IsaiKavi
Moderator
உயிர் 01
அர்ஜுன் பைரவ் வெட்ஸ் மீரா சுஜி என்ற பெயருடன் தனித்தனியாக முதுகு புறம் காட்டி நிற்கும் இரு திருமண ஜோடிகளின் பேனர் கட்டப்பட்டு இருந்தது..
திருமண மண்டபம் என்று கூற முடியாத அளவிற்கு அங்கு ஒரு பேரமைதி நிலவியது..குழந்தைகள் சத்தமும், உறவினர்கள் மற்றும் பெரிய விஐபிகளின் பேச்சு சத்தமும் எதுவும் அங்கு கேட்கவில்லை..
ஏதோ கல்லையும் மண்ணையும் பார்ப்பது போல், திருமண மேடையை பார்த்து அனைவரும் அமைதியாக இருந்தனர். மேள தாளமும், நாதஸ்வரமும், பூசாரி உச்சரிக்கும் மந்திரம் மட்டுமே மண்டபம் முழுவதும் எங்கும் எதிரொலித்தது..
மணமகனை அமர்ந்திருந்த இடத்தில் அவனது முகத்தில் மகிழ்ச்சி சிறிதேனும் தெரியவில்லை. அவன் அமைதியாக, திடமாக அமர்ந்திருந்தான். அதே போல, அவனுக்கு இணையாக, மணமகள் தேவதை போன்ற அழகில் மிளிர்ந்திருந்தாள்..அவள் சிவந்த நிறத்திற்கு செயற்கை முகபூச்சும் அவளின் அழகை மேலும் மெருகேற்றியது..
அவளின் அழகை பக்கத்தில் உள்ளவன் பார்த்து ரசிக்கவும் இல்லை விழிகளால் அவள் அழகை அள்ளி பருகவும் இல்லை..
எவ்வளவு நேரம் தான் கற்சிலை போல் அமர்ந்திருப்பது என்று நினைத்தாலே அவளுக்கு ஆயோசமாய் இருந்தது..
அவனை பற்றி நினைத்தவளுக்கு இந்த மணமேடையில் அமரும் முன்பு அதற்கு முன்னர் நடந்தவைக்கு சென்றது.. கிட்டத்தட்ட மூன்று வாரத்திற்கு முன்பு..
அவளிடம் திருமணத்திற்கு சம்பவம் கேட்டு, மாப்பிள்ளை வீட்டாரை வீட்டுக்கு அழைத்து மீராசுஜிக்கு திருமணம் நிச்சயமாகி விட்டது..ஆனால் மாப்பிள்ளை நேரில் பார்க்க முடியாத சூழ்நிலை.. தனக்கு நிச்சயம் செய்த மாப்பிள்ளையை பார்க்க வேண்டும் என்கிற எண்ணம் அவளுக்கு அதிகமாகவே இருந்தது..
இதே சமயம் திருமணம் அடுத்த நாள் என்றால் அதற்கு முதல்நாள் புது எண்ணில் இருந்து அவன் அனுப்பிய குறுஞ்செய்திகள் மட்டும் உத்தரவுகளை போல, அவள் அலைபேசியில் குவிந்தது..
அலைபேசியை எடுத்து பார்த்தவளுக்கு விழிகள் பெரிதாய் விரிந்தது..
" ஹாய்! யு ஆர் மீரா சுஜி , ரைட்? "
" பைன்! ஐ ஆம் யுவர் பியூச்சர் ஹஸ்பண்ட்.."
"சோ டூமாரோ நம்ம ரெண்டு பேருக்கும் மேரேஜ் நடக்க போகுது..தட் யு க்னோ பட் எனக்குன்னு ரெஸ்பெக்ட் ஸ்டேட்ஸ் இருக்கு ஓகே.."
"மணமேடைல உட்காரும் என் மனைவி எனக்கு சமமா இருக்கணும்..நான் என்ன சொல்ல வரேன்னு உனக்கு புரியும்னு நினைக்கிறேன்.. அண்ட் ஆல் சோ தாலி கட்ட முன்ன என்னை பார்க்கக் கூடாது.. "
"கம்பீரமான இருக்கணும்..இது வரைக்கும் போதும்னு நினைக்கிறேன்.."
"மீதி என் வீட்டுக்கு வலது கால் எடுத்து வச்சி நீ மனைவியா நுழைந்ததும் சொல்றேன்.."
" நான் சொன்ன மாதிரி பர்பெக்ட்டா பண்ணனும் ஓகே.. ஆல் தி பெஸ்ட்"
" நோ நீட் டூ ரிப்ளை , ஜஸ்ட் ரிவெம்பர்.."
கூற வேண்டியதை அவளிடம் கூறி ஆயிற்று என்று அவன் ஆப்லைன் சென்றுவிட்டான்..
ஆழமான பெரு மூச்சு இழுத்து தன்னை தானே சமானபடுத்திக் கொண்டாள்..மெத்தையில் அமர்ந்து கொண்டாள் மீரா சுஜி..
"எனக்கு வர போகும் ஹஸ்பண்ட்டை கண்டு நான் கனவே காணல்ல இப்படி ஒரு மெட்டிரியலான ஹஸ்பண்ட்! யாருக்கு நான் குத்தம் சொல்றது? போட்டோ பார்த்து இம்ரஸ் ஆகாத நான் நேரில் பார்த்ததும், ஒரே வார்த்தையில் ஓகே சொல்லிட்டேன்.. பார்ப்போம், மேரேஜ் லைஃப் எப்படி இருக்கும்னு பார்ப்போம்!" அன்றிரவு, அவள் தன் வருங்கால கணவனை எண்ணி கனவு காணாமல் உறங்கினாள்..
விக்டர் தன் மகளுடன் அர்ஜுன் பைரவ்வின் கார் நிறுவனத்திற்கு வந்திருந்தார்.. புதிதாக வந்த Luxury Cars பார்ப்பதற்காக..ஆனால் மீரா, வேறு யாரையோ தேடி கண்களை ஓடச் செய்தாள்..
விக்டர் " சுஜி நீ இங்கேயே இரு, நான் போய் மாப்ள கிட்ட பேசிட்டு வந்துர்றேன்.." என்றவரின் கரத்தை பிடித்து நிறுத்தினாள்..
" டாடி நீங்க மாப்ளன்னு சொல்றீங்க.. நானும் வந்ததில் இருந்து அவரைத்தான் தேடுறேன்..என் கண்ணுக்கு தெரியலையே நீங்களாவது அவரை அடையாளம் தெரிஞ்சா காட்டுங்க டாடி.." சிணுங்கி கொண்டு கேட்கும் தன் செல்ல மகளை சற்று சிரிப்புடன் அவளை நோக்கி,
" அங்க டார்க் ஆரேஞ்ச் கார் பக்கத்துல, அவரோட பிஏ கூட பேசிட்டு இருக்காரே? அவர்தான்.."
மீராவின் கண்கள் பெரிதாகின,
டார்க் ரெட் ஷர்ட், கருப்பு நிற ஃபேன்ட் அணிந்து இருந்தான் , தோள் வரை இருக்கும் சில்கி கேசம் , ஆறடி உயரம், அகலமான தோள்கள்..பனைமரம் போல உயர்ந்த அவன் தோற்றம்!
ஒரு நொடி, அவளது மூச்சே நின்று விட்டது போல இருந்தது..
அவனின் முகம் இன்னும் தெரியவில்லை..அவன் இன்னும் திரும்பவில்லை..ஆனால் அவன் தோற்றம் மட்டுமே அவளுக்கு ஒரு விதமான அதிர்ச்சியை ஏற்படுத்தியது..
"இவர்தானா? இப்படியா இருக்காரு?"
அவள் நினைத்ததற்கு மாறாக, அவன் கவனத்தை ஈர்க்கும் தன்மையானவன்..அந்த முதுகு, அந்த நிமிர்ந்த நடை , அவனை எளிதில் அனைவரையும் திருப்பி பார்க்க வைக்கும்!
அவள் கண்களில் ஆர்வம் தென்பட்டது..
" ஆமா , டார்க் ரெட் ஷர்ட் வேர் பண்ணி இருக்கார் அவரா? "
விக்டர் மெல்ல சிரித்து, "நீ போட்டோ கூட பார்த்தது இல்ல தானே? இப்ப பார்க்கலாம்..ஆனா, மேரேஜ்ல வச்சி தான் நீ அவரை நேர்ல முழுசா பார்க்க முடியும்," என்று சொல்லிவிட்டு அர்ஜுனை நோக்கிச் சென்றுவிட்டார்..
மீரா மட்டும் இன்னும் அதே இடத்தில் உறைந்து நின்றாள்..
அவனின் புகைப்படம் பார்க்காமல் தான் திருமணத்திற்கு சரி என்று சொன்னாள்.. அவன் முகம் தெரியவில்லை என்றாலும் , புறத்தோற்றம் மற்றும் அவனை அவள் ஈர்த்தது போதுமானதாக இருந்தது..
இவற்றையெல்லாம் நினைத்துக் கொண்டு இருந்தவளுக்கு, திருமணம் நடக்க போகிறது என்று உணர்த்தும் விதமாக அவள் கன்னத்தை பதம் பார்த்தது முறுக்கி விட்ட மீசை..
தலைகுனிந்து நின்றிருந்தவள் நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.. அடர்த்தியான சில்கி கேசம் ஒரு பக்கமாக வாரி இருந்தான்..அவளுக்கு இணையாக வசீகரிக்கும் தோற்றம், அதை விட அவளை பாதிக்கப் போவது அவன் விழிகள் தான் அதனை அறியாமல் போனாள் பேதையவள்..
தாலி கட்டுவதிலே மும்முரமாக இருப்பவனை இமை சிமிட்டாமல் தன்னை ஒருவள் பார்க்கிறாள் என்ற எண்ணமே அவனுக்கு கிடையாது..
அவள் பாதத்தை தொட்டு மெட்டி அணிவித்த அவன் கரங்களில் மென்மையை உணர்ந்தாள் அவள்..அவன் தான் அவளை திரும்பியும் பார்க்கவில்லையே!
அவளுக்கு அது ஏமாற்றமாக இருந்தாலும், வெளியே சிரித்து சமாளித்தாள்..
திருமணமும் சம்பிரதாயங்கள் அனைத்தும் முடிந்ததும் மணமகளை அழைத்துக் கொண்டு அர்ஜுன் வீட்டார்கள் அழைத்துச் சென்றுவிட்டார்கள்..
அவன் தன்னுடன் வரவில்லை என்பது மனதில் வலித்தாலும் அவனின் குறுஞ்செய்திகளை நினைவில் கொண்டு காரில் இருந்து இறங்கினாள்..
இமை தாழ்த்தி இருந்தவள்,
" வா மா மீரா " அர்ஜுனின் தாய் கோதை அவளை அழைத்தார்..
அவரை ஒரு தடவை நோக்கி விட்டு, நேரே பார்த்தவளுக்கு விழிகள் இரண்டும் வியப்பில் விரிந்தது.." அமேசிங்" அவள் இதழ்கள் உச்சரித்தது..
வீட்டின் அமைப்பை பார்த்தே அவள் கூறினால் , ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட பங்களா போன்ற அமைப்பு முன் தோட்டம் அத்தனை அழகுடன் சுத்தமாக இருந்தது..
" சுஜி உள்ள போகலாம்.." அவளின் தாய் கீதா..
சரியான முறையில் அவளும் நடந்தாள்..அவள் ஒவ்வொரு அடியாக பாதையில் எடுத்து வைக்கும் போது, அங்கு நிறுவனத்தில் அர்ஜுனின் கையால் ஒருவனுக்கு கன்னத்தில் ஒவ்வொரு அடியும் இறங்கியது..
திருமணம் முடிந்த கையோடு அர்ஜுன் பைரவ் தன் நிறுவனத்திற்கு வந்து சேர்ந்தான்..
நிறுவனத்தில் நடக்கும் திருட்டு, குளறுபடிகள் அனைத்தையும் தெரிவிப்பது அர்ஜுனிடமே..
ஆகையால் இவர்களுக்கு தெரிந்திருந்தாலும், அவன் திருமணம் முடிந்துவிட்டது என்றாலும், அவனுக்கு வேறு வழி இல்லாமல் அவன் அலைபேசியில் குறுஞ்செய்தி அனுப்பி விட்டனர்..
அதாவது, அவனின் பி.ஏ நம்பிக்கையான ஒருவன் புதிதாக ஒரு காரை தயாரிப்பதற்கான தொழில்நுட்பம் சம்பந்தமான திட்டங்களை அவன் எதிரியிடம் அதன் விபரங்களை ஒரு சிப் மூலமாக பகிர்ந்தளித்து விட்டான்..
அர்ஜுன்க்கு திருமணம் நடந்ததால், அவன் மாட்டிக் கொள்ள போகாது என்று நினைத்திருந்தாலும், அர்ஜுனின் நம்பிக்கையான ஒருவன் கண்காணித்து இருப்பது அவனுக்கு தெரியாதே..
ரகசிய அறையில் இருந்து எடுக்கப்பட்ட விபரங்களை எடுத்ததற்கு பச்சை நிற விளக்கு, ரங்கன் அறையில் அலாரமாக காட்டியது.. பி.ஏ ரவினின் வேலை என எதிர்பாராத திகைப்பை அவன் முகத்தில் காட்டவில்லை.
உடனே, அர்ஜுன்க்கு அழைத்து கூறிவிட்டான்.. ரவின் எதிரில், அர்ஜுன் இருந்தும், அவன் கத்தி ஆர்பாட்டம் செய்யாமல் இருப்பவனை, மஞ்சள் நிற பூனை கண்களால் கூர்மையாக்கி பார்த்தான்..
அவன் பார்வையை அசையாமல், தன்னை எதிர்கொண்டவனை மனதில் மெச்சிக் கொண்டான்..
"லெட்ஸ் சீ.." என்ற அவனின் வார்த்தை உள்ளுக்குள் பயத்தை கிளப்பினாலும், அவன் அப்படியே இருந்தான்..
"ரங்கன், என் கூடவே இரண்டு வருஷமா பி.ஏ இருந்தவன்..எனக்கே தெரியாம நம்பிக்கை துரோகம் செஞ்சி என் கம்பெனில திருடி இருக்கானானா சோ…" பேச்சை இழுத்து அவன் ரங்கனைப் பார்த்தான்.
"புரியுது, சார்! ஐ வில் பின்னிஷ் இட்."
"ஹம், குட். நெக்ஸ்ட், ரவின் கிட்ட வேலையை ஒப்படைச்சவன் யாருன்னு இன்னைக்குள்ள கண்டு பிடிக்கணும், ரங்கன் காட் இட்.." சீறினான் என்றால் அவனின் கோபத்தை கட்டுக்குள் கொண்டு வர வேண்டிய கட்டாயம் இருந்தது..இதே கோபத்துடன் வீட்டிற்கு செல்ல முடியாது அல்லவா?
"ஓகே, சார்!" என்றான்.
Cheetah Veloce sports car ஆரஞ்சு நிறத்தில் இருந்த காரில் ஏறி, புழுதி பறக்க கிளம்பியவன் கார் சாலையில் பாய்ந்து சென்றது..
மீரா வலது காலை உயர்த்தி பாதத்தை வைக்கும் முன், இன்னொரு பாதம் நீண்டது..
அது எவர் என்று கண்டு கொண்டவளின் இதழில் புன்னகை... சீத்தாவின் வேகத்தில் காரை ஓட்டிக் கொண்டு வந்தவன் தன் பங்களாவிற்கு வந்து சேர்ந்தான்..
தன் புதிய உறவுடன் தன் பாதத்தை வைத்து உள்ளே நுழைந்தான் அர்ஜுன் பைரவ்..
இதனைக் கண்ட பெற்றவர்களுக்கு அத்தனை பூரிப்பாக இருந்தது. இனி மகளை நினைத்து கவலைப்பட வேண்டியதில்லை.. மருமகனே நன்றாக பார்த்துக் கொள்வார் என்ற நம்பிக்கை பிறந்தது..
திருமணம் முடிந்து வீட்டிற்குள் நுழைந்ததும், மணமக்களை அமர வைத்து பாலும் பழமும் கொடுப்பார்கள்.. ஆனால் இங்கு நடந்தது, மீராவின் கரத்தை பிடித்து அவன் அறைக்கு அழைத்துச் சென்றான்..
வந்த சொந்தங்களும், குடும்பத்தினர்களும் அவன் செயலில் அதிர்ந்து நின்றார்கள்.
இதில் பெற்றவர்களுக்கே சங்கடம் உண்டானது..
அறை கதவை மூடிவிட்டு, தன்னை அதிர்ந்து பார்த்துக் கொண்டிருக்கும் மனைவி முன் வந்து நின்றான் அர்ஜுன் பைரவ்..
"ஏங்க…"
அவனின் பூனை கண்கள் அவளை மொத்தமாக சுருட்டி போட்டது..அக்கணம் அவள் அவன் பார்வையில் மயங்கி போயிருந்தாள்..
"மீரா…" அவளை அழைத்தான்.
அடுத்து அவன் கூறியதை கேட்டு, அவளது காதில் இரத்தம் வழியாத குறை தான். அவளவன் அவன் மனையாளுக்கே பேரதிர்ச்சியை கொடுத்திருந்தான்..
அர்ஜுன் பைரவ் வெட்ஸ் மீரா சுஜி என்ற பெயருடன் தனித்தனியாக முதுகு புறம் காட்டி நிற்கும் இரு திருமண ஜோடிகளின் பேனர் கட்டப்பட்டு இருந்தது..
திருமண மண்டபம் என்று கூற முடியாத அளவிற்கு அங்கு ஒரு பேரமைதி நிலவியது..குழந்தைகள் சத்தமும், உறவினர்கள் மற்றும் பெரிய விஐபிகளின் பேச்சு சத்தமும் எதுவும் அங்கு கேட்கவில்லை..
ஏதோ கல்லையும் மண்ணையும் பார்ப்பது போல், திருமண மேடையை பார்த்து அனைவரும் அமைதியாக இருந்தனர். மேள தாளமும், நாதஸ்வரமும், பூசாரி உச்சரிக்கும் மந்திரம் மட்டுமே மண்டபம் முழுவதும் எங்கும் எதிரொலித்தது..
மணமகனை அமர்ந்திருந்த இடத்தில் அவனது முகத்தில் மகிழ்ச்சி சிறிதேனும் தெரியவில்லை. அவன் அமைதியாக, திடமாக அமர்ந்திருந்தான். அதே போல, அவனுக்கு இணையாக, மணமகள் தேவதை போன்ற அழகில் மிளிர்ந்திருந்தாள்..அவள் சிவந்த நிறத்திற்கு செயற்கை முகபூச்சும் அவளின் அழகை மேலும் மெருகேற்றியது..
அவளின் அழகை பக்கத்தில் உள்ளவன் பார்த்து ரசிக்கவும் இல்லை விழிகளால் அவள் அழகை அள்ளி பருகவும் இல்லை..
எவ்வளவு நேரம் தான் கற்சிலை போல் அமர்ந்திருப்பது என்று நினைத்தாலே அவளுக்கு ஆயோசமாய் இருந்தது..
அவனை பற்றி நினைத்தவளுக்கு இந்த மணமேடையில் அமரும் முன்பு அதற்கு முன்னர் நடந்தவைக்கு சென்றது.. கிட்டத்தட்ட மூன்று வாரத்திற்கு முன்பு..
அவளிடம் திருமணத்திற்கு சம்பவம் கேட்டு, மாப்பிள்ளை வீட்டாரை வீட்டுக்கு அழைத்து மீராசுஜிக்கு திருமணம் நிச்சயமாகி விட்டது..ஆனால் மாப்பிள்ளை நேரில் பார்க்க முடியாத சூழ்நிலை.. தனக்கு நிச்சயம் செய்த மாப்பிள்ளையை பார்க்க வேண்டும் என்கிற எண்ணம் அவளுக்கு அதிகமாகவே இருந்தது..
இதே சமயம் திருமணம் அடுத்த நாள் என்றால் அதற்கு முதல்நாள் புது எண்ணில் இருந்து அவன் அனுப்பிய குறுஞ்செய்திகள் மட்டும் உத்தரவுகளை போல, அவள் அலைபேசியில் குவிந்தது..
அலைபேசியை எடுத்து பார்த்தவளுக்கு விழிகள் பெரிதாய் விரிந்தது..
" ஹாய்! யு ஆர் மீரா சுஜி , ரைட்? "
" பைன்! ஐ ஆம் யுவர் பியூச்சர் ஹஸ்பண்ட்.."
"சோ டூமாரோ நம்ம ரெண்டு பேருக்கும் மேரேஜ் நடக்க போகுது..தட் யு க்னோ பட் எனக்குன்னு ரெஸ்பெக்ட் ஸ்டேட்ஸ் இருக்கு ஓகே.."
"மணமேடைல உட்காரும் என் மனைவி எனக்கு சமமா இருக்கணும்..நான் என்ன சொல்ல வரேன்னு உனக்கு புரியும்னு நினைக்கிறேன்.. அண்ட் ஆல் சோ தாலி கட்ட முன்ன என்னை பார்க்கக் கூடாது.. "
"கம்பீரமான இருக்கணும்..இது வரைக்கும் போதும்னு நினைக்கிறேன்.."
"மீதி என் வீட்டுக்கு வலது கால் எடுத்து வச்சி நீ மனைவியா நுழைந்ததும் சொல்றேன்.."
" நான் சொன்ன மாதிரி பர்பெக்ட்டா பண்ணனும் ஓகே.. ஆல் தி பெஸ்ட்"
" நோ நீட் டூ ரிப்ளை , ஜஸ்ட் ரிவெம்பர்.."
கூற வேண்டியதை அவளிடம் கூறி ஆயிற்று என்று அவன் ஆப்லைன் சென்றுவிட்டான்..
ஆழமான பெரு மூச்சு இழுத்து தன்னை தானே சமானபடுத்திக் கொண்டாள்..மெத்தையில் அமர்ந்து கொண்டாள் மீரா சுஜி..
"எனக்கு வர போகும் ஹஸ்பண்ட்டை கண்டு நான் கனவே காணல்ல இப்படி ஒரு மெட்டிரியலான ஹஸ்பண்ட்! யாருக்கு நான் குத்தம் சொல்றது? போட்டோ பார்த்து இம்ரஸ் ஆகாத நான் நேரில் பார்த்ததும், ஒரே வார்த்தையில் ஓகே சொல்லிட்டேன்.. பார்ப்போம், மேரேஜ் லைஃப் எப்படி இருக்கும்னு பார்ப்போம்!" அன்றிரவு, அவள் தன் வருங்கால கணவனை எண்ணி கனவு காணாமல் உறங்கினாள்..
விக்டர் தன் மகளுடன் அர்ஜுன் பைரவ்வின் கார் நிறுவனத்திற்கு வந்திருந்தார்.. புதிதாக வந்த Luxury Cars பார்ப்பதற்காக..ஆனால் மீரா, வேறு யாரையோ தேடி கண்களை ஓடச் செய்தாள்..
விக்டர் " சுஜி நீ இங்கேயே இரு, நான் போய் மாப்ள கிட்ட பேசிட்டு வந்துர்றேன்.." என்றவரின் கரத்தை பிடித்து நிறுத்தினாள்..
" டாடி நீங்க மாப்ளன்னு சொல்றீங்க.. நானும் வந்ததில் இருந்து அவரைத்தான் தேடுறேன்..என் கண்ணுக்கு தெரியலையே நீங்களாவது அவரை அடையாளம் தெரிஞ்சா காட்டுங்க டாடி.." சிணுங்கி கொண்டு கேட்கும் தன் செல்ல மகளை சற்று சிரிப்புடன் அவளை நோக்கி,
" அங்க டார்க் ஆரேஞ்ச் கார் பக்கத்துல, அவரோட பிஏ கூட பேசிட்டு இருக்காரே? அவர்தான்.."
மீராவின் கண்கள் பெரிதாகின,
டார்க் ரெட் ஷர்ட், கருப்பு நிற ஃபேன்ட் அணிந்து இருந்தான் , தோள் வரை இருக்கும் சில்கி கேசம் , ஆறடி உயரம், அகலமான தோள்கள்..பனைமரம் போல உயர்ந்த அவன் தோற்றம்!
ஒரு நொடி, அவளது மூச்சே நின்று விட்டது போல இருந்தது..
அவனின் முகம் இன்னும் தெரியவில்லை..அவன் இன்னும் திரும்பவில்லை..ஆனால் அவன் தோற்றம் மட்டுமே அவளுக்கு ஒரு விதமான அதிர்ச்சியை ஏற்படுத்தியது..
"இவர்தானா? இப்படியா இருக்காரு?"
அவள் நினைத்ததற்கு மாறாக, அவன் கவனத்தை ஈர்க்கும் தன்மையானவன்..அந்த முதுகு, அந்த நிமிர்ந்த நடை , அவனை எளிதில் அனைவரையும் திருப்பி பார்க்க வைக்கும்!
அவள் கண்களில் ஆர்வம் தென்பட்டது..
" ஆமா , டார்க் ரெட் ஷர்ட் வேர் பண்ணி இருக்கார் அவரா? "
விக்டர் மெல்ல சிரித்து, "நீ போட்டோ கூட பார்த்தது இல்ல தானே? இப்ப பார்க்கலாம்..ஆனா, மேரேஜ்ல வச்சி தான் நீ அவரை நேர்ல முழுசா பார்க்க முடியும்," என்று சொல்லிவிட்டு அர்ஜுனை நோக்கிச் சென்றுவிட்டார்..
மீரா மட்டும் இன்னும் அதே இடத்தில் உறைந்து நின்றாள்..
அவனின் புகைப்படம் பார்க்காமல் தான் திருமணத்திற்கு சரி என்று சொன்னாள்.. அவன் முகம் தெரியவில்லை என்றாலும் , புறத்தோற்றம் மற்றும் அவனை அவள் ஈர்த்தது போதுமானதாக இருந்தது..
இவற்றையெல்லாம் நினைத்துக் கொண்டு இருந்தவளுக்கு, திருமணம் நடக்க போகிறது என்று உணர்த்தும் விதமாக அவள் கன்னத்தை பதம் பார்த்தது முறுக்கி விட்ட மீசை..
தலைகுனிந்து நின்றிருந்தவள் நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.. அடர்த்தியான சில்கி கேசம் ஒரு பக்கமாக வாரி இருந்தான்..அவளுக்கு இணையாக வசீகரிக்கும் தோற்றம், அதை விட அவளை பாதிக்கப் போவது அவன் விழிகள் தான் அதனை அறியாமல் போனாள் பேதையவள்..
தாலி கட்டுவதிலே மும்முரமாக இருப்பவனை இமை சிமிட்டாமல் தன்னை ஒருவள் பார்க்கிறாள் என்ற எண்ணமே அவனுக்கு கிடையாது..
அவள் பாதத்தை தொட்டு மெட்டி அணிவித்த அவன் கரங்களில் மென்மையை உணர்ந்தாள் அவள்..அவன் தான் அவளை திரும்பியும் பார்க்கவில்லையே!
அவளுக்கு அது ஏமாற்றமாக இருந்தாலும், வெளியே சிரித்து சமாளித்தாள்..
திருமணமும் சம்பிரதாயங்கள் அனைத்தும் முடிந்ததும் மணமகளை அழைத்துக் கொண்டு அர்ஜுன் வீட்டார்கள் அழைத்துச் சென்றுவிட்டார்கள்..
அவன் தன்னுடன் வரவில்லை என்பது மனதில் வலித்தாலும் அவனின் குறுஞ்செய்திகளை நினைவில் கொண்டு காரில் இருந்து இறங்கினாள்..
இமை தாழ்த்தி இருந்தவள்,
" வா மா மீரா " அர்ஜுனின் தாய் கோதை அவளை அழைத்தார்..
அவரை ஒரு தடவை நோக்கி விட்டு, நேரே பார்த்தவளுக்கு விழிகள் இரண்டும் வியப்பில் விரிந்தது.." அமேசிங்" அவள் இதழ்கள் உச்சரித்தது..
வீட்டின் அமைப்பை பார்த்தே அவள் கூறினால் , ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட பங்களா போன்ற அமைப்பு முன் தோட்டம் அத்தனை அழகுடன் சுத்தமாக இருந்தது..
" சுஜி உள்ள போகலாம்.." அவளின் தாய் கீதா..
சரியான முறையில் அவளும் நடந்தாள்..அவள் ஒவ்வொரு அடியாக பாதையில் எடுத்து வைக்கும் போது, அங்கு நிறுவனத்தில் அர்ஜுனின் கையால் ஒருவனுக்கு கன்னத்தில் ஒவ்வொரு அடியும் இறங்கியது..
திருமணம் முடிந்த கையோடு அர்ஜுன் பைரவ் தன் நிறுவனத்திற்கு வந்து சேர்ந்தான்..
நிறுவனத்தில் நடக்கும் திருட்டு, குளறுபடிகள் அனைத்தையும் தெரிவிப்பது அர்ஜுனிடமே..
ஆகையால் இவர்களுக்கு தெரிந்திருந்தாலும், அவன் திருமணம் முடிந்துவிட்டது என்றாலும், அவனுக்கு வேறு வழி இல்லாமல் அவன் அலைபேசியில் குறுஞ்செய்தி அனுப்பி விட்டனர்..
அதாவது, அவனின் பி.ஏ நம்பிக்கையான ஒருவன் புதிதாக ஒரு காரை தயாரிப்பதற்கான தொழில்நுட்பம் சம்பந்தமான திட்டங்களை அவன் எதிரியிடம் அதன் விபரங்களை ஒரு சிப் மூலமாக பகிர்ந்தளித்து விட்டான்..
அர்ஜுன்க்கு திருமணம் நடந்ததால், அவன் மாட்டிக் கொள்ள போகாது என்று நினைத்திருந்தாலும், அர்ஜுனின் நம்பிக்கையான ஒருவன் கண்காணித்து இருப்பது அவனுக்கு தெரியாதே..
ரகசிய அறையில் இருந்து எடுக்கப்பட்ட விபரங்களை எடுத்ததற்கு பச்சை நிற விளக்கு, ரங்கன் அறையில் அலாரமாக காட்டியது.. பி.ஏ ரவினின் வேலை என எதிர்பாராத திகைப்பை அவன் முகத்தில் காட்டவில்லை.
உடனே, அர்ஜுன்க்கு அழைத்து கூறிவிட்டான்.. ரவின் எதிரில், அர்ஜுன் இருந்தும், அவன் கத்தி ஆர்பாட்டம் செய்யாமல் இருப்பவனை, மஞ்சள் நிற பூனை கண்களால் கூர்மையாக்கி பார்த்தான்..
அவன் பார்வையை அசையாமல், தன்னை எதிர்கொண்டவனை மனதில் மெச்சிக் கொண்டான்..
"லெட்ஸ் சீ.." என்ற அவனின் வார்த்தை உள்ளுக்குள் பயத்தை கிளப்பினாலும், அவன் அப்படியே இருந்தான்..
"ரங்கன், என் கூடவே இரண்டு வருஷமா பி.ஏ இருந்தவன்..எனக்கே தெரியாம நம்பிக்கை துரோகம் செஞ்சி என் கம்பெனில திருடி இருக்கானானா சோ…" பேச்சை இழுத்து அவன் ரங்கனைப் பார்த்தான்.
"புரியுது, சார்! ஐ வில் பின்னிஷ் இட்."
"ஹம், குட். நெக்ஸ்ட், ரவின் கிட்ட வேலையை ஒப்படைச்சவன் யாருன்னு இன்னைக்குள்ள கண்டு பிடிக்கணும், ரங்கன் காட் இட்.." சீறினான் என்றால் அவனின் கோபத்தை கட்டுக்குள் கொண்டு வர வேண்டிய கட்டாயம் இருந்தது..இதே கோபத்துடன் வீட்டிற்கு செல்ல முடியாது அல்லவா?
"ஓகே, சார்!" என்றான்.
Cheetah Veloce sports car ஆரஞ்சு நிறத்தில் இருந்த காரில் ஏறி, புழுதி பறக்க கிளம்பியவன் கார் சாலையில் பாய்ந்து சென்றது..
மீரா வலது காலை உயர்த்தி பாதத்தை வைக்கும் முன், இன்னொரு பாதம் நீண்டது..
அது எவர் என்று கண்டு கொண்டவளின் இதழில் புன்னகை... சீத்தாவின் வேகத்தில் காரை ஓட்டிக் கொண்டு வந்தவன் தன் பங்களாவிற்கு வந்து சேர்ந்தான்..
தன் புதிய உறவுடன் தன் பாதத்தை வைத்து உள்ளே நுழைந்தான் அர்ஜுன் பைரவ்..
இதனைக் கண்ட பெற்றவர்களுக்கு அத்தனை பூரிப்பாக இருந்தது. இனி மகளை நினைத்து கவலைப்பட வேண்டியதில்லை.. மருமகனே நன்றாக பார்த்துக் கொள்வார் என்ற நம்பிக்கை பிறந்தது..
திருமணம் முடிந்து வீட்டிற்குள் நுழைந்ததும், மணமக்களை அமர வைத்து பாலும் பழமும் கொடுப்பார்கள்.. ஆனால் இங்கு நடந்தது, மீராவின் கரத்தை பிடித்து அவன் அறைக்கு அழைத்துச் சென்றான்..
வந்த சொந்தங்களும், குடும்பத்தினர்களும் அவன் செயலில் அதிர்ந்து நின்றார்கள்.
இதில் பெற்றவர்களுக்கே சங்கடம் உண்டானது..
அறை கதவை மூடிவிட்டு, தன்னை அதிர்ந்து பார்த்துக் கொண்டிருக்கும் மனைவி முன் வந்து நின்றான் அர்ஜுன் பைரவ்..
"ஏங்க…"
அவனின் பூனை கண்கள் அவளை மொத்தமாக சுருட்டி போட்டது..அக்கணம் அவள் அவன் பார்வையில் மயங்கி போயிருந்தாள்..
"மீரா…" அவளை அழைத்தான்.
அடுத்து அவன் கூறியதை கேட்டு, அவளது காதில் இரத்தம் வழியாத குறை தான். அவளவன் அவன் மனையாளுக்கே பேரதிர்ச்சியை கொடுத்திருந்தான்..
Last edited: