதுவும் கருத்தில் பதியவில்லை.

அத்தனை நேரமும் தேவியை பார்த்து நின்ற ஜெயதீபன் தன்னிலை மீண்டு சிறு அறிமுக புன்னகையுடன் அவளிடம் வர, அந்த சில நொடிகளில் தன்னிலை மீண்ட தேவி சட்டென அங்கிருந்து நகர்ந்து விட்ட தேவியின் செயல் முகத்தில் அடித்தது போல் இருந்தது ஜெயதீபனுக்கு.

அதில் தாடை இறுக கோபத்தில் வேக எட்டுக்களுடன் அவளை நெருங்கியவன் "தேவி நில்லு..." என்றபடி தேவி கையை பற்றி இருந்தான்.

இந்த நொடி நேர இடைவெளியில் தேவியும் தன்னிலை மீண்டிருக்க, தீபனை நேர் கொண்டு பார்த்தவள் "என்ன வேணும்?" என்று கோபத்துடன் கேட்க,

"கேட்டா... கேட்டதை தந்திட போறியா நீ" என்ற ஜெயதீபன் இடக்காய் கேட்க,

"மாட்டேன். நீங்க யார் எனக்கு? நீங்க கேட்டதை தர!" என்றாள் தேவியும் குதர்க்கமாய்.

"அப்பறம் ஏன் என்ன வேணும்னு கேட்ட?" என்ற ஜெயதீபன் கோபத்தில் அவள் கையில் அழுத்தம் கொடுக்க, அப்போது தான் தன் கை தீபன் கைக்குள் இருப்பதை உணர்ந்த தேவி
தீபன் பிடியில் இருந்து கையை விலக்கி கொள்ள போக,

அவள் செய்கையை உணர்ந்தது போல் ஜெயதீபனின் பிடி இறுகியது.

அதில் அவனை முறைத்த தேவி "என்ன பண்றிங்க? கையை விடுங்க" என்றவள் பிடிவாதமாய் அவனிடம் இருந்து கையை உறுவ முயன்றாள்.

"எதுவும் பண்ணலையே! சொல்ல போனா எனக்கு உங்கிட்ட பேச கூட ஒன்னும் இல்ல. ஒரே ஒரு விஷயம் மட்டும் சொல்றேன் கேட்டுட்டு போய்ட்டே இரு...." என்றான் ஜெயதீபன் அவளின் கோப பேச்சில் கோபமுற்றவனாய்.

"அதை கையை விட்டுட்டே சொல்லலாம்" என்ற தேவி மீண்டும் அவனிடம் இருந்து கையை விளக்க போராட,

"இருக்கட்டும். இது நான் பிடிக்க வேண்டிய கை தான்" என்ற தீபன் அவளின் பிடிவாதத்தை இலகுவாய் கடந்து விட,

அவன் உரிமையில் 'இத்தனை நாள் எங்கடா போன?' என கத்த தோன்றிய கோபத்தை இதழ் கடித்து அடக்கி கொண்ட செந்தூரதேவி தீபனை முறைத்து வைத்தாள்,

அவள் கோபத்தை அலட்சியம் செய்த ஜெயதீபன் "தேவேஷை நான் பார்த்துக்குறேன். நீ உன் வாழ்க்கையை பார்த்துக்க" என்று இலகுவாய் கூற,

அவன் சொல்ல வருவது புரியாமல் சில நொடிகள் நின்ற தேவிக்கு புரிந்த போது கோபத்திற்கு பதில் சிரிப்பே வர அதை இதழ் கடித்து அடக்கிக்கொண்டவள் "தேங்க்ஸ் அ லாட்" என்றாள் போலி பணிவுடன்.

அவள் சிரிப்பை அடக்குவதை பார்த்த ஜெயதீபன் "மேடம் எதுக்கு சிரிக்குறிங்கனு சொன்னா நானும் சிரிச்சிப்பேன்" என்றான் ஏக கடுப்புடன்.

பட்டம்மாள் தான் திருமணம் செய்து கொள்ள தேவி சம்மதித்தாள் என்று சொல்லும் போது அவனுக்கு கோபம் வந்ததை போல் தேவிக்கும் வரும் என்று நினைத்தவனுக்கு, தேவியின் செயல் ஏமாற்றமாய் இருக்க வார்த்தைகள் அடக்கப்பட்ட சீற்றத்துடன் வந்தது ஜெயதீபனுக்கு.

"எனக்கு சுதந்திரம் கிடைச்சிருக்கு அதுக்கு தான். இது சந்தோஷமான விஷயம் தானே? ஐந்து வருஷமா மார்புலயும், தோள்லையும் போட்டு சுமந்த சுமை இனிமேல் இல்லை" என்று தேவி இலகுவாய் கூற,

ஜெயதீபனிடம் ஏமாற்றத்தின் சாயல். அதில் முகம் இறுக நின்றவன், தேவியின் கையை உதறிவிட்டு "உன் அம்மாக்கு பாய் சொல்லு தேவ்" என்றான் கோபம் தெரிக்க,

தந்தை தன்னை எஙகேயோ டூர் அழைத்து செல்கிறார் என்று நினைத்த தேவேஷூம் சந்தோஷமாய் ம்மா பாய்... தேவ் டுர் டுர் போறான் என்று கை அசைத்து விடை பெற தேவியும் க அசைத்து விடை கொடுத்தாள்.

தாய் அறியாத சூல் உண்டா! ஆனால் இதை அறியாத ஜெயதீபன் தேவியின் மேல் உள்ள கோபத்தில் மகனை அழைத்து கொண்டு சென்று விட,

அவன் கார் கண்ணை விட்டு மறையும் வரை பார்த்து நின்ற தேவியின் முகத்தில் அதுவரை இருந்த புன்னகையை மறைந்து விட, விழிகளை நீர் படலம் முற்றுகையிட்டது.

அதை இமை தாண்ட விடாமல் தடையிட்டவள் மீண்டும் உள்ளே சென்று பள்ளி குழந்தைகளுடன் இணைந்து கொண்டாள்.

"என்ன தேவி நீங்க போகலையா?" என உடன் வந்த பெண் விசாரிக்க,

"என் பொறுப்புல இருக்க குழந்தைங்களை பார்க்க வேண்டாமா! உங்களை எல்லாம் பத்திரமா ஊருக்கு அனுப்பிட்டு போகனும்..." என்ற தேவி குழந்தைகளுடன் ஒன்றி விட்டான்.

ஆனாலும் மனதில் ஓரம் புன்னகையுடன் கை ஆட்டி சென்ற மகனே நினைவு வர,

பிறந்ததில் இருந்து பார்த்தே இருக்காத அப்பாவின் பாசத்திற்காக இத்தனை பிடிவாதமாய் இருந்தவன், இத்தனை வருடம் அன்பையும், பாசத்தையும் ஊட்டி வளர்த்த தன்னையும் தேடி வருவான் என்ற நம்பிக்கையுடன் அடுத்து வந்த நேரங்களை கடந்து சென்றாள்.

தொடரும்....
 
அத்தியாயம்: 4

ஊட்டியின் இரவு நேர குளிரை இளையராஜாவின் இசையோடு அனுபவித்தபடி மகனுக்கு பால் சுட வைத்து கொண்டிருந்தவன் "ப்பா..." என்று இடையை சுரண்டிய அவன் மகனின் அழைப்பில் குனிந்தவன் ,

"சொல்லு தேவ்... பசிக்குதா! ஜஸ்ட் ஃபைவ் மினிட்ஸ்ல சாப்பிடலாம் ஓகே" என்றான் ஜெயதீபன்.

அதற்கு மறுப்பாய் தலை அசைத்து "சாப்பாடு வேணாம். அம்மாட்ட போனும்..." என்று தேவேஷ் சோகமாய் சொல்ல,

"ஏன் தேவ் குட்டிக்கு அப்பாவை பிடிக்கலையா?" என்ற ஜெயதீபன் தேவேஷ் முன்பு முட்டி போட்டு போதி உக்கார்ந்த நிலையில் கேட்டான்.

"பிடிக்கும்... ஆனா அம்மாட்ட போனும்" என்ற தேவேஷ் இதழ் கடித்து அழுகைக்கு அச்சாரமிட,

"ஓகே ஓகே.... இப்போ ரொம்ப பனியா இருக்கு. மார்னிங் ஆனாதும் போலாம். இப்போ தேவ் குட் பாயா சாப்பிடுவானாம்..." என்று அவனை சமாதானம் செய்தபடி மகனை தூக்கி சமையல் மேடையில் அமர வைத்த ஜெயதீபன்,

"உனக்கு முயல் தோசை சுடுவோமா?" என்று கேட்க,

"வேண்டாம். அம்மாட்டா போனும்..." என்றான் தேவேஷ் மீண்டும். இப்போது அவன் குரலில் பிடிவாதமும் சேர்ந்து இருந்தது.

தேவேஷின் பிடிவாதத்தை பார்த்த ஜெயதீபனுக்கு மகனிடம் தன்னை பார்த்து போல் இருக்க, வாஞ்சையுடன் அவன் தலை வருடியவன் "இன்னைக்கு ஒரு நாள் அப்பாவோட இரு தேவ். நாளைக்கு கண்டிப்பா அம்மாட்ட போலாம். அப்பா சொன்னா தேவ் கேட்பான் தானே!" என்று ஜெயதீபன் கெஞ்சலுடன் கேட்க,

தகப்பனின் பாசமான கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று புரியாமல் சில நொடிகள் முழித்த தேவேஷ் முதலில் ஆமா... என்று தலையசைத்து, பின்பு இல்லை என மறுத்து தலை அசைத்தவன், ஜெயதீபன் முறைத்து பார்க்கவும் எல்லா பக்கமும் தலையாட்டி வைத்தான்.

அதில் "ஹாஹா...." என சத்தமாய் வாய்விட்டு சிரித்த ஜெயதீபன் "இத்தனை நாள் உன் அம்மா உன்னை எப்படி டா சமாளிச்சா?" என்று புன்னகையுடன் கேட்டவன்,

தொடர்ந்து அவனே "கொஞ்சம் கஷ்டம் தான் இல்ல" என்றான் பாவமாய்.

ஜெயதீபனின் சிரிப்பதை பார்த்து இனி தன் தந்தை தன் அன்னையிடம் அழைத்து சென்று விடுவான் என்ற நம்பிக்கையுடன் தானும் சேர்ந்து சிரித்தபடி "அப்பா நான் போய் கிளம்பட்டா?" என்று தேவேஷ் கேட்க,

அவன் முன் நெற்றி முடியை கலைத்து விட்டபடி "குளிர் அதிகமா இருக்கு தேவ். நாம நாளைக்கு மார்னிங் கண்டிப்பா அம்மாட்ட போலாம். இப்போ அம்மாக்கு போன் போட்டு பேசுவோம் சரியா! இப்போ தேவ் குட்டி அம்மாட்ட பேசிட்டே சாப்பிடுவியாம்" என்று மகனை சமாதானம் செய்த ஜெயதீபன்,

மகனுடன் பேசி சிரித்தபடியே அவனுக்கு பிடித்த வகையில் நெய் ஊற்றி முறுகலாய் தோசை சுட்டு எடுத்துக்கொண்டவன், மகனையும் தூக்கிக்கொண்டு டைனிங் டேபிலுக்கு வந்தான்.

அவனை அமர வைத்து விட்டு "அம்மா நம்பர் சொல்லு தேவ்..." என்று கேட்க,

அவனை ஒரு மாதிரி பார்த்த தேவேஷ் ஒவ்வொரு நம்பராய் அழகாய் சொல்ல, அதை கேட்டு தேவியின் நம்பரை போனில் பதிவு செய்தவன் அவளுக்கு அழைக்க , அழைப்பு செல்லவில்லை.

தேவியின் எண் நெட்வோர்க் கவரேஜ் ஏரியாவிற்கு வெளியே உள்ளது என்று கம்யூட்டர் பதில் குரல் வர,

"அம்மாக்கு கால் ரீச் ஆகலை தேவ்" என ஜெயதீபன் சொல்ல,

அதில் தேவேஷ் மீண்டும் "அம்மாட்ட போனும்..." என்று கூற, ஜெயதீபனுக்கு தேவியின் மேல் கோபம் பெருகிய.

நேற்றைய அவளின் அடக்கப்பட்ட சிரிப்பு எதனால் என்று தேவேஷை அழைத்து வந்த சற்று நேரத்திலேயே ஜெயதீபனுக்கு புரிந்துவிட்டது.

தேவியிடம் சண்டை போட்டு மகனை அழைத்து வந்த ஜெயதீபன் தேவேஷிற்கு பிடித்ததை வாங்கி தர நினைத்து குழந்தைகள் விளையாட்டு பொருட்கள் உள்ள கடைக்கு அழைத்து சென்று... அவனுக்கு பிடித்த விளையாட்டு பொருளை வாங்கி கொடுத்தவன், அடுத்ததாய் அருகில் இருந்த ஐஸ்கீரீஸ் பார்லருக்கு அழைத்து சென்றான்.

முதலில் அவனுக்கு பிடித்த ஐஸ்க்ரீமை வாங்கி சாப்பிட்டவன், "இது அம்மாக்கு.." என்று கூறி தேவிக்கும் ஒரு பேமிலி பேக் ஐஸ்க்ரீமை வாங்கி கொண்டே கடையில் இருந்து வெளியே வந்தான்.

முதலில் தேவிக்கு என்று சொல்லி அவனுக்கு வாங்கி கொண்டதாக நினைத்த ஜெயதீபனும் அவன் புத்திசாலித்தனத்தை மெச்சி கொண்டான்.

காரில் வரும் போதே ஐஸ்கிரீமை தூக்கி காட்டியவன் "ப்பா... அம்மா ஐஸ்" என்று சொல்ல,

அப்போது அவன் சாப்பிட தான் கேட்கிறான் என்று நினைத்தவன் "நீ சாப்பிடு தேவ். அம்மாவுக்கு வேற வாங்கி தரலாம்" என்றான் ஜெயதீபன்.

அதற்கு மறுத்து தலையசைத்த தேவேஷ் "அம்மாக்கு இருக்கட்டும்" என்று விட,

தேவியின் மீதான் அவனின் பாசதைத்து பார்த்து பூரித்து போனவன் "அம்மா ஊருக்கு போய்ருப்பா தேவ். நீ சாப்பிடு..." என்று சொல்லி விட,

அப்போது ஆரம்பித்தது தேவேஷின் அம்மா புராணம். இன்னும் ஓயவில்லை.

என்ன சொன்னாலும், என்ன செய்தாலும் 'அம்மாவிடம் போக வேண்டும்' என்பதே அவன் சொல்லாக இருக்க, ஜெயதீபனுக்கு அவனை சமாதானம் செய்யவும் தெரியவில்லை.

அதே நேரம் அவனை அதட்டி அமைதிப்படுத்தவும் அவன் மனம் இடம் தரவில்லை. இத்தனை வருடங்கள் கடந்து இன்று தான் அவனை பார்த்திருக்க பார்த்த அன்றே கடிந்து கொள்ள மணம் வரவில்லை அதே நேரம் முதல் காயம் மனதில் ஆழ பதிந்து விடும் என்பதால் பொறுமையாகவே பேசி அமைதி படுத்தினான்.

ஜெயதீபனும் வித விதமாய் பேசி சமாதானம் செய்து பார்க்கிறான் ஆனால் அவன் மகனுக்கு அந்த வார்த்தைகள் போதவில்லை போலும்.

தேவேஷ் தொடர்ந்து அடம் பிடிக்கவும் அவனை முறைத்த தீபன், "அம்மா ஊருக்கு போய்ருப்பாங்க தேவ். வெளிய பனி அதிகமா இருக்கு. இந்த நேரம் வெளிய போனா ஃபீவர் வரும். அப்பறம் உனக்கு ஊசி போடனும். நாம காலையில கண்டிப்பா அம்மாகிட்ட போலாம்" என்றான் ஜெயதீபன் இப்போது கண்டிப்புடன்.

அதில் தேவேஷின் முகம் நொடியில் வாடி விட, தேவியை மனதில் திட்டியபடி மகன் தலையை தடவி கொடுத்தவன்

"தேவ் குட்டிக்கு என்ன எல்லாம் பிடிக்கு சொல்லுங்க... நாளைக்கு நாம போய் வாங்கிட்டு வரலாம். அப்படியே அம்மாக்கு ஐஸ்கிரீம் வாங்கிட்டு ஊருக்கு போலாம்" என்று உற்ச்சாகமாய் பேசியபடி அவனுக்கு உணவூட்டி முடித்த ஜெயதீபன்,

கொஞ்ச நேரம் மகனுடன் இணைந்து விளையாடினான். சற்று நேரத்தில் தேவேஷ் தூக்கத்தின் பிடிக்கு செல்ல,

மின்மனி பூச்சியாய் இமை மூடி திறந்து கொட்டாவி விட்ட மகனை தூக்கி கொண்டவன், தோளில் போட்டு தட்டி கொடுத்தான்.

சற்று நேரம் அமைதியாக அவள் தோள் சாய்ந்திருந்த தேவேஷ் "ப்பா கதை..." என்றான்.

"கதையா....!" என திகைத்த ஜெயதீபன். "என்ன கதை வேணும் தேவ் குட்டிக்கு" என்று மகனிடமே கேட்க

"பிரின்சஸ் கதை" என்றான் மகன்.

"பிரின்சஸ் கதையா? உன் மம்மி எந்த பிரின்சஸ் கதை சொன்னானு தெரியலையே டா" என்ற ஜெயதீபனுக்கு கதை சொல்ல தெரியாது என்பதை விட கதை தெரியாது.

அதில் மகன் வேறு பிரின்சஸ் கதை கேட்க "அப்பா பிரின்ஸ் கதை சொல்லவா... டா" என்று கேட்டவன் மகன் சரி என்று தலையசைக்கவும்

அவன் வாழ்வில் நடந்த விஷயங்களையே கதை போல் மெல்லிய குரலில் ஜெயதீபன் சொல்ல,

சற்று நேரத்தில் "அப்பா லார்ட் கிருஷ்ணா கதை" என்றான் மகன் இன்னும் தூக்கம் பிடிக்கா விழிகளுடன்.

"அவர் லவ்வர் பாய் தானே டா அவர் கதையா வேணும்?" என்ற ஜெயதீபனுக்கு 'என் வாழ்க்கை உனக்கு அவ்வளவு சலிப்பாவாடா இருக்கு' என மனதில் நினைத்தபடி, கதையை கூகிள் சர்ச் செய்து மகனுக்கு கூறினான்.

அதன் பிறகே தேவேஷ் உறங்க, அவனுக்கு தட்டி கொடுத்த தீபனின் மனதை செந்தூரதேவி வியாபித்தாள்.

ஒரு நாளிலேயே மகன் அவனை இத்தனை படுத்தி வைக்க தேவி எப்படி சமாளித்தாள் என வியப்பாக நினைத்தவனுக்கு மனைவியின் நினைவில் மனம் கனிந்து போனது.

ஆனந்தி அவளை வேண்டாம் என ஒதுக்கி விட்டு வந்த பிறகு என்ன துன்பங்களை எல்லாம் அனுபவித்து இருப்பாள்... இந்த சமூதாயம் அவளை எப்படி எல்லாம் பழித்து பேசி இருக்கு... அதை எல்லாம் எப்படி கடந்து வந்தாள்! என ஒவ்வொன்றையும் எண்ணி பார்த்தவனுக்கு காலையில் தேவியின் மீதிருந்த கோபம் எங்கோ சென்று ஒளிந்து கொண்டது.

காலையில் கோபத்தில் பேசி சென்றவளின் முகம் கண் முன்னே விரிய "ரெட் சில்லி.." என்று புன்னகையுடன் கூறி கொண்டவன் மனதை மீண்டும் மீண்டும் தேவியே ஆக்கிரமித்தாள்.

ஸ்வெட்டர் போட்டும் குளிரில் உடல் நடுங்க மார்பின் குறுக்கே கைகளை கட்டி கொண்டு... அவனிடம் வெடித்தவளை நினைவு கூர்ந்தவன் மனம் தடம் மாறி பயணிக்க போக,

"அடங்கு டா. அவளுக்கு மட்டும் நீ இப்படி யோசிக்கிறது தெரிஞ்சி மிளகாய் கண்ணுல தேய்ச்சி விட்டுடுவா. இன்னும் சரியா பேசவே தொடங்களை அதுக்குள்ள என்ன எல்லாம் யோசிக்குற நீ" என தனக்குள் பேசி கொண்டவன் தலையில் அடித்து கொள்ள போக, அப்போது தான் கையில் இருந்த போனை பார்த்தான்.

முன்பு அழைப்பு செல்லாமல் இருக்க, இப்போது மனதின் உத்துதலில் ஜெயதீபன் அழைப்பு விடுக்க, இந்த முறை அழைப்பு சென்றது.

காலர் டியூனாக கேட்ட "உனக்காக பிறந்தேனே எனதழகா" என்ற பாடல் வரிகள் தீபனின் மனதில் காதல் கலவரத்தை மூட்ட, அதில் சுகமாய் எரிந்தவன் தேவியின் குரல் கேட்க காத்திருந்தான்.

சில நொடிகளில் "ஹலோ.." என்ற தேவியின் குரல் கரகரப்புடன் கேட்க,

"என்ன செய்து?" என்றான் ஜெயதீபன் இயல்பாய் எழுந்த அக்கறையுடன்.

'யாரோ...' என நினைத்து அழைப்பை ஏற்ற தேவி, தீபன் குரல் கேட்கவும் பயம் தனிந்தவளாய்

"என்ன என்ன செய்து?" என்றாள் அவன் கேட்க வருவது புரியாதவளாய்.

"குரல் சரி இல்லையே... ஏன்னு கேட்டேன்" என்று ஜெயதீபன் விளக்க,

"குளிர் ஒத்துக்கலை லைட்டா ப்வர் இருக்கு" என்ற தேவி "எதுக்கு இந்த நேரத்துல கால் பண்ணிங்க" என்று கேட்டாள்.

"தேவ் பேசனும்னு சொன்னான். அதான் கால் பண்ணேன். பட் அவன் இப்போ தூங்கிட்டான்" என்று ஜெயதீபன் சொல்ல,

"இனிமேல் பையனை நான் பார்த்துக்குறேன். உன் வாழ்க்கையை நீ யாருனு சொன்னிங்க! இது தான் நீங்க தந்த சுதந்திரமா?" என்றாள் தேவி சீண்டலாய்.

அவளின் சீண்டல் பேச்சில் கோபம் கொண்ட ஜெயதீபனும் "எப்போட விட்டுட்டு போலாம்னு தான் இருந்த போல!" என்றான் நக்கலாய். ஆனால் குரலில் கோபமே அதிகம் இருக்க

"இப்போ எதுக்கு இந்த ஆராய்ச்சி? எனக்கு தூக்கம் வருது" என்ற தேவி ஜெயதீபனுடனான பேச்சை துண்டிக்க பார்க்க, அதை புரிந்து கொண்ட தீபனின் முகம் கோபத்தில் கடுகடுத்தது.

"திமிரு டி உனக்கு.வேற ஒன்னும் இல்லை" என்றான் ஜெயதீபன் பல்லை கடித்து கொண்டு.

அதற்கு பதில் பேசாமல் தேவி அமைதியாக இருக்க, "என்ன அமைதி ஆகிட்ட? உனக்கு தான் நல்லா பேச வருமே... பேசு..." என்ற ஜெயதீபன் அடக்கிய கோபத்துடன் கூற

"உங்களுக்கு என்ன பிரச்சனை இப்போ? எதுக்கு தேவை இல்லாம கால் பண்ணி சண்டை இழுக்குறிங்க?" என்றாள் தேவியும் கோபமாய்.

"ஏன் உனக்கு புரியலையானா நான் எதுக்கு பேசுறேன்னு?" என்ற ஜெயதீபன் கோபத்தை விடுத்து பொறுமையாக கேட்க,

தேவியிடம் மௌனம்.

"பதில் சொல்லு டி. நான் ஏன் பேசுறேனு புரியலையா?" என்ற ஜெயதீபன் சீற,

"நீங்க நினைச்சதும் சேர்ந்து வாழ்ந்துட முடியாது. முடியாததை..." என்ற தேவியின் பேச்சை இடை வெட்டியது "என்னை கேட்டு தான் நீ என் வாழ்க்கையில வந்தியா?" என்ற ஜெயதீபனின் வார்த்தை.

மீண்டும் தேவி மௌனமாகி போக,

"பதில் சொல்லுடி..." என்றான் தீபன் ஆவேசமாய்.

அவன் கோபத்தில் சற்றே மிரண்ட செந்தூர தேவி "இல்லை.... அது.." என்றவள் அவனுக்கு என்ன பதில் சொல்ல என்று தயங்க,

"இல்லை ரைட்! அதே தான்... இப்பவும். என் வாழ்க்கையில் வரதுக்கு எப்படி நீ என்னை கேட்கலையோ! அதே மாதிரி இப்போ நாம சேர்ந்து வாழவும் உன் முடிவு தேவை இல்லை. ஏன்னா இங்க என் வாழ்க்கையை நம்ம வாழ்க்கைனு மாத்துனதே நீ தான்" என்றான் ஜெய்தீபன் அழுத்தம் திருத்தமாய்.

அவனின் தொடர் பேச்சில் தேவேஷின் தூக்கம் கலைந்து விட, இமை பிரிக்காமலேயே "ம்மா..." என்று அவன் மெல்ல சினுங்க,

"ஓகே.... ஓகே... தூங்குங்க. நாளைக்கு அம்மாட்ட போலாம்" என்று மீண்டும் தட்டி கொடுத்து தூங்க வைத்தான்.

மகன் தூக்கும் வரை இருவரும் இணைப்பில் அமைதியக இருக்க, தேவேஷ் ஆழ்ந்த தூக்கத்திற்கு செல்லவும் அவனை பெட்டில் படுக்க வைத்தவிட்டு வீட்டை விட்டு வெளியே வந்து கார்டனில் நடந்த ஜெயதீபன்

"இப்போ பேசு..." என்றான்.

"என்ன பேச?" என்று தேவி சலிப்புடன் கேட்க,

"இவ்வளவு சலிச்சிக்காத டி. நம்ம வாழ்க்கையே இனிமேல் தான் தொடங்க போகுது" என்ற ஜெயதீபன் கோபத்தை எல்லாம் உதறி விட்டு ஒரு வித இதமான மனநிலையில் பேச,

"ப்ச் இதையே பேசாதிங்க. வேஸ்ட். வேற ஏதும் சொல்லனும்னா சொல்லிட்டு கால் கட்டு பண்ணுங்க" என்றாள் தேவி சிடுசிடுப்புடன்.

அவனுடன் வாழ எங்கி தவித்த நாட்கள் எல்லாம் அவன் எட்டா கனி என்று தலையில் அணி அடித்து உணர்த்தி இருந்தது.

அவளின் காதல் பட்ட மரமாக போய் பல வருடங்கள் ஆகி விட்டது என நினைத்திருந்தவள் இப்போது மீண்டும் புதிதாய் துளிர் விட்டதை எற்க முடியாது தவிக்கிறாள்.

"என்னை என்னடி நினைக்குற நீ. உண்மை தெரியாம நிம்மதியா இருந்தவன் கிட்ட உண்மையை சொல்லிட்டு இப்போ வந்து சேர்ந்து வாழ மாட்டேன்னா என்ன அர்த்தம்?" என்ற ஜெயதீபன்,

"என்னோட சேர்ந்த வாழ மாட்டேன்னு உறுதியா இருக்குறவ உண்மையை சொல்லியே இருக்க கூடாது...." என்றான்.

"தப்பு தான். உரிமை இல்லாம உண்மையை சொல்லி இருக்க கூடாது" என்ற தேவியும் வேதனையும் விரக்தியுமாய் சொல்ல,

அவள் சொல்ல வருவது புரியாத தீபன் "தெளிவா பேசுடி. என்ன உரிமை இல்லை உனக்கு? எங்கிட்ட உனக்கான உரிமையை யார் தரனும்? யூ ஆர் மை வைஃப்" என்று ஜெயதீபன் அழுத்தமாய் சொல்ல,

"இல்லை.... எனக்கு உங்க கிட்ட எந்த உரிமையும் இல்லை. எனக்கு மட்டும் இல்லை தேவ் கூட உங்ககிட்ட உரிமை இல்லை. ஏன்னா நமக்கு டிவோர்ஸ் ஆகிட்டு" என்றாள் செந்தூரதேவி சீற்றமாய்.
 
அத்தியாயம்: 5

தேவி சொல்வதை நம்ப முடியாமல் அதிர்ந்த ஜெயதீபன் "வாட் கம் அகைன்..." என்றான் அதிர்வுடன்.

"எஸ் வீ காட் டிவோர்ஸ்டு. வீ ஆர் நாட் ஹஸ்பெண்ட் அன்ட் ஃவைப் நவ்" என்றாள் தேவியும் கொதிப்புடன்.

ஐந்து வருடம் முன்பு பட்ட வலிகள் எல்லாம் இப்போது இரும்பு கம்பியால் பட்ட சூட்டு காயமாய் உடலிலும் மனதில் தீரா வலியையும், எரிச்சலையும் கொடுக்க, பேச்சில் கோபத்தின் வீரியம் அதிகமாகவே இருந்தது.

"பதில் கிடைச்சிதா. போதுமா...?" என்ற தேவி கோபம் தனியாதவளாய் கேட்க,

அவள் சொன்னதை இன்னும் நம்ப முடியாமல் திகைத்து வாயடைத்து நின்ற ஜெயதீபன் "எப்படி!!!" என்றான் திகைப்பு அகலாதவனாய்.

"நமக்கு கல்யாணம் பண்ணி வச்ச உங்க அம்மாவே டிவோர்ஸும் பண்ணி வச்சிட்டாங்க. நம்ம கல்யாணம் நீங்க மனநிலை சரி இல்லாதப்போ நடந்ததுங்குற.. ஒரே காரணத்தை வஞ்சி அவங்க நினைப்பதை நடத்திக்கிட்டாங்க" என்று வலியும் வேதனையும் நிறைந்த குரலில் சொன்ன தேவியின் கண்கள் சூடான கண்ணீரை உதிர்த்தது.

"நடந்து முடிஞ்சது எல்லாத்தையும் நினைச்சி பார்க்கும் போது தான் லைஃப்ல நான் எவ்வளவு பெரிய முட்டாளா இருந்து இருக்கேன்னு புரியுது" என்ற தேவியின் முகம் நொடியில் இறுகி போய் இருந்தது.

எத்தனை எத்தனையோ... முறை இப்படி நினைத்து வருந்தி இருக்கிறாள். ஆனால் அப்போதெல்லாம் ஜெயதீபனும் நினைவு வருவான். அவனை நினைத்தும் மனம் வேறு யோசனைக்கு சென்று விடும். அதில் அவனுக்காக முட்டாள் ஆனதில் ஒன்றும் தப்பில்லை என்று தோன்றி விடும்.

ஆனந்தி வேண்டுமானால் அவளை வாழை இலையாக பயன்படுத்தி இருக்காலாம். ஆனால் ஜெயதீபனை அப்படி சொல்லி விட முடியாது.

அவள் ஜெயதீபன் மீது கொண்ட நேசம் உண்மை. அதே போல் தீபனும் அவன் மேல் அன்பு கொண்டது உண்மை. ஆம் அன்பு தான். அதனாலேயே அவன் நன்றாக இருந்தால் போதும் என்று ஆனந்தி செய்த அனைத்தையும் பொறுத்துக் கொண்டாள்.

ஆனால் அதன் பிறகு பல முறை ஜெயதீபனை விட்டு இருக்க கூடாதோ என நினைத்து வருந்தியும் இருக்கிறாள். இப்போதும் அந்த வருத்தம் இருக்க அதன் வெளிப்பாடாய் வார்தைகள் வந்து விழுந்தன,

"நீ முட்டாள் இல்லை டி. என்னை தான் எல்லாரும் முட்டாள் ஆக்கிட்டிங்க" என்றான் ஜெயதீபன் அமைதியான, ஆனால் வலி நிறைந்த குரலில்.

அந்த குரல் தேவியை என்னவோ செய்ய, அவள் கண்ணில் திரண்டு நின்ற நீர் சிப்பிக்குள் விழும் மழை நீராய் தரையில் பட்டு தெரிந்தது.

தேவியின் அமைதியில் தானும் சில நொடிகள் அமைதி காத்த ஜெயதீபன் "சொல்லு... வேற என்னலாம் செஞ்சி வச்சிருக்கிங்க? தேவ் ஏன் எனக்கு உரிமை இல்லை? நமக்கு டைவர்ஸ் ஆச்சினா... என் மகன் எனக்கு பிள்ளை இல்லைன் ஆகிட முட்டானே!" என்று ஜெயதீபன் இறுகிய குரலில் கேட்க,

அவன் கேள்விக்கு பதில் சொல்ல முடியாத தேவி அழைப்பு துண்டித்து விட்டாள்.

அதில் ஆத்திரம் பெருக காலால் மண்ணை உதைத்து தள்ளியவன் அந்த இரவை யுகங்களாய் கடந்திருந்தான்.

ஊட்டியின் குளிர் அவன் இதையத்தின் அனலை தனிக்காமல் தள்ளி நின்று வேடிக்கை பார்க்க, தேவேஷ் எழும்பும் வரை காத்திருந்தவன் அவன் எழுந்ததும் அவனை அழைத்து கொண்டு கிளம்பி விட்டான்.

தேவியை கேள்வி கேட்கும் முன் அவன் வாழ்வில் நடந்த அனைத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும். இப்போது அவன் கேள்விக்கு பதில் சொல்லு ஆள் பட்டம்மாள் என்பதால் அவரை பார்க்க சென்றான்.

ஆனந்தியிடமோ, தேவியிடமோ, இதை பற்றி பேசினால் சரியான பதில் வராது என்று தெரிந்து விட, அவன் விசாரனை பட்டம்மாள் பக்கம் சென்றது.

அவன் இருக்கும் இடத்தில் இருந்து பத்து கீலோ மீட்டர் தொலைவில் தான் பட்டம்மாள் இருந்தாள். அவர் இருக்கும் இடம் அதிக மாலை பாங்கான இடம். அங்கு குளிர் இதை விட அதிகம் இருக்கும் என்பதால் தேவேஷிக்கு ஸ்வேட்டரை போட்டு மகனை தூக்கி கொண்டு பட்டம்மாள் வீட்டிற்கு வந்தான்.

"வாங்க சார்... பெரியம்மாவும் சின்ன மேடமும் ஹாஸ்பிடல் போய் இருக்காங்க" என்றாள் பட்டம்மாளுடன் துணைக்கு இருக்கும் சுவாதி.

"அம்மா வந்துருக்காங்கலா?" என ஒரு மாதிரியான குரலில் ஜெயதீபன் கேட்க,

"பட்டு பாட்டி.." என அழைத்தபடி தேவேஷ் தீபனிடம் இருந்து இறங்கி வீட்டிற்குள் ஓட,

'முன்னாடியே இங்க வந்து இருக்கானா!' என்ற யோசனையுடன் தீபனின் பார்வை அவனை தொடர,

"இல்லை சார். சின்ன மேடம்" என்றாள் சுவாதி தயக்கத்துடன்.

அதில் தீபன் பார்வை சுவாமியிடம் வர 'யார்...' என்று புரியாமல் ஜெயதீபன் பார்க்க,

"உங்க வைஃப் சார்" என்றாள் சுவாதி.

'ஹோ... இங்க தான் இருக்காளா!' என நினைத்தவன் "எப்போ போனாங்க? கால் பண்ணி கிளம்பிட்டாங்களா கேளுங்க... நான் வந்துருக்கேன்னு சொல்ல வேண்டாம்" என்றான் ஜெயதீபன்.

சுவாதியும் பட்டம்மாளுக்கு போன் செய்து பேசியவள் "வந்துட்டு இருக்காங்களாம் சார்..." என்றாள்.

"சரி அவங்க வந்ததும் சொல்லுங்க நான் என் ரூம்ல இருக்கேன்" என்று அறைக்கு சென்ற ஜெயதீபன் கார் சத்தம் கேட்கவும் தான் வெளியே வந்தான்.

தேவேஷ் அதற்கு வெளியே ஓடி வந்து தேவியை கட்டி கொள்ள, மகனை அங்கு சற்று எதிர்பார்க்காமல் அவனை தூக்கி கொண்ட செந்தூர தேவியின் பார்வை வாசலை பார்க்க, ஜெயதீபன் அவளை தான் பார்த்து நின்றான்.

பட்டம்மாளும் அவனை அங்கே எதிர் பார்க்காமல் "என்னடா திடீர்னு வந்து நிக்குற?" என்று கேட்டபடி உள்ளே வர,

அவருக்கு வழி விட்டு நின்றவன் "நீங்க எல்லாரும்... எங்கிட்ட சொல்லிட்டு தான் எல்லாம் பண்றிங்க போல?" என நக்கலாய் கேட்டவன், திரும்பி "நீ ஏன் நின்னுட? இப்படியே ஊருக்கு பஸ் பிடிக்கு எண்ணமா?" என்றான் தேவிடம்.

காய்ச்சலில் சோர்ந்து இந்த தேவி அவனுக்கு பதில் சொல்லாமல் உள்ளே சென்று சோஃபாவில் அமர்ந்தாள்.

"தேவ்... சுவாதி ஆன்ட்டி கிட்ட அம்மாக்கு டேப்ளேட் போட ஹாட் வாட்டர் வைக்க சொல்லு" என்று சொல்லி மகனை அங்கிருந்து அனுப்பிய ஜெயதீபன் தேவி முன்பு வந்து நின்றான்.

"என்ன...?" என்ற தேவி அவனை ஏறிட்டு பார்க்க,

காய்ச்சலில் களைத்து முகம் வட அமர்ந்து இருந்தவளை பார்த்தவன் "இப்போ எப்படி இருக்கு?" என கேட்டபடி அவள் நெற்றியில் கை வைத்து பார்த்தான்.

தேவியின் உடல் சூட்டை அவன் கை உணரும் முன்பே தேவி அவன் கையை தட்டி விட, அதை பொருட்படுத்தாமல் மீண்டும் அவள் கன்னத்தில் கை பதித்தான் ஜெயதீபன்.

இந்த முறை தேவி அவன் கையை தட்டி விட முடியாதபடி அழுத்தம் கூட்டி தொட்டவன் "ஒரு பேப்பரால நம்மோட உறவை பிரிக்க முடியாது. அதுவும் நான் சுயமா எடுக்காத முடிவுக்கு நீ இவ்வளவு முக்கியத்துவம் தர தேவை இல்லை. எனக்கு நீ வேணும். விட மாட்டேன்..." என்றான் ஜெயதீபன் அதீத பிடிவாதத்துடன்.

"உண்மை தெரிஞ்ச பின்னாடியும் கூட தேடி வராம இருந்துட்டு. இப்போ என்ன பாசம் பாயாசம் எல்லாம்?" என்ற தேவி முகம் திரும்பி கொள்ள,

ஜெயதீபன் திரும்பி பட்டம்மாளை முறைக்க, அவர் புரிந்து கொண்டு அங்கிருந்து நகர்ந்து விட்டார்.

அதில் சின்ன சிரிப்புடன் தேவி பக்கம் திரும்பியவன் "அது தான் கோபமா?" என்று கேட்க,

தேவியின் இமையோரம் நீர் தேங்கி விட்டது. அவள் பட்ட வலிகள் எல்லாம் வரிசை கட்டி முன் வர, வெடிக்க இருந்த கேவலை இதழ் கடித்து அடக்கி கொண்டவள் அவனை ஆங்காரமாய் பகிர்ந்தாள்.

இப்போது அவள் கோபம் ஜெயதீபனை பாதிக்கவில்லை. அவள் கண்ணில் மின்னிய கண்ணீர் துளி அவளின் காயத்தை மட்டுமின்றி அவளின் காதலையும், பிரிவின் வலியையும் சொல்ல,

"என் மேல எப்படி இவ்வளவு காதல்? ஏன் இவ்வளவு கோபம்? இரண்டுக்குமே எனக்கு காரணம் தெரியலை. தெரிஞ்சிக்கனும்..." என்ற ஜெயதீபன் அவள் கண்ணீரை துடைக்க போக,

அவன் கையை பட்டென தட்டிவிட்டு விட்டு எழுந்து உள்ளே சென்ற தேவி சில நிமிடங்களில் திருப்பி வந்து ஒரு பேப்பரை அவன் முன்னே விட்டெறிந்தவள் "நமக்குள்ள உறவே இல்லைனு சொல்லி.. மிரட்டி... உங்க அம்மா கையெழுத்து வாங்கிட்டு போகும் போது கூட நீங்க வருவிங்கனு நம்பிக்கை நிறையவே இருந்து. ஆனா இந்த பேப்பர்ல எல்லாம் நீங்க சுயநினைவோட தான் படிச்சி கையெழுத்து போட்டு குடுத்திங்கனும் தெரிஞ்ச அப்பறம் தான் என் பைத்தியக்கார தனம் புரிஞ்சி" என்றாள் தெவி ஆவேசமாய்.

செந்தூர தேவி கோபமாய் பேச பேச அவள் கண்ணீரும் பெருகி வழிய அதை அழுந்த துடைத்துக் கொண்டவள் "நீங்க கேட்டதுக்கு பதில் அதுல இருக்கு" என்று விட்டு உள்ளே சென்று விட்டாள்.

அந்த பேப்பரை எடுத்து படித்த ஜெயதீபனின் உடல் கொஞ்சம் கொஞ்சமாய் இறுக, அதை படித்து முடித்த நேரம் அவன் நெற்றி நரம்புகள் கூட புடைத்து இருந்தன.

தேவிக்கும் அவனுக்கும் எந்த வகையிலும் உறவு இல்லை என்றதுடன் தேவேஷ் அவன் மகன் இல்லை என்றும் தேவியுடன் அவன் ஃபிசிக்கல் ரிலேஷன் சிப் வைத்துக்கொள்ள என்றும் சுய நினைவுடன் எழுதி கொடுத்ததாக இருக்க அதில் தீபனின் கையெழுத்தும் இருந்தது.

ஜெயதீபனின் முக இறுக்கம் அவனின் கட்டுக்கடங்காத கோபத்தை வெளிப்படுத்த, கண்கள் ரத்தம் என சிவந்து போனது.

வெறும் வெற்று காகிதத்தை படித்த தனக்கே இப்படி இருக்கிறது என்றால் அப்போதைய தேவியின் வலி எத்தனை கொடுமையானதாய் இருந்திருக்கும் என்று நினைத்தவனின் மனம் வேதனையில் கசங்கி போனது.

கடந்த சில வருடங்களில் அவனின் வாழ்க்கைவேரில் பல சிக்கல் ஏற்ப்பட்டது சிதைத்து கிடப்பதை உணர்ந்தவன். அவற்றை சேதாரமில்லாமல் சரி செய்ய நினைத்தான்.

முடிந்தது முடிந்ததாகவே இருக்கட்டும். இனிமேல் அதை நினைத்து வேதனையில் உழன்று... இருக்கும் நாட்களை சிக்கலாக்கி கொள்ள வேண்டாம் என நினைத்தான் ஜெயதீபன்.

தீர்க்கமாய் முடிவு எடுத்த பின் மனது சற்று சமன் பட, நிதானத்துடன் கையில் இருந்த பேப்பரை கிழித்து குப்பை தொட்டியில் வீசியவன் பட்டம்மாள் அறைக்கு வந்தான்.

அவன் வரவை அவரும் எதிர் பார்த்து இருப்பார் போலும் நடந்த அனைத்தையும் கூறி விட்டார்.

அவர் சொன்ன அனைத்தையும் கேட்டு நெஞ்சம் புழுங்கி போனவனுக்கு, ஜன்னல் வழி வீசிய தென்றல் காற்றாய் இதம் சேர்த்தது தேவியின் அப்பழுக்கற்ற காதல்.

அவளுடையது முழுக்க முழுக்க ஒரு தலை காதல். சொல்லாத காதலும் கூட. ஆனால் அதன் அழுத்தமும், ஆழமும் கடல் போல். வெளியே அமைதியாக இருக்கும் கடலின் உள் சுழற்ச்சியும் ஆழமும் வெளியே இருந்து பார்ப்பவர்களுக்கு தெரியாது. உள்ளே இறங்கி விட்டால் உயிர் தப்ப முடியாது.

அதை புரிந்து தேவியின் காதலின் ஆழந்தை அளந்து விட இறங்க துணிந்து விட்டான் ஜெயதீபன்.

முற்று பெற்றது விட்டது என்று அவன் மனைவி சொன்ன உறவுக்கு கமாவை போட்டு அடுத்த வரிகளை எழுத முடிவு செய்து விட்டான்.

வாழ்கை பற்றிய தெளிவான முடிவு அவன் மனதையும் தெளிவாக்க எழுந்து தேவி இருந்த அறைக்கு செல்ல போக, தேவி மகனை அழைத்துக்கொண்டு பெட்டியை தூக்கிக்கொண்டு வெளியே வந்தாள்.

அவன் ஒன்று சேர நினைக்க, மனைவி பிரிவின் விழிம்பிலேயே நின்று விட்டதை புரிந்து கொண்டவன் "எங்க கிளம்பிட்ட?" என்றான் நிதானமாய்.

"என் வீட்டுக்கு போறேன்" என்றாள் தேவி முடிவாய்.

"உங்க வீட்டுல யார் எல்லாம் இருக்காங்க?" என் கேட்டு மகனை வாங்கி கொண்ட ஜெயதீபன் "தேவ் அப்போவோட இருக்கியா?" என்று கேட்க,

"வேண்டாம். அம்மாட்ட..." என்று தேவியிடம் சென்ற தேவேஷ் அடுத்த நொடியே "அப்பாட்ட.." என்று மீண்டும் அவனிடமே வந்து இருந்தான்.

தேவ் முகத்தில் ஆசையும், பயமும் சரி விகிதத்தில் இருக்க, தேவியை அர்த்த பார்வை பார்த்தவன் "அம்மாவும் நம்மோட தான் இருப்பாங்க தேவ்" என்றான்.

"நாங்க மட்டும் தான். அம்மா அப்பாவோட ஓமன்ல இருக்காங்க" என்ற தேவி "தேவ் ஆசை பட்டா உங்களோடவே இருக்கட்டும்" என்றவள் அவள் முடிவில் உறுதியாக இருக்க,

"அவனுக்கு மட்டும் இல்லை எனக்கும் நீ வேணும்" என்றான் ஜெயதீபன்.

அதில் பெருமூச்செறிந்த செந்தூர தேவி "நான் துரோகத்தால வீழ்ந்தப்பட்டிருக்கேன். அதோட வலி உங்களை பார்க்கும் போதெல்லாம் அதிகமாகுது. என்னால முடியலை... நான் என்ன செய்யட்டும்?" என்றாள் தேவி மிகுந்த வலியுடன்.

"மறக்க ட்ரை பண்ணு. இதுவரைக்கும் வலியிலேயே வாழ்ந்துட்டேன் இனிமேயும் வாழ்ந்துக்குறேன்னா என்ன அர்த்தம்‌?".

"ட்ரை பண்றேன். ஆனா உடனே முடியாது" என்றாள் தேவி. சட்டென அவனுடன் உறவாட வரவில்லை. அவர்களுக்கான உறவும் அவ்வளவு ஆழமாய் இருந்தது இல்லை என்பதால் அது புதிதாகவும் தோன்றவில்லை.

கணவன் தான். ஆனாலும் அவருடனான வாழ்க்கை என்பது இரண்டு மாதங்கள் தான். அதிலும் காதலும்,பாசமுமாய் வாழ்ந்த உணர்வுபூர்வமான வாழ்க்கை இல்லை . பருவத்தில் ஏற்ப்பட்ட காதல் மயக்கம், பட்ட வலியின் பயனால் பறிபோயிருக்க இப்போது அவர்களுக்கான பந்தம் என்ன என்று தெரியவில்லை.

அவர்களின் உறவு என்றால் தேவேஷை வைத்து தான். அதுவும் உருவமில்லா பேப்பரில் ஊஞ்சலாடி கொண்டிருக்க தேவியிடம் பெரும் தயக்கமே.

தேவியின் முகத்தில் தோன்றி மறைந்த பாவனைகள், அவள் மனதை தீபனுக்கு படம் பிடித்து காட்ட,

"இது என்ன?" என்றான் அவள் கழுத்தில் தொங்கிய தாலியை காட்டி.

"ஏன் உங்களுக்கு தெரியாதா? அது என்னனு?" என்றாள் தேவி முறைப்புடன்.

"எனக்கு தெரியுது. நீ சொல்லு அது என்ன?" என்ற ஜெயதீபன் அதிலேயே நிற்க,

"தாலி.." என்றாள் தேவி கடுப்புடன்.

"இதை நான் கட்டுனேனா இல்லை நீயே கட்டிக்கிட்டியா?" என்றான் அடுத்ததாய்.

"நீங்க தான்" என்று தேவி முறைத்தபடியே பதில் தர,

"அப்பறம் எப்படி நம்மோட உறவு முடிஞ்சிட்டதா சொல்ற? எது நம்ம உறவை இணைச்சிதோ அதால மட்டும் தான் பிரிக்கவும் முடியும்? டிவோர்ஸ் பேப்பரை நீயும் வெத்து பேப்பரா தான் நினைச்சிருக்க. அதான் இது இன்னும் உன் கழுத்துல இருக்கு" என்றான்.

தேவி அவனை முறைத்தபடியே நிற்க,

சிறு புன்னகையுடன் அவளை நெருங்கிய ஜெயதீபன் இப்போது இன்னும் உரிமையுடன் அவள் கழுத்தில் கை வைத்து அவள் உடல் சூட்டை ஆராய்ந்தான்.
 
Top