எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

❤ஆரியனே பல மாயங்கள் புரிந்தாய் ❤ - கதை திரி

Status
Not open for further replies.

Krishna Tulsi

Moderator
WhatsApp Image 2025-01-01 at 6.40.55 PM.jpeg
அது ஒரு பொன் மாலை பொழுது. சூரியன் தனது கிரணங்களை தனக்குள் மெல்ல இழுத்துக் கொண்டிருக்க கீழ் வானில் இருள் பரவத் துவங்கியிருந்தது. பறவைகள் இரைதேடிவிட்டு தங்களது கூட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தன. அவர்கள் வீட்டிற்கு வந்த கார்கள் அனைத்தும் பிரதான வாயிலை கடக்கும் சத்தம் கேட்டதும் அவள் தான் தங்கியிருந்த அவுட்-ஹவுசிலிருந்து அந்த பெரிய பங்களாவை நோக்கி ஓடினாள்.

WhatsApp Image 2025-01-01 at 3.41.19 PM.jpeg

அவள் அந்த வீட்டின் வாயிலை அடைந்தபோது அந்த வீட்டின் தலைவர் வரதராஜன் வீட்டிற்கு வந்த விருந்தாளிகளை வழியனுப்பி வைத்துவிட்டு வீட்டினுள் செல்லவிருந்தார். மூச்சு முட்ட ஓடி வந்தவள் அவரை அங்கு கண்டதும், "அப்பா......எல்லாமே..நல்லபடியா முடிஞ்சதா? மாப்ளவீட்டுகாரங்க என்ன சொன்னாங்க? நம்ம...ரியாவ அவங்களுக்கு புடுச்சிருக்கா?" என்று வினவினாள். அவள் மூச்சுவாங்குவதை கவனித்த அவர், அவளை வீட்டினுள் அழைத்துச் சென்றார்.

அந்த பெரிய ஹாலில் உள்ள சோஃபாவில் அவளை அமரவைத்து அவளருகே தானும் அமர்ந்தார்.

_01f590ac-c3b3-4c47-ab7f-6e5d46a999b1.jpg
அவள் தன்னை ஆசுவாசப் படுத்திகொண்டு மீண்டும் பேச ஆரம்பித்தபோது, "இவ்வளவு நேரம் நீ எங்க நியதி போன? உன்ன தேடிகிட்டே இருந்தேன். இந்த பங்ஷனுக்கு தேவையான எல்லாத்தையும் பாத்து பாத்து செஞ்சுட்டு நீ எங்கம்மா போன?" என்று விசாரித்தார்.

அவள் என்ன கூறுவது என்று தெரியாமல் விழித்துக்கொண்டிருக்கும்போது, "நான் தான் அவள இங்க வரக்கூடாதுன்னு சொன்னேன்" என்று ஒரு பெண்ணின் அதிகாரக் குரல் கேட்டது.
_cc98a1d8-6c59-4f3b-8b1d-7d311e592b77.jpg

"ஏன் மாலினி இப்படி செஞ்ச? அவளும் நம்ம பொண்ணு மாதிரி தான?" என்று அவர் கேட்கவும், "நீங்க வேண்ணா அப்படி நினைச்சுக்கோங்க, எனக்கு அப்படி ஒரு எண்ணமே கிடையாது. அதோட இவ என் பொண்ணோட பங்க்ஷன்ல கலந்துக்குறது எனக்கு சுத்தமா பிடிக்கல" என்று அவள் தன் மனதுக்குள் இருந்த வெறுப்பை அப்படியே கொட்டினாள்.

அதை கேட்ட நியதிக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. இது அவள் தினமும் கேட்கக்கூடிய வார்த்தைகள் தான் என்றாலும் அவளால் அதை தாங்கிக்கொள்ள முடியவில்லை. நியதியின் முகவாட்டத்தை பார்த்த வரதராஜன், "மாலினி, இனிமேல் இப்படி சொல்லாத. நியதியும் நம்ம வீட்டுபொண்ணு தான். இவா ரியாவோட எல்லா கல்யாண பங்க்ஷன்லயும் கண்டிப்பா கலந்துக்குவா. அண்ட் திஸ் இஸ் ஃனல்" என்று தன்னுடைய இறுதி முடிவைக் கூறினார். அதற்குமேல் நிற்க விருப்பமில்லாமல் மாலினி அங்கிருந்து தன்னுடைய அறைக்குச் சென்றாள்.

அவள் சென்றவுடன், "அவள பத்திதான் உனக்கு தெரியும்லமா. அதுனால அவ சொல்றத எதையும் பெருசா எடுத்துக்காத" என்று அவர் கூறவும், "அப்பா, அதவிடுங்க மாப்பிள வீட்ல என்ன சொன்னாங்க அத சொல்லுங்க" என்று ஆர்வத்துடன் நியதி கேட்கலானாள். ஒரு மெல்லிய புன்னகை புரிந்தவாறே, "நம்ம ரியாவ அவங்களுக்கு ரொம்ப புடிச்சிருக்காம். அடுத்த கொஞ்ச மாசத்துலயே கல்யாணத்த வச்சிக்கலாம்னு சொல்லீட்டாங்க" என்று அவர் கூறவும் நியதி மிகவும் மகிழ்ச்சி அடைந்தாள்.

ஆனால் அவருடைய முகம் சட்டென வாடியது. அவருடைய வாட்டத்தைக் கண்ட மகள், "என்னப்பா, ஏன் உங்க முகம் வாடி இருக்கு? எல்லாம் நல்லபடியா தான முடிஞ்சது?" என்று வினவினாள்.

_7d274984-c110-42d4-a67d-a063057fd18a.jpg
ஒரு பெரு மூச்சிற்குப் பின், "அதுலாம் நல்லபடியா தான்மா முடிஞ்சது. எனக்கு கவலையே நம்ம ரியாவை பத்திதான். இதுக்கு முன்னால ஸூசைடு அட்டம்ப்ட் பண்ணி, வந்த எல்லா நல்ல சம்பந்தத்தையும் கெடுத்துட்டா. அவங்க எல்லாரும் நம்ம ஸ்டேட்டஸ்கு ஈகுவலா இருந்ததுனால எந்த பிரச்சனையும் இல்ல”

“ஆனா இப்போ வந்துருக்குறது ரொம்ப பெரிய இடம். வர்தன் கார்ப்பரேட் குரூப்ஸோட ஒன் அண்ட் ஒன்லி சி.இ.ஓ மிஸ்டர் ஆரியவர்தன். எல்லா அப்பாவும் தான் பொண்ணுக்கு இவரு மாப்பிளையா வந்துர மாட்டாரான்னு நினைக்குற அளவுக்கு அவர் அவ்வளவு டாலன்டட். ஏதோ ஒரு பார்ட்டீல நம்ம ரியாவை அவரோட பாட்டிக்கு பிடிச்சிப்போனதுனால இப்போ சம்மந்தம் பேசிட்டு போயிருக்காங்க. இது ரியாவுக்கு எவ்வளவு பெரிய லக்குன்னு அவளுக்கே தெரியாது. இந்த கல்யாணம் மட்டும் நல்லபடியா முடிஞ்சா ரியாவுக்கு மட்டுமில்ல நம்ம கம்பெனியோட மதிப்பு ரொம்ப கூடீரும்”

“அப்படி இல்லாம கல்யாணத்துல பிரச்சனை வந்துச்சுன்னா நம்ம கம்பெனி இருக்குற இடம் தெரியாம போய்டும். அதுனால தான்மா எனக்கு ரியாவை நினைச்சா ரொம்ப பயமா இருக்கு" என்று தன்னுடைய முகவாட்டத்திற்கான காரணத்தைக் கூறினார். பின் அவர் நியதியின் கையை பற்றி, "நியதி நீ ரொம்ப புத்திசாலியான பொண்ணு. நீ சொன்னா ரியா கண்டிப்பா கேப்பா. எப்படியாவது ரியாவுக்கு பக்குவமா எடுத்து சொல்லி இந்த கல்யாணத்த நல்லபடியா நடக்குறதுக்கு நீ உதவிசெய்மா" என்று அவளிடம் வேண்டிக்கொண்டார்.

உடனே நியதி, "நீங்க கவலையே படாதீங்கப்பா. எல்லாம் நல்லதே நடக்கும். இந்த கல்யாணத்த நல்லபடியா நடத்திகொடுக்கவேண்டியது என்னோட பொறுப்பு. சரியா?" என்று அவள் கேட்கவும் வரதராஜன் நிம்மதியுற்றவராய் ஒரு புன்னகை புரிந்தார்.

வரதராஜனை சந்தித்துவிட்டு ரியாவின் அறைக்குச் செல்லவிருந்தவளை மாலினி அழைத்ததாக வேலையாள் ஒருத்தி கூறவும், நியதி மாலினியின் அறைக்குச் சென்றாள். கதவை தட்டிவிட்டு அறையினுள்ளே சென்றபோது மாலினி அங்குள்ள சோஃபாவில் அமர்ந்திருந்தாள்.
_33cc0967-11b6-4ca8-a2f6-fb05e6c62865.jpg
நியதி எதுவும் பேசாமல் அவள் முன்னால் சென்று நிற்கவும் மாலினி பேசத் துவங்கினாள், "நான் இப்போ உன்ன இங்க எதுக்கு கூப்பிட்டிருக்கேன்னு உனக்கு நல்லாவே தெரியும். எல்லாம் ரியாவை பத்திதான். அவ கல்யாணம் நல்லபடியா முடியனும். அதுக்கான பொறுப்ப அவர் உங்கிட்ட குடுத்திருக்காருன்னு எனக்கு தெரியும். அவர் வேணும்னா உங்கிட்ட பொறுப்ப ஒப்படைச்சிட்டு அப்படியே விட்டுறலாம்”

“ஆனா நான் அப்படி கிடையாது, தினமும் ரியா என்ன பண்றா? யார்கூட பேசுறா? எங்க போறான்னு, எனக்கு தகவல் குடுத்துகிட்டே இருக்கணும். சரியா?" என்று தான் அழைத்த காரணத்தைக் கூறினார். "நீங்க கவலையே படாதீங்க அம்மா. இந்த கல்யாணம்..." என்று கூறிக்கொண்டிருந்த நியதியை தன் கையசைவால் நிறுத்தி, "என்ன அம்மான்னு கூப்பிடாதன்னு உனக்கு எத்தனை தடவ சொல்லீருக்கேன். நானா உன்ன பத்து மாசம் சும்மந்து பெத்தேன்? எப்ப பாத்தாலும் அம்மா அம்மாங்குற?" என்று எரிச்சலுடன் கூறினாள்.

நியதி தன் மனதிற்குள் ஊசியாய் இறங்கிய வார்த்தைகளை மௌனமாக கேட்டுவிட்டு, "நீங்க கவலப் படாதீங்க மேடம். கண்டிப்பா இந்த கல்யாணம் நல்லபடியா முடியும். நீங்க சொன்னமாதிரியே தினமும் நடக்குறத உங்ககிட்ட வந்து சொல்றேன்" என்று கூறிவிட்டு அங்கிருந்து ரியாவின் அறைக்குச் சென்றாள்.

அறைக்குள் நுழைந்தபோது ரியா டிரெஸ்ஸிங் டேபிளின் முன் அமர்ந்து கண்ணாடியில் தன்னை பார்த்தவாறு, தனக்குத்தானே பேசி சிரித்துக் கொண்டிருந்தாள்.

_f9f7101f-9a10-4b7b-943b-4adb76139da4.jpg
நியதி வருவது தெரிந்ததும் அந்த சிரிப்பு கோபமாக மாறி, "ஏய் நிதி, எனக்கு பங்க்ஷன் நடக்கும்போது நீ இங்க இல்லாம அவுட்-ஹவுஸ்ல என்ன செஞ்சிகிட்டு இருந்த?" என்று கேட்டாள்.

அதற்கு, "நான் ஒரு வேலையா அங்க போயிருந்தேன். அதான்.." என்று நியதி கூறும்போதே, "எனக்கு இங்க பங்க்ஷன் நடக்கும்போது நீ....ஓ இது அம்மாவோட வேலையா?" என்று அவள் கேட்கவும் நியதி 'இல்லை' என்பதுபோல் தலையசைத்தாள். ஆனாலும் ரியா உண்மையை அறிந்தவளாக, "இந்த அம்மாவுக்கு வேற வேலையே இல்ல. அவங்கள..." என்று கூறியவளை நியதி இடைமறித்து, "அதவிடு, மாப்பிளை எப்படி? உனக்கு பிடிச்சிருக்கா?" என்று விஷயத்திற்கு வந்தாள்.

ரியா எதுவும் பேசாமல் அவள் முகத்தைப் பார்க்கவும், "இல்ல அவர இன்னைக்கு நீ நேர்ல பாத்திருப்ப. அவரோட நிலைமை உனக்கு நல்லாவே தெரிஞ்சிருக்கும். அதுதான் கேட்டேன்" என்றாள் நியதி. அவளுடைய பதிலுக்காக காத்துக்கொண்டிருந்த நியதியைப் பார்த்து லேசாக புன்னகைத்து, "ம்ம் பிடிச்சிருக்கு" என்று ரியா கூறவும் நியதிக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது.

உடனே, "அதான பாத்தேன். அவரை எப்படி பிடிக்காம போகும்? அவரு எவ்வளவு பெரிய ஆளு. அவர கல்யாணம் பண்ணிக்க நிறையபேர் ட்ரை பண்ணாலும் அந்த லக் உனக்கு தான் அடிச்சிருக்கு. நீ ரொம்ப லக்கி ரியா. அவரு பிசினஸ்ல..." என்று நியதி ஆரியவர்தனின் புகழை பாட ஆரம்பித்தாள்.

அவளை நிறுத்தி, "போதும் போதும். அவரு உன்னோட ரோல் மாடல்னால ரொம்பதான் புகழ்ற... ஆமா… எல்லாருமே அவங்களோட ரோல் மாடல கல்யாணம் பண்ணிக்க ஆசை படுவாங்க. அவங்கள தவிர வேற யாராவது கல்யாணம் பண்ணிக்கிட்டா கோபமோ இல்ல பொறாமையோ வரும். அப்படி என் மேல உனக்கு ஏதாவது வருதா?" என்று சீண்டும் குரலில் ரியா கேட்டாள்.

"எனக்கு அப்படி ஒண்ணும் தோணல. அதுக்கு பதிலா சந்தோஷம் தான் இருக்கு. ஒருவேளை உன்ன தவிர்த்து வேறுயாராவது அவர கல்யாணம் பண்ணீருந்தா அப்படி தோணீருக்குமோ என்னவோ?" என்று பதிலழித்துவிட்டு நியதி கண்சிமிட்டவும், இருபெண்களும் நகைத்தனர். பின் ஒரு நிமிட அவகாசம் கூட கொடுக்காமல் ரியா, நியதிக்கு ட்ரீட் கொடுப்பதாகக் கூறி நட்சத்திர ஹோட்டல் ஒன்றிற்கு அழைத்துச் சென்றாள்.

மிகவும் ஆனந்தமாக இருந்த ரியா நிறைய உணவுகளை ஆர்டர் செய்து உண்டாள்.

_f5d6c45a-0d07-4f8d-8a2e-1cfbb74dfb1c.jpg
அவளையே ஒரு புன்முறுவலுடன் பார்த்தபடி, அங்கிருந்த உணவுகளில் தனக்குவேண்டியவற்றை சாப்பிட்டுக்கொண்டிருந்தாள் நியதி. "நான் இன்னைக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கேன் நிதி. நீ எவ்வளவு வேணுமோ நல்லா சாப்பிடு. இது என் ட்ரீட்" என்று சாப்பிட்டவாறே கூறவும் நியதி சிரித்துக்கொண்டே, 'சரி' என்பதுபோல் தலையசைத்தாள்.

இரு பெண்களும் உண்டுமுடித்ததும் பில்லை கட்டுவதற்காக ரியா தன் பையில் பர்ஸைத் தேடினாள். ஆனால் அது அங்கு இல்லை. உடனே ஜீ-பே மூலமாக பணத்தை செலுத்திவிடலாம் என்று போனை தேடியவளுக்கு அதுவும் அந்த பையினுள் தென்படவில்லை.

_a73d5995-6fd5-45c1-9e06-f87374096138.jpg
விஷயத்தை நியதியிடம் தெரிவித்தபோது, "என்ன ரியா இப்பபோய் இப்படி சொல்ற? பாரு நீ படுத்தின அவசரத்துல நானும் என்னோட போன எடுத்துட்டு வரல. இப்போ என்ன பண்ண?.." என்று நியதி யோசிக்கலானாள்.

அப்போது அவளுக்கு ஏதோ ஒன்று நினைவிற்கு வர அவளது முகம் பிரகாசமானது. அவள் ரியாவிடம், "நீ கவலைப்படாத. நமக்குத்தான் நம்மளோட ‘ஆபத்பாந்தவன்’ இருக்கான்ல" என்று கூறி கண்சிமிட்டினாள். "ஆபத்...ஓ.. வா சீக்கிரம் கால் பண்ணலாம்" என்று கூற, ரிசப்ஷனிலிலுள்ள தொலைபேசியில் யாரையோ தொடர்புகொண்டாள் நியதி.
_01864bed-4d08-4107-b215-908933dfc8de.jpg
அவள் தான் கூறவேண்டியதை கூறிவிட்டு, இருவரும் அந்த நபரின் வரவிற்காக காத்துக்கொண்டிருந்தனர். ரியா அந்த பில்லை பார்த்தவாறே அமர்ந்திருந்தபோது, "என்னவோ அந்த பில்லுக்கு நீ பணம் கொடுக்கபோறவ மாதிரி அத பாத்துகிட்டு இருக்க?" என்று ஒரு ஆணின் குரல் கேட்க, அந்த திசையை நோக்கி இருவரும் திரும்பினர்.

மாயங்கள் தொடரும்...

 
Last edited:

Krishna Tulsi

Moderator
WhatsApp Image 2025-01-04 at 6.45.44 PM.jpeg
வந்தவனைப் பார்த்ததும் இருபெண்களின் முகமும் பிரகாசமடைந்தது. அங்கு ஸ்டைலாக ஓர் இளைஞன் அவர்களை பார்த்தபடி நின்றுகொண்டிருந்தான்.
WhatsApp Image 2025-01-04 at 11.46.36 AM.jpeg
அவன் அவர்களருகே வந்து ரியாவின் கையிலிருந்த பில்லை வாங்கிப் பார்த்து, "ஏய், நீ மனிஷி தான? இவ்வளவு ஆர்டர் பண்ணி சாப்பிட்டிருக்க?" என்று அவன் கூறவும் ரியா அசடுவழிய சிரித்தாள். அந்த பில்லிற்கு பணத்தை கட்டிவிட்டு மூவரும் கார் பார்க்கிங்குக்கு வந்தார்கள்.

அப்போது அவன், "ஏய் ரியா, நீ ஒரு கம்பெனி சி.இ.ஓவோட பொண்ணு. வெளிய வரும்போது இப்படியா பர்ஸையும், போனையும் மறந்து வச்சிட்டு வருவ? நானே பாவம், ஒரு கம்பெனில பி.ஏவா வேல பாத்துகிட்டிருக்கேன். பிரண்டுங்கிறதுனால இப்படியா மொளகா அறைப்ப?" என்று கேட்டான். "சாரி சான், ஒரு அவசரத்துல மறந்துட்டேன். நீ ஹெல்ப் பண்ணலைனா வேறயாரு பண்ணுவா சொல்லு?" என்று ரியா கெஞ்சும் குரலில் கேட்டாள்.

உடனே அவன், "எனக்கு சரண்னு அழகா பெயர் வச்சிருக்காங்க. அதைவிட்டுட்டு சான், மான்னு கூப்பிட்டுக்கிட்டு இருக்க....ஆமா அப்படி என்ன அவசரம் உனக்கு?" என்று விசாரிக்க, "மேடம்க்கு கல்யாணம் பிக்ஸ் ஆகிடுச்சில அதான் கால் தரையில படாம சுத்திகிட்டு இருக்காங்க" என்று நியதி கூறவும் சரணின் கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தன.

அவன் ரியாவிற்கு வாழ்த்துக்கள் கூறிக்கொண்டிருக்கும்போதே, "வா ரியா, கிளம்பலாம். லேட்டானா அம்மா திட்டுவாங்க" என்று நியதி ரியாவைக் கிளப்பினாள். சரண் அவர்களை தடுத்து, "என்னப்பா, நீங்க கூப்பிட்டீங்கன்னு என்னோட வேலைய போட்டுட்டு உங்களுக்காக வந்துருக்கேன். நீங்க என்னன்னா என்ன அம்போன்னு விட்டுட்டு போறீங்க. வந்ததுக்கு கொஞ்சநேரம் என்கூட டைம் ஸ்பென்ட் பண்ணுங்களேன்" என்று அவன் அப்பாவியாய் தன் முகத்தை வைத்து கேட்டான்.

உடனே ரியா, "ஆமா நிதி, சான் பாவம். நமக்காக வந்திருக்கான்ல அதுக்காகயாவது அவன் கூட டைம் ஸ்பென்ட் பண்ணனும். பக்கத்துல ஒரு பார்க் இருக்கு அங்க போய் பேசுவோமா?" என்று கூறவும் இருவரும் ஒப்புக்கொண்டனர்.

ரியா காரை எடுக்கச் சென்றபோது சரண், "என்ன நிதி, ரியாவுக்கு இந்த கல்யாணத்துல சம்மதம் தான? இல்லாட்டி இதுக்கு முன்னால பண்ணமாதிரி ஏதாவது..." என்று கேட்க, "இல்ல சான். ரியா ரொம்ப சந்தோஷமா இருக்கா. இதுக்கு முன்னாடி அவ இவ்வளவு சந்தோஷமா இருந்து நான் பார்த்ததே இல்ல. அதனால இந்ததடவ எந்த ஒரு பிரிச்சனையும் வராதுன்னு நம்புறேன்" என்று கூறினாள்.

அப்போது ரியா காரை எடுத்துக்கொண்டு வர நியதி அதனுள் ஏறிக்கொண்டாள். அவர்கள் அருகிலிருந்த பூங்காவிற்குச் செல்ல, சரண் தன்னுடைய பைக்கில் அவர்களை பின்தொடர்ந்தான். மூவரும் பூங்காவில் பேசிக்கொண்டிருக்கும்போது சரண் ரியாவினுடைய வருங்கால கணவரைப் பற்றி விசாரிக்க ஆரம்பித்தான்.
WhatsApp Image 2025-01-04 at 12.09.30 PM.jpeg
"ஆமா ரியா உன்கிட்ட மாட்டின அந்த அப்பாவி மனுஷன் யாரு?" என்று கேட்க அதற்கு நியதி, "வேற யாரு நம்ம ஆரியவர்தன்சார் தான்" என்று கூறினாள். "என்ன ஆரியவர்தன்சாரா? அவரையா கல்யாணம் பண்ணப்போற? வாவ் ரியா, கங்ராஜூலேஷன்ஸ். எவ்வளவு பெரிய பிசினஸ் மேன் அவரு" என்று சரண் ஆச்சரியத்துடன் கூறினான்.

அதை கேட்ட ரியா லேசாக புன்னகைத்தாள். சிறிதுநேரம் பேசிவிட்டு மூவரும் அங்கிருந்து கிளம்பினர். ரியாவும் நியதியும் வீட்டை வந்தடைந்தபோது மாலினி வாயிலில் காத்துக்கொண்டிருந்தாள்.
_f6ac95c6-190e-4a57-8cad-abcecaa4163a.jpg
அவள் ரியாவை உள்ளே அனுப்பிவிட்டு நியதியை வசைபாடத் துவங்கினாள்.

"கல்யாணம் ஆகப்போற பொண்ண கூட்டிகிட்டு இவ்வளவு நேரமா வெளிய சுத்துறது? சீக்கிரம் வீட்டுக்கு வரணும்ங்கிற அறிவு கிடையாது? உன்கிட்ட ஒரு பொறுப்ப கொடுத்தா இந்த லச்சணத்துல தான் வேலபாப்பியா?" என்று அவளை வையத்து துவங்கினாள்.

உள்ளே செல்லாமல் அங்கு நின்றுகொண்டிருந்த ரியா தன்னுடைய தாய் நியதியை பழிப்பது பிடிக்காமல், "அம்மா அவ வீட்டுக்கு போகலாம்னு தான் சொன்னா ஆனா என்னால தான் நேரமாயிருச்சு. தயவுசெய்து அவள வையாதீங்க" என்று கூறினாள்.

ஆனால் மாலினியோ, "ரியா நீ சின்ன பொண்ணு உனக்கு எதுவும் தெரியாது. உள்ள போ" என்று அவளை வலுக்கட்டாயமாக உள்ளே அனுப்பிவிட்டு நியதியின் பக்கம் திரும்பினாள்.

"என்ன மன்னிச்சிருங்க மேடம். இனி இப்படி நடக்காம பாத்துக்குறேன்" என்று கூறிவிட்டு தான் தங்கியிருக்கும் அவுட்-ஹவுசிற்குச் சென்றாள். தன்னுடைய உடுப்புகளை மாற்றிவிட்டு படுக்கைக்குச் சென்றவள் உடனே உறங்கிவிடவில்லை.
WhatsApp Image 2025-01-04 at 3.07.20 PM.jpeg
'தான் முதன்முதலில் இந்த வீட்டிற்கு எவ்வாறு வந்தோம்' என்ற எண்ணத்தை அவளது மனம் உறுப்போடத் துவங்கியது. இந்த வீட்டிற்கு அவள் வருவதற்கு முக்கியமான காரணமே ரியாதான். கல்லூரியில் படிக்கும்போது ஒரு பிரச்சனையிலிருந்து ரியாவை நியதி காப்பாற்றியதால் அவர்களுக்கிடையில் நட்பு உண்டாயிற்று. அந்த நட்பின் விளைவாக ரியாவின் நடவடிக்கைகளில் நல்ல வேறுபாடு தெரியஆரம்பித்தது.

அந்த மாற்றங்களுக்கு நியதி தான் காரணம் என்று தெரிந்ததும் வரதராஜனுக்கு அவள்மீதான மதிப்பு கூடியது. அவளுக்கு யாருமில்லாத காரணத்தால் தன்னுடைய வீட்டிலேயே நியதியை தங்குமாறு வற்புறுத்தினார். ஆனால் இவையனைத்தும் மாலினிக்குப் பிடிக்கவில்லை. அவளை எவ்வளவுதான் சமாதானப் படுத்தினாலும் நியதி இந்த வீட்டில் தங்குவதை அவளால் ஒப்புக்கொள்ள முடியவில்லை.

ஆனால் வரதராஜனுக்கும் நியதியை விட்டுக்கொடுக்க மனமில்லை. அதனால் நியதியை தங்களது அவுட்-ஹவுசில் தங்கவைத்து அவளுக்கான அனைத்து தேவைகளையும் அவர் பார்த்துக் கொண்டார்.

கல்லூரி படிப்பு முடிந்தவுடன் ரியா மாடலிங் துறையை தேர்ந்தெடுக்க, நியதியை தனக்கு பி.ஏ.வாக நியமித்தார் வரதராஜன். ஒரு முறை அலுவலகத்தில் நடக்கவிருந்த பணமோசடியை நியதி தடுத்து நிறுத்தியபோது அவள் மீது வரதராஜனுக்கு மேலும் நம்பிக்கை கூடியது.

வரதராஜன் செய்த உதவிக்கு நியதியும் நன்றியுள்ளவளாகவே இருந்தாள். தன்னுடைய நன்றியை செலுத்த சந்தர்ப்பத்தை தேடியவளுக்கு ரியாவின் திருமணம் ஒரு வாய்ப்பை அளித்தது. வரதராஜனுக்கு இந்த திருமணம் எவ்வளவு முக்கியமானது என்று நன்றாகத் அறிந்திருந்தாள். அதனால் இந்த திருமணத்தை நல்லபடியாக நடத்திவைக்கவேண்டுமென்று தனக்குள் உறுதியெடுத்துக் கொண்டாள். இவ்வாறு தனக்குள் ஓடிய எண்ணங்களை நினைத்தவாறே தூங்கிவிட்டாள்.

மறுநாள் காலை, விரைந்து அலுவலகத்திற்கு தயாராகி சாப்பிடுவதற்காக அவுட்-ஹவுஸிலிருந்து அந்த பெரிய வீட்டிற்குச் சென்றாள். அங்கு அமர்ந்திருந்த வரதராஜன் நியதி வந்ததும் ஒரு புன்முறுவல் செய்து வரவேற்றார்.

"குட் மார்னிங் நியதி. நல்லா தூங்குனியா?" என்று அவளை விசாரித்ததற்கு அவள் 'ஆம்' என்று புன்முறுவலுடன் தலையசைத்து, டைனிங் டேபிளில் ஒரு இருக்கையில் அமர்ந்தாள்.
_63ea9fbf-d3f5-4eb0-a437-9aa02748b9bd.jpg
சிறு தயக்கத்திற்குப் பின், "நேத்து ரியாகிட்ட பேசினியா நியதி? அவ என்ன சொன்னா?" என்று வினவினார். "அப்பா, நம்ம ரியாவுக்கு அவர ரொம்பவே பிடிச்சிருக்கு. கல்யாணம் பிக்ஸான சந்தோஷத்துல அவ நேத்து எனக்கு ட்ரீட்டே குடுத்தா. இப்படி ரியா சந்தோஷப்பட்டு நான் பாத்ததே கிடையாது. அதனால கவலையேபடாதீங்க, இந்த கல்யாணம் நல்லபடியா நடக்கும்" என்று மகிழ்ச்சியுடன் உறுதியாகக் கூறினாள்.

அவள் வார்த்தைகளில் நிம்மதியுற்றவராய், "ரொம்ப சந்தோஷம்மா. இப்போ தான் என் மனசுக்கு நிம்மதியா இருக்கு. அப்போ அடுத்த வேலைய ஆரம்பிப்போம். இன்னும் ரெண்டு வாரத்துல என்கேஜ்மென்ட் வச்சுக்கலாம்னு சொன்னாங்க. அடுத்து..." என்று அவர் கூறிக்கொண்டிருக்கும்போதே, "என்கேஜ்மென்ட்னா ஷாப்பிங் போகணும்லபா" என்று தூரத்திலிருந்து ரியாவின் குரல் கேட்க இருவரும் திரும்பிப் பார்த்தார்கள்.

ரியா படியிலிருந்து புன்னகையுடன் இறங்கியவாறே, "அப்போ நானும் நிதியும் சேந்து ஷாப்பிங் போகப்போறோம். அதுனால இன்னைக்கு நிதி உங்ககூட ஆஃஸ்கு வரமாட்டாபா" என்று கூறினாள்.

ரியா இந்த திருமணத்திற்கு ஒப்புக்கொண்டாள் என்பதே வரதராஜனுக்கு மிகப்பெரிய நிம்மதி. அதனால் அவரும் எந்தஒரு எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. "ஆனா ஆஃஸ் வேல நிறைய இருக்கே.." என்று நியதி இழுத்தபோது, "பரவாயில்ல நியதி. இன்னைக்கு ஒரு நாள் தான. அத அருண் பாத்துக்குவான்" என்று மகிழ்ச்சியுடன் கூறினார்.

அந்தசமயம், "நீ எதுக்கு ரியா அவள கூப்பிட்ற. நான் வர்றேன் உன்கூட" என்று கூறியவாறு மாலினி அங்குவந்து சேர்ந்தாள். ஆனால், "அம்மா நீங்க ஓல்டு பீஸ். உங்களுக்கு இப்பவுள்ள டிரென்ட் தெரியாது. நிதிதான் இதுக்கு சரியான ஆளு. வா நிதி கிளம்பலாம்" என்று கூறி அவளை ரியா அழைத்துச் சென்றாள். அந்த ஒரு வாரம் முழுவதும் ஷாப்பிங்கில் சென்றது.

ரியாவிற்கு கார் ரேஸிங் என்றால் மிகவும் பிடித்தமான ஒன்று. அவள் கார் ஓட்டுவதில் மிகவும் கில்லாடி. எந்த ஒரு போட்டியையும் விடாமல் அனைத்திலும் பங்குகொள்வாள். அப்படியிருக்கையில் ஒரு நாள் பெண்கள் இருவரும் தங்களுடைய அறையில் பேசிக்கொண்டிருக்கும்போது ரியாவிற்கு அவளுடைய தோழன் ஒருவனிடமிருந்து கார் ரேஸிங்கில் பங்குகொள்ளுமாறு அழைப்பு வந்தது.

இதை நியதியிடம் தெரிவித்தபோது, "இல்ல ரியா வேண்டாம், வேண்டவே வேண்டாம். இன்னும் ஒரு வாரத்துல உனக்கு என்கேஜ்மென்ட். இப்போ போறது சரியா இருக்காது. அம்மாவுக்கு தெரிஞ்சா கொன்னே போட்ருவாங்க. வேண்டாம் ரியா நான் உன்ன போகவிடமாட்டேன்" என்று உறுதியாகக் கூறினாள். ஆனால் ரியாவோ, "ப்ளீஸ் நிதி, இது தான் கடைசி தடவ. கல்யாணம் ஆகிடுச்சினா என்னால இதல்லாம் பண்ணவே முடியாது. நான் போறேன் ப்ளீஸ்.." என்று கொஞ்சும் குரலில் கேட்டாள். ஆனால் நியதி மறுத்துவிட்டாள்.
_ca99b583-8e95-4606-8ad4-a5046a64d725.jpg
ரியா எவ்வளவுதான் கெஞ்சினாலும் நியதி அவளை விடவேஇல்லை. எப்படியாவது அங்கு செல்லவேண்டுமென்று நினைத்த ரியா, கீழே சென்று தந்தையை பார்க்கப்போவதாகக் பொய் கூறிவிட்டு தன்னுடைய காரில் யாருமறியாவண்ணம் அந்த ரேஸ் நடக்கும் இடத்திற்கு விரைந்தாள். வெகுநேரமாகியும் ரியா வராததால் அவளைத் தேடி கீழே சென்ற நியதிக்கு எங்கு தேடியும் அவள் தென்படவில்லை.

உடனே வேலையாட்களை விசாரித்தபோது அவள் காரில் வெளியே சென்றதாகக் கூறவும் நியதிக்கு என்ன செய்வதென்றே தெரியாமல் பதறிப்போனாள். இந்த விஷயம் மாலினிக்கு தெரியவருவதற்குள் எப்படியாவது ரியாவை வீட்டிற்கு அழைத்துவரவேண்டுமென்று நியதி விரைந்து அந்த ரேஸ் நடக்குமிடத்திற்குச் சென்றாள்.

அங்கு அப்போதுதான் ரேஸ் துவங்கியிருந்தது. ரியாவும் அதில் கலந்துகொண்டு வேகமாக தன்னுடைய காரை ஓட்டிக்கொண்டிருந்தாள்.
_3004bb71-45b4-4666-86e6-c63bf6685471.jpg
நியதி ரியாவின் பாதுகாப்பிற்காக இறைவனை வேண்டிக்கொண்டிருந்தாள். அப்போது எதிர்பாராத விதமாக ரியாவின் கார் லேசாக தடுமாறி மற்றொரு காரில் மோதியது. அதைப் பார்த்ததும் நியதி பதறிப் போனாள்.

உடனே அங்கிருந்த அனைவரும் ரியாவையும் அந்த அடுத்த காரிலுள்ள நபரையும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஹெல்மெட் அணிந்திருந்த காரணத்தால் ரியாவின் தலையில் எந்த அடியும் ஏற்படவில்லை. ஆனால் அவளுடைய கை கால்களில் பலத்த காயங்கள் இருந்தன. ரியாவின் பெற்றோருக்கு இதை தெரிவித்தபோது அவர்களும் பதறியடித்துக்கொண்டு அங்கு வந்து சேர்ந்தனர்.

ரியாவிற்கு உள்ளே சிகிச்சை நடக்க நியதி கண்கலங்கியவாறே அந்த அறையின் வெளியே நின்றுகொண்டிருந்தாள்.

அங்கு பதற்றத்தில் வந்த மாலினி உடனே நியதியின் மீது கோபம் கொண்டவளாக கத்தத் துவங்கினாள். ஆனால் வரதராஜன் அவளை நிறுத்தி சமாதானம் செய்தார். சிகிச்சை முடிந்து வெளியே வந்த மருத்துவரிடம் ரியாவின் உடல்நிலையை பற்றி விசாரித்தனர்.

எந்த ஒரு ஆபத்தும் இல்லை என்று மருத்துவர் கூறவும் அங்கிருந்த அனைவரும் நிம்மதியுற்றனர். மருத்துவருடன் பேசியவாறே வரதராஜன் சென்றுவிட, மாலினி நியதியை அங்கேயே இருக்குமாறு கூறிவிட்டு தான் மட்டும் அந்த அறைக்குள் நுழைந்தாள். நியதி சரணிற்கும் இந்த விஷயத்தைப் பற்றி தெரிவித்தபோது தானும் அங்கு வந்து ரியாவைப் பார்க்க வருவதாகக் கூறினான்.

நியதி அந்த கண்ணாடிக்கதவின்வழியே பார்த்தபோது ரியா மயக்கத்திலிருந்து எழுந்திருந்தாள்.
_0fd6215c-8cbb-4ba3-8c07-8001744d6f4a.jpg
அவர்களின் உரையாடலை வெளியிலிருந்து பார்த்துக்கொண்டிருந்த நியதிக்கு, "மத்தவங்க பேசுறத ஒட்டுகேக்குறது தப்புன்னு உனக்கு தெரியாதா?" என்று யாரோ கூறுவது கேட்டது. திரும்பிப் பார்த்தபோது அங்கு அவன், அந்த ஆரியவர்தன் லேசாக புன்னகைத்தவாறு தானியங்கி சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்தான்.
WhatsApp Image 2025-01-04 at 3.47.27 PM.jpeg
மாயங்கள் தொடரும்...

தங்களுடைய கருத்துக்களை இங்கு பகிரவும் சகோஸ்...
 
Last edited:

Krishna Tulsi

Moderator
WhatsApp Image 2025-01-08 at 4.16.13 PM.jpeg
அளவாக வெட்டப்பட்ட கேசம், நீண்ட புருவங்கள், கூரிய கண்கள், எப்போதும் லேசான புன்னகையை அணிந்த உதடுகள், அகண்ட மார்பு, நீண்ட கை மற்றும் கால்கள். அவன் அந்த ஆட்டோமேட்டிக் வீல்சேரில் அமர்ந்திருந்தபோதும் அவனுடைய உயரம் நியதியின் தோள் அளவிற்கு இருந்தது.
WhatsApp Image 2025-01-04 at 3.47.27 PM.jpeg
அவனுடைய கால்கள் கருப்புநிற துணியால் மூடப்பட்டிருந்தது. அவனுடைய கூறிய பார்வையால் மற்றவர் மனதின் அடியாழம்வரை சென்று ஆராய்ந்துவிடுவான். ஆனால் அவனுடைய கண்கள் அவனது மனதிலுள்ள எண்ணங்களை யாரும் அறியாவண்ணம் ரகசியமாய் பாதுகாக்கும்.

மொத்தத்தில் 'ஆணழகன்' என்ற வார்த்தைக்கு இலக்கணமாகத் திகழ்ந்தான். ஆரியவர்தனை மேகஸின் முதல் பக்கங்களிலும் செய்தித்தாள்களிலும் பார்த்துவந்த நியதிக்கு அவனை நேரில் பார்த்ததும் சற்று மெய்மறந்து தன்னையறியாமல் அவனை பார்த்தவாறே நின்றாள்.

விரைவில் நிதானத்திற்கு வந்தவள், "சாரி சார்" என்று கூறி அவன் அந்த அறைக்குள் செல்வதற்காக கதவை திறந்தவிட்டாள்.

அவர்கள் இருவரும் உள்ளே செல்ல ஆரியவர்தனின் செக்ரட்டரியான பார்கவ் அறையின் வெளியே நின்றுகொண்டான். அறையின் கதவு திறக்கப்படும் சப்தம் கேட்டதும் உள்ளிருந்த பெண்கள் வாயிலைப் பார்த்தனர்.

வந்தவன் யார் என்று தெரிந்ததும் மாலினி விரைந்து அவனை வரவேற்றாள். ஆரியவர்தன் ரியாவின் உடல்நிலையை பற்றி அவளிடம் விசாரித்துக்கொண்டிருக்கும்போது, "நியதி எனக்கு கொஞ்சம் வேல இருக்கு அதுனால நீயும் அங்க வந்து உதவி செய்ய வா" என்று கூறி நியதியை மாலினி அந்த அறைக்கு வெளியே அழைத்துச் சென்றாள்.

வெளியே வந்ததும், "நியதி, உனக்கு கொஞ்சம் கூட மேனர்ஸே தெரியாதா? அவங்க ரெண்டுபேரும் கல்யாணம் பண்ணிக்கப்போறாங்க. அவங்களுக்குள்ள தனியா பேச நிறைய இருக்கும். நீ எதுக்கு அங்க நிக்கிற? உனக்கு தெரியாதா அங்கயிருந்து வெளியவரணும்னு" என்று தாழ்ந்த குரலில் நியதியை திட்டிக்கொண்டிருந்தாள்.

நியதி எதுவும் பேசாமல் அப்படியே நின்றாள். அங்கு நடந்த எதையும் பார்க்காமல் சற்று தொலைவில் நின்றுகொண்டிருந்த பார்கவின் காதுகளுக்கு மாலினியின் வசைமொழி மட்டும் கேட்டுக்கொண்டேயிருந்தது.

மருத்துவரை சந்திக்கச் சென்ற வரதராஜன் ஆரியவர்தன் வந்திருக்கும் செய்தியை அறிந்து, ரியாவின் அறையை நோக்கி விரைந்தார். அப்போது அந்த அறையிலிருந்து அரியவர்தனும் வெளியே வர, "வாங்க மிஸ்டர் வர்தன்....இப்படி நடக்கும்ன்னு நாங்க நினைச்சி பாக்கல. ரியா...." என்று அவர் கூறும்போதே, "இட்ஸ் ஓகே அங்கிள். ரியா ரெக்கவர் ஆகட்டும். இப்போதைக்கு என்கேஜ்மெண்ட போஸ்ட்-போன் பண்ணுவோம்" என்று கூறினான்.

WhatsApp Image 2025-01-08 at 1.30.35 PM.jpeg
"நீங்க சொன்னா சரியாதான் இருக்கும். அப்படியே செஞ்சிருவோம்" என்று வரதராஜனும் ஒப்புக்கொண்டார். ஆரியவர்தன் முன்னே செல்ல பார்கவ் அவனைத் தொடர்ந்தான்.

வழியில் நின்றுகொண்டிருந்த நியதியைப் பார்த்து, "உன் ஃரண்ட நல்லா பாத்துக்கோ" என்று ஆரியவர்தன் கூறிவிட்டுச் சென்றான். ரியா விரைவில் குணமடைய நிச்சயதார்த்தத்திற்கான வேலைகள் மிக வேகமாக நடக்க ஆரம்பித்தன.

ஆரியவர்தனின் பாட்டி சந்திரமதியின் ஆலோசனைப்படி நிச்சயதார்த்தவிழா வர்தன் காம்பௌண்டிலுள்ள 'பார்ட்டி ஹாலில்' நடக்க ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது.

விழா நடக்கும் நாளும் வந்தது. ரியாவும் நியதியும் ஒரு காரில் செல்ல, வரதராஜனும் மாலினியும் மற்றொரு காரில் சென்றார்கள்.

அவர்கள் வர்தன் காம்பௌண்டிற்குள் நுழைந்தபோது 'ரூட் மேப்' ஒன்று அவர்களுக்கு கொடுக்கப்பட்டது. அதை பார்த்தபோதுதான் ஆரியவர்தனின் எவ்வளவு செல்வவளம் படைத்தவன் என்று தெரியவந்தது. விழாவிற்கு வரும் விருந்தினர்கள் வழி தவறிவிடக்கூடாது என்பதற்காக ஆங்காங்கே பாடி-காட்ஸ் நிறுத்திவைக்கப்பட்டிருந்தனர்.

முதலில் வரதராஜன் குடும்பத்தார் நீண்ட சாலையில் பயணித்தார்கள். சாலையின் இரு பக்கங்களிலும் மரங்கள் வளர்க்கப்பட்டிருந்தன. அந்த சாலையிலிருந்து இடதுபக்கம் ஒரு பாதை பிரிந்தது. அது 'வர்தன் பேலஸ்' அதாவது ஆரியவர்தன் வசிக்கும் இடத்திற்குச் செல்லும் வழி.

WhatsApp Image 2025-01-08 at 1.42.10 PM.jpeg
அங்கு யாரும் செல்லாவண்ணம் ஒரு கேட் போடப்பட்டிருந்தது. அதே சாலையில் இன்னும் சற்று தூரத்தில் பயணித்தபோது வலப்புறம் மற்றொரு சாலை பிரிந்தது. அங்கு 'வர்தன்ஸ் மினி ஃரஸ்ட்' என்று செல்லமாக அழைக்கப்படும் அவனுடைய பிரம்மாண்டமான தோட்டம் அமைந்திருந்தது.
WhatsApp Image 2025-01-08 at 1.45.25 PM.jpeg
மேலும் பயணித்தபோது அவர்கள் செல்லவேண்டிய இடமான 'பார்ட்டி ஹவுஸ்' வந்தது. வர்தன் வீட்டில் எந்தஒரு பார்ட்டி என்றாலும் அங்கு தான் வைத்து கொண்டாடப்படும்.
WhatsApp Image 2025-01-08 at 1.48.27 PM.jpeg
வழியில் வரும்போது அங்கிருந்த அனைத்தையும் ரியாவும் நியதியும் ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டே வந்தார்கள்.

அது மாலைநேரம் என்பதால் அந்தஇடம் மிகவும் அழகாக இருந்தது. 'பார்ட்டி ஹவுசிற்குள்' நுழைத்த வரதராஜன் குடும்பத்தாரை முதலில் வரவேற்றது ஆரியவர்தனின் பாட்டியான சந்திரமதி.

நிச்சயதார்த்தத்திற்கான அந்த இடம்முழுவதும் பூக்கள் மற்றும் வண்ணவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு மிகவும் அழகாக காணப்பட்டது.

ரியாவும் நியதியும் அனைத்து ஏற்பாடுகளைப் பார்த்து பிரம்மித்துப்போயிருந்தனர். அதை பார்த்த சந்திரமதி,

"என்ன ரியா அரேஞ்மெண்ட்ஸ் எல்லாம் பிடிச்சிருக்கா?" என்று கேட்டபோது, "ரொம்ப நல்லா இருக்கு பாட்டி. ரியலி அமேசிங்" என்று தான் கண்டு பிரம்மித்ததை வாயாரப் புகழ்ந்தாள். அப்போது ஆரியவர்தனும் தன்னுடை செக்ரெட்டரி பார்கவுடன் அங்குவந்து சேர்ந்தான்.

விழாவின் நாயகனான ஆரியவர்தன் பிளாக் டக்சிடோவிற்கு பொருத்தமான டையும், ஷூவும் அணிந்து மாப்பிள்ளைக்கே உரிய லக்ஷணங்களுடன் மிடுக்காகக் காணப்பட்டான்.

WhatsApp Image 2025-01-08 at 1.56.57 PM.jpeg
அவன் வீல்சாரில் அமர்ந்திருந்தபோதும் அவனுடைய கம்பீரம் சற்றும் குறையவில்லை. அவனையே மெய்மறந்து பார்த்துக்கொண்டிருந்த நியதி சட்டென நிதானத்திற்கு வந்தாள். விருந்தினர்களின் வருகை அதிகரித்ததும் விழா துவங்கியது.

விழாவின் நாயகனான ஆரியவர்தன் வீல் சாரில் மேடைக்குச் சென்றான். அவனுடைய குடும்பத்தில் அவனுக்கென்று இருப்பது அவனுடைய பாட்டி ஒருவர் மட்டுமே. அவரும் அவனுடன் சேர்ந்து அந்த மேடையில் நின்றார்.

பின் ரியாவும் அவளுடைய குடும்பத்தாரும் மேடையை நோக்கிச் செல்ல இருந்தனர். அப்போது மாலினி நியதியை ஒரு கையசைவால் அங்கேயே நிற்குமாறு கூறிவிட்டு தன்னுடைய கணவர் மற்றும் மகளுடன் மேடைக்குச் சென்றாள்.

ரியா நியதியைப் பற்றி விசாரித்தபோது, "ஏதோ போன் பேசணும்னு போயிருக்கா. இப்போ வந்திருவா" என்று பொய் கூறினாள். விழாவின் நாயகன் மற்றும் நாயகி ஒருவருக்கொருவர் மோதிரத்தை மாற்றிக் கொண்டனர். இவையனைத்தையும் நியதி தொலைவிலிருந்து ரசித்திகொண்டிருந்தாள்.

நிச்சியதார்தம் முடிந்ததும் அனைவரும் ரியா மற்றும் ஆரியவர்தனுக்கு மேடையேறி வாழ்த்து தெரிவித்துவிட்டு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

அனைத்தையும் பார்த்துக்கொண்டே நின்ற நியதியிடம் மதுபோதையில் ஒருவன், "ஹே...சுவீட்டி...நீ ரொம்ப அழகா இருக்க" என்று வாய்உளற பேசினான். அவனை ஒரு எரிச்சல் பார்வை பார்த்துவிட்டு அங்கு நிற்க பிடிக்காமல் வேகவேகமாக நகர்ந்தாள்.

ஆனாலும் அவன் அவளை விடாமல் பின்தொடர்ந்தான். "என்ன...சு..வீட்டி இப்படி பயப்படுற. கம் ஹியர்.." என்று அவளை அழைத்தான். அவன் ஒவ்வொரு அடியும் முன்னெடுத்துவைக்க நியதி பின்னோக்கி நகர்ந்தாள்.

அப்படியே நகர்ந்தவள் பின் நின்ற நபரை பார்க்காமல் அவர்மீது இடித்துகொண்டாள். இடித்ததில் தடுமாறி விளப்போனவளை இரு கைகள் தாங்கி பிடித்தன. நியதி ஆச்சரியத்துடன் பார்க்கவும் அவன் அவளை நிறுத்தினான்.

அப்போது அவள் பயத்துடன் தன்னை துரத்திக்கொண்டுவந்தவனைப் பார்த்தாள். அவனும் அவள் பார்த்த திசையில் தன் பார்வையை செலுத்தியபோது விஷயத்தை அறிந்துகொண்டான்.

"மிஸ்டர் ராஜீவ் நீங்க எங்க இருக்கீங்கன்னு உங்களுக்கு தெரியும்ல? இங்க நடந்த விஷயம் மட்டும் ஆரியவர்தனுக்கு தெரிஞ்சா உங்களோட நிலைமையும் உங்க பிஸினெஸ்ஸோட நிலைமையும் என்ன ஆகும்னு உங்களுக்கு தெரியுமா? இங்க இங்க நீங்க கெஸ்டுங்கறத மறந்துராதீங்க" என்று அவனை மிரட்டுவதுபோல் கூறிவிட்டு அருகில் நின்றுகொண்டிருந்த மெய்க்காப்பாளர்களைப் பார்த்து, "காட்ஸ்! சார்கு போதைய தெளியவைங்க" என்று ஆணையிட்டான்.

உடனே அந்த ராஜீவை அங்கிருந்து அவர்கள் வேறு இடத்திற்கு அழைத்துச் சென்றார்கள். பின் அவன் நியதியின் பக்கம் திரும்பி, "ஐ அம் ரியல்லி சாரி. இனிமேல் இப்படி நடக்காது" என்று மன்னிப்பு கேட்டான். உடனே அவள், "தாங்க யூ" என்று நன்றி தெரிவிக்க அவன் லேசாக புன்னகைத்துவிட்டு அங்கிருந்து சென்றான்.

அவன் போகும் திசையை பார்த்துக்கொண்டே நின்றிருந்த நியதியின் கையை யாரோ பிடித்து இழுத்தார்கள். யார் என்று திரும்பிப்பார்த்தபோது, "நீ என்ன நிதி எப்போ பார்த்தாலும் தொலஞ்சி போய்டுற? வா என் கூட" என்று ரியா அவளை தன்னுடன் மேடைக்கு அழைத்துச் சென்றாள்.

அங்கு ஆரியவர்தன் தனக்கு நெருக்கமான ஒரு நபரை வரதராஜன் குடும்பத்தாருக்கு அறிமுகப் படுத்துவதாகக் கூறவும் அனைவரும் ஆவலாக காத்துக்கொண்டிருத்தனர்.

"பார்கவ் அவனுக்கு சீக்கிரம் கால் பண்ணு" என்று அரியவர்தன் ஆணையிடவும், "பண்ணீட்டேன் சார். வந்துட்றேன்னு சொன்னாரு" என்று கூறினான். அப்போது, "சாரி எல்லாரையும் வெயிட் பண்ணவச்சதுக்கு.." என்று ஒரு குரல் கேட்டது. அவன் வேறுயாருமல்ல நியதியை அந்த ராஜீவிடமிருந்து காப்பற்றிய அதே நபர்.

அவன் ஆரியவர்தனின் அருகில் சென்று நிற்க, "திஸ் ஐஸ் ரஞ்சித். மை பெஸ்ட் ஃரெண்ட். என்னோட ஃமிலி மெம்பர்" என்று அறிமுகப்படுத்தினான். நியதி ஆச்சரியத்தோடு 'ஓ அப்போ இவருதான் ரஞ்சித் சாரா' என்று தன் மனதிற்குள் நினைத்துக்கொண்டாள்.

நியதி ரஞ்சித்தைப் பார்த்ததில்லை என்றாலும் ஆரியவர்தனைப் பற்றியசெய்திகளை சேகரிக்கும்போது ரஞ்சித்தின் பெயரை கேள்விப்பட்டிருக்கிறாள்.

அதன் பின் அங்கு அனைவரும் நடனமாடத் துவங்கினர். நியதி எப்போதும் பணக்காரச் சூழலை தவிர்த்துவிடுவாள். அனைவரும் நடனமாடச்சென்றபிறகு அங்கு மேலும் நிற்க பிடிக்காமல் வெளியேறினாள்.

வெளியேவந்தவளின் கண்களுக்கு அந்த பரந்த புல்வெளி தெரிந்தது. ஆங்காங்கே அமர்வதற்கு போடப்பட்டிருந்த பெஞ்சில் அமர்ந்து நிலவை ரசிக்கத் துவங்கினாள்.

_1897d501-1943-4db3-b2eb-0805921ed072.jpg
அன்று முழுநிலவு என்பதால் அந்த வட்டநிலா கருப்பு வெல்வெட் துணியில் வெள்ளி தட்டை வைத்ததுபோல் அழகாக காட்சியளித்தது.

மேலும் அங்கு வீசிய தென்றல் காற்றும், நிசப்தமாக இருக்கும் அந்த இடமும் அவளுடைய மனதிற்கு அமைதியைக் கொடுத்தது. தன்னுடைய கண்களை மூடியவாறு அந்த தென்றலை அனுபவித்தாள்.

அப்போது ஆரியவர்தன் இந்த விழாவிற்காக தயாராகி வந்த காட்சி அவளுடைய மனதில் ஓடியது. சட்டென தன் கண்களைத் திறந்தாள். ஏன் தனக்கு இவ்வாறு தோன்றுகிறது என்று நினைக்கும்போதே, "மேடம்க்கு நான் பண்ண அரேஞ்மென்ட்ஸ் பிடிக்கலையா? அதான் இங்க இருக்கீங்களா?" என்று ஒரு குரல் கேட்டது.

திரும்பிப் பார்த்தபோது ஆரியவர்தன் தன்னுடைய ஆட்டோமேட்டிக் வீல்சாரில் அவளை நோக்கி வந்துகொண்டிருந்தான்.

அவன் அவளருகில் வந்து நிற்கவும், "அப்படிலாம் இல்ல சார். ரொம்ப நல்லா இருக்கு....எனக்கு இயற்கைன்னா ரொம்ப பிடிக்கும். அதான் பாக்கலாம்னு வெளியவந்தேன். நீங்க..." என்று அவள் கேட்கவும், "எனக்கு பார்ட்டினாலே அலர்ஜி. கொஞ்சம் ஃரெஷ் ஆகிட்டு போகலாம்ன்னு வந்தேன்” என்று சாதாரணமாகக் கூறினான்.

பின் அங்கு ஒரு அமைதி நிலவியது. ஆரியவர்தனை நேரில் சந்திக்கும்போது பிஸினெஸைப் பற்றி நிறைய கேள்விகள் கேட்கவேண்டும் என்று நியதி எண்ணியதுண்டு. இப்போது அந்த வாய்ப்பு கிடைத்தும் அவளால் எதுவும் பேசமுடியவில்லை.

'என்ன பேசுவது?' என்று அவள் யோசித்துக்கொண்டிருக்கும்போதே அவனிடமிருந்து கேள்வி வந்தது. "நீ என்னோட பெரிய ரசிகைன்னு எனக்கு ஒரு நியூஸ் வந்ததே.." என்று அவன் கூறவும், 'போச்சுடா ரியா சொல்லீட்டாளா. இவளுக்கு வேற வேலையே இல்ல' என்று தன் மனதிற்குள் ரியாவை செல்லமாகக் திட்டினாள்.

அவள் 'ஆம்' என்பதுபோல் அசடுவழிய தலையசைக்கவும், "அப்போ உனக்கு என்னோட பிசினஸ் ஸ்ட்ராடஜில எது ரொம்ப பிடிச்சதுன்னு சொல்லு" என்று அவளிடம் கேட்டான். அவ்வளவு தான், நியதி தன் மனதில் அவனைப் பற்றி பாராட்டி சொல்லநினைத்த அனைத்தையும் மடைதிறந்த வெள்ளம்போல் கூறலானாள்.

WhatsApp Image 2025-01-08 at 4.07.47 PM.jpeg
அவன் தன்னுடைய தொழிலில் பயன்படுத்தும் அனைத்து யுக்திகள், ஒவ்வொரு பிரஸ் மீட்டிலும் அவன் பேசியவை, மேகஸினில் அவனைப் பற்றி படித்தது என்று அவன் இந்த துறையில் முதன் முதலில் கால் எடுத்துவைத்ததிலிருந்து இன்றுவரையிலான அனைத்து செய்திகளையும் ஒன்றுவிடாமல் கூறினாள்.

அவளுடைய பேச்சை கேட்டுக்கொண்டே இருந்தவனுக்கு ஒரு சில இடம் வியப்பாகவும், வேறு சில இடத்தில் பெருமையாகவும் இருந்தது. அவன் அவளையே பார்த்துக்கொண்டிருப்பது அவளுக்கு ஏதோ தோன்ற தன்னுடைய பேச்சை நிறுத்தினாள்.

"வாவ்! ஃண்டாஸ்டிக்! என்ன பத்தி எனக்கே தெரியாத பல விஷயம் நீ சொல்லும்போதுதான் எனக்கு தெரியுது. ரொம்ப ஆச்சரியமா இருக்கு. ம்ம்.....இன்டெரெஸ்ட்டிங்.....வெரி இன்டெரெஸ்ட்டிங்..." என்று அவளைப் பாராட்டினான்.

அப்போது, "சார் உங்கள பாட்டி கூப்டாங்க" என்று அவனுடைய செக்ரேட்டரி பார்கவ் அங்கு வந்தான். உடனே அவன், "இட் வாஸ் நைஸ் டாக்கிங் வித் யூ மிஸ் நியதி. வில் மீட் சூன்" என்று கூறிவிட்டு அவன் தன்னுடைய வீல்சேரில் செல்ல பார்கவ் அவனைப் பின்தொடர்ந்தான்.

விழா முடிந்ததும் வரதராஜன் குடும்பத்தார் தங்களது வீட்டிற்குத் திரும்பினர். ஆரியவர்தனின் பாட்டி சந்திரமதி, ரியாவிற்காக நிறைய பரிசுகளையும் அனுப்பிவைத்தார்.

அவர்கள் காரில் சென்றுகொண்டிருக்கும்போது, "நியதி, இன்னைக்கு நிறையபேரோட கண்ணு உன்மேலதான் இருந்தது. என்ன…யாராவது சிக்குனாங்களா?" என்று குறும்புச்சிரிப்புடன் கேட்டாள். அதற்கு, "வாய மூடு ரியா" என்று அவள் செல்லமாக அதட்டவும் அங்கு சிரிப்பலை பரவியது.

_c5dd203c-f09b-4c09-8cc0-0d2dc4f46004.jpg
அடுத்து திருமணத்திற்கான தேதி குறிக்கப்பட்டது. வரதராஜன் தன்னுடைய விருந்தினர்களை தங்கவைக்க ரிசார்ட்டில் ரூம் புக் செய்ய திட்டமிட்டிருந்தார். அந்தவேலையை முடிக்க நியதியை அந்த ரிசார்டிற்கு அனுப்பிவைத்தார்.

அப்போது, "அப்பா எனக்கும் வீட்லயே இருக்க போரடிக்குது. நானும் அவகூட போயிட்டு வரேன்" என்று ரியா கூற இருவரும் அங்கு சென்றனர். ரூம்களை புக் செய்துவிட்டு சற்று இளைப்பாறுவதற்காக ஜுஸ் குடிக்க எண்ணி அந்த ரிசார்ட்டிலுள்ள ஒரு டேபிளில் அமர்ந்தனர்.

அந்த இடத்திலிருந்து பார்த்தால் நீச்சல் குளம் நன்றாக தெரியும். தற்செயலாக நீச்சல் குளத்தின் பக்கம் நியதியின் கண்கள் சென்றபோது அவள் அதிர்ந்துபோனாள். ரியாவை அழைத்து காட்டியபோது அவளும் அதிர்ச்சியடைந்தாள்.

மாயங்கள் தொடரும்...
 

Krishna Tulsi

Moderator
WhatsApp Image 2025-01-11 at 4.27.16 PM.jpeg
அங்கு மாயா ஒரு ஆடவனுடன் நீச்சல் குளத்தில் விளையாடிக்கொண்டிருந்தாள். அவள் வேறுயாருமல்ல சரணின் உயிருக்கு உயிரான காதலி. எப்போதும் சுடிதார் அணிந்து, கூந்தலைப் பிண்ணி, நிறைய பூவைத்து அழகாக காட்சியளித்த மாயா இன்று தன்னுடைய உடலமைப்பு தெரியுமளவிற்கு இறுக்கமான நீச்சலுடையை அணிந்திருந்தாள்.

அதுமட்டுமல்லாமல் அங்குள்ள ஒருவனுடன் கைகோர்த்துக் கொண்டு மார்பில் சாய்ந்தவாறு நீச்சல் குளத்தில் அமர்ந்திருந்தாள். அவர்களை யார் பார்த்தாலும் அனிச்சை செயலாக தங்களது தலையை தாழ்த்திக்கொள்ளும் அளவிற்கு அவர்களது செய்கைகள் இருந்தன. இந்த நெருக்கமே அவர்களுக்குள் என்ன உறவு இருக்கிறது என்பதை தெளிவாகக் காட்டியது. அதனை பார்க்க சகிக்காமல் ரியாவும் நியதியும் தங்கள் பார்வையை வெறுப்புறம் திரும்பிக்கொண்டனர்.
_ab562c25-1677-42da-9310-898cc2417939.jpg
"என்ன நிதி இந்த மாயா நம்ம சரணவிட்டுட்டு வேற எவன்கூடயோ சுத்துறா"

"அது வேறயாரோ இல்ல ரியா. சாகர் கன்ஸ்ட்ரக்ஷன்சோட சி.இ.ஓ அஷ்வத்"

"ஓ...அப்போ இவ பணத்துக்காக ஒரே நேரத்துல பலபேரோட சுத்திகிட்டு இருக்காளா? நம்ம சரண் பாவம் இவள நம்பி ஏமாந்துட்டு இருக்கானே"

"ஆமா ரியா. நான் இவள சாதாரணமா எடைபோட்டுடேன். எப்போ நம்ம சரணையே ஏமாத்துறான்னு தெரிஞ்சதோ இனிமேல் நான் பொறுத்துக்கவே மாட்டேன்" என்று கண்கள் சிவக்க கோபத்துடன் கூறினாள்.

"இந்த சதிகாரிய பத்தி எப்படியாவது சரணுக்கு சொல்லியே ஆகணும். உடனே அவனுக்கு கால் பண்ணு” என்று ரியா கூறவும் நியதி அவனை தன் கைபேசி மூலம் அழைத்தாள்.
அன்று காலையில்தான் தன்னுடைய அலுவலக வேலையாக வெளியூர் சென்றிருந்த சரண், வீடு திரும்பியிருந்தான். அலுப்பின் காரணமாக ஒரு நாள் விடுப்பு எடுத்திருந்தவன் ரியாவின் நிச்சயத்திற்கு வராத காரணத்தால் அவளை சந்தித்து மன்னிப்பு கேட்பதற்காக அவளிருக்கும் இடத்தை விசாரிக்க தன் கைபேசியை எடுத்தான்.
அப்போது 'என் ஃரெண்டப் போல யாரு மச்சான்' என்று அவனுடைய அழைப்புமணி அடிக்க புன்னகைத்தவாறே, "நானே உன்ன கால் பண்ணனும்னு நினச்சேன் பட் நீயே கால் பண்ணீட்ட. சொல்லு என்ன விஷயம்?" என்று கேட்டான்.
WhatsApp Image 2025-01-11 at 3.42.00 PM.jpeg
ஆனால் இங்கு மாயாவின் மேல் இருக்கும் கோபத்தை தன்னுள் அடக்கியவாறு, "நான் சொல்ற இடத்துக்கு வரியா சான்?" என்று சற்று இறுக்கமான குரலில் நியதி கேட்டாள்.

உடனே அவன், "என்ன வாலு வழக்கம்போல எங்கயாவது மாட்டிகிட்டீங்களா?" என்று புன்னகையுடன் கேட்க, "அதெல்லாம் இல்ல இப்போ நீ உடனே கிளம்பி ஸீ-ஷோர் ரிஸார்டுக்கு வா" என்று கூறினாள். ஆச்சரியத்துடன், "ஓ, இப்போ ரெஸ்டாரண்ட்ட விட்டு ரிசார்ட்டு லெவெலுக்கு போயாச்சா? சரி இரு இப்போ உடனே வர்றேன்" என்று கூறி தன்னுடைய அழைப்பை துண்டித்தான்.

அவன் வழியில் வரும்போது பொக்கே ஒன்றை வாங்கி அதில் 'சாரி' என்று சிறு காகிதத்தில் எழுதி வைத்திருந்தான்.
WhatsApp Image 2025-01-11 at 3.54.22 PM.jpeg
நியதி இருக்கும் இடத்தில் ரியாவும் இருப்பாள் என்று அவனுக்கு நன்றாகத் தெரியும். அதனால் தன் செயலுக்கு மன்னிப்பு கோரும்விதமாக அந்த பூச்செண்டை ரியாவுக்காக வாங்கினான்.

அவன் அந்த ரிசார்டிற்கு வந்தபோது ரியாவும் நியதியும் அமர்ந்திருப்பதைக் கண்டு வேகமாக அவர்கள் அருகில் நெருங்கினான். "சாரி ரியா என்னால உன்னோட என்கேஜ்மெண்ட்டுக்கு வரமுடியாம போய்டுச்சு. ஆனா பாரு ரியா உன் கல்யாணத்துக்கு நான்தான் எல்லா வேலையையும் இழுத்துப் போட்டு செய்வேன். சரியா இப்போ கோபிச்சிக்கிடாத பிலீஸ்..." என்று ரியாவைப் பார்த்து கெஞ்சியவாறே அவளிடம் அந்த பூச் செண்டை நீட்டி மன்னிப்பு கோரினான்.

"பரவா இல்ல சான். இட்ஸ் ஓகே" என்று கூறி லேசாக புன்னகைத்துவிட்டு நியதியைப் பார்த்தாள். உடனே நியதி, "ஆமா சான் உன் ஆள்....அதான் மாயா இருக்காள்ள அவள பாக்கவே முடியல? என்ன பண்றா?" என்று மாயாவைப் பற்றி விசாரித்தாள்.

மாயாவின் பெயரைக் கேட்டதும் சரண் சற்று வெட்கத்துடன், "எனக்கு அடுத்த வாரம் பெர்த்டே வருதுல அதுக்காக சப்ரைஸ் பிளான் பண்றேன்னு சொன்னா. இன்னைக்கு மீட் பண்ணலாம்னு சொன்னதுக்கு முக்கியமான மீட்டிங் இருக்குன்னு சொல்லிட்டா" என்று வருத்தத்துடன் கூறினான்.

"ஓ...முக்கியமான மீட்டிங்கா..." என்று இரு பெண்களும் இழுத்தனர். சரண் புரியாமல் அவர்களைப் பார்க்கவும், "அப்போ அந்த மீட்டிங் அதுதானான்னு பாரு" என்று மாயா இருக்கும் திசையை நோக்கி நியதி காட்டினாள். திரும்பி அந்த திசையில் பார்த்த சரணுக்கு தன் கண்களை நம்பவே முடியவில்லை.
WhatsApp Image 2025-01-11 at 3.56.56 PM.jpeg
அங்கு மாயா, அஷ்வத்தை அணைத்தவாறு நீச்சல்குளத்தின் அருகில் போடப்பட்டிருந்த நாற்காலியில் அமர்ந்திருந்தாள். அதை பார்த்தபோது சரணுக்கு வானமே இடிந்து விழுந்ததுபோல் இருந்தது. அந்த காட்சியை இமைக்காமல் பார்த்தவண்ணம் அப்படியே நின்றுகொண்டிருந்தான்.

பின் சரணுடைய கைபேசியை வாங்கி மாயாவை அழைத்து போனை ஸ்பீக்கரில் போட்டாள். சரண் அழைப்பது தெரிந்ததும் மாயா, 'இவன் ஏன் இப்போ கூப்பிட்றான்?' என்று எரிச்சலுடன் தன்னுடைய கைபேசியை எடுத்தாள். "ஹே பேபி! ஐ மிஸ் யூ சோ மச். இப்போ தான் உன்னை பத்தி நினைச்சிகிட்டு இருந்தேன் நீயே கால் பண்ணீட்ட. சோ ஸ்வீட் ஆப் யூ" என்று கொஞ்சும் குரலில் கூறினாள்.

தூரத்திலிருந்து அவர்கள் அவளை பார்த்துக்கொண்டிருந்ததால் அவளுடைய முகபாவனை மாறியதை மூவரும் கவனித்தனர். "நான் நியதி பேசுறேன் மாயா" என்று கூறவும், 'ஓ இவளா' என்று நினைத்துவிட்டு, "என்ன நியதி என்னைக்கும் இல்லாம நீ என்கூட பேசுற? என்ன விஷயம்?" என்று மாயா விசாரித்தாள்.

அதற்கு, "இல்ல...பாத்து ரொம்ப நாளாச்சா. அதான் மீட் பண்ணுவோம்னு கூப்பிட்டேன்" என்று நியதி கூறினாள். உடனே மாயா, "சாரி நியதி இன்னைக்கு மீட்டிங் விஷயமா நான் என் பாஸோட வெளிய வந்திருக்கேன். அதனால இன்னைக்கு முடியாது" என்று கூறி சமாளித்தாள். "ஓ அப்படியா...சரி எங்க மீட்டிங் நடக்குது?" என்று நியதி கேட்டதற்கு, "நானும் சரணும் எப்பவுமே மீட் பண்ணுவோம்ல அந்த மால்ல உள்ள மீட்டிங் ஹால்ல தான்" என்று கூறினாள்.

உடனே நியதி, "வாட் எ சப்ரைஸ் மாயா நாங்களும் அங்க தான் இருக்கோம். கொஞ்சம் திரும்பிப் பாரு" என்று நியதி கூறியபோது மாயா திகைத்து திரும்பினாள்.

அங்கு கோபத்தால் சிவந்த கண்களுடன் சரண் நிற்க, பெண்கள் இருவரும் 'மாட்னியா?' என்று புருவத்தை உயர்த்திப்பார்த்தவாறு நின்றுகொண்டிருந்தார்கள். "ஐ கேன் எக்ஸ்பிளைன் சரண்" என்று மாயா அவனை நோக்கி அடியெடுத்து வைத்தபோது அவளை கையசைவால் நிறுத்தினான்.

"உனக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்ல. இனிமேல் என்ன பாக்க வராத. குட் பை" என்று கூறிவிட்டு, நிர்காமல் அங்கிருந்து சென்றான். அவனை பின்தொடர்வதற்காக சென்ற மாயாவை நியதி தடுத்து நிறுத்தினாள். "வழிவிடு நியதி நான் சரண பாக்கணும்" என்று மாயா கூறவும், "எதுக்கு அவன மறுபடியும் ஹர்ட் பண்ணவா? சரண் எவ்வளவு நல்லவன் தெரியுமா? அவன் உன் மேல எவ்வளவு பாசம் வச்சிருக்கான்னு தெரியுமா?”
_02c494e6-8810-436d-903f-8a67fbc42a33.jpg
“உனக்கு ஒண்ணுன்னா அவன் துடிச்சிபோய்டுவான். அப்படிப்பட்ட நல்லவன எப்படிடீ உனக்கு ஏமாத்த மனசு வந்துச்சு? நீயெல்லாம் ஒரு பொண்ணு தானா? ச்ச.." என்று கோபத்துடன் நியதி மாயாவைப் பார்த்து கேட்டாள். ஒவ்வொரு கேள்வியாகக் கேட்டுக்கொண்டே நியதி முன்னோக்கி நகர்ந்து செல்ல மாயா பின்னகர்ந்தாள்.

"இவ பொண்ணு இல்ல பணத்தாச பிடிச்ச பேய்" என்று ரியா மாயாவை கூற, "ஏய் ரியா மைண்ட் யுவர் வேட்ஸ்" என்று மாயா கோபப்பட்டாள். உடனே நியதி, "உன் மேல தன்னோட முழுஅன்ப செலுத்தி நீதான் அவனோட வாழ்க்கைன்னு வாழ்ந்துகிட்டு இருந்தவனை இப்படி காயப்படுத்திட்டியே. உனக்கு எதுக்குடி மரியாத குடுக்கணும்?" என்று நியதி கோபமாகக் கேட்டுக்கொண்டே முன்னகர்ந்தாள்.

அவர்களுக்கு பதிலழித்துக்கொண்டே பின் நகர்ந்த மாயா தனக்கு பின்னிருக்கும் நீச்சல் குளத்தை மறந்தாள். "ஹே நியதி..." என்று கூறும்போதே நீச்சல்குளத்தில் விழுந்துவிட்டாள். நீரின் ஆழத்திற்கு சென்று மீண்டும் மேலே மாயா வந்தபோது நியதி அவளைப் பார்த்து, "நீ இனிமேல் என் சரண் பின்னால வரவே கூடாது. அப்படி நீ வர்றது தெரிஞ்சா நடக்கிறதே வேற" என்று அவளை மிரட்டிவிட்டு, "வா ரியா போகலாம்" என்று நியதி கூற இருவரும் அங்கிருந்து சென்றார்கள்.

'என்னை இப்படி அவமானப் படுத்துனீல நியதி. நான் உன்ன சும்மா விடவே மாட்டேன். கண்டிப்பா நீ என்கிட்ட ஒருநாள் மாட்டுவ. அப்போ வச்சிக்குறேன்' என்று தன் மனதிற்குள் நியதியின் மீது மாயா வஞ்சத்தை வளர்த்துக்கொண்டாள்.
_fbbaf817-93a3-4ebd-a5a4-8c3a28976d45.jpg
சரணை தேடிக்கொண்டு சென்றபோது அவன் அந்த ரிசார்டிலுள்ள பார்க்கில் அமர்ந்திருப்பது தெரியவந்தது. உடனே அவர்கள் அவனருகில் அமர்ந்து, "டேய் சரண் ஃல் பண்ணாதடா. இப்பவாவது இந்த ராச்சசிய பத்தி உனக்கு தெரியவந்துச்சுன்னு நினைச்சி சந்தோஷப் பட்டுக்கோ" என்று ரியா அவனை தேற்றினாள்.
_ca50a44e-51a8-47f2-9885-09e5f3341041.jpg
அவன் எந்தஒரு அசைவும் இல்லாமல் அப்படியே அமர்ந்திருக்கவும், "காலேஜ் படிக்கும்போது எத்தனை பொண்ணுங்க உன் பின்னால சுத்துனாங்க. ஒரு நாளைக்கு மினிமம் பத்து லவ் லெட்டராவது வரும். அதுல நிறைய அழகான பொண்ணுங்களும் இருந்தாங்க”

“அப்படி அவங்க எல்லாத்தையும் விட்டுட்டு போயும்போயும் இந்த மாயாவ ஏன்டா லவ் பண்ண? நீயெல்லாம் எப்படி வாழவேண்டியவன் அநியாயமா இப்படி பொதக்குழியில விழப்பாத்திருக்கியேடா?" என்று நியதி தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தியபோது சரண் லேசாக புன்னகைத்தான்.

உடனே நியதியும் புன்முறுவலுடன், "டேய் எப்பவுமே சொல்லுவாங்கல 'நம்மள விட்டு ஏதாவது ஒண்ணு போச்சுன்னா அதைவிட பெஸ்டா வேற ஒண்ணு நம்ம லைஃல வரும்னு'. அது மாதிரி தான்டா இதுவும். இந்த மாயா மட்டும் தான் இருக்காளா வேற யாருமே இல்லையா? ஷி டஸின்ட் டிசெர்வ் யூ”

“நீ என்னோட 'பிரின்ஸ் பிரதர்' டா. இந்த பிரின்ஸ் பிரதர்க்கு ஈக்குவலான ஒரு 'பிரின்சஸ்' கண்டிப்பா வருவா. சோ நோ வொரிஸ்" என்று நியதி கூறவும் சரண் இயல்புநிலைக்கு வந்தான். அவன், "உங்கள மாதிரியான ஃரெண்ட்ஸ் கிடைக்க நான் ரொம்ப கொடுத்து வச்சிருக்கணும்" என்று கூற இரு பெண்களும், "ஓ" என்று கூச்சலிட்டு நகைத்தனர். பின் அங்கு நண்பர்களுக்கு இடையிலான பேச்சுக்களும் கேலியும் கிண்டலுமாக இருந்தது.

அங்கு அவ்வாறு இருக்க 'வர்தன் பேலசில்' ஆரியவர்தன் வீல்சாரில் அமர்ந்தவாறு யாரையோ தன்னுடைய கைபேசியில் அழைத்து, "எனக்கு கல்யாணம் பிக்ஸ் ஆகிருக்கு. இன்னும் ஒரு மாசத்தில கல்யாணம்" என்று கூறவும் மறுமுனையிலிருந்து எந்த ஒரு பதிலும் வராமல் நிசப்தமாக இருந்தது.
WhatsApp Image 2025-01-11 at 3.51.00 PM.jpeg
சிறிது நேரம் கழித்து, "என்ன திடீர்னு?" என்று ஒரு பெண்ணின் குரல் கேட்டது. உடனே, "பாட்டி கம்பெல்பண்ணாங்க அதான் இப்படி செய்யவேண்டியதா போச்சு. நீ கல்யாணத்துக்கு எப்ப வருவ?" என்று ஆரியவர்தன் கேட்டான். அதற்கு, "சாரி ஆரி என்னால முடியாது. இங்க கொஞ்சம் பர்சனல் ஒர்க்ஸ் இருக்கு" என்று அவள் கூறினாள்.

ஆனால் அவனோ, "ஹே நீ எனக்கு எவ்வளவு முக்கியம்னு உனக்கு தெரியும்ல? நீ இருந்தா நான் கொஞ்சம் பெட்டெரா ஃல் பண்ணுவேன். ப்ளீஸ் வா" என்று அவளை இங்கு வருமாறு வேண்டினான். ஆனால் அவள் அப்போது, "இல்ல ஆரி. என்னால கண்டிப்பா முடியாது. ப்ளீஸ் டூ அண்டர்ஸ்டாண்ட்" என்று அவள் தன்னுடைய முடிவை தெரிவித்தாள்.

உடனே ஒரு பெருமூச்சு விட்டு, "இட்ஸ் ஓகே. அட்லீஸ்ட் இந்தியா வரும்போதாவது என்ன பாக்கவா" என்று கூறவும், "ம்ம்.." என்று அந்த பெண் கூறினாள். சிறு மௌனத்திற்குப் பின், "கங்கிராட்ஸ் ஆரி" என்று கூற, "தாங்க் யூ" என்று பதிலுரைத்தான். அந்த அழைப்பை துண்டித்துவிட்டு ஆரியவர்தன் ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கினான்.
WhatsApp Image 2025-01-11 at 3.50.05 PM.jpeg
மாயங்கள் தொடரும்...
 

Krishna Tulsi

Moderator
WhatsApp Image 2025-01-15 at 7.52.00 PM.jpeg
திருமணத்திற்கு இன்னும் இரண்டே வாரங்கள் இருக்கும் நிலையில் வேலைகள் வேகவேகமாக நடக்கத் துவங்கின. வரதராஜன் குடும்பத்தார் மூச்சு விடுவதற்கு கூட நேரமில்லாமல் வேளைகளில் ஈடுபட்டனர். நியதி காலை அலுவலக வேலையிலும் மதியம் திருமண வேலையிலும் மும்மரமாக இருந்தாள். தன்னைப்பற்றி சிந்திக்கக் கூட நேரமில்லாமல் வேலைகளைச் செய்துகொண்டிருந்தாள்.

அதேசமயம் ஆரியவர்தனின் பாட்டி சந்திரமதி ரியாவிற்கு முகூர்த்தப் புடவையை தேர்ந்தெடுப்பதற்காக அவளையும் மாலினியையும் 'வர்தன் பேலஸிற்கு' அழைத்திருந்தார். நியதி தன்னுடைய அலுவலக வேலையை முடித்துவிட்டு, 'யப்பா இந்த ரியாவோட கல்யாணம் நல்லபடியா சீக்கிரமா நடக்கணும். அதுக்கப்பறம் நாம நல்லா ரெஸ்ட் எடுக்கலாம். முடியல.....பெண்டு நிமிருது' என்று அலுப்பை போக்கிக்கொள்ள தன் கைகளை நெட்டியிழுக்கும்போது அவளுடைய தொலைபேசிக்கு ரியாவின் அழைப்பு வந்தது.
_288a5a9c-297d-421a-8a0d-73485467b075.jpg
'இப்போ எங்க கூப்பிட போறாளோ?' என்று நினைத்தவாறே, "சொல்லு ரியா இன்னைக்கு எங்க போகணும்?" என்று சோர்வான குரலில் கேட்டபோது, "வர்தன் மேன்ஷன்க்கு போகணும் சீக்கிரம் வா" என்று ரியா பதிலுரைத்தாள்.

ஆச்சரியத்துடன், "ரியா, கல்யாணத்துக்கு இன்னும் ரெண்டுவாரம் இருக்கு. அதுக்குள்ள அவர பாக்காம இருக்கமுடியலையா?" என்று நியதி கேட்டபோது, "அதெல்லாம் இல்ல நிதி. அவரோட பாட்டி கல்யாணத்துக்கு சாரியும் ஜுவல்லரியும் செலக்ட் பண்ண கூப்டாங்க அதான்" என்று செல்லவேண்டிய காரணத்தைக் கூறினாள்.
உடனே நியதி, "ஓ...அப்போ அந்த சாக்குல அவர நீ பாக்குறதுக்காக போகுற என்ன?" என்று சீண்டும் குரலில் கேட்கவும், "ஓவர்திங்கிங் உடம்புக்கு ஆகாது. நீ சீக்கிரம் கிளம்பி வீட்டுக்கு வா. நாம மூணுபேரும் அங்க போவோம்" என்று கூறினாள். "இதோ இப்போவே வர்றேன்" என்று கூறி அங்கிருந்து விரைந்து வீட்டிற்கு கிளம்பினாள்.

மாலினி ரியாவைப் பார்த்து, "அவங்க நம்ம ரெண்டு பேர மட்டும் தான் கூப்டாங்க. நீ எதுக்கு போற இடத்துக்கெல்லாம் அவளையும் இழுக்குற?” என்று கோபத்துடன் கேட்டாள். ரியா தன் தாயின் அருகில் வந்து, "இந்த டயலாக்க நீங்க மாத்தவே மாட்டீங்களா?" என்று கேட்கவும், "நான் சொன்னா எப்போ நீ கேட்ருக்க? போ ஏதாவது பண்ணு" என்று கூறி அங்கிருந்து சென்றாள்.

பெண்கள் மூவரும் வர்தன் மேன்ஷனிலுள்ள, 'வர்தன்ஸ் பேலசிற்கு' சென்றபோது தகுந்த மரியாதையுடன் நன்கு உபசரிக்கப்பட்டனர். அவர்களை சந்திரமதி புன்முறுவலுடன் வரவேற்று புடவை மற்றும் நகைகள் வைத்திருக்கும் இடத்திற்கு அழைத்துச்சென்றார். அந்த இடத்தை அடைந்த மூன்று பெண்களுக்கும் ஆச்சரியத்தில் கண்கள் விரிந்தன.
_da2c43f6-f94b-440a-8841-f8363df35b06.jpg
மாலினி தன் வாயைப் பிளந்து பிரம்மிப்புடன் அந்த இடத்தை பார்த்துக்கொண்டிருந்தாள். அந்த அறை மினி டெக்ஸ்டைல் மற்றும் ஜுவல்லரி கடையை போல் காட்சியளித்தது. ஒருபுறம் முழுவதும் அனைத்து வகையான லெஹெங்காக்களும் மற்றொரு பக்கம் அழகிய வேலைப்பாடுகள் செய்யப்பட்ட பட்டுப் புடவைகளும் அதற்கேற்றாற்போல் ஆரி வேலைப்பாடு செய்யப்பட்டிருந்த ஜாக்கெட்டுகளும் வைக்கப்பட்டிருந்தது.

மறுபுறம் புடவைகளுக்கு ஏற்றார்போல் நகைகளை தேர்ந்தெடுக்க டையமண்டுசெட், சோக்கர்ஸ், ஹாரம் என பலவகையான நகைகள் அடுக்கப்பட்டிருந்தன. அங்கிருந்த அனைத்து லெஹெங்காக்கள், புடவைகள் மற்றும் நகைகள் அனைத்தும் இந்தியாவின் டாப் ஃஷன் மற்றும் ஜுவல்லரி டிசைனர்களால் தயாரிக்கப் பட்டவை.

இன்னொரு பகுதியில் ஒரு ஆள் அளவிற்கு உயரமான கண்ணாடி. தேர்ந்தெடுக்கும் புடவைகள் மற்றும் நகைகள் எவ்வாறு இருக்கின்றது என்பதை பார்ப்பதற்காக அங்கு வைக்கப்பட்டிருந்தன. இவையனைத்தையும் பார்த்து மெய்ம்மறந்து நின்றவர்களை சந்திரமதியின் குரல் யதார்த்தத்திற்கு கொண்டுவந்தது.

"ரியா உனக்கு இதுல எது பிடிச்சிருக்கோ அத எல்லாத்தையும் நீ எடுத்துக்கோமா. இது எல்லாமே மாப்பிளைவீட்டுசார்பா பொண்ணுக்கு குடுக்குறது. நீங்க யங் ஜெனரேஷன். உங்க டேஸ்ட் வித்யாசமா இருக்கும். அதான் உனக்கு பிடிச்சத நீயே செலக்ட் பண்ண சொன்னேம்மா. இப்போ அதிதி மட்டும் இங்க இருந்தா அவளே எல்லாத்தையும்...." என்று கூறும்போதே சந்திரமதியின் முகத்தில் சோகம் பரவியது.

சுற்றியிருப்பவர் தன்னையே பார்த்துக்கொண்டு நிற்பது தெரிந்ததும், "சரி சரி ரியா சீக்கிரம் செலக்ட் பண்ண ஆரம்பி. இப்போ ஆரம்பிச்சாதான் நைட்டுகுள்ளயாவது முடியும்" என்று கூற அனைவரும் தாங்கள் வந்த வேலையை பார்க்கத் துவங்கினர். ரியாவும் நியதியும் பட்டுப்புடவை பிரிவில் நின்று பார்த்துக்கொண்டிருக்கும்போது, மாலினி ரியாவை தன்னுடன் நகைகளை பார்க்கவருமாறு அழைத்துச்சென்றாள்.

தனித்து விடப்பட்ட நியதி அங்கு அழகாக அடுக்கிவைக்கப்பட்டிருந்த டிசைனர் பட்டுப்புடவைகளை பார்க்கத் துவங்கினாள். அனைத்து சேலைகளும் நன்றாக இருந்தாலும் ஒரு புடவை மட்டும் நியதியின் கருத்தைக் கவர்ந்தது. இளம்பச்சை நிறத்தில் இருந்த அந்த புடவையில் தங்க ஜரிகையால் மயில் வடிவமைப்பில் ஆங்காங்கே வேலைப்பாடுகள் அழகாக செய்யப்பட்டிருந்தன. அது மிகவும் நியதிக்கு பிடித்திருந்தது.

எப்போது ஒரு பொருளை வாங்கினாலும் அதனுடைய விலையை பார்த்து வாங்குவது தான் நியதியின் வழக்கம். அன்றும் அதேபோல் விலையை பார்த்தபோது அவளுக்கு தூக்கிவாரிப்போட்டது. ஏனென்றால் அதில் ‘பதினைந்து லட்சத்தி ஐம்பத்திஐந்தாயிரம்’ என்று விலை போடப்பட்டிருந்தது. உடனே அதை யாரும் பார்க்காவண்ணம் அப்படியே வைத்துவிட்டாள்.

'யப்பாடி பதினஞ்சு லட்சமா.....பணக்காரங்க பணக்காரங்கதான்' என்று தன் மனதிற்குள் நினைத்துக்கொண்டிருக்கும்போதே ரியா தன்னுடைய தாயிடமிருந்து தப்பி நியதியின் அருகில் வந்தாள்.

"நிதி அம்மாவுக்கு கொஞ்சம் கூட காமன்சென்ஸ் இல்ல. முதல்ல சாரி எடுத்துட்டு அப்பறமா அதுக்கு மேட்சிங்கான ஜுவல்லரி எடுக்கணும்னு தெரியவே இல்ல. நீ வா நாம அங்க போய் சாரி அண்ட் லெஹன்கா பாப்போம். அதுல ஏதாவது எனக்கு செலக்ட் பண்ணு" என்று கூறி நியதியை அங்கிருந்து அழைத்துச் சென்றாள்.

வந்த வேலை முடிந்தவுடன் பெண்கள் மூவரும் கிளம்பும்போது அவர்களை நிறுத்தி, "அம்மா நியதி நீ எதுவும் எடுத்துக்கலையா.... இங்க இருக்குறதுல என்ன பிடிச்சிருக்கோ அத நீயும் எடுத்துக்கோ" என்று புன்முறுவலுடன் சந்திரமதி கூறினார். மாலினியின் முகம் கோபமாக மாறுவதை கடைக்கண்ணால் பார்த்துவிட்டு, "இருக்கட்டுங்க. ரியா எடுத்துகிட்டால்ல அதுவே போதும்" என்று கூறினாள்.

உடனே சந்திரமதி, "இல்ல நியதி நீ என் ஆசைக்காக ஏதாவது ஒண்ண நீ எடுத்துக்கணும்" என்று கூறவும் செய்வதறியாது அங்கே நின்றாள். அப்போது தனக்கு பிடித்தமான ஒன்றை அங்கிருந்து சந்திரமதி எடுத்து நியதியிடம் நீட்டி, "இந்த சாரி உனக்கு நல்லா பொருத்தமா இருக்கும். வாங்கிக்கோமா" என்று எடுத்துக்கொடுத்தார்.
_4f9f751b-c19e-40de-9ddd-fd88b536ac9f.jpg
அவள் வாங்காமல் அப்படியே நிற்கவும், "என்னமா பாட்டிக்காகயாவது வாங்கிக்க கூடாதா?" என்று கேட்டபோது நியதி மாலினியைப் பார்த்தாள். 'வாங்கிக்கோ' என்பதுபோல் அவள் கண்ணசைக்க நியதி அதனை பெற்றுக் கொண்டாள். பின் சந்திரமதியின் கால்களில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிவிட்டு, "ரொம்ப தாங்க்ஸ் மேடம்" என்று அவள் தன் நன்றியை தெரிவித்தாள்.

ஆனால் சந்திரமதியோ, "மேடமா? பாட்டின்னு கூப்பிடுமா. ரியாவுக்கு பாட்டின்னா நான் உனக்கும் பாட்டி தான்" என்று கூற நியதி புன்முறுவலுடன், "தேங்க்ஸ் பாட்டி" என்று கூறவும் சந்திரமதி புன்னகைத்தார். சந்திரமதியிடமிருந்து ஆசிர்வாதம் வாங்குமாறு மாலினி ரியாவைப் பார்த்து சைகை செய்ய அவளும் அவ்வாறே செய்தாள். அதன் பின் வரதன் குடும்பத்தார் அங்கிருந்து வீடு திரும்பினர்.

திருமணநாளும் நெருங்கியது. அவர்களது திருமணம் ஸீ-ஷோர் ரிசார்ட்டில் வைத்து நடக்கவிருந்தது. நிச்சயதார்த்தம் முன்னரே முடிந்ததால் திருமணத்திற்கு முந்தயநாள் இரவு ஒரு சிறுவிழா ஒன்று மட்டும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த விழா ஸீ-ஷோர் ரிசார்டிலுள்ள வெட்டிங் ஹாலில் நடைபெற இருந்தது.
நியதி அழகான தங்க நிறத்தில் பட்டு லெஹங்கா அணிந்திருந்தாள். அதனுடைய ஸ்கர்ட் முழுவதும் தங்கநிறத்தில் இருக்க பார்டர் சிவப்புநிறமாக இருந்து. அதில் தங்க ஜரிகையால் வேலைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அவள் அணிந்திருந்த நெட்டட் பிளவுசில் ஆங்காங்கே அழகிய வேலைப்பாடுகள் இருந்தன.
அவள் துப்பட்டாவில் ஹெவி ஆரி வேலைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. அவளுடைய கேசம் அலையலையாக விடப்பட்டு சிறு பூக்கள் மட்டும் வைக்கப்பட்டிருந்தன. அவளைப் பார்க்கும்போது ஒரு அழகிய விண்ணுலக தேவதை மண்ணுலகில் நடமாடுவது போல் இருந்தது.
WhatsApp Image 2025-01-15 at 8.12.12 PM.jpeg
அவள் தயாராகிவிட்டு ரியா இருக்கும் இடத்திற்குச் சென்றாள். மணமகள் அறையை திறந்தபோது அங்கு வயலட் நிற லெஹங்காவில் மிகவும் அடர்த்தியான வேலைப்பாடுகள் செய்யப்பட்டு, நெட்டெட் ஷாலை ஒருபுறமாக தொங்கவிட்டு, அதற்கேற்றாற்போல் தன்னுடைய சிகையை ஃரென்ச் பிரைட் ட்விஸ்ட் செய்து அழகான சிற்பம்போல் ரியா போட்டோஷூட் எடுத்துக்கொண்டிருந்தாள்.
_53b3eb71-3f25-4fe1-b99c-4db5d4eb313b.jpg
நியதி அந்த அறைக்குள் நுழையும்போதே ரியா அப்படியே அவளை பார்த்தவாறு ஆச்சரியத்துடன் நின்றாள். "வாரே வா நிதி. நீ எவ்வளவு அழகா இருக்கன்னு தெரியுமா? எப்ப பாத்தாலும் அந்த லெகின், சுடிதார் டாப், அதுக்கு மேல ஷாலுன்னு சுத்திகிட்டு இருக்குற நீ இன்னைக்கு ரொம்ப அழகா இருக்க. இப்படி தெரிஞ்சிருந்தா உன்ன நானே கல்யாணம் பண்ணீருப்பேனே....இப்பவும் டைம் இருக்கு இந்த கல்யாணத்த நிப்பாட்டீறலாமா?" என்று விஷமமாகக் கேட்டாள்.

அவள் கூறியதைக் கேட்டு அங்கிருந்த அனைவரும் நகைக்கத் துவங்கினர். உடனே, "ரியா, சும்மா இருக்கியா. நீயும் தான் அழகா இருக்க. உனக்கென்ன கொறச்சலாம். என் கண்ணே பட்டுடும்போல" என்று கூறி தன் கண்ணிலுள்ள மையை எடுத்து ரியாவிற்கு திருஷ்டி வைத்தாள். அப்போது மாலினி அந்த அறைக்குள் நுழைந்தாள்.

அவள் வருவது தெரிந்ததும் நியதி யாரும் அறியாவண்ணம் பின்னகர்ந்தாள். ஆனால் ரியா நியதியை விடாமல் தன்னுடன் போட்டோஷூட் எடுக்குமாறு வற்புறுத்தினாள். அதேசமயம் சரண் ரியாவை பார்ப்பதற்காக அந்த அறைக்குள் நுழையப் போனான். மாலினி இருப்பது தெரிந்தது அவன் பின்னடைந்தான்.

ஆனால் ரியா அவனையும் விடவில்லை "இங்க வாடா" என்று அவள் அழைத்தபோது சரண் தன் கண்பார்வையால் மாலினியை காட்டினான். ஆனால் ரியா எதையும் பொருட்படுத்தாமல் அவனையும் அவர்களது போட்டோஷூடில் சேர்த்துக்கொண்டாள்.
அப்போது மாலினி 'இந்த ரியாவுக்கு எத்தனையோ ஃரெண்ட்ஸ் இருக்காங்க. அப்படி இருக்க ஏன் இந்த அனாதைகளோடவே சுத்திகிட்டு இருக்கான்னு தெரியல' என்று தன் மனதிற்குள் நினைத்தாள்.

விழா துவங்கியதும் அந்த வெட்டிங் ஹாலிற்குள் ஆரியவர்தன் தன்னுடைய ராஜ வருகையைக் கொடுத்தான். அவன் அழகான ஸ்டைலிஷான ஸ்டீல் க்ரே டக்சீடோ அணிந்து அதற்கு பொருத்தமாக மெரூன் கலர் டையும் ஐவரி கலர் ஷர்ட்டும் அணிந்திருந்தான்.
WhatsApp Image 2025-01-15 at 3.27.49 PM.jpeg
அது அவனுடைய கம்பீரமான உடலமைப்பை அழகாக எடுத்துக்காட்டியது. அவன் தன்னுடைய ஆட்டோமேட்டிக் வீல்சேரில் முன்னே சென்று மேடையேற அவனுடைய நண்பன் ரஞ்சித் அவனைப் பின்தொடர்ந்தான். ஆரியவர்தன் ரஞ்சித்துடன் ஏதோ பேசிக்கொண்டிருக்கும்போது ரியாவை நியதியும் மற்ற தோழிகளும் அழைத்து அந்த ஹாலிற்குள் வந்தார்கள்.

அப்போது ஆரியவர்தன் தன்னை மறந்து அவளையே பார்த்துக்கொண்டிருந்தான். அதை கவனித்த ரஞ்சித் ஆரியனின் காதருகில் வந்து, "டேய் ஆரி இப்பவே விழுந்துராதடா" என்று கூறி வேடிக்கையாகச் சிரிக்கவும் அவனை ஆரியவர்தன் லேசாக அடிவயிற்றில் தன்னுடைய முழங்கையால் இடித்துவிட்டு குறும்பாக முறைத்துப் பார்த்தான். ரியாவும் மேடையேற இருவரும் சேர்ந்து நின்றனர். விழா முடிவடைந்ததும் அனைவரும் அந்த ரிசார்ட்டிலுள்ள தங்களது அறைக்குச் சென்றார்கள்.

ரியாவும் நியதியும் ஒரே அறையில் தங்கியிருந்தனர். நியதி குளித்துவிட்டு வெளியே வந்தபோது ரியா வேகமாகச் சென்று அவளை அணைத்துக் கொண்டாள். அவளுடைய இந்த செயலால் ஆச்சரியம் அடைந்த நியதி அப்படியே நின்றாள். விசும்பல் சத்தம் கேட்டதும் அவளை தன் முன் நிறுத்திப் பார்த்தபோது ரியாவின் கன்னங்கள் கண்ணீரால் நனைந்திருந்தது.

உடனே நியதி அவளை படுக்கையில் அமரச்செய்து தானும் அவளருகில் அமர்ந்து அவளை விசாரித்தாள்.
_c65dcf91-8070-4c19-b80c-b940cc8528b8.jpg
" உனக்கு என்ன ஆச்சு ரியா? இப்போ ஏன் அழுவுற?" என்று புரியாமல் அவளுடைய கண்ணீரை துடைத்தவாறே கேட்டாள். ரியா விசும்பிக்கொண்டே, "நாளைக்கு கல்யாணம் ஆகிடுச்சின்னா நான் உங்க கூட இருக்கமாட்டேன்ல....இனிமேல் என்னால உங்கள பாக்கவே முடியாதுல...முன்ன மாதிரி நீ, நான், சான் எல்லாருமா சேர்ந்து சுத்தமுடியாதுல...எனக்கு அத நினச்சா ரொம்ப கவலையா இருக்கு" என்று கூறி மீண்டும் அழத்துவங்கினாள்.

ஆனால் நியதியோ, "ஹே ரியா கல்யாணம்ங்கிறது ஒரு பொண்ணோட வாழ்க்கையில முக்கியமான ஒரு நிகழ்வு. அது அவளோட வாழ்க்கையில பெரிய திருப்பத்தை கொண்டுவரும். பெத்தவங்கள விட்டுட்டு போறது கஷ்டம் தான் ஆனாலும் நீ ஏன் கவலப் படுற? இங்க தான இருக்கப்போற”

“நீ கூப்பிட்டா....இல்ல நினைச்சாலே நாங்க எல்லாரும் வந்து நிக்கப்போறோம். அதுக்கு ஏன் அழுகுற? முதல்ல கண்ண தொடச்சிட்டு சீக்கிரம் படு. இல்லாட்டி நாளைக்கு மேக் அப் போடுறவங்க வந்து பாக்கும்போது நீ கருவளையத்தோட நிக்கப்போற" என்று கூறி அவளை படுக்க வைத்தாள்.

ரியாவிற்கு தன்னுடைய முதுகைக்காட்டி படுத்தவளுக்கும் அதே சிந்தனை தான். அவளாலும் ரியாவை பிரிந்திருக்க முடியாது. நியதியின் கண்களிலிருந்தும் கண்ணீர் சிந்தியது. பின் அவளும் நித்திரையில் ஆழ்ந்தாள்.

மறுநாள் காலை திருமணம் அந்த ஸீ-ஷோர் ரிசார்டிற்கு அருகிலுள்ள கடற்கரையில் வைத்து நடக்கவிருந்தது. மணமேடை குடையைப் போன்ற அமைப்பில் வடிவமைக்கப் பட்டு அதில் ஆர்கிட்ஸ் வைத்தும் வெண்ணிற துணிகளாலும் அலங்கரிக்கப் பட்டிருந்தது.
_3dd2edca-df6e-430b-a6fd-cfdd9d217ad6.jpg
மணமக்கள் அந்த மேடையை அடைவதற்கு ஒரு பெரிய நடைபாதை ஒன்று அமைக்கப் பெற்று அதில் சிவப்புக் கம்பளம் விரிக்கப்பட்டிருந்தது. அந்த நடைபாதையின் இரு பக்கங்களிலும் விருந்தினர்கள் அமர்வதற்காக துணியாலும் பூக்களாலும் அலங்கரிக்கப் பட்ட நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. திருமண மேடைக்கு பின்னிருந்த கடற்பரப்பு மேலும் அந்த இடத்திற்கு அழகு சேர்த்தது. அன்று மழையும் இல்லாமல் வெயிலும் இல்லாமல் வானிலை மிகவும் நன்றாக இருந்தது.

அன்றைய விழாவின் நாயகனான ஆரியன் தன்னுடைய அறையில் தயாராகிக்கொண்டிருந்தான். அவன் வெல்வெட்டால் செய்யப்பட்டிருந்த நேவிப்ளூ ஷ்ரவாணி அணிந்திருந்தான். அதில் தங்க ஜரிகையாலான வேலைபாடுகள் இந்தியாவிலுள்ள பெரிய டிசைனர்களால் செய்யப்பட்டிருந்தது. தன்னுடைய கால்களை அதேநிற வெல்வெட் சால்வையால் போர்த்தியிருந்தான்.
WhatsApp Image 2025-01-15 at 3.51.46 PM.jpeg
அவனுடைய மிடுக்கான தோற்றம் அனைவரையும் கவரும் வண்ணம் இருந்தது. அந்த உடைக்கு ஏற்றாற்போல பிராண்டட் ஷூவும் அணிந்திருந்தான். அவனுடைய தோற்றத்தில் ராஜகளை தாண்டவமாடியது. ராஜாவைப் போல் தோற்றமளித்த அவனிடம் செங்கோல் ஒன்றுமட்டும் இல்லை.

மணமகனான ஆரியவர்தன் மணமேடையில் அமர்ந்திருக்க வரதராஜன் பதற்றத்துடன் மணப்பெண்ணை அழைத்து வந்தார். மணப்பெண் ஆரியவர்தனின் அருகில் வந்து அமர்ந்ததும் இருகுடும்பத்தார் உட்பட திருமணத்திற்காக வந்த அனைவரும் அதிர்ச்சியில் நின்றனர்.

மாயங்கள் தொடரும்...
 
Last edited:

Krishna Tulsi

Moderator
WhatsApp Image 2025-01-18 at 5.26.49 PM.jpeg
ஏனென்றால் வரதராஜன் மணமகளாக மணமேடைக்கு அழைத்து வந்தது வேறு யாரும் அல்ல அது நியதி தான்.
_9b46f52f-2e9f-43a3-8fb3-4791c0021cba.jpg
அவளை ஆரியவர்தனின் அருகில் அமர்த்திவிட்டு அவர்கள் அருகில் நின்றார். அப்போது வரதராஜனிடம் சென்று, "என்னங்க என்ன காரியம் பண்றீங்க? இது நம்ம பொண்ணு உட்காரவேண்டியயிடம்" என்று கோபத்துடன் மாலினி வினவினாள்.
அப்போது வரதராஜன், "எனக்கு என்ன செய்யனும்னு தெரியும். நீ சும்மா இரு" என்று கண்ணில் பொங்கிய சினத்துடன் தாழ்ந்த குரலில் அழுத்தமாகக் கூறினார். நியதியின் இந்த நிலைக்கு ரியா மட்டுமே காரணம்.

நியதி அங்கு மணப்பெண்ணாக வந்து அமர்வதற்கு நான்குமணிநேரத்திற்கு முன் ரியா தன்னுடைய தந்தை எடுத்துக்கொடுத்த பட்டுப்புடவையை உடுத்தி அழகிய பதுமைபோல் நின்றாள்.
WhatsApp Image 2025-01-18 at 4.17.23 PM.jpeg
அவளுடைய அலங்காரம் முடிந்தபின் வந்திருந்த பியூடிஷியன் அனைவரும் அங்கிருந்து கிளம்பினர். அவளும் நியதியும் மட்டும் அந்த அறையில் இருந்தபோது ரியா பதற்றத்துடன் குறுக்கும்நெடுக்குமாக நடந்துகொண்டிருந்தாள்.

நியதி விசாரித்தபோது, "கல்யாணம் நடக்க போகுதுல அத நினைச்சிதான் பயமா இருக்கு" என்று தன் கைகளை பிசைந்தவாறு கூறினாள். அவளை சிரிப்புடன் பார்த்து, "ஏய்! ஏன் பயப்படற? நீ கல்யாணம் பண்ணிக்கப் போறது தி கிரேட் ஆரியவர்தன். அவர பாத்தா பயத்துக்கே பயம் வரும். அவரு...." என்று கூறப்போனவளை இடைமறித்து ரியா ஒரு பெரிய கும்பிடு போடவும் நியதி தன் வேலையைத் தொடர்ந்தாள்.

அப்போது அவளுடைய அறைக்கு ஒரு டிராலியில் காலை உணவு வந்து சேர்ந்தது. அவர்கள் அதனை உண்டுமுடிக்கும்போதே நியதியின் கைபேசிக்கு மாலினியின் அழைப்பு வந்தது. "ஏய் நியதி நீயா கல்யாணப் பொண்ணு? எந்த ஒரு வேலையும் செய்யாம இருக்க? வா வந்து எனக்கு ஹெல்ப் பண்ணு" என்று மாலினி அவளை அழைக்கவும் அங்கிருந்து நியதி சென்றாள்.

வேலையை முடித்துவிட்டு தன்னுடைய அறைக்கு திரும்பும்போது ரியா அங்கு இல்லை. உடனே பதற்றத்துடன் நியதி அவளை தேடத் துவங்கினாள்.அப்போது குழியலறையிலிருந்து தண்ணீர் சத்தம் கேட்க நியதி நிம்மதியடைந்தாள். அப்போது அங்கு வந்த வேலையாள் அவர்களுக்கு காலை உணவு கொண்டுவரப்பட்ட ட்ராலியை எடுத்துச் செல்ல நியதி ரியாவிற்காக காத்துக்கொண்டிருந்தாள்.

வெகுநேரம் ஆகியும் ரியா வராததால் நியதி குளியலறையைத் தட்டிப் பார்த்தாள். கதவு தானாக திறந்துகொள்ள உள்ளே சென்று பார்த்தபோது ரியா அங்கு இல்லை. நியதிக்கு தூக்கிவாரிப்போட்டது.
_84a1e89b-9916-4964-942d-8a58fb9cab80.jpg
இந்த விஷயத்தை சரணிடம் கைபேசியின் மூலம் தெரிவித்தபோது அவன் அதிர்ந்துபோனான்.
_4f79c420-ccb8-4efd-b198-1437d8f1783e.jpg
"என்ன சொல்ற நிதி? நல்லா தேடிப்பாரு. அங்க தான் இருப்பா" என்று அவன் கூறவும், "இல்ல சான், நாங்க இருந்த ஃலோர் முழுசும் நல்லா தேடிட்டேன். எங்க தேடியும் கிடைக்கல. என்ன செய்யிறதுனே தெரியல" என்று படபடத்த குரலில் கூறினாள்.

உடனே அவன், "டென்ஷன் ஆகாத நிதி. நானும் எல்லா இடத்துலயும் தேடி பாக்குறேன்" என்று கூறிவிட்டு தன்னுடைய கைபேசியை வைத்தான். அவன் பல இடங்களில் தேடியும் அவள் கிடைக்கவில்லை. இறுதியாக கார் பார்க்கிங் வந்தபோது யாரோ ரியாவை காருக்குள் தள்ளி வேகமாக காரைக் கிளப்பிச் செல்வது தெரியவந்தது.
அதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தவன் அந்த காரைப் பின்தொடர்ந்து ஓடினான். அதன் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் சற்று தூரத்தில் நின்று மூச்சுவாங்க வேகவேகமாக நியதிக்கு போன் செய்தான். அவன் அந்த விஷயத்தை நியதியிடம் தெரிவித்தபோது, "என்னது யாரோ கடத்திட்டு போய்ட்டாங்களா? இப்ப என்ன பண்றது சான். இத கண்டிப்பா அப்பாகிட்ட சொல்லியே ஆகணும். இல்லாட்டி ரியா பெரிய பிரச்னைல மாட்டிக்குவா" என்று கூற சரணும் ஒப்புக்கொண்டான்.

வரதராஜனிடம் அந்த விஷயத்தை தெரிவித்தபோது அவர், "ஒருவேளை ராஜீவ் தான் நம்ம ரியாவ கடத்தீருப்பானோ? ரியா அவனை விட்டுட்டு வேறஒருத்தர கல்யாணம் பண்றது பிடிக்காம கோவத்துல இப்படி பண்றானோ?" என்று அவர் தனக்குள் இருந்த சந்தேகத்தை வெளிப்படுத்தினார். உடனே அவர் ராஜீவின் பெயரைக் குறிப்பிடாமல் ரியா கடத்தப் பட்டதாக மட்டும் ஆரியவர்தனிடம் தெரிவித்தார்.

அவனும் ரியாவை கடத்திச் சென்றவர்களை தேடுவதற்காக தன்னுடைய ஆட்களை அனுப்பினான்.
_d8df91c6-6b36-4444-ab87-4c250c81f85a.jpg
வர்தன் குடும்பத்தாரும், வரதராஜன் குடும்பத்தாரும் ரியாவின் அறையில் தீவிர யோசனையில் அமர்ந்திருந்தபோது, "இது என்னவோ எனக்கு விராஜோட வேல மாதிரி இருக்கு டா. அவனுக்கு தான் நம்மள பிடிக்காதே" என்று ரஞ்சித் கூறினான்.

விராஜ் குணசீலன், வர்தன் கார்பொரேட் குரூப்ஸின் எதிராளியான குணா கார்பொரேட் குரூப்ஸின் சி.இ.ஓ. அவன் எப்போதும் ஆரியவர்தனை தோற்கடித்தே ஆகவேண்டும் என்ற தீவிர முயற்சியில் இருப்பவன். ஆனால் அவன் எப்போதும் வெற்றிகண்டதில்லை. அதனால் தான் ரஞ்சித்திற்கு இந்த எண்ணமே வந்தது.

உடனே ஆரியவர்தனின் பாட்டி சந்திரமதி, "ரஞ்சு என்ன நடந்ததுன்னு தெரியாம யாரையும் இப்படி பழிசொல்லக் கூடாது" என்று கூறவும், "சாரி பாட்டி" என்று ரஞ்சித் கூறினான்.
_869eaed4-ccda-45fc-9bb7-296e7d724c04.jpg
அனைவரும் ரியாவுக்கு என்ன நடந்திருக்குமோ என்று பயந்துகொண்டிருந்தபோது, "என்ன வரதராஜன் சார்! குடும்பத்தோட சேர்ந்து டிராமா பண்றீங்களா?" என்று ரஞ்சித்தின் குரல் உரக்கக் கேட்டதும் அனைவரும் அவனைத் திரும்பிப் பார்த்தனர்.

"உங்க பொண்ண யாரும் கடத்தல. அவாதான் காதலிச்சவன கல்யாணம் பண்றதுக்காக ஓடிபோய்ட்டா. இந்தா பாருங்க" என்று தன் கையிலிருந்த காகிதத்தை வரதராஜனிடம் நீட்டினான். அவர் பயந்துகொண்டே அதனை வாங்கி பார்த்தபோது அதில், 'என்னுடைய காதலனுடன் என் வாழ்க்கையை ஆரம்பிக்கப் போகிறேன். என்னை மன்னிக்கவும். என்னை யாரும் தேடவேண்டாம். இப்படிக்கு ரியா' என்று எழுதியிருந்தது.

அதை பார்த்தவருக்கு இமயமே சரிந்துவிழுந்ததுபோல் இருந்தது. அனைத்து இயற்கைப் பேரழிவும் ஒன்று சேர ஒரே நேரத்தில் நடந்ததுபோல் இருந்தது. அங்கிருந்த அனைவருக்கும் பெரிய அதிர்ச்சியாக இருந்தது. என்ன செய்வதென்று வரதராஜன் குடும்பத்தார் அதிர்ச்சியில் நின்றுகொண்டிருந்தபோது ரஞ்சித் மீண்டும் பேசத் துவங்கினான்.

"என்ன மிஸ்டர் வரதராஜன், நீங்க யார ஏமாத்த பாக்குறீங்க. இவன் யாருன்னு தெரியும்ல? வர்தன் கார்பொரேட் குரூப்சோட சி.இ.ஓ. தி கிரேட் ஆரியவர்தன். இந்த கார்பொரேட் உலகமே அவனோட சுண்டு விரல்ல இருக்கு. உங்களுக்கு எவ்வளவு தைரியம் இருந்தா இவனையே ஏமாத்தப் பாப்பீங்க? இவன பகைச்சிக்கிட்டவங்களோட கதி என்னன்னு உங்களுக்கு தெரியும்ல?" என்று அவன் கோபத்தில் மிரட்ட ஆரம்பித்தான்.

அதை பார்த்து வரதராஜன் குடும்பத்தார் பயந்தனர். வரதராஜன் ஆரியவர்தனைப் பார்த்தபோது அவன் எதுவும் பேசாமல் அப்படியே அமர்ந்திருந்தான். அது அவருக்கு இன்னும் திகிலூட்டியது. ஏதாவது பேசி வரதராஜன் குடும்பத்தை மிரட்டினாலாவது அவனது மனதில் என்ன இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள முடியும். ஆனால் அவன் எதுவும் பேசவும் இல்லை, நினைப்பதை கண்களில் காட்டவும் இல்லை.

ரஞ்சித் பேசிக்கொண்டிருக்கும்போதே ஆரியவர்தன் சட்டென தன்னுடைய ஆட்டோமேட்டிக் வீல்சேரை திருப்பி அந்த அறையை விட்டு தன்னுடைய அறைக்குச் செல்ல அவனுடைய செக்ரட்டரியான பார்கவ் ஆரியவர்தனைப் பின்தொடர்ந்தான். அவனுடைய அந்த செய்கை வரதராஜனுக்கு ஆச்சத்தைத் ஏற்படுத்தியது.

ரஞ்சித், வரதராஜனின் பிசினெஸ்ஸை வைத்து மிரட்டியபோது அவர் விரைந்து சந்திரமதியிடம் சென்று, "அம்மா எங்கள மன்னிச்சிருங்க. இப்படி நடக்கும்ன்னு நாங்க எதிர்பார்க்கல. நீங்க ஏதாவது வர்தன் சார்கிட்ட சொல்லுங்கம்மா" என்று தலைகுனிந்து கைகூப்பியவாறு மன்னிப்புக் கோரினார். ஆனால் அவரோ, "என்னால எதுவும் முடியாது வரதராஜன். நான் சொன்னேங்கிற ஒரே காரணத்துக்காக தான் ஆரி இந்த கல்யாணத்துக்கே சம்மதிச்சான்”

“இப்படி நடந்ததுக்கு அப்பறம் நான் எதுவும் சொல்றதுக்கில்ல. ஆரி என்ன முடிவெடுக்குறானோ அது தான் என்னோடதும்" என்று தன்னுடைய முடிவை தெரிவித்தார். வரதராஜன் மனம்நொந்து என்ன செய்வதென்று தெரியாமல் தத்தளித்துக் கொண்டிருந்த சமயத்தில் பார்கவ் அங்கு வந்து, "வர்தன் சார் உங்களோட தனியா பேசணும்னு சொன்னாரு" என்று கூறி வரதராஜனை அங்கிருந்து அழைத்துச் சென்றான்.

பார்கவ் முன் செல்ல, வரதராஜன் அவனைப் பின்தொடர்ந்து சென்றார். அவருடைய கைகள் பயத்தால் ஜில்லென குளிர்ந்தது. அவருடைய இதயத்துடிப்பை அருகிலிருப்பவர்கள் கேட்கும் அளவிற்கு வேகமாகத் துடித்தது. 'ஆரியவர்தன் என்ன சொல்லப்போறாரோ? நம்முடைய கதி என்னவாகப் போகிறதோ?' என பல எண்ணங்கள் அவருடைய மனதில் தோன்றி மறைந்தன.

அந்த நேரத்தில் அவரிடம் இருந்த தைரியம் குறைந்து அவருடைய மனதை பயம் ஆக்கிரமித்திருந்தது. ஆரியவர்தனின் அறையினுள் செல்வதற்காக பார்கவ் கதவைத் திறந்துவிட அவர் தயங்கிக்கொண்டே வெளியே நின்றார்.

"வர்தன் சார்கு வெயிட் பண்றது பிடிக்காது" என்று பார்கவ் கூறவும் தனக்குள் மீதமிருக்கும் துணிவை சேகரித்துக் கொண்டு அந்த அறையினுள் நுழைந்தார். கதவு சாத்தப்பட்டது. அங்கு ரியாவின் அறையில் அனைவரும் வரதராஜனுக்காக ஆவலுடனும் பதற்றத்துடனும் காத்துக்கொண்டிருந்தனர்.

அரைமணி நேர உரையாடலுக்குப் பின் வரதராஜன் அந்த அறையைவிட்டு வெளியே வந்தார். வந்தவருக்கு ஏதோ ஒன்று தோன்ற விரைந்து ரியாவின் அறைக்குச் சென்று நியதியை தன்னுடன் வேறொரு அறைக்கு அழைத்துச் சென்றார்.

பதற்றத்துடன் இருந்த நியதி அவரைப் பார்த்து, "அப்பா என்ன ஆச்சு? ஆரியவர்தன் சார் என்ன சொன்னாரு?" என்று அங்கு நடந்தவற்றை தெரிந்துகொள்வதற்காக ஆவலுடன் கேட்டாள். உடனே அவர், "நியதி நீ என் பொண்ணு தான? இந்த அப்பா சொன்னா நீ அத கண்டிப்பா கேப்பீல?" என்று அவளிடம் நிதானமான குரலில் கேட்டார்.

"ஆமாபா நான் உங்க பொண்ணு தான். நீங்க என்ன சொன்னாலும் கண்டிப்பா கேட்பேன்" என்று உறுதியான குரலில் கூறினாள். "அப்போ நீ எனக்கு ஒரு உதவி பண்ணனும். உன்ன தவிர வேறுயாராலையும் செய்யவே முடியாது" என்று மட்டும் கூறினார். தந்தைக்கு இந்த பிரச்னையிலிருந்து வெளிவருவதற்கு ஏதோ உபாயம் கிடைத்திருக்கிறது என்றெண்ணி, "சொல்லுங்கப்பா நான் அத கண்டிப்பா செய்றேன். இந்த பிரச்னையில இருந்து வெளிய வர்றதுக்கு என்னால முடிஞ்ச எல்லாத்தையும் நான் கண்டிப்பா செய்றேன். நான் இப்போ என்னப்பா செய்யணும்?" என்று கேட்டாள்.

உடனே அவர், "நீ அவர கல்யாணம் பண்ணிக்கனும்மா" என்று கூறவந்ததை பட்டென போட்டுடைத்தார். நியதியால் தன்னுடைய காதுகளை நம்பமுடியவில்லை. இந்த யோசனைக்கு ஏன் வந்தார் என்று அவளால் புரிந்துகொள்ளவே முடியவில்லை. அவள் அதிர்ச்சியில் எதுவும் பேசாமல் அப்படியே நிற்கவும், "முடியாதுன்னு மட்டும் சொல்லீராத நியதி. இந்த கல்யாணம் நடக்கலைனா நம்ம குடும்பம் எந்த நிலைக்கு ஆளாகும்னு உனக்கு நல்லா தெரியும். அத நினைச்சாலே எனக்கு பயமா இருக்கு" என்று அவர் பயத்துடன் கூறினார்.

"இல்லப்பா அது ரியாவோட இடம் நான் அங்க...." என்றவளை இடைமறித்து, "அவ பேரகூட சொல்லாத. நாம இப்போ இருக்குற இந்த இக்கட்டான சூழ்நிலைக்கு முழுக்கமுழுக்க அவா ஒருத்தி மட்டும் தான் காரணம்" என்று கோபத்துடன் கூறினார். ஆனாலும் நியதிக்கு மனம் ஒப்பவே இல்லை. அவள் என்ன செய்வதென்று தெரியாமல் அப்படியே நிற்கவும் வரதராஜன், "என்னைய இந்த பிரச்சனையில இருந்து காப்பாத்தக்கூடிய தெய்வமா நான் உன்கிட்ட இத கேக்குறேன். தயவு செஞ்சு நியதி இந்த கல்யாணத்துக்கு ஓத்துக்கோமா" என்று கண்களில் கண்ணீர் தேங்கி நிற்க தன்னுடைய இருகைகளையும் கூப்பியவாறு அவள்முன் நின்றார்.

எப்போதும் இமயத்தின் கம்பீரமும், நேர்கொண்ட பார்வையும், கணீரென்ற குரலுமாக அவரைப் பார்த்த நியதிக்கு இன்று அவர் கூனி குறுகி நிற்பதைப் பார்க்கவும் அதிர்ச்சியடைந்தாள். அவளுடைய கண்களிலிருந்து கண்ணீர் மடை திறந்த வெள்ளம்போல் வந்தது. அவள் சட்டென அவருடைய கையைப் பிடித்து, "அப்பா இப்படி செஞ்சு என்ன பாவத்துக்கு ஆளாகிறாதீங்க. நான் இந்த கல்யாணம் பண்ணிக்கணும் அவ்வளவு தான? கண்டிப்பா பண்ணிக்கிறேன்" என்று அவள் கூறவும் வரதராஜனின் முகத்தில் பிரகாசம் தெரிந்தது. அவள் மணமகள் கோலம் பூண்டாள்.
_ba69e78a-8fe0-4ae2-83c9-2929ce28f3e0.jpg
இவர்களுக்கிடையே பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருந்த அதே சமயத்தில் அங்கு இரு குடும்பத்தாரும் என்ன நடக்க போகிறது என்று தெரியாமல் பதற்றத்தில் இருந்தனர். அப்போது ஆரியவர்தன் மணமகனாக மணமேடையில் அமர்ந்தான். மாலினியும் சரணும் திகைத்து நிற்க சந்திரமதிக்கும் ரஞ்சித்துக்கும் ஆரியவர்தன் ஏதோ செய்யப்போகிறான் என்று நன்றாகவே தெரிந்தது.

வரதராஜன் நியதியை மணமகள் கோலத்தில் அங்கு வந்து அமரவைத்ததும் அனைவருக்கும் மிகுந்த ஆச்சரியம். நியதி ஆரியவர்தனின் அருகில் அமர்ந்திருந்தாள். அவளுடைய மனதில் நிறைய கேள்விகள் இருந்தன. ஆரியவர்தனும் எதுவும் பேசாமல் அப்படியே அமர்ந்திருந்தான்.
WhatsApp Image 2025-01-18 at 4.12.42 PM.jpeg
விதி யாரை, எப்போது, எந்த இடத்தில், எந்த நிலைக்குத் தள்ளும் என்று யாருக்கும் தெரியாது. அது போலத்தான் இங்கும் நியதி விதியின் விளையாட்டால் சூழ்நிலைக் கைதியானாள். ஐயர் தாலியை அணிவிக்குமாறு கூற ஆரியவர்தன் நியதிக்கு அந்த தங்கத் தாலியை அணிவித்தான். நியதி மிஸ்ஸஸ் ஆரியவர்தன் ஆனாள்.

மாயங்கள் தொடரும்...

 

Attachments

  • WhatsApp Image 2025-01-18 at 5.26.49 PM.jpeg
    WhatsApp Image 2025-01-18 at 5.26.49 PM.jpeg
    34.8 KB · Views: 0

Krishna Tulsi

Moderator
மாயம் 7
திருமணம் முடிந்ததும் வர்தன் குடும்பத்தார் நியதியை அழைத்துச் சென்றபோது அவளுடைய கண்கள் வரதராஜனைத் தேடின. ஆனால் அவர் எங்கும் தென்படவில்லை. அப்படியே தேடிக்கொண்டிருந்தவளின் கண்களுக்கு சரண் அகப்பட்டான். அவளுடைய நெருங்கிய நண்பனாக இருந்தபோதும் அந்த சூழ்நிலையில் எந்த ஒரு உதவியும் செய்யமுடியாதவனாய் தன்னுடைய இயலாமையை நினைத்து மிகவும் வருந்தினான்.

அவனுடைய எண்ணத்தைப் புரிந்துகொண்டவளாய் 'சரண் நீ கவலப் படாத’ என்று தன் கண்ணசைவின் மூலம் வெளிப்படுத்தினாள். மணமக்கள் இருவரும் ரோல்ஸ் ராய்ஸ் காரில் அமர்ந்துகொள்ள சந்திரமதியும் ரஞ்சித்தும் மற்றொரு காரான புகாட்டியில் அமர்ந்துகொண்டனர்.
_5a434f04-402e-47ba-ba48-5ec100c6ed35.jpg
வரதராஜனை எங்கு தேடியும் காணமுடியாத காரணத்தால் நியதியின் முகம் வாடி இருந்தது. மணமக்களை வர்தன் பாலஸிற்கு அழைத்துச் சென்ற காரில் நிசப்தம் மட்டுமே நிலவியது.

இங்கு வரதராஜன் மாலினியுடன் தன் காரில் வீட்டிற்குச் சென்றுகொண்டிருந்தார். அப்போது மாலினி தன்னுடைய மன ஆற்றாமை காரணமாக புலம்பிக்கொண்டிருக்க அது எதுவும் காதில் கேட்காதவராய் தனக்கும் ஆரியவர்தனுக்கும் இடையேயான உரையாடல் நினைவிற்கு வந்தது.

வரதராஜன் அறைக்குள் வந்தபோது ஆரியவர்தன் அங்குள்ள பெரிய கண்ணாடி கதவின் வழியாக வெளியே பார்த்தவாறு தன்னுடைய வீல்சேரில் அமர்ந்திருந்தான்.
அவர் உள்ளே வருவது தெரிந்ததும், "என்ன செய்யப்போறீங்க மிஸ்டர் வரதராஜன்?" என்று அவனிடமிருந்து கேள்வி பிறந்தது.

அவன் அந்த கேள்வியை கேட்டபோது வரதராஜனின் மனதில் பயம் குடிகொண்டது. பதில் கூறும் தகுதியை இழந்த அவர் எதுவும் பேசாமல் நீதிபதியின் முன் நிற்கும் குற்றவாளியைப் போல் அவமானத்தால் தலைகுனிந்து நின்றார். அதுவரையில் அவருக்கு தன் முதுகைமட்டுமே காட்டியவாறு அமர்ந்திருந்த ஆரியவர்தன் திரும்பி அவரைப் பார்த்தான்.
WhatsApp Image 2025-01-22 at 4.37.08 PM.jpeg
பின், "இந்த சூழ்நிலைய சரி செய்யுறதுக்கு நீங்க என்ன செய்யப்போறீங்க?" என்று அவன் கேட்டபோது, "மிஸ்டர் வர்தன் என்ன மன்னிச்சிருங்க. இப்படி நடக்கும்னு நான்..." என்று அவர் கூறும்போதே தன்னுடைய கையசைவால் அவரை நிறுத்தினான்.
_bee2bb12-f074-4762-ad85-eee589f10973.jpg
"முடிஞ்சதபத்தி பேசுறதுல எந்த பிரயோஜனமும் இல்ல. நடக்கப் போறத மட்டும் பேசுவோம். இந்த கல்யாணம் நடக்கலைனா அது எனக்கு ஒரு ப்ரெஸ்டீஜ் இஸ்ஸு. இப்போ இந்த கல்யாணம் நடந்தே ஆகணும்” என்று அவன் கூறவும் அவர் அவனை திகைத்து நோக்கினார். “ஆழம் தெரியாம கால விட்டுட்டோம்னு நினைக்குறீங்களா மிஸ்டர் வரதராஜன்" என்று தன்னுடைய ஒற்றை புருவத்தை உயர்தி மாயப் புன்னகை புரிந்தான்.

அதில் சற்று அதிர்ந்துபோன வரதராஜன் பயத்துடன் அவனைப் பார்த்தபோது, "நான் உங்கள மிரட்டுறதா நினைக்க வேண்டாம்" என்று அவன் சாதாரணமாகக் கூறினான். உடனே அவர், "தயவுசெய்து எங்கள மன்னிச்சிருங்க மிஸ்டர் வர்தன். நீங்க என்ன சொன்னாலும் நான் செய்யறேன். எங்க மேல கொஞ்சம் கருண காட்டுங்க. ப்ளீஸ்" என்று அவனிடம் கெஞ்சினார்.

சிறு யோசனைக்குப் பின், "சரி உங்களுக்கு ஒரு அரைமணி நேரம் டைம் தரேன். அதுக்குள்ள இந்த கல்யாணத்த நடத்துறதுக்கான வழியத் தேடுங்க. ஏன்னா எனக்கு இப்போ இங்க கல்யாணம் நடந்தே ஆகணும்" என்று அழுத்தமாகக் கூறி மீண்டும் அந்த கண்ணாடிக் கதவின் பக்கம் திரும்பினான்.

வரதராஜன் என்னசெய்வதென்று தெரியாமல் அங்கேயே நிற்கவும், "டைம் இஸ் ரன்னிங் அவுட் மிஸ்டர் வரதராஜன்" என்று அவன் கூறவும் அவர் அந்த அறையைவிட்டு விரைந்து வெளியேறினார்.

திருமணத்தை எவ்வாறு நடத்துவது என்று நினைத்துக்கொண்டே வந்தவருக்கு நியதியின் நினைவு வந்தது. 'நியதியும் நம்ம பொண்ணு மாதிரி தான. அழகு, அறிவு, பொறுப்பு, பொறுமை எல்லா குணமும் அவளுக்கு இருக்கு. அவள கல்யாணம் பண்ணிக்க யாராயிருந்தாலும் கொடுத்துவச்சிருக்கணும். இப்போ ரியா இடத்துல அவள உட்காரவச்சா மிஸ்டர் வர்தன் சொன்னமாதிரி அவருக்கு கல்யாணமும் நடந்துரும், நம்ம பிஸினஸும் தப்பிச்சிடும்' என்று ஒரு யோசனை தோன்றியது.

அதனால்தான் நியதியை அவர் ரியாவின் இடத்தில் அமர வைத்தார். அங்கு பாசம் நீங்கி சுயநலம் மேலோங்கியதை நினைத்து அவர் மிகவும் வருந்தினார். சட்டென கார் அவர்களது வீட்டின் முன் நின்றதும் அவர் நிகழ்காலத்திற்கு வந்தார். அதுவரை புலம்புவதை நிறுத்தாமல் இருந்த தன்னுடைய மனைவியை ஆசுவாசப் படுத்திவிட்டு தன்னுடன் வீட்டினுள் அழைத்துச் சென்றார்.

அங்கு ‘வர்தன்ஸ் பேலஸை’ அனைவரும் அடைந்தபோது மாலை நேரமாகி இருந்தது. மணமக்களை சந்திரமதி ஆரத்தி எடுத்து வீட்டினுள் வரவேற்றார். ஆரியவர்தனின் மனைவியாகவும், வர்தன் குடும்பத்தாரின் மருமகளாகவும் நியதி அந்த வீட்டினுள் தன்னுடைய முதல் அடியை எடுத்துவைக்க இருவரும் உள்ளே சென்றனர். பூஜை அறைக்கு மணமக்களை சந்திரமதி அழைத்தபோது ஆரியவர்தன் வரமறுத்துவிட்டான்.

உடனே அவர், "ஆரி உனக்கு இதெல்லாம் பிடிக்காதுன்னு எனக்கு நல்லாவே தெரியும். ஆனா இன்னைக்கு உனக்கு கல்யாணம் நடந்திருக்கு. நீ ஒரு புது வாழ்க்கைய ஆரம்பிக்க போற. அதுனால உனக்காக இல்லைனாலும் எனக்காகயாவது வா" என்று அணையிடுவதுபோல் கூறவும் ஆரியவர்தன் பூஜை அறைக்கு வந்தான்.

அந்த பூஜை அறையில் கண்ணனும் ராதையும் அழகாக அலங்கரிக்கப் பட்டு ஒரு புன்முறுவலுடன் நின்றுகொண்டிருந்தனர்.

_b98e61cc-64b9-4d32-a9f9-3a25bc76c513.jpg
நியதியை விளக்கேற்றுமாறு சந்திரமதி கூறியபோது அவள் தயங்கி நின்றாள். அவளை அழைத்து விளக்கேற்றவைத்தார். திருமண சடங்குகள் அனைத்தும் முடிவுற்றபிறகு சந்திரமதி நியதியை தன் அறைக்கு அழைத்துச் செல்ல, முதல் தளத்தில் இருக்கும் ஆரியவர்தனின் அறைக்கு ரஞ்சித் அவனை லிஃட்டில் அழைத்துச் சென்றான்.
WhatsApp Image 2025-01-22 at 5.23.16 PM.jpeg
நியதி எதுவும் பேசாமல் நிற்க சந்திரமதி பேசத் துவங்கினார், "இன்னைக்கு யாருமே எதிர்பார்க்காத பல விஷயம் நடந்திருக்கு. மனுஷங்க எல்லாரும் அவங்க நினைக்குறதுதான் நடக்கணும்னு விரும்புறாங்க. ஆனா கடவுள் ஒருத்தர் இருக்காரு அவர் நினைக்குறதுதான் நடக்கும்னு யாருக்குமே தெரியல. இப்பகூட பாரு நான் ஆரிகாக ரியாவ தேர்ந்தெடுத்தேன் ஆனா நீதான் அவனோட வாழ்க்கை துணையா வரணும்னு இருக்கு..." என்று பெருமூச்சு விட்டார்.

மீண்டும் அவர் பேசத் துவங்கினார், "எனக்கு வயசாயிருச்சி. எனக்கப்பறம் ஆரிய யாரு பாத்துக்குவான்னு ஒரு பயம் மனசுல இருந்தது. அதான் ஒரு நல்ல பொண்ணா பாத்து கல்யாணம் பண்ணா அவா அவன பாத்துக்குவான்னு தான் கல்யாணத்துக்கே ஏற்பாடுசெஞ்சேன். என் ஆரிக்கு கல்யாணத்துல இஷ்டமே இல்ல. ஆனா நான் சொன்னேங்கிற ஒரே காரணத்துக்காகதான் அவன் சம்மதிச்சான்" என்று தன் பேரனுக்கு திருமணம் செய்ய வேண்டிய காரணத்தை அந்த முதியவள் நியதிக்கு விளக்கினாள்.
_3f4f0845-9090-4810-8c08-d4933df5e1ba.jpg
பின் நியதியின் கையைப் பற்றி, "நியதி இனிமேல் ஆரிய நான் உன் கிட்ட ஒப்படைக்குறேன். நீ அவன் கூடவே இருந்து அவன நல்லா பாத்துக்குவியாமா?" என்று அவளிடம் கெஞ்சுவதுபோல் கேட்டார். உடனே நியதி, "நான் பாத்துக்குறேன் பாட்டி. நீங்க கவலைப்படாதீங்க" என்று அவருக்கு வாக்குறுதியளித்தாள்.

அவளுடைய வார்த்தைகளில் நிம்மதியுற்றவராய், "இது போதும்மா எனக்கு. நீங்க ரெண்டு பேரும் நல்லபடியா வாழ்க்கைய நடத்தணும்னு நான் கண்ணன வேண்டிக்குறேன்" என்று மனநிறைவுடன் வேண்டிக்கொண்டார். அப்போது ரஞ்சித் அங்கு வந்து, "பாட்டி ஆரி அவனோட ரூம்ல இருக்கான். நான் கிளம்புறேன்" என்று சந்திரமதியை மட்டும் பார்த்து கூறிவிட்டு அங்கிருந்து சென்றான்.
அவன் நியதியை கண்டுகொள்ளாமல் அப்படியே சென்றதைப் பார்த்த சந்திரமதி, "ரஞ்சித்கு ஆரினா ரொம்ப பிடிக்கும். அவனுக்கு இப்படி நடந்தது ரஞ்சித்கு ரொம்ப கோவம். அதான்...." என்று கூறியவரை இடைமறித்து, "புரியுது பாட்டி" என்று மட்டும் கூறினாள். சந்திரமதி நியதியின் கையில் பால் டம்பளரை கொடுத்து ஆரியவர்தனின் அறைக்கு அனுப்பிவைத்தாள்.

அந்த வெள்ளி பால்டம்பளரை வாங்கியவள் அவனிடம் என்னவெல்லாம் கூறவேண்டும் என்று தன் மனதிற்குள் சிறுகுழந்தையைப்போல் உருபோட்டுக்கொண்டே வந்தாள். அவனுடைய அறையை சென்றடைந்ததும் உள்ளே செல்லாமல் தயங்கியவாறு வெளியே நின்றுகொண்டிருந்தாள். சிங்கத்தின் குகைக்குள் செல்பவருக்கு எந்த அளவு பயம் இருக்குமோ அதைவிடவும் அதிக அளவிலான பயத்தில் நியதி இருந்தாள். பின் அனைத்து தைரியத்தையும் வரவழைத்துக்கொண்டு கதவின் கைப்பிடியை திருகி உள்ளே சென்றாள்.

அவள் உள்ளே வந்தபோது அறை முழுவதும் இருள் சூழ்ந்திருந்தது. ஆங்காங்கே மின்மினிப் பூச்சுகளைப் போல் மெழுகுவர்த்தி வெளிச்சம் தெரிய அங்குள்ள ஃரென்ச் விண்டோ வழியாக சந்திரன் தன்னுடைய குளிர்ந்த ஒளியை அந்த அறையினுள் பரவவிட்டிருந்தான். நியதி ஆரியனைத் தேட அவன் தன்னுடைய வீல்சேரில் ஃரென்ச் விண்டோவின் அருகில் அமர்ந்தவாறு நிலவைப் பார்த்துக்கொண்டிருப்பது தெரிந்தது.
_52b5c137-75bd-4eec-b15d-c0407f02df24.jpg
அவனைக் கண்டதும், அச்சத்தால் நியதியின் இதயத் துடிப்பு பலமடங்கு அதிகரித்தது. அவள் மெதுவாக தன்னுடைய அடிகளை அளந்து அளந்து ஆரியனை நோக்கி எடுத்து வைத்தாள். அவனருகே சென்று, "சார்" என்று மெல்லிய குரலில் அழைத்தபோதுதான் அவளைத் திரும்பிப் பார்த்தான்.
_5d9a90dc-5863-4e9f-8af3-9114f2010668.jpg
அவன் அவளை பார்த்த உடனே நியதி தான் கூற நினைத்த அனைத்தையும் மறந்து பயத்தில் உளர ஆரம்பித்தாள். "சார்...அது....ரியா....வந்து....இப்படி..." என்று திக்கிக்கொண்டிருந்தவளை தன்னுடைய கையசைவால் நிறுத்தினான்.

பின், "நியதி நான் பாஸ்ட்ட பத்தியும் ஃயூசரபதியும் எப்பவுமே யோசிக்க மாட்டேன். எனக்கு ப்ரெசென்ட் மட்டும் தான் முக்கியம். இப்போ நமக்கு கல்யாணம் ஆயிருச்சி. அத எவ்வளவு சீக்கரம் அக்சப்ட்பண்றியோ அது உனக்கு நல்லது. ஓகே?" என்று அவன் கேட்கவும் அவள் 'சரி' என்பதுபோல் தலையசைத்தாள்.

பின் தன் அறையினுள் இருக்கும் மற்றொரு அறையைக் காட்டி, "இது என்னோட பெர்சனல் சேம்பர். இனிமேல் நீ இங்கயே தங்கலாம். நீ வேற ஒரு ரூம்ல தங்குறது பாட்டிக்கு தெரிஞ்சதுனா அவங்க மனசு கஷ்டப்படும். அதுனால தான் என் ரூம்லயே இருக்குற இந்த சேம்பர நான் உனக்கு தர்றேன்" என்று கூறினான்.

அவள் அதை பார்த்துக்கொண்டே நிற்கவும், "என் ரூம தாண்டித்தான் இந்த சேம்பர்கு வரமுடியும். அதனால நீ பாதுகாப்பாதான் இருப்ப. போ" என்று அவன் கூறவும் நியதி விரைந்து அந்த அறையினுள் சென்றாள். அந்த அறையும் மிக அழகாக அலங்கரிக்கப் பட்டிருந்தது. ஆனால் அவள் எதையும் கவனிக்காமல் அந்த பஞ்சு மெத்தையில் அமர்ந்தாள்.

அவளுடைய மனதில் 'ரியா ஏன் இப்படி பண்ணா? என்ன செய்யிறதா இருந்தாலும் என்கிட்ட ஒரு வார்த்த சொல்லீட்டு தான செய்வா? இன்னைக்கு எப்படி எனக்குக் கூட தெரியாம இப்படி பண்ணீட்டா? எங்க இருந்து அவளுக்கு இவ்வளவு தைரியம் வந்துச்சு?' என்று பல கேள்விகள் அவளுடைய மனதில் ஓடியது. அவற்றை மனம் யோசிக்கத் தயாராக இருந்தாலும் அவளுடைய உடல்சோர்வின்காரணமாக விரைவில் தூங்கிவிட்டாள்.

இங்கு மாலினி படுக்கை அறையிலும் ரியாவைப் பற்றிப் புலம்பிக்கொண்டே இருக்க வரதராஜனுக்கு மிகுந்த கோபம் உண்டாயிற்று. உடனே அவர், "இனிமேல் நீ ரியாவ பத்தி ஏதாவது பேசுன, அப்பறம் நடக்குறதே வேற. இன்னைக்கு எல்லார் முன்னாடியும் என்ன அவமானப் படுத்தீட்டுப் போய்ட்டா. நான் அவளுக்கு அப்பாவும் இல்ல அவ எனக்கு பொண்ணும் இல்ல”

“எனக்கு இருக்குறது ஒரே ஒரு பொண்ணு. அது நியதி மட்டும் தான். இன்னைக்கு மட்டும் அவ மிஸ்டர் வர்தன கல்யாணம் பண்ணாம இருந்திருந்தா நம்ம நிலைமை என்ன ஆகிருக்கும்னு நினைச்சாலே..." என்று தன் பயத்தை வெளிப்படுத்தினார். தன்னுடைய மகளை பழித்துவிட்டு நியதியை வாழ்த்தி பேசுவதை மாலினியால் சிறிதும் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அதனால் நியதியை நோக்கி அவள் தன்னுடைய கோபக் கணைகளை வீச ஆரம்பித்தாள்.

"என்ன இப்படி சொல்றீங்க? ரியா நம்ம பொண்ணு. அவ காதலிச்சா, ஆனா இந்த மாதிரியான காரியம் பண்ணவே மாட்டா. இது எல்லமே அந்த சதிகாரி நியதியோட வேலையா தான் இருக்கும். அவ தான் நம்ம பொண்ணோட மனச மாத்தியிருக்கா" என்று ஆவேசத்தில் கூறினாள். ஆனால் அவரோ, "நியதிய பத்தி தப்பா பேசாத மாலினி. அவ ரொம்ப நல்ல பொண்ணு" என்று அதட்டும் குரலில் கூறினார்.

உடனே அவள், "அந்த அனாதை மேல வச்சிருக்குற நம்பிக்கை கூடவா உங்க பொண்ணு மேல இல்ல? ஏன் உலகம் தெரியாம இருக்கீங்க? அந்த நியதி இருக்காள்ள அவ பணக்கார வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு நம்ம பொண்ணோட வாழ்க்கைய கெடுத்துட்டா" என்று பதிலளித்தாள். "நீ என்ன சொல்ல வர்றன்னு எனக்கு புரியல" என்று சந்தேகத்துடன் கேட்டார்.

தன்னுடைய மனதில் இருந்த அனைத்தையும் மாலினி ஒவ்வொன்றாக கூற ஆரம்பித்தாள், "எங்கேஜ்மென்ட், கல்யாணம்னு எல்லாத்துக்கும் அவ்வளவு சந்தோஷமா தயாராகிக்கிட்டு இருந்த ரியா கடைசீ நேரத்துல மனசுமாற என்ன காரணம்? அதோட ரியா என்ன பண்றாங்குறது நமக்கு தெரியுதோ இல்லையோ, நியதிக்கு கண்டிப்பா தெரிஞ்சிருக்கும். அப்படி இருக்கும்போது இந்த விஷயத்த ஏன் நியதி உங்க கிட்ட சொல்லல?" என்று ஒவ்வொரு சந்தேகங்களையும் அடுக்கினாள்.

மாலினி ஒவ்வொன்றாகக் கூறவும் 'கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்' என்பதற்கிணங்க வரதராஜனுக்கு நியதியின் மீதுள்ள நம்பிக்கை ஆட்டம் கொடுக்க ஆரம்பித்தது. "ஒருத்தர் மேல நம்பிக்க வைக்கலாம் ஆனா கண்மூடித்தனமா நம்பிக்கைவைக்குறது ரொம்ப தப்புங்க. நான் சொல்றத சொல்லீட்டேன், இனிமேல் உங்க இஷ்டம்" என்று கூறிவிட்டு திரும்பிக்கொண்டாள்.

வரதராஜனால் அன்று இரவு முழுவதும் தூங்க இயலவில்லை. அவருடைய மனம் போர்களமானது. ரியாவின் மீதுள்ள மகள் பாசம் ஒரு தரப்பில் இருக்க மற்றொறு தரப்பில் நியதியின் மீதுள்ள நம்பிக்கை இருந்தது. பாசத்திற்கும் நம்பிக்கைக்கும் இடையே கடுமையான யுத்தம் நடந்தது. பாசத்தின் தரப்பு வலிமை பெற நியதியின் மீதுள்ள நம்பிக்கை வலுவிழக்கத் துவங்கியது. இறுதியில் ரியாவின் மீதான மகள் பாசம் வென்றது.

மறுநாள் காலை நியதி விரைந்து எழுந்து தயாராகி வந்தபோது ஆரியவர்தனும் தன்னுடைய அறையில் தயாராகி இருந்தான். இருவருமாக சேர்ந்து லிஃட்டில் கீழே வந்தார்கள்.
_451bc032-c72a-40d5-aa86-0444ce6fc102.jpg
டைனிங் டேபிளில் காலை உணவுக்காக அமர்ந்திருந்த சந்திரமதி புதுமணத் தம்பதியர் வருவதைப் பார்த்ததும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். அவர்கள் இருவரும் சந்திரமதியிடம் ஆசீர்வாதம் வாங்கிவிட்டு காலை உணவுக்காக அமர்ந்தனர்.

அப்போது ரஞ்சித்தும், பார்கவும் அங்கு வந்தனர். பார்கவ் ஆரியவர்தனின் செக்ரட்டரியாக இருந்தாலும் அவனையும் குடும்ப உறுப்பினரைப் போலவே பார்ப்பதற்கு ஒரு காரணமும் இருந்தது. காலை உணவு முடிந்ததும் சந்திரமதி தன்னுடைய அறைக்கு திரும்பிவிட நியதி ஆரியனிடம் வந்தாள். "சார்" என்று நியதி ஆரியவர்தனை அழைக்க அவன் திரும்பிப் பார்த்தான்.

உடனே அவள், "நான் என் அப்பா வீட்டுக்கு போய்ட்டு வரலாம்னு இருக்கேன்" என்று கூறவும், "கண்டிப்பா போயிட்டு வா ஆனா அதுக்கு முன்னாடி ஒரு விஷயம் உன்கிட்ட சொல்லணும்" என்று கூறி அவளை வெளியே அழைத்துச் சென்றான். வெளியே வந்தவுடன் ஆரியன் பார்கவின் பக்கம் திரும்பி கண்ணசைவால் ஏதோ சொல்ல பார்கவ் யாரையோ அழைத்தான்.

அந்த நபர் வந்து நின்றதும், "நியதி இது ராமு. இவர் தான் உன்னோட பர்சனல் கார் டிரைவர். நீ இனிமேல் எங்க போனாலும் அந்த கார்ல போகலாம்" என்று அவளிடம் கூறினான். 'பர்சனல் காரா!' என்று நியதி நினைத்துக்கொண்டிருக்கும்போதே ஆரியவர்தன் தன்னுடைய பதிலுக்காக காத்துக்கொண்டிருப்பது தெரிந்தது.

உடனே அவள் "ஓகே சார்" என்று மட்டும் கூறினாள். ஆரியவர்தன் அலுவலகத்திற்குச் சென்றபிறகு நியதி அந்த பர்சனல் காரில் வரதராஜன் வீட்டிற்குச் சென்றாள்.
_4677f705-9ef8-499c-bc92-22fdb92b4f4d.jpg
அவள் வேக வேகமாக வீட்டினுள்ளே அடியெடுத்து வைக்க எத்தனித்தபோது, "உள்ள வராத. அங்கேயே நில்லு!" என்று கோபத்துடன் ஒரு குரல் கேட்டது.
 

Krishna Tulsi

Moderator
மாயம் 8
அந்த வார்த்தைகளைக் கேட்டதும் உள்ளே எடுத்துவைக்கப்போன தன்னுடைய வலதுகாலை நியதி மெல்லப் பின்னிழுத்துக்கொண்டாள். அவள் அதிர்ச்சியுடன் பார்க்கவும், "எதுக்கு இங்க வந்த? நாங்க உயிரோட இருக்கோமா இல்லையான்னு பாக்க வந்தியா?" என்று மாலினி ஆவேசமாகக் கத்தினாள். அவளுடைய இந்த குத்தும் வார்த்தைகளுக்கு அர்த்தம் புரியாமல் அங்கு அமர்ந்திருந்த வரதராஜனை நியதி பார்த்தாள்.

அவர் மெளனமாக அமர்ந்திருப்பதைக் கண்டு நியதி பேசத் துவங்கினாள், "அம்... மேடம் ஏன் இப்படி பேசுறீங்க? நான் எதுக்கு அப்படி நினைக்கப் போறேன்?" என்று தாழ்ந்தக் குரலில் கேட்டாள். உடனே மாலினி, "சும்மா எங்கமேல அக்கறை இருக்குற மாதிரி நடிக்காத. நல்லவ மாதிரி வேஷம் போட்டுட்டு இப்படி ஏமாத்திட்டியே. செய்...நீயெல்லாம் ஒரு பொண்ணா?" என்று கடுமையான வார்த்தைகளை நியதியின் மீது பயன்படுத்தினாள்.

அதைக் கேட்டு கவலையடைந்த நியதி, "ஏமாத்திட்டேனா? நானா? நீங்க என்ன சொல்றீங்கன்னு புரியல" என்று குழப்பத்துடன் கேட்டாள். "என் பொண்ணோட வாழ்க்கைய அநியாயமா கெடுத்துட்டியேடி சதிகாரி. நீயெல்லாம் நல்லாவா இருப்ப?" என்று மாலினி அவள் மீது பழி சுமத்தவும் நியதி மேலும் அதிர்ச்சியடைந்தாள். "கனவுல கூட என் ரியா நல்லா இருக்கணும்னு நினைக்குற நான், ரியாவோட வாழ்க்கைய கெடுத்தேனா? என்ன சொல்றீங்க?" என்று புரியாமல் கேட்டவள் வரதராஜனை நோக்கி தன்னுடைய பார்வையை திருப்பினாள்.

எப்போதும் மாலினியின் வசைமொழிகளிலிருந்து தன்னை காப்பாற்றும் வரதராஜன் இன்று வார்த்தைகள் வரம்பு மீறிச்சென்றும் எதுவும் பேசாமல் மெளனமாக அமர்ந்திருந்தது மேலும் அவளுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியது.

ஆனாலும் அவள் வரதராஜனைப் பார்த்து, "ஏன் அப்பா இப்படி பேசுறாங்க? நான் என்ன..." என்று அவள் கேட்கும் முன்பே, "அவா பேசுறதுல என்ன தப்பு" என்று எந்த ஒரு உணர்ச்சியும் இல்லாமல் அவர் கூறியதைக்கேட்டு மாலினி ஆச்சரியமடைய நியதி அதிர்ச்சியடைந்தாள்.
WhatsApp Image 2025-01-25 at 7.23.41 PM.jpeg
'எப்பவும்போல நியதிக்கு சப்போட் பண்ணுவாருன்னு நினைச்சோம். ஆனா நமக்கு சாதகமா பேசுறாரு....நல்ல வேள இந்த மனுஷனுக்கு இப்பவாவது புத்தி வந்ததே' என்று தன்னுடைய மனதிற்குள் மாலினி மகிழ்ச்சியடைந்தாள். ஆனால் நியதிக்கு அவளுடைய செவிகளை நம்பவே முடியவில்லை. வரதராஜன் ஏன் இவ்வாறு பேசுகிறார் என்று புரியாமல் அவரையே அவள் பார்த்துக்கொண்டு நிற்க அவர் மீண்டும் பேசத்துவங்கினார்.

"நீ ஏன் எங்கள ஏமாத்துன? ரியா கல்யாணத்தன்னைக்கு இப்படி பண்ணுவான்னு தெரிஞ்சும் நீ ஏன் எங்ககிட்ட எதுவும் சொல்லாம மறச்ச? சொல்லு நியதி" என்று தன்னுடைய குரலை உயர்தி நியதியைப் பார்த்துக் கேட்டார். அவருடைய குரலில் சற்று அதிர்ந்த நியதி, "அப்பா நான் எதுக்கு உங்கள ஏமாத்தப் போறேன்? எனக்கு ரியா இப்படி பண்ணப்போறாங்குறதே தெரியாது. தெரிஞ்சிருந்தா..." என்று அவள் கூறும்முன்பே, "பொய் சொல்லாத நியதி. ரியா தன்னோட எல்லா விஷயத்தையும் எங்ககிட்ட சொல்றாளோ இல்லையோ உன்கிட்ட சொல்லாம செய்யவே மாட்டா. அந்த காரணத்துனால தான் நான் இந்த பொறுப்ப உன்கிட்ட ஒப்படைச்சேன்....உன்னையும் என்னோட பொண்ணுமாதிரிதான நினச்சேன். உனக்கு தேவையான எல்லாத்தையும் பாத்துபாத்து செஞ்சேன்ல. அப்படி இருக்கும்போது நீ பணக்கார வாழ்க்கைய வாழணும்ங்கிறதுக்காக என் பொண்ணு வாழ்க்கைய கெடுத்துட்டியே" என்று ஆற்றாமை காரணமாக அவளை பார்த்து கத்தினார். அப்போது நியதி எந்தஒரு அசைவும் இல்லாமல் அப்படியே அவரைப் பார்த்தவாறே நின்றுகொண்டிருந்தாள். ரியாவை மட்டும் தன்னுடைய பெண்ணாக குறிப்பிட்டதைக் கேட்டதும் நியதியின் மனம் மிகவும் நொந்து போனது.

அவளுடைய கண்களில் கண்ணீர் திரையிட வரதராஜனைப் பார்த்தவாறு, "அப்பா ஏன் இப்படியெல்லாம் பேசு...." என்று தன்னுடைய வார்த்தைகளை முடிப்பதற்கு முன்பே, "என்ன இனிமேல் அப்பான்னு கூப்பிடாத. இனி உனக்கும் எங்களுக்கும் எந்த சம்மந்தமும் கிடையாது. நீ கிளம்பலாம் நிய....இல்ல இல்ல மிசெஸ் ஆரியவர்தன்" என்று பல வார்த்தை கனல்களை அவள்மீது எறிந்தார்.

வரதராஜன் தன்னை ‘அப்பா’ என்று அழைக்கக்கூடாது என்று கூறியதும் அவளுடைய மனம் சுக்குநூறாக உடைந்தது. அங்கு அதற்குமேலும் நிற்கமுடியாமல் அவள் விரைந்து வெளியேறி தன்னுடைய காரில் அமர்ந்துகொண்டாள்.
_4b39da07-5b8e-471c-bd74-22b6d72e3235.jpg
"மேடம் இப்போ எங்க போகணும்?" என்று கேட்ட அந்த டிரைவரிடம், "வீட்டுக்கு" என்று ஒற்றை பதில் மட்டும் அளித்தாள்.

‘வர்தன்ஸ் பாலஸ்’ செல்லும்வரை தன்னுடைய கண்ணீரை அடக்கிக்கொண்டாள். நியதி வீட்டினுள் விரைந்து நுழைந்ததைப் பார்த்த சந்திரமதி, "என்னமா உன் அப்பா அம்மாவ பாத்து பேசுனியா?" என்று கேட்டதற்கு, "பேசினேன்....எனக்கு கொஞ்சம் டயர்டா இருக்கு பாட்டி. அப்பறம் வர்றேன்" என்று முதியவள் கண்களை பார்க்காமல் கூறிவிட்டு அங்கிருந்து தன் அறைக்கு வேகவேகமாகச் சென்றாள்.
_bc428f96-9a90-46be-bc66-e40bae221ca4.jpg
நியதியின் செய்கையிலிருந்தே வரதராஜன் வீட்டில் ஏதோ நடந்திருப்பதை முதியவள் உணர்ந்தாள். உள்ளே சென்று பூட்டிக்கொண்டவள் மாலை ஆகியும் வெளியே வரவில்லை. சந்திரமதி அவளுடைய அறைக்கு உணவை அனுப்பி வைத்தபோதும் நியதி அதனை உண்ணவில்லை.

மாலையில் சந்திரமதி அந்த பெரிய ஹாலில் உள்ள சோஃபாவில் அமர்ந்திருந்தார். அலுவலகவேலை அனைத்தையும் முடித்துவிட்டு வீடுதிரும்பிய ஆரியவர்தனைப் பார்த்து, "என்னப்பா இன்னைக்கு நாள் எப்படி இருந்துச்சு?" என்று தன்னுடைய வழக்கமான கேள்வியைக் கேட்டார்.
WhatsApp Image 2025-01-24 at 10.01.40 PM.jpeg
அதற்கு, "ம்ம்..நல்லா தான் பாட்டி போச்சு. ஆமா நியதிய எங்க?" என்று கேட்க அவனுடைய கண்கள் அவளைத் தேடின.

உடனே அவர், "வரதராஜன் வீட்டுக்கு போயிட்டு வந்ததுல இருந்து அவ அப்செட்டாவே இருக்கா. என்ன ஆச்சுன்னு தெரியல. எனக்கு கவலையா இருக்கு. நீ போய் பாரு ஆரி" என்று தன் மனதில் இருந்ததைக் கூறினார். "நீங்க கவலப் படாதீங்க பாட்டி. நான் பாத்துக்குறேன்" என்று கூறிவிட்டு தன்னுடைய அறைக்குச் சென்றான்.

நியதி தன்னுடைய அறையில் உள்ள மெத்தையில் கால்களை மடக்கி அமர்ந்து தன்னுடைய முகத்தை கைகளில் புதைத்தவாறு அழுதுகொண்டிருந்தாள்.
_482de0b3-167a-44aa-bd9f-7c5e019c727e.jpg
'அப்பாவுக்கு ரியா மட்டும் தான் அவரோட மகளா? நான் இல்லையா? நான் ரியாவோட வாழ்க்கைய கெடுப்பேன்னு அவருக்கு எப்படி தோணுச்சு? அவர் என் மேல வச்ச நம்பிக்க அவ்வளவு தானா?' என பல எண்ணங்கள் நியதியின் மனதில் தோன்றின.

அப்போது அவளுடைய அறையின் கதவு தட்டைப்பட்டது. உடனே அவள் தன்னை சரிசெய்துகொண்டு மெத்தையிலிருந்து எழுந்தபோது கதவைத் திறந்து ஆரியன் உள்ளே நுழைந்தான். அவள் எதுவும் பேசாமல் தன்னுடைய இமைகளை தாழ்த்தியாறு நிற்க அவன் பேசத்துவங்கினான், "நீ அப்செட்டா இருக்கிறதா பாட்டி சொன்னாங்க. என்ன ஆச்சு?” என்று வினவினான்.
WhatsApp Image 2025-01-24 at 10.22.04 PM.jpeg
ஆனால் அவளோ, "ஒன்னும் இல்ல சார். வீட்டுக்கு போனேன், அம்மா அப்பாவ பாத்துட்டு வந்தேன்" என்று கீழே பார்த்தவாறு கூறினாள். அவன் பலமுறை அவளிடம் காரணத்தைக் கேட்டும் அவள் கூற மறுத்துவிட்டாள். இறுதியாக அவன், "நியதி நீ என்ன உன்னோட ஹஸ்பண்டா நினைக்க வேண்டாம். ஒரு ஃரெண்டா, ஒரு வெல்-விஷரா நினச்சு உன் மனசுல உள்ளத ஷார் பண்ணு" என்று அவன் கேட்டபோது அவளுடைய கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது.

கண்ணீரை துடைத்துவிட்டு தன்னுடைய விழிகளை உயர்த்தி அவனைப் பார்த்தாள். அங்கு நடந்தவற்றை மேலோட்டமாக அவனிடம் கூறினாள். அவள் கூறிமுடித்த பின்பு அங்கு அமைதி நிலவியது. பின் ஆரியன் பேசத் துவங்கினான், "நியதி மனுஷங்க எப்பவுமே சூழ்நிலை கைதியா மாறிடுறாங்க. அதேமாதிரிதான் மிஸ்டர் வரதராஜனும் அன்னைக்கு ஒரு பிசினஸ் மேனா, தன்னுடைய தொழில காப்பாத்த நினச்சு முடிவெடுத்தவர் காலம் கடந்ததுக்கு அப்பறம் ஒரு அப்பாவா தான் எடுத்த முடிவ நினைச்சு வருத்தப்படுறாரு. ஆனா அவர்தான உன்ன ரியாவுக்கு பதிலா உக்காரவச்சது. டெசிஷன் எல்லாத்தையும் அவரேஎடுத்துட்டு உன் மேல பழிபோடுறது தப்பு. திஸ் இஸ்ஸின்ட் ஃர்" என்று தன்னுடைய கருத்தை தெரிவித்தான்.

ஆனால் நியதியோ, "இல்ல சார் அவரோட பாயிண்ட் ஆஃ வியூல இருந்து பாத்தா அவர் செஞ்சது சரிதான். யாரா இருந்தாலும் அந்த சூழ்நிலைல அப்படி தான் செஞ்சிருப்பாங்க. ஆனா என்ன பத்தி நல்லா தெரிஞ்சும் என்மேல அவர் நம்பிக்க வைக்காமபோனதுதான் சார் எனக்கு வருத்தமே" என்று அப்போதும் வரதராஜனை விட்டுக்கொடுக்காமல் அவருக்கு ஆதரவாகவே நியதி பேசினாள். "கவப்படாத நியதி மனுஷங்க எல்லா நேரமும் ஒரே மாதிரி இருக்கமாட்டாங்க. அவங்களோட தப்ப உணர்ந்து மாறக்கூடிய காலமும் வரும். அப்போ அவர் உன்னப்பத்தி புரிஞ்சிக்குவாரு" என்று அவன் ஆறுதல் வார்த்தைகளைக் கூறவும் அவள் லேசாக புன்முறுவல் செய்தாள்.

பின், "இதையே யோசிக்காம ஒழுங்கா சாப்பிடு. நான் டின்னர கொண்டுவர சொல்றேன்" என்று கூறிவிட்டு அங்கிருந்து செல்லவிருந்தவனிடம், "ஒரு நிமிஷம் சார்" என்று அவனை நிறுத்தினாள். அவன் திரும்பிப் பார்த்தபோது, "நீங்களும் என்ன அப்பா மாதிரியே.....அதாவது நான் தான் ரியாவ பிரைன் வாஷ் பண்ணி..." என்று அவள் முடிக்கும் முன்பே, "நான் ஏற்கனவே சொல்லீருக்கேன் ரியா இஸ் மை பாஸ்ட். அவள பத்தி பேசாத" என்று கூறிவிட்டு தன்னுடைய அறைக்குச் சென்றான்.

தன்னுடைய இன்டெர்காம் மூலம் கிச்சனுக்கு அழைத்து நியதி சாப்பிடுவதற்கு கொண்டுவருமாறு ஆணையிட்டான். பின் தன்னுடைய புளூடூத் மூலம் பார்கவை அழைத்து ஏதோ கூறிவிட்டு இணைப்பை துண்டித்தான். அன்றிரவு நியதியின் கைபேசிக்கு சரணிடமிருந்து அழைப்பு வந்தது. "என்ன நிதி, எப்படி இருக்க? எந்த ஒரு பிரச்னையும் இல்லைல? வர்தன் சார் ஏதாவது சொன்னாரா?" என்று அடுக்கடுக்காக அவளை விசாரித்தான்.

ஆனால் அவளோ, "நல்லா இருக்கேன் சரண்" என்று அவனுடைய அனைத்து கேள்விகளுக்கும் ஒரே பதிலை கொடுத்தாள். அவளுடைய குரலில் மாற்றமும், எப்போதும் 'சான்' என்று அழைப்பவள் இன்று 'சரண்' என்று அழைப்பதையும் வைத்து அவளுக்கு ஏதோ பிரச்சனை இருப்பதை சரண் நன்கு உணர்ந்தான்.

பலமுறை அதைபற்றி அவளிடம் கேட்டபோதும் அவள் மழுப்பவும் அவன், "எனக்கு உன்ன பாக்கனும்போல இருக்குது நிதி. எப்பவும் நாம மீட் பண்ற ரெஸ்டாரண்ட்டுக்கு நாளைக்கு ஈவ்னிங் வந்துரு" என்று கூறவும் அவள் ஒப்புக்கொண்டாள். மறுநாள் மாலை அவர்கள் இருவரும் சந்தித்தபோது சரண் அவளைப் பார்த்து, "என்ன பிரச்சனை நிதி சொல்லு" என்று அவன் விசாரித்தான்.

ஆனால் அப்போது அவள் கூறாமல் இருக்கவும், "நிதி யாருக்கு தெரியுதோ இல்லயோ, உன்னப்பத்தி எனக்கு நல்லா தெரியும். உன்னோட சின்ன குரல் மாற்றத்தை வச்சி நீ எப்படி இருக்கன்னு கண்டுபிடிச்சிருவேன். அதனால என் கிட்ட உன்னால எதையும் மறைக்கவே முடியாது. சொல்லு என்ன ஆச்சு?" என்று அவன் வினவவும் அவள் வரதராஜன் வீட்டில் நடந்த அனைத்தையும் ஒன்றுவிடாமல் அவனிடம் கூறினாள்.

உடனே அவன், "வரதராஜன் சாரா அப்படி சொன்னாரு? என்னால நம்பவே முடியல. இந்த பணக்காரங்களே இப்படித்தான். வேணுங்கிறப்ப யூஸ் பண்ணீட்டு அப்பறம் தூக்கியெறிஞ்சிருவாங்க. தான்பொண்ணுன்னு வரும்போது அவரு உன்னையா பாக்குறாரு" என்று கோபம்கொண்டான். ஆனால் அவளோ, "சரண் அவரோட இடத்துல இருந்து பார்த்தா அவர் செஞ்சது எதுவும் தப்பே இல்ல. அவரப்பத்தி தெரியாதவங்க இந்தமாதிரி சொல்லலாம் ஆனா நீ... நீ சொல்லலாமா. அவரு உனக்கும் எனக்கும் எவ்வளவோ செஞ்சிருக்காரு" என்று நியதி கூறவும் அவன் தலைகுனிந்தான்.

மேலும் அவள் "அவர் என்ன மகளா ஏத்துக்கலைனாலும் பரவால்ல ஆனா அவர் எனக்கு எப்பவுமே அப்பாதான்" என்று அவள் அப்போதும் வரதராஜனை உயர்த்திப்பேசினாள். "நிதி நீ என்ன அடிச்சாலும் உதைச்சாலும் நான் உன்னைவிட்டு போகவே மாட்டேன். அதனால உனக்கு என்ன பிரச்சன வந்தாலும் நீ என்கிட்ட மறைக்காம கண்டிப்பா சொல்லுவன்னு சத்தியம் பண்ணு" என்று தன்னுடைய கையை நீட்டினான்.

அவன் கூறிய விதத்தில் சற்று சிரிப்புவர லேசாக புன்னகைத்தவள், அவனுடைய கையில் தன்னுடைய கரத்தை வைத்து சத்தியம் செய்தபோது அங்கு சிரிப்பலை பரவியது. நியதியை இந்தவிஷயத்திலிருந்து திசைதிருப்புவதற்காக சரண் வேறு விஷயங்களை பேசத் துவங்கினான்.

அலுவலக வேலையை முடித்துவிட்டு மாலை வீடுதிரும்பிக்கொண்டிருந்த ஆரியவர்தன் டிராபிக் ஜாமில் மாட்டிக்கொண்டான். தன்னுடைய கைபேசியிலிருந்து கவனத்தை வெளியே திருப்பியவனின் கண்களுக்கு நியதியும் சரணும் ஒன்றாக சிரித்துப் பேசுவதைக் கண்டான்.
WhatsApp Image 2025-01-25 at 8.54.15 PM.jpeg
ரெஸ்டாரண்டின் கண்ணாடி வழியாக அந்த காட்சியை ஆரியவர்தனால் பார்க்க முடிந்தது. அவன் அதை பார்த்தவாறு அப்படியே அமர்ந்திருந்தான்.

டிராபிக் ஜாம் சரியானதும் அங்கிருந்து அவனுடைய கார் நகர்ந்தது. நியதியும் தன்னுடைய மனஇறுக்கம் குறைந்தவளாய் வீடு திரும்பினாள். அவளுடைய புன்னகையைப் பார்த்ததும் சந்திரமதிக்கு நிம்மதியாக இருந்தது. அவள் ஆரியவர்தனின் அறைக்குச் சென்றபோது அவன் தன்னுடைய லாப்டாப்பில் எதையோ பார்த்துக்கொண்டிருந்தான்.

அவனருகில் வந்து, "சாப்டீங்களா சார்?" என்று கேட்டதற்கு 'ம்ம்' என்று மட்டும் அவனிடமிருந்து பதில் வந்தது. தன்னுடைய அறைக்குள் செல்லவிருந்தவளை அழைத்து, "இதுக்கு முன்னால எப்படி இருந்தன்னு எனக்கு தெரியாது. ஆனா இனிமேல் நீ என்னோட வைஃ....மிசெஸ் ஆரியவர்தன். அதுக்கேத்தமாதிரி நீ நடந்துக்கோ" என்று கூறினான்.

அவன் ஏன் அவ்வாறு கூறினான் என்று அவளுக்கு புரியவில்லை, ஆனாலும் அவள் 'சரி' என்று தலையசைத்துவிட்டு தன்னுடைய அறைக்குள் சென்றாள். அவள் சென்றதும் ஆரியவர்தன், 'நேத்து என் கூட பேசும்போது இல்லாத அந்த சந்தோஷம் இன்னைக்கு அவன் கூட பேசும்போது இருக்கு. யார் அவன்? அவனுக்கும் நியதிக்கும் என்ன சம்பந்தமா இருக்கும்?' என்று தன்னுடைய மனதில் கேள்விகளை எழுப்பிக்கொண்டிருந்தான்.

அப்போது அவனுடைய கைபேசிக்கு பார்கவிடமிருந்து அழைப்பு வந்தது, "சார் நீங்க சொன்னதுபோல செஞ்சுட்டேன்" என்று அவன் சொல்ல, 'ம்ம்' என்று மட்டும் கூறிவிட்டு தன்னுடைய கைபேசியை வைத்தான். அப்படியே நான்கு நாட்கள் ஓடின. நியதியால் வரதராஜனை பார்க்காமல் இருக்கமுடியவில்லை.

அதனால் அவரைப் பற்றி தெரிந்துகொள்வதற்காக தன்னுடன் வரதராஜன் கன்ஸ்ட்ரக்ஷன்சில் பணிபுரிந்த சகபணியாளான மாதவியை கைபேசியின் மூலம் தொடர்புகொண்டாள். நியதி என்று தெரிந்ததும் அழைப்பை எடுத்து அவளை குசலம் விசாரித்தாள். அனைத்திற்கும் பதிலளித்துவிட்டு, "அதெல்லாம் இருக்கட்டும் மாதவி, அப்பா எப்படி இருக்காங்க? அந்த ட்ரீம் ப்ராஜக்ட் எந்த லெவல்ல இருக்கு?" என்று கேட்டாள்.

சிறு மௌனத்திற்குப் பின், "அந்த ப்ராஜக்ட் நம்ம கையவிட்டு போய்டுச்சுன்னு உனக்கு தெரியாதா?" என்று அவள் கேட்டபோது நியதியால் அதை நம்பமுடியவில்லை. மேலும் அவள், "நமக்கு சரியான நேரத்துல ரா- மெடீரியல்ஸ் கிடைக்கல. அதனால வேல டிலே ஆயிடுச்சு. சோ கிளையண்ட்ஸ் டீல கான்சல் பண்ணீட்டாங்க" என்று சோகத்துடன் கூறினாள்.

உடனே நியதி, "அப்போ அப்பா...." என்றவளிடம், "சார் ரொம்ப நொந்துட்டாரு. இது ரொம்ப பெரிய ப்ராஜெக்ட்ல, கான்செல் ஆனதுல நிறைய லாஸ் ஆகிடுச்சு. நீ போனதுல இருந்து நம்ம கம்பெனி ரொம்ப மோசமான நிலைக்கு போய்டுச்சு....சரி சரி எனக்கு இப்போ வேல இருக்கு நான் அப்பறமா பேசுறேன்" என்று கூறி மாதவி அழைப்பை துண்டித்தாள்.

'இப்படி நடக்குறதுக்கு வாய்ப்பே இல்லையே. நாம எல்லாத்தையும் சரியாய் பாத்து தானே செஞ்சோம். எதனால இப்படி நடந்தது?' என்று நியதியின் மனதில் நிறைய கேள்விகள் எழுந்தன ஆனால் எதற்கும் பதில் மட்டும் கிடைக்கவில்லை.

நியதி எப்போதும் காலையில் எழுந்து குளித்து, கடவுளை வணங்கிவிட்டு காலை உணவை அனைவருடனும் உண்பாள். பின் லானில் அமர்ந்து இயற்கையை ரசிப்பாள். மதிய உணவிற்குப் பின் தன்னுடைய அறையில் புத்தகங்களை வாசிப்பாள். மாலை நேரத்தில் சந்திரமதியுடன் சிறிது நேரம் செலவிடுவாள். இரவு உணவு முடிந்ததும் விரைவில் தன்னுடைய படுக்கைக்குச் சென்றுவிடுவாள். இப்படியே மூன்று வாரங்கள் கழிந்தன. அந்த வாழ்க்கை சலிப்பை உண்டாக்கியது.

அப்படியொருநாள் நியதி லானில் அமர்ந்திருந்தபோது "மேடம்" என்று ஒரு குரல் கேட்டது. திரும்பிப் பார்த்தபோது அங்கு பார்கவ் ஒரு கோப்புடன் நின்றுகொண்டிருந்தான்.
_d0298a80-48fb-44d3-b032-b221f6b4dbc3.jpg
அவன் அதை நியதியிடம் நீட்டி, "வர்தன் சார் இதை உங்ககிட்ட குடுக்க சொன்னாரு" என்று மட்டும் கூறி அவளிடம் அதை கொடுத்துவிட்டுச் சென்றான். 'என்னவாக இருக்கும்?' என்று நினைத்தவாறு அதை திறந்து பார்த்தவளின் கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தன.
_e86b153e-5e1d-4dc8-8a6b-0461776bd6dc.jpg
மாயங்கள் தொடரும்...
 

Krishna Tulsi

Moderator
மாயம் 9
அதைப் பார்த்த நியதியால் தன்னுடைய கண்களை நம்பமுடியவில்லை. ஏனென்றால் ஆரியவர்தனின் பெர்சனல் அசிஸ்டன்டாக அவள் நியமிக்கப் பட்டிருப்பது அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. வர்தன் கார்ப்பரேட் குரூப்ஸில் பணிபுரிவது சாதாரண காரியம் அல்ல. அதில் பணிபுரியும் அடிமட்ட தொழிலாளி கூட அறிவுகூர்ந்தவனாக இருப்பான். அதனால் நிறுவனத்திற்குள் எளிதில் யாராலும் நுழையமுடியாது. முதலில் நியதியும் இங்கு பணிபுரியவேண்டும் என்று மிகவும் ஆர்வமாக இருந்தாள், ஏன் அது அவளது கனவாகவும் கூட இருந்தது.

ஆனால் வரதராஜனின் வேண்டுகோளுக்கு இணங்க, தன்கனவை கைவிட்டு அவருடைய நிறுவனத்தில் பணிபுரிந்தாள். அப்படி இருக்க இவ்வளவு வருடம் கழித்து தனக்கு இப்படியொரு வாய்ப்பு கிடைத்ததை அவளால் நம்பமுடியவில்லை. தன்னுடைய கண்களை கசக்கி பலமுறை பார்த்தபோதும், தன் கையைக் கிள்ளிப்பார்த்தபோதும் அந்த கோப்பிலுள்ள செய்தியில் எந்த மாற்றமும் இல்லை. அவளுடைய மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.

இந்த சந்தோஷமான செய்தியை யாரிடமாவது பகிர்ந்துகொள்ளவேண்டுமென்று தன்னுடைய கைபேசியில் சரணை அழைத்து விஷயத்தை தெரிவித்தாள். அவனும் அதைக் கேட்டவுடன் மிகவும் மகிழ்ந்து அவளுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தான். கைபேசியை வைத்தபோது, 'கண்ணா இனிமேலாவது நியதியோட வாழ்க்கைல எந்த பிரச்சனையும் வராம நீதான் பாத்துக்கணும்' என்று கடவுளை சரண் வேண்டிக்கொண்டான்.
_007d1c2b-181b-4e16-b23d-78929e347f3e.jpg
இங்கு நியதி இந்த விஷயத்தை சந்திரமதியிடம் தெரிவிப்பதற்காக திரும்பியபோது ரஞ்சித் அங்கு நின்றுகொண்டிருந்தான். "ஒரு நிமிஷம் உன்கூட பேசணும் நியதி" என்று கூற அவள் அங்கேயே நின்றாள். "அன்னைக்கு நான் அப்படி நடந்துக்கிட்டதுக்கு ஐ யம் ரியல்லி சாரி. மிஸ்டர் வரதராஜன் அப்படி பண்ணதுல ஆரிக்கு ஏதாவது கெட்டபெயர் வந்துருமோங்குற ஆதங்கத்துலதான் அப்படி நடந்துக்கிட்டேன். சோ என்ன மன்னிச்சிடு" என்று தன்னுடைய செயலுக்கு மன்னிப்பு கோரினான்.
_8cc0d137-e626-42d6-9bce-397443d5e24e.jpg
அவள், "நீங்க உங்க ஃரெண்டு மேல வச்சிருக்குற நட்புனால தான் அப்படி பண்ணீங்கன்னு எனக்கு தெரியும். நான் அத தப்பா எடுத்துக்கல" என்று கூறினாள். ரஞ்சித் மீண்டும் பேசத் துவங்கினான், "நியதி ஆரி தன்னோட வாழ்க்கைல ரொம்ப கஷ்டங்கள அனுபவிச்சிட்டான். இனிமேலாவது அவன் சந்தோஷமா இருக்கட்டும். நீ அவன நல்லபடியா பாத்துக்கோ" என்று கூறவும், "அவர நான் ரொம்பவே நல்லா பாத்துக்குறேன். இனி அவர் வாழ்க்கைல சந்தோஷம் மட்டும் தான் இருக்கும். கவலையேபடாதீங்க" என்று அவனுக்கு உறுதியளித்தாள். அவன், "தாங்க் யூ" என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றான்.

அதன்பின் நியதி விரைந்து சந்திரமதியிடம் சென்றாள். அந்தவிஷயத்தை கேட்டவுடன் அவர் மிகவும் மகிழ்ச்சியடைந்து அந்த அப்பாய்ன்ட்மென்ட் ஆர்டர் ஃலை பூஜையறையில் வைக்குமாறு கூறினார்.

ஆரியவர்தன் மாலை வீடுதிரும்பியபோது நியதி அவனிடம் சென்று, "சார், என்ன உங்க பி.ஏ.வா அப்பாய்ண்ட் பண்ணதுக்கு தாங்க் யூ சோ மச். என்ன நம்பி நீங்க இந்த போஸ்ட ஒப்படைச்சிருக்கீங்க. நான் எந்த ஒரு குறையும் இல்லாம நல்லபடியா என்னோட வேலைய செய்வேன் சார்" என்று அவனுக்கு தன்னுடைய நன்றியைத் தெரிவித்தாள். "கங்கிராஜூலேஷன்ஸ் அண்ட் ஆல் தி பெஸ்ட்" என்று அவளுக்கு தன்னுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்தான்.
_c36827aa-0161-4fc1-bb2b-d1f679ba34d0.jpg
பின், "அண்ட் ஒன் மோர் திங் நீ இனிமேல் என்ன சார்னு கூப்பிடாத" என்று அவன் கூறவும் புரியாமல் அவனைப் பார்த்தாள். ஆனால் அவனோ , "ஐ மீண் ப்ரோஃஷனல்லா இருக்கும்போது 'சார்'னு சொல்லு. ஆனா பாட்டி முன்னால என்ன நீங்க, வாங்கண்ன்னு கூப்பிடு" என்று அவளிடம் கூறினான். உடனே அவள் சந்தோஷமாக, "ஓகே சார்" என்று வழக்கம்போல அழைக்கவும் அவன் அவளை அப்படியே பார்த்தான். அவனுடைய அந்த பார்வையின் அர்த்தத்தை உணர்ந்தவளாக, "சாரி" என்று கூறிவிட்டு அசடுவழிய சிரித்தவாறு அங்கிருந்து சென்றாள். அவள் அங்கிருந்து செல்லும் வரையிலும் அவளை லேசான புன்னகையுடன் பார்த்தவாறே தன்னுடைய வீல்சேரில் அமர்ந்திருந்தான் ஆரியன்.

மறுநாள் காலை உணவுக்காக அனைவரும் டைனிங் டேபிளில் அமர்ந்திருந்தபோது வழக்கத்திற்கு மாறாக இனிப்பு பரிமாறப்பட்டது.
WhatsApp Image 2025-01-28 at 7.32.59 PM.jpeg
அதைப் பார்த்து, "என்ன பாட்டி இன்னைக்கு வித்யாசமா பிரேக்ஃஸ்ட்டுக்கு ஸ்வீட்லாம் செஞ்சிருக்கீங்க. என்ன விசேஷம்?" என்று அந்த இனிப்பை உண்டவாறே பார்கவ் வினவினான்.

உடனே, "டேய் என்னோட பேத்தி முதமுதல்ல உங்ககூட சேர்ந்து ஆஃஸ்க்கு வரப்போறா. அதான் எல்லாருக்கும் இன்னைக்கு ஸ்வீட். தெரியாத மாதிரியே கேப்பான்" என்று சந்திரமதி அவனை விளையாட்டாக கடிந்தார். உடனே, "அட ஆமா நான் அத மறந்தே போய்ட்டேன். சாரி சாரி... ஆல் தி பெஸ்ட் மேடம்" என்று நியதியைப் பார்த்து தன்னுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்தான். அப்போது ரஞ்சித்தும் தன்னுடைய வாழ்த்துக்களைக் கூற இருவருக்கும் தன்னுடைய நன்றியை தெரிவித்தாள்.

அனைவரும் உண்டுமுடித்துவிட்டு அலுவலகத்திற்குச் செல்லும்போது சந்திரமதி, "ஆரி இன்னைக்கு நியதியோட முதல்நாள். நானும் அவளும் கோவிலுக்கு போறோம். அதனால நியதி ஆஃஸ் வர்றதுக்கு கொஞ்சம் நேரமாகும்" என்று கூறினார். உடனே அவன், "இல்ல பாட்டி இன்னைக்கு நியதிக்கு ஃஸ்ட் டே. லேட்டா வந்தா கரெக்டா இருக்காது. அதுனால அவ என் கூடவே வரட்டும்" என்று மறுத்தான்.

ஆனால் சந்திரமதியோ, "போடா ஒருமணி நேரத்துல எதுவும் ஆகிடப் போறதில்ல. நியதி என் கூடத்தான் வருவா" என்று அவர் பிடிவாதமாகக் கூறவும் அவன், "உங்க இஷ்டம்" என்று கூறிவிட்டு அங்கிருந்து தன்னுடைய அலுவலகத்திற்கு கிளம்பிவிட்டான். பூஜையறையிலுள்ள அந்த கோப்பை எடுத்துக்கொண்டு நியதியும் சந்திரமதியும் கோவிலுக்கு கிளம்பினர்.
WhatsApp Image 2025-01-28 at 1.01.38 PM.jpeg
அங்கு வரதராஜனின் வீட்டில், "என்னங்க நமக்குமட்டும் ஏன் அடுக்கடுக்கா பிரச்சன வருது. மொதல்ல ரியா நம்மள அவமானப் படுத்திட்டா, அடுத்து நம்ம பொண்ணு இருக்கவேண்டிய இடத்துல அந்த நியதி இருக்கா, எப்பவுமே நல்லா இருக்குற பிசினெஸ்ல இவ்வளவு பெரிய லாஸ்..." என்று பெருமூச்சுவிட்டாள். பின், "என் ஃரெண்டுக்கு ஒரு ஜோசியர தெரியுமாங்க. அவர போய் பாத்தா ஏதாவது பரிகாரம் சொல்லுவாரு. அத செஞ்சாலாவது நமக்கு நல்லது நடக்குமான்னு பாப்போமே" என்று வரதராஜனிடம் கேட்டாள். ஆனால் அவரோ, "நீயும் உன் பரிகாரமும். கோவிலுக்கு போவோம். வா" என்று கூற மாலினியும் ஒப்புக்கொண்டாள்.

அதேசமயம் கோவிலில் சந்திரமதி கருவறையின் முன்பு அமர்ந்திருக்க பிரகாரத்தை சுற்றிவிட்டு வருவதாகக் கூறி நியதி மட்டும் தனியே சென்றாள். அப்போது தற்செயலாக அங்கு வந்திருந்த வர்தராஜனை எதிர்கொண்டாள். அவரைப் பார்த்ததும் விரைந்து அவரருகே சென்று, "அப்பா எப்படி இருக்கீங்க?" என்று நலம்விசாரித்தாள்.

அவர் 'ம்ம்' என்று என்று மட்டும் பதிலளித்தார். "எனக்கு வர்தன் சாரோட பி.ஏ.வா வேல கிடைச்சிருக்கு. இன்னைக்கு தான் முதல் நாள். ஆசீர்வாதம் பண்ணுங்கப்பா" என்று அவருடைய காலில் விழுந்தாள். அவர் அவளை ஆசிர்வதிக்கவில்லை என்றபோது அவளுடைய மனது லேசாக வலித்தது. ஆனால் அவள் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் புன்முருவலுடனேயே இருந்தாள்.

வரதராஜனின் நிறுவனத்தில் நடந்த அந்த பெரிய இழப்பைப் பற்றி எப்படி விசாரிப்பது என்று அவள் எண்ணும்போதே, "நீ எங்கள இங்கயும் நிம்மதியா இருக்கவிடமாடியா? எங்க போனாலும் பின்னாலயே வந்துடற. வாங்க நம்ம போகலாம்" என்று அங்கு வந்த மாலினி வரதராஜனை இழுத்துச் சென்றாள். ஆனாலும் நியதி அவர்களைப் பின்தொடர்ந்து சென்றாள்.

தங்களை நியதி தொடர்வதை அறிந்த வரதராஜன் தன் கையிலுள்ள திருநீறை இறைவனின் முன்னுள்ள கல்லில் வைத்துவிட்டு, "போற காரியம் நல்லதாவே நடக்கட்டும்" என்று கூறினார். இதைக்கேட்ட நியதிக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது ஆனால் மாலினிக்கு அவர் கூறியது விளங்கவில்லை, "நாம எங்கங்க போப்போறோம்?" என்று கேட்டதற்கு, "நீ வா" என்று அவளை அழைத்துச் சென்றார். அவர்கள் சென்றதும் நியதி அந்த திருநீறை அவருடைய ஆசீர்வாதமாக நினைத்து தன் நெற்றியில் இட்டுக்கொண்டாள்.

வரதராஜன் நல்லவர்தான், ஆனால் சில துர்போதனைகளால் அவ்வப்போது அவருடைய மனம் தடுமாறுகிறது. பின் சந்திரமதி வீடு திரும்ப நியதி அலுவலகத்திற்குச் சென்றாள். அங்கு அவளுக்கு நல்ல வரவேற்பு கொடுக்கப்பட்டது.
உயர் அதிகாரிகள் அனைவர்க்கும் நியதி அறிமுகப்படுத்தப் பட்டாள். அன்றிலிருந்து தினமும் ஆரியவர்தனின் பி.ஏ.வாக நியதி அவனுடன் அலுவலகத்திற்குச் சென்றாள். இவ்வாறாக மூன்று மாதங்கள் கடந்தன. அவர்களுக்குள் நெருக்கம் அதிகரித்தது.

தினமும் காலையிலிருந்து மாலைவரை இருவருமாக சேர்ந்தே இருப்பதால் அவர்களுக்குள் நல்ல புரிதல் உண்டாயிற்று. நியதிக்கு புத்தகம் வாசிப்பது பிடிக்கும் என்பதால் ஆரியன் ஒரு 'மினி லைபரேரியை' அவளுக்கென தனியாக அமைத்தான். அவர்களுக்கு இடையில் மெல்ல காதல் மலரத் துவங்கியது.

அப்படியொரு சமயம் ஆரியவர்தன் தன்னுடைய வேலைப்பளு காரணமாக விரல்களை தன்னுடைய புருவத்திற்கு இடையே அழுத்தியவாறு அமர்ந்திருந்தான். அவன் பார்கவைப் பார்த்து, "எனக்கு தல வலிக்குது காஃ போட்டு கொண்டுவா பார்கவ்" என்று கூறினான். அப்போது, "மே ஐ கம் இன்" என்று அனுமதிகேட்டவாறு கையில் காபி கப்புடன் நியதி அந்த அறையினுள் நுழைந்தாள்.
WhatsApp Image 2025-01-29 at 7.35.11 PM.jpeg
நியதி மற்றும் ஆரியன் இருந்த அறைகளை ஒரு கண்ணாடி சுவர் பிரிந்திருந்தது. அதனால் இருவரும் அடுத்தவர் அறையில் என்ன நடக்கிறது என்பதை தெளிவாகப் பார்க்கமுடியும். அப்படித்தான் நியதி அவனுடைய டென்ஷனைப் பார்த்து அவனுக்காக காஃ கொண்டுவந்தாள். அவளைப் பார்த்து அங்கிருந்த இருவரும் திகைத்தனர்.

அவள், "சார் நீங்க டென்ஷனா இருக்கீங்க. இந்த காஃய குடிங்க. உங்க டென்ஷனும் தலைவலியும் போய்டும்" என்று கூறி அவனிடம் கப்பை நீட்டினாள். நடந்ததைப் பார்த்துக்கொண்டிருந்த பார்கவ் லேசாக முறுவலித்தவாறு அங்கிருந்து வெளியேறினான். "நான் டென்ஷனா இருக்கேன்னு உனக்கெப்படி தெரியும்?" என்று காஃயை மிடறுகளாக அருந்தியவாறு அவளிடம் கேட்டான்.

அனால் அவளோ, "அதெல்லாம் தெரியும்" என்று புன்னகைத்தவாறு கூறிவிட்டு அங்கிருந்து செல்லவிருந்தவளை நிறுத்தி, "காஃ நல்லாயிருக்கு. தாங்ஸ் ஃர் தி காஃ" என்று அவன் பாராட்டவும் அவள் புன்னகைத்தவாறு அங்கிருந்து சென்றாள். மறுநாள் ஆரியன் தன்னுடைய அறைக்கு வந்தபோது ஒரு சுகந்தமான நறுமணம் அங்கு வீசியது. 'எங்கிருந்து அவை வருகின்றன?' என்று அவன் பார்த்தபோது அவனுடைய டேபிளில் லாவண்டர் பூக்கள் நிறைந்த கண்ணாடி வாஸ் வைக்கப்பட்டிருந்தது. ஆரியவர்தனுக்குப் பூக்கள் என்றால் பிடிக்கவேபிடிக்காது. அதனால் அவைகளைப் பார்த்தவுடன் அவனுடைய முகம் கோபத்தால் சிவந்தது.

உடனே தன் வீல் சேரை டேபிளின் அருகில் செலுத்தி அந்த வாஸை அங்கிருந்து கீழே தள்ளிவிட்டான். உடனே அந்த பூக்கள் கீழே விழ அந்த கண்ணாடி வாஸும் தூள் தூளாக நொறுங்கியது. பக்கத்து அறையிலிருந்து ஆரியனின் புன்னகைக்காக காத்துக்கொண்டிருந்த நியதி அவன் அவைகளை கீழே தள்ளிவிட்டது தெரிந்ததும் அவனுடைய அறைக்கு விரைந்தாள். ஆரியவர்தன் பார்கவைப் பார்த்து, "எனக்கு ஃலார்ஸ் பிடிக்காதுன்னு தெரியும்ல? யார் இங்க வச்சா?" என்று அவனை திட்டினான்.

பயத்தில் உறைந்திருந்த பார்கவ், "சாரி சார்...யாருன்னு தெரியல....இப்போவே...கிளியர் பண்ணசொலீறேன்..." என்று தக்கித்தடுமாறி கூறினான். அங்கு வேகமாக வந்த நியதி, "சார் அத நான் தான் வச்சேன். இந்த பூவோட ஸ்மெல் ஸ்ட்ரெஸ்ஸ குறைக்கும். அதுனாலதான்...இனிமேல் இப்படி நடக்காது சார்" என்று அவள் கூறிவிட்டு அங்கிருந்து சென்றாள். அதை வைத்தது நியதி என்று தெரிந்ததும் ஆரியனுக்கு சந்தோசமாக இருந்தது. ஆனால் அவன் செய்த காரியம் நியதியின் மனதைப் புண்படுத்தியதை நினைத்து மிகவும் வருந்தினான். அன்றைய நாள் ஏனோதானோ என இருவருக்கும் சென்றது.

மறுநாள் காலை அலுவலகத்திற்குச் சென்றபோது அவர்களது கார் சிக்னலில் நின்றது. அவன் மன்னிப்பு கேட்பதற்காக நியதியின் பக்கம் திரும்பியபோது அவள் வெளியே எதையோ பார்த்துக்கொண்டிருந்தாள்.
_7760dc81-d664-4b66-b8bc-32c4e6d89755.jpg
அவனும் அதே திசையில் பார்த்தபோது அங்கு ஒரு ஏழு வயது பெண்குழந்தை பூக்களை விற்றுக்கொண்டிருந்தாள். நியதிக்கு அந்த பூக்களை வாங்கி அந்த சிறுமிக்கு உதவவேண்டும் என்று ஆசை இருந்தபோதும் முந்தைய தினம் நடந்த நிகழ்வு அவளைத் தடுத்தது.

அவளுடைய எண்ணத்தைப் புரிந்தவனாக பார்கவிடம் அந்த குழந்தையை அழைத்து பூக்களை வாங்குமாறு உத்தரவிட்டான். அவன் கூறியதைக் கேட்டு நியதியும் பார்க்கவும் ஆச்சரியத்துடன் அவனை திரும்பிப் பார்த்தனர். அவன் பார்கவிடன் பூக்களை வாங்குமாறு புருவத்தை ஏற்றி இறக்க அவனும் அவ்வாறே செய்தான்.

அந்த பூக்களுக்கான விலை நூறு ரூபாயாக இருந்தபோதும் பார்கவிடம் ஐநூறு ருபாயை அந்த குழந்தையிடம் கொடுக்குமாறு கூறினான். ஆனால் அந்த குழந்தை மறுத்துவிட்டாள். காரணத்தைக் கேட்டபோது, "சார் என் அப்பா எப்பவுமே உழைச்சதுக்கு காசுவாங்குனாதான் நம்ம உடம்புல ஒட்டும்ன்னு சொல்லுவாரு. ஒரு ரோஜா பூச்செண்டோட விலை நூறு ரூபா. அதுமட்டும் போதும்" என்று கூறினாள்.

அவளுடைய அந்த பதிலால் மனம் நெகிழ்ந்த ஆரியவர்தன், "இன்டெரெஸ்ட்டிங், வெரி இன்டரெஸ்டிங்" என்று கூறினான். மேலும் அவளிடமிருந்தே தினமும் பூக்களை வாங்கிக்கொள்வதாகக் கூறவும் அந்த சிறு குழந்தையின் முகம் மகிழ்ச்சியால் மலர்ந்தது. ட்ராஃக் சிக்னலைக் கடந்து அவர்கள் சென்றுகொண்டிருந்தபோது, "நியதி, நேத்து நான் அப்படி நடந்ததுக்கு ஐ அம் ரியல்லி சாரி. இனிமேல் தினமும் என்னோட டேபிள்ல அந்த பொண்ணு குடுக்குற ஃலவர்ஸ அரேஞ் பண்றது உன்னோட பொறுப்பு. ஓகே" என்று அவன் நியதியிடம் கூறினான். முதலில் ஆச்சரியத்துடன் அவனைப் பார்த்த நியதி பின் சந்தோஷத்துடன் ஒப்புக்கொண்டாள். ஒருவருக்கொருவர் புன்முறுவலைப் பரிமாறிக் கொண்டனர்.

இங்கு இவர்களுக்கிடையே காதல் மலர்ந்துகொண்டிருக்க அங்கு ஒரு பெரிய கோல்ஃ மைதானத்தில் இருவரைப் படுக்கவைத்திருந்தனர். அவர்களின் முகத்தில் கோல்ஃ பந்து வைக்கப்பட்டிருந்தது.
_9dd26462-0e0c-4162-b318-f41c74d44ab2.jpg
அவர்களுள் ஒருவன், "டேய் நான் தான் அப்படி செய்யாதன்னு அப்பவே சொன்னேன்ல. பாரு நாம அவங்ககிட்ட மாட்டி தப்பிச்சி வர்றதுக்குள்ள போதும்போதும்னு ஆகிடுச்சு" என்று கூறினான்.

ஆனால் மற்றொருவனோ, "தப்பிச்சும் என்ன பிரயோஜனம் இங்க இவர்கிட்டல மாட்டிகிட்டோம். ஐயோ இவரு என்ன செய்யப்போறாருன்னே தெரியலையே. சிங்கத்துக்கு பயந்து மலைப்பாம்புகிட்ட சிக்குன்னு கதையாகிடுச்சே..." என்று அவர்கள் புலம்பும்போதே கோல்ஃ ஸ்டிக்கை இரும்புக் கம்பியில் யாரோ அடித்துக்கொண்டே வரும் சத்தம் கேட்டது. அங்கிருந்த இருவருக்கும் அவர்களது மரணம் நெருங்குகிறது என்று நன்றாகத் தெரிந்தது.

அவர்கள் முன் கோல்ஃ ஸ்டிக்குடன் ஒருவன் வந்து நின்றான். படுத்திருந்த இருவருக்கும் அவர்களது அடிவயிறு கலங்கியது, இதயம் இயல்பைவிட பலமடங்கு அதிகமாக துடித்தது. அவனிடம், "சார் எங்கள மன்னிச்சி விட்ருங்க. இனிமேல் இந்தப்பக்கம் வரவே மாட்டோம்" என்று தங்களுடைய உயிருக்காக மன்றாடினர். "என் கிட்ட வேல செய்யணும்னா ஒண்ணு அந்த வேலைய சரியா முடிக்கணும் இல்லாட்டி நான் அவங்கள முடிச்சிருவேன்” என்றவன் ஈவு இரக்கம் இல்லாத ராட்சசன் போல கோல்ஃ ஸ்டிக்கை ஓங்கினான்.
WhatsApp Image 2025-01-29 at 7.45.32 PM.jpeg
பின் அந்த இடத்தில் ரத்தவெள்ளத்தில் இருவரும் இறந்துகிடக்க ரத்தம் படிந்த அந்த கோல்ஃ ஸ்டிக்கை அருகிலுள்ள ஒருவனிடம் அந்த விராஜ் குணசீலன் கொடுத்தான். “யூஸ்லெஸ் ஃல்லோஸ் ஒரு காரியத்த ஒழுங்கா செய்ய தெரியுதா" என்று கூறியவாறு அந்த சடலங்களை எத்தினான்.

அவன் சைகை செய்ய அங்கிருந்த பாடி-காட்ஸ் அந்த சடலங்களை அப்புறப்படுத்தினர். அங்கு நின்றுகொண்டிருந்த அவனுடைய பி.ஏ. வீரா, "சார் கவர்மெண்ட் டெண்டெற்கான அனௌன்ஸ்மென்ட் வந்திருக்கு" என்று கூறவும், "இந்த டெண்டர் நம்ம கைக்கு வந்தே ஆகணும். வர்தன் கார்ப்பரேட்ஸ எப்படியாவது தோக்கடிச்சே ஆகணும்" என்று கூறி, "ஆரியவர்தன்" என்று ஆக்ரோஷமாகக் கத்தினான்.
_76220493-ba45-4730-b4a2-fbca6dd84697.jpg
மாயங்கள் தொடரும்...
 

Krishna Tulsi

Moderator
மாயம் 10
இங்கு வர்தன் கார்பரேட்சிலும் டெண்டரைப் பற்றிய பேசிச்சுதான் நடந்துகொண்டிருந்தது. அனைத்து துறைகளிலுள்ள மேலதிகாரிகளையும் அழைத்து மீட்டிங் ஒன்றிற்கு ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது.
_17d0cb4f-c8c3-4cc6-85a1-7712c52afa23.jpg
அதில் யார் டெண்டருக்கான கொட்டேஷனை தயார் செய்யப்போகிறார் என தேர்வுசெய்வதாக இருந்தது. அனைவரும் 'யாராக இருக்கும்?' என ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டிருந்தபோது அந்த அறையின் கதவு திறக்கப்பட ஆரியவர்தன் உள்ளே நுழைந்தான்.

அவனுடன் நியதி, ரஞ்சித் மற்றும் பார்கவும் உள்ளே நுழைந்தனர். அவன் உள்ளே வந்ததும் அனைவரும் எழுந்தனர். தன்னுடைய இடத்திற்கு சென்றதும் அனைவரையும் அமருமாறு கூறினான். நியதியும் பார்கவும் தனியாக போடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்துகொண்டனர். பின் ஆரியவர்தன் பேசத்துவங்கினான், "கவர்மெண்ட் டெண்டருக்கான அனௌன்ஸ்மென்ட் வந்திருக்குன்னு உங்க எல்லாருக்குமே தெரியும். இந்த தடவையும் அந்த டெண்டர் நமக்கே வந்தாகணும். சோ அதுக்கான கொட்டேஷன பிரிப்பர் பண்றதுக்கு ஒரு ஆள செலக்ட் பண்ணத்தான் இந்த மீட்டிங். இந்த டைம் அந்த வேலைய பாக்கப்போறது...." என்று அவன் இழுத்தபோது அனைவரும் ஆவலாக அவனையே பார்த்தவாறு அமர்ந்திருந்தனர்.

அவன், "நியதி" என்று கூறவும் அனைவரும் ஆச்சரியமடைந்தனர். நியதியும் அதைக்கேட்டு மிகுந்த ஆச்சரியத்துடன் அவனையே நோக்க, "உங்க எல்லாருக்கும் ஓகேதான?" என்று அவன் அங்கிருந்தவர்கள் அபிப்ராயத்தைக் கேட்டான். ஆரியவர்தன் எப்போதும் தான் எடுக்கும் முடிவிற்கு அனைவரும் அடிபணிந்தே ஆகவேண்டுமென்று நினைப்பவன் அல்ல. எப்போதும் தன்னிடம் பணிபுரிபவர்களிடமும் ஆலோசனை கேட்பான். அவ்வாறு செய்வதால் தொழிலாளிகளிடம் அவனுக்கு நல்ல மதிப்பு உண்டு. அவர்கள்தான் ஒரு நிறுவனத்தின் அஸ்திவாரம் என நன்கு அறிந்திருந்தான்.

இப்போதும் அதுபோலவே அவர்களுடைய கருத்தை கேட்டபோது, "எங்களுக்கு இதுல எந்த அப்ஜக்க்ஷனும் இல்ல சார்" என்று அனைவரின் ஒப்புதலையும் தெரிவிக்கும் வண்ணம் அங்குள்ள உயர்பதவியில் வகிக்கும் ஒருவர் கூறினார். அவனோ, "நான் சொல்றேங்கிறதுக்காக நீங்க இதை அக்சப்ட் பண்ணணுங்கிற அவசியம் இல்ல. உங்களுக்கு என்ன தோணுதோ அத சொல்லுங்க" என்று கேட்டான். ஆனால் அவரோ, "நீங்க எந்த ஒரு முடிவெடுத்தாலும் அது சரியாதான் சார் இருக்கும். மாற்றுக்கருத்தே கிடையாது" என்று அவர் கூற அங்கிருந்த அனைவரும் தலையசைத்து தங்களுடைய ஒப்புதலைத் தெரிவித்தனர்.

அவன் லேசாக புன்னகைத்துவிட்டு தன்னுடைய நன்றியைத் தெரிவித்தான். மீட்டிங் முடிந்ததும் ஆரியவர்தன் தன் அறைக்கு திரும்ப மற்றவர்கள் தங்களுடைய வேலையைப் பார்க்க ஆரம்பித்தனர். தன்னுடைய அறையில் அமர்ந்திருந்த நியதிக்கு, 'ஏன் ஆரியவர்தன் இந்த முடிவை எடுத்தார்?' என்ற கேள்வி மட்டும் மனதில் ஓடிக்கொண்டே இருந்தது. ஆனால் வேலை பளுவின் காரணமாக அதுமறந்தும்போனது. அந்த நாள் அப்படியே கடந்தது.

மாலை இருவரும் வீடு திரும்பியபோது சந்திரமதி அவர்களுக்காக காத்துக்கொண்டிருந்தார். மூவருமாக இணைந்து பேசி சிரித்து டீ அருந்திவிட்டு தங்களுடைய அறைக்குச் சென்றனர். அந்த அமைதியான அறைக்குள் சென்று அவள் அமர்ந்தபோது மீண்டும் அதே கேள்வி மனதில் உதித்தது. தாமதிக்காமல் அதை அவனிடம் கேட்டுவிடவேண்டும் என்றெண்ணி கதவைத்திறந்தாள்.
பின் தன் தலையை மட்டும் எட்டி 'அவர் என்ன செய்கிறார்?' என்று பார்த்தபோது, அவன் தன்னுடைய அந்த பெரிய பஞ்சுமெத்தையில் அமர்ந்து புத்தகம் ஒன்றை தீவிரமாக வாசித்துக்கொண்டிருந்தான்.
WhatsApp Image 2025-02-01 at 5.58.50 PM.jpeg
அவள் மெதுவாக அவனருகே சென்று, "என்னங்க" என்று மெல்லிய குரலில் அழைக்க அவனிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை.மீண்டும் அவள், "என்னங்க" என்றதும் அவனிடமிருந்து, "ம்ம்" என்று மட்டும் வந்தது. உடனே அவள், "இல்ல...அது...இவ்வளவு பெரிய பொறுப்ப ஏன் என்கிட்டே ஒப்படைசீங்க? இது நம்ம கம்பெனியோட ரெப்யூடேஷன் சம்மந்தப்பட்டது. ஒரு சின்ன தப்பு நடந்தாலும் நமக்கு கெட்டபெயர் வந்துரும். அதோட கொட்டேஷன் பிரிப்பர் பண்றதுல எனக்கு எக்ஸ்பீரியன்ஸே கிடையாது. அதனால இந்த வேலைய வேற யார்கிட்டயாவது..." என்று அவள் கூறிக்கொண்டிருக்கும்போதே புத்தகத்தை மூடிவிட்டு அவளிடம் தன் பார்வையைச் செலுத்தினான்.
அவன் மெத்தையில் அமருமாறு சைகைசெய்யவும் அவள் அமர்ந்தாள். பின் அவன் பேசத்துவங்கினான், "நியதி இந்த உலகத்துல எல்லாரும் எல்லாமே தெரிஞ்சிக்கிட்டு பிறக்குறது இல்ல. ஒரு வேலையில இறங்காம அது என்னன்னு எப்படி தெரியும்? கொட்டேஷன பிரிப்பர் பண்ண தெரியாதுண்ணு சொன்னீல, சோ இத ஒரு சான்ஸா யூஸ் பண்ணி அதப்பத்தி தெரிஞ்சிக்கோ. உனக்கு பக்கத்துலயே இருந்து ஹெல்ப் பண்ண நான் இருக்கேன்”

“அண்ட் நெக்ஸ்ட் நீ இத நல்லா செஞ்சிருவங்கிற நம்பிக்கை எனக்கு இருக்கு....நாம முதல்ல நம்மள நம்பனும். அப்படி நம்பிக்க வச்சா எந்தஒரு ஒர்க்கையும் ஈஸியா செஞ்சிரலாம்" என்று கூறவும் நியதியின் மனதில் சந்தோஷமும் உற்சாகமும் பிறந்தது. "தாங்க்-யூ சோ மச், என்னாலையும் முடியுங்கிற நம்பிக்கைய எனக்கு நீங்க குடுத்ததுக்கு. நான் கண்டிப்பா இந்தவேலைய நல்லபடியா முடிப்பேன்" என்று அவள் உறுதியுடன் கூறினாள்.

அவன் அவளை பார்த்து, "தாட்ஸ் தி ஸ்பிரிட் அண்ட் தாட்ஸ் மை கேர்ள்" என்று புன்னகைத்தவாறு கூறினான். தன்னுடைய அறைக்குச் செல்லவிருந்தவளிடம், "இன்னும் டெண்டருக்கு டூ வீக்ஸ் இருக்கு. டேக் யுவர் டைம். ஆல் தி பெஸ்ட்" என்று கூறவும் அவனைப் பார்த்து லேசாக முறுவலித்துவிட்டு தன்னுடைய அறைக்குத் திரும்பினாள்.

மறுநாளிலிருந்து ஆரியவர்தனும் நியதியும் டெண்டருக்கான கொட்டேஷன் தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இரவும் பகலுமாக இணைந்தே அனைத்து வேலைகளையும் செய்தனர். சிலநேரங்களில் நள்ளிரவுவரை அவர்களது வேலை நீடிக்கும். அப்படியொருநாள் அலுவலகத்திற்கு அவர்கள் கிளம்பும்போது சந்திரமதி, தான் காசிக்குச் செல்வதாகக் கூறிவும், "என்ன பாட்டி திடீர்னு?" என்று ஆரியவர்தன் வினவினான்.

அதற்கு, "நான் ஒண்ணு வேண்டீருந்தேன் அத நிறைவேத்துறதுக்காகத்தான்டா போறேன். அதோட விஸ்வநாதரயூம் தரிசனம் பண்ணாமாதிரி இருக்கும். அப்படியே காசிக்கு பக்கத்துல இருக்குற சில ஸ்தலங்கள பாத்துட்டு பத்து நாள்ல வந்துருவேன்" என்று அவனுக்கு விளக்கினார். உடனே அவன்,"சரி பாட்டி டேக் கேர். ஏதாவது வேணுன்னா உடனே எனக்கு கால் பண்ணுங்க. பத்திரமா போய்ட்டுவாங்க" என்று அவன் அக்கறையுடன் கூறினான்.
அவரும், "கண்டிப்பா டா" என்று கூறி தன்னுடைய பேரனின் நெற்றியில் பாசத்துடன் முத்தமிட்டார்.
பின் நியதியின் கைகளைப் பற்றி, "போய்ட்டுவர்றேன்மா" என்று ஒரு புன்முறுவலுடன் கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பினார்.
WhatsApp Image 2025-02-01 at 5.17.33 PM (1).jpeg
சந்திரமதி திடீரென யாத்திரை செல்ல ஒரு முக்கியமான காரணம் இருந்தது. ஏனென்றால் தன்னுடைய பேரனுக்கும் நியதிக்குமான நெருக்கம் மேலும் அதிகரிக்கும் என்று அந்த முதியவள் நம்பினார். அவர் நம்பியது பொய்த்துப் போகவில்லை.

சந்திரமதி சென்றதும் இளையவர்கள் அலுவலகத்திற்குக் கிளம்பினர். அன்று ஒரு ப்ராஜக்ட் விஷயமாக மீட்டிங் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது. மீட்டிங்கில் நடக்கும் அனைத்தையும் குறிப்பெடுப்பது பார்கவின் வேலை. ஆனால் அன்று ஒரு அவசர வேலையாக பார்கவை ஆரியவர்தன் கன்ஸ்ட்ரக்க்ஷன் சைட்டிற்கு அனுப்பிவைத்திருந்ததால் குறிப்பெடுக்கும் வேலையை நியதி செய்தாள். மீட்டிங்கில் அந்த ப்ராஜெக்டைப் பற்றி ஒருவர் விவரித்துக்கொண்டிருக்க ஆரியவர்தன்உட்பட அனைவரும் அதை கவனித்துக்கொண்டிருந்தனர்.

அப்போது ஆரியனின் கண்கள் குறிப்பெடுத்துக்கொண்டிருந்த நியதியிடம் சென்றது. அவளை ஒரு புன்முறுவலுடன் பார்த்தவாறே அமர்ந்திருந்தான். பின் அவனுடைய பார்வையை அவளிடமிருந்து திருப்பியபோது ரஞ்சித்தை தற்செயலாகப் பார்த்தான்.
WhatsApp Image 2025-02-01 at 5.17.33 PM.jpeg
ஒரு குரும்புச் சிரிப்புடன் ரஞ்சித் அவனைப்பார்த்து, 'என்ன நடக்குது?' என்று கேப்பதுபோல் புருவத்தை ஏற்றியிறக்கினான். ஆனால் ஆரியனோ, 'உன் வேலைய மட்டும் பாரு' என்று பார்வையால் விளையாட்டாக கூறிவிட்டு மீண்டும் வேலையில் ஈடுபட ரஞ்சித் தன்னுடைய சிரிப்பை அடக்கிக்கொண்டான்.

மீட்டிங் முடிந்ததும் நியதி டெண்டருக்கான வேலையைத் துவங்கினாள். அப்போது சில முக்கியமான விஷயங்கள் தேவைப்பட்டதால் அவள் ஆரியவர்தனிடம் சென்றாள். அவனோ பார்கவின் அறையிலுள்ள டேபிள் டிராயரில் இருப்பதாகக் கூறி அதை எடுத்துவரச் சொன்னான். அடுத்தவர்களின் அனுமதியில்லாமல் அவர்களுடைய உடைமைகளை தொடுவது தவறு என்பதால் நியதி பார்கவை கைபேசியில் அழைத்தாள். ஆனால் அவன் இருக்கும் இடத்தில் டவர் கிடைக்காததால் அவனை தொடர்புகொள்ள முடியவில்லை.

இப்போதே அந்த கோப்புகளைக் கொண்டுவருமாறு ஆரியவர்தன் விரட்டவும் அவள் தயங்கியவாறே தன்னுடைய தேடுதலைத் துவங்கினாள். அப்போது ஒரு அழகான பெண் சிரிப்பதுபோன்ற பென்சில் போர்ட்ரைட் அவள் கைகளுக்கு அகப்பட்டது.
WhatsApp Image 2025-02-01 at 5.45.51 PM.jpeg
அந்தப் பெண் நேரில் இருந்தால் எவ்வாறு இருப்பாளோ அதைப்போலவே அவ்வளவு தத்ரூபமாகவும் உயிரோட்டமாகவும் வரையப்பட்டிருந்தாள். அதில் சற்று லயித்த நியதி சட்டென நிதானத்திற்கு வந்தவளாய் அதை அப்படியே வைத்துவிட்டு தனுக்கு தேவையானதை மட்டும் எடுத்துக்கொண்டு அங்கிருந்து சென்றாள்.

அன்று வேலைமுடிந்து வீடுதிரும்புவதற்கு வெகுநேரமாகியிருந்தது. அதனால் தங்களுடைய இரவு உணவை ரெஸ்டாரண்டில் உண்ண தீர்மானித்திருந்தனர். தங்களுக்கு வேண்டியவற்றை ஆர்டர் செய்துவிட்டு உணவுக்காக காத்திருந்தனர். வேலைப்பளுவின் காரணமாக ஆரியன் சற்று டென்ஷனாகவும் சோர்வாகவும் இருப்பதை நியதி கவனித்தாள். அப்போது அவனுடைய கைபேசிக்கு ஒரு அழைப்பு வந்தது. அழைப்பது யார் என்று பார்த்தபோது அவனுடைய முகத்தில் சந்தோஷமும் இதழ்களில் புன்முறுவலும் பரவியது.
WhatsApp Image 2025-02-01 at 11.47.16 AM.jpeg
இவையனைத்தையும் நியதி கவனித்துக்கொண்டுதான் இருந்தாள். பின் அவளிடம், "ஜஸ்ட் அ மினிட்" என்று கூறிவிட்டு அவன் தனியாக பேசச்சென்றான். அவர்கள் ஆர்டர்செய்த உணவு வந்த அதே சமயம் அவனும் வந்துசேர்ந்தான். அப்போது அவனுடைய முகத்தில் மகிழ்ச்சி பலமடங்கு கூடியிருந்தது. உணவு உண்டுவிட்டு வீட்டிற்குச் சென்றவர்கள் அவரவர் அறையில் ஒடுக்கினர். ஆரியவர்தன் தன்னுடைய அறையில் நிம்மதியாக தூங்கிக்கொண்டிருக்க நியதி தூக்கமில்லாமல் தவித்தாள்.

'ரொம்ப டென்ஷனா இருந்தவரு அந்த போன் கால் வந்ததுமே சந்தோஷமாயிட்டாரே. இதுக்கு முன்னாலையும் நிறையதடவ இப்படி நடந்தத நான் நோட்டீஸ் பண்ணீருக்கேன். அது யாரா இருக்கும்?' என்ற கேள்வி அவள் மனதில் எழுந்தது. ஆனால் அவளுக்கு அதற்கான காரணம் அன்று விளங்கவில்லை.

மறுநாளும் அவர்களது வேலை தாமதமாக, இரவு உணவுக்காக ரெஸ்டாரண்ட் சென்றிருந்தபோது அவன் ஜுஸ் மட்டும் அருந்தினான்.
WhatsApp Image 2025-02-01 at 11.24.55 AM.jpeg
அவர்கள் வீடு திரும்பியதும் ஆரியன் தன்னுடைய அறைக்குச் செல்ல நியதி மட்டும் கீழேயே இருந்தாள். அவனுக்கு அந்த ரெஸ்டாரண்ட் உணவு பிடிக்கவில்லை என்பதை நன்கு உணர்ந்த அவள் தானே சமைத்து டிராலியில் அவனுடைய அறைக்கு எடுத்துச் சென்றாள்.

அங்கு ஆரியன் ஹோம் தியேடரில் தனக்கு பிடித்த பாடல்களை கேட்டவாறு வீல்-சேரில் அமர்ந்திருந்தான். அவள் ட்ராலியுடன் உள்ளே வரவும் ‘என்ன?’ என்பதுபோல் புருவத்தை ஏற்றி இறக்கினான்.
WhatsApp Image 2025-02-01 at 5.50.28 PM.jpeg
அவள் அவனருகே டேபிளை வைத்து அவனிடம் பீங்கான் பிளேட் ஒன்றை நீட்டினாள். அவன் வாங்கிக்கொண்டதும் அதில் இரண்டு சப்பாத்தியும், தொட்டுக்கொள்வதற்கு பன்னீர் பட்டர் மசாலாவையும் வைத்தாள். அவன், "எனக்கு வேண்டாம் நியதி" என்று கையில் வைத்திருந்த பிளேட்டை அவளிடம் நீட்டினான்.

ஆனால் அவளோ மறுபடியும் அவனிடம் தள்ளி, "சாப்டாதானே எப்படி இருக்குன்னு தெரியும். சாப்பிட்டுத்தான் பாருங்களேன். உங்களுக்காக நானே சமச்சது. ப்ளீஸ்…." என்று அவள் கெஞ்சுவதுபோல் கேட்கவும் அவன் ஒப்புக்கொண்டு உண்ண ஆரம்பித்தான். அது சுவையாக இருப்பதை உணர்ந்து மேலும் உண்ணத்துவங்கினான். ஏதோ நினைவுவர நியதியைப் பார்த்து, "நியதி இன்னொரு பிளேட்ட எடு" என்று கூற அவளும் அவ்வாறே செய்தாள்.

அருகிலிருந்த ஹாட்பாக்சிலிருந்து இரண்டு சப்பாத்தியை எடுத்து அவளுடைய பிளேட்டில் வைத்தான். "எனக்கு எதுக்கு? நான் தான் சாப்..." என்றவளை நிறுத்தி, "நீ சாப்பிட்டததான் நான் பாத்தேனே..." என்று கூறியவாறு கிரேவியை பிளேட்டில் ஊற்றினான். ஆம் ஆரியன் ரெஸ்டாரண்டில் உண்ணவில்லை என்றதும் அவளும் அரைகுறையாகவே உண்டாள்.

அவர்கள் உண்டபிறகு பால்கனியில் இயற்கையை ரசித்தனர். "ஓ! உனக்கு சமைக்கக்கூட தெரியுமா?" என்று அவன் கேட்க, "எனக்கு ரொம்ப பிடிக்கும். எனக்கு பிடிச்ச எல்லாத்தையும் நான் சமைக்க பழகிடேன்..." என்று பேசத் துவங்கினாள். அன்றிரவு அவர்கள் பிஸினஸைப் பற்றி அல்லாமல் தங்களைப் பற்றிப் பேசினர். பேசிமுடித்துவிட்டு படுகைக்குச் செல்லும்போது இருவரின் வயிறு மட்டுமல்ல மனமும் நிறைந்திருந்தது.
WhatsApp Image 2025-02-01 at 5.45.51 PM (1).jpeg
டெண்டருக்கு இன்னும் மூன்று நாட்கள் இருக்கும் நிலையில் நியதி ஆரியவர்தனிடம் சென்று, "நம்ம கொட்டேஷன முன்னாலையே அனுப்ப தேவையில்லையா சார்?" என்று கேட்டாள். அதற்கு, "இல்ல நியதி, டெண்டர் நடக்குற அன்னைக்கு மார்னிங் கொடுத்தா போதும். இது நமக்கும் குணசீலன் கார்பரேட்ஸ்கும் கவர்மண்ட் கொடுக்குற கன்சஷன்" என்று அவளுக்கு விளக்கினான். டெண்டருக்கான நாளும் வந்தது.

அனைவரும் அலுவலகத்திற்கு அன்று காலை முன்கூட்டியே சென்றனர். கொட்டேஷனுக்கான கோப்பையும், பென்டிரைவையும் ஆரியவர்தனின் அறையிலிருந்து எடுப்பதற்காகச் நியதி சென்றாள். லாக்கரைத் திறந்தவளுக்கு அதிர்ச்சி காத்துக்கொண்டிருந்தது. ஏனென்றால் அவைகள் அங்கு இல்லை. வேகமாகச் சென்று தன்னுடைய கணினியில் பதிந்து வைத்திருந்த சாஃட் காப்பியை தேடியபோது அதுவும் அழிக்கப்பட்டிருந்தது கண்டு நியதி அதிர்ந்தாள்.
WhatsApp Image 2025-02-01 at 6.04.08 PM.jpeg
மாயங்கள் தொடரும்...
 
Last edited:
Status
Not open for further replies.
Top