எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

எனக்குள் வந்து வீழ்ந்தவளே! - ரீரன்

Status
Not open for further replies.
அத்தியாயம் 1

மாடியில் நின்று கொண்டு, பால்கனி வழியாகப், பகலவனைக் கண்களால் பருகி கண் கொண்டு , காஃபியை வயிற்றுக்குக் கொடுத்துக் கொண்டிருந்தாள் முக்தா.

விரைவாகவே துயில் கலைந்து எழுந்து விடுபவள் தான்.

இரவு உடையை மாற்றும் நினைவு இன்றி , காஃபியின் மணமும், சுவையும் அவளைப் பிடித்து வைத்துக் கொண்டது.

"முகி!" என்ற தந்தையின் அழைப்பில், தலையைத் திரும்பினாள் அவர்புறம்.

"குட்மார்னிங்! இன்னைக்கு சீக்கிரம் போகனும் டா" என்று கனிவுடன் மகளிடம் கூறினார் நீலகண்டன்.

"ஏன் அப்பா?" என்றாள் அவரது செல்ல மகள்.

"மூர்த்தி தான் வர சொல்லி இருக்கான். போனா தான் தெரியும். நீ ஃப்ரெஷ் ஆகிடு" என்று கூறினார் தந்தை.

"ம்ம்! சரிங்க ப்பா"

"மறக்காமல் லன்ச் சாப்பிட்ருங்க! நான் கொடுத்து விட சொல்றேன்" என்கவும்,

"இல்லைடா. ஹோட்டலில் அரேன்ட்ஜ் செய்து இருக்கிறதா மூர்த்தி சொல்லி இருக்கான். நான் அவன் கூட தான் மதியம் சாப்பிடப் போறேன்" எனக் கூற,

"சாப்பிட்டுட்டு மெசேஜ் செய்திடுங்க அப்பா" என்று மட்டும் கூறி தந்தையை வழி அனுப்பினாள் முக்தா.

காலியானக் கோப்பையைக் கழுவப் போட்டவள், துவாலையை எடுத்துக் கொண்டு, குளித்து விட்டு வந்தாள்.

வேலையாட்களிடம் அதிகம் பேச மாட்டாள், அவர்கள் தங்களது வேலையைச் சரியாகச் செய்தாலே போதும் என்று உத்தரவிட்டு இருந்தாள் முக்தா.

காலையுணவு மேஜையில் தயாராகி இருக்க , நாளிதழைப் புரட்டிக் கொண்டு அதைக் கொறித்து முடித்தாள்.

மஸ்காராவைக் கொண்டு கண்களின் இமைகளை அழகாக தீட்டி முடித்தவள், அணிந்திருக்கும் உடையை ஆராய்ந்தாள்.

ஜீன்ஸூம் , டீ ஷர்ட்டும் அவளது உடலை மறைத்திருக்க, அதற்கேற்றாற் போல், அணிகலன்கள் அலங்கரித்திருந்தது அவளை.

பிங்க் வர்ண உதட்டுச் சாயத்தின் அளவைக் கொஞ்சம் தூக்கலாக்கிக் கொண்டு, வீட்டிலிருந்து காரில் கிளம்பினாள் முக்தா.

தோழிமார்களுடன் நேரத்தைச் செலவழிக்கத் தான் பயணித்துக் கொண்டிருந்தாள்.

உணவகம் ஒன்றில் குழுமியிருந்த நான்கு பெண்களும், ஐந்தாமவளுக்காகக் காத்திருந்தார்கள்.

"ஹேய்! முகியோட அப்பா நீலகண்டன் இருக்காருல்ல? அவரோட ஃப்ரண்ட் பையன் மஹதனைத் தான் அவ லவ் பண்ணிட்டு இருக்கிறா!" என்று லிஷா என்பவள் கூறிக் கொண்டு இருந்தாள்.

"மஹதனா? நானும் அவனைப் பத்திக் கேள்விப்பட்டிருக்கேன்" என்றாள் ஜியா.

"ஆனால், அவன் இவளைக் கண்டுக்கிறா மாதிரியே தெரியலை" என்று கூறினாள் ஹீமா.

"அதையும் சொல்லியாச்சு. அவ கேட்கிறாகவே இல்லை. கேட்டால், லவ்!" என்று சலித்துக் கொண்டாள் ஷீலா.

இப்படியாக, நான்கு பேரும் பிரித்து மேய்ந்து கொண்டிருந்த தோழியும் அங்கு வந்து சேர்ந்தாள்.

"என் கதை தான ஓடுது?" என்றபடி தன்னுடைய குளிர் கண்ணாடியைக் கழட்டி விட்டு, நாற்காலியில் அமர்ந்தாள் முக்தா.

"ஆமாம். எங்களுக்குப் பொய் சொல்ல அவசியமில்லை முகி!" என்று துடுக்காக கூறினாள் ஹீமா.

"அப்படியா? எனக்கும் உங்களோட அட்வைஸைக் கேட்கனும்னு எந்த கட்டாயமும் இல்லையே!" என்று அவள் பாணியிலேயே திருப்பிக் கொடுத்தாள்.

"இது ஒன்னும் பெருமை கிடையாது முகி!" என்று அவளைக் கடிந்து பேசினாள் லிஷா.

"உஃப்! ப்ளீஸ்! நான் ஹேப்பியா இருக்கலாம்னு வந்தால், வரிசையாக அட்வைஸைத் திணிக்கிறீங்களே!" என்று ஆற்றாமையுடன் கூறினாள் முக்தா.

"நாங்க சொல்றதை சொல்லிட்டோம் முகி! இதுக்கும் மேல் நீ ட்ரை பண்றது வேஸ்ட்!" என்று அடித்துச் சொன்னாள் ஜியா.

"அப்படியே இருந்துட்டுப் போகட்டும். இன்னொரு தடவை அசிங்கப்படுத்துற மாதிரி பேசினால், நம்ம ஃப்ரண்ட்ஷிப் கட் ஆயிடும். பாத்துக்கோங்க!" என்ற முடிவுடன் அவள் கூறி விடவும்,

"என்னமோ போ முகி. நாங்க சொல்றது இப்போ புரியாது. பட்டுத் தெரிஞ்சுக்கோ!" என்றவாறே பேச்சை மாற்றி விட்டனர் மற்ற நால்வரும்.

அதற்குப் பிறகு, தங்களுக்கான உணவுகளை வரவழைத்து உண்டனர்.

"அப்படி மஹதன் உன்னை ஹர்ட் பண்ணினால், தயங்காமல் எங்ககிட்ட வந்து பேசு முகி! ஈகோ பார்த்துட்டு வராமல் இருந்துடாத!" என்று அறிவுரை வழங்கினர் அவளது தோழிகள்.

"அப்படி சொன்னால் மட்டும், மனசுக் கஷ்டப்படுறா மாதிரி தான பேசுவீங்க!" என்று ஏளனமாக கேட்டாள் முக்தா.

"நாங்க அந்த அளவுக்குக் கேவலமானவங்க இல்லை. இப்போ நீ தான் எங்களைக் கஷ்டப்படுத்திட்டே. இனிமேல் நாம் மீட் பண்ண வேண்டாம்" என்று காயம்பட்டவர்கள் அங்கிருக்கவும், அவளிடம் நின்று பேசவும் பிடிக்காமல் வெளியேறினர்.

தன்னுடைய நான்கு தோழிகளும் பாதியிலேயே கிளம்பி விட்டதைக் கண்டு, தொய்ந்து போனாள் முக்தா.

அவளுக்குள் இருந்த இறுமாப்பு நால்வரையும் தடுத்து நிறுத்த விடவில்லை.

அமைதியாக வீட்டிற்குச் சென்று, தந்தைக்குத் தான் செல்பேசியில் அழைப்பு விடுத்தாள்.

"முகி" என்ற தந்தையின் விளிப்பைக் கேட்டதும், எங்கிருந்து தான் புத்துணர்வு வந்ததோ!

"அப்பா! ஆஃபீஸில் இருக்கீங்களா?" என்று வினவினாள் முக்தா.

"ஆமா டா. என்ன விஷயம்?"

"வொர்க் முடிஞ்சு எப்போ வீட்டுக்கு வருவீங்கப்பா?" என்றாள் மகள்.

"வர நைட் ஆகுமே. ஈவ்னிங் மூர்த்தியைப் பார்த்துப் பேசனும்" என்று கூறினார் நீலகண்டன்.

"ஓகே ப்பா" என்றவள், தந்தையிடம் எதுவும் சொல்லாமல், சாதாரணமாகப் பேசி விட்டு வைத்தாள் முக்தா.

தன்னைச் சுத்தப்படுத்திக் கொண்டு, சமையலறைக்குள் போய், அங்கிருந்த வேலையாட்களிடம்,

"எல்லாரும் வெளியே போங்க. நான் காஃபி போடனும்" என்று உத்தரவிட்டாள்.

இந்த வீட்டில் இதெல்லாம் பழக்கம் தான். முக்தா தன் மனதை நிலைப்படுத்திக் கொள்ளச் செய்யும் ஒரு சில வேலைகளில் இதுவும் ஒன்று.

அவளுக்குச் சமையல் நன்றாகவே வரும். மேற்கத்திய உணவுகள் மட்டுமில்லாமல், இந்திய உணவுகளும் அத்துப்படி.

காபியைப் பருகிக் கொண்டவள், மஹதனுக்குச் செல்பேசியில் அழைத்தாள்.ஆனால், வழக்கம் போல, அவன் அதை ஏற்றுப் பேசவில்லை.

முக்தாவின் தோழிகள் சரியான சமயத்தில் தான் அவளுக்கு அறிவுரை கூறியுள்ளனர். ஆனால் அதைப் பின்பற்றுவது அவளுடைய தனிப்பட்ட விருப்பம் அல்லவா! இப்போதே அவர்கள் கூறியதைச் செவிமடுத்து இருந்தால், எதிர்காலத்தில் படப் போகும் அவமானங்களில் இருந்து , முக்தா தன்னைக் காப்பாற்றிக் கொண்டிருக்கலாம்.

தாயின் வளர்ப்பு இல்லை தான்! தந்தையும் சுதந்திரத்தை அளவுக்கதிகமாக கொடுத்திருக்கிறார் தான். ஆனாலும், தனக்குரிய கட்டுப்பாடுகள் என சிலதை வகுத்துக் கொண்டுள்ளாள்.

'ஸ்டேட்டஸ்' - பணம் பிரதானமாக இருக்கும் பட்சத்தில், நமக்குத் தான் மற்றவர்கள் வளைந்து கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் அவளுக்குள் வேரூன்றி இருந்தது.

அதனால், மற்றவரிடம் பேசக் கூடாத ஒரு சிலவற்றைப் பேசிக் காயப்படுத்தி விடுவாள் முக்தா.

இந்தக் குணங்கள் நல்லது என ஒருநாளும் சொல்லவில்லை.
மாற்றிக் கொள்ளும் தருணம் கட்டாயம் வர வேண்டும். அப்படி வரும் போது, என்று சில ஞானோதயங்களும் முக்தாவிற்கு அவள் கேட்காமலேயே கிடைக்கப்படும்.

அன்றைய சமூக வலைதளங்களை ஆராய்ந்தவாறே பொழுதைக் கழித்தாள் முக்தா.

இந்தக் கதையின் நாயகன் கிஷான் அல்லவா! அவனுடைய அறிமுகத்தைப் பற்றிப் பார்ப்போம்.

கிஷானுடைய தந்தை காஞ்சியப்பன் மஹதனின் அப்பா திருமூர்த்தியைப் போல வசதி படைத்தவர் தான்.
ஆனாலும் , தொழிலில் அபார வளர்ச்சி அடைந்த போதும் , அதற்கேற்ப குணத்தை மாற்றிக் கொள்ளாமல் , முன்னர் இருந்த அதே நிலையிலேயே இன்றும் அவரது துறையில் வெற்றிகரமாக கோலோச்சிக் கொண்டிருக்கிறார்.

அவரது துணைவி சித்ரலேகாவும் கணவனின் தொழிலிலும் , மகனின் தொழிலிலும் பங்குதாரராக இருக்கிறார்.

"நீயும், நானும் பார்ட்னர்ஸ்ன்னு தான் பேரு. ஆனா, நான் மட்டும் தான், ரெகுலராக இந்த ஹோட்டலுக்கு வந்துட்டு இருக்கேன்!" என்று குறைபாட்டான் கிஷான்.

"அதனால் என்னடா? நானும் வரனும்னா சொல்லு! தினமும் வந்துடறேன்" என்று நண்பனிடம் கூறினான் மஹதன்.

"தினமும் வர வேண்டாம். எப்போதாவது வரலாமே டா? அப்படியே என்கூட பேசிட்டுப் போன மாதிரியும் இருக்குமே!"

"ம்ம். இது ஓகே. வாரத்துக்கு ஒரு தடவை வர்றேன் கிஷான். அதுக்கு மேல வர சொல்லாத. புரிஞ்சுக்கோ" என்க,

"சரி மஹத்! நீ வந்து ஹோட்டலைச் சரி பார்த்துட்டுத் போயிடு. எனக்கும் திருப்தியாக இருக்கும்"

தங்கும் விடுதி ஒன்றில் இருவரும் பங்குதாரர்கள் தான்.

அதில், கிஷான் மட்டும் நாள் தவறாமல், விடுதிக்கு வந்து, தனது முதலாளித்துவத்தைக் காட்டிக் கொள்வான். நேர்மையாகத் தான் ஒவ்வொன்றையும் அவன் நடத்துவதால், இன்னொரு உரிமையாளனான மஹதனுக்கு அதிக வேலையே இருக்காது. அதனால், விடுதியை எட்டிக் கூடப் பார்க்காமல் இருக்கிறான்.

அவன் அப்படியே இருந்து விடுவது முறையன்று, என அடிக்கடி வந்து மேற்பார்வையிட்டுச் செல்லுமாறு வலியுறுத்திக் கொண்டிருக்கிறான் கிஷான்.

"உங்கிட்ட இன்னொரு விஷயமும் பேசனும்டா!" எனவும்,

"சொல்லு மஹத்?" என்று அதைக் கேட்கத் தயாரானான் தோழன்.

"நீலகண்டன் சாரோட பொண்ணு முக்தாவை உனக்குத் தெரியும் தான?" என்று கேட்டான்.

"ம்ஹ்ம்! தெரியுமே! அவங்களைப் பத்தி நீயே சொல்லி இருக்கியே! அவரே எனக்கு இன்ட்ரோ பண்ணிருக்காரே!" என்றான் கிஷான்.

"அந்தப் பொண்ணுக்கு என் மேல் லவ் இன்ட்ரெஸ்ட்!" எனக் கூறவும்,

"உனக்கு ஓகேன்னா அக்சப்ட் பண்ணு" என்று இயல்பாக கூறினான்.

"இல்லையே டா. அங்கிளோட பொண்ணு, ஃப்ரண்ட்ஷிப் மெயின்டெய்ன் பண்றதுக்கு எனக்கு இஷ்டம் தான். காதல்ன்னு யோசிக்கலையே" என்று தன் எண்ணத்தைக் கூறி விட்டான் மஹதன்.

"அதை அவங்ககிட்ட சொல்லிட்டியா?"

"எப்பவோ சொல்லிட்டேன். மாறுவ, என் மேல் லவ் வரும்னு வெயிட் பண்றாங்க"

"ஓஹ்! நீயும் மாறிடும் போலவே?" எனக் கேட்கவும் மறக்கவில்லை கிஷான்.

"என்ன மாறனும்? அவங்க புரபோஸ் செய்ததை, நான் குறை சொல்லலை. எனக்கும் இஷ்டம் இல்லை. அப்பறமும் காத்திருக்கிற அளவுக்கு நான் அவ்ளோ பெரிய அழகன் கிடையாதே!"

"நீ அழகன்னுப் பார்த்து தான் அவங்க லவ் பண்ணாங்கன்னு உன்கிட்ட சொன்னாங்களா? சம்திங் உன்னோட கேரக்டர் பிடிச்சு இருக்கலாம். அதனால் லவ் வந்திருக்கலாம்!" என்று புரிய வைத்தான் கிஷான்.

"கண்டிப்பாக இருக்கும். நான் அதை மறுக்கலைடா. இப்போ டைரக்ட் ஆக சொன்ன பிறகும், எதிர்காலத்தில் நடக்கும்னு, காத்திருக்கிறது முட்டாள்தனம் தான?" என்று வினவினான் மஹதன்.

"ஆமாம். நீ நம்பிக்கை கொடுக்காமல், இப்படி வெளிப்படையாகச் சொன்னதே போதும். நீ அவங்களை ஏமாத்தலை. முக்தாவும் புரிஞ்சு, தன்னை மாத்திக்கட்டும்"

தங்கும் விடுதியில் செய்ய வேண்டிய எதிர்காலத் திட்டங்களைச் பற்றி விரிவாகப் பேசி விட்டுக் கிளம்பினர் இருவரும்.

- தொடரும்
 
அத்தியாயம் 2

சுற்றியிருந்த மற்றவர்களும் திருமூர்த்தியின் மேலிருந்த விசுவாசத்தில் அவர் கூறியதை நம்பி விட்டனர்.

அவரும் தன் கம்பெனியில் முக்கியப் பதவிகளில் வகிப்பவர்களை ஏமாற்றும் நோக்கத்தில் செயல்படவில்லை.

தரம் நன்றாக இருக்கும் பொருளைத் தான், தயாரிக்கும் யோசனையை முன் வைத்திருந்தார் திருமூர்த்தி.

அந்த மீட்டிங்கின் முதன்மைப் பேச்சே அதைப் பற்றியது தான்!

"எங்களுக்கும் சம்மதம் சார்!" என்று நீலகண்டனைச் சேர்த்து, அங்கிருந்த மற்ற உயர் பணியில் இருப்பவர்களும் ஒப்புக் கொண்டனர்.

மதிய உணவுக்கான வேளை வந்ததும், சாப்பாடு தன் இருப்பிடத்திற்கு வருவதற்கு முன்னாலேயே, தான் உணவுண்ணப் போவதைக் குறுஞ்செய்தியாக மகளுக்கு அனுப்பி வைத்து விட்டார் நீலகண்டன்.

"மூர்த்தி அங்கிள் கூட தான லன்ச்ன்னு சொன்னாரு" என்றபடி, யோசனையில் இருந்தவளுடைய செல்பேசியில் குறுஞ்செய்தி வந்தது.

மதிய உணவை எடுத்துக் கொண்டதாக தந்தை தான், அதை அனுப்பியிருந்தார். அந்த குறுஞ்செய்திக்குப் பதில் அனுப்பியவளுக்கு , வேறு என்னப் பொழுதுபோக்கு இருக்கிறது செய்வதற்கு? உறக்கத்தில் ஆழ்ந்து விட்டாள் முக்தா.

அதற்குப் பின்னர் தான், வெளி வேலைகள் முடிந்து, வீட்டிற்கு வந்து, மகளின் உறக்கத்தை உறுதி செய்து கொண்டு, தன்னறைக்குள் நுழைந்து கொண்டார் நீலகண்டன்.

தெளிவாகப் பேசியப் பிறகு ஏன் அலைப்புறுகிறாய்? முக்தா புரிந்து கொள்வாள் என்றெல்லாம் கூறிய இன்னும் கொஞ்ச நாளில் முக்தாவின் நிலைக்குத், தான் மாறப் போகிறோம் என்பது கிஷானுக்குத் தெரியவில்லை.

அவளது புறம் அல்லது அக அழகு அவனை ஈர்க்கப் போகிறது, அதற்காக, தான் வருடக்கணக்கில் காத்திருக்கப் போகிறோம் என்பதும் அவன் யோசித்துப் பார்க்காத ஒன்று.

இயல்பிலேயே கலகலப்பும், பொறுமை குணமும் பெற்றதால் தான் , இன்று வரை மஹதனுக்கு உற்றத் தோழனாக நிலைத்து இருக்கிறான் கிஷான்.

மடிக்கணினியின் விசையைத் தட்டிக் கொண்டவனுக்குள் திடீரென்று ஒரு நினைவு. அவன் வெகு விரைவில் முக்தாவை நேரில் சந்திப்பதாக இருந்தது அதன் சாராம்சம்.

"இப்படியெல்லாம் தோன்ற அளவுக்கு ரொம்ப அடிக்ட் ஆன மாதிரி இருக்கே!" என்று பெண்ணவளைப் பற்றிய‌ யோசனையைத் தள்ளி வைத்து விட்டான் கிஷான்.

அடுத்த வந்த நாட்களில், கிஷானுக்கும், மஹதனுக்கும் தங்கும் விடுதியில் செய்த மாற்றங்களைச் சரி பார்க்கவே நேரம் போதாமல் இருந்தது.

அனைத்தையும் முடித்துப் பெருமூச்சு விட்டுக் கொண்டார்கள் நண்பர்கள்.

அலுவலகத்தில் மஹதனின் அறையில் பேசிக் கொண்டிருந்த கிஷான்,

"இங்கேயும் சேஞ்சஸ் பண்ணனும் போலயே?" என்று நண்பனின் தங்கும் விடுதியையும் மாற்றி அமைக்க வேண்டும் என வலியுறுத்திக் கொண்டிருந்தான்.

"யெஸ் கிஷான்! அதுக்கு முன்னாடி இங்கிருக்கிற ஃப்ரண்ட் ஆஃபீஸ் ரிசப்ஷனிஸ்ட் வேலைக்குப் பொறுப்பாக ஒரு ஆளைத் தேர்ந்தெடுக்கனும்" என்றான் மஹதன்.

"இதுக்கு முன்னாடி வேலை பார்த்தவங்க?"

"அந்தப் பொண்ணு சரியாக வேலைப் பார்க்கிறது இல்லைன்னுக் கம்ப்ளைன்ட்ஸ். ஃப்ரஷரைத் தான் வேலைக்கு எடுக்கனும்" என்று பதிலளித்தான்.

"ஏன் அப்படி?"

"ஆமாம். இப்போ இருக்கிறவங்க அனுபவசாலி தான். ஆனால் வேலையில் கவனம் இல்ல. விருந்தாளிகள் கிட்ட இருந்து நிறைய புகார்கள் வருதுடா"

"சரி. நியூஸ் பேப்பரில் விளம்பரம் கொடுத்துடு. இல்லைன்னா எங்கிட்ட சொல்லு, நான் பாத்துக்கிறேன்" என்று கூறினான் கிஷான்.

"விளம்பரம் கொடுத்துப் பார்ப்போம்" என்று கூறிக் கொண்டிருக்கும் போது, அங்கிருந்த லேண்ட்லைன் ஒலித்தது.

"சார் ! உங்களைப் பார்க்க முக்தா மேடம் வந்திருக்காங்க" என்று அறிவித்தாள் முன் அலுவலக வரவேற்பு வேலையில் இருக்கும் பெண்.

"என்ன விஷயம்னு கேளுங்க?" என்றதும்,

அங்கே, அவன் சொன்னது போல முக்தாவிடம் கேள்வியைக் கேட்டாள் அப்பெண்.

"நான் அவரோட க்ளோஸ் ஃப்ரண்ட். பர்சனல் ஆகத் தான் பேசனும். உங்கிட்ட சொல்ல முடியாத விஷயம்னு சொல்லு" என்று கட்டளையைப் பிறப்பித்து விடவும்,

அதை அப்படியே அவனுக்குக் கடத்தினாள் வரவேற்பில் இருந்தப் பெண்.

"ஓகே. வர சொல்லு" என்று அழைப்பை வைத்து விட்டான்.

அவனுடைய முகத்தில் சலிப்புத் தெரியவும்,"யார் வர்றா மஹத்?" என்று கேட்டான் கிஷான்.

"முகி தான்" என்றான்.

"அவங்களா?" என இவனுடைய ஆச்சரியத்தைக் கண்டு, குழப்பத்துடன்,

"ஆமாம். அதில், உனக்கு ஏன் இவ்ளோ ஆச்சரியம்?" என்று கேட்டான்.

"இல்லையில்லை. சும்மா தான். நானும் அவங்களைப் பார்த்து ரொம்ப நாளாச்சே! அதான்" என்று வாய்க்கு வந்ததை உளறி விட்டு அவளின் வரவிற்காக வாயிலைப் பார்த்துக் கொண்டு இருந்தான் கிஷான்.

எதையும் நொடியில் கண்டுபிடித்து விடும் மஹதனுக்கு, தோழனின் இந்த மாற்றம் மட்டும் தெரியாமல் போகுமோ? அவனே வாய் திறக்கட்டும் என்று விட்டு விட்டான்.

அதற்குள், அலுவலக அறைக் கதவைத் தட்டி விட்டு, மெத்தனமாக வந்து நின்றவளை மேலிருந்து , கீழாக ஆராய்ந்தான் கிஷான்.

"ஹாய் மஹத்!" என்ற அவளது மிகுந்த மகிழ்ச்சி இவனுக்குள் நிறைவைக் கொடுத்தது.

இந்தக் காரணத்தினால் தான், முக்தா தன்னை ஈர்க்கிறாளோ? என்று தோன்றியது கிஷானுக்கு.

ஆனால், உணர்ச்சியற்ற முகத்துடன் அவளை வரவேற்றான் மஹதன்.

"என்ன முக்தா?"

அவன் கேட்டதும், கிஷான் அங்கு இருப்பதைப் பார்த்தவள்,

"உன்கிட்டப் பேசனும்" என்று தயக்கத்துடன் கூறினாள்.

"நான் வெளியே‌ இருக்கேன்" என்று நாகரீகமாக ஒதுங்கிச் சென்று விட்டான்.

அவன் வெளியேறியதும்,

"நானும் நீ மாறுவன்னு நினைச்சுட்டு இருக்கேன் மஹத்!"

"இதோ பாரு முகி. அதெல்லாம் நடக்காத காரியம்! நீ தான் மாறனும்" என்று திட்டவட்டமாக கூறினான்.

வெளியே காத்திருந்தவனின் மனநிலை தான் என்னவென்றே புரியாத ஒன்றாகிப் போனது.

அவளுடைய கெஞ்சலைப் பார்க்கத் தேவையிராது என்று தான் வந்து விட்டான் கிஷான்.

அந்த அளவிற்குத் தனக்கு முக்தாவின் மேல் காதலா? அவனது மூளையை யோசனைகள் சூழ்ந்து விட்டது.

"யோசிச்சு முடிவு பண்ணு மஹத்! உன் ஃப்ரண்ட் வேற வெளியே காத்திருப்பாரே.நானும் கிளம்பறேன்"

அவள் சென்றதே போதும் என நாற்காலியில் அமர்ந்து விட்டான் மஹதன்.

கதவைத் திறந்து கொண்டு வந்தவளை விழிகளை உருட்டிப் பார்த்து,

"ஹாய் முக்தா!" என்றான்.

அவனை ஏறிட்டுப் பார்த்தவளோ,"கிஷான் தான?" எனப் பேச்சுக் கொடுத்தாள்.

"யெஸ்!"

தன்னை ஞாபகம் வைத்திருக்கிறாள் என்ற நிறைவு அவனுக்கு.

"என்ன?"

வேண்டாவெறுப்பு மிகுந்த கேள்வி தான் வெளி வந்தது அவளிடமிருந்து.

"ஒரு விஷயமும் இல்லை. சும்மா ஹாய் சொன்னேன்" என்று குறும்புடன் கூறியவனிடம்,

"அப்படியா? பை!" என்று பதில் கூறி விட்டுப் புறப்பட்டாள் முக்தா.

குறுஞ்சிரிப்புடன் அறைக்குள் புகுந்தான் கிஷான்.

கடுகடுத்த முகத்துடன் அவனிடம்,
"அப்பப்போ இங்கேயும் வந்துடறா?" என்று குறைபாட்டான் மஹதன்.

அதைப் புன்னகையுடன் கேட்டுக் கொண்ட கிஷானுக்கு வேறு ஒன்றும் சொல்லத் தோன்றவில்லை. ஆனால், அவனது மனமோ முக்தாவை நினைத்து, நொடித்துப் போயிருந்தது.

தந்தைக்கு முன்னர் வீட்டிலிருக்கும் முக்தாவை, இன்றோ நீலகண்டன் தான் வரவேற்றார்.

"இவ்ளோ சீக்கிரம் வந்துட்டீங்களே அப்பா?" என்று ஆச்சரியமாக கேட்டாள் மகள்.

"ஆமாம் முகி.மஹதனைப் பார்த்துட்டு வந்துட்டியா?" என்று தான் ஆரம்பமானது அவர்களது பேச்சு வார்த்தை.

அதில், காயப்பட்ட மனதுடன்,"ம்ஹ்ம்… பார்த்துப் பேசிட்டு வந்துட்டேன் ப்பா" என்றாள் முக்தா.

"எப்பவும் போல தான?" எனக் கேட்டார் தந்தை.

"ஆமாம் ப்பா. அதுனால என்ன இப்போ? நீங்களும் மூர்த்தி அங்கிள் கிட்ட எனக்காகப் பேசுங்க"

"நான் உனக்காகப் பேசத் தயார் முகி. ஆனால் மஹதனும், அவனோட ஃபேமிலியும் சம்மதிக்கிற வரைக்கும் நீ ஒன்னுப் பண்ணனும்" என்று கூறினார் நீலகண்டன்.

"என்னப் பண்ணனும் ப்பா?" என வேகமாக கேட்டாள்.

" கொஞ்ச நாளைக்கு ஃப்ரண்ட்ஸோட ஜாலியாக டூர் போயிட்டு வா. அதுக்குள்ளே பேசிடறேன்" என்று உறுதியாக கூறினார் அவளுடைய தந்தை.

"டூரா? நீங்க தனியாக இருப்பீங்களே ப்பா?" என்று பதறினாள் முக்தா.

"உன்னை விட்டு எப்படி பிரிஞ்சி இருப்பேன்? அது தான் கஷ்டம். மத்தபடி, புதுப்புது ஐடியாஸ் கொட்டிக் கிடக்கிறதால், வேலையில் மூழ்கிட்டாப் போச்சு" என்று பரிவாகப் பேசினார் நீலகண்டன்.

"எனக்கும் அதே ஃபீல் இருக்குமே ப்பா! அப்பறம், என் ஃப்ரண்ட்ஸ் இப்போ என் மேல் கோபமாக இருக்காங்க!" என்று சோகமாக கூறிய மகளிடம்,

"அவங்க இல்லைன்னா வேற ஃப்ரண்ட்ஸ் இல்லையா? நம்பிக்கையாக இருக்கிற ஃப்ரண்ட்ஸோட போயிட்டு வா முகி" என ஆறுதல் கூறினார்.

"சரி அப்பா"

தோழிகளும் தன்னுடன் பேசுவதைக் குறைத்துக் கொண்டனர் என்பது முக்தாவின் மனதை வெகுவாக உலுக்கியது. இன்று மஹதனும் தன்னைச் சிறப்பாக கவனித்து விட்டான். இவ்விரண்டையும் தாங்கிக் கொண்டு, மறக்க பிரயத்தனங்கள் செய்ய வேண்டும் என்பதால், அது வெளிநாட்டுக்குச் சென்றால் தான் முடியும் என்று! தந்தை சொன்னதை ஒப்புக் கொண்டாள் முக்தா.

அதற்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது, அவ்விடயம் மஹதன் காதுக்குப் போக, யதேச்சையாகப் பேசியதில் கிஷானுக்கும் தெரிந்து விட்டது.

- தொடரும்
 
Status
Not open for further replies.
Top