priya pandees
Moderator
இன்றெடுத்த இப்பணியும் இனித்தொடரும் எப்பணியும்
நன்மணியே சண்முகனார் தன்னுடனே நீ எழுந்து
என்பணியை உன்பணியாய் எடுத்தாண்டு எமைக்காக்க
பொன்வயிற்றுக் கணபதியே போற்றியென போற்றுகின்றேன்!
- ஔவையார் கிபி 1310
அத்தியாயம் 1
பௌர்ணமி ஒளி வெளிச்சமும், அங்கங்கு தீபத்தின் ஒளி வெளிச்சமும் அந்த நீண்ட குகையினுள் பரவியிருக்க. அதின் இறுதியில் மேல் பாறையில் ஆக்ரோஷமாக, பாவம் செய்து தன் எதிர் வருபவர்களை பார்வையால் எரித்துவிடும் ருத்ர தேவியாய், வலது பக்க இரு கைகளில் ஒன்றில் அரிவாளும், மற்றொன்றில் அகல் விளக்குமாயும், இடது பக்க இரு கைகளில் ஒரு கையில் திரிசூலமும், மற்றொன்றில் அரக்கனின் தலையை ஏந்தி கொண்டும், வலது காலை தரையிலும் இடது காலை இன்னொரு அரக்கனின் தலையில் வைத்தும் காட்சி அளிக்கிறாள், வேங்கை நல்லாள். அவள் கையில் ஏந்தியிருக்கும் விளக்கு நெய்யில் 5 பக்க திரியிட்டு எரிவதால் அவள் முகத்தை மேலும் பிரகாஷமாக்கி காட்டி கொண்டிருந்தது. ஒரு ஆள் உயரத்திற்கு பாறை இருக்க அதற்கு மேல் அவள் நிமிர்ந்து நிற்க, தரிசிக்க வரும் யாரும் அன்னார்ந்து தான் பார்க்க வேண்டும். தவறு இழைக்காதவர்கள், தவறி தவறிழைத்தவர்கள் மட்டுமே அவளை நிமிர்ந்து காண இயலும், அவர்கள் கண்களுக்கு மட்டுமே அவள் முகம் சாந்தமாய் காட்சியளிக்கும். தெரிந்தே தவறிழைத்தவர்களை அவள் கிஞ்சித்தும் மன்னிப்பதில்லை. ஆதலாலேயே அவளை குளிர்விக்கும் பொருட்டு, அந்த அடர்ந்த குகையினுள் அவள் மீது மட்டும் தன் ஒளியை வீசி குளிர வைத்து, சாந்த படுத்துவதாக தன் இருப்பை வைத்துக் கொள்வார் சந்திரன்.
அவள் முன் தலைவிரி கோலமாய் கண்ணில் நீர் வழிய, அரச செல்வ உடையில் அதீத கோபமும், மனவேதனையும் சரிசமமாய் போட்டியிட நிறைமாத வயிற்றுடன், யாரையோ எதையோ எதிர்பாத்தவாறு, வேங்கை நல்லாளின் முகத்தையே கண்ணெடுக்காமல் "ஏன் எனக்கு இப்படி ஒரு வாழ்கை அமைத்து கொடுத்தாய்" என கேட்பது போல் பார்த்திருந்தாள் பெண்ணொருத்தி. அவளின் அருகில் அவளையே பாவமாய் பார்த்தவாறு நின்ற தோழி பெண் "இளவரசி எழுந்திருங்கள் அரண்மனை திரும்பிவிடலாம். நாம் வந்து வெகு நாழி கழிந்துவிட்டது, அரசரும் நாம் திரும்பிருப்போம் என்றெண்ணி அங்கு சென்றுருக்கலாம், சாமம் கடந்துவிட்டது, நிறைமாத கர்ப்பிணி இப்படி குகையினுள், குளிர்ந்த காற்றில் வெகுநேரம் இருக்க கூடாது வாருங்கள் சென்றுவிடலாம்" என அழைக்க, அவள் பேசியது ஏதும் காதில் விழுந்ததா என்பதுபோல் அமர்ந்திருந்தாள் இளவரசி திரும்பியும் பாராமல்.
அப்பொழுது "டொக் டொக்" என்ற சத்தம் சற்று தூரத்தில் அந்த குகையின் அர்த்த ராத்திரி அமைதியின் பொருட்டு பேரொலியாய் கேட்டது, வருபவரின் கம்பீரத்தை எடுத்துரைத்தது. அவ்வளவு நேரம் பிசகாத இளவரசியின் சிந்தனை இந்த நடையின் சத்தத்திலேயே சிதறியது. கண்டுகொண்டாள் தன்னை முற்று முழுதாய் ஆள்பவன் வந்துவிட்டானென. ஆனால் சந்தோசப் பட முடியவில்லை. அவன் நெருங்க நெருங்க கோவமும், வேதனையும் அதிகரித்தது, மூச்சு வாங்கத் தொடங்கியது. அவளுக்காகவே குவளையில் தண்ணீர் அடைத்து எடுத்து வந்திருந்ததை தோழி பருக குடுக்க, சிவந்த கண்களுடன் அவளை முறைத்தவாறு அதை தட்டிவிட்டாள். அது வெண்கல குவளை பெரிய சத்தத்துடன் உருண்டு சென்று, உள் வந்திருந்த அவள் தலைவனின் காலடியில் சென்று நிற்க. அவன் நடையும் அங்கேயே தடைபட்டது. அரசரை காணவும் தோழி பெண் வெளியேறிவிட, அரசன் தன் தலைவியை நோக்கி முன்னேறினான். அவள் இப்பொழுது அவனை தான் பார்த்துக்கொண்டிருந்தாள். "அழகன் பேரழகன், பார்ப்பவரையெல்லாம் பார்வையிலும், இந்தச் சின்னச் சிரிப்பிலும் மயக்கிவிடும் ஆண்மைமிக்க அழகன். அது தானே என் வாழ்க்கையை சீரழித்துவிட்டது. இவன் அழகனாக இல்லாமல், அரசனாக இல்லாமல் இருந்திருக்க கூடாதா?" இவ்வாறெல்லாம் மனதினுள் குமுறிக்கொண்டு தன்னை நோக்கி வருபவனையே பார்த்துக்கொண்டிருந்தாள். அவனோ தன் தலைவியின் சிறுபிள்ளை கோவத்தை ரசித்தவாறு சின்ன சிரிப்புடன் நெருங்கினான்.
அவளோ மேலும் "இல்லை துரோகம் இழைக்கவும் நம்பியவளை ஏமாற்றவும் அழகும், அரச பதவியும் காரணமில்லை, அவனது தீய எண்ணங்களே காரணம் அவனது ஒழுங்கீனமற்ற மனமே காரணம், நான் இவனை சந்திக்காமலே இருந்திருக்கக் கூடாதா" என தன் மனநிலையை ஒரு நிலைப்படுத்த முடியாமல் திணறிக் கொண்டிருந்தாள். அவளை நெருங்கியவனோ அவள் முன் மண்டியிட்டு அமர்ந்து, "தாமதத்திற்கு மன்னித்துவிடு மகிழ் அரண்மனை சென்றிருப்பாய் என்றெண்ணி அங்கு சென்றுவிட்டு வருகிறேன். ஏன் இன்னும் இங்கேயே அமர்ந்திருக்கிறாய்? கிளம்பு அரண்மனை சென்று பேசிக் கொள்ளலாம்" என அவளை தூக்கி விட, தோளைத் தொட. அவன் கையை தட்டிவிட்டாள் தீயாய் முறைத்தாள், பின் அவனைப் பார்த்து இகழ்ச்சியாய் சிரித்தாள். "ஏன் தாமதம் என்று தான் எனக்கு நன்றாக தெரியுமே. நேற்று அந்தி சாயும் நேரம் தங்களை எதிர்பார்த்த மனைவியைக் காண எப்பொழுதுதான் தங்களால் வர இயலுகிறது என்பதை காணவே இங்கேயே காத்திருக்கிறேன். எப்படியோ விடியும் முன் வந்து சேர்ந்து விட்டீர்கள்" என மேலும் வேதனையாய் சிரித்து கூற.
"அதற்கு தான் மன்னிப்பு கேட்டு விட்டேனே மகிழ். எழுந்திரு, சாம காற்று காய்ச்சல் கண்டு விடும். நீ தைரியசாலி என நான் அறிவேன், அதை இப்படி நடுக்காட்டில் வந்திருந்து நிரூபிக்காதே, என எத்தனை முறை வேண்டுவது, எழுந்திரு மகிழ்". "இன்னமும் தாங்கள் தாமதத்திற்கான காரணத்தைக் கூற விளையவில்லையே, இவளிடமெல்லாம் எதற்காகக் கூற வேண்டும் என்ற எண்ணம் கூட வந்து விட்டதோ?" எனக் கேட்க. "உனக்குத்தான் தெரிந்திருக்கிறதே. குறிஞ்சிக்கு பிரசவ வலி கண்டு விட்டது அவள் தகப்பனாரயும் தான் மனுதீர பாண்டிய மன்னனிடம் ஓலை கொடுத்து செய்தி பெற்றுவர அனுப்பியுள்ளோமே. அதான் வைத்தியரிடம் அழைத்துச் சென்று குழந்தை பெறவுமே கிளம்ப முடிந்தது. தற்பொழுது தனார்த்தன் வரவும் அவனை அங்கு இறுத்திவிட்டு வருகிறேன்". "ஒரு பொய்யை மறைக்க ௭த்தனை பொய். மந்திரியின் மகளின் பிரசவத்திற்கு அரசனே உடனிருந்து பிள்ளைப் பேறு பெறும் வரை கண்டு விட்டு வருகிறார். இப்படித்தான் தங்கள் நாட்டிலுள்ள அனைத்துப் பெண்களையும் காக்கீறிர்களோ?" இவள் இடக்காக கேட்க.
அவன் முகத்தில் புருவ சுளிப்புடன் "நீ என்ன பதில் எதிர்பார்க்கிறாய் மகிழ், என்னிடம் நேராகவே கேள். நான் கூறுவதை நீ ஏற்கும் சூழ்நிலையில் இல்லை போல் தோன்றுகிறது" என்றான் அரசனாகபட்டவன். "ஆமாம் எந்த சூழ்நிலையும் எனக்கு ஏற்பாக அமையவில்லை" என அமைதியாக சொன்னவள் "எனக்கு ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்கள். உங்களுக்கு என்னிடம் கூற வேண்டிய, மறைத்த விஷயம் என ஏதேனும் உண்டா?" என்றாள். "என்னவாயிற்று மகிழ் உனக்கு? உன்னிடம் நான் எதை மறைக்க போகிறேன். சிறிது காலமாகவே நீ சரியாக இல்லை, உன் மனதை ஏதோ உறுத்துகிறது எதுவாகினும் சொல் நான் தீர்த்து வைக்கிறேன்." "பொய் மேல் பொய்யாக கூறிக் கொண்டு செல்கிறீர்கள் அதுதான் என்னை உறுத்துகிறது, நீங்கள் செய்பவற்றை எல்லாம் கண்ணால் கண்டும், கேட்டும் இன்னமும் தீர விசாரித்துக் கொள்வோம் என உங்கள் முன் உயிரோடு போராடிக் கொண்டிருக்கிறேன். அதற்கு காரணமான தங்கள் மீது நான் கொண்ட காதல் அது என்னை உறுத்துகிறது, நம் காதலுக்கு அடையாளமாக கிடைத்த பிள்ளையை சந்தோஷமாக சுமக்க விடாமல் வேதனையிலும் கண்ணீரிலும் அழைய விட்டீர்களே, அந்த நிலை என்னை விட்டு நீங்காமல் மனதில் நின்று உறுத்துகிறது. இனியும் என் வாழ்க்கையயும் வாழ்நாளையும் எப்படி இந்த பிள்ளையுடன் கழிக்கப் போகிறேனோ, என என் மனம் உறுத்திக்கொண்டே இருக்கிறது, இதில் எதை சரி செய்யப் போகிறீர்கள்? எதை தீர்த்து வைப்பீர்கள்? கூறுங்கள் புராரிவன அரசே. தங்கள் நாட்டை சேர்ந்த ஒரு அபலையின் கண்ணீருக்கு பதில் கூறுங்கள்" அக்னியாய் கேட்டு முடித்தாள்.
"ஏன் இவ்வாறெல்லாம் பிதற்றுகிறாய் மகிழ், நான்தான் உன்னை சரியாக கவனிக்கவில்லையோ? என்ன நடந்தது ஏன் இப்படி பிடிப்பற்றது போல் பேசுகிறாய்? அம்மாவோ இல்லை பாவையோ ஏதேனும் கூறினார்களா? எனக்கு தெளிவில்லை மகிழ். கோபம் கொள்ளாமல் நிதானமாகக் கூறு, இந்நிலையில் இவ்வளவு கோபம் ஆகாது பிள்ளையும் பதறும் என்றுக் கூறுவார்கள், நிதானம் கொள்" என அவள் வயிற்றை தொட வர. தொட விடாமல் நகர்ந்து நின்றாள், 'வந்ததிலிருந்து ஏன் தொட விடாமல் யாரோ வேற்றாடவன் போல் ஒதுங்குகிறாள்' என சிந்திக்கலானான். "ஏன் இப்படி மேலும் மேலும் நடித்து நல்லவன் வேடம் இடுகிறீர்கள். என் பிள்ளை செத்தால்தான் என்ன, தங்கள் குலம் தான் தலைத்துவிட்டதே அதையே தங்கள் வாரிசாக அறிவித்து மகிழுங்கள். நான் எங்கோ இப்படியே போய் விடுகிறேன்" என உடைந்து அழுதாள். பிள்ளை செத்தாலும் என்பதில் வெகுண்டெழுந்து அரசனும், "என் பொறுமையை சோதிக்காதே மகிழ், ஒரு கர்ப்பிணி உதிர்க்க கூடாத வார்த்தையை உதிர்த்துக் கொண்டு இருக்கிறாய். இதுவே என் வாரிசு வேறு யாரை வாரிசாக அறிவிக்க சொல்கிறாய்" என்றான் இப்பொழுது குரலில் ஒரு உறுமல் வந்து விட்டிருந்தது. "ஓ!அதையும் என் வாயாலேயே கேட்க வேண்டுமோ? என்னே உங்கள் நல்லெண்ணம். சொல்கிறேன் கேட்டுக்கொள்ளுங்கள் அந்த தேவி பெற்றெடுத்திருக்கிறாளே, அது உங்கள் வா'" என சொல்ல வந்து வெளிவந்த கேவலை அடக்கி வாயால் கூட வேறு பெண்ணின் பிள்ளையை அவன் பிள்ளையாக சொல்ல முடியாமல், "அது உங்கள் குடும்ப வாரிசு இல்லை என சத்தியம் செய்ய முடியுமா உங்களால்" என்றாள் இவளும் உறுமலுடன்.
அதிர்ந்தவாறு தலைக் குனிந்து நின்று விட்டான். அவனது தலைகுனிவே அவளுக்கு அவள் ஏமாற்றப்பட்டக் கதையைக் கூறுவது போலிருந்தது. அப்பொழுதும் அவன் தலைக்குனிவை காண சகியாமல் "ம்மா" என்று கேவலுடன் சென்று வேங்கை நல்லாளின் வலது கால் இருந்த பாறையின் மீது தன் தலையை இடித்துக் கொண்டாள். "இதைக் கேட்ட பின்னும் ஏன் என் உயிர் என் கூட்டை விட்டுப் பிரியவில்லை. வேங்கை நல்லாளே இப்படி பார்த்துக் கொண்டிருக்கிறாயே? என்னை உன்னிடம் கூப்பிட்டு கொள்ளக் கூடாதா? என் அலைக்களியும் மனதிற்கு அமைதி அளிக்க கூடாதா?" என மாறி மாறி மோதி குருதி வெளியேற வைத்தாள். 'இவளுக்கு எப்படித் தெரிந்தது? யார் கூறியிருப்பார்கள்? என்னவென்று கூறியிருப்பார்கள்?' என்றெல்லாம் யோசித்துக் கொண்டிருந்தவன், அவளின் புலம்பலில் நிமிர்ந்து அவள் முட்டிக் கொள்வதைக் கண்டு அதிர்ந்து, "ஏய் என்னடி செய்து கொண்டிருக்கிறாய்? உனக்கு கிறுக்கு முத்தியாயிற்று, நிறை மாதத்தை வைத்துக்கொண்டு கூறுகெட்ட வேலையெல்லாம் செய்து கொண்டிருக்கிறாய், வா அரண்மனை போவோம். இரத்தம் போகிறது" என அவள் தலையை ஒரு கையால் பிடித்துக்கொண்டு மறு கையால் அவள் தோளை தொட்டு திருப்ப, எங்கு இருந்துதான் அவளுக்கு அவ்வளவு பலம் வந்ததோ? அந்த வீரனை ஒரே தள்ளில் தள்ளிவிட்டு, அவன் இடையில் இருந்த வாளை உருவியிருந்தாள்.
"என்ன செய்கிறாய் மகிழ்" என ஆவேசத்தில் அவளை அவளே ஏதும் செய்து கொள்வாளோ? என பயந்து வாளை வாங்க வர, "ச்சீ என்னைத் தொடாதே அவளைத் தொட்ட கையால் என்னை தொடாதே. என்னை அழைத்துச் சென்று உன் அரண்மனையில் அந்தப்புரத்தில் இருத்தப் போகிறாயா? அவளை உன் அருகில் இளவரசியாய் காண என்னை அழைத்துச்செல்ல துடிக்கின்றாயா? மாட்டேன் அப்படி ஒரு செயலை நடக்க விடமாட்டேன். தவறு இழைத்தவன் நீ, துரோகம் இழைத்தவன் நீ. நீ உயிரோடு இருக்கையில் என்னை நான் ஏன் வருத்திக் கொள்ள வேண்டும். உன்னை சந்தோஷமாக இருக்க விட மாட்டேன், நீ வாழவே தகுதியற்றவன்" என்றெல்லாம் பிதற்றியவள் ஓங்கி அவன் நெஞ்சில் இறக்கியிருந்தாள் அந்தக் கூர்வாளை.
அந்த கூர் வாள் இறங்கும் முன்னே அவள் வார்த்தைகள் அவன் நெஞ்சில் ஈட்டியாய் இறங்கியிருந்தது. அவனுக்கு பதில் கூற இயலவில்லை, நெஞ்சில் இருந்து குருதி வெளியேற பாறையின் மேல் சாய்ந்தவாறு அமர்ந்து விட்டான். தகப்பன் குருதி மண்ணில் விழவுமே, கருவறையில் இருந்த அவனது இரத்தம் வெளிவர துடிக்க ஆரம்பித்தது. தகப்பன் மண்ணில் சரிய முன் தன் முகத்தை காட்டிய தீர வேண்டும் என்று எண்ணியதோ? கர்ப்ப வாசலை முட்ட ஆரம்பித்தது. இளவரசி கணவனை குத்தி விட்டு அவன் ரத்தம் வெளியேற அமரவுமே படபடப்பு அதிகரிக்க அப்படியே மண்ணில் அமர்ந்துவிட்டாள். உயிருக்குயிராய் காதலித்தவன் ஆயிற்றே, தன் கையாலேயே அந்த உயிரை எடுக்க துணிந்த விட்டோமே என இவள் அவன் நெஞ்சில் வீற்றிருந்த வாளை பார்த்து கண்ணீர் வடிக்க வயிற்றில் வலி ஏற்பட தொடங்கியது. அவள் "அம்மா" என அலற, "என்னவாயிற்று மகிழ்" என பதறினானே தவிர, அவனால் இமியளவு நகர முடியவில்லை. கண் மங்க ஆரம்பித்திருந்தது, அவளோ வலியை அவன் முன் காட்ட பிடிக்காமல் அடக்கிக்கொண்டு, "ஏன் என்னை ஏமாற்றினீர்கள்? எனக்கு துரோகம் செய்ய உங்களுக்கு எப்படி மனது வந்தது" என அழுது அரற்றி வலியை போக்கப் பார்த்தாள்.
அவனோ மெலிதாக சிரித்தான், 'இல்லை என மறுக்கவுமில்லை, ஆமாம் என்னை மன்னித்துவிடு என ஒப்புக் கொள்ளவுமில்லை'. "அடுத்த பிறவியென்று ஒன்றிருந்தால் எனது காதலையும், அதன் உன்னதத்தையும் உனக்கு முழுதாக உணர்த்துவேன். நான் உன்னை காதலிப்பதை விட, அதிகமாய் நீ என்னை காதலிக்குமாறு செய்வேன். எனது காதலை மீட்டெடுப்பதற்கு இந்த வேங்கை நல்லாளே சாட்சி.கண்டு கேட் டுண்டுயிர்த் துற்றறியும் ஐம்புலனும்ஒண்தொடி கண்ணே உள"என வள்ளுவன் கூற்றை காதலிக்கும்போது கூறியதை திருப்பியும் அவளைப் பார்த்து கூறி நினைவு படுத்தினான். அதில் அவள் மேலும் பொங்கி அழ. "சென்று வருகிறேன், குழந்தை பத்திரம் வேடத்திதிதி" என்ற சொல்லுடன் தன் உயிர் நீத்தான் புராரி வனத்தின் மன்னன்.
தனது தகப்பனை காண விடாமல் செய்து விட்டாயே என நினைத்த குழந்தையும் தனது இருப்பை வெளியேற்றத்தை அதிகப்படுத்த, இளவரசிக்கு வலி அதிகரிக்க ஆரம்பித்தது. தனது தலைவனின் துரோகமும், உயிரைப் பறித்த வேதனையும், தனது நேசம் இவ்வளவு சீக்கிரம் கரிகி விட்ட சாபம் என அனைத்து உணர்ச்சிகளும் கலந்து அவளை சாவின் விளிம்பை நோக்கி இழுத்துச் சென்றது. அவளுக்கும் வாழ பிடிக்கவில்லை, பிள்ளையையும் சேர்த்துக் கொள்ளவும் பிடிக்கவில்லை. ஒருவாறு மனம் பிசகிய நிலையில் தான் இருந்தாள்.
அப்போது ஒரு எகத்தாள கெக்கரிப்பான சிரிப்பு அந்தக் குகையைக் கிழித்துக் கொண்டு கேட்டது. இவள் வலியில் முனங்கிக் கொண்டு "அம்மா" என வருத்திக் கொண்டுத் திரும்பிப் பார்க்க. அவள் நாத்தனார் பூபாவை முகமெல்லாம் பூரிக்க, அதீத சந்தோசத்தில் சிரித்துக் கொண்டிருந்தாள். அவள் பின்னயே இளவரசியின் தோழி பதட்டத்துடன் நிற்பது தெரிந்தது. பாவையைத் தாண்டி இளவரசியை நெருங்கவும் முடியாமல், பாவையை உள் நுழைவதை தடுக்கவும் முடியாத பதட்டம் அவள் முகத்தில் தெரிந்தது. இவள் மறுபடியும் வலியில் "ம்மா" என முனங்க. தோழிப் பாவையைத் தாண்டி இளவரசியை நெருங்கிவிட்டிருந்தாள். "என்ன இளவரசி ஆச்சு. அரசருக்கு ஏன் இந்த நிலைமை? காவலாளிக்கு சொல்லிவிட்டு வரவா" என்றாள் அவள்.
"யாரை காக்க காவலாளி அழைத்து வரப் போகிறாய்? இந்த நாட்டின் அரசனை, எனது தமையனைக் கொன்றவளுக்கா? காவலாளி. இவளை சிறையிலிட வேண்டி வேண்டுமானால் அவர்களை அழைத்து வா" என்றாள். தோழி முழிக்க "உன்னை போ" என்றேன் என உறும. அவளோ இளவரசியை பார்க்க, இளவரசி கண்ணசைக்கவுமே கிளம்பினாள். அது பாவையை மேலும் சீண்டி விட.
"என்ன அகமகிழ்தினி நீ இப்படி சுயபுத்தி இல்லாமல், கேட்பார் பேச்சை கேட்டு உன் வாழ்க்கையை சீரழித்துக் கொண்டாயே. உன்னைப் பார்த்தால் பாவமாக இருக்கிறது" என்றாள் பாவை கலகலவென சிரித்துக் கொண்டு. புருவம் சுருக்கி இளவரசி பார்க்க, "உனக்கு புரியாதில்லையா? உண்மை என்னவென்று தெரிந்து கொண்டே சிறைச்சாலை செல்" என்றவாறு முற்று முழுதாக நடந்த குளறுபடிகளை கூற.
அவள் பேச்சைக் கேட்கக் கேட்க, சுய கழிவிரக்கத்தில் ரத்த அழுத்தம் ஏற ஆரம்பித்தது இளவரசிக்கு. திரும்பி சிரித்துக்கொண்டே உயிரை விட்ட தன் மன்னவனைக் கண்டாள், எப்பேர்ப்பட்ட வீரன், ஒரே வாள் வீச்சில் சாகக் கூடியவனே அல்ல. தன்னால் தன் பேச்சால் மட்டுமே உயிரை விட்டு விட்டான், என மனம் கூக்குரலிட ஆரம்பித்தது.
மெதுவாக அவனை நெருங்கி, வாளைப் பிரித்தெடுத்தாள். பின்னால் நாத்தனார் கெக்கரிப்பிட்டு சிரிப்பது தெரிந்தது. திரும்பாமலேயே அந்த வாளை அவளை நோக்கி வீசி எறிந்தாள். தன் மன்னவனின் வேடத்தி என நிரூபித்தாள். பின்னால் சிரித்துக் கொண்டிருந்தவளின் சிரிப்பும், மூச்சும் சட்டென்று நின்று விட்டிருந்தது. தன்னவனின் நெஞ்சில் வாளை வீசிய இடத்தில் சென்று தன் முகத்தைப் பதித்து மூச்சை அடக்கினாள். தன்னைக் காணாமல் தாயும் சென்று விடுவாளோ என நினைத்த குழந்தையும் திமிறிக் கொண்டு வெளிவந்தது. அவளின் குருதியோடு வெளியேறிய குழந்தையையும், தானே மூச்சை இழுத்துப் பிடித்து கையில் ஏந்தி, தன்னவனின் குருதி படர்ந்த நெஞ்சில் கிடத்தினாள். தாய் தந்தை இருவர் ரத்தத்திலும் பிறந்ததும் கலந்தது அக்குழந்தை.
தனது மேல் அங்கியை கழற்றி அந்தப் பெண் குழந்தையின் மீது சுற்றி, வேங்கை நல்லாளின் காலடியிலிட்டுவிட்டு கையெடுத்து நிமிர்ந்து பாராமல் வணங்கினாள், "என்னை மன்னித்துவிடு, உன் இடத்தைக் கலங்கப் படுத்திவிட்டேன். என் தலைவனின் வாரிசு இந்த மண்ணை ஆள வேண்டும் காப்பாற்றிக் கொடு. எங்களுக்கு மறுபிறவிக் கொடு, எனது காதலை முழுதாக என் கணவனுக்கு சாகும்வரை அளிக்க வேண்டும்" என மன்றாடி வணங்கி மீண்டும் தன் தலைவனை அடைந்து அவன் மார்பிலேயே தன் உயிரை விட்டாள், அவனின் வேடத்தி.(அங்கு நடந்த அனைத்தையும் அமைதியாக கண்டவாறே நின்றாள் வேங்கை நால்லாள். அது அவர்களது விதி பயன் என்று எண்ணினாளோ). அங்கு அதன் பின் வந்த இளவரசியின் தோழி, காவலாளி சகிதம் குழந்தையை மீட்டுச் சென்றனர். ஏன் இறந்தார்கள்? எப்படி இறந்தார்கள்? என்பது அந்த மூவரின் ரகசியமாய் புதைக்கப்பட்டது.
பெண் குழந்தையாய் போனதால் மகிழ்தினியின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. அரசாள இயலவில்லை. ஏனென்றாள் அதன் பின் அவர்கள் ஆட்சியே அங்கு நடக்கவில்லை, தில்லியை ஆண்ட துலுக்கியர்கள் தமிழகத்தின் சென்னை மாகாணத்தின், பூராரி வனத்தையும் ஆக்கிரமித்திருந்தனர். மறுபிறவிக்காக தலைவனும், தலைவியும் காத்திருக்கின்றனர்.
நன்மணியே சண்முகனார் தன்னுடனே நீ எழுந்து
என்பணியை உன்பணியாய் எடுத்தாண்டு எமைக்காக்க
பொன்வயிற்றுக் கணபதியே போற்றியென போற்றுகின்றேன்!
- ஔவையார் கிபி 1310
அத்தியாயம் 1
பௌர்ணமி ஒளி வெளிச்சமும், அங்கங்கு தீபத்தின் ஒளி வெளிச்சமும் அந்த நீண்ட குகையினுள் பரவியிருக்க. அதின் இறுதியில் மேல் பாறையில் ஆக்ரோஷமாக, பாவம் செய்து தன் எதிர் வருபவர்களை பார்வையால் எரித்துவிடும் ருத்ர தேவியாய், வலது பக்க இரு கைகளில் ஒன்றில் அரிவாளும், மற்றொன்றில் அகல் விளக்குமாயும், இடது பக்க இரு கைகளில் ஒரு கையில் திரிசூலமும், மற்றொன்றில் அரக்கனின் தலையை ஏந்தி கொண்டும், வலது காலை தரையிலும் இடது காலை இன்னொரு அரக்கனின் தலையில் வைத்தும் காட்சி அளிக்கிறாள், வேங்கை நல்லாள். அவள் கையில் ஏந்தியிருக்கும் விளக்கு நெய்யில் 5 பக்க திரியிட்டு எரிவதால் அவள் முகத்தை மேலும் பிரகாஷமாக்கி காட்டி கொண்டிருந்தது. ஒரு ஆள் உயரத்திற்கு பாறை இருக்க அதற்கு மேல் அவள் நிமிர்ந்து நிற்க, தரிசிக்க வரும் யாரும் அன்னார்ந்து தான் பார்க்க வேண்டும். தவறு இழைக்காதவர்கள், தவறி தவறிழைத்தவர்கள் மட்டுமே அவளை நிமிர்ந்து காண இயலும், அவர்கள் கண்களுக்கு மட்டுமே அவள் முகம் சாந்தமாய் காட்சியளிக்கும். தெரிந்தே தவறிழைத்தவர்களை அவள் கிஞ்சித்தும் மன்னிப்பதில்லை. ஆதலாலேயே அவளை குளிர்விக்கும் பொருட்டு, அந்த அடர்ந்த குகையினுள் அவள் மீது மட்டும் தன் ஒளியை வீசி குளிர வைத்து, சாந்த படுத்துவதாக தன் இருப்பை வைத்துக் கொள்வார் சந்திரன்.
அவள் முன் தலைவிரி கோலமாய் கண்ணில் நீர் வழிய, அரச செல்வ உடையில் அதீத கோபமும், மனவேதனையும் சரிசமமாய் போட்டியிட நிறைமாத வயிற்றுடன், யாரையோ எதையோ எதிர்பாத்தவாறு, வேங்கை நல்லாளின் முகத்தையே கண்ணெடுக்காமல் "ஏன் எனக்கு இப்படி ஒரு வாழ்கை அமைத்து கொடுத்தாய்" என கேட்பது போல் பார்த்திருந்தாள் பெண்ணொருத்தி. அவளின் அருகில் அவளையே பாவமாய் பார்த்தவாறு நின்ற தோழி பெண் "இளவரசி எழுந்திருங்கள் அரண்மனை திரும்பிவிடலாம். நாம் வந்து வெகு நாழி கழிந்துவிட்டது, அரசரும் நாம் திரும்பிருப்போம் என்றெண்ணி அங்கு சென்றுருக்கலாம், சாமம் கடந்துவிட்டது, நிறைமாத கர்ப்பிணி இப்படி குகையினுள், குளிர்ந்த காற்றில் வெகுநேரம் இருக்க கூடாது வாருங்கள் சென்றுவிடலாம்" என அழைக்க, அவள் பேசியது ஏதும் காதில் விழுந்ததா என்பதுபோல் அமர்ந்திருந்தாள் இளவரசி திரும்பியும் பாராமல்.
அப்பொழுது "டொக் டொக்" என்ற சத்தம் சற்று தூரத்தில் அந்த குகையின் அர்த்த ராத்திரி அமைதியின் பொருட்டு பேரொலியாய் கேட்டது, வருபவரின் கம்பீரத்தை எடுத்துரைத்தது. அவ்வளவு நேரம் பிசகாத இளவரசியின் சிந்தனை இந்த நடையின் சத்தத்திலேயே சிதறியது. கண்டுகொண்டாள் தன்னை முற்று முழுதாய் ஆள்பவன் வந்துவிட்டானென. ஆனால் சந்தோசப் பட முடியவில்லை. அவன் நெருங்க நெருங்க கோவமும், வேதனையும் அதிகரித்தது, மூச்சு வாங்கத் தொடங்கியது. அவளுக்காகவே குவளையில் தண்ணீர் அடைத்து எடுத்து வந்திருந்ததை தோழி பருக குடுக்க, சிவந்த கண்களுடன் அவளை முறைத்தவாறு அதை தட்டிவிட்டாள். அது வெண்கல குவளை பெரிய சத்தத்துடன் உருண்டு சென்று, உள் வந்திருந்த அவள் தலைவனின் காலடியில் சென்று நிற்க. அவன் நடையும் அங்கேயே தடைபட்டது. அரசரை காணவும் தோழி பெண் வெளியேறிவிட, அரசன் தன் தலைவியை நோக்கி முன்னேறினான். அவள் இப்பொழுது அவனை தான் பார்த்துக்கொண்டிருந்தாள். "அழகன் பேரழகன், பார்ப்பவரையெல்லாம் பார்வையிலும், இந்தச் சின்னச் சிரிப்பிலும் மயக்கிவிடும் ஆண்மைமிக்க அழகன். அது தானே என் வாழ்க்கையை சீரழித்துவிட்டது. இவன் அழகனாக இல்லாமல், அரசனாக இல்லாமல் இருந்திருக்க கூடாதா?" இவ்வாறெல்லாம் மனதினுள் குமுறிக்கொண்டு தன்னை நோக்கி வருபவனையே பார்த்துக்கொண்டிருந்தாள். அவனோ தன் தலைவியின் சிறுபிள்ளை கோவத்தை ரசித்தவாறு சின்ன சிரிப்புடன் நெருங்கினான்.
அவளோ மேலும் "இல்லை துரோகம் இழைக்கவும் நம்பியவளை ஏமாற்றவும் அழகும், அரச பதவியும் காரணமில்லை, அவனது தீய எண்ணங்களே காரணம் அவனது ஒழுங்கீனமற்ற மனமே காரணம், நான் இவனை சந்திக்காமலே இருந்திருக்கக் கூடாதா" என தன் மனநிலையை ஒரு நிலைப்படுத்த முடியாமல் திணறிக் கொண்டிருந்தாள். அவளை நெருங்கியவனோ அவள் முன் மண்டியிட்டு அமர்ந்து, "தாமதத்திற்கு மன்னித்துவிடு மகிழ் அரண்மனை சென்றிருப்பாய் என்றெண்ணி அங்கு சென்றுவிட்டு வருகிறேன். ஏன் இன்னும் இங்கேயே அமர்ந்திருக்கிறாய்? கிளம்பு அரண்மனை சென்று பேசிக் கொள்ளலாம்" என அவளை தூக்கி விட, தோளைத் தொட. அவன் கையை தட்டிவிட்டாள் தீயாய் முறைத்தாள், பின் அவனைப் பார்த்து இகழ்ச்சியாய் சிரித்தாள். "ஏன் தாமதம் என்று தான் எனக்கு நன்றாக தெரியுமே. நேற்று அந்தி சாயும் நேரம் தங்களை எதிர்பார்த்த மனைவியைக் காண எப்பொழுதுதான் தங்களால் வர இயலுகிறது என்பதை காணவே இங்கேயே காத்திருக்கிறேன். எப்படியோ விடியும் முன் வந்து சேர்ந்து விட்டீர்கள்" என மேலும் வேதனையாய் சிரித்து கூற.
"அதற்கு தான் மன்னிப்பு கேட்டு விட்டேனே மகிழ். எழுந்திரு, சாம காற்று காய்ச்சல் கண்டு விடும். நீ தைரியசாலி என நான் அறிவேன், அதை இப்படி நடுக்காட்டில் வந்திருந்து நிரூபிக்காதே, என எத்தனை முறை வேண்டுவது, எழுந்திரு மகிழ்". "இன்னமும் தாங்கள் தாமதத்திற்கான காரணத்தைக் கூற விளையவில்லையே, இவளிடமெல்லாம் எதற்காகக் கூற வேண்டும் என்ற எண்ணம் கூட வந்து விட்டதோ?" எனக் கேட்க. "உனக்குத்தான் தெரிந்திருக்கிறதே. குறிஞ்சிக்கு பிரசவ வலி கண்டு விட்டது அவள் தகப்பனாரயும் தான் மனுதீர பாண்டிய மன்னனிடம் ஓலை கொடுத்து செய்தி பெற்றுவர அனுப்பியுள்ளோமே. அதான் வைத்தியரிடம் அழைத்துச் சென்று குழந்தை பெறவுமே கிளம்ப முடிந்தது. தற்பொழுது தனார்த்தன் வரவும் அவனை அங்கு இறுத்திவிட்டு வருகிறேன்". "ஒரு பொய்யை மறைக்க ௭த்தனை பொய். மந்திரியின் மகளின் பிரசவத்திற்கு அரசனே உடனிருந்து பிள்ளைப் பேறு பெறும் வரை கண்டு விட்டு வருகிறார். இப்படித்தான் தங்கள் நாட்டிலுள்ள அனைத்துப் பெண்களையும் காக்கீறிர்களோ?" இவள் இடக்காக கேட்க.
அவன் முகத்தில் புருவ சுளிப்புடன் "நீ என்ன பதில் எதிர்பார்க்கிறாய் மகிழ், என்னிடம் நேராகவே கேள். நான் கூறுவதை நீ ஏற்கும் சூழ்நிலையில் இல்லை போல் தோன்றுகிறது" என்றான் அரசனாகபட்டவன். "ஆமாம் எந்த சூழ்நிலையும் எனக்கு ஏற்பாக அமையவில்லை" என அமைதியாக சொன்னவள் "எனக்கு ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்கள். உங்களுக்கு என்னிடம் கூற வேண்டிய, மறைத்த விஷயம் என ஏதேனும் உண்டா?" என்றாள். "என்னவாயிற்று மகிழ் உனக்கு? உன்னிடம் நான் எதை மறைக்க போகிறேன். சிறிது காலமாகவே நீ சரியாக இல்லை, உன் மனதை ஏதோ உறுத்துகிறது எதுவாகினும் சொல் நான் தீர்த்து வைக்கிறேன்." "பொய் மேல் பொய்யாக கூறிக் கொண்டு செல்கிறீர்கள் அதுதான் என்னை உறுத்துகிறது, நீங்கள் செய்பவற்றை எல்லாம் கண்ணால் கண்டும், கேட்டும் இன்னமும் தீர விசாரித்துக் கொள்வோம் என உங்கள் முன் உயிரோடு போராடிக் கொண்டிருக்கிறேன். அதற்கு காரணமான தங்கள் மீது நான் கொண்ட காதல் அது என்னை உறுத்துகிறது, நம் காதலுக்கு அடையாளமாக கிடைத்த பிள்ளையை சந்தோஷமாக சுமக்க விடாமல் வேதனையிலும் கண்ணீரிலும் அழைய விட்டீர்களே, அந்த நிலை என்னை விட்டு நீங்காமல் மனதில் நின்று உறுத்துகிறது. இனியும் என் வாழ்க்கையயும் வாழ்நாளையும் எப்படி இந்த பிள்ளையுடன் கழிக்கப் போகிறேனோ, என என் மனம் உறுத்திக்கொண்டே இருக்கிறது, இதில் எதை சரி செய்யப் போகிறீர்கள்? எதை தீர்த்து வைப்பீர்கள்? கூறுங்கள் புராரிவன அரசே. தங்கள் நாட்டை சேர்ந்த ஒரு அபலையின் கண்ணீருக்கு பதில் கூறுங்கள்" அக்னியாய் கேட்டு முடித்தாள்.
"ஏன் இவ்வாறெல்லாம் பிதற்றுகிறாய் மகிழ், நான்தான் உன்னை சரியாக கவனிக்கவில்லையோ? என்ன நடந்தது ஏன் இப்படி பிடிப்பற்றது போல் பேசுகிறாய்? அம்மாவோ இல்லை பாவையோ ஏதேனும் கூறினார்களா? எனக்கு தெளிவில்லை மகிழ். கோபம் கொள்ளாமல் நிதானமாகக் கூறு, இந்நிலையில் இவ்வளவு கோபம் ஆகாது பிள்ளையும் பதறும் என்றுக் கூறுவார்கள், நிதானம் கொள்" என அவள் வயிற்றை தொட வர. தொட விடாமல் நகர்ந்து நின்றாள், 'வந்ததிலிருந்து ஏன் தொட விடாமல் யாரோ வேற்றாடவன் போல் ஒதுங்குகிறாள்' என சிந்திக்கலானான். "ஏன் இப்படி மேலும் மேலும் நடித்து நல்லவன் வேடம் இடுகிறீர்கள். என் பிள்ளை செத்தால்தான் என்ன, தங்கள் குலம் தான் தலைத்துவிட்டதே அதையே தங்கள் வாரிசாக அறிவித்து மகிழுங்கள். நான் எங்கோ இப்படியே போய் விடுகிறேன்" என உடைந்து அழுதாள். பிள்ளை செத்தாலும் என்பதில் வெகுண்டெழுந்து அரசனும், "என் பொறுமையை சோதிக்காதே மகிழ், ஒரு கர்ப்பிணி உதிர்க்க கூடாத வார்த்தையை உதிர்த்துக் கொண்டு இருக்கிறாய். இதுவே என் வாரிசு வேறு யாரை வாரிசாக அறிவிக்க சொல்கிறாய்" என்றான் இப்பொழுது குரலில் ஒரு உறுமல் வந்து விட்டிருந்தது. "ஓ!அதையும் என் வாயாலேயே கேட்க வேண்டுமோ? என்னே உங்கள் நல்லெண்ணம். சொல்கிறேன் கேட்டுக்கொள்ளுங்கள் அந்த தேவி பெற்றெடுத்திருக்கிறாளே, அது உங்கள் வா'" என சொல்ல வந்து வெளிவந்த கேவலை அடக்கி வாயால் கூட வேறு பெண்ணின் பிள்ளையை அவன் பிள்ளையாக சொல்ல முடியாமல், "அது உங்கள் குடும்ப வாரிசு இல்லை என சத்தியம் செய்ய முடியுமா உங்களால்" என்றாள் இவளும் உறுமலுடன்.
அதிர்ந்தவாறு தலைக் குனிந்து நின்று விட்டான். அவனது தலைகுனிவே அவளுக்கு அவள் ஏமாற்றப்பட்டக் கதையைக் கூறுவது போலிருந்தது. அப்பொழுதும் அவன் தலைக்குனிவை காண சகியாமல் "ம்மா" என்று கேவலுடன் சென்று வேங்கை நல்லாளின் வலது கால் இருந்த பாறையின் மீது தன் தலையை இடித்துக் கொண்டாள். "இதைக் கேட்ட பின்னும் ஏன் என் உயிர் என் கூட்டை விட்டுப் பிரியவில்லை. வேங்கை நல்லாளே இப்படி பார்த்துக் கொண்டிருக்கிறாயே? என்னை உன்னிடம் கூப்பிட்டு கொள்ளக் கூடாதா? என் அலைக்களியும் மனதிற்கு அமைதி அளிக்க கூடாதா?" என மாறி மாறி மோதி குருதி வெளியேற வைத்தாள். 'இவளுக்கு எப்படித் தெரிந்தது? யார் கூறியிருப்பார்கள்? என்னவென்று கூறியிருப்பார்கள்?' என்றெல்லாம் யோசித்துக் கொண்டிருந்தவன், அவளின் புலம்பலில் நிமிர்ந்து அவள் முட்டிக் கொள்வதைக் கண்டு அதிர்ந்து, "ஏய் என்னடி செய்து கொண்டிருக்கிறாய்? உனக்கு கிறுக்கு முத்தியாயிற்று, நிறை மாதத்தை வைத்துக்கொண்டு கூறுகெட்ட வேலையெல்லாம் செய்து கொண்டிருக்கிறாய், வா அரண்மனை போவோம். இரத்தம் போகிறது" என அவள் தலையை ஒரு கையால் பிடித்துக்கொண்டு மறு கையால் அவள் தோளை தொட்டு திருப்ப, எங்கு இருந்துதான் அவளுக்கு அவ்வளவு பலம் வந்ததோ? அந்த வீரனை ஒரே தள்ளில் தள்ளிவிட்டு, அவன் இடையில் இருந்த வாளை உருவியிருந்தாள்.
"என்ன செய்கிறாய் மகிழ்" என ஆவேசத்தில் அவளை அவளே ஏதும் செய்து கொள்வாளோ? என பயந்து வாளை வாங்க வர, "ச்சீ என்னைத் தொடாதே அவளைத் தொட்ட கையால் என்னை தொடாதே. என்னை அழைத்துச் சென்று உன் அரண்மனையில் அந்தப்புரத்தில் இருத்தப் போகிறாயா? அவளை உன் அருகில் இளவரசியாய் காண என்னை அழைத்துச்செல்ல துடிக்கின்றாயா? மாட்டேன் அப்படி ஒரு செயலை நடக்க விடமாட்டேன். தவறு இழைத்தவன் நீ, துரோகம் இழைத்தவன் நீ. நீ உயிரோடு இருக்கையில் என்னை நான் ஏன் வருத்திக் கொள்ள வேண்டும். உன்னை சந்தோஷமாக இருக்க விட மாட்டேன், நீ வாழவே தகுதியற்றவன்" என்றெல்லாம் பிதற்றியவள் ஓங்கி அவன் நெஞ்சில் இறக்கியிருந்தாள் அந்தக் கூர்வாளை.
அந்த கூர் வாள் இறங்கும் முன்னே அவள் வார்த்தைகள் அவன் நெஞ்சில் ஈட்டியாய் இறங்கியிருந்தது. அவனுக்கு பதில் கூற இயலவில்லை, நெஞ்சில் இருந்து குருதி வெளியேற பாறையின் மேல் சாய்ந்தவாறு அமர்ந்து விட்டான். தகப்பன் குருதி மண்ணில் விழவுமே, கருவறையில் இருந்த அவனது இரத்தம் வெளிவர துடிக்க ஆரம்பித்தது. தகப்பன் மண்ணில் சரிய முன் தன் முகத்தை காட்டிய தீர வேண்டும் என்று எண்ணியதோ? கர்ப்ப வாசலை முட்ட ஆரம்பித்தது. இளவரசி கணவனை குத்தி விட்டு அவன் ரத்தம் வெளியேற அமரவுமே படபடப்பு அதிகரிக்க அப்படியே மண்ணில் அமர்ந்துவிட்டாள். உயிருக்குயிராய் காதலித்தவன் ஆயிற்றே, தன் கையாலேயே அந்த உயிரை எடுக்க துணிந்த விட்டோமே என இவள் அவன் நெஞ்சில் வீற்றிருந்த வாளை பார்த்து கண்ணீர் வடிக்க வயிற்றில் வலி ஏற்பட தொடங்கியது. அவள் "அம்மா" என அலற, "என்னவாயிற்று மகிழ்" என பதறினானே தவிர, அவனால் இமியளவு நகர முடியவில்லை. கண் மங்க ஆரம்பித்திருந்தது, அவளோ வலியை அவன் முன் காட்ட பிடிக்காமல் அடக்கிக்கொண்டு, "ஏன் என்னை ஏமாற்றினீர்கள்? எனக்கு துரோகம் செய்ய உங்களுக்கு எப்படி மனது வந்தது" என அழுது அரற்றி வலியை போக்கப் பார்த்தாள்.
அவனோ மெலிதாக சிரித்தான், 'இல்லை என மறுக்கவுமில்லை, ஆமாம் என்னை மன்னித்துவிடு என ஒப்புக் கொள்ளவுமில்லை'. "அடுத்த பிறவியென்று ஒன்றிருந்தால் எனது காதலையும், அதன் உன்னதத்தையும் உனக்கு முழுதாக உணர்த்துவேன். நான் உன்னை காதலிப்பதை விட, அதிகமாய் நீ என்னை காதலிக்குமாறு செய்வேன். எனது காதலை மீட்டெடுப்பதற்கு இந்த வேங்கை நல்லாளே சாட்சி.கண்டு கேட் டுண்டுயிர்த் துற்றறியும் ஐம்புலனும்ஒண்தொடி கண்ணே உள"என வள்ளுவன் கூற்றை காதலிக்கும்போது கூறியதை திருப்பியும் அவளைப் பார்த்து கூறி நினைவு படுத்தினான். அதில் அவள் மேலும் பொங்கி அழ. "சென்று வருகிறேன், குழந்தை பத்திரம் வேடத்திதிதி" என்ற சொல்லுடன் தன் உயிர் நீத்தான் புராரி வனத்தின் மன்னன்.
தனது தகப்பனை காண விடாமல் செய்து விட்டாயே என நினைத்த குழந்தையும் தனது இருப்பை வெளியேற்றத்தை அதிகப்படுத்த, இளவரசிக்கு வலி அதிகரிக்க ஆரம்பித்தது. தனது தலைவனின் துரோகமும், உயிரைப் பறித்த வேதனையும், தனது நேசம் இவ்வளவு சீக்கிரம் கரிகி விட்ட சாபம் என அனைத்து உணர்ச்சிகளும் கலந்து அவளை சாவின் விளிம்பை நோக்கி இழுத்துச் சென்றது. அவளுக்கும் வாழ பிடிக்கவில்லை, பிள்ளையையும் சேர்த்துக் கொள்ளவும் பிடிக்கவில்லை. ஒருவாறு மனம் பிசகிய நிலையில் தான் இருந்தாள்.
அப்போது ஒரு எகத்தாள கெக்கரிப்பான சிரிப்பு அந்தக் குகையைக் கிழித்துக் கொண்டு கேட்டது. இவள் வலியில் முனங்கிக் கொண்டு "அம்மா" என வருத்திக் கொண்டுத் திரும்பிப் பார்க்க. அவள் நாத்தனார் பூபாவை முகமெல்லாம் பூரிக்க, அதீத சந்தோசத்தில் சிரித்துக் கொண்டிருந்தாள். அவள் பின்னயே இளவரசியின் தோழி பதட்டத்துடன் நிற்பது தெரிந்தது. பாவையைத் தாண்டி இளவரசியை நெருங்கவும் முடியாமல், பாவையை உள் நுழைவதை தடுக்கவும் முடியாத பதட்டம் அவள் முகத்தில் தெரிந்தது. இவள் மறுபடியும் வலியில் "ம்மா" என முனங்க. தோழிப் பாவையைத் தாண்டி இளவரசியை நெருங்கிவிட்டிருந்தாள். "என்ன இளவரசி ஆச்சு. அரசருக்கு ஏன் இந்த நிலைமை? காவலாளிக்கு சொல்லிவிட்டு வரவா" என்றாள் அவள்.
"யாரை காக்க காவலாளி அழைத்து வரப் போகிறாய்? இந்த நாட்டின் அரசனை, எனது தமையனைக் கொன்றவளுக்கா? காவலாளி. இவளை சிறையிலிட வேண்டி வேண்டுமானால் அவர்களை அழைத்து வா" என்றாள். தோழி முழிக்க "உன்னை போ" என்றேன் என உறும. அவளோ இளவரசியை பார்க்க, இளவரசி கண்ணசைக்கவுமே கிளம்பினாள். அது பாவையை மேலும் சீண்டி விட.
"என்ன அகமகிழ்தினி நீ இப்படி சுயபுத்தி இல்லாமல், கேட்பார் பேச்சை கேட்டு உன் வாழ்க்கையை சீரழித்துக் கொண்டாயே. உன்னைப் பார்த்தால் பாவமாக இருக்கிறது" என்றாள் பாவை கலகலவென சிரித்துக் கொண்டு. புருவம் சுருக்கி இளவரசி பார்க்க, "உனக்கு புரியாதில்லையா? உண்மை என்னவென்று தெரிந்து கொண்டே சிறைச்சாலை செல்" என்றவாறு முற்று முழுதாக நடந்த குளறுபடிகளை கூற.
அவள் பேச்சைக் கேட்கக் கேட்க, சுய கழிவிரக்கத்தில் ரத்த அழுத்தம் ஏற ஆரம்பித்தது இளவரசிக்கு. திரும்பி சிரித்துக்கொண்டே உயிரை விட்ட தன் மன்னவனைக் கண்டாள், எப்பேர்ப்பட்ட வீரன், ஒரே வாள் வீச்சில் சாகக் கூடியவனே அல்ல. தன்னால் தன் பேச்சால் மட்டுமே உயிரை விட்டு விட்டான், என மனம் கூக்குரலிட ஆரம்பித்தது.
மெதுவாக அவனை நெருங்கி, வாளைப் பிரித்தெடுத்தாள். பின்னால் நாத்தனார் கெக்கரிப்பிட்டு சிரிப்பது தெரிந்தது. திரும்பாமலேயே அந்த வாளை அவளை நோக்கி வீசி எறிந்தாள். தன் மன்னவனின் வேடத்தி என நிரூபித்தாள். பின்னால் சிரித்துக் கொண்டிருந்தவளின் சிரிப்பும், மூச்சும் சட்டென்று நின்று விட்டிருந்தது. தன்னவனின் நெஞ்சில் வாளை வீசிய இடத்தில் சென்று தன் முகத்தைப் பதித்து மூச்சை அடக்கினாள். தன்னைக் காணாமல் தாயும் சென்று விடுவாளோ என நினைத்த குழந்தையும் திமிறிக் கொண்டு வெளிவந்தது. அவளின் குருதியோடு வெளியேறிய குழந்தையையும், தானே மூச்சை இழுத்துப் பிடித்து கையில் ஏந்தி, தன்னவனின் குருதி படர்ந்த நெஞ்சில் கிடத்தினாள். தாய் தந்தை இருவர் ரத்தத்திலும் பிறந்ததும் கலந்தது அக்குழந்தை.
தனது மேல் அங்கியை கழற்றி அந்தப் பெண் குழந்தையின் மீது சுற்றி, வேங்கை நல்லாளின் காலடியிலிட்டுவிட்டு கையெடுத்து நிமிர்ந்து பாராமல் வணங்கினாள், "என்னை மன்னித்துவிடு, உன் இடத்தைக் கலங்கப் படுத்திவிட்டேன். என் தலைவனின் வாரிசு இந்த மண்ணை ஆள வேண்டும் காப்பாற்றிக் கொடு. எங்களுக்கு மறுபிறவிக் கொடு, எனது காதலை முழுதாக என் கணவனுக்கு சாகும்வரை அளிக்க வேண்டும்" என மன்றாடி வணங்கி மீண்டும் தன் தலைவனை அடைந்து அவன் மார்பிலேயே தன் உயிரை விட்டாள், அவனின் வேடத்தி.(அங்கு நடந்த அனைத்தையும் அமைதியாக கண்டவாறே நின்றாள் வேங்கை நால்லாள். அது அவர்களது விதி பயன் என்று எண்ணினாளோ). அங்கு அதன் பின் வந்த இளவரசியின் தோழி, காவலாளி சகிதம் குழந்தையை மீட்டுச் சென்றனர். ஏன் இறந்தார்கள்? எப்படி இறந்தார்கள்? என்பது அந்த மூவரின் ரகசியமாய் புதைக்கப்பட்டது.
பெண் குழந்தையாய் போனதால் மகிழ்தினியின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. அரசாள இயலவில்லை. ஏனென்றாள் அதன் பின் அவர்கள் ஆட்சியே அங்கு நடக்கவில்லை, தில்லியை ஆண்ட துலுக்கியர்கள் தமிழகத்தின் சென்னை மாகாணத்தின், பூராரி வனத்தையும் ஆக்கிரமித்திருந்தனர். மறுபிறவிக்காக தலைவனும், தலைவியும் காத்திருக்கின்றனர்.