எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

செம்பருத்தி பூ - கதைத்திரி

Selvi_Saran

Moderator
ஹாய் நண்பர்களே, நான் செல்வி சரண். இன்று செம்பருத்தி பூ நாவல் மூலமாக உங்களை சந்திக்க வந்துள்ளேன்.
 

Selvi_Saran

Moderator

செம்பருத்தி பூ 1​

''அம்மா '' என்று அழைத்து கொண்டே வந்தாள் நம் கதையின் நாயகி விதுஷிகா. "என்ன விது" என்றார் வாணலியில் கிச்சடியைக் கிண்டிக் கொண்டிருந்த கீதா, விதுஷியின் தாய்.

"வருண் போன தடவை வரும் போது, ஒரு புத்தகத்தை வைத்து விட்டுப் போய் விட்டானாம் அம்மா. அதை கூரியரில் அனுப்ப வேண்டுமாம்" என்றாள் விது.

திரும்பி மகளை பார்த்தார் அவர். இன்னும் சற்று நேரம் அவள் முகத்தைப் பார்த்து கொண்டிருக்க வேண்டும் போல் இருந்தது அவருக்கு. அப்படி ஒரு களையான முகம், பால் போன்ற நிறம், மெலிவும் இல்லாமல் குண்டு என்று சொல்லவும் முடியாத அளவான உடலமைப்பு. எதிலும் ஒரு நிதானம் இருக்கும் அவள் செயல்களில்.

"அப்பா வெளியில் ஒரு வேலையாகக் காலையிலேயே போய் விட்டார்" என்றார் கீதா.

"இன்றைக்கே அனுப்ப வேண்டும் என்றானம்மா. நான் வேண்டுமானால் போய் வரட்டுமா?" தயக்கத்துடன் தான் கேட்டாள்.

ஏனெனில் விதுவைப் பெண் பார்க்க மாலை மாப்பிள்ளை வீட்டார் வருகிறார்கள். உடனே கீதாவுக்குக் கோபம் வந்து விட்டது. கிச்சடியை அடுப்பில் இருந்து இறக்கி "டங்" என்ற சத்தத்துடன் அடுப்பு மேடையில் வைத்தவர் மகளின் புறம் திரும்பினார்.

"என்ன நினைத்துக் கொண்டிருக்கிறான் உன் தம்பி. அவனுக்கு ஒரு ஃபோனைப் போடு" என்றார் அதே கோபத்தோடு. தம்பிக்கு அழைப்பு விடுத்து அன்னையிடம் போனைக் கொடுத்தாள்.

அழைப்பு விடுத்து அந்தப் புறம் எடுக்கப் பட்டதும் "என்னடா நீ? தேவையான புத்தகத்தைக் கையோடு கொண்டு போகத் தெரியதா?" என்றார். இதையும் செல்ல சலிப்பாகத் தான் கேட்டார்.

அவனோ "சாரி ஹனி, இந்த முறை மட்டும் ஹெல்ப் பண்ணு. இனி உன் மகன் மிகவும் கவனமாக இருப்பேன். ப்ளீஸ் ப்ளீஸ் ஹனி" என்று கொஞ்சினான் வருண்குமார்.

"ம்ம் சரி கண்ணா. ஆனால் அக்காவை பகலில் வெயிலில் அனுப்ப வேண்டுமடா. அது தான் யோசித்தேன். சரி நான் அதை பார்த்து கொள்கிறேன். நீ சாப்பிட்டாயா வரு?" என்று அவனுடன் அளவளாவ ஆரம்பித்து விட்டார்.

விது தான் இருவரையும் கோபத்துடன் நோக்கக் கொண்டிருந்தாள். சாவகாசமாக பேசி முடித்து இவள் புறம் திரும்பியவர், சட்டென்று முகத்தை மாற்றக் கெத்தாக வைத்து கொண்டு "என்ன டி?" என்றார்.

"இதைத் தானே நானும் கூறினேன். அவன் மட்டும் என்னம்மா ஸ்பெஷல்".

"நீ கோபப்பட்டால் பக்கத்தில் இருப்பதால் உடனே சமாதான படுத்தி விடுவேன். அவன் ஹாஸ்டலில் தனியாக இருக்கிறான். அதனால் தான் அவனிடம் கோபம் கொள்ளவில்லை விது."

"சரிம்மா நான் கூரியர் ஆபீஸ் போய் வரட்டுமா" என்றாள் மீண்டும்.

"வேறு வழி? சாப்பிட்டுக் கிளம்பு. நான் கொஞ்சம் மார்க்கெட் போக வேண்டும்."

பூபதிராஜ், லட்சுமி தம்பதிகளுக்கு இரு பிள்ளைகள், விதுஷிகா 23, வருண் குமார் 19. தந்தை வங்கி மேலாளர், தாய் குடும்பத் தலைவி. விதுஷிகா தந்தையைப் பின்பற்றி ஐபிபிஎஸ் தேர்வு எழுதி, இரண்டு வருடங்களாக தூத்துக்குடியில் இருக்கும் ஒரு தேசிய வங்கியில், வேலை பார்த்து வருகிறாள். தம்பி சென்னையில் ஒரு பொறியியல் கல்லூரியில், ரோபோடிக் இன்ஜினியரிங் இரண்டாம் வருடம் படித்து கொண்டிருக்கிறான்.

கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மகளுக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்து, இப்போது தான் ரயில்வேயில் கிளெர்க்காக இருக்கும் சுகுமாரைத் தேர்ந்தெடுத்து, இன்று பெண் பார்க்கும் வைபவம் வைத்துள்ளனர். விதுஷிகாவைப் பொறுத்த வரை, தந்தை தாய் தம்பி தான் அவள் உலகம், நண்பர்கள் எல்லாம். அதற்காக யாருடனும் பழகாதவள் இல்லை. பள்ளி, கல்லூரித் தோழிகள் சிலர் இப்போது வரை தொடர்பில் இருக்கின்றனர் தான். ஆனால் அவளுக்கென்று உயிர்த்தோழி என்று, தனிப்பட்டவர்கள் யாரும் அவளுக்குத் தேவைப்படவில்லை. நண்பர்களுடன் பேசும் விசயங்கள் எதைப் பற்றியும், வீட்டினருடன் பேசும் சுதந்திரம் அவளுக்கு இருந்தது.

இவர்கள் குடும்பம் நவீன கூட்டுக்குடும்ப வகையைச் சேர்ந்தவர்கள். தூத்துக்குடியைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள். பூபதிராஜின் தந்தை சேர்வராயன், தாய் ராஜம்மாள். இவர்களுக்கு இரு மகன்களும், ஒரு மகளும் அவரவர் குடும்பத்துடன் ஒரே தெருவில் அடுத்தடுத்த வீடுகளில் இருக்கின்றனர்.

பூபதிராஜின் அண்ணன் தங்கராஜ் உப்பளம் குத்தகைக்கு எடுத்து நடத்தி வருகிறார், தங்கை வசந்தாவின் கணவர் புகழ்பெற்ற ஜவுளிக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். சேர்வராயன் தம்பதிகள் குத்தகைக்கு நிலங்களை எடுத்து விவசாயம் செய்து, அதில் வந்த வருமானத்தில், மூன்று பிள்ளைகளுக்கும் அந்தக் காலத்திலேயே ஆண், பெண் வித்தியாசம் இல்லாமல், ஒன்று போல் நிலம் வாங்கி வீடுகட்டிக் கொடுத்தார்கள். தங்கள் கடமைகளை முடித்து, கடந்த இரு வருடங்களில் ஒருவர் பின் ஒருவராக இறைவனடி சேர்ந்து விட்டனர்.

அடுத்த வீடுகளில் இருந்தாலும் ஒருவர் வீட்டில் சின்ன சந்தோஷமோ, கஷ்டமோ எதுவாக இருந்தாலும் ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுப்பதில்லை. வாரம் ஒரு முறை ஞாயிறுகளில், மதிய உணவுக்கு யாராவது ஒருவர் வீட்டில் தான் அனைவரும் இருப்பார்கள். இவர்கள் பிள்ளைகளும் ஒருவருக்கு ஒருவர், இது வரை ஒற்றுமையாக தான் இருந்து வருகின்றனர்.

விதுஷிகாவின் பெரியப்பாவுக்கு இரு பெண்கள் கீர்த்திகா, பிரியா. கீர்த்திகாவுக்குத் திருமணம் முடிந்து மதுரையில், கணவர் மற்றும் ஒரு வயது குழந்தையுடன் வசித்து வருகிறாள். பிரியா இப்போது தான் பொறியியல் இறுதி வருடம் படித்து வருகிறாள்.

அத்தை வசந்தாவுக்கு இரு ஆண் பிள்ளைகள் தர்ஷன், ராகவன். தர்ஷன் தந்தையுடன் தொழிலில் இறங்கி, காலத்திற்கேற்ற மாற்றங்களை ஏற்படுத்தித் தொழில் முன்னேற்றத்தில் உறுதுணையாக இருக்கிறான். ராகவன் வருண்குமாருடன் ஒரே கல்லூரியில் ஒரே பிரிவில் படிக்கிறான்.

விதுஷியைத் தனியாக வெளியில், அதுவும் இன்று அனுப்ப விருப்பம் இல்லாத கீதா, பிரியாவை துணைக்கு அழைத்து செல்லும் படி கூறினார்.

தாயின் மனநிலையைப் புரிந்து கொண்டு, உடனே பிரியாவுக்கு போன் செய்தாள் விதுஷி. தேர்வுக்குப் படிக்க விடுமுறையில் இருந்தாள் ப்ரியா.

விதுவின் எண்ணைப் பார்த்ததும் உற்சாகமாக "என்ன கல்யாணப் பொண்ணு காலையிலேயே என்னோட நியாபகம்? நியாயமாக அத்தான் நியாபகம் தானே வர வேண்டும்?" என்றாள்.

முகம் லேசாகச் சிவந்தாலும் "நான் உனக்கு அக்கா டி. இப்படிக் கிண்டல் செய்யக் கூடாது" என்றாள் விது.

"அதெல்லாம் செய்யலாம். என்ன விஷயம் அக்கா? அதை முதலில் சொல்லு"

"வெளியில் ஒரு வேலை பிரீ. என்னுடன் வருகிறாயா? ஐஸ் கிரீம் வாங்கித் தருகிறேன்."

"ம்ம்ம்" என்று யோசனை செய்த பிரியா, "சரி இடத்தைச் சொல். வரலாமா வேண்டாமா என்று யோசிக்கிறேன்" கெத்தாகப் பேசினாள்.

மனதுக்குள் இந்த அம்மாவால் தான் இவளிடம் கெஞ்ச வேண்டி உள்ளது. இவளைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம். இப்போது காரியம் நடக்க வேண்டும் என்று, பெரிய மூச்சை எடுத்துத் தன்னை அமைதிப் படுத்திக் கொள்ள முயற்சி செய்தாள் விதுஷி.

"கூரியர் ஆபீஸ் போக வேண்டும் ப்ரீ செல்லம்."

"அக்கா.... ஆ"

காதைக் குடைந்து கொண்டே "ஏன் டி கத்துற?" எரிச்சலில் விது.

"நீ ஒரு கல்யாணப் பொண்ணு. பார்லர், பொட்டிக் இந்த மாதிரி இடங்களுக்கு என்னைக் கூப்பிட்டால் ஒரு நியாயம் இருக்கும். நீ எங்க அதுக்கு சரிப்பட்டு வரப் போற?."

வருணின் தேர்வைப் பற்றிக் கூறி, அந்தப் புத்தகத்தை அனுப்ப வேண்டிய அவசியத்தையும் கூறி, கிட்டத்தட்டக் கெஞ்சி அவளை வரவழைத்து, இருவருமாக வீட்டை விட்டு ஸ்கூட்டியில் வெளியேறிய போது ஒரு மணி நேரம் கடந்திருந்தது.

வழக்கம் போல் வீட்டை விட்டுச் சற்று தூரம் சென்றதுமே, சில நாள்களாக ஏற்படும் உணர்வு இன்றும் வந்தது. வண்டியை நிறுத்தி விட்டுத் திரும்பிப் பார்த்தாள். யாரும் இல்லை, சாலையில் சந்தேகப் படுமாறு எந்த வாகனமும் செல்லவும் இல்லை. ஆனால் சில மாதங்களுக்கு முன்பு நடந்த நிகழ்வும், அதைத் தொடர்ந்த இன்றைய உறுத்தலும் தொடர் கதையானது.​

வண்டி நிறுத்த பட்டதும் பின்னால் இருந்த பிரியா "என்ன அக்கா?" என்றாள்.

"யாரோ அழைத்தாற் போல் இருந்தது" முணுமுணுத்தவாறு மீண்டும் வண்டியை கிளப்பினாள் விது.

கூரியர் ஆபீஸ் போய் புத்தகத்தை அனுப்பி விட்டு, ஐஸ்கிரீம் பார்லர் போய் வசதியான இடம் பார்த்து அமர்ந்தனர் சகோதரிகள். சிரித்துக் கதைகள் பேசிக் கொண்டு இருந்தாலும், விதுவின் பார்வை எதையோ அலசி கொண்டே இருந்தது.

"என்ன அக்கா? யாரைத் தேடுகிறாய்?" என்று கேட்டு விட்டாள் பிரியா.

"யாரோ தெரிந்தவர் போல் இருந்தது"

அந்நேரம் அவளுடைய அலைபேசி அழைத்தது. வருண் தான் பேசினான்.

"அக்கா எங்கே இருக்கிறாய்?"

"நானும் பிரீயும் கூரியர் ஆபீஸ் போயிட்டு, அப்படியே ஐஸ்கிரீம் சாப்பிட வந்தோம் வருண்"

"அக்கா.....?".

"என்ன டா? சொல்லு".

"இன்னைக்கு நீ மாப்பிள்ளையிடம் பேசி விட்டு, உனக்குப் பிடித்திருந்தால் மட்டும் தான் சம்மதம் சொல்ல வேண்டும். அப்பாவுக்காக, அம்மாவுக்காக என்று எந்த முடிவும் எடுக்க கூடாது. சரியா?".

தம்பியின் அக்கறையில் மனம் நெகிழ்ந்தாள் விதுஷி. ஆனால் வெளியில் அதை மறைத்து "என்னடா, பெரிய மனுஷன் போல் பேசுற!" என்றாள் விளையாட்டாக.

"அக்கா, செமஸ்டர் எக்ஸாமுக்கு படிக்க லீவு விட்டிருக்காங்க. இல்லா விட்டால் நான் இந்த நேரத்தில் உன் கூட இருந்து, அங்கே உன் முகம் பார்த்தே சொல்லிவிடுவேன். உனக்கு பிடிச்சிருக்கா இல்லையா என்று. அதனால் தான் உன்னிடம் சொல்லுகிறேன்."

"சரிடா, சரிடா பெரிய மனுசா. கண்டிப்பா சொல்லுகிறேன். சரி தானா?"

"சரிக்கா. அந்த பிஓடி நம்பரை அனுப்பு"

"ம்ம்" என்று காலை கட் செய்தாள் விதுஷி.

பிரியா விதுஷியிடம் "அக்கா வா பார்லர் போகலாம்."

"எதுக்குடி?"

"ம்ம். எனக்கு பேசியல் செய்யத் தான்"

"வா அக்கா. சித்தியிடம் காலையிலேயே பேசி விட்டேன். உனக்கும் செய்து தான் கூட்டி வரச் சொன்னார்கள்"

"அம்மா என்னிடம் எதுவும் சொல்லவில்லையே"

"நேற்று சொன்னதற்கு நீ வேண்டாம் என்றாயாம். அது தான் என்னிடம் இன்று தான் சொன்னார்கள். ப்ளீஸ் அக்கா"

இருவரும் பார்லருக்குள் நுழைந்தார்கள். உண்மையில் பிரியா புருவம் திருத்த மட்டும் தான் இங்கு வந்தாள். விதுஷிக்காக மட்டுமே இங்கு வந்துள்ளனர். விதுஷியை உள்ளே அனுப்பி விட்டு, வெளியில் காத்திருப்புப் பகுதியில் அமர்ந்திருந்தாள் பிரியா. அவர்கள் ஒரு காம்ப்ளெக்ஸில் இருக்கும் பார்லருக்குத் தான் வந்திருந்தார்கள். அப்போது அங்கு வந்த ஒரு நடுத்தர வயது ஆண், அவர்கள் வந்த ஸ்கூட்டி நம்பரைக் கூறி, அது பிற வண்டிகளை எடுக்க முடியாமல் சிரமம் ஏற்படுத்துவதாகவும் கூறி, அதைச் சற்றுத் தள்ளி நிறுத்துமாறு கேட்டார்.

பிரியா கீழே சென்று வண்டியைப் பார்த்தாள். அது அவர்கள் நிறுத்திய மாதிரி இல்லாமல், குறுக்காக நின்று கொண்டிருந்தது. அவளுக்குச் சற்று குழப்பம் ஏற்பட்டது. ஆனால் யாரிடம் சென்று கேட்பது என்று தெரியாமல், வண்டியைச் சிறிது போராட்டத்திற்குப் பிறகு சரியாக நிறுத்தி விட்டு, மீண்டும் சென்று இரண்டாம் தளத்தில் இருந்த பார்லர் பகுதியில் அமர்ந்தாள்.

வெகுநேரம் ஆகி விட்டது, விதுஷி இன்னும் வர வில்லை. ரிஷப்ஷன் பகுதிக்குச் சென்று இன்னும் எவ்வளவு நேரம் ஆகும் என்று கேட்டாள். அவள் சொன்ன பதிலில் பிரியாவுக்கு மயக்கம் வரும் போல் ஆகி விட்டது.​


  • தொடரும்….​

இந்த நாவல் பிரதிலிபியில் முடிவுற்ற நாவல். தளத்தில் முதல் முறை பதிவு செய்கிறேன். படித்து விட்டு தங்கள் கருத்துகளை தெரிவியுங்கள் பிரெண்ட்ஸ்…​

 

Selvi_Saran

Moderator

செம்பருத்தி பூ 2​

தலை கனமாக இருந்தது விதுஷிகாவுக்கு, கண்களைத் திறக்கவே முடியவில்லை. சிறிது நேர முயற்சிக்குப் பிறகு கண் இமைகளை மெதுவாகத் திறந்தாள். பார்வை மங்கலாக எதுவும் தெரியவில்லை, சுற்று புறம் புரியாமல், சூழ்நிலை புரியாமல் மூளை மந்தமாக இருந்தது.​

படுத்திருந்தவள் எழுந்து கொள்ள முயன்றாள். உடல் எங்கோ பறப்பது போல் இருந்தது. உடலையும், மூளையையும் திடப்படுத்த முயன்றவாறு எழுந்து அமர்ந்தாள். அந்த அறை அவளுக்குப் புதிது. அறைக்கதவு பூட்டப்பட்டிருந்தது.​

ஆனால் அவளுக்குத் தற்போது உடல் உபாதைகளைத் தீர்க்க வேண்டி இருந்தது. அறைக்குள் இருந்த பாத்ரூமிற்குள் சென்று, முகத்தை நீர் விட்டு நன்றாக அடித்துக் கழுவினாள். மூளை கொஞ்சம் சுறுசுறுப்பு அடைந்தது. கடைசியாக பியூட்டி பார்லரில் நடந்ததை நினைத்துப் பார்க்க ஆரம்பித்தாள்.​

பார்லரில் முதலில் பிரியாவும், விதுஷிகாவும் தங்கள் தேவைகளை ரிசப்சனில் கூறி விட்டு அமர்ந்திருந்தனர்.​

பார்லர் பெண் ஒருத்தி பிரியாவிடம், "மேடம், உங்களுக்கு த்ரெட்டிங் மட்டும் என்பதால் நீங்கள் முதலில் வாருங்கள்" என்று அழைத்தாள்.​

"அக்கா, நான்போய் விட்டு வருகிறேன்" என்று விதுஷியிடம் கூறி விட்டுத் தன் மொபைல், பர்ஸை அவளிடம் கொடுத்து விட்டு உள்ளே சென்றாள்.​

சற்று நேரத்தில் பிரியா வெளியே வரவும், விதுஷியை உள்ளே அழைத்துச் சென்றனர். அப்போது விதுவை, உள்ளேயே பக்கவாட்டில் இருந்த இன்னொரு காத்திருப்பு அறையில் அமருமாறு சொன்னாள், அந்தப் பெண்.​

"பிரியாவுக்கு முடித்த உடன் எனக்குரிய நேரம் என்று சொன்னீர்களே?" என்றாள் விதுஷி.​

"ஆமாம் மேடம், ஆனால் உள்ளே இருக்கும் கஸ்டமர் சற்று நேரத்தை இழுத்தடிக்கிறார். அவர்களை அனுப்பி விட்டால், உங்களுக்குரிய சேவையில் இடையூறு இல்லாமல் இருக்கும். அதனால் தான் மேடம்" என்று விட்டு ஒரு கிளாஸ் பழச்சாற்றை அவளுக்குக் கொடுத்தாள்.​

அதைக் குடித்த பின்பு சற்று நேரத்தில், அவளே மீண்டும் விதுஷியிடம் வந்தாள்.​

"மேடம், உங்களுடன் வந்த பெண் காம்ப்ளக்ஸ் வாசலுக்கு உங்களை வர சொல்லி, ரிசப்ஷன்க்கு சொல்லி இருக்கிறார்கள்"​

"அவள் ஏன் கீழே சென்றாள்?"​

"தெரியவில்லை மேடம். வேண்டுமானால் ரிஷப்ஷனில் கேட்டு பாருங்கள்".​

விதுஷி ரிஷப்ஷனில் கேட்கும் அளவு பொறுமை இல்லாமல், அங்கிருந்து வெளியேறி, கீழே செல்வதற்காக படி இருக்கும் பகுதி நோக்கி செல்ல ஆரம்பித்தாள். அப்போது மேலே ஏறி வந்து கொண்டிருந்த ஒரு பெண் அவளிடம்,​

"இங்கே பொட்டிக் எந்த பக்கம் இருக்கிறது?" என்று கேட்டார்.​

அவள் வழி சொல்வதற்காக திரும்பிய போது, அவள் பின்புறம் இருந்து அவள் முகத்தில் ஒரு துணி அழுத்த பட்டது. அவ்வளவு தான் அவள் நினைவில் உள்ளது.​

இது யாருடைய வேலையாக இருக்கும்? இந்த கேள்வி தோன்றிய உடனேயே அவள் மனதில் ஒரு முகம் தோன்றி உடல் வெளிப்படையாக நடுங்க தொடங்கியது.​

வேகமாக அந்த அறையின் கதவை திறந்து பார்த்தாள். கதவு உடனே திறந்து கொண்டது. அந்த அறையின் வாயிலில் இருந்து வெளியில் பார்த்தாள். அது ஒரு நவீன மாடலில் கட்டப்பட்டிருந்த வீடு. ஆனால் வீடு அளவில் சிறியதே. இவள் இருந்தது மாடியில். கீழே எட்டி பார்த்தாள். பேச்சுக் குரல் மட்டும் கேட்டது, ஆனால் யாரும் கண்களுக்கு தெரியவில்லை.​

"திருப்பள்ளி எழுச்சி முடிந்ததா?" பின்புறம் கேட்ட குரலில் அதிர்ந்து திரும்பினாள். சர்வமும் ஒடுங்கி, மீண்டும் ஒரு மயக்கம் வந்ததைப் போல் தள்ளாடினாள்.​

பிரியா ரிஸப்ஷனை அணுகி, அங்கிருந்த பெண்ணிடம் விதுஷிகாவுக்கு ஃபேசியல் முடிய இன்னும் எவ்வளவு நேரம் ஆகும் என்று கேட்டாள். அவள் இன்டர்காமில் உள்ளே உள்ள அறைக்கு அழைத்து விவரம் கேட்டாள்.​

"மேடம், உங்களுடன் வந்தவர்கள் நீங்கள் கீழே சென்று அழைத்த போதே சென்று விட்டார்கள். இன்னும் திரும்பி வரவில்லை"​

பிரியாவுக்கு பதட்டமாகி விட்டது. "நான் எப்போது ஃபோன் செய்தேன்?"​

"மேடம் நீங்கள் தான் மேடம், என் அக்கா விதுஷிகா உள்ளே இருக்கிறாள். அவளை காம்ப்ளக்ஸ் வாசலுக்கு வரச் சொல்லச் சொன்னீர்கள். பெயர் கூட பிரியா என்றீர்களே?"​

"சரி அப்படியே என்றாலும் நான் தனியே இங்கே வந்து அமர்ந்து அரைமணி நேரம் ஆகி விட்டது. நீங்கள் ஏன் அவளுடைய ஃபேசியலுக்காக அவளை அழைக்கவில்லை?"​

"நீங்கள் தனியே வந்து அமர்ந்திருப்பதை பார்த்து, அவர்களுக்கு ஏதும் அவசர வேலையாக போய் இருப்பார்கள், அவர்கள் வருவதற்காக நீங்கள் வெயிட் செய்வதாக நினைத்து விட்டோம் மேடம்" என்றாள் அந்தப் பெண் மிகவும் பயத்தோடு.​

பிரியா கத்திப் பேசியதால், பார்லர் உள்ளே வேலை செய்பவர்களும் அவளிடம் வந்து விளக்கம் கொடுத்தனர். ஆனால் அந்த விளக்கத்தால் அவளுக்குத் தான் எந்த பயனும் இல்லை. இப்போது விதுஷியை எங்கே? அவளுக்கு என்ன ஆயிற்று?​

அவள் இப்படிப் பொறுப்பில்லாமல் தன்னை இங்கே விட்டு விட்டு வீட்டிற்குச் செல்ல ஒரு சதவீதம் கூட வாய்ப்பே இல்லை.​

ஆனால் அவளுக்கு வேறு வழி இல்லை. இப்போது வீட்டிற்குத் தெரியப்படுத்த வேண்டும். ஏனெனில் விதுஷி உள்ளே செல்லும் போது அவளுடைய ஃபோன், ஹாண்ட்பாக் போன்றவற் பிரியாவிடம் தான் கொடுத்து விட்டு சென்றிருந்தாள்.​

வீட்டுப் பெரியவர்களிடம் சொல்லப் பயமாக இருந்தது. அவள் நினைவுக்கு உடனே வந்தவன், அவளுடைய அத்தான் தர்ஷன் தான். இருவருக்குமிடையில் சொல்லப்படாத நேசம் ஒன்று உள்ளது. இருவருக்கும் ஒருவர் உணர்வு மற்றவர்க்கு சொல்லாமலேயே தெரியும். அதனால் தான் எந்த ஒரு இக்கட்டிலும் அவளுக்கு மனக்கண் முன் தோன்றுவது அவன் தான்.​

தர்ஷனுக்கு ஃபோன் செய்தாள். ரிங் சென்று அவன் அழைப்பை ஏற்றதும், "அத்தான்" என்றாள் அழுகுரலில்.​

"என்னம்மா? என்ன ப்ரீ? அழுகிறாயா?" என்றான் தர்ஷன் பதட்டத்துடன்.​

தேம்பலுக்கிடையே அவள் விசயத்தைச் சொன்னதும், "நீ அங்கேயே இரு. நான் வந்து விடுகிறேன். அது வரை அமைதியாக அங்கேயே அமர்ந்திரு" என்று விட்டு அழைப்பைத் துண்டித்தான்.​

கீதாவுக்கு கால் செய்தான் தர்ஷன். சாதாரணமாக விசாரிப்பது போல் அவர் எங்கே இருக்கிறார் என்று கேட்டு, விதுஷியைப் பற்றியும் விசாரித்தான். அவர் மார்க்கெட் போய்விட்டு வீட்டிற்கு வந்து விட்டதாகவும், விதுஷி ப்ரியாவோடு பார்லர் சென்று விட்டு இன்னும் வரவில்லை என்றும் தெரிவித்தார்.​

உடனே காரை எடுத்து கொண்டு, பிரியா கூறிய அந்த காம்ப்ளக்ஸை நோக்கி சென்றான்.​

பிரியாவைப் பார்த்து நடந்ததை விசாரித்து, பார்லரிலும் விசாரித்து பார்த்தான். ஆனால் அங்கே உருப்படியான விஷயம் எதுவும் கிடைக்கவில்லை. தந்தைக்கு அழைத்து விஷயத்தைக் கூறினான். அவர் மூலமாக கீதாவுக்கும், பூபதிக்கும் விஷயம் தெரிவிக்கப்பட்டது. குடும்பத்தில் அனைவரும் விதுஷியின் வீட்டில் கூடினர்.​

தர்ஷன் பிரியாவை அழைத்துக் கொண்டு, அந்த காம்ப்ளக்சில் இருந்த நிர்வாக அறைக்குச் சென்று பார்த்தான். அவர்களின் உதவியுடன் சிசிடிவி காட்சிகளைப் பார்க்கத் தொடங்கினான். ப்ரியாவை வீட்டிற்கு செல்லுமாறு கூறினான். ஆனால் அவள் மறுத்து விட்டாள்.​

சற்று நேரத்தில் பூபதிராஜ், தங்கராஜ், தர்ஷனின் தந்தை சேகர் மூவரும் அங்கு வந்தனர். சிசிடிவி காட்சியில் விதுஷி பார்லரில் இருந்து வெளியில் வருவது தெரிந்தது. ஆனால் அதற்கு பிறகு அவள் அந்த காம்ப்ளக்சில் இருந்து வெளியில் வந்ததற்கான எந்த வீடியோவும் இல்லை. அந்த தளத்தில் இருந்த அனைத்து கேமரா பதிவுகளையும் பார்த்து விட்டனர். இதற்கிடையில் மாப்பிள்ளை வீட்டினரிடம் இருந்தும் பூபதிக்கு போன் அழைப்பு வர தொடங்கியது.​

பூபதிராஜ் மகளை தொலைத்த கவலையுடன் இந்த கவலையும் சேர நிற்க முடியாமல் தள்ளாடினார். அவரை அங்கிருந்த இருக்கையில் அமர செய்த தர்ஷன் அவரிடம் இருந்து போனை வாங்கி, பூபதிராஜிற்கு திடீரென்று உடல் நலம் சரியில்லையெனவும், அதனால் இன்று அவர்கள் வர வேண்டாம் என்றும் கூறி, மன்னிப்பும் கேட்டு கொண்டு காலை கட் செய்தான்.​

இதற்குப் பின் என்ன? இந்த எண்ணத்துடன் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து கொண்டனர்.​

சேகர் "நாம் இனி செய்வதற்கு ஒன்றும் இல்லை. இனி போலீஸ் உதவியைத் தான் நாட முடியும். இப்போதே நேரம் பிற்பகலைத் தாண்டி விட்டது. இனியும் நேரத்தைக் கடத்த வேண்டாம்" என்றார்.​

தங்கராஜ் "மாப்பிள்ளை சொல்வது தான்டா எனக்கும் சரியாகப்படுகிறது" என்றார் தம்பியிடம்.​

பூபதி அது வரை திடமாக இருந்தவர் திடீரென்று குலுங்கி அழத் தொடங்கினார். மற்ற அனைவரும் அவரைத் தேற்றி போலீஸ் ஸ்டேஷன் அழைத்துச் சென்றார்கள்.​

வீட்டில் கீதாவை மற்ற பெண்கள் அனைவரும், சமாதானப் படுத்த முயன்று தோற்று கொண்டிருந்தனர். ஏனெனில் விதுஷி அவர்கள் அனைவருக்குமே செல்லமான பெண். அத்தனை அமைதி வெளியில், வீட்டிலோ அதற்கு எதிராக அவ்வளவு கலகலப்பான குணமுள்ளவள். அவளுடன் நெருங்கிப் பழகியவர்களுக்கு மட்டுமே அவள் சுபாவம் தெரியும்.​

தர்ஷன் "பிரியாவும் தங்களுடன் போலீஸ் ஸ்டேஷன் வர வேண்டும், ஏனெனில் அவள் தான் விதுஷியுடன் இருந்தாள்" என்றான். அதனால் அவளும் அவர்களுடன் சென்றாள்.​

இன்ஸ்பெக்டர் முன் அனைவரும் நின்றிருந்தனர். தர்ஷன் நடந்த நிகழ்வைப் பற்றி கூறினான். பூபதி கண்ணீரை கட்டுப்படுத்திய முகத்துடனும், பிரியா அழுது கொண்டும் இருந்தார்கள்.​

இன்ஸ்பெக்டர் பிரியாவிடம் தேவையான கேள்விகளை கேட்டுப் பதில்களைப் பெற்றுக் கொண்டார். பின்பு நிமிர்ந்து அவர்கள் அனைவரையும் பார்த்தார்.​

ஒரு பெருமூச்சுடன் "சார், கேட்கிறேன் என்று தவறாக நினைக்க வேண்டாம். இந்தக் கல்யாணத்தில் உங்கள் பெண்ணுக்குச் சம்மதமா?" என்றார்.​

பூபதி "சார், என் பெண் விருப்பத்திற்கு மாறாக, எங்கள் குடும்பத்தில் யாரும் நடந்து கொள்ளவே மாட்டோம். அவள் சரி என்ற பிறகு தான், இன்றைக்கு மாப்பிள்ளை வீட்டாரை வரக் கூறினோம். அதுவும் இல்லாமல் என் பெண் மிகவும் நேர்மையானவள் சார். பிடிக்கவில்லை என்றால், முகத்திற்கு நேராகக் கூறி விடுவாளே தவிர, இப்படி ஓடி ஒளிபவள் இல்லை" என்று கூறும் போதே அவருக்குக் கண்ணீர் வந்து விட்டது.​

இன்ஸ்பெக்டர் "சரி சார், இப்படிக் கேள்வி கேட்பது என்னுடைய கடமை. நீங்கள் சற்று நேரம் வெளியே காத்திருங்கள்" என்றார்.​

பிரியாவை, சேகர் அவருடைய காரில் டிரைவருடன் வீட்டிற்கு அனுப்பி வைத்தார். கீதாவும், தர்ஷனுக்கு அழைத்து கேட்டுக் கொண்டே இருந்தார். வருணும், ராகவனும் சென்னையில் இருந்து விமானத்தில் கிளம்பி வந்து விட்டனர்.​

இவர்கள் இங்கே காத்துக் கொண்டிருக்கும் போது உள்ளே இன்ஸ்பெக்டருக்கு ஒரு போன் வந்தது. அவர் மிகுந்த பணிவுடன், அந்த பக்கம் சொல்வதை சிரத்தையாகக் கேட்டுக் கொண்டார். பின்பு வெளியில் பெண்ணின் நிலைமையைப் பற்றி கவலையில் இருப்பவர்களை நினைத்து, அவருக்கு ஒரு பெருமூச்சு வந்தது. இருந்தும் இந்த விஷயத்தில், அவரால் இவர்களுக்கு இனி, எந்த உதவியும் கிடைக்க போவதில்லை. ஆனால் அவருக்கு இடப்பட்டக் கட்டளைக்கு இணங்க அவர் செயலாற்ற வேண்டும்.​

கான்ஸ்டபிளைக் கூப்பிட்டுத் தர்ஷனை அழைத்து வரும் படி கூறினார். அவன் வந்ததும், "உங்கள் வீட்டுப் பெரியவர்களை வீட்டிற்கு அனுப்பி விடுங்கள் சார். நாம் சில இடங்களுக்குப் போக வேண்டி இருக்கும்" என்றார்.​

அவனும் இங்கேயே இருக்கிறோம் என்ற தந்தையையும், மாமன் மார்களையும் வற்புறுத்தி வீட்டிற்கு அனுப்பி வைத்து விட்டு, இன்ஸ்பெக்டர் உடன் கிளம்பினான்.​

தன் முன் நின்றவனை முகத்தில் கேள்வி, பயம், அதிர்ச்சி, கோபம் என்று எல்லா உணர்ச்சிகளையும் காட்டி வெறித்து நோக்கிக் கொண்டிருந்தாள், விதுஷிகா.​

அவள் பார்வையை அலட்சியமாக எதிர் கொண்டான், அவன் "அரிமா துரை".​

- தொடரும்..​

 

Selvi_Saran

Moderator

செம்பருத்தி பூ 3​

திருநெல்வேலியில் கணபதி குரூப்ஸ் என்றால் தெரியாதவர்கள் இருக்க முடியாது. நூற்பு ஆலைகள்(ஸ்பின்னிங் மில்ஸ்), கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பொறியியல் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி, பேருந்துகள், பல தொழிற்சாலைகள், ஹோட்டல்கள் இன்னும் பல துறைகளில் அவர்களின் பெயர் தான் முதன்மையானது. இதன் நிறுவனர் தான் கணபதி, மனைவி இந்திராணி. கணபதியின் சிறு வயதில் அவருடைய சொந்த உழைப்பில் மட்டுமே சிறு அளவில் ஆரம்பித்த தொழில் விரிவடைந்து, தற்போது மூன்றாவது தலைமுறை அவருடைய பேரன் அரிமா துரை கடந்த ஒன்பது வருடங்களில் பல துறைகளிலும் விரிவடைய செய்துள்ளான். கணபதி தம்பதிகளுக்கு இரண்டு பிள்ளைகள். முதல் மகன் நாச்சியப்பன், இவர் மனைவி லட்சுமி. அடுத்து பெண் சரஸ்வதி, இவர் கணவர் சேகர்.

கணபதி தன் பிள்ளைகள் இருவரையும், தன்னுடன் தான் ஒரே குடும்பமாக வைத்திருக்கிறார். நாச்சியப்பனுக்கு காயத்ரி, அரிமா துரை என இரு பிள்ளைகள். காயத்ரியை மதுரையில் மணம் முடித்து கொடுத்துள்ளனர். சரஸ்வதி சேகர் தம்பதிக்கு இரு மகள்கள், தன்ஷிகா மற்றும் அனுஷா. இருவரும் படிப்பை முடித்து விட்டு வீட்டில் தான் இருக்கின்றனர்.​

அரிமா துரை வயது 29, மாநிறம், உயரம் 6 அடிக்கும் மேல், ஆனால் அவன் உருவத்தை பார்த்த யாரும் சற்று மிரண்டு தான் போவார்கள். திருமலை தூண் (திருமலை நாயக்கர் மஹாலில் இருக்கும் தூண்) என்பார் அவன் தாத்தா கணபதி. அப்படி ஒரு ஓங்கு தாங்கான உடலமைப்பு. அதில் கணபதிக்கு அப்படி ஒரு பெருமை. எங்கேயும் யாரும் அவனை எதிர்த்து ஒரு சொல் சொல்ல யோசிப்பார்கள், ஏனெனில் அவன் கோபக்காரன் மட்டுமல்லாமல், சட்டென கை நீட்டி விடுபவனும் கூட. வீட்டினர் கூட அவனுடன் நினைத்ததை உடனே பேசி விட முடியாது. குடும்ப நிகழ்வுகளை பற்றி என்றால் அவன் தாய் லக்ஷ்மியோ, பாட்டி இந்திராணியோ தான் பேச முடியும், அவர்களிடம் மட்டுமே அவன் சற்று இளக்கம் காட்டி பேசுவான். வீட்டிலேயே இருந்தாலும் தன் அத்தை மகள்களிடம் கூட தேவைக்கு மட்டுமே அளவான பேச்சு இருக்கும்.

அரிமா துரையின் அத்தை சரஸ்வதிக்கு, தன் இரு மகள்களில் ஒருவரை அவனுக்கு மணம் முடித்து விட வேண்டும் என்ற ஆசை உள்ளது. ஏனெனில் கணபதி, கூட்டுக் குடும்பமாகவே இருந்தாலும் சரஸ்வதியின் கணவர் சேகரை கணபதி குழுமத் தொழில்களில் தலையிடுவதை விரும்புவதில்லை. அவருக்குத் தனியாக, ஆலைகள் நிறுவி, அதை சரஸ்வதியின் பெயரில் பதிவு செய்து கொடுத்துள்ளார். இது போக பல சொத்துக்களையும் சரஸ்வதியின் பெயரில் வாங்கி கொடுத்துள்ளார். இன்னும் ஒரு குடும்பமாகவே இருந்தாலும், தீபாவளி, பொங்கல், சரஸ்வதி மற்றும் அவர் மகள்களின் பிறந்த நாள், இதைப்போல் சுப தினங்களில் நகைகள், விலை உயர்ந்த பரிசுகள் எல்லாம் கணபதி, நாச்சியப்பன், அரிமா துரை மூவரிடம் இருந்தும் அவர்களுக்கு கணக்கில்லாமல் கிடைக்கும்.​

இருந்தும் சரஸ்வதிக்கு ஒருவித பய உணர்வு இருந்து கொண்டு தான் இருக்கிறது. அரிமா துரைக்கு வெளியில் இருந்து பெண் எடுத்தால், இப்போது போல் தன்னால் இந்த வீட்டில் நிரந்தரமாக தங்க முடியாது என்று, அவர் மனதில் எப்போதும் எண்ணம் உண்டு. அதனால் அவர் தன் அன்னையிடம், அவர் மூத்த மகள் தன்ஷிகாவை அரிமாவுக்கு கொடுக்க வேண்டும் என்று கேட்டு கொண்டிருப்பார். இந்திராணிக்கும் மகளின் ஆசையில் தவறு இருப்பது போல் தெரியவில்லை. அதனால் அவரும் சரஸ்வதியின் எண்ணத்தை மாற்ற முயலவில்லை. ஆனால் இருவரும் மறந்தது அரிமா துரையின் மனதை, விருப்பத்தை.​

அன்று அரிமா துரையின் பிறந்த நாள். நெல்லையின் பெருமையான நெல்லையப்பர் கோவிலில் சிறப்பு பூஜை, அன்னதானம் போன்றவை அவனுடைய ஒவ்வொரு பிறந்த நாளின் போதும் நடைபெறும். நாச்சியப்பன் தான் கோவில் தலைவர் பொறுப்பில் இருக்கிறார். ஆனாலும் அரிமா துரை அப்பாவின் பொறுப்புகளில் முடிந்த வரை உறுதுணையாக இருக்கிறான்.​

கணபதி இல்லத்தில் காலை உணவுக்கு அனைவரும் டைனிங் டேபிளில் அமர்ந்திருந்தனர். அது ஒரு அரண்மனை போன்ற தோற்றமுடைய வீடு. வெளியில் இருந்து பார்ப்பதற்கு பழமையும், கம்பீரமுமாக இருக்கும் மூன்று தளங்களையுடைய நவீன வசதிகளை கொண்ட வீடு அது.​

மாடிப்படியில் இருந்து இறங்கி வந்து கொண்டிருந்தான் அரிமா துரை. பார்ப்பதற்கு அரசன் போன்ற கம்பீரமான தோற்றத்தில் இருந்தான், வேஷ்டியை ஒரு கையிலும், செல்போனை ஒரு காதில் வைத்து கொண்டு நடந்து வந்தவனை குடும்பம் மொத்தமும் மெய் மறந்து பார்த்து கொண்டிருந்தது. தன்ஷிகா, அனுஷாவை பற்றி சொல்லவே வேண்டாம், இமைக்கவும் மறந்து போய் பார்த்தவாறே இருந்தனர்.​

வந்தவன் நேராக கணபதியிடம், "தாத்தா, நீங்களும் பாட்டியும் என்னை ஆசீர்வாதம் பண்ணுங்க" என்றான்.​

கணபதி "ராணி, இங்கே வா" என்றார். ஆம், கணபதி தன் மனைவியை ராணி என்றே அழைப்பார்.​

இருவரும் சேர்ந்து நிற்கவும், அரிமா அவர்கள் காலில் விழுந்து வணங்கினான். லட்சுமி பூஜை அறைக்கு சென்று திருநீறு கிண்ணத்தை கொண்டு வந்து மாமனார், மாமியாரிடம் நீட்டினார். கணபதி ஆசீர்வாதம் செய்து, அவனுக்கு திருநீறு பூசி விட்டார். அதை தொடர்ந்து அனைவரும் அவனுக்கு வாழ்த்து தெரிவித்தனர். அனைவருக்கும் சிறு தலை அசைப்பும், ஒரு வார்த்தை நன்றியும் மட்டுமே கூறினான். லட்சுமிக்கு சிறு பெருமூச்சு வெளிப்பட்டது. ஏனெனில் அவரிடமும் அவன் அதே தலை அசைப்பை மட்டுமே கொடுத்தான்.​

தன்ஷிகா "என்ன அனு, இந்த அத்தான், வாழ்த்து கூறினால் கூட சிரிக்கவில்லை. இப்படி இருந்தால் எப்படி எங்கள் கல்யாணம் நடக்கும்?" என்று முணுமுணுத்தாள் அனுஷாவிடம்.​

அனுஷா "அக்கா, உன்னால் முடியா விட்டால் என்னிடம் விட்டு விடு. நான் அத்தானை கட்டிக் கொள்கிறேன்". என்றாள்.​

"ம்க்கும், அதற்கு வேறு ஆளைப் பார். அத்தான் எனக்குத் தான்".​

"நீயே வைத்துக் கொள். அதைப்பற்றி எனக்கு கவலை இல்லை. ஆனால் நம் இருவருக்கும் இல்லாமல் போய் விட கூடாது. அதை மட்டும் கவனித்துக் கொள்."​

"சரி அனு. இனி பார் என்னுடைய செயல்திறனை".​

"பார்ப்போம்".​

உணவு முடிந்ததும் அனைவரும் கோவிலுக்கு கிளம்பினர். அரிமாவின் காரில் தாத்தா, பாட்டியை அழைத்து சென்றான். சரஸ்வதி, சேகர், தன்ஷிகா, அனுஷா ஒரு காரில் ஏறிக் கொண்டனர். நாச்சியப்பன், லட்சுமி தம்பதி தனி காரில் சென்றனர். கோவிலில் இவர்கள் குடும்பத்திற்கு சிறப்பான வரவேற்பு கோவில் நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.​

முதலில் நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் சன்னதிக்கு சென்று, ஏற்கனவே ஏற்பாடு செய்திருந்த சிறப்பு பூஜையில் அனைவரும் கலந்து கொண்டனர். அன்று முகூர்த்த நாள் வேறு. எனவே கோவிலில் கூட்டம் சற்று அதிகமாகவே இருந்தது.​

பூஜை முடிந்து அவர்கள் அரிமாவிற்கு மரியாதை செய்து மாலை அணிவித்தனர். அந்த நேரத்தில் தான் அரிமா துரை அவளை பார்த்தான். பார்த்ததும் உலகம் மறந்தது அவனுக்கு. பால் போன்ற நிறம், மாசு மருவற்ற ஒளி பொருந்திய முகம். அதிலும் அவள் கண்கள், அந்த கண்களை விட்டு அவனால் பார்வையை அகற்ற முடியவில்லை. ஆம், அவள் விதுஷிகா தான்.​

அன்று அவள் உடன் பணிபுரியும் தோழி ஒருத்தியின் திருமணம். அன்று ஞாயிற்றுக்கிழமை வேறு, அதனால் அவள் வங்கியில் அனைவரும் மினி வேன் ஒன்றில் தூத்துக்குடியில் இருந்து திருநெல்வேலி வந்திருந்தனர். திருமணம் முடிந்ததும் மணமக்கள் மற்றும் அவர்கள் வீட்டார்கள் மண்டபத்திற்கு சென்று விட்டனர். விதுஷி மற்றும் அவளுடன் வந்தவர்கள் நெல்லையப்பரை தரிசிக்க சென்றனர்.​

விதுஷி அன்று பச்சை வண்ண பட்டுப்புடவையில், குடை ஜிமிக்கி, கழுத்தை ஒட்டிய மரகதக்கல் பதித்த அட்டிகை, மல்லிகைப்பூ சூடி தேவதை போல் இருந்தாள். அவள் பால் வண்ண மேனிக்கு அன்று அந்த அலங்காரம் மிகப் பொருத்தமாக இருந்தது. அரிமா தான் அவளை பார்த்தான், அவள் அவனை கவனிக்க கூட இல்லை. அவள் தன் உடன் பணிபுரியும் மற்றொரு தோழியிடம் பேசிக் கொண்டிருந்தாள்.​

அரிமாவின் குடும்பம் கருவறை மண்டபத்தில் இருந்து வெளியேறினர். அரிமா மனமே இல்லாமல் தான் அங்கிருந்து சென்றான். அதன் பிறகு மற்ற பக்தர்களோடு விதுஷியும், அவளோடு உடன் வந்தவர்களும் சுவாமியை வணங்கி விட்டு கோவில் உட்பிரகாரத்திற்குள் நடக்கத் தொடங்கினார்கள்.​

கோவில் வெளிப்பிரகாரத்தில் நாச்சியப்பன், அரிமா துரை மற்றும் கோவில் நிர்வாகிகள் சிலர் பேசிக் கொண்டிருந்தார்கள். இந்திராணி, குடும்பத்தில் பெண்கள் அனைவருடனும் அன்னதான மண்டபத்திற்கு சென்று விட்டார். சேகர் அவருக்கு மில்லில் வேலை இருப்பதால், பிறகு வருவதாக கூறி சென்று விட்டார். கணபதி கோவில் அலுவலக அறைக்குச் சென்று அவர் வயதினர் சிலருடன் பேசிக் கொண்டிருந்தார். கோவில் வெளிப் பிரகாரத்தில் ஒரு தூணில், கோவில் யானை கட்டப்பட்டிருந்தது.​

அப்போது கோவில் செயலாளர் அரிமாவிடம், "தம்பி, பிறந்த நாள் அன்று கஜேந்திரனிடம் (யானையின் பெயர்) ஆசீர்வாதம் வாங்கி கொள்ளுங்கள்" என்றார்.​

நாச்சியப்பனும், "ஆமாம் அரி, காலையிலேயே தாத்தா உன்னை கஜேந்திரனிடம் கூட்டிப்போக சொன்னார்." என்றார்.​

அரிமா "சரிப்பா" என்று கஜேந்திரனிடம் சென்றான்.​

அவன் யானை முன் குனிந்து ஆசீர்வாதம் வாங்கும் போது தான், விதுஷி அரிமாவை முதன் முதலில் பார்த்தாள். பார்த்ததும் அவளுக்கு தோன்றியது, இவனுக்கும் யானைக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்பது தான். ஏனெனில் அரிமாவிற்கும், கஜேந்திரனிற்கும் கம்பீரத்தில் எந்த வித்தியாசமும் அவளுக்குத் தெரியவில்லை. அவர்கள் அதற்குள் யானையை சமீபித்திருந்தார்கள்.​

விதுஷியின் தோழி ராதா அவளிடம், "வா விது யானையிடம் ஆசீர்வாதம் வாங்கலாம்" என்றாள்.​

"எனக்கு பயமாக இருக்கிறது" விதுஷி.​

அரிமா இப்போது மீண்டும் விதுஷியை கண்டான். இவர்கள் அருகில் சென்று மற்றவர் கவனத்தை கவராதது போல் நின்று, விதுஷியின் பேச்சை கேட்கத் தொடங்கினான்.​

ராதா "பயப்படாதே விது, இத்தனை பேர் இருக்கிறோம் இல்லையா. இன்னும் கொஞ்சம் பக்கத்தில் சென்று பார்க்கலாம், வா" என்றாள்.​

விதுஷி, "வேண்டாம் ராது, நீ போ. நான் இங்கேயே நின்று நீ ஆசீர்வாதம் வாங்குவதை பார்க்கிறேன்".​

அரிமா மனதில் இவள் உருவத்தில் தான் பெரிய பெண் போல இருக்கிறாள். கஜேந்திரனுக்கு அருகில் செல்லக் கூட பயமா? என்று நினைத்து சிரித்துக் கொண்டான். அவனுக்குத் தன்னை நினைத்தே வியப்பாக இருந்தது. இது வரை எந்த பெண்ணையும் தேவைக்கு அதிகமாக ஒரு நொடி கூட பார்த்ததில்லை. இப்போது இவள் குரல் கேட்க, இப்படி மற்றவர் பார்வை படாமல் அவள் அருகில் நிற்க துடிப்பது, டீன் ஏஜ் பையன் போல நடந்து கொள்வது அவனுக்கே வியப்பாக இருந்தது.​

அவளைத் தன் கை வளைவில் நிறுத்தி கஜேந்திரனிடம் சென்று ஆசீர்வாதம் வாங்கும் வேகம் எழுந்தது. இதற்குப் போய் பயப்படலாமா? அதுவும் நான் அருகில் இருக்கும் போது? என்று கேட்கத் தோன்றியது. இந்த எண்ணம் தோன்றியதும் அவனுக்கு அதிர்ச்சியாகி விட்டது. அவள் யாரோ, தான் யாரோ அவளுடன் சேர்ந்து ஆசீர்வாதமா? இதற்கு என்ன அர்த்தம்? ஒரு அர்த்தம் தான் இருக்க முடியும். அவள் அவனுடையவள் என்பது தான் அது.​

ராதா விதூஷிகா வரவில்லை என்றதும், தான் மட்டும் சென்று கஜேந்திரனிடம் ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டாள். அப்போது நாச்சியப்பன் அன்னதானம் தொடங்கி வைக்க அரிமாவை அழைத்தார். இப்போது அவன் சென்று விட்டால் விதுவைப் பற்றி எப்படி தெரிந்து கொள்வது? அதுவும் அவள் கோவிலை விட்டு சென்று விட்டால் என்ன செய்வது? என்று யோசித்தான்.​

அவன் அதிர்ஷ்டத்திற்கு அவன் நண்பன் வெற்றிவேல், அங்கே அப்போது இவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தான். அவன் தான் அரிமாவின் பிஏவும் கூட.​

தந்தையிடம் "அப்பா, நீங்கள் மண்டபத்திற்கு நடந்து கொண்டிருங்கள். வெற்றியிடம் சில வேலைகளை கூறிவிட்டு, இப்போது வந்து விடுகிறேன்" என்றான்.​

அவரும் "சரி தம்பி, சீக்கிரம் வா" என்று விட்டு சென்று விட்டார்.​

வெற்றியை சற்றுத் தள்ளி அழைத்து சென்றான் அரிமா.​

வெற்றி "என்னடா, என்ன விஷயம்?"​

அரிமா "...." பதிலற்று அமைதியாக இருந்தான்.​

வெற்றி "அரிமா நீயா இது? நீ இப்படி தயங்கி இப்போது தான் பார்க்கிறேன். என்னடா விஷயம்?".​

"இல்லை வெற்றி, இது வேலை பற்றி இல்லை. அதனால் தான் தயங்குகிறேன்."​

"எதுவாக இருந்தாலும் சொல்லு அரி. நாம் பார்த்துக் கொள்ளலாம்" என்றான் நண்பனுக்கு நம்பிக்கை கொடுக்கும் விதமாக.​

அவன் சொன்னதும் இப்போது பேச்சிழந்து நிற்பது வெற்றியின் முறையானது.​

  • தொடரும்…​

 

Selvi_Saran

Moderator

செம்பருத்தி பூ 4​

கணபதி குடும்பத்தினர் அனைவரும் நெல்லையப்பர் கோவிலின் அன்னதான கூடத்தில் இருந்தனர். அரிமா துரை கையால் அன்னதானம் தொடங்கி வைக்கப்பட்டது. சற்று நேரம் நின்று விட்டு, வீட்டுப் பெண்கள், கணபதி ஆகியோரை காரில் வீட்டிற்கு அனுப்பி வைத்து விட்டார் நாச்சியப்பன்.​

அரிமாவின் போன் அடித்தது. சற்றுத் தள்ளி வந்து எடுத்துப் பார்த்தான். வெற்றிவேல் தான் அழைத்தான். சிலமணி நேரத்திற்கு முன் நண்பன் சொன்ன வேலையை வெற்றிகரமாக நிறைவேற்றி விட்டான் அவன். அந்த தகவலை கூறவே இப்போது அழைத்தது.​

சற்றுமுன் அரிமா வெற்றியிடம் விதுஷியை சுட்டிக் காட்டி "அந்தப் பெண்ணை பற்றிய தகவல்கள் வேண்டும்'' என்றான்.​

வெற்றி திகைத்துப் போய் அப்படியே நின்று விட்டான்.​

அரிமா "வெற்றி, வெற்றி" என்று இருமுறை அழைத்த பிறகு தான் வெற்றிவேல் சிலைக்கு உயிர் வந்தது.​

வெற்றி "என்ன டா சொல்ற? இது வரை நாம நிறைய கிரிமினல் வேலை எல்லாம் செஞ்சிருக்கோம் டா. ஆனா இது, அந்த கேட்டகரில வராது மச்சான்" என்றான் அழுகுரலில்.​

அரிமா "அவளை எனக்கு பிடிச்சிருக்கு வெற்றி" என்றான் ஆழ்ந்த குரலில்.​

அவனின் அந்த வார்த்தைக்கு பிறகு வெற்றி வேறு எதைப் பற்றியும் யோசிக்கவில்லை. "நீ சொல்லிட்டல்ல, இதுக்கு அப்புறம் தங்கச்சிய பத்தி நீ கவலை படாத. நா பாத்துக்குறேன்" என்றான்.​

அரிமா சென்றதும், வெற்றி விதுஷிகாவை பின் தொடர்ந்து சென்றான். விதுஷிகா, அவளுடன் வந்தவர்கள் அனைவரும் கோவிலை சுற்றி பார்த்து விட்டு, திருமண மண்டபத்திற்கு சென்று மதிய உணவை முடித்து விட்டு, வேனில் தூத்துக்குடி கிளம்பினர்.​

வெற்றி விசாரித்ததில், மணப்பெண் உடன் வங்கியில் வேலை செய்பவள் தான் விதுஷிகா என்பது தெரிந்து விட்டது. அதன் பின் வங்கிக் கிளையை தெரிந்து கொண்டு, தூத்துக்குடியில் அந்த ஏரியாவில் அவனுக்கு தெரிந்தவர்கள் மூலமாக விசாரித்தான். விதுஷிகா தூத்துக்குடியில் அவள் வீட்டிற்கு சென்று சேரும் ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே, அவளைப் பற்றிய தகவல்கள் அனைத்தும் வெற்றியின் கைக்கு வந்து சேர்ந்து விட்டது.​

வெற்றி கூறிய தகவல்களை கேட்டுக் கொண்டான் அரிமா.​

"நாளைக்கு தூத்துக்குடி போகனும் டா" என்றான் அரிமா.​

"நாளைக்கு போர்டு மீட்டிங் இருக்கிறதுடா" என்றான் வெற்றி.​

"மாலையில் தான்டா போகணும். அவள் பாங்கில் இருந்து கிளம்பும் நேரத்தை கேட்டு வை"​

"மச்சான், சூப்பர் டா" வெற்றி சந்தோசமாக கூறித் தன் வேலையை பார்க்க சென்றான்.​

அடுத்த நாள் காலை விதுஷிகாவுக்கு எப்போதும் போல் பொழுது விடிந்தது. அன்று அவளுடைய வாழ்வை மாற்றப் போகிறவனை சந்திக்கப் போகிறோம் என்று தெரியாமலே, காலை வேலைகளை செய்தாள். காலை எழுந்ததும் யோகா செய்தாள், தந்தையுடன் சேர்ந்து நியூஸ் பேப்பர் வாசித்து, அதிலிருக்கும் எகனாமிக் செய்திகளை அவருடன் விவாதித்தாள்.​

பின் குளித்து, தாயுடன் பேசி சிரித்து, சாப்பிட்டு அலுவலகம் கிளம்பினாள். பூபதிராஜ் அவருடைய பைக்கிலும், விதுஷி அவளுடைய ஸ்கூட்டியிலும் சென்றனர். திங்கள் கிழமை என்பதால் பேங்க் வழக்கம் போல் பரபரப்பாக இருந்தது, வேலை முடிய வழக்கம் போல் ஐந்தரை மணிக்கு, அந்த வளாகத்தை விட்டு வெளியேறினாள்.​

அவள் ஸ்கூட்டி அருகில் வந்து, தன்னுடைய ஹாண்ட்பாகில் இருக்கும் சாவியைத் தேடினாள். அப்போது அவளுக்குப் பின்னால் ஒரு குரல் கேட்டது.​

"விதுஷிகா"​

அந்த குரலில் இருந்த ஆளுமையிலும், ஆண்மையிலும் விதுஷி சற்று திடுக்கிட்டுத் திரும்பினாள். இது....? இவர்....? அவள் சற்று யோசித்ததுமே அவளுக்கு அவனை நியாபகம் வந்து விட்டது. நேற்று கோவிலில் யானையிடம் ஆசீர்வாதம் வாங்கியவன். ஆனால் தன்னிடம் இவனுக்கு என்ன வேலை? அதிலும் தன் பெயர் கூட இவனுக்கு தெரிந்திருக்கிறது. எப்படி? அவள் முகத்தில் குழப்ப ரேகைகளை கண்டான் அரிமா.​

"என் பெயர் அரிமா துரை". என்றான்.​

அவள் இபோதும் எதுவும் பேசவில்லை. அமைதியாகவே நின்றாள்.​

"விதுஷிகா?" என்றான் அரிமா கேள்வியாக.​

அவளுக்கு அவன் உருவமும், குரலுமே சற்று மிரட்சியைக் கொடுத்து விட்டது. தன்னை நினைத்தே வெட்கியவளாக, "சொல்லுங்க சார், என்ன விஷயம்? என்னை உங்களுக்கு எப்படித் தெரியும்? என்றாள் முடிந்த வரை நிதானமாக.​

அவளை அவதானித்த படியே," எனக்கு உன்னிடம் ஒரு பத்து நிமிடங்கள் பேச வேண்டும்" என்றான்.​

"உங்களை எனக்குத் தெரியாது. நான் ஏன் உங்களுடன் பேச வேண்டும்? நான் கிளம்பப் போகிறேன்" என்றவாறு மீண்டும் பாகினுள் சாவியை தேடினாள்.​

"இதையா தேடுகிறாய்?" என்றவாறு அவளுடைய ஸ்கூட்டி சாவியை அவள் முகத்திற்கு நேரே ஆட்டி காண்பித்தான். "நான் பேச நினைத்ததை, நீ கேட்காமல் இங்கிருந்து செல்ல முடியாது" என்றான் திமிராகவே.​

அரிமா அவளிடம் இப்படி பேச நினைத்து வரவில்லை. ஆனால், அவள் அங்கிருந்து உடனே சென்று விட கூடாது என்று, மதியமே அவளுடைய ஸ்கூட்டி சாவியை கைப்பற்றி வைத்திருந்தான். ஆனால் இதுவரை மறுப்பையம், எதிர்ப்பையும் சந்திக்காதவனால், அவளுடைய சிறு மறுப்பை கூட பொறுக்க முடியாமல் அவனுடைய இயல்பான திமிர் வெளி வந்து விட்டது.​

விதுஷிகா அவசரமாக யோசித்தாள். இப்போது அவள் இங்கிருந்து செல்ல வேண்டுமானால் அவளுடைய சாவி வேண்டும். அது கூட வேண்டாம், நடந்து சென்று விடலாம் என்றாலும், இந்த பீமசேனனை மீறி இங்கிருந்து செல்வது கடினம். ஏனெனில் அவளுடைய வங்கி, தனி காம்பௌண்டிற்குள் அமைந்திருந்தது. செக்யூரிட்டி கூட இப்போது வாசலில் இல்லை, வங்கி பூட்டப் போகும் நேரம் என்பதால் அவர் மேனேஜருடன் சேர்ந்து, லாக்கர் அறையை பூட்டுவதற்கு உதவிக் கொண்டிருப்பார். அதனால் அவன் என்ன சொல்ல வருகிறான் என்று கேட்டு விட முடிவு செய்தாள்.​

"சொல்லுங்கள், என்ன பேச வேண்டும்? எதுவாக இருந்தாலும் என்னை நீ, வா என்று மரியாதை இல்லாமல் பேசாதீர்கள்" என்றாள் விதுஷி.​

"அதை இப்படி நடு வழியில் நின்று கொண்டு பேச முடியாது. எதிரில் இருக்கும் காபி ஷாப்பில் அமர்ந்து பேசலாம். அடுத்த விஷயம் உன்னை, நீ என்று சொல்ல தான் என்னால் முடியும். அதை மாற்றிக் கொள்கிற விருப்பம் எனக்கில்லை. என்ன? போகலாமா?"​

முகம் கடுகடுக்க பதில் சொல்லாமல் முன்னால் திரும்பி நடந்தாள், விதுஷி. அவனும் தோளை குலுக்கி விட்டு அவள் பின்னால் சென்றான். ஒரு டேபிளில் இருவரும் அமர்ந்தனர்.​

"காபி ஓர் டீ?" என்று கேட்டான் அரிமா.​

"நான் எதுவும் குடிக்க வரவில்லை"​

அவள் பேசவே இல்லாதது போல பாவித்து, வெயிட்டரை அழைத்து இரண்டு காபிக்குச் சொன்னான்.​

பின் அவள் விழிகளை நேராக சந்தித்து, "எனக்கு உன்னைப் பிடித்திருக்கிறது விது. உன்னை திருமணம் செய்து கொள்ள ஆசைப் படுகிறேன்" என்றான் அரிமா ஆழ்ந்த குரலில்.​

விதுஷி சற்று நேரம் பேச்சு வராமல், மூளை மரத்துப் போய் அமர்ந்திருந்தாள். அவள் சுதாரிக்க சற்று அவகாசம் கொடுத்து, அரிமா அமைதியாக அவள் முகத்தையே பார்த்தவாறு அமர்ந்திருந்தான். அவள் அசைவதாகக் காணோம். அதற்குள் வெயிட்டர் வந்து காபி வைத்துவிட்டு சென்றார். அந்த அசைவில் தான் விதுஷி தெளிந்தாள்.​

ஒரு பெரிய மூச்சை எடுத்துவிட்டு பேச ஆரம்பித்தாள். "நான்.."​

அவள் தொடங்குமுன் அரிமா, "வேண்டாம், முதலில் காபியை குடி. அப்புறம் பேசலாம்" என்று தடுத்தான்.​

காபி காலியாகும் வரை இருவரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. பின்பும் அரிமாவே தொடங்கினான்.​

"நான் என்னைப் பற்றி கூறி முடித்த பிறகு, உன் பதிலை சொல்" என்று தொடங்கி தன்னுடைய குடும்பம், தொழில்கள், தன் குணம், விருப்பு வெறுப்பு, இத்தனை நாள் பெண்களிடம் விருப்பமற்று இருந்தது எல்லாவற்றையும் கூறி, அவளைப் பார்த்து பிடித்தது, விசாரித்தது எல்லாம் கூறி முடித்தான்.​

அவன் பேசும்போதே விதுஷியின் மூளை அவசர ஆலோசனை நடத்தியது. அவளுக்கு கணபதி குரூப்ஸ் அதன் செல்வாக்கு எல்லாமே நன்றாகவே தெரியும். அவள் பாங்கில் வேலை செய்வதால் பெரிய நிறுவனங்கள் அவற்றின் பங்குகள் எல்லாமே அவளுக்கு அத்துப்படி. அப்படிப் பார்த்தால், கணபதி குரூப்ஸ் தென்னிந்தியாவின் முதல் ஐந்து நிறுவனங்களில் ஒன்று. அதற்கு ஒற்றை வாரிசு என்றால் இவனை எதிர்ப்பது அவளால், அவள் குடும்பத்தால் நினைத்துக் கூட பார்க்க முடியாத ஒன்று. ஆனால் இவன் உடல்மொழி, உருவம், நிறம், குரல் முக்கியமாக அவனுடைய கர்வம், திமிர், கோபம் எதுவும் அவள் மென்மையான குணத்திற்கு சற்றும் பொருந்தாது. அவளைப் பொறுத்தவரை திருமணம் என்பது, ஒத்த குணங்களையுடைய இருவர் வாழ்க்கை முழுக்க ஒன்றாக பயணம் செய்வது தான். இதில் இவளும் அரிமாவும், வெவ்வேறு துருவங்கள்.​

இவனிடம் அவளுடைய சிறு மறுப்பு ஏற்படுத்திய மாற்றத்தை நேரிலேயே இப்போது தான் கண்டாள். பேச மறுத்து விடுவாள் என்ற சந்தேகித்ததற்கே சாவியை கைப்பற்றி வைத்திருக்கிறான். இவனிடம், இவனையே மறுத்தால், நிச்சயம் இங்கிருந்து தான் உருப்படியாக வீட்டிற்கு செல்ல முடியாது என்பது அவளுக்கு புரிந்தது.​

எனவே "எனக்கு இப்போது திருமணத்தைப் பற்றிய எண்ணமே இல்லை'' என்றாள் விதுஷிகா.​

"ஏன்?" ஒற்றை வார்த்தை கூர்மையாக வந்தது அரிமாவிடமிருந்து.​

"இதுவரை திருமணத்தைப் பற்றி யோசித்தது இல்லை. வீட்டிலும் யாரும் அதைப்பற்றி பேசியதில்லை. அதனால் எனக்கும் தோன்றவில்லை."​

"இருக்கட்டும். இப்போது தான் உனக்கு இருபத்து மூன்று ஆகிறதே. இது திருமணத்திற்கு பொருத்தமான வயது தான். யோசித்துப் பார்" என்றான் அதிகாரமாக.​

விதுஷிகா மனதில் அவனை வறுத்து எடுத்தாள். இவனைப் போய் கஜேந்திரனை மாதிரி கம்பீரம் என்று நினைத்தேனே. ச்சை, இவன் ஒரு காண்டாமிருகம், அப்புறம்... இவனைத் திட்ட கூட ஒரு வார்த்தை அவசரத்திற்கு கிடைக்கவில்லையே…​

"ம்க்கும்.." அரிமா சற்று செருமி அவளை நடப்புக்கு அழைத்தான்.​

நல்லவேளை ஒருவர் மனதில் நினைப்பது இன்னொருவருக்கு தெரியாமல் இருப்பது எவ்வளவு நல்லது. முகத்தை சாதுவாக வைத்துக் கொண்டு "நான்.. நாளைக்கு பதில் சொல்லட்டுமா?" பணிவு போல் கேட்டாள்.​

அரிமாவின் முகம் சற்றுத் தெளிந்தது. "சரி விது, நீ நாளைக்கே பதில் சொல்" என்றான் அவன்.​

"என்னை விது என்று கூப்பிடாதீர்கள், ப்ளீஸ்."​

"எனக்கு இப்போதைக்கு அப்படி கூப்பிடுவது தான் பிடிக்கிறது. கல்யாணத்திற்கு பிறகு உனக்கு பிடிக்கிற மாதிரி சொல். மாற்றிக் கொள்கிறேன்"​

தன் பேச்சில் தன்னைத் தானே நொந்து கொண்டு அவனிடம் சொல்லிவிட்டு சாவியையும் வாங்கிக் கொண்டு கிளம்பி விட்டாள் விதுஷிகா.​

செல்லும் அவளையே பார்த்துக் கொண்டு சற்றுநேரம் நின்று விட்டு தன்னுடைய காருக்கு சென்றான் அரிமா துரை. காரில் அமர்ந்து இங்கே நடப்பதை கவனித்துக் கொண்டிருந்தான் வெற்றி வேல்.​

அரிமா காரில் ஏறியதும் வெற்றி "மச்சான், தங்கச்சி என்னடா சொல்லுச்சு?" என்றான்.​

"அவள் நாளைக்கு பதில் சொல்லுகிறாளாம்டா மாப்பு" அரிமா நல்ல மனநிலையில் இருந்தால் தான் இப்படிப்பட்ட வார்த்தை எல்லாம் வரும்.​

அவன் உற்சாகம் வெற்றிக்கும் தொற்றிக் கொண்டது. அவன் உடனே "நாளைக்கு தங்கச்சி நல்ல பதில் தான்டா சொல்லும். எனக்கு வைரமாளிகை ஹோட்டலில் ட்ரீட் வேணும் டா" என்றான்.​

"அது என்ன டா நாளைக்கு, இப்போவே போகலாம்டா" என்றான் அரிமா.​

வீட்டிற்கு சென்ற விதுஷிகா மிகுந்த மனஉளைச்சலில் இருந்தாள். கவனித்துக் கேட்ட தாயிடமும் தலைவலி என்று பொய் கூறி விட்டு, அறைக்குள் சென்று முடங்கிக் கொண்டாள்.​

அவனை எப்படி சமாளிப்பது? வீட்டில் சொல்லி விடலாமா? அவனுடைய செல்வ நிலைக்கும், செல்வாக்கிற்கும் தன் குடும்பத்தின் அனுமதியோ, தன்னுடைய அனுமதியோ கூட அவனுக்குத் தேவைப் படாது. அதனால் வீட்டில் சொல்லுவதால் அவர்களையும் கவலைப்பட வைப்பதைத் தவிர வேறு ஒன்றும் நடக்காது. அதனால் வீட்டில் சொல்ல கூடாது என்று முடிவு செய்து கொண்டாள்.​

நேர்மையாக இருந்தால், நிச்சயம் அவனிடம் இருந்து தப்ப முடியாது. பலவாறு யோசித்து அவனிடம் பொய் கூறினால் மட்டுமே, தன்னால் இந்த பிரச்சினையிலிருந்து வெளிவர முடியும் என்று தோன்றியது அவளுக்கு. என்ன சொல்வது? எப்படி சொல்வது? என்று யோசித்து முடிவு செய்த பிறகு நள்ளிரவுக்கு மேல் ஒரு வழியாக தூங்கத் தொடங்கினாள் விதுஷி.​

- தொடரும்…​

 

Selvi_Saran

Moderator

செம்பருத்தி பூ 4​

கணபதி குடும்பத்தினர் அனைவரும் நெல்லையப்பர் கோவிலின் அன்னதான கூடத்தில் இருந்தனர். அரிமா துரை கையால் அன்னதானம் தொடங்கி வைக்கப்பட்டது. சற்று நேரம் நின்று விட்டு, வீட்டுப் பெண்கள், கணபதி ஆகியோரை காரில் வீட்டிற்கு அனுப்பி வைத்து விட்டார் நாச்சியப்பன்.​

அரிமாவின் போன் அடித்தது. சற்றுத் தள்ளி வந்து எடுத்துப் பார்த்தான். வெற்றிவேல் தான் அழைத்தான். சிலமணி நேரத்திற்கு முன் நண்பன் சொன்ன வேலையை வெற்றிகரமாக நிறைவேற்றி விட்டான் அவன். அந்த தகவலை கூறவே இப்போது அழைத்தது.​

சற்றுமுன் அரிமா வெற்றியிடம் விதுஷியை சுட்டிக் காட்டி "அந்தப் பெண்ணை பற்றிய தகவல்கள் வேண்டும்'' என்றான்.​

வெற்றி திகைத்துப் போய் அப்படியே நின்று விட்டான்.​

அரிமா "வெற்றி, வெற்றி" என்று இருமுறை அழைத்த பிறகு தான் வெற்றிவேல் சிலைக்கு உயிர் வந்தது.​

வெற்றி "என்ன டா சொல்ற? இது வரை நாம நிறைய கிரிமினல் வேலை எல்லாம் செஞ்சிருக்கோம் டா. ஆனா இது, அந்த கேட்டகரில வராது மச்சான்" என்றான் அழுகுரலில்.​

அரிமா "அவளை எனக்கு பிடிச்சிருக்கு வெற்றி" என்றான் ஆழ்ந்த குரலில்.​

அவனின் அந்த வார்த்தைக்கு பிறகு வெற்றி வேறு எதைப் பற்றியும் யோசிக்கவில்லை. "நீ சொல்லிட்டல்ல, இதுக்கு அப்புறம் தங்கச்சிய பத்தி நீ கவலை படாத. நா பாத்துக்குறேன்" என்றான்.​

அரிமா சென்றதும், வெற்றி விதுஷிகாவை பின் தொடர்ந்து சென்றான். விதுஷிகா, அவளுடன் வந்தவர்கள் அனைவரும் கோவிலை சுற்றி பார்த்து விட்டு, திருமண மண்டபத்திற்கு சென்று மதிய உணவை முடித்து விட்டு, வேனில் தூத்துக்குடி கிளம்பினர்.​

வெற்றி விசாரித்ததில், மணப்பெண் உடன் வங்கியில் வேலை செய்பவள் தான் விதுஷிகா என்பது தெரிந்து விட்டது. அதன் பின் வங்கிக் கிளையை தெரிந்து கொண்டு, தூத்துக்குடியில் அந்த ஏரியாவில் அவனுக்கு தெரிந்தவர்கள் மூலமாக விசாரித்தான். விதுஷிகா தூத்துக்குடியில் அவள் வீட்டிற்கு சென்று சேரும் ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே, அவளைப் பற்றிய தகவல்கள் அனைத்தும் வெற்றியின் கைக்கு வந்து சேர்ந்து விட்டது.​

வெற்றி கூறிய தகவல்களை கேட்டுக் கொண்டான் அரிமா.​

"நாளைக்கு தூத்துக்குடி போகனும் டா" என்றான் அரிமா.​

"நாளைக்கு போர்டு மீட்டிங் இருக்கிறதுடா" என்றான் வெற்றி.​

"மாலையில் தான்டா போகணும். அவள் பாங்கில் இருந்து கிளம்பும் நேரத்தை கேட்டு வை"​

"மச்சான், சூப்பர் டா" வெற்றி சந்தோசமாக கூறித் தன் வேலையை பார்க்க சென்றான்.​

அடுத்த நாள் காலை விதுஷிகாவுக்கு எப்போதும் போல் பொழுது விடிந்தது. அன்று அவளுடைய வாழ்வை மாற்றப் போகிறவனை சந்திக்கப் போகிறோம் என்று தெரியாமலே, காலை வேலைகளை செய்தாள். காலை எழுந்ததும் யோகா செய்தாள், தந்தையுடன் சேர்ந்து நியூஸ் பேப்பர் வாசித்து, அதிலிருக்கும் எகனாமிக் செய்திகளை அவருடன் விவாதித்தாள்.​

பின் குளித்து, தாயுடன் பேசி சிரித்து, சாப்பிட்டு அலுவலகம் கிளம்பினாள். பூபதிராஜ் அவருடைய பைக்கிலும், விதுஷி அவளுடைய ஸ்கூட்டியிலும் சென்றனர். திங்கள் கிழமை என்பதால் பேங்க் வழக்கம் போல் பரபரப்பாக இருந்தது, வேலை முடிய வழக்கம் போல் ஐந்தரை மணிக்கு, அந்த வளாகத்தை விட்டு வெளியேறினாள்.​

அவள் ஸ்கூட்டி அருகில் வந்து, தன்னுடைய ஹாண்ட்பாகில் இருக்கும் சாவியைத் தேடினாள். அப்போது அவளுக்குப் பின்னால் ஒரு குரல் கேட்டது.​

"விதுஷிகா"​

அந்த குரலில் இருந்த ஆளுமையிலும், ஆண்மையிலும் விதுஷி சற்று திடுக்கிட்டுத் திரும்பினாள். இது....? இவர்....? அவள் சற்று யோசித்ததுமே அவளுக்கு அவனை நியாபகம் வந்து விட்டது. நேற்று கோவிலில் யானையிடம் ஆசீர்வாதம் வாங்கியவன். ஆனால் தன்னிடம் இவனுக்கு என்ன வேலை? அதிலும் தன் பெயர் கூட இவனுக்கு தெரிந்திருக்கிறது. எப்படி? அவள் முகத்தில் குழப்ப ரேகைகளை கண்டான் அரிமா.​

"என் பெயர் அரிமா துரை". என்றான்.​

அவள் இபோதும் எதுவும் பேசவில்லை. அமைதியாகவே நின்றாள்.​

"விதுஷிகா?" என்றான் அரிமா கேள்வியாக.​

அவளுக்கு அவன் உருவமும், குரலுமே சற்று மிரட்சியைக் கொடுத்து விட்டது. தன்னை நினைத்தே வெட்கியவளாக, "சொல்லுங்க சார், என்ன விஷயம்? என்னை உங்களுக்கு எப்படித் தெரியும்? என்றாள் முடிந்த வரை நிதானமாக.​

அவளை அவதானித்த படியே," எனக்கு உன்னிடம் ஒரு பத்து நிமிடங்கள் பேச வேண்டும்" என்றான்.​

"உங்களை எனக்குத் தெரியாது. நான் ஏன் உங்களுடன் பேச வேண்டும்? நான் கிளம்பப் போகிறேன்" என்றவாறு மீண்டும் பாகினுள் சாவியை தேடினாள்.​

"இதையா தேடுகிறாய்?" என்றவாறு அவளுடைய ஸ்கூட்டி சாவியை அவள் முகத்திற்கு நேரே ஆட்டி காண்பித்தான். "நான் பேச நினைத்ததை, நீ கேட்காமல் இங்கிருந்து செல்ல முடியாது" என்றான் திமிராகவே.​

அரிமா அவளிடம் இப்படி பேச நினைத்து வரவில்லை. ஆனால், அவள் அங்கிருந்து உடனே சென்று விட கூடாது என்று, மதியமே அவளுடைய ஸ்கூட்டி சாவியை கைப்பற்றி வைத்திருந்தான். ஆனால் இதுவரை மறுப்பையம், எதிர்ப்பையும் சந்திக்காதவனால், அவளுடைய சிறு மறுப்பை கூட பொறுக்க முடியாமல் அவனுடைய இயல்பான திமிர் வெளி வந்து விட்டது.​

விதுஷிகா அவசரமாக யோசித்தாள். இப்போது அவள் இங்கிருந்து செல்ல வேண்டுமானால் அவளுடைய சாவி வேண்டும். அது கூட வேண்டாம், நடந்து சென்று விடலாம் என்றாலும், இந்த பீமசேனனை மீறி இங்கிருந்து செல்வது கடினம். ஏனெனில் அவளுடைய வங்கி, தனி காம்பௌண்டிற்குள் அமைந்திருந்தது. செக்யூரிட்டி கூட இப்போது வாசலில் இல்லை, வங்கி பூட்டப் போகும் நேரம் என்பதால் அவர் மேனேஜருடன் சேர்ந்து, லாக்கர் அறையை பூட்டுவதற்கு உதவிக் கொண்டிருப்பார். அதனால் அவன் என்ன சொல்ல வருகிறான் என்று கேட்டு விட முடிவு செய்தாள்.​

"சொல்லுங்கள், என்ன பேச வேண்டும்? எதுவாக இருந்தாலும் என்னை நீ, வா என்று மரியாதை இல்லாமல் பேசாதீர்கள்" என்றாள் விதுஷி.​

"அதை இப்படி நடு வழியில் நின்று கொண்டு பேச முடியாது. எதிரில் இருக்கும் காபி ஷாப்பில் அமர்ந்து பேசலாம். அடுத்த விஷயம் உன்னை, நீ என்று சொல்ல தான் என்னால் முடியும். அதை மாற்றிக் கொள்கிற விருப்பம் எனக்கில்லை. என்ன? போகலாமா?"​

முகம் கடுகடுக்க பதில் சொல்லாமல் முன்னால் திரும்பி நடந்தாள், விதுஷி. அவனும் தோளை குலுக்கி விட்டு அவள் பின்னால் சென்றான். ஒரு டேபிளில் இருவரும் அமர்ந்தனர்.​

"காபி ஓர் டீ?" என்று கேட்டான் அரிமா.​

"நான் எதுவும் குடிக்க வரவில்லை"​

அவள் பேசவே இல்லாதது போல பாவித்து, வெயிட்டரை அழைத்து இரண்டு காபிக்குச் சொன்னான்.​

பின் அவள் விழிகளை நேராக சந்தித்து, "எனக்கு உன்னைப் பிடித்திருக்கிறது விது. உன்னை திருமணம் செய்து கொள்ள ஆசைப் படுகிறேன்" என்றான் அரிமா ஆழ்ந்த குரலில்.​

விதுஷி சற்று நேரம் பேச்சு வராமல், மூளை மரத்துப் போய் அமர்ந்திருந்தாள். அவள் சுதாரிக்க சற்று அவகாசம் கொடுத்து, அரிமா அமைதியாக அவள் முகத்தையே பார்த்தவாறு அமர்ந்திருந்தான். அவள் அசைவதாகக் காணோம். அதற்குள் வெயிட்டர் வந்து காபி வைத்துவிட்டு சென்றார். அந்த அசைவில் தான் விதுஷி தெளிந்தாள்.​

ஒரு பெரிய மூச்சை எடுத்துவிட்டு பேச ஆரம்பித்தாள். "நான்.."​

அவள் தொடங்குமுன் அரிமா, "வேண்டாம், முதலில் காபியை குடி. அப்புறம் பேசலாம்" என்று தடுத்தான்.​

காபி காலியாகும் வரை இருவரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. பின்பும் அரிமாவே தொடங்கினான்.​

"நான் என்னைப் பற்றி கூறி முடித்த பிறகு, உன் பதிலை சொல்" என்று தொடங்கி தன்னுடைய குடும்பம், தொழில்கள், தன் குணம், விருப்பு வெறுப்பு, இத்தனை நாள் பெண்களிடம் விருப்பமற்று இருந்தது எல்லாவற்றையும் கூறி, அவளைப் பார்த்து பிடித்தது, விசாரித்தது எல்லாம் கூறி முடித்தான்.​

அவன் பேசும்போதே விதுஷியின் மூளை அவசர ஆலோசனை நடத்தியது. அவளுக்கு கணபதி குரூப்ஸ் அதன் செல்வாக்கு எல்லாமே நன்றாகவே தெரியும். அவள் பாங்கில் வேலை செய்வதால் பெரிய நிறுவனங்கள் அவற்றின் பங்குகள் எல்லாமே அவளுக்கு அத்துப்படி. அப்படிப் பார்த்தால், கணபதி குரூப்ஸ் தென்னிந்தியாவின் முதல் ஐந்து நிறுவனங்களில் ஒன்று. அதற்கு ஒற்றை வாரிசு என்றால் இவனை எதிர்ப்பது அவளால், அவள் குடும்பத்தால் நினைத்துக் கூட பார்க்க முடியாத ஒன்று. ஆனால் இவன் உடல்மொழி, உருவம், நிறம், குரல் முக்கியமாக அவனுடைய கர்வம், திமிர், கோபம் எதுவும் அவள் மென்மையான குணத்திற்கு சற்றும் பொருந்தாது. அவளைப் பொறுத்தவரை திருமணம் என்பது, ஒத்த குணங்களையுடைய இருவர் வாழ்க்கை முழுக்க ஒன்றாக பயணம் செய்வது தான். இதில் இவளும் அரிமாவும், வெவ்வேறு துருவங்கள்.​

இவனிடம் அவளுடைய சிறு மறுப்பு ஏற்படுத்திய மாற்றத்தை நேரிலேயே இப்போது தான் கண்டாள். பேச மறுத்து விடுவாள் என்ற சந்தேகித்ததற்கே சாவியை கைப்பற்றி வைத்திருக்கிறான். இவனிடம், இவனையே மறுத்தால், நிச்சயம் இங்கிருந்து தான் உருப்படியாக வீட்டிற்கு செல்ல முடியாது என்பது அவளுக்கு புரிந்தது.​

எனவே "எனக்கு இப்போது திருமணத்தைப் பற்றிய எண்ணமே இல்லை'' என்றாள் விதுஷிகா.​

"ஏன்?" ஒற்றை வார்த்தை கூர்மையாக வந்தது அரிமாவிடமிருந்து.​

"இதுவரை திருமணத்தைப் பற்றி யோசித்தது இல்லை. வீட்டிலும் யாரும் அதைப்பற்றி பேசியதில்லை. அதனால் எனக்கும் தோன்றவில்லை."​

"இருக்கட்டும். இப்போது தான் உனக்கு இருபத்து மூன்று ஆகிறதே. இது திருமணத்திற்கு பொருத்தமான வயது தான். யோசித்துப் பார்" என்றான் அதிகாரமாக.​

விதுஷிகா மனதில் அவனை வறுத்து எடுத்தாள். இவனைப் போய் கஜேந்திரனை மாதிரி கம்பீரம் என்று நினைத்தேனே. ச்சை, இவன் ஒரு காண்டாமிருகம், அப்புறம்... இவனைத் திட்ட கூட ஒரு வார்த்தை அவசரத்திற்கு கிடைக்கவில்லையே…​

"ம்க்கும்.." அரிமா சற்று செருமி அவளை நடப்புக்கு அழைத்தான்.​

நல்லவேளை ஒருவர் மனதில் நினைப்பது இன்னொருவருக்கு தெரியாமல் இருப்பது எவ்வளவு நல்லது. முகத்தை சாதுவாக வைத்துக் கொண்டு "நான்.. நாளைக்கு பதில் சொல்லட்டுமா?" பணிவு போல் கேட்டாள்.​

அரிமாவின் முகம் சற்றுத் தெளிந்தது. "சரி விது, நீ நாளைக்கே பதில் சொல்" என்றான் அவன்.​

"என்னை விது என்று கூப்பிடாதீர்கள், ப்ளீஸ்."​

"எனக்கு இப்போதைக்கு அப்படி கூப்பிடுவது தான் பிடிக்கிறது. கல்யாணத்திற்கு பிறகு உனக்கு பிடிக்கிற மாதிரி சொல். மாற்றிக் கொள்கிறேன்"​

தன் பேச்சில் தன்னைத் தானே நொந்து கொண்டு அவனிடம் சொல்லிவிட்டு சாவியையும் வாங்கிக் கொண்டு கிளம்பி விட்டாள் விதுஷிகா.​

செல்லும் அவளையே பார்த்துக் கொண்டு சற்றுநேரம் நின்று விட்டு தன்னுடைய காருக்கு சென்றான் அரிமா துரை. காரில் அமர்ந்து இங்கே நடப்பதை கவனித்துக் கொண்டிருந்தான் வெற்றி வேல்.​

அரிமா காரில் ஏறியதும் வெற்றி "மச்சான், தங்கச்சி என்னடா சொல்லுச்சு?" என்றான்.​

"அவள் நாளைக்கு பதில் சொல்லுகிறாளாம்டா மாப்பு" அரிமா நல்ல மனநிலையில் இருந்தால் தான் இப்படிப்பட்ட வார்த்தை எல்லாம் வரும்.​

அவன் உற்சாகம் வெற்றிக்கும் தொற்றிக் கொண்டது. அவன் உடனே "நாளைக்கு தங்கச்சி நல்ல பதில் தான்டா சொல்லும். எனக்கு வைரமாளிகை ஹோட்டலில் ட்ரீட் வேணும் டா" என்றான்.​

"அது என்ன டா நாளைக்கு, இப்போவே போகலாம்டா" என்றான் அரிமா.​

வீட்டிற்கு சென்ற விதுஷிகா மிகுந்த மனஉளைச்சலில் இருந்தாள். கவனித்துக் கேட்ட தாயிடமும் தலைவலி என்று பொய் கூறி விட்டு, அறைக்குள் சென்று முடங்கிக் கொண்டாள்.​

அவனை எப்படி சமாளிப்பது? வீட்டில் சொல்லி விடலாமா? அவனுடைய செல்வ நிலைக்கும், செல்வாக்கிற்கும் தன் குடும்பத்தின் அனுமதியோ, தன்னுடைய அனுமதியோ கூட அவனுக்குத் தேவைப் படாது. அதனால் வீட்டில் சொல்லுவதால் அவர்களையும் கவலைப்பட வைப்பதைத் தவிர வேறு ஒன்றும் நடக்காது. அதனால் வீட்டில் சொல்ல கூடாது என்று முடிவு செய்து கொண்டாள்.​

நேர்மையாக இருந்தால், நிச்சயம் அவனிடம் இருந்து தப்ப முடியாது. பலவாறு யோசித்து அவனிடம் பொய் கூறினால் மட்டுமே, தன்னால் இந்த பிரச்சினையிலிருந்து வெளிவர முடியும் என்று தோன்றியது அவளுக்கு. என்ன சொல்வது? எப்படி சொல்வது? என்று யோசித்து முடிவு செய்த பிறகு நள்ளிரவுக்கு மேல் ஒரு வழியாக தூங்கத் தொடங்கினாள் விதுஷி.​

- தொடரும்…​

 

Selvi_Saran

Moderator

செம்பருத்தி பூ 5​

காலை ஆறு மணிக்கு வழக்கம் போல் கண் விழித்தாள் விதுஷிகா. உடனே அரிமா துரை அவள் மனதை ஆக்கிரமித்துக் கொண்டான். உடல் வழக்கம் போல் தன் வேலைகளை செய்தாலும், மனமோ அவனைப் பற்றியும், இன்று அவனிடம் பேச வேண்டிய விஷயத்தையும் யோசித்துக் கொண்டிருந்தது. ஹாலில் பேச்சுக்குரல் கேட்டது. வேலைகளை முடித்துக் கொண்டு சென்று பார்த்தாள்.​

பிரியா வந்திருந்தாள். அவளுக்கு இன்று பிறந்த நாள். விதுஷியை கண்டதும் கோபமாக முகத்தைத் திருப்பிக் கொண்டாள். விதுஷி நேற்றெல்லாம் நினைவு வைத்திருந்தாள். மாலை வரும் போது, ப்ரியாவுக்கு கிஃப்ட் வாங்க வேண்டும் என்று கூட நினைத்திருந்தாள். ஆனால் அரிமாவின் வரவால், அவளுக்கு அனைத்தும் மறந்து விட்டது.​

"ப்ரீ செல்லம், ஹாப்பி பெர்த் டே டா" என்றாள் விதுஷி, அவள் கன்னத்தைப் பற்றி.​

அவள் கையைத் தட்டி விட்டாள் பிரியா. "என் பிறந்த நாளை மறந்தவர்கள் ஒன்றும் எனக்கு விஷ் செய்ய வேண்டாம், நான் என் சித்தி, சித்தப்பாவை பார்க்க தான் வந்தேன்".​

"இல்லை குட்டி, இன்று உன்னை அழைத்துப் போய் உனக்கு பிடித்த டிரஸ் எடுத்துக் கொடுக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன் டா, நேற்று மாலை தலைவலி வந்து விட்டது". என்றாள் அவளை சமாதான படுத்த.​

உடனே கீதாவும் "ஆமாம் ப்ரீ, விது வந்ததுமே தலைவலி என்று படுத்து விட்டாள். சாப்பிட கூட இல்லை. இல்லாவிட்டால் உன் பிறந்தநாளை மறப்பாளா?" என்றார் விதுவுக்கு ஆதரவாக.​

"சாரி அக்கா. இது தெரியாமல் உன்னிடம் கோபப்பட்டு விட்டேன். இப்போ எப்படி இருக்கிறது?" என்றாள் பிரியா வருத்தத்தோடு.​

"இப்போ நன்றாக இருக்கிறேன் மா. இன்று மதியம் வந்து விடுகிறேன். நாம் இருவரும் சேர்ந்து வெளியில் சென்று உனக்கு பிடித்த மாதிரி எல்லாம் வாங்கலாம், இப்போ நான் கிளம்பட்டுமா?"​

"சரிக்கா, மாலை கேக் வெட்டும் போது நீ வாங்கி கொடுக்கும் ட்ரெஸ்ஸை தான் போடுவேன்" என்று பிரியா அவளுக்குத் தேவையானவற்றை லிஸ்ட் போட தொடங்கி விட்டாள்.​

விதுஷிகா மதியம் வரை வங்கியில் இருந்து விட்டு பின்பு மேனேஜரிடம் கேட்டுக்கொண்டு, அரைநாள் விடுப்பில் வீட்டிற்கு கிளம்பி விட்டாள். அரிமா, அவள் மதியம் வீட்டிற்கு சென்று விட்டதால், இன்று பதில் சொல்லாமல் ஏமாற்ற நினைப்பதாக எடுத்துக் கொண்டால் என்ன செய்வது? என்ற யோசனையும் அவளைக் குடைந்தது. ஆனால் பிரியாவை ஏமாற்ற அவளுக்கு விருப்பம் இல்லை. எனவே அவன் கேட்டால் பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்து வீட்டிற்குச் சென்று விட்டாள்.​

மதிய உணவுக்குப்பின் விதுஷியும், பிரியாவும் ஒரு மாலுக்கு சென்று சுற்றினார்கள். ப்ரியா கேட்ட உடையை விதுஷி அவளுக்கு வாங்கி கொடுத்தாள். அப்போது அங்கே தர்ஷனும் வந்து அவர்களுடன் இணைந்து கொண்டான். விதுஷிக்கு ஏற்கனவே பிரியாவுக்கும், தர்ஷனுக்கும் இடையில் இருக்கும் நேசத்தைப் பற்றி தெரியும். இருவரும் இன்னும் ஒருவருக்கு ஒருவர் நேசத்தை வாய் வார்த்தையாக பரிமாறிக் கொள்ளவில்லை, ஆனால் குடும்பத்தில் சிறியவர்கள் அனைவரும் இருவரைப் பற்றியும் தெரிந்து வைத்திருந்தனர்.​

விதுஷி சற்று நேரத்தில் இருவருக்கும் பேச நேரம் கொடுக்கும் பொருட்டு, ப்ரியாவை அழைத்து, "நீ இங்கே பார்த்துப் பிடித்ததை எடுத்துக் கொண்டிரு. எனக்கு சில புக்ஸ் வாங்க வேண்டும், நான் கொஞ்ச நேரத்தில் வருகிறேன்" என்று சென்று விட்டாள்.​

விதுஷி அந்த புத்தகக் கடையில் நின்று தேவையான புத்தகங்களைத் தேடிக் கொண்டிருந்தாள். அப்போது ஏதோ உள்ளுணர்வு தோன்றவே நிமிர்ந்து பார்த்தாள். அங்கே அரிமா துரை நின்று கொண்டிருந்தான். அவளுக்கு அவனைப் பார்த்ததும் பேச வேண்டும் என்று நினைத்தது எல்லாம் மறந்து விட்டது. சொல் மறந்தவள் போல அவனை வெறித்துப் பார்த்துக் கொண்டு அப்படியே நின்று கொண்டிருந்தாள்.​

விதுஷி இன்று பீச் கலர் குர்தி அணிந்திருந்தாள். காதில் பெரிய வளையம் போன்ற ஸ்டட் அணிந்திருந்தாள். முடியை பிஷ் பிரைட் ஸ்டைலில் வலதுபக்க ஓரமாக பின்னலிட்டிருந்தாள். அரிமாவால் இன்றும் அவள் தோற்றத்தை வியக்காமல் இருக்க முடியவில்லை. முகத்தில் எந்தவித ஒப்பனையும் இல்லாமலே அவனை அசரடித்துக் கொண்டிருந்தாள் அவள்.​

அவனும் இன்று கேசுவலான ஜீன்ஸ், டீ ஷர்ட்டில் தான் இருந்தான். அவளுக்குமே இன்று அவன் நேற்றை விட இளமையாக தெரிந்தான். ஆனால் விதுவுக்கு இருக்கும் குழப்பத்திற்கு கண்ணில் கண்டது அவள் கருத்தில் படவில்லை.​

"பேசலாமா?" என்று கேட்டு அரிமா தான் அந்த மௌனத்தைக் கலைத்தான்.​

அந்த தளத்தில் இருந்த பாஸ்ட் புட் கடைக்கு சென்று, ஒரு டேபிளில் இருவரும் அமர்ந்தார்கள்.​

"ஏன் இன்று அரை நாளோடு வீட்டிற்கு சென்று விட்டாய்?" என்று கேட்டான் அரிமா.​

விதுஷிக்கு என்ன பதில் சொல்வது என்று புரியவில்லை. முதலில் நேற்று என் சாவியை எனக்குத் தெரியாமல் எடுத்து தவறு. இதில் இன்று வேறு என்னை கண்காணித்து இங்கு வந்ததும் தவறு. இதில் தான் ஏதோ தவறு செய்த மாதிரி கேள்வி வேறு கேட்கிறானே? இவனை.... மானசீகமாக பல்லைக் கடித்தாள்.​

வெளியிலோ அமைதியாக "இன்று என் தங்கை பிரியாவின் பிறந்த நாள். அவளுக்கு நேற்று ஒன்றும் வாங்க முடியவில்லை என்று அவளுடன் இங்கே வந்தேன். அது தான்'' என்றாள்.​

"ம்ம்" என்று கேட்டுக் கொண்டவன், "இன்று பதில் சொல்வதாக கூறி இருந்தாயே?" என்றான் காரியத்தில் கண்ணாக.​

"எனக்கு இது சரி வரும் என்று தோன்றவில்லை சார். உங்கள் உயரம் வேறு. நாங்கள் மிடில் கிளாஸ்."​

"நீ எல்லாம் படித்த பெண் தானே? வாழ்க்கை என்று வரும் போது இந்த மாதிரி விஷயங்களை கடக்க பழகிக் கொள்ளலாம். இதைப்போய் பெரிய விஷயமாக சொல்லாதே"​

"அது மட்டும் இல்லை சார். குணத்திலும் நமக்குள் எந்த ஒற்றுமையும் இல்லை"​

"எதிர் துருவங்கள் தான் ஒன்றை ஒன்று ஈர்க்கும். கேள்விப்பட்டிருப்பாய் தானே?"​

சுத்தம் என்று மனதிற்குள் அலுத்துக் கொண்டாள் விது. உண்மையை சொல்லியாயிற்று. இவன் கேட்பதாக இல்லை. இனி சொல்லப் போவதற்கு என் மேல் தவறில்லை என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டு அவனை நிமிர்ந்து பார்த்தாள்.​

"நான் என் பெற்றோருக்குக் கட்டுப்பட்டவள் சார். என் தந்தைக்குக் கடந்த வருடம் மாரடைப்பு ஏற்பட்டு அவர் வைத்திருந்த சேவிங்ஸ் செலவாகி விட்டது, இன்னும் என் கல்யாண சீருக்காக ஒரு நிலம் வேறு வாங்கி இருந்தார். அதனால் இன்னும் ஒரு வருடம் சென்று தான் நிலைமை சற்று சரியான பின் தான் என் கல்யாணத்தைப் பற்றி யோசிப்பார்கள். அப்போது என் பெற்றோர் சம்மதித்தால் எனக்கு ஆட்சேபனை இல்லை. உங்களால் ஒரு வருடம் காத்திருக்க முடியுமா?" என்று கேட்டாள் விதுஷி.​

அவள் சொன்னதில் பாதி தான் பொய். அதாவது பூபதிக்கு மாரடைப்பு வந்தது மற்றும் நிலம் வாங்கியது எல்லாம் உண்மையே. ஆனால் அதற்காக வீட்டில் நிதிநிலைமை சரியில்லை என்றது தான் பொய். அவள் திருமணத்திற்காக அவள் தந்தை சிறு வயதிலேயே சேர்க்கத் தொடங்கி விட்டார். எனவே அவள் திருமணத்திற்காக பெரிய தொகை அவள் பெயரிலேயே பிக்சட் டெபாசிட்டில் இருக்கிறது.​

அதைப்போல், வீட்டில் அவளுக்கு தீவிரமாக வரன் பார்க்கா விட்டாலும், யாராவது தெரிந்தவர் மூலமாக வரன்கள் வந்து கொண்டு தான் இருக்கிறது. ஆனால் வரும் வரன்கள் ஒன்று, பொருத்தம் இல்லாமலோ, பூபதிக்கோ, கீதாவுக்கோ, ஏன் சில வரன்கள் வருணுக்கு பிடிக்காமல் கூடத் தட்டிப்போய் இருக்கிறது. அதனால் விதுஷியிடம் இன்னும் எந்த வரன் பற்றிய தகவலும் இதுவரை வந்து சேரவில்லை. மற்றபடி தாய், தந்தை, தம்பிக்கு பிடித்திருந்தால் விதுஷியும் கல்யாணத்திற்கு மறுப்பு சொல்லப் போவதில்லை.​

அரிமா அவள் கண்களை கூர்மையாகப் பார்த்தான். விதுஷிக்கு உள்ளுக்குள் உதறல் எடுத்தாலும், வெளியில் நிதானத்தை கைவிடாமல் அமர்ந்திருந்தாள்.​

பின் "எதற்கு ஆட்சேபனை இல்லை என்கிறாய்?" என்று கேட்டான்.​

அதாவது அவனை மணந்து கொள்ள சம்மதிக்கிறேன் என்கிற வார்த்தை அவள் வாயிலிருந்து வரவில்லையாம். அதை சொல்லிக் காட்டுகிறானாம். உள்ளுக்குள் கடுத்தது அவளுக்கு.​

"என் பெற்றோர் விருப்பம் தான் என்றேனே" என்றாள் திக்கித் திணறி.​

அரிமாவுக்கு சுவாரசியமாக இருந்தது. திருமணம் என்று கூறவே இத்தனை தயங்குகிறாளே. அவள் அவனுடனான திருமணத்தைப் பற்றிப் பேசத் தயங்குவதை, அவளுடைய கூச்ச சுபாவமாக எடுத்துக் கொண்டான் அவன்.​

''சரி விது. உனக்காக ஒரு வருடம் காத்திருக்க நான் தயார். அதன்பின் என் வீட்டுப் பெரியவர்கள் மூலமாகவே உன் பெற்றோரைத் தொடர்பு கொண்டு நம் திருமணத்தை நடத்திக் கொள்ளலாம். ஆனால், உனக்கு என்னைப் பிடித்திருக்கிறதா? இந்த ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொல். ப்ளீஸ்" என்றான் அரிமா உருக்கமாக.​

"எனக்கு உண்மையில் உங்களைப் பிடித்திருக்கிறதா? இல்லையா? என்ற கேள்விக்கு பதில் தெரியவில்லை. பொதுவாகவே என் பெற்றோர் சொல்லும் ஆணை தான் மணந்து கொள்ள வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன். அதனால் ஒரு வருடம் முடிந்து நீங்கள் சொல்வது மாதிரி செய்யலாம்" என்றாள் கழுவுகிற மீனில் நழுவிகிற மீனாக.​

அரிமாவும் அதற்கு மேல் வற்புறுத்த முடியாமல் அவளிடம் விடைபெற்றுக் கிளம்பி விட்டான். செல்வதற்கு முன் "உன் பேச்சை மதித்து நான் காத்திருக்கிறேன். ஆனால் நீ என்னை ஏமாற்ற முயற்சி செய்வதாக தெரிந்தால், அப்போது தான் என் உண்மையான முகத்தை நீ பார்ப்பாய். அதுவரை உன்னைத் தொல்லை செய்ய மாட்டேன்" என்று எச்சரித்து விட்டே சென்றான்.​

அதன் பின் விதுஷியும், பிரியா தர்ஷனுடன் சேர்ந்து வீட்டிற்கு சென்று விட்டாள்.​

நாட்கள் அதன் போக்கில் சென்றன. ஆனால் அதன் பின் விதுஷிக்கு, ஒரு உறுத்தல் இருந்து கொண்டே இருந்தது. அவள் வெளியில் சென்றால் யாரோ பின் தொடர்வது போலவும், கண்காணிப்பது போலவும் ஏற்படும் உணர்வை அவளால் ஒதுக்க முடியவில்லை. அது உண்மையே என்பது போல, அடுத்தடுத்து சில சம்பவங்களும் நடந்தேறியது.​

விதுஷி கீதாவுடன் அருகில் இருக்கும் கோவிலுக்கு சென்றிருந்தாள். அன்று பிரதோஷ நாள், அதிலும் சிவன் கோவில் என்பதால் கூட்டமும் சற்று அதிகமாகவே இருந்தது. அவள் கையில் அணிந்திருந்த பிரேஸ்லெட் கூட்டத்தில் தொலைந்து விட்டது. ஆனால் அவள் அதை கவனிக்கவில்லை. அவர்கள் பூஜை முடிந்து கோவிலை விட்டு வெளியேறி, ஸ்கூட்டி அருகில் சென்ற போது ஒரு சிறுவன் வேகமாக வந்து, அவளுடைய பிரேஸ்லெட்டை அவளிடம் கொண்டு வந்து கொடுத்தான்.​

கீதா "உனக்கு எப்படிப்பா இந்த அக்காவுடையது என்று தெரியும்" என்று கேட்டார் அவனிடம்.​

அவனோ "எனக்குத் தெரியாது ஆன்ட்டி, ஒரு அங்கிள் தான் இந்த அக்காவிடம் இதை கொடுத்தால், சாக்லேட் தருவதாக சொன்னாங்க." என்றான்.​

விதுஷியும், கீதாவும் சுற்றிப் பார்த்தார்கள். யார் அந்த அங்கிள் என்று அவனிடமே கேட்டார்கள். அவனும் சுற்றி பார்த்துவிட்டு "ஐயோ, அந்த அங்கிளை காணவில்லையே" என்று விட்டு ஓடி விட்டான்.​

"யாராக இருக்கும் விது?" என்று கேட்டார் கீதா.​

"எனக்கும் தெரியவில்லை" முணுமுணுத்தாள் விதுஷி. ஆனால் அவளுக்குத் தோன்றியது, இது அரிமாவின் வேலை தான் என்று. யாரோ தன்னை கண்காணிக்கிறார்கள் என்கிற உறுத்தல் இது போன்ற சில நிகழ்வுகளால் அதிகம் ஆனது.​

அரிமாவை சந்தித்து மூன்று மாதங்கள் கழித்து வந்த வரன் தான் ரயில்வேயில் கிளார்க் ஆக இருக்கும் சுகுமார். அவன் தோற்றமும் குடும்பப் பின்னணியும் வீட்டினர் அனைவருக்கும் பிடித்தது. அரிமாவுக்குத் தெரியாமல் இந்த கல்யாணம் நடந்து விடுமா என்ற எண்ணம் விதுஷியை அலைக்கழித்தது.​

அவள் எண்ணம் சரி தான். அரிமா அவளுடைய ஒவ்வொரு அசைவையும் கண்காணிக்கத் தான் செய்தான். ஆனால் வீட்டிற்குள் நடப்பதை அவனால் தெரிந்து கொள்ள முடியவில்லை. வீட்டிற்கு வெளியில் அவள் எங்கு சென்றாலும், என்ன செய்தாலும் அவனுக்கு உடனுக்குடன் தகவல் வந்து விடும்.​

கடைசியாக விதுஷியும், ப்ரியாவும் ஐஸ்கிரீம் பார்லரில் பேசியதை வைத்து தான், அவளை அன்று பெண் பார்க்க வருவதே அரிமாவுக்கு தெரிய வந்தது. தன்னவள் கேட்டுக் கொண்டதற்காக அவளிடம் பேசக் கூட இல்லாமல், அவளுக்குத் தெரியாமல் எங்கிருந்தாவது அவளைப் பார்த்துக் கொண்டு மட்டும் நாள்களைக் கடத்தியவனால் அதற்கு மேல் பொறுமை காக்க முடியவில்லை. விதுஷிக்கு தன்னைப் பிடிக்கவில்லை என்று அவள் உடல் மொழியிலிருந்தே அவனுக்குத் தெரிந்து தான் இருந்தது. ஆனால் அதற்காக அவள் இன்னொருவனை தனக்குத் தெரியாமல், மணம்புரிய சம்மதித்தது அவனை வெகுவாகவே அமைதி இழக்க செய்து விட்டது.​

ஆனால், அவன் அதற்கு ஆற்றிய எதிர்வினை?​

- தொடரும்...​

 

Selvi_Saran

Moderator

செம்பருத்தி பூ 6​

அன்று அரிமா துரையும், வெற்றிவேலும் அவர்களுடைய தலைமை அலுவலத்தில் வேலையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது விதுஷிகாவை கண்காணிப்பவனிடம் இருந்து வெற்றிவேலுக்கு போன் வந்தது. அவன் சொல்ல சொல்ல வெற்றியின் முகம் மாறுவதை அரிமா பார்த்துக் கொண்டிருந்தான்.​

வெற்றி "அரி, தங்கச்சியை இன்று பெண் பார்க்க வராங்கலாம்டா" என்றான் தயக்கத்துடன்.​

அரிமாவின் கண்கள் கோபத்தில் சிவந்தது. எவ்வளவு தைரியம் அவளுக்கு. அவ்வளவு சொல்லியும், அவளை கண்காணிப்பது தெரிந்தும், தன்னை ஏமாற்ற நினைத்திருக்கிறாள்.​

"வெற்றி, இப்போது நீ பேசிய நம்பருக்கு கால் செய்து கொடு" என்றான்.​

அவன் எடுத்ததும் "நான் அரிமா பேசுகிறேன். உனக்கு எப்படி விஷயம் தெரிந்தது?".​

"சார், மேடமும் அவங்க சிஸ்டரும் சேர்ந்து ஐஸ்கிரீம் பார்லரில் வைத்து பேசிக் கொண்டிருந்தார்கள் சார்" என்றான் அந்த விசுவாசி.​

"என்ன பேசிக் கொண்டார்கள்? முழுமையாக சொல்".​

"அவங்க சிஸ்டர், மாலையில் மாப்பிள்ளை பார்க்க வருவதால் பார்லருக்கு போக மேடத்தைக் கூப்பிட்டாங்க, சிரித்து சந்தோசமாக தான் பேசிக்கிட்டாங்க சார். இப்போது ரெண்டு பேரும் சேர்ந்து பார்லருக்கு தான் போகிறார்கள் போலத் தெரிகிறது. பஸ்ஸ்டாண்ட் அருகில் போய்க் கொண்டிருக்காங்க. நான் பைக்கில் பாலோ செய்றேன் சார்" அவன் சொல்வதை கேட்ட அரிமாவின் மனம் இறுகியது.​

அதன் விளைவாக விதுஷிகா கடத்தப்பட்டு திருநெல்வேலியில் இருக்கும், அரிமாவின் தனிப்பட்ட வேலைகளுக்காக நகருக்கு வெளியில் கட்டப்பட்டிருக்கும் அவனுடைய வீட்டிற்கு கொண்டு வரப்பட்டாள்.​

வெற்றி "பெண் பார்க்க தானே வருகிறார்கள் அரிமா, பாத்துவிட்டு போகட்டும். நாம் நாளை தாத்தாவிடம் கூறினால் எல்லாமே மாறிவிடும். இந்த கடத்தல் அவசியமா?" என்று எடுத்து சொல்லிப் பார்த்தான்.​

"அவள் என் மனைவியாக தான் என் மனதில் இருக்கிறாள். என மனைவியை இன்னொருவன் வந்து பெண் பார்க்க நான் விட வேண்டுமா?" என்றான் கர்ஜனையாக.​

"அதற்கு அந்த மாப்பிள்ளையை கூட ஏதாவது செய்யலாம் டா. சிஸ்டர் பாவம். அவங்க வீட்டில் வேறு கஷ்டம் டா".​

"ஓஹோ, தங்கச்சி மேல் அவ்ளோ பாசமா? நல்லா இருக்குடா உன் நியாயம். உன் தங்கச்சி என்னை ஏமாற்ற பார்த்திருக்கிறாள். இது அவளுக்கான தண்டனை".​

"டேய், அது நீ கல்யாணம் முடிச்சிட்டு கூட அவகூட பேசி சரி செய்யலாம் டா. இது தப்பு அரி"​

"சாரிடா, இந்த விஷயம் இப்படி தான் நடக்கும். இது என்ன ஏமாத்துன அவளுக்கும், அவகிட்ட ஏமாந்த எனக்குமே தண்டனை தான்" என்றான் அரிமா தீர்மானமாக.​

வெற்றி அதன்பிறகு ஒன்றும் சொல்லவில்லை. அரிமா சொன்னதை அப்படியே அச்சுப்பிசகாமல் நிறைவேற்றத் தொடங்கினான்.​

விதுஷிகாவை அரிமாவின் பங்களாவில் சேர்த்து விட்டு, அடுத்து என்ன என்று தெரியாமல் அங்கிருக்கும் போர்டிகோவில் அமர்ந்திருந்தான். அரிமா அங்கிருக்கும் ஹாலில் சோபாவில் அமர்ந்திருந்தான். வெகுநேரம் கழித்து அரிமா விதுஷி இருந்த அறைக்கு, அவளைப் பார்க்க வந்தான். அப்போது தான் விதுஷியும் கண்விழித்து வெளியே வந்தாள்.​

விதுஷி "ஏன் இப்படி செய்தீர்கள்?" என்றாள் அரிமாவிடம் கோபமாக.​

"ஏன் செய்ய கூடாது?" என்றான் அரிமா அலட்சியமாக.​

"நீ என்னிடம் என்ன சொன்ன? ஒரு வருடம் வரை திருமணம் செய்ய மாட்டேன் என்று தானே? நீ என்னை ஏமாற்றினால் நான் என்ன செய்ய வேண்டும்? எங்கிருந்தாலும் வாழ்க என்று வாழ்த்தி விட்டு உன்னை வேறு ஒருவனுக்கு விட்டுக் கொடுக்க வேண்டுமா? அதற்கு நீ வேறு ஆளை பார்த்திருக்க வேண்டும்" என்றான் கண்கள் சிவக்க.​

விதுஷி அவன் கோபத்தில் மிரண்டு முகம் வெளுத்தாள். அரிமாவின் கர்ஜனைக் குரல் கீழே இருந்த வெற்றிக்கும் கேட்டு, அவனும் மாடி ஹாலுக்கு வந்தான். கோபத்துடன் நிற்கும் அரிமாவையும், பயத்துடன் நிற்கும் விதுஷியையும் பார்த்து நடந்ததை அவதானித்துக் கொண்டான்.​

"அரி" என்று அழைத்தான்.​

அவன் குரல் கேட்டு இருவரும் அவனிடம் திரும்பினார்கள். அரிமா ஏன் இங்கே வந்தாய் என்பது போன்ற எரிச்சலை முகத்தில் காண்பித்தான். விதுஷியோ இன்னொரு ஆள் அங்கே இருப்பதைக் கண்டு வேகமாக வெற்றியின் அருகில் சென்று நின்று கொண்டாள்.​

அரிமா அவளைக் கண்டு நக்கலாக சிரித்தான். வெற்றிக்கும் சற்று சங்கடமாக இருந்தது.​

"என்னடா?" என்றான் அரிமா.​

வெற்றி பதில் சொல்வதற்குள் விதுஷி "அண்ணா, நான் எங்கள் வீட்டுக்குப் போக ஹெல்ப் பண்ணுங்க. ப்ளீஸ்" என்றாள் அவனிடம்.​

"ஹலோ மேடம், உங்களை இங்கே கொண்டு வந்தது நான். நான் மனது வைக்காமல் நீ இங்கே இருந்து எங்கேயும் போக முடியாது" என்றான் அரிமா அவளிடம் திமிராக.​

அவள் பதிலற்று அவனையே வெறித்தாள். வெற்றி அங்கிருந்து கீழே சென்று விட்டான்.​

அரிமா "வா, உன்னிடம் பேச வேண்டும்" என்று விட்டு அவள் இருந்த அறைக்குள் சென்றான்.​

அவளும் வேறு வழியின்றி அவனுடன் சென்றாள். அறையில் இருந்த பால்கனி சேரில் இருவரும் அமர்ந்தனர். அரிமா அவளுக்கு லெமன் ஜூஸ் கொண்டு வரச் செய்தான்.​

"மருந்து வீரியத்தில் சற்று கிறக்கமாக இருக்கும். இதைக் குடி"​

விதுஷி அமைதியாக அதை எடுத்து பருகினாள். அவள் குடித்ததும் அவனிடம் "நான் பொய் சொன்னது தவறு தான். ஆனால் அன்றைக்கு நான் என்னுடைய மறுப்பை சொன்னேன். நீங்கள் அதை எடுத்துக் கொள்ளவில்லை. அதனால் தான் அப்படி ஒரு வருடம் கழித்து திருமணம் என்று சொன்னேன்" என்றாள்.​

"நீ கூறுவது உன் வரையில் சரி தான். ஆனால் நீ அன்றைக்கே உறுதியாக மறுத்திருக்க வேண்டும்".​

"மறுத்திருந்தால் ஏற்றுக் கொண்டு ஒதுங்கிப் போய் இருப்பீர்களா?"​

"நிச்சயமாக மாட்டேன். நீ வேறு ஒருவரையும் மனதில் நினைக்கவில்லை என்று உறுதியாக தெரிந்த பின் தான் உன்னிடம் கல்யாணப் பேச்சையே எடுத்தேன். நீ மறுத்தால் உன் பெற்றோர் மூலமாக திருமண ஏற்பாடு செய்திருப்பேன்". என்றான்.​

"அதனால் தான் பொய் சொன்னேன்'' என்றாள் அவள் கோபமாக. பின் உடனே தணிந்து "வீட்டில் இதற்குள் என்னைத் தேடி அலைந்து கொண்டிருப்பார்கள். ப்ளீஸ், என்னை அனுப்பி விடுங்கள்" என்றாள் கெஞ்சலாக.​

"போலீஸ் ஸ்டேஷனில் குடும்பத்தோடு இருப்பதாக கேள்வி"​

"என்ன?" என்றவளுக்கு கரகரவென்று கண்ணீரை வழிந்தது.​

"ம்ம். உன் அப்பா, மாமா, பெரியப்பா, தர்ஷன், பிரியா எல்லாருமே இப்போது போலீஸ் ஸ்டேஷனில் தான் இருக்கிறார்கள்."​

"ப்ளீஸ்" என்றாள் அழுது கொண்டே.​

"விது" என்று ஆழ்ந்த குரலில் அழைத்தான் அரிமா.​

கண்ணைத் துடைத்துக் கொண்டே அவனைப் பார்த்தாள்.​

"நீ இனி உன் வீட்டிற்கு என் மனைவியாகத் தான் போகப் போகிறாய். நாளைக்கு நமக்குக் கல்யாணம். இன்று இரவை நீ இங்கு தான் கழித்தாக வேண்டும்".​

"நோ, என்னால் முடியாது. எனக்கு உங்களைப் பிடிக்கவில்லை".​

"சாரி, இதில் என்னால் ஒன்றும் செய்ய முடியாது, இனி உன்னை நம்பவும் முடியாது" என்றவன் அந்த அறையைப் பூட்டிச் சாவியை கையோடு கொண்டு சென்று விட்டான்.​

வெற்றியிடம் பேசி விட்டு, விதுஷி வீட்டினர் இருந்த ஸ்டேஷன் இன்ஸ்பெக்டருக்கு போன் செய்து பேசி விட்டு போனை வைத்தான்.​

வெற்றி "இரவாகி விட்டதே, நீ வீட்டிற்கு போகவில்லையா அரி?" என்றான்.​

"இல்லை மச்சான், இன்று இங்கே தான். விதுவை தனியே விட்டு செல்ல முடியாது."​

"ரொம்ப அக்கறை தான்டா. அவளை நான் பார்த்துக் கொள்கிறேன். தாத்தாவிடம் என்ன சொல்ல முடியும்? நீ கிளம்பு" என்றான் வெற்றி.​

"வேண்டாம். நான் இன்று இங்கே தான். உன் தங்கச்சியை ஒன்றும் விழுங்கி விட மாட்டேன். என்னை நம்புடா" என்றான் அரிமா நக்கலாக.​

வெற்றி "இல்லை மச்சான், அதற்காக சொல்லவில்லை" என்று அசடு வழிந்தான்.​

"நீ போய் நம் மூன்று பேருக்கும் இரவுக்கு சாப்பாடு வாங்கி வா" என்று வெற்றியை அனுப்பி வைத்துவிட்டு விதுஷியின் அறை முன்பு இருக்கும் சோபாவில் சென்று அமர்ந்தான் அரிமா.​

தூத்துக்குடியில் தர்ஷனை அழைத்துக் கொண்டு இன்ஸ்பெக்டர் முதலில் விதுஷியும், ப்ரியாவும் சென்ற காம்ப்ளக்ஸுக்கு சென்றார். அங்கு விசாரிக்கிறேன் என்ற பெயரில் முடிந்த வரை நேரத்தை கடத்திக் கொண்டிருந்தார். இரவு ஒன்பது மணி ஆகி விட்டது. தர்ஷனுக்கு அவர் மேல் சந்தேகம் வரவில்லை. அந்த அளவு பிஸியாக விசாரிப்பது போல் காட்டிக் கொண்டார்.​

வீட்டிலிருந்தும் தர்ஷனுக்கு போன் வந்து கொண்டிருந்தது. வீட்டில் கீதா அழுது அழுது அரை மயக்க நிலையில் இருந்தார். மற்றவர்கள் அவரை சமாதானப்படுத்தி எதையாவது குடிக்க வைக்க முயன்று கொண்டிருந்தனர்.​

வசந்தா "குடி கீதா, நம் விது நல்ல பெண். அவள் குணத்திற்கு அவளுக்கு எந்த குறையும் வராது. நிச்சயம் நல்லபடியாகக் கிடைத்து விடுவாள். அதற்கு நீ கொஞ்சம் தைரியமாக இருக்க வேண்டாமா? குடி மா" என்று ஜூஸ் கிளாசை கையில் திணித்தார்.​

கீதா "நிச்சயம் கிடைத்து விடுவாளா அண்ணி?" கண்களில் ஏக்கத்துடன் சிறு குழந்தை போல கேட்டார்.​

அதைக் கண்டு மற்ற அனைவருக்கும் கண்ணீர் வந்தது. இருந்தும் அதை மறைத்துக் கொண்டு "கண்டிப்பாக நம் விது நன்றாகவே இருப்பாள். சீக்கிரம் நம்மிடம் வந்து விடுவாள். குடி சீக்கிரம்" என்றார் வசந்தா.​

நேரம் சென்று கொண்டிருந்த போது, சென்னையில் இருந்து வருண்குமாரும், ராகவனும் வந்து விட்டனர். சேகரும், தர்மராஜும் பூபதிக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தனர்.​

இன்ஸ்பெக்டர் "சார், இங்கே விசாரித்ததில் உருப்படியாக எதுவும் கிடைக்கவில்லை. சிட்டியை சுற்றி வாகனங்களை சோதனை செய்து கொண்டிருக்கிறார்கள். அதனால் இந்த ஊரை விட்டு வெளியில் செல்ல முடியாது. இந்த மாதிரி கடத்தலில் ஈடுபடும் ரவுடிகளின் லிஸ்ட்டை வைத்து நாளை தான் விசாரிக்க வேண்டும். அதனால் நீங்கள் வீட்டிற்கு சென்று விட்டு காலையில் வாருங்கள் சார்" என்று எடுத்து கூறி தர்ஷனை அனுப்பி வைக்க முயன்றார்.​

அவனுக்கும் புரிந்தது ''ஒரு நிமிடம் சார்" என்று விட்டு, தந்தைக்கு அழைத்து இன்ஸ்பெக்டர் கூறியதை எடுத்து சொன்னான்.​

"சரிப்பா நீ வா மற்றதை காலையில் பார்த்துக் கொள்ளலாம்" என்றார் சேகர்.​

தர்ஷன் வீட்டிற்குச் சென்றதும், எல்லாருக்கும் நடந்ததை தெரிவித்தான். அன்றைய இரவை அனைவரும் பயத்துடனேயே கழித்தனர்.​

வெற்றி வாங்கி வந்த உணவை எடுத்துக் கொண்டு விதுஷியின் அறைக்கு சென்றான் அரிமா. கட்டிலில் ஒரு மூலையில் கண்ணில் நீருடன் அமர்ந்திருந்தவள், கதவு திறக்கும் சத்தத்தில் சட்டென நிமிர்ந்து பார்த்தாள். வந்தது அரிமா என்றதும், கோபத்துடன் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.​

உணவு பார்சலை அங்கிருந்த டீப்பாயில் வைத்துவிட்டு, "சாப்பிட வா விது" என்று அழைத்தான்.​

பதில் சொல்லாமல் மெளனமாக மறுப்பைக் காட்டினாள் விதுஷி.​

சற்றுப் பொறுத்துப் பார்த்தவன், பின் ஒரு வேக மூச்சுடன் "சாப்பிட வா என்றேனே? கேட்கவில்லை?" என்றான் கோபமாக.​

அந்தக் குரலில் அவள் உடல் ஒரு முறை தூக்கிப் போட்டது. "என்னை வீட்டிற்கு அனுப்பி விடுங்கள். எனக்குப் பசிக்கவில்லை" என்றாள் கண்களில் மீண்டும் நிறைந்து விட்ட நீருடன்.​

"நாளைக்குப் போகலாம், இப்போது வா, சாப்பிடு. நீயாக சாப்பிடாவிட்டால், நான் ஊட்டி விட வேண்டி இருக்கும். எப்படி வசதி?"​

விதுஷி பதில் சொல்லாமல் அங்கிருந்த சோபாவில் வந்து அமர்ந்தாள். அரிமா உணவை எடுத்து வைத்தான். ஓரளவு அவளை சாப்பிட வைத்துவிட்டு அவனும் சாப்பிட்டான்.​

அரிமா தந்தைக்கு அழைத்து ஒரு வேலை இருப்பதால் அவன் இன்று வீட்டிற்கு வரவில்லை என்று கூறிவிட்டான். அவன் அவ்வப்போது இந்த வீட்டில் வேலைக்காகத் தங்குவது வழக்கம் என்பதால் அவரும் சரி என்று விட்டார்.​

விதுவை பெட்டில் படுக்குமாறு கூறிவிட்டு அரிமா அங்கிருந்த சோபாவில் படுத்துக் கொண்டான். வெற்றியை வீட்டிற்கு அனுப்பி விட்டான். விது அவனை அறையை விட்டு வெளியில் போக சொல்லியும் அவன் மறுத்து விட்டான்.​

"இதுவரை உன்னுடைய விரலைக்கூட நான் தொடவில்லை. அப்படி எந்த எண்ணமும் எனக்கு இல்லை. புது இடம், உன்னை தனியாக விட மனமில்லாமல் தான் ஒரே அறையில் இருப்பதாக சொல்கிறேன். படுத்துக்கொள்" என்றுவிட்டான்.​

அடுத்த நாள் விடியலை நினைத்துப் பயந்து கொண்டிருந்த விதுஷி, இன்றைய இரவை நினைத்துப் பயம் கொள்ளவில்லை. அரிமாவின் வார்த்தையை அந்த அளவு அவளுடைய ஆழ்மனது நம்புகிறது. ஆனால் அவளுக்குத் தான் இன்னும் அது புரியவில்லை. பெற்றோரையும், குடும்பத்தினரையும் நினைத்துக் கவலையில் ஆழ்ந்தாள்.​

விடியல் அவளுக்கு என்ன வைத்திருக்கிறதோ?​

-தொடரும்.....​

 
Top