6) ஆள் மறாட்டம்
நேத்ரா பல்லவி இருவரும் விஜியின் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர்....
விஜி வீட்டிலேயே நிச்சயதார்த்தம் நடைபெறுகிறது...
வீட்டிற்கு பின்னால் பெரிய தோட்டம் பழைய தொண்ணூறுகளில் வரும் பார்ட்டி வீடு போல் இருக்கும் ...
அழகாக அங்கேயே ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தது அப்பொழுது விஜியின் தாயார் இருவரையும் வரவேற்றார்..
என்னமா நீங்க இவ்வளவு லேட்டா வர்றீங்க அவ ரொம்ப கோவமா இருக்கா ரூம்ல தான் இருக்கா போய் பாருங்க...
இருவரும் தயங்கிக் கொண்டே செல்ல அங்கே பத்திரகாளி போல் கோபமாக அமர்ந்து கொண்டிருந்தாள் விஜி...
இருவரும் ஒரு திட்டம் போட்டனர் அமைதியாக பேசினால் இவளிடம் வேலைக்காவாது என்று என்று சத்தமிட்டுக் கொண்டே அவளை கட்டி அணைத்துக்கொண்டு எப்படியோ ஒரு வழியாக அவளை சமாதனம் செய்து விட்டனர்...
உங்க ரெண்டு பேருக்கும் எங்கேயாவது அறிவு இருக்கா நான் என்ன சொன்னேன்...
நிச்சயதார்த்தத்துக்கு ரெண்டு நாள் முன்னாடி நீங்க என்னோட வீட்ல தான் இருக்கணும் அப்படின்னு சொன்னேன் ஆனா நீங்க இப்ப வரிங்க...
விஜி...
கோச்சிக்காத எங்களுடைய காலேஜ்ல நேத்துதான் ரிசல்ட்ஸ் அனோன்ஸ் பண்ணாங்க அதனால்தான் வர முடியாம போச்சு
இன்னைக்கு தெரிஞ்சவங்க வீட்டுக்கு நான் போக வேண்டிய வேலை வந்தது இல்ல ஏன்னா அவங்க ரொம்ப புலம்பித் தள்ளுவாங்க...
மன்னிச்சிடு விஜி
இன்னும் நேரம் சாயந்திரம் தானே என்கேஜ்மென்ட் இப்ப எல்லாம் உன் கூட தான் இருக்கப் போறோம் அப்புறம் என்ன...
சரி சரி உங்களை மன்னிச்சிட்டேன் நேத்ரா நீ கேட்ட மாதிரி உன்னோட பிளவுஸ் கூட அழகா டிசைன் செய்து கொடுத்திருக்காங்க இந்தா என்று புடவையும் பிளவுஸ் கொடுக்க...
ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் டீ இப்ப இருக்குற ஃபிரண்ட்ஸ் வெறும் கல்யாணத்துக்கு மட்டும் இன்வைட் பண்ணுவாங்க ஆனா நீ மட்டும்தான் எங்கேஜிமெண்ட் கே இவ்வளவு சூப்பரான சாரி எடுத்துக் கொடுத்து இருக்க..
நேத்ரா நாங்க உனக்கு செய்யாத யாருக்கு செய்யப்போறோம்..
அதுவும் உங்க அப்பாவும் என்னோட வீட்டுக்காரர் எவ்வளவு நல்ல நண்பர்கள்..
அம்மா அப்பா இல்லாம நீங்க ரெண்டு பேரும் எவ்ளோ கஷ்டப்பட்டு இருப்பீங்க உங்களுக்காக செய்யாமல் யாருக்காக செய்யப் போறோம்..
விஜி பல்லவிக்கும் புடவை எடுத்து இருக்கோமே அது கொடு என்று விஜியின் தாயார் சொல்ல...
அட மறந்தே போயிட்டேன் பல்லவி உனக்கு லைட் கலர் ரொம்ப பிடிக்கும் லா அதனால் தான் பீச் கலர்ல சாரி..
பல்லவி மிகவும் மகிழ்ச்சி அடைந்தாள்
எல்லாம் சரி ஆண்ட்டி ...
இன்னிக்கு எங்கேஜ்மென்ட் ஓகே ஆனா இதுக்கு எல்லாம் சொந்தக்காரங்களும் இப்பவே வந்துட்டாங்க...
அடிப்பாவி நீ எல்லாம் என்னோட ஃப்ரண்டா இன்னைக்கு எங்கேஜிமெண்ட் ஆனால் நாளை மறுநாள் எனக்கு கல்யாணம் அத மறந்துட்ட...
அட ஆமாம்ல இதை நாம் மறந்தே போயிட்டேன் என்று பல்லவி நாக்கை கடித்துக் கொள்ள...
அது ஒண்ணும் இல்ல மாப்பிள வீட்ல இதான் வழக்கம் நிச்சயதார்த்தம் அடுத்த ரெண்டாவது நாள் கல்யாணம் சீக்கிரமா எல்லாம் முடியும் அதனால் தான் அடிக்கடி சொந்தக்காரங்க வர முடியாது அதனால் தான் எல்லாரும் வந்துட்டாங்க நிச்சயதார்த்தம் இங்க கார்டன்ல கல்யாணம் கோவிலில்...
இதெல்லாம் கேக்குறதுக்கு புதுசா இருக்கு இல்ல நேத்ரா என்று பல்லவி சொல்ல..
நேத்ராவும் ஆமா இதெல்லாம் கொஞ்சம் புதுசு தான்...
4 மணிநேரம் தோழிகள் அரட்டை களும் அப்படியே விஜி கையில் மெஹந்தி யும் போடப்பட்டு விட்டது...
அனைவரும் தயாராகினர்..
பட்டு சேலையில் நிச்சயதார்த்த பெண் விஜி அழகாக ஜொலித்தாள்...
?????????
நேத்ரா சிம்பிள் அலங்காரத்தில் திடமான அழகுடன் காண்பவரை கவர செய்தாள்...
?????
பல்லவி லைட் நிற புடவையில் தேவதையாக இருந்தாள்..
????????
அங்கே ஏற்கனவே மாப்பிள்ளை வீட்டார் வந்து சடங்கு நடைபெற்றுக் கொண்டிருந்தது பெண்ணை அழைத்து வாருங்கள் என்று ஐயர் சொன்னவுடன் மூவரும் வந்தனர்...
அங்கே மாப்பிள்ளை யுவராஜ் தன்னவளை பார்த்து கொஞ்சம் அசந்து போனான்...
ஐயர் சொல்ல சொல்ல இருவரும் பூஜைகள் செய்து முடிக்க இரு வீட்டாரும் வழக்கப்படி தட்டை மாற்றிக்கொண்டார்கள்...
திருமணத்திற்கு வீட்டில் ஏற்பாடு நடந்துகொண்டிருந்தது...
விஜி நேத்ரா பல்லவி மூவரும் அறைக்கு வந்து வேறு உடைக்கு மாறி சிறுது நேரம் இளைப்பாறினர்..
எப்பா...
முடியலடி என்னடி இத்தன பேர் வந்து நான் உனக்கு மாமா
நான் உனக்கு தாத்தா அப்படின்னு சொல்றாங்க ஆனா எப்படி ஞாபகம் இருக்கும் இத்தனை பேரையும்....
நேத்ரா..
உனக்கு இதைப் பத்தி தெரியாது இந்த குடும்பம் அப்படித்தான் ரொம்ப பெருசு.. நீ கல்யாணம் பண்ணிக்க போற வீட்டில் வேணா பாரு நிறைய பேர் இருக்க போறாங்க என்று விஜி கேலியாக சொல்ல..
அதுவும் உண்மைதான் நானும் பல்லவியும் இதுவரைக்கும் இவ்வளவு சொந்தகாரங்கல ஒரே இடத்தில் பார்த்தது கிடையாது அதுவும் அம்மா அப்பாக்கு ஊர் தான் எல்லாமே இவங்க ரெண்டு பேரும் காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டதால
அந்த ஊர் இவங்களை ஏத்துக்கல அதனால் நாங்க இங்கேயே செட்டில் இப்போ அம்மா அப்பா இல்லை இனி எனக்கு யாரு என்று கண்களில் கண்ணீருடன் பேச...
விஜி அவளை அணைத்துக்கொண்டு சமாதானம் செய்து வைத்தால் பிறகு இங்கே இருந்தால் அதை ஞாபகம் என்பதால் நேத்ரா சிறிது நேரம் கார்டனுக்கு சென்று வருகிறேன் என்று அங்கிருந்து சென்றுவிட்டாள்..
அறையில் பல்லவி விஜி இருவரும் கதைத்து கொண்டிருக்க..
நேத்ரா நிலவின் வெளிச்சத்தில் அங்கே எதையோ யோசித்தபடி நின்று கொண்டிருந்தாள்....
கல்யாணம் கிறது ஒரு பொண்ணுக்கு முக்கியம் இல்ல ஆனா ஒரு குறிப்பிட்ட வயசுக்கு மேல ஒரு பொண்ணு தனியா வாழமுடியாது பொண்ணு மட்டும் இல்ல பையனாலும் தனியா வாழ முடியாது அதுக்காக தான் பெரியவங்க ஒரு பெண்ணுக்கும் பையனுக்கும் கல்யாணம் பண்ணி வச்சு அவங்களுக்கு ஒரு குடும்பத்தை உருவாக்கி புதிய சமூகத்தை உருவாக்க சொல்றாங்க....
ஆனா இந்த காலத்துல அது ஒரு வியாபாரமா போச்சு...
வீட்ல பார்த்து பேசினாலும் வரதட்சணைக்காக தான் வராங்க காதலித்தாலும் அவ பணக்கார பொண்ணா இருந்தா விட மாட்டேங்குறாங்க என்ன இருந்தாலும் வியாபாரம் வந்துடுது...
. என்னோட அப்பா நல்லவர் அவர் கிட்ட வேலை செஞ்சவங்க எல்லாம் நல்லவங்க அப்படியே என்னை ஏமாற்ற கூடாது என்று அம்மா அப்பா முன்கூட்டியே சொத்து எல்லாமே எனக்கும் பல்லவிக்கும் பிரிச்சி வச்சி இருக்காங்க எங்க ரெண்டு பேருக்கும் கல்யாணமாகி குழந்தை பிறந்ததா தான் அந்த சொத்தை நாங்களே உபயோகப்படுத்த முடியும்..
அந்த அளவுக்கு ரொம்ப ரொம்ப பாதுகாப்பா வச்சிருக்காங்க...
ஆனால் எங்களுக்குன்னு வாழ்க்கை எப்படி எங்களால் அமைக்க முடியும்
அதுவும் பல்லவி சின்ன வயசிலேயே அம்மா அப்பாவை இழந்து நாங்கதான் எல்லாம் னு இருக்கிறா..
. அவளுக்கு ஒரு நல்ல பையனா பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கணும் ஆனால் அந்த நல்லவன் அப்படி என்கிற வார்த்தைக்கு உண்மையான அர்த்தமா இந்த உலகத்துல யார் அப்படி இருக்குறா....
என்ன நேத்ரா மேடம் எதையோ நினைச்சுக்கிட்டு ரொம்ப யோசிச்சு இருக்கீங்க என்று ஒரு குரல் கேட்க அவள் குரல் வந்த திசையை நோக்கிப் பார்த்தாள்....
ஒரு இளம் ஜோடிகள் அவள் முன் வந்து நின்றனர்...
நீங்க ...?
நாங்க யார் எங்க இருந்து வந்திருக்கும் அது முக்கியமில்லை உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசனும் என்று இருவரும் நீண்ட நேரமாக நேத்ராவிடம் பேசி முடிக்க...
சரி நீங்க இவ்வளவு தூரம் சொல்லி இருக்கீங்க அதனால இதுக்கு ஒத்துக்க
பல்லவி ரொம்ப ரொம்ப நல்ல பொண்ணு அவளுக்கு எந்த ஒரு ஆபத்தும் வரக்கூடாது என்று இருவரிடமும் வாக்கு பெற்றுக்கொண்டாள்...
மறுநாள் காலை திருமணம் ஏற்பாடு மிக விமர்சையாக நடைபெற்றுக் கொண்டிருந்தது மறுநாள் விடியற்காலையில் முகூர்த்தம்..
அதற்கு முன் இரவு ரிசப்ஷன் நடைபெற உள்ளது விஜி யுவராஜ் இருவரும் ரிசப்ஷனுக்கு தயாராகி மேடையில் வந்து நிற்க உறவினர்கள் வரிசையாக வந்து பரிசுகள் அளித்து விட்டு சென்று விட ரிசப்ஷன் முடிந்தது...
நேத்ரா விற்கு உறக்கம் வரவில்லை எப்படி பல்லவி இடம் விடை சொல்வது என்று தவித்துக் கொண்டிருந்தாள்...
பல்லவி புரிந்து கொண்டால் தன் தோழியின் கலக்கத்தை என்ன ஏதுவென்று விசாரிக்க....
அது ஒன்னும் இல்ல என்னோட அப்பா அம்மா ரொம்ப சீரியஸா இருக்காங்களா என்ன பாக்கணும்னு சொல்லி இருக்காங்க...
அடக்கடவுளே சரி உங்க பாட்டி சாகுறதுக்குள்ள உன்னை பாத்தே ஆகனும் அதுக்காக நீ போகனும்...
இல்லடி உனக்கே தெரியும் நம்ம காலேஜ் போறதால பிசினஸ் குள்ள நான் சரியா இன் வால் ஆகல இனிமே நீ இருந்தா தான் வேலை நடக்கும் முன்னே பிரசாதங்கள் சொல்லிட்டாரு அதுவுமில்லாம அடுத்த ஒரு வாரம் போர்ட் மீட்டிங் இருக்கு அதுக்கு அப்புறம் துபாய் போகவேண்டிய வேலை இருக்கு...
என்னடி இப்படி சொல்லுற உனக்காக குடும்பம் காத்துகிட்டு இருக்கு நீ என்னடான்னா சரி வீடு இதுவும் ஒரு பக்கம் முக்கியம் தான் அதுக்கு என்ன பண்ண போற...
உனக்கு தான் விவசாயம் ரொம்ப பிடிக்குமே விவசாயத்தை பற்றி ஆராய்ச்சி படுவதால் உங்களோட முக்கியமான வேலை நீ வேணா என்னோட ஊருக்கு போவோம் அங்கே ஏகப்பட்ட நிலபுலன்கள் இருக்கு எங்க அப்பாக்கு சொந்தமாக 500 ஏக்கர் நிலம் இருக்கு அதுக்கான ஒரிஜினல் தாய்பத்திரம் அப்பா என் கிட்ட குடுத்து வச்சிருக்காரு அதை நீ யூஸ் பண்ணிக்கோ...
என்னடி விளையாடுறியா அவங்க கேட்டது உன்ன என்ன கிடையாது...
இங்க பாரு அவங்கள பொருத்தவரைக்கும் நேத்ரா னு ஒரு பேத்தி இருக்கா அது பல்லவி நேத்ரா வா இருந்துட்டு போகட்டும் அவங்க இதுவரைக்கும் என்ன பார்த்ததில்லை அம்மா அப்பா சொல்லி இருக்காங்க என்னோட போட்டோ கூட அவங்க அனுப்பல அதனால நீ பிரச்சினை இல்லாம போயிட்டு வா...
ஆள் மாறாட்டம் பெரிய குற்றம் அதற்கு என்ன செய்ய சொல்ற...
அடி போடி பைத்தியக்காரி ஒரு மாசம் இன்டர்ன்ஷிப் கோயம்புத்தூர்ல சின்னகள்ளிபட்டி கிராமத்தில் உனக்கு நடந்ததா நினைச்சுக்கோ...
பல்லவி ஆழ்ந்து யோசித்துக் கொண்டிருந்தால் நேத்ரா அவள் பதிலுக்காக காத்து கொண்டு இருந்தாள்...
சரி ஒரு பக்கம் தப்பா இருந்தாலும் ஒரு பக்கம் எனக்கும் வேலை நடக்கும் அதனால நான் ஒத்துக்கிறேன் நானே போற...
இப்பதான் எனக்கு நிம்மதியா இருக்கு சரி தூங்கு நாளைக்கு முகூர்த்தம் முடிந்த உடனே மத்தியான ரயில்ல நீ கோயம்புத்தூர் கிளம்பிடு...
பல்லவி ஒப்புக் கொள்ள இருவரும் நிம்மதியாக உறங்கினர்...
மறுநாள் காலை சுப முகூர்த்தத்தில் விஜியின் கழுத்தில் யுவராஜ் மாங்கல்ய நான் போட இனிய திருமணம் அரங்கேறியது...
ஒரு வழியாக அனைவரும் சமாதானம் செய்துவிட்டு நேத்ரா பல்லவி இருவரும் வீடு வந்து சேர்ந்தனர் பல்லவி ஒரு மாதத்திற்கு தேவையான உடைகள் தன்னுடைய பொருள்கள் மேலும் ஆராய்ச்சிக்கான விஷயங்கள் அனைத்தையும் எடுத்துக் கொண்டு தன் கல்லூரியில் இடம் பரிந்துரை செய்து விட்டு...
6)ஆள் மாறாட்டம்
நேத்ரா உடன் ரயில்வே நிலையத்திற்கு சென்றாள்...
நண்பர் மூலம் ஏற்கனவே புக் செய்த உதவியால் எளிதாக இடம் கிடைத்துவிட பல்லவிக்கு ஏசி கோச் வழங்கப்பட்டது அவை பத்திரமாக அவள் அறையில் வழியனுப்பிவிட்டு ரயில் செல்லும் வரை நேத்ரா காத்துக் கொண்டிருந்தாள்...
ரயில் நகர நகர பல்லவி கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது அதைப்பார்த்து நேத்ரா கண்கள் குளமாகியது நீண்ட நாள் ஒன்றாக இருந்து திடீரென்று பிரிவது இருவருக்கும் மனம் இல்லை இருந்தாலும் செல்ல வேண்டிய சூழ்நிலை ....
ரயில் மின்னல் வேகத்தில் சென்று விட...
நேத்ரா மனம் கடவுளை என்னோட பல்லவிக்கு எந்த ஒரு ஆபத்தும் வரக்கூடாது எல்லாம் நல்லபடியா முடியணும் என்று இறைவனை வேண்டிக் கொண்டாள்..
_____________________________________________