எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

நங்கையின் மறவோன்! - கதை திரி (ரீரன்)

Status
Not open for further replies.

Shalini shalu

Moderator
வணக்கம் நண்பர்களே!

இங்கு "நங்கையின் மறவோன்!" கதையின் ரீரன் பதிவுகள் வரும்.
 
அத்தியாயம் 1

தன் அறையில் குறுக்கும், நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தாள் பெண்ணவள்.

எல்லாம் நாளைப் போய்ச் சேரப் போகும் வேலையைப் பற்றிய யோசனை தான்.

"மௌனா! இன்டர்வியூ அட்டெண்ட் பண்ணிட்டு வெய்ட் பண்ணிட்டு இப்படி பதட்டப்பட்றதுல நியாயம் இருக்கு. வேலையே கன்ஃபார்ம் ஆகிருச்சு.இன்னும் கொலுசு சத்தம் கேட்குறா மாதிரி டங் டங்ன்னு நடக்காதடி. தலை வலிக்குது"

தலை வலி தந்த எரிச்சலில் குரலை உயர்த்தித் தோழியை அதட்டினாள் அகதா.

"என்ன அகி! நீயே இப்படி பேசற? முதல் நாள் வேலை, நர்வஸா இருக்குடி"

சினுங்கிக் கொண்டே பதிலளித்தாள் மௌனா.

"அப்படித்தான் முதல்ல இருக்கும் டி. ஆனால் போகப் போக பிடிச்சிரும். அதுவுமில்லாமல் உனக்குப் பிடிச்ச வேலை வேற. சோ, நர்வஸ் ஆகாம ஃபர்ஸ்ட் டே எப்படி ஃபேஸ் பண்ணலாம்னு யோசி"

சின்னதாக அறிவுரை தந்த அகதா உணவைச் சமைக்கப் போனாள்.

"ஆமால்ல! நமக்குப் பிடிச்ச வேலை.அதைச் செய்ய எதுக்கு இவ்ளோ பதட்டப்பட்றோம்"

சற்றுத் தெளிந்தவள், கிச்சனுக்குப் போய்,
"அகி…! சோ ஸ்வீட் தாங்க்யூ" என்று தோழியிடம் நன்றி கூறினாள்.

அடுத்த நாள் வேலைக்குக் கிளம்பியவளுக்கு,

"ஆல் தி பெஸ்ட் மௌனா!"

புன்னகை ததும்பும் குரலில் தனக்கு வாழ்த்துச் சொல்லிய அகதாவைப் பார்த்து,

"தாங்க்யூ அகி" என்று புன்னகைத்தாள் மௌனா.

பிரம்மாண்டமான அந்த ஹோட்டலின் வரவேற்பறையில், தனக்கான வேலை காத்துக் கொண்டிருக்க, அதை ஆசையுடன் ரசித்தவாறே சென்று தனக்காக வைக்கப்பட்டிருந்த நாற்காலியில் அமர்ந்தாள் மௌனா.

அந்த நேரம் பார்த்து, அந்த தங்கும் விடுதியின் முதலாளி உள்ளே வந்தான்.

வந்தவன் நேரே அறைக்குச் செல்லாமல்,
"மிஸ்…" என்று அவளது பெயர் தெரியாததால், கேள்விக் குறியாக நோக்கினான்.

"மௌனா சார்" வெடவெடத்த போதும், பதில் சொன்னாள்.

"ம்ம்.மிஸ்.மௌனா.நியூ ஜாய்னி தான?"

கேள்வி கேட்டுக் கொண்டே, பார்வையால் அவளது கண்களைத் துளைத்தான்.

"எஸ் சார்"

"மேனேஜர் செலக்ட் பண்ணினாலும் உன்னோட சர்டிபிகேட்டை மறுபடியும் செக் பண்றேன்"

அதை அவளிடம் சொல்லாமல் கூட அவனால் செய்திருக்க முடியும். எதனால் தெரிவித்தான்? என்பது விளங்கவில்லை அவளுக்கு.

'அதைச் செக் செய்துட்டு என்ன சொல்லப் போறாரோ?'

அவளுடைய அத்தனைச் சான்றிதழ்களும் சரியானவையே! அப்படி இருந்தாலும் இவனைப் பார்த்ததும் உள்ளே உதறல் எடுத்தது. இதில் சான்றிதழ்கள் அவனால் சரிபார்க்கப்பட உள்ளது எனவும், மிரண்டு போனாள் மௌனா.

அவன் எப்போதோ அலுவலகத்தினுள்ளே போய் விட்டான்.
அவளுக்குத் தான் நிலை கொள்ளவில்லை.

"இதுக்கு இவரே என்னை இண்டர்வியூ செய்து எடுத்து இருக்கலாம்"

புலம்பித் தள்ளியவாறே இருந்தாள்.

தன்னுடைய அறைக்குள் வந்து,நாற்காலியில் அமர்ந்தவன் கணினியைக் கூட திறக்கவில்லை.
அதற்குள், மஹதனுக்கு அழைப்பு வந்தது.

"ஹலோ"

"மஹத்!! திஸ் இஸ் முக்தா. உங்களை மீட் பண்ணனும்? ஆஃபீஸூக்கு வர்றேன்"

"வெய்ட் முக்தா. நான் இப்போது தான் ஆஃபீஸூக்கு வந்தேன்" என்று சொல்லும் போதே குறுக்கிட்டு,

"இல்லை ப்ளீஸ். உன்னைப் பார்த்து ரொம்ப நாள் ஆச்சு. நான் இப்போ தான் வெளிநாட்டில் இருந்து வந்திருக்கேன். உன்னை மீட் பண்ணனும்னு இங்க வந்ததில் இருந்து துடிச்சிட்டு இருக்கேன்"


அவனைப் பார்த்தே ஆக வேண்டும் என செல்பேசியை அணைத்து விட்டு,அவனைப் பார்க்க கிளம்பினாள் முக்தா.

அவள் வருவதற்குள், மௌனாவின் வேலையைப் பற்றிக் காண்போம்.

ஃப்ரண்ட் ஆஃபீஸ் ரிசப்ஷனிஸ்ட் தான் தற் சமயத்தில், மஹதனுடைய தங்கும் விடுதியில் அவள் பார்க்கப் போகும் வேலை.

புதிதாக வேலைக்குச் சேர்த்திருப்பதால்,இனி தான் இங்கிருப்பவற்றைத் தெரிந்து கொள்ள வேண்டி இருந்தது மௌனாவிற்கு.

தந்தையும், தாயும் ஊரில் இருக்க, இவள் மட்டும் வேலைக்காக இங்கே வந்திருந்தாள்.

தனியாக வீடு எடுத்துத் தன்னுடன் பள்ளியில் பயின்ற அகதாவுடன் தான் தங்கி இருக்கிறாள்.

அவளுக்குக் குறும்புத்தனம் தேவைக்கேற்ப இருந்தாலும்,சில நேரங்களில் பொறுப்பும் தலை தூக்கும்.

சொன்னது போலவே, மௌனாவின் சான்றிதழ்களைச் சரி பார்க்கத் தொடங்கி இருந்தான் மஹதன்.

அந்த நேரம் பார்த்து, அலுவலகத்திற்கு, வேண்டாத விருந்தாளியாக, வந்து சேர்ந்தாள் முக்தா.

ரிசப்ஷனில் நிற்கும் போது, மலர்ந்த முகத்துடன் இருக்க வேண்டும் என்பதால், மௌனா தன்னுடைய ட்ரேட் மார்க் புன்னகையில் மிளிர்ந்தாள்.

முதல் நாள் வேலை என்று உள்ளுக்குள் பதட்டம் கொண்டாலும், சான்றிதழ்களைப் பார்க்கும், மஹதன் என்ன சொல்வானோ? என்று இருந்தாலும் தன் வேலையைச் செவ்வனே செய்ய வேண்டும் என்பதே அவளது தலையாயக் கடமையாக இருந்தது.

மௌனாவின் சான்றிதழ்களைச் சரி பார்த்து மூடி வைத்தவன்,
"குட் க்ரேட்ஸ் தான்" என்று சொல்லிக் கொண்டான்.


முக்தா தன்னுடைய காரை அலுவலகத்தின் முன்னால் நிறுத்தி விட்டு, உள்ளே வந்தாள்.

தான் செய்திருந்த அலங்காரத்தில் , முக்தாவும் ஜொலித்துக் கொண்டு இருந்தாள் தான்!

ஆனால் அவ்வாறு ஜொலித்த முகமோ, மௌனாவைப் பார்த்ததும் விகாரமாக மாறியது.

மௌனா தன்னை விட அழகாகத் தெரிவது ஏனோ முக்தாவிற்குப் பிடிக்கவில்லை.

ரிசப்ஷனில் வந்து நின்று தன்னை கூரிய விழிகளால் ஆராயும் இந்தப் பெண் யாரென்று பார்த்துக் கொண்டே,
"குட் மார்னிங் மேம்.வெல்கம் டூ அவர் ஹோட்டல்! ஹவ் கேன் ஐ ஹெல்ப் யூ மேம்?" (காலை வணக்கம் மேம். எங்கள் விடுதிக்குத் தங்களை வரவேற்கிறேன்! உங்களுக்கு நான் எவ்வாறு உதவி செய்ய வேண்டும்?) என்று பணிவாகக் கேட்டாள் மௌனா.

அவளது பணிவை ஏற்காது, அலட்டலான விழிகளுடன், அலட்சியமானக் குரலில்,
"மஹதனைப் பார்க்கனும்" என்றாள் முக்தா.

"அப்பாயிண்ட்மெண்ட் இருக்கா மேம்?"

"நான் அவனோட ஃப்ரண்ட். அப்பாயிண்ட்மெண்ட் தேவையில்லைன்னு நினைக்கிறேன்" என்று பேசியவளிடம்,

"ஜஸ்ட் வெய்ட் மேம்" என்று மஹதனை இண்டர்காமில் அழைத்தாள் மௌனா.

தன்னிடம் அதற்கு அனுமதி கேட்காமல், முதலாளியை அழைத்தது சத்தியமாக முக்தாவிற்குப் பிடிக்கவில்லை,

அது மட்டும் இல்லாமல், மஹதன் தன்னைப் பார்க்க வர வேண்டாம் என்று கூறிய பிறகு, வம்படியாக 'வந்தே தீருவேன்' என வந்திருப்பவளை நிச்சயமாக அவன் வரவேற்க மாட்டான்.

"ஹலோ"

"சார்! உங்களைப் பார்க்க ஒரு பொண்ணு வந்திருக்காங்க"அவனிடம் கூறிவிட்டு,

" உங்கப் பேர் மேம்?" என்று வந்தவளைக் கேட்டாள் மௌனா.

"முக்தா!!!"

மஹதனே கோபத்தில் அவளது பெயரை உச்சரிக்கவும், தெரிந்த பெண் தான் போலும்,

"சார் அவங்களை உள்ளே அனுப்பவா?" என்று கேட்டாள்.

"வேண்டாம்.அப்படியே வீட்டுக்குக் கிளம்ப சொல்லிடு" என்று அழைப்பைத் துண்டித்து விட்டான் மஹதன்.

தெரிந்தவள் தான் ஆனால் பிடித்தமானவள் இல்லை போல!

மௌனா அவன் கூறியதை முக்தாவிடம் தெரிவிக்க, அவள் கொதித்து எழுந்து விட்டாள்.

"அவன் என்மேல் கோபமா இருக்கான். அதனால் தான் அப்படி பேசிட்டான். நான் உள்ளேப் போய்ப் பேசிக்கிறேன்"

இவளுடைய பேச்சைக் காதில் வாங்கப் போவதில்லை என்று தெரிந்தாலும், தன்னால் ஆன மட்டும் அவளைத் தடுக்க எண்ணினாள் மௌனா.

"மேம் ப்ளீஸ்! சார் உங்களுக்கு பர்மிஷன் குடுக்கல. இது ரொம்ப தப்பு" என்று புரிய வைக்க முயன்றாள்.

ஆனால் முக்தாவிற்கோ, இந்த வாய்ப்பை விட்டால், வேறு வழியில்லை என்று அவளைத் தள்ளி விடக் கூடத் தயாராக இருந்தாள்.

"வழியை விடு. இல்லன்னா நடக்கறதே வேற"

எச்சரிக்கை விடுத்துக் கொண்டிருந்த முக்தாவின் குரல் கொடுத்தச் சத்தத்தில் அலுவலகத்தில் இருப்பவர்கள் ஸ்தம்பித்துப் போயினர்.

பிறகு விஷயம் மஹதனுக்குத் தெரியாமல் இருந்து விடுமா?

இங்கு நடந்த களேபரத்தை அவனுக்கு ஊழியர் ஒருவர் தெரிவிக்கவும்,முக்தாவின் மீதிருந்த கடுப்பை அவளிடம் நேரடியாகக் காட்டி விட எண்ணி, அவ்விடத்திற்கு விரைந்தான் மஹதன்.

அதற்குள் முக்தா தள்ளி விட்டதால், மௌனாவின் தலைக் கதவில் இடித்து விட்டது.

சரியாக மஹதன் கதவைத் திறக்க வரும் போது மௌனாவின் தலையில் இருந்து வடிந்த குருதியைக் கண்டான்.

வேகமாக பணியாளரை அழைத்தவன்,
"ஃபர்ஸ்ட் எய்ட் எடுத்துட்டு வந்து ட்ரீட் பண்ணுங்க. சீக்கிரம்!" என்று துரிதமாக செயல்பட்டவன்,

பயத்தில் வெலவெலத்துப் போய் நின்றிருந்த முக்தாவிடம்,
"என்ன செய்திருக்க முக்தா?" அடிக்குரலில் சீறினான் மஹதன்.

ஏற்கனவே அழையாமல் வந்து விட்டோம், இதில் இந்த செயல் வேறு. அவளைப் படுகுழியில் தள்ளப் போகிறது என்ற அச்சம் உள்ளம் எங்கும் பரவித் தகித்தது.

"சொல்லு?"

அவன் வார்த்தைகள் சீறிப் பாய்ந்து கொண்டு இருந்ததை அமைதியாகப் பார்த்துக் கொண்டு இருந்தாள் மௌனா.

"சாரி…மஹத்.." மன்னிப்பைக் கூட ஏனோ தானோ என்று கேட்டவளை பார்வையாலேயே எரித்துக் கொண்டு இருந்தான் மஹதன்.

"என்னைத் தள்ளி விட்டியா? எங்கிட்ட சாரி கேக்குற! அந்தப் பொண்ணுக் கிட்டப் போய் சாரி கேளு"

ஆத்திரத்தில் கூறினாலும் சரியானதைக் கூறினான்.

"அவகிட்டயா?" முணுமுணுத்தவாறே மௌனாவின் அருகில் சென்றாள் முக்தா.

தலையில் பிளாஸ்திரி முளைத்திருக்க, முக்தாவைப் பார்வையிலேயே தடுத்து நிறுத்திய மௌனா,
"இங்க நான் வேலைக்குச் சேர்ந்து இருக்கேன் சார்.இவங்க உங்களுக்கு என்ன ரிலேஷன்னுத் தெரியாது. அதே மாதிரி உங்களோட பர்சனல் விஷயத்தில் தலையிட்ற உரிமையும் எனக்கில்லை. எல்லாத்துக்கும் முக்கியமாக, எனக்கு இப்படி தலையில் அடிபட்ற அளவுக்கு இவங்களை நான் எதுவும் ஹர்ட் பண்ணல.ஆனால் இவங்க கொஞ்சம் கூட, சென்ஸே இல்லாமல், எனக்குக் காயம் வரவழைச்சு இருக்காங்க " என்று பேசியவள்,

ஐந்து நொடிகள் மூச்சு வாங்கி விட்டு,

"இவங்க மேல நான் கம்ப்ளைண்ட் கொடுத்தாலும் ஈசியா வெளியே வந்துருவாங்க. ஆனால் இதற்கான விலை அவங்கத் தந்து தான் ஆகனும்" என்றாள்.

அதற்குள் முக்தாவோ,
"தர்றேன்.பணம் தான கேட்கப் போற?" என்று இளக்காரம் அவளது பேச்சில் அதிகமாகவே தென்பட்டது.

"இதையே எத்தனை நாளைக்குச் சொல்லுவீங்க மேம்.எனக்கு உங்கப் பணம் வேண்டாம்" அவளிடம் கூறிவிட்டு,

"இவங்க மேல என்னால் தான் கம்ப்ளைண்ட் கொடுக்க முடியாது. கொடுத்தாலும் பிரயோஜனம் இல்லை. அவங்க உங்களோட ரிலேடிவ் தானே? எனக்காக நீங்க கம்ப்ளைண்ட் ஃபைல் பண்றீங்களா சார்?"

என்று நிமிர்வாக கேட்டு விட்டு, உச்சபட்ச அதிர்ச்சியில் தடுக்கி விழுபவளைப் போல நின்றிருந்த முக்தாவையும் , ஆச்சரியத்தில் இருந்த மற்ற அலுவலக ஊழியர்களையும் கண்டு கொள்ளாமல், மஹதனைப் பார்த்துக் கொண்டு, அவனுடைய பதிலுக்காகக் காத்திருந்தாள் மௌனா.

- தொடரும்
 
அத்தியாயம் 2

கைகளைக் கட்டிக் கொண்டு நின்றிருந்த மௌனாவைப் பார்த்து சுற்றி உள்ளவர்கள் பிரம்மித்துப் போயினர்.

முக்தாவின் முகமோ பலமாக இருண்டு போயிருந்தது.

பரிதாபகரமாக நின்று கொண்டு இருந்தாலும், அவளுடைய கண்களும், மனதும் மௌனாவை எரித்துச் சாம்பலாக்கும் உட்ச நிலையில் இருந்தது.

அனைத்திற்கும் மேலாக, மஹதனோ ஆச்சரியத்தின் விளிம்பில் இருந்தான்.

தன்னிடம் வேலை பார்ப்பவர்கள் என்ன அவமானப்படுத்தினாலும், வேலைக்காக அதைப் பொறுத்துக் கொள்வர். ஆனால் இவளோ, முக்தா தனக்குச் செய்த குற்றத்திற்குத் தண்டனை கிடைக்க வேண்டும் என்று புகார் அளிக்கக் கேட்கிறாள். அதுவும் முக்தாவின் பணபலத்தைக் கருத்தில் கொண்டு, தன்னையே புகாரளிக்குமாறு கேட்டுக் கொண்டு , தன் முன்னே நிற்கிறாளே!

"சார்! உங்களைத் தான் கேட்கிறேன்! கம்ப்ளைண்ட் கொடுக்கிறீர்களா?"மிடுக்காகக் கேட்டவளிடம் மஹதன் பதில் சொல்வதற்குள்,

முந்திக் கொண்ட முக்தா,

" ஏய்! என்ன? தெரியாமல் பண்ணதுக்கு ஓவரா சீன் போட்டு, மஹதனையும் ஏற்றி விட்டுட்டு இருக்க? உனக்கு எவ்வளவு திமிர் இருக்கனும் "

ஆத்திரத்தில் அடங்காது கத்தினாள்.

"திமிரா? எனக்கா மேடம்? உங்களோட திமிரால் தான் எனக்கு இந்த நிலைமை! இதுக்கு மேல உங்ககிட்ட பேச எனக்கு இஷ்டம் இல்லை" என்ற மௌனா திகைத்து நின்ற மஹதனிடம் பார்வையைச் செலுத்தினாள்.

"ம்ம்! முக்தா நான் இங்கே உன்னை வர வேண்டாம்னு சொல்லியும் வந்திருக்க, அது மட்டுமில்லாமல், என்னோட ஸ்டாஃப்க்கு ப்ளட் வர்ற அளவுக்கு காயத்தை ஏற்படுத்தி இருக்க. இதுக்கு உன்னோட எக்ஸ்ப்ளனேஷன் என்ன?"

அவள் இப்போதாவது தன் தவறை மனதார உணர்கிறாளா? என்ற நம்பிக்கையில் கேட்டான் மஹதன்.

அவனுடைய கேள்வியோ தன்னைத் திக்குமுக்காட வைத்ததால், இப்போதே இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று நினைத்தவளோ,

"நான் தான் சாரி கேட்கிறேன்னு சொல்லிட்டேனே மஹத். அப்படி இல்லையா! பணம் கொடுக்கவும் தயார். அந்தப் பொண்ணுக்கு இரண்டில் என்ன வேணும்னு கேட்டு சொல்லு"

தன் நிலையிலிருந்து இறங்கி வந்து விட்டாளாம்!

"உங்கிட்ட இனிமேல் பேசறதே வேஸ்ட். நான் கம்ப்ளைண்ட் ஃபைல் பண்ணத் தயார் மௌனா"

தானும் அவளுக்குச் சளைத்தவன் இல்லை என்பதை காண்பித்தான் மஹதன்.

இப்போது மௌனாவின் பார்வை மஹதனை வியப்பாக ஏறிட்டது.

"மஹத்…!"

அவமானத்திலும், பயத்திலும் முகம் வெளிறிய நிலையில் கிறீச்சிட்டாள் முக்தா.

"ஆமாம் முக்தா. நீ செஞ்சது தப்பு, அதைவிட பேசின விஷயங்கள் ரொம்ப தப்பு.வேற வழியில்லை. கெட் ரெடி"

இப்போது முக்தாவின் கோபமெல்லாம் மஹதனின் புறம் திரும்பியது.

"இவ சொல்றதை எல்லாம் கேட்கனும்னு உனக்கென்ன தலையெழுத்தா மஹத்? உன்னால முடிஞ்சா இவளைக் கன்ட்ரோல் பண்ண முடியும்.ஆனால் நீயே கம்ப்ளைண்ட் கொடுக்க சம்மதம் சொல்லி இருக்க? வாட் இஸ் திஸ் மஹத்?"

இப்போது வாய் திறந்தாள் மௌனா.

"ஹலோ மேடம்! கன்ட்ரோல் பண்றதுக்கு அவருக்கு என் மேல எந்த உரிமையும் இல்லை. அப்பறம் எனக்கு உங்க ட்ராமாவைப் பார்க்க கொஞ்சம் கூட பிடிக்கல.இன்னைக்குத் தான் முதல் நாள் ஆஃபீஸ்ல ஜாயின் பண்ணேன்.ஒரு ரத்தக் காயம் கிஃப்ட் ஆக கிடைச்சிருச்சு. நீங்க எங்க டைம் வேஸ்ட் பண்ணாதீங்க" என்று மஹதனிடம் திரும்பியவள்,

"சார்! இவங்களைக் கூப்பிட்டுட்டு சீக்கிரம் வாங்க. கம்ப்ளைண்ட் கொடுத்துட்டு நான் வேலையைப் பாக்கனும்.ஏற்கனவே என்னோட ஒரு நாள் வேலையில் பாதி நாள் இவங்களால் வேஸ்ட் ஆயிடுச்சு"

அவள் கூறியதைக் கேட்ட மஹதனோ அதற்குப் பிறகு, பேச ஒன்றும் இல்லாததால், முக்தாவிடம்,
"வந்து காரில் ஏறி முக்தா.எனக்கும் முக்கியமான வேலைகள் நிறைய இருக்கு"என்று கோபமாக கூறினான்.

" ப்ளீஸ் மஹத்!!"

மிகவும் இறங்கிப் போய்க் கெஞ்சினாள் முக்தா. பின்னே, இந்தியா வந்திறங்கியதுமே, காவல் நிலையத்திற்குப் போனாள் என்பது தெரிந்தால், இவளது தந்தையின் அடுத்த நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதே அவளைக் கதி கலங்க வைத்தது.

தனக்கு நேர்ந்த இந்தப் பரிதாப நிலையால் , மனம் வெதும்பிப் போன முக்தா,காரில் ஏறப் போவதற்கு முன்னால்,
"அப்பா கிட்ட பேசனும் மஹத். நான் போலீஸ் ஸ்டேஷன்ல இருக்கிறது தெரிஞ்சா தான, ஜாமீனில் எடுக்க வருவார்" என்று கண்ணீருடன் கேட்டாள்.

அதிலும் மனமிரங்காத மஹதன்,
"நான் சொல்லிக்கிறேன். அங்கே போன பிறகு அதைப் பார்த்துக்கலாம்"என்று அவள் ஏறியதும், மௌனாவும் உடன் ஏறிக் கொள்ள, காரைக் காவல் நிலையத்தை நோக்கிச் செலுத்தினான்.

அவனுக்குள்ளும் எரிமலை வெடித்துக் கொண்டு தான் இருந்தது. இந்த மாதிரி எந்த ஒரு நிலையும் தனக்கு ஏற்பட்டதில்லையே!

முக்தாவோ உடல் எங்கும் அவமானம் பரவிட , கண்களை மூடிக் கொண்டாள்.

அவளை இந்நிலைக்கு ஆளாக்கிய மௌனாவோ, அடுத்து என்ன நடக்கும்? என்ற ஐயம் கொஞ்சம் கூட இல்லாமல், சாலையை வெறித்தாள்.

கால் மணி நேரத்தில் காவல் நிலையத்தை அடைந்திருந்தனர்.
அதன் வாயிலைக் கூட மிதிக்கப் பிடிக்காதவள் போல், முகம் அடிபட்டுப் போய் அப்படியே அமர்ந்திருக்கும் முக்தாவை இறங்கும் படி சைகை செய்தான் மஹதன்.

பின்னிருக்கையில் இருந்து வந்த மௌனாவோ முக்தாவையும், மஹதனையும் பார்த்து,
"ப்ச்" என்று சலிப்புடன் கூறினாள்.

அதைக் கண்ணுற்ற மஹதனோ,
"இறங்கு முக்தா" கடுமையான குரலில் கூறினான்.

மௌனாவின் சலிப்பு அவனைக் கேலி செய்ததைப் போல், தோன்றிற்று.

முக்தாவும் வேறு வழியின்றி இறங்கவும், மூவரும் காவல் நிலையத்திற்குள் சென்றனர்.

அங்கிருந்த காவலதிகாரியிடம்,
"வணக்கம் சார்! இவர் இந்தப் பொண்ணு மேல் கம்ப்ளைண்ட் கொடுக்க வந்திருக்கார்" என்று மௌனாவே பேச ஆரம்பித்து விட்டாள்.

அந்த அதிகாரி மஹதனைப் பார்த்ததும், "சார் நீங்க.. மிஸ்டர் மஹதன் தான?" என்று அவனை நன்றாக அடையாளம் கண்டு கொண்டதைப் போல கேட்டார்.

இருக்காதா பின்னே? அவன் தான் பார் போற்றும் கோட்ஸ்வரன் ஆயிற்றே! அப்படிப்பட்டவன் இங்கே, இந்நிலையில் நிற்கிறான் என்பதே அந்த அதிகாரிக்கு அதிர்ச்சியைத் தந்தது.

" எஸ் சார். இவங்க மிஸ். மௌனா. என்னோட ஸ்டாஃப். கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி மிஸ். முக்தா இவங்களோட தலையில் காயத்தை ஏற்படுத்திட்டாங்க.அதைப் பார்த்த நான் மௌனாவுக்காக கம்ப்ளைண்ட் கொடுக்கிறேன்.உடனே ஆக்ஷன் எடுங்க"

குனிந்த தலை நிமிராமல் நிற்கும் முக்தாவைப் பார்த்துக் காவலதிகாரி, அதற்கு நேர்மாறாக, தலை நிமிர்ந்து நின்றிருக்கும் மௌனாவையும் பார்த்தார்.

அவளது நெற்றியில் இருந்தப் பிளாஸ்திரியைப் பார்த்து விட்டு,
"ம்ம்.ஓகே சார். கம்ப்ளைண்ட் எழுதிக் கொடுங்க" என் சொல்லவும்,

அவர் கொடுத்த வெள்ளைத் தாளில் நாற்காலியில் அமர்ந்து, புகாரை எழுத ஆரம்பித்து விட்டான் மஹதன்.

எஃப் ஐ ஆர் (FIR) ரெடி பண்றேன்" என துரிதமாகத் தயார் செய்தார்.

தன்னை இந்தளவிற்கு இழிவுபடுத்திய இவ்விருவரையும் என்னவெல்லாம் செய்யலாம்? என்று திட்டம் போட்டாள் முக்தா.

அதற்குள், "எஃப் ஐ ஆர் ரெடி சார். சைன் பண்ணுங்க" என்கவும்,

மஹதனோ உடனே அதில் கையெழுத்திட்டான்.

இதைப் பார்த்ததும் 'பணம் இருக்கிறது' என்ற ஒரே காரணத்திற்காக தன்னைக் காயப்படுத்தியதைக் கூட ஒரு பொருட்டே இல்லை என தெனாவட்டாகப் பேசிய பெண்ணிற்கு உரிய தண்டனைக் கிடைக்கப் போகிறது என மௌனாவிற்கோ நிம்மதியாக இருந்தது.

இப்போதாவது தன் செல்பேசியை உபயோகப்படுத்தலாமா? என்பதாக மஹதனையும், செல்பேசியையும் மாறி மாறிப் பார்த்தாள் முக்தா.

"நானே கால் பண்ணி சொல்றேன்" என்று முக்தாவின் தந்தைக்கு அழைத்தான் மஹதன்.

அழைத்து வெகு நேரம் ஆகியும் அவர் ஏற்கவில்லை. எனவே,
"அங்கிள் கால் அட்டெண்ட் பண்ணல" என்று கூற, வெறுப்பை உமிழும் பார்வையால் மௌனாவைப் பார்த்தாள் முக்தா.

ஆனால் உடனே பார்வையைச் சரி செய்து கொண்டு,
"மௌனா! இவ்ளோ தூரம் வந்தாச்சு. கம்ப்ளைண்ட் ஃபைல் ஆகிருச்சு. கொஞ்ச நேரம் செல்லில் (cell) கண்டிப்பாக இருக்கேன். அதுக்கப்புறம் என்னை ஜாமீன்ல எடுக்கச் சொல்லி மஹதன்கிட்ட சொல்லு!" என்று அவளிடம் பரிதவிப்புடன் புலம்பினாள்.

அவளைத் கூர்மையாகப் பார்த்தவள்,
மஹதனிடம்,
"தாங்க்ஸ் சார். உங்களோட ஸ்டேட்டஸைக் கூட நினைச்சுப் பார்க்காமல், நான் கேட்டேன்றதுக்காக, நியாயமாக நடந்துக்கிட்டீங்க" என்று மனதார நன்றி சொன்னாள் மௌனா.

அந்த நன்றியை ஏற்றுக் கொள்ளப் போவதாக இல்லை போலும் அவன்!

"நோ நீட் (No need - தேவையில்லை)"

என்று அவளது நன்றியை ஏற்காமல் , மறுத்து விட்டான் மஹதன்.

பெருமூச்செறிந்தவாறே,
"ஒரு மணி நேரம் கழிச்சு இந்தக் கேஸை வாபஸ் வாங்கிடுங்க சார்" என்றாள் மௌனா.

"ஹேய்!!! என்ன!! தப்புப் பண்ணியது நான் இல்லன்னாலும், உனக்காக ஸ்டேஷன் வரைக்கும் வந்து கம்ப்ளைண்ட் கொடுத்தா, என் பொறுமையை ரொம்ப சோதிச்சுப் பாக்குற? இதுக்கு மேல நீ எங்கிட்ட எதையும் கேட்க ரைட்ஸ் இல்லை. ஒழுங்கா ஆஃபீஸூக்கு வந்து வேலையைப் பாரு"

அவனும் தான் எவ்வளவு நேரம் பொறுத்துப் போவான்.

மௌனாவைப் பொரிந்து தள்ளியவன் திரும்பிப் பார்க்காமல், காரில் ஏறிச் சென்று விட்டான் மஹதன்.

"ஓவர் ஆக்ட் பண்ணி என்னை இந்த நிலைமைக்குக் கொண்டு வந்து விட்டுட்டல்ல! அதுவும் இனி நான் மஹதனைப் பார்த்துப் பேச முடியாத அளவுக்குப் பண்ணிட்ட. உனக்கு இருக்குடி"

அங்கேயே அமர்ந்திருந்த முக்தாவோ, வார்த்தைகளை வஞ்சனை இன்றி பிரயோகித்தாள்.

அதைக் கேட்கப் பிடிக்காமலும், நேரம் போவதாலும் அங்கிருந்து அகன்றாள் மௌனா.

காரில் போகும் போது, மஹதனுக்குக் கால் வந்தது. முக்தாவின் தந்தை தான் அவன் அழைத்ததைப் பார்த்து விட்டு இப்போது கூப்பிட்டு இருக்கிறார்.

"ஹலோ மஹத். என்னப்பா கால் பண்ணி இருக்க?"

"ஆமாம் அங்கிள். முக்தா போலீஸ் ஸ்டேஷன்ல இருக்கா. போய் ஜாமீனில் எடுத்துட்டு வாங்க" என்று கூறியதைக் கேட்டதும்,

"என்னது!!! எப்படி நடந்துச்சு மஹத்?"
நெஞ்சு வலியே வரும் போலிருந்தது அவருக்கு.

"இப்போ லாயரைக் கூப்பிட்டுட்டு ஸ்டேஷன் போங்க அங்கிள்.
ஈவ்னிங் வீட்ல பேசுவோம்"

செல்லை அணைத்து விட்டு, அலுவலகத்தினுள் நுழைந்து கொண்டான் மஹதன்.

பிறகென்ன, மௌனா காவல் நிலையத்தில் இருந்து கிளம்பி, ஆட்டோ பிடித்து அலுவலகம் போகும் நேரத்தில், முக்தாவின் தந்தை நீலகண்டன் அடித்துப் பிடித்துக் அங்கே வந்தார்.அவருடன் வக்கீலும் வந்திருந்தார்.

அவரும் சமுதாயத்தில் பெரும் புள்ளி என்பதால், மஹதனைப் போலவே இவருக்கும் நல்ல வரவேற்பும் , மதிப்பும் கிடைத்தது.

"நீலகண்டன் சார்! நீங்க திடீரென இங்கே வந்திருக்கீங்க? என்ன விஷயம் சார்?"

அவர் கேட்டுக் கொண்டு இருக்கும் போதே, முக்தாவும் சற்று முன்னர் தான் தந்தையின் பெயரைக் கூறி எதாவது முயற்சித்துப் பார்ப்போமா? என்று நினைத்திருந்தாள். அதற்குள் தந்தையே பிரசன்னம் ஆனதில், அவளது கண்ணீர்த் துளிகள் கன்னங்களை அடைந்தது.

"அப்பா!"

கலங்கிய குரலில் தன்னை அழைத்த மகளைப் பார்த்ததும், நீலகண்டனுக்கு அதிர்வு ஏற்பட்டது.

"முகி... உனக்கு எப்படி இந்த நிலைமை? யாரு மஹதனா? அவன் தான் எனக்குக் கால் செய்து விஷயத்தைச் சொன்னான்" என்று மகளை ஆதரவாகத் தோளில் சாய்த்துக் கொண்டார்.

"இல்ல அப்பா. ஆனால் அவனும் ஒரு காரணம் தான். என்னை இந்த நிலைமைக்குக் கொண்டு வந்தது ஒரு பொண்ணு. விஷயத்தை நான் வீட்டுக்குப் போய் சொல்றேன். ப்ளீஸ் இப்போ என்னை ஜாமீனில் எடுங்கள் அப்பா. இங்கே இருக்க எனக்குப் பிடிக்கல"

கண்ணீரில் கரைந்து கொண்டிருந்த மகளிடம்,
"அழாத முகி. நான் இப்போவே உன்னை வீட்டுக்குக் கூப்பிட்டுப் போறேன்"
என்று அதிகாரியிடம் வந்தார்.

"சார்! இவங்க உங்கப் பொண்ணா?" இவர்களது பேச்சைக் கேட்டு தெரிந்து கொண்டார் போலும்!

"ஆமாம் ஆஃபீஸர். இவள் என்னோட பொண்ணு முக்தா. ஜாமீனில் எடுக்கனும்"

வக்கீலையும் அறிமுகப்படுத்தினார் நீலகண்டன்.

அதிகாரி தயக்கத்துடன், "மஹதன் சார் கம்ப்ளைண்ட் கொடுத்து இருக்கார் சார்" என்கவும்,

"ஓஹோ! அவர் தான் என்கிட்ட இன்ஃபார்ம் செய்து இங்கே வரச் சொன்னார்" இறுகிய குரலில் சொன்னார் நீலகண்டன்.

அவனே புகாரளித்து விட்டு, தனக்கும் கால் செய்திருக்கிறானே! என்று அவரது மனம் குமுறியது.

பிறகு, "டவுட் ஆக இருந்தா கால் பண்ணித் தர்றேன். கேளுங்க" என்று சொல்ல,

"இல்லை வேண்டாம் சார்"

அடுத்த நிமிடமே முக்தாவிற்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

காரில் ஏறியதும், "அப்பா!" என்று தன் தோளில் முகம் புதைத்துக் கொண்டு கதறி அழுத மகளைச் சமாதானம் செய்து வீட்டிற்கு அழைத்து வந்தார் நீலகண்டன்.

வெளிநாட்டில் தங்கிப் படித்ததாலும், மாதக் கணக்கில் இங்கே வராததாலும் அவளை ஒரு விழா ஏற்பாடு செய்து அனைவருக்கும் அறிமுகம் செய்து வைக்க எண்ணினார். ஆனால் அவர் கணக்குத் தவறி, நிகழ்ந்ததோ வேறாக இருந்தது.

அலுவலகத்திற்குள் முன்னர் நடந்த சச்சரவின் தடமே இல்லாதது போல் இருந்தது.

மௌனாவும் இந்தப் பிரச்சனையை மறந்து விட்டு, வேலையைத் தொடர்ந்தாள்.

- தொடரும்
 
Status
Not open for further replies.
Top