மனம் - 1
அழகிய கார்காலம் அது... மேகங்கள் என்றும் ஆதவனைத் தன் புகைத் தாவனிக்குள் ஒழித்து வைத்துக்கொள்ளத் துடிக்கும் கார்காலம் மயில்களுக்குக் கொண்டாடம் தான்.
அழகிய நன்நாளில் புனிதாவிற்கும் கங்காதரனுக்கும் இரட்டைக்குழந்தைகள் பிறந்தது.
பெண் குழந்தையென்றால் லட்சுமியின் வரவு என்று ஆனந்தம் அடைந்தவருக்கு, இரண்டுமே பெண் பிள்ளைகள் என்றதும் அவரின் கால்கள் நிலத்தில் நிற்க வில்லை.
வீடே ஆனந்தத்தில் ஆரவாரமாகக் கொண்டாடியது பிள்ளைகளின் வரவை.
தனக்கு இரடிப்புச் சந்தோஷத்தைத் தந்த மனைவியைக் காண அவர் மனம் துடிக்க, ஒர் அந்த மருத்துவமணையின் வராந்தாவில் காத்திருந்தார் கங்காதரன்.
தன் பிள்ளைகள் இந்தப் பூமியில் கால்பதித்த அந்நொடி, இந்த உலகமே அழகாகத் தோன்றியது கங்காதரனுக்கு. நடுத்தர வர்க்த்தைச் சேர்ந்த அவருக்கு இனி இந்தப் பிள்ளைகளை, நல்ல விதமாக வளர்த்திப் பெரிய ஆட்களாக வளரவேண்டும் என்ற எல்லாத் தந்தைக்கும் உண்டாகும் கனவும் சேர்ந்தே பிறந்தது.
தன்னுடன் துணைக்கு வந்திருக்கும் தங்கையிடம் " எப்போ அவளைக் கூட்டி வருவாங்கத் தங்கம்" என்று கங்காதரன் கேட்டார். கணவனை இழந்துக் கைம்பெண்ணாக யாருமில்லாமல் நிராதரவாக இருப்பவருக்கு, அவர் அண்ணன் கங்காதரன் தான் ஆதரவு தந்தார். தன் ஒற்றைப்பிள்ளையோடு அண்ணன் வீட்டில் வந்து தங்கிக்கொண்டார், தங்கம்.
“கொஞ்சம் பொறுமையாக இருங்க அண்ணா, குழந்தைகளைப் பாருங்க ரோசாப்பூவாட்டம். எல்லாம் எங்க அண்ணியோட சாடையில் இருக்காங்க. உங்க பொண்டாட்டியை இன்னும் கொஞ்ச நேரத்தில் கூட்டி வருவாங்க” என்றாள் தன் அண்ணனிடம்.
"அம்மா பாப்பாவைக் காட்டுங்க, என்னிடம் தாங்கம்மா ஆசையாக இருக்கு " என்ற தங்கத்தின் மகனை அடக்கினார்.
"தம்பி இப்ப எல்லாம் நீ தூக்கவே கூடாது, குழந்தைகள் பெரிசு ஆனதும் தான், உனக்கு ஆசையாக இருக்கென்றால், என்னிடம் வந்து உக்காந்துப் பார்த்துக்கோ" என்ற அம்மாவின் முகத்தைப் பார்த்து,
"பட்டுபோல இருக்காங்க அம்மா" என்றான் மகேந்திரன். தன் மாமாவின் மக்களைக் கண்ட ஆனந்தம் அவனிடம்.
நேரம் கடக்க மக்களில் ஒருத்தி, பாலுக்கு அழத் தொடங்கினாள். அங்கே வேகமாக வந்த நர்ஸ் முதலில் அழுதப் பிள்ளையை வாங்கிப் போய்ப் பாலூட்ட வைக்கச் சென்ற அடுத்த நொடி, மற்றவளும் அழத் தொடங்கினாள். இந்தச் சிறு நிகழ்வே வரும் காலத்தை எடுத்துக்கூறும் விதம் இருந்ததை உணர்ந்தார் தங்கம்.
இருந்தப்போதும் இரட்டைக்கழந்தைகள் என்றால் இப்படியெல்லாம் இருக்கும் என்று அவரே ஒரு கருத்தை உருவாக்கினார் இங்கே.
கங்காதரனின் பொறுமையை ரொம்பச் சோதிக்காமல் மனைவியைக் காண அழைத்தனர் மருத்துவர்.
இரண்டுக்குழந்தைகளை ஒரே நேரத்தில் பிரசவித்த தன் காரணமாக, மிகவும் சோர்ந்து போய்ப் படுத்து இருக்கும் தன் மனைவியைக் கண்டதும், கண்ணில் இரு துளி நீர்ப் பிறந்தது.
மனைவியின் மேல் காதலை மீறியப்பாசம் கங்காதரினடம் வெளிப்பட்டது. தந்தை ஆனதை விடத் தன்னவளின் சோர்வு அவரைத் துன்புறுத்தியது. அவரின் சோகமான முகத்தைப் பார்த்ததும் , "என்னங்க, ஏன் இப்படி இருக்கீங்க, ஆண் பிள்ளை இல்லை என்று வருத்தப்படறீங்களா?" என்று தன் கணவனின் சோகத்திற்குக் காரணம் கேட்டாள் புனிதா .
"என்னடிப் பேச்சு , ஆணோ பெண்ணோ எல்லாம் ஒன்று தான், நான் உன்னோட சோர்வான முகத்தைப்பார்த்து அச்சச்சோ, என் பொண்டாட்டி எப்படியெல்லாம் கஷ்டப்பட்டாளோ? என்று வருத்தப்பட்டா இப்படிக் கேட்கற நீ" என்று முகத்தைத் திருப்பியவரைப்பார்த்துச் சிரித்தாள் புனிதா.
"ஆமா ,ஆமா, நான் எதாவது சொல்லிறப் போறேனுங்க, ஆளுக்குக் கூலுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை என்றால் எப்படி. நான் கஷ்டப் படகூடாது நினைச்ச என் பக்கத்திலேயே வந்து இருக்கக் கூடாது" என்று அவரைக் கேலிச் செய்தாள் புனிதா. மனைவியின் கேலியில் அவள் முகம் பார்த்தவர், சோர்ந்துப்போய் இருக்கும் தாய்மை நிறைந்த அவள் முகத்தைப்பார்த்ததும் அவருக்குக் காதல் கரைப் புரண்டது.
மெல்லக் குனிந்து அவள் இதழில் தன்னைத் தந்தை என அழகான அந்தஸ்த்துத் தந்து, உயர்த்திய அவளின் காதலுக்கு அச்சாரம் வைத்தவரின் கண் கலக்கித்தான் போனது.
கணவனின் காதலில் பரவசம் அடைந்த புனிதாவிற்கு அவள் கடந்த வந்த வலி, பட்ட வேதனை எல்லாம் மறந்து போனது. தலைவணங்கிக் காதலைப் பரிசளிக்கும் கணவன் மட்டுமே தன் முன்னே நிற்பதைக் கண்டாள்.
அவர்களின் மோன நிலையைக் கலைத்தனர் அவர் பெண் பிள்ளைகள். "வந்துருவாளுக இனி" என்று கணவனை முறைத்த தன் மனைவியைப் பார்த்து அழகாகச் சிரித்தார் தேவதைகளின் தந்தை.
மருத்துவமணையில் இருந்து இரண்டு நாட்களுக்குப் பிறகு வீடு வந்து சேர்ந்தனர் கங்காதரன் குடும்பத்தினர்.
இரண்டு தேவதைப் பெண்களுக்குப் பெயர்ச் சூட்டும் நாளும் வந்தது. தாரா, தாரிகா என்று அழகான பெயர்களை வைத்து அழகுப்பார்த்தனர் தங்கள் பிள்ளகைளுக்கு.
நாட்கள் வருடங்கள் ஆக வருடங்கள் சில ஓடியதில் பிள்ளகைளும் வளர்ந்தனர்.
தங்கத்தின் மகன் மகேந்திரன் தன் மாமானின் மக்களைப் பாரபட்டமின்றிப் பார்த்துக்கொண்டான் என்று தான் சொல்ல வேண்டும்.
தாரா மற்றும் தாரிகா இரண்டு பேரில், தாரிகா கொஞ்சம் கசண்டி, குசும்பு அதோடு சுயநலமாக இருந்தாள்.
இருவரும் பள்ளியில் பயின்றுக்கொண்டிருந்தனர்.
தாரா மிகவும் பொறுப்பான பெண்ணாக இருந்தாள். எளிமையாக நேர்க்கொண்ட பார்வையோடு வலம் வந்தாள். தாரிகாவிற்கு அழகுவழிந்தது என்றாள் தாராவிற்கு அழகு அவளின் கம்பீரமும் தைரியமுமாக இருந்தது.
படிப்பில் இருவரும் நன்றாகப் படித்தாலும், தாரா அதில் முன்னில் இருந்தாள். தாரிகாவும் படிப்பாள், எப்படியும் உருண்டுப் பிரண்டு தன் முன் அமர்ந்து இருக்கும் தாராவின் தயவில் தாராவிற்குச் சரிசமமாக மதிப்பெண் வாங்கி விடுவாள். தாராவின் தயவில் பள்ளியில் முதல் மூன்று இடங்களில் வந்து கெத்தாக நடந்தாள் தாரிகா.
சிறு வயதில் இருந்தே அவளுக்கு எல்லாம் விட்டுக்கொடுத்து, அவளை அனுசரித்து என்று பழகியதால் எதுவும் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை தாரா.
தாராவிற்கு அவள் லட்சியமே நன்றாகப் படித்துத் தன் தந்தையின் முகத்தில் பிறக்கும் அந்தப் புன்னகையைக் காண்பது தான். தாரிகாவும் நன்றாகப் படித்தாள் அவருக்கு ஆனந்தம் இரட்டிப்பாகும் என்பது மட்டுமே அவள் நினைத்தாள். அதற்காக என்ன வேணாலும் செய்யும் நிலையில் வளருபவள் தாரா.
"தாரா, என்ன பண்ணற? அம்மாக்கு இந்த வேலையில் கொஞ்சம் உதவலாம் இல்லை" என்று சமையலறையில் இருந்து கத்தினாள் புனிதா.
"என்னம்மா நீங்க, உங்களிடம் சொல்லிட்டுத் தானே எழுத உக்காந்தேன், அவளைக் கூப்ப வேண்டியது தானே" என்றாள் சின்னவள்.
"தங்கம் அத்தை வீட்டிற்குப் போயிட்டா டி, நீ வா என் செல்லம் தானே" என்று அவளுக்கு ஐஸ் வைத்தாள் அவள் தாய்.
"இப்படி என்னைய மட்டுமே ஆல் டைம் ஃபோக்கஸில் வைச்சுட்டு, அவளைக்கோட்ட விட்டுருங்கம்மா நீங்க” என்ற படி வந்தாள் தாரா… அம்மாவிற்கு உதவுவதற்கு.
"ஏன்டி, இப்படி எல்லாம் பேசுற, அவள் என்ன பண்ணிட்டா, இப்படி எதற்கு எடுத்தாலும் அவளைக் குத்தம் சொல்லிட்டுச் சுத்தற" என்று கடிந்தத் தாயிடம்,
"அம்மா , அவள் நல்லதற்குத் தான் சொல்லறேன். உங்களுக்குப் புரியவில்லை என்றால் ஒன்றும் பண்ண முடியாது. அவள் எப்பவும் பரிட்சையில் என்னிடம் கேட்டு எழுதறாள் என்று சொன்னேன், பாவம் சொல்லிக்கொடு என்று சொன்னீங்க, நானும் சொல்லிக்கொடுத்தேன்.
அதுதான் பத்தாம் வகுப்பில் மதிப்பெண் கம்மி ஆகிருச்சு. எல்லாம் என்ன சொன்னீங்க, நன்றாகப் படிக்கறப் பிள்ளை இந்தத் தடவை ஏதோ மார்க் கம்மி ஆகிருச்சு, அதனால் பள்ளியிலும் அவள் கேட்ட க்ரூப் குடுத்துட்டாங்க ஆனால் காலேஐ் அப்படி இல்லை அம்மா.
இந்தப் பன்னிரண்டாம் வகுப்புத்தேர்வில், அவள் என்ன பண்ணி வச்சு இருக்கா என்று தெரியவில்லை, அப்பா கேட்டால் நீங்க தான் பேசணும், என்னை எல்லாம் கேட்டாருன்னா, இவ்வளவு வருஷமும் உங்க செல்லம் எப்படிப் பாஸானாள் என்று நான் சொல்ல வேண்டி வரும், அப்பறப் என்னிடம் கோபித்துக்கொள்ளக் கூடாது" என்றாள் தாரா.
"ஏன் பாப்பா இப்படிச் சொல்கிறாய், அவள் நல்ல மார்க் வாங்குவாள், நீ வேணுமென்றால் பாரு" என்றாள் புனிதா.
“அவள் ஆடின ஆட்டம் ஸ்கூலிலேயே தாங்க முடியாமல் போச்சு, இனி காலேஜ் வேற, என்னெனப் பண்ணப் போறாளோ என்ற பயமே எனக்குக் காலேஜ் போற அந்த ஆர்வத்தைக் குறைச்சுருச்சும்மா” என்று ஆதங்கப்பட்டாள்.
இவ்வளவு சேட்டைகளுக்குச் சொந்தக்காரி, தன் அத்தையின் ஸ்மார்ட் போனில் சமூக வலைத்தலத்தில் அவள் வகுப்புத்தோழனிடம் கருகும் வரையில் கடலை வறுத்துக்கொண்டிருந்தாள்.
தாரிகா.... என்று இரண்டு இதயத்தின் குறியீட்டினை அனுப்பி 'என் இதயம் அது நீ வாழும் இடம்' என்று அவளைச் சுகிப்பிக்கும் வார்த்தைகளை அள்ள வீசிக்கொண்டிருந்தான் ஒருத்தன்.
இப்படித் தன் அழகில் மயங்கித் தன் பின் சுற்றும் விடலைப் பையங்களை அலய விடுவது அவளுக்கும் நன்றாக இருந்தது. பருவ வயதின் தாக்கம் அப்படி என்ன சொல்ல.
"இந்தப்போனுல என்னத்தச் செய்வியோ? உங்க அம்மா பாரு அங்க கத்திட்டு இருப்பாள், நீ என்ன இங்க வந்து ஓபி அடிக்கிறாயா? தாரிகா" என்றார், தங்கம்
தங்கத்தின் வார்த்தைகளையெல்லாம் கேட்டப்படியே அங்கே வந்தான் மகேந்திர்ன.
மகேந்திரனுக்குத் தாரிகாவின் செய்கை எல்லாம் தெரியும். ஆனால் கண்டுக்கொள்ள மாட்டான். 'இந்த வயது அப்படி' என்று விட்டு விடுவான். ஆனால் தாரா அப்படி இல்லை என்பதும் அவனுக்குத் தெரிந்து இருந்தது.
மாமானின் பிள்ளைகள் இரண்டு பேரும் அழகாகா இருந்த போதும் கண்ணியமாக நடந்துக்கொண்டான். தன் தாயிக்கு எந்த அவப்பெயரும் வரக்கூடாது என்பதில் கவனமாக இருந்தான்.
அடைக்கலமாக வந்து இடத்தில் அனைத்தும் எனது என்று உரிமைக்கொண்டாட மனம் இல்லை அவனுக்கு. அவன் தொடங்கி இருக்கும் கட்டுமானப் பொருட்கள் விற்பனைக்கூடத்தை, அடுத்த அளவில் கொண்டு செல்லும் அவன் பயணதில் இந்த மாதிரியான சிந்தனைகளுக்கு நேரமில்லை.
“உணவு உண்ண வந்தவனிடம் பார்த்தாயாடா உன் மாமன் மகளை, அவள் அம்மாவை ஏமாற்றிவிட்டு, இங்க வந்து இந்த ஃபோனை நோண்டிட்டு இருக்காள்” என்று தங்கம் குற்றம் வாசித்தாள்.
"விடுங்கம்மா, இந்தக் காலத்தில் எல்லாம் அப்படித்தான். நீ சும்மா அவளை எதாவது சொல்லாட்டே இருக்காதே! அப்பறம் வருவதை நிறுத்திருவாள்" என்றான் மகேந்திரன்.
"இல்ல மகி அவள் நல்லதுக்குத் தான் சொல்லறேன். தன்னைச் சுற்றி என்ன நடக்குது தெரியாமல் எப்பொழுதும் ஒரு மாய உலகத்தில் இருப்பது போல அவள் சுத்திட்டு இருக்கா டா" என்றார் ஆதங்கமாக.
“எல்லாம் சரி ஆகிரும் அம்மா. காலேஜ் படிக்கப்போற, படிப்பு அவளை மாற்றி விடும்” என்று சொன்னவன் தானும் அதையே நம்பினான். அவள் படிப்பு அவளை நல்வழிப் படுத்திம் என்று.
ஆனால் விதி என்று ஒன்று இருக்கும் அல்லவா. நாம் நினைத்தெல்லாம் நடந்தால் அதற்கு என்ன வேலை.
மகேந்திரன் மாமான் வீடு பக்கத்தில் இருந்தாலும், தான் உண்டு, தன் வேலை உண்டு என்று இருப்பவன். அதனால் எதுவும் பார்க்கவில்லை, கேட்கவில்லை என்று விட்டு விடுவான். அது குடும்பத்திற்கு நல்லது என்று நினைத்தான்.
அன்னையிடமும் பல தடவைச் சொல்லி இருக்கின்றான். உங்கள் அண்ணன் வீட்டு விஷயத்தில் தேவை இல்லாமல் சென்று உங்கள் கருத்தைச் சொல்லதீர்கள். உங்களிடம் கேட்டால் சொன்னால் போதும் என்று. மகனின் பக்குவமானப் பேச்சில் இருக்கும் உண்மையை உணர்ந்த, தங்கமும் மகன் சொல்லைத் தட்டுவதில்லை.
இந்தக் காலத்தில் காதல் என்பது ரொம்பச் சாதாரணமாகி விட்டது. பேருந்து நிறுத்ததில் இளவட்டம் அடிக்கும் கூத்தை அவனும் பார்க்கின்றானே.
மகேந்திரன் வந்தவுடனே அங்கிருந்து மெதுவாகக் கிளம்பினாள் தாரிகா. தான் பயன்படுத்திய அனைத்தும் ஃபோனில் இருந்து அழித்தி விட்டவள். இதெல்லாம் தன் புத்திசாலித் தனமாகக் கருதினாள் தாரிகா. ஒரு நாள் நாம் பிடிபடுவோம் என்று அவள் நினைக்கவில்லை.
வேகமாக வீட்டிற்கு வந்தவள், "அம்மா, என்ன சமைத்து வைத்திருக்கீங்க" என்று சமையலறையில் பாத்திரங்களை உருட்டினாள்.
"என்னடி, பண்ணிட்டு இருந்த அத்தை வீட்டில்" என்று தாயின் விசாரிப்புகளை எல்லாம் விளையாட்டுதனமாகத் தவிர்த்தாள் தாரிகா. அவளின் குறும்பில் எல்லாம் மறக்கும் தாயை எப்படிப் புரிய வைக்க என்று தெரியவில்லை தாராவிற்கு.
விதி இதுவானால் எல்லாம் எதிர்கொள்ள வேண்டும் என்று மனதைத் திடப்படுத்தினாள். தன் உடன் ஒட்டிப்பிறந்தவளுக்காக எல்லாம் தாங்கும் தூண்னாக மாறிப்போனாள் தாரா.
இரவு உணவிற்கு வந்த கங்காதரன் " தாரா, எந்தக் கல்லூரியில் சேரணும் என்று யோசிச்சு வச்சு இருக்கீங்காளா? என்று இருவரையும் பார்த்துக்கேட்டார்.
"ரிசலட் வரட்டும் அப்பா" என்றாள் தாரா.
"தாரிகாவோ ஊரிலேயே மிகப்பெரிய கல்லூரியில் சேருவது தான் என் கனவு" என்று கூறினாள்.
"அதற்கு நிறைய ஃபீஸ் கட்ட வேண்டி இருக்கும் என்று கேள்விப் பட்டேனே தாரிகா" என்றார், கங்காதரன்.
"ஆமாம் அப்பா, ஆனால் நல்ல மார்க் வாங்கினால், கவுன்சிலங் மூலம் போனால் பணம் நம்ம, கட்டுப்பாட்டில் இருக்கும்" என்றாள் தாரா. மேலும் "அதற்குத் தான் ரிசல்ட் வரட்டும் என்று சொல்லறேன்" என்று தெளிவாகச் சொன்னாள் தன் தந்தைக்கு. அதற்கு என்ன செய்வேண்டும் எல்லாத் தகவல்களும் தன் தந்தைக்குச் சொல்லிக்கொடுத்தாள்.
தாரா , தந்தையிடம் சொல்லிக்கொண்டிருக்கும் தகவல்களை எல்லாம் கேட்டதும், தாரிகாவிற்கு மனதின் ஓரம் ஒரு பயம் எட்டிப்பார்த்தது.
'நான் பாஸாகிருவேனா? ஆண்டவா நான் பாஸானால் உனக்குத் தேங்காய் உடைக்கிறேன்' என்று ரெடிமேடாக ஒரு வேண்டுதலை வைத்தாள் கணபதிக்கு.
நம்மோட கடமையைச் சரிவரச் செய்தால் கடவுளின் அருள் என்றுமே நமக்குத் தானே.
அடுத்த நாள் ரிசல்டிற்காகக் காத்திருத்தனர் வீட்டில் இருக்கும் அனைவரும்.
இந்த முடிவுகள் எப்படி வரும் என்ற அனுமானம் மகேந்திரனுக்கு இருந்ததால் அவன் தன் கடைக்குச் சென்று விட்டான்.
தங்கம் தான் காலையிலேயே கோயில் சென்று தன் அண்ணன் மக்கள் இருவரும் நல்லவிதமாகத் தேர்ச்சிப் பெற வேண்டும் என்று வேண்டிக்கொண்டு பிராசாதத்தைக் கொண்டு வந்து அனைவருக்கும் கொடுத்தார்.
தாரா எப்பொழுதும் போல எந்தப் பதட்டமும் இல்லாமல் நிதானமாக இருந்தாள். தேர்வு எழுதும் வரைத்தான் அவள் போராடுவாள், எழுதி முடித்தப்பின் என்ன எழுதி இருக்கோமோ அதற்கான மதிப்பெண் நம்மை வந்து சேரும் எனபதில் தெளிவாக இருந்தாள்.
தாரிகா, பதட்டமாகவே இருந்தாள். இந்தத் தடவைக் கடந்த பத்தாம் வகுப்பின் முடிவுகளை விட நல்லவிதமான மதிப்பெண் வரவேண்டும் என்று இஷ்ட தெய்வங்களுக்கு எல்லாம் வேண்டினாள்.
மதிப்பெண் வந்தது. எப்பொழுதம் போன்றே தாரிகா, குறைவான மதிப்பெண் எடுத்துப் பாஸாகியிருந்தாள்.
அவளின் கல்லூரிக்கனவில் விரிசல் விழுந்தது. நினைத்த க்ரூப் கிடைக்கும் என்பது சந்தேகம் என்று கங்காதரன் முடிவுச்செய்தார். தாரா நல்ல மதிப்பெண் எடுத்துதிருந்தாள். அதற்கு அவள் எதிர்பார்த்தக் கல்லூரியில் பொறியியல் படிப்பிற்கான வகுப்புக் கிடைக்கும்.
மிகவும் சந்தோஷமான மனநிலையில் முழுவதுமாகக் கொண்டாட முடியாமல் தவிக்க வைத்தது பெற்றவர்களை. தாரிகாவால் என்ன முடியுமோ அந்த மதிப்பெண் எடுத்து இருந்தாள். அவளைக் குறைச்சொல்லவும் இல்லை.
பெற்றவர்களுக்குத் தன் பிள்ளைத் தேர்ச்சி அடைந்ததே பெரிய சந்தோஷம் என்று நினைத்தனர். தாரிகாவின் மதிப்பெண் அவர்களை எப்படித் தனித்தனித் கல்லூரியில் படிக்க வைக்க எனச் சிந்திக்கத் தொடங்கினர் பெற்றோர்.
பிறந்ததில் இருந்து பள்ளிப் படிப்பு வரை ஒரே பள்ளி, ஒரே வகுப்பு என்று படித்து வந்த இருவரும். இப்போது தனித்தனியாகப் படிக்கச்செல்ல வேண்டும் என்பதில் பயம் வந்தது பெற்றவர்களுக்கு. தாரிகாவை எப்படித் தனியாக அனுப்பவ என்று சிந்தித்தனர். தேர்ச்சி பற்றி அறிய ஃபோன் செய்த மகேந்திரனிடம் இதைப் பற்றிக் கேட்டார், கங்காதரன்.
"என்ன மகேந்திரா, பண்ணலாம் இப்போ தாரிகாவை வேறு காலேஜ் சேர்த்துவதா? உனக்கு என்ன தோன்றுகிறது சொல்லு" என்று கேட்டார் அவன் மாமன்.
அவர்கள் ஊரில் இருக்கும் பெரிய கல்லூரியின் பெயரைச் சொன்னவன்," இந்தக் காலேஜில் தாரிகாவை ஆர்ட்ஸில் சேர்த்திட்டு, தாராவிற்குப் பொறியியலில் சேர்த்தி விடுங்க மாமா, அப்பொழுது ஒரே காலேஜ் போவாங்க" என்றான் மகேந்திரன். தன் மாமனுக்குச் சுலபமாக ஆலோசனை வழங்கினான்.
"ம்ம் நீ சொல்லறதும் சரிதான் மருமகனே" என்றவர் கல்லூரியில் சேர்க்க வேண்டிய வேலைகளைத் தொடங்கினார்.
கல்லூரி வாழ்க்கையைத் திசைத்திருப்பும் இடமாக இருவருக்கும் அமையும் என்று கனவிலும் சிந்தித்து இருக்க மாட்டார்கள். காலம் கற்றுத் தரும் பாடத்தை வலிக்க வலிக்கக் கற்கப் போவது இரண்டு பேரில் யாரெனப் புதிரோடு அவர்கள் கல்லூரிப் பயணம் தொடங்கியது.
தொடரும்…
அழகிய கார்காலம் அது... மேகங்கள் என்றும் ஆதவனைத் தன் புகைத் தாவனிக்குள் ஒழித்து வைத்துக்கொள்ளத் துடிக்கும் கார்காலம் மயில்களுக்குக் கொண்டாடம் தான்.
அழகிய நன்நாளில் புனிதாவிற்கும் கங்காதரனுக்கும் இரட்டைக்குழந்தைகள் பிறந்தது.
பெண் குழந்தையென்றால் லட்சுமியின் வரவு என்று ஆனந்தம் அடைந்தவருக்கு, இரண்டுமே பெண் பிள்ளைகள் என்றதும் அவரின் கால்கள் நிலத்தில் நிற்க வில்லை.
வீடே ஆனந்தத்தில் ஆரவாரமாகக் கொண்டாடியது பிள்ளைகளின் வரவை.
தனக்கு இரடிப்புச் சந்தோஷத்தைத் தந்த மனைவியைக் காண அவர் மனம் துடிக்க, ஒர் அந்த மருத்துவமணையின் வராந்தாவில் காத்திருந்தார் கங்காதரன்.
தன் பிள்ளைகள் இந்தப் பூமியில் கால்பதித்த அந்நொடி, இந்த உலகமே அழகாகத் தோன்றியது கங்காதரனுக்கு. நடுத்தர வர்க்த்தைச் சேர்ந்த அவருக்கு இனி இந்தப் பிள்ளைகளை, நல்ல விதமாக வளர்த்திப் பெரிய ஆட்களாக வளரவேண்டும் என்ற எல்லாத் தந்தைக்கும் உண்டாகும் கனவும் சேர்ந்தே பிறந்தது.
தன்னுடன் துணைக்கு வந்திருக்கும் தங்கையிடம் " எப்போ அவளைக் கூட்டி வருவாங்கத் தங்கம்" என்று கங்காதரன் கேட்டார். கணவனை இழந்துக் கைம்பெண்ணாக யாருமில்லாமல் நிராதரவாக இருப்பவருக்கு, அவர் அண்ணன் கங்காதரன் தான் ஆதரவு தந்தார். தன் ஒற்றைப்பிள்ளையோடு அண்ணன் வீட்டில் வந்து தங்கிக்கொண்டார், தங்கம்.
“கொஞ்சம் பொறுமையாக இருங்க அண்ணா, குழந்தைகளைப் பாருங்க ரோசாப்பூவாட்டம். எல்லாம் எங்க அண்ணியோட சாடையில் இருக்காங்க. உங்க பொண்டாட்டியை இன்னும் கொஞ்ச நேரத்தில் கூட்டி வருவாங்க” என்றாள் தன் அண்ணனிடம்.
"அம்மா பாப்பாவைக் காட்டுங்க, என்னிடம் தாங்கம்மா ஆசையாக இருக்கு " என்ற தங்கத்தின் மகனை அடக்கினார்.
"தம்பி இப்ப எல்லாம் நீ தூக்கவே கூடாது, குழந்தைகள் பெரிசு ஆனதும் தான், உனக்கு ஆசையாக இருக்கென்றால், என்னிடம் வந்து உக்காந்துப் பார்த்துக்கோ" என்ற அம்மாவின் முகத்தைப் பார்த்து,
"பட்டுபோல இருக்காங்க அம்மா" என்றான் மகேந்திரன். தன் மாமாவின் மக்களைக் கண்ட ஆனந்தம் அவனிடம்.
நேரம் கடக்க மக்களில் ஒருத்தி, பாலுக்கு அழத் தொடங்கினாள். அங்கே வேகமாக வந்த நர்ஸ் முதலில் அழுதப் பிள்ளையை வாங்கிப் போய்ப் பாலூட்ட வைக்கச் சென்ற அடுத்த நொடி, மற்றவளும் அழத் தொடங்கினாள். இந்தச் சிறு நிகழ்வே வரும் காலத்தை எடுத்துக்கூறும் விதம் இருந்ததை உணர்ந்தார் தங்கம்.
இருந்தப்போதும் இரட்டைக்கழந்தைகள் என்றால் இப்படியெல்லாம் இருக்கும் என்று அவரே ஒரு கருத்தை உருவாக்கினார் இங்கே.
கங்காதரனின் பொறுமையை ரொம்பச் சோதிக்காமல் மனைவியைக் காண அழைத்தனர் மருத்துவர்.
இரண்டுக்குழந்தைகளை ஒரே நேரத்தில் பிரசவித்த தன் காரணமாக, மிகவும் சோர்ந்து போய்ப் படுத்து இருக்கும் தன் மனைவியைக் கண்டதும், கண்ணில் இரு துளி நீர்ப் பிறந்தது.
மனைவியின் மேல் காதலை மீறியப்பாசம் கங்காதரினடம் வெளிப்பட்டது. தந்தை ஆனதை விடத் தன்னவளின் சோர்வு அவரைத் துன்புறுத்தியது. அவரின் சோகமான முகத்தைப் பார்த்ததும் , "என்னங்க, ஏன் இப்படி இருக்கீங்க, ஆண் பிள்ளை இல்லை என்று வருத்தப்படறீங்களா?" என்று தன் கணவனின் சோகத்திற்குக் காரணம் கேட்டாள் புனிதா .
"என்னடிப் பேச்சு , ஆணோ பெண்ணோ எல்லாம் ஒன்று தான், நான் உன்னோட சோர்வான முகத்தைப்பார்த்து அச்சச்சோ, என் பொண்டாட்டி எப்படியெல்லாம் கஷ்டப்பட்டாளோ? என்று வருத்தப்பட்டா இப்படிக் கேட்கற நீ" என்று முகத்தைத் திருப்பியவரைப்பார்த்துச் சிரித்தாள் புனிதா.
"ஆமா ,ஆமா, நான் எதாவது சொல்லிறப் போறேனுங்க, ஆளுக்குக் கூலுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை என்றால் எப்படி. நான் கஷ்டப் படகூடாது நினைச்ச என் பக்கத்திலேயே வந்து இருக்கக் கூடாது" என்று அவரைக் கேலிச் செய்தாள் புனிதா. மனைவியின் கேலியில் அவள் முகம் பார்த்தவர், சோர்ந்துப்போய் இருக்கும் தாய்மை நிறைந்த அவள் முகத்தைப்பார்த்ததும் அவருக்குக் காதல் கரைப் புரண்டது.
மெல்லக் குனிந்து அவள் இதழில் தன்னைத் தந்தை என அழகான அந்தஸ்த்துத் தந்து, உயர்த்திய அவளின் காதலுக்கு அச்சாரம் வைத்தவரின் கண் கலக்கித்தான் போனது.
கணவனின் காதலில் பரவசம் அடைந்த புனிதாவிற்கு அவள் கடந்த வந்த வலி, பட்ட வேதனை எல்லாம் மறந்து போனது. தலைவணங்கிக் காதலைப் பரிசளிக்கும் கணவன் மட்டுமே தன் முன்னே நிற்பதைக் கண்டாள்.
அவர்களின் மோன நிலையைக் கலைத்தனர் அவர் பெண் பிள்ளைகள். "வந்துருவாளுக இனி" என்று கணவனை முறைத்த தன் மனைவியைப் பார்த்து அழகாகச் சிரித்தார் தேவதைகளின் தந்தை.
மருத்துவமணையில் இருந்து இரண்டு நாட்களுக்குப் பிறகு வீடு வந்து சேர்ந்தனர் கங்காதரன் குடும்பத்தினர்.
இரண்டு தேவதைப் பெண்களுக்குப் பெயர்ச் சூட்டும் நாளும் வந்தது. தாரா, தாரிகா என்று அழகான பெயர்களை வைத்து அழகுப்பார்த்தனர் தங்கள் பிள்ளகைளுக்கு.
நாட்கள் வருடங்கள் ஆக வருடங்கள் சில ஓடியதில் பிள்ளகைளும் வளர்ந்தனர்.
தங்கத்தின் மகன் மகேந்திரன் தன் மாமானின் மக்களைப் பாரபட்டமின்றிப் பார்த்துக்கொண்டான் என்று தான் சொல்ல வேண்டும்.
தாரா மற்றும் தாரிகா இரண்டு பேரில், தாரிகா கொஞ்சம் கசண்டி, குசும்பு அதோடு சுயநலமாக இருந்தாள்.
இருவரும் பள்ளியில் பயின்றுக்கொண்டிருந்தனர்.
தாரா மிகவும் பொறுப்பான பெண்ணாக இருந்தாள். எளிமையாக நேர்க்கொண்ட பார்வையோடு வலம் வந்தாள். தாரிகாவிற்கு அழகுவழிந்தது என்றாள் தாராவிற்கு அழகு அவளின் கம்பீரமும் தைரியமுமாக இருந்தது.
படிப்பில் இருவரும் நன்றாகப் படித்தாலும், தாரா அதில் முன்னில் இருந்தாள். தாரிகாவும் படிப்பாள், எப்படியும் உருண்டுப் பிரண்டு தன் முன் அமர்ந்து இருக்கும் தாராவின் தயவில் தாராவிற்குச் சரிசமமாக மதிப்பெண் வாங்கி விடுவாள். தாராவின் தயவில் பள்ளியில் முதல் மூன்று இடங்களில் வந்து கெத்தாக நடந்தாள் தாரிகா.
சிறு வயதில் இருந்தே அவளுக்கு எல்லாம் விட்டுக்கொடுத்து, அவளை அனுசரித்து என்று பழகியதால் எதுவும் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை தாரா.
தாராவிற்கு அவள் லட்சியமே நன்றாகப் படித்துத் தன் தந்தையின் முகத்தில் பிறக்கும் அந்தப் புன்னகையைக் காண்பது தான். தாரிகாவும் நன்றாகப் படித்தாள் அவருக்கு ஆனந்தம் இரட்டிப்பாகும் என்பது மட்டுமே அவள் நினைத்தாள். அதற்காக என்ன வேணாலும் செய்யும் நிலையில் வளருபவள் தாரா.
"தாரா, என்ன பண்ணற? அம்மாக்கு இந்த வேலையில் கொஞ்சம் உதவலாம் இல்லை" என்று சமையலறையில் இருந்து கத்தினாள் புனிதா.
"என்னம்மா நீங்க, உங்களிடம் சொல்லிட்டுத் தானே எழுத உக்காந்தேன், அவளைக் கூப்ப வேண்டியது தானே" என்றாள் சின்னவள்.
"தங்கம் அத்தை வீட்டிற்குப் போயிட்டா டி, நீ வா என் செல்லம் தானே" என்று அவளுக்கு ஐஸ் வைத்தாள் அவள் தாய்.
"இப்படி என்னைய மட்டுமே ஆல் டைம் ஃபோக்கஸில் வைச்சுட்டு, அவளைக்கோட்ட விட்டுருங்கம்மா நீங்க” என்ற படி வந்தாள் தாரா… அம்மாவிற்கு உதவுவதற்கு.
"ஏன்டி, இப்படி எல்லாம் பேசுற, அவள் என்ன பண்ணிட்டா, இப்படி எதற்கு எடுத்தாலும் அவளைக் குத்தம் சொல்லிட்டுச் சுத்தற" என்று கடிந்தத் தாயிடம்,
"அம்மா , அவள் நல்லதற்குத் தான் சொல்லறேன். உங்களுக்குப் புரியவில்லை என்றால் ஒன்றும் பண்ண முடியாது. அவள் எப்பவும் பரிட்சையில் என்னிடம் கேட்டு எழுதறாள் என்று சொன்னேன், பாவம் சொல்லிக்கொடு என்று சொன்னீங்க, நானும் சொல்லிக்கொடுத்தேன்.
அதுதான் பத்தாம் வகுப்பில் மதிப்பெண் கம்மி ஆகிருச்சு. எல்லாம் என்ன சொன்னீங்க, நன்றாகப் படிக்கறப் பிள்ளை இந்தத் தடவை ஏதோ மார்க் கம்மி ஆகிருச்சு, அதனால் பள்ளியிலும் அவள் கேட்ட க்ரூப் குடுத்துட்டாங்க ஆனால் காலேஐ் அப்படி இல்லை அம்மா.
இந்தப் பன்னிரண்டாம் வகுப்புத்தேர்வில், அவள் என்ன பண்ணி வச்சு இருக்கா என்று தெரியவில்லை, அப்பா கேட்டால் நீங்க தான் பேசணும், என்னை எல்லாம் கேட்டாருன்னா, இவ்வளவு வருஷமும் உங்க செல்லம் எப்படிப் பாஸானாள் என்று நான் சொல்ல வேண்டி வரும், அப்பறப் என்னிடம் கோபித்துக்கொள்ளக் கூடாது" என்றாள் தாரா.
"ஏன் பாப்பா இப்படிச் சொல்கிறாய், அவள் நல்ல மார்க் வாங்குவாள், நீ வேணுமென்றால் பாரு" என்றாள் புனிதா.
“அவள் ஆடின ஆட்டம் ஸ்கூலிலேயே தாங்க முடியாமல் போச்சு, இனி காலேஜ் வேற, என்னெனப் பண்ணப் போறாளோ என்ற பயமே எனக்குக் காலேஜ் போற அந்த ஆர்வத்தைக் குறைச்சுருச்சும்மா” என்று ஆதங்கப்பட்டாள்.
இவ்வளவு சேட்டைகளுக்குச் சொந்தக்காரி, தன் அத்தையின் ஸ்மார்ட் போனில் சமூக வலைத்தலத்தில் அவள் வகுப்புத்தோழனிடம் கருகும் வரையில் கடலை வறுத்துக்கொண்டிருந்தாள்.
தாரிகா.... என்று இரண்டு இதயத்தின் குறியீட்டினை அனுப்பி 'என் இதயம் அது நீ வாழும் இடம்' என்று அவளைச் சுகிப்பிக்கும் வார்த்தைகளை அள்ள வீசிக்கொண்டிருந்தான் ஒருத்தன்.
இப்படித் தன் அழகில் மயங்கித் தன் பின் சுற்றும் விடலைப் பையங்களை அலய விடுவது அவளுக்கும் நன்றாக இருந்தது. பருவ வயதின் தாக்கம் அப்படி என்ன சொல்ல.
"இந்தப்போனுல என்னத்தச் செய்வியோ? உங்க அம்மா பாரு அங்க கத்திட்டு இருப்பாள், நீ என்ன இங்க வந்து ஓபி அடிக்கிறாயா? தாரிகா" என்றார், தங்கம்
தங்கத்தின் வார்த்தைகளையெல்லாம் கேட்டப்படியே அங்கே வந்தான் மகேந்திர்ன.
மகேந்திரனுக்குத் தாரிகாவின் செய்கை எல்லாம் தெரியும். ஆனால் கண்டுக்கொள்ள மாட்டான். 'இந்த வயது அப்படி' என்று விட்டு விடுவான். ஆனால் தாரா அப்படி இல்லை என்பதும் அவனுக்குத் தெரிந்து இருந்தது.
மாமானின் பிள்ளைகள் இரண்டு பேரும் அழகாகா இருந்த போதும் கண்ணியமாக நடந்துக்கொண்டான். தன் தாயிக்கு எந்த அவப்பெயரும் வரக்கூடாது என்பதில் கவனமாக இருந்தான்.
அடைக்கலமாக வந்து இடத்தில் அனைத்தும் எனது என்று உரிமைக்கொண்டாட மனம் இல்லை அவனுக்கு. அவன் தொடங்கி இருக்கும் கட்டுமானப் பொருட்கள் விற்பனைக்கூடத்தை, அடுத்த அளவில் கொண்டு செல்லும் அவன் பயணதில் இந்த மாதிரியான சிந்தனைகளுக்கு நேரமில்லை.
“உணவு உண்ண வந்தவனிடம் பார்த்தாயாடா உன் மாமன் மகளை, அவள் அம்மாவை ஏமாற்றிவிட்டு, இங்க வந்து இந்த ஃபோனை நோண்டிட்டு இருக்காள்” என்று தங்கம் குற்றம் வாசித்தாள்.
"விடுங்கம்மா, இந்தக் காலத்தில் எல்லாம் அப்படித்தான். நீ சும்மா அவளை எதாவது சொல்லாட்டே இருக்காதே! அப்பறம் வருவதை நிறுத்திருவாள்" என்றான் மகேந்திரன்.
"இல்ல மகி அவள் நல்லதுக்குத் தான் சொல்லறேன். தன்னைச் சுற்றி என்ன நடக்குது தெரியாமல் எப்பொழுதும் ஒரு மாய உலகத்தில் இருப்பது போல அவள் சுத்திட்டு இருக்கா டா" என்றார் ஆதங்கமாக.
“எல்லாம் சரி ஆகிரும் அம்மா. காலேஜ் படிக்கப்போற, படிப்பு அவளை மாற்றி விடும்” என்று சொன்னவன் தானும் அதையே நம்பினான். அவள் படிப்பு அவளை நல்வழிப் படுத்திம் என்று.
ஆனால் விதி என்று ஒன்று இருக்கும் அல்லவா. நாம் நினைத்தெல்லாம் நடந்தால் அதற்கு என்ன வேலை.
மகேந்திரன் மாமான் வீடு பக்கத்தில் இருந்தாலும், தான் உண்டு, தன் வேலை உண்டு என்று இருப்பவன். அதனால் எதுவும் பார்க்கவில்லை, கேட்கவில்லை என்று விட்டு விடுவான். அது குடும்பத்திற்கு நல்லது என்று நினைத்தான்.
அன்னையிடமும் பல தடவைச் சொல்லி இருக்கின்றான். உங்கள் அண்ணன் வீட்டு விஷயத்தில் தேவை இல்லாமல் சென்று உங்கள் கருத்தைச் சொல்லதீர்கள். உங்களிடம் கேட்டால் சொன்னால் போதும் என்று. மகனின் பக்குவமானப் பேச்சில் இருக்கும் உண்மையை உணர்ந்த, தங்கமும் மகன் சொல்லைத் தட்டுவதில்லை.
இந்தக் காலத்தில் காதல் என்பது ரொம்பச் சாதாரணமாகி விட்டது. பேருந்து நிறுத்ததில் இளவட்டம் அடிக்கும் கூத்தை அவனும் பார்க்கின்றானே.
மகேந்திரன் வந்தவுடனே அங்கிருந்து மெதுவாகக் கிளம்பினாள் தாரிகா. தான் பயன்படுத்திய அனைத்தும் ஃபோனில் இருந்து அழித்தி விட்டவள். இதெல்லாம் தன் புத்திசாலித் தனமாகக் கருதினாள் தாரிகா. ஒரு நாள் நாம் பிடிபடுவோம் என்று அவள் நினைக்கவில்லை.
வேகமாக வீட்டிற்கு வந்தவள், "அம்மா, என்ன சமைத்து வைத்திருக்கீங்க" என்று சமையலறையில் பாத்திரங்களை உருட்டினாள்.
"என்னடி, பண்ணிட்டு இருந்த அத்தை வீட்டில்" என்று தாயின் விசாரிப்புகளை எல்லாம் விளையாட்டுதனமாகத் தவிர்த்தாள் தாரிகா. அவளின் குறும்பில் எல்லாம் மறக்கும் தாயை எப்படிப் புரிய வைக்க என்று தெரியவில்லை தாராவிற்கு.
விதி இதுவானால் எல்லாம் எதிர்கொள்ள வேண்டும் என்று மனதைத் திடப்படுத்தினாள். தன் உடன் ஒட்டிப்பிறந்தவளுக்காக எல்லாம் தாங்கும் தூண்னாக மாறிப்போனாள் தாரா.
இரவு உணவிற்கு வந்த கங்காதரன் " தாரா, எந்தக் கல்லூரியில் சேரணும் என்று யோசிச்சு வச்சு இருக்கீங்காளா? என்று இருவரையும் பார்த்துக்கேட்டார்.
"ரிசலட் வரட்டும் அப்பா" என்றாள் தாரா.
"தாரிகாவோ ஊரிலேயே மிகப்பெரிய கல்லூரியில் சேருவது தான் என் கனவு" என்று கூறினாள்.
"அதற்கு நிறைய ஃபீஸ் கட்ட வேண்டி இருக்கும் என்று கேள்விப் பட்டேனே தாரிகா" என்றார், கங்காதரன்.
"ஆமாம் அப்பா, ஆனால் நல்ல மார்க் வாங்கினால், கவுன்சிலங் மூலம் போனால் பணம் நம்ம, கட்டுப்பாட்டில் இருக்கும்" என்றாள் தாரா. மேலும் "அதற்குத் தான் ரிசல்ட் வரட்டும் என்று சொல்லறேன்" என்று தெளிவாகச் சொன்னாள் தன் தந்தைக்கு. அதற்கு என்ன செய்வேண்டும் எல்லாத் தகவல்களும் தன் தந்தைக்குச் சொல்லிக்கொடுத்தாள்.
தாரா , தந்தையிடம் சொல்லிக்கொண்டிருக்கும் தகவல்களை எல்லாம் கேட்டதும், தாரிகாவிற்கு மனதின் ஓரம் ஒரு பயம் எட்டிப்பார்த்தது.
'நான் பாஸாகிருவேனா? ஆண்டவா நான் பாஸானால் உனக்குத் தேங்காய் உடைக்கிறேன்' என்று ரெடிமேடாக ஒரு வேண்டுதலை வைத்தாள் கணபதிக்கு.
நம்மோட கடமையைச் சரிவரச் செய்தால் கடவுளின் அருள் என்றுமே நமக்குத் தானே.
அடுத்த நாள் ரிசல்டிற்காகக் காத்திருத்தனர் வீட்டில் இருக்கும் அனைவரும்.
இந்த முடிவுகள் எப்படி வரும் என்ற அனுமானம் மகேந்திரனுக்கு இருந்ததால் அவன் தன் கடைக்குச் சென்று விட்டான்.
தங்கம் தான் காலையிலேயே கோயில் சென்று தன் அண்ணன் மக்கள் இருவரும் நல்லவிதமாகத் தேர்ச்சிப் பெற வேண்டும் என்று வேண்டிக்கொண்டு பிராசாதத்தைக் கொண்டு வந்து அனைவருக்கும் கொடுத்தார்.
தாரா எப்பொழுதும் போல எந்தப் பதட்டமும் இல்லாமல் நிதானமாக இருந்தாள். தேர்வு எழுதும் வரைத்தான் அவள் போராடுவாள், எழுதி முடித்தப்பின் என்ன எழுதி இருக்கோமோ அதற்கான மதிப்பெண் நம்மை வந்து சேரும் எனபதில் தெளிவாக இருந்தாள்.
தாரிகா, பதட்டமாகவே இருந்தாள். இந்தத் தடவைக் கடந்த பத்தாம் வகுப்பின் முடிவுகளை விட நல்லவிதமான மதிப்பெண் வரவேண்டும் என்று இஷ்ட தெய்வங்களுக்கு எல்லாம் வேண்டினாள்.
மதிப்பெண் வந்தது. எப்பொழுதம் போன்றே தாரிகா, குறைவான மதிப்பெண் எடுத்துப் பாஸாகியிருந்தாள்.
அவளின் கல்லூரிக்கனவில் விரிசல் விழுந்தது. நினைத்த க்ரூப் கிடைக்கும் என்பது சந்தேகம் என்று கங்காதரன் முடிவுச்செய்தார். தாரா நல்ல மதிப்பெண் எடுத்துதிருந்தாள். அதற்கு அவள் எதிர்பார்த்தக் கல்லூரியில் பொறியியல் படிப்பிற்கான வகுப்புக் கிடைக்கும்.
மிகவும் சந்தோஷமான மனநிலையில் முழுவதுமாகக் கொண்டாட முடியாமல் தவிக்க வைத்தது பெற்றவர்களை. தாரிகாவால் என்ன முடியுமோ அந்த மதிப்பெண் எடுத்து இருந்தாள். அவளைக் குறைச்சொல்லவும் இல்லை.
பெற்றவர்களுக்குத் தன் பிள்ளைத் தேர்ச்சி அடைந்ததே பெரிய சந்தோஷம் என்று நினைத்தனர். தாரிகாவின் மதிப்பெண் அவர்களை எப்படித் தனித்தனித் கல்லூரியில் படிக்க வைக்க எனச் சிந்திக்கத் தொடங்கினர் பெற்றோர்.
பிறந்ததில் இருந்து பள்ளிப் படிப்பு வரை ஒரே பள்ளி, ஒரே வகுப்பு என்று படித்து வந்த இருவரும். இப்போது தனித்தனியாகப் படிக்கச்செல்ல வேண்டும் என்பதில் பயம் வந்தது பெற்றவர்களுக்கு. தாரிகாவை எப்படித் தனியாக அனுப்பவ என்று சிந்தித்தனர். தேர்ச்சி பற்றி அறிய ஃபோன் செய்த மகேந்திரனிடம் இதைப் பற்றிக் கேட்டார், கங்காதரன்.
"என்ன மகேந்திரா, பண்ணலாம் இப்போ தாரிகாவை வேறு காலேஜ் சேர்த்துவதா? உனக்கு என்ன தோன்றுகிறது சொல்லு" என்று கேட்டார் அவன் மாமன்.
அவர்கள் ஊரில் இருக்கும் பெரிய கல்லூரியின் பெயரைச் சொன்னவன்," இந்தக் காலேஜில் தாரிகாவை ஆர்ட்ஸில் சேர்த்திட்டு, தாராவிற்குப் பொறியியலில் சேர்த்தி விடுங்க மாமா, அப்பொழுது ஒரே காலேஜ் போவாங்க" என்றான் மகேந்திரன். தன் மாமனுக்குச் சுலபமாக ஆலோசனை வழங்கினான்.
"ம்ம் நீ சொல்லறதும் சரிதான் மருமகனே" என்றவர் கல்லூரியில் சேர்க்க வேண்டிய வேலைகளைத் தொடங்கினார்.
கல்லூரி வாழ்க்கையைத் திசைத்திருப்பும் இடமாக இருவருக்கும் அமையும் என்று கனவிலும் சிந்தித்து இருக்க மாட்டார்கள். காலம் கற்றுத் தரும் பாடத்தை வலிக்க வலிக்கக் கற்கப் போவது இரண்டு பேரில் யாரெனப் புதிரோடு அவர்கள் கல்லூரிப் பயணம் தொடங்கியது.
தொடரும்…